மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My Photo
Coimbatore, Tamil Nadu, India
எழுத்து என் தொழில் அல்ல! பத்திரிக்கைக்காரர்களும், வாசகர்களும் கொடுத்த உற்சாகத்தால் இதுவரை 80 சிறுகதைகளையும், பல குட்டிக்கதைகளையும் எழுதியுள்ளேன். 1,800ற்கும் மேற்பட்ட பதிவுகளைப் பல தலைப்புக்களில் எழுதியிருக்கிறேன். பத்திரிக்கைகளால் 30,000 வாசகர்களும், வலைப்பதிவால் 3,840 பின் தொடர்பாளர்களும் கிடைத்திருக்கிறார்கள். ஏழு புத்தகங்கள் வெளி வந்துள்ளன. எல்லாம் என்னுடைய சாதனை அல்ல. பழநிஅப்பனின் அருள். ஜோதிடமும் என் தொழில் அல்ல! நான் படித்ததை, கற்றுணர்ந்ததைப் பலரும் கற்றுக்கொள்ள எழுதிவருகிறேன். 653 அடிப்படைப் பாடங்களை எழுதியுள்ளேன். பதிவில் திருட்டுப் போவதால், அதைத் தவிர்க்க, மேல்நிலைப் பாடங்களைத் தனி இணைய தளம் மூலம் எழுதிக்கொண்டிருக்கிறேன் classroom2013. அது உறுப்பினர்களுக்கு மட்டுமே. அவற்றில் எழுதப்படுபவை பின்னால் புத்தகங்களாக வரவுள்ளன. அப்போது அவற்றை அனைவரும் படிக்கலாம்! எனது தொழில் செயற்கை இழைகளைச் சந்தைப் படுத்தும் முகவர் தொழில். தீவிரவாசகன், அது ஒன்றுதான் என்னுடைய தகுதி. கடந்த எட்டு ஆண்டுகளாக எழுதுகிறேன். அது என்னுடைய போதாத நேரம்!!!. நல்ல நேரம் துவங்கும்போது எழுதுவதை நான் நிறுத்திவிடுவேன். அதுவரை பொறுத்துக் கொள்ளுங்கள்!

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

11.1.13

வினைகள் எப்போதடா தீரும்?

வினைகள் எப்போதடா தீரும்?
பக்தி மலர்

இன்றையப் பக்தி மலரை 'பத்மஸ்ரீ' டி. எம். செளந்தரராஜன் அவர்கள் பாடிய பாடலின் வரிகள் அலங்கரிக்கின்றன. அனைவரும் படித்து இன்புறுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்

--------------------------------------------------------
வேல் வேல் வெற்றிவேல்
வேல் வேல் ஞானவேல்
வேல் வேல் வெற்றிவேல்
வேல் வேல் சக்திவேல்

ஊரப்பா பழநியப்பா கந்தப்பா - அங்கு
பக்தர் கூட்டம் பெருகுதப்பா
(ஊரப்பா ... )

உன் பேரப்பா பழநியப்பா
காவடிகள் கூடுதப்பா
பாரப்பா பழநியப்பா
கண்திறந்து பாருமப்பா

ஆண்டியாய் வந்தவா
ஆறுமுக வேலவா

வேல் வேல் வெற்றிவேல்
வேல் வேல் ஞானவேல்
வேல் வேல் வெற்றிவேல்
வேல் வேல் சக்திவேல்

பங்குனி உத்திரக் காவடிகள்
ஆடியே கூடுதப்பா
பொங்கிவரும் பாலுடன் - உன்
சேவடி சேருதப்பா

பழநிமலை சன்னிதியில்
தங்கத் தேரய்யா
உன்னைப் பாடிவரும் பக்தருக்கு
வினைகள் தீருதய்யா
(ஊரப்பா ... )

கந்தனுக்கு அரோகரா
வேலனுக்கு அரோகரா

வேல் வேல் வெற்றிவேல்
வேல் வேல் ஞானவேல்
வேல் வேல் வெற்றிவேல்
வேல் வேல் சக்திவேல்

பால்காவடி பன்னீர்க்காவடி புஷ்பக்காவடி
சேவற்காவடி மச்சக்காவடி வேல்காவடி
முருகனுக்கு ... அரோகரா

தாங்கிவரும் அடியார்கள்
ஆயிரம் கோடியப்பா
சேர்ந்துவரும் காவடிகள்
சன்னிதி சேருதப்பா

வேண்டிவரும் அன்பர்களின்
குறைகள் நீங்குமே
நம்மை நாடிவரும் துன்பங்கள்
வேலும் தாங்குமே
வடிவேலும் தாங்குமே
(ஊரப்பா ... )

கந்தனுக்கு அரோகரா
வேலனுக்கு அரோகரா

நவலோக மாமணியே
சிவனாரின் கண்மணியே
அவனியும் போற்றுதடா
ஆதி சக்தி மைந்தன் உனை

பாலும் தேனும் பஞ்சாமிர்தம்
குடம் குடமாய் கோயிலில்
நாளும் இங்கே வழியுதடா
உந்தன் தங்க மேனியில்

என்றும் உந்தன் சன்னிதியில்
கோடி சரண தோஷமே
அல்லல் நீங்குதே
முருகா ஆசை பெருகுதே

கந்தனுக்கு அரோகரா
வேலனுக்கு அரோகரா

வேல் வேல் வெற்றிவேல்
வேல் வேல் ஞானவேல்
வேல் வேல் வெற்றிவேல்
வேல் வேல் சக்திவேல்

வெற்றிவேல் முருகனுக்கு ஆரோகரா

- பாடலைப் பாடியவர் 'பத்மஸ்ரீ' டி. எம். செளந்தரராஜன்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

15 comments:

Gnanam Sekar said...

அய்யா காலை வணக்கம்

kmr.krishnan said...

GOOD SONG. Thank you,Sir

Lakhsmi Nagaraj said...

Good afternoon sir,

May God Murugar bless us all with
peace and prosperity

Udhaya Kumar said...

குருவிற்கு வணக்கம்,
நன்றி

அய்யர் said...

முருகா..
முருகா..

மாறி வரும் நாகரீக உலகினிலே நாங்கள்
மாறவில்லை தெய்வ பக்தி நிலைனியிலே

முருகா..
முருகா..

Geetha Lakshmi A said...

வணக்கம் ஐயா, ஆசிரியருக்கும்,சகோதர,சகோதிரிகள் அனைவருக்கும் என்னுடைய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.எல்லோரையும் நோய் நொடி இல்லாமல் சந்தோசமாகவும்,மகிழ்ச்சியாகவும் வைத்துக்கொள்ள இறைவனை வேண்டுகிறேன். நன்றி ஐயா.

kannadi said...

அய்யா,
தங்களுக்கு என் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.தை பிறப்பு விவசாயிகளுக்கு துயர் தீர்க்குமா என்பதற்கு ஜோதிட பதிவு இட வேண்டுகின்றேன்.நன்றி.
senthilkumar.v1974@gmail.com

kmr.krishnan said...

வாத்தியார் ஐயாவுக்கும் சக மாணவ தோழியர், தோழர்களுக்கும் பொங்ல நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.கண்ணதாசன் கவிதை சந்த நயத்துடன் அருமை.

நான் நாள்தோறும் தவறாமல் பின்னூட்டம் இடுகிறேன். இப்போது தொடர்ந்து 3 நாட்களாக என் பின்னூட்டம் வெளியாகவில்லையே! ஏதாவது இயந்திரக் கோளாறா?

SP.VR. SUBBAIYA said...

///kmr.krishnan has left a new comment on your post "வினைகள் எப்போதடா தீரும்?":
GOOD SONG. Thank you,Sir/////

நல்லது. நன்றி!

SP.VR. SUBBAIYA said...

////Blogger Lakhsmi Nagaraj said...
Good afternoon sir,
May God Murugar bless us all with
peace and prosperity////

ஆகா, உங்களின் பிரார்த்தனைக்கு அறுமுகத்தான் நிச்சயம் செவிசாய்ப்பார். வாழ்க உங்கள் நல்ல மனது!

SP.VR. SUBBAIYA said...

////Blogger Udhaya Kumar said...
குருவிற்கு வணக்கம்,
நன்றி/////

நல்லது நன்றி உதயகுமார்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger அய்யர் said...
முருகா..
முருகா..
மாறி வரும் நாகரீக உலகினிலே நாங்கள்
மாறவில்லை தெய்வ பக்தி நிலையினியிலே
முருகா..
முருகா.//////

ஆறுமுகமும், பன்னிரெண்டு கைகளும் எதற்கு இருக்கின்றன? முருக பக்தர்களை வழி நடத்துபவை அவைதான். ஆகவே மாறாது!

SP.VR. SUBBAIYA said...


/////Blogger Geetha Lakshmi A said...
வணக்கம் ஐயா, ஆசிரியருக்கும்,சகோதர,சகோதிரிகள் அனைவருக்கும் என்னுடைய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.எல்லோரையும் நோய் நொடி இல்லாமல் சந்தோசமாகவும்,மகிழ்ச்சியாகவும் வைத்துக்கொள்ள இறைவனை வேண்டுகிறேன். நன்றி ஐயா.///////

உங்களின் பிரார்த்தனைக்கு நன்றி சகோதரி!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger kannadi said...
அய்யா,
தங்களுக்கு என் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.தை பிறப்பு விவசாயிகளுக்கு துயர் தீர்க்குமா என்பதற்கு ஜோதிட பதிவு இட வேண்டுகின்றேன்.நன்றி. senthilkumar.v1974@gmail.com/////

இந்த ஆண்டு சுபக்கிரகமான சுக்கிரனின் ஆண்டு. எல்லோருடைய துயரும் தீரும். கவலையை விடுங்கள்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger kmr.krishnan said...
வாத்தியார் ஐயாவுக்கும் சக மாணவ தோழியர், தோழர்களுக்கும் பொங்ல நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.கண்ணதாசன் கவிதை சந்த நயத்துடன் அருமை.
நான் நாள்தோறும் தவறாமல் பின்னூட்டம் இடுகிறேன். இப்போது தொடர்ந்து 3 நாட்களாக என் பின்னூட்டம் வெளியாகவில்லையே! ஏதாவது இயந்திரக் கோளாறா?////

அதற்கான விளக்கத்தை உங்களுக்குத் தனி மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ளேன். கிடைத்ததா? படித்துப் பார்த்தீர்களா?

காப்புரிமை பெற்ற வலைப் பதிவு இது

காப்புரிமை பெற்ற வலைப் பதிவு இது
ஆக்கங்களைப் பிரதி எடுத்துக்கொண்டுபோய்த் தவறாகப் பயன்படுத்தவேண்டாம்!

அறிவிப்பு!

இந்தப் பதிவில் உள்ள ஆக்கங்களை ,பாடங்கள், கட்டுரைகள் மற்றும் கதைகளை புத்தகமாக வெளியிட உள்ளேன். ஆகவே பதிவில் உள்ளவைகள் படிப்பதற்கு மட்டுமே. வாசகர்களின் தனிப்பட்ட பயன்பாட்டிற்கு மட்டுமே! வேறு எந்த மாற்று உபயோகத்திற்கும் என் அனுமதியின்றி பிரதி எடுப்பது மறுக்கப்படுகிறது! காப்பு உரிமை பெறப்பட்டுள்ளது. அதை மனதில் கொள்க!