மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

22.8.12

Astrology - Popcorn Post வாலிபத்தில் காதலிக்க ஜாதகத்தில் வழியுண்டா?

Astrology - Popcorn Post வாலிபத்தில் காதலிக்க ஜாதகத்தில் வழியுண்டா?

Popcorn Post No.23
பாப்கார்ன் பதிவுகள் - எண்.23

”காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை
வாலிபத்தில் காதலிக்க ஜாதகத்தில் வழியுமில்லை”

என்று, பிரபலமான பாடல் ஒன்றின் பல்லவியில் எழுதிய கவியரசர் கண்ணதாசன், பாடலின் முடிவில் இப்படி எழுதியிருப்பார்:

”காதலிக்க நேரமுண்டு கன்னியுண்டு காளையுண்டு!
வாலிபத்தில் காதலிக்க ஜாதகத்தில் வழியுமுண்டு!”

உண்மையிலேயே, காதலிக்கும் யோகத்தை, நல்ல காதலி கிடைக்கும் யோகத்தை ஜாதகத்தின் மூலம் தெரிந்து கொள்ள முடியுமா? அதற்கு
உரிய வீடுகள் என்ன? அதற்கு உரிய கிரக அமைப்புக்கள் என்ன?

அதை  இன்று பார்ப்போம்!
---------------------------------------------------------------------------
ஜோதிடப்படி லக்கினத்தில் இருந்து ஐந்தாம் வீடு, அன்பு, நேசம்,
காதல், மெல்லிய உணர்வுகளுக்கும் உரிய வீடாகும். ஏழாம் வீடு
கணவன்அல்லது மனைவிக்கு (spouse) உரிய வீடாகும். அந்த இரண்டு
வீட்டு அதிபதிகளின் மேன்மையான கூட்டணி (Association) காதலை
உண்டாக்கும். நல்ல காதலி கிடைப்பான் அல்லது பெண்ணாக இருந்தால் நல்ல காதலன் கிடைப்பான். கிறங்க வைக்கும் காதல் உணர்வில்
காதலர்கள் திகட்டும் வரை (திகட்டாது. காதல் திகட்டியதாக சரித்திரம் இல்லை) திளைப்பார்கள்.

அதாவது, அந்த இரண்டு வீட்டு அதிபதிகளும் பரிவர்த்தனையாகி இருக்க வேண்டும் அல்லது இருவரும் பார்வையால் ஒன்று பட்டிருக்க வேண்டும். அல்லது சேர்க்கையால் ஒன்று பட்டு, கேந்திர திரிகோணங்களில் அமர்ந்திருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் காதல் திருமணம்!

அந்த கிரகங்களின் தசா புத்திகளில் திருமணம் நடைபெறும்
------------------------------------------------------------------------
இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.

அப்படி நடைபெறும் திருமணம் நிலைத்து நிற்குமா? அல்லது ஊற்றிக்கொள்ளுமா? என்பதற்கு வேறு அமைப்புக்கள் உள்ளன.

அதைஇன்னொரு நாள் பார்ப்போம். பாப்கார்ன் பொட்டலத்தில்
இந்த அளவுதான் கொடுக்க முடியும் சாமிகளா!!!!

மேலும், இன்றே அதை எழுதி, காதலர்களைக் கலங்க அடிக்க வேண்டாம்!

அன்புடன்
வாத்தியார் 
பதிவின் கீழே இரண்டு செய்திகள் உள்ளன. அவற்றையும் படியுங்கள்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++

22 comments:

  1. வாலிபத்திலும் வயோதிகத்திலும் காதல் வர ஒரே அமைப்பா அல்லது வேறு வேறு அமைப்பா?கிளு கிளு பதிவுக்கும் புகைப்படத்திற்கும் நன்றி ஐயா.

    எனக்கு 5க்குடையவர் 12ல் மறைந்து 7ம் விட்டுக்காரருடன் எந்த சம்பந்தமும் இல்லாமல் இருந்துவிட்டார்.நல்லதாகப் போயிற்று என்று கல்யாணத்திற்குப் பிறகு(மனைவியாரைக்)காதலிக்கத் துவங்கி விட்டேன்..ஹிஹிஹி...

    ReplyDelete
  2. ////////Blogger kmr.krishnan said...
    வாலிபத்திலும் வயோதிகத்திலும் காதல் வர ஒரே அமைப்பா அல்லது வேறு வேறு அமைப்பா?கிளு கிளு பதிவுக்கும் புகைப்படத்திற்கும் நன்றி ஐயா.
    எனக்கு 5க்குடையவர் 12ல் மறைந்து 7ம் விட்டுக்காரருடன் எந்த சம்பந்தமும் இல்லாமல் இருந்துவிட்டார்.நல்லதாகப் போயிற்று என்று கல்யாணத்திற்குப் பிறகு(மனைவியாரைக்)காதலிக்கத் துவங்கி விட்டேன்..ஹிஹிஹி...//////

    இளமை வரும் முதுமை வரும் உடலும் ஒன்றுதான். ஜாதகமும் ஒன்றுதான்
    அதுசரி, எதை வைத்து கிளு கிளு பதிவு என்கிறீர்கள்? படத்தில் கூட காதலர்களின் முதுகுதானே சுவாமி தெரிகிறது - கிளுகிளுப்பிற்கு வேலை இல்லையே?

    ReplyDelete
  3. அய்யா வணக்கம்
    எனக்கு 5 ம் அதிபதி ( சனி) , 7 ம் அதிபதி ( வி ) 5 ம் வீட்டில் இருக்கின்றார்கள் , ஆனால் நான் மாமன் மகளை திருமணம் செய்துள்ளேன் .

    ReplyDelete
  4. காலை வணக்கம் ஐயா,
    அருமையான ஒரு பதிவு... நன்றி ஐயா.
    எனக்கு 5க்குடையவர் (செவ்வாய் ) 9 லும் 7ம் விட்டு குடையவர் (புதன்) 11 லும் அமைந்துள்ளது. எந்த சம்பந்தமும் இல்லாமல் இருந்துவிட்டார்.ஆனால் என் மனைவி கு 7ம் விட்டுகுடையவர் (சுக்ரன்)5 ல் இருந்த படியால் எங்களுக்கு காதல் திருமணம் நடை பெற்றது...

    அன்புடன்,
    ஜான்

    ReplyDelete
  5. காதல் .. சாதல்...
    என்ற பாரதி
    ஆதலினால் காதல் செய்வீர் என்றான்..

    தேவதாசுக்கள் வாழ்ந்த காலம் முடிந்தது
    தேவையா இ(ன்றைய)ந்த காதல்

    ஆணுக்கும் பெண்ணிற்கும்
    ஆதிக்கம் செலுத்தும் எண்ணமே அன்றி

    நம்பிக்கை இருப்பதாக தெரியவில்லை
    நாளைக் கடத்த நேரத்தை கழிக்க

    இவனக்கு ஒரு பெண் தேவை
    அவளுக்கு செலவு செய்ய ஒருவன் தேவை

    (இது அன்மையில் வந்த திரைப்பாடலின் கருத்து)

    சரி
    பாப்கார்ன் பாடமாக தந்துள்ளீர்கள்
    படித்து வைக்கின்றோம்..

    ReplyDelete
  6. காலை வணக்கம் ஐயா,

    எனக்கு 4ம் அதிபதி (செவ்வாய்) 5ம் அதிபதி (குரு) 7ம் அதிபதி (சனி) மூவரும் முக்கோன பரிவர்த்தனை ......

    ஆனால் 4 ம் வீடு பாபகர்திரி யோகம் ( 3 ம் வீட்டில் கேது) அதனால் காதல் அணுகாது என கூறலாம் சரியா ஐயா....

    ReplyDelete
  7. சாதாரணமாக ஆண்தான் பெண்ணின் தோள் மீது கைவைத்து அணைத்து இருப்பான். இந்தப் படத்தில் சகல உரிமையுடன் ஆணின் தோள்மீது அவள் கைவைத்து அணைத்திருப்பது வித்தியாசமாக இருந்ததால் அவ்வாறு கிளு கிளுப்பாகத் தோன்றியது.

    பையன் கொஞ்சம் மக்கு அல்ல‌து கையில் காசில்லாதவன் என்று தோன்றுகிறது. ஒரு ரோஜாப்பூவாவது வாங்கித் தரமாட்டானோ?

    அது சரி, படம் தாங்கள் எடுத்ததா அல்லது கூகுள் ஆண்டவர் துணையா?

    ReplyDelete
  8. //////Blogger Gnanam Sekar said...
    அய்யா வணக்கம்
    எனக்கு 5 ம் அதிபதி ( சனி) , 7 ம் அதிபதி ( வி ) 5 ம் வீட்டில் இருக்கின்றார்கள் , ஆனால் நான் மாமன் மகளை திருமணம் செய்துள்ளேன்/////

    தகவலுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  9. ////Blogger john said...
    காலை வணக்கம் ஐயா,
    அருமையான ஒரு பதிவு... நன்றி ஐயா.
    எனக்கு 5க்குடையவர் (செவ்வாய் ) 9 லும் 7ம் விட்டு குடையவர் (புதன்) 11 லும் அமைந்துள்ளது. எந்த சம்பந்தமும் இல்லாமல் இருந்துவிட்டார்.ஆனால் என் மனைவி கு 7ம் விட்டுகுடையவர் (சுக்ரன்)5 ல் இருந்த படியால் எங்களுக்கு காதல் திருமணம் நடை பெற்றது...
    அன்புடன்,
    ஜான்////

    உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  10. ///////Blogger அய்யர் said...
    காதல் .. சாதல்...
    என்ற பாரதி
    ஆதலினால் காதல் செய்வீர் என்றான்..
    தேவதாசுக்கள் வாழ்ந்த காலம் முடிந்தது
    தேவையா இ(ன்றைய)ந்த காதல்
    ஆணுக்கும் பெண்ணிற்கும்
    ஆதிக்கம் செலுத்தும் எண்ணமே அன்றி
    நம்பிக்கை இருப்பதாக தெரியவில்லை
    நாளைக் கடத்த நேரத்தை கழிக்க
    இவனக்கு ஒரு பெண் தேவை
    அவளுக்கு செலவு செய்ய ஒருவன் தேவை
    (இது அன்மையில் வந்த திரைப்பாடலின் கருத்து)
    சரி
    பாப்கார்ன் பாடமாக தந்துள்ளீர்கள்
    படித்து வைக்கின்றோம்..///////

    உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி விசுவநாதன்!!

    ReplyDelete
  11. //////////Blogger rama said...
    காலை வணக்கம் ஐயா,
    எனக்கு 4ம் அதிபதி (செவ்வாய்) 5ம் அதிபதி (குரு) 7ம் அதிபதி (சனி) மூவரும் முக்கோன பரிவர்த்தனை ......
    ஆனால் 4 ம் வீடு பாபகர்த்தாரி யோகம் ( 3 ம் வீட்டில் கேது) அதனால் காதல் அணுகாது என கூறலாம் சரியா ஐயா....///////

    5ஐயும் 7ஐயும் பற்றிச் சொன்னால், நீங்கள் 4ம் வீட்டையும் சேர்த்து பச்சடி வைத்திருக்கிறீர்களே?

    ReplyDelete
  12. /////Blogger kmr.krishnan said...
    சாதாரணமாக ஆண்தான் பெண்ணின் தோள் மீது கைவைத்து அணைத்து இருப்பான். இந்தப் படத்தில் சகல உரிமையுடன் ஆணின் தோள்மீது அவள் கைவைத்து அணைத்திருப்பது வித்தியாசமாக இருந்ததால் அவ்வாறு கிளு கிளுப்பாகத் தோன்றியது.
    பையன் கொஞ்சம் மக்கு அல்ல‌து கையில் காசில்லாதவன் என்று தோன்றுகிறது. ஒரு ரோஜாப்பூவாவது வாங்கித் தரமாட்டானோ?
    அது சரி, படம் தாங்கள் எடுத்ததா அல்லது கூகுள் ஆண்டவர் துணையா?//////

    கூகுள் ஆண்டவர் கொடுத்ததுதான். அவரிடம் இல்லாத படமா?

    ReplyDelete
  13. இந்த அமைப்பு திருமணத்திற்கு முன் உள்ள காதலை மட்டும் குறிக்குமா திருமணத்திற்கு பின்னால் வரும் காதலையும் குறிக்குமா என்று கேட்க நினைத்தேன். பாப்கார்ன் பதிவாயிற்றே. நானும் அதிகம் கேட்க முடியாது. தாங்களும் அதிகம் சொல்ல முடியாது.

    காதல் என்பதோடு நிறுத்துக் கொள்வதுதான் நல்லது. காதலில் மாம்பழத்து வண்டு போன்றவரா, மலருக்கு மலர் தாவும் வண்டு போன்றவரா, எமாறுபவரா, எமாற்றுபவரா, பரஸ்பர அன்பு இருக்குமா ஆகிய இன்னும் பல ஆராய்ச்சிகள் செய்ய ஆரம்பித்தால் வீண் பிரச்சினை(தலைவலி) தான் வரும்.

    ReplyDelete
  14. படத்தில் உள்ள அந்த காதலர் சலன புத்திக் காரராக இருக்க வேண்டும். விட்டால் எங்கே அவர் வேறொரு பெண்ணைப் பார்த்து அவர் பின்னாலேயே ஒடி விடுவாறோ என்று அந்த பெண் அவரைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறார் போலும்.

    ReplyDelete
  15. 5Th house nil,9th house nil, 7th house nil what about this effect

    ReplyDelete
  16. //////////Blogger rama said...
    காலை வணக்கம் ஐயா,
    எனக்கு 4ம் அதிபதி (செவ்வாய்) 5ம் அதிபதி (குரு) 7ம் அதிபதி (சனி) மூவரும் முக்கோன பரிவர்த்தனை ......
    ஆனால் 4 ம் வீடு பாபகர்த்தாரி யோகம் ( 3 ம் வீட்டில் கேது) அதனால் காதல் அணுகாது என கூறலாம் சரியா ஐயா....///////

    5ஐயும் 7ஐயும் பற்றிச் சொன்னால், நீங்கள் 4ம் வீட்டையும் சேர்த்து பச்சடி வைத்திருக்கிறீர்களே?

    நான் ஒன்று சொல்ல மறந்துவிட்டேன். 4 வது வீட்டில் 7ம் அதிபதி (சனி) ஆனால் 4 ம் வீடு பாபகர்த்தாரி யோகம். அதனால் நான் கூறினேன் ஐயா....///////

    ReplyDelete
  17. /////Blogger ananth said...
    இந்த அமைப்பு திருமணத்திற்கு முன் உள்ள காதலை மட்டும் குறிக்குமா திருமணத்திற்கு பின்னால் வரும் காதலையும் குறிக்குமா என்று கேட்க நினைத்தேன். பாப்கார்ன் பதிவாயிற்றே. நானும் அதிகம் கேட்க முடியாது. தாங்களும் அதிகம் சொல்ல முடியாது.
    காதல் என்பதோடு நிறுத்துக் கொள்வதுதான் நல்லது. காதலில் மாம்பழத்து வண்டு போன்றவரா, மலருக்கு மலர் தாவும் வண்டு போன்றவரா, எமாறுபவரா, எமாற்றுபவரா, பரஸ்பர அன்பு இருக்குமா ஆகிய இன்னும் பல ஆராய்ச்சிகள் செய்ய ஆரம்பித்தால் வீண் பிரச்சினை(தலைவலி) தான் வரும்.////

    ஆமாம். அது சங்கிலிபோல் நீண்டு கொண்டே போகும்! நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  18. /////Blogger ananth said...
    படத்தில் உள்ள அந்த காதலர் சலன புத்திக் காரராக இருக்க வேண்டும். விட்டால் எங்கே அவர் வேறொரு பெண்ணைப் பார்த்து அவர் பின்னாலேயே ஒடி விடுவாறோ என்று அந்த பெண் அவரைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறார் போலும்./////

    அடடா. என்னவொரு கற்பனை!!!!

    ReplyDelete
  19. ////Blogger krishnababuvasudevan said...
    5Th house nil,9th house nil, 7th house nil what about this effect////

    எப்க்ட்டும் நில்!:-))))

    ReplyDelete
  20. Blogger rama said...
    //////////Blogger rama said...
    காலை வணக்கம் ஐயா,
    எனக்கு 4ம் அதிபதி (செவ்வாய்) 5ம் அதிபதி (குரு) 7ம் அதிபதி (சனி) மூவரும் முக்கோன பரிவர்த்தனை ......
    ஆனால் 4 ம் வீடு பாபகர்த்தாரி யோகம் ( 3 ம் வீட்டில் கேது) அதனால் காதல் அணுகாது என கூறலாம் சரியா ஐயா....///////
    5ஐயும் 7ஐயும் பற்றிச் சொன்னால், நீங்கள் 4ம் வீட்டையும் சேர்த்து பச்சடி வைத்திருக்கிறீர்களே?
    நான் ஒன்று சொல்ல மறந்துவிட்டேன். 4 வது வீட்டில் 7ம் அதிபதி (சனி) ஆனால் 4 ம் வீடு பாபகர்த்தாரி யோகம். அதனால் நான் கூறினேன் ஐயா....///////

    நல்லது. விளக்கத்திற்கு நன்றி!

    ReplyDelete
  21. ஐயா வணக்கம்,
    29.6.60,கடக லக்னம் 5ல் யாருமில்லை 7இல் யாருமில்லை 10இல் செவ்வாய் 6இல் குருவுடன் சனி வக்கிரம் என் காதல் கல்யாணம் முடிந்தாலும் இன்றொரு காதலும் இன்றுவரை என்னை வாட்டுகிறது

    ReplyDelete
  22. ஐயா வணக்கம்,
    29 6 1960 6.45 am கடக லக்னம் பத்தில் செவ்வாய் ஆறில் சனியுடன் குரு காதல் கல்யாணம் முடிந்தும் இன்னொரு காதலில் பதினேழு வருடமாக பீடிக்கபட்டுள்ளேன் அது ஏன்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com