மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

15.2.12

Astrology சேவைக்கு ஏற்பட்ட சோதனை!

ஸ்ரீவரதராஜப் பெருமாள்

திருக்கோவிலின் முகப்புத் தோற்றம்
Astrology சேவைக்கு ஏற்பட்ட சோதனை!

நட்சத்திரக் கோவில்கள் - பகுதி 11
கேட்டை நட்சத்திரம்
அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோவில்
-----------------------------------
ஆழ்வார்களில் முதன்மையானவர் ராமானுஜர். சென்னைக்கு அருகிலுள்ள ஸ்ரீபெரும்புதூரில் பிறந்த அவர், சுமார் 120 ஆண்டு காலம் வாழ்ந்தவர்.
1,017 ஆம் ஆண்டுமுதல் 1,137ஆம் ஆண்டுவரை வாழ்ந்தவர். வாழ்ந்தவர் என்று சொல்வதைவிட, வாழ்ந்த காலத்தில் பெருமாளுக்கு சேவைகள் செய்தவர்.

திருவரங்கம்  சென்று அங்கேயே தங்கி ரங்கநாதருக்கு சேவை செய்தவர். மக்களின் பார்வை வைணவத்தின் மேல் விழும்படியாக பல பாசுரங்களை இயற்றியவர்

அவர் தான் வாழ்ந்த காலத்தில் ஒரு அரசனுக்கு நிகரான புகழைப் பெற்றிருந்தார். அவருடைய குரு பெரிய நம்பிகளும் சீடர் கூரத்தாழ்வாரும் அவருடனேயே தங்கியிருந்தனர்

ராமானுஜர் புகழ் பெற்று விளங்குவதைப் பொறுக்காத சோழ மன்னன் ஒருவன், அவரைப் பிடித்துக்கொண்டு வரும்படி தனது படை வீர்ரர்களை அனுப்பினானாம். புகைப்படங்கள், செய்தித்தாள்கள் இல்லாத காலம், ராமானுஜரை அடையாளம் தெரியாது. ஆகவே வந்தவர்களிடம் தன் குருநாதர் மாட்டக்கூடாது என்று நினைத்த ராமானுஜரின் சீடர் கூரத்தாழ்வார், ராமானுஜர் போல வெண்ணிற ஆடை அணிந்து கொண்டு, சோழப் படையினரிடம் சென்று நான்தான் ராமானுஜர் என்று சொல்லி, அவர்களுடன் சென்றாராம. அவருடன் பெரிய நம்பிகளும் அவரது மகள் திருத்துழாயும் (என்ன பெயருடா சாமி!) சென்றார்களாம்.

பெரியநம்பியிடமும், கூரத்தாழ்வாரிடமும், தனது மதமே உயர்ந்தது என எழுதித்தரும்படி மன்னன் சொல்ல, சென்றவர்கள் மறுக்க, இருவரின் கண்களையும் பறிக்கும்படி கூறித் தண்டனை கொடுத்துவிட்டானாம் அந்தச் சோழ மன்னன். கூரத்தாழ்வார், தன் கண்களைத் தானே குத்திக்கொண்டு பார்வை இழந்தாராம் சோழ வீரர்கள் பெரியநம்பிகளின் கண்களைக் குருடாக்கினார்களாம்.

பார்வையிழந்த இருவரையும் திருத்துழாய் அங்கிருந்து அழைத்துகொண்டு வந்து தங்கிய தலம்தான் பிற்காலத்தில் பெரும் புகழ் பெற்றது. பெரிய நம்பிகளுக்கு வயது 105. வயதான காலத்தில் கண்களை இழந்து பெரும் துன்பத்திற்கு ஆளானாராம். அவர்மீது கருணை கொண்ட வரதராஜப்பெருமாள், அவருக்குக் கண்பார்வை அளித்துக் காட்சி கொடுத்ததோடு, அவருக்கு வைகுண்டப் பிராப்யதியையும் வழங்கி அருள்பாலித்தாராம்.

பசுபதி கோவில் என்னும் அத்தலத்தில் உள்ள அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோவில்தான் கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கான கோவில்!

அக்கோவிலில் பெரியநம்பிகளுக்குத் தனி சன்னிதானம் உள்ளது

பெரியநம்பிகள் மார்கழி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவராம். அன்றைய தினம் கோவிலில் அவரது திருநட்சத்திர விழா நடைபெறும். ஒவ்வொரு மாதமும் கேட்டை நட்சத்திரத்தில் அவருக்குப் பூஜை உண்டு.

கேட்டை நட்சத்திரத்தினர், தங்களுக்கு ஜாதக தோஷம் நீங்க அவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள். வெண்ணிற வஸ்திரம், மல்லிகைப்பூ மாலை, அதிரசம், வடை நைவேத்யம் முதலியவற்றுடன் அந்த வழிபாட்டை அவருக்குச் செய்கின்றனர்.

மருதாணி இலை, கரிசலாங்கண்ணி, செம்பருத்தி ஆகிய மூன்றும் சேர்த்த எண்ணெயில் தீபமேற்றி வழிபடுவது நல்ல பலன் தரும் என்பது நம்பிக்கை அங்கே நிலவுகிறது. அந்த எண்ணெய் கோயிலில் கிடைக்கிறது. கேட்டை நட்சத்திரத்துடன் கூடிய செவ்வாய்க் கிழமைகளில் வழிபட்டால் பலன் இரட்டிப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது. கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கூரத்தாழ்வாரிடம் வேண்டிக் கொள்ளலாம்!

தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 12 கி.மீ தூரத்திலுள்ளது பசுபதிகோவில். கோவிலின் நடை திறந்திருக்கும் நேரம்: காலை 7 மணி முதல் 9 மணிவரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணிவரை.

வரதராஜ பெருமாள் மட்டுமின்றி பெருந்தேவி தாயாரும் அங்கே அருள் பாலிக்கின்றார்.

ஒருமுறை சென்று வாருங்கள். வந்து பலனைப் பாருங்கள்

கல்யாண்ச் சந்தையில் விலை போகாத 4 நட்சத்திரங்களில் கேட்டையும் ஒன்று. மக்களின் முட்டாள் தனம் அது! நட்சத்திரங்கள் எல்லாம் சமமானவையே! ஒரு கேடும் வரப்போவதில்லை. ஜாதகத்தின் எழாம் வீடு, லக்கினம், அதன் அதிபதிகள், காரகர்கள் போன்ற மற்ற அம்சங்கள்தான் முக்கியம். அதை எல்லாம் யார் கேட்கிறார்கள்? தங்களுக்கு என்று வரும்போது கேட்க மாட்டார்கள்.

கேட்டை நட்சத்திரத்திற்கு மட்டும் ஒரு சின்ன குறைபாடு உண்டு. சந்திரன் நீசமாகியிருப்பான். கேட்டை நட்சத்திர ஜாதகர்களுக்கு லக்கினத்தை வைத்துப் பலன்கள் வித்தியாசப்படும். அவற்றை வேறு ஒரு நாள் பார்ப்போம்!

அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

55 comments:

  1. பசுபதி கோவிலுக்கு சில ஆண்டுகள் பெள்ர்ணமிதோறும் சென்றுவந்த அனுபவம் உண்டு. ஓர் அருமையான சிவஸ்தலமும் உண்டு.

    எல்லாவற்றையும் கும்பகோணத்தைச் சுற்றியே கொடுத்து வருகின்றீர்கள். அந்த அந்த மாவட்டங்களிலும் நட்சத்திரக்கோவில்கள் இது போன்ற ஸ்தலபுராணங்களுடன் இருக்கலாம். உதாரணமாக, ஆலங்குடி குரு ஸ்தலமாகப் புகழ்பெற்று விட்டது. ஆனால் சென்னை பாடிக்கு அருகில் திருவலிதாயம் என்ற சிவஸ்தலமும் குருவுக்கான பழைய க்ஷேத்திரமே.அங்கேயும் குருபெயர்ச்சி விசேஷம்தான்.

    பகவத் ஸ்ரீ ராமநுஜர் ஆழ்வார்கள் பன்னிருவரில் சேர்ந்தவர் அல்ல்.
    பொய்கை, பூதம், பேய், திருமழிசை, நம், மதுரகவி, குலசேகர, பெரிய, ஆண்டாள்,தொண்டர் அடிப்பொடி, திருப்பாண், திருமங்கை, ஆழ்வார்கள் மட்டுமே ஆழ்வார்கள்.

    ஸ்ரீ ராமாநுஜர் காலத்துக்கு முன்னர் இருந்தவர்களே ஆழ்வார்கள். கூரம் என்ற ஊரைச்செர்ந்த சீடர் பெயரால் ஆழ்வாரே தவிர பன்னிரு ஆழ்வாரில் வரமாட்டார்.

    ReplyDelete
  2. சோழன் செய்த கொடுமையைப் பற்றிய கதை சரியா தவறா என்பதை சைவப் பற்றுள்ள்வர்கள்தான் சொல்ல வேண்டும். கமலஹாசன் தன் தசாவதாரம் மூலம் சோழமன்னர்களை கொடுங்கோலர்களாகக் காண்பித்துவிட்டார்.
    தஞ்சாவூரார் கொஞ்சம் இது பற்றி விஷயம் அறிந்தவர். அவர் சொல்லலாம்.

    ReplyDelete
  3. பிருந்தா, துளசி என்பதற்கு சரியான தமிழ் திருத்துழாய்!

    ReplyDelete
  4. ரிஸ்க் எடுப்பது என்பதால் ரஸ்க் சாப்பிடர மாதிரி போல. அதுவும் டூ பீஸ் பெண்களுடன் தாத்தாக்கள் இப்படி ரிஸ்க் எடுக்கலாமோ?

    கறிகாய் வாங்கிண்டு வந்து சமையலும் செய்துவிடுவாள் போல இருக்கிறதே அந்த பாப்பா! சாப்பிட நான் ரெடி!

    ReplyDelete
  5. ராமானுஜரைப் பற்றியதும் பரமாத்மாவின் மற்ற அடியார்களைப்
    பற்றியதுமான பதிவின் பகிர்விற்கு நன்றிகள் ஐயா!

    ///// ஜாதகத்தின் எழாம் வீடு, லக்கினம், அதன் அதிபதிகள், காரகர்கள் போன்ற மற்ற அம்சங்கள்தான் முக்கியம். அதை எல்லாம் யார் கேட்கிறார்கள்? தங்களுக்கு என்று வரும்போது கேட்க மாட்டார்கள்./////

    உண்மை தான் தங்களுக்கென்று வரும் போது இது போன்ற மூட நம்பிக்கையில் திளைத்தவர்களுக்கு துணிச்சல் வருவதில்லை...
    பொதுவாக ஆயில்யமும் இப்படித்தான் என்பதை அறிந்திருந்தாலும். அந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் தான் எத்தனை அழகாகவும் இருக்கிறார்கள்.
    மரம் வைத்தவன் தண்ணீர் விடுவான் என்ற நம்பிக்கையில் காத்திருக்கலாம்....
    இதில் நல்ல விஷயம் இது போன்ற தெளிவில்லாதவர்களை விடுத்து நல்ல வரனே அமையும் என்பது மட்டும் உறுதி.

    நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  6. திருத்துழாய் என்றால்,துளசி என்று பொருள்படும்.திருத்துழாய் மாலை, பெருமாளுக்கு உகந்தது.கேட்டை நட்சத்திரத்தைப் பற்றி தாங்கள் கூறியது உண்மையே. அந்த காலத்தில்,ஒரு குடும்பத்தில் நிறைய குழந்தைகள் இருந்ததால்,மூத்த மகனோ அல்லது ஒரே பிள்ளையாகவோ கிடைத்து திருமணம் நடப்பதற்கு தாமதமானது.தற்போது பெரும்பாலும் ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்ற நிலையில்,மூத்த மகனோ,அல்லது, ஒரே பிள்ளையாகவோ,கிடைப்பது சிரமமில்லை.

    ReplyDelete
  7. ஆள் மாறாட்டம்
    அங்கே அல்ல அதற்கு முன்னரே தொடங்கி இருக்கிறது..(கி..பி...)

    உண்மையாய் இருக்க முடியாதவருக்கு
    உள்ளதை சொல்லமுடியாது..என்பதற்கு

    இது ஒரு உதாரணமட்டுமல்ல.
    இதன் புலம் கண்ணாடி முன் வைத்த பிம்பம்

    நட்சத்திர கோயில்கள் மட்டும் தானா..
    நட்சத்திர பள்ளி வாசல் தேவாலயம்

    என்ற வரிசைகள் அடுத்த சுற்றில் வரும்
    என்று காத்திருக்கலாமா(அவர்களுக்காக)



    .

    ReplyDelete
  8. அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
    கேட்டை நட்சத்திரத்திற்கான
    அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோவில்
    பற்றிய வரலாறு,கோவில் திறந்திருக்கும் நேரம், பரிகார முறைகள் யாவும் மிகுந்த சிறப்புடன் அளித்துள்ள ஆசிரியர் அவர்களுக்கு நன்றி.

    குருபக்த்தியின் காரணமாக
    கண்களை இழக்கவும் துணிந்த சீடர்களின் செயல் நெஞ்சினை நெகிழ வைக்கிறது.

    ReplyDelete
  9. ////kmr.krishnan said...
    பசுபதி கோவிலுக்கு சில ஆண்டுகள் பெள்ர்ணமிதோறும் சென்றுவந்த அனுபவம் உண்டு. ஓர் அருமையான சிவஸ்தலமும் உண்டு.
    எல்லாவற்றையும் கும்பகோணத்தைச் சுற்றியே கொடுத்து வருகின்றீர்கள். அந்த அந்த மாவட்டங்களிலும் நட்சத்திரக்கோவில்கள் இது போன்ற ஸ்தலபுராணங்களுடன் இருக்கலாம். உதாரணமாக, ஆலங்குடி குரு ஸ்தலமாகப் புகழ்பெற்று விட்டது. ஆனால் சென்னை பாடிக்கு அருகில் திருவலிதாயம் என்ற சிவஸ்தலமும் குருவுக்கான பழைய க்ஷேத்திரமே.அங்கேயும் குருபெயர்ச்சி விசேஷம்தான்.
    பகவத் ஸ்ரீ ராமநுஜர் ஆழ்வார்கள் பன்னிருவரில் சேர்ந்தவர் அல்ல்.பொய்கை, பூதம், பேய், திருமழிசை, நம், மதுரகவி, குலசேகர, பெரிய, ஆண்டாள்,தொண்டர் அடிப்பொடி, திருப்பாண், திருமங்கை, ஆழ்வார்கள் மட்டுமே ஆழ்வார்கள்.
    ஸ்ரீ ராமாநுஜர் காலத்துக்கு முன்னர் இருந்தவர்களே ஆழ்வார்கள். கூரம் என்ற ஊரைச்செர்ந்த சீடர் பெயரால் ஆழ்வாரே தவிர பன்னிரு ஆழ்வாரில் வரமாட்டார்./////

    இரண்டு இடங்களைக் கொடுத்தால், எது முதலில் அல்லது எது விஷேசமானது என்ற கேள்விகள் வரும். ஒன்றே போதும் என்பது எனது விருப்பம்! மேலதிகத் தகவல்களுக்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  10. ///// kmr.krishnan said...
    சோழன் செய்த கொடுமையைப் பற்றிய கதை சரியா தவறா என்பதை சைவப் பற்றுள்ள்வர்கள்தான் சொல்ல வேண்டும். கமலஹாசன் தன் தசாவதாரம் மூலம் சோழமன்னர்களை கொடுங்கோலர்களாகக் காண்பித்துவிட்டார்.தஞ்சாவூரார் கொஞ்சம் இது பற்றி விஷயம் அறிந்தவர். அவர் சொல்லலாம்./////

    சோழமன்னர்களில் பல அற்புதமான மன்னர்கள் இருந்திருக்கிறார்கள். முக்கியமாக ராஜராஜசோழன். இந்தக் கொடுங்கோலர்கள் எல்லாம் பின்னால் சோழ மண்டலம் சிதறியபோது வந்த குறுநில மன்னர்களாக இருக்கலாம்.

    ReplyDelete
  11. //// kmr.krishnan said...
    பிருந்தா, துளசி என்பதற்கு சரியான தமிழ் திருத்துழாய்!////

    தகவலுக்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  12. //// kmr.krishnan said...
    ரிஸ்க் எடுப்பது என்பதால் ரஸ்க் சாப்பிடர மாதிரி போல. அதுவும் டூ பீஸ் பெண்களுடன் தாத்தாக்கள் இப்படி ரிஸ்க் எடுக்கலாமோ?
    கறிகாய் வாங்கிண்டு வந்து சமையலும் செய்துவிடுவாள் போல இருக்கிறதே அந்த பாப்பா! சாப்பிட நான் ரெடி!////

    நானும் ரெடி!

    ReplyDelete
  13. /// தமிழ் விரும்பி ஆலாசியம் said...
    ராமானுஜரைப் பற்றியதும் பரமாத்மாவின் மற்ற அடியார்களைப் பற்றியதுமான பதிவின் பகிர்விற்கு நன்றிகள் ஐயா!
    ///// ஜாதகத்தின் எழாம் வீடு, லக்கினம், அதன் அதிபதிகள், காரகர்கள் போன்ற மற்ற அம்சங்கள்தான் முக்கியம். அதை எல்லாம் யார் கேட்கிறார்கள்? தங்களுக்கு என்று வரும்போது கேட்க மாட்டார்கள்./////
    உண்மை தான் தங்களுக்கென்று வரும் போது இது போன்ற மூட நம்பிக்கையில் திளைத்தவர்களுக்கு துணிச்சல் வருவதில்லை...
    பொதுவாக ஆயில்யமும் இப்படித்தான் என்பதை அறிந்திருந்தாலும். அந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் தான் எத்தனை அழகாகவும் இருக்கிறார்கள்.
    மரம் வைத்தவன் தண்ணீர் விடுவான் என்ற நம்பிக்கையில் காத்திருக்கலாம்....இதில் நல்ல விஷயம் இது போன்ற தெளிவில்லாதவர்களை விடுத்து நல்ல வரனே அமையும் என்பது மட்டும் உறுதி.
    நன்றிகள் ஐயா!/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  14. /// Parvathy Ramachandran said...
    திருத்துழாய் என்றால்,துளசி என்று பொருள்படும்.திருத்துழாய் மாலை, பெருமாளுக்கு உகந்தது.கேட்டை நட்சத்திரத்தைப் பற்றி தாங்கள் கூறியது உண்மையே. அந்த காலத்தில்,ஒரு குடும்பத்தில் நிறைய குழந்தைகள் இருந்ததால்,மூத்த மகனோ அல்லது ஒரே பிள்ளையாகவோ கிடைத்து திருமணம் நடப்பதற்கு தாமதமானது.தற்போது பெரும்பாலும் ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்ற நிலையில்,மூத்த மகனோ,அல்லது, ஒரே பிள்ளையாகவோ,கிடைப்பது சிரமமில்லை./////

    உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  15. //// அய்யர் said...
    நான்கு////

    மூன்று

    ReplyDelete
  16. //// அய்யர் said...
    ஆள் மாறாட்டம்
    அங்கே அல்ல அதற்கு முன்னரே தொடங்கி இருக்கிறது..(கி..பி...)
    உண்மையாய் இருக்க முடியாதவருக்கு
    உள்ளதை சொல்லமுடியாது..என்பதற்கு
    இது ஒரு உதாரணமட்டுமல்ல.
    இதன் புலம் கண்ணாடி முன் வைத்த பிம்பம்
    நட்சத்திர கோயில்கள் மட்டும் தானா..
    நட்சத்திர பள்ளி வாசல் தேவாலயம்
    என்ற வரிசைகள் அடுத்த சுற்றில் வரும் என்று காத்திருக்கலாமா(அவர்களுக்காக)/////


    அடுத்த சுற்றிற்கான அடிப்படை செய்திகளைக் கொடுங்கள் விசுவநாதன்!
    .

    ReplyDelete
  17. //// V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
    கேட்டை நட்சத்திரத்திற்கான
    அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோவில்
    பற்றிய வரலாறு,கோவில் திறந்திருக்கும் நேரம், பரிகார முறைகள் யாவும் மிகுந்த சிறப்புடன் அளித்துள்ள ஆசிரியர் அவர்களுக்கு நன்றி.
    குருபக்த்தியின் காரணமாக கண்களை இழக்கவும் துணிந்த சீடர்களின் செயல் நெஞ்சினை நெகிழ வைக்கிறது.////

    உங்களின் நெகிழ்வான பின்னூட்டத்திற்கு நன்றி தட்சணாமூர்த்தி!

    ReplyDelete
  18. 'வாங்கியதும் வாங்க மறந்ததும் 13 2 2012' பதிவின் பின்னூட்டங்களின் தொடர்ச்சி:( அங்கே போட்டால் பலரும் வாசிக்க மாட்டார்கள் என்பதற்காக இங்கே)
    காட்சி 1
    =======
    ராஜாஜி அவர்கள் நடத்திய காந்தி ஆசிரமம் அருகாமையில் இருந்த பல கிராம மக்களுக்கு பஞ்ச காலத்தில் நூற்பு, நெசவு,வெளுத்தல்,சாயம் தோய்த்தல் ஆகிய கைத்தொழில்களை கொடுத்து ஆதரித்தது.முழுவதும் லாப நோக்கின்றி செயல் பட்டது.அவரும் ஒரு ஊழியராகவே இருந்து சம்பளமே பெற்றார். கணக்கு வழக்கில் எந்தக் கோளாறும் கிடையாது. எல்லாம் வெளிப்படை.என் தந்தையைப் போன்றவர்கள் குடும்பத்தை விட்டுப் பிரிந்து நாட்டுக்காக சிறை செல்ல‌வும் தயாராக இருந்தனர். அந்த நிறுவனம் முற்றிலும் சமுதாய நனமை என்ற‌ நோக்கில் நடத்தப்பட்டது. அந்த நிறுவனம் நஷ்டத்தில் இருந்த போது ஊழியர்கள் சம்பளக் குறைப்பை தாங்களாக முன்வந்து ஏற்றனர்.

    காட்சி2
    ========
    software நடத்திய முதலாளி பல தகிடுதத்தம் செய்து சுய நலத்திற்கு பணம் சுருட்டிக்கொண்டு நிறுவனத்துக்கு நஷ்டக்கணக்குக் காண்பித்தார். பங்கு வாங்கிய பலரும் பெரும் இழப்பிற்கு ஆளாகினர். அந்த நிர்வாகத்த்தினருக்கும் சத்தியத்திற்கும் வெகுதூரம். பல ஊழியர்களும் வெளியேறிவிட்டனர். போக முடியாமல் மாட்டிக்கொண்டவர்கள் புதிய நிர்வாகம் சொன்னதற்கெல்லாம் தலையாட்ட வேண்டிய நிலை. அப்போது சம்பளக் குறைப்பிற்கு ஒப்புக் கொண்டனர்.

    முன்னது தியாகம். பின்னது என்ன வென்று அவர்கள் அவர்கள் பக்குவத்திற்கேற்ப முடிவு செய்து கொள்ளலாம்.

    ReplyDelete
  19. 'துர்வாசர் எத்தனை துர்வாசரடா 'பதிவின் இறுதிப் பின்னூட்டங்களைப் படியுங்கள்.

    திருவையாறு நாட்டியாஞ்சலி பற்றிய செய்தி உள்ளது. அது தொடர்ந்து நடை பெற ஆதரவுக் கரம் நீட்டுங்கள்.

    ReplyDelete
  20. ஐயா, இந்தப் பதிவு என்னை வரலாற்றின் பக்கம் இழுத்துச் சென்றுவிட்டது. நான் விக்கியில் கொஞ்சம் படித்தது வரை..... சைவமும் வைணவமும்(சமண பௌத்துவமும் கூட ) அரசர்களை தங்கள் கைகளுக்குள் போட்டுக் கொண்டு, இசையுடன் கூடிய பக்தி இலக்கியங்கள் வழியாக தாங்கள் சார்ந்த வழியை போட்டியுடன் பரப்ப முயன்ற காலம் இது. குறிப்பிட்டுள்ள பன்னிரண்டாம் நூற்றாண்டிற்கு முன்னதாகவே "பொன்னியின் செல்வனி"லும் இந்தப் போட்டி புகைய ஆரம்பித்ததை கல்கி குறிப்பிடுவார்.

    பல விவாதங்களுக்கு பிறகு ஆராய்ச்சியாளர்கள், சோழன் "இரண்டாம்" குலோத்துங்கன் மன்னனும், பெரிய புராண சேக்கிழாரும், ராமானுஜரும் சம காலத்தில் (பன்னிரண்டாம் நூற்றாண்டில்) வாழ்ந்தவர்கள் எனக் கூறுவதாகத் தெரிகிறது. போரின்றி அமைதியான சோழ மன்னர்கள் காலம் அது. சமணத்தில் ஆர்வம் காட்டிய குலோத்துங்கனை சைவத்திற்கு இழுக்க முயன்ற சேக்கிழார் வெற்றியும் பெற்று மன்னனை சிதம்பரம் கோவிலுக்கு சேவை செய்யுமளவுக்கு மாற்றியுள்ளார். இந்த காலத்தில்தான் ராமானுஜரும் கர்நாடகாவிற்கு நாடு கடத்தப் பட்டதாக வரலாறு தெரிவிக்கிறது. அத்துடன் இரண்டாம் குலோத்துங்கனும் சிதம்பரம் கோவில் புணரமைப்பில் ஆர்வத்துடன் இருந்ததாகவும் தெரிகிறது.

    நல்ல பதிவிற்கு நன்றி ஐயா. நட்சத்திரத்தை வைத்து குறை கூறுவது வருத்தம்தான், ஆனால் இதெல்லாம் விரைவில் வழக்கொழிந்துவிடும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. காதல் என்பது கெட்ட வார்த்தை போல் பேசிய மக்கள் காதலர்தினம் கொண்ட்டாடும் வரை வந்தாகிவிட்டது. வரும் காலத்தில் இளைஞர் கூட்டம் இவற்றைப் பொருட்படுத்தாது என்று நம்புகிறேன். எல்லாம் இளைய சமுதாயத்தின் கையில் உள்ளது.

    ReplyDelete
  21. குரு பக்தி மெய் சிலிர்க்க செய்கிறது. சோழர்கள் வரலாறு ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு புதிய தகவல்கள் தருகிறது.
    தசாவதாரம், ஆயிரத்தில் ஒருவன் , பள்ளி வரலாறு, நாம் போகும் கோயில்கள் இப்படி. ஆனால் அத்தனையும் சுவாரசியம்.
    கேட்டை நக்ஷத்ர தகவல் எனக்கு கொஞ்சம் புதுமைதான். எனக்கு தெரிந்தவரை கேட்டை கோட்டை கட்டி ஆளும் என்பதுதான்.
    என் மூத்த மகனுக்கு கேட்டை. மூன்று வயது பயல் செய்யும் சேட்டை அளப்பரியது. வேலையை விட்டுவிட்டு அவன் செய்வதை
    பார்த்துக் கொண்டு இருக்கிறேன். தேமொழி சொல்வது போல் இதெல்லாம் சீக்கிரம் வழக்கொழிந்து போய்விடும் என்றே தோனுகிறது.
    அத்தோடு அய்யா , அந்த குட்டி குழந்தையின் சிரிப்பும் , உடையும் அற்புதம். அதற்கு உங்களின் விவரிப்பு இன்னும் அருமை.

    ReplyDelete
  22. ///// தேமொழி said...
    ஐயா, இந்தப் பதிவு என்னை வரலாற்றின் பக்கம் இழுத்துச் சென்றுவிட்டது. நான் விக்கியில் கொஞ்சம் படித்தது வரை..... சைவமும் வைணவமும்(சமண பௌத்துவமும் கூட ) அரசர்களை தங்கள் கைகளுக்குள் போட்டுக் கொண்டு, இசையுடன் கூடிய பக்தி இலக்கியங்கள் வழியாக தாங்கள் சார்ந்த வழியை போட்டியுடன் பரப்ப முயன்ற காலம் இது. குறிப்பிட்டுள்ள பன்னிரண்டாம் நூற்றாண்டிற்கு முன்னதாகவே "பொன்னியின் செல்வனி"லும் இந்தப் போட்டி புகைய ஆரம்பித்ததை கல்கி குறிப்பிடுவார்.
    பல விவாதங்களுக்கு பிறகு ஆராய்ச்சியாளர்கள், சோழன் "இரண்டாம்" குலோத்துங்கன் மன்னனும், பெரிய புராண சேக்கிழாரும், ராமானுஜரும் சம காலத்தில் (பன்னிரண்டாம் நூற்றாண்டில்) வாழ்ந்தவர்கள் எனக் கூறுவதாகத் தெரிகிறது. போரின்றி அமைதியான சோழ மன்னர்கள் காலம் அது. சமணத்தில் ஆர்வம் காட்டிய குலோத்துங்கனை சைவத்திற்கு இழுக்க முயன்ற சேக்கிழார் வெற்றியும் பெற்று மன்னனை சிதம்பரம் கோவிலுக்கு சேவை செய்யுமளவுக்கு மாற்றியுள்ளார். இந்த காலத்தில்தான் ராமானுஜரும் கர்நாடகாவிற்கு நாடு கடத்தப் பட்டதாக வரலாறு தெரிவிக்கிறது. அத்துடன் இரண்டாம் குலோத்துங்கனும் சிதம்பரம் கோவில் புணரமைப்பில் ஆர்வத்துடன் இருந்ததாகவும் தெரிகிறது.
    நல்ல பதிவிற்கு நன்றி ஐயா. நட்சத்திரத்தை வைத்து குறை கூறுவது வருத்தம்தான், ஆனால் இதெல்லாம் விரைவில் வழக்கொழிந்துவிடும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. காதல் என்பது கெட்ட வார்த்தை போல் பேசிய மக்கள் காதலர்தினம் கொண்ட்டாடும் வரை வந்தாகிவிட்டது. வரும் காலத்தில் இளைஞர் கூட்டம் இவற்றைப் பொருட்படுத்தாது என்று நம்புகிறேன். எல்லாம் இளைய சமுதாயத்தின் கையில் உள்ளது./////

    அப்போ, நீங்கள், நான், கே.எம்.ஆர்.கே எல்லாம் இளைஞர்கள் இல்லையா? மனதளவில் நாம் எல்லோருமே இளைஞர்கள்தான் - தஞ்சாவூர் கோபாலரையும் சேர்த்து!

    ReplyDelete
  23. //// Kalai said...
    குரு பக்தி மெய் சிலிர்க்க செய்கிறது. சோழர்கள் வரலாறு ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு புதிய தகவல்கள் தருகிறது.
    தசாவதாரம், ஆயிரத்தில் ஒருவன் , பள்ளி வரலாறு, நாம் போகும் கோயில்கள் இப்படி. ஆனால் அத்தனையும் சுவாரசியம்.
    கேட்டை நக்ஷத்ர தகவல் எனக்கு கொஞ்சம் புதுமைதான். எனக்கு தெரிந்தவரை கேட்டை கோட்டை கட்டி ஆளும் என்பதுதான்.
    என் மூத்த மகனுக்கு கேட்டை. மூன்று வயது பயல் செய்யும் சேட்டை அளப்பரியது. வேலையை விட்டுவிட்டு அவன் செய்வதை
    பார்த்துக் கொண்டு இருக்கிறேன். தேமொழி சொல்வது போல் இதெல்லாம் சீக்கிரம் வழக்கொழிந்து போய்விடும் என்றே தோனுகிறது.
    அத்தோடு அய்யா , அந்த குட்டி குழந்தையின் சிரிப்பும் , உடையும் அற்புதம். அதற்கு உங்களின் விவரிப்பு இன்னும் அருமை.////

    வழக்கொழிந்தால் சரிதான்! உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  24. Uma S
    to me
    நட்சத்திரக்கோவில் வரிசையில் நேற்றே நான் ஊகித்தபடி என் நட்சத்திரத்திற்கான கோயில். நன்றி!

    S.உமா, தில்லி

    ReplyDelete
  25. kmr.krishnan said...

    காட்சி2
    ========
    ""software நடத்திய முதலாளி பல தகிடுதத்தம் செய்து சுய நலத்திற்கு பணம் சுருட்டிக்கொண்டு நிறுவனத்துக்கு நஷ்டக்கணக்குக் காண்பித்தார். பங்கு வாங்கிய பலரும் பெரும் இழப்பிற்கு ஆளாகினர். அந்த நிர்வாகத்த்தினருக்கும் சத்தியத்திற்கும் வெகுதூரம். பல ஊழியர்களும் வெளியேறிவிட்டனர். போக முடியாமல் மாட்டிக்கொண்டவர்கள் புதிய நிர்வாகம் சொன்னதற்கெல்லாம் தலையாட்ட வேண்டிய நிலை. அப்போது சம்பளக் குறைப்பிற்கு ஒப்புக் கொண்டனர்.

    முன்னது தியாகம். பின்னது என்ன வென்று அவர்கள் அவர்கள் பக்குவத்திற்கேற்ப முடிவு செய்து கொள்ளலாம்.""

    அது ராஜுகே வெளிச்சம்!!அங்கே வேலை விட்ட சில பேர் தற்போது என்கூட பணிபுரிகிறார்கள்.

    ReplyDelete
  26. SP.VR. SUBBAIYA said...
    ""சோழமன்னர்களில் பல அற்புதமான மன்னர்கள் இருந்திருக்கிறார்கள். முக்கியமாக ராஜராஜசோழன்.""

    நரசிம்ம பல்லவனை எதிர்த்து போரிட்டு தோற்ற பார்த்திப சோழன்.தென்னகத்தில் வலிமை கொன்ட அரசாக சோழ நாடு திகழவேண்டும்.என கனவு கண்டததுதான் "பார்த்திபன் கனவு"அமரர் கல்கி அவர்களின் படைப்பு.ஆனால், நரசிம்ம பல்லவன் இருக்கும் வரை அது,முடியவில்லை.தனது மகனை நரசிம்ம பல்லவனின் மருமகன் ஆக்கினான்.அதன் பிறகு சுமார் 300 வருடங்களுக்கு பிறகே,அருள்மொழிதேவன் என்ற ராஜராஜன் தோன்றினர். ஆனால்,சமிபத்திய ஊடகங்கள் ராஜராஜனை வேறுமாதிரிய கூறுகிறது.எது எப்படியோ?!வரலாற்றில் எனக்கு பிடித்த சோழ மன்னர்களில்(Heros) கரிகாலனும்,ராஜராஜனும்....

    ReplyDelete
  27. வைணவத்துக்கு எதிரான கொடுமைக்காரர்களாக சோழ மன்னனை கமலஹாசன் தன் படத்தில் காட்டிவிட்டு, அதற்கு ஆதாரங்கள் இருப்பதாகச் சொல்லியிருக்கிறார். நாடக நடிகர் ஆர்.எஸ். மனோகர் இலங்கேஸ்வரன் என்றொரு நாடகம் மேடையேற்றி அதில் இராவணனின் மகள் சீதை என்றார். சொல்லப்போனால் இந்தியாவில் சுமார் 300 இராமாயணங்கள் இருக்கின்றன. கே.எஸ்.ராமானுஜம் என்பவர் அதைப் பற்றி எழுதி, அந்தக் கட்டுரை டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக வரலாற்றுத் துறையில் பாடமாகக் கொடுக்கப்பட்டு, அதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில் சமீபத்தில் திரும்பப் பெற்றுள்ளனர். கர்நாடகாவில் ஒரு நாட்டுப்புற கலை மூலம் இராவணன் மகள் சீதை என்றும் இருக்கிறது. வான்மீகம், கம்பன், துள‌சி ஆகியோர் எழுதி பிரபலமான பல இராமாயணங்கள் இருக்க எங்கோ யாரோ எழுதிய ஒரு நாட்டுப்புற இராமாயணத்தை அடிப்படியாகக் கொண்டு ஆர்.எஸ்.மனோகர் நாடகம் அரங்கேற்றினார். அப்படியானால் கமலஹாசன் எங்கோ யாரோ சொன்ன ஒரு கதையை வைத்து சோழன் குலோத்துங்கனைக் கொடுமைக்காரனாக மாற்றவும் உரிமை உள்ளது அல்லவா? ஆனால் அப்படித் திரித்துச் சொல்லும் கதைகள் வரலாறு ஆகாது. வகுப்பறையில் கே.எம்.ஆர் தொடங்கி சிலர் கேட்டதற்கிணங்க, நானறிந்த உண்மை வரலாற்றைச் சொல்ல விழைகிறேன். மன்னன் ராஜராஜன் காலம் 11ஆம் நூற்றாண்டின் தொடக்கம். அதன் பின் முன்னூறு ஆண்டுகள் சோழர் ஆட்சி சிறப்பாக இருந்தது. சோழ பாண்டிய யுத்தங்கள் மூலம் சோழர் பரம்பரை ஒழிந்தது. அதன் முன்பாக குலோத்துங்கன் காலத்தில் நாடு சிறந்து வளம்பெற்று விளங்கியது. மக்கள் பொற்காசுகளைக் கொடுத்து புலவர்களை அழைத்து "ஜீவகன்" கதையைக் கேட்டு இன்புற்றனர். காரணம் அந்த 'ஜீவகசிந்தாமணி' கதையில் ஜீவகன் பல திருமணங்கள் செய்து கொள்கிறான். படிப்பவர்களுக்கு அதில் ஒரு கிளுகிளுப்பு. இதனைக் கண்டு மன்னன் குலோத்துங்கண் வருந்தி அமைச்சர் சேக்கிழாரை அழைத்து மக்கள் நல்வழிப்படுத்த வழி இல்லையா? இப்படி மணநூல் என்றும் இன்பநூல் என்றும் வழங்கப்படுகிற சமண காப்பியத்தைப் படித்து மக்கள் சீரழிகிறார்களே என்றான். சகோதரி உமா சொன்னது போல மன்னன் குலோத்துங்கன் சமணத்தை ஆதரிக்கவில்லை. சைவத்தின் தாக்கம் அவனை மக்கள் நல்வழிக்குத் திரும்ப வேண்டுமென்கிற ஆதங்கத்தில் கொண்டு போய் விட்டது. சேக்கிழார் சொன்னார், மக்களுக்கு நல்வழிகாட்ட "திருக்குறள்" ஒன்று போதாதா? மக்கள் கதை கேட்கும் ஆர்வத்தில் இருப்பதால் நாமும் ஏதாவது நல்வழிப் படுத்தும் கதைகளைச் சொல்ல வேண்டும் என்று சொன்னார். அப்படியானால் நீங்களே அந்தப் பணியைச் செய்யுங்கள் என்றான் மன்னன். உடனே சேக்கிழார், சுந்தரமூர்த்தி நாயனார் இயற்றிய "திருத்தொண்டர் திருத்தொகை" எனும் பாடலில் 'தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் என்று தொடங்கி அறுபத்து மூன்று நாயன்மார்கள் வரலாற்றைப் பாடியிருக்கிறார். அந்த 63 பேரைப் பற்றியும் அவரவர் ஊர்களுக்குச் சென்று விவரங்களைத் திரட்டி காப்பியம் படையுங்கள் என்றான் மன்னன். அவரும் சென்றார். 63 நாயன்மார் வரலாற்றைக் கற்பனை மெருகேற்றி கதை வடிவில் காப்பியமாகச் செய்தார். 'பெரிய புராணம்' பிறந்தது. அப்போது சிதம்பரம் ஆலயத்தில் சிவபெருமான் தவிர கோவிந்தராஜ பெருமாளுக்கும் சந்நிதி இருந்தது. இதற்கொரு காரணம் உண்டு. தில்லையில் சிவபெருமான் சக்தியுடன் தாண்டவம் புரிந்த நேரத்தில் வியாக்ரபாத முனிவர் சென்று பார்த்தார். மகாலக்ஷ்மி தானும் சிவன் தாண்டவத்தைப் பார்க்க விரும்பியதால், அவரோடு மஹாவிஷ்ணுவும் ஆர்வத்தில் நடராஜப் பெருமானின் தாண்டவத்தைச் சென்று கண்டு களித்தார். அதனால் சிதம்பரம் ஆலயத்தில் கோவிந்தராஜ பெருமாள் எனும் பெயரால் பெருமாள் சந்நிதி உண்டு. சைவனான குலோத்துங்கன் சிவாலயத்தில் பெருமாள் சந்நிதி எதற்கு என்று அதை வேறிடத்துக்கு மாற்றி விட்டான். சமீபத்தில் நெல்லை மாவட்டத்தில் ஒரு ஆலயத்தில் சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் சந்நிதிகள் இருந்தன. ஒரு மடாதிபதி சொன்னபடி அந்த விஷ்ணு சந்நிதி அங்கிருந்து அகற்றப்பட அது பிரச்சினையான செய்தியைக் கேள்விப் பட்டிருப்பீர்கள். அதுபோலத்தான் குலோத்துங்கன் விஷ்ணு சந்நிதியை வேறிடம் மாற்றினான் என்கிறது வரலாறு. அதை வழக்கம்போல, ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாளாக்கி கதை சொல்லத் தொடங்கி, நெப்போலியன் குலோத்துங்கனாக வந்து யானை மீது அமர்ந்து அந்த அப்பாவி வைணவனை அனந்த சயனப் பெருமாளின் சிலையோடு சங்கிலியால் கட்டி கடலில் அமுக்கிக் கொன்றதாக கதை பண்ணி வியாபாரம் செய்து விட்டார்கள். அவன் மனைவி பாவம் நல்ல நடிகை அழுது கண்ணீர் விட, அந்த சின்னஞ்சிறு பாலகனும் சட்டியைத் தலையில் சுமந்து உடைத்து ஈமக்கடன் செய்து அனைவர் கண்களிலும் கண்ணீர் சிந்தி, குலோத்துங்கன் ஒரு கொடியவன் என்ற எண்ணத்துடன் வீடு வந்து சேர்ந்து விட்டனர். ஒரு பின்னூட்டம் இத்தனை பெரியதா? என்ன செய்வது? வாத்தியார் அவர்கள் என்ன விரும்புகிறாரோ அப்படிச் செய்யட்டும். நன்றி.

    ReplyDelete
  28. வணக்கம் ஐயா,
    எங்களுக்கு சற்று அருகில் இருப்பதினால் இரண்டு முறை இராமானுஜர் கோவிலுக்கு சென்று வந்துள்ளேன்...மிகவும் அமைதியான,அழகான கோவில்...சில வருடங்களிக்கு முன்னர் பொதிகை தொலைக்காட்சியில் "இராமானுஜர்" வாழ்க்கையை தொடராக வந்தது...அப்பொழுது தான் இது போன்ற நிகழ்வுகளை அறிந்தேன்...இன்று வாத்தியார் ஐயா மீண்டும் காண்பித்து விட்டார்...ந‌ன்றி ஐயா...


    "திருத்துழாய்" வார்த்தை புதிது அத‌ன் பொருளையும் இன்று தான் அறிந்து கொண்டேன்...ந‌ன்றி kmrk ஐயா

    நான் அச்சிறுமி "பூப்ப‌றிக்க‌" செல்கிறாள் என்று நினைத்தேன்...அதனால் ஒரு பூமாலை கேட்க‌லாம் என்று நினைத்தேன்...ஆனால் விருந்தே கேட்டுவிட்டார் kmrk அவ‌ர்க‌ள்...ஹிஹிஹி...

    ReplyDelete
  29. Dear Sir,

    We are blessed with a Baby Girl on 9th-FEB and I found the start is Pooram.

    I request you to give us a good names for our baby considering the star Pooram or suggest us, whom do we approach in coimbatore to have names. Thanks Sir in Advance!

    Thanks
    Saravanan
    Coimbatore

    ReplyDelete
  30. //// Ananthamurugan said...
    kmr.krishnan said...
    காட்சி2
    ========
    ""software நடத்திய முதலாளி பல தகிடுதத்தம் செய்து சுய நலத்திற்கு பணம் சுருட்டிக்கொண்டு நிறுவனத்துக்கு நஷ்டக்கணக்குக் காண்பித்தார். பங்கு வாங்கிய

    பலரும் பெரும் இழப்பிற்கு ஆளாகினர். அந்த நிர்வாகத்த்தினருக்கும் சத்தியத்திற்கும் வெகுதூரம். பல ஊழியர்களும் வெளியேறிவிட்டனர். போக முடியாமல்

    மாட்டிக்கொண்டவர்கள் புதிய நிர்வாகம் சொன்னதற்கெல்லாம் தலையாட்ட வேண்டிய நிலை. அப்போது சம்பளக் குறைப்பிற்கு ஒப்புக் கொண்டனர்.
    முன்னது தியாகம். பின்னது என்ன வென்று அவர்கள் அவர்கள் பக்குவத்திற்கேற்ப முடிவு செய்து கொள்ளலாம்.""
    அது ராஜுகே வெளிச்சம்!!அங்கே வேலை விட்ட சில பேர் தற்போது என்கூட பணிபுரிகிறார்கள்./////

    சத்யம் ராஜூ என்று சொல்லுங்கள்!

    ReplyDelete
  31. //// Ananthamurugan said...
    SP.VR. SUBBAIYA said...
    ""சோழமன்னர்களில் பல அற்புதமான மன்னர்கள் இருந்திருக்கிறார்கள். முக்கியமாக ராஜராஜசோழன்.""
    நரசிம்ம பல்லவனை எதிர்த்து போரிட்டு தோற்ற பார்த்திப சோழன்.தென்னகத்தில் வலிமை கொன்ட அரசாக சோழ நாடு திகழவேண்டும்.என கனவு

    கண்டததுதான் "பார்த்திபன் கனவு"அமரர் கல்கி அவர்களின் படைப்பு.ஆனால், நரசிம்ம பல்லவன் இருக்கும் வரை அது,முடியவில்லை.தனது மகனை நரசிம்ம

    பல்லவனின் மருமகன் ஆக்கினான்.அதன் பிறகு சுமார் 300 வருடங்களுக்கு பிறகே,அருள்மொழிதேவன் என்ற ராஜராஜன் தோன்றினர். ஆனால்,சமிபத்திய

    ஊடகங்கள் ராஜராஜனை வேறுமாதிரிய கூறுகிறது.எது எப்படியோ?!வரலாற்றில் எனக்கு பிடித்த சோழ மன்னர்களில்(Heros) கரிகாலனும்,ராஜராஜனும்....////

    சுந்தர சோழர், ராஜேந்திர சோழ்ர், மனு நீதிச் சோழர் என்று பட்டியல் நீளும்! தஞ்சை மாவட்டத்தில் உள்ள எத்தனையோ சிவாலயங்கள் அவர்கள் கட்டியது. அதை யாரும் மறக்க வேண்டாம்!

    ReplyDelete
  32. ///// Thanjavooraan said...
    வைணவத்துக்கு எதிரான கொடுமைக்காரர்களாக சோழ மன்னனை கமலஹாசன் தன் படத்தில் காட்டிவிட்டு, அதற்கு ஆதாரங்கள் இருப்பதாகச்

    சொல்லியிருக்கிறார். நாடக நடிகர் ஆர்.எஸ். மனோகர் இலங்கேஸ்வரன் என்றொரு நாடகம் மேடையேற்றி அதில் இராவணனின் மகள் சீதை என்றார்.

    சொல்லப்போனால் இந்தியாவில் சுமார் 300 இராமாயணங்கள் இருக்கின்றன. கே.எஸ்.ராமானுஜம் என்பவர் அதைப் பற்றி எழுதி, அந்தக் கட்டுரை டெல்லி

    ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக வரலாற்றுத் துறையில் பாடமாகக் கொடுக்கப்பட்டு, அதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில் சமீபத்தில் திரும்பப் பெற்றுள்ளனர்.

    கர்நாடகாவில் ஒரு நாட்டுப்புற கலை மூலம் இராவணன் மகள் சீதை என்றும் இருக்கிறது. வான்மீகம், கம்பன், துள‌சி ஆகியோர் எழுதி பிரபலமான பல

    இராமாயணங்கள் இருக்க எங்கோ யாரோ எழுதிய ஒரு நாட்டுப்புற இராமாயணத்தை அடிப்படியாகக் கொண்டு ஆர்.எஸ்.மனோகர் நாடகம் அரங்கேற்றினார்.

    அப்படியானால் கமலஹாசன் எங்கோ யாரோ சொன்ன ஒரு கதையை வைத்து சோழன் குலோத்துங்கனைக் கொடுமைக்காரனாக மாற்றவும் உரிமை உள்ளது

    அல்லவா? ஆனால் அப்படித் திரித்துச் சொல்லும் கதைகள் வரலாறு ஆகாது. வகுப்பறையில் கே.எம்.ஆர் தொடங்கி சிலர் கேட்டதற்கிணங்க, நானறிந்த

    உண்மை வரலாற்றைச் சொல்ல விழைகிறேன். மன்னன் ராஜராஜன் காலம் 11ஆம் நூற்றாண்டின் தொடக்கம். அதன் பின் முன்னூறு ஆண்டுகள் சோழர் ஆட்சி

    சிறப்பாக இருந்தது. சோழ பாண்டிய யுத்தங்கள் மூலம் சோழர் பரம்பரை ஒழிந்தது. அதன் முன்பாக குலோத்துங்கன் காலத்தில் நாடு சிறந்து வளம்பெற்று

    விளங்கியது. மக்கள் பொற்காசுகளைக் கொடுத்து புலவர்களை அழைத்து "ஜீவகன்" கதையைக் கேட்டு இன்புற்றனர். காரணம் அந்த 'ஜீவகசிந்தாமணி'

    கதையில் ஜீவகன் பல திருமணங்கள் செய்து கொள்கிறான். படிப்பவர்களுக்கு அதில் ஒரு கிளுகிளுப்பு. இதனைக் கண்டு மன்னன் குலோத்துங்கண் வருந்தி

    அமைச்சர் சேக்கிழாரை அழைத்து மக்கள் நல்வழிப்படுத்த வழி இல்லையா? ஒரு பின்னூட்டம் இத்தனை பெரியதா? என்ன செய்வது? வாத்தியார் அவர்கள் என்ன விரும்புகிறாரோ அப்படிச் செய்யட்டும். நன்றி./////

    ஒரு மனு நீதிச் சோழனின் கதை போதாதா? ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை. சோழர்களின் பெருமைகளை யாரும் கைவைத்து மறைக்க முடியாது.கல்கியின் பொன்னியின் செல்வனைப் படித்தவர்களுக்கு மட்டும் சோழர்கள் வாழ்ந்த வாழ்க்கை சற்று அதிகமாகத் தெரியும். நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி கோபாலன் சார்! பின்னூட்டம் 4,000 எழுத்துக்களுக்கு மேல் இருந்தால் கூகுள் ஒத்துக்கொள்வதில்லை. பதில் எழுதும் பொருட்டு அதைக்குறைத்துள்ளேன். உங்களின ஒரிஜினல் பின்னூட்டம் அப்படியே உள்ளயது. பதில் மட்டும் சுருங்கியுள்ளது

    ReplyDelete
  33. //// R.Srishobana said...
    வணக்கம் ஐயா,
    எங்களுக்கு சற்று அருகில் இருப்பதினால் இரண்டு முறை இராமானுஜர் கோவிலுக்கு சென்று வந்துள்ளேன்...மிகவும் அமைதியான,அழகான கோவில்...சில
    வருடங்களிக்கு முன்னர் பொதிகை தொலைக்காட்சியில் "இராமானுஜர்" வாழ்க்கையை தொடராக வந்தது...அப்பொழுது தான் இது போன்ற நிகழ்வுகளை அறிந்தேன்...இன்று வாத்தியார் ஐயா மீண்டும் காண்பித்து விட்டார்...ந‌ன்றி ஐயா...
    "திருத்துழாய்" வார்த்தை புதிது அத‌ன் பொருளையும் இன்று தான் அறிந்து கொண்டேன்...ந‌ன்றி kmrk ஐயா
    நான் அச்சிறுமி "பூப்ப‌றிக்க‌" செல்கிறாள் என்று நினைத்தேன்...அதனால் ஒரு பூமாலை கேட்க‌லாம் என்று நினைத்தேன்...ஆனால் விருந்தே கேட்டுவிட்டார்
    kmrk அவ‌ர்க‌ள்...ஹிஹிஹி...//////

    எண்ணத்தில் அவருக்கும் எனக்கும் சுவையான சாப்பாடுதான் முதலில் முன்வந்து நிற்கும்..ஹி..ஹி.ஹி..!

    ReplyDelete
  34. /////Saravana said...
    Dear Sir,
    We are blessed with a Baby Girl on 9th-FEB and I found the start is Pooram.
    I request you to give us a good names for our baby considering the star Pooram or suggest us, whom do we approach in coimbatore to have
    names. Thanks Sir in Advance!
    Thanks
    Saravanan
    Coimbatore/////

    பூரம்தானா என்று பார்ப்பதற்கு குழந்த பிறந்த நேரம், பிறந்த ஊர் இரண்டும் வேண்டும். அது முக்கியம் என்று தோன்றவில்லையா உங்களுக்கு?

    ReplyDelete
  35. Dear Sir,
    We are blessed with a Baby Girl on 9th-FEB and I found the start is Pooram.
    I request you to give us a good names for our baby considering the star Pooram or suggest us, whom do we approach in coimbatore to have
    names. Thanks Sir in Advance!
    Thanks
    Saravanan
    Coimbatore/////

    பூரம்தானா என்று பார்ப்பதற்கு குழந்த பிறந்த நேரம், பிறந்த ஊர் இரண்டும் வேண்டும். அது முக்கியம் என்று தோன்றவில்லையா உங்களுக்கு?
    ///////////
    Dear Sir,

    From Jagannatha software, I found it, it is pooram Star/ Kataga Lagnam.

    DOB: 09-02-2012
    Time: 17:37
    Place: Coimbatore

    Thanks
    Saravanan

    ReplyDelete
  36. நட்சத்திரங்களை விடுங்கள். செவ்வாயின் நிலையை வைத்து அல்லது செவ்வாய் தோஷம் என்ற ஒரே காரணத்தைச் சொல்லி தடை படும் திருமணங்கள்தான் அதிகம். ஜாதகத்தில் திருமண வாழ்விற்கான மற்ற எந்த சிறப்பான அம்சமும் நம்மவர்களிடம் எடுபடுவதில்லை அல்லது நம்மவர்கள் ஏற்கும் பக்குவத்தை அடையவில்லை என்று சொல்லலாம். இவற்றையெல்லாம் பார்த்து நொந்து போய்தான் நான் செவ்வாய் தோஷத்தைப் பற்றி எனது வகுப்பறையில் பதிவிட்டேன். அதற்கான சுட்டியயும் கொடுத்திருக்கிறேன். http://ananth-classroom.blogspot.com/2010/08/blog-post_06.html

    ReplyDelete
  37. சரவணா, வாழ்த்துக்கள். குழந்தைக்கும் தாய்க்கும் வாழ்த்துக்கள். தாய்க்கும் சேய்க்கும் தொண்டு செய்து உங்கள் பொழுதை மிக இனிமையாக கழிப்பீர்களாக.

    எந்தப் பெயராக இருந்தாலும் பிற்காலத்தில் மகள் "என்னப்பா இப்படி பேர் வச்சீங்க" என்று சண்டைக்கு வராத அளவிற்கு உள்ள பெயராக வையுங்கள்.

    ReplyDelete
  38. இன்னிக்கு வரலாற்றுப் பதிவாகிவிட்டது..ஏகப்பட்ட வரலாற்றுப் பின்னூட்டங்கள்..பல விவரங்களைத் தெரிந்துகொள்ள உதவியது..
    வரலாற்றைத் திரித்து எடுக்கப்படும் படங்கள்/கதைகள் உண்மையோ என்று நம்பும் மக்களின் மனதில் பதிந்தால் வரலாற்று நாயகர்களின் இமேஜ் பாதிக்க்கப் படுமே என்ற அக்கறை இல்லாமல் ஏனோ தானோ என்று செயல்பட்டிருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது..இதனைத் தோலுரித்த தஞ்சாவூரார் அவர்களுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி..(வரலாறு படிக்க ரொம்ப போர்..என்று சுத்தமாகப் படிப்பதை நிறுத்தி பல பத்தாண்டுகள் கடந்துவிட்டது..வரலாற்றுப் பிழைதான் செய்திருக்கிறேன்..

    ReplyDelete
  39. Thanks for your Wishes தேமொழி!

    Sure Will choose a good Name, Thats why I am requesting details from our Vaathiyaar!!!

    Best Regards
    Saravanan

    ReplyDelete
  40. ///அது ராஜுகே வெளிச்சம்!!அங்கே வேலை விட்ட சில பேர் தற்போது என்கூட பணிபுரிகிறார்கள்.///

    சத்யத்தை பத்தி நீங்கள் சொல்கிறீர்கள்
    சத்தியமாக நாம் சத்யத்தை பத்தி சொல்லவில்லை

    சாஃப்ட்வேர் கம்பெனியென்றால்
    அது தானா..?

    வெள்ளை தாளில் உள்ள கறுப்பு புள்ளியை பார்க்கும் கண்களுக்கு நீண்டு இருக்கும் வெள்ளை தெரியாதா?

    அத்தனை குறுகிய மனப்பாண்மையா
    அவரரின் எண்ணங்களே பதில் சொல்லட்டும்..

    வண்ணங்களால் அன்பு தோழி
    தேமொழியர் அதனை (ஓவியத்தால்) இந்த வாரம் விளக்கட்டும்

    ரா.....சா.....த்......தி......

    ReplyDelete
  41. ///I request you to give us a good names for our baby ///

    மங்கையர்கரசி

    ReplyDelete
  42. ஆசானே நமஸ்காரம்!

    கல்யாண்ச் சந்தையில் விலை போகாத 4 நட்சத்திரங்களில் கேட்டையும் ஒன்று.

    மற்ற மூன்று நட்சத்திரம் எது ஐயா!

    இந்த அல்லது இன்றைய பாடத்தினை படிக்கும் பொழுது கமலஹாசனின்
    தச அவதாரம் சினிமா தான் பட்டுன்னு மனதில் வந்தது .

    தேமொழி அக்கா கூறி இருந்தார்கள் அடியவன் கலந்து கொண்ட மினி மாரத்தான் அனுபவத்தை பற்றி எழுத சொல்லி .

    நிர்ணயிக்க பட்ட தூரத்தை கடந்தேன் ஆண்டவனின் கருணையால் . கலந்து கொண்டதிற்கு சான்றிதழ் மற்றும் பேக், டி- ஷர்ட் முதல் சில வகை பொருள்கள் கிடைக்கப்பெற்றேன் .

    ஆனால் விபரித்து எழுதும் அளவீர்க்கு நிர்வாக கேடு! எழுதமுடியாத அளவிற்கு இருந்தமையால் அந்நிய நாட்டில் இருந்து கொண்டு அவர்களை பற்றி எழுதவும் மனம் இல்லை மற்றும் எழுதுவது நன்றாக இருக்காது என்பதினால் எழுத போவது இல்லை என்பதினை தெரிவித்து கொள்கின்றேன் அன்பு உள்ளம் கொண்ட தேமொழி அக்கா அவர்களே !.

    மேலும் என்னுடன் பிறந்த மூத்த ஆக்காவின் பெயரும் மொழியில் தான் முடியும் அக்கா!.

    --

    ReplyDelete
  43. 'நான் அப்படிச் சொல்லவில்லை இப்படிச் சொல்லவில்லை , அதைச் சொல்லவில்லை இதைச் சொல்லவில்லை' என்றெலாம் சொல்வதை தவிர்க்க ஒரே வழி தெளிவாகக் கூறுதலே.

    ReplyDelete
  44. ////kmr.krishnan said...
    'நான் அப்படிச் சொல்லவில்லை இப்படிச் சொல்லவில்லை , அதைச் சொல்லவில்லை இதைச் சொல்லவில்லை' என்றெலாம் சொல்வதை தவிர்க்க ஒரே வழி தெளிவாகக் கூறுதலே.////

    "சொல்லுக சொல்லற்க சொல்லாமல்சொலல்விரும்பி
    சொன்னதையே திரும்பச்சொலல்."
    என்ற மூத்தோர் வாக்கைத் தானே KMRKசார் சொல்ல வர்றீங்க?

    ReplyDelete
  45. ///// Saravana said...
    Dear Sir,
    We are blessed with a Baby Girl on 9th-FEB and I found the start is Pooram.
    I request you to give us a good names for our baby considering the star Pooram or suggest us, whom do we approach in coimbatore to have
    names. Thanks Sir in Advance!
    Thanks Saravanan Coimbatore/////
    பூரம்தானா என்று பார்ப்பதற்கு குழந்த பிறந்த நேரம், பிறந்த ஊர் இரண்டும் வேண்டும். அது முக்கியம் என்று தோன்றவில்லையா உங்களுக்கு?
    ///////////
    Dear Sir,From Jagannatha software, I found it, it is pooram Star/ Kataga Lagnam.
    DOB: 09-02-2012 Time: 17:37 Place: Coimbatore
    Thanks
    Saravanan/////

    பூர நட்சத்திரத்திற்கான பெயரின் முதல் எழுத்து: மோ, ட, டி, டூ, மொ, மெள என்று இருந்தால் ந்ல்லது என்று பஞ்சாங்கம் கூறுகிறது.

    மோகனப்பிரியா, மோகனா, என்னும்படியான பெயர்களை வைக்கலாம்

    அதைவிட மேலாக இறைவியின் திருநாமங்களில் ஒன்றைச் சூட்டலாம். அதற்கு எதுவும் தடையில்லை
    மீனாட்சி, விசாலாட்சி, நீலா, அகிலா, அன்னபூரணி, பார்வதி, லெட்சுமி, அலர்மேலு, வள்ளி, தெய்வானை என்று இறைவியின் பெயர்களில் ஒன்றைச் சூட்டுங்கள்

    ReplyDelete
  46. ///// ananth said...
    நட்சத்திரங்களை விடுங்கள். செவ்வாயின் நிலையை வைத்து அல்லது செவ்வாய் தோஷம் என்ற ஒரே காரணத்தைச் சொல்லி தடை படும் திருமணங்கள்தான் அதிகம். ஜாதகத்தில் திருமண வாழ்விற்கான மற்ற எந்த சிறப்பான அம்சமும் நம்மவர்களிடம் எடுபடுவதில்லை அல்லது நம்மவர்கள் ஏற்கும் பக்குவத்தை அடையவில்லை என்று சொல்லலாம். இவற்றையெல்லாம் பார்த்து நொந்து போய்தான் நான் செவ்வாய் தோஷத்தைப் பற்றி எனது வகுப்பறையில் பதிவிட்டேன். அதற்கான சுட்டியயும் கொடுத்திருக்கிறேன். http://ananth-classroom.blogspot.com/2010/08/blog-post_06.html /////

    உங்களைன் ஆதங்கத்தை உரியமுறையில் வெளிப்படுத்தியமைக்கு நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  47. /// தேமொழி said...
    சரவணா, வாழ்த்துக்கள். குழந்தைக்கும் தாய்க்கும் வாழ்த்துக்கள். தாய்க்கும் சேய்க்கும் தொண்டு செய்து உங்கள் பொழுதை மிக இனிமையாக கழிப்பீர்களாக.
    எந்தப் பெயராக இருந்தாலும் பிற்காலத்தில் மகள் "என்னப்பா இப்படி பேர் வச்சீங்க" என்று சண்டைக்கு வராத அளவிற்கு உள்ள பெயராக வையுங்கள்.////

    தேன்மொழி என்று வைக்க வேண்டிய பெயரை தேமொழி என்று வைத்ததற்க்காக நீங்கள் சண்டை போட்டதுண்டா?

    ReplyDelete
  48. //// minorwall said...
    இன்னிக்கு வரலாற்றுப் பதிவாகிவிட்டது..ஏகப்பட்ட வரலாற்றுப் பின்னூட்டங்கள்..பல விவரங்களைத் தெரிந்துகொள்ள உதவியது..
    வரலாற்றைத் திரித்து எடுக்கப்படும் படங்கள்/கதைகள் உண்மையோ என்று நம்பும் மக்களின் மனதில் பதிந்தால் வரலாற்று நாயகர்களின் இமேஜ் பாதிக்க்கப் படுமே என்ற அக்கறை இல்லாமல் ஏனோ தானோ என்று செயல்பட்டிருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது..இதனைத் தோலுரித்த தஞ்சாவூரார் அவர்களுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி..(வரலாறு படிக்க ரொம்ப போர்..என்று சுத்தமாகப் படிப்பதை நிறுத்தி பல பத்தாண்டுகள் கடந்துவிட்டது..வரலாற்றுப் பிழைதான் செய்திருக்கிறேன்../////

    நாம் செய்த பிழையை எதற்கு வரலாறாக்க வேண்டும் ? சரி செய்யக்கூடியதென்றால் சரி செய்யலாம் இல்லாவிட்டால், மறந்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்க வேடியதுதான் மைனர்!

    ReplyDelete
  49. /// Saravana said...
    Thanks for your Wishes தேமொழி!
    Sure Will choose a good Name, Thats why I am requesting details from our Vaathiyaar!!!
    Best Regards
    Saravanan/////

    பதில் அளித்துள்ளேன். மேலே பார்க்கவும்

    ReplyDelete
  50. // அய்யர் said...
    ///அது ராஜுகே வெளிச்சம்!!அங்கே வேலை விட்ட சில பேர் தற்போது என்கூட பணிபுரிகிறார்கள்.///
    சத்யத்தை பத்தி நீங்கள் சொல்கிறீர்கள்
    சத்தியமாக நாம் சத்யத்தை பத்தி சொல்லவில்லை
    சாஃப்ட்வேர் கம்பெனியென்றால்
    அது தானா..?
    வெள்ளை தாளில் உள்ள கறுப்பு புள்ளியை பார்க்கும் கண்களுக்கு நீண்டு இருக்கும் வெள்ளை தெரியாதா?
    அத்தனை குறுகிய மனப்பாண்மையா
    அவரரின் எண்ணங்களே பதில் சொல்லட்டும்..
    வண்ணங்களால் அன்பு தோழி
    தேமொழியர் அதனை (ஓவியத்தால்) இந்த வாரம் விளக்கட்டும்/////

    அது ராஜீகே வெளிச்ம் என்பது யாரைக்குறிக்கிறதாம்?

    ReplyDelete
  51. /// அய்யர் said...
    ///I request you to give us a good names for our baby ///
    மங்கையர்கரசி////

    அங்கயற்கன்னி, மீனாட்சி, விசாலாட்சி
    இன்னும் எத்தனையோ பெயர்கள் உள்ளன. இணையத்தில் அதற்கான தளங்கள் உள்ளன!

    ReplyDelete
  52. //// kannan said...
    ஆசானே நமஸ்காரம்!
    கல்யாண்ச் சந்தையில் விலை போகாத 4 நட்சத்திரங்களில் கேட்டையும் ஒன்று.
    மற்ற மூன்று நட்சத்திரம் எது ஐயா!/////

    மூலம், ஆயில்யம், பூராடம் (ஆனால் அந்த நட்சத்திரததைப் பற்றியுள்ள சொல்லடைகள் எல்லாம் உண்மையானவையல்ல)
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    இந்த அல்லது இன்றைய பாடத்தினை படிக்கும் பொழுது கமலஹாசனின் தச அவதாரம் சினிமா தான் பட்டுன்னு மனதில் வந்தது .
    தேமொழி அக்கா கூறி இருந்தார்கள் அடியவன் கலந்து கொண்ட மினி மாரத்தான் அனுபவத்தை பற்றி எழுத சொல்லி
    நிர்ணயிக்க பட்ட தூரத்தை கடந்தேன் ஆண்டவனின் கருணையால் . கலந்து கொண்டதிற்கு சான்றிதழ் மற்றும் பேக், டி- ஷர்ட் முதல் சில வகை பொருள்கள் கிடைக்கப்பெற்றேன் .
    ஆனால் விவரித்து எழுதும் அளவிற்கு இல்லாத நிர்வாகக் கேடு! எழுதமுடியாத அளவிற்கு இருந்தமையால் அந்நிய நாட்டில் இருந்து கொண்டு அவர்களை பற்றி எழுதவும் மனம் இல்லை மற்றும் எழுதுவது நன்றாக இருக்காது என்பதினால் எழுத போவது இல்லை என்பதனை தெரிவித்து கொள்கின்றேன் அன்பு உள்ளம் கொண்ட தேமொழி அக்கா அவர்களே !.
    மேலும் என்னுடன் பிறந்த மூத்த ஆக்காவின் பெயரும் மொழியில் தான் முடியும் அக்கா!.////

    ஆமாம், இருக்கும் நாட்டின் விதிமுறைகளை அனுசரித்துப்போவதுதான் விவேகமான செயலாகும்!

    ReplyDelete
  53. //// kmr.krishnan said...
    'நான் அப்படிச் சொல்லவில்லை இப்படிச் சொல்லவில்லை , அதைச் சொல்லவில்லை இதைச் சொல்லவில்லை' என்றெலாம் சொல்வதை தவிர்க்க ஒரே வழி தெளிவாகக் கூறுதலே.////

    தெளிவாகக் கூறுதல் அனைவருக்கும் கை வந்த கலையா என்ன?

    ReplyDelete
  54. //// minorwall said...
    ////kmr.krishnan said...
    'நான் அப்படிச் சொல்லவில்லை இப்படிச் சொல்லவில்லை , அதைச் சொல்லவில்லை இதைச் சொல்லவில்லை' என்றெலாம் சொல்வதை தவிர்க்க ஒரே வழி தெளிவாகக் கூறுதலே.////
    "சொல்லுக சொல்லற்க சொல்லாமல்சொலல்விரும்பி
    சொன்னதையே திரும்பச்சொலல்."
    என்ற மூத்தோர் வாக்கைத் தானே KMRKசார் சொல்ல வர்றீங்க?////

    அது எல்லா வயதினருக்குமான வாக்குதான் மைனர்!:-)))

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com