மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

23.6.10

தமிழ் வளர்த்த அறிஞர்கள்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
தமிழ் வளர்த்த அறிஞர்கள்
இன்று கோவையில் செம்மொழித் தமிழ் மாநாடு துவங்குகிறது. தமிழை வளர்க்க அரும் பாடுபட்ட தமிழறிஞர்கள் சிலரை நினைவுகூர்வோம்!
   
1. கடலூர் பலராம அய்யர்   
2. பி.ஸ்ரீ ஆச்சார்யா   
3. நரசிம்மலு நாயுடு  
4. சொக்கலிங்க அய்யா ( 1856 - 1931 )  
5. பா.வே.மாணிக்க நாயக்கர்   
6. சுவாமி ஞானப்பிரகாசர்   
7. சி.வை.தாமோதரம் பிள்ளை   
8. ஆறு.அழகப்பனார்    
9. ச.மெய்யப்பனார்  
10. சுப்பிரமணிய முதலியார்  
11. பத்மநாபய்யர்    
12. க.த.திருநாவுக்கரசு   
13. ச.அகத்தியலிங்கனார்   
14. ரா.இளங்குமரனார்    
15. ச.வே. சுப்பிரமணியனார்   
16. தமிழண்ணல்    
17. கல்கி  
18. வ.அய்.சுப்பிரமணியம்  
19. ரா.சசாரங்கபாணியார்   
20. வ.சுப.மாணிக்கனார்   
21. ஞானசம்பந்தனார்   
22. ராமநாதன் செட்டியார்    ..
23. சித்பவானந்தர்   
24. ஏந்தல் மங்கலங்கிழார்   .
25. சிவஞான பாலைய அடிகளார்   
26. கா.பொ.ரத்தினம்   
27. மு.வரதராசனார்   
28. சி.இலக்குவனார்     :
29. அ.சிதம்பரநாதனார்   
30. தமிழ்க்கடல் ராய.செசாக்கலிங்கனார்  
31. பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார்   
32. மகாவித்துவான் மே.வீ.வேணுகோபால் பிள்ளை (1896 - 1985)    
33. ரா.பி.சேதுப்பிள்ளை   
34. பண்டிதர் அருணகிரிநாதர்    
35. ந.சி.கந்தையாபிள்ளை    .
36. திரிசிரபுரம் ரா.பஞ்சநதம்பிள்ளை  
37. பேராசிரியர் வேங்கடராஜூலு ரெட்டியார்  
38. சொ.முருகப்பா   
39. பூதலப்பட்டு ஸ்ரீராமுலு ரெட்டி   
40. சதாசிவப் பண்டாரத்தார்   
41. பேராசிரியர் மயிலை சிவமுத்து  
42. சாமி சிதம்பரனார்   
43. அவ்வை.சு.துரைசாமிப் பிள்ளை    
44. ஞா.தேவநேயப் பாவாணர்  
45. கி.ஆ.பெ.விசுவநாதனார்   
46. அண்ணாமலை செட்டியார்   
47. கோவிந்தசாமி    
48. தமிழ்ச் செம்மல் கா.நமச்சிவாய முதலியார்   
49. பாண்டித்துரைத் தேவர்   
50. மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை   
51. கா. சுப்பிரமணியபிள்ளை  
52. வேங்கடசாமி நாட்டார்   
53. உமாமகேசுவரன் பிள்ளை   
54. செல்வ கேசவராய முதலியார்   
55. தஞ்சை ஆபிரகாம் பண்டிதர்   
56. தண்டபாணி தேசிகர்  
57. தணிகை மணி   
58. பா.வே.மாணிக்க நாயக்கர்   
59. பூரணலிங்கம் பிள்ளை   
60. சுவாமி ஞானப்பிரகாசர்   
61. மயிலை சீனி வேங்டசாமி*
62. சுத்தானந்த பாரதியார் 
63. சாமிநாத சர்மா   
64. கந்தையாபிள்ளை
65. ஆர்.கே.சண்முகம் செட்டியார் 
66. பெ.நா.அப்புஸ்வாமி  
67. பொ.திருகூட சுந்தரம் பிள்ளை
68. பாவேந்தர் பாரதிதாசன்
69. சுத்தானந்த பாரதியார்  
70. பாபநாசம் சிவன்  
71. அறிஞர் வ.ரா.,  
72. கோவைக்கிழார் ராமச்சந்திரன் செட்டியார்  
73. ராமலிங்கம் பிள்ளை    
74. திரு.வி.க.,   
75. மகாகவி பாரதியார்    .
76. வ.வே.சு. ஐயர்  
77. நாவலர் சோமசுந்தர பாரதியார்   
78. ராஜாஜி   
79. சாயுபு மரைக்காயர்    
80. மு.ராகவையங்கார்   
81. மறைமலை அடிகள்   
82. தேசிக விநாயகம் பிள்ளை   
83. சதாவதானி செய்குத்தம்பி பாவலர்   
84. பம்மல் சம்பந்த முதலியார்  
85. வ.உ.சிதம்பரனார்   
86. நா.கதிரைவேற்பிள்ளை   .
87. பாம்பன் சுவாமிகள்  
88. பரிதிமாற் கலைஞர்   
89. சங்கரதாஸ் சுவாமிகள்    
90. சோழவந்தான் அரசஞ் சண்முகனார்    ..
91. உ.வே.சா.,
92. சுவாமி விபுலானந்தர்   
93. ஆறுமுக நாவலர்  
94 . வீரமாமுனிவர்
---------------------------------------------------------------------------
நன்றி: தினமலர்

இது முழுமையான பட்டியல் அல்ல! சிலருடைய பெயர்கள் விடுபட்டிருக்கலாம். நினைவிற்கு வருபவர்களை நீங்கள் உங்களின் பின்னூட்டம் மூலம் எழுதலாம்.

அன்புடன்
வாத்தியார்.
   
   



வாழ்க வளமுடன்!

24 comments:

  1. ஆஹா! அருமை!! அருமை!!!
    என் ஞானகுரு, தமிழாசான், என் ஆவியில் சேர்ந்துள்ள ஜோதி,
    குருதியினுள் ஓடும் சுவாசம், எனது புனர்ஜென்மத் தோழர்,
    மஹாகவி ஸ்ரீ சுப்ரமணிய பாரதியின் பாடல்....
    பல மொழிக்கற்று உணர்ந்து எழுதிய சத்திய வரிகள்.....
    "ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
    வாழ்கின்றோம் ஒருசொல் கேளீர்.................!!!!"
    அக்னி வார்த்தைகளால் அறைகூவல் விடுகிறார்.....
    கண்டும்?? கேட்டும்?? சும்மா வாய் பேசாமல்.....
    நமக்கென்ன?? என்று போகும் நடை பிணங்களைச் சாடுகிறார்....
    அற்புதப் பாடல், நன்றிகள் ஐயா!

    மாநாட்டில் தாங்கள் ஆற்றப் போகும்
    இனிது உரைக்கு எனது மனம் ஆர்ந்த வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. அன்புள்ள அய்யா,

    தங்கள் உரை நடத்த உள்ள அரங்கத்தின் முழு விபரம் வேண்டுமே?
    சிறிய விளக்கம் வேண்டும், தேமதுர தமிழ் என்றால் என்ன?

    நன்றி
    சரவணா
    கோவை

    ReplyDelete
  3. இவர்களும் அதில் (ஒருவகையில்)அடங்குவர்...
    கிருபானந்த வாரியார்,
    வள்ளல் அழகப்பச் செட்டியார்,
    குன்றக் குடி அடிகளார் (முன்னவர்),
    பேரறிஞர் அண்ணா,
    ப.ஜீவானந்தம்,
    ம.பொ.சி,
    பாபநாசம் சிவன்,
    பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்,
    கவியரசு கண்ணதாசன்,
    எ.பி. நாகராஜன்,
    எம்.எஸ்.சுப்பு லக்ஷ்மி,
    சுஜாதா (ரெங்கராஜன்),

    கலைஞர் கருணாநிதி,
    கவிஞர் வைரமுத்து,
    ஜெயகாந்தன்...........
    வானத்து நட்சத்திரங்களாய்த் தொடரும்....

    ReplyDelete
  4. செம்மொழி மாநாட்டில் உரையாற்றப்போகும் உங்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. பட்டியலுக்கு மிக்க நன்றி ஐயா, ஆனால் ஒரு முக்கிய பெயரை விட்டு விட்டீர்கள்
    முதலமைச்சர் கலைஞ்ர் மு.கருணாநிதி

    ReplyDelete
  6. Alasiam G said...
    ஆஹா! அருமை!! அருமை!!!
    என் ஞானகுரு, தமிழாசான், என் ஆவியில் சேர்ந்துள்ள ஜோதி,
    குருதியினுள் ஓடும் சுவாசம், எனது புனர்ஜென்மத் தோழர்,
    மஹாகவி ஸ்ரீ சுப்ரமணிய பாரதியின் பாடல்....
    பல மொழிக்கற்று உணர்ந்து எழுதிய சத்திய வரிகள்.....
    "ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
    வாழ்கின்றோம் ஒருசொல் கேளீர்.................!!!!"
    அக்னி வார்த்தைகளால் அறைகூவல் விடுகிறார்.....
    கண்டும்?? கேட்டும்?? சும்மா வாய் பேசாமல்.....
    நமக்கென்ன?? என்று போகும் நடை பிணங்களைச் சாடுகிறார்....
    அற்புதப் பாடல், நன்றிகள் ஐயா!
    மாநாட்டில் தாங்கள் ஆற்றப் போகும்
    இனிது உரைக்கு எனது மனம் ஆர்ந்த வாழ்த்துக்கள்!!!/////

    உங்களுடைய வாழ்த்துக்களுக்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  7. Saravana said...
    அன்புள்ள அய்யா,
    தங்கள் உரை நடத்த உள்ள அரங்கத்தின் முழு விபரம் வேண்டுமே?
    சிறிய விளக்கம் வேண்டும், தேமதுர தமிழ் என்றால் என்ன?
    நன்றி
    சரவணா
    கோவை/////

    தேமதுரத் தமிழ் என்றால் தேன் போன்று (சுவையான) இனிமையான தமிழ் என்று பொருள் கொள்ளுங்கள்
    மதுரம் என்றால் இனிமை என்று பொருள் (delightful, sweet)
    --------------
    உங்களுடைய ஆர்வத்திற்கு நன்றி!
    நேரம் கிடைத்தால் வாருங்கள்!
    இடம்: முரசொலி மாறன் அரங்கம், செம்மொழி மாநாட்டு வளாகம்
    தேதி: 24.6.2010 வியாழக்கிழமை,
    நேரம்: பிற்பகல் 2:45 முதல் 3:15 வரை
    பேசவிருக்கும் தலைப்பு: இனியது, இனியது, இணையம்
    ---------------------------

    ReplyDelete
  8. /////Alasiam G said...
    இவர்களும் அதில் (ஒருவகையில்)அடங்குவர்... கிருபானந்த வாரியார்,
    வள்ளல் அழகப்பச் செட்டியார், குன்றக்குடி அடிகளார் (முன்னவர்),
    பேரறிஞர் அண்ணா,ப.ஜீவானந்தம்,
    ம.பொ.சி, பாபநாசம் சிவன்,
    பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்,
    கவியரசு கண்ணதாசன்,
    எ.பி. நாகராஜன்,
    எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி,
    சுஜாதா (ரெங்கராஜன்),
    கலைஞர் கருணாநிதி,
    கவிஞர் வைரமுத்து,
    ஜெயகாந்தன்...........
    வானத்து நட்சத்திரங்களாய்த் தொடரும்....//////

    நல்லது. நன்றி ஆலாசியம்!எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி இசைக்கலைஞர்!

    ReplyDelete
  9. ////ஸ்வாமி ஓம்கார் said...
    செம்மொழி மாநாட்டில் உரையாற்றப்போகும் உங்களுக்கு வாழ்த்துக்கள்///////

    உங்களுடைய வாழ்த்துக்களுக்கு நன்றி சுவாமிஜி!
    நேரம் கிடைத்தால் வாருங்கள்!
    இடம்: முரசொலி மாறன் அரங்கம், செம்மொழி மாநாட்டு வளாகம்
    தேதி: 24.6.2010 வியாழக்கிழமை,
    நேரம்: பிற்பகல் 2:45 முதல் 3:15 வரை
    பேசவிருக்கும் தலைப்பு: இனியது, இனியது, இணையம்
    -----------------------------

    ReplyDelete
  10. /////சிங்கைசூரி said...
    பட்டியலுக்கு மிக்க நன்றி ஐயா, ஆனால் ஒரு முக்கிய பெயரை விட்டு விட்டீர்கள்
    முதலமைச்சர் கலைஞ்ர் மு.கருணாநிதி/////

    பட்டியல் என்னுடையது அல்ல. அதைப் பதிவிலேயே சொல்லியுள்ளேன். தினமலரில் வந்தது.

    ReplyDelete
  11. " எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி இசைக்கலைஞர்!"

    பிற கீர்த்தனைகளே அதிகம் பரவிக் கிடந்தபோது
    அம்மையார் போற்றவர்களும் பாரதியின் பாடல்களைப்
    (அவைகள் தாம் தேவைகளாக இருந்திருக்கும்)
    மேடைகளிலும் வானொலிகளிலும் பாடி, தமிழ்த் தொண்டு
    செய்துள்ளதால் அவர்களையும் சேர்த்து கொள்வோம் ஐயா!

    ReplyDelete
  12. அய்யா நான் ஆஸ்திரேலியாவில் வாழும் தங்களின் மாணவன் ,தமிழின் மீது பற்றும் ஜோதிடத்தின் மீது பிரியமும் கொண்டவன் ,இந்த மாநாட்டில் என்னால் நேரில் கலந்துகொள்ள முடியாதது வருத்தம் தான் .அதனால் தங்களின் உரையை வீடியோ பதிவு செய்து ஏன் போன்றவர்களுக்கு கிடைக்க செய்யுமாறு வேண்டுகிறேன்

    ReplyDelete
  13. தமிழறிஞர் தெ.பொ.மீ., பேராசிரியர் மா.ரா.போ.குருசாமி, தமிழ்க்கடல் தி.வே.கோபாலய்யர், மகாவித்வான் ரா.ராகவ ஐயங்கார், மு.ராகவ ஐயங்கார் இவர்கள் எல்லாம் இந்த பட்டியலில் சேர்க்கப்பட வேண்டியவர்கள் என்று எண்ணுகிறேன்.

    ReplyDelete
  14. ////Alasiam G said...
    " எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி இசைக்கலைஞர்!"
    பிற கீர்த்தனைகளே அதிகம் பரவிக் கிடந்தபோது
    அம்மையார் போற்றவர்களும் பாரதியின் பாடல்களைப்
    (அவைகள் தாம் தேவைகளாக இருந்திருக்கும்)
    மேடைகளிலும் வானொலிகளிலும் பாடி, தமிழ்த் தொண்டு
    செய்துள்ளதால் அவர்களையும் சேர்த்து கொள்வோம் ஐயா!///////

    நம் வகுப்பறையில் எல்லோரும் மன்னர்களே! சேர்த்துக்கொள்வோம்!

    ReplyDelete
  15. ///////NandaKumar said...
    அய்யா நான் ஆஸ்திரேலியாவில் வாழும் தங்களின் மாணவன் ,தமிழின் மீது பற்றும் ஜோதிடத்தின் மீது பிரியமும் கொண்டவன் ,இந்த மாநாட்டில் என்னால் நேரில் கலந்துகொள்ள முடியாதது வருத்தம் தான் .அதனால் தங்களின் உரையை வீடியோ பதிவு செய்து ஏன் போன்றவர்களுக்கு கிடைக்க செய்யுமாறு வேண்டுகிறேன்//////

    அதையெல்லாம் பங்கு கொள்பவர்கள் செய்ய முடியுமா என்று தெரியவில்லை. எனது உரையின் சுருக்கத்தை வலை ஏற்றுகிறேன். படித்து உவகை அடையுங்கள். உங்களின் அன்பிற்கும் ஆர்வத்திற்கும் நன்றி

    ReplyDelete
  16. /////Thanjavooraan said...
    தமிழறிஞர் தெ.பொ.மீ., பேராசிரியர் மா.ரா.போ.குருசாமி, தமிழ்க்கடல் தி.வே.கோபாலய்யர், மகாவித்வான் ரா.ராகவ ஐயங்கார், மு.ராகவ ஐயங்கார் இவர்கள் எல்லாம் இந்த பட்டியலில் சேர்க்கப்பட வேண்டியவர்கள் என்று எண்ணுகிறேன்.//////

    ஆகா, சேர்த்துக்கொள்வோம். நீங்கள் மூத்த தமிழ் ஆர்வலர். நீங்கள் சொன்னால் சரியாக இருக்கும்! நன்றி!

    ReplyDelete
  17. என்னை பொறுத்தவரை தமிழ் நாட்டில் இருந்து கொண்டு தங்கள் பிள்ளைகள் இங்கிலீஷ் மீடியத்தில் படிப்பதையும், ஆங்கிலத்தில் பேசுவதையும் பெருமையாக நினைப்பவர்களை தவிர மற்ற அனைவருமே தமிழை வளர்ப்பவர்கள், வாழ வைப்பவர்கள். தங்கள் பிள்ளைகளுக்கு தமிழை போதிப்பவர்கள் எல்லாரும் தமிழ் வளர்க்கும் அறிஞர்களே

    ReplyDelete
  18. ///Eswari said...
    என்னை பொறுத்தவரை தமிழ் நாட்டில் இருந்து கொண்டு தங்கள் பிள்ளைகள் இங்கிலீஷ் மீடியத்தில் படிப்பதையும், ஆங்கிலத்தில் பேசுவதையும் பெருமையாக நினைப்பவர்களை தவிர மற்ற அனைவருமே தமிழை வளர்ப்பவர்கள், வாழ வைப்பவர்கள். தங்கள் பிள்ளைகளுக்கு தமிழை போதிப்பவர்கள் எல்லாரும் தமிழ் வளர்க்கும் அறிஞர்களே/////

    நீங்கள் சொல்வது உண்மைதான். பன்னாட்டு நிறுவனங்களிலும், வெளி மாநிலங்களிலும், வெளிநாட்டிலும் தேடக் கிடைக்கும் வேலைகளுக்கு ஆங்கிலம் தேவை என்பதால், அந்த நோக்கில் தங்கள் பிள்ளைகள் இங்கிலீஷ் மீடியத்தில் படிக்க வைக்கிறார்கள். அதைக் குறை சொல்ல முடியாது. அவர்கள் அத்துடன் தங்கள் பிள்ளைகளுக்குத் தமிழையும் போதித்தார்கள் என்றால் சரிதான்!அவர்களையும் கணக்கில் சேர்த்துக்கொள்ளலாம்!

    ReplyDelete
  19. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,

    உரையின் சுருக்கத்தை வலை ஏற்றுவதுடன்,

    தங்களின் உரையை mp3 அல்லது cell phone மூலமாகப் பதிவு செய்து
    வலை ஏற்றுவது சிரமம் இருக்காது என எண்ணுகிறேன். வகுப்பில் கேட்கும் வாய்ப்பு ஏற்படும்.

    அமைப் பாளர்கள் மூலமாக அல்லது நாம் நமது ஏற்பாட்டின் மூலமாக ஒளிப்பதிவு செய்துக் கொள்ள வாய்ப்பு இருக்கும் என்றே நம்புவோம்..

    தங்களுக்கு மிக்க நன்றி.


    வணக்கம்.
    தங்களன்புள்ள மாணவன்

    வ.தட்சணாமூர்த்தி

    2010-06-23


    //////////////////////////////////////////////////

    ReplyDelete
  20. ஆசிரியருக்கு வாழ்த்துகள்!...

    நம்ப வலைப்பதிவுலகைப் பத்தியும் எல்லோர்க்கிட்டையும் சொல்லுங்க,..

    - ஜெகதீஸ்வரன்
    http://sagotharan.wordpress.com/

    ReplyDelete
  21. மாதவய்யா,வை.மு.கோதைநாயகி,(தமிழ்ப் புதினங்களின் முன்னோடிகள்)

    தீபம் நா.பார்த்தசாரதி,தி.ஜ.ரங்கனாதன்,கி.வா ஜகன்னதன்,எடிட்டர் எஸ்.ஏ.பி
    அண்ணாமலை,தினமலர் ராமசுப்பைய்யர்,தினத்தந்தி ஆதித்தனார்,தினமணி
    ஏ என் சிவராமன், சோ எஸ்.ராமஸாமி மற்றும் பல‌ இதழியலாளர்கள்.


    ம‌ணிக்கொடி கால‌ எழுத்தாள‌ர்க‌ள் ராமைய்யா,ந‌‌.பிச்ச‌மூர்த்தி, கு.ப‌. ராஜ‌கோபால‌ன்,புதுமைப்பித்த‌ன் என்னும் விருத்தாச‌ல‌ம்,தஞசை சுவாமிநாதஆத்ரேயர், தஞ்சை ராமைய்யா தாஸ்,தி.ஜானகிராமன்


    குழந்தைக் க‌விஞ்ர் அழ‌. வள்ளீய‌ப்பா,லெம‌ன் என்னும் லெட்சும‌ண‌‌ண் க‌ம்ப‌ன‌டிப்பொடி சா.க‌ணேச‌ன்,கோனார் நோட்ஸ் அய்ய‌ம்பெருமாள் கோனார், சேக்கிழார் அடிப்பொடி தி.ந‌. ராம‌ச்ச‌ந்திர‌ன்(சென்ற‌ ஆண்டின் த‌மிழ‌‌க‌ அர‌சின்
    பார‌தியார் விருதினைப்பெற்ற‌வ‌ரும், சைவ‌சிந்தாந்த‌ செம்ம‌லும் ஆவார்).....

    ....list incomplete....

    ReplyDelete
  22. ///V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    உரையின் சுருக்கத்தை வலை ஏற்றுவதுடன்,
    தங்களின் உரையை mp3 அல்லது cell phone மூலமாகப் பதிவு செய்து
    வலை ஏற்றுவது சிரமம் இருக்காது என எண்ணுகிறேன். வகுப்பில் கேட்கும் வாய்ப்பு ஏற்படும்.
    அமைப் பாளர்கள் மூலமாக அல்லது நாம் நமது ஏற்பாட்டின் மூலமாக ஒளிப்பதிவு செய்துக் கொள்ள வாய்ப்பு இருக்கும் என்றே நம்புவோம்..
    தங்களுக்கு மிக்க நன்றி.
    வணக்கம்.
    தங்களன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி////

    உங்களின் யோசனைக்கு நன்றி. முயற்சிக்கிறேன்!

    ReplyDelete
  23. ////ஜெகதீஸ்வரன். said...
    ஆசிரியருக்கு வாழ்த்துகள்!...
    நம்ப வலைப்பதிவுலகைப் பத்தியும் எல்லோர்க்கிட்டையும் சொல்லுங்க,..
    - ஜெகதீஸ்வரன்
    http://sagotharan.wordpress.com//////

    ஆகா, சொல்லிவிட்டால் போகிறது. நன்றி!

    ReplyDelete
  24. //////kmr.krishnan said...
    மாதவய்யா,வை.மு.கோதைநாயகி,(தமிழ்ப் புதினங்களின் முன்னோடிகள்)
    தீபம் நா.பார்த்தசாரதி,தி.ஜ.ரங்கனாதன்,கி.வா ஜகன்னதன்,எடிட்டர் எஸ்.ஏ.பி
    அண்ணாமலை,தினமலர் ராமசுப்பைய்யர்,தினத்தந்தி ஆதித்தனார்,தினமணி
    ஏ என் சிவராமன், சோ எஸ்.ராமஸாமி மற்றும் பல‌ இதழியலாளர்கள்.
    ம‌ணிக்கொடி கால‌ எழுத்தாள‌ர்க‌ள் ராமைய்யா,ந‌‌.பிச்ச‌மூர்த்தி, கு.ப‌. ராஜ‌கோபால‌ன்,புதுமைப்பித்த‌ன் என்னும் விருத்தாச‌ல‌ம்,தஞசை சுவாமிநாதஆத்ரேயர், தஞ்சை ராமைய்யா தாஸ்,தி.ஜானகிராமன்
    குழந்தைக் க‌விஞ்ர் அழ‌. வள்ளீய‌ப்பா,லெம‌ன் என்னும் லெட்சும‌ண‌‌ண் க‌ம்ப‌ன‌டிப்பொடி சா.க‌ணேச‌ன்,கோனார் நோட்ஸ் அய்ய‌ம்பெருமாள் கோனார், சேக்கிழார் அடிப்பொடி தி.ந‌. ராம‌ச்ச‌ந்திர‌ன்(சென்ற‌ ஆண்டின் த‌மிழ‌‌க‌ அர‌சின் பார‌தியார் விருதினைப்பெற்ற‌வ‌ரும், சைவ‌சிந்தாந்த‌ செம்ம‌லும் ஆவார்).....
    ....list incomplete....////////

    ஆமாம் பட்டியலை முழுமையாக்குவது. கடினம். நம் அனைவருக்கும் தெரியாதவர்களும் இருக்கலாம். உதாரணம்:
    பாடுவார் முத்தப்பசெட்டியார், கீழச்சிவல்பட்டியில் 18ஆம் நூற்றாண்டில் வாழந்த மாபெரும் கவிஞர்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com