மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

11.2.10

திருமணம் தாமதமாவதற்குக் காரணம் என்ன?

++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கேள்வியும் நானே - பதிலும் நானே! பகுதி 3

திருமணம் தாமதமாவதற்குக் காரணம் என்ன?

திருமணம் தள்ளிக்கொண்டே போவதற்கு ஜாதகப்படி உள்ள காரணங்களில் சில:

1. ஏழாம் வீட்டதிபதி நீசம் பெற்றிருந்தாலும் அல்லது வக்கிரகதியில் இருந்தாலும் அல்லது அஸ்தமனம் ஆகியிருந்தாலும் திருமணம் தாமதப்படும்.

2. ஏழாம் வீட்டதிபதி 12ல் மறைந்திருப்பதோடு, ஏழாம் வீட்டில் சனி வந்து குடியிருக்கும் அமைப்புள்ள ஜாதகனுக்கு அல்லது ஜாதகிக்குத் திருமணம் தாமதப்படும்.

3. ஏழாம் வீட்டதிபதி எட்டாம் வீட்டில், எட்டாம் அதிபதியுடனும், சனியுடனும் கூட்டாக இருந்தால் திருமணம் தாமதப்படும்.

4. ஒன்று & ஏழாம் வீடுகளின் மேல் (1/7 house axis) சனி, மற்றும் செவ்வாயின் ஆதிக்கம் இருந்தால் திருமணம் தாமதப்படும். (லக்கினத்தில் செவ்வாய் அல்லது சனி இருந்தால், அவர்களுடைய நேரடிப்பார்வை ஏழாம்
வீட்டின் மேல் விழுந்து ஜாதகனின் திருமணத்தைத் தாமதப்படுத்தும்)

5. அதேபோல இரண்டு & எட்டாம் வீடுகளின் மேல் (2/8 house axis) சனி, மற்றும் செவ்வாயின் ஆதிக்கம் இருந்தாலும் திருமணம் தாமதப்படும்.

6. சுபக்கிரகங்கள் வக்கிரகதியில் இருந்தாலும் திருமணம் தாமதப்படும்.

7. சுக்கிரன் அஸ்தமனமாகியிருந்தால் திருமணம் தாமதப்படும்.

8. ஏழாம் அதிபதி ஒன்றிற்கு மேற்பட்ட தீய கிரகங்களின் பார்வையில் இருந்தாலும் திருமணம் தாமதப்படும்.

9. ஐந்தாம் வீட்டில் செவ்வாய் இருந்தால் தாமதமான திருமணம்!

10. மிதுனம் அல்லது சிம்மம் அல்லது கன்னி ராசி ஆகிய இடங்கள் ஏழாம் வீடாக இருந்து, அங்கு சனி வந்து டென்ட் அடித்து இருந்தால் திருமணம் தாமதப்படும்.

11.சூரியனும், சுக்கிரனும் கூட்டாக மிதுனம் அல்லது சிம்மம் அல்லது கன்னி ராசியில் இருந்தால் ஜாதகனுக்குத் தாமதமாகத் திருமணம் நடைபெறும். அதுவே பெண்ணின் ஜாதகமாக இருந்தால் ஜாதகி திருமண வாழ்வு
வேண்டாம் எனக் கூறிவிடுவாள்.

12. சனி அல்லது செவ்வாய் ஏழாம் வீட்டில் இருந்தால், ஜாதகன் அல்லது ஜாதகியின் திருமணம் தாமதப்படுவதோடு, அவர்கள் தங்களைவிட வயதில் மூத்தவரைத் திருமணம் செய்து கொள்ள நேரிடும்.

இந்த அவலங்களில் இருந்து ஜாதகனை மீட்டு, அவனுக்குத் திருமணத்தை நடத்திவைக்கக்கூடிய ஒரே கிரகம் குரு பகவான் ஆவார். ஆகவே உரிய காலத்தில் திருமணமாகாமல் தவிப்பவர்கள். தினமும் குரு பகவானை
வழிபடுவது நல்ல பலனைத்தரும்.

இதெல்லாம் பொதுவிதிகள். தனி நபர்களின் ஜாதகத்தில் உள்ள வேறு சில நல்ல அமைப்புக்களை வைத்து இந்த விதிகள் தள்ளுபடியாகிவிடும் வாய்ப்புக்கள் உண்டு. ஆகவே யாரும் குழப்பம் அடைய வேண்டாம்.
குறிப்பாகப் பெண் வாசகர்கள்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்



வாழ்க வளமுடன்!

35 comments:

  1. ம்....இந்த வருசமாவது நடக்குதா பார்க்கலாம்.. ?!!

    ReplyDelete
  2. வணக்கம் குருவே..

    நலம் நலம் அரிய ஆவழ்...நல்ல விளக்கம்.

    நன்றி..

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  3. திருமணம் ஆகும் போது எனக்கு 31 வயது. என் மனைவிக்கு 29 வயது. எனக்கு 7ம் அதிபர் குரு வக்கிரமாக சனி பார்வையில் இருந்தார். என் மனைவிக்கு 7ல் (மகரம்) குரு மற்றும் செவ்வாய். இன்னும் சில காரணங்கள் இருந்தன. திருமணம் நிச்சயம் என்ற கிரக நிலை இருக்கும் போது அனுக்கூலமற்ற கோச்சார கிரக நிலையாலோ தசா புத்தியாலோ அது தாமதமாகும். Delayed not denied. சரிதானே ஆசிரியரே. குழந்தை பாக்கியத்திற்கும் இது போல் பார்க்க வேண்டும்.

    ReplyDelete
  4. நன்றி குருவே, இனி குருவை ஒரு கை பார்த்து விடுகின்றேன். தினமும் பூஜைதான். நன்றி.

    ReplyDelete
  5. நல்ல பயனுள்ள பட்டியல். நன்றி.

    இன்னும் சில திருமண‌த்தடை அமைப்புக்கள்:

    லக்னத்தில் கிரஹயுத்தம் பெற்ற கிர‌ஹம் இருப்பது.
    நவாம்ச லக்னத்திற்கு 7ல் சனி செவ்வாய் இருப்பது.
    சூரியன் மிதுனத்தில் சனி தனுசுவில் இருப்பது.
    சந்திரன்,சனி,சுக்கிரன்,கேது அம்சத்தில் இணைவது.
    லக்னத்திற்கு 2‍,12ல்செவ்வாய் கேது இருந்து பாவகர்த்தாரி யோகம் பெறுவது.

    ReplyDelete
  6. "ANCIENT INDIA; Upavedas are literature which are the subsidiary of the Vedas. In India we used to say that for each of the spiritual books there will be a scientific subsidiary book too. Tthus for Rig-Veda , the subsidiary is Artha Saastra, for yajurveda the subsidiary is dhanurveda, for Saama Veda the subsidiary is Gaandharva veda and for Atharva Veda, the subsidiaries are Ayurveda and sthaapathya veda. Artha Saastra gives economics and the rules for the governance of the nation. Koutilya / Chanakya has given the best knowledge on all aspects of the ruling of the nation, role of the king, ministers, financial aspects of governance etc. Kamandaka Artha Saastra gives yet another set of documentation on the same subject, still older compilation can be seen. Sukra neetisaara is also an Artha Saastra book. The Koutilya Artha Saastra is being accepted world over and more than 1500 foreign delegates participated in an international conference held on Koutilya Artha Saastra, last year. This shows the interest on the contents of the book written 2300 yrs ago".

    copy pasted from INDIAN INSTITUTE OF SCIENTIFIC HERITAGE NEWS LETTER. DT.10-FEB 2010

    ReplyDelete
  7. வணக்கம் அய்யா,
    சூரியனும், சுக்கிரனும் கூட்டாக சிம்மம் இருந்தால் ஜாதகனுக்குத் தாமதமாகத் திருமணம் நடைபெறும்.
    சிம்மம் ராசியில் சூரியன் ஆட்சி,அது போல சூரியன் உச்ச்ம் ஆன மேஷ ராசியில் இந்த கூட்டனி (சூரியனும், சுக்கிரனும்) இருந்தாலும் திருமணம் தாமதப்படுமா ?

    நன்றி.

    ReplyDelete
  8. கடக லக்னம், சனியும் செவ்வாயும் பரிவர்த்தனை ஆகி ஏழில் செவ்வாய் உச்சத்தில் இருந்தால், முழு பலத்துடன் உள்ள செவ்வாய் திருமணத்தை மிகவும் தாமத படுத்துவாரா ஐயா?

    ReplyDelete
  9. அய்யா இனிய காலை வணக்கம்,
    திருமணம் தாமதம் ஆவதற்க்கான அமைப்புகளை அறிய தந்தமைக்கு நன்றி...

    அய்யா 7 ம் அதிபதி நீசம் பெற்று குரு பார்வை பெற்றால் நீசம் கேன்சல் ஆகுமா?அல்லது திருமணம் தாமதம் ஆகுமா?

    நன்றி வணக்கம்....

    ReplyDelete
  10. வணக்கம் ஐயா,
    எனக்கு 7ம் அதிபதியே குருதான், அவர் மகரத்தில் மல்லாந்து படுத்து மயக்கமாயிட்டார் (அதாங்கய்யா நீச்சமாயிட்டார், தாங்கள் அவரை லஞ்சம் கொடுத்து இழுக்க ஒரு வழி சொல்லுங்க). முடிஞ்சா உங்களையும் கவனிச்சுடுரன் (என்னடா எனக்கே லஞ்சமான்னு கேக்குரீங்க, அதான் நன்றி சொல்லி தப்பித்துடுவோமில்ல...தப்பித்துடுவோமில்ல...)
    ;-)))

    நன்றி..

    ReplyDelete
  11. Dear sir,
    Guru in vakram placed in sixth position from kadaga lagna, till marriage is ????????????

    ReplyDelete
  12. //எனக்கு 7ம் அதிபதியே குருதான், அவர் மகரத்தில் மல்லாந்து படுத்து மயக்கமாயிட்டார்//

    Oxygen cylinder வைத்து drips ஏற்றுங்கள். ஒரு வேளை சரியாகலாம். Seriously அதுதான் நீச்ச பங்கம், சுய வர்க பரல், நவாம்சத்தில் கிரக நிலை போன்ற Boostகள் இருக்கின்றனவே. இதோடு காரகர் சுக்கிரன் இருக்கிறரே கவலை எதற்கு. சாத்வீக குணம் கொண்டவர் தேவ குரு. அதனால்தான் தாமச குணமுள்ள ராசியான மகரத்தில் நீச்சமாகிறார் ஒன்று சொல்வோரும் உண்டு. அவருக்கே லஞ்சமா.

    ReplyDelete
  13. குருநாதரே!!!

    தனது சுய விருப்பம் கொண்டு, குருநாதனை போற்றி துதித்த பாடல்கள் எல்லாம் மீண்டும்,
    நன்கு மனதிற்கு வரும் பொருட்டு ஒரு நல்வழி காட்டுங்களேன், ஐயா!


    தாய்!!!

    தாயானவள், தனது மழலை செல்வம்! திக்கி திணங்கி,
    தப்பு தப்பாக பேசுவதை கண்டு,எல்லை
    இல்லாத ஆனந்தம் படுவதை போல்

    'குரு'! ஆகிய 'வியாழபகவானும்'!

    மகிழ்ச்சி சொல்லுவார்.அப்படிதானே ஐயா !


    முழுதுணர் முனிவர் தேற! மூவகை பாசமாய
    பலிதொரு ஆன்மாக்கள் பதில் நிழல் அடங்க்கும் முன்மை
    செழுமலர் பெருவும் அங்க விரல்களால் தெரிந்த யாவரும்
    தொல் தொளுகளால் வழிபவர் தலைத்தாள் போற்றி !

    ReplyDelete
  14. /////யூர்கன் க்ருகியர் said...
    ம்....இந்த வருசமாவது நடக்குதா பார்க்கலாம்.. ?!!//////

    நல்லதேநினையுங்கள். நடக்கும். நடக்கட்டும்!

    ReplyDelete
  15. ////Success said...
    வணக்கம் குருவே..
    நலம் நலம் அரிய ஆவல்...நல்ல விளக்கம்.
    நன்றி.. வாழ்க வளமுடன்/////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  16. /////ananth said...
    திருமணம் ஆகும் போது எனக்கு 31 வயது. என் மனைவிக்கு 29 வயது. எனக்கு 7ம் அதிபர் குரு வக்கிரமாக சனி பார்வையில் இருந்தார். என் மனைவிக்கு 7ல் (மகரம்) குரு மற்றும் செவ்வாய். இன்னும் சில காரணங்கள் இருந்தன. திருமணம் நிச்சயம் என்ற கிரக நிலை இருக்கும் போது அனுக்கூலமற்ற கோச்சார கிரக நிலையாலோ தசா புத்தியாலோ அது தாமதமாகும். Delayed not denied. சரிதானே ஆசிரியரே. குழந்தை பாக்கியத்திற்கும் இது போல் பார்க்க வேண்டும்.//////

    ஆமாம். உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  17. ////பித்தனின் வாக்கு said...
    நன்றி குருவே, இனி குருவை ஒரு கை பார்த்து விடுகின்றேன். தினமும் பூஜைதான். நன்றி.////

    நல்லது. அப்படியே செய்யுங்கள்!

    ReplyDelete
  18. ////kmr.krishnan said...
    நல்ல பயனுள்ள பட்டியல். நன்றி.
    இன்னும் சில திருமண‌த்தடை அமைப்புக்கள்:
    லக்னத்தில் கிரஹயுத்தம் பெற்ற கிர‌ஹம் இருப்பது.
    நவாம்ச லக்னத்திற்கு 7ல் சனி செவ்வாய் இருப்பது.
    சூரியன் மிதுனத்தில் சனி தனுசுவில் இருப்பது.
    சந்திரன்,சனி,சுக்கிரன்,கேது அம்சத்தில் இணைவது.
    லக்னத்திற்கு 2‍,12ல்செவ்வாய் கேது இருந்து பாவகர்த்தாரி யோகம் பெறுவது./////

    மேலதிகத் தகவலுக்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  19. /////kmr.krishnan said...
    "ANCIENT INDIA; Upavedas are literature which are the subsidiary of the Vedas. In India we used to say that for each of the spiritual books there will be a scientific subsidiary book too. Tthus for Rig-Veda , the subsidiary is Artha Saastra, for yajurveda the subsidiary is dhanurveda, for Saama Veda the subsidiary is Gaandharva veda and for Atharva Veda, the subsidiaries are Ayurveda and sthaapathya veda. Artha Saastra gives economics and the rules for the governance of the nation. Koutilya / Chanakya has given the best knowledge on all aspects of the ruling of the nation, role of the king, ministers, financial aspects of governance etc. Kamandaka Artha Saastra gives yet another set of documentation on the same subject, still older compilation can be seen. Sukra neetisaara is also an Artha Saastra book. The Koutilya Artha Saastra is being accepted world over and more than 1500 foreign delegates participated in an international conference held on Koutilya Artha Saastra, last year. This shows the interest on the contents of the book written 2300 yrs ago". copy pasted from INDIAN INSTITUTE OF SCIENTIFIC HERITAGE NEWS LETTER. DT.10-FEB 2010//////

    பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  20. /////vj said...
    வணக்கம் அய்யா,
    சூரியனும், சுக்கிரனும் கூட்டாக சிம்மம் இருந்தால் ஜாதகனுக்குத் தாமதமாகத் திருமணம் நடைபெறும்.
    சிம்மம் ராசியில் சூரியன் ஆட்சி,அது போல சூரியன் உச்சம் ஆன மேஷ ராசியில் இந்த கூட்டனி (சூரியனும், சுக்கிரனும்) இருந்தாலும் திருமணம் தாமதப்படுமா ?
    நன்றி./////

    இல்லை. மேஷம் சொல்லப்படவில்லை!.

    ReplyDelete
  21. ////vidhya said...
    கடக லக்னம், சனியும் செவ்வாயும் பரிவர்த்தனை ஆகி ஏழில் செவ்வாய் உச்சத்தில் இருந்தால், முழு பலத்துடன் உள்ள செவ்வாய் திருமணத்தை மிகவும் தாமதப் படுத்துவாரா ஐயா?/////

    கடகத்திற்கு செவ்வாய் 5 & 10ற்குரியவர். உச்சமானதால் அவரால் உபத்திரவம் அதிகம் இருக்காது. பரிவர்த்தனையாகியுள்ள சனியால் மட்டுமே உபத்திரவம் இருக்கும். தினமும் கோளறு திருப்பதிகம் படியுங்கள். அதுதான் பரிகாரம். சிவனை வணங்குங்கள். எல்லாம் நல்லபடியாக நடக்கும்

    ReplyDelete
  22. /////astroadhi said...
    அய்யா இனிய காலை வணக்கம்,
    திருமணம் தாமதம் ஆவதற்க்கான அமைப்புகளை அறிய தந்தமைக்கு நன்றி...
    அய்யா 7 ம் அதிபதி நீசம் பெற்று குரு பார்வை பெற்றால் நீசம் கேன்சல் ஆகுமா?அல்லது திருமணம் தாமதம் ஆகுமா?
    நன்றி வணக்கம்....//////

    பார்வையால் நீசம் கேன்சல் ஆகாது. ஆனால் அவருடைய பார்வை நன்மைகளைச் செய்யத்தூண்டும்!

    ReplyDelete
  23. /////Thirumal said...
    வணக்கம் ஐயா,
    எனக்கு 7ம் அதிபதியே குருதான், அவர் மகரத்தில் மல்லாந்து படுத்து மயக்கமாயிட்டார் (அதாங்கய்யா நீச்சமாயிட்டார், தாங்கள் அவரை லஞ்சம் கொடுத்து இழுக்க ஒரு வழி சொல்லுங்க). முடிஞ்சா உங்களையும் கவனிச்சுடுரன் (என்னடா எனக்கே லஞ்சமான்னு கேக்குரீங்க, அதான் நன்றி சொல்லி தப்பித்துடுவோமில்ல...தப்பித்துடுவோமில்ல...)
    ;-))) நன்றி..///////

    பிரார்த்தனை ஒன்றுதான் லஞ்சம்! அதை லஞ்சமாக நினைக்காமல் முழு மனதோடு பிரார்த்தனை செய்யுங்கள்

    ReplyDelete
  24. /////jee said...
    Dear sir,
    Guru in vakram placed in sixth position from kadaga lagna, till marriage is ?///////

    குரு 6 & 9 ற்கு உரியவர். கடக லக்கினம் எனும்போது, ஏழாம் அதிபதி சனியைப் பாருங்கள்.

    ReplyDelete
  25. ////ananth said...
    //எனக்கு 7ம் அதிபதியே குருதான், அவர் மகரத்தில் மல்லாந்து படுத்து மயக்கமாயிட்டார்//
    Oxygen cylinder வைத்து drips ஏற்றுங்கள். ஒரு வேளை சரியாகலாம். Seriously அதுதான் நீச்ச பங்கம், சுய வர்க பரல், நவாம்சத்தில் கிரக நிலை போன்ற Boostகள் இருக்கின்றனவே. இதோடு காரகர் சுக்கிரன் இருக்கிறரே கவலை எதற்கு. சாத்வீக குணம் கொண்டவர் தேவ குரு. அதனால்தான் தாமச குணமுள்ள ராசியான மகரத்தில் நீச்சமாகிறார் ஒன்று சொல்வோரும் உண்டு. அவருக்கே லஞ்சமா./////

    தீவிர பிரார்த்தனைதான் லஞ்சம்!:-)))))

    ReplyDelete
  26. /////kannan said...
    குருநாதரே!!!
    தனது சுய விருப்பம் கொண்டு, குருநாதனை போற்றி துதித்த பாடல்கள் எல்லாம் மீண்டும்,
    நன்கு மனதிற்கு வரும் பொருட்டு ஒரு நல்வழி காட்டுங்களேன், ஐயா!
    தாய்!!!
    தாயானவள், தனது மழலை செல்வம்! திக்கி திணங்கி,
    தப்பு தப்பாக பேசுவதை கண்டு,எல்லை
    இல்லாத ஆனந்தம் படுவதை போல்
    'குரு'! ஆகிய 'வியாழபகவானும்'!
    மகிழ்ச்சி சொல்லுவார்.அப்படிதானே ஐயா !
    முழுதுணர் முனிவர் தேற! மூவகை பாசமாய
    பலிதொரு ஆன்மாக்கள் பதில் நிழல் அடங்க்கும் முன்மை
    செழுமலர் பெருவும் அங்க விரல்களால் தெரிந்த யாவரும்
    தொல் தொளுகளால் வழிபவர் தலைத்தாள் போற்றி !///////

    வைத்தஒரு கல்வி மனப்பழக்கம் என்று அவ்வையார் சொல்லியிருக்கிறார். திரும்பத் திரும்ப மனம் செய்யுங்கள்
    எல்லாம் மனதில் நிற்கும்!

    ReplyDelete
  27. ///பிரார்த்தனை ஒன்றுதான் லஞ்சம்! அதை லஞ்சமாக நினைக்காமல் முழு மனதோடு பிரார்த்தனை செய்யுங்கள்////

    மிக்க நன்றிங்கய்யா....

    ReplyDelete
  28. வணக்கம் சார்,
    அப்பா இவ்வளவு வளையலா கையில போட்டுக்குணு இருக்குறங்க நல்லாயிருக்குது படம். பாடமும் நன்றாக இருக்கிறது விவகாரத்து, விதவைக்கான(மிக இளம் வயதில் மட்டும்)காரணத்தையும் எழுதுங்கள் ஐயா.
    சுந்தரி

    ReplyDelete
  29. ஆசிரியருக்கு வணக்கம்,
    வகுப்பறை சக தோழர்களுக்கும் வணக்கம்,
    சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் வந்து
    வருகைப் பதிவிலாது கையெழுத்துப்போட்டு
    விட்டு போவது வழக்கம்,
    நான் அதைக் கூட செய்யாது;
    காலையிலே வந்துப் பார்த்துவிட்டு
    பதியாது சென்றுவிட்டேன்.

    பாடத்தேன் இனித்தது என்பது வழக்கம் இன்று
    பாடம் சீம்பாலோடு ( இதன் சுவை சிலருக்குத்
    தெரியாது என நினைக்கிறேன்; தெரிந்திராதவர்கள்
    இப்பாடம் படித்தபின்பு தெரிந்திருக்கும் )
    தேன் கலந்தது போன்று
    ஒரு அமுதமானது என்றேக் கூறவேண்டும்...

    குருவே தங்களுக்கு மின்- மடல் அனுப்பியுள்ளேன்.
    பிழை இருப்பின் பொருத்தருள வேண்டும்:
    உரிமையில் வந்த ஒருமைக்கும்
    மன்னித்தருள வேண்டுகிறேன்.

    நன்றிகள் குருவே!
    அன்புடன்,
    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  30. /////Thirumal said...
    ///பிரார்த்தனை ஒன்றுதான் லஞ்சம்! அதை லஞ்சமாக நினைக்காமல் முழு மனதோடு பிரார்த்தனை செய்யுங்கள்////
    மிக்க நன்றிங்கய்யா....///

    புரிதலுக்கு நன்றி!

    ReplyDelete
  31. ////sundari said...
    வணக்கம் சார்,
    அப்பா இவ்வளவு வளையலைக் கையில போட்டுக்குணு இருக்குறங்க நல்லாயிருக்குது படம். பாடமும் நன்றாக இருக்கிறது விவகாரத்து, விதவைக்கான(மிக இளம் வயதில் மட்டும்)காரணத்தையும் எழுதுங்கள் ஐயா.
    சுந்தரி///

    பொறுத்திருங்கள். எல்லாம் தொடர்ந்து வரும்!

    ReplyDelete
  32. ///Alasiam G said...
    ஆசிரியருக்கு வணக்கம்,
    வகுப்பறை சக தோழர்களுக்கும் வணக்கம்,
    சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் வந்து
    வருகைப் பதிவிலாது கையெழுத்துப்போட்டு
    விட்டு போவது வழக்கம்,
    நான் அதைக் கூட செய்யாது;
    காலையிலே வந்துப் பார்த்துவிட்டு
    பதியாது சென்றுவிட்டேன்.
    பாடத்தேன் இனித்தது என்பது வழக்கம் இன்று
    பாடம் சீம்பாலோடு ( இதன் சுவை சிலருக்குத்
    தெரியாது என நினைக்கிறேன்; தெரிந்திராதவர்கள்
    இப்பாடம் படித்தபின்பு தெரிந்திருக்கும் )
    தேன் கலந்தது போன்று
    ஒரு அமுதமானது என்றேக் கூறவேண்டும்...
    குருவே தங்களுக்கு மின்- மடல் அனுப்பியுள்ளேன்.
    பிழை இருப்பின் பொருத்தருள வேண்டும்:
    உரிமையில் வந்த ஒருமைக்கும்
    மன்னித்தருள வேண்டுகிறேன்.
    நன்றிகள் குருவே!
    அன்புடன்,
    ஆலாசியம் கோ.////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  33. வணக்கம் ஐயா. நீண்ட நாட்களுக்கு பிறகு வகுப்பறைக்கு வந்து இருக்கிறேன். எல்லா பாடங்களையும் படித்து வருகிறேன் ஐயா
    சேர்மராஜ்

    ReplyDelete
  34. 2ம் அதிபதி,ஏழாம் அதிபதி,சுக்கிரன் லக்னத்தில் (சிம்மம்) அஸ்தமனம் கூடவே லக்னத்தில் (குரு,சூரிய,ராகு) கிரஹயுத்தம், இந்த அமைப்புக்கு தாமதமான திருமணமா அலலது மறுக்கப்ட‌ திருமணமா?

    ReplyDelete
  35. நன்றி குரு
    கும்பம் லக்கினம் துலாம் ராசி
    7ம் அதிபதி 9ல் நீசம் 10ல் சுக்கிரன்
    எனக்கு பலன் இருக்கா
    அல்லது திருமண தடையா

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com