மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

29.4.09

கழுதையும், குதிரையும்!

கழுதையும், குதிரையும்!

இது சென்ற பதிவின் தொடர்ச்சி. அதைப் படித்திராதவர்கள் படித்துவிட்டு
இதைப்படிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்
========================================
ஜாதகத்தில் மனைவியின் நிலை என்ன? அதாவது மனைவியின் ஸ்தானமான
7ஆம் வீட்டிற்கும் குடும்ப ஸ்தானமான 2ஆம் வீட்டிற்கும், ஜாதகத்தில்
உள்ள அமைப்பும், தொடர்பும் என்ன?

அதை இப்போது பார்ப்போம்.

ஜாதகத்தில் லக்கினம்தான் மிகவும் முக்கியமான இடம். அதைவைத்துத்தான்
எல்லாப் பலா பலன்களும்.

ஆதிகாலத்தில் அனைவரும் வாக்கியப் பஞ்சாங்கத்தைத்தான் பயன்
படுத்தினார்கள். பிற்காலத்தில் தான் கணிதத்தைப் பிரதானமாக வைத்து
அனைவரும் திருக்கணிதப் பஞ்சாங்கத்தைப் பயன் படுத்துகிறார்கள்

சில கணினி மென்பொருட்கள் திருக்கணிதத்தை மட்டுமே அடிப்படையாகக்
கொண்டு இயங்கும். சில மென்பொருட்களில் இரண்டில் ஒன்றைத் தேர்வு
செய்யும் வசதி கொடுக்கப்பட்டிருக்கும்.

அவை இரண்டிற்கும் உள்ள வேறுபாடு:

வாக்கியத்தில் வருடத்திற்கு 360 நாட்கள் மட்டுமே.
திருக்கணிதத்தில் வருடத்திற்கு 365.25 நாட்கள்

தசா புத்திகளும் 360 நாட்களை அடிப்படையாகக் கொண்டுள்ளதால்.
வாக்கியமும் சரியாக இருக்கும்.

நமது வகுப்பறை மாணவர் கரூர்.திரு. தியாகராஜன் அவர்கள் உபயமாகக்
கொடுத்துள்ள மென்பொருளில், இரண்டு முறைகளிலும் ஜாதகத்தைக் கணித்துக்
கொள்ளும் வசதி உள்ளது.

அந்த மென்பொருளில், File மெனுவில் 7ஆவதாக Preference எனும் Option
உள்ளது. அதைக் கிளிக்கினால் ஒரு புது விண்டோவில் அது கிடைக்கும்

உங்கள் பார்வைக்காக அதைப் படமாகக் கொடுத்துள்ளேன்.



1. அதில் லகிரி + சவுத் இந்தியன் + 365.25 என்பது திருக்கணிதம்
2. ராமன் + சவுத் இந்தியன் + 360 நாட்கள் என்பது வாக்கியம்

சரி, இன்று காலை 6:30 மணிக்கு ஒரு குழந்தை பிறக்கிறது என்று வைத்துக்
கொண்டு அதன் ஜாதகத்தை, அந்த இரண்டு வழிமுறைகளிலுமே கணித்துப்
பார்ப்போம்.

கணித்தவற்றைக் கீழே கொடுத்துள்ளேன்.

படம் எண் ஒன்று

படம் எண் இரண்டு

படம் எண் ஒன்று வாக்கியப்படி கணிக்கப்பெற்றது
படம் எண் இரண்டு திருக்கணிதப்படி கணிக்கப்பெற்றதாகும்

இரண்டிலும் கிரக நிலைகள் எல்லாம் சரியாக இருப்பதைப் பாருங்கள்.
ஆனால் தசா இருப்பு மட்டும் மாறுபடுகிறது.

ராகு 14 வருடம் 9 மாதம் 18 தேதி
ராகு 16 வருடம் 11 மாதம் 16 தேதி

இரண்டிற்கும் ஏன் இந்த வித்தியாசம் என்று யாரையும் கேட்க முடியாது.
இந்த வாக்கியப் பஞ்சாங்கத்தை Formulate செய்த மேதைகள் எல்லாம்
இப்போது உயிரோடு இல்லை. யாரைப் போய்க் கேட்பது?

யாருக்கு எது ஒத்து வருகிறதோ அதை வைத்துக் கொள்ள வேண்டியதுதான்
குழப்பமில்லாமல் இருப்பதற்கு, உங்கள் வீட்டுப் பெரிசுகள், உங்கள் ஜாதகத்தை
அந்தக் காலத்து ஜோதிடரிடம் எழுதி வாங்கி வைத்திருப்பார்கள். அதோடு
ஒத்து வருவதை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்

No system is perfect அதை மனதில் வையுங்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இதில் Border Birth என்னும் கால சந்திப்பில், அதாவது இரு லக்கினங்களுக்கு
இடைப்பட்ட காலத்தில் பிறந்த குழந்தைக்கு லக்கினமே மாறிவரும்.

வாக்கியப்படி எனக்கு சிம்ம லக்கினம்
திருக்கணிதப்படி எனக்கு கடக லக்கினம் வரும்.

எங்கள் வீட்டுப் பெரியவர்கள் குறித்துவைத்துள்ளது சிம்ம லக்கினம். அதோடு
என் குணத்திற்கு ஒத்து வருவதும் அதுதான். ஆகவே நான் வாக்கியப்படி
உள்ளதையே எடுத்துக்கொண்டுள்ளேன்.
=======================================================
இதில் குழப்பத்திற்கு இடம் இல்லை.

இன்று சித்திரை மாதம் 16ஆம் தேதி
இன்றைய உதய லக்கினம் மேஷம்.
சூரிய உதயம் காலை 6:00 மணி
இன்றுவரை கழிவான லக்கின காலம் 15 நாட்கள் x 4 நிமிடங்கள்
= 60 நிமிடங்கள்
அதாவது இன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலுமே
மேஷ லக்கினம். அதற்கு பிறகு 7 to 9 மணி வரை ரிஷப லக்கினம்
அடுத்தடுத்து வரும் ஒவ்வொரு 2 மணி நேற்றத்திற்கும் லக்கினம்
மாறிக் கொண்டே இருக்கும்.
இதில் Border Birth என்பது 6:55 முதல் 7:05 வரை பிறக்கும்
குழந்தைகளின் பிறப்பு

இதையெல்லாம் நீங்கள் கழித்துப் பார்த்து மண்டையை உடைத்துக் கொள்ள
வேண்டாம். கணினியில் இரண்டு option களிலுமேயே உங்கள் ஜாதகத்தைக்
கணித்துப் பாருங்கள். லக்கினம் இரண்டிலும் மாறாமல் இருந்தால் சரிதான்

மாறினால் வாக்கியத்தை எடுத்துக் கொள்ளூங்கள்
======================================================
இப்போது பாடத்திற்கு வருவோம்.

ஆணில்லாமல் பெண் இல்லை. பெண் இல்லாமல் ஆண் இல்லை.
அப்படியொரு ஈர்ப்பு இருபாலருக்கும் இடையே உண்டு.

அப்படியொரு பெண்ணின் தொடர்பு, சமூக மற்றும் சட்ட அமைப்பின்படி
உங்களுக்குக் கிடைக்கும்போது அதற்கு ஈடு இணையே கிடையாது.

எல்லோருக்கும் அப்படிக் கிடைத்துவிடுகிறதா என்ன?

பாதிப்பேர்களுக்கு அப்படிக்கிடைப்பதில்லை. கிடைத்ததை வைத்து
வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருப்பவர்களே அதிகம்.

சிலருக்குத் தேவதைகள் துணையாக வந்து சேர்வார்கள்.
சிலருக்குப் பிசாசுகள் துணையாக வந்து சேரும்.
பெண்களும் இதற்கு விதிவிலக்கல்ல!
சிலருக்கு ஹீரோக்கள் துணையாக வந்து சேர்வார்கள்
சிலருக்கு வில்லன்கள் கணவனாக வந்து சேர்வார்கள்

அதற்குக் காரணம் என்ன?

அதுதான் ஜாதக அமைப்பு; வாங்கி வந்த வரம்!
==================================================
லக்கினமே பிரதானமானது. லக்கினத்திற்கு ஏழாம் இடம் அதற்கு
அடுத்தபடியாகப் பிரதானமானது ஆகும்.

லக்கினாதிபதி லக்கினத்தில் இருப்பதைவிட ஏழில் இருந்து லக்கினத்தைப்
பார்க்கும் அமைப்பு உன்னதமானதாகும். சிறப்புடையதாகும்.

உச்சமாகும் கிரகம், தனது உச்ச ஸ்தானத்தில் இருந்து அதன் ஏழாம்
இடத்தில் நீசமாகும். நீசத்திலிருந்து ஏழில் உச்சமாகும்.

பார்வையில் ஏழாம் பார்வை சிறப்புடையதாகும்.

இந்த அடிப்படையில்தான் லக்கினத்தின் ஏழாம் வீடு மனைவிக்கு உரிய,
பெண்ணாக இருந்தால் கணவனுக்கு உரிய இடமாக வழங்கப்பெற்றிருக்கிறது

லக்கினம் நன்றாக இருந்து, ஏழாம் வீடும் நன்றாக இருந்தால் தாம்பத்ய
வாழ்க்கை அற்புதமாக இருக்கும். ஜோடிப்பொருத்தம் அருமையாக
இருக்கும். மனைவி உங்களுக்காக உயிரையும் கொடுப்பவளாக இருப்பாள்
இல்லையென்றால் உயிரை எடுப்பவளாக இருப்பாள். அதாவது உங்களுடைய
எதிர்பார்ப்பிற்குச் சற்றும் ஏற்றவளாக இருக்க மாட்டாள்.

நல்ல மனைவியாக அமைந்து விட்டால், பார்ப்பவர்கள் Made for each other
என்பார்கள்.

எப்படிபட்ட மனைவி அமைவாள் என்பதைப் பற்றிய பாடத்தை முன்பே
நடத்திவிட்டேன். ஆகவே அதைப் பற்றி மீண்டும் எழுதவில்லை
====================================================
இப்போது ஏழாம் வீட்டிற்கும், குடும்ப ஸ்தானமான 2ஆம் வீட்டிற்கும்
உள்ள தொடர்பைப் பார்ப்போம்.

குடும்ப வாழ்க்கை என்பது பிறப்பிலிருந்து இறப்பு வரை வருவது.
25 வருட காலம் பெற்றோர்களை வைத்துக் குடும்ப வாழ்க்கை.
ஐம்பது வயதிற்கு மேல் குழந்தைகளை வைத்துக் குடும்ப வாழ்க்கை.
அதைப் பற்றி முன் பதிவில் விவரமாக எழுதியுள்ளேன்.

மனைவியால் கிடைக்கும் குடும்ப வாழ்க்கை என்பது இடைச்செருகல்
அவள் நன்றாக அமைந்தால் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி கூடும்.
இல்லையென்றால் மகிழ்ச்சி குறையும்.
++++++++++++ஆனால் குடும்ப வாழ்க்கை இல்லாமல் போகாது.

2ஆம் வீட்டிலிருந்து 7ஆம் வீடு அதன் ஆறாம் இடமாகும்
7ஆம் வீட்டிலிருந்து 2ஆம் வீடு அதன் எட்டாம் இடமாகும்
அதாவது 6/8 Position and 8/6 Position
ஒன்றிற்கொன்று அஷ்ட சஷ்டம வீடுகள்.
என்னவொரு மோசமான அமைப்புப் பாருங்கள்

நல்ல அழகான, அனுஷ்கா சர்மா போன்ற அல்லது ஐஷ்வர்யா பச்சன்
போன்ற மனைவியே ஒருவனுக்கு அமைகிறாள் என்ற வைத்துக்
கொள்ளுங்கள். அவனுடைய 2ஆம் வீடு நன்றாக இல்லையென்றால்
என்ன ஆகும்?

ஜாதகன் குடும்பம் நடத்தமாட்டான். அவளை இங்கே விட்டு விட்டு,
அவன் பொருள் தேடி துபாய்க்குச் சென்று விடுவான். பொருள்
ஓரளவிற்குச் சேர்ந்தாலும் மனத்திருப்தியுடன் திரும்ப மாட்டான்.
நாடி தளர்ந்தபின்தான் திரும்புவான்.

திருப்தியை மட்டும் கடவுள் மனிதனுக்குக் கொடுக்கவில்லை.
அதைப் பற்றி விவரமாகப் பின்னால் எழுதுகிறேன்.

அவனை நம்பி வந்த தேவதை நிலவையும் வானத்தையும் பார்த்துக்
கொண்டு, கண்களில் நீரோடு, இங்கேயே கிடக்க வேண்டியதுதான்.
அல்லது டாலரில் விருப்பமுள்ளவளாக இருந்தால் கலர்க் கலர்க்
கனவுகளில் மிதந்தவாறு, இளமை வீணாவதை மறந்து, மல்லாக்கப்
படுத்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்.

சரி, இரண்டாம் வீடு நன்றாக இருந்து 7ஆம் வீடு நன்றாக இல்லை
யென்றால் என்ன ஆகும்?

கழுதை போன்ற மனைவி வந்து சேர்வாள். அவளைக் குதிரையாகப்
போற்றிக் கணவன் குடும்பம் நடத்திக் கொண்டிருப்பான்.

சரி, இரண்டு வீடுகளுமே மோசமாக இருந்தால் என்ன ஆகும்?
வாழ்க்கைப்பட்ட கருமத்திற்காக இருவரும் ஒருவித சோகத்துடன்
குடும்பம் நடத்திக்கொண்டிருப்பார்கள். அல்லது ரத்தில் முடிந்துவிடும்

கழுதையோ அல்லது குதிரையோ அமைவது 7ஆம் வீட்டைப் பொறுத்தது
அது எதுவானலும் அதை வைத்துக் குடும்பம் நடத்துவது 2ஆம் வீட்டைப்
பொறுத்தது.

இப்படி எழுதிக் கொண்டே போகலாம்.

முடிவு என்ன?

இரண்டாம் வீடும், ஏழாம் வீடும் தனிதனித் தன்மைகள் வாய்ந்தவை.
ஒன்றினால் மற்றொன்றிற்குப் பெரிய பாதிப்பு ஏற்படும் வாய்ப்பில்லை!

பதிவின் நீளம் கருதியும், உங்கள் பொறுமை கருதியும் இன்று
இத்துடன் நிறைவு செய்கிறேன்

நன்றி, வணக்கத்துடன்
வகுப்பறை வாத்தியார்

வாழ்க வளமுடன்!

68 comments:

  1. Dear Sir

    Good Morning Sir.

    Arumai Aiyya..

    Kadavul Punniyathil 2ikkuriyan(Guru), 5ikkuriyavan (Guru) - 7 il GURU(Rishbham), Lagnadhibahdhi 11il - Viruchiga Lagnam. Nalla Manaivi -- Nalla Gulandhai(Thanks God)Nallapadiyaga oru Aan varisu. Thanks ..

    Padam Arumai Aiyya.. I have one doubt Sir.. 7il "Andhanan Thanithu nirpadhal Indha" Guru(Idhuvum Enakku Nalla Dhasai than) Mahadhasai vida "Saturn(Shani Dasa)-9il Pusham 3il (kal)" Arumayaga Irukkum endrum old Josier Solkirar.."

    Could you please explain about Natchathira kalakal sir.

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  2. கொடுக்கப்பட்டுள்ள உதாரணத்தில் லக்கினத்தை மட்டுமே எடுத்துக் காட்டாக எடுத்துக்கொள்ளுங்கள்

    குரு இரண்டிலும் வெவ்வேறு இடங்களில் உள்ளதாகக் காட்டுகிறது.

    அதற்குக் காரணம் இன்று குரு பகவானே எல்லையில்தான் உள்ளார்.

    அடித்துப் பாருங்கள்

    வாக்கியத்தில் 301:08 பாகைகள்
    திருக்கணிதத்தில் 299:42 பாகைகள்

    இந்தப் பார்டர் குழப்பத்தில் நீங்கள் குழம்ப வேண்டாம் என்பதற்காகத்தான் அதை இங்கே குறிப்பிடுகிறேன்

    ReplyDelete
  3. ஐயா,

    காலை வணக்கம்

    ஒரு கேள்வி,
    2ம் வீடு, 7ம் வீடு நன்றாக உள்ளதா / இல்லையா என்பதை எப்படி தெரிந்துகொள்வது

    என்றும் அன்புடன்

    ReplyDelete
  4. எனக்கு 2,7 ஆகிய 2 வீடுகளும் நன்றாகவே இருக்கிறது. அந்தந்த ஸ்தான அதிபர்கள் அந்த வீட்டை பார்க்கிறார்கள். அவர்கள் சுபர்களும் கூட. சுய அஷ்ட வர்க பரல் 5,3 என்று இருக்கிறது. வாக்கியமா திருக்கணிதமா என்பதற்கு என்னுடைய கருத்தை ஏற்கனவே சொல்லிவிட்டேன். ஆகையால் மேலும் சொல்வதற்கு ஒன்றுமில்லை.

    ReplyDelete
  5. ஐயா வணக்கம் ,
    என்னுடைய இரண்டாம் வீட்டு பரல்கள் 29 .வீட்டின் அதிபதி சனி 5 ஆம் வீட்டில். சனி சுய வர்கத்தில் இரண்டாம் வீட்டின் பரல்கள் 3.

    என்னுடைய ஏழாம் வீட்டு பரல்கள் 27 . வீட்டின் அதிபதி சந்திரன் 6 ஆம் வீட்டில். சந்திரன் சுய வர்கத்தில் ஏழாம் வீட்டின் பரல்கள் 5. ஏழாம் வீட்டில் கேது இருக்கிறார் .

    மிதுன ராசி , மகர லக்னம்.

    சராசரி குடும்ப வாழ்கை , என் கணிப்பு சரி தானா ? குருவே !!!

    நன்றியுடன்
    பிரேமானந்தன்

    (Note :- நான் கணிக்கும் முறை சரி தானா குருவே )

    ReplyDelete
  6. ஐயா
    என் 2 ஆம் வீட்டில் சூரியன் . சுய வர்க்க பரவல் 5. 7 ஆம் வீட்டின் அதிபதி சூரியன் 2 ஆம் வீட்டில் . லக்னம் கும்பம். 7 ஆம் வீட்டின் சுய வர்க்க பரவல் 29. 2 ஆம் வீட்டின் பரவல் 27. அப்படிஎன்றால் மனைவி பற்றிய இறைவனின் வரம் என்ன ? ஐயா . லக்னம் சுய வர்க்க பரவல் 36

    ReplyDelete
  7. Sir,
    My second house and seventh house both are filled with bad planets. You are right I am living vegitable life

    ReplyDelete
  8. Blogger Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Good Morning Sir.
    Arumai Aiyya..
    Kadavul Punniyathil 2ikkuriyavan(Guru), 5ikkuriyavan (Guru) - 7 il GURU(Rishbham), Lagnadhibahdhi 11il - Viruchiga Lagnam. Nalla Manaivi -- Nalla Gulandhai(Thanks God)Nallapadiyaga oru Aan varisu. Thanks ..
    Padam Arumai Aiyya.. I have one doubt Sir.. 7il "Andhanan Thanithu nirpadhal Indha" Guru(Idhuvum Enakku Nalla Dhasai than) Mahadhasai vida "Saturn(Shani Dasa)-9il Pusham 3il (kal)" Arumayaga Irukkum endrum old Josier Solkirar.."
    Could you please explain about Natchathira kalakal sir.
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman/////

    What do you mean by "Natchathira kalakal" ?

    ReplyDelete
  9. Blogger SP Sanjay said...
    ஐயா,
    காலை வணக்கம்
    ஒரு கேள்வி,
    2ம் வீடு, 7ம் வீடு நன்றாக உள்ளதா / இல்லையா என்பதை எப்படி தெரிந்துகொள்வது
    என்றும் அன்புடன்/////

    விடிய விடிய ராமாயணத்தைக் கேட்டுவிட்டு, காலையில் சீதைக்கு ராமன் சித்தப்பா உறவு என்று சொன்னவன் கதை போலல்லவா இருக்கிறது உங்களுடைய கூற்று! வீடு நன்றாக இருப்பதைப் பற்றிய செய்திகளைப் பலமுறைகள் முன்பதிவுகளில் எழுதியுள்ளேனே சுவாமி! அவற்றைப் படிக்கவில்லையா நீங்கள்?

    ReplyDelete
  10. /////Blogger ananth said...
    எனக்கு 2,7 ஆகிய 2 வீடுகளும் நன்றாகவே இருக்கிறது. அந்தந்த ஸ்தான அதிபர்கள் அந்த வீட்டை பார்க்கிறார்கள். அவர்கள் சுபர்களும் கூட. சுய அஷ்ட வர்க பரல் 5,3 என்று இருக்கிறது. வாக்கியமா திருக்கணிதமா என்பதற்கு என்னுடைய கருத்தை ஏற்கனவே சொல்லிவிட்டேன். ஆகையால் மேலும் சொல்வதற்கு ஒன்றுமில்லை.////

    தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
  11. ///////Blogger Prem said...
    ஐயா வணக்கம் ,
    என்னுடைய இரண்டாம் வீட்டு பரல்கள் 29 .வீட்டின் அதிபதி சனி 5 ஆம் வீட்டில். சனி சுய வர்கத்தில் இரண்டாம் வீட்டின் பரல்கள் 3.
    என்னுடைய ஏழாம் வீட்டு பரல்கள் 27 . வீட்டின் அதிபதி சந்திரன் 6 ஆம் வீட்டில். சந்திரன் சுய வர்கத்தில் ஏழாம் வீட்டின் பரல்கள் 5. ஏழாம் வீட்டில் கேது இருக்கிறார் .
    மிதுன ராசி , மகர லக்னம்.
    சராசரி குடும்ப வாழ்கை , என் கணிப்பு சரி தானா ? குருவே !!!
    நன்றியுடன்
    பிரேமானந்தன்
    (Note :- நான் கணிக்கும் முறை சரி தானா குருவே )/////

    சரிதான்! ஆனால் சுயவர்க்கப்பரல்களை வீட்டின் பரல்கள் என்று ஏன் குறிப்பிடுகிறீர்கள்?

    ReplyDelete
  12. ////////Blogger indianm12 said...
    ஐயா
    என் 2 ஆம் வீட்டில் சூரியன் . சுய வர்க்க பரவல் 5. 7 ஆம் வீட்டின் அதிபதி சூரியன் 2 ஆம் வீட்டில் . லக்னம் கும்பம். 7 ஆம் வீட்டின் சுய வர்க்க பரவல் 29. 2 ஆம் வீட்டின் பரவல் 27. அப்படிஎன்றால் மனைவி பற்றிய இறைவனின் வரம் என்ன ? ஐயா . லக்னம் சுய வர்க்க பரவல் 36//////

    லக்கினமும், ஏழாம் வீடும் சராசரிப் பரல்களுக்கு மேல் இருப்பதால் நல்ல மனைவி அமைவார்.கவலையை விடுங்கள்!

    ReplyDelete
  13. /////Blogger RAJA said...
    Sir,
    My second house and seventh house both are filled with bad planets. You are right I am living vegitable life/////

    அதெல்லாம் கவலைப் படாதீர்கள். நஷ்ட ஈடு வேறு இடத்தில் வழங்கப்பெற்றிருக்கும். அது என்னவென்று பாருங்கள்!ஏனென்றால் மொத்தப் பரல்கள் யாராக இருந்தாலும் 337 தான்!

    ReplyDelete
  14. Dear Sir

    Supose 3,4ikkuriyavan Saturn ---> 9th place il Pusham 3il (Natchathira Kal -- > I mean Pusham 3il(Padham))-- panmayil...sonnaen Sir..

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  15. வணக்கம் ஐயா

    7 ஆம் பாவம் பற்றிய பாடம் மிகவும் ஆர்வமாக எதிர்பார்க்கிறேன்.
    வர போவது கழுதைய அல்லது குதிரையா என்று பாடம் முடிந்தவுடன்தான்
    தெரியும்.

    ReplyDelete
  16. /////Blogger Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Supose 3,4ikkuriyavan Saturn ---> 9th place il Pusham 3il (Natchathira Kal -- > I mean Pusham 3il(Padham))-- panmayil...sonnaen Sir..
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman//////

    சொந்த நட்சத்திரத்தில் இருக்கிறார் என்கிறீர்கள். இருந்தால் நல்லதுதான்!

    ReplyDelete
  17. ////Blogger sundar said...
    வணக்கம் ஐயா
    7 ஆம் பாவம் பற்றிய பாடம் மிகவும் ஆர்வமாக எதிர்பார்க்கிறேன்.
    வர போவது கழுதைய அல்லது குதிரையா என்று பாடம் முடிந்தவுடன்தான்
    தெரியும்.////

    கழுதையும் வேண்டாம்.குதிரையும் வேண்டாம். ஒரு மான் அல்லது மயில் வரட்டும்.
    இறைவனைப் பிரார்த்தியுங்கள். அவர் அனுப்பி வைப்பார்!

    ReplyDelete
  18. தனுசு லக்னத்தில் 28 பரல்கள், 7ஆம் வீடு மிதுன ராசி 35 பரல்கள்... 2 ஆம் வீடு மகர ராசி 30 பரல்கள் ...
    எனக்கு அனுஷ்கா குதிரை தான் ;)

    ReplyDelete
  19. /////Blogger Arun Kumar. S said...
    தனுசு லக்னத்தில் 28 பரல்கள், 7ஆம் வீடு மிதுன ராசி 35 பரல்கள்... 2 ஆம் வீடு மகர ராசி 30 பரல்கள் ...
    எனக்கு அனுஷ்கா குதிரை தான் ;)/////

    லக்கினத்தைவிட 7ல் பரல்கள் அதிகமாக இருந்தால்....மனைவியின் ஆதிக்கம்!
    வரப்பொகும் அனுஷ்காவிற்கு நீங்கள்தான் குதிரையாக இருக்க வேண்டும். அதாவது சுமக்க வேண்டும்:-))))))

    ReplyDelete
  20. எனக்கு லக்னத்தில் 33 பரல்கள். 7ல் 31 பரல்கள். அதேபோல் என் மனைவிக்கு அவருடைய லக்னத்தில் 28 பரல்கள் 7ல் 29 பரல்கள். எங்கள் வீட்டில் சிதம்பர ஆட்சிதான். ஆனால் இருவருக்குமே லக்னத்தில் அதிக பரல் இருந்து 7ல் குறைவான பரல் இருந்தால் எப்படி எடுத்துக் கொள்வது. திருசெங்கோடு அல்லது நீயா நானா என்று இருப்பார்களா?

    ReplyDelete
  21. Guruvey,

    Paadangal miha arumai.

    Ashtavarkangalil raghu,ketu kku suya paralgal tharappadavillaye , appadi enraal avargaludaya thaakkudhalgalai, ashtavarkathin padi elimayagha kandupidikkum vaaippu illaamal poivittadhaey !

    anbu maanavan.

    ReplyDelete
  22. அன்புள்ள ஐயா

    உங்களது 10/4/09 பதிவில் நீங்கள் புதன் மூன்றில் இருந்தால் மிக நல்ல பலன்கள் ஏற்படும் என்று சொலி இருந்தீர்கள் , எனக்கும் அவ்வாறே உள்ளது , அதுவும் ஆட்சி பேரு உள்ளது , எனது மூன்றாம் வீடு மிதுனம் . மேலும் இங்கே சூரியனும் ராகுவும் உள்ளது , இந்தா அமைப்பு எனக்கு நன்மை செய்யுமா . அதனால் தான் நான் பங்கு வர்த்தகத்தில் ஈடு படலமா என்ற கேள்வியை நான் முன் வைத்தேன். மேலும் திருகனிதமுறைப்படி இப்போத்தான் புதன் திசை ஆரம்பம். (17-2-2009 முதல் .)

    ReplyDelete
  23. google transulater ubayokipathal tamilil siriya thavarugal erpadukirathu, mannikavum.

    ReplyDelete
  24. This comment has been removed by the author.

    ReplyDelete
  25. //விடிய விடிய ராமாயணத்தைக் கேட்டுவிட்டு, காலையில் சீதைக்கு ராமன் சித்தப்பா உறவு என்று சொன்னவன் கதை போலல்லவா இருக்கிறது உங்களுடைய கூற்று! வீடு நன்றாக இருப்பதைப் பற்றிய செய்திகளைப் பலமுறைகள் முன்பதிவுகளில் எழுதியுள்ளேனே சுவாமி! அவற்றைப் படிக்கவில்லையா நீங்கள்?//

    என் கேள்வி 'சின்ன புள்ளத்தனமா இருக்கு ன்னு' புரியுது (வடிவேல் ஸ்டைல்) :)
    மன்னிக்க வேண்டுகிறேன் ஐயா.

    பாடம் படித்துக்கொண்டு தான் உள்ளேன்.

    ReplyDelete
  26. /////Blogger ananth said...
    எனக்கு லக்னத்தில் 33 பரல்கள். 7ல் 31 பரல்கள். அதேபோல் என் மனைவிக்கு அவருடைய லக்னத்தில் 28 பரல்கள் 7ல் 29 பரல்கள். எங்கள் வீட்டில் சிதம்பர ஆட்சிதான். ஆனால் இருவருக்குமே லக்னத்தில் அதிக பரல் இருந்து 7ல் குறைவான பரல் இருந்தால் எப்படி எடுத்துக் கொள்வது. திருசெங்கோடு அல்லது நீயா நானா என்று இருப்பார்களா?/////

    ஆட்சி நடந்தால் போதும். அதை இப்போது எதற்காகப் பிரித்துப் பார்க்கிறீர்கள்?

    ReplyDelete
  27. ////Blogger kandhiah said...
    Guruvey,
    Paadangal miha arumai.
    Ashtavarkangalil raghu,ketu kku suya paralgal tharappadavillaye , appadi enraal avargaludaya thaakkudhalgalai, ashtavarkathin padi elimayagha kandupidikkum vaaippu illaamal poivittadhaey !
    anbu maanavan./////

    ராகுவிற்கும், கேதுவிற்கும் சொந்த வீடும் கிடையாது. சுயவர்க்கமும் கிடையாது. இருக்கும் இடம் சேர்க்கைகளைவைத்துத்தான் அவர்களைக் கணக்குப் பண்ண வேண்டும். பழைய பாடங்களைப் படியுங்கள்.
    அவற்றில் சொல்லியிருக்கிறேன்

    ReplyDelete
  28. /////Blogger பிரகாஷ் துரைசாமி said...
    அன்புள்ள ஐயா
    உங்களது 10/4/09 பதிவில் நீங்கள் புதன் மூன்றில் இருந்தால் மிக நல்ல பலன்கள் ஏற்படும் என்று சொலி இருந்தீர்கள் , எனக்கும் அவ்வாறே உள்ளது , அதுவும் ஆட்சி பேரு உள்ளது , எனது மூன்றாம் வீடு மிதுனம் . மேலும் இங்கே சூரியனும் ராகுவும் உள்ளது , இந்தா அமைப்பு எனக்கு நன்மை செய்யுமா . அதனால் தான் நான் பங்கு வர்த்தகத்தில் ஈடு படலமா என்ற கேள்வியை நான் முன் வைத்தேன். மேலும் திருக்கணிதமுறைப்படி இப்போத்தான் புதன் திசை ஆரம்பம். (17-2-2009 முதல் .)///////

    உங்களுக்கு மேஷ லக்கினம். கும்ப ராசி .பூரட்டாதி நட்சத்திரம். 26.9.2009 முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு அஷ்டமச் சனி நடைபெறவுள்ளது.
    10ல் = 27 பரல்கள்
    11ல் = 29 பரல்கள்
    5ல் = 25 பரல்கள்
    எல்லாமே சராசரியாக உள்ளன.
    தற்சம்யம் பங்கு வணிகமும் வேண்டாம். வேறு வணிகமும் வேண்டாம். வேலைக்குச் செல்லுங்கள்
    இல்லை, பணம் காசு அதிகமாக இருந்தால், வீட்டில் ஆனந்த விகடன், குமுதம் ஆகியவற்றைப் படித்து விட்டுச் சும்மா இருங்கள். அஷ்டமத்துச் சனியைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை!
    தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் உடனே பங்கு வணிகத்தில் ஈடுபடுங்கள்!

    ReplyDelete
  29. /////Blogger பிரகாஷ் துரைசாமி said...
    google transulater ubayokipathal tamilil siriya thavarugal erpadukirathu, mannikavum.///

    ஈகலப்பை எனும் மென்பொருள் இலவசமாகக் கிடைக்கும் தறவிரக்கம் செய்து கொள்ளுங்கள்!

    ReplyDelete
  30. Blogger SP Sanjay said...
    //விடிய விடிய ராமாயணத்தைக் கேட்டுவிட்டு, காலையில் சீதைக்கு ராமன் சித்தப்பா உறவு என்று சொன்னவன் கதை போலல்லவா இருக்கிறது உங்களுடைய கூற்று! வீடு நன்றாக இருப்பதைப் பற்றிய செய்திகளைப் பலமுறைகள் முன்பதிவுகளில் எழுதியுள்ளேனே சுவாமி! அவற்றைப் படிக்கவில்லையா நீங்கள்?//
    என் கேள்வி 'சின்ன புள்ளத்தனமா இருக்கு ன்னு' புரியுது (வடிவேல் ஸ்டைல்) :) மன்னிக்க வேண்டுகிறேன் ஐயா. பாடம் படித்துக்கொண்டு தான் உள்ளேன்.//////

    முழுவதுமாகப் படியுங்கள் அதோடு ஒருமுறைக்கு இருமுறை படித்து மனதில் ஏற்றுங்கள்!

    ReplyDelete
  31. Dear Sir,

    Kindly teach me how to calculate the Parals in the Horoscope or pls tell me where u have metnitoned it. so i can easily find it.

    with regards,
    P.Ramkumar

    ReplyDelete
  32. /////Blogger Ram said...
    Dear Sir,
    Kindly teach me how to calculate the Parals in the Horoscope or pls tell me where u have metnitoned it. so i can easily find it.
    with regards,
    P.Ramkumar//////

    You need not calculate anything. Use the software given in the blog (Software given by our classroom student Karur Thiagarajan) It will give you all the calculations.
    To find out the lessons, use the link given in the sidebar (It is complied in order by our classroom student Kooduthurai)

    ReplyDelete
  33. வணக்கம் ஐயா,பாடம் நன்றாக உள்ளது.எனக்கு ஏழில் குரு(வ)22பரல்தான்,லக்னம் 32 பரல்,2ல் ராகு,செவ்,சூரி 28பரல்'4ல் சுக்ரன் 27 பரல்,6ல் தொழில்,பாக்கிய அதிபதி சனி உச்சம்.3ல் சந் ஆட்ச்சி+ புதன்(வர்கோத்தமம்)28பரல்.சந்தேகம் என்னவெனில் இரண்டாம் இடம் பாவ கிரகங்களும்,7ல் 22பரலும் இருப்பதால் பாதிக்குமா அல்லது 7ல் குரு உள்ளதால் பிரச்சனை இருக்காதா?

    அன்புடன்,
    மதுரை தனா.

    ReplyDelete
  34. ஐயா,
    6 ம் வீட்டுக்கு அதிபதியான கிரகம் லக்கனத்தில் இருந்து 7 ம் வீட்டை பார்த்தால்
    குடும்பத்தில் பிரிவு சண்டைகள் இருக்குமா?

    ReplyDelete
  35. dear sir,
    my name is gopinath
    this is my first comment
    realy i am very happy to read this blog .
    Could you please detail explain about "astamathusani" impact in our life.

    Thank you

    Loving Student
    gopinath mannargudi

    ReplyDelete
  36. வணக்கம் ஜயா நமக்கு இரண்டாம் வீடு மட்டும் தான் இப்ப கதைக்கலாம் குரு அதிபதி. அன்பான ஒரு குடும்பம். 7ம் வீடு வந்த பிறகு பார்ப்போம். ராகு 7இல் நீச மடைந்து இருக்கிரார் சுக்கிரன் தான் அதிபதி அவர் பரவாயில்லை குருவின் பார்வை. திருமணம் சொர்க்கத்தில் தீர்மானிக்கப் படுமாமே ? உங்கள் கருத்து ஜயா :)) நன்றி

    ReplyDelete
  37. //அஷ்டமத்துச் சனியைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை!
    தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் உடனே பங்கு வணிகத்தில் ஈடுபடுங்கள்!// ஜயா எனக்கு இப்பொழுது அட்டமத்து சனி ராகு திசை சுக்கிர புத்தி அவர் 9ல் 5 பரல்களுடன் உள்ளார் . ஆனால் பல நல்ல காரியங்கள் இந்த காலத்தில் நடந்தது உங்கள் பாணியில் mixed results .

    ReplyDelete
  38. ஏழரையோன் காலமோ, அஷ்டம சனியோ, கெடுதல் செய்ய வேண்டுமானால் மற்ற கிரகங்களும் பிறந்த ஜாதகமும் தசா புத்திகளும் அனுகூலமற்று இருந்து சனி கெடுதல் செய்ய துணை புரிய வேண்டும். சனி ஒருவரே எதுவும் செய்ய முடியாது. தனி மரம் தோப்பாகாது என்பது நவ கிரகங்களுக்கும் பொருந்தும். என் ஒருவனுடைய அனுபவத்தில் ஏழரையோன் காலத்தில் கூட பெரிதாக கெடுதல் எதுவும் நடக்கவில்லை. ஆனால் சனி திசையில் சனி புத்திதான் என்னை புரட்டி எடுத்து விட்டது. மேலே சொன்னது என் தனிப் பட்ட கருத்து. தாங்கள் என் கருத்தினின்று முரண் படலாம்.

    ReplyDelete
  39. ஏழரையோன் காலமோ, அஷ்டம சனியோ, கெடுதல் செய்ய வேண்டுமானால் மற்ற கிரகங்களும் பிறந்த ஜாதகமும் தசா புத்திகளும் அனுகூலமற்று இருந்து சனி கெடுதல் செய்ய துணை புரிய வேண்டும். சனி ஒருவரே எதுவும் செய்ய முடியாது. தனி மரம் தோப்பாகாது என்பது நவ கிரகங்களுக்கும் பொருந்தும். என் ஒருவனுடைய அனுபவத்தில் ஏழரையோன் காலத்தில் கூட பெரிதாக கெடுதல் எதுவும் நடக்கவில்லை. ஆனால் சனி திசையில் சனி புத்திதான் என்னை புரட்டி எடுத்து விட்டது. மேலே சொன்னது என் தனிப் பட்ட கருத்து. தாங்கள் என் கருத்தினின்று முரண் படலாம்.

    ReplyDelete
  40. வணக்கம் ஐயா

    உலகத்திற்கு ஏற்பட்ட பொருளாதார சரிவுக்கு குரு நீசம் ஆனது தான் காரணமா ?

    ReplyDelete
  41. பழைய மாணவர்களை இப்போதெல்லாம் வகுப்பறை பக்கமே பார்க்க முடிவதில்லை. வகுப்பறைக்கு வருவதில்லையா அல்லது பாடம் மட்டும் படித்து விட்டு பின்னூட்டம் இடாமல் செல்கிறார்களா என்று தெரியவில்லை. முக்கியமாக நமது வகுப்பறை சட்டாம்பிள்ளை ஐயா அவர்கள். பார்த்து பல நாட்களாகி விட்டன.

    ReplyDelete
  42. sir lagnathil 27 paral lagnathipati sani in11th place[31paral] 2nd place have 33paral sevvai is there 2nd athipati guru in 4th place[28paral] 5th athipati buthan is in7th place 5thplace paral 31 sukkiran in5t place. 7th place have 21 paral.buthan,surian,kethu are sitting there.7th is simma rasi.In this type of planatorial positions, marriage life eppadi irukkum nalla mappillay kidaipara sonthathil amayuma anniyama thank you sir

    ReplyDelete
  43. Sir,
    One doubt. Last transit of GURU was during December 2008.Next transit shall be approximately during December 2009.But actualy it is nearer to border.How?

    ReplyDelete
  44. dear sir
    your postings and blog is very useful. but due to non availability of internet usage i am unable to read it fully. Can i have your writings in book format or can you suggest me any tamil books to learn astrology

    ReplyDelete
  45. /////////Blogger dhanan said...
    வணக்கம் ஐயா,பாடம் நன்றாக உள்ளது.எனக்கு ஏழில் குரு(வ)22பரல்தான்,லக்னம் 32 பரல்,2ல் ராகு,செவ்,சூரி 28பரல்'4ல் சுக்ரன் 27 பரல்,6ல் தொழில்,பாக்கிய அதிபதி சனி உச்சம்.3ல் சந் ஆட்ச்சி+ புதன்(வர்கோத்தமம்)28பரல்.சந்தேகம் என்னவெனில் இரண்டாம் இடம் பாவ கிரகங்களும்,7ல் 22பரலும் இருப்பதால் பாதிக்குமா அல்லது 7ல் குரு உள்ளதால் பிரச்சனை இருக்காதா?
    அன்புடன்,
    மதுரை தனா./////

    7ல் உள்ள குரு பிரச்சினைகள் வாராமல் பார்த்துக்கொள்வார். கவலையை விடுங்கள்!

    ReplyDelete
  46. ///////////Blogger vino, canada said...
    ஐயா,
    6 ம் வீட்டுக்கு அதிபதியான கிரகம் லக்கனத்தில் இருந்து 7 ம் வீட்டை பார்த்தால்
    குடும்பத்தில் பிரிவு சண்டைகள் இருக்குமா?//////

    ஆறாம் அதிபதி எங்கே அமர்ந்தாலும். அமர்ந்த இடத்திற்குப் பிரச்சினைதான். பார்க்கும் இடைத்திற்கும் பிரச்சினைதான். லக்கினாதிபதியும் ஏழாம் அதிபதியும் வலுவாக இருந்தால் பிரச்சினைகள் இருக்காது.
    அல்லது குறைந்துவிடும்.

    ReplyDelete
  47. //////Blogger Gobinath said...
    dear sir,
    my name is gopinath
    this is my first comment
    realy i am very happy to read this blog .
    Could you please detail explain about "astamathusani" impact in our life.
    Thank you
    Loving Student
    gopinath mannargudi/////////////

    பழைய பாடங்களில் உள்ளன சுவாமி. முதலில் பழைய பாடங்களைப் படியுங்கள்

    ReplyDelete
  48. ///////Blogger Emmanuel Arul Gobinath said...
    வணக்கம் ஜயா நமக்கு இரண்டாம் வீடு மட்டும் தான் இப்ப கதைக்கலாம் குரு அதிபதி. அன்பான ஒரு குடும்பம். 7ம் வீடு வந்த பிறகு பார்ப்போம். ராகு 7இல் நீச மடைந்து இருக்கிறார் சுக்கிரன் தான் அதிபதி அவர் பரவாயில்லை குருவின் பார்வை. திருமணம் சொர்க்கத்தில் தீர்மானிக்கப் படுமாமே ? உங்கள் கருத்து ஜயா :)) நன்றி/////

    சொர்க்கம் பற்றி எனக்குத் தெரியாது. திருமணம் ஜாதகத்தில் விதித்தபடிதான் இருக்கும்
    அதை வாங்கி வந்த வரம் என்பேன்!

    ReplyDelete
  49. //////////////Blogger Emmanuel Arul Gobinath said...
    //அஷ்டமத்துச் சனியைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை!
    தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் உடனே பங்கு வணிகத்தில் ஈடுபடுங்கள்!// ஜயா எனக்கு இப்பொழுது அட்டமத்து சனி ராகு திசை சுக்கிர புத்தி அவர் 9ல் 5 பரல்களுடன் உள்ளார் . ஆனால் பல நல்ல காரியங்கள் இந்த காலத்தில் நடந்தது உங்கள் பாணியில் mixed results .////////////////

    அப்படியென்றால் சரிதான்:-)))

    ReplyDelete
  50. //////////Blogger ananth said...
    ஏழரையோன் காலமோ, அஷ்டம சனியோ, கெடுதல் செய்ய வேண்டுமானால் மற்ற கிரகங்களும் பிறந்த ஜாதகமும் தசா புத்திகளும் அனுகூலமற்று இருந்து சனி கெடுதல் செய்ய துணை புரிய வேண்டும். சனி ஒருவரே எதுவும் செய்ய முடியாது. தனி மரம் தோப்பாகாது என்பது நவ கிரகங்களுக்கும் பொருந்தும். என் ஒருவனுடைய அனுபவத்தில் ஏழரையோன் காலத்தில் கூட பெரிதாக கெடுதல் எதுவும் நடக்கவில்லை. ஆனால் சனி திசையில் சனி புத்திதான் என்னை புரட்டி எடுத்து விட்டது. மேலே சொன்னது என் தனிப் பட்ட கருத்து. தாங்கள் என் கருத்தினின்று முரண் படலாம்.//////////

    ஜாதகத்தில் பலவகைகள் உள்ளன. பல விதிவிலக்குகள் உள்ளன. அதனால்தான் பொதுவிதிகள் சிலருக்கு எடுபடாமல் போய்விடும்.

    கோச்சாரத்தைவிட, தசாபுத்திதான் வலிமையானது. முக்கியமானது.
    கோச்சாரத்தில் 30 பரல்களுக்குமேல் வலிமையாக இருக்கும் வீட்டில் தீய பலன்கள் செல்லுபடியாகமல் போய்விடும்!

    ReplyDelete
  51. ///////////Blogger sundar said...
    வணக்கம் ஐயா
    உலகத்திற்கு ஏற்பட்ட பொருளாதார சரிவுக்கு குரு நீசம் ஆனது தான் காரணமா?////////////

    அதுவும் ஒரு காரணம். அமெரிக்காவின் ஜாதகமும் ஒரு காரணம்.

    ReplyDelete
  52. ////////////Blogger ananth said...
    பழைய மாணவர்களை இப்போதெல்லாம் வகுப்பறை பக்கமே பார்க்க முடிவதில்லை. வகுப்பறைக்கு வருவதில்லையா அல்லது பாடம் மட்டும் படித்து விட்டு பின்னூட்டம் இடாமல் செல்கிறார்களா என்று தெரியவில்லை. முக்கியமாக நமது வகுப்பறை சட்டாம்பிள்ளை ஐயா அவர்கள். பார்த்து பல நாட்களாகி விட்டன.////////

    பின்னூட்டங்களை வைத்து முடிவிற்கு வராதீர்கள். நேரமின்மை காரணமாக நானும் பல பதிவுகளைப் படித்தாலும் பின்னூட்டம் இடுவதில்லை.

    ReplyDelete
  53. ////////////Blogger uma said...
    sir lagnathil 27 paral lagnathipati sani in11th place[31paral] 2nd place have 33paral sevvai is there 2nd athipati guru in 4th place[28paral] 5th athipati buthan is in7th place 5thplace paral 31 sukkiran in5t place. 7th place have 21 paral.buthan,surian,kethu are sitting there.7th is simma rasi.In this type of planatorial positions, marriage life eppadi irukkum nalla mappillay kidaipara sonthathil amayuma anniyama thank you sir///////////

    லக்கினாதிபதி சனி 11ல் - லாபத்தில் எனும் போது அதிர்ஷ்டமான பெண்மணி நீங்கள்.
    குறைந்த முயற்சி அதிக பலன். அதது உரிய நேரத்தில் நடக்கும் கவலையை விடுங்கள்.

    ReplyDelete
  54. /////////////Blogger RAJA said...
    Sir,
    One doubt. Last transit of GURU was during December 2008.Next transit shall be approximately during December 2009.But actualy it is nearer to border.How?///////////

    சராசரி மட்டும் ஒரு ஆண்டு. ராசி மாற்றங்களில் வித்தியாசம் வருவதுண்டு. சில சமயம் 11 மாதங்கள். சில சமயம் 13 மாதங்கள். அதெல்லாம் வக்கிர கதியால் ஏற்படும். அதைச் சீரியசாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

    ReplyDelete
  55. ///////////Blogger shiva said...
    dear sir
    your postings and blog is very useful. but due to non availability of internet usage i am unable to read it fully. Can i have your writings in book format or can you suggest me any tamil books to learn astrology//////////

    எனது பதிவின் சைடு பாரில் புத்தகங்களின் பெயர்களைக் கொடுத்துள்ளேன். அதைப் பாருங்கள்
    உடன் பதிப்பித்தவர்களின் பெயர்களும் முகவரிகளும் உள்ளன!

    ReplyDelete
  56. பாடம் அருமை, ஐயா!

    ReplyDelete
  57. சார்,
    //நமது வகுப்பறை மாணவர் கரூர்.திரு. தியாகராஜன் அவர்கள் உபயமாகக்
    கொடுத்துள்ள மென்பொருளில், இரண்டு முறைகளிலும் ஜாதகத்தைக் கணித்துக்
    கொள்ளும் வசதி உள்ளது.

    அந்த மென்பொருளில், File மெனுவில் 7ஆவதாக Preference எனும் Option
    உள்ளது. அதைக் கிளிக்கினால் ஒரு புது விண்டோவில் அது கிடைக்கும்
    //
    இந்த மென்பொருளை எங்கே பெறலாம் என்று கூறுவீர்களா?
    நன்றி

    ReplyDelete
  58. /////Blogger செல்லி said...
    பாடம் அருமை, ஐயா!////

    நன்றி சகோதரி

    ReplyDelete
  59. Blogger செல்லி said...
    சார்,
    //நமது வகுப்பறை மாணவர் கரூர்.திரு. தியாகராஜன் அவர்கள் உபயமாகக்
    கொடுத்துள்ள மென்பொருளில், இரண்டு முறைகளிலும் ஜாதகத்தைக் கணித்துக்
    கொள்ளும் வசதி உள்ளது.
    அந்த மென்பொருளில், File மெனுவில் 7ஆவதாக Preference எனும் Option
    உள்ளது. அதைக் கிளிக்கினால் ஒரு புது விண்டோவில் அது கிடைக்கும்
    // இந்த மென்பொருளை எங்கே பெறலாம் என்று கூறுவீர்களா?
    நன்றி

    பதிவில் உள்ள அந்த இடத்தைக் கிளிக்கினீர்கள் என்றால் அதற்கான சுட்டி கிடைக்கும்
    உங்களுக்காக அந்த சுட்டியையே கொடுத்துள்ளேன்.
    அதில் இருந்து தரவிறக்கம் (free download) செய்துகொள்ளுங்கள்
    Link:
    http://www.4shared.com/file/73223781/f5fb606f/Tamil_astrology_software.html

    ReplyDelete
  60. நன்றி சார்.

    //பதிவில் உள்ள அந்த இடத்தைக் கிளிக்கினீர்கள் என்றால் அதற்கான சுட்டி கிடைக்கும்
    உங்களுக்காக அந்த சுட்டியையே கொடுத்துள்ளேன்.
    அதில் இருந்து தரவிறக்கம் (free download) செய்துகொள்ளுங்கள்
    Link:
    http://www.4shared.com/file/73223781/f5fb606f/Tamil_a//
    இந்த மென்பொருள் மூலம் ஆஸ்திரேலியாவில் பிறந்த என் மகனின் சாதகத்தை எப்படி கணிக்கலாம் எனக் கூறுவீர்களா, சார்?

    ReplyDelete
  61. Good lesson for guys who have aspiration to learn Astrology.
    Simple and Sweet like you !!!1

    ReplyDelete
  62. I guess u have ability to tell complex subject in simple manner.
    Whats the star position for this Sir?

    ReplyDelete
  63. sir,
    In my horoscope, sun, guru, sani, sukuran, budhan,raghu in first place with Simbha lagna, with Kethu on 7th (kumbha) and chandran at 6th place.

    Recently had chance of talking to an astrologer he told since kethu is in 2nd place from chandrian and others in 8 th place, most probabaly chance of getting marriage is very less even if get married,married life will be bad Does this view holds true, do we need to consider from chandrian too apart from lagana.(if we consider from lagna the seventh lord in 1sth plce and Exlated in Navamsa)

    Thanks for lesson.

    ReplyDelete
  64. Blogger செல்லி said...
    நன்றி சார்.
    //பதிவில் உள்ள அந்த இடத்தைக் கிளிக்கினீர்கள் என்றால் அதற்கான சுட்டி கிடைக்கும்
    உங்களுக்காக அந்த சுட்டியையே கொடுத்துள்ளேன்.
    அதில் இருந்து தரவிறக்கம் (free download) செய்துகொள்ளுங்கள்
    Link:
    http://www.4shared.com/file/73223781/f5fb606f/Tamil_a//
    இந்த மென்பொருள் மூலம் ஆஸ்திரேலியாவில் பிறந்த என் மகனின் சாதகத்தை எப்படி கணிக்கலாம் எனக் கூறுவீர்களா, சார்?///////

    ஆஸ்திரேலியாவில் நீங்கள் இருக்கும் ஊரின் lattude & longitude + the time difference of that city with GMT
    ஆகிய மூன்றையும் அதில் சேர்த்தீர்கள் என்றால் ஜாதகம் கிடைக்கும்
    முடியவில்லை என்றால் உங்கள் மகனின் date of birth, time of birth and place of birth ஆகிய மூன்றையும் தனி மின்னஞ்சலில் தெரியப்படுத்துங்கள், நான் அதைக் கணித்து அனுப்புகிறேன்

    ReplyDelete
  65. /////Blogger vijayan said...
    Good lesson for guys who have aspiration to learn Astrology.
    Simple and Sweet like you !!!//////

    பாரட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  66. //////Blogger vijayan said...
    I guess u have ability to tell complex subject in simple manner.
    Whats the star position for this Sir?////////

    புதனும், குருவும் கேந்திரம் அல்லது திரிகோணத்தில் இருக்க வேண்டும். அதைவிட முக்கியமாக இரண்டாம் வீடு சுக்கிரனின் பார்வையில் இருக்க வேண்டும்

    ReplyDelete
  67. Blogger vijayan said...
    sir,
    In my horoscope, sun, guru, sani, sukuran, budhan,raghu in first place with Simbha lagna, with Kethu on 7th (kumbha) and chandran at 6th place.
    Recently had chance of talking to an astrologer he told since kethu is in 2nd place from chandrian and others in 8 th place, most probabaly chance of getting marriage is very less even if get married,married life will be bad Does this view holds true, do we need to consider from chandrian too apart from lagana.(if we consider from lagna the seventh lord in 1sth plce and Exlated in Navamsa)
    Thanks for lesson.////

    Particulars are not sufficient. Pl.inform your birth details in a separate mail to my mail ID

    ReplyDelete
  68. This comment has been removed by the author.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com