மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

15.7.08

ஜோ + இடம்: என்னதான் இதயத்திலே - பகுதி இரண்டு!


முதல் பகுதியைப் படித்திராதவர்கள், படித்துவிட்டு வாருங்கள்!
சுட்டி ஸைடுபாரில்!

1.மேஷம், சிம்மம், தனுசு! (அதிபதிகள் முறையே: செவ்வாய், சூரியன், குரு)
2.ரிஷபம், கன்னி, மகரம்! (அதிபதிகள் முறையே: சுக்கிரன், புதன், சனி)
3.மிதுனம், துலாம், கும்பம்! (அதிபதிகள் முறையே: புதன், சுக்கிரன், சனி)
4.கடகம், விருச்சிகம், மீனம்!(அதிபதிகள் முறையே: சந்திரன், செவ்வாய், குரு)

இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
இதைச் சற்று அலசிப் பார்த்தீர்கள் என்றால் அசத்தலாக ஒரு விபரம் தெரிய வரும்!

சூரியன், சந்திரன், செவ்வாய், குரு இந்நான்கும் ஒரு கட்சி / கூட்டணி!

புதன், சுக்கிரன், சனி இம்மூன்றும் ஒரு கட்சி / கூட்டணி!
(நகைச்சுவைக்காக எதிர்க் கட்சி என்று வைத்துக்கொள்வோம்)

கூட்டணிகள் ஒன்றாக இருந்தாலும், அந்தக் கூட்டணிக்குள் உள்ள ராசி ஒன்றை
ஐந்தாம் இடமாகப் பெற்றவர்களின் குணங்கள் (Characters) ஒரே மாதிரி இருக்காது
1, 2, 3 & 4 என்ற அணிகளுக்கிடையே உள்ள ராசி அதிபதிகளையும் பாருங்கள்

உதாரணத்திற்கு முதல் எண்ணை எடுத்துக்கொள்ளுங்கள் 1.மேஷம், சிம்மம், தனுசு!
(அதிபதிகள் முறையே: செவ்வாய், சூரியன், குரு)
மேஷத்தை ஐந்தாம் இடமாகப் பெற்றவர்களின் குணம் செவ்வாயை வைத்துப் பிரதான
மாகவும், சிம்மத்தை ஐந்தாம் இடமாகப் பெற்றவர்களின் குணம் சூரியனை வைத்துப்
பிரதானமாகவும், தனுசுவை ஐந்தாம் இடமாகப் பெற்றவர்களின் குணம் குருவைவைத்துப்
பிரதானமாகவும் இருக்கும். இப்படி 12 ராசிகளை ஐந்தாம் இடமாகப் பெற்றவர்களின்
அறிவு, குணம் எல்லாம் முற்றிலும் வேறுபடும்

ஒரே வீட்டில் பிறந்த அண்ணன் தம்பிகள் மூவர் என்றாலும் மூவரும் ஒரே போலவா
இருக்கிறார்கள்?

இத்துடன், ஐந்தாம் அதிபதி சென்று அமரும் இடம், ஐந்தாம் இடத்தில் வந்து அமரும்
கிரகத்தின் தன்மை, ஒன்றிற்கு மேற்பட்ட கிரகம் அமர்ந்தால் அவர்களின் சேர்க்கை,
அதோடு அந்த ஐந்தாம் இடம் பார்வை பெறும் கிரகங்களின் தன்மை என்று
கணக்கிட்டுக் கொண்டே போனால் எங்கேயோ போய் நிற்கும். தலை சுற்றும்!

ஆகவே பொறுமையாக சொல்வதை உள்வாங்கிக் கொள்ளுங்கள். பிறகு அலசி
ஆராய்ந்து ஒரு முடிவிற்கு வாருங்கள்.

இப்போது முதல் மேடைக்குப் போவோம்:

ஐந்தாம் இடத்தின் அதிபதி சென்று அமரும் இடத்தின் பலன்:

அதாவது உங்களுக்கு சிம்ம லக்கினம் என்று வைத்துக் கொண்டால் - தனுசு
உங்களுடைய ஐந்தாம் வீடு - அதற்கு அதிபதி குரு எங்கே இருக்கிறார்
என்று பார்த்தால் அவர் லக்கினத்தில் இருந்து உள்ள 12 கட்டங்களில் எங்கே
வேண்டுமென்றாலும் ஜாதகத்தில் இருக்கலாம். அப்படி அவர் (That is 5th lord)
இருக்கும் இடம், அதன் பலன் பற்றித்தான் இப்போது பார்க்கப் போகிறோம்!

ஐந்தாம் இடத்தின் அதிபதி சென்று அமரும் இடத்தின் பலன்:

5th lord 1ல் இருந்தால்:

மிகவும் நல்லது. அதோடு நல்ல சேர்க்கையும், பார்வையும் பெற்றிருந்தால்
தலைமைப் பதவி தேடிவரும். நிறைய வேலை ஆட்கள் இருப்பார்கள். அமைச்சராகக்
கூட ஆகலாம், நீதிபதியாகவும் ஆகலாம். (அது பத்தாம் இடத்துடனும் சம்பந்தப்பட்ட
தாகையால், நான் ஆணிபிடுங்கும் கம்பெனியில் டீம் லீடராக இருக்கிறேன். எனக்கு
எப்படி நீதிபதி பதவி தேடி வரும் என்று யாரும் பின்னூட்டத்தில் கேட்க வேண்டாம்.
அந்த டீம் லீடர் பதவி கூட தலைமைப் பதவிதானே!)

அதே நேரத்தில் 5th lord ஒன்றில் அமர்ந்தும், தீய கிரகங்களின் பார்வை, அல்லது
சேர்க்கை பெற்றிருந்தால் மேலே கூறியவற்றிற்கு எதிரான பலன்களே நடைபெறும்

சராசரி சேர்க்கை என்றால் மிக்சட் ரிசல்ட்!
-------------------------------------------------------------------------------

5th lord 2ல் இருந்தால்:

If favourably disposed as said in the earlier paragraph:
அழகான மனனவியும், அன்பான குழந்தைகளும் கிடைப்பார்கள்.படித்தவராக
இருப்பார். அரச மரியாதை கிடைக்கும்.

If not favourably disposed:
தரித்திரம் தாண்டவமாடும், தன் குடும்பத்தை வழி நடத்தவே சிரமப் படுவார்.
மற்றவர்களின் எரிச்சலுக்கும், அவமரியாதைகளுக்கும் ஆளாக நேரிடும்.
-------------------------------------------------------------------------------
5th lord 3ல் இருந்தால்:

If favourably disposed: நல்ல குழந்தைகளும், நல்ல சகோதரன்,நல்ல சகோதரிகள்
கிடைப்பார்கள். இங்கே நல்ல என்ற வார்த்தையில் எல்லாம் அடக்கம்!

If not favourably disposed: Loss of chidren, misunderstanding with brothers and
sisters, troubles in work or in business.

-------------------------------------------------------------------------------------------------
5th lord 4ல் இருந்தால்:

If favourably disposed: நல்ல, நீண்ட நாட்கள் உயிர் வாழும் தாய் கிடைப்பார்.
அரசுக்கு (வருமானவரி) ஆலோசகராக இருப்பவர். அல்லது அது சம்பந்தப்பட்ட
தொழில் செய்பவர்.

If not favourably disposed: பெண் குழந்தைகள் மட்டும் உடையவராக இருப்பார்.
---------------------------------------------------------------------------------------------------
5th lord 5ல் இருந்தால்:

If favourably disposed: அதிகமாக ஆண் குழந்தைகளை உடையவர். அவருடைய
செயல்களில் தொழிலில் மேன்மை அடைபவராக இருப்பார்.பல சாஸ்திரங்களில்
ஈடுபாடு உடையவர்.எல்லோரிடமும் நட்பாக இருப்பவர். கணக்கில் கெட்டிக்காரர்.

If not favourably disposed: எதிர்பார்த்தது எதுவும் நடக்காமல் அவதியுறுவார்.
குழந்தைகள் இறக்கும் அபாயம் உண்டு. வார்த்தைகள் தவறுபவர். சலன மனம்
உடையவர்.
----------------------------------------------------------------------------------------------------
5th lord 6ல் இருந்தால்:

பெற்ற பிள்ளைகளுடனேயே விரோதம் உண்டாகும். குழந்தை பாக்கியம் குறைவு.
தத்துப் பிள்ளை எடுத்து வளர்க்க வேண்டியவர்.
------------------------------------------------------------------------------------------------------
5th lord 7ல் இருந்தால்:

If favourably disposed: நல்ல குழந்தைகளை உடையவர்.அதிகமான குழந்தைகளை
உடையவர். அவர்களால் பொன்னும், பொருளும் , செல்வமும் பெறக்கூடியவர்.
செழிப்பான வாழ்க்கை அமையும். குருபக்தி மிக்கவர்.வசீகரத்தோற்றமுடையவர்.

If not favourably disposed: குழந்தைகளைப் பறிகொடுக்க நேரிடும். பெயரும், புகழும்
பெற்ருத்திகழும் குழந்தைகளைக்கூட பறி கொடுக்க நேரிடும்

-------------------------------------------------------------------------
5th lord 8ல் இருந்தால்:

மூதாதையர் சொத்துக்கள் கிடைக்காது.அப்படியே கிடைத்தாலும் அவற்ரைக்
கடனுக்காக இழக்க நேரிடும். Lungs Problem உண்டாகும். மகிழ்ச்சி இல்லாதவர்
Unhappy man but not poor!
------------------------------------------------------------------------------------------------------
5th lord 9ல் இருந்தால்:

If favourably disposed: கோவில், குளம் என்று திருப்பணிகள் செயக்கூடியவர்.
சொற்பொழிவாளர், பெரிய கவிஞர் அல்லது எழுத்தாளர், பேராசான்.

If not favourably disposed: அதிர்ஷ்டமில்லாதவர். முயற்சிகள் எல்லாம்
தட்டிக்கொண்டு போய்விடும். நடக்காது போய்விடும்
---------------------------------------------------------------------------------------
5th lord 10ல் இருந்தால்:

If favourably disposed: ராஜயோகம்.ஏராளமான சொத்துக்கள் (Landed properties)
சேரும். அரச மரியாதை கிடைக்கும். அவருடைய குடும்ப உறவுகளில் அவருக்குத்தான்
முதல் மரியாதை கிடைக்கும்.

If not favourably disposed: மேலே கூறியவற்றிற்கு எதிர்மறையான பலன்கள்.
--------------------------------------------------------------------------------------
5th lord 11ல் இருந்தால்:

எடுக்கும் காரியம் எல்லாவற்றிலும் வெற்றியும், நன்மையும் கிடைக்கும். செல்வந்தராகி
விடுவார். மற்றவர்களுக்கு உதவிகள் செய்வார். அதிகமான குழந்தைகள் இருக்கும்!
-------------------------------------------------------------------------------------
5th lord 12ல் இருந்தால்:
எதிலும் பற்றின்மை உண்டாகும், வேதாந்தியாகிவிடுவார். பல இடங்களிலும்
அலைந்து திரிபவர். பிடிப்பு இல்லாதவர்

------------------------------------------------------------------------------------
இப்போது ஐந்தாம் இடத்தில் வந்து அமரும் கிரகங்களுக்கான பலன்கள்.
Planets in the 5th house!

சூரியன்:
குழந்தைப் பேறைக்குறைக்கும். மகிழ்ச்சியைக் குறைக்கும். இதய நோய்களை
உண்டாக்கும். குழந்தைகள் பிறந்தாலும் அவர்களிடமிருந்து பிரிவை உண்டாக்கும்
காடுகளிலும், மலைகளிலும் சுற்றித்திரிய வைக்கும். மொத்தத்தில் பார்வை, ஐந்தாம்
வீட்டு அதிபதி சென்று அமர்ந்த இடம் போன்ற வேறு நல்ல அமைப்புக்கள்
இந்த வீட்டிற்கு இல்லாதபோது, சூரியனின் அமர்வு நல்லதல்ல!

சந்திரன்:
தெளிவான மனதை உடையவர். அறிவு ஜீவி,(highly intelligent) குழந்தைகளால்
இன்பம், இடம் சொத்துக்களின் சேர்க்கை, படித்தவர், உண்மையானவர் என்ற
நிலைப்பாட்டை உண்டாக்கும். மிகுந்த இறை நம்பிக்கை உள்ளவர். இவருடைய
குழந்தைகளின் ஒன்று மிகவும் புகழ் பெற்று, வயதானகாலத்தில் இவருக்கு
மகிழ்ச்சியை உண்டாக்கும்

செவ்வாய்:
மனைவிக்கு துயரங்கள் ஏற்படும். மனைவிக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கும்
அது ஏற்படும்.தொல்லை தரும் சிந்தனைகளை உடையவர், மகிழ்ச்சி இல்லாதவர்,
அதிரடியானவர், பலகீனமான மனதுடையவர். தன்னுடைய குழந்தைகளால்
துரதிர்ஷ்டங்களைச் சந்திக்க உள்ளவர். 'அந்த' விஷயத்தில் மிகவும் ஆர்வமுடையவர்
'அந்த' விஷயத்தில் மிகுந்த ஈடுபாடு உடையவர். இது பெண்ணின் ஜாதகம் என்றால்
குழந்தை பிறப்பில் சிக்கல்களைச் சந்திக்க வேண்டியதிருக்கும்.

புதன்:
மிகவும் படித்தவர், கல்வியாளர், மகிழ்ச்சி நிரம்பியவர். அதிகக் குழந்தை
களை உடையவர். அரசு ஆலோசகராக அல்லது நிறுவனங்களில் ஆலோசகராக
இருக்கக் கூடியவர். அதீத புத்திசாலியாகவும், சாஸ்திரங்களில் ஈடுபாடு
கொண்டவராகவும் இருப்பார். 'அந்த' விஷயங்களில் ஆதீத ஆர்வம் உடையவராக
இருப்பவர். அதே நேரத்தில் அதற்குத் தேவையான் சக்தி (vitality) குறைபாடு
களும் உடையவர்.

குரு.
படித்தவர், சட்டத்துறையில் வேலை என்றால் (it is concerned with 10th house)
அதில் சிகரம் வரைக்கும் சென்றுவிட்டு வரக்கூடியவர். அதீத புத்திசாலி.
விவாதத்தில் இவருடன் ஜெயிப்ப்பது சிரமம். சாஸ்திரங்கள், சம்பிரதாயங்களில்
ஈடுபாடு கொண்டவர். அரசு ஆலோசகர் அல்லது நிறுவன ஆலோசகராக வரக்
கூடியவர் (advisor). அதிகமான நண்பர்கள், குழந்தைகளை உடையவர். உடையவர்
என்பதுமட்டுமல்ல, அவர்களோடு நன்கு வாழவும் தெரிந்தவர்.

சுக்கிரன்;
கவிஞர். உள்ளத்தில், சிலர் எழுத்தில். செல்வம் சேரக்கூடியவர். அழகான
குழந்தைகளை உடையவர். எப்போதும் மகிழ்ச்சியை உடையவர். அரசமரியாதை
கிடைக்கக்கூடியவர் அதிகமாகப் பெண் குழந்தைகளை உடையவர். பங்குவணிகம்,
ஊகவணிகங்களில் வெற்றி பெறக்கூடியவர்.

சனி:
குழந்தைகளால் மகிழ்ச்சியை இழக்கக்கூடியவர். அதிர்ஷ்டமும், துரதிர்ஷ்டமும்
மாறி மாறி ஏற்படும். நண்பர்களிடமும், உறவினர்களிடமும் வாதிட்டு சண்டையிடக்
கூடியவர் குடும்ப வாழக்கையில் துயரங்கள் நிறைந்தவர். பாவ சிந்தனைகள் உடையவர்.
மூடர், வறியவர், மற்றவர்களால் வெறுக்கப்படக்கூடியவர் (Evil minded and Stupid.
sickly and week, poor and hated by others) இந்த குணங்களில் எல்லாக் குணமும்
இருக்கலாம். அல்லது ஜாதகத்தின் வேறு அமைப்பை வைத்து சிலது மட்டும்
இருக்கலாம்.

ராகு:
கல்மனது உடையவர். நட்பிற்கு லாயக்கில்லாதவர். மற்றவர்களால் எப்பொதுமே
தவறாகக் காட்சியளிப்பவர். சமூக நடப்பிற்கு ஒத்துவராதவர். இதயநோய்
உண்டாகலாம் குழந்தைகளைப் பறிகொடுத்துத் துயரங்களை அனுபவிக்கவும்
நேரலாம். மொத்ததில் வேறு நல்ல அமைப்பு ஜாதகத்தில் இல்லை என்றால்
இந்த ராகுவின் அமர்வு ஆளைப் படுத்தி எடுத்துவிடும்!

கேது:
குழந்தைகள் இழப்பு.(வயதில் எந்த வயதில் வேண்டுமென்றாலும்) வயிற்று உபாதைகள்
உடையவர். வித்தியாசமான உணர்வு (உணர்ச்சி) அனுபவங்கள் ஏற்படக்கூடியவர்.
வயதான காலத்தில் ஆன்மீகம், வேதங்களில் ஈடுபாடு உண்டாகும். வயதான காலத்தில்
துறவுச் சிந்தனை மேலோங்கி வரும். சிலர் ஆசிரமங்களில் போய்ச் சேர்ந்துவிடுவார்கள்

சொன்னவை அத்தனையுமே பொதுவிதிகள். தனிப்பட்ட ஜாதகங்களில் உள்ள கிரக
அமைப்புக்களை வைத்து இந்தப் பலன்கள் கூடலாம் அல்லது குறையலாம்

In short, the above results will change or gets modified by association or aspects
of other lords!

இதெல்லாம் பொது விதிகள் மட்டுமே! கிரக சேர்க்கைகள், மற்றும் கிரக
பார்வைகளை வைத்துப் பலன்கள் மாறுபடும். அதை மனதில் கொள்க!

இந்த ஐந்தாம் பாவத்தைப் பொறுத்தவரை தேவையான அளவு பாடத்தை
நடத்திவிட்டேன். மற்றபடி உங்கள் அனுபவம் மூலம் மேலும் சிலவற்றை
நீங்கள் கற்றுக்கொள்ள வாழ்த்துக்கள்!

அனுபவம் (by speaking or by seeing or by assessing different horoscopes)
உங்களுக்கு வித்தியாசமான அறிவையும், ஆற்றலையும் தரும்.

தட்டச்ச மிகவும் சிரமப்பட்டேன். ஈகலப்பை படுத்தி எடுக்கிறது. இருந்தும்
இரண்டு நாள் பாடங்களை ஒரே பகுதியாகக் கொடுத்துள்ளேன். இதை
ஆழ்ந்து படியுங்கள். உங்களுக்கு உள்ள பகுதியை மட்டும் படித்துவிட்டு
சார், அடுத்த பாடம் எப்போது என்று கேட்காதீர்கள்:-)))

இங்கே படிப்பவர்களில் இரண்டு வகை இருக்கிறது. உண்மையில் ஜோதிடத்தைக்
கற்றுத் தெளிய ஆர்வமுள்ளவர்கள் முதல்வகை!. இரண்டாவது பிரிவினர்
ஜாதக நோட்ஸ்களுடன் அவர்கள் ஜாதகத்தை மட்டும் ஒத்துப்பார்த்துவிட்டு
மற்றதைக் கடாசி விடுபவர்கள். அப்படிச் செய்யாதீர்கள். அப்படிச் செய்தால்
சத்தியமாக ஜோதிடம் உங்களைத் திரும்பிப் பார்க்காது! அதாவது உங்களுக்கு
வசப்படாது!!!!!!

Without dedication, you can't learn anything!

அன்புடன்,
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

115 comments:

  1. ஆசிரியர் ஐயா,
    அப்பா ஒரு படியாய் கூச்சல்,குழப்பங்கல்,திரிபு வாதங்கள்,வாதகங்களுக்கு எதிர் வாதங்கள், தொடர்ந்த பின்னூட்டங்களின் ஊர்வலம் எல்லாம் முடிந்து தொடர் அரசு விடுமறைக்குப் பின் துவக்கப்படும் வகுப்பில் நல்ல கருத்துக்கள் உள்ள படப் பதிவுக்கு நன்றி.

    ஒரு விண்ணப்பம்

    சிம்ம லக்னம் மட்டும் தான ( 5 th place- அதிபதி) அல்லது மீதி 11 லக்ணம் பற்றி வருமா.
    இல்லையென்றால்
    அடுத்த பதிவுகளின் உதராணத்துக்கு பிற லக்ணங்கணை( குறிப்பாக மகர லக்ணம்- கொஞ்சம் சுய நலம் தான் சார்)
    களை யெடுத்துக் கொண்டால் பிற மாணவர்கள் அனைவரும் பயனடைவார்களே .

    ReplyDelete
  2. /////திருநெல்வேலி கார்த்திக் said...
    ஆசிரியர் ஐயா,
    அப்பா ஒரு படியாய் கூச்சல்,குழப்பங்கல்,திரிபு வாதங்கள்,வாதகங்களுக்கு எதிர் வாதங்கள், தொடர்ந்த பின்னூட்டங்களின் ஊர்வலம் எல்லாம் முடிந்து தொடர் அரசு விடுமறைக்குப் பின் துவக்கப்படும் வகுப்பில் நல்ல கருத்துக்கள் உள்ள படப் பதிவுக்கு நன்றி.
    ஒரு விண்ணப்பம்
    சிம்ம லக்னம் மட்டும் தான ( 5 th place- அதிபதி) அல்லது மீதி 11 லக்ணம் பற்றி வருமா.
    இல்லையென்றால் அடுத்த பதிவுகளின் உதராணத்துக்கு பிற லக்ணங்கணை( குறிப்பாக மகர லக்ணம்- கொஞ்சம் சுய நலம் தான் சார்)
    களை யெடுத்துக் கொண்டால் பிற மாணவர்கள் அனைவரும் பயனடைவார்களே ////

    இப்படிக் கேள்வி கேட்டால் மற்ற மாணவர்கள் குழம்புவார்கள்.
    உங்கள் லக்கினம் எது? உங்கள் ஐந்தாம் வீடு எதுவாக இருக்கும்?
    அதை முதலில் சொல்லிவிட்டுப் பிறகு உங்கள் சந்தேகத்தைக் கேட்பது நல்லது!

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  4. //குழந்தைகள் இழப்பு.(வயதில் எந்த வயதில் வேண்டுமென்றாலும்) வயிற்று //

    பாலரிஷ்டம் பற்றி சொல்கிறீர்களா ?

    ReplyDelete
  5. //இரண்டாவது பிரிவினர்
    ஜாதக நோட்ஸ்களுடன் அவர்கள் ஜாதகத்தை மட்டும் ஒத்துப்பார்த்துவிட்டு
    மற்றதைக் கடாசி விடுபவர்கள். அப்படிச் செய்யாதீர்கள்.//

    ஐயா,

    நான் முன்பு இரண்டாம் வகையை சேர்ந்தவனாகத்தான் இருந்தேன். ஆனால் இப்போது முழு முயற்சி எடுத்துவருகிறேன்.

    ஆனாலும் பரிட்சை என்றால் பயமாகத்தான் உள்ளது...

    5மிடம் பற்றிய விளக்கம் அருமை...

    5மிடத்தில் மாந்தி தனியாக் அமர்ந்தால் என்னவென்று சொல்லவில்லையே?

    ReplyDelete
  6. வணக்கம் அய்யா !!

    இன்றைய பதிவு அருமையான மருந்து (தேன் கொஞ்சம் சேர்த்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்)
    If not favourably disposed: என்றால் என்ன ? கொஞ்சம் விளக்கமாக கூரவும் .

    ReplyDelete
  7. Sir,
    5th place is empty then? what is the effect?

    ReplyDelete
  8. Dear Sir,

    I have understanding that if Jupiter aspects the 5th house(that too 7th aspect) is it good?

    why have u not included unfavourable dispostion? Is all planets are considered good in 11 th house( I think yes)can you please clarify..If no,if planet from the opposite group that u mentioned gets disposed in 11th house what will happen?

    -Shankar

    ReplyDelete
  9. Dear Sir,

    More questions,If 5th house lord gets disposed in unfavourable house, for example Jupiter get disposed in Gemini but 11th house? what will interpreations? or For eg.,5th house saturn gets disposed in leo as 11 house? I am emphasing 11 th house becos I think 11th house planets are considered good?

    -shankar

    ReplyDelete
  10. குருவே,

    5-ல் இருக்கும் கிரகம் வக்கிரம் பெற்று இருந்தால், பலன்கள் மாறுபடுமா ?

    ஆங்கிலத்தில் ஒரு கிரகம் (உதராணமாக குரு / Ju') என்று ஜாதகத்தில் குறிப்பிட்டு இருந்தால் அதற்கு என்ன அர்த்தம்? அதே கிரகம் Ju' 5-ல் இருந்தால் பலன்கள் நேர்மாறாக இருக்குமா?

    அன்புடன்
    இராசகோபால்

    ReplyDelete
  11. அய்யா,
    என் ஜாதகப்படி ரிசப ராசி, கன்னி லக்னம்.
    எனக்கு 5-ல் குரு, 5-க்கு உரியவர் (சனி)10- ம் வீட்டில்(மிதுனத்தில்) உள்ளார், சனி வுடன் கேதுவும் இருக்கிறார் இதன் பலன் எப்படி இருக்கும்?

    GK , BLR

    ReplyDelete
  12. ஐந்தாம் இட அதிபதி,ஐந்தாம் இடத்தில் அமரந்தவன் பற்றிக் கூறினீர்கள்.
    ஆனால் ஐந்தாம் இடக் காரகனான குரு பற்றி ஏதும் கூறவில்லையே?

    குருவின் இடம் மற்றும் பாரவையினாலும் ஐந்தாம் இடப் பலன்கள் மாறுமல்லவா?

    ReplyDelete
  13. சனியும், புதனும் ஒரே வீட்டில் இருந்தால் கிறுக்கனாக இருப்பாங்களாமே ?

    பதிவர்கள் பலருக்கு அப்படித்தான் இருக்கும் என நினைக்கிறேன். சதா கிறுக்குறாங்களே.

    ReplyDelete
  14. //////கோவி.கண்ணன் said...
    //குழந்தைகள் இழப்பு.(வயதில் எந்த வயதில் வேண்டுமென்றாலும்) வயிற்று //
    பாலரிஷ்டம் பற்றி சொல்கிறீர்களா ?

    Balarishta Dosha is concerned with the horoscope of a child and this is different
    This is telling about the horoscope of a person. Loss of children means, loss of his own children!

    ReplyDelete
  15. ////கூடுதுறை said...
    //இரண்டாவது பிரிவினர்
    ஜாதக நோட்ஸ்களுடன் அவர்கள் ஜாதகத்தை மட்டும் ஒத்துப்பார்த்துவிட்டு
    மற்றதைக் கடாசி விடுபவர்கள். அப்படிச் செய்யாதீர்கள்.//
    ஐயா,
    நான் முன்பு இரண்டாம் வகையை சேர்ந்தவனாகத்தான் இருந்தேன்.
    ஆனால் இப்போது முழு முயற்சி எடுத்துவருகிறேன்.
    ஆனாலும் பரிட்சை என்றால் பயமாகத்தான் உள்ளது...
    5மிடம் பற்றிய விளக்கம் அருமை...
    5மிடத்தில் மாந்தி தனியாக் அமர்ந்தால் என்னவென்று சொல்லவில்லையே?//////

    ஐந்தில் மாந்தி அமர்ந்திருந்தால் ஜாதகனுக்கு நிம்மதியில்லாத மனதைக் கொடுப்பார்
    குழந்தை பிறப்பதைத் தாமதப் படுத்துவார் அல்லது உருப்படாத குழந்தைகளைக் கொடுப்பார்.
    தக்க சமயத்தில் சரியான முடிவுகளை எடுக்க விடமாட்டார். மொத்தத்தில் நல்லது அல்ல!

    ReplyDelete
  16. //////Geekay said...
    வணக்கம் அய்யா !!
    இன்றைய பதிவு அருமையான மருந்து (தேன் கொஞ்சம் சேர்த்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்)
    If not favourably disposed: என்றால் என்ன ? கொஞ்சம் விளக்கமாக கூறவும்////

    சிலர் தேன் வேண்டும் என்கிறீர்கள். சிலர் தேன் வேண்டாம் என்கிறீர்கள்.
    எல்லோரும் ஆலோசித்து ஒரு முடிவு செய்யுங்கள்.
    அல்லது நமது வகுப்பறையின் சர்வே மாஸ்டர் கூடுதுறையை விட்டு
    ஒரு சர்வே (நமக்குள்) எடுக்கச்சொல்லவா?
    -------------------------
    If not favorably disposed: என்றால்
    சகாயங்கள் செய்யும் நிலைமையில் இல்லை அல்லது
    அனுசரனையான நிலைமையில் இல்லை அல்லது
    உதவும் நிலைமையில்லை - எப்படி வேண்டும்
    என்றாலும் வைத்துக்கொள்ளுங்கள்

    ReplyDelete
  17. /////aravindaan said..
    Sir,
    5th place is empty then? what is the effect?////

    If the 5th place is empty. No problem. You are missing one
    good thing by non placement of a good planet in that house
    or You are escaping from a bad thing by non placement
    of a evil planet in that house.
    Is it clear now?

    ReplyDelete
  18. /////hotcat said...
    Dear Sir,
    I have understanding that if Jupiter aspects the 5th house(that too 7th aspect) is it good?////

    200% good:-))))

    why have u not included unfavourable dispostion?
    Is all planets are considered good in 11 th house
    ( I think yes)can you please clarify..If no,if planet from
    the opposite group that u mentioned gets disposed in
    11th house what will happen?
    -Shankar////

    11th house is the house of profit. Only good planets
    are to be considered for that house. Will you consider
    evil things or add evil things for your important (1th) house?

    ReplyDelete
  19. /////hotcat said...
    Dear Sir,
    More questions,If 5th house lord gets disposed in unfavourable house,
    for example Jupiter get disposed in Gemini but 11th house?
    what will interpretions? or For eg.,5th house saturn gets
    disposed in Leo as 11 house? I am emphasing 11 th house
    because I think 11th house planets are considered good?
    -shankar///

    In that case , it will be mixed results

    ReplyDelete
  20. /////Rajagopal said...
    குருவே,
    5-ல் இருக்கும் கிரகம் வக்கிரம் பெற்று இருந்தால், பலன்கள் மாறுபடுமா ?/////

    மாறுபடும், பலன்கள் குறையும்

    ReplyDelete
  21. //////Geekay said...
    அய்யா,
    என் ஜாதகப்படி ரிசப ராசி, கன்னி லக்னம்.
    எனக்கு 5-ல் குரு, 5-க்கு உரியவர் (சனி)10- ம்
    வீட்டில்(மிதுனத்தில்) உள்ளார், சனி வுடன் கேதுவும்
    இருக்கிறார் இதன் பலன் எப்படி இருக்கும்?
    GK , BLR////

    ரிஷபராசி, ராசிநாதன், கன்னி லக்னம் லக்கின அதிபதி,
    (அவர்கள் இருவரும் எங்கே இருக்கிறார்கள் ?)
    ஐந்தாம் வீடு மகரம், அதன் அதிபதி சனி, அவர் மிதுனத்தில்
    அவருடன் கேது, 4ல் ராகு.......ரயில் பெட்டி மாதிரி போய்க்
    கொண்டிருக்கிறது ஜீக்கே! நான்கு பக்கம் பதில் எழுத வேண்டுமே!
    பெங்களூருக்கு வருகிறேன் ஜீகே! அப்பொது கப்பன் பார்க்கில்
    உட்கார்ந்து கலக்கிவிடுவோம். இப்போது நேரமில்லை!

    ReplyDelete
  22. /////அறிவன்#11802717200764379909 said...
    ஐந்தாம் இட அதிபதி,ஐந்தாம் இடத்தில் அமரந்தவன் பற்றிக் கூறினீர்கள்.
    ஆனால் ஐந்தாம் இடக் காரகனான குரு பற்றி ஏதும் கூறவில்லையே?
    குருவின் இடம் மற்றும் பாரவையினாலும் ஐந்தாம் இடப் பலன்கள் மாறுமல்லவா?///

    காரகர்களைப் பற்றி முன்பே சொல்லியிருக்கிறேனே ஸ்வாமி!. அவர்களுக்கு
    கேந்திர திரிகோண இடங்களில் பலன். அதோடு அந்தந்த இடத்து அதிபதிகளோடு
    சேர்ந்து பயன் தருவார்கள். அவர்களுடைய தசா புத்திகளில் தருவார்கள்!

    ReplyDelete
  23. //////கோவி.கண்ணன் said...
    சனியும், புதனும் ஒரே வீட்டில் இருந்தால் கிறுக்கனாக இருப்பாங்களாமே?////

    அவர்கள் கிறுக்கனாக இருக்கமமட்டார்கள். மற்றவர்களைக் கிறுக்காக்குவதில்
    வல்லவர்களாக இருப்பார்கள்:-))))

    Mercury associted with Saturn will make the native very intelligent but in the negative side!
    But if its with jupiter, it we be on the positive side!

    ////////பதிவர்கள் பலருக்கு அப்படித்தான் இருக்கும் என நினைக்கிறேன்.
    சதா கிறுக்குறாங்களே./////

    இந்தக் கிறுக்கலும் அந்தக் கிறுக்கலும் ஒன்றா?
    இது என்ன நாகப்பட்டிணத்தில் கற்றுக் கொண்டதா?

    ReplyDelete
  24. //இங்கே படிப்பவர்களில் இரண்டு வகை இருக்கிறது. உண்மையில் ஜோதிடத்தைக்
    கற்றுத் தெளிய ஆர்வமுள்ளவர்கள் முதல்வகை!. இரண்டாவது பிரிவினர்
    ஜாதக நோட்ஸ்களுடன் அவர்கள் ஜாதகத்தை மட்டும் ஒத்துப்பார்த்துவிட்டு
    மற்றதைக் கடாசி விடுபவர்கள். அப்படிச் செய்யாதீர்கள். அப்படிச் செய்தால்
    சத்தியமாக ஜோதிடம் உங்களைத் திரும்பிப் பார்க்காது! அதாவது உங்களுக்கு
    வசப்படாது!!!!!!//

    வாத்தியரே, ஒரு வழியாக வகுப்புக்கு நேரதொடு வந்து விட்டேன் இன்று, ஐ யா ஜாலீ..

    நானும் அப்பிடித்தான் முதலில் என்னுதய ஜாதகத்தை மட்டுமே பார்த்து பார்த்து பலன் இருக்கிறதா என்று இருந்தேன் இப்பொழுது என் நண்பர்களின் ஜாதகத்தையும் வைத்து பார்க்கிறேன். அதில் அவர்காளாவது நன்றாக இருந்த எனக்கு சந்தோசம் அல்லவா?

    ReplyDelete
  25. //பெங்களூருக்கு வருகிறேன் ஜீகே! அப்பொது கப்பன் பார்க்கில்
    உட்கார்ந்து கலக்கிவிடுவோம். இப்போது நேரமில்லை!//

    கண்டிப்பா நீங்கள் பெங்களூரு வந்தால், கலக்கி விடுவோம் .
    வரும்போது தெரியப்படுத்துங்கள்.
    நன்றி அய்யா

    ReplyDelete
  26. ஹலோ சார்,

    இன்றைய பாடம் நன்றாகவே உள்ளது. புரியவும் ஈசியாக இருந்தது.
    எப்படி தான் இவ்வளவும் ஞாபகத்தில் வைத்துள்ளீர்களோ? ஆச்சரியமாக உள்ளது.
    எனக்கு ஒரு சந்தேகம், இந்த கம்ப்யூட்டரில் என்னோட ஜாதகம் குறிச்சப்போ லக்னம் இடம் மாறி இருக்கிறது.மற்ற கிரஹங்கள் எல்லாமெ சரியாக இருக்கிறது. அதை எப்படி தெரிஞ்சுக்கிறது?

    ReplyDelete
  27. aravindaan said..
    Sir,
    5th place is empty then? what is the effect?////

    Master said..
    If the 5th place is empty. No problem. You are missing one
    good thing by non placement of a good planet in that house
    or You are escaping from a bad thing by non placement
    of a evil planet in that house.
    Is it clear now?

    "Something is better than Nothing" but.. "Nothing is better than Nonsense" :-))

    ReplyDelete
  28. வணக்கம் ஐயா,

    சில சந்தேகங்கள்....
    01. ஐந்தாம் இடத்தில் பரல்கள் அதிகமாயிருத்தல் நன்மையா?
    02. ஐந்தாம் இடத்தில் தீய கிரகங்கள் இருந்தாலும் குறிப்பிட்ட ஜாதககாரனுக்கு அது நன்மையான கிரகமாக இருந்தால் பலன்கள் மாறுபடும் தானே?
    03. ஐந்தாம் இடத்துக்குரியவன் எழில் இருந்தால் காதல் கல்யாணத்துக்கு சாத்தியம் இருக்குமாமே உண்மையா ?
    04. கலை துறைக்கும் ஐந்தாம் இடத்துக்கும் ஏதும் சம்பந்தம் உண்டா?

    நேரம் கிடைக்கும் போது சுருக்கமாக விடை கொடுத்தால் நன்றியுடையவனாக இருப்பேன்.

    ReplyDelete
  29. //கல்கிதாசன் Said..
    03. ஐந்தாம் இடத்துக்குரியவன் எழில் இருந்தால் காதல் கல்யாணத்துக்கு சாத்தியம் இருக்குமாமே உண்மையா ?//

    இது என்னமோ உள் குத்து சமாசாரமல்ல இருக்குது, யாரு அந்த அம்மணி தசரே, பார்த்து நம் ல கடத்தினர்பொலா உங்களையும் கடத்தித போறாங்க...:-)))))?

    வாத்தியரே அப்டியே, காதல் கல்யாண டாபிக் பற்றி ஒரு பதிவ போட்டாலும் ...நம்ப வகுப்றை கண்மனிகளுக்கு ரொம்ப உபயோகம இருகுமிலா? (கல்யாணம் ஆகதவர்களுக்கு சொன்னேம்பா), (அப்டியே ஒரு இடை கால காசும் பார்த்திடலாம், நண்பர்கள் பலர் ஒரே தொந்தரவு, இதை குறித்து மட்டுமே கேட்கிறார்கள் வாத்தியரே)

    ReplyDelete
  30. ////இது என்னமோ உள் குத்து சமாசாரமல்ல இருக்குது, யாரு அந்த அம்மணி தசரே//////
    நாலு பேருக்கு பயன்படட்டுமே என்று பொதுவாத்தான் கேட்டேன். வாத்தியார்தான் அது உண்மைய இல்லையா என்று சொல்லணும்:-)))))

    /////வாத்தியரே அப்டியே, காதல் கல்யாண டாபிக் பற்றி ஒரு பதிவ போட்டாலும் ...நம்ப வகுப்றை கண்மனிகளுக்கு ரொம்ப உபயோகம இருகுமிலா?////

    உங்களுக்குதான் "சினேகா" டைப்ப்பில கிடைப்பாங்க என்று வாத்தியாரே சொல்லிட்டாங்க தானே. இப்ப என்ன அவசரம்.

    ReplyDelete
  31. //கல்கிதாசன் Said..
    உங்களுக்குதான் "சினேகா" டைப்ப்பில கிடைப்பாங்க என்று வாத்தியாரே சொல்லிட்டாங்க தானே. இப்ப என்ன அவசரம்.//

    இது என்ன வம்பா போச்சு, ஆ... ஊ... நா, சினேகா பேர சொல்லி புடுரீங்க, அதுவும் வாத்தியரே சொல்லிவிட்டார் என்று சொல்லிடுரீங்க, என்னோமோ சினேகா ஒத்த கால்ல விமல மட்டும் தான் கட்டுவேனு நிக்ரமாதிரின்னா இருக்கு...

    //கல்கிதாசன் Said..
    நாலு பேருக்கு பயன்படட்டுமே என்று பொதுவாத்தான் கேட்டேன். வாத்தியார்தான் அது உண்மைய இல்லையா என்று சொல்லணும்:-)))))//
    ஐயா இது நாயகன் கமல் வசனம், நான்தான் முதலில் கண்டுபிடிசென் , எங்கே என் பரிசு ....

    ReplyDelete
  32. //////எங்கே என் பரிசு/////

    கொஞ்சம் இருங்க... வாத்தியார் வந்து நிறைய தருவார். :-))))

    ReplyDelete
  33. //////கோவை விமல்(vimal) said...
    //இங்கே படிப்பவர்களில் இரண்டு வகை இருக்கிறது. உண்மையில் ஜோதிடத்தைக்
    கற்றுத் தெளிய ஆர்வமுள்ளவர்கள் முதல்வகை!. இரண்டாவது பிரிவினர்
    ஜாதக நோட்ஸ்களுடன் அவர்கள் ஜாதகத்தை மட்டும் ஒத்துப்பார்த்துவிட்டு
    மற்றதைக் கடாசி விடுபவர்கள். அப்படிச் செய்யாதீர்கள். அப்படிச் செய்தால்
    சத்தியமாக ஜோதிடம் உங்களைத் திரும்பிப் பார்க்காது! அதாவது உங்களுக்கு
    வசப்படாது!!!!!!//
    வாத்தியரே, ஒரு வழியாக வகுப்புக்கு நேரத்தோடு வந்து விட்டேன் இன்று, ஐ யா ஜாலீ..
    நானும் அப்பிடித்தான் முதலில் என்னுதய ஜாதகத்தை மட்டுமே பார்த்து பார்த்து
    பலன் இருக்கிறதா என்று இருந்தேன் இப்பொழுது என் நண்பர்களின் ஜாதகத்தையும்
    வைத்து பார்க்கிறேன். அதில் அவர்காளாவது நன்றாக இருந்த எனக்கு சந்தோசம் அல்லவா?////
    :-)))))

    ReplyDelete
  34. //////Geekay said...
    //பெங்களூருக்கு வருகிறேன் ஜீகே! அப்பொது கப்பன் பார்க்கில்
    உட்கார்ந்து கலக்கிவிடுவோம். இப்போது நேரமில்லை!//
    கண்டிப்பா நீங்கள் பெங்களூரு வந்தால், கலக்கி விடுவோம் .
    வரும்போது தெரியப்படுத்துங்கள்.
    நன்றி அய்யா/////

    அதெல்லாம் தெரியப்படுத்தாமல் வருவேனா?

    ReplyDelete
  35. ////Sumathi. said...
    ஹலோ சார்,
    இன்றைய பாடம் நன்றாகவே உள்ளது. புரியவும் ஈசியாக இருந்தது.
    எப்படி தான் இவ்வளவும் ஞாபகத்தில் வைத்துள்ளீர்களோ? ஆச்சரியமாக உள்ளது.
    எனக்கு ஒரு சந்தேகம், இந்த கம்ப்யூட்டரில் என்னோட ஜாதகம் குறிச்சப்போ
    லக்னம் இடம் மாறி இருக்கிறது.மற்ற கிரஹங்கள் எல்லாமெ சரியாக இருக்கிறது.
    அதை எப்படி தெரிஞ்சுக்கிறது?/////

    உங்கள் தந்தையார் குறித்து வைத்திருந்ததன்படி வரவில்லையா?
    காலசந்திப்பில் பிறந்தவர்களுக்கு அப்படி வரக்கூடிய வாய்ப்பு உண்டு
    பார்டரில் பிறந்தவர்கள் என்போம். That is born between two lagnas.
    That is end time of one lagna and beginning time of the next lagna!
    You can send me your birth details.I will check up!

    ReplyDelete
  36. ////தமாம் பாலா (dammam bala) said...
    aravindaan said..
    Sir,
    5th place is empty then? what is the effect?////
    Master said..
    If the 5th place is empty. No problem. You are missing one
    good thing by non placement of a good planet in that house
    or You are escaping from a bad thing by non placement
    of a evil planet in that house.
    Is it clear now?
    "Something is better than Nothing" but.. "Nothing is better than Nonsense" :-))////
    நோ பாலா! அவர் தெரியாமல்தான் கேட்டிருக்கிறார்.
    அவருக்குத் தெளிவுபடுத்த வேண்டியது நமது கடமை!

    ReplyDelete
  37. /////கல்கிதாசன் said...
    வணக்கம் ஐயா,
    சில சந்தேகங்கள்....
    01. ஐந்தாம் இடத்தில் பரல்கள் அதிகமாயிருத்தல் நன்மையா?/////
    எங்கே பரல்கள் அதிகமாக இருந்தாலும் அந்த இடத்திற்கு நன்மைதான்!

    /////02. ஐந்தாம் இடத்தில் தீய கிரகங்கள் இருந்தாலும் குறிப்பிட்ட
    ஜாதககாரனுக்கு அது நன்மையான கிரகமாக இருந்தால் பலன்கள் மாறுபடும் தானே?/////

    தீய கிரகங்களே சிலருக்கு யோக கிரகங்களாக இருக்கும். அது நன்மைதான். பலன்கள் மாறுபடும்

    ////// 03. ஐந்தாம் இடத்துக்குரியவன் எழில் இருந்தால் காதல் கல்யாணத்துக்கு
    சாத்தியம் இருக்குமாமே உண்மையா ?//////

    விரும்பியபடி பெண் கிடைப்பாள். அதை நீங்கள் எப்படி வேண்டுமென்றாலும் எடுத்துக்கொள்ளலாம்
    ஏன் உங்கள் பெற்றோர்கள்கூட உங்கள் விருப்பப்படி பெண்ணைத்தெடித்தரலாமே?

    ////////04. கலை துறைக்கும் ஐந்தாம் இடத்துக்கும் ஏதும் சம்பந்தம் உண்டா?//////
    நேரடிச் சம்பந்தம் இல்லை!

    ReplyDelete
  38. //////கோவை விமல்(vimal) said...
    //கல்கிதாசன் Said..
    03. ஐந்தாம் இடத்துக்குரியவன் எழில் இருந்தால் காதல் கல்யாணத்துக்கு சாத்தியம் இருக்குமாமே உண்மையா ?//
    இது என்னமோ உள் குத்து சமாசாரமல்ல இருக்குது, யாரு அந்த அம்மணி தசரே, பார்த்து நம் ல கடத்தினர்பொலா உங்களையும் கடத்தித போறாங்க...:-)))))?
    வாத்தியரே அப்டியே, காதல் கல்யாண டாபிக் பற்றி ஒரு பதிவ
    போட்டாலும் ...நம்ப வகுப்றை கண்மனிகளுக்கு ரொம்ப உபயோகம
    இருகுமிலா? (கல்யாணம் ஆகதவர்களுக்கு சொன்னேம்பா),
    (அப்டியே ஒரு இடை கால காசும் பார்த்திடலாம், நண்பர்கள்
    பலர் ஒரே தொந்தரவு, இதை குறித்து மட்டுமே கேட்கிறார்கள் வாத்தியரே)/////

    அதென்ன சாமி இடைக்காலக் காசு?

    ReplyDelete
  39. ///////கல்கிதாசன் said...
    ////இது என்னமோ உள் குத்து சமாசாரமல்ல இருக்குது, யாரு அந்த அம்மணி தசரே//////
    நாலு பேருக்கு பயன்படட்டுமே என்று பொதுவாத்தான் கேட்டேன். வாத்தியார்தான் அது உண்மைய இல்லையா என்று சொல்லணும்:-)))))
    /////வாத்தியரே அப்டியே, காதல் கல்யாண டாபிக் பற்றி ஒரு பதிவ போட்டாலும் ...நம்ப வகுப்றை கண்மனிகளுக்கு ரொம்ப உபயோகம இருகுமிலா?////
    உங்களுக்குதான் "சினேகா" டைப்ப்பில கிடைப்பாங்க என்று வாத்தியாரே
    சொல்லிட்டாங்க தானே. இப்ப என்ன அவசரம்//////

    வருவார்கள் சரி, எப்பொழுது?

    ReplyDelete
  40. // SP.VR. SUBBIAH said...
    அதென்ன சாமி இடைக்காலக் காசு? //

    நண்பர்கள் எல்லோரும் நண்பிகளுடன் இருப்பதால் (நான் இல்லை) அவர்களின் ஐயம் தீர (காதல் கல்யாணமா இல்லை பெற்றோர்கள் பார்த்து வைக்கும் திருமணமா என்று) தொல்லை பண்ணுகிறார்கள், எவ்‌லேவொ சொன்னாலும் கேட்கமாட்டேங்குறார்கள் (வாத்தியார் இந்த ட்ரிக் மட்டும் சொல்லி தரவில்லை என்று)....:-(((

    ReplyDelete
  41. ///ஏன் உங்கள் பெற்றோர்கள்கூட உங்கள் விருப்பப்படி பெண்ணைத்தெடித்தரலாமே?///

    அது சரி, விருப்பப்படிதான் கிடைக்கும் என்று முடிவான பிறகு சும்மா நாம எதுக்கு நேரத்தை அதுக்கெல்லாம் செலவழிக்கவேனும். ( இந்த மூன்று சுழி "ணு" அடிக்க வருதில்ல)

    பதிலுக்கு நன்றிகள் ஐயா.

    ReplyDelete
  42. //அது சரி, விருப்பப்படிதான் கிடைக்கும் என்று முடிவான பிறகு சும்மா நாம எதுக்கு நேரத்தை அதுக்கெல்லாம் செலவழிக்கவேனும்.//

    அப்போ சினேகா, த்ரிஷா, நயன்தாரா, சௌந்தார்யா (ரஜினி மகள்), ஷ்ரூதி (கமல் ஹாசன் மகள்), இவங்கெல்லாம் விமல் தான் வேணும்ண்ணு ஒத்த கால்ல நிக்ராங்களே அப்போ அவங்க கதி? (அப்புறம் விதியும் தான்):-D

    ReplyDelete
  43. யப்பா.... முடியல.. ( ஆசை.. தோசை)

    ( இன்னும் சற்று நிமிடத்தில் நம்ம ரெண்டு பேரையும் வாத்தியார் வகுப்ப விட்டு கலைக்க போறார்)

    ReplyDelete
  44. //கல்கிதாசன் said...
    அது சரி, விருப்பப்படிதான் கிடைக்கும் என்று முடிவான பிறகு சும்மா நாம எதுக்கு நேரத்தை அதுக்கெல்லாம் செலவழிக்கவேனும். (இந்த மூன்று சுழி "ணு" அடிக்க வருதில்ல)//

    தசரே,
    முதலில் "ணு-வை" பிடிக்கணும் வலை வீசி (சந்தேகம் இருந்தால் தமிழ் நாட்டு போலீஸ கேட்டுபபருங்க) , பிறகு அதை நல்ல கைத்த வச்சி கட்டனும், அப்புறம் நல்ல ஒரு பெரிய உருளை கட்டையா (இல்லைனா சட்டாம் பிள்ளை-ட இரவல் வாங்கிக்கொங்க). அப்புறம் நல்லா "ணு" தலை மேல நங்கு..நங்குனு அடிக்கணும். சரியா?

    அப்போ அடுத்த வாட்டி உங்களுக்கு அடிக்க தெரியள்லானு சொல்ல கூடாது.

    ReplyDelete
  45. //கல்கிதாசன் said...
    யப்பா.... முடியல.. ( ஆசை.. தோசை)//

    ஆசை இருந்தா தப்பில்லை, பேராசைதான் கூடாது.. (நான் என்னைய சொல்லல, அவங்களை சொன்னேன்[சினேகா, த்ரிஷா, நயன்தாரா, சௌந்தார்யா (ரஜினி மகள்), ஷ்ரூதி (கமல் ஹாசன் மகள்)])....:-D

    ReplyDelete
  46. வாத்தியார் மேஜையைப் பலமாகத்தட்டி சத்தம் எழுப்பி
    ஏழரைக் கட்டைக் குரலில் சொல்வது:

    Silence Please! SILENCE PLEASE!

    ReplyDelete
  47. //இப்படிக் கேள்வி கேட்டால் மற்ற மாணவர்கள் குழம்புவார்கள்.
    உங்கள் லக்கினம் எது? உங்கள் ஐந்தாம் வீடு எதுவாக இருக்கும்?
    அதை முதலில் சொல்லிவிட்டுப் பிறகு//

    லக்ணம்-மகரம் ..... (ரிஷப ராசி)
    ஐந்தாம் வீடு-ரிஷபம்
    அதிபதி-சுக்கிரன்
    5th lord- சுகிகிரன் இருப்பது 11 ம்விட்டில் புதனனுடன்

    5 ம் வீட்டில்-குரு சந்திரனுடன்

    10ம் வீட்டில் சனி செவ்வாயுடன்

    நடப்பு திசை சனி- சனி புத்தி

    ஜாதகர்க்கு ப்லன் எப்படி விளக்கவும்


    பாடம் புரியும் வகையில்

    ReplyDelete
  48. //வாத்தியார் மேஜையைப் பலமாகத்தட்டி சத்தம் எழுப்பி
    ஏழரைக் கட்டைக் குரலில் சொல்வது:

    Silence Please! SILENCE PLEASE!

    //

    ஏழரைக் கட்டைக் குரலில் சொல்வது??
    whats the meaning? is it related to 7 and half saturn..

    :-)))

    ReplyDelete
  49. // SP.VR. SUBBIAH said...
    வாத்தியார் மேஜையைப் பலமாகத்தட்டி சத்தம் எழுப்பி
    ஏழரைக் கட்டைக் குரலில் சொல்வது:

    Silence Please! SILENCE PLEASE!//

    யாருப்பா அது வாத்தியார் வகுப்பில் சவுண்ட் விடுரது, எல்லோரும் வாய் பொத்தி விரல் வைக்கவும்... சோ ...! என்ன மாதிரி ஒரு நல்ல மாணவன் யாரும் இல்லயா?

    ReplyDelete
  50. ////Mercury associted with Saturn will make the native very intelligent but in the negative side!
    But if its with jupiter, it we be on the positive side!/////

    What will be happen if mercury associated with saturn and sun?

    -shankar

    ReplyDelete
  51. ஐயா,
    நான் சொல்ல வந்தது, சம்திங் (நல்ல கிரகம்) நத்திங் (கிரகம் எதுவும் இல்லாதது) நான்சென்ஸ் (தீய கிரகம்). மரியாதை குறைவாக என்றும் பேசுவதும் இல்லை, எழுதுவதும் இல்லை. இருந்தாலும் நீங்கள் தெளிவுபடுத்தியதற்கு நன்றி.

    ReplyDelete
  52. ///////திருநெல்வேலி கார்த்திக் said...
    //இப்படிக் கேள்வி கேட்டால் மற்ற மாணவர்கள் குழம்புவார்கள்.
    உங்கள் லக்கினம் எது? உங்கள் ஐந்தாம் வீடு எதுவாக இருக்கும்?
    அதை முதலில் சொல்லிவிட்டுப் பிறகு//
    லக்ணம்-மகரம் ..... (ரிஷப ராசி)
    ஐந்தாம் வீடு-ரிஷபம்
    அதிபதி-சுக்கிரன்
    5th lord- சுகிகிரன் இருப்பது 11 ம்விட்டில் புதனனுடன்
    5 ம் வீட்டில்-குரு சந்திரனுடன்
    10ம் வீட்டில் சனி செவ்வாயுடன்
    நடப்பு திசை சனி- சனி புத்தி
    ஜாதகர்க்கு பலன் எப்படி விளக்கவும் பாடம் புரியும் வகையில்/////

    பலன் என்ற வார்த்தையில் ஒரு இருபது கேள்விகளை அடக்கலாம்.
    உங்களை எதிரில் உட்காரவைத்து ஒரு மணி நேரம் பேச வேண்டிய
    செய்திகளைப் பின்னூட்டத்தில் சொல்லப் பணிக்கிறீர்கள்

    சரி இப்போது பாடம் ஐந்தாம் வீட்டைப் பற்றியது என்பதால்
    அதற்குரிய பலனைச் சொல்கிறேன்
    ------------------------------------------
    இது பதிவிலேயே கொடுத்ததுதான் அதைப் படித்தீர்களா? இல்லையா?


    5ல் குரு.
    படித்தவர், சட்டத்துறையில் வேலை என்றால் (it is concerned with 10th house)
    அதில் சிகரம் வரைக்கும் சென்றுவிட்டு வரக்கூடியவர். அதீத புத்திசாலி.
    விவாதத்தில் இவருடன் ஜெயிப்ப்பது சிரமம். சாஸ்திரங்கள், சம்பிரதாயங்களில்
    ஈடுபாடு கொண்டவர். அரசு ஆலோசகர் அல்லது நிறுவன ஆலோசகராக வரக்
    கூடியவர் (ad visor). அதிகமான நண்பர்கள், குழந்தைகளை உடையவர். உடையவர்
    என்பதுமட்டுமல்ல, அவர்களோடு நன்கு வாழவும் தெரிந்தவர்.
    5 ல் சந்திரன்:
    தெளிவான மனதை உடையவர். அறிவு ஜீவி,(highly intelligent) குழந்தைகளால்
    இன்பம், இடம் சொத்துக்களின் சேர்க்கை, படித்தவர், உண்மையானவர் என்ற
    நிலைப்பாட்டை உண்டாக்கும். மிகுந்த இறை நம்பிக்கை உள்ளவர். இவருடைய
    குழந்தைகளின் ஒன்று மிகவும் புகழ் பெற்று, வயதானகாலத்தில் இவருக்கு
    மகிழ்ச்சியை உண்டாக்கும்

    5th lord 11ல் இருந்தால்:
    எடுக்கும் காரியம் எல்லாவற்றிலும் வெற்றியும், நன்மையும் கிடைக்கும். செல்வந்தராகி
    விடுவார். மற்றவர்களுக்கு உதவிகள் செய்வார். அதிகமான குழந்தைகள் இருக்கும்!

    ஆறாவது வீட்டிற்கு உரிய கிரகம் புதன் (அவரே 9ற்கும் உரியவர்) வந்து அமர்ந்ததால்
    mixed results. பலன்களைப் பாதியாகக் குறைப்பார்

    போதுமா?

    வகுப்பறை மாணவர்களின் சந்திப்பு ஒன்றை ஏற்படுத்தலாம் என்று உள்ளேன்.
    அப்போது உங்கள் ஜாதகத்தைக் கொண்டு வாருங்கள். பார்த்துப் பலன் சொல்கிறேன்
    இப்போது நேரமில்லை. மன்னிக்கவும்!

    ReplyDelete
  53. /////கனிமொழி said...
    //வாத்தியார் மேஜையைப் பலமாகத்தட்டி சத்தம் எழுப்பி
    ஏழரைக் கட்டைக் குரலில் சொல்வது:
    Silence Please! SILENCE PLEASE!
    // ஏழரைக் கட்டைக் குரலில் சொல்வது??
    whats the meaning? is it related to 7 and half saturn.. :-)))/////

    பலத்த குரலில் என்பதைத்தான் அப்படிச் சொல்லியுள்ளேன். சனிக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை!

    ReplyDelete
  54. ////hotcat said...
    ////Mercury associted with Saturn will make the native very intelligent but in the negative side!
    But if its with jupiter, it we be on the positive side!/////
    What will be happen if mercury associated with saturn and sun?
    -shankar/////
    பொதுவாக மூன்று கிரகங்கள் சேர்ந்து ஒரு கட்டத்தில் இருப்பது நன்மையல்ல!
    அது கிரகயுத்தம் எனப்படும் அதற்குப் பலன்கள் தனி. பின்பாடங்களில் வரும்
    அதுபோல சூரியனும் சனியும் சேர்வது நல்லதல்ல. அவற்றின் காரத்துவம்
    அடிபட்டுப்போயிருக்கும் ஜாதகத்தை முழுமையாகப் பார்த்தல்தான் எது
    அடிவாங்கிப் படுத்திருக்கிறது என்று தெரியும்!

    ReplyDelete
  55. /////தமாம் பாலா (dammam bala) said...
    ஐயா,
    நான் சொல்ல வந்தது, சம்திங் (நல்ல கிரகம்) நத்திங்
    (கிரகம் எதுவும் இல்லாதது) நான்சென்ஸ் (தீய கிரகம்).
    மரியாதை குறைவாக என்றும் பேசுவதும் இல்லை,
    எழுதுவதும் இல்லை. இருந்தாலும் நீங்கள் தெளிவுபடுத்தியதற்கு நன்றி.///

    No problem; It is alright Bala!

    ReplyDelete
  56. வாத்தியரே, அது என்ன கோபமோ? எனது பின்னூடடம் மட்டும் விட்டு விட்டீர்கள்...? கோபம் என்றால் சொலுங்கள்... இனி வகுப்றை ஜன்னல் பக்கம் மட்டுமே வருகிறேன்.(அது யாருடா அம்பி உடனே என் சீட்டில் உக்காரு வது)

    ReplyDelete
  57. //வகுப்பறை மாணவர்களின் சந்திப்பு ஒன்றை ஏற்படுத்தலாம் என்று உள்ளேன்.
    அப்போது உங்கள் ஜாதகத்தைக் கொண்டு வாருங்கள். பார்த்துப் பலன் சொல்கிறேன்
    இப்போது நேரமில்லை. மன்னிக்கவும்!//

    இணைய வழி வகுப்புகால் நடைபெறுவதாலும், வகுப்புக்கள் ஆரம்பித்த்து அரை இரூதி தெர்வுக்கு பின்னால் வகுப்பில் சேர்ந்த்ததால் ஏற்படும் சந்தேகங்ளை வி ளக்கநேர்முறை பயிரற்சி அவசியம் வேன்டும் நன்்றி.

    ஆசிரியரை நேரில் சந்த்க்கும் அந்த பொன்னாளாக்கு காத்திருக்கிறேன்

    ReplyDelete
  58. யாரும் இருக்கும் இடத்தில் இருந்துவிட்டால் எல்லாம் சவுக்கியமே.....

    ReplyDelete
  59. டோண்டு ராகவனிடமிருந்து ஒரு ஜோசியப் பதிவு!"


    //சரவணன் said...

    வணக்கம் தென்காசி அவர்களே,

    ஒரு மனிதனுக்கு ஜோதிட நம்பிக்கை உள்ளது என்று கூறுங்கள் அது அவர் பாடு இப்படி பக்தி வரும்போது ஜோதிட நம்பிக்கை வருகிறது என்ற பொதுக்கருத்து தவறு.

    //பக்தி வரும் போது ஜோதிட நம்பிக்கையும் தானாக வருகிறது.//

    பக்தியா ஜோதிடமா?

    ஜோதிடம் உண்மை என்றால் ஒருவனின் விதி நிர்ணயிக்கப்பட்டது என்றால் அவனுக்கு கடவுளை கும்பிட வேண்டிய அவசியமே இல்லை, அவனுக்கு தெய்வமே அவசியம் இல்லை. இங்கு பக்தி தோற்கிறது.

    இல்லை ஒருவனின் பக்தி அவனை பாதுகாக்கிறது என்றால், நற்றுணையாவது நமச்சிவாயமே என்ற ஒருவனுக்கு ஜோதிடம் தேவையற்றது எதற்கு அவன் ஜோதிடத்தை நம்ப வேண்டும் இங்கு ஜோதிடம் தோற்கிறது

    இரண்டையும் கலப்பது ஒரு பயங்கலந்த மரியாதையை ஜோதிடத்திற்கு தரவே என்பது என் கருத்து. அதற்காகவே பக்தியும் பரிகாரங்களும் ஜோதிடத்தில் பரிமாறப்படுகின்றன

    சரவணன்//


    மாற்றுக் கருத்தை மாண்புடன் பதிந்தமைக்கு தென்காசியின் பாரட்டுகளும் உங்களுக்கு.

    இது பற்றி பெரியவர்கள் தான் கருத்து சொல்லமுடியும்.
    இருந்தாலும் என் சொந்த அனுபவம் உங்களோடு பகிர்தல் ஒரு தன்னிலை விளக்கம் போல் .
    பாரதியாரின் அன்பு மனைவியின்
    சொந்த ஊரின் உயர் நிலப் பள்ளியில் படிக்கும் போது எங்களது தமிழ் ஆசிரியர் ஒரு பிற்பட்ட வகுப்பை சேர்ந்தவ்ர்( அரசின் விதி முறைப்படி அதுவும் சுமுதாய அளவுகோலின் படி).எந்த வசதியும் இல்லாக் கிராமத்தில் ஏழையாய் இருந்து பிற உயர் வகுப்பினரானால்( நமது சினிமாக்களில் வரும் வில்லன்கள் போல்) மிகவும் துன்பப்பட்டு மிகவும் சிரமப் பட்டு இந்த வேலைக்கு வந்தவர்.

    பகுத்தறிவும்,பொதூடைமையும் கலந்த ஒரு நல்ல பண்பாளர். அவர் தன் வாழ்வில் அனுபவித்த கஷ்டங்களையும் இன்னல்கலையும்,அவமானங்களையும் தினம் சொல்லிவந்ததால் எங்களுக்கும் அவர் பாதிப்பு இருந்து வந்தது.
    அதாவது நாத்தீக உணர்வு,ஜாதகத்தின் மீது அவநம்பிக்கை,சுயநலக் கும்மப்லின் மீது சீற்றம்.
    இது நிற்க.

    காலங்கள் (சுமார் 35 வருடங்கள்)உருண்டோடிவிட்டன்.எவ்வளவோ மாற்றங்கள்,கலப்பு திருமனங்கள்,ந்கர விரிவாக்கம் பகுதிகளில் உண்மையான சம்த்துவ புரங்கள்.( இன்னும் அநீதிகள் முழுமையாய் தீர்க்கப் படவில்லை- ஆனலும் ஒரு நாள் இல்லவிட்டால் ஒரு நாள் அந்த தமிழக்ம் மல்ரும் நம்புவோம்).

    சரி நம்ம் கதையை தொடர்வோம்.

    வாழ்வில் 40ன் தொடக்கத்தில் வாழ்வுச் சவால்கள் நம்மை நெருக்குகிறன.
    உடலின் இயக்கங்கள் கொஞ்சம் கொஞ்சமய் மக்கர் செய்ய ஆரம்பிக்கின்றன.

    இதுவரை எதிர்வாதம் பேசியவ்ர்கள் நல்ல் ஆன்மீக புதகங்களையும் படிக்கவும்,ஆன்மிகக் கூட்டங்களுக்கு சொல்ல ஆரம்பிக்க தலை படுகின்றனர்.

    அவநம்பிக்கை நீங்கி அவனே சரணம் என மனம் எண்ண தொடங்குகிறது.
    இது பொதுவாக 95% மக்களுக்கு தனது 50 வயதில் தொடங்கும்.

    இறை நம்பிக்கயை ஒரு ஆத்ம பலம் என உணர்வோம்;
    எல்லம் மனம் சார்ந்த விசயம்.
    மேலும் யோகிகளின் கருத்துபடி ஆகம்விதிப்படி கட்டப் பட்ட பல் கோவில்களில் சித்தர்களின் சமாதி உள்ளதகாவும் நல்ல எண்ண அதிர்வுகள் நம்மை பரசவப் படுத்தும் என்பதிலும் உண்மை இருக்கிறது.

    மன்ம் ( துன்பம் காரணமாக்)அலைபாயும் போது உங்கள் ஊரில் உள்ள் கோவிலுக்கு சென்று கண்ணை மூடி உங்கள் சுவாசத்தை கவ்னியுங்கள் அது மென்மையாக ஒரு அழகான் புல்லங்குழல் நாதம் போல் மெதுவாக மென்மையாய் மாறி இன்பத்தைம் அமைதியும் ஆனந்தத்தையும் அளிக்கும்.
    ஒரு முறை முயற்சி செய்து விட்டு உங்கள் அனுபவத்தை சொல்லுங்கள்.

    இந்த உலகில் நம்மை கூன்,கண்பார்வையில் குறைபாடுகள் ,செவிகேளாத் திரனின்மை, கை கால் பழுது ஆகியவை இல்லாமல் நல்
    அறிவோடு படைத்த இறவனுக்கு(இயற்கையின் இறை யாற்றலுக்கு)நன்றி சொல்வதே அவன் தாள் பணிந்து வணங்குதல்.
    கடவுளை நம்புவது
    நம்க்கு ஒரு moral support

    இதிதா த்ய்வப் புலவர் திருவள்ளுவரும் சொல்லியுள்ளர்.

    ஜோதிடத்தி எப்படி இருந்தலும் கடவுள் நினைத்தால் அவர் விதித விதியை அவ்ர் மற்றுவார் எனற எண்ணமே உங்களுக்கு யானை பலம் கொடுக்க கஷ்டங்கள் கரைந்து எதையும் தாங்கும் மனப் பக்கும் வந்து வாழ்வை எந்தச் சூழ்நிலையிலும் ஆனந்தமாய் இருப்பீர்கள்.

    இது பல பெரியவ்ர்கள் சொல்ல கேட்டு அனுபவத்த உண்மை உணர்வு

    மீண்டு சந்திப்போம்
    நல்ல கருத்தை பரிமாறிக் கொள்ள.

    வணக்கம் கூறி விடைபெறுகிறேன்.நன்றி

    ஒரு வேண்டு கோள்:
    ஒருமுறை ஆசிரியர் சுப்பையா அவ்ர்களின் classroom2007.blogspot.com க்கு வரவும். அவர் வகுப்பில் உங்கள் எல்லச் சந்தேகங்களுக்கும் நல்ல முழு விளக்கம் கிடைக்கும்.

    ReplyDelete
  60. /////கோவை விமல்(vimal) said...
    வாத்தியரே, அது என்ன கோபமோ? எனது
    பின்னூடடம் மட்டும் விட்டு விட்டீர்கள்...? கோபம்
    என்றால் சொலுங்கள்... இனி வகுப்றை ஜன்னல் பக்கம்
    மட்டுமே வருகிறேன்.(அது யாருடா அம்பி உடனே
    என் சீட்டில் உக்காரு வது)//////

    சைலன்ஸ்ன்னு சொன்னது உங்களுக்குத்தான்!
    பாடத்தைக் கவனிப்பதை விட அரட்டைதான் அதிகமாகயிருக்கிறது!

    ReplyDelete
  61. /////திருநெல்வேலி கார்த்திக் said...
    //வகுப்பறை மாணவர்களின் சந்திப்பு ஒன்றை ஏற்படுத்தலாம் என்று உள்ளேன்.
    அப்போது உங்கள் ஜாதகத்தைக் கொண்டு வாருங்கள். பார்த்துப் பலன் சொல்கிறேன்
    இப்போது நேரமில்லை. மன்னிக்கவும்!//
    இணைய வழி வகுப்புகால் நடைபெறுவதாலும், வகுப்புக்கள்
    ஆரம்பித்த்து அரை இரூதி தெர்வுக்கு பின்னால் வகுப்பில் சேர்ந்த்ததால்
    ஏற்படும் சந்தேகங்ளை வி ளக்கநேர்முறை பயிற்சி அவசியம் வேன்டும் நன்்றி.
    ஆசிரியரை நேரில் சந்த்க்கும் அந்த பொன்னாளாக்கு காத்திருக்கிறேன்//////

    நன்றி கார்த்திக்!

    ReplyDelete
  62. //////நவநீத்(அ)கிருஷ்ணன் said...
    யாரும் இருக்கும் இடத்தில் இருந்துவிட்டால் எல்லாம் சவுக்கியமே..../////

    அப்புறம் சனீஸ்வரனுக்கு என்ன வேலை?
    .

    ReplyDelete
  63. //SP.VR. SUBBIAH said...
    சைலன்ஸ்ன்னு சொன்னது உங்களுக்குத்தான்!
    பாடத்தைக் கவனிப்பதை விட அரட்டைதான் அதிகமாகயிருக்கிறது! //

    :-((((((

    ReplyDelete
  64. i am eagarly waiting for teacher student meeting....

    ReplyDelete
  65. நேற்றே பாடம் படித்து விட்டேன், பின்னூட்ட முடியலை, ஆபிஸ்ல ஒரு குளறுபடி.

    ரொம்ப விரிவா, ஆனா நச்சுனு இருக்கு இந்த பாடம். மருந்தை விரும்ப ஆரம்பித்து விட்டால் தேனுக்கு அவசியமே இல்லையே! :))

    @இந்தா விமல், பின் பெஞ்சுக்கு வர எனக்கு விருப்பமில்லை.

    ஆமா! சினேகா செளக்யமா? :p

    ReplyDelete
  66. //@ambi
    @இந்தா விமல், பின் பெஞ்சுக்கு வர எனக்கு விருப்பமில்லை.

    ஆமா! சினேகா செளக்யமா? :p//

    இஸ் அப்பா, வேணாம் இந்த விளையாட்டுக்கே நான் வரல, இப்பதான் வாத்தியார் மொத்துனத்துல பெட்ல இருந்து எந்திரிக்க முடியல, அதுக்குள்ள நீங்களா...

    ReplyDelete
  67. என்ன விமல் அடி பலமோ?
    (நேற்று எனக்கும் சேர்த்து மொத்து விழுவதற்குள் நான் எஸ்கேப் ஆயிட்டன்)

    ReplyDelete
  68. //////thenkasi said...
    கடவுளை நம்புவது நமக்கு ஒரு moral support
    இதைத்தான் தெய்வப் புலவர் திருவள்ளுவரும் சொல்லியுள்ளார்.
    ஜோதிடத்தில் எப்படி இருந்தலும் கடவுள் நினைத்தால் அவர் விதியை
    அவர் மற்றுவார் எனற எண்ணமே உங்களுக்கு யானை பலம் கொடுக்க
    கஷ்டங்கள் கரைந்து எதையும் தாங்கும் மனப் பக்கும் வந்து வாழ்வை
    எந்தச் சூழ்நிலையிலும் ஆனந்தமாய் இருப்பீர்கள்.
    இது பல பெரியவ்ர்கள் சொல்ல கேட்டு அனுபவத்த உண்மை உணர்வு
    வணக்கம் கூறி விடைபெறுகிறேன்.நன்றி
    ஒரு வேண்டு கோள்:
    ஒருமுறை ஆசிரியர் சுப்பையா அவ்ர்களின் classroom2007.blogspot.com
    க்கு வரவும். அவர் வகுப்பில் உங்கள் எல்லச் சந்தேகங்களுக்கும்
    நல்ல முழு விளக்கம் கிடைக்கும்.////

    யாரையும் அழைத்து வந்து விளக்க முடியாது தென்காசி அவர்களே!
    அவர்களாகவே வந்து எட்டிப் பார்த்தால்தான் உண்டு!:-)))

    ReplyDelete
  69. /////கூடுதுறை said...
    i am eagerly waiting for teacher student meeting....//////

    The main problem is we are in various places and also in various countries!

    ReplyDelete
  70. ////நாமக்கல் சிபி said...
    உள்ளேன் ஐயா!///

    Attendance marked!

    ReplyDelete
  71. /////ambi said...
    நேற்றே பாடம் படித்து விட்டேன், பின்னூட்ட
    முடியலை, ஆபிஸ்ல ஒரு குளறுபடி.
    ரொம்ப விரிவா, ஆனா நச்சுனு இருக்கு
    இந்த பாடம். மருந்தை விரும்ப ஆரம்பித்து விட்டால்
    தேனுக்கு அவசியமே இல்லையே! :))
    @இந்தா விமல், பின் பெஞ்சுக்கு வர எனக்கு விருப்பமில்லை.
    ஆமா! சினேகா செளக்யமா? :p////

    ஏன் ஸ்வாமி (ஞாபகப்) படுத்துகிறீர்கள்?
    நானும் அவரும் சினேகாவை மறந்திருந்தாலும் நீங்கள் விடமாட்டீர்கள் போலிருக்கே?

    ReplyDelete
  72. //////கோவை விமல்(vimal) said...
    //@ambi
    @இந்தா விமல், பின் பெஞ்சுக்கு வர எனக்கு விருப்பமில்லை.
    ஆமா! சினேகா செளக்யமா? :p//
    இஸ் அப்பா, வேணாம் இந்த விளையாட்டுக்கே நான் வரல,
    இப்பதான் வாத்தியார் மொத்துனத்துல பெட்ல இருந்து எந்திரிக்க
    முடியல, அதுக்குள்ள நீங்களா...!/////

    சரி, சட்டாம்பிள்ளை வருவதற்குள் எழுந்துவிடுங்கள். இல்லையென்றால்
    அவர் வேறு வந்து மொத்துவார்!

    ReplyDelete
  73. Sir,I have send a Tamil Typewriting Tool. Did you received it? Is it useful.

    ReplyDelete
  74. //நவநீத்(அ)கிருஷ்ணன் said...
    Sir,I have send a Tamil Typewriting Tool. Did you received it? Is it useful.//

    இதற்கு லிங்க் கொடுத்தால் மாணவர்களுக்கும் பயன்படும் அல்லவா?

    ஒருவேளை வாத்தியார் பார்த்து சர்டிபிகேட் கோடுக்கவேண்டுமேன விருப்பிகிறார் போலும்

    ReplyDelete
  75. ஹலோ வாத்தியாரய்யா,

    //பெங்களூருக்கு வருகிறேன் ஜீகே! அப்பொது கப்பன் பார்க்கில்
    உட்கார்ந்து கலக்கிவிடுவோம். இப்போது நேரமில்லை!//

    சரி நீங்க எங்கள் ஊருக்கு வரும் போது உங்களை நான் சந்திக்கும் போது தெளிவு படுத்திக்கிறேன்.நன்றி.
    உங்கள் வரவை தெரிவியுங்கள்.

    ReplyDelete
  76. //The main problem is we are in various places and also in various countries!//

    இது உண்மைதான். முதலில் கோவையில் வையுங்கள்... அதை பார்த்து வெளிநாடுவாழ் மாணவர்கள் வாத்தியாரை அழைக்கமாட்டார்களா என்ன?

    ReplyDelete
  77. /////வகுப்பறை மாணவர்களின் சந்திப்பு ஒன்றை ஏற்படுத்தலாம் என்று உள்ளேன்.
    அப்போது உங்கள் ஜாதகத்தைக் கொண்டு வாருங்கள். பார்த்துப் பலன் சொல்கிறேன்!/////

    டும்.. டும்.. டும்.. இதனால் எல்லோருக்கும் அறிய தருவது என்னவென்றால், வாத்தியார் கூடிய சீக்கிரம் சொந்த செலவில சூனியம் வச்சிக்க போறார் .. டும் ... டும் ... டும்.

    ReplyDelete
  78. ////////நவநீத்(அ)கிருஷ்ணன் said...
    Sir,I have send a Tamil Typewriting Tool.
    Did you received it? Is it useful.///

    No, Not yet!

    ReplyDelete
  79. /////கூடுதுறை said...
    //நவநீத்(அ)கிருஷ்ணன் said...
    Sir,I have send a Tamil Typewriting Tool. Did you received it? Is it useful.//
    இதற்கு லிங்க் கொடுத்தால் மாணவர்களுக்கும் பயன்படும் அல்லவா?
    ஒருவேளை வாத்தியார் பார்த்து சர்டிபிகேட் கோடுக்கவேண்டுமேன
    விருப்பிகிறார் போலும்/////

    It may be not like that! Don't worry, he will give the link!

    ReplyDelete
  80. ///////Sumathi. said...
    ஹலோ வாத்தியாரய்யா,
    //பெங்களூருக்கு வருகிறேன் ஜீகே! அப்பொது கப்பன் பார்க்கில்
    உட்கார்ந்து கலக்கிவிடுவோம். இப்போது நேரமில்லை!//
    சரி நீங்க எங்கள் ஊருக்கு வரும் போது உங்களை நான் சந்திக்கும்
    போது தெளிவு படுத்திக்கிறேன்.நன்றி.
    உங்கள் வரவை தெரிவியுங்கள்./////

    சரி, சகோதரி!

    ReplyDelete
  81. ///////கூடுதுறை said...
    //The main problem is we are in various places and also in various countries!//
    இது உண்மைதான். முதலில் கோவையில் வையுங்கள்...
    அதை பார்த்து வெளிநாடுவாழ் மாணவர்கள் வாத்தியாரை அழைக்கமாட்டார்களா
    என்ன?////

    அதைவிட சுலபமான வழி இருக்கிறது!
    நேரம் வரும்பொது அதைச் சொல்கிறேன்

    ReplyDelete
  82. //sp.vr.subbiah said...
    சரி, சட்டாம்பிள்ளை வருவதற்குள் எழுந்துவிடுங்கள். இல்லையென்றால்
    அவர் வேறு வந்து மொத்துவார்!//

    அவருக்கு ஏற்கனவே நான் ஐஸ் வைத்து விட்டேன், என்னை மட்டும் மொத்த மாட்டார்

    ReplyDelete
  83. //கல்கிதாசன் said...
    என்ன விமல் அடி பலமோ?
    (நேற்று எனக்கும் சேர்த்து மொத்து விழுவதற்குள் நான் எஸ்கேப் ஆயிட்டன்)//

    எல்லாம் விவரமா தான்யா இருக்கான்வே

    ReplyDelete
  84. //sp.vr.subbiah said...
    ஏன் ஸ்வாமி (ஞாபகப்) படுத்துகிறீர்கள்?
    நானும் அவரும் சினேகாவை மறந்திருந்தாலும் நீங்கள் விடமாட்டீர்கள் போலிருக்கே?//

    சரியாத்தான் சொன்னீர்கள் வாத்தியரே, நமல யாரும் விட மாட்டார்கள் போலிருக்கே...:-(((

    ReplyDelete
  85. //கல்கிதாசன் said...
    டும்.. டும்.. டும்.. இதனால் எல்லோருக்கும் அறிய தருவது என்னவென்றால், வாத்தியார் கூடிய சீக்கிரம் சொந்த செலவில சூனியம் வச்சிக்க போறார் .. டும் ... டும் ... டும்.//

    என்னைய சொல்லலனு நினைக்குறேன்...

    ReplyDelete
  86. //////கல்கிதாசன் said...
    /////வகுப்பறை மாணவர்களின் சந்திப்பு ஒன்றை ஏற்படுத்தலாம் என்று உள்ளேன்.
    அப்போது உங்கள் ஜாதகத்தைக் கொண்டு வாருங்கள். பார்த்துப் பலன் சொல்கிறேன்!/////
    டும்.. டும்.. டும்.. இதனால் எல்லோருக்கும் அறிய தருவது என்னவென்றால், வாத்தியார்
    கூடிய சீக்கிரம் சொந்த செலவில சூனியம் வச்சிக்க போறார் .. டும் ... டும் ... டும்./////

    என் செலவில் என்றாலும் சரி, பிறர்வைத்தாலும் சரி, சூன்யம் என்னை ஒன்று செய்யாது!
    ஏன் பக்கத்தில்கூட நெருங்காது! பழநி அப்பனின் பக்தன் நான்!

    ReplyDelete
  87. This comment has been removed by the author.

    ReplyDelete
  88. பழநி அப்பனின் பக்தனுக்கு நான் தீங்கு நினைப்பேனா. நான் தினமும் கும்பிடும் அவங்க அண்ணன் விநாயகர் என்னை கோவிச்சுக்குவாரு.

    ஏதோ கஷ்டப்பட போறீங்களே என்று சும்மா சொன்னேன் :-)))))).
    (ஜோதிடம் தெரியாதவர்களிடம் பலன் சொல்லலாம். அரைகுறை ஜோதிடம் தெரிந்தவர்களிடம் பலன் சொல்லி திருப்திபடுத்துவது ரொம்ப கஷ்டம். என்னையும் சேர்த்து.)

    ReplyDelete
  89. “தேவதை சொன்னது, உன்னோட நேர்மையை மெச்சினேன்.. இந்தா உன் இரும்பு கோடாலியும்,கூடவே தங்க/வெள்ளி கோடாலியும்”-கதை.

    விமல் தம்பி,வகுப்பு அறையிலே ரொம்ப குறும்பு பண்ணினா அப்புறம் தேவதை உங்களுக்கு ப்ரியா மணி, சிநேகா,வடிவுக்கரசி,காந்திமதி நாலு பேரையுமே கொடுத்திடும்.. ஜாக்கிரதை!! ;-))

    கல்கிதாசரே, பசங்க உங்க வாய கிளறிட்டு வாத்தியார் வரும் போது ஓடியே பூடுவாங்க.. அன்னிக்கு அப்படிதான் நான் மாட்டிக்கிட்டேன்.. ஊருக்கு இளைச்ச பிள்ளையார் கோயில் ஆண்டியா.. ‘எல்லாம் இந்த தமாம் பாலாவால வந்ததுன்னு சொல்லி.. வாத்தியார்.. மொத்தி விட்டார் :((

    ஆபிஸ்ல வேலை செய்யும் போது ஒரே லூட்டியா இன்னிக்கு பின்னூட்டமா வருது.. இது என்ன பின்னோட்டமா? எல்லாரும் சும்மா.. பின்னிட்டாங்க!

    வாத்தியாரே ஏதாவது ‘வீடியோ கான்பரன்ஸிங்’ ஐடியா வச்சுருக்கீங்களா?

    நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா
    நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜானு சொல்றீங்களா? :)))

    ReplyDelete
  90. தமாம் பாலா (dammam bala) said........
    /////கல்கி தாசரே, பசங்க உங்க வாய கிளறிட்டு வாத்தியார் வரும் போது ஓடியே பூடுவாங்க.. அன்னிக்கு அப்படிதான் நான் மாட்டிக்கிட்டேன்.. ஊருக்கு இளைச்ச பிள்ளையார் கோயில் ஆண்டியா.. ‘எல்லாம் இந்த தமாம் பாலாவால வந்ததுன்னு சொல்லி.. வாத்தியார்.. மொத்தி விட்டார் :((/////

    வாத்தியார் மொத்துறவரைக்கும் நிக்கிறதில்லை. அதுக்குள்ளே எஸ்கேப். கிழமைக்கு ஒரு பாடம் மட்டும் நடக்குறதால மாணவர்கள் வகுப்பறையில் அரட்டை அடிச்சு கொண்டிருக்கிறார்கள். வேற எங்க போறது. இன்னிக்கு வாத்தியாருக்கு கொஞ்சம் கோவம் வந்திருச்சு.

    /////நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா
    நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜானு சொல்றீங்களா? :)))//////

    இது இன்னாத்துக்கு?

    ReplyDelete
  91. //தமாம் பாலா (dammam bala) said...
    விமல் தம்பி,வகுப்பு அறையிலே ரொம்ப குறும்பு பண்ணினா அப்புறம் தேவதை உங்களுக்கு ப்ரியா மணி, சிநேகா,வடிவுக்கரசி,காந்திமதி நாலு பேரையுமே கொடுத்திடும்.. ஜாக்கிரதை!! ;-))//


    குறும்பு செய்வது ஒரு தவறா? (எதுக்கும் ஒரு நல்ல டாக்டர போய் பார்க்கணும்)

    எனக்கு தங்க கோடாலியும் வேண்டாம், இரும்பு கோடாலியும் வேண்டாம். ஆளை விட்டா போதும் (இப்படியும் ஒரு தேவதையா எனக்கு மட்டும் சாபம் கொடுக்க)

    ReplyDelete
  92. /////கல்கிதாசன் said...
    பழநி அப்பனின் பக்தனுக்கு நான் தீங்கு நினைப்பேனா.
    நான் தினமும் கும்பிடும் அவங்க அண்ணன் விநாயகர்
    என்னை கோவிச்சுக்குவாரு.
    ஏதோ கஷ்டப்பட போறீங்களே என்று சும்மா சொன்னேன் :-)))))).
    (ஜோதிடம் தெரியாதவர்களிடம் பலன் சொல்லலாம்.
    அரைகுறை ஜோதிடம் தெரிந்தவர்களிடம் பலன் சொல்லி திருப்திபடுத்துவது
    ரொம்ப கஷ்டம். என்னையும் சேர்த்து.)///

    அதென்னவோ உண்மைதான் கல்கியாரே!

    ReplyDelete
  93. /////தமாம் பாலா (dammam bala) said...
    “தேவதை சொன்னது, உன்னோட நேர்மையை மெச்சினேன்..
    இந்தா உன் இரும்பு கோடாலியும்,கூடவே தங்க/வெள்ளி கோடாலியும்”-கதை.
    விமல் தம்பி,வகுப்பு அறையிலே ரொம்ப குறும்பு பண்ணினா அப்புறம்
    தேவதை உங்களுக்கு ப்ரியா மணி, சிநேகா,வடிவுக்கரசி,காந்திமதி நாலு
    பேரையுமே கொடுத்திடும்.. ஜாக்கிரதை!! ;-))
    கல்கிதாசரே, பசங்க உங்க வாய கிளறிட்டு வாத்தியார் வரும்
    போது ஓடியே பூடுவாங்க.. அன்னிக்கு அப்படிதான் நான் மாட்டிக்கிட்டேன்..
    ஊருக்கு இளைச்ச பிள்ளையார் கோயில் ஆண்டியா.. ‘எல்லாம் இந்த
    தமாம் பாலாவால வந்ததுன்னு சொல்லி.. வாத்தியார்.. மொத்தி விட்டார் :((
    ஆபிஸ்ல வேலை செய்யும் போது ஒரே லூட்டியா இன்னிக்கு
    பின்னூட்டமா வருது.. இது என்ன பின்னோட்டமா? எல்லாரும் சும்மா..
    பின்னிட்டாங்க!
    வாத்தியாரே ஏதாவது ‘வீடியோ கான்பரன்ஸிங்’
    ஐடியா வச்சுருக்கீங்களா?
    நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா
    நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜானு சொல்றீங்களா? :)))////

    வீடியோ கான்பரன்ஸிங் இல்லை! வேறு ஒரு யோசனை உள்ளது
    பின்னால் சொல்கிறேன்

    ReplyDelete
  94. //////கல்கிதாசன் said...
    தமாம் பாலா (dammam bala) said........
    /////கல்கி தாசரே, பசங்க உங்க வாய கிளறிட்டு வாத்தியார்
    வரும் போது ஓடியே பூடுவாங்க.. அன்னிக்கு அப்படிதான் நான்
    மாட்டிக்கிட்டேன்.. ஊருக்கு இளைச்ச பிள்ளையார் கோயில்
    ஆண்டியா.. ‘எல்லாம் இந்த தமாம் பாலாவால வந்ததுன்னு
    சொல்லி.. வாத்தியார்.. மொத்தி விட்டார் :((/////
    வாத்தியார் மொத்துறவரைக்கும் நிக்கிறதில்லை.
    அதுக்குள்ளே எஸ்கேப். கிழமைக்கு ஒரு பாடம் மட்டும்
    நடக்குறதால மாணவர்கள் வகுப்பறையில் அரட்டை அடிச்சு
    கொண்டிருக்கிறார்கள். வேற எங்க போறது.
    இன்னிக்கு வாத்தியாருக்கு கொஞ்சம் கோவம் வந்திருச்சு.
    /////நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா
    நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜானு சொல்றீங்களா? :)))//////
    இது இன்னாத்துக்கு?//////

    வாத்தியாருக்குக் கோபம் வராது!

    ReplyDelete
  95. /////கோவை விமல்(vimal) said...
    //தமாம் பாலா (dammam bala) said...
    விமல் தம்பி,வகுப்பு அறையிலே ரொம்ப குறும்பு பண்ணினா
    அப்புறம் தேவதை உங்களுக்கு ப்ரியா மணி, சிநேகா,வடிவுக்கரசி,
    காந்திமதி நாலு பேரையுமே கொடுத்திடும்.. ஜாக்கிரதை!! ;-))//
    குறும்பு செய்வது ஒரு தவறா? (எதுக்கும் ஒரு நல்ல டாக்டர போய்
    பார்க்கணும்)
    எனக்கு தங்க கோடாலியும் வேண்டாம், இரும்பு கோடாலியும்
    வேண்டாம். ஆளை விட்டா போதும் (இப்படியும் ஒரு தேவதையா
    எனக்கு மட்டும் சாபம் கொடுக்க)/////

    Silence Please!
    பதிலுக்குப் பதில் பேசக்கூடாது!
    கல்கி, பாலா - இருவருமே உங்களைவிட வயதில் மூத்தவர்கள்
    மரியாதை கொடுக்கவும்!

    ReplyDelete
  96. //SP.VR. SUBBIAH said...

    Silence Please!
    பதிலுக்குப் பதில் பேசக்கூடாது!
    கல்கி, பாலா - இருவருமே உங்களைவிட வயதில் மூத்தவர்கள்
    மரியாதை கொடுக்கவும்!//

    சாரி, கை நீண்டு விட்டது (தட்டசும் பொழுது)

    கல்கி, பாலா மன்னிக்கவும்...

    இனி நான் அமைதி பூங்கா ஆகா போகிறேன்

    ReplyDelete
  97. ( கட்ட குரலில் ) சரி.... சரி... இனிமேல் இப்படி எல்லாம் நடந்துக்காதீங்க என்ன..

    ( நாலு பேருக்கு மத்தியில் வாத்தியார் நம்மள பெரியமனுசன் எண்டு சொல்லி புட்டாருல. அதுக்குதான் இந்த பில்ட் அப்பு.)

    ReplyDelete
  98. /////கோவை விமல்(vimal) said...
    //SP.VR. SUBBIAH said...
    Silence Please!
    பதிலுக்குப் பதில் பேசக்கூடாது!
    கல்கி, பாலா - இருவருமே உங்களைவிட வயதில் மூத்தவர்கள்மரியாதை கொடுக்கவும்!//
    சாரி, கை நீண்டு விட்டது (தட்டசும் பொழுது)
    கல்கி, பாலா மன்னிக்கவும்...
    இனி நான் அமைதி பூங்கா ஆகா போகிறேன்/////

    ////ஆகா போகிறேன்////

    ஆகா போகிறீரா?:-)))))

    ReplyDelete
  99. /////கல்கிதாசன் said...
    ( கட்ட குரலில் ) சரி.... சரி... இனிமேல் இப்படி எல்லாம் நடந்துக்காதீங்க என்ன..
    ( நாலு பேருக்கு மத்தியில் வாத்தியார் நம்மள பெரியமனுசன் எண்டு சொல்லி புட்டாருல.
    அதுக்குதான் இந்த பில்ட் அப்பு.)

    அப்பு இல்லை அப்! Not appu!: it shoud be Up:-))))

    ReplyDelete
  100. எனக்கு எதுக்கு இந்த ஆப்பு..

    ReplyDelete
  101. I am not going to type in Tamil anymore.

    ReplyDelete
  102. ///////கல்கிதாசன் said...
    எனக்கு எதுக்கு இந்த ஆப்பு.???///

    வாத்தியார் வைப்பாரா மாணவருக்கு ஒரு ஆப்பு?
    வாத்தியாரின் அன்பை மறப்பதால் என்ன சிறப்பு?

    ReplyDelete
  103. //////கல்கிதாசன் said...
    I am not going to type in Tamil anymore.

    நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளாமல் ஏன் ஒரு கடுப்பு?
    கல்கிதாசரே தமிழுக்கு ஏன் கொடுத்தீர் ஒரு விடுப்பு?

    ReplyDelete
  104. பின்னூட்டத்தில் தெரிகிறது வாத்தியார் சுறுசுறுப்பு
    இப்படி பின்னூட்டம் இல்லையெனில் ஏது பரபரப்பு
    வாத்தியாரை வெறுத்துவிட்டால் வரமுடியுமா வகுப்பு
    தமிழையே நான் மறந்துவிட்டால் எனக்கல்லவா இழப்பு.

    ( ஹி.. ஹி.. சும்மா ட்ரை பண்ணி பாத்தேன் )

    ReplyDelete
  105. /////பின்னூட்டத்தில் தெரிகிறது வாத்தியார் சுறுசுறுப்பு
    இப்படி பின்னூட்டம் இல்லையெனில் ஏது பரபரப்பு
    வாத்தியாரை வெறுத்துவிட்டால் வரமுடியுமா வகுப்பு
    தமிழையே நான் மறந்துவிட்டால் எனக்கல்லவா இழப்பு.

    ( ஹி.. ஹி.. சும்மா ட்ரை பண்ணி பாத்தேன் ) /////

    சுறுசுறுப்பைத் துறந்துவிட்டால் இல்லை ஒரு சிறப்பு
    சிறப்பு இல்லையென்றால் வருமோ ஒரு அழைப்பு!
    பின்னூட்டம் இல்லையென்றால் பதிவிற்கு ஏது மதிப்பு?
    தன்முயற்சி இல்லையென்றால் ஏது ஒரு பிழைப்பு?

    ReplyDelete
  106. தமிழை மறந்தேனென சொன்னதனால் கிடைத்ததிந்த வாய்ப்பு
    ஆனாலும் தமிழனாக பிறந்ததனால் எனக்குள் ஒரு இறுமாப்பு
    தமிழை வெறுப்பவர்கள் மீது மட்டும்தான் எனக்கு ஒரு கசப்பு
    இறைவன் அருளால் என்றும் நிலைத்திருக்கும் நம் இந்த நட்பு

    ReplyDelete
  107. /////////கல்கிதாசன் said...
    தமிழை மறந்தேனென சொன்னதனால் கிடைத்ததிந்த வாய்ப்பு
    ஆனாலும் தமிழனாக பிறந்ததனால் எனக்குள் ஒரு இறுமாப்பு
    தமிழை வெறுப்பவர்கள் மீது மட்டும்தான் எனக்கு ஒரு கசப்பு
    இறைவன் அருளால் என்றும் நிலைத்திருக்கும் நம் இந்த நட்பு////

    பின்னூட்டம் 107ஐத் தாண்டிவிட்டது; போதும் நம் குறும்பு!

    ReplyDelete
  108. நடுநிசிவரை முழித்திருந்தால் ஏற்படும் உங்களுக்கு களைப்பு.
    நீங்கள் நீண்ட சுகத்துடன் இருக்கவேண்டும் என்பதே என் எதிபார்ப்பு.
    (த எண்டு )

    ReplyDelete
  109. தசரே, வாத்தியரே ஒரு டி. ராஜேந்தர் படம் பார்த்த எஃபெக்ட்

    ReplyDelete
  110. கல்கிதாசன் said...
    நடுநிசிவரை முழித்திருந்தால் ஏற்படும் உங்களுக்கு களைப்பு.
    நீங்கள் நீண்ட சுகத்துடன் இருக்கவேண்டும் என்பதே என் எதிபார்ப்பு.
    (த எண்டு )////

    அதையெல்லாம் பழநி அப்பன் பார்த்துக்கொள்வார்! கவலை வேண்டாம்!

    ReplyDelete
  111. ////கோவை விமல்(vimal) said...
    தசரே, வாத்தியரே ஒரு டி. ராஜேந்தர் படம் பார்த்த எஃபெக்ட்/////

    சிம்பு படம் பார்த்த எஃபெக்ட் என்று சொல்லியிருக்கலாம்:‍)))

    ReplyDelete
  112. Madhippirkkuriya Iyya,

    Enadhu jadhakatthil, budha baghavan irukkum idam kanni enru kanippori (idughayil ulla)kaanbikkinradhu. AAnaal, jadhaka kurippu puthakathil, budhanin irukkum rashi simmam enginradhae. edhu sari/thavaru enru kulappam irukkindradhu.

    Thavir, enakku 5m idathil sukranum , raghuvum serndhirukkinranar. Midhuna lagnam.
    Nadappu dhasa ragu ,buthi ragu.

    Palan yevvidham amayum?

    Mikka Nanri,
    Anbudan,
    kandhiah

    ReplyDelete
  113. /////Blogger kandhiah said...
    Madhippirkkuriya Iyya,
    Enadhu jadhakatthil, budha baghavan irukkum idam kanni enru kanippori (idughayil ulla)kaanbikkinradhu. AAnaal, jadhaka kurippu puthakathil, budhanin irukkum rashi simmam enginradhae. edhu sari/thavaru enru kulappam irukkindradhu.//////

    புதன் ஒவ்வொரு ராசியிலும் சுமார் 30 நாட்கள் இருந்து விட்டு அடுத்த ராசிக்குச் செல்லும். அவ்வாறு மாறும் சமயத்தில் பிறப்போர்க்கு (That is border births) இருவிதமாக புதன் இருக்கும்படியான ஜாதகக் குறிப்புக்கள் கிடைக்கலாம். அதற்குக்
    காரணம், இருவிதமான பஞ்சாங்கள் உள்ளன. ஜோதிடர்கள் வாக்கியப் பஞ்சாங்கம் என்பார்கள். கம்ப்யூட்டர்கள் திருக்கணித அடைப்படையில் இயங்கும். ஆகவே அந்த வித்தியாசம். நீங்கள் கணினி கொடுத்த ஜாதகத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அது சரியாக இருக்கும்!

    ////Thavir, enakku 5m idathil sukranum , raghuvum serndhirukkinranar. Midhuna lagnam. Nadappu dhasa ragu ,buthi ragu. Palan yevvidham amayum?//////

    ராகுதிசை மிக்ஸட் ரிசல்ட்! நன்மையும் தீமையும் கலந்த பலன்கள்!

    ReplyDelete
  114. ஐயா
    ஐந்தாம் இடம், பிள்ளைகள் ஸ்தானம் , How to determine சாதகர் how many kids ? and whether Boy or Girl (is it posible)?

    ReplyDelete
  115. ////singaiSuri said...
    ஐயா
    ஐந்தாம் இடம், பிள்ளைகள் ஸ்தானம் , How to determine சாதகர் how many kids ? and whether Boy or Girl (is it posible)?/////

    வழிமுறைகள் உள்ளன. புடம் போட்டுப் பார்ப்பதாகச் சொல்வார்கள். மண்டையைச் சுற்றி மூக்கைத் தொடும் செயல் அது:தலை சுற்றும். ஆகவே குழந்தை பிறந்தால் போதுமே! அது ஒன்றாக இருந்தால் என்ன? அல்லது குசேலருக்குப் பிரந்ததைப் போல 27 ஆக இருந்தால் என்ன?
    இரண்டிற்கு மேல் எப்போதும் வேண்டாம் என்று அரசு பரிந்துரைக்கிறது
    அதற்கும் செவிமடுங்கள்!
    அதற்கான் விதிகளைக் கீழே கொடுத்துள்ளேன். முடிந்தால் உங்கள் ஜாதகத்திற்கு, அந்த விதிகளின்படி பார்த்துக்கொள்ளுங்கள். என்னைப் பிறாண்டக் கூடாது!
    1
    see where is the lord of 5th house ie in which sign and house. 2. see the no. of planets aspecting the 5th lord and 5th house. 3. the Rasi which the 5th lord occupied and the lord of that rashi is aspected by how much planets. 4.See the 9th lord and house also. 5.see the 11th lord and the no of planets aspecting him because 11th house is showing no of childs in ur husbands life becuse this house is 5th from u r husbands house(7th) in ur horoscope.
    It is lengthy process. Moreover minus the aspect of melific planets like Sani, Ragu & Kethu, while counting the points
    ----------------------------------
    2
    In order to judge the progeny, first of all we see placement of lord of the 5th house, then we see if 5th house has any planet.
    Then we see, if it has an aspect of any planets, whether malefic or benefic. Then we have to analyse the strength of the 5th lord in the Navamsha Table alongwith lord of the 5th house in D-9.
    After analysing the above, we come to the Saptamsha Chart to see the strength of the 5th house.
    Then for Counting the number of children, we first see whether the Lagna is odd or even.
    If it is odd sign, then the number of children are counted first child from 5th house, 2nd. from 7th house, 3rd from 9th house 4th from 11th house and so on
    And if it is even sign, then counting starts from 9th house, 7th house, 5th house, 3rd house and so on.
    ------------------------------------
    3
    If 5th house is empty then we can see the aspect on the 5th house as moon and venus are the female planets,mercury and saturn are enuch planets and sun,mars and jupiter are male planets,if there is an aspect of male planets as we can say if there is an aspect of sun and jupiter and moon there then we can predict that there will be two sons and a daughter. There are also so many methods which i am trying to explain below. 1)Add longitude of jupiter,moon and sun.Find out rashis the sum represents.Find its navmasha.The number of navmasha represents the number of childern for example suppose the sum represents 14 degree 37 minutes and one navmasha is 3 degree 20 minutes and it represents 4 complete navmashas so number of childern will be four. 2)Add longitude of lords of 4th,5th and 9th and find the resultant rashi and navamsha as given above.The number of completed navamsha indicate the number of childern. 3)The number of childern will be equal to navmashas passed by 5th lord in a rashi. 4)The association of planets with the 5th lord also gives the clue of the number of childern,but these planets should not have debilition or cumbstion or positions in inimical signs or navamsas. 5)In ashtakavarga of jupiter,the number of points falling in 5th reconed from jupiter indicates the number of childern.The points of male planets show the male issue while the female planets indicate number of girls. 6)Taurus,Leo,Virgo and Scorpio falling as the ascendent,the moon sign or the 5th house show that the native may get only a very few issues. 7)Cancer as 5th house with mercury also indicates a limited number of childern.
    -------------------------------------------------------------

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com