மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

11.1.19

Astrology: Jothidam: Quiz: எந்த கடன் தீர்க்க என்னை நீ படைத்தாய் கண்ணா?


Astrology: Jothidam: Quiz: எந்த கடன் தீர்க்க என்னை நீ படைத்தாய் கண்ணா?

ஒரு பெண்ணின் ஜாதகத்தைக் கீழே கொடுத்துள்ளேன். அந்தப் பெண்ணிற்கு அவருடைய 36 வயது வரை திருமணம் ஆகவில்லை. அதற்குப் பிறகு ஆயிற்று. அது தனிக் கதை!

கேள்வி இதுதான். அதீதமான தாமதத்திற்கு ஜாதகப்படி என்ன காரணம்? ஜாதகத்தை அலசி அதை மட்டும் கண்டு பிடித்துச் சொல்லுங்கள்!!!!

சரியான விடை 13-1-2019  ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியாகும்!

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:


=======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14 comments:

  1. 1.laknathipathi 8til maraive.
    2.7th lord in 8th with theipirai chandran.
    3.2nd house occupied by sani and both sani and sevai (mutual 2 & 8 houses paarvai.)
    amsathil raguvodu sevai serkai.
    4.kalathira karagan neecham. and with sani paarvai and with eighth lord.
    5.puthira karagan with sani and getting sevai aspect.
    2nd and 8th house affected. may be in puthan dasa marriage would have hapened.
    I am learning student only, any mistakes please correct me.
    thanks &regards
    ezhil

    ReplyDelete
  2. வணக்கம்

    தாமத திருமணத்திற்கான காரணம்

    இரண்டாம் இடத்தில மாந்தி உடன் சனி சேர்ந்து திருமணத்தை தாமத படுத்தியதுடன் , லக்கின அதிபதி எட்டாம் இடத்தில இடத்தில மறைந்து அதை மேலும் தாமத படுத்தினார்.

    மேலும் நவாம்ச கட்டத்தில் கேது ராகு இரண்டு மற்றும் எட்டில் அமர்ந்து லக்கின அதிபதியும் நவாம்ச கட்டத்தில் எட்டில் அமர்ந்து அதை மேலும் தாமத படுத்தினார்.

    களத்திர காரகன் நீச பங்கம் பெற்றதாலும் குரு பார்வை இரண்டாம் இடத்தில அமைந்ததாலும் திருமணம் நடைபெற்றது .

    நன்றி

    ப . சந்திரசேகர ஆசாத்

    ReplyDelete
  3. ஜாதகி 13 ஸெப்டம்பர் 1960 அன்று மதியம் 12.30 மணியளவில் பிறந்தவர். பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக் கொண்டேன்.

    ஜாதகத்தில் ராசி அம்சம் இரண்டிலும் செவ்வாய் எட்டாம் இடத்தில் இருந்து கடுமையான செவ்வாய் தோஷ ஜாதக‌ம் ஆகிறது. ராசிக் கட்டத்தில் குடும்ப ஸ்தானத்தில் மாந்தி இருந்து குடும்பம் அமைவதற்குத் தடை ஏற்படுத்தியது.

    இந்த ஜாதகத்தில் நவாம்சம் முக்கியத்துவம் பெறுகிறது. நவாம்ச லக்கினத்தில் 7ம் அதிபன் புதன் அமர்ந்து நீசம் பெற்றது. 7ம் இடத்தில் சனி அமர்ந்தது இவையும் திருமணம் தாமதம் ஆனதற்குக் காரணங்கள்.பாவபல அட்டவணையில் 7ம் இடம் ஒன்பதாவது இடத்தையே பெறுகிறது.

    ReplyDelete
  4. இப்பெண்ணின் ஜாதகத்தில் 8ல் மறைந்த லக்கினாதிபதியும், ராகு செவ்வாய் சேர்க்கை பெற்ற யோக காரகர்கள் சூரிய, சந்திரரும் ஜாதகிக்கு உரிய வயதில் திருமணம் வழங்க ஒத்துழைப்பு நல்கவில்லை. மனோகாரகன் சந்திரன் பாதிக்கப்பட்டு ஜாதகியின் உளநிலை பக்குவத்தை பாதித்திருப்பார்.
    கூடவே 25 வயதுகளில்ன் மேல் வந்த ஏழரை சனி மேலும் தாமதத்தை கொடுத்தாலும், கொடுப்பவர் சனியாகவே((தசை) நின்று சுக்கிர புத்தியில் திருமணத்தை நடத்தியிருப்பார்.

    பொதுவாக திருமணத்தை தரும் குரு தசை இவருக்கு சாதகமில்லாமல் போனதன் விளக்கத்தினை வாத்தியாரிடம் எதிர்பார்க்கின்றேன்.

    ReplyDelete
  5. சார் வணக்கம்
    இந்த ஜாதகத்தில் சுக்கிரன் சனியின் பார்வையை பெற்றார் அப்புறம் 8 ஆம் அதிபதி புதன் கூட கூட்டு 9 அதிபதி 8 இல செவ்வாயோடு கூட்டு
    செவ்வாய் ஆறாம் அதிபதி சந்தரன் சனி பார்வையை பெற்றார் லக்கான அதிபதி செவ்வாய் சனி பார்வையை பெற்றார் மேலும் தன குடும்ப இஸ்தானம் மந்தி சனி இருக்குது இரண்டாம் அதிபதி தசை 7 அதிபதி தசை 11 அதிபதி தசை கல்யாணம் கொடுக்கும் நவாம்சம் லக்கனத்தில் புதன் நீச்சம் அவர் 7 அதிபதி 8 செவ்வாய் சந்திரன் ரக்து இருக்குது பெண்களுக்கு தாலி க்ரீன் குரு ராசி நவாம்சம் இரண்டிலும் கட்டுப்போய்டர் அதனால் திருமணம் ரொம்ப தாமதம்

    ReplyDelete
  6. அய்யா வணக்கங்கள்!
    ஜாதகர் 13-09-1960 அன்று மதியம் 12-30 மணியளவில் விருச்சிக லக்கினத்தில் பிறந்தவர்.
    லக்கினாதிபதி செவ்வாய் 8ல் அமர்ந்தது குற்றம்.
    லக்கினத்திற்க்கு 2ல் சனி பகவான் ஆட்சியான குருவுடன் அமர்வு.செவ்வாயின் பார்வை 2மிடத்தின் மீது பட்டு குடும்பத்தை கெடுக்கும் அமைப்பு.
    7மதிபன் சுக்கிரன் நீசம்,மற்றும் விருச்சிக லக்கின பகைவரான புதனுடன் அமர்ந்து சனியின் பார்வையை பெற்று கெட்டுள்ளார்.
    பாக்கியாதிபதியான சந்திரன் பாதகாதிபதியுமாகி தன் வீட்டிற்க்கு விரய வீடான 8மிடத்தில் அமர்ந்து 2மிடத்தை பாதிக்கின்றார்.
    சந்திரன் சனி பார்வை புனர்பூ தோஷம். 2 மற்றும் 8 மிடங்கள் கெட்டதால் மண வாழ்வு சுகமில்லை.
    ராசிக்கு 7ல் சனி அமர்ந்து செவ்வாயின் பார்வை திருமண பாதிப்பு தரும்.ராஜ கிரகமான சூரியன் ஆத்மகாரகன் ராகுவுடன் இணைந்து கெட்டுள்ளதால் வாழ்வு சுகமில்லை.
    -பொன்னுசாமி.

    ReplyDelete
  7. புதிர் : எந்த கடன் தீர்க்க என்னை நீ படைத்தாய் கண்ணா?

    ஆசிரியருக்கு வணக்கம்.

    விருச்சிக லக்கினம், மிதுன ராசி ஜாதகி.
    அவரின் திருமணம் அதீதமான தாமதமான‌திற்கு ஜாதகப்படி என்ன காரணம்?
    1) லக்கினாதிபதி செவ்வாய் 8ல் மறைவு. பாக்கியாதிபதி சந்திரனும் எட்டில் மறைவு.
    2) களத்திராதிபதியும் களத்திர காரகனுமான சுக்கிரன் கன்னியில் நீசம் அடைந்து அட்டமாதிபதி புதனுடன் கூட்டு.
    3) களத்திராதிபதி சுக்கிரனின் மேல் சனியின் 10ம் தனிப் பார்வை.

    வாத்தியாரின் பதிலை எதிர் நோக்கும்,

    இரா.வெங்கடேஷ்.

    ReplyDelete
  8. வணக்கம் ஐயா
    பிறந்த தேதி : 13 -செப்-1960 பகல் 12 மணி
    விருச்சிக லக்கின ஜாதகர். லக்கினாதிபதியும் பாக்கியாதிபதியும் கிரஹ யுத்தம் பெற்று 8 இல் மறைவு. இருவரையும் சனி பார்க்கிறார். ஜாதகர் முடிவு எடுக்க சிரமப்படுவார்.

    7 குரிய சுக்ரன் 11 -இல் நீச பங்கம் பெற்றாலும் 8 குரிய புதனின் சேர்க்கை பெற்று சனியின் பார்வையும் பெறுகிறார். மேலும் புதன் அல்லது சுக்ர திசை ஜாதகருக்கு பின்னாளில் தான் வருகிறது.

    குடும்பாதிபதி குரு ஆட்சி பெற்றாலும் சனியும் மாந்தியும் சேர்ந்து இரண்டாமிடத்தை(21 பரல்) வலுவிழக்க செய்தது.

    நவாம்சத்தில் கூட சனி 7இல் அமர்ந்து, நீசம் பெற்ற 7 -மாதிபதி புதனை பார்க்கிறார்.

    கிட்டத்தட்ட சனியே திருமண தாமதத்திற்கு காரணம். விந்தை என்னவென்றால் சனி பெற்ற சுய பரல் 0 .

    யோகாதிபதி குரு திசை ராகு புத்தியில் 37 வயதில் திருமணம். 10 இல் சுக்ர சாரம் பெற்ற ராகு திருமண யோகம் தந்திருக்க கூடும்.

    நன்றி.

    ReplyDelete
  9. தாமதத் திருமணத்தின் காரணங்கள்: களஸ்திர காரகனும், களஸ்திர ஸ்தான அதிபதியுமான சுக்கிரன் நீசம், சனி, செவ்வாயின் பார்வையில். நீச பங்க ராஜயோகத்தை உச்ச புதன் அளிப்பதாகத் தோன்றினாலும், புதன் அம்சத்தில் நீசம். லக்னாதிபதி, சந்திரனுடன் இணைந்து, குரு பார்த்து, சுப வலுப் பெற்றாலும், அவர் 8-ல் மறைவு. - ஃபெர்னாண்டோ

    ReplyDelete
  10. திருமணத்தில் தாமதத்திற்கு காரணம்: களஸ்திர ஸ்தானாதிபதியும், காரகனுமான சுக்கிரன் நீசம். அவர் நீசபங்க ராஜயோகம் பெற்றதாகத் தோன்றினாலும், அந்த யோகத்திற்கு காரணமான உச்ச புதன் அம்சத்தில் நீசம். சுக்கிரன் மேல் அஷ்டமத்தில் அமர்ந்த செவ்வாயின் பார்வையும், சனியின் பார்வையும். லக்னாதிபதி செவ்வாய், சந்திரனுடன் இணைந்து, குருவின் பார்வையில் சுப வலுப் பெற்றாலும், 8-ல் மறைவு.
    - ஃபெர்னாண்டோ

    ReplyDelete
  11. அன்புள்ள வாத்தியார் அவர்களிற்கு அன்பு வணக்கங்கள்
    புதிரிற்கான விடை
    ஜாதகர் 13-09-1960 பிறந்துள்ளார். அவரது யோகங்கள் வருமாறு
    • 8ம் வீட்டில் – சந்திர மங்கள யோகம்
    • 11ம் வீட்டில் – புத ஆதித்ய யோகம்
    1. லக்னாதிபதி 8ம் வீட்டில்
    2. குடும்ப ஸ்தானத்தில் ஆட்சி குருவும், சனியும் மாந்தியுடன்.
    3. விரயாதிபதி சுக்கிரன் 11ம் வீட்டில் உச்ச புதனுடன் சேர்ந்து புத ஆதித்ய யோகம்
    4. 10ம் வீட்டில் சூரியன் ஆட்சி
    ஜாதகர் 36 வயதில் திருமணம் நடப்பதிற்கான காரணம்
    • ராசிக்கோ லக்கினத்திற்கோ 2,7,8ல் சனியோ செவ்வாயிருந்தால் தாமத திருமணம். இதன்படி லக்கினத்திற்கு 2ம் வீட்டில் சனி, 8ம் வீட்டில் செவ்வாய். செவ்வாயும் சனியும் ஒருவரை ஒருவர் 7ம் பார்வையாக பாரக்கின்றனர்
    மேற் சொன்ன காரணத்திற்காக, ஜாதகரிற்கு கல்யாணம் 36வயதில் நடந்தது .
    அன்புடன்
    ராஜம் ஆனந்த்

    ReplyDelete
  12. Dear Subbiah Sir - This is my first post on your website and quizzes. Regarding the horoscope, i assumed she is born in Coimbatore, it would be great if you can provide location details for accuracy in the future.
    I believe she was born on September 13 1960, around 12.40 pm.

    7th lord and Kalathra karaka Venus is neecha, though he is in 11th with 11th lord Mercury in own house. To further damage, two natural malefic Sani and Mars(though lagna lord) aspecting this neecha Venus. But, Venus gets neecha bhanga raja yoga, so though marriage is delayed, she got married eventually.

    Other points:
    2nd lord kudumba stana lord Jupiter is with Sani and aspected by mars(6th lord).
    12 lord in neecha and 12th from own house.
    from moon, 7th lord jupiter in own house with 8th lord sani and aspected by 6th lord mars.
    Again in navamsa, Sani is in 7th, Venus is being aspected by sani and sun(6th lord as well). 7th lord Mercury is in neecha and aspected by Sani.
    She should have married when Jupiter Dasa started but because of above points, marriage is much delayed and finally she must have married in the fag end of Jupiter Dasa when Jupiter transits her 7th house(from moon)

    Thanks
    Vijay

    ReplyDelete
  13. - லக்கினாதிபதி எட்டில் (மறைவிடத்தில்)
    - பாதகாதிபதி (சந்திரன்) எட்டில்
    - குடும்ப ஸ்தானத்தில் (சனி, மாந்தி, - தாமதம் மற்றும் கெடுபலன், ஆயினும் குரு தன் வீட்டில், இரண்டாம் இடம், ஆதலால் குரு தசை முடியும் தருவாயில் திருமணம் நடந்தேறி இருக்க வாய்ப்பு உள்ளது)
    - மேற் கூறிய காரணங்கள் தான் தாமதத்திற்கு காரணம்.

    மேலதிக தகவல் -

    - ஜாதகரின் தாய் மற்றும் சகோதரருக்கு (சகோதரி யாகவும் இருக்கலாம்) விபத்து நடந்திருக்க அதிக வாய்ப்பு உள்ளது.

    ReplyDelete
  14. Iyya nan manavan than eppo than jothidam padikka arambichi erukkan.
    Nan soldrathu la thappu eruntha sry.
    1) lagnathipathi sevvai 8la maraiyurar.
    2) 2nd house la sani + manthi santhu erukku.
    3) 7m veetin athibathi sukkiran. Avara lagnathi pathitana sevvai 8il erunthu 4m parvaiya 11il erukkum sukkirana parkirar. Athu mattum ellama. Sani 2m veetil erunthu 10m parvaiya 11m veetil erukkum sukkirana parkirar.
    4) 2il erukkum guru 6m veetaiyum 8m veetaiyum (lagnathipathi) iyum parkirar.so lata marrage nadanthu erukkalam.thu


    Ethu right (or) wrong nu vathiyar than sollanum.

    Ethu yennoda 1st comment.

    Spelling mistake eruntha sry

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com