மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

9.7.18

வாழ்க்கை வாழ்வதற்கே என்று வாழ்வது எப்படி?


வாழ்க்கை வாழ்வதற்கே என்று வாழ்வது எப்படி?

சில அறிவுரைகள்!

1
☸எவ்வளவு நல்லது செய்தாலும் குறை சொல்வதற்கு ஆட்கள் உண்டு. எவ்வளவு குறை சொன்னாலும் நல்லது செய்வதற்கும் ஆட்கள் உண்டு.

☸முதியவர்களை மதித்தால் நாம் ஒழுங்காக வளர்க்கப் பட்டு இருக்கிறோம் என அர்த்தம்.

☸உங்களுக்கு சாமர்த்தியம் இருந்தால், அது பிறரை தாழ்த்துவதற்கு அல்ல, உயர்த்துவதற்கு உபயோக படுத்துங்கள்.

☸உன்னை அலட்சியப் படுத்துபவரிடம் நீ உரிமையாக பேசாதே. உன்னை புரிந்து உனக்கு உதவி செய்பவருக்கு நீயும் உதவியாக இரு.

☸எந்த  ஒரு விஷயத்தையும், அது எப்படி இருக்கிறதோ, அப்படியே நாம் பார்ப்பதில்லை. நாம் எப்படி இருக்கிறமோ, அப்படிப்  பார்க்கிறோம்.
----------------------------------------------------------
2
*எல்லாம் நன்மைக்கே* வாழ்க்கை வாழ்வதற்கே

🎡சோகம் என்பது கசப்பு மருந்து மாதிரி பட்டுனு மனதிற்குள் முழுங்கிட வேண்டும். சுகம் என்பது ஸ்வீட் மாதிரி பொறுமையா ருசித்து ரசிக்க வேண்டும்.

🎡நம்பினவங்க நம்மை நடுத் தெருவுல நிக்க வைக்கும் போதுதான் தோனும். "இனிமே யாரையும் நம்பக்கூடாது" என்று.

🎡இன்றைக்கு வேண்டுமெனில் நாம் கடினமாக உழைத்தது நமக்கு உதவாமல் நம்மை தோல்வியை சந்திக்க வைக்க நேர்ந்திருக்கலாம். ஆனால் என்றாவது ஒரு நாள் நம்மை வெற்றி பெறச் செய்யும்.

🎡வாழ்க்கை ஒரு நிமிடத்தில் மாறுமானு தெரியல. ஆனால் ஒரு நிமிடத்தில் எடுக்குற முடிவு நம்ம வாழ்க்கையையே மாத்தும்.

🎡கஷ்டத்தில் தோளை தட்டிக் கொடுக்க யாரும் இல்லை என்று கவலை கொள்வதை விட, கடந்து செல்லும் போது காலைத் தட்டி விட யாரும் இல்லையென்று நினைத்து சந்தோஷம் கொள்.
-----------------------------------------------------------------------
3
நல்லதே நடக்கும் எல்லாம் நன்மைக்கே

🤢தவறுகளை மன்னித்துப் பழகுங்கள். தவறு செய்தவனுக்கு நன்மையோ இல்லையோ. நமக்கு நல்லது. தலைவலி டென்ஷன் மனச்சோர்வு எதுவும் வராது.

🤢ஒரு செயலை செய்து முடிக்க தேவை புத்தி. அந்த செயல் தேவையானது தானா என்று நிர்ணயிப்பது மனம். இரண்டும் சேர்ந்து செயல் படும் பொழுது நிம்மதி கிடைக்கும்.

🤢கவலை மிகுந்த நினைவுகளைக் குழி தோண்டிப் புதைக்க வேண்டும். சிலையாக செதுக்கி வைத்துக் கொள்ளக் கூடாது. நீ என்ன செய்ய நினைக்கிறாயோ அது மிக சுலபம் என்று எண்ணிக் கொள், அது உண்மையிலே சுலபமாகி விடும்.

🤢நாம் வாழும் முறையில் தான் மறைந்திருக்கிறது நமக்கான மரியாதையும் கௌரவமும்.

🤢வெற்றி, தோல்வியைப் பற்றி சிந்திக்காதே. உன் பங்களிப்பை மட்டும் செய்து கொண்டிரு.
------------------------------------------------
4

*_எல்லாம் நன்மைக்கே_* வாழ்க்கை வாழ்வதற்கே

*பேசித் தீர்க்க முடியாத பிரச்சினைகள் என எதுவும் இல்லை. பேசவே கூடாது என்பது தான் பலருக்கு பிரச்சினை.

❇ஆபாசமாக உடையணிவதை 'நாகரீகமென' நினைக்கும் பெண்களும், பொறுக்கித் தனத்தை 'வீரமென' நினைக்கும் ஆண்களும் திருந்தும் வரை குற் றங்கள் குறையப் போவதில்லை.

❇உழைப்பு உடலை வலிமையாக்கும். துன்பங்கள் மனதை வலிமையாக்கும்.

❇உங்களை நீங்கள் முழுவதுமாக நம்பத் துவங்கும் போது உங்களின் வெற்றிப் பயணமும் துவங்கி விடுகிறது.

❇வெளியிலிருந்து எவ்வளவுதான் உத்வேகம் கிடைத்தாலும், உங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை, இருந்தால் மட்டுமே உங்களால் வெற்றி பெற முடியும்.
---------------------------------------------------------
5
எல்லாம் நன்மைக்கே வாழ்க்கை வாழ்வதற்கே

💥எதிர்பார்ப்பு இல்லாத வாழ்க்கை வாழ்வது கஷ்டம் தான். ஆனால் அவ்வாறு வாழ்வதே இனிமையான வாழ்க்கைக்கு வழி.

💥நாம் உண்டு நம் வேலை உண்டு என்று இருந்தாலே போதும். பிரச்சினைகள் ஏதும் வராது.

💥பொறுமையாக இருங்கள் இன்று கிடைக்கவில்லை என்றாலும் கண்டிப்பாக ஒரு நாள் கிடைக்கும். நாம் செய்யும் நன்மைகளுக்கான பலன்கள்.

💥எந்தவொரு சூழ்நிலையையும் பரவாயில்லை என்று ஏற்றுக் கொள்பவர்கள். வாழ்வில் மிகுந்த பக்குவம் அடைந்தவர்கள்.

💥துன்பத்தில் இருந்து இன்பம், கவலையில் இருந்து மகிழ்ச்சி, ஏழ்மையில் இருந்து செல்வவளம், வீழ்ச்சியில் இருந்து வளர்ச்சி வரை, பிறப்பில் இருந்து இறப்பு வரை, ஒவ்வொரு நொடியும் புதிய
பாடத்தை, கற்று கொடுத்துக் கொண்டே தான் இருக்கும் வாழ்க்கை.
-------------------------------------------------------------------
6
வாழ்க்கை வாழ்வதற்கே *_எல்லாம் நன்மைக்கே_*

🌰பக்கத்து வீட்டுக் காரர்கள் மீது பொறாமைப் படாமல் வாழ்தலே, நிம்மதியான வாழ்க்கை வாழ வழி.

🌰உண்மையாய் இருப்பதால் தான் அதிகம் காயப் படுகிறோம். நேர்மையாய் இருப்பதால் தான் அதிகம் சோதிக்கப் படுகிறோம். உரிமையாய் இருப்பதால் தான் அதிகம் கோபப் படுகிறோம்.

🌰மனதில் ஒன்று வைத்து வெளியில் ஒன்று பேசுவதை விட, வெளிப் படையாகப் பேசி விடுதல் நல்லது.

🌰ஒருவரின் மௌனம் நம்மை பலவாறு சிந்திக்க வைக்கிறது. ஒரு வேளை இதுவாக இருக்குமா. இல்லை அதுவாக இருக்குமா என்று.

🌰நோயால் உடல் நலம் குன்றுவது போல, தீய எண்ணங்களால் மன நலமும் குன்றி விடுகிறது.

🌰🌰🌰🌰🌰🌰🌰🌰🌰🌰
எல்லாம் நன்மைக்கே வாழ்க்கை வாழ்வதற்கே
-------------------------------------------------------------------
படித்தேன்; பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
==========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

21 comments:

  1. Good morning sir very excellent thanks sir vazhga valamudan

    ReplyDelete
  2. உன்மை வாழ்க்கை வாழ்வதற்கே.உங்களுடைய இந்த பதிவு பல நினைவுகளை (வலியை) நினைவு படுத்துகின்றன

    ReplyDelete
  3. வணக்கம் ஐயா,மன நலத்திற்க்கு மற்றும் ஒரு டானிக்.நன்றி.

    ReplyDelete
  4. என்ன இது வாழ்க்கை என்ற எண்ணத்தில் வகுப்பிற்கு வந்தேன். வாத்தியார் councillor ஆனார்

    ReplyDelete
  5. வணக்கம் குருவே!

    *பேசித் தீர்க்க முடியாத பிரச்சினைகள் என எதுவும் இல்லை. பேசவே கூடாது என்பது தான் பலருக்கு பிரச்சினை.
    🌰உண்மையாய் இருப்பதால் தான் அதிகம் காயப் படுகிறோம். நேர்மையாய் இருப்பதால் தான் அதிகம் சோதிக்கப் படுகிறோம். உரிமையாய் இருப்பதால் தான் அதிகம் கோபப் படுகிறோம்.
    🌰மனதில் ஒன்று வைத்து வெளியில் ஒன்று பேசுவதை விட, வெளிப் படையாகப் பேசி விடுதல் நல்லது.
    பதிவு நன்றாக உள்ளது.அதிலிருந்து
    என்னை ஈர்த்த வரிகள், மேலேயுள்ளவை!

    ReplyDelete
  6. Respected Sir,

    Happy morning... Nice post...

    Thanks for sharing...Have a great day.

    Thanking you.

    With kind regards,
    Ravi-avn

    ReplyDelete
  7. ////Blogger kmr.krishnan said...
    Super Sir////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!

    ReplyDelete
  8. ////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir very excellent thanks sir vazhga valamudan/////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி சண்முகசுந்தரம்!!!!

    ReplyDelete
  9. ///Blogger சினிமா துகள்கள் said...
    உண்மை வாழ்க்கை வாழ்வதற்கே.உங்களுடைய இந்த பதிவு பல நினைவுகளை (வலியை) நினைவு படுத்துகின்றன/////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  10. ////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,மன நலத்திற்கு மற்றும் ஒரு டானிக்.நன்றி.////

    உண்மைதான்! நன்றி ஆதித்தன்!!!!

    ReplyDelete
  11. ///Blogger SELVARAJ said...
    என்ன இது வாழ்க்கை என்ற எண்ணத்தில் வகுப்பிற்கு வந்தேன். வாத்தியார் councillor ஆனார்////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி செல்வராஜ்!!!

    ReplyDelete
  12. ////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    *பேசித் தீர்க்க முடியாத பிரச்சினைகள் என எதுவும் இல்லை. பேசவே கூடாது என்பது தான் பலருக்கு பிரச்சினை.
    🌰உண்மையாய் இருப்பதால் தான் அதிகம் காயப் படுகிறோம். நேர்மையாய் இருப்பதால் தான் அதிகம் சோதிக்கப் படுகிறோம். உரிமையாய் இருப்பதால் தான் அதிகம் கோபப் படுகிறோம்.
    🌰மனதில் ஒன்று வைத்து வெளியில் ஒன்று பேசுவதை விட, வெளிப் படையாகப் பேசி விடுதல் நல்லது.
    பதிவு நன்றாக உள்ளது.அதிலிருந்து
    என்னை ஈர்த்த வரிகள், மேலேயுள்ளவை!/////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!!!!

    ReplyDelete
  13. ///Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... Nice post...
    Thanks for sharing...Have a great day.
    Thanking you.
    With kind regards,
    Ravi-avn/////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி அவனாசி ரவி!!!!

    ReplyDelete
  14. ///Blogger Nagendra Bharathi said...
    அருமை////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!

    ReplyDelete
  15. ////Blogger eswari sekar said...
    Super sir////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி அன்பரே!!!!

    ReplyDelete
  16. ////Blogger Rajkumar Periyasamy said...
    Very true and nice message../////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  17. Thank you sir,i felt happy to read the above topics

    ReplyDelete
  18. ////Blogger Subathra Suba said...
    Thank you sir,i felt happy to read the above topics////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com