மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

2.8.17

திட்டமிட்டே திசை தெரியாமல் போகிறோம்!


திட்டமிட்டே திசை தெரியாமல் போகிறோம்!

சொல்வது யார்? பேராசியரும், கவிஞருமான சொ.சொ.மீ.சுந்தரம் அவர்கள்.

கவியரசர் கண்ணதாசன் இவரைப் பற்றி சிலாக்கியமாகப் பேசுவார். சொ.சொ.மீ என்பதை சொல்லுக்குச் சொல் மீறும் சுந்தரம் என்று பெருமைப் படுத்திப் பேசுவார்.

அவருடைய உரை ஒன்றை காணொளி வடிவில் இன்று பதிவிட்டுள்ளேன். அனைவரும் கேட்டு மகிழுங்கள்!!!!

அன்புடன்
வாத்தியார்
-------------------------

====================================================
மேலதிகத் தகவல்கள்:

சொர்ணலிங்கம் செட்டியார், மீனாட்சி ஆச்சி இருவருக்கும் தேவகோட்டையில் 3.8.1942 -இல் மகனாக பிறந்தார் பேராசிரியர் 
சொ. சொ . மீ. சுந்தரம். 

தன் இளமைக் கல்வியை அழகப்பா கல்லூரி காரைக்குடியில் முடித்தார். அதன் பிறகு லயோலாக் கல்லூரி, பழனியாண்டவர் கல்லூரிகளில் வணிகவியல் பயிற்றுநராகப் பணியற்றிய இவர் பின்னாளில் சௌராஷ்டிரக் கல்லூரியில் வணிகவியல் பேராசிரியராக 41 ஆண்டுகள் பணியாற்றினார். தற்பொழுது மதுரையில் இல்லம் தோறும் பெரிய புராணம் என்ற அமைப்பின் கீழ் மாதந்தோறும் ஒவ்வொரு வீட்டிலும் பெரிய புராண விரிவுரை செய்து வருகிறார். 

இந்து சமயத்திற்கு பல தொண்டுகளைச் செய்து வரும் இவர் தன்னுடைய அறுபதாண்டு நிறைவு மணிவிழாவைத் திருவாசக விழாவாக நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தொண்டு பத்தாண்டுகளாக நடைபெற்று வருகிறது.

இவரின் சேவையைப் பாராட்டி இவருக்கு பல பட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பாவலர் மன்றம் இவருக்கு சொல்லோவியர் பட்டம், மதுரை பன்னிருத் திருமுறை மன்றம் இவருக்கு திருமந்திரச் சொல்மனி, காஞ்சி மகாசுவாமி டிரஸ்ட் இவருக்கு செந்தமிழ் பேரொளி, திருவாடுதுறை ஆதீனம் இவருக்கு தமிழாகமச் சிந்தைச்செல்வர் என்ற பட்டங்கள் கொடுத்து கௌரவித்துள்ளது.

இது தவிர பேராசிரியர் வ.சுப. மாணிக்கனார் விருப்பத்திற்கேற்ப இவர் எழுதிய பண்டிதமணி, பிள்ளைத் தமிழ் மேலைச்சிவபுரி சன்மார்க்க சபையினரால் 1991-இல் வெளிடப்பெற்றது. காஞ்சிப் பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் மீது இவர் எழுதிய திருநீறு விடுதூது 1977 - இல் வெளிவந்தது. இவர் அடியெடுத்துக் கொடுக்க கவியரசர் கண்ணதாசன் எழுதிய 'காமனை ஏன் எரித்தாய்' என்ற கவிதை 16.7.1981 குமுதம் இதழில் வெளிவந்தது.

இவரின் தமித்தொண்டைப் பாராட்டி மதுரை தமிழிசைச் சங்கம் பொற்கிழி ( ரூ. 25000) வழங்கியது. அதையொட்டி ஏழு நாட்கள் இவரின் சொற்பொழிவு தமிழ் இசைச் சங்கத்தில் நிகழ்ந்தது. மேலும் இவர் பதிப்பித்த கண்ணுடையம்மன் பள்ளு, நாட்டரசன் கோட்டையில் வெளிடப்பட்டது.

1998-இல் இறைவனடி சேர்ந்த இவரின் மனைவியின் நினைவாக இவர் எழுதிய இல்லக விளக்கு என்ற சிறு நூல் 1999-இல் வெளிவந்தது. இவருடைய ஆன்மீக இலக்கியப் பணியைப் பாராட்டி மதுரை இராமகிருஷ்ண மடம் 2012-இல் விவேகானந்தர் விருது வழங்கியது.
2012-இல் கோலாலம்பூரில் நடந்த அனைத்துலக முருகபக்தி மாநாட்டில் கலந்துக் கொண்டு உறையாற்றினார். வரும் தைப்பூசத்தை முன்னிட்டு ஆஸ்ட்ரோ விண்மீன் HD- இல் ஒளிபரப்பாகவுள்ள தைப்பூச நேரலையில், முருகன் சிறப்புகளைப் பற்றி இவர் பேசவுள்ளார். பல அறிய தகவல்களை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ளப் போகும் இவரைக் காணத்தவறாதீர்கள்.

சமயத்திற்கு இவர் ஆற்றிய பணி மேலும் தொடரட்டும்.

அவர் சிங்கையில் ஆற்றிய பல உரைகளில் ஒரு உரையின் கணொளியை உங்கள் பார்வைக்காக இன்று பதிவிட்டுள்ளேன். நேரம் இருக்கும்போது கேட்டு மகிழுங்கள்!

காணொளி:



=======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8 comments:

  1. Good morning sir very interesting post sir, with lord palaniyappan blessings let his divine social service is very useful for all of us,such a valuable post sir, thanks sir vazhga valamudan sir

    ReplyDelete
  2. சஞ்சிகைகளை திறந்தால் சினிமா.. சினிமா என்று கொட்டிக்கிடக்கும் நிலைமையில் இருந்து, இது போன்ற சமய, கலாச்சார தகவல்கள் மனித வாழ்வை வளப்படுத்தும். நன்றி

    ReplyDelete
  3. I am really proud and happy to see my H.O.D. HE is an excellent professor in our Sou. College. Thanks you subbing sir.

    ReplyDelete
  4. /////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir very interesting post sir, with lord palaniyappan blessings let his divine social service is very useful for all of us,such a valuable post sir, thanks sir vazhga valamudan sir////

    உங்களுடைய மேலான பின்னூட்டத்திற்கு நன்றி சண்முகசுந்தரம்!!!!

    ReplyDelete
  5. /////Blogger Thanga Mouly said...
    சஞ்சிகைகளை திறந்தால் சினிமா.. சினிமா என்று கொட்டிக்கிடக்கும் நிலைமையில் இருந்து, இது போன்ற சமய, கலாச்சார தகவல்கள் மனித வாழ்வை வளப்படுத்தும். நன்றி/////

    உங்களுடைய மேலான பின்னூட்டத்திற்கு நன்றி தங்கமெளலி!!!!

    ReplyDelete
  6. ////Blogger Thanga ganesh said...
    I am really proud and happy to see my H.O.D. HE is an excellent professor in our Sou. College. Thanks you subbing sir.////

    உங்களுடைய அனுபவப் பகிர்விற்கு நன்றி நண்பரே!!!!!

    ReplyDelete
  7. ////Blogger Sakthi Balan said...
    Good speech sir../////

    நல்லது. நன்றி நண்பரே!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com