மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

4.4.17

மகிழ்ச்சி தரும் வயது எது - இருபதா அல்லது அறுபதா?


மகிழ்ச்சி தரும் வயது எது - இருபதா அல்லது அறுபதா?

20-களில் இருக்கும் இளைஞர்களை விட, தாத்தாக்களும் பாட்டிகளும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ’இப்படிச் சொன்னால் நம்ப முடிகிறதா? `ஆனால், அது தான் உண்மை’ என்கிறது சமீபத்தில் வெளி வந்திருக்கும் ஓர் ஆய்வு.

முதுமை என்பது சாபம். சித்தார்த்தன் புத்தனானதற்கு முக்கியக் காரணங்கள் மூன்று... முதுமை, நோய், மரணம். அவற்றில் முக்கியமான ஒன்றான முதுமைப் பருவத்தில் இருப்பவர்கள், இளைஞர்களை விட மனதளவில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதை ஏற்றுக் கொள்ள, கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருக்கிறது. இருந்தாலும், அது நிஜம் தான் என நிரூபித்திருக்கிறது, `தி ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் சைக்கியாட்ரி’ (The Journal of Clinical Psychiatry) இதழில் வெளி வந்திருக்கும் ஆய்வு முடிவு. கலிஃபோர்னியாவில் இருக்கும் சான் டியாகோவில், 21- 99 வயதுக்கு உட்பட்டவர்கள் 1,546 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப் பட்டது. அவர்களின் உடல் நலம், புரிதல் திறன், மன நலம் தொடர்பான பல கேள்விகளை முன் வைத்திருக்கிறார்கள், ஆய்வு நடத்தியவர்கள்.

வாழ்க்கையில் அவர்கள் சந்தோஷமாகவும் திருப்தியாகவும் இருக்கிறார்களா, மனஅழுத்தம், கவலை, பதற்றம் இவற்றுக்கு ஆளாகிறார்களா என்றெல்லாம் கேள்விகள் கேட்கப் பட்டன.

இந்த ஆய்வின் தலைவர், டாக்டர் திலிப் வி.ஜெஸ்டே (Dilip V.Jeste), முதுமை மற்றும் மனநோய் மருத்துவர் (Geriatric psychiatry); சான் டியாகோவில் இருக்கும் கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தில், சென்டர் ஆன் ஹெல்த்தி ஏஜிங் மையத்தின் இயக்குநர். அவர் இப்படிக் குறிப்பிடுகிறார்...

`முதுமைப் பருவம் என்பது மிக மோசமானது, வயதானவர்களிடம் மனச் சோர்வு, மன அழுத்தம், சிடு சிடுப்பு இவை தான் இருக்கும் என்கிற ஒரு கருத்து நிலவுகிறது. அதன் உண்மைத் தன்மையை ஆராய்வதற்காகவே இந்த ஆய்வை நடத்தினோம்.’

`உடலளவில் தளர்ச்சி, புரிந்து கொள்ளும் உணர்வில் குறை பாடு இவையெல்லாம் இளைஞர்களை விட முதியவர்களுக்கு அதிகமாக இருக்கிறது. இவை முதுமை காரணமாக இயற்கையாக ஏற்படும் குறைபாடுகள். ஆனால், மன நலத்தைப் பொறுத்த வரை இளைஞர்களை விட ஆரோக்கியமாக இருப்பவர்கள் முதியோரே. 20-கள், 30-களில் இருக்கும் இளைஞர்களிடம் பதற்றம், மன அழுத்தம், கவலை ஆகியவை அதிக அளவில் காணப் படுகின்றன. மகிழ்ச்சி, திருப்தி, நிறைவான வாழ்க்கை இவை குறைவாகக் காணப் படுகின்றன. ஆக, மகிழ்ச்சியாக இருப்பது முதியோரே’ என்கிறது ஆய்வு.

வயதாகி விட்டது என்கிற எண்ணம் வரும் போது, அவர்களுக்கு ஒரு முதிர்ச்சி வந்து விடுகிறது. இனி எல்லாம் நல்ல விதமாக நடக்கும் என்கிற எதிர் பார்ப்பும், அவர்களின் மன நலமும் முன்னேற்றம் அடைகிறது. ஆனால், இளைஞர்களுக்கோ மனதளவில் குழப்பம் தான் மிஞ்சுகிறது. பணம், கல்வி, காதல், வேலை என வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பல தேவைகளும் அந்த வயதில் தான் எழுகின்றன. கூடவே, மற்றவர்களோடு தம்மை ஒப்பிட்டுப் பார்க்கச் சொல்லும், `நாம் அவர்களைப் போல வெற்றி பெறவில்லையோ, நமக்கு எத்தனையோ வாய்ப்புகள் கிடைத்தும் அதையெல்லாம் சரியாகப் பயன் படுத்திக் கொள்ளவில்லையோ’ என்றெல்லாம் இளைஞர்களை யோசிக்க வைக்கும் பருவம் அது. முதியவர்களால் சின்னச் சின்ன மனஅழுத்தம் தரும் விஷயங்களை எளிதாக உதறித் தள்ளி விட முடியும். காரணம், அவர்களுக்குக் கிடைத்திருக்கும் அனுபவமும் முதிர்ச்சியும். அதோடு எதற்கும் உணர்ச்சி வசப்படாதவர்களாக, சிறந்த முடிவுகளை எடுப்பவர்களாகவும் இருப்பார்கள்.

`முதியவர்களுக்கு இன்றைய வாழ்க்கை எளிதானதாக இருக்கிறது. 1998-ம் ஆண்டிலிருந்து 2008-ம் ஆண்டுக்குள், முதியவர்களுக்கு மன அழுத்தம் தரக் கூடிய அறி குறிகள் வெகுவாகக் குறைந்திருக்கின்றன’ என்கிறது ஓர் ஆய்வு. வேறு சில ஆய்வுகளோ, `கடந்த சில பத்தாண்டுகளில் இளைஞர்களிடையே கவலையும் மன அழுத்தமும் அதிகமாகக் காணப் படுகின்றன’ எனக் குறிப்பிடுகின்றன. உலக மயமாக்கல், தொழில் நுட்ப வளர்ச்சி, உயர் கல்வி பயில்வதில் அதிகரித்து வரும் போட்டி, கணிசமான சம்பளம் வேண்டும் என்கிற எண்ணம், சமுதாயத்தில் மாறி வரும் பெண்களின் பங்கு என பல காரணிகள் முதியோர்களை விட, இளம் பெண்களையும் இளைஞர்களையும் அதிகம் பாதிக்கின்றன. இந்த மன அழுத்தம் முதியோருக்கு இல்லை என்பது தான் ஆய்வின் முடிவாக இருக்கிறது.

இந்தியாவிலும் பிள்ளைகள், பெற்றோர்களைக் கண்டு கொள்ளாமல் விடுவது நடக்கத் தான் செய்கிறது. உள்நாட்டிலேயே வசித்தாலும், பெற்றவர்களை முதியோர் இல்லத்தில் சேர்ப்பதும் இருக்கிறது. ஆனால், சில பத்தாண்டுகளுக்கு முன்னர் முதியோர் இல்லம் என்பதே இங்கே நடை முறையில் இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இன்றைய பரபரப்பான நகர, சிறு நகர வாழ்க்கைச் சூழலில், பெற்றோரை, முதியவர்களை வீட்டில் வைத்து பராமரிப்பது என்பது அனைவருக்கும் சாத்தியமில்லை என்பதை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். அதே நேரம் இன்றைய இளைய தலைமுறையினர் அளவுக்கு முதியோருக்கு மனஅழுத்தம் அதிகம் இல்லை என்பதையும் ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும்.

படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
=====================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6 comments:

  1. வணக்கம் ஐயா,
    நல்ல பதிவு.
    நன்றி

    ReplyDelete
  2. Respected Sir,

    Holy morning... Very intersting article.

    Have a holy day.

    Thanks & regards,
    Ravi-avn

    ReplyDelete
  3. /////Blogger VM. Soosai Antony said...
    வணக்கம் ஐயா,
    நல்ல பதிவு.
    நன்றி////

    நல்லது. நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  4. ////Blogger ravichandran said...
    Respected Sir,
    Holy morning... Very intersting article.
    Have a holy day.
    Thanks & regards,
    Ravi-avn////

    நல்லது. நன்றி ரவிச்சந்திரன்!!!!

    ReplyDelete
  5. ////Blogger kmr.krishnan said...
    True Sir./////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com