மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

24.9.07

டவுசர் கிழியுமா?

டவுசர் கிழியுமா?

டவுசர் - கிழியும் ஆனால் கிழியாது' என்ற என்ற வார்த்தைகளை
வலைப்பதிவில் எழுதி, லக்கிலுக்காரும், வரவணையன் அவர்
களும் மற்றும் சுகுனாதிவாகர் அவர்களும் அதிகம்பேர்களின்
கவனத்தை ஈர்த்தார்கள்.

எதிர்காலத்தில் தமிழ்கூறும் நல்லுலகத்தில் அது பெரிய
சொல்லடையாக மாறக்கூடியவாய்ப்பு உள்ளது.

கிருஷ்ணகிரி கிழிஞ்சுது' என்று ஒரு திரைப்பட நடிகர் அடிக்கடி
பெரிய திரைகளிலும், சின்னத் திரைகளிலும் சொல்லி
வந்திருக்கிறார். இன்னும் சொல்லி வருகிறார். என்னதான்
மண்டையைப் பிய்த்துக் கொண்டு யோசித்தாலும்
இன்றுவரை எனக்கு அதன் அர்த்தம் பிடிபடவில்லை.

தெரிந்தவர்கள் சொல்லலாம்

ஆனால் 'டவுசர் - கிழியும் ஆனால் கிழியாது' என்ற பதம்
அப்படியல்ல !

அவர்களின் பதிவுகளைப் படித்தால் நன்றாக விளங்கும்

நான் என்ன விளங்கிக் கொண்டேன் என்பதைக் கீழே
கொடுத்துள்ளேன்.

டவுசர் கிழியும்.ஆனால் கிழிந்த பகுதியால் உனக்கு
ஒன்றும் நேராது (nothing would expose from it) கஷ்டப்படுவதாக
நினைத்துக் கொண்டிருப்பாய் கஷ்டம் இருந்திருக்கும், ஆனால்
கஷ்டம் உனக்கல்ல

எப்படி? என்று பதிவைப் படிக்கும் எந்த ஒரு ஆசாமி கூடக்
கேட்கக்கூடாது என்பதற்காக சுகுனாதிவாகர் அவர்கள் அதற்காக
1940ம் ஆண்டில் நடைபெற்ற மேடை நிகழ்ச்சி ஒன்றில் இருந்து
தந்தை பெரியார் அவர்கள் சொன்ன கருத்தை அற்புதமாக
மேற்கோள் காட்டியும் இருக்கிறார்.

அசத்தலாக இருந்த அந்த மேற்கோள் இதுதான்:

'நான் ஜனங்களுக்காக ரொம்பக் கஷ்டப்படுவதாக இங்கே
பேசியவர்கள். சொன்னார்கள். நான் கஷ்டம் என்று
தோன்றுவதை
என் வாழ்நாளில் செய்வதே கிடையாது.
எனக்கு ஏதாவது
கஷ்டம் இருந்ததுன்னா இந்த 15பேர்
பேச்சையும்
உட்கார்ந்து கேட்டதுதான்'
- தந்தை பெரியார்

முழு விவரத்திற்கு அந்தப் பதிவைப் படிக்கவும்

கஷ்டம் - இருந்தது ஆனாலும் இல்லை

இப்போது அனைவருக்கும் புரியும் என்று நினைக்கிறேன்

அந்தச் சொல்லடையை ஏற்படுத்திய மூவருக்கும் எனது
பாராட்டுக்கள்!

அந்தச் சொல்லடைக்கும் எனது வகுப்பறையில் நடந்த ஒரு
நிகழ்விற்கும் தொடர்பு உண்டு.

அதை வெளிப்படுத்தும் முகமாகத்தான் இந்தப் பதிவு

எனக்கும் ஒரு ஆணி பிடுங்கும் வேலை பாக்கி உள்ளது.
அதனால் மீதி நாளை!

(தொடரும்)

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com