மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

25.11.20

கவலையைத் தூக்கி எறியுங்கள்!!!

கவலையைத் தூக்கி எறியுங்கள்!!!

கவலைப்படும் பழக்கம் ஒரு நோய். கவலை எனப்படுவது தொடக்கத்தில் ஒரு பழக்கமாகி, பின்னால் அதுவே ஒரு நோயாக ஆகிவிடுகிறது என்கின்றனர் உளவியலாளர்கள்...

அதாவது!, கவலைப்படுவது என்பது ஒருவனது இயல்பு, குணம் என்றாகி விடுகிறது. பயம், நடுக்கம், கவலை என்பதெல்லாம் பிறர் 
உருவாக்குவதில்லை. நாமே உருவாக்கிக் கொள்கிறோம்...நம்முடைய அறியாமையால் உருவாக்கிக் கொண்டு அவதிப்படுகிறோம்.  ஒவ்வொருவனின் தலை மீதும் இரண்டு சுமைகள். அதுவே அவனை 
அவதிக்கு உள்ளாக்குகின்றன...

ஒன்று!, கடந்த காலத்தில் அவன் பட்ட துன்பங்களின் மறு நினைவு. மற்றொன்று எதிர்காலத்தில் என்னாகுமோ என்ற அச்ச விளைவு...

வெற்றியை விரும்புவோர் இந்த இரண்டு சுமைகளையும் தூக்கித் தூர எறிந்து விட்டு, வாழ்க்கையை அனுபவிக்கவும், அதை முன்னோக்கிச் செலுத்தவும் கற்றுக்கொள்ள வேண்டும்...

உளவியல் அறிஞர் வழக்கம் போல் கணினித் துறை ஊழியர்களுக்கு மன இருக்க மேலாண்மை குறித்து பாடம் எடுத்து கொண்டிருக்கிறார்...

எளிமையாக அனைவரிடமும் கலந்துரையாடிக் கொண்டே மேசையின் மீது வைக்கப்பட்டிருந்த தண்ணீர் நெகிழ்பானின் மூடியை திறந்து பக்கத்தில் வைத்திருந்த கண்ணாடி குடுவையில் தண்ணீரை ஊற்றினார்...

குடிப்பதற்கு தான் தண்ணீர் ஊற்றுகின்றார் என அனைவரும் எண்ணிக் கொண்டிருக்கும் வேளையில், அதைக் குடிக்காமல் கையில் எடுத்து அனைவருக்கும் தெரியும்படி உயர்த்தினார்...இந்த கையில் வைத்திருக்கும் தண்ணீர் அளவு எவ்வளவு இருக்கும் என வினவினார்...? 

எல்லோரும் ஒவ்வொரு அளவைக் கூறினார்கள்...

நீங்கள் கூறும் அளவுகளில் ஏதேனும் ஒன்றேனும் உறுதியாக இருக்கும். ஆனால்!, நான் இதை எவ்வளவு நேரம் இதை இப்படியே கையில் உயர்த்திப் பிடித்துக் கொண்டிருக்க இயலும்...

ஒரு விநாடிகள் வைத்திருந்தால் ஒன்றும் ஆகாது. ஒருவேளை ஒரு மணி நேரம் வைத்திருந்தால் என் கை வலிக்கும். அனால்!, நாள் இதை நாள் முழுக்க இப்படியே வைத்திருந்தால் என் நிலை என்ன ஆகும் என ஆலோசியுங்கள்...

நம் கவலையும் இப்படித் தான். ஒரு சில வினாடிகள் நினைத்து வருந்தினால் ஒன்றும் ஆகாது. ஒருவேளை ஒரு சில மணிநேரம் என்றால் மனதை பாதித்துவிடும்...

எப்பொழுதுமே நினைத்துக் கொண்டிருத்தால் நமது வாழ்வின் 
ஏற்றத்தையே அழிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம். இந்த
உரையை கேட்ட அரங்கம் கரவோசைகளால் 
நிரம்பியது...

*ஆம் நண்பர்களே...!*

*கவலைகள் ஒருவனின் உடலில் இருக்கும் மின்சார சக்தியை உறிஞ்சி விடுகின்றன. ஆகவே!, நீங்கள் ஒருபோதும் கவலைப்படும் மனிதனாக உருவெடுக்காதீர்கள்...!*

🔴 *நீங்கள் வெற்றியாளராகும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள விரும்பினால் கவலைப்படும் பழக்கத்தை உடனே மாற்றிக் கொள்ளுங்கள்...!!*

⚫ *எனவே!, மனதில் உள்ள கவலையை களைத்து எறியுங்கள். ஒவ்வொரு வினாடியும் அனுபவித்து கொண்டாடுங்கள்...!!!*

*எதுவுமே இல்லையென்ற கவலையே வேண்டாமே...*

மகிழ்ச்சி என்ற ஒன்று இருந்தால் அனைத்துமே இங்கு சாத்தியம்.
-------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
=======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com