மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

16.11.20

Astrology: Quiz: புதிர்: 13-11-2020 தேதியிட்ட புதிருக்கான விடை!


Astrology: Quiz: புதிர்: 13-11-2020 தேதியிட்ட புதிருக்கான விடை!

கேட்டிருந்த கேள்வி இதுதான். ஒரு பெண்மணியின் ஜாதகத்தைக் கொடுத்து, அவர் சதய நட்சத்திரக்காரர். அத்துடன் மீன லக்கினக்காரர்.14 வயதில் இருந்து 24 வயதுவரை, தன் தாய் வீட்டில் இருந்த காலத்தில் அனைவரிடமும் எரிச்சலோடு எதற்கெடுத்தாலும் வாக்கு வாதம் செய்வார். அத்துடன் கடுமையான வாய்ச்சண்டையும் போடுவார். மாட்டுபவர்களை கடைசிவரை விடமாட்டார். என்ன காரணம்? ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!!!”  என்று கேட்டிருந்தேன்.

பதில்: 2ம் வீடான வாக்கு ஸ்தானத்தில் வில்லன் ஆறாம் வீட்டு அதிபதி சூரியன் உச்ச பலத்துடன். அத்துடன் அந்த வீட்டிற்கு உரிய செவ்வாய் அந்த வீட்டிற்குப் பன்னிரெண்டில். மனகாரகன் சந்திரன் 12ல் கேதுவுடன் கூட்டணி.மேலும் சனீஷ்வரன் மற்றும் ராகுவின் நேரடிப் பார்வையுடன். அம்மணியின் குணக்கேட்டிற்கு இதுதான் முக்கிய காரணம். அத்துடன் ராகு திசை வேறு நடந்தது. இவைதான் முக்கிய காரணம். அவற்றை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன், 

பிறகு குரு திசையின்  மத்தியில் அம்மணி குணவதியாக மாறிவிட்டார். குரு பகவான் லக்கினாதிபதி. அத்துடன் உச்சம் பெற்று 5ல் அமர்ந்துள்ளார். அவர் அம்மணியின் குணத்தை சீராக்கினார். அதைக் கவனியுங்கள்
.
இந்தப் புதிரில் 10 அன்பர்கள் கலந்து கொண்டு தங்கள் கணிப்பை வெளியிட்டு உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். 

அடுத்த வாரம் 20-11-2020 வெள்ளிக்கிழமை  அன்று வேறு ஒரு புதிருடன் மீண்டும் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
1
jaga.gm commented on "Astrology: Quiz: புதிர்: அனைவரிடமும் சண்டை போடும் அம்மணியின் ஜாதகம்!!!"

9 hours ago
குருவிற்க்கு வணக்கம்! விடை 1) 2 ம் அதிபதி செவ்வாய் அவர் வீட்டுற்கு 12 இல் , லக்கண செவ்வாய் , வாய் திறந்தாள் சண்டைத்தான் , பிடிவாதம் , 12 இல் சந்திரன் மனம் தடுமாறட்டம் , 7இம் அதிபதி புதன் நீச்சம் எதிர் ஆள் பிடிக்கவிளை , 4 அதிபதி புதன் நீச்சம் படிப்பு பார்தி பேசினால் கோபம் . குரு , சந்திரன் 6/8 பார்வை. நன்றி ஜெகதீசன்
------------------------------------------------------------------
2
kmr.krishnan commented on "Astrology: Quiz: புதிர்: அனைவரிடமும் சண்டை போடும் அம்மணியின் ஜாதகம்!!!"

14 hours ago
ஜாதகி 22 ஏப்ரல் 1979 அன்று காலை 5 மணிபோல பிறந்தவர். பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக்கொண்டேன். ஜாதகிக்கு இரண்டாம் இடத்தில் உச்ச சூரியன் சூரியன் ஜாதகிக்கு 6ம் இடத்துக்கு உரியவர்.பகை வீட்டுக்காரர் சூரியன். 6க்குடையவர் வாக்கு ஸ்தானத்தில் அமர்ந்து உச்சமும் பெற்றதால் சூடான சொற்கள் வாயில் இருந்து வரும்.அந்த 6ம் இடத்தில் ராகுவும் சனைச்சரனும்.ராகுதசாவும் 17.5 வயதுவரை. எனவே எல்லோருடனும் சண்டை. வாக்கு ஸ்தானதிபதியும் செவ்வாய். அவரும் சூடானவர். அவர் தன் வீட்டிற்கு 12ல் அமர்ந்தது 8ம் அதிபனுடன் சேர்ந்தது எல்லாமும் சண்டக்கோழியாக ஜாதகியை மாற்றியது.5ம் வீட்டுக்காரரான சந்திரன் தன் வீட்டுக்கு 8ல் அமர்ந்து கேது சம்பந்தப்பட்டதும் மனம் ஒரு நிதானம் இல்லாமலிருக்க வைத்தன‌.ராகுதசா சூரிய புக்தியில் துவங்கி குரு தசா கேது புக்தி வரை 10 ஆண்டுகள் இந்த நிலை இருந்தது.
--------------------------------------------------------------
3
csubramoniam commented on "Astrology: Quiz: புதிர்: அனைவரிடமும் சண்டை போடும் அம்மணியின் ஜாதகம்!!!"

14 hours ago
ஐயா கேள்விக்கான பதில் 1 .லக்கினாதிபதி குரு ஐந்தில் 2 /இரண்டில் செவ்வாய் 3 .ஐந்தாம் அதிபதி மனோகாரகன் சந்திரன் சனி மற்றும் ராகுவின் நேரடி பார்வையில் தங்களின் பதிலை ஆவலுடன் நன்றி
-----------------------------------------------------------------------
4
Jeyalaxmi commented on "Astrology: Quiz: புதிர்: அனைவரிடமும் சண்டை போடும் அம்மணியின் ஜாதகம்!!!"

17 hours ago
23/11/20 புதிருக்கு பதில். ஜாதகர் வாக்கு ஸ்தானத்தில் இயற்கை பாபரனா ஆறாம் அதிபதியாக உள்ள சூரியன் சுபபலமின்றி உள்ளார். மனோகாரகனான சந்திரன் கேதுவுடன் கிரகண தோஷம் பெற்று சனி பார்வையில் உள்ளார் . எனவே ஜாதகர் வரட்டு பிடிவாதம் உள்ளவராக இருப்பார்.
--------------------------------------------------------------------------------------
5
Jaichandhran commented on "Astrology: Quiz: புதிர்: அனைவரிடமும் சண்டை போடும் அம்மணியின் ஜாதகம்!!!"

17 hours ago
ஜாதகர் இரண்டம் இடத்தில் ஆறுக்குடைய சூரியன் உச்சம் ஆகிறார். அவருடைய 10 வயது முதல் 14 வயது வரை குரு தசை சுக்ர, சூர்ய புக்திகள் இருக்கும். ஜாதகர் அஷ்டமாதிபதி சுக்கிரன் மூன்ருகுடையார் ஆகிறார் எனவே பிடிவாத குணம் உச்ச சூரியன் பிடிவாத பேச்சு. மனோகாரகன் கேது பிடியில் சனியின் பார்வை மட்டும் புத்தி காரகன் நீச்சம் மற்றவரின் பேச்சை கேட்காமல் இருக்க காரணம்
-----------------------------------------------------------------
6
arun commented on "Astrology: Quiz: புதிர்: அனைவரிடமும் சண்டை போடும் அம்மணியின் ஜாதகம்!!!"

Yesterday
வணக்கம் வாத்தியார் ஐயா, 2ஆம் இடம் வாக்கு ,பேச்சு  ஸ்தானம் , 2க்குடைய செவ்வாய் லக்கினத்தில் , 6ஆம் அதிபதி சூரியன் 2இல் , 6இல் தசா நாயகன் ராகு , சனி பகவான் சேர்க்கை .  சனி பகவான் வர்கோத்தம் , 8ஆம் அதிபதி சாரம்.இந்த அமைப்பில் பிரச்சனை. மிக்க நன்றி  ஐயா. 
--------------------------------------------------------------------
7
RAMVIDVISHAL commented on "Astrology: Quiz: புதிர்: அனைவரிடமும் சண்டை போடும் அம்மணியின் ஜாதகம்!!!"

Yesterday
6th house belong to quarrel or fighting or dispute. When 6th house sun placed in 2nd house then person will not have good relationship with his family or friends. 2nd house belong to wealth and 6th house belong to enemy, disease, legal problems etc. When 6th house lord in 2nd house than native may loss his money through his enemy. 2nd house belongs to speech. When 6th house lord in 2nd house then the person may be false speaker. 6th house belong to argument, so native may be argumentative 2nd house owner is placed in 12th from second house These may be the main reasons. Guru in good place ucham in 5th house Mercury being 7th lord neesa Banga Raja yogam along with sukran may get changed her behaviour after her marriage during kethu/ or sukran bukthi.
-------------------------------------------
8
Selvaraj commented on "Astrology: Quiz: புதிர்: அனைவரிடமும் சண்டை போடும் அம்மணியின் ஜாதகம்!!!"

2 days ago
ஐய்யா வணக்கம் 1)வாக்கு ஸ்தானாதிபதி செவ்வாய் ஆகிறார், 2)மனோகாரகன் சந்திரன் 12ல் மறைந்து கேதுவோடு இனைந்து உள்ளார், 3) 6ம் இடத்து அதிபதி (சூரியன்) 2ல் உள்ளார், 4)14வயது-24வயது வரை (ராகு திசை ஈற்றுக்காலம்-குரு திசை பாதி ஆறம்பகாலம்), ராகு சனியோடு இனைந்து 6ல் மறைந்து உள்ளார், 5)ராகு திசை ஈற்றுக்காலம் சிறமமாக இறுக்கும் என்ற என்னமும் உள்ளது, இவை அனைத்தும் காரணமாக இறுக்கலாம் நன்றி
---------------------------------------------------------
9
K. Ravi commented on "Astrology: Quiz: புதிர்: அனைவரிடமும் சண்டை போடும் அம்மணியின் ஜாதகம்!!!"

Nov 13, 2020
வாத்தியாருக்கு வணக்கம் ஜாதகருக்கு 14 வயதில் ராகு தசையில் சூரிய புக்தி ஆரம்பமாகிறது. அடுத்து சந்திரன் மற்றும் செவ்வாய் புத்திகள் இரண்டாம் இடத்தில் ஆறாம் வீட்டதிபதி சூரியன் உச்சம். இரண்டாம் வீட்டதிபதி செவ்வாய் அந்த வீட்டிற்கு பண்ணரண்டில் மனக்காரகன் சந்திரன் லக்னத்திற்கு பண்ணிரண்டில். ஆக மொத்தம் ராகு தசையில் கடைசி நான்கு வருடங்கள் இரண்டாம் வீட்டுடன் தொடர்பு. இரண்டாம் வீடு, பண்ணிரண்டாம் வீடு மற்றும் ஆறாம் வீடு கெட்டிருக்கிறது. இவையே ஜாதகரின் கடுமையான வாக்குவாதத்திற்கு காரணங்கள். .
---------------------------------------------------------
10
ஜகதீஸ்வரன் commented on "Astrology: Quiz: புதிர்: அனைவரிடமும் சண்டை போடும் அம்மணியின் ஜாதகம்!!!"

Nov 13, 2020
ஜகதீஸ்வரன் கானாடுகாத்தான்: லக்னத்தில் செவ்வாய். 2 ஆம் இடத்தில் 6 ஆம் அதிபதி சூரியன் உச்சம். ராசிக்கு 2ல் செவ்வாய். ராகு தசை சூர்ய புக்தியிலிருந்து அவ்வாறு நடந்து கொண்டிருக்கிறார்.
=======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com