மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

22.11.18

சுக்லாம் பரதரம் ஆச்சா?'


சுக்லாம் பரதரம் ஆச்சா?' 

மகா பெரியவரின் நகைச்சுவை

காஞ்சிமகாப் பெரியவர் தம் சீடர் ஒருவரைப்  பார்த்து, ''சந்தியா வந்தனம் ஆச்சா? சுக்லாம் பரதரம் ஆச்சா?'' என்று கேட்டார்.

சீடரும், 'ஆச்சு' என்று தலையசைத்தார்.

அதற்கு  மகா பெரியவர், 'சுக்லாம் பரதரம் சொன்னாயான்னு நான் கேட்கலை... ஆச்சான்னு தான் கேட்டேன்” என்றார்.

சீடர் ஒன்றும் புரியாமல் குழம்பினார்.

மகா பெரியவர் சீடரிடம், “சுக்லாம் பரதரம் சொல்லு பார்ப்போம்” என்றார்.

“சுக்லாம் பரதரம் விஷ்ணும்  சசிவர்ணம்
சதுர்புஜம் பிரசன்ன வதனம் த்யாயேத்
சர்வ விக்னோப சாந்தயே” என்று சீடர் சொன்னார்.

மகா பெரியவர், “இதற்கு அர்த்தம்  தெரியுமோ?” என்று கேட்டார்.

“தெரியும்” என்று பதிலளித்த சீடர், ''வெள்ளை உள்ளம், யானையின் கருப்பு நிறம், நான்கு கரங்கள், பிரகாசமான முகம், எல்லாரையும் நினைக்கச் செய்யும் உருவம் ஆகியவற்றைக் கொண்ட விநாயகரை நினைத்தால் எல்லா தடைகளும் கவலைகளும்
நீங்கும்,'' என்றார்.

“இதற்கு வேறொரு அர்த்தமும் இருக்கு... அது உனக்குத் தெரியுமோ? என்று சொல்லி  சிரித்தார்.

“சுக்லம்' என்றால் 'வெள்ளை'... அதாவது பால்;

'விஷ்ணும்' என்றால் 'கருப்பு' அதாவது 'டிக்காஷன்';

'சசிவர்ணம்' என்றால்  கருப்பும், வெள்ளையும் கலந்தது...

அதாவது காபி;

'சதுர்புஜம்' என்றால் நான்கு கை. அதாவது மாமியோட இரு கைகளால் காபியைக்  கொடுக்க, மாமாவின் இரு கைகள் அதைப்
பெற்றுக் கொள்ளும்.

'த்யாயேத்' என்றால் 'நினைத்தல்'. அதாவது இப்படி காபி கொடுப்பதை மனதில் நினைப்பது.

பிரசன்ன வதனம்' என்றால் 'மலர்ந்த முகம்' அதாவது காபியை மனதில் நினைத்ததும், மாமாவின்  முகம் மலர்ந்து விடும்.

'சர்வ விக்னோப சாந்தயே' என்றால் 'எல்லா கவலையும் நீங்குதல்'. அதாவது காபி குடித்தால் கவலை நீங்கி  மனம் சாந்தமாகி விடும்.

'சுக்லாம் பரதரம் ஆச்சா?' என்பதில் 'காபி குடிச்சாச்சா' என்பதும் அடங்கியிருக்கிறது என்று தெரிந்து கொண்ட சீடர்கள் தங்களை
மறந்து சிரித்தனர்.
-----------------------------------------------------
படித்து ரசித்தது!
அன்புடன்
வாத்தியார்
===========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

5 comments:

  1. Good afternoon sir,

    most beautiful meaning sir.

    ReplyDelete
  2. Respected Sir,

    Happy morning... Hahahah...Nice...

    Thanks for sharing...

    With regards,
    Ravi-avn

    ReplyDelete
  3. /////Blogger sundari said...
    Good afternoon sir,
    most beautiful meaning sir./////

    நல்லது. நன்றி சகோதரி!!!!

    ReplyDelete
  4. /////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... Hahahah...Nice...
    Thanks for sharing...
    With regards,
    Ravi-avn//////

    நல்லது. நன்றி அவனாசி ரவி!!!!

    ReplyDelete
  5. Super post. I was told the same explanation by the well known carnatic violinist Sriram Kumar when I had a chance to drive him to a different concert location during 2007 in Indiana. Reading this post brought those memories back.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com