மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

13.9.18

மனிதக்குரங்கிடம் நடத்தப்பெற்ற விசாரணை!


மனிதக்குரங்கிடம் நடத்தப்பெற்ற விசாரணை!

வனப்பகுதியொன்றில் வாழ்ந்த மனிதக்குரங்கு ஒன்றை மற்றொரு வனப்பகுதிக்கு மாற்ற பத்துபேர்கொண்ட மனிதக்குழு
ஒரு பேருந்தில் அந்த மனிதக்குரங்கையும் அழைத்துக்கொண்டு செல்லும்போது எதிர்பாராதவிதமாக பேருந்து விபத்துக்குள்ளாகி
மனித குரங்கைத் தவிர ஓட்டுநர் உட்பட அனைவரும் மரணமடைந்தனர்

விபத்துபற்றி காவல்துறை அதிகாரிகள் மனிதக்குரங்கிடம் விசாரணை நடத்தினர்

அப்போது முதல் கேள்வியாக..?

எத்தனை மணிக்கு விபத்து நடந்ததெனக் கேட்க..!

மேலே தொங்கிக்கொண்டிருந்த கடிகாரத்தில் கைவைத்து ஏழரை மணிக்கு என்றது அந்த மனிதக்குரங்கு

இரண்டாவது கேள்வியாக..?

உன்னோடு பயணித்த மனிதர்களெல்லாம் அப்போது என்ன செய்தனர் என்ற கேள்விக்கு ..?

அனைவரும் உறங்கினர் என குறட்டையும் விட்டு சைகை மூலம் செய்துகாட்டியது

மூன்றாவது கேள்வியாக.?

பேருந்தை ஓட்டிய ஓட்டுநர் அப்போது என்ன செய்துகொண்டிருந்தாரென்ற கேள்விக்கு..?

அவரும் உறங்கிவிட்டாரெனச் சொன்னது அந்த மனிதக்குரங்கு

கடுப்பாகிப்போன காவல்துறை அதிகாரிகள், அதெல்லாம் சரி, அவையெல்லாம் நடக்கும்போது, நீ என்ன செய்துகொண்டிருந்தாய் எனக் கேட்டனர்

அதற்கு மனிதக்குரங்கு என்ன சொன்னது ..?

நான்தான் அந்தப் பேருந்தை ஓட்டிக்கொண்டிருந்தேன் எனச் சொன்னதும் அதிகாரிகள் அனைவரும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாயினர்

இப்படித்தான் உறவுகளே ..?

பெரும்பாலான மக்கள் வாழ்க்கையென்னும் அழகிய பயணத்தில், பேருந்துபோன்ற மனதை, குரங்குகளிடம் ஒப்படைத்துவிட்டு
குறட்டைவிட்டு உறங்குகின்றனர். குரங்குகளிடம் சிக்கிக்கொண்ட பேருந்து போன்ற மனம், தட்டுத்தடுமாறி, இறுதியாக
எங்காவது மோதி விபத்துக்குள்ளாகி அனைவருக்கும் மரணத்தை ஏற்படுத்துகிறது

ஆக தவறு எங்கிருக்கிறது என்பதை மட்டும் சரியாக உணர்ந்தோமேயானால், வாழ்க்கைப் பயணம் அழகியலே!
நானும் என் மனதினை இதுபோலவே குரங்குகளிடம் ஒப்படைத்துவிட்டு, பலமுறை தடுமாறி வீழ்ந்ததுண்டு என்பதையும்
இங்கே குறிப்பிட ஆசைப்படுகிறேன்

எனவே அலைபாயும் மனதினை இறைவன்டத்தில் ஒப்படைத்து நாம்  செயல்பட்டால் நம் வாழ்வில் எந்த வித விபத்து இன்றி,அவன் அருளால்,அவன் வழிகாட்டுதலால் அவனை அடையலாம் என்பதே உண்மை!!!!!

படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13 comments:

  1. மனம் ஒரு குரங்கு என்பார்கள். அது நினைவுக்கு வருகிறது.

    ReplyDelete
  2. Good morning sir, Wishing you happy Ganesh Chaturthy,Nice story thanks sir vazhga valamudan

    ReplyDelete
  3. வணக்கம் குருவே!
    மனித மனம் பற்றி சிந்திக்கும்
    சிந்தனையாளர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் குறிப்பிட்டாலும் குரங்கின் நினைவில் தான் கொண்டு செல்கின்றனர்!குரங்கிலிருந்து தொடங்கிய
    பிறவி அல்லவா?
    நல்ல கற்பனைப் பதிவு!

    ReplyDelete
  4. Respected Sir,

    Happy morning.... Nice post...

    Thanks for sharing.... Wish you all happy Ganesh Chaturthi

    Have a holy day.

    With regards,
    Ravi-avn

    ReplyDelete
  5. அருமையான கதை. வாழ்க்கையில் அனைவரும் பின்பற்ற வேண்டிய ஒன்று. நன்றி ஐயா.

    ReplyDelete
  6. ////Blogger ஸ்ரீராம். said...
    மனம் ஒரு குரங்கு என்பார்கள். அது நினைவுக்கு வருகிறது.////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஸ்ரீராம்!!!!

    ReplyDelete
  7. /////Blogger kmr.krishnan said...
    Very intetesting moral story////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!!

    ReplyDelete
  8. /////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir, Wishing you happy Ganesh Chaturthy,Nice story thanks sir vazhga valamudan//////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சண்முகசுந்தரம்!!!!!

    ReplyDelete
  9. ////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    மனித மனம் பற்றி சிந்திக்கும்
    சிந்தனையாளர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் குறிப்பிட்டாலும் குரங்கின் நினைவில் தான் கொண்டு செல்கின்றனர்!குரங்கிலிருந்து தொடங்கிய
    பிறவி அல்லவா?
    நல்ல கற்பனைப் பதிவு!//////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!!!!!

    ReplyDelete
  10. ////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning.... Nice post...
    Thanks for sharing.... Wish you all happy Ganesh Chaturthi
    Have a holy day.
    With regards,
    Ravi-avn//////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி அவனாசி ரவி!!!!!

    ReplyDelete
  11. /////Blogger Veerappan Senthil said...
    அருமையான கதை. வாழ்க்கையில் அனைவரும் பின்பற்ற வேண்டிய ஒன்று. நன்றி ஐயா.//////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com