மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

22.6.16

எத்தனை முடிச்சு (Twist) இந்தக் கதையில்!


எத்தனை முடிச்சு (Twist) இந்தக் கதையில்!

ஒரு ஊரில் ஒரு செல்வந்தன் இருந்தான். அவன் வியாபார நிமித்தமாக வெளியூர் சென்று திரும்பிய போது அவனது அழகான பெரிய பண்ணை வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. அந்த ஊரிலேயே மிகவும் அழகான வீடு அவனுடையது தான். அந்த வீட்டை இரண்டு மடங்கு விலை கொடுத்து வாங்க பலரும் தயாராக இருந்தனர். ஆனால் இவன் விற்கவில்லை. இப்போது அந்த வீடு அவன் கண் முன்னே எரிந்துகொண்டிருந்தது. ஆயிரம் நபர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்கள். தீ முழுவதுமாக பரவிவிட்டதால் அதை அணைத்தும் பிரயோஜனம் இல்லை என்று எந்த முயற்சியும் எடுக்கவில்லை. வணிகனோ செய்வதறியாமல் கண்ணில் நீரோடு புலம்பிகொண்டிருந்தான். ஐயோ என் வீடு..!!! என் வீடு...!! என்று அலறினான்.

                                              அப்போது அவனின் மூத்த மகன் ஓடிவந்து ஒரு விஷயத்தை சொல்கிறான் “தந்தையே ஏன் அழுகிறீர்கள்? இந்த வீட்டை நான் நேற்றே மூன்று மடங்கு லாபத்திற்கு விற்றுவிட்டேன். இதனால் நமக்கு நஷ்டம் இல்லை  என்று கூறினான். இதை கேட்ட வணிகனுக்கு ஏக மகிழ்ச்சி. அவனது சோகம் அனைத்தும் மறைந்து மகிழ்ச்சி உண்டானது. இப்போது வணிகனும் கூடி இருந்த கூட்டத்தில் ஒருவனாக நின்று வேடிக்கை பார்க்க தொடங்கினான். அதே வீடு தான், அதே நெருப்பு தான் ஆனால் சில வினாடிகளுக்கு முன் இருந்த தவிப்பும் சோகமும் இப்போது அவனிடம் இல்லை.

               சிறிது நேரத்தில் வணிகனின் இரண்டாவது மகன் ஓடி வந்து “தந்தையே ஏன் இப்படி கவலையில்லாமல் சிரிக்கிறீர்கள்? நாங்கள் விற்ற இந்த வீட்டிற்கு முன்பணம் மட்டுமே வாங்கியுள்ளோம். முழு தொகை இன்னும் வரவில்லை. வீட்டை வாங்கியவன் இப்போது மீதி பணத்தை தருவானா என்பது சந்தேகமே” என்றான். இதை கேட்ட வணிகன் அதிர்ச்சி அடைந்தான். மீண்டும் சோகத்தில் ஆழ்ந்தான். கண்ணீரோடு மீண்டும் புலம்ப ஆரம்பித்தான். தனது உடமை எரிகிறதே என்ற எண்ணம் மீண்டும் அவனை வாட்டியது.
 
                     சில மணித்துளிகள் பின்பு வணிகனின் மூன்றாவது மகன் ஓடி வருகிறான். “தந்தையே கவலை வேண்டாம். இந்த வீட்டை வாங்கிய மனிதன் மிகவும் நல்லவன் போலும். இந்த வீட்டை வாங்க அவன் முடிவு செய்தபோது வீடு தீ பிடிக்கும் என்று உங்களுக்கும் தெரியாது எனக்கும் தெரியாது. ஆகையால் நான் பேசியபடி முழு தொகையை கொடுப்பது தான் நியாயம் என்று என்னிடம் இப்போது தான் சொல்லி அனுப்பினான்” என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தான். இதை கேட்ட வணிகனுக்கோ ஏக சந்தோஷம். கடவுளுக்கு நன்றி சொல்லி ஆடிப்பாடி மகிழ்ந்தான். கண்ணீரும் சோகமும் மீண்டும் காணாமல் போய்விட்டது. மீண்டும் கூட்டத்தில் ஒருவனாக நின்று வேடிக்கை பார்க்க தொடங்கினான்.

                           இங்கு எதுவுமே மாறவில்லை. அதே வீடு, அதே நெருப்பு, அதே இழப்பு. இது என்னுடையது என்று நினைக்கும் போது அந்த இழப்பு உங்களை சோகத்தில் ஆழ்த்துகிறது. இது என்னுடையது அல்ல என்று நினைக்கும் போது உங்களை சோகம் தாக்குவது இல்லை. நான், என்னுடையது, எனக்கு சொந்தமானது என்ற எண்ணம் தான் பற்று. உலகில் எதுவுமே நிரந்தரமானது இல்லை. ஒருவனுக்கு மட்டுமே சொந்தமானது இல்லை. அனைத்துமே அழிய கூடியது. நான் உட்பட எல்லாமே ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் அழியக்கூடியது அல்லது வேறு ஒருவனுக்கு சொந்தமாக கூடியது என்பதை நாம் நினைவில் நிறுத்தினாலே போதும்.

மனவளக் கதை
===========================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

27 comments:

  1. வணக்கம் குருவே!
    சிறப்புப் பகிர்வு!

    ReplyDelete
  2. Enjoyed the moral story. Thank you Sir.

    ReplyDelete
  3. வாத்தியார் அவர்கட்கு,

    எனது மரியாதைகள்.

    இக்கதை ஆகச்சிறந்த உண்மையை நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல் உரைக்கவைத்தது.

    நன்றி!!

    இப்படிக்கு ,

    மோ.ராம்சுதர்சன்.

    ReplyDelete
  4. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    சிறப்புப் பகிர்வு!//////

    நல்லது. நன்றி வரதராஜன்!

    ReplyDelete
  5. //////Blogger Srimalaiyappanb sriram said...
    மிக அருமை ...//////

    நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  6. Respected Sir,

    Happy morning... Superb.

    Thanks & Regards,
    Ravi-avn

    ReplyDelete
  7. /////Blogger kmr.krishnan said...
    Enjoyed the moral story. Thank you Sir./////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  8. /////Blogger வேப்பிலை said...
    வருகை பதிவு////

    வருகைப் பதிவிற்கு நன்றி வேப்பிலையாரே!

    ReplyDelete
  9. /////Blogger M RAMSUDARSAN said...
    வாத்தியார் அவர்கட்கு,
    எனது மரியாதைகள்.
    இக்கதை ஆகச்சிறந்த உண்மையை நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல் உரைக்கவைத்தது.
    நன்றி!!
    இப்படிக்கு ,
    மோ.ராம்சுதர்சன்./////

    உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  10. AYYA VANAKKAM Arumaiyana sirukathai ,Mutthaippana kautthukkal. mighavum aalzhamahappathinthu vittathu nantri ayya,

    ReplyDelete
  11. அன்பிற்கும், மதிப்பிற்கும் உரிய ஆசிரியரே!,
    வணக்கம். நல்ல பதிவு.
    பற்றுதல் இல்லாமல், கடவுள் நினைவில் வாழ்ந்தால் மிக எளிமையாகவும், நம் கடமைகளை திறம்பட செய்தும், மற்றவர்களுக்கும் பயன் உள்ளதாகவும் வாழலாம்.
    முடிந்தவரை பற்றுதல் இல்லாமல் வாழ முயற்சி செய்து வருகிறேன்.! வயது இப்போது 40. இதன் பிறகு, எனக்கு இரண்டு முக்கியமான‌ லட்சியம்தான். 1. சமுதாயத்திற்கு என்னால் முடிந்த வரை நல்லதை செய்ய வேண்டும். 2. இயற்கையை காக்க (வளர்க்க) வேண்டும். முக்கியமாக மனிதர்களிடமிருந்து இயற்கையை பாதுகாக்க வேண்டும். மனிதர்கள் தான் இந்த இயற்கைக்கு மிக பெரும் அபாயத்தை உருவாக்கிறார்கள்.
    உங்களின் இது போன்ற பதிவுகள் உற்சாகத்தை அளிக்கிறது!
    நன்றி!! பன்னீர்செல்வம்.

    ReplyDelete
  12. அருமை அருமை ஐயா

    எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
    எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது

    எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.
    உன்னுடையதை எதை இழந்தாய், எதற்காக அழுகிறாய்?

    எதை நீ கொண்டுவந்தாய், அதை நீ இழப்பதற்கு?
    எதை நீ படைத்திருந்தாய், வீணாவதற்கு?

    எதை நீ எடுத்துக்கொண்டாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
    எதை கொடுத்தாயோ அதை இங்கேயே கொடுக்கப்பட்டது.

    எது இன்று உன்னுடையதோ, நாளை அது மற்றவருடையது ஆகிறது
    மற்றொரு நாள் அது வேறொருவர் ஆகிறது.

    - பகவத்கீதை

    கீதாசாரம் போல் தேனாமிர்தம் ஐயா.

    மிக்க நன்றி...

    அன்புடன்
    விகனசாயி.

    ====================================

    ReplyDelete
  13. வணக்கம் ஐயா,மனவளத்திற்க்கு சூத்திரம் கேட்டிருந்தேன்.மறக்காமல் எளிய கதை சொல்லி புரிய வைத்துள்ளீர்கள்.மிகவும் நன்றி.

    ReplyDelete
  14. நன்றி மிகமிக அருமை

    ReplyDelete
  15. ////Blogger kittuswamy palaniappan said...
    AYYA VANAKKAM Arumaiyana sirukathai ,Mutthaippana kautthukkal. mighavum aalzhamahappathinthu vittathu nantri ayya,/////

    பதிந்தால் சரிதான். நன்றி கிட்டுசாமி!

    ReplyDelete
  16. /////Blogger Selvam R said...
    அன்பிற்கும், மதிப்பிற்கும் உரிய ஆசிரியரே!,
    வணக்கம். நல்ல பதிவு.
    பற்றுதல் இல்லாமல், கடவுள் நினைவில் வாழ்ந்தால் மிக எளிமையாகவும், நம் கடமைகளை திறம்பட செய்தும், மற்றவர்களுக்கும் பயன் உள்ளதாகவும் வாழலாம்.
    முடிந்தவரை பற்றுதல் இல்லாமல் வாழ முயற்சி செய்து வருகிறேன்.! வயது இப்போது 40. இதன் பிறகு, எனக்கு இரண்டு முக்கியமான‌ லட்சியம்தான். 1. சமுதாயத்திற்கு என்னால் முடிந்த வரை நல்லதை செய்ய வேண்டும். 2. இயற்கையை காக்க (வளர்க்க) வேண்டும். முக்கியமாக மனிதர்களிடமிருந்து இயற்கையை பாதுகாக்க வேண்டும். மனிதர்கள் தான் இந்த இயற்கைக்கு மிக பெரும் அபாயத்தை உருவாக்கிறார்கள்.
    உங்களின் இது போன்ற பதிவுகள் உற்சாகத்தை அளிக்கிறது!
    நன்றி!! பன்னீர்செல்வம்./////

    ஆஹா... அப்படியே எப்போதும் உற்சாகமாக இருங்கள் பன்னீரசெல்வம்!

    ReplyDelete
  17. /////Blogger Vicknaa Sai said...
    அருமை அருமை ஐயா
    எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
    எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
    எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.
    உன்னுடையதை எதை இழந்தாய், எதற்காக அழுகிறாய்?
    எதை நீ கொண்டுவந்தாய், அதை நீ இழப்பதற்கு?
    எதை நீ படைத்திருந்தாய், வீணாவதற்கு?
    எதை நீ எடுத்துக்கொண்டாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
    எதை கொடுத்தாயோ அதை இங்கேயே கொடுக்கப்பட்டது.
    எது இன்று உன்னுடையதோ, நாளை அது மற்றவருடையது ஆகிறது
    மற்றொரு நாள் அது வேறொருவர் ஆகிறது.
    - பகவத்கீதை
    கீதாசாரம் போல் தேனாமிர்தம் ஐயா.
    மிக்க நன்றி...
    அன்புடன்
    விகனசாயி./////

    நல்லது.உங்களின் பாராட்டிற்கு நன்றி விக்னசாமி!

    ReplyDelete
  18. /////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,மனவளத்திற்க்கு சூத்திரம் கேட்டிருந்தேன்.மறக்காமல் எளிய கதை சொல்லி புரிய வைத்துள்ளீர்கள்.மிகவும் நன்றி./////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்!

    ReplyDelete
  19. ////Blogger k.k. kumar said...
    நன்றி மிகமிக அருமை/////

    நல்லது. நன்றி குமார்!

    ReplyDelete
  20. ////Blogger C.P. Venkat said...
    Super kuruji../////

    நல்லது. நன்றி வெங்கட்!

    ReplyDelete
  21. /////Blogger Subathra Suba said...
    Miga arumai iyya/////

    நல்லது. நன்றி சகோதரி!

    ReplyDelete

  22. வணக்கம் ஐயா

    மிகவும் அருமை....

    ReplyDelete
  23. இதை விட எளிதாக இந்த தத்துவத்தை யாராலும் விளக்க முடியாது என நினைக்கிறேன். அற்புதம்! மிக்க நன்றி

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com