மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

24.4.14

Monkeys in the net. இணையத்தில் திரியும் குரங்குகள்

Monkeys in the net. இணையத்தில் திரியும் குரங்குகள்

குரங்குகளைப் பற்றி, நிறையக் கதைகள் உண்டு. சுவாரசியமாக இருக்கும். ஆனால் மனிதர்கள் குரங்குகளைப் போல சேட்டை செய்தால் சுவாரசியாமாக இருக்காது.

இணையத்தில் மனிதர்கள் இருக்கிறார்கள், மாமனிதர்கள் இருக்கிறார்கள். குரங்குகளும் - அதாவது குரங்கு குணமுடையவர்களும் இருக்கிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு மனிதக் குரங்கு நம் வகுப்பறைக்கு வந்து வகுப்பறையைப் பூட்டி சாவியை எடுத்துக்கொண்டு போய்விட்டது.

வகுப்பறையைத் திறக்க முடியாத சூழ்நிலை!

அதாவது நம் வகுப்பறையை முடக்கும் நோக்கத்துடன்  Malware ஒன்றை எழுதி, வகுப்பறைக்குள் யார் நுழைந்தாலும் அடுத்த நிமிடமே அந்தக் குரங்கு திரியும் காட்டிற்குப் போகும்படி செய்துவிட்டது.

நான் 15 ஆண்டுகளாக கணினியை உபயோகிக்கிறேன். எட்டு ஆண்டுகளாக வலைப் பதிவுகளில் எழுதிவருகிறேன். பல்சுவை & வகுப்பறை ஆகிய இரண்டு பதிவுகளிலும் சேர்த்து இதுவரை 2,000ற்கும் மேற்பட்ட ஆக்கங்களை எழுதியுள்ளேன்.

நான் பொறியாளரும் அல்ல தொழில்நுட்ப வல்லுனரும் அல்ல! கணினியை உபயோகிக்கத் தெரியும். அவ்வளவுதான்

திகைத்துப்போய்விட்டேன். இரண்டு நாட்களாக மனை உளைச்சல் வேறு.

வகுப்பறைக் கண்மணிகள் நிறையப் பேர்களிடம் இருந்து மின்னஞ்சல் குவிந்துவிட்டன. விசாரித்த அனைவருக்கும் நன்றி உரித்தாகுக!

நம் வகுப்பறை மாணவர் ஒருவர்தான் கதைவைத் திறக்க உதவி செய்தார். அவர் பெயர் திருவாளர் விஜய். பெங்களூர்க்காரர். அவருக்கு என்னுடைய சார்பாகவும், உங்களுடைய சார்பாகவும் நம் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே - ஒரு
தலைவன் இருக்கிறான் மயங்காதே


என்ற கவியரசரின் வரிகளை நினைவு கூர்ந்துவிட்டு,  இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன். தலைவன் என்பது இங்கே இறைவனைக் குறிக்கும்! அந்தக் குரங்கைத் தண்டிக்கும் பொறுப்பை இறைவனிடமே விட்டு விடுகிறேன்.

என் ஆக்கங்கள் என்றும் குறையாத உற்சாகத்துடன் தொடரும். உங்களுடைய மேலான அன்பையும், அதரவையும் தொடர்ந்து நல்குமாறு கேட்டுக் கொள்கிறேன்!

நன்றி,
வணக்கம்,
மற்றும் என்றும் மாறாத
அன்புடன்
வாத்தியார்

--------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

65 comments:

  1. குரங்குகள் மரங்களின் மேல் தாவுவதை விடுத்து,இப்போ வகுப்பறை க்குள்ளும் நுழைந்து விட்டனவா?தண்டனை கொடுக்கும் பொறுப்பை இறைவனிடம் விட்டு விடுவோம்.

    ReplyDelete
  2. Respected Sir
    I was able to see the content from work. May be the firewall did not allow the monkey to do anything. Missed your lessions. Glad the issue is resolved now.

    My thanks Vijai as well.

    ReplyDelete
  3. கட்டண தளம் ஆகிவிட்டதோ என்றும் குழம்பி போனோம். "இன்று திறந்து விடுவார்..." ஐயா மனம் மாற பிரார்த்தனை கூட மனதில் பண்ணிகொண்டேன்.வகுப்பறையை எந்த அளவு ஈர்த்துள்ளது என்று இந்த இரு நாட்களில் தெரிந்து கொண்டேன்.ஏதோ திருஷ்டி என்று மறந்து விடுங்கள் ஐயா... இனி யாரும் இப்படிப்பட்ட காரியத்தை செய்யாதீர்கள். ஆயிரத்திற்கு மேற்பட்ட வாசகர்கள் மன வேதனை சும்மா விடாது...----------வகுப்பறையின் நலம் விரும்பும் ஜன்னல் மாணவர் சங்க உறுப்பினர் .

    ReplyDelete
  4. அப்போதே நினைத்தேன். இது ஏதாவது வைரஸ் அல்லது Malware வேலையாக இருக்கும் என்று. விட்டுத் தள்ளுங்கள். வயிற்றெரிச்சல் பிடித்தவர்கள் இப்படிதான் செய்வார்கள். வகுப்பறையை மீட்டு விட்டீர்கள் அல்லவா. இன்னும் அதிகமாக வயிறு எரிந்து சாகட்டும்.

    எப்படியோ அந்த சூழ்நிலையிலும் என்னால் வகுப்பறைக்குள் நுழைந்து பாடத்தைப் படித்து விட்டு 2 பின்னூட்டங்களை இட முடிந்தது.

    ReplyDelete
  5. மதிப்பிற்க்குரிய ஐயா வணக்கம்


    வகுப்பறையை யாரோ ஒருவர் பூட்டிவைத்த சம்பவத்தை தங்களின் பதிவின்
    மூலம் அறிந்தவுடன் அதிர்ச்சி அடைய நேர்ந்தது.என்ன நேர்ந்தது என அறிய‌
    முடியாதிருந்த என்னை போன்றவர்களுக்கு உண்மை பிரச்சனையை தெரிந்தவுடன்
    வருத்தம் அடையச்செய்தது.தங்களை மனகஷ்டத்தில் ஆழ்த்திய கயவர்கள்
    உரிய பலன்களை அனுபவிப்பார்கள்.தங்களுக்கு ஏற்பட்ட இடர்களை நானும்
    பகிர்ந்து கொள்கிறேன் ஐயா.

    நன்றி
    ல ரகுபதி

    ReplyDelete
  6. வகுப்பறைக்கு இடையூறு செய்தவர்க்கு தண்டனையை இறைவன் கொடுக்கட்டும்..
    தங்களுடைய பெருந்தன்மைக்கு ஒரு குறைவும் வராது.

    வாழ்க நலம்!..

    ReplyDelete
  7. ஆமாம்..
    அதனால் தான் அத்தனை இடைஞ்சல்

    என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
    இருட்டினில் நீதி மறையட்டுமே

    என எழுதிய பாடல் வரிகளுடன்
    எமது கருத்துக்கு செவி சாய்த்த

    நல்உள்ளங்களுக்கு
    நன்றிகள் உரித்தாகுக..

    ReplyDelete
  8. வணக்கம்,

    நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
    வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    www.Nikandu.com
    நிகண்டு.காம்

    ReplyDelete
  9. Thank you for recovering this site from Malware

    ReplyDelete
  10. மீண்டும் முகப்பு படம் மாற்றம்
    முன்வந்த அதே படம்..

    சென்டிமென்ட் ஏதேனம் இருக்கா
    செழிப்பாய் வளர

    மாற்றங்கள் தான் தேவை
    மாறாத மாற்றத்தினால்

    மாற்றங்கள் வரும்
    மறுமலர்ச்சியுடன் மலரும்

    முடிவுகளை காலம் சொல்லும்
    முதலுக்கே இந்த முடிவு

    இட்டுச் செல்லும்
    இது புரிந்தால் மகிழ்ச்சி

    இல்லையேல்
    இன்று போல்

    புரிந்தபின்
    புதிய மகிழ்ச்சி..

    ReplyDelete

  11. ஐயா,
    குருகிய எண்ணம்,குருகிய செயல்,என்றும் நிலைத்தது இல்லை.
    அன்புடன்,
    R.V.சுப்ரமணியம்

    ReplyDelete
  12. அந்த வலைதளக்காரர்கள் விளமபரம் மூலம் வருமானம் பார்ப்பவர்கள்.ஆகவே நிறைய வருகைப்பதிவு வந்தால் விளம்பர வருமானம் கூடும்.அதனால்தான் வகுப்பறை போன்ற நிறைய வருகை உள்ள வலைப்பூவை ஹைஜேக் செய்து தன்
    கணக்கில் ஏற்றிக் கொள்ள செய்த முயற்சியாகத் தெரிகிறது.

    எப்படியோ 'இதுவும் கடந்து போகும்' என்று இந்த சங்கடமான நாட்களும் கடந்துவிட்டன. நாள்தோறும் வகுப்பறைக்குத்தான் முதலில் வருவேன்.வகுப்பறை பூட்டிக்கிடந்த போது மணிக்கு ஒருமுறை நிலமை சீராகி விட்டதா என்று பார்த்துக் கொண்டு இருந்தேன்.

    பழனியப்பன் துணை உங்களுக்கு எப்போதும் உண்டு.இம்முறை பெங்களூர் விஜய்
    ரூப‌த்தில் வந்து உதவியுள்ளான். அந்த அன்பருக்கு மாணவர்களின் சார்பாக நன்றி.

    ReplyDelete
  13. அய்யா அவகளுக்கு வணக்கங்கள்.
    இன்று வகுப்பறை கதவுகள் திறக்கப் பட்டதும் மகிழ்ச்சி அடைந்தோம்.
    கேலக்ஸி வகுப்பிற்கு இன்னும் அனுமதி கிடைக்கப் பெறாத நிலையில் வகுப்பறை கதவுகளும் நமக்கு தடை செய்யப் பட்டு விட்டதோ என குழம்பி போய் வருத்தம் அடைந்திருந்தோம்.
    நடந்து விட்ட தவறு தெரிந்து நிம்மதி அடைகிறோம்.
    நன்றியுடன்,
    -peeyes.

    ReplyDelete
  14. Respected sir,
    Let the guilty may pleasure for some days but the quantum of punishment for his willful act will be high.
    Yours sincerely,
    k.umapathy.

    ReplyDelete
  15. Respected Sir,

    Happy to attend the class. I thought you are updating something in our class. God will care the bad people. If we are lucky, we can see their bad position.

    We can continue in our way even after many struggles with great confidence in god.

    My sincere gratitude for Mr. Vijay too.

    With kind regards,
    Ravi

    ReplyDelete
  16. நல்ல காரியம் செய்தீர் அய்யா!

    விஜய்க்கு மிகுந்த நன்றிகள்.

    ReplyDelete
  17. புண்ணியம் செய்ய முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. ஏன் இந்த பாவத்தை செய்கிறார்கள் ?இதனால் அவர்களுக்கு ஏதேனும் பிரயோஜனம் உண்டா ? அந்த கடவுளுக்கே வெளிச்சம் !. மனித மனம் குரங்கு தான் !. சரியான வார்த்தை சொன்னீர்கள் அய்யா !

    ReplyDelete
  18. அன்புள்ள அய்யா
    மிக்க அதிர்ச்சியாக உள்ளது. இந்த வகுப்பு ஒரு வரபிரசாதம். இதனை அழிக்க நினைப்பவர்களுக்கு அந்த இறைவன் நல்ல புத்தி கொடுகட்டும்

    ReplyDelete
  19. தாங்கள்தான் விடுமுறை விட்டதாக நினைத்து சும்மா இருந்துவிட்டேன்.
    மன்னிக்கவும்.உலக அளவில் தற்போது மிகப்பெரிய வைரஸ் பரவிவருவதாக கீழ்கண்ட தகவல் தெரிவிக்கிறது.
    http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=20114&ncat=4

    ReplyDelete
  20. ////Blogger Subramaniam Yogarasa said...
    குரங்குகள் மரங்களின் மேல் தாவுவதை விடுத்து,இப்போ வகுப்பறைக்குள்ளும் நுழைந்து விட்டனவா?தண்டனை கொடுக்கும் பொறுப்பை இறைவனிடம் விட்டு விடுவோம்.////

    இவை எல்லாம் மனிதக் குரங்குகள்தானே. மரத்திற்கு மரம் தாவினால் கால் ஒடிந்து போகாதா? அதானால் உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டே, தாங்கள் கற்ற கல்வியைத் தவறான முறையில் பயன் படுத்துகிறார்கள். எங்காவது ஒரு இடத்தில் வசமாகச் சிக்குவார்கள். அப்போது தண்டிக்கப் படுவார்கள்!

    ReplyDelete
  21. //Blogger Dallas Kannan said...
    Respected Sir
    I was able to see the content from work. May be the firewall did not allow the monkey to do anything. Missed your lessions. Glad the issue is resolved now.
    My thanks Vijai as well.////

    நல்லது. நன்றி டல்லாஸ் அன்பரே!

    ReplyDelete
  22. ///Blogger nathan said...
    கட்டண தளம் ஆகிவிட்டதோ என்றும் குழம்பி போனோம். "இன்று திறந்து விடுவார்..." ஐயா மனம் மாற பிரார்த்தனை கூட மனதில் பண்ணிகொண்டேன்.வகுப்பறையை எந்த அளவு ஈர்த்துள்ளது என்று இந்த இரு நாட்களில் தெரிந்து கொண்டேன்.ஏதோ திருஷ்டி என்று மறந்து விடுங்கள் ஐயா... இனி யாரும் இப்படிப்பட்ட காரியத்தை செய்யாதீர்கள். ஆயிரத்திற்கு மேற்பட்ட வாசகர்கள் மன வேதனை சும்மா விடாது...----------வகுப்பறையின் நலம் விரும்பும் ஜன்னல் மாணவர் சங்க உறுப்பினர்/////

    எதற்காக ஜன்னல். இணைய வகுப்புதானே.தேவையான இடம் இருக்கிறது. உள்ளே வந்து அமர்ந்து படியுங்கள் நாதன்!

    ReplyDelete
  23. ////Blogger Kirupanandan A said...
    அப்போதே நினைத்தேன். இது ஏதாவது வைரஸ் அல்லது Malware வேலையாக இருக்கும் என்று. விட்டுத் தள்ளுங்கள். வயிற்றெரிச்சல் பிடித்தவர்கள் இப்படிதான் செய்வார்கள். வகுப்பறையை மீட்டு விட்டீர்கள் அல்லவா. இன்னும் அதிகமாக வயிறு எரிந்து சாகட்டும்.
    எப்படியோ அந்த சூழ்நிலையிலும் என்னால் வகுப்பறைக்குள் நுழைந்து பாடத்தைப் படித்து விட்டு 2 பின்னூட்டங்களை இட முடிந்தது.////

    நல்லது. உங்களுடைய மேலான பின்னூட்டத்திற்கு நன்றி கிருபானந்தன்!

    ReplyDelete
  24. /////Blogger raghupathi lakshman said...
    மதிப்பிற்க்குரிய ஐயா வணக்கம்
    வகுப்பறையை யாரோ ஒருவர் பூட்டிவைத்த சம்பவத்தை தங்களின் பதிவின்
    மூலம் அறிந்தவுடன் அதிர்ச்சி அடைய நேர்ந்தது.என்ன நேர்ந்தது என அறிய‌
    முடியாதிருந்த என்னை போன்றவர்களுக்கு உண்மை பிரச்சனையை தெரிந்தவுடன்
    வருத்தம் அடையச்செய்தது.தங்களை மனகஷ்டத்தில் ஆழ்த்திய கயவர்கள்
    உரிய பலன்களை அனுபவிப்பார்கள்.தங்களுக்கு ஏற்பட்ட இடர்களை நானும்
    பகிர்ந்து கொள்கிறேன் ஐயா.
    நன்றி
    ல ரகுபதி/////

    பகிர்ந்து கொள்ளும் உங்களின் நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!

    ReplyDelete
  25. ////Blogger துரை செல்வராஜூ said...
    வகுப்பறைக்கு இடையூறு செய்தவர்க்கு தண்டனையை இறைவன் கொடுக்கட்டும்..
    தங்களுடைய பெருந்தன்மைக்கு ஒரு குறைவும் வராது.
    வாழ்க நலம்!../////

    நல்லது. உங்களுடைய மேலான பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!

    ReplyDelete
  26. ////Blogger வேப்பிலை said...
    ஆமாம்..
    அதனால் தான் அத்தனை இடைஞ்சல்
    என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
    இருட்டினில் நீதி மறையட்டுமே
    என எழுதிய பாடல் வரிகளுடன்
    எமது கருத்துக்கு செவி சாய்த்த
    நல்உள்ளங்களுக்கு
    நன்றிகள் உரித்தாகுக..////

    நல்லது. நன்றி வேப்பிலையாரே! வகுப்பறை வாசலில் இரண்டு வேப்பங்கன்றுகளை நட்டு வைக்கலாமா? உங்கள் யோசனை என்ன?

    ReplyDelete
  27. ////Blogger நிகண்டு தமிழ் பதிவர் சமுக வலைத்தளம் said...
    வணக்கம்,
    நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
    வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
    www.Nikandu.com
    நிகண்டு.காம்////

    நல்லது. தகவலுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  28. /////Blogger S Balaji said...
    Thank you for recovering this site from Malware/////

    நம் வகுப்பறைக்கு கணினித் துறையைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொறியாளர்கள் வருகிறார்கள். எந்தச் சிக்கலுக்கும் அவர்கள் கை கொடுப்பார்கள்! மாணவர்கள்தான் நம் வகுப்பறையின் பலம்.

    ReplyDelete
  29. ////Blogger வேப்பிலை said...
    மீண்டும் முகப்பு படம் மாற்றம்
    முன்வந்த அதே படம்..
    சென்டிமென்ட் ஏதேனம் இருக்கா
    செழிப்பாய் வளர
    மாற்றங்கள் தான் தேவை
    மாறாத மாற்றத்தினால்
    மாற்றங்கள் வரும்
    மறுமலர்ச்சியுடன் மலரும்
    முடிவுகளை காலம் சொல்லும்
    முதலுக்கே இந்த முடிவு
    இட்டுச் செல்லும்
    இது புரிந்தால் மகிழ்ச்சி
    இல்லையேல்
    இன்று போல்
    புரிந்தபின்
    புதிய மகிழ்ச்சி..////

    நீங்கள் சொன்னால் புரியாமல் இருக்குமா? நன்றி வேப்பிலையாரே!

    ReplyDelete
  30. ////Blogger venkata subramaniam said...
    ஐயா,
    குருகிய எண்ணம்,குருகிய செயல்,என்றும் நிலைத்தது இல்லை.
    அன்புடன்,
    R.V.சுப்ரமணியம்////

    உண்மைதான். அது அவர்களுக்கு விளங்குவதில்லை. புரிவதில்லை. அதுதான் இதுபோன்ற அவலங்கள்! சிரமங்கள்!

    ReplyDelete
  31. ////Blogger kmr.krishnan said...
    அந்த வலைதளக்காரர்கள் விளமபரம் மூலம் வருமானம் பார்ப்பவர்கள்.ஆகவே நிறைய வருகைப்பதிவு வந்தால் விளம்பர வருமானம் கூடும்.அதனால்தான் வகுப்பறை போன்ற நிறைய வருகை உள்ள வலைப்பூவை ஹைஜேக் செய்து தன் கணக்கில் ஏற்றிக் கொள்ள செய்த முயற்சியாகத் தெரிகிறது.
    எப்படியோ 'இதுவும் கடந்து போகும்' என்று இந்த சங்கடமான நாட்களும் கடந்துவிட்டன. நாள்தோறும் வகுப்பறைக்குத்தான் முதலில் வருவேன்.வகுப்பறை பூட்டிக்கிடந்த போது மணிக்கு ஒருமுறை நிலமை சீராகி விட்டதா என்று பார்த்துக் கொண்டு இருந்தேன்.
    பழனியப்பன் துணை உங்களுக்கு எப்போதும் உண்டு.இம்முறை பெங்களூர் விஜய்
    ரூப‌த்தில் வந்து உதவியுள்ளான். அந்த அன்பருக்கு மாணவர்களின் சார்பாக நன்றி./////

    எனக்கு ஆன்ம பலத்தைக் கொடுப்பவர் பழநிஅப்பன்! உங்களுடைய மேலான பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  32. ////Blogger GOWDA PONNUSAMY said...
    அய்யா அவகளுக்கு வணக்கங்கள்.
    இன்று வகுப்பறை கதவுகள் திறக்கப் பட்டதும் மகிழ்ச்சி அடைந்தோம்.
    கேலக்ஸி வகுப்பிற்கு இன்னும் அனுமதி கிடைக்கப் பெறாத நிலையில் வகுப்பறை கதவுகளும் நமக்கு தடை செய்யப் பட்டு விட்டதோ என குழம்பி போய் வருத்தம் அடைந்திருந்தோம்.
    நடந்து விட்ட தவறு தெரிந்து நிம்மதி அடைகிறோம்.
    நன்றியுடன்,
    -peeyes./////

    நல்லது நண்பரே!

    ReplyDelete
  33. ///Blogger sundarkmy said...
    This is a psycho monkey!!!! and pretend to be smart, but he is not!////

    உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி சுந்தர்!

    ReplyDelete
  34. ////Blogger k.umapathy said...
    Respected sir,
    Let the guilty may pleasure for some days but the quantum of punishment for his willful act will be high.
    Yours sincerely,
    k.umapathy./////

    உண்மைதான். உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி உமாபதி!

    ReplyDelete
  35. ////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy to attend the class. I thought you are updating something in our class. God will care the bad people. If we are lucky, we can see their bad position.
    We can continue in our way even after many struggles with great confidence in god.
    My sincere gratitude for Mr. Vijay too.
    With kind regards,
    Ravi/////

    அவனிருக்க பயமில்லை. அதுதான் நமது தாரகமந்திரம். நன்றி ரவிச்சந்திரன்!

    ReplyDelete
  36. /////Blogger Govindasamy said...
    நல்ல காரியம் செய்தீர் அய்யா!
    விஜய்க்கு மிகுந்த நன்றிகள்.////

    நல்லது. நன்றி கோவிந்தசாமி!

    ReplyDelete
  37. /////Blogger murali krishna g said...
    புண்ணியம் செய்ய முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. ஏன் இந்த பாவத்தை செய்கிறார்கள் ?இதனால் அவர்களுக்கு ஏதேனும் பிரயோஜனம் உண்டா ? அந்த கடவுளுக்கே வெளிச்சம் !. மனித மனம் குரங்கு தான் !. சரியான வார்த்தை சொன்னீர்கள் அய்யா !/////

    நமக்குத் தெரியாது. அவர்களுக்கு இதனால் ஏதாவது கிடைக்கும். அது அவர்களுக்கு மட்டுமே தெரியும்!

    ReplyDelete
  38. /////Blogger Bala.N said...
    அன்புள்ள அய்யா
    மிக்க அதிர்ச்சியாக உள்ளது. இந்த வகுப்பு ஒரு வரபிரசாதம். இதனை அழிக்க நினைப்பவர்களுக்கு அந்த இறைவன் நல்ல புத்தி கொடுகட்டும்/////

    கொடுப்பார். நம்பிக்கையோடு இருங்கள்!

    ReplyDelete
  39. /////Blogger Thirumal Muthusamy said...
    தாங்கள்தான் விடுமுறை விட்டதாக நினைத்து சும்மா இருந்துவிட்டேன்.
    மன்னிக்கவும்.உலக அளவில் தற்போது மிகப்பெரிய வைரஸ் பரவிவருவதாக கீழ்கண்ட தகவல் தெரிவிக்கிறது.
    http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=20114&ncat=4/////

    உண்மைதான். நானும் படித்தேன், நண்பரே!

    ReplyDelete
  40. sir
    keduvaan kedu ninaipan

    thanks to mr.vijay

    ReplyDelete
  41. இவ்வளவு நடந்திருக்கா? கேலக்ஸி தளத்தில் விடுமுறை அளித்த செய்தி படித்து விட்டு பழைய பாடம் எதையாவது எடுத்து படிக்கலாம் என்று வந்தால் தான் தெரிகிறது யாரோ ஒருவர் சேட்டை செய்திருக்கிறார் என்று. இனி அந்த அன்பர் இது போன்ற செய்கைகளில் ஈடுபடாமலிருந்தால் இறைவன் அவரை மன்னிப்பார் என்று நினைக்கிறேன். அவருக்கு இறைவன் நல்லறிவை புகட்டட்டும்.

    ReplyDelete
  42. அன்பர் விஜய்க்கு நன்றி

    ReplyDelete
  43. திரு KMRK அவர்கள் இப்படி செய்தவர்களின் நோக்கம் என்னவென்று கண்டுபிடித்து சொல்லி விட்டார். நான் கூட இந்த வகுப்பறையில் பின் தொடருபவர்கள் நான்காயிரம் பேருக்கு மேல் இருக்கிறார்களே. அந்த வயிற்றெரிச்சலில்தான் இப்படி செய்தார்களோ என்று நினைத்து விட்டேன். உனக்கு எப்படி தெரியும், பக்கத்திலிருந்து பார்த்தாயா? என்றேல்லாம் குதர்க்கமாக கேள்வி யாரும் கேட்கவில்லை என்ற வகையில் மகிழ்ச்சி. இதற்கென்றே ஒருவர் இங்கு வந்து போய் கொண்டிருக்கிறார்.

    ReplyDelete
  44. அன்புடன் வாத்தியார் அய்யா வணக்கம்

    சரிதான் !!!வகுப்பறை விடுமுறை என்பதால் .வாத்தியார் அய்யா தனது சொந்த வேலையாக **வேலைய்யாவை** வணங்க போயிருக்கலாம் என்று எண்ணினால் .
    . ஏனென்னமோ நடந்து விட்டதே..வகுப்பறை தோழர் அன்பர் விஜய் அவர்களுக்கு நன்றிகள் .

    வாத்தியார் அய்யா நீங்கள் எங்கள் போன்ற மாணவர்களுக்கு மன தைரியமும் ..எது நடந்தாலும் அது ஒரு வகை நன்மைக்கே ..விதி வலியது மாற்ற யாராலும் முடியாது ....என்று கூறுவீர்கள் .. நீங்கள் மனம் கலங்கலாமா..!!!
    [.சொல்லுகிற நானும் கலங்குவேன் .தல வலியும் காய்ச்சலும் அவரவர்க்கு .வந்தால்தான் தெரியும் ]

    கைகளில் தண்டம் வைத்திருக்கும் அப்பன் பழனி ஆண்டவன் தண்டிப்பான் .... .

    ReplyDelete
  45. ஐயா தற்சமயம் நம்முடைய இந்த இணைய தளத்தில் காப்பி செய்யும்படியான option உள்ளது / அதனை முன்பிருந்தது போல முடக்கவும்

    நன்றி

    ReplyDelete
  46. நான் என்னுடைய கணினி கோளாறு என நினைத்துவிட்டேன்

    ReplyDelete
  47. நன்றி விஜய் அவர்களே!

    ReplyDelete
  48. பலரின் comments களைபடிக்கும்போது உயிர் போய் வந்ததைப்போல உள்ளது

    ReplyDelete
  49. ///Kirupanandan A said...
    இதற்கென்றே ஒருவர் இங்கு வந்து போய் கொண்டிருக்கிறார்.///

    ஆமாம்
    அது தானே

    இது எப்படி
    இப்போ உங்களுக்கு தெரியும்
    (ஹி..ஹி..)

    ReplyDelete
  50. sir from nellai padmanaban , thanks for bangalore friend to extend his help for restoring the url site. Also I firmly belief on god and no body can stop your social service. continue with your service in same sprit, what ever may the evils attack us we can be saved at the next moment
    nellai padmanaban






















    ReplyDelete
  51. ////Blogger umajana said...
    naanum maanavan thaan...neengal thaan kadhavai pootti vitteerkalo enru enninaen. thanks to vijay./////

    நல்லது நன்றி நண்பரே! உங்களுடைய நன்றி அறிவிப்பு அவரைச் சென்று அடையும்!

    ReplyDelete
  52. /////Blogger sarans said...
    sir
    keduvaan kedu ninaipan
    thanks to mr.vijay////

    உண்மைதான். நல்லது நன்றி நண்பரே!

    ReplyDelete
  53. //////Blogger thozhar pandian said...
    இவ்வளவு நடந்திருக்கா? கேலக்ஸி தளத்தில் விடுமுறை அளித்த செய்தி படித்து விட்டு பழைய பாடம் எதையாவது எடுத்து படிக்கலாம் என்று வந்தால் தான் தெரிகிறது யாரோ ஒருவர் சேட்டை செய்திருக்கிறார் என்று. இனி அந்த அன்பர் இது போன்ற செய்கைகளில் ஈடுபடாமலிருந்தால் இறைவன் அவரை மன்னிப்பார் என்று நினைக்கிறேன். அவருக்கு இறைவன் நல்லறிவை புகட்டட்டும்./////

    அது அவருடைய வயதையும், இறைநம்பிக்கையையும் பொறுத்தது. இல்லை என்றால் திருந்துவதற்கு கொஞ்ச நாட்கள் ஆகும்!

    ReplyDelete
  54. ////Blogger thozhar pandian said...
    அன்பர் விஜய்க்கு நன்றி/////

    ஆமாம். நன்றியை நாம் அனைவரும் அவருக்குச் செலுத்தக் கடமைப் பட்டுள்ளோம்.

    ReplyDelete
  55. /////Blogger Kirupanandan A said...
    திரு KMRK அவர்கள் இப்படி செய்தவர்களின் நோக்கம் என்னவென்று கண்டுபிடித்து சொல்லி விட்டார். நான் கூட இந்த வகுப்பறையில் பின் தொடருபவர்கள் நான்காயிரம் பேருக்கு மேல் இருக்கிறார்களே. அந்த வயிற்றெரிச்சலில்தான் இப்படி செய்தார்களோ என்று நினைத்து விட்டேன். உனக்கு எப்படி தெரியும், பக்கத்திலிருந்து பார்த்தாயா? என்றேல்லாம் குதர்க்கமாக கேள்வி யாரும் கேட்கவில்லை என்ற வகையில் மகிழ்ச்சி. இதற்கென்றே ஒருவர் இங்கு வந்து போய் கொண்டிருக்கிறார்.//////

    அப்படியா? அவரும் மாணவர்தானே! நான் கண்டுகொள்வதில்லை!

    ReplyDelete
  56. /////Blogger hamaragana said...
    அன்புடன் வாத்தியார் அய்யா வணக்கம்
    சரிதான் !!!வகுப்பறை விடுமுறை என்பதால் .வாத்தியார் அய்யா தனது சொந்த வேலையாக **வேலைய்யாவை** வணங்க போயிருக்கலாம் என்று எண்ணினால் .
    . ஏனென்னமோ நடந்து விட்டதே..வகுப்பறை தோழர் அன்பர் விஜய் அவர்களுக்கு நன்றிகள் .
    வாத்தியார் அய்யா நீங்கள் எங்கள் போன்ற மாணவர்களுக்கு மன தைரியமும் ..எது நடந்தாலும் அது ஒரு வகை நன்மைக்கே ..விதி வலியது மாற்ற யாராலும் முடியாது ....என்று கூறுவீர்கள் .. நீங்கள் மனம் கலங்கலாமா..!!!
    [.சொல்லுகிற நானும் கலங்குவேன் .தல வலியும் காய்ச்சலும் அவரவர்க்கு .வந்தால்தான் தெரியும் ]
    கைகளில் தண்டம் வைத்திருக்கும் அப்பன் பழனி ஆண்டவன் தண்டிப்பான் .... ./////

    மனம் கலங்கவில்லை. ஆனால் மன உளைச்சல் ஏற்பட்டது என்னவோ உண்மைதான்!

    ReplyDelete
  57. /////Blogger Senthil Nathan said...
    ஐயா தற்சமயம் நம்முடைய இந்த இணைய தளத்தில் காப்பி செய்யும்படியான option உள்ளது / அதனை முன்பிருந்தது போல முடக்கவும்
    நன்றி////

    நன்றி சரி செய்துவிட்டேன். இப்போது பாருங்கள்!

    ReplyDelete
  58. /////Blogger Senthil Nathan said...
    நான் என்னுடைய கணினி கோளாறு என நினைத்துவிட்டேன்/////

    பலரும் ஆளுக்கு ஒரு காரணத்தை நினைத்திருக்கிறார்கள். இப்போது அனைவருக்கும் உண்மை தெரிந்திருக்கிறது!

    ReplyDelete
  59. ////Blogger Senthil Nathan said...
    நன்றி விஜய் அவர்களே!/////

    ஆமாம். அவருக்கு நம் நன்றியைத் தெரிவிப்பதுதான் முக்கியம்.

    ReplyDelete
  60. ///Blogger Senthil Nathan said...
    பலரின் comments களை படிக்கும்போது உயிர் போய் வந்ததைப்போல உள்ளது/////

    இறைவனின் சித்தம் நம் பக்கம் இருக்கும்போது. உயிர் அப்படி சட்டென்று போய்விடாது!

    ReplyDelete
  61. /////Blogger Barathi GP said...
    sir from nellai padmanaban , thanks for bangalore friend to extend his help for restoring the url site. Also I firmly belief on god and no body can stop your social service. continue with your service in same sprit, what ever may the evils attack us we can be saved at the next moment
    nellai padmanaban////

    ஆமாம். உண்மைதான். இறையருள் நமக்கு உதவி செய்யும். இந்தமுறை நமது வகுப்பறை மாணவர் விஜயின் மூலம் உதவி செய்திருக்கிறார் இறைவன்!

    ReplyDelete
  62. I too afraid, this site is becoming a 'chargeable site' ! Please forgive me. Now only I understood what has happened. I do not know under what reasons those guys behaved like this.Genuinely persons unable to pay use your this site and attained peace in one way.

    Manickam

    ReplyDelete
  63. Mr.VIJAY SIR, THANKS A LOT.

    Dear Subbiah sir, This is a small hurdle. When ALMIGHTY Is With you nobody can stop you.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com