மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

8.4.14

Astrology: மலர் இல்லாத தோட்டமா, மகன் இல்லாத அன்னையா, மகனே நீ இல்லையா?

 
Astrology: மலர் இல்லாத தோட்டமா, மகன் இல்லாத அன்னையா, மகனே நீ இல்லையா?

Quiz: 50 புதிர் எண்.50

விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

8.4.2014

Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!

இன்றைப் பாடத்திற்கு ஒரே ஒரு கேள்வி தான். அந்தக் கேள்விக்கு மட்டும் பதில் எழுதுங்கள் போதும்!
------------------------------------
கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் ஒரு அம்மணியின் ஜாதகம்.

ஒரு பெண்ணிற்குத் திருமணமானவுடன் குழந்தை பிறக்க வேண்டும். அதுதான் அவளுக்குத் தனிப்பட்ட மகிழ்ச்சியையும், இருவீட்டாரிடமும் பரஸ்பரம் ஒரு நெருக்கத்தையும் உண்டு பண்ணும். திருமணமான அடுத்த ஆண்டே அது நிகழ வேண்டும். அல்லது குறைந்த பட்சம் மூன்று ஆண்டுகளுக்குள்ளாவது அந்நிகழ்வு ஏற்பட வேண்டும்.

அம்மணிக்குக் குழந்தைகள் உண்டா அல்லது இல்லையா? குழந்தை உண்டு என்றால் உடனே பிறந்ததா? அல்லது தாமதமாகப் பிறந்ததா? குழந்தை இல்லை என்றால், ஏன் இல்லை?

வழக்கமாக 2, 11, 4, 7 ஆம் வீடுகளை மட்டுமே அலசி வந்த உங்களுக்கு இன்று வித்தியாசமாக 5ஆம் வீட்டை அலசும் வாய்ப்பைக் கொடுத்துள்ளேன்



அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்! விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

ஆணித்தரமாக எழுதினால்தான் பாஸ்மார்க்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்
===================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

32 comments:

  1. சனைச்சரன் நிற்பது பூராடம் மூன்றாம் பாதத்தில்.குரு பகவான் நிற்பது மூலம் இரண்டாம் பாததில். மாந்தி, சனியால் லக்கினமும், குருபகவானும் பாப‌கர்த்தாரியில்ல் மாட்டிக்கொண்டனர். விருச்சிக லக்கினம் என்பதால் குருவே 5ம் இடத்து அதிபதி. அதிபதியும், காரகனுமான் குருபகவான் அடிவாங்கிவிட்டார்.

    5ம் இடமும் செவ்வாய் கேதுவால் பாபகர்த்தாரியில் சிக்கிவிட்டது. 9க்கு உடைய
    சந்திரனும் 6ல் சென்று மறைந்துவிட்டார்.

    சுக்கிரன் அஸ்தங்கதம்,குருவக்கிரம்!
    அம்மையாருக்கு சந்தான பாக்கியம் இல்லை.

    ReplyDelete
  2. She could have delay in getting child as 5th house in paba-karthari yoga. But she will get child as guru in his own house. Lagnathpathy sevvai in own house with bayathipathy.
    Delayed child.

    ReplyDelete
  3. Respected Sir
    1. Looks like the marriage itself was delayed as 7th lord/Sukran is in 8th house with Sun (Asthamanam) and 7th house is with Papakarthari and subha karthair yogam.
    2. 5th house is in papakarthari yogam. Laknathipath and Bhakyathipati, both are in 6th house. Guru is in Vakram with Vakra Sani. All are negative. But based on Guru's placement (10th place from 5th place) and strength (own house with 5 parals), I am going to say she should have kids but delayed.

    I hope I get it right at least this time :)

    ReplyDelete
  4. She has the gift of child, Bcos Puthirakaraka "Guru" in 2nd place , and 5th lord is also in his own house with 4th lord. So she is blessed with child.

    ReplyDelete
  5. ஜாதகருக்கு குழந்தை பாக்கியம் கிடையாது, காரணங்கள்:
    (1) லக்கிணாதிபதி ஆறாம் இடத்தில்.
    (2) ஐந்தாம் வீடு அதிபதி மற்றும் காரகன் (குரு) ஆட்சியுடன் இருந்தாலும் அந்த வீடு பாப கர்தாரி யோகத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
    (3) மேலும் குருவின் பார்வை அந்த வீட்டில் விழவில்லை.

    நன்றியுடன்
    ச. பாலாஜி.

    ReplyDelete
  6. அம்மணியின் திருமணம் தாமதமாக நடந்திருக்கும்.
    குழந்தையும் உடனே பிறந்திருக்காது. தாமதமாகவே பிறந்திருக்கும்.

    1) களத்திர ஸ்தானம் கத்தரிக்குள் இருப்பதாலும் சுக்கிரன் பாபியுடன் எட்டில் மறைந்த்தாலும், திருமண தாமதம்.

    2) அயன,சயன,போக போக்கிய ஸ்தானத்தில் மாந்தி; ஸ்தானாதிபதியோ எட்டில் பாபியுடன். எனவே சயனபோகமும் குறைவுதான்.

    இந்த அடிப்படைக் காரணங்களைத் தவிர, புத்திர காரகனான குரு, சனியின் சேர்க்கையினாலும், சுக்கிரன் (எதிரி மற்றும் விரையாதிபதி) பார்வையினாலும் பாதிக்கப் பட்டிருப்பதால் புத்திரப் பேறு தாமதமாகி இருக்கும்.

    காரகன் ஆட்சி பெற்ற ஒரே காரணத்தால், புத்திர பேறு உண்டு; ஆனால் பாதிப்பினால் தாமதமாகவே அமைந்திருக்கும்.

    ReplyDelete
  7. Dear Sir,

    The lady does not have child.

    Because the 5th lord is with Saturn and aspected by 12th lord sukran.

    lagna lord in 6th and hence not supporting.

    9th lord chandran in 6th and not supporting.

    Thanking you sir.

    ReplyDelete
  8. ஐந்தாம் இடம் பாபா கர்த்தாரி யோகத்தில் சிக்கி உள்ளது.
    ஐந்தாம் இட அதிபர் சனியுடன் சேர்ந்து இரண்டாம் இடத்தில் உள்ளார்.
    குருவிற்கு மூலத்திரிகோண வீடு.
    ஆகவே தாமதமாக குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

    ReplyDelete
  9. ஜாததாகிக்கு தாமத புத்திர பாக்கியம்.

    5 ம் இடம் பாப கர்தத்தி யோகத்தில் (கேது க்கும் செவ்வாய் க்கும் நடுவில்).

    இருந்தாலும் 5ம் அதிபதி குரு (புத்திர காரகனும் கூட) ஆட்சி.

    ReplyDelete
  10. 1. 5க்கு உடைய குரு ஆட்சி பெற்று 2ல் உள்ளத்தால், குழந்தை பாக்கியம் உண்டு.
    2. 5க்கு உடைய குரு, சனியுடன் உள்ளத்தால் குழந்தை பிறப்பில் தாமதம்.

    ReplyDelete
  11. ஐயா,
    5ம் அதிபதி குரு, 2ல். அன்பான கணவனும், அழகான குழந்தையும்
    குரு அருளால் நிச்சயம் உண்டு. 5ஆம் இடம் பாப கர்த்தாரியில்
    இருப்பதால் குழந்தை சற்று தாமதமாக பிறக்கும்.
    அ.நடராஜன்

    ReplyDelete
  12. மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,

    புதிர் பகுதி 50 ல் கொடுத்திருந்த ஜாதகத்தின்படி,

    புத்திரகாரகனும், புத்திர ஸ்தான அதிபதியுமான குரு, ஆட்சி பலம் பெற்று குடும்ப ஸ்தானத்தில் இருப்பதால், நிச்சயம் குழந்தை உண்டு. ஆனால் மிகவும் தாமதமாக குருவின் தசா புக்தி காலத்தில் பிறந்திருக்கும்.

    ReplyDelete
  13. Ayya,

    She would have got Kid after sometime. The reasons are: 1. 5th House Owner & Karakan Guru is along with Shani. Basically Shani slows things. 2. 5th house is in Papa Karthari Yoga. One side Chevvai & Another side is Ketu. 3. 5th house owner is sitting in 10th house from 5th house. ie Kendra house for 5th house.

    Your Student,
    Trichy Ravi

    ReplyDelete
  14. Adding this point ...
    ராசிக்கு 5ல் ராகு, புத்திர தோஷம், ஆனால் குருவின் 10ம் பார்வையால் தோஷம் விலகி தாமதமாக குழந்தை பிறப்பு உண்டு.

    ReplyDelete
  15. லக்னாதிபதியும் ராசி அதிபதியும் செவ்வாய். பாக்கியதிபதி சந்திரன் ஆறில் மறைவு. செவாய்யுடன் கூட்டு!. மேஷத்தில் செவ்வாய் ஆட்சி. ஐந்தாம் இடம் பாபாகத்ரி யோகத்தில் கேதுவுக்கும் செவ்வாய்க்கும் இடையே மாட்டி கொண்டிருக்கிறது !. ஐந்தாம் இட அதிபதியும் புத்திர காரகனுமான குரு இரண்டாம் இடத்தில் ஆட்சி ஆனால் சனியுடன். குருவுக்கு சூரியன் சுக்ரன் பார்வை.
    அதனால் தாமதமான ஆண் மகவு பாக்கியம். சரியா அய்யா ?. செவ்வாய் தசையில் ஆண் மகவு பிறந்திருக்கும்.

    ReplyDelete
  16. quiz-50


    Answer: late child birth

    reasons:

    1. In 4th place kethu bhagavan placed

    2. sani aspects 4th place

    child birth reasons:

    1. 7th lord suk aspects 5th lord
    2. 5th lord in 2nd house with 4th lord

    3. 9h lord with lagnathipathi

    4. 2nd lord and 4th lord guru aspects poorva puniyathipathi chandran

    rameshraja

    ReplyDelete
  17. அய்யா இவர் குழந்தை பாக்கியம் அற்றவர் அப்படி பிறந்தாலும் குறையுள்ள குழந்தையாக இருப்பின் பிழைத்திருக்கும் ., என் என்றால் ஐந்தாம் அதிபதி குரு வக்கிரமடைந்து இரண்டாம் இடத்தில அதாவது தன்னுடைய வீட்டிற்கு பத்தாமிடத்தில் முன்றாமிட வக்கிர சனியுடன் . எட்டாமிட கிரகங்களின் பார்வையுடன்

    ReplyDelete
  18. ஐயா வணக்கம்,

    20.06.1960ல் பிறந்த பெண்மணியின் ஜாதகம்.

    விடை:-
    1. புத்திர பாக்கியம் உண்டு
    2. உடனே பிறந்திருக்கும்.

    அலசல்:-
    ======
    பொது:-
    1. விருச்சிக லக்னம். லக்னாதிபதி மூலத்திரிகோணம் பெற்றாலும், 6ல் மறைவு.

    2. 7ம் அதிபதி மற்றும் களத்திரகாரகன் 8ல் மறைவு.

    3. 2ல் சனி, 12ல் மாந்தி.

    4. சந்திரன் கேமத்ருமா யோகத்திலும் லக்னம் பாபகர்த்தாரி யோகத்திலும் சிக்கி இருக்கின்றன.

    அடிப்படையில், சிரம தசையில் இருக்கும் ஜாதகிக்கு திருமணம் தாமதமாகி இருக்கலாம்.

    புத்திர பாக்கியம்:-

    புத்திர பாக்கியத்திற்கு, 5ம் வீடு, 5ம் வீட்டின் அதிபதி, அவன் சென்று அமர்ந்த இடம், புத்திர காரகன் குரு ஆகியோரைப் பார்க்க வேண்டும்.

    இந்த ஜாதகத்தில், 5ம் வீட்டின் அதிபதி குரு, தனது மூலத்திரிகோண வீட்டில், லக்கினத்திற்கு இரண்டில் அமர்ந்துள்ளார். இது ஒரு அருமையான அமைப்பு.

    ஐந்தாம் வீட்டிற்கு எந்த ஒரு தீய கிரகத்தின் பார்வையும் இல்லை.

    குருவுடன் சனி இருப்பது ஓரளவிற்கு தீமையளிக்கலாம்.


    நன்றி.
    இளைய பல்லவன் (எ) வெங்கடேஷ் கிருஷ்ணன்

    ReplyDelete
  19. கொடுக்கப்பட்ட ஜாதக அம்மணிக்கு குழந்தை பிறந்திருக்க வாய்ப்பில்லை.

    விருச்சிக லக்னம்,மேஷ ராசி ஜாதகி.

    1.லக்னாதிபதி 6ல் பாக்யாதிபதி சந்திரனுடன் மறைந்து விட்டார்.
    2.ஜாதகிக்கு 24 வயதிற்கு மேல் வந்த ராகு தசையில் தாமத திருமணம் நடந்து இருக்கும். அதனால் பல்வேறு சிரம்த்தின் இடையில் தாம்பத்திய ஜீவனம்.
    3.ஐந்தாம் பாவம் பாபகர்த்தாரியின் பிடியில்.
    4.ஐந்துக்கு அதிபதியும், குழந்தை பிறப்பிற்கு காரகானான குரு சனியுடன் 2ல் எனக்கு என்ன போச்சு என்று அமர்ந்து விட்டார்.
    5.5ம் பாவத்திற்கு எந்த சுபக் கிரக பார்வையும் இல்லை.
    6.உடல் காரகனான சூரியன், சனியின் நேர் பார்வையில் உள்ளார். அதனால் அவ்வப்போது சுகவீனமற்று இருந்திருப்பார்.

    அதனால் ஜாதகிக்கு குழந்தைகள் இல்லை.

    ReplyDelete
  20. சந்திரன் க்குக்கு 5 இல் ராகு இருப்பதால்ம், திருமண வயதில் ராகு திசை வருவதால்ம், 15 ,18 வருடம் களித்து குரு திசைஇல் ஆண் குழந்தை பெற்றிருப்பார்

    ReplyDelete
  21. Dear sir:
    My Answer for Quiz no.50:-

    2

    Jathakiku Kulanthai pakkiyam irrukka vaippu kuraivu.

    Reasons:
    1.5th house is in "pabakarthari" amaippil ullathu.

    2.Lakkana athipathi is in 6th house. Marivu shthanam porattamana valkkai(sasimangala yogam - not good in 6th house)

    3.5th house lord "Kuru" in 2nd house with, 3rd & 4th house lord "Sani" causes for delay.

    3."Manthi" is in 12th house, so "Ayana sayana" problems.

    4.("Sukkira" thasi till 18.3.18,"Suriya" thasi till 25.3.18 age) both lord are occupied in 8th house. BAD period.

    5.("Chanthira thasai" till 35.3.18, "Chevvai thasai" till 42.3.18 age) both lord are occupied in 6th house. BAD period.

    SUBAM.


    ReplyDelete
  22. Result: The lady has kids after doing lot of pariharams. This is a horoscope of delayed progeny. She might have got the kids in Rahu Dasha Guru Bukthi

    Reason:
    1) Saturn the planet of delay conjunct with Guru in 2nd house.
    2) Malefic Suns aspect on guru.
    3) From chandra lagna, 5th lord sun is in 3rd house receiving saturns aspect. Guru's aspect to sun again comes as a saviour.

    ReplyDelete
  23. குழந்தைக்கு 5ம் வீடு,அதிபதி,காரகன் குரு நிலைமை இவற்றில்
    1. 5ம் வீடு பாபக்கத்தாரி யோகதில்,
    அதிபதி மற்றும் காரகன் குரு 2ம் வீட்டில் ஆட்சியாகி உடன் 3ம் அதிபதி சனியால் கெட்டார்.
    2. 5க்கு 5ம் இடம் 9ம் பெண்களுக்கு குழந்தை பாக்கியத்தில் முக்கியம் என்பதால்,
    9ம் இடம் 8ம் அதிபதி புதனால் கெட்டது. 9ம் அதிபதி 6ம் மறைவு ஸ்தானத்தில் உடன் ஆட்சி பெற்ற 6ம் அதிபதி.
    ஸ்திர லக்னமான விருச்சிக லக்னத்திற்கு 9ம் அதிபதி சந்திரன் பாதகாதிபதியாகி போக ஸ்தானத்தினை விரையம் ஆக்கினார்.உடன் 6ம் அதிபதி செவ்வாய் பார்வை.
    யோகாதிபதி குரு சனியால் கெட்டார்
    3. மேலும் 12ல் அயன சயன போக ஸ்தானத்தில் மாந்தியும் சுகஸ்தானத்தில் கேதுவும் போக வாழ்வினை கெடுத்ததால்
    ஜாதகிக்கு குழந்தை பாக்கியம் இல்லை.

    ReplyDelete
  24. வணக்கம் குருவே,

    இந்த ஜாதகிக்கு திருமணம்மாகிருக்க வாய்ப்பு இல்லை. காரணம் 7ம் இடத்திற்கும் களதிரதிர்க்கும் உரிய சுக்கிரன் 8இல் மறைவு உடன் சூரியன் சேர்கை சனியின் நேரடி பார்வையில், குருவும் பார்க்கிறார் ஆனால் சனியுடன் சேர்ந்து பலவீனமாக உள்ளார். அத்துடன் லக்னம், பூர்வ புண்ணிய ஸ்தானம் & பாக்கிய ஸ்தானம் பாபகர்த்தாரி யோகத்தில் கூடவே நடந்த தசாக்களும் சாதகமாக இல்லை. கூடவே சுக ஸ்தானத்தில் கேது, அயன சயன போக ஸ்தானத்தில் மாந்தி. இவற்றையும்மீறி திருமணம் நடந்திருந்தாலும் புத்திர பாக்கியம் இல்லை காரணம் 5ம் இட அதிபதியும் புத்திர காரகனுமாகிய குரு சனியின் சேர்கை மற்றும் சூரியனின் பார்வையில், சுக்கிரனும் பார்க்கிறார் ஆனால் சூரியனுடன் சேர்ந்து பலவீனமாக உள்ளார். அத்துடன் லக்னம், பூர்வ புண்ணிய ஸ்தானம் & பாக்கிய ஸ்தானம் பாபகர்த்தாரி யோகத்தில் அதுவும் அட்டமாதிபதி புதன் பாக்கிய ஸ்தானத்தில். குழந்தை பாக்கியத்திற்கு பெண்கள் ஜாதகத்தில் பாக்கிய ஸ்தானம் மிகவும் முக்கியம்.

    நன்றி
    செல்வம்

    ReplyDelete
  25. அய்யா வணக்கம், லக்கினதிபதியும், பாக்கியதிபதியும், 6 ல் மறைந்துள்ளார்கள் எனவே ஜாதகர் வாழ்க்கை போராட்டமானது,

    6 ம் அதிபதி 6 ல் நோயுள்ளவர்.

    ஐந்தாம் அதிபதி குரு 2 ல் சனியுடன் 2 ல் சனி குடும்பம் பிரச்சனை அதிகம்.

    லக்கினாதிபதி,ஐந்து,ஒன்பதாம் ஆகிய அதிபதிகள் 6,8,12 ல் மறைந்தால் குழந்தை இல்லை.

    எந்த சுப கிரகங்களின் பார்வையும் ஐந்தாம் வீட்டின் மேல் இல்லை.

    ஐந்தாம் வீட்டின் பாக்கியாதிபதி செவ்வாய் 6 ல் மறைந்துள்ளார்.

    ஐந்தாம் வீட்டுக்கு ஐந்தாம் வீடு 6 ம் அதிபதி செவ்வாயின் நான்காம் பார்வையில் உள்ளது.

    அயன சயன பாக்கியம் மாந்தி மற்றும் செவ்வாயின் 7,8 பார்வையில்.

    எனவே ஜாதகருக்கு குழந்தை இல்லை.

    ReplyDelete
  26. ஐந்தாம் இடம் பாபக்ார்த்தரி யோகத்தில் மற்றும் இந்தம் அதிபதி சனியுடன் சேர்ப்பு மற்றும் சூரியன் பார்க்கப்படுவதால் மற்றும் சுப பார்வை 5 மற்றும் 5ஆம் அதிபதி மேல் இல்லாததால் குழந்தை பாக்கியம் இல்லை.

    ReplyDelete
  27. Quiz No.50
    வணக்கம்.
    20 June 1960, மாலை 6.00க்கு பரணி நட்ச்சத்திரத்தில் பிறந்தவர் இந்த ஜாதகி.

    34 வயதில் தாமதமாக‌ குழந்தை பிறந்திருக்கும்.

    விருச்சிக ராசிக்கு யோகாரர்கள் குரு, சந்திரன்.

    இந்த ஜாதகத்தில் லக்கினம், 5ம் வீடு, 7ம் வீடு, 9ம் வீடு ஆகிய நான்கு வீடுகள் பாபகர்தாரி தோஷம்.

    இந்த ஜாதகத்தின் பலம் இதுதான்.
    1. பலவீன‌மான‌ 6ம் வீட்டில் அமர்ந்திருக்கும் செவ்வாயையும்(3 பரல்), 7ம் வீட்டு அதிபதி 8ம் வீட்டில் அமர்ந்திருக்கும் சுக்கிரனையும், யோக காரனான குரு தன் 5ம், 7ம் பார்வையால் வைத்துள்ளார்.அத‌னால் திரும‌ண‌ம் எற்ப‌ட்ட‌து.
    2. 5ம் வீட்டு அதிபதி குருவை சூரியனும், சுக்கிரனும் தன் 7ம் சுப பார்வையால் பார்ப்பதால் ஜாதகிக்கு 34 வயதில் தாமதமாக‌ ஆண் குழந்தை பாக்கியம் கிடைத்தது. இந்த ஜாதகத்தில் முக்கியமாக‌ பாஸ்கர யோகம் உள்ளது.

    தாமதமாக குழந்தை பாக்கியம் கிடைத்ததற்க்கு காரணம் 2ல் இருக்கும் சனியால் குடும்பத்தில் பிரச்சனை, 5ம் வீடு பாபகர்தாரி தோஷம், 5ம் வீட்டின் மீது எந்த சுப கிரங்களின் பார்வையும் இல்லை. 5ம் வீட்டு அதிப‌தி குரு, 2ல் ச‌னியுட‌ன் கூட்டு.

    லக்கினாதிபதி செவ்வாயுடன் சந்திரன் சேர்ந்திருப்பதால் சசி மங்கள யோகம் 6ம் வீட்டில் உள்ளது. பாக்கியஸ்தானம் 9ம் வீடு பாபகர்தாரி தோஷம், 9ம் வீட்டு அதிபதி சந்திரன் 6ல் லக்கினாதிபதியுடன் .

    சந்திரசேகரன் சூரியநாராயணன்

    ReplyDelete
  28. குழந்தை காரகர் குரு பகவானே இந்த இலக்கினத்திற்கு 5ம் வீட்டு அதிபதியும் ஆகிறார். அவர் ஆட்சி பலத்தோடு 2ம் வீட்டில் இருக்கிறார். உடன், 3 மற்றும் 4ம் வீட்டு அதிபதி சனி பகவான். 5ம் வீட்டிற்கு சுபர்/அசுபர் பார்வை ஏதும் இல்லை. குரு பகவானுக்கு 8ம் வீட்டில் உள்ள சூரியன் மற்றும் சுக்கிரன் பார்வை உண்டு. சூரியன் விருச்சிக இலக்கினத்திற்கு கர்மாதிபதி, சுக்கிரன் களத்திரகாரகர், மற்றும் இந்த இலக்கினத்திற்கு 7 மற்றும் 12க்கு உரியவர். இலக்கினாதிபதி ஆட்சி பலம் பெற்றாலும் 6ம் வீட்டில் சந்திரனுடன். இவர்களுக்கு குரு பார்வை உண்டு. மேலும் இலக்கினாதிபதி இலக்கினத்தை தனது பார்வையில் வைத்திருக்கிறார். எல்லாம் இருந்தும், 5ம் வீடு பாபகர்த்தாரி யோகத்தில் உள்ளது. 4ம் வீட்டில் கேது, 6ம் வீட்டில் தேய்பிறை சந்திரன் மற்றும் செவ்வாய். அதனால், குழந்தை தாமதமாக பிறந்திருக்கும்.

    ReplyDelete
  29. Quiz-50

    குழந்தை இல்லை.

    புத்திர தோஉஷம் உள்ள ஜாதகம். சந்திரனக்கு 5ல் தீய கிரகம் இருந்தாலோ அல்லது 5ம் வீட்டீற்கு 2 பக்கம் தீய கிரகம் இருந்தாலோ புத்திரதோஉஷம்.
    குருவும்,உடனிருக்கும் சனியும் வக்கிரமான நிலையில்,7ம் பார்வை உள்ள சுக்கிரன் அஸ்தங்கதமான நிலையில் மேலும் 2மிடத்தில் குருவுடன் உள்ள வக்கிர சனி தடை ஏற்படித்திருக்கும்.

    Regards
    J.Dhanalakshmi

    ReplyDelete
  30. மதிப்பிற்க்குரிய ஐயா வணக்கம்.


    இன்றைய புதிருக்கான விடை: புத்திர பாக்கியம் இல்லாத,தடைஉள்ள ஜாதகம்.

    * விருச்சிக லக்னம்,மேச ராசி;லக்கினாதிபதி ஆட்சி பெற்று 6ல் மறைவு.

    *5க்குரிய புத்திர ஸ்தானதிபதியும் புத்திரகாரகனுமான குரு(வக்கிரம்} ஆட்சி பெற்று 3,4க்குரிய (5ம் ஸ்தானதிற்க்கு 12க்குரியவன்)வக்கிர சனியின் சேர்க்கை யுடன் அமர்ந்து பலமிழந்தது.

    *இதை தவிர்த்து புத்திர ஸ்தானமானது பாபகர்த்தாரி யோகத்தில் உள்ளது.
    மேலும் லக்கினம் 3,7,9மற்றும்11ம் ஸ்தானங்கள் பாபகரத்தாரி யோகத்தில் உள்ளது.

    *7க்குரிய சுக்கிரன் அஸ்தங்கமடைந்து 8ல் மறைவு,9க்குரிய பாக்கிய ஸ்தானா திபதியான சந்திரன் 6ல் மறைவு போன்றபலகீனமான நிலையில் இருப்பதுடன் 5ம் இடத்தை சுபர் யாரேனும் பார்வை செய்யாது இருப்பதும்
    குறையே.


    சரியான விடையினை தெரிந்துகொள்ள ஆவல் ஐயா.

    நன்றி ல ரகுபதி

    ReplyDelete
  31. Respected Sir,

    My answer for our today's Quiz No.50:

    The Native doesn't have child.

    The Native has to struggle a lot in her life time.

    This is an example horoscope for worst one.

    Reason:

    1. Five houses are affected by Baba kathri yoga. (First,Fifth,Seventh, Ninth and Eleventh houses)

    2. Lagna lord, Bagyathipathi and yogathipathi are in hidden places (i.e. 6th and 8th house)

    3. All benefic planets are affected severely.

    4. Fourth house is affected by Kethu.

    5. Fifth house is under baba kathri yoga as well as fifth house lord Jupiter is clutched by Saturn.This is puthra karaga also. affected very worst.

    6. Seventh house is affected by baba kathiri yoga as well as this house lord is in Eighth house and getting saturn aspect.

    7. Ninth house lord is sitting in sixth house as well as this house affected by baba kathiri yoga.

    8. Eleveth house is affected by baba kathri yoga as well as this house lord sitting in eighth house.

    9. Mandhi is sitting in twelfth house and affects sexual life as well as getting sixth house lord aspects.

    10. Second house is affected by Saturn. Family life is in trouble.

    Very worst horoscope .... Oh god ....Save her.....

    With kind regards,
    Ravichandran M.

    ReplyDelete
  32. The 5th Lord Jupiter is in the 2nd house which happens to be his own house and has the aspect of Venus. So there is definitely a child.

    But it is conjoined with Saturn and aspected by Sun (in addition to Venus). Also, the fifth house is in 'Pabhakarthari yoga' having hemmed between 3 malefics - Ketu, Mars and Waning Moon. Hence the birth of the child will be delayed. And it is a male child.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com