மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

19.3.14

Astrology: இன்பம் சில நாள்; துன்பம் சிலநாள் என்றவர் யார் தோழி?

 
Astrology: இன்பம் சில நாள்; துன்பம் சிலநாள் என்றவர் யார் தோழி? 

Quiz No.47: விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

தொடர் - பகுதி நாற்பத்தி ஏழு!

19.3.2014

Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!

இன்றைப் பாடத்திற்கு ஒரே ஒரு கேள்விதான்.
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் ஒரு அன்பரின் ஜாதகம்.

கேள்வி இதுதான்: ஜாதகரின் நிதி நிலைமை பற்றி ஆராய்ந்து எழுதுங்கள்! வேறு ஒன்றையும் நீங்கள் எழுத வேண்டாம்! அதாவது ஜாதகர்  பிறவியிலேயே பணக்காரரா? அல்லது சம்பாதித்துப் பணக்காரர் ஆனவரா? அல்லது பணத்துக்கு கஷ்டப்பட்டு அல்லாடியவரா? அப்படி
அல்லாடியிருந்தால், கடைசி வரை கஷ்டப்பட்டாரா? அல்லது மீண்டு வந்தாரா? அனைத்தையும் அலசி எழுதுங்கள்!



அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்!

விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

ஆணித்தரமாக எழுதினால்தான் பாஸ்மார்க்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்

===================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

35 comments:

  1. மேஷ இலக்கின ஜாதகர். 2ம் வீட்டு அதிபதி சுக்கிரன் உச்சம் தனது வீட்டிற்கு 11ல். ஆனால் இலக்கினத்திற்கு 12ல். 10 மற்றும் 11ம் வீட்டு அதிபதி சனி ஆட்சி வீட்டில், ஆனால் 11ம் வீட்டிற்கு 12ல். தன காரகர் குரு இலக்கினத்திற்கு 11ல். இலக்கினாதிபதி செவ்வாயும் 11ல். ஆனால் சூரியனும் உடன் இருப்பதால் அஸ்தமனம். இருப்பினும் செவ்வாய் 2ம் வீட்டை தனது விசேஷ பார்வையில் வைத்திருக்கிறார். ஜாதகர் பிறப்பில் ஏழை. சனி தசை முடியும் வரையில் ஏழ்மையில் வாடியிருப்பார். பிறகு வந்த புதன் தசையில் தனது சொந்த உழைப்பால் முன்னுக்கு வந்திருப்பார். தனவான் ஆகியிருப்பார். சனி பத்தாம் வீட்டில் இருப்பதால் இவரை தனது தொழிலில் உச்சத்திற்கு கொண்டு சென்றிருப்பார். அதன் மூலம் ஜாதகர் பெரும் பொருள் ஈட்டியிருப்பார்.

    ReplyDelete
  2. QUIZ NO. 47 வணக்கம்.
    1. செல்வந்தர். எல்லாவற்றையும் இழந்து, மீண்டு வந்தார்.

    மேஷ லக்கினம். லக்கினாதிபதி சூரியன் (5 பரல்கள்) 11ல் லாபஸ்தானத்தில்.

    தன‌ஸ்தானத்திற்கு உரிய 2ம் வீட்டு அதிபதி சுக்கிரன் (4 பரல்) உச்சம். லக்கினதிற்கு 12ல் அமர்ந்திருக்கிறார். மேஷ லக்கினகாரர்களுக்கு இது விஷேச அமைப்பு. பணம் கொட்டும் இடம் இது. ஜாதகர் செல்வந்தர்.

    மேஷ லக்கினகாரர்களுக்கு, 5ம் வீட்டிற்கு உரியவன் சூரியனும், 9ம் வீட்டிற்க்கு உரியவனும் ஒன்று சேர்ந்து இருப்பதால் யோகங்களை தருவார்கள்.

    11ம் வீட்டு அதிபதி சனி(5 பரல்க‌ள்) தன் வீட்டில் ஆட்சி பலத்துடன் லக்கினத்திற்கு 10ம் வீட்டில்.இது 11ம் வீட்டிற்கு 12ம் இடம் ஆகும்.

    6ம் வீட்டு அதிபதியின் தசை நடந்தாலும், எழரை சனி நடந்தாலும் பணப்பிரச்சினைகள் உண்டாகும்.

    6ம் அதிபதி புதன் 10ல் பலத்த பாதிப்புடன் அமர்ந்துள்ளார். கூட சனியும், கேதுவும் கூட்டு.

    (1996- 2001) 34 வயதில் காலகட்டத்தில் அவருக்கு 6ம் அதிப‌தியின் தசையும், 7/12 சனியும் சேர்ந்து ஜாதகரை உண்டு இல்லை என்று ஆகிவிட்டது.அடுத்து வ்ந்த கேது தசையும் தொடர்ந்தது.

    இப்பொழுது சுக்கிர தசை நடக்கும் காலத்தில், பண கஷ்ட்டத்திலிருந்து அவர் மீண்டு வந்துள்ளார்.

    சந்திரசேகரன் சூரியநாராயணன்

    ReplyDelete
  3. அய்யன் பிறவிப் பணக்காரர் அல்லர். ஆனால் சுய முயற்சியில் பெரும்பணக்காரர் ஆனவர்.

    லாபஸ்தானத்தில் மூன்று கோணாதிபதிகளும் இருந்து அபூர்வமான லக்ஷ்மி யோகத்தை அளித்துள்ளார்கள்.

    தைரியஸ்தானாதிபதியுடன் கூட்டு சேர்ந்த தொழில் ஸ்தானாதிபதி அவனுடைய இடத்திலேயே நிற்பதால் (மற்றும் கேதுவுடன் இருப்பதால்), பல தரப்பட்ட தொழில்களில் ஈடுபட்டு முன்னுக்கு வந்தவர்.

    ReplyDelete
  4. 1. பிறப்பில் வசதி உண்டு (லக்கிணாதிபதி, பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி, பாகியதிபதி, 11ல் இருப்பது சிறப்பு)
    2. பூர்வ புண்ணியத்தில் குரு பார்வை இருப்பதால் பிறப்பில் வசதி உண்டு.
    2. பொருளாதாரம் பின்னாடைவு பின் நாட்களில் (4ம் அதிபதி சந்திரன், 2ம் அதிபதி சுக்ரன் இன் 12ல் மறைவு ஸ்தானம்)
    3. 4ல் உள்ள கடக ராகு - யோகத்தை ஏற்படுத்துவார்.
    4. புதன் தசை (3, 6 க்கு உடையவன்) பணத் தட்டுப்பாடு ஏற்படுத்துவார்.
    5. Finanacial hurdles in later part of life.

    ReplyDelete
  5. dear sir.
    அன்பர் பிரவி பனக்காரன்
    லக்னாதிபதி- லாபத்தில்
    5 ஆம் அதிபதி-லாபத்தில்
    9 ஆம் அதிபதி-லாபத்தில்
    சுக்கிரன் உச்சம்!உடன் MOON
    சுகபோகி !!!!
    அன்பர் கொடுத்துவைத்தவர் !!!
    அன்பர் ஆசீர்வதிக்கபட்டவர் !!!
    bye.......

    ReplyDelete
  6. வலுவான 2ம் அதிபதி ,லக்னாதிபதி உடன் கூடிய யோகஹரண், eவைகலால் ஜாதகர் பிறவியீலே பணக்காரர்... தன் சுய முயற்சி யால் மேலும் பெரிய பணக்காரர் ஆகி eருப்பார்

    ReplyDelete
  7. ஜாதகரின் தன அதிபதி உட்சம் எனினும் 12ல் மறைவு அதே போல் சுக அதிபதியும் 12ல் மறைவு. மேலும் ஜீவிய அதிபதி ஆட்சி பெற்ற போதிலும் பாப கிரக கூட்டனி, கால சர்பதோஷம் உல்லதால் ஜாதகர் தன் வாழ்வின் இரண்டாம் பாதியில் தான் நல்ல நிதி நிலமை பெற்று இருக்க முடியும்.

    ReplyDelete
  8. பங்கு சந்தை புள்ளிகள்
    பார்ப்போர் வியக்கும் வகையில்

    உயர்ந்துள்ளது அது சமயம்
    உள்ளது நிதியை ஆராயும் படி

    அலசல்
    அருமை குருவே

    ReplyDelete
  9. அய்யா , லக்னாதிபதி செவ்வாய் 11-ல். லாப ஸ்தானத்தில். அதுவும் பாக்கியதிபதி, ராசியாதிபதி மற்றும் நட்சத்திர அதிபதி குருவுடனும் 5-ம் இடத்தோனான சூரியனுடன் இருப்பது விசேஷமான அமைப்பு. மேலும் மேஷ லக்னதிற்கு இரண்டாம் இட அதிபதி சுக்ரன் 12-ம் இடத்தில் அமைவது (தனது வீட்டிற்கு 11-ம் வீட்டில் உச்சம் பெற்று அமைவது) ராஜ யோகங்களை கொடுக்கும். லாபதிபதி சனி தனது வீட்டிற்கு 12-ல் இருந்தாலும் அவர் கர்மகாரகனாக 10-ம் இடத்தில் அமர்ந்து கேதுவுடன் இருப்பதாலும் , பத்தில் ஒரு பாவியெனும் இருக்க வேண்டும் என்ற சொல்லிற்கு ஏற்ப, இரு பாவிகள் இருப்பதால், செல்வம் கொழிக்கும். மொத்தத்தில் ஜாதகர் செல்வந்தராக இருப்பார். கால சர்ப்ப தோஷம் இருப்பதால் பிறவி பணக்காரர் இல்லை. அவர் நன்றாக உழைத்து வாழ்க்கையின் மத்திய வயதில் செல்வம் ஈட்டி இருப்பார்!. சரியா அய்யா ?

    ReplyDelete
  10. மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,

    புதிர் பகுதி 47 இல் கொடுத்திருந்த ஜாதகத்தின்படி, 7.3.1962 இல் பிறந்த இந்த ஜாதகருக்கு, சந்திரன் குருவின் சாரத்தில் நின்று 12ல் உச்சம் பெற்ற தனாதிபதி சுக்கிரனுடன் சேர்ந்திருப்பதால் இவர் வசதியான குடும்பத்தில் பிறந்தவர்.

    10ம் அதிபதி சனியும் 6ம் அதிபதி புதனும் சேர்ந்து ஜீவன ஸ்தானத்தில் இருப்பதால் இவர் சொந்த தொழில் செய்து பணம் சம்பாதிப்பார்.

    மேஷ லக்னத்துக்கு யோககாரகர்களான குருவும் சூரியனும், லாபஸ்தானத்தில் லக்னாதிபதியோடு சேர்ந்திருப்பதனால் இவர் அதிஷ்டம் உள்ளவர். எனவே இவருக்குப் பணக் கஷ்டம் ஏற்பட்டிருக்காது.

    ReplyDelete
  11. திப்பிற்குற்ய ஐயா,
    புதிர் தொடர் - பகுதி நாற்பத்தி ஏழுற்கான பதில்

    ஆரம்பத்தில் கஷ்டப்பட்டு பின் நன்றாக இருந்து இருப்பார்.

    காரனம்;ஆரம்பத்தில் கஷ்டம் காலசர்ப்ப தோஷம்.
    வுருமானம்; 10 ம் வீட்டின் அதிபதி 10 ல், சனி சுயவர்கத்தில் 5 பரல்
    லக்கனாதிபதி 11ல், 2 ம் வீட்டின் அதிபதி அதற்கு 11ல்
    இக்காரணங்களால் நன்றாக வாழ்ந்து இருப்பார்.


    இப்படிக்கு
    மு.சாந்தி

    ReplyDelete
  12. அய்யா வணக்கம் ,
    ஜாதகன் பிறந்தது 7/mar/1962 பூரட்டாதி நன்காம் பாதத்தில் வருகிறது , அவரது நான்காம் அதிபதி மறைந்து மற்றும் பாவகிரகம அமர்ந்திருப்பதலும் ,இரண்டாம் அதிபதி மறைந்த நிலையில் இருப்பதாலும் சுபர் பார்வை பார்வை இல்லாத நிலையிலே இவரது இளமை காலம் சிரமம் மிகுந்தது, சாதரண குடும்பம் , பலமான லக்கினாதிபதி சேர்க்கை , ஆட்சி பெற்ற தொழில்காரகன் மற்றும் உச்சம்பெற்ற களஷ்திரகாரகனால் இவரது பிற்காலம் பொன்னான காலம் ., ஆனால் இவரது செலவினம் மேலோங்கி இருக்கும் . கேந்திராதிபதி ஆட்சி பெற்றிருப்பதால் திறமையும் நேர்மை உறுதிப்பாடும் உடையவர், ஐந்தாம் அதிபதி கல்விகாரகனின் சேர்க்கை மற்றும் பார்வை பெற்றிருப்பதால் நல்ல நுட்பமான் அறிவு பெற்றவர் . மற்றும் தனது பிற்காலத்தில் பெரும் பாக்கியம் உண்டு ., தீர்க்க ஆயுள் பெற்றவர்

    ReplyDelete
  13. ஐயா,

    இந்த ஜாதகத்தை நீங்கள் முன்பொருமுறை கொடுத்துள்ளீர்கள்,-மூன்று அலி கிரகங்கள் ஒன்றாக / மூன்று ஆண் கிரகங்கள் ஒன்றாக, இரண்டு பெண்கிரகம் ஒன்றாகவும் - இராகு (பெண்)தனியாகவும் இருப்பதை பார்த்த ஜாதகம், நியாபகம் இது. எங்கே எதற்க்காக என நியாபகம் இல்லை . இருந்தாலும் உங்கள் சொல்படி அலசுகிறோம்....

    1.கால சர்ப்ப தோச ஜாதகம் என்பதாலும், சுக ஸ்தானத்தில் இராகு இருப்பதாலும் சுகஸ்தானாதிபதி பன்னிரண்டில் இருப்பதாலும் பிறப்பில் மிக சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்.

    2.பத்தில் சனி - கர்ம காரகன் சொந்த வீட்டில் இருப்பதாலும் பல்துறைகளின் தலைவன் கேது இருப்பதாலும் மூன்றாம் அதிபதி புதன் பத்தில் இருப்பதால் போராடி உழைக்கும் குணம் தரும் என்பதாலும் இவர் கீழ் மட்டத்திருந்து helper நிலையிலிருந்து உயர்ந்து சொந்த தொழில் அமைக்கும் நிலை வரை வந்திருப்பார்-இந்த அனுபத்திற்கு காலசர்ப்ப தோசம் வயதிற்கு ஏற்றவாறு அமைத்திர்க்கும்.

    3.இலக்கினாதிபதி பதினொன்றாம் இடத்தில் இருப்பதால் இது அவருக்கு இலாப ஸ்தானமாகிறது. உடன் பாக்கியாதிபதி குரு இருப்பதாலும், பூர்வ புண்ணியாதிபதி சூரியன் இருப்பதாலும் இலாப ஸ்தானத்தில் பலம் பெறுகிறது, மேலும் இவர்கள் மூவரும் பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பார்ப்பதால் - பூர்வ புண்ணியம் பலம் பெருகியது-இதனால் இவர் 3௦ வயது கடந்த பிறது வந்த கேது திசையிலிருந்து இவருக்கு அமோகமான வாழ்க்கை கோட்டீஸ்வர வாழ்க்கை கால சர்ப்ப யோகா வாழ்க்கை அமைந்திருக்கும்- இதற்க்கு ஏதுவாக சுக்கிரன் இரண்டிற்கு பதினொன்றில் உச்சமாக இருப்பதால் இவர் பெரும் செல்வந்தர் - குணசீலர்.

    நன்றி
    துரை.செந்தில் நாதன்

    ஐயா galaxy வகுப்பில் என்னுடைய பயனர் சொல்லும் கடவுச்சொல்லும் வகுப்பறைக்கு செல்லவதற்கு அனுமதிப்பதில்லை அதிக பாடங்களை தவறவிட்டுள்ளேன் (open ஆகவில்லை)தயவு செய்து உதவி செய்யவும் Registered e-mail ID senblr@yahoo.com.

    ReplyDelete
  14. Ayya,

    He born as poor and he struggled some time to earn money.During Venus Dasa perod, he started earning good(after age of 37) . The various reasons are: 1. Second house owner(Venus) is uccham. 2. Shani is in own house. 3. Kala sarpa dosa with Rahu in tail. This is the main factor changed his financial factor after age of 30.

    Your Student,
    Trichy Ravi

    ReplyDelete
  15. very rich person and gained wealth from many sources. All benefices in 11th house.

    ReplyDelete
  16. ஐயா,
    இந்த ஜாதகர் மேஷ லக்னக்காரர். தன ஸ்தானாதிபதி மீனத்தில்
    உச்சம். தனத்திற்கு கேட்கவா வேண்டும். லாப ஸ்தானத்தில் 1, 5,9 க்கு
    உரிய செவ்வாய், சூரியன், குரு அமர்ந்து ராஜ யோகம் தருகின்றனர்.
    ஆகவே இந்த ஜாதகர் நீங்காத செல்வம் நிறைந்தவர்.
    அ.நடராஜன்

    ReplyDelete
  17. வணக்கம் சார்.
    இவர் இளன் அசிப்பெற்று மேஷலக்னதிற்கு பாவியான‌ சனி திசையில் சுமராயிருப்பார் மையில் வறுமையில் வாடியவர் காரணம் 2ல் சுபகிரகமில்லை 3ஆம் அதிபதி புதஅடுத்தந்தவீட்டிற்கு 8ல் மேலும் கேதுவுடன் சேர்க்கை மேலும் 10 11 ஆம் அதிபதி ஆட் புதன் திசை 3ஆம் 6ஆம் அதிபதி நல்லாயிருக்காது கேந்திரத்திலிருந்தால் கூட காரணம் மேஷலக்னதிற்கு பாவி கேது நல்லாயிருக்காது சுக்கிரன் ரொம்ப பணத்தி கொடுக்கும் பாவி 12ல் உச்ச்ம் பெற்று சந்திரன் கூட சேர்ந்து மறைந்துவிட்டார் மேலும் 4ல் ராகு இள்மையில் வறுமை
    11லிருக்கும் குருமங்ளயோகம் 11ல் இருக்கும் சூஇர்யன் செவ்வாய் குரு லக்னதிற்கு யோக கிரகம் பாதுகத்துகொள்வார்கள்

    ReplyDelete
  18. Hi Sir,

    By birth native is poor. But he became very rich in his life. May be his name is in top 10 rich person list.
    Reason:Suriyan(5th house owner), sevvai(lagnathypathy) and yogakaraga guru in 11th position.

    ReplyDelete
  19. Respected sir,

    My answer for our today's Quiz No.47:

    The Native of the given horoscope Struggled by debt and overcome in Venus dasa period.

    Reason 1:

    Eleventh house lord Saturn is sitting twelfth house from it's own house. Money pipe is damaged.

    Reason 2:

    Second house lord Venus is sitting twelfth house from lakna and even though it is eleventh house from its own house, getting Saturn aspect as 3rd special aspect. Money storing vessel is broken.

    Reason 3:

    Saturn dasa followed by Sixth house lord Mercury dasa (dangerous) as well as Kedhu dasa (associated with Mercury(sixth house lord) and Saturn are not supported to save money. The Money pipe tap openers(dasa nathans)are not extented their hand to the native to overcome from his debt during this period. He struggled a lot by debt.

    Overcome from debt:

    i) After 46 years, Venus dasa started. Venus is exalted in Pisces sign and assoicated with Moon. It is good. (These planets placed in Navamasa as well)

    Hence, He has overcome from his debt in this dasa period.

    With kind regards,
    Ravichandran M.


    ReplyDelete
  20. lesson:47

    Results:
    After guru and sani dasa he became good wealth (in Bhuthan dasa)


    1. guru dasa 17 years - in pagai place - so there is no use of guru

    2. sani, bhuthan dasa gives huge wealth

    Reasons:

    2, 4, 7 house lords are in 12th place. but utcham. He may be in cinema field with good wealth

    9, 12th lord guru in 12th place from his own house. No use of guru dasa

    3 and 6th lord are in 10th house - profession well

    10th lord aatchi with victory 3rd lord bhuthan

    ReplyDelete
  21. ஆசிரியருக்கு வணக்கம்.
    அய்யா,
    இந்த ஜாதகத்தில் இரண்டாம் அதிபதி 12 ல் மறைந்து விட்டதாலும்,
    தன காரகர் குரு பகவான் ஐந்தாம் அதிபதியுடன் சேர்ந்து பாதகஸ்தானத்தில்
    அமர்ந்துள்ளதாலும் ஜாதகர் பணக்கஷ்டம் உள்ளவர்தான். ஆயினும் சுக்கிர‌
    பகவான் உச்சம் பெற்று உள்ளதால் இவருடைய 44 வயதுக்கு பிறகு சுக்கிர‌
    தசை வரும் காலத்தில் பணக்கஷ்டம் நீங்கி இருக்கும்.
    அன்புடன்,
    அரசு.

    ReplyDelete
  22. அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
    quiz No.47.

    [1] மேஷ லக்னம் .மீனா ராசி.
    [2].குரு திசை இருப்பு 1-7-4.
    [3] லக்னாதிபதி செவ்வாய் 11ல் அதிகமான ஆட்களை வைத்து வேலை செய்கிறவர் .
    [4]லக்னத்திற்கு 4ல் ராகு தாயார் அன்பு சிறு .வயதிலே இல்லை..
    [5]10 ல் கேதுவுடன் மகரசனி புதன் கூட்டணி. சுய முயற்சியால் முன்னேறி நல்ல வசதி வாய்ப்புகளுடன் எல்லா தரப்பு மக்களும் போற்றும்படி இருப்பவர்.
    [6] சுக்கிரன் 12ல் இருந்தாலும் உச்சம். மேஷ லக்னத்திற்கு 12ல் சுக்கிரன் தனது வீட்டிற்கு 10 மிடம் ஆகவே தன வரவு குறைவிலாது இருக்கும் .
    [7]கடைசி காலத்தில் ஆன்மீக ஈடுபாட்டுடன் இருப்பார்..

    அலசல் சரியாய் என்று வாத்தியார் அய்யா சொல்லுங்க...நன்றி.

    ReplyDelete
  23. மேஷ லக்னம், மீனராசி ஜாதகர். கால சர்ப்ப தோஷம் உள்ள ஜாதகம்.

    1.ராகு 4லிலும், கேது 10லும் உள்ளனர். ஜாதகரின் அதிக பட்ச ஆசையால் தன் தாயாருடன் சுமூக உறவு இருக்காது என்றும் மற்றும் வீடு, வண்டி, வாகனம் ஆகிய அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் சேர்க்கை பிரச்சனைக்கு உரியதாகவே இருக்கும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. தவிர‌ 3 ராசிகளில் ஏழு கிரகங்களும் இருப்பதால் சூல யோகம், இளமையில் வறுமை.

    ஜாதகருக்கு இளமையில் சனி தசை, ஜாதக வில்லன் 3,6க்கு அதிபதியான புத தசை, கேது தசை என்று மாறி, மாறி வந்து அவரின் நிதி நிலைமை படு மோசமாகவே இருந்து இருந்திருக்கும்.
    அதற்கு அடுத்து வந்த 2,7க்குரிய சுக்கிரன் தசையில் செல்வத்தை வாரி வழங்கியிருப்பார்.தவிர லக்னாதிபதி 11ல், பாக்யாதிபதி குருவுட‌ன் உள்ளார். இது ராஜ லக்ஷ்மி யோகத்தை தருகிறது.

    அதனால் ஜாதகர் இப்பொழுது ஒரு செல்வந்தர்.

    தங்களின் பதிலுக்கு காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  24. 11 th house
    Association of all 3 trikonathipathy (ma+ Su+ Ju) in the eleventh house.
    The person is very lucky.
    He earns more at less efforts.
    He will get profit from his father & son.
    His father will be rich and also he earns lot himself.
    The person is very rich by birth.
    He also earns lot and will become more richer day by day.

    10 th house
    As SA (in his own house) in tenth house it will take him to the highest position in his career.

    As 2 nd lord VE in Exaltation the person will have easy money.
    Star – pooratathi
    D O B – mar 7 1962

    ReplyDelete
  25. 7-3-1962
    2ல் மாந்தி, 2ம் தன ஸ்தானாதிபதி சுக்கிரன் 12ல் உச்சமாகி விரையமாகி உள்ளார். உடன் மாத்ரு,சுகாதிபதி சந்திரன் பாதகாதிபதி சனி பார்வையில் கெட்டுள்ளனர். தனகாரகன் குரு யோகாதிபதி சூரியனுன் இருந்தாலும் அஸ்டமாதிபதி செவ்வாயால் கெட்டார். இவை பணத்தட்டுப்பாட்டையே காட்டுகிறது

    10ம் வீட்டை, தொழில்ஸ்தானாதிபதியும் 10ம் அதிபதியும், காரகனும், பாதகாதிபதியமான சனி 10ல் ஆட்சி பெற்று உடன் 3,6 அதிபதி மற்றும் பாதகாதிபதியான புதன் கூட்டாக இருந்து கெடுத்தார். காரகன்,அதிபதி சனி ஆட்சியாததால் உடலை வருத்தி செய்யும் தொழில் அமைந்திருக்கும்
    11ம் லாபாதிபதி 11க்கு 12ல் விரையத்தில் இருப்பதால் எதிலும் லாபம் கிடையாது

    யோகாதிபதி குரு மற்றும் பூர்வபுண்ணியாதிபதியும் யோகாதிபதியுமான 5ம் அதிபதி சூரியன் 11ம் லாபவீட்டிலிருந்து 5ம் வீட்டைதன் கைக்குள் வைத்திருந்தாலும், அஸ்டமாதிபதி செவ்வாய் பார்வை 5ம் வீட்டிற்க்கு இருப்பதால் பணத்தட்டுப்பாடு என்றும் உண்டு. கைக்கும் வாய்க்கும் ஆன நிலை.

    ReplyDelete
  26. Respected Sir
    Good evening! My analysis of the horoscope is as follows. Please forgive the mistakes
    MESHA LAGNUM, MEENA RASI
    LAGNUM:
    1) No good planets aspecting Lagnum
    LAGNATHIPATHI
    1) At 11 th house along with Sun & 12 th house lord Guru
    2) Combusted by Sun
    SECOND HOUSE:
    Lord is at 12th position to lagnum and aspected by Saturn.Though he is exalted he is at enemy house in Amsam.
    Second house is aspected by weak Lagnathipathi
    Fourth house:
    1) Fourth house lord at 12 th position to lagnum
    2) Fourth house is aspected by Mercury who is the owner of 6th house. In addition 4th house occupied by Raghu.
    ELEVENTH HOUSE:
    1) Though the lord is at own house he is at 12th position to 11th house.
    2) Along with Kedhu and VILLAN Mercury.
    In addition there is strong KALASARPA DOSHAM
    Only positive aspect is Lagnathiapthi at 11th House along with Guru - Yoghum
    PREDICTIONS
    He is not born rich.He will have lot of financial problems in first part of life.Later he may earn because of Lagnathipathi in 11th position but to certain extent only.
    Dr.Mohan
    Brunei

    ReplyDelete
  27. வணக்கம் குருவே,

    ஜாதகர் நடுத்தர குடும்பத்தில் பிறந்திருப்பார் காரணம் 2ம் அதிபதி சுக்கிரன் லகினதிற்க்கு 12இல் இருப்பினும் உச்சம் மற்றும் சுகாதிபதி சந்திரன் சேர்க்கை, தானாதிபதியும் பாகியாதிபதியுமான குரு, லாப ஸ்தானத்தில் உடன் லக்னாதிபதி செவ்வாய் பூர்வ புண்ணியாதிபதி சூரியன் சேர்க்கை. இவருக்கு காலசர்ப்ப தோஷம் உள்ளது எனவே 35 வயத்திற்கு பிறகுதான் முன்னேற்றம் அதுவும் திருமணதிற்கு பிறகு ஏனெனில் 2ம் மற்றும் 7ம் அதிபதி சுக்கிரன் லகினதிற்க்கு 12இல் உள்ளதால்.

    நன்றி
    செல்வம்

    ReplyDelete
  28. வணக்கம் ஐயா,

    கஷ்ட்டப்பட்டு பணக்காரர் ஆகியிருப்பார்,

    1.சுகஸ்தானமான 4ம் வீட்டில் ராகு,4மதிபதி12ல் இருக்கிறார்.
    2.10ல் சனி ஆட்சியாகி இருப்பது இவ்ர் நிறைய வேலையாட்களை வைத்து
    தொழில் நடத்துவார்.
    3.அதிர்ஷ்ட்டத்திற்கான 11ம் அதிபதி அந்தவீட்டிற்கு 12ல் உள்ளார்,
    4.சுக்கிரன் 12ல் உச்சம் அடைவது வேறு விசயத்தில் தொல்லைகள் கொடுத்தாலும்,ஒவ்வொரு திசையிலும் சுக்கிரன் புத்தி வரும்போது அவருக்கு அதிர்ஷ்ட்டம் அடைந்திருப்பார்.

    ReplyDelete
  29. I think the clue to the answer is in your song itself, not sure you have given it to distract us, but I have fallen for the clue… Great song. Suseela is Suseela, nobody can beat her. Even Latha Mangeshkar once said that she is a big fan of Susheela…

    The answer is: இன்பம் கனவில் துன்பம் எதிரில் காண்பது ஏன் தோழி ?

    1. Kala Sharba dosam
    2. Rahu in 4th , not good (Suha kedu)
    3. 2nd lord uchham (but in 12th place)
    4. 4th lord is also in 12th place
    5. Sani is with 6th lord and Kethu
    6. The good thing is 1,5, 9th lord is in 11th place good. But they are the lords for 8th and 12 place as well.
    7. The dasas after Guru dasa, Sani, Butha, Kethu and sukra all in 1/12 from laknathipathi or in 12the house.
    So he sees இன்பம் only in கனவில். Finance is not good till now.

    ReplyDelete
  30. Respected sir,

    Lagnadhipathy Chevvai 11-il 4-m paarvayaga 2-i paarkiraar.idhu oru periya plus. 2-m adhipathy sukran Uccham and Karagan Guru 11-il. Ingey guru avar veetirku (Dhanusu-ku 3-il and meenathirku 12-il amarvu adhanal Adhigamana panathai thandirukka vaipillai (Sukra dhasavil nilamai maari irukkum). 11-m adhipathy sani 10-il(Avar veetirku 12-il)udan 3&6-ku adhipathy Budhan.

    Sukran uccham petru saniyin paarvayai petradhal.. Sukra dhasa ivarukku satru adhigamana panam tholil moolam vandhirukkum.

    20 vayadhirku piragu Budhan dhasavil migundha kastangalai anubavithu iruppar.

    Thank You.

    ReplyDelete
  31. மதிப்பிற்க்குரிய ஐயா வணக்கம்.

    புதிர் 46க்கான விடை:
    ஆரம்ப காலங்களில் பணத்திற்க்காக அல்லாடி பின்
    படிப்படியாக முன்னேறி பணக்காரராக ஆனவர்.
    *7.3.1962 காலை 8.43 க்கு பிறந்தவர். * இது ஒரு காலஷர்ப்பதோஷம் உள்ள ஜாதகம்.மேஷ லக்கினம்,மீன‌
    ராசியான இந்த ஜாதகத்தில் 2ம் அதிபதியான சுக்கிரன் தன ஸ்தானாதிபதியாகி
    உச்சம்.

    *9மற்றும்12க்குரிய குரு கிரக யுத்தத்தில் தோல்வி,லக்கினாதிபதியான‌
    செவ்வாய் வெற்றி பெற்று போராடும் குணத்தை கொடுப்பார்.

    *10,11க்கு அதிபதியான சனி மகரத்தில் ஆட்சி எனினும் லக்கினம்,ராசி
    இரண்டுமே ராகு கேதுவின் பிடியில் எனவே ஜாதகருக்கு இளவ‌யது வாழ்க்கை
    போராட்டம் மிகுந்து இருக்கும்.

    *33 வயதிற்க்குமேல் பணவசதியில் படிபடியான முன்னேற்றம் ஆனது.


    சரியானவிடையினை தெரிந்து கொள்ள ஆவல் ஐயா.


    நன்றி ல ரகுபதி

    ReplyDelete
  32. ஐயா வணக்கம், புதிர் 47க்கு விடை:-
    இரண்டாம் வீட்டு அதிபதி லக்கணத்திற்க்கு பனிரெண்டில் இருந்தாலும் உச்சம் மற்றும் இரண்டாம் வீட்டிற்க்கு பதினொன்றில் அவர் பிறக்கும் போது பணக்காரர்....

    ReplyDelete
  33. லக்னாதிபதி செவ்வாய் 11ல் லாபஸ்தானத்தில்
    லக்னாதிபதி சூரியனுடன் மற்றும் குருவுடன் கூட்டு, ஆகவே பரம்பரை சொத்துக்கு வழி உண்டு, மிகுந்த செல்வாக்கும் உண்டு. பிறக்கும்போது குரு தசை ஆகவே பிறவி பணக்காரர்.
    தனஸ்தான அதிபதி சுக்கிரன் விரயத்தில், தொழில்ஸ்தானத்தில் விரயஸ்தான அதிபதி புதன், கேது, மற்றும் தொழில் காரகன் சனி சொந்த வீட்டில். ஆகவே தொழில் நன்றாக இருந்தாலும் இவர் சம்பாதிக்க வாய்ப்பில்லை.

    ReplyDelete
  34. இன்றைய புதிரில் எனது பதில் சரியாகச் சொன்னவர்களின் பட்டியலில் உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.மிக்க நன்றி அய்யா!

    கடந்த 5 வருடங்களுக்கும் மேலாகவே ஜாதகபலன் சொல்லி வருகிறேன்.பலரும் வாக்கு பலித்தது என்று பதில் எழுதியுள்ளார்கள் பலனை
    இலவசமாகவே கூறுகிறேன். அவர்கள் கேட்கும் கேள்வியைப் பொறுத்து மிகச் சிலரிடம் அன்னதானத்தில் விருப்பம் உண்ண்டாயின் தொடர்பு கொள்ளச் சொல்லி எழுதுகிறேன்.

    1.தினசரி சிவன் கோவில் பசுக்கள் 4 எண்ணிக்கைக்கு அக‌த்திக்கீரை அல்லது வாழைப்பழம்,2.தினசரி காலை உஷத்கால கோவில் பிரசாதம், வெண் பொங்கல்,வினியோகம்,3.வியாழக்கிழமைகளில் குருபகவானுக்கு பால் அபிஷேகம்,4.தேய்பிறை அஷ்டமி தினங்களில் பைரவருக்குப் பால் அபிஷேகம், 5.இரண்டு பிரதோஷ தினங்களில் நந்தியம் பெருமானுக்குப் பால் அபிஷேகம், 6.பிரதோஷ நைவேத்யம் புளியன்னம்,சர்க்கரைப் பொங்கல், தயிர்சாதம் 300 பேருக்கு வினியோகம், 7.ஒவ்வொரு பூசத்தன்றும் மறைந்த என் நண்பர் தஞ்சை அன்னதானச் செம்மல் சிவகுருநாதன் நினைவாக 45 முதியவர்களுக்கு மதிய விருந்து சாப்பாடு,8.தெருக்களில் அலைந்து திரியும் மனநலம் அற்றோருக்கு அவ்வப்போது மதிய உணவு அளித்தல்,9.தஞ்சை பெரிய கோவில் எதிரில் தினசரி காலை 8.45 மணிக்கு 50 பேருக்கு இட்டிலி, சாம்பார்,(இச்சேவை மறைந்த நண்பர் அமரர் சிவகுரு செய்து வந்ததின் தொடர்ச்சி), 10.அமாவாசை தோறும் மனையேரிப்பட்டி தொழுநோயாளிகள் இல்லத்தில் 150 பேருக்கு விருந்து உணவு.11. தஞ்சை பெரியகோவில் உச்சிகால பிரசாத வினியோகம் (10 கிலோ)

    முதல் எட்டு சேவைகள் என் சொந்த முயற்சியிலும், 9,10,11 மற்ற நண்பர்களுடன் இணைந்தும் செய்து வருகிறேன்.விருப்ப்முள்ளவர்கள் அளிக்கும் தொகையினை நன்றியுடன் பெற்று, மொத்த செலவினங்களுடன் சேர்த்துக்கொள்கிறேன். அன்னதான பலனும், இறை வழிபாட்டுப் பயனும் அனைவரையும் சென்று அடைய வேண்டும் என்பதே எனது நோக்கமாகும்.
    kmrk1949@gmail.com

    ReplyDelete
  35. இலால் குடி தோழர்
    இத்துடன் தொகை அனுப்ப வேண்டிய

    வங்கி எண் கணக்கு மற்றும்
    வழக்கமான விவரங்களை தந்தால்

    தொகை அனுப்புபவர்களுக்கு எளிது
    தொண்டுகள் தொடர டிரஸ்டு

    உருவாக்கி முறைசெய்தால் இவ்
    உலகில் வருமான சேவை வரி

    தொல்லையில் இருந்து
    தொலைவில் நிற்கலாம்..

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com