மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

13.3.14

Astrology: எனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது எனது கைகள் தழுவும் போது மலரும் சுடுகின்றது


Astrology: எனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது
எனது கைகள் தழுவும் போது மலரும் சுடுகின்றது


Quiz 45 உங்களின் பதில்கள்

நேற்றைய புதிரில் கொடுத்திருந்த ஜாதகத்தை வைத்து இரண்டு கேள்விகள் கேட்டிருந்தேன்.

1. ஜாதகருக்குத் திருமணம் ஆயிற்றா? அல்லது ஆகவில்லையா?
2. ஜாதகரின் குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும்?

சரியான விடை:
1. ஜாதகர் திருமணமானவர்
2. குடும்பவாழ்க்கை பிரச்சினைகள் நிறைந்தது. (இதைக் குறிப்பிட்டிருந்தாலே போதும்)

சிலர் பாதிக்கிணறைத் தாண்டினார்கள். அதாவது இரண்டில் ஒன்றிற்கு சரியான பதிலை அளித்திருந்தார்கள்

18 பேர்கள் சரியான பதில்களை எழுதியுள்ளார்கள். அவர்களுக்கு எனது மனம் உவந்த பாராட்டுக்கள். மேலும் கலந்துகொண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள். கலந்து கொள்வது முக்கியம் இல்லையா? அதனால் பாராட்டுக்கள்!சரியான பதில்களை எழுதி வெற்றி பெற்றவர்களின் பின்னூட்டங்களை அப்படியே கீழே கொடுத்துள்ளேன்.

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------------------
இரண்டாம் கல்யாணம்!

வாழ்க்கையில் முக்கியமான நிகழ்வுகள் எல்லாம் ஒருமுறைதான் நடக்கும். பிறப்பும் ஒருமுறைதான். இறப்பும் ஒருமுறைதான்.அதுபோல் இன்னும் சில நிகழ்வுகளும் ஒருமுறை நடப்பதுதான் சிறப்பாக இருக்கும். உதாரணம் திருமணம்.

ஆனால் சிலருக்கு துரதிர்ஷ்டவசமாக முதல் திருமணம் அவலத்தில் முடிந்துவிடுவது உண்டு! விவாகரத்தில் முடிந்திருக்கலாம் அல்லது முதல் மனைவி இறந்து போயிருக்கலாம். அவர்களிடம் இந்த ஒருமுறை விதி எடுபடாது. தக்க காரணத்துடன் அவர்கள் இரண்டாவது திருமணம் செய்து கொள்வதில் தவறில்லை

ஆனால் அதற்கு ஒரு வயது வரம்பு உண்டு. அதிக பட்சம் நாற்பது வயது வரை அது சாத்தியப்படும். அதற்கு மேற்பட்ட வயது என்றால் ஒரு சிக்கல் உள்ளது. மணந்து கொள்ள ஒரு மகராசி வேண்டுமே?

பெரிய செல்வந்தர் என்றாலும், அவருடைய செல்வத்திற்காக அவரை மணந்துகொள்ள ஒருத்தி முன் வர வேண்டுமே?

ஜாதகருக்கு அவருடைய 32ஆவது வயதில் மனைவி இறந்து போய் விட்டாள். அவர் தன்னுடைய 40ஆவது வயதில் மறுமணத்திற்கு முயற்சி செய்தார்.

என்ன ஆயிற்று? சாத்தியமாயிற்றா?

ஜாதகம் எப்படியோ அப்படித்தானே ஆகும்?

வாருங்கள், அவருடைய ஜாதகத்தை அலசுவோம்!
------------------------------------------------------
ஜாதகத்தைப் பாருங்கள்:



சிம்ம லக்கின ஜாதகம். ரோஹிணி நட்சத்திரக்காரர்.

1.லக்கினாதிபதி கேந்திரத்தில் (4ல்) இருந்தாலும் 3 கிரகங்களுடன் கிரகயுத்தத்தில்.
2.இரண்டில் (குடும்ப ஸ்தானத்தில்) ராகு
3.களத்திரகாரகன் சுக்கிரன் பாபகர்த்தாரி யோகத்தில்.
4.யோககாரகன் செவ்வாய் அஸ்தமனம் ஆகியுள்ளான்.
5.சந்திரன் தனித்து அவயோகத்தில் உள்ளார்
6.மாந்தி 12ல். அயன சயன போக பாக்கிய யோகத்திற்கு வேட்டு வைத்துவிட்டான்.
7.பன்னிரெண்டிற்கு உரிய சந்திரன் (விரைய ஸ்தான அதிபதி) உச்சம் பெற்றுள்ளார்.
8.லக்கினாதிபதி சூரியனும், ஏழாம் அதிபதி சனியும் 2/12 என்னும் பாதக நிலையில் உள்ளார்கள்.
மேற்கூறிய அவலங்கள் எல்லாம் சேர்ந்து ராகு திசை முடிவதற்குள் சங்கை ஊதிவிட்டன. மனைவியை மேலே அனுப்பி, ஜாதகருடைய குடும்ப வாழ்க்கையை முடித்துவிட்டார்கள்

அவருக்கு அவருடைய மத்திய வயதில் குரு மகா திசை நடந்து கொண்டிருந்தது. குரு பகவானும் சூரியனால் அஸ்தமித்துவிட்டார். அஸ்தமனமான கிரகத்தின் திசை நன்மையைச் செய்யாது.

அவர் பல வழிகளில் முயற்சி செய்தும் உரிய பெண் கிடைக்கவில்லை. அவரது இரண்டாவது திருமண ஆசை நிறைவேறவில்லை.இரண்டாவது திருமணத்திற்கு வேண்டிய அமைப்பு அவர் ஜாதகத்தில் இல்லை! அவருக்கு மீண்டும் ஒரு குடும்பம் அமையவில்லை!

அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------------------------
1
Blogger thozhar pandian said...
    ஜாதகருக்கு திருமணம் நடந்திருக்கும். 7ம் வீட்டு சனி அந்த வீட்டிற்கு 11ல். களத்திரகாரகர் சுக்கிரன் மூல திரிகோணத்தில். சிம்ம இலக்கினத்திற்கு யோக காரகர் செவ்வாயும் சொந்த வீட்டில் இருக்கிறார். 7ம் வீட்டை தனது விசேஷ பார்வையால் பார்க்கிறார்.
    ஆனால் ஜாதகருக்கு குழந்தை வரம் இல்லை. 5ல் சனி, 5ம் வீட்டுக்காரரும், புத்திர காரகருமான குரு பகவான் 5ம் வீட்டிற்கு 12ல் கிரக யுத்தத்தில் இருக்கிறார். மேலும் அயன சயன பாக்கியத்திற்கு உலை வைப்பது போல் 12ம் வீட்டில் மாந்தி. 2ம் வீட்டில் இராகு. இலக்கினம் மாந்திக்கும் இராகுவுக்கும் இடையில் சிக்கியுள்ளது. 2ம் வீட்டிற்கோ 5ம் வீட்டிற்கோ எந்த சுப கிரக பார்வையும் இல்லை. இலக்கினாதிபதியும் கிரக யுத்தத்தில் சிக்கியிருக்கிறார். ஆக குடும்ப‌ வாழ்வில் ஏகப்பட்ட பிரச்சனை.
    Wednesday, March 12, 2014 5:44:00 AM
----------------------------------------------------------
2
////Blogger Srinivasa Rajulu.M said...
    1) அன்பர் 25 வயதளவிலேயே திருமணம் புரிந்தவர்.
    2) விவாக ரத்தானவர். மீண்டும் மணம் புரிந்திருப்பார்.
    களத்திர காரகன் சனி, த்ரிகோணத்தில் அமர்ந்துள்ளார். காரகன் சுக்கிரன் மூன்றாம் இடமானாலும் ஸ்வஸ்தான பலம் பெற்றதால் செவ்வாய் திசையில் உச்ச சந்திரன் புத்தியில் திருமணம் நடந்திருக்கும். களத்திரஸ்தானத்தைச் சனியும் செவ்வாயும் பார்ப்பதாலும், மறைவிடத்தில் பாபகர்த்தாரியில் சுக்கிரன் இருப்பதாலும், நவாம்சத்தில் ப்ருஹஸ்பதி நீச்சமானமானதாலும் பெற்றோரை மீறி, பிரச்சினைகளுடன் நடந்த திருமணமாக இருந்திருக்கும்.
    குடும்பஸ்தானத்தில் அமர்ந்த ராஹு திசை குரு புக்தியில் விவாகரத்து ஆகி மீண்டும் சனி புக்தியில் மறுமணம் புரிந்திருப்பார். குடும்பஸ்தானத்தை சனியானவர் பத்தாம் பார்வையில் பார்ப்பதாலும், ஸ்தானாதிபதி புதன் குடும்பஸ்தானத்திற்கு மூன்றில் பகைவன் செவ்வாயுடன் பகை வீட்டில் அமர்ந்ததாலும் குடும்ப வாழ்க்கை பிரச்சினைகள் நிறைந்துதான் இருக்கும்.
    புத்திரஸ்தானத்தில் சனி; ஸ்தானாதிபதி குருவோ அவ்விடத்துக்குப் பன்னிரண்டில் (மேலும் நவாம்சத்தில் நீச்சனாகி செல்லாக்காசாகி விட்டார்). மேலும் பன்னிரண்டில் மாந்தி சயனபோகத்திற்கு வேட்டு வைத்துவிட்டார். எனவே குழந்தைகள் கிடையாது.
    Wednesday, March 12, 2014 7:25:00 AM/////
------------------------------------------
3
/////Blogger Sanjai said...
    1. திருமணம் நடைபெறும்.
    2. 7க்கு உடையவன் சனி, தன் வீட்டிற்கு 11ல் (லாப ஸ்தானத்தில்) உள்ளத்தால் திருமணம் உண்டு.
    3. குடும்ப வாழ்க்கையில் இடையூறு உண்டு.
    4. 2ம் வீட்டின் அதிபதி புதன், 4ம் வீட்டில் சூரியன் மற்றும் செவ்வாய் தொடர்பால் கெட்டுவிட்டார்.
    5. குடும்ப ஸ்தானம் (2ல்) ராகு இருந்து அந்த வீட்டை ஆஃப் (off) செய்து விட்டார்.
    Wednesday, March 12, 2014 8:39:00 AM/////
----------------------------------------------
4
////Blogger rm srithar said...
    Respected sir
    1. He got married :- 7th place Saturn is in Fifth house so he got married.
    2. Family life:- is not good they got separation due to Rahu is in Second house & Saturn is seeing second house.so family life spoiled.
    Regards
    rm.srithar
    Wednesday, March 12, 2014 9:07:00 AM/////
-------------------------------------------------
5
/////Blogger SIVA said...
    திருமணம் உண்டு , காதல் அல்லது கலப்பு திருமணம் .. கஷ்டங்கள் மிகுந்த குடும்ப வாழ்வு..கவர்ச்சி உடையவராதலாள் பெண்சுகம் ஆசைப்படுபவர்
    Wednesday, March 12, 2014 10:20:00 AM/////
---------------------------------------------------
6
////Blogger Palani Shanmugam said...
    மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,
    புதிர் பகுதி 45 இல் கொடுத்திருந்த ஜாதகத்தின்படி,
    1. களத்திரகாரகன் சுக்கிரன் 3ல் ஆட்சி பெற்றும், சந்திரன் ரிஷபத்தில் உச்சம் பெற்று இருப்பதாலும் கண்டிப்பாகத் திருமணம் ஆகி இருக்கும். ஆனால் சனி 5ல் இருப்பதால் தாமதத் திருமணம். 7ம் அதிபதி 5ல் இருப்பது காதல் திருமணத்தைக் குறிக்கிறது.
    2. குடும்ப ஸ்தானத்தில் இருக்கும் ராகு நிம்மதியைக் கெடுப்பார், பண வசதி இருக்காது. 12ல் இருக்கும் மாந்தி இவரை எழ்மை நிலையில் வாடும்படி செய்திருப்பார். லக்கினத்துக்கு முன்னால் மாந்தியும், பின்னால் ராகுவும் இருப்பதால் பிரச்சினைகள் நிறைந்த குடும்ப வாழ்க்கை.
    Wednesday, March 12, 2014 10:33:00 AM/////
------------------------------------------------
7
////Blogger Chandrasekharan said...
    Respected Sir,
    Simma Lagnam Neengal solvadhu pole Herokalin Lagnam... Adhipathy Sooriyan 4-il and andha veetu adhipathy chevvai angey aatchi balam.
    Thirumanam Nadaipetra Jadhagam. 7-m adhipathy Sani lagnathirku 5-il and kumba veetirku 11-il and avaradhu veetai 3-m paarvayaga parkiraar. Yogadhipathy Chevvai 4-m paarvayaga 7-m veetai paarkiraar. karagan sukran 3-il aatchi balathudan amarvu adhanal thirumanam nadaipetru irukkum.
    Thirumana Valkai sandai sacharavugal niraindha valkayaga irukkum. 2-il raagu adhu kanni ragu adhanal nanmayai seidhalum, saniyin balatha 10-m paarvai 2-il kandippaga thirumana valkayil prechanaigal irukkum. 2-m adhipathy budhan 4-il avar veetirku 3-il.
    Thank You.
    Wednesday, March 12, 2014 11:12:00 AM/////
-------------------------------------------------
8
/////Blogger bg said...
    MA - aspect 7.
    SA - aspect 7.
    VE - in Papakarthari Yoga.
    All the above are against Marriage.
    This may lead to delay marriage.
    Marriage life
    Ra – in 2nd house.
    Ke – in 8 th house.
    JU aspect 8 th house.
    May lead to separation.
    Wednesday, March 12, 2014 11:20:00 AM/////
---------------------------------------------------
9
////Blogger Venkat Lakshmi said...
    உயர்திரு ஐயா: வணக்கம்.
    புதிர் 45க்கு விடை:களத்திரகாரன் சுக்கிரன் ஆட்சி ஏழாம் வீட்டு அதிபதி அந்த வீட்டிற்கு பதினொன்றில் அதனால் திருமணம் முடிந்திருக்கும். இரண்டில் ராகு மற்றும் 2ம் வீட்டு அதிபதி அந்த வீட்டிற்கு மூன்றில் அதனால் குடும்ப வாழ்க்கை சொல்லும்படி இல்லை.
    Wednesday, March 12, 2014 12:59:00 PM/////
-----------------------------------------------------
10
/////Blogger jagvettri@gmail.com said...
    கல்யானம் நடக்கும் தாமதமாக சனியின் 3ஆம் பார்வையால். குடும்பம்தான் (ராவாக உள்ளது )கெட்டுள்ளது.2ண்டில் ராகு .
    Wednesday, March 12, 2014 1:55:00 PM/////
---------------------------------------------------------
11  
/////Blogger C Jeevanantham said...
    Dear Sir,
    1. The native got married late.
    7th lord saturn delays, since it has aspected by uccha chandran he got married.
    2.His family life is not happy. Divorced.
    2nd place ragu, and 2nd lord is hemmed between malefics.
    Wednesday, March 12, 2014 3:24:00 PM/////
-------------------------------------------------------------
12
/////Blogger ravichandran said...
    Respected Sir,
    My answer for our today's Quiz No.45:
    1. He has married.
    2. Rich and having family problem.(Having no child)
    Reason for-1:
    i. Seventh lord is sitting 11th house from its own house and aspecting its own house as it's third aspect.
    ii. Seventh house or lord not associated and aspected by benefic planets.
    iii. Lagna lord,yoga karaka (Mars)and eleventh and second house lord are in good position. It's great.
    Hence, all the above reasons, he got married.
    Reason for -2:
    i)In second house Rahu is sitting and getting sixth lord saturn aspects as its tenth aspect. Its bad.
    ii) second house lord is sitting in good position.
    iii) Fifth house lord is sitting twelfth house from its own house and sixth house lord saturn is sitting in fifth house. it affects child birth.
    iv) Seventh lord and lagna lord are in 1/12th position and even second house lord also. Hence, it denotes not happy married life.
    v) lagna lord, eleventh house lord, yoga karaka and dhana karaga all are sitting in one house. It is good for wealth.
    In short, He married but there is problem in family life.
    With kind regards,
    Ravichandran M.
    Wednesday, March 12, 2014 7:13:00 PM////
-------------------------------------------------
13
/////Blogger Raja Murugan said...
    வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம், ஜாதகருக்கு திருமணம் ஆகியிருக்கும், ஆனால் குடும்பம் நிலைக்காது.ஜாதகருக்கு குழந்தைகளால் பிரச்சினை உண்டு. வருமானம் அதிகம் வந்தாலும், செலவாளி.
    Wednesday, March 12, 2014 7:37:00 PM////
-------------------------------------------------
14
////Blogger vanikumaran said...
    7ம் வீடு, 7ம் அதிபதி சனியின் 3ம் பார்வையில் உள்ளது. 6ம் அதிபதி சனியின் 3ம் பார்வையும் 7ம் வீட்டிற்கு உள்ளது.
    7ம் அதிபதி 5ம் வீட்டில் திரிகோணத்தில் உள்ளது.
    காரகன் சுக்கிரன் பாபகத்தாரி யோகத்தில். ஆனாலும் பாக்கியாதிபதி, சுகாதிபதி, யோகாதிபதியாகிய செவ்வாயின் வலுவான 4ம் பார்வையால், தீமை பயக்கும் சனி, செவ்வாயின் பார்வை 7ம் வீட்டிற்க்கு உள்ளதால் கால தாமதமாக திருமணம் நடந்திருக்கும்.
    2. குடும்ப வாழ்விற்க்கு 2ம் வீடு ராகுவால் பாதிக்கப்பட்டுள்ளது.
    2ம் அதிபதி புதன் அஸ்தங்கம் அடைந்த யோகாதிபதி செவ்வாய் மற்றும் அஸ்தங்கம் அடைந்த அஸ்டமாதிபதி குரு உடன் 4ம் இடத்தி நல்ல நிலையில் இருப்பது போல் இருப்பது போல் இருந்தாலும் விரையாதிபதி சந்திரனின் பார்வையில் கெட்டுள்ளது.
    காரகன் குருவும் விரையாதிபதி சந்திரனின் பார்வையில் கெட்டுள்ளது.
    மேலும் சனியின் 10ம் பார்வை 2ம் வீட்டில் உள்ளது. சுப கிரகங்களின் பார்வை 2ம் வீட்டிற்க்கு இல்லாததால் குடும்ப வாழ்விற்க்கு வழி இல்லை என்றே தோன்றுகிறது.
    கஜ கேசரி யோகம், சசிமங்கள, புத ஆதித்ய யோகம் உள்ளது. இது குடும்ப வாழ்க்கைக்கு உதவுமா என்பதை பற்றி விளக்கவும்
    Wednesday, March 12, 2014 8:04:00 PM/////
------------------------------------------------------
15
/////Blogger janani murugesan said...
    மதிப்பிற்குரிய ஐயா,
    ஜாதகருக்கு திருமணம் ஆகியிருக்கும். இரண்டு விவாகம்.7க்குடைய சனி 5ல். சுக்ரன் 3ல் ஆட்சி.இருப்பினும் சுக்ரன் பாபக்கர்த்தாரி யோகத்தில் சனி பகை வீட்டில் which leads to second marriage.2ல் ராகு,2ம் வீட்டிற்கு சனியின் பார்வை குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாய் இருக்காது.
    12க்குடையவன் 10ல். 12ல் மாந்தி திடீர் இழப்புகள் உண்டாகும்.Which also leads the native to suffer in financial crisis.
    Wednesday, March 12, 2014 8:44:00 PM//////
---------------------------------------------------
16
/////Blogger sundari said...
    வணக்கம் சார்,
    திருமணம் செய்துகொண்ர்டா சுக்கிரன் ஆட்சி 7ஆம் அதிபதி சனி அந்த வீட்டிற்கு 11ல் மேலும் சந்திரன் உச்சம் ரிசப ராசிகாரர்கள எளிதில் திருமணம் செய்துகொள்வார்கள் காரண்ம் ஏதோ கிடைத்த்து பண்ணிகொள்வோம் மனநிறைவு
    பொறுவார்கள் மேலும் 2ஆம் அதிபதி புதன் 4ல் அதோடு குரு சூரியன் செவ்வயோடு சேர்ந்திருகிறார்
    2.குடும்பவாழ்கை பிரச்சனைநிறைந்திருக்கும் காரணம் 2ல் ராகு கன்னி றாகு அதோடு நாலில் செவவாய் அந்தபிரசசனைகளை சாமாளித்து குடும்பத்தை ஒட்டலாம் 8லிருக்கும் கேது ரொம்ப குணகேட்டைதருவார்.
    Wednesday, March 12, 2014 8:48:00 PM/////
----------------------------------------------------------
17
/////Blogger Chandrasekaran Suryanarayana said...
    QUIZ 45 வணக்கம்.
    1. தாமதமான காதல் திருமணம் எற்பட்டு பிறகு பிரிவில் முடிந்தது.
    2. குடும்ப வாழ்க்கை சில காலம் ம‌ட்டுமே.
    15.12.1959ஆம் தேதி காலை 12.00 மணிக்கு மிருகசீருஷத்தில் பிறந்த ஜாதகருக்கு சிம்ம லக்கினம்.
    யோக‌கார‌ன் செவ்வாய். கூட‌ புத‌னும் வ‌லிமையாய் இருப்ப‌து அவ‌சிய‌ம். ந‌வாம்ச‌த்தில் புத‌ன் உச்ச‌த்தில் வ‌லிமையாய் (40 ப‌ர‌ல்க‌ள்) இருப்ப‌து அதிர்ஷ்ட்ட‌ம்.
    இந்த சிம்ம லக்கின ஜாதகத்தில் லக்கினாதிபதி சூரியனுடன் செவ்வாய், புதன், குரு சேர்ந்து கேந்திரத்தில் இருப்பது அதிர்ஷ்ட்டத்தை கொடுக்கும் புதன் தசையில் புதன் புக்தியில் நிறைய செல்வங்கள் சேரும். இந்த‌ ஜாத‌க‌ர் கோடிஸ்வ‌ர‌ர்.
    ல‌க்கின‌ம் பாப‌க‌ர்தாரி தோஷ‌த்தில் உள்ள‌து. ஒரு ப‌க்க‌ம் மாந்தி ம‌ற்றோரு ப‌க்க‌ம் ராகு. ல‌க்கின‌ம் 37 ப‌ர‌ல்க‌ளுட‌ன் பலமாக உள்ள‌து.
    7ம் வீட்டு அதிப‌தி ச‌னி (1 ப‌ர‌ல்) திரிகோண‌த்தில் 5ம் வீட்டில் இருந்து கொண்டு 3ம் பார்வையாக‌ 7ம் வீட்டை பார்த‌தால் தாமதமாக காதல் திருமணம் எற்ப‌ட்ட‌து. சந்திரன் (6 பரல்கள்), சுக்கிரன் (5 பரல்கள்) சம பலத்தோடு இருப்பதால் காதல் திருமணம் எற்பட்டு நல்ல மனைவி அமைந்தார்..
    ஜாதகருக்கு குரு தசை சூரிய புக்தியில் 36 வயதில் காதல் திருமணம் நடந்தது.
    2ம் வீட்டின் அதிபதி புதன் நவாம்சத்தில் உச்சம் பெற்று இருந்தாலும், ராசியில் 2ம் வீட்டு அதிபதி புதன் செவ்வாய், சூரியனுடன் கிரகயுத்ததில் இருப்பதாலும், குடும்ப வாழ்க்கை சில காலம் ம‌ட்டுமே. அதுவும் குரு தசை முடியும் வரை.
    அடுத்து வ‌ந்த‌ ச‌னி த‌சையில் ச‌னி புக்தியில் குடும்ப‌த்தில் பிரிவினை எற்ப‌ட்ட‌து. சனியின் 10ம் பார்வை 2ம் வீட்டின் மீதுள்ளது.மேலும் 2ம் வீட்டினில் உள்ள‌ ராகுவும், 8ம் வீட்டினில் உள்ள கேதுவின் 7ம் பார்வை 2ம் வீட்டின்மீது இருப்பதாலும் குடும்ப வாழ்க்கையில் பிரிவு எற்ப‌ட்ட‌து. 2ம் வீட்டின் மீது எந்த சுப பார்வையும் இல்லை.சுக்கிரன் 3ம் வீட்டில் மறைவிடங்களில் இருப்பது திருமணத்திற்க்கு எதிரான அம்சங்கள்.
    6ம் வீட்டு அதிபதி வில்லான சனியும் அவரே. ஆகையினால், சனி தசை சனி புக்தியில் பிரிவு எற்பட்டது. 6ம் வீட்டு அதிபதி ஐந்தாம் வீட்டில் அமர்ந்திருந்தால்
    நோயுற்ற சேய்களை உடையவனாக இருப்பான்.
    குரு 5ம் வீட்டிற்க்கு 12ல் 4ம் வீட்டில் அம‌ர்ந்திருப்ப‌தால் குழ‌ந்தை பாக்கிய‌மும் இல்லை.
    சந்திரனின் 7ம் பார்வை 4ம் வீட்டின் மீது சூரியனை பார்பதால் ராஜ யோகம், சந்திரனின் 7ம் பார்வை 4ம் வீட்டின் மீது செவ்வாயை பார்பதால் சசிமங்கல‌ யோகம், சந்திரனின் 7ம் பார்வை 4ம் வீட்டின் மீது குருவை பார்பதால் கஜகேசரி ‌ யோகம் எற்பட்டது.
    4ம் வீட்டில் சூரியனும் புதனும் சேர்ந்து இருப்பதால் புத ஆதித்திய யோகம் எற்பட்டது.
    சந்திரசேகரன் சூரியநாராயணன்
    Wednesday, March 12, 2014 10:45:00 PM////
------------------------------------------------------
18
/////Blogger Dallas Kannan said...
    Respected sir
    Here is my quick analysis. I am not happy about it, but hope I will get at least pass mark (50%)
    1. 7th lord Sani is in 5th place (11th place), sukran in own house (but papakarthari yogam), 2nd lord is with laknathipathi and yogakaran.
    He is married but delayed. Strong 5th lord, Moon and sukra indicates Love as well.
    2. Rahu in 2nd house, Sani's look at 2nd house indicates quarrels and possible multiple marriages. Sani in 5th place and Guru/5th lord in 12th place from its house indicates Children related complications/issues.
    Wednesday, March 12, 2014 11:06:00 PM/////
----------------------------------------------------------   =========================================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

11 comments:


  1. Wow!!!
    I passed again :-)

    Great Title. Love that movie and great songs (I still sing few of those songs to my daughter at her bed time )
    Respected Sir
    It will be great if you can let us know if he had love marriage or not, dasa/buthi when he was married and if he had kids (good/problematic).

    Lot of folks mentioned about possible love marriage and problem with/having kids.

    ReplyDelete
  2. மதிப்பிற்க்குரிய ஐயா வணக்கம்.


    விடையையும் விளக்கமும் தெளிவு பெற உதவியது ஐயா.

    நன்றி ல ரகுபதி

    ReplyDelete
  3. ஐயா! குடும்ப வாழ்க்கை நன்றாக அமையாததென்பதும், களத்திரம் நன்றாக இல்லை என்பது கண்கூடே. அதில் திருமணம் முடிய உள்ள சாத்திய கூறு எது? (களத்திரம் மிகப்பாதிப்பாக தோன்றுகிறது) மேலும் கிரகங்களின் அஸ்தங்கம் மிகப் பெரிய சாபமா?

    ReplyDelete
  4. வணக்கம்.
    தங்களுடைய அலசல் மிகவும் நன்றாக இருந்தது.
    ஆசிரியருக்கு ஒரு வேண்டுகோள்.

    பிற்பகுதியில் வரும் கேள்விகளுக்கு எல்லாம் இருப்பு தசா விவரங்களை வழ‌ங்கும்படி ஆசிரியரிடம் தாழ்மையுடன், பணிவண்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

    ஒரு நட்சத்திரம் இரண்டு ராசிகளில் வரும் பொழுது தடுமாற்றம் எற்படுகிறது.
    பல சிந்தனைகள் உருவாகி ஒரு வழியாக ஒரு குழப்பத்தை உருவாக்குகிறது.
    ஆகவே, தாங்களே ஒரு வழி சொல்லுங்கள்.

    சந்திரசேகரன் சூரியநாராயணன்

    ReplyDelete
  5. Respected Sir,

    Happy morning... Explanation is great in your own ways always...

    Thanks a lot...

    With kind regards,
    Ravichandran M.

    ReplyDelete
  6. விடையும் விளக்கமும் தெளிவாய்...

    ReplyDelete
  7. ////Blogger Dallas Kannan said...
    Wow!!!
    I passed again :-)
    Great Title. Love that movie and great songs (I still sing few of those songs to my daughter at her bed time )
    Respected Sir
    It will be great if you can let us know if he had love marriage or not, dasa/buthi when he was married and if he had kids (good/problematic).
    Lot of folks mentioned about possible love marriage and problem with/having kids.////

    ஏழாம் அதிபதி அந்த வீட்டிற்குப் பதினொன்றில் இருக்கிறார், சரி! ஐந்தாம் வீட்டுக்காரர், அந்த வீட்டிற்கு எங்கே இருக்கிறார் என்று பாருங்கள். ஆகவே காதல் திருமணம் இல்லை! குழந்தை பாக்கியத்திற்கும் அதுதான் பதில்!

    ReplyDelete
  8. ////Blogger raghupathi lakshman said...
    மதிப்பிற்க்குரிய ஐயா வணக்கம்.
    விடையையும் விளக்கமும் தெளிவு பெற உதவியது ஐயா.
    நன்றி ல ரகுபதி////

    உங்களுடைய பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  9. /////Blogger A. Anitha said...
    ஐயா! குடும்ப வாழ்க்கை நன்றாக அமையாததென்பதும், களத்திரம் நன்றாக இல்லை என்பது கண்கூடே. அதில் திருமணம் முடிய உள்ள சாத்திய கூறு எது? (களத்திரம் மிகப்பாதிப்பாக தோன்றுகிறது) மேலும் கிரகங்களின் அஸ்தங்கம் மிகப் பெரிய சாபமா?/////

    ஏழாம் அதிபதி 11ல் அதனால் திருமணம் நடந்தது. அஸ்தமணத்தை மட்டும் பார்க்காமல் கிரகயுத்தத்தையும் பாருங்கள் சகோதரி!

    ReplyDelete
  10. ////Blogger Chandrasekaran Suryanarayana said...
    வணக்கம்.
    தங்களுடைய அலசல் மிகவும் நன்றாக இருந்தது.
    ஆசிரியருக்கு ஒரு வேண்டுகோள்.
    பிற்பகுதியில் வரும் கேள்விகளுக்கு எல்லாம் இருப்பு தசா விவரங்களை வழ‌ங்கும்படி ஆசிரியரிடம் தாழ்மையுடன், பணிவண்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.
    ஒரு நட்சத்திரம் இரண்டு ராசிகளில் வரும் பொழுது தடுமாற்றம் எற்படுகிறது.
    பல சிந்தனைகள் உருவாகி ஒரு வழியாக ஒரு குழப்பத்தை உருவாக்குகிறது.
    ஆகவே, தாங்களே ஒரு வழி சொல்லுங்கள்.
    சந்திரசேகரன் சூரியநாராயணன்////

    உங்களுடைய வேண்டுகோள் ஏற்கப்பெற்றது. முடிந்தவரை தருகிறேன். நன்றி!

    ReplyDelete
  11. /////Blogger சே. குமார் said...
    விடையும் விளக்கமும் தெளிவாய்.../////

    உங்களுடைய பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com