மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

12.3.14

Astrology: ஆசையினாலே மனம்.....அஞ்சுது கெஞ்சுது தினம்!

 
Astrology: ஆசையினாலே மனம்.....அஞ்சுது கெஞ்சுது தினம்!

Quiz No.45: விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

தொடர் - பகுதி நாற்பத்தி ஐந்து

12.3.2014

Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!

இன்றைப் பாடத்திற்கு இரண்டு கேள்வி. அந்த இரண்டு கேள்விகளுக்கு மட்டும் பதில் எழுதுங்கள் போதும்!
------------------------------------
இன்றைய கேள்விகள்:

கீழே உள்ள ஜாதகம் ஒரு அன்பரின் ஜாதகம்.

1. ஜாதகருக்குத் திருமணம் ஆயிற்றா? அல்லது ஆகவில்லையா?
2. ஜாதகரின் குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும்?

இரண்டு கேள்விகளுக்கும் சரியான பதில்களை எழுதினால் மட்டுமே 100 மதிப்பெண்கள் கிடைக்கும்.



அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்!

விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

ஆணித்தரமாக எழுதினால்தான் பாஸ்மார்க்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
==========================================

34 comments:

  1. ஜாதகருக்கு திருமணம் நடந்திருக்கும். 7ம் வீட்டு சனி அந்த வீட்டிற்கு 11ல். களத்திரகாரகர் சுக்கிரன் மூல திரிகோணத்தில். சிம்ம இலக்கினத்திற்கு யோக காரகர் செவ்வாயும் சொந்த வீட்டில் இருக்கிறார். 7ம் வீட்டை தனது விசேஷ பார்வையால் பார்க்கிறார்.

    ஆனால் ஜாதகருக்கு குழந்தை வரம் இல்லை. 5ல் சனி, 5ம் வீட்டுக்காரரும், புத்திர காரகருமான குரு பகவான் 5ம் வீட்டிற்கு 12ல் கிரக யுத்தத்தில் இருக்கிறார். மேலும் அயன சயன பாக்கியத்திற்கு உலை வைப்பது போல் 12ம் வீட்டில் மாந்தி. 2ம் வீட்டில் இராகு. இலக்கினம் மாந்திக்கும் இராகுவுக்கும் இடையில் சிக்கியுள்ளது. 2ம் வீட்டிற்கோ 5ம் வீட்டிற்கோ எந்த சுப கிரக பார்வையும் இல்லை. இலக்கினாதிபதியும் கிரக யுத்தத்தில் சிக்கியிருக்கிறார். ஆக குடும்ப‌ வாழ்வில் ஏகப்பட்ட பிரச்சனை.

    ReplyDelete
  2. 1) அன்பர் 25 வயதளவிலேயே திருமணம் புரிந்தவர்.
    2) விவாக ரத்தானவர். மீண்டும் மணம் புரிந்திருப்பார்.

    களத்திர காரகன் சனி, த்ரிகோணத்தில் அமர்ந்துள்ளார். காரகன் சுக்கிரன் மூன்றாம் இடமானாலும் ஸ்வஸ்தான பலம் பெற்றதால் செவ்வாய் திசையில் உச்ச சந்திரன் புத்தியில் திருமணம் நடந்திருக்கும். களத்திரஸ்தானத்தைச் சனியும் செவ்வாயும் பார்ப்பதாலும், மறைவிடத்தில் பாபகர்த்தாரியில் சுக்கிரன் இருப்பதாலும், நவாம்சத்தில் ப்ருஹஸ்பதி நீச்சமானமானதாலும் பெற்றோரை மீறி, பிரச்சினைகளுடன் நடந்த திருமணமாக இருந்திருக்கும்.

    குடும்பஸ்தானத்தில் அமர்ந்த ராஹு திசை குரு புக்தியில் விவாகரத்து ஆகி மீண்டும் சனி புக்தியில் மறுமணம் புரிந்திருப்பார். குடும்பஸ்தானத்தை சனியானவர் பத்தாம் பார்வையில் பார்ப்பதாலும், ஸ்தானாதிபதி புதன் குடும்பஸ்தானத்திற்கு மூன்றில் பகைவன் செவ்வாயுடன் பகை வீட்டில் அமர்ந்ததாலும் குடும்ப வாழ்க்கை பிரச்சினைகள் நிறைந்துதான் இருக்கும்.

    புத்திரஸ்தானத்தில் சனி; ஸ்தானாதிபதி குருவோ அவ்விடத்துக்குப் பன்னிரண்டில் (மேலும் நவாம்சத்தில் நீச்சனாகி செல்லாக்காசாகி விட்டார்). மேலும் பன்னிரண்டில் மாந்தி சயனபோகத்திற்கு வேட்டு வைத்துவிட்டார். எனவே குழந்தைகள் கிடையாது.

    ReplyDelete
  3. 1. திருமணம் நடைபெறும்.
    2. 7க்கு உடையவன் சனி, தன் வீட்டிற்கு 11ல் (லாப ஸ்தானத்தில்) உள்ளத்தால் திருமணம் உண்டு.
    3. குடும்ப வாழ்க்கையில் இடையூறு உண்டு.
    4. 2ம் வீட்டின் அதிபதி புதன், 4ம் வீட்டில் சூரியன் மற்றும் செவ்வாய் தொடர்பால் கெட்டுவிட்டார்.
    5. குடும்ப ஸ்தானம் (2ல்) ராகு இருந்து அந்த வீட்டை ஆஃப் (off) செய்து விட்டார்.

    ReplyDelete
  4. ஐம்பதுக்கு அப்புறம் ஓய்வு உண்டா
    ஐயம் தீர்க்க வேண்டும் அய்யா..?

    ReplyDelete
  5. Respected sir

    1. He got married :- 7th place Saturn is in Fifth house so he got married.
    2. Family life:- is not good they got separation due to Rahu is in Second house & Saturn is seeing second house.so family life spoiled.
    Regards
    rm.srithar

    ReplyDelete
  6. Dear Sir,

    திருமணம்:
    திருமணம் ஆனவர். காதல் திருமணமாக இருக்க நிறைய வாய்ப்புகள் உண்டு என நினைக்கிறேன். காரணம் லக்கினத்துக்கு ஏழாம் அதிபன் சனி ஐந்தில். அதே போல ராசிக்கு ஏழாம் அதிபன் ஆட்சி, ராசிக்கு ஐந்தாம் அதிபனோடு கூட்டணி. லக்கினத்துக்கு ஏழாம் வீட்டிற்கு உடையவர் சனி பகவான் தனது வீட்டைத் தனது பார்வையிலேயே வைத்திருக்கிறார். அது நல்லது. சனி பகவான் என்பதால் சற்றே தாமதமாக திருமணம் நடந்திருக்கலாம்.

    குடும்ப வாழ்க்கை:
    இவரது குடும்ப வாழ்க்கை தாயையும், தாய்வழி உறவையும் மனைவியையும் ஒட்டி அமையந்திருக்கும். உறவுப் பெண்ணை - அதை மகளை அல்லது மாமன் மகளை மணம் செய்திருப்பார். அல்லது தாயின் சாயலில் மனைவி..

    இரண்டில் ராகு. பேச்சில் பிறர் மயங்கலாம். ஆனால் குடும்பத்தில் உள்ளோருக்கு சுருக்கென்று இருக்கும் வண்ணம் பேச்சு இருக்கும். இரண்டில் ராகு என்றாலே sharp speech எனபது வழக்கம்.

    லக்கினாதிபதி + இரண்டாம் அதிபதி + பதினொன்றாம் அதிபதி + ஐந்தாம் அதிபதி + எட்டாம் அதிபதி நான்கில்.


    Bhuvaneshwar

    ReplyDelete
  7. திருமணம் உண்டு , காதல் அல்லது கலப்பு திருமணம் .. கஷ்டங்கள் மிகுந்த குடும்ப வாழ்வு..கவர்ச்சி உடையவராதலாள் பெண்சுகம் ஆசைப்படுபவர்

    ReplyDelete
  8. மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,

    புதிர் பகுதி 45 இல் கொடுத்திருந்த ஜாதகத்தின்படி,

    1. களத்திரகாரகன் சுக்கிரன் 3ல் ஆட்சி பெற்றும், சந்திரன் ரிஷபத்தில் உச்சம் பெற்று இருப்பதாலும் கண்டிப்பாகத் திருமணம் ஆகி இருக்கும். ஆனால் சனி 5ல் இருப்பதால் தாமதத் திருமணம். 7ம் அதிபதி 5ல் இருப்பது காதல் திருமணத்தைக் குறிக்கிறது.

    2. குடும்ப ஸ்தானத்தில் இருக்கும் ராகு நிம்மதியைக் கெடுப்பார், பண வசதி இருக்காது. 12ல் இருக்கும் மாந்தி இவரை எழ்மை நிலையில் வாடும்படி செய்திருப்பார். லக்கினத்துக்கு முன்னால் மாந்தியும், பின்னால் ராகுவும் இருப்பதால் பிரச்சினைகள் நிறைந்த குடும்ப வாழ்க்கை.

    ReplyDelete
  9. Respected Sir,

    Simma Lagnam Neengal solvadhu pole Herokalin Lagnam... Adhipathy Sooriyan 4-il and andha veetu adhipathy chevvai angey aatchi balam.

    Thirumanam Nadaipetra Jadhagam. 7-m adhipathy Sani lagnathirku 5-il and kumba veetirku 11-il and avaradhu veetai 3-m paarvayaga parkiraar. Yogadhipathy Chevvai 4-m paarvayaga 7-m veetai paarkiraar. karagan sukran 3-il aatchi balathudan amarvu adhanal thirumanam nadaipetru irukkum.

    Thirumana Valkai sandai sacharavugal niraindha valkayaga irukkum. 2-il raagu adhu kanni ragu adhanal nanmayai seidhalum, saniyin balatha 10-m paarvai 2-il kandippaga thirumana valkayil prechanaigal irukkum. 2-m adhipathy budhan 4-il avar veetirku 3-il.

    Thank You.

    ReplyDelete
  10. MA - aspect 7.
    SA - aspect 7.
    VE - in Papakarthari Yoga.
    All the above are against Marriage.
    This may lead to delay marriage.

    Marriage life
    Ra – in 2nd house.
    Ke – in 8 th house.
    JU aspect 8 th house.
    May lead to separation.

    ReplyDelete
  11. good married life in right age.
    reason:venus,saturn and Guru paravi to 8 th house

    ReplyDelete
  12. உயர்திரு ஐயா: வணக்கம்.
    புதிர் 45க்கு விடை:களத்திரகாரன் சுக்கிரன் ஆட்சி ஏழாம் வீட்டு அதிபதி அந்த வீட்டிற்கு பதினொன்றில் அதனால் திருமணம் முடிந்திருக்கும். இரண்டில் ராகு மற்றும் 2ம் வீட்டு அதிபதி அந்த வீட்டிற்கு மூன்றில் அதனால் குடும்ப வாழ்க்கை சொல்லும்படி இல்லை.

    ReplyDelete
  13. ayya,
    indha jaathagarukku thirumanam nadanthirukkaadhu. Kaaranam, thasaigal ivarukku saadhagamaaga illai. 7m athipathy sani guru veettil matrum 7rkku 11il matrum 7m veettai than paarvaiyil vaithirundhalum, 7m veetirkku endha suba graha paarvaiyum illai. 7m athipathy sanikkum endha suba graha paarvaiyum illai. Kurippaaga guru alladhu sukkiranin paarivai illai.7m athipathi sani, thasa naadhargalukku 1-2 position. adhumattumindri thasa naadhargalukku (chevvai-yogakaaran matrum guru)sukkiran 1-12 postion. Thirumanam marukkapatta jaadhagam.

    Indha jaathagarukku gudumbamum sariyillai enbathai thaan kaattugiradhu. Kaarnam, 2il raghu. 6m athipathy saniyin paarvaiyil 2m veedu. 80% kaalasarpa jathagam.

    anbudan
    mu.prakaash

    ReplyDelete
  14. கல்யானம் நடக்கும் தாமதமாக சனியின் 3ஆம் பார்வையால். குடும்பம்தான் (ராவாக உள்ளது )கெட்டுள்ளது.2ண்டில் ராகு .

    ReplyDelete
  15. Though seventh lord is sani but its in thirikonam. Lakinathipathi is in fourth place, more over fifth lord and ninth lord joins in 4th place. hence He should have got married from a rich status. utcha chandhran also looks that place. since raghu is in second place and sani has its 10th look the marriage life will have some troubles. but all manageable.

    ReplyDelete
  16. Quiz-45

    No marriage

    No family life


    Reasons:

    1. Chvvai and sani aspects 7th place

    2. Karlathirakaraka on 3rd place (marivu)

    3. In 12th place manthi sitting ( Ayana bhoga Bhagya isthanam)

    rameshraja1304@gmail.com

    ReplyDelete
  17. Dear Sir,

    1. The native got married late.
    7th lord saturn delays, since it has aspected by uccha chandran he got married.

    2.His family life is not happy. Divorced.

    2nd place ragu, and 2nd lord is hemmed between malefics.

    ReplyDelete
  18. Hello Sir,

    Below are my observations.

    Yes , he would get married. 7th house lord Shani is in 5th and Guru is in 4th house ensures that the person will have a marriage life.

    This also ensures that he would have gained a lot from his wife side after his marriage.

    The native has only Moon & Lagna outside Raghu & Kethu which means that he has 20% concession on the Kal-Sarpa Dosa/Yoga.....

    The happiness of his marriage life also belongs to the horroscope of the girl as well, as she must have Raghu/Kethu in her second house from lagna/moon to ensure the happiness.

    Just by considering his horoscope I predict a happy married life for this guy as Bhudan the second house owner who lent his house to Raghu is in strong position.

    Thanks.

    ReplyDelete
  19. ஐயா, கொடுக்கப்பட்ட ஜாதக அன்பருக்கு திருமணம் தாமதமாக நடந்து இருக்கும். அதற்கான காரணங்கள் 1) லக்னம் பாப கர்த்தாரியின் பிடியில் உள்ளது. லக்னாதிபதி சூரியன் (சுய பரல்‍‍‍‍‍‍‍‍ 3) நாலாம் வீட்டில் அஷ்டமாதிபதியுடன் கூட்டு சேர்ந்து உள்ளார். 2)களத்திராதிபதி சனி 5ல் சுபர் பார்வையற்று உள்ளார்.(சுய பரல் 1 மட்டுமே). 3)களத்திரகாரகன் சுக்கிரன் 3ல் எனக்கு என்ன வந்தது என்று உட்கார்ந்து கொண்டு விட்டார். 4)களத்திர பாவம் சுபர் பார்வை அற்று உள்ளது. 5)அஷ்ட்மாதிபதி குரு 4ல் நங்கூரம் இட்டு உட்கார்ந்து கொண்டு (சுய பரல் 8), யோகாதிபதி செவ்வாயை(சுய பரல் 1)கிடுக்கி பிடி போட்டு வைத்து உள்ளார்.

    தவிர ஜாதகரின் திருமண வயதில் வந்த அனுகூலமற்ற ராகு, குரு(அஷ்டமாதிபதி) தசைகள் திருமணத்தை தள்ளி போட்டு இருக்கும்.

    ஆனாலும் ஜாதகருக்கு, கஜகேசரி யோகம் முதலான ராஜ யோகங்கள் உள்ளபடியால், ஜாதகத்தில் உள்ள குறைகள் சரி செய்யப்பட்டு இருக்கும். 8ல் உள்ள கேது, சுபரின் பார்வை பெற்று ஜாதகருக்கு பூரண ஆயுள் மற்றும் ராஜ போக வாழ்க்கையை கொடுத்து இருப்பார்.
    வாத்தியாரின் திறமையான அலசலுக்கு காத்து இருக்கிறேன்.

    ReplyDelete
  20. Respected Sir,

    My answer for our today's Quiz No.45:

    1. He has married.

    2. Rich and having family problem.(Having no child)

    Reason for-1:

    i. Seventh lord is sitting 11th house from its own house and aspecting its own house as it's third aspect.

    ii. Seventh house or lord not associated and aspected by benefic planets.

    iii. Lagna lord,yoga karaka (Mars)and eleventh and second house lord are in good position. It's great.

    Hence, all the above reasons, he got married.

    Reason for -2:

    i)In second house Rahu is sitting and getting sixth lord saturn aspects as its tenth aspect. Its bad.

    ii) second house lord is sitting in good position.

    iii) Fifth house lord is sitting twelfth house from its own house and sixth house lord saturn is sitting in fifth house. it affects child birth.

    iv) Seventh lord and lagna lord are in 1/12th position and even second house lord also. Hence, it denotes not happy married life.

    v) lagna lord, eleventh house lord, yoga karaka and dhana karaga all are sitting in one house. It is good for wealth.

    In short, He married but there is problem in family life.

    With kind regards,
    Ravichandran M.

    ReplyDelete
  21. Ayya,

    1. Marriage is impossible for this person. Because Shani & Mars aspecting 7th house. Kalathirakarakan(Sukran) is not looking 7th house or 7th house owner(Shani).
    Even if marriage would have happened, he must be undergone two marriage duebto Thara dosam(Rahu is in 2nd house without Guru look)
    2. He must be born from respected family. But marriage related family life is not there. He must be having decent family(two may be) during lifetime.

    Your Student,
    Ravi

    ReplyDelete
  22. வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம், ஜாதகருக்கு திருமணம் ஆகியிருக்கும், ஆனால் குடும்பம் நிலைக்காது.ஜாதகருக்கு குழந்தைகளால் பிரச்சினை உண்டு. வருமானம் அதிகம் வந்தாலும், செலவாளி.

    ReplyDelete
  23. Hi Sir,

    7th house: Native will get married since Authority of Marriage Venus & Yogakara of Simma rasi, Mars are in their own house.
    Marriage life will be happy since Yogakara Mars sees 7th house and 7th house owner Saturn is placed 11th from its position[house of gains].

    ReplyDelete
  24. 7ம் வீடு, 7ம் அதிபதி சனியின் 3ம் பார்வையில் உள்ளது. 6ம் அதிபதி சனியின் 3ம் பார்வையும் 7ம் வீட்டிற்கு உள்ளது.

    7ம் அதிபதி 5ம் வீட்டில் திரிகோணத்தில் உள்ளது.

    காரகன் சுக்கிரன் பாபகத்தாரி யோகத்தில். ஆனாலும் பாக்கியாதிபதி, சுகாதிபதி, யோகாதிபதியாகிய செவ்வாயின் வலுவான 4ம் பார்வையால், தீமை பயக்கும் சனி, செவ்வாயின் பார்வை 7ம் வீட்டிற்க்கு உள்ளதால் கால தாமதமாக திருமணம் நடந்திருக்கும்.

    2. குடும்ப வாழ்விற்க்கு 2ம் வீடு ராகுவால் பாதிக்கப்பட்டுள்ளது.

    2ம் அதிபதி புதன் அஸ்தங்கம் அடைந்த யோகாதிபதி செவ்வாய் மற்றும் அஸ்தங்கம் அடைந்த அஸ்டமாதிபதி குரு உடன் 4ம் இடத்தி நல்ல நிலையில் இருப்பது போல் இருப்பது போல் இருந்தாலும் விரையாதிபதி சந்திரனின் பார்வையில் கெட்டுள்ளது.

    காரகன் குருவும் விரையாதிபதி சந்திரனின் பார்வையில் கெட்டுள்ளது.
    மேலும் சனியின் 10ம் பார்வை 2ம் வீட்டில் உள்ளது. சுப கிரகங்களின் பார்வை 2ம் வீட்டிற்க்கு இல்லாததால் குடும்ப வாழ்விற்க்கு வழி இல்லை என்றே தோன்றுகிறது.

    கஜ கேசரி யோகம், சசிமங்கள, புத ஆதித்ய யோகம் உள்ளது. இது குடும்ப வாழ்க்கைக்கு உதவுமா என்பதை பற்றி விளக்கவும்

    ReplyDelete
  25. மதிப்பிற்குரிய ஐயா,
    ஜாதகருக்கு திருமணம் ஆகியிருக்கும். இரண்டு விவாகம்.7க்குடைய சனி 5ல். சுக்ரன் 3ல் ஆட்சி.இருப்பினும் சுக்ரன் பாபக்கர்த்தாரி யோகத்தில் சனி பகை வீட்டில் which leads to second marriage.2ல் ராகு,2ம் வீட்டிற்கு சனியின் பார்வை குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாய் இருக்காது.
    12க்குடையவன் 10ல். 12ல் மாந்தி திடீர் இழப்புகள் உண்டாகும்.Which also leads the native to suffer in financial crisis.

    ReplyDelete
  26. வணக்கம் சார்,
    திருமணம் செய்துகொண்ர்டா சுக்கிரன் ஆட்சி 7ஆம் அதிபதி சனி அந்த வீட்டிற்கு 11ல் மேலும் சந்திரன் உச்சம் ரிசப ராசிகாரர்கள எளிதில் திருமணம் செய்துகொள்வார்கள் காரண்ம் ஏதோ கிடைத்த்து பண்ணிகொள்வோம் மனநிறைவு
    பொறுவார்கள் மேலும் 2ஆம் அதிபதி புதன் 4ல் அதோடு குரு சூரியன் செவ்வயோடு சேர்ந்திருகிறார்

    2.குடும்பவாழ்கை பிரச்சனைநிறைந்திருக்கும் காரணம் 2ல் ராகு கன்னி றாகு அதோடு நாலில் செவவாய் அந்தபிரசசனைகளை சாமாளித்து குடும்பத்தை ஒட்டலாம் 8லிருக்கும் கேது ரொம்ப குணகேட்டைதருவார்.

    ReplyDelete
  27. மற்றும் கேதுவிற்கு நடுவில் உள்ளது.7ம் இட அதிபதி சனைச்சரன் 6க்கும் அதிபதியானதால் அவர் 7ம் இடத்தைப் பார்ப்பது பலன் ஒன்றும் கொடுக்க வில்லை.7ம் இடத்திற்கு செவ்வய் பார்வை.இரண்டு தீய கிரகங்கள் 7ம் இடத்திப்பார்ப்பது ஜாதகருக்கு திருமணத்தை நடத்திக் கொடுக்காது. அவருக்குத் திருமணம் நடக்கவில்லை.மேலும் சுக்கிரனும் ராகு, சூரியன் செவ்வாய் ஆகியவைகளால் சூழ்ப்பட்டுள்ளார்.

    2ம் இடம் ராகுவால் நிறறைந்ததும், இரண்டாம் இடத்துனை சனி பார்ப்பதும், குடும்பம் இல்லாமல் இருப்பதைக்குறிக்கும்.ஜாதகருக்கு குடும்ப பந்தம் இல்லை.

    ReplyDelete
  28. 34வயதுக்கு மேல் வந்த வியாழ திசையில் திருமணம் இனிதே நடைபெற்று, புத்திர பாக்கியமும் கிடைத்திருக்கும்...

    2ல் ராகு இருந்து, சனியின் 10ம் பார்வை பதிந்ததால் கலாட்டா குடும்பம்... ஒருவருக்கு ஒருவர் பிடிக்காவிட்டாலும் முக்கிய விசயங்களில் விட்டுகொடுக்கும் நல்ல குடும்ப பின்னணி உண்டு...


    சனி 3ம் பார்வையாகவும், செவ்வாய் 4ம் பார்வையாகவும், களத்திர ஸ்தானத்தை பார்த்தாலும் குரு சந்திர யோகம் அதை ஈடு கட்டி இருக்கும்.

    -லெஷ்மி நாராயணன்
    தூத்துக்குடி....

    ReplyDelete
  29. QUIZ 45 வணக்கம்.

    1. தாமதமான காதல் திருமணம் எற்பட்டு பிறகு பிரிவில் முடிந்தது.
    2. குடும்ப வாழ்க்கை சில காலம் ம‌ட்டுமே.

    15.12.1959ஆம் தேதி காலை 12.00 மணிக்கு மிருகசீருஷத்தில் பிறந்த ஜாதகருக்கு சிம்ம லக்கினம்.

    யோக‌கார‌ன் செவ்வாய். கூட‌ புத‌னும் வ‌லிமையாய் இருப்ப‌து அவ‌சிய‌ம். ந‌வாம்ச‌த்தில் புத‌ன் உச்ச‌த்தில் வ‌லிமையாய் (40 ப‌ர‌ல்க‌ள்) இருப்ப‌து அதிர்ஷ்ட்ட‌ம்.

    இந்த சிம்ம லக்கின ஜாதகத்தில் லக்கினாதிபதி சூரியனுடன் செவ்வாய், புதன், குரு சேர்ந்து கேந்திரத்தில் இருப்பது அதிர்ஷ்ட்டத்தை கொடுக்கும் புதன் தசையில் புதன் புக்தியில் நிறைய செல்வங்கள் சேரும். இந்த‌ ஜாத‌க‌ர் கோடிஸ்வ‌ர‌ர்.

    ல‌க்கின‌ம் பாப‌க‌ர்தாரி தோஷ‌த்தில் உள்ள‌து. ஒரு ப‌க்க‌ம் மாந்தி ம‌ற்றோரு ப‌க்க‌ம் ராகு. ல‌க்கின‌ம் 37 ப‌ர‌ல்க‌ளுட‌ன் பலமாக உள்ள‌து.

    7ம் வீட்டு அதிப‌தி ச‌னி (1 ப‌ர‌ல்) திரிகோண‌த்தில் 5ம் வீட்டில் இருந்து கொண்டு 3ம் பார்வையாக‌ 7ம் வீட்டை பார்த‌தால் தாமதமாக காதல் திருமணம் எற்ப‌ட்ட‌து. சந்திரன் (6 பரல்கள்), சுக்கிரன் (5 பரல்கள்) சம பலத்தோடு இருப்பதால் காதல் திருமணம் எற்பட்டு நல்ல மனைவி அமைந்தார்..

    ஜாதகருக்கு குரு தசை சூரிய புக்தியில் 36 வயதில் காதல் திருமணம் நடந்தது.

    2ம் வீட்டின் அதிபதி புதன் நவாம்சத்தில் உச்சம் பெற்று இருந்தாலும், ராசியில் 2ம் வீட்டு அதிபதி புதன் செவ்வாய், சூரியனுடன் கிரகயுத்ததில் இருப்பதாலும், குடும்ப வாழ்க்கை சில காலம் ம‌ட்டுமே. அதுவும் குரு தசை முடியும் வரை.

    அடுத்து வ‌ந்த‌ ச‌னி த‌சையில் ச‌னி புக்தியில் குடும்ப‌த்தில் பிரிவினை எற்ப‌ட்ட‌து. சனியின் 10ம் பார்வை 2ம் வீட்டின் மீதுள்ளது.மேலும் 2ம் வீட்டினில் உள்ள‌ ராகுவும், 8ம் வீட்டினில் உள்ள கேதுவின் 7ம் பார்வை 2ம் வீட்டின்மீது இருப்பதாலும் குடும்ப வாழ்க்கையில் பிரிவு எற்ப‌ட்ட‌து. 2ம் வீட்டின் மீது எந்த சுப பார்வையும் இல்லை.சுக்கிரன் 3ம் வீட்டில் மறைவிடங்களில் இருப்பது திருமணத்திற்க்கு எதிரான அம்சங்கள்.

    6ம் வீட்டு அதிபதி வில்லான சனியும் அவரே. ஆகையினால், சனி தசை சனி புக்தியில் பிரிவு எற்பட்டது. 6ம் வீட்டு அதிபதி ஐந்தாம் வீட்டில் அமர்ந்திருந்தால்
    நோயுற்ற சேய்களை உடையவனாக இருப்பான்.

    குரு 5ம் வீட்டிற்க்கு 12ல் 4ம் வீட்டில் அம‌ர்ந்திருப்ப‌தால் குழ‌ந்தை பாக்கிய‌மும் இல்லை.


    சந்திரனின் 7ம் பார்வை 4ம் வீட்டின் மீது சூரியனை பார்பதால் ராஜ யோகம், சந்திரனின் 7ம் பார்வை 4ம் வீட்டின் மீது செவ்வாயை பார்பதால் சசிமங்கல‌ யோகம், சந்திரனின் 7ம் பார்வை 4ம் வீட்டின் மீது குருவை பார்பதால் கஜகேசரி ‌ யோகம் எற்பட்டது.
    4ம் வீட்டில் சூரியனும் புதனும் சேர்ந்து இருப்பதால் புத ஆதித்திய யோகம் எற்பட்டது.

    சந்திரசேகரன் சூரியநாராயணன்



    ReplyDelete
  30. திருமணம் ஆகவில்லை.
    காரணம்
    சனி 5-ல் (பூர்வ புண்ணிய ஸ்தானமும் சொல்லிக் கொள்ளும் நிலையில் இல்லை)
    7-ம் இடத்தை களத்திர ஸ்தானத்தை பார்வை செய்பவை சனி, செவ்வாய் - வேறு நல்ல கிரகங்களின் பார்வையும் இல்லை
    2-ம் இடத்தை குடும்ப ஸ்தானத்தை ஆக்கிரமித்திருப்பவர் ராகு. -சனி
    பார்வை வேறு
    12-ம் இடமாகிய அனந்த சயன இடத்தை கெடுப்பவர் - மாந்தி
    லக்னமோ இரண்டு தீய கிரகங்களுக்கு மத்தியில் (மாந்தி, ராகு)
    சுக்கிரன் நல்ல இடத்திலும் சொந்த வீட்டிலும் இருப்பதால் அழகானவர்

    ReplyDelete
  31. Married and unhappy becoz of children and financial problem.

    ReplyDelete
  32. Respected sir
    Here is my quick analysis. I am not happy about it, but hope I will get at least pass mark (50%)
    1. 7th lord Sani is in 5th place (11th place), sukran in own house (but papakarthari yogam), 2nd lord is with laknathipathi and yogakaran.
    He is married but delayed. Strong 5th lord, Moon and sukra indicates Love as well.

    2. Rahu in 2nd house, Sani's look at 2nd house indicates quarrels and possible multiple marriages. Sani in 5th place and Guru/5th lord in 12th place from its house indicates Children related complications/issues.

    ReplyDelete
  33. ஐயா வணக்கம்,

    பதில்:

    1. ஜாதகருக்கு திருமணம் ஆயிற்று.
    2. சராசரி/நல்ல குடும்ப வாழ்க்கை.

    அலசல்கள்
    பார்க்க வேண்டிய இடங்கள் - 2, 4, 7, 12.

    1. 1959ல் பிறந்தவருடைய சிம்ம லக்ன ஜாதகம். லக்னாதிபதி நான்கில், புதன் குரு மற்றும் ஆட்சி பெற்ற செவ்வாயுடன்.
    2. இரண்டில் ராகு. ஆனாலும், ராகு நின்ற ராசிக்கதிபதி குருவுடன் சேர்ந்து கேந்திரத்தில்.
    3. 7ம் வீட்டிற்குரிய சனி, அந்த வீட்டிற்குப் பதினொன்றில்.
    4. அயன சயன போக்கியஸ்தானமாகிய 12ல் மாந்தி அமர்ந்திருந்தாலும், குருவால் பார்க்கப்படுவதால் அவரால் ஒன்றும் செய்ய முடியாத நிலை.
    5. 2க்குடைய புதன் கேந்திரத்தில், 7க்குடைய சனி திரிகோணத்தில்.
    6. களத்திரகாரகன் சுக்கிரன் மூலத்திரிகோணத்தில் (கேந்திராதிபத்தியத்துடன்).

    மேற்கூறிய சிறப்பான அம்சங்களால், ஜாதகரின் திருமண வாழ்வு நன்றாக இருக்கும்.

    நன்றி,
    இளையபல்லவன் (எ) வெங்கடேஷ் கிருஷ்ணன்

    ReplyDelete
  34. மதிப்பிற்க்குரிய ஐயா வணக்கம்.


    புதிர் 50க்கான விடை:
    1.தாமத திருமணம்
    2.குடும்ப வாழ்க்கை நல்ல நிலையில்.

    *சிம்ம லக்கினம். ரிசபராசி.லக்கினாதிபதி சூரியன் 4மிடத்தில்.லக்கினம்
    பாபகர்த்தாரி யோகத்தில்.4மிடத்தில் சூரியனுடன் குரு,புதன், ஆட்சிபெற்ற செவ்வாய் (யோகாதிபதி)ந‌ல்ல நிலையிலமர்ந்து உள்ளனர்.


    *கஜகேசரியோகம்,ருச்சக யோகம்,மாளவிகாயோகம்,குருமங்க‌ள‌ யோகம்
    புத‌ஆதித்ய யோகம், சிவராஜ யோகம்போன்ற யோகங்களைகொண்ட ஜாதகம்.
    அத்துடன் சந்திரன் உச்சம்.

    *சனி களத்திர ஸ்தானாதிபதி ஆக அந்த ஸ்தானத்திற்க்கு 11ம் இடத்தில்
    அமர்ந்து களத்திர ஸ்தானத்தை பார்வை செய்வதும் செவ்வாய் 4ம் பார்வயாக
    பார்ப்பதும் திருமணத்திற்க்கு தாமதமாக காரணம்.

    *குடும்பதிபதியும் குடும்பஸ்தானாதிபதியும் 4மிடத்தில் அமர்ந்து உச்ச சந்திரனின் பார்வையில் அமர்ந்து சிறப்பை பெற்றுள்ளது.எனவே குடும்ப வாழ்க்கை அமைந்தது. (குரு சுய‌வர்கத்தில் 8பரல்கள் பெற்று மிக வலுவான நிலையில் உள்ளது. அத்துடன் குடும்பஸ்தானம் 40 பரல்கள் கொண்டுள்ளது.யோகாதிபத்யின் தொடர்பு நல்லநிலையினை அடைய முடிந்தது)


    *நிலம் வீடு வாகன மற்றும் செல்வ வசதிகள் உண்டு.தர்மகாரியங்கள் பல செய்வார்.



    சரியான விடையினை அறிந்து கொள்ள ஆவலாய் உள்ளேன் ஐயா.
    நன்றி
    ல ரகுபதி

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com