மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

25.3.14

Astrology: ESP (Extra-Sensory-Perception) என்றால் என்ன?

 
Astrology: ESP (Extra-Sensory-Perception) என்றால் என்ன?

நேற்றுப் புதிர்ப் பகுதியில் கொடுத்திருந்த ஜாதகத்திற்குச் சொந்தக்காரர் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் ஜூல் ஃபிகர் அலி புட்டோ ஆவார். அதைச் சரியாகக் கண்டுபிடித்துச் சொன்ன அத்தனைபேர்களுக்கும் பாராட்டுக்கள்.

புட்டோவைப் பற்றிய  ESP செய்தியைக் கீழே கொடுத்துள்ளேன். அதையும் படித்துவிட்டுச் செல்லுங்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு, அது பதிவில் வெளியானதுதான் என்றாலும், மீண்டும் ஒருமுறை படித்து உங்கள் நினைவாற்றலைப் புதிப்பித்துக்கொள்ளுங்கள்

அன்புடன்
வாத்தியார்

----------------------------------------------------------------------------
Extra-Sensory-Perception

எங்கள் ஊரிலிருந்து (தேவகோட்டை) 20 கிலோ மீட்டர் தூரத்தில் ‘ஜனவழி' என்று ஒரு கிராமம் இருந்தது. அது திருவாடானை தாலுக்காவைச் சேர்ந்தது. அங்கிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் தொண்டி கடற்கரை உள்ளது. ரம்மியமான சூழலில் உள்ள கிராமம் அது

அங்கே சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குறி சொல்பவர் (ஜோதிடர்) இருந்தார். இளைஞர். 26 அல்லது 28 வயதுதான் இருக்கும்
ஜாதகக் குறிப்பு, கைரேகை எதுவும் வேண்டாம்.

எதிரில் வந்து உட்காரும் நபரை அசத்துகிற மாதிரி, அவராகவே வந்தவருடைய பெயர், ஊர், வந்ததின் நோக்கம், அவர் கேட்க வந்த கேள்வி, அதற்குரிய பதில் என்று ஒர் நிமிடத்திற்குள் அனைத்தையும் சொல்லி முடித்து விடுவார். வந்தவர் கிறுகிறுத்துப் போய் விடுவார்.

இத்தனைக்கும் அந்த ஜோதிடர் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். ஒரு சிறிய தோட்டத்திற்குள் இருக்கும் ஓட்டு வீடு. பக்கத்திலேயே வந்தவர்களுடன் அமர்ந்து பேசுவதற்காக 10 x 15 அடிக்கு கூரை வேய்ந்த கொட்டகைக் கூடம். அவ்வளவுதான்.

காலை 9 மணி முதல் 12 மணி வரைதான் (குறி) சொல்வார்.குறுகிய காலத்திலேயே பிரபலமாகி, நாளுக்கு நாள் கூட்டம் அதிகமாகிக் கொண்டே போனது.

காசு வாங்கமாட்டார். தட்சணையாக ரூ.1.25 மட்டுமே, வெற்றிலை பாக்கோடு அவர் அருகில் இருக்கும் தாம்பாளத்தில் வைத்துவிட்டு வந்து விடவேண்டும். காசையும், வெற்றிலை பாக்கையும் கடைசியில் வந்து அவருடைய தாயார் எடுத்துக் கொண்டு போவார் அவருடைய குருநாதரின் கட்டளையாம், அதற்கு மேல் காசு வாங்க மாட்டார்.

வருகிற ஜனங்களே, வீட்டு வாயிலிருந்து வரிசையாக நின்று அவரைப் பார்த்துவிட்டுப் போவார்கள்.

12 மணியானவுடன் எழுந்து விடுவார். அதற்குப் பிறகு நிற்பவர்கள் தங்களுக்குள் பேசி வைத்துக் கொண்டு அடுத்த நாள் மறுபடியும் வருவார்கள்
வருகிறவர்களுடன் அவருடைய உரையாடல் எப்படியிருக்கும் என்பதற்கு இரண்டு நிகழ்வுகளைக்  கொடுத்துள்ளேன்.
-------------------------------------------------
ஒரு பெரியவரும், அவருடைய மகனும் வந்து அவர் எதிரே அமர்கிறார்கள். இருவரும் மீனவர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்

"உங்களுடைய பெயர் மாரிமுத்து. கூடவந்திருப்பவர் உங்களுடைய மகன் சுடலைமுத்து. இருவரும் தொண்டியிலிருந்து வருகிறீர்கள் - இல்லையா?"

"ஆமாம், தம்பி"

" உங்களுடைய படகைக் காணவில்லை. காணாமல் போய் இரண்டு நாட்களாகி விட்டது இல்லையா?

"ஆமாம், தம்பி"

"அது கிடைக்குமா? அல்லது போனது போனதுதானா? என்று தெரிந்து கொள்வதற்காக வந்திருக்கிறீர்கள் இல்லையா?

"ஆமாம், தம்பி"

"அது இப்போது பட்டுக்கோட்டை அருகேயுள்ள முத்துப்பட்டிணம் கடற்கரையில் உள்ளது. அதைத் திருடிக்கொண்டு போனவர்கள் இப்போது அதை ஒளித்து வைத்திருக்கிறார்கள். மூன்று நாட்கள் கழித்துப் போங்கள். போகும்போது, உங்கள் குப்பம் ஆட்கள் சிலரை உதவிக்குக் கூட்டிக் கொண்டு போங்கள். படகை எடுத்தவர்கள் திருப்பிக் கொடுத்துவிடுவார்கள். வாங்கிக் கொண்டு வந்து விடுங்கள். அவ்வளவுதான் சிரமம் ஒன்றும் இருக்காது. இப்போது நீங்கள் போகலாம்”
-----------------------------------------------
கதர் சட்டை, கதர் வேஷ்டி அணிந்து ஒரு பெரியவர் தன் மனைவியுடன் வந்து அவர் எதிரில் அமர்கிறார்.

"உங்கள் பெயர் பீம ராஜா. ராஜபாளையத்திலிருந்து வருகிறீர்கள்"

"ஆமாம்!"

"உங்கள் இரண்டாவது பெண்னிற்குத் திருமணம் கூடிவராமல் தள்ளிக் கொண்டே போவதால் கவலையோடு இருக்கிறீர்கள்"

"ஆமாம்!"

"இன்னும் ஒரு வருடம் கழித்து, அடுத்த சித்திரையில் திருமணம் நடக்கும். உங்கள் பெரிய பெண்ணைக் கொடுத்துள்ள சம்பந்தி வீட்டாரே வந்து தங்களுடைய அடுத்த பையனுக்கு உங்களுடைய இரண்டாவது பெண்ணைக் கேட்பார்கள். அந்தப் பையன்தான் மாப்பிள்ளை. கேட்டவுடன் சரி என்று சொல்லி விடுங்கள். அதுவரை இதுபற்றி யாரிடமும் சொல்லாமல் மெளனமாக இருங்கள்.இப்போது நீங்கள் போகலாம்"
---------------------------------------------------------------------
இதில் ஆச்சரியம் என்னவென்றால், இரண்டுமே 100% சரியாக நடந்தது. இதுபோல அவர் சொன்னதெல்லாம் நடந்தது! அந்தக் குறி சொல்பவருக்கு இது எப்படி சாத்தியமாயிற்று?

அதற்குப் ESP (Extra Sensory Perception) என்று பெயர். அந்த 'அசாத்திய எதையும் அனுமானிக்கும் சக்தி’யைப் பற்றி, இது போன்ற இன்னும் நான்கு பேர்களைப் பற்றிச் சொல்ல வேண்டியது உள்ளதால் - சொன்னவுடன், விரிவான விளக்கம் தருகிறேன்
-------------------------------------------------------
அந்த ஜனவழி ஆசாமியின் முகவரியைக் கொடுக்க முடியமா? என்று கேட்பவர்களுக்கு:

அந்த மனிதர் இரண்டு வருடம் வரைதான் அங்கே இருந்தார் அதற்குப் பிறகு, பல பெரிய தலைகள் நுழைந்து, பணத்தைக் கொட்டிப் பலன்களைப் பார்க்க ஆரம்பித்ததும், அந்த மனிதர் தன் குருவின் கட்டளையை மீறிப் பணத்தின் மேல் பற்று வைக்க ஆரம்பித்ததும், அந்த சக்தி (ESP Power)   அவரை விட்டு நீங்கிவிட்டதாகவும், அவர் ஊரையே காலி செய்து கொண்டு கையில் கிடைத்த பணத்துடன் எங்கோ போய்விட்டதாகவும் தகவல்
---------------------------------------------------------------------
20.12.1971 முதல் 5.7.1977 வரை பாகிஸ்தானின் சர்வ வல்லமை படைத்த மனிதராக இருந்த திரு. ஜுல்ஃபிகர் அலி புட்டோ' வைத் தெரியாதவர்களே
இருக்க மாட்டார்கள்.

அவரைப் பற்றிய செய்திகளுக்கான தளம்:
http://en.wikipedia.org/wiki/Zulfikar_Ali_Bhutto

1977 ம் வருடத்தின் துவக்கத்தில் பங்ளாதேஷ் நாட்டிற்கு அரசியல் சுற்றுப் பயணமாகச் சென்றிருந்த திரு.புட்டோ அவர்கள் அங்கே மிகவும் பிரபலமாக இருந்த கிஸ்டி' என்னும் ESP சக்தியுள்ள மனிதரைச் சந்திக்க விரும்பினார்.

ஏற்பாடு செய்யப்பெற்றது.

தனது பாதுகாவலர்கள் வெளியே நிற்க அவர் மட்டும் தனியாக உள்ளே சென்று கிஸ்டியின் முன் அமர்ந்தார்.

எதிரில் அமர்ந்திருப்பது சர்வ வல்லமை படைத்த ஒரு பிரதமர் என்றெல்லாம் கவலைப்படாமல் கிஸ்டி தன்னுடைய பேச்சை சாதாரணமாகத் துவக்கினார்

"மிஸ்டர், புட்டோ!"

புட்டோ உற்சாகமாகச் சொன்னார் "யெஸ்!"

அடுத்து கிஸ்டியின் வாயிலிருந்து வந்த வார்த்தை புட்டோவின் உற்சாகத்தையெல்லாம் கடாசுவதைப் போல இருந்தது

"ஜாக்கிரதை ! (Be careful!)"

"என்ன சொல்கிறீர்கள்?" இது புட்டோ

"உங்களுக்குத் தூக்கு காத்திருக்கிறது!"

(You are going to be hanged)

புட்டோ அதிர்ச்சியடைந்தாலும், கணத்தில் அதை மறைத்துக் கொண்டு, தொடர்ந்து சொன்னார்

"என்னைக் காப்பாற்றிக் கொள்ள எனக்குத் தெரியும்: எனக்கு மூளை இருக்கிறது! (I can safe guard myself: I have brain)"

கிஸ்டி விடமல் சொன்னார்

"தூக்கில் தொங்கும் போது உங்கள் மூளையும் சேர்ந்துதான் தொங்கப் போகிறது"

அதற்குப் பிறகு சற்று நேரம் மரியாதை நிமித்தமாக சில நிமிடங்கள் பேசி விட்டு புட்டோ திரும்பி விட்டார்

கிஸ்டி சொன்னது அப்படியே இரண்டு வருடங்களுக்குள் பலித்தது (நடந்தது) 4.4.1979ம் தேதியன்று புட்டோ பரிதாபமாகத் தூக்கில் தொங்க விடப்பட்டார். அப்போது லண்டனில் படித்துக் கொண்டிருந்த புட்டோவின் மகள் பெனாசிர் பூட்டோ இதைக் கேள்வியுற்று, தன் தந்தையின் மரணத்திற்குப் பிறகு கிஸ்டியைச் சென்று சந்தித்து அழுதார். அப்போது கிஸ்டி அவருக்கு ஆறுதல் சொல்லியதோடு தன்னுடைய ESP சக்தியால் நடக்கப்போகின்ற இரண்டு விஷயங்களைச் சொன்னார்.

அதாவது அப்போது பதவியில் இருந்த ஜெனரல் ஜியா- உல்- ஹக் வெடி விபத்தில் இறப்பார் என்பதையும், அவர் இறந்தவுடன் பெனாசிர் பாகிஸ்தானின் பிரதமர் ஆவார் என்பதையும் சொன்னார்.

"பழங்கள் வெடித்துச் சிதறும்போது - நீங்கள் பிரதமராவீர்கள் என்றார். அதேபோல ஜியா சென்ற விமானத்தில் பழக்கூடையில் வைக்கப் பட்டிருந்த
வெடிகுண்டு வெடித்ததாலதான் விமானம் விபத்துக்குள்ளாகி, ஜியா அகால மரணமடைந்ததோடு, பெனாசிரும் பிரதமரானார்.

இவை அனைத்துமே துல்லியமாக அவைகள் நடக்கும் முன்பே கிஸ்டிக்கு எப்படித் தெரிந்தது?

அதுதான் இந்த ESP யின் சக்தி!

பெனாசிர், பங்ளாதேஷின் பிரதமர் எர்ஷாத் ஆகியோருடன் கிஸ்டி அவர்களும் சேர்ந்திருக்கும் படத்தைக் கீழே கொடுத்துள்ளேன்



-------------------------------------------
Clipping from Wikipedia:

General Zia-ul-Haq died in a plane crash on August 17, 1988. After witnessing a tank inspection in Bahawalpur, Zia had left the small town in Punjab province by C-130 Hercules aircraft. Shortly after a smooth take-off, the control tower lost contact with the aircraft. Witnesses who saw the plane in the air afterwards claim it was flying erratically. Directly afterwards, the aircraft nosedived before exploding in mid-air, killing General Zia and several other senior army generals, as well as American Ambassador to Pakistan Arnold Raphel. A common suspicion within Pakistan, although with no proof, is that the crash was a political assassination carried out by the American CIA or Russian KGB

--------------------------------------------
What is ESP?

ESP is the meaning of the supernatural phenomenon or the extra sensory perception ability. The abbreviation of Extra-Sensory-Perception is ESP in the world of common language. ESP (super willpower)…………..!

The power can be controlled by your thought and directed to anywhere you to go. The thought speed is faster than the velocity of light, which means that it can see through into the 10 year future indirectly. It also has infinite knowledge. That's why the power can tell you about anything that's happening or going to happen in your life.

ESP யின் அடிப்படை விவரங்களுக்குச் சுட்டி இங்கே உள்ளது: http://en.wikipedia.org/wiki/Extrasensory_perception
How ESP works? என்ற விவரங்களை முழுதும் அறிய Science - How stuff works - என்ற தளததைப் பாருங்கள்!

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
==============================================

6 comments:

  1. நானும் புட்டோ என்று சரியான பதிலை பின்னூட்டம் இட்டிருந்தேன் . என்ன காரணமோ வெளியாக‌வில்லை.

    ReplyDelete
  2. பழைய பதிவை பலமுறை படித்திருக்கிறேன் ஐயா...

    ReplyDelete
  3. ஆனால் பெனாசிருக்கும் அதே மாதிரி மரணம் ஏற்படும் என்பதையும்
    அந்த இஎஸ்பி சொன்னதாகத் தெரியவில்லையே?
    அன்புடன்
    அரசு

    ReplyDelete
  4. அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்

    பாகிஸ்தானின் மந்திரி ஜுல்பிகர் அலி புட்டோ வின்

    ** ஜாதக போஸ்ட்மார்டம் **
    என் தெரியவில்லை. இருந்தாலும் 8மிடம் வகுப்பு நடந்து கொண்டிருக்கிறது ..சரி. பார்த்து வைப்போமே என்றுதான்.

    இவர் பிறந்த .5.1.1928 சந்திரா திசை இருப்பு 2.10.03
    அடுத்து செவ்வாய் 7. 0.00
    ரகு திசை 18...0.00
    குரு திசை 16 0.00
    சனி திசை /தனது புக்தி 3.0.03
    சனி திசை /புதன் புக்தி 2...8.,00
    சனி திசை /கேது புக்தி 1... 1..08
    சனி திசை /சுக்கிர புக்திஇல்
    சுக்கிரன் உள்சித்திரம் 0..06..10
    1979..02..21முடிய
    .
    சூரியன் உள்சித்திரம் 53 நாள் இதில் ஒரு உள் கணக்கு சூக்சும .அதில் சூரியன்,3,சந்திரன் 5 ,செவ்வாய் 3 ராகு,7 குரு 9 சனி 9 புதன் 8 கேது 4,சுக்கிரன் 9.
    புதன் 8 நாளில் சரியாக 7 வது நாள் வருவது 04.04.1979. அன்று புட்டோ தூக்கிலடபட்டுள்ளார் ...

    அதாவது சனி திசை =சுக்கிர புக்தி=சுக்கிரன் அந்தரம்-=சூரியன் உள்சித்திரம் =புதன் சூக்கும அந்தரம் 8 நாளில் ==7வது நாள்
    அதன் பின்னர் கேது சூக்குமம் வருகிறது

    சரி ..துலா ல்கக்னதிற்கு மார்காதிபதி செவ்வாய் ...
    8மிடம் ரிஷபம் =அதில் சந்திரன் உச்சம் & ராகு வுடன் கூட்டணி. .
    பாதகாதிபதி 2இல் சனி கேது சுக்கிரன் ,மாந்தியுடன் கூட்டணி. .

    இதிலே புதன் எப்படி சம்பந்த பட்டான் ???
    குறைந்த பட்சம் 8 மிட அதிபதி சுக்கிர புக்தி =ஆயுள் காரகன் சனி திசை =சுக்கிரன் அந்தரம் ...இதில் தூக்கு என்றாலும் சரி
    சூரியன் அந்தராம் =உள்சிதிரம் சூக்கும திசை என்று புதன்சூக்கும திசை இல் இவருக்கு தூக்கு ...ஏன் ??மேற்கண்ட நான் போட்ட கணக்கு தவறா??
    வாத்தியார் அய்யா விளக்குங்க??

    ReplyDelete
  5. அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
    மேலே கேட்ட கேள்விக்கு பிரம்பு எடுத்து அதிகப்ரசங்கி என்று அடிக்க வராதீர்கள் !!!நன்றி..

    ReplyDelete
  6. சனவெளி ஜோதிடரைப் பற்றி படிக்கும் காலத்தில் வீட்டில் சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறேன்...

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com