மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

25.11.10

e class - பெயர்ச்சியைக் கண்டு அயர்ச்சி எதற்கு?

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
e class- பெயர்ச்சியைக் கண்டு அயர்ச்சி எதற்கு?

தூங்கிக் கொண்டிருந்த தமிழனைத் தட்டி எழுப்பியவர் பாரதியார். எழுந்த தமிழனுக்கு சட்டை, வேஷ்டிகள் கொடுத்ததோடு,, தன்னுடைய தத்துவப் பாடல்களால் நல்வழிப்படுத்தி, நம்பிக்கை கொடுத்து நடமாடவிட்டவர் கவியரசர் கண்ணதாசன். அவர்கள் இருவரும்தான் அழகு தமிழைப் பாமரனிடம் சேர்த்தவர்கள் என்றால் அது மிகையல்ல!

தன் வேலையுண்டு, தானுண்டு என்று இருந்த தமிழனை, கடந்த இருபது ஆண்டுகளாக ஜோதிடத்தின் பக்கம் திருப்பி விட்டவர்கள் ஜனரஞ்சகப் பத்திரிக்கைக்காரர்கள். குருப் பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, ராகு & கேதுப் பெயர்ச்சி என்று அத்தனை பெயர்ச்சிகளுக்கும் தனி மலர்களை வெளியிட்டு, சிலரை மகிழவும் வைத்தார்கள். பலரைக் கலங்கவும் வைத்தார்கள்.

நண்பர் ஒருவர் வந்தார். “இந்தக் குருப் பெயர்ச்சி எனக்கு எப்படி இருக்கும்?” என்று கேட்டார்.

“எந்தப் பெயர்ச்சியும், உங்களை ஒன்றும் செய்யாது! வழக்கம்போல அன்னபூர்னாவில் காப்பி சாப்பிட்டுவிட்டு வீட்டிற்குச் செல்லுங்கள்”

“ஏன் ஒன்றும் செய்யாது?”

“நீங்கள் தீவிர முருக பக்தர். எந்தத் துன்பம் வந்தாலும் விலகி விடும். மலைபோல வந்தாலும், பனிபோல் விலகிவிடும். வேல் இருக்கப் பயம் எதற்கு? மயில் இருக்கத் துணை எதற்கு?” என்று சொன்னதோடு, திருமுருகாற்றுப்டைப் பாடல் ஒன்றையும் சொல்லி அவரை அனுப்பிவைத்தேன்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
புலிப்பாணி முனிவர் எழுதிய பாடல் ஒன்றைக் கிழே கொடுத்துள்ளேன்:

“கேளப்பா குருபதியும் மூன்றில் ஏறக்
கெடுதி மெத்த செய்வானடா வேந்தன் தானும்
ஆளப்பா அகத்திலே களவும் போகும்
அப்பனே அரிட்டமடா சிசுவுக்கேதான்
கூளப்பா குவலயங்கள் எல்லாம் ஆண்ட
குற்றமிலா காந்தாரி மைந்தன் தானும்
வீளப்பா வீமன்கை கதையினாலே
விழுந்தானே மலைபோலே சாய்ந்தான் சொல்லே!”


மன்னனுக்குரிய அந்தஸ்துடன் இருக்கும் குருபகவான், கோள்சாரத்தில் சந்திரராசிக்கு மூன்றில் வரும்போது ஜாதகனுக்குக் கெடுதிகளை அதிகமாகச் செய்வான். முக்கியமாக பொன் பொருள் களவு போகும். பறிகொடுக்க நேரிடும்.

(காந்தாரி மைந்தன் என்பது துரியோதனனைக் குறிக்கும். அவன் பீமன் கை ஆயுதத்தால், உயிர் விட்டதும் அந்தச் சூழ்நிலையில்தான் என்றும் சொல்லியிருக்கிறார். அது பற்றி பிறகு பார்ப்போம்)

குருபகவான் கும்பத்தில் இருந்து, மீன ராசிக்கு தாவியிருக்கிறார். மகர ராசிக்கு அது மூன்றாம் இடம்.

அடியேன் மகரராசிக்காரன். புலிப்பணி சொன்னது நடந்திருக்கிறது. எனது பாடங்கள் களவு போயிருக்கின்றன.
_____________________________________________________________________
பெயர்ச்சியால் தொல்லைகள் மட்டும்தானா? நன்மைகள் இல்லையா?

ஏன் இல்லை? இருக்கிறது!

மீனத்தில் இருக்கும் கோச்சாரக் குரு தனது 5ஆம் பார்வையால், மகர ராசியின் 7ஆம் இடத்தையும், 7ஆம் பார்வையாக 9ஆம் இடத்தையும், 9ஆம் பார்வையாக 11ஆம் இடத்தையும் பார்ப்பார். அந்த இடங்களுக்கு உரிய பலன்களை அவர் செவ்வனே பெற்றுத்தருவார். இந்த Loss எல்லாம் அதில் Pack -up & Make-up ஆகிவிடும்

அதைப் பற்றி அடுத்த அத்தியாயத்தில் விவரமாக அலசுவோம். அத்துடன் மற்ற 12 ராசிக்காரர்களுக்கும் என்னென்ன நன்மை, தீமைகள் என்பதையும், surf excel போட்டு அலசுவோம்.

அலசல்கள் எல்லாம் பதிவில் வராது. மின்னஞ்சல்பாடமாக வரும்.

இங்கே அலசிக் காயப்போட்டால், காயும் முன்பாகவே, அவற்றை ஈரத்துடன், சுருட்டி எடுத்துக்கொண்டுபோய், தங்கள் வீட்டுக் கொடியில் காயப்போட்டு, காய்ந்தவுடன், தேய்த்து, மடித்து, வைத்திருந்து, போட்டுக்கொள்ளும் ஆசாமிகள் இணையத்தில் நிறைய இருக்கிறார்கள்.

ஆகவே நமது துணிகளைக் காவலுடன் பாதுகாப்பாக காயப் போடுவோம்.

முக்கியமான பாடங்கள் அனைத்தும் முதலில் மின்னஞ்சல் பாடமாகவும், பிறகு வகுப்பறைக்கு என்று இணையதளம் துவங்கிய பிறகு அதிலும் தொடர்ந்து வெளிவரும். அதுவரை பொறுத்திருங்கள்.

மின்னஞ்சல் பாடங்கள் 12.12.2010 முதல் துவங்கும்

அன்புடன்,
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

38 comments:

  1. வணக்கம் ஐயா,
    எனது சுய விபரங்களை இ‍ மெயில் செய்துள்ளேன். தங்களுடைய விதிமுறைகளுக்குக் கட்டுப்படுகிறேன். தயவு செய்து பாடங்களை மின்னஞ்சலில் அனுப்பவும்.
    இப்படிக்கு, ஜவஹர், ஆஸ்திரேலியா

    ReplyDelete
  2. உள்ளேன் வாத்தியார் ஐயா!

    சூழ்நிலை கதைக்கு பொருந்தகூடிய சினிமா

    " சிவாஜி! "

    சிவாஜில் ஒரு வசனம் வரும் விதியை எவராலும் மாற்றமுடியாது என்று ஒரு ஜோதிடர் மிகவும் பரிதாபமாக கூறுவார்

    வேறு என்னத்த சொல்ல :-)))

    ReplyDelete
  3. 12 டிஸம்பருக்காக எதிர் பார்த்துக் காத்துக் கொண்டு இருக்கிறோம்.பாருங்கள் எங்கோ ஒருவர் முறையற்ற செயலைச் செய்யப் போக ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப் படுகிறோம்.சிறிதும் மனசாட்சியின்றி இப்படிச் செய்துவிட்டானே கோவிந்தன்.பசுக்களை ஓட்டிச்செல்வதைப் போலப்
    பாடங்களை ஓட்டிச்சென்று விட்டானே கோவிந்தன்!

    ReplyDelete
  4. புலிப்பாணி ஜோதிடம் மற்றும் மற்ற‌ புராதான ஜோதிட நூல்களிலும் கோச்சார பலன்களைச் சொல்லும் போது அவை சற்று கரடு முரடாக அல்ல‌து முரட்டுத்தனமாக இருப்பதைப் பார்க்க முடிகிறது. அதை அப்படியே எடுத்துக் கொள்வதிலும் பிறருக்கு பலன் சொல்வதிலும் பல முறை சங்கடங்களை எதிர் நோக்கியிருக்கிறேன். அதில் சொல்லப் பட்டுள்ள பலன்கள் ஓரள்வுக்கு மேலோட்டமாக நடக்கும் என்று வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம்.

    ReplyDelete
  5. Dear Sir,

    I requested to include me in the e-mail class. I am not sure whether you got the mail or not please let me know if you haven't got it.

    Thanks and Regards,
    Sudhakar

    ReplyDelete
  6. மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது.யார் மனமும் கோணாது பாடம் நடத்தி பதிலளித்த நமது வாத்தியாரின் மனம் வருந்தும்படி செய்துவிட்டனர், பாவிகள்.

    விரைவில் பழய கலகல வாத்தியார் ஆக எனது பிரார்த்தனைகள்.

    ReplyDelete
  7. Dear sir,
    Thank you very much for your lesson. Waiting for your e class ....

    ReplyDelete
  8. Dear Sir, Waiting for december 12th, Bcoz of some peoples unscrupulopus action, many of the blogspot students affected,

    ReplyDelete
  9. Dear Sir

    Arumai Sir. We are expecting different Gurupeyarchi Analysis..

    my email id: arulkumar.rajaraman@gmail.com.

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  10. வாத்தியார் அவர்கள் ரஜினி ரசிகர் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.
    அதற்காக மின்னஞ்சல் பாட வெளியீட்டு விழாவை கூட ரஜினி பிறந்த தினத்திலா
    வைக்கவேண்டும்.
    வாத்தியார் சித்தம் எங்கள் பாக்கியம்
    நந்தகோபால்

    ReplyDelete
  11. en anbarntha guruku vanakkam,

    ennayum ungal website il serthu kolavum...

    i will obey for ur terms and conditions.

    ungal padathujaga kaathu kondu irrukum maanavan.

    i will send all my details in ur email id

    endrum anbudan
    raghuraman.m.s

    ReplyDelete
  12. பாவிப்பய கோவிந்தா நீ உருப்படவே மாட்டே

    ReplyDelete
  13. //////////////////

    இங்கே அலசிக் காயப்போட்டால், காயும் முன்பாகவே, அவற்றை ஈரத்துடன், சுருட்டி எடுத்துக்கொண்டுபோய், தங்கள் வீட்டுக் கொடியில் காயப்போட்டு, காய்ந்தவுடன், தேய்த்து, மடித்து, வைத்திருந்து, போட்டுக்கொள்ளும் ஆசாமிகள் இணையத்தில் நிறைய இருக்கிறார்கள்.
    ஆகவே நமது துணிகளைக் காவலுடன் பாதுகாப்பாக காயப் போடுவோம்.\\\\\\\\\\\\\\\\\\\\

    உங்களிடம் உள்ள ஆடைகளிலேயே உள்ளாடைகளாகப் பார்த்து காயப் போட்டும் அதையும் எடுத்து தேய்த்து மடித்து போட்டுக் கொண்டு போகும் ஆட்கள் இவர்கள் என்று மிக நுணுக்கமாக விமர்சித்திருக்கிறீர்கள்..செம காட்டுதான் காட்றீங்க..போங்க..

    ReplyDelete
  14. /////////
    மின்னஞ்சல் பாடங்கள் 12.12.2010 முதல் துவங்கும்\\\\\\

    '2010 லே இணையத்தில் இறங்கிக் கலக்கவிருக்கும் எங்கள் வாத்தியாரின் முடிவுக்கு எங்கள் நிபந்தனையற்ற ஆதரவைத் தெரிவித்துக் கொண்டு (சமீபத்திலே எங்கோ கேட்ட டயலாக்)
    வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டு
    அவரின் எழுதுகோல் பிடிக்கும்
    பொற்கரங்களுக்கு வலு சேர்த்து என்றென்றும் தோள் கொடுப்போம்' என்று உறுதி கூறி எங்கள் இளைஞரணி சார்பாக ..இந்த தங்க எழுத்தாணியை பரிசாக அளித்து இந்தப் பொன்னாடையை அணிவித்து மகிழ்கிறோம்..

    ReplyDelete
  15. //குருபகவான், கோள்சாரத்தில் சந்திரராசிக்கு மூன்றில் வரும்போது களவு போகும்.//
    //அடியேன் மகரராசிக்காரன்.
    எனது பாடங்கள் களவு போயிருக்கின்றன.//

    சத்தியமாக இந்தப் பாடம் எங்களுக்கு மறக்காது ஐயா.

    //அலசல்கள் எல்லாம் பதிவில் வராது.
    இங்கே அலசிக் காயப்போட்டால், காயும் முன்பாகவே, அவற்றை ஈரத்துடன், சுருட்டி எடுத்துக்கொண்டுபோய், தங்கள் வீட்டுக் கொடியில் காயப்போட்டு, காய்ந்தவுடன், தேய்த்து, மடித்து, வைத்திருந்து, போட்டுக்கொள்ளும் ஆசாமிகள் இணையத்தில் நிறைய இருக்கிறார்கள்.//

    இந்த நடை தான் உங்களைப் பின் தொடர வைக்கிறது.

    அன்புடன்
    விபின்

    ReplyDelete
  16. sir,

    ellam rajni sir saayal, like makara raasi, simha lagnam and class start date is 12th december.

    super vaathiyar neegal.

    ReplyDelete
  17. அடியேனும் மகரராசி தான்.
    சில நாட்களாக எனக்கு உங்கள் பாடம் மின்னஞ்சலில் வருவதில்லை என்ன காரணமோ?

    ReplyDelete
  18. /////Jawahar said...
    வணக்கம் ஐயா,
    எனது சுய விபரங்களை இ‍ மெயில் செய்துள்ளேன். தங்களுடைய விதிமுறைகளுக்குக் கட்டுப்படுகிறேன். தயவு செய்து பாடங்களை மின்னஞ்சலில் அனுப்பவும்.
    இப்படிக்கு, ஜவஹர், ஆஸ்திரேலியா/////

    செம்மொழி மாநாட்டிற்கு நீங்கள் வந்திருந்தபோது, உங்களுடன் பேசியது நினைவில் உள்ளது. உங்களுக்குப் பாடங்கள் வரும்!

    ReplyDelete
  19. ////kannan said...
    உள்ளேன் வாத்தியார் ஐயா!
    சூழ்நிலை கதைக்கு பொருந்தகூடிய சினிமா
    " சிவாஜி! "
    சிவாஜில் ஒரு வசனம் வரும் விதியை எவராலும் மாற்றமுடியாது என்று ஒரு ஜோதிடர் மிகவும் பரிதாபமாக கூறுவார் வேறு என்னத்த சொல்ல :-)))/////

    பழநிஅப்பன் சில சோதனைகளுக்கு நம்மை உட்படுத்தி, நன்மைகளைச் செய்வான். எல்லாம் நன்மைக்கே என்று எடுத்துக்கொள்ளுங்கள் நண்பரே!

    ReplyDelete
  20. ////////kmr.krishnan said...
    12 டிஸம்பருக்காக எதிர் பார்த்துக் காத்துக் கொண்டு இருக்கிறோம்.பாருங்கள் எங்கோ ஒருவர் முறையற்ற செயலைச் செய்யப் போக ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப் படுகிறோம்.சிறிதும் மனசாட்சியின்றி இப்படிச் செய்துவிட்டானே கோவிந்தன்.பசுக்களை ஓட்டிச்செல்வதைப் போலப் பாடங்களை ஓட்டிச்சென்று விட்டானே கோவிந்தன்!/////////

    எந்தத் தீமைக்குள்ளும் ஒரு நன்மை இருக்கும். எல்லாம் நன்மைக்கே என்று எடுத்துக்கொள்ளுங்கள் KMRK சார்!

    ReplyDelete
  21. /////ananth said...
    புலிப்பாணி ஜோதிடம் மற்றும் மற்ற‌ புராதான ஜோதிட நூல்களிலும் கோச்சார பலன்களைச் சொல்லும் போது அவை சற்று கரடு முரடாக அல்ல‌து முரட்டுத்தனமாக இருப்பதைப் பார்க்க முடிகிறது. அதை அப்படியே எடுத்துக் கொள்வதிலும் பிறருக்கு பலன் சொல்வதிலும் பல முறை சங்கடங்களை எதிர் நோக்கியிருக்கிறேன். அதில் சொல்லப் பட்டுள்ள பலன்கள் ஓரளவுக்கு மேலோட்டமாக நடக்கும் என்று வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம்./////

    பழம் பாடல்களில் கூறப்பட்டுள்ள செய்திகள் எல்லாம் பொதுப்பலன்களே. ஆகவே அவற்றை கவனத்தில் வைத்துக்கொள்வது நல்லது!

    ReplyDelete
  22. //sudhakar said...
    Dear Sir,
    I requested to include me in the e-mail class. I am not sure whether you got the mail or not please let me know if you haven't got it.
    Thanks and Regards,
    Sudhakar////

    மின்னஞ்சல் அனுப்பிய அனைவருக்கும் நாளை பதில் வரும். பொறுத்திருங்கள்!

    ReplyDelete
  23. ///Govindasamy said...
    மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது.யார் மனமும் கோணாது பாடம் நடத்தி பதிலளித்த நமது வாத்தியாரின் மனம் வருந்தும்படி செய்துவிட்டனர், பாவிகள்.
    விரைவில் பழய கலகல வாத்தியார் ஆக எனது பிரார்த்தனைகள்./////

    “டேக் இட் ஈஸி பாலிஸி” ஆசாமி நான். எப்பொதுமே கலகலப்பிற்குக் குறைவிருக்காது. கவலையை விடுங்கள்!

    ReplyDelete
  24. /////CJeevanantham said...
    Dear sir,
    Thank you very much for your lesson. Waiting for your e class ....////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  25. /////Pallathur Ramanathan said...
    Dear Sir, Waiting for december 12th, Bcoz of some peoples unscrupulopus action, many of the blogspot students affected,////

    எல்லாம் நன்மைக்கே ராமநாதன்! மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்வேன். கவலையை விடுங்கள்!

    ReplyDelete
  26. ///Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Arumai Sir. We are expecting different Gurupeyarchi Analysis..
    my email id: arulkumar.rajaraman@gmail.com.
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman////

    நல்லது. நன்றி ராஜாராமன்!

    ReplyDelete
  27. ///G.Nandagopal said...
    வாத்தியார் அவர்கள் ரஜினி ரசிகர் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.
    அதற்காக மின்னஞ்சல் பாட வெளியீட்டு விழாவை கூட ரஜினி பிறந்த தினத்திலா
    வைக்கவேண்டும். வாத்தியார் சித்தம் எங்கள் பாக்கியம்
    நந்தகோபால்/////

    அன்று முகூர்த்த நாள். அத்துடன் வந்திருக்கும் மெயில்களை வடிகட்டி ஒரு குழுவாக்க எனக்கு அவகாசம் வேண்டும். அதனால்தான் துவக்கத்தை அதுவரை தள்ளி வைத்திருக்கிறேன்.

    ReplyDelete
  28. ////ramanms said...
    en anbarntha guruku vanakkam,
    ennayum ungal website il serthu kolavum...
    i will obey for ur terms and conditions.
    ungal padathujaga kaathu kondu irrukum maanavan.
    i will send all my details in ur email id
    endrum anbudan
    raghuraman.m.s/////

    நல்லது. நன்றி ரகுராமன்!

    ReplyDelete
  29. /////sembu said...
    பாவிப்பய கோவிந்தா நீ உருப்படவே மாட்டே!//////

    சாபம் எல்லாம் எதற்கு? காலம் தன் கணக்கைத் தீர்க்கும்!

    ReplyDelete
  30. ///minorwall said...
    //////////////////
    இங்கே அலசிக் காயப்போட்டால், காயும் முன்பாகவே, அவற்றை ஈரத்துடன், சுருட்டி எடுத்துக்கொண்டுபோய், தங்கள் வீட்டுக் கொடியில் காயப்போட்டு, காய்ந்தவுடன், தேய்த்து, மடித்து, வைத்திருந்து, போட்டுக்கொள்ளும் ஆசாமிகள் இணையத்தில் நிறைய இருக்கிறார்கள்.
    ஆகவே நமது துணிகளைக் காவலுடன் பாதுகாப்பாக காயப் போடுவோம்.\\\\\\\\\\\\\\\\\\\\
    உங்களிடம் உள்ள ஆடைகளிலேயே உள்ளாடைகளாகப் பார்த்து காயப் போட்டும் அதையும் எடுத்து தேய்த்து மடித்து போட்டுக் கொண்டு போகும் ஆட்கள் இவர்கள் என்று மிக நுணுக்கமாக விமர்சித்திருக்கிறீர்கள்..செம காட்டுதான் காட்றீங்க..போங்க..////

    இல்லை. வழக்கமான நடையில்தான் எழுதியிருக்கிறேன் மைனர்!

    ReplyDelete
  31. ////minorwall said...
    /////////
    மின்னஞ்சல் பாடங்கள் 12.12.2010 முதல் துவங்கும்\\\\\\
    '2010 லே இணையத்தில் இறங்கிக் கலக்கவிருக்கும் எங்கள் வாத்தியாரின் முடிவுக்கு எங்கள் நிபந்தனையற்ற ஆதரவைத் தெரிவித்துக் கொண்டு (சமீபத்திலே எங்கோ கேட்ட டயலாக்) வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டு அவரின் எழுதுகோல் பிடிக்கும் பொற்கரங்களுக்கு வலு சேர்த்து என்றென்றும் தோள் கொடுப்போம்' என்று உறுதி கூறி எங்கள் இளைஞரணி சார்பாக ..இந்த தங்க எழுத்தாணியை பரிசாக அளித்து இந்தப் பொன்னாடையை அணிவித்து மகிழ்கிறோம்..///////

    அப்படியே ஜப்பானில் ரசமலாய் ரேஞ்சிற்கு என்ன ஸ்வீட்டோ அதுவும் ஒரு கிலோ சேர்த்து அளிக்க ஏற்பாடு செய்யுங்கள் மைனர்!

    ReplyDelete
  32. /////Vibin said...
    //குருபகவான், கோள்சாரத்தில் சந்திரராசிக்கு மூன்றில் வரும்போது களவு போகும்.//
    //அடியேன் மகரராசிக்காரன்.
    எனது பாடங்கள் களவு போயிருக்கின்றன.//
    சத்தியமாக இந்தப் பாடம் எங்களுக்கு மறக்காது ஐயா.
    //அலசல்கள் எல்லாம் பதிவில் வராது.
    இங்கே அலசிக் காயப்போட்டால், காயும் முன்பாகவே, அவற்றை ஈரத்துடன், சுருட்டி எடுத்துக்கொண்டுபோய், தங்கள் வீட்டுக் கொடியில் காயப்போட்டு, காய்ந்தவுடன், தேய்த்து, மடித்து, வைத்திருந்து, போட்டுக்கொள்ளும் ஆசாமிகள் இணையத்தில் நிறைய இருக்கிறார்கள்.//
    இந்த நடை தான் உங்களைப் பின் தொடர வைக்கிறது.
    அன்புடன்
    விபின்/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி விபின்!

    ReplyDelete
  33. //////vprasanakumar said...
    sir,
    ellam rajni sir saayal, like makara raasi, simha lagnam and class start date is 12th december.
    super vaathiyar neegal./////

    எனக்கு எம்.ஜி.ஆர், சிவாஜி துவங்கி, கமலஹாசன், ரஜினி, விஷால் உட்பட அனைவனையுமே பிடிக்கும். ஒவ்வொருக்கும் ஒவ்வொரு திறமை!

    ReplyDelete
  34. //////வந்தியத்தேவன் said...
    அடியேனும் மகரராசி தான்.
    சில நாட்களாக எனக்கு உங்கள் பாடம் மின்னஞ்சலில் வருவதில்லை என்ன காரணமோ?/////

    சில நாட்களாக அல்ல - சில மாதங்களாக மின்னஞ்சல் பாடங்களை எழுதவில்லை. இணையதளம் துவங்கப்படும்வரை சில நாட்களுக்கு, அவைகள் மீண்டும் வரும்!

    ReplyDelete
  35. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    /////பழநிஅப்பன் சில சோதனைகளுக்கு நம்மை உட்படுத்தி, நன்மைகளைச் செய்வான். எல்லாம் நன்மைக்கே என்று எடுத்துக்கொள்ளுங்கள்/////
    மிகவும் சரியாக சொல்லியுள்ளீர்கள்.
    நன்றி!
    தங்களன்புள்ள மாணவன்,

    வ.தட்சணாமூர்த்தி
    2010-11-26

    ReplyDelete
  36. /////////அப்படியே ஜப்பானில் ரசமலாய் ரேஞ்சிற்கு என்ன ஸ்வீட்டோ அதுவும் ஒரு கிலோ சேர்த்து அளிக்க ஏற்பாடு செய்யுங்கள் மைனர்!\\\\\\\\\

    நம்ம ஊரு அளவுக்கு இங்கே ஸ்வீட் கிடைக்க சான்சே இல்லை..ஸ்வீட்டுன்னு பேருதானே தவிர நம்ம லெவெலுக்கு பார்த்தால் ஜப்பான் ஸ்வீட் செட் ஆகாது..அதுனாலே
    ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ்'ன் 61 வகை அல்வா அனுப்பி வைத்திருக்கிறேன்..இணையத்தை இனிப்பாக தொடங்குவோம்..

    ReplyDelete
  37. Vanakkanga, indruthaan bloggeril eppadi comment seivadhu endru konjam katru konden, ungal jothida paadangal migavum payanullathaaga ullathu kurippaaga tamizhil sollikoduppathaal katrukolvatharku sulabamaaga irukirathu, ungaluku mikka nandri! thayavu seidhu ovvoru natchathirathin, ovvoru kiragathin sariyaana thulliyamaana kaala alavum(h:mn:ss), pinnokki(retrograde)sellum kaala alavaiyum thayavu seithu therivikkavum. Ehrkanave solliyirundhaal endha paadathil ullathu endru kurippidavum, NANRI!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com