மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

1.5.09

சோதனை மேல் சோதனை ஏனடா சாமி?

சோதனை மேல் சோதனை ஏனடா சாமி?

வகுப்பறைப் பதிவிற்கு ஏராளமான புதியவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்
மகிழ்ச்சி.

இதுவரை சுமார் 200 பதிவுகளை எழுதியுள்ளேன். அதையெல்லாம்
ஒவ்வொன்றாகப் படித்துவிட்டுப் பிறகு தற்சமயம் நடத்தும் பாடங்களைப்
படித்தால் அவை விளங்கும். இல்லையென்றால் ஒன்றும் புரியாது.

ஆரம்பப் பள்ளியில் படிக்காத ஒருவனை, எடுத்தவுடன் உயர்நிலைப் பள்ளியில்
படிக்கவிட்டால் எப்படியிருக்கும்?

ஆகவே புதிதாக வருகிறவர்கள், முன்பு நடத்தப்பட்டுள்ள பாடங்களைப்
படிக்கவும். அடிப்படைப் பாடங்கள் தெரியாமல், இப்போது எழுதுவதைப்
புரிந்து கொள்வது மிகவும் கடினம்.

நான் ஜோதிடத்தைக் கற்றுக் கொள்கின்ற காலத்தில், எனக்குச் சொல்லித்
தரவெல்லாம் யாரும் இல்லை. 3 வருட காலங்கள், எனது ஓய்வு நேரத்தில்
பல போராட்டங்களுடன் ஜோதிடத்தைக் கற்றுக்கொண்டேன்.

அதற்குப் பல நூல்கள் உதவின.தொடர்ந்து பல சஞ்சிகைகளைப் படித்து வந்தேன்.

முழுத் தெளிவு பிறக்க 10 வருட காலம் ஆயிற்று.

நான் தொழில் முறை ஜோதிடன் அல்ல! படிப்பதும் எழுதுவதும் எனது
ஆத்மார்ந்தமான பொழுதுபோக்கு.(Hobby) ஜோதிடத்தை வைத்து, இதுவரை
ஒரு பைசாக்கூட சம்பாதித்ததில்லை. கற்றுக்கொள்ள நிறையச்
செலவழித்திருக்கிறேன்.

நேரம், பணம் இரண்டையும் நிறையச் செலவழித்திருக்கிறேன்.

நான் கற்றது மற்றவர்களுக்குப் பயன்படட்டும் என்றுதான் பதிவில்
எழுதிக்கொண்டிருக்கிறேன்.

பயிற்சிப் படிப்பிற்காக நிறைய ஜாதகங்களைச் சேர்த்துவைத்திருக்கிறேன்.
என்னிடம் 500ற்கும் மேற்பட்ட ஜாதகங்கள் உள்ளன. அத்தனையும் என்
உறவினர்கள் மற்றும் நணபர்களிடம் கேட்டுப் பெற்றதாகும். அத்துடன்
25 ஆண்டுகால ஜோதிட மாத இதழ்களைச் சேகரித்து வைத்துள்ளேன்.
அதில் நூற்றுக்கணக்கான பிரபலங்களின் ஜாதகங்கள் உள்ளன.

அவற்றையெல்லாம் வைத்து ஒரு ஆய்வு செய்யலாம் என்றால் நேரம் இல்லை.
பொருள் ஈட்டல் என்னும் எனது தொழில் குறுக்கே வந்து நிற்கும்.
Marketing of all counts of cotton and synthetic yarn எனது தொழில்

ஜோதிடம் என்பது கடல். அதில் இன்றும், அதாவது இத்தனை
ஆண்டுகளுக்குப் பிறகும், நானும் ஒரு மாணவன்தான்.

ஜோதிடத்தை எந்தக் கொம்பனாலும் முழுமையாகக் கற்றுத் தேறமுடியாது.

அதற்கு ஆயுள் பற்றாது!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எனக்கு ஒவ்வொரு பதிவிற்கும் வரும் பின்னூட்டங்களைத் தவிர்த்து
(That is apart from the comments to my postings) நிறையத் தனி மின்னஞ்
சல்கள் (personal mails) வருகின்றன.

சராசரியாக நாள் ஒன்றிற்குப் 10 மின்னஞ்சல்கள் வருகின்றன.

அவற்றை எழுதுபவர்கள் தங்கள் ஜாதகத்தைப் பார்த்து, என்னைப் பதில்
எழுதச் சொல்லியிருப்பார்கள். பிறப்பு விவரம் முழுமையாக இருக்காது.
அஷ்டகவர்க்கம் இருக்காது. அதையெல்லாம் நான் சரி செய்ய வேண்டும்

அத்துடன் ஒரு ஜாதகத்தைப் பார்த்து, ஒரு கேள்விக்குப் பதில் சொல்வ
தென்றால் சராசரியாக 20 முதல் 30 நிமிட நேரம் ஆகும். அத்தனை
மின்னஞ்சல்களுக்கும் எப்படிப் பதில் எழுதுவது?

இருந்தாலும் கேள்விகளின் தன்மையைப் பொறுத்துப் பலருக்கும் பதில்
எழுதிக் கொண்டுதான் இருக்கிறேன்.

உடன் பதில் எழுத முடியாதபடி, சில கேள்விகள் இருக்கும்.

அவற்றில் சிலவற்றை உங்கள் பார்வைக்காகப் பட்டியல் இட்டுள்ளேன்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அதிகமாக வரும் கேள்வி:

"ஐயா, என்னுடைய எதிர்காலம் எப்படி இருக்கும்?"

எதிர்காலம் என்பது விளையாட்டா? ஒற்றை வரியில் பதில் சொல்லக்கூடிய
கேள்வியா என்ன?

இப்படிக்கேட்டுவிட்டு, அதற்குச் சிலர் உடன் சிறு குறிப்பும் எழுதியிருப்பார்கள்

"நல்ல வேலை எப்போது கிடைக்கும். அதில் முன்னேற்றம் இருக்குமா?
எனது திருமணம் எப்போது நடைபெறும்? வரவிருக்கும் மனைவி எப்படி
இருப்பாள். சொந்தத்தில் திருமணமா? அல்லது வெளியில் திருமணமா?
காதல் திருமணமா அல்லது பெற்றோர்கள் நிச்சயிக்கும் திருமணமா?
குழந்தை பாக்கியம் எப்படி? சொந்த வீடு, வாகனங்களை எப்போது
வாங்குவேன்."

இதற்குக் குறைந்தது மூன்று மணி நேரம் ஜாகத்தை ஆய்ந்து, பத்துப்
பக்கங்களுக்குப் பதில் சொல்ல வேண்டியதிருக்கும்

நடக்கிற காரியமா?

ஒரு கேள்வியை வைத்துத்தான் ஒரு ஜாதகத்தை அலச முடியும்.
அலசுவதன் மூலம்தான் துல்லியமான விடை கிடைக்கும்

Accurate analysis depends a lot on your questions.
Questions asked intelligently can yield accurate analysis and prediction.

ஒரு கேள்வி கேட்பதை விட்டுவிட்டு, 36 கேள்விகளை உள்ளடக்கிய
எதிர்காலம்' எனும் கேள்வியைக் கேட்டால் எப்படிப் பதில் சொல்வது?

If one asks: What is my future?
That question can lead us nowhere.

ஒவ்வொரு வீட்டிற்கும் 3 இலாக்காக்கள். 12 வீடுகளுக்கும் சேர்த்து
மொத்தம் 36 இலாக்காக்கள். அத்தனை இலாக்களையும் உள்ளடக்கியது
தான் வாழ்க்கை. அதை ஒரே வரியில் எதிர்காலமாக்கியும், ஒரே வரியில்
கேட்டுத் தெரிந்து கொள்ளவும் ஆசைப்படலாம். பதில் சொல்வது
மிகவும் சிரமம்.

ஒருவருக்கு 25 வயது. இந்தக் கேள்வியைக் கேட்கிறார் என்றால் முதலில்
ஆயுளைக் கணித்து, அவர் உயிரோடு இருக்கும் ஆண்டுகளைத் தெரிந்து
கொண்டு, அவருடைய முழு ஜாதகத்தையும் - அதாவது வீடுகளின்
தன்மையையும் எதிர் கொள்ளவிருக்கும் தசா புத்திகள், கோச்சாரங்கள்
அத்தனையையும் குறிப்பெடுத்துக்கொண்டு வருடம் வாரியாகப் பலன்
எழுதித் தரவேண்டும்.

அதை அந்தக் காலத்தில் இருந்த ஜோதிடர்கள் ஒரு வார காலம் அல்லது
பத்து நாட்கள் அமர்ந்து பலன்களை ஒரு 40 பக்க புத்தகமாக எழுதிக்
கொடுத்திருக்கிறார்கள்.

இப்போது அதெல்லாம் சாத்தியமில்லை. அத்தனை விவரம் தெரிந்த
ஜோதிடர்களும் இப்போது அரிது. சத்தியமாக எனக்கு அந்த அளவிற்கு
ஜோதிட அறிவும் இல்லை. பொறுமையும் இல்லை. நேரமும் இல்லை!

ஆகவே கேள்வி கேட்பவர்கள். ஒரே ஒரு நேரடிக் கேள்வியை மட்டும்
கேளுங்கள். Please ask only one straight question.

Just read the description of the houses and think can such a question
can be answered. Please do not confuse Astrology with Fortune telling
and abuse this science.

A good question would be;I want to change my Job?
When will there be fruitful conditions for this career change.
Will i benefit from This career change?
This question sets the astrologer mind to onething and the native is benefitted.

மாதிரிக் கேள்விகள்:

1. நான் பணக் கஷ்டத்தில் இருக்கிறேன். என்னுடைய கஷ்டம் எப்போது
தீரும்?
2. எனது திருமணம் தள்ளிக் கொண்டே போகிறது. எனக்கு எப்போது
திருமணம் நடக்கும்?
3. நான் ஆரோக்கியமாக இல்லை. நோய்கள் படுத்துகின்றன. எனது
உடல்நிலை எப்போது சீராகும்?
4. இப்பொது இருக்கும் வேலை பிடிக்கவில்லை. நல்ல வேலை
எப்போது கிடைக்கும்?
5. வெளி நாடு சென்று பொருள் ஈட்ட ஆசைப் படுகிறேன். எனக்கு
கடல் கடக்கும் யோகம் உள்ளதா?
6. சொந்தமாக வீடு வாங்க ஆசைப் படுகிறேன் எப்போது அது
நிறைவேறும்?
7. எனக்குத் திருமணமாகி ஐந்தாண்டுகளாகியும் குழந்தை இல்லை.
எப்போது குழந்தைச் செல்வம் கிடைக்கும்?
8. பூர்வீகச் சொத்தில் பிரச்சினைகள் உள்ளன. அது கிடைக்குமா?
கிடைக்காதா?
9. எனக்கும் என் மனைவிக்கும் கருத்து ஒற்றுமை இல்லை.
அவள் என்னுடன் இசைந்து வாழ்வாளா அல்லது மாட்டாளா?
10. நான் செய்யும் வேலைகளுக்கு உகந்த அங்கீகாரம்
கிடைப்பதில்லை. ஏன் அப்படி?
11. வேலையை உதறிவிட்டுத் தொழில் துவங்க விரும்புகிறேன்.
செய்யலாமா?
12. எப்போதும் மன நிம்மதியின்றி அவதிப்படுகிறேன். நிம்மதியான
சூழ்நிலை எப்போது ஏற்படும்?
===========================================================
நிறைய மின்னஞ்சல்கள் காதல் திருமணம் குறித்து வருகிறது.

"ஐயா நான் ஒருவரை 2 ஆண்டுகளாகக் காதலித்துக் கொண்டிருக்கிறேன்.
எங்கள் இருவருடைய ஜாதகத்தையும் அனுப்பியுள்ளேன். திருமணம்
செய்து கொள்ளலாமா? பொருத்தமாக இருக்கிறதா?"

காதல் என்று வந்து விட்ட பிறகு, ஜாதகம் எதற்கு?
இரண்டு ஆண்டுகள் காதலித்த பிறகு, அவனை வேண்டாம் என்று சொன்னால்
அவன் சும்மா விட்டுவிடுவானா? என்னென்ன பிரச்சினைகளைக்
கிளப்புவானோ - யாருக்குத் தெரியும்?

ஆகவே பயந்த சுபாவம் என்றால் காதலிக்காதே!
துணிச்சல் இருந்தால் மட்டுமே காதலில் இறங்கு!
காதலில் இறங்கிவிட்டால் ஜாதகத்தைப் பார்க்காதே!
வருவது வரட்டும் என்று அவனை அல்லது அவளைத் திருமணம் செய்துகொள்
காதலித்தவளைக் கைப் பிடிப்பதுவரை நம் செயல், மற்றதெல்லாம்
விதிப்படி அல்லது விதித்தபடி நடக்கட்டும் என்று விட்டுவிடு.
---------------------------------------------------------------------------------------------------
இது இளம் பெண்களுக்கு மட்டும்:

ஆண்களில் பாதிப்பேர் சந்தர்ப்பவாதிகள். சுய நலவாதிகள்.
ஒவ்வொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு.
காதலிக்கும்போது ஆடவன் ஒரு முகத்தை மட்டுமே உங்களுக்குக்
காட்டுவான்.

திருமணத்திற்குப் பிறகுதான் அவனுடைய இரண்டாவது முகம்
தெரிய வரும்.

75% காதல் உடல் ஈர்ப்பினால் மட்டுமே ஏற்படும்.

ஆகவே ஒருவன் உங்களை விரும்புவதாகக் கூறினால் உடனே
வழிந்து ஏற்றுக் கொண்டு விடாதீர்கள். அவனைப் பற்றி முழுமையாக
விசாரித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

பெற்றோர்கள் சம்மதமில்லாமல் காதல் திரும்ணத்திற்கு ஒப்புக்
கொள்ளாதீர்கள். பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை என்றால்,
போராடி அவர்களை ஒப்புக் கொள்ள வையுங்கள்.

அதற்கு ஒரு காரணம் இருக்கிறது.

பெற்றோர்கள் நிச்சயித்த திருமணமாகட்டும் அல்லது பெற்றோர்களுக்குத்
தெரியாத காதல் திருமணமாகட்டும், இரண்டிலுமே பிரச்சினைகள் உண்டு.

நாள் ஒன்றிற்குப் 12 லக்கினங்கள். பிறக்கும் 12 விதமான லக்கினங்களை
உடைய குழந்தைகளில் இரண்டு குழந்தைகளுக்கு திருமண வாழ்வில்
சிக்கல் இருக்கும்.

அதாவது சராசரியாக 6 பேர்களில் ஒருவருடைய திருமண வாழ்வு
மகிழ்ச்சியாக இல்லாமல் போய்விடும். இது ஒரு random கணக்குதான்.

சனி ஏழில் அமர்ந்தாலும், (அந்தப் பன்னிரெண்டு பேர்களில் ஒருவருக்கு
ஏழில் அமையும்) அல்லது ஏழாம் அதிபதி 12ல் அமர்ந்தாலும், அல்லது 6ற்குரிய
வில்லன் 7ல் அமர்ந்தாலும் அல்லது 7ற்குரியவன் 6ல் அமர்ந்தாலும் மணவாழ்வு
பெரும்பாலும் கசப்பில் முடிந்துவிடும். அந்தப் பெரும்பாலும் எனும் பதம்
எதற்கு என்றால் சிலருக்கு குருவின் பார்வை அல்லது சேர்க்கையால்
நிலைமை மாறியிருக்கலாம். ஆகவே அப்படி அமைப்புள்ளவர்கள்,
தங்கள் ஜாதகத்தைப் பல கோணங்களிலும் ஆய்வு செய்யாமல் என்னைப் பிறாண்டாதீர்கள். தற்காப்புக்காகத்தான் அந்தப் பெரும்பாலும் என்னும்
சொல்லைப் பயன் படுத்தியிருக்கிறேன்.

அப்படி சிக்கலில் மாட்டிக் கொள்ளும் ஜாதகம் உங்களுடையதாகக்
கூட இருக்கலாம். அதனால்தான் பெற்றோர்களுடைய சம்மதத்தை வாங்கிக்
கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டிருக்கிறேன். சிக்கலில் நிச்சயம் அவர்கள்
கை கொடுப்பார்கள்.

பதிவின் நீளம் கருதி இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன்

நன்றி, வணக்கத்துடன்
வகுப்பறை வாத்தியார்.

வாழ்க வளமுடன்!

47 comments:

  1. மாதிரி கேள்விகள் அருமை

    ReplyDelete
  2. நன்றி வாத்தியாரே..

    மனதை தங்களுடைய 'டீ'யால் 'ஆத்திக்' கொள்கிறேன்..

    ReplyDelete
  3. ஐயா உங்கள் உணர்ச்சிகள் புரிகிறது, இனிமேல் உங்களை சிக்கலில் மாட்டிவிடும் கேள்விகளை கேட்க மாட்டோம். உங்கள் பொருமைக்கும்,உழைப்பிற்கும்,சேவைக்கும் கோடான கோடி நன்றிகள்.
    புதிய மாணவர்கள் ஆசிரியரிடம் கேள்விகளை கேட்பதற்கு முன் பழைய பாடங்களை படிப்பார்கள் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
  4. //
    நான் தொழில் முறை ஜோதிடன் அல்ல! படிப்பதும் எழுதுவதும் எனது
    ஆத்மார்ந்தமான பொழுதுபோக்கு.(Hobby) ஜோதிடத்தை வைத்து, இதுவரை
    ஒரு பைசாக்கூட சம்பாதித்ததில்லை. கற்றுக்கொள்ள நிறையச்
    செலவழித்திருக்கிறேன்.

    நேரம், பணம் இரண்டையும் நிறையச் செலவழித்திருக்கிறேன்.

    நான் கற்றது மற்றவர்களுக்குப் பயன்படட்டும் என்றுதான் பதிவில்
    எழுதிக்கொண்டிருக்கிறேன்.
    //


    உங்கள் சேவைக்கு எங்கள் நன்றி.

    ஒரு நல்ல வகுப்பறை கிடைத்தது.

    நல்ல வாத்தியார் கிடைத்தார்.

    பயனுள்ள கருத்துக்கள் கிடைக்கின்றன.

    நன்றாக பொழுதும் போகிறது.

    மிகவும் நன்றி..

    ReplyDelete
  5. Dear Sir

    Neengal Ulaippukkum Adakkathukkum peyarponavar enbadhu ungal eluthu varigal Kattukindrana..

    Sir..All the Questions are nice.

    Sir Ennudaya Kulandhai Jadhagathai Feb 28 th Anupiyirundhen..Sir there is no reply sir..I know - you dont have time. At the same time ennala vidamudiyadhu sir.. Enakku Vendum Enbadhu Vendum..Adhu Kidaikiravaraikkum ungala vidamatten sir..

    Please sir (Son Birth Detail)

    Name: Advaith Anishvaraya
    Date: 26th Feb 2009
    Time: 4:37 p.m.(IST)
    Place of Birth: Tirunelveli

    only question:
    En magan nandraga padipana? (what about his eduaction?)

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  6. ///////Blogger புருனோ Bruno said...
    மாதிரி கேள்விகள் அருமை///////////

    நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.நன்றி டாக்டர்!

    ReplyDelete
  7. ///////////Blogger உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    நன்றி வாத்தியாரே..
    மனதை தங்களுடைய 'டீ'யால் 'ஆத்திக்' கொள்கிறேன்../////////

    மனதை ஆற்றிக்கொள்வதற்கு ஒன்று உள்ளது. நன்றாகவும் உள்ளது.
    அது கந்தனுடைய சஷ்டிக் கவசம்!

    ReplyDelete
  8. /////////////Blogger N.K.S.Anandhan. said...
    ஐயா உங்கள் உணர்ச்சிகள் புரிகிறது, இனிமேல் உங்களை சிக்கலில் மாட்டிவிடும் கேள்விகளை கேட்க மாட்டோம். உங்கள் பொருமைக்கும்,உழைப்பிற்கும்,சேவைக்கும் கோடான கோடி நன்றிகள்.
    புதிய மாணவர்கள் ஆசிரியரிடம் கேள்விகளை கேட்பதற்கு முன் பழைய பாடங்களை படிப்பார்கள் என்று நம்புகிறேன்.///////

    நன்றி ஆனந்தன்!

    ReplyDelete
  9. ////////////Blogger மெனக்கெட்டு said...
    //
    நான் தொழில் முறை ஜோதிடன் அல்ல! படிப்பதும் எழுதுவதும் எனது
    ஆத்மார்ந்தமான பொழுதுபோக்கு.(Hobby) ஜோதிடத்தை வைத்து, இதுவரை
    ஒரு பைசாக்கூட சம்பாதித்ததில்லை. கற்றுக்கொள்ள நிறையச்
    செலவழித்திருக்கிறேன்.
    நேரம், பணம் இரண்டையும் நிறையச் செலவழித்திருக்கிறேன்.
    நான் கற்றது மற்றவர்களுக்குப் பயன்படட்டும் என்றுதான் பதிவில்
    எழுதிக்கொண்டிருக்கிறேன். //
    உங்கள் சேவைக்கு எங்கள் நன்றி.
    ஒரு நல்ல வகுப்பறை கிடைத்தது.
    நல்ல வாத்தியார் கிடைத்தார்.
    பயனுள்ள கருத்துக்கள் கிடைக்கின்றன.
    நன்றாக பொழுதும் போகிறது.
    மிகவும் நன்றி..///////

    இதை மெனக்கெட்டு எழுதியமைக்கு நன்றி!

    ReplyDelete
  10. //////////Blogger Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Neengal Ulaippukkum Adakkathukkum peyarponavar enbadhu ungal eluthu varigal Kattukindrana..
    Sir..All the Questions are nice.
    Sir Ennudaya Kulandhai Jadhagathai Feb 28 th Anupiyirundhen..Sir there is no reply sir..I know - you dont have time. At the same time ennala vidamudiyadhu sir.. Enakku Vendum Enbadhu Vendum..Adhu Kidaikiravaraikkum ungala vidamatten sir..
    Please sir (Son Birth Detail)
    Name: Advaith Anishvaraya
    Date: 26th Feb 2009
    Time: 4:37 p.m.(IST)
    Place of Birth: Tirunelveli
    only question:
    En magan nandraga padipana? (what about his eduaction?)
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman////////

    பூரட்டாதி நட்சத்திரம். கடக லக்கினம்
    4ற்குரிய சுக்கிரன் உச்சமாகி 9ல் உள்ளார்.
    வித்யாகாரகன் புதன் 7ல் இருந்து லக்கினத்தைப் பர்க்கிறார்.
    அதோடு குருவும் உடன் இருக்கிறார்.

    பையன் நன்றகப் படிப்பான். கல்வியில் சிறந்து விளங்குவான்
    4ல் 32 பரல்கள்.
    சுயவர்க்கத்தில் சுக்கிரன் 6 பரல்கள்
    புதன் 5 பரல்கள்.
    எல்லாம் சிறப்பாக உள்ளன!

    போதுமா சாமி?

    ReplyDelete
  11. வணக்கம் ஐயா

    //தைரியம் இருந்தால் காதலியுங்கள் , அது இல்லை என்றால் காததலிக்காதீர்கள்//.மிக சரியாக கூறினீர்கள்.

    ReplyDelete
  12. ஜயா ரொம்ப பாதிக்கப் பட்டு இருக்கிறார் என்டு தெரியுது :(. நமக்கு வாடிக்கையாளர் அடிக்கிற மின் அஞ்சலே படிக்கிறத்துக்கு அலுத்து கொள்ளுற நேரத்தில நீங்கள் இவ்வளவும் செய்வது பெரிய விடயம் நன்றி உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. ஐயா

    சித்திரை மாதம் குழந்தை பிறந்தால் சீரழிவு , என்று கூறுகிறார்கள் .
    இதெல்லாம் சும்மா வாய் மொழி வழக்கு, என்று முன்பு கூறி இருக்கிறீர்கள்.
    ஆனால் பலர் சித்திரை மாதத்தில் குழந்தை பிறக்க கூடாது என்கிறார்கள்.
    சித்திரையில் வெயில் அதிகமாக இருக்கும் அதனால் பிறந்த குழந்தையால்
    வெப்பத்தை தாங்க இயலாது என்பதற்காக கூறப்பட்டதாக இருக்குமா?

    ReplyDelete
  14. ஐயா
    வணக்கம், நான் தங்களின் வகுப்பின் புதிய மாணவன். எனக்கு தங்களின் பழைய பாடங்களை படிக்கும் போது சில சந்தேகங்கள் வருகின்றன. அவற்றை இப்போது கேட்பது தங்களுக்கு மேலும் சுமையாக இருக்கும் . எனினும் சந்தேகத்தை வாத்தியாரிடம் தான் கேட்க முடியும.எனவே கேட்கலாமா ?

    ReplyDelete
  15. "சோதனை மேல் சோதனை ஏனடா சாமி?" :)))))))))

    ReplyDelete
  16. வணக்கம் ஐயா,தங்கள் கூற்றின் உண்மை புரிகிறது.பாடம் கற்பிக்கவே நேரம் குறைவாய் உள்ளபோது முளுவ‌தாக ஜாதக ஆராய்ச்சி கடினம்தான்.பாடங்களுக்கு நன்றி.

    அன்புடன்,
    மதுரை தனா.

    ReplyDelete
  17. /////Blogger sundar said...
    வணக்கம் ஐயா
    //தைரியம் இருந்தால் காதலியுங்கள் , அது இல்லை என்றால் காதலிக்காதீர்கள்//.மிக சரியாக கூறினீர்கள்./////

    உண்மையைத்தான் சொன்னேன். உண்மை எப்போதும் சரியாக இருக்கும்!

    ReplyDelete
  18. /////Blogger Emmanuel Arul Gobinath said...
    ஜயா ரொம்ப பாதிக்கப் பட்டு இருக்கிறார் என்டு தெரியுது :(. நமக்கு வாடிக்கையாளர் அடிக்கிற மின் அஞ்சலே படிக்கிறத்துக்கு அலுத்து கொள்ளுற நேரத்தில நீங்கள் இவ்வளவும் செய்வது பெரிய விடயம் நன்றி உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.//////

    நன்றி கோபிநாத்!

    ReplyDelete
  19. /////Blogger sundar said...
    ஐயா
    சித்திரை மாதம் குழந்தை பிறந்தால் சீரழிவு , என்று கூறுகிறார்கள் .
    இதெல்லாம் சும்மா வாய் மொழி வழக்கு, என்று முன்பு கூறி இருக்கிறீர்கள்.
    ஆனால் பலர் சித்திரை மாதத்தில் குழந்தை பிறக்க கூடாது என்கிறார்கள்.
    சித்திரையில் வெயில் அதிகமாக இருக்கும் அதனால் பிறந்த குழந்தையால்
    வெப்பத்தை தாங்க இயலாது என்பதற்காக கூறப்பட்டதாக இருக்குமா?//////

    இருக்கலாம். அதே போல ஆடி மாதம் தலைப்பிள்ளை பிறந்தால் குடும்பத்திற்கு ஆகாது என்பார்கள். அதற்கும் வலுவான காரணம் இல்லை!

    ReplyDelete
  20. Blogger indianm12 said...
    ஐயா
    வணக்கம், நான் தங்களின் வகுப்பின் புதிய மாணவன். எனக்கு தங்களின் பழைய பாடங்களை படிக்கும் போது சில சந்தேகங்கள் வருகின்றன. அவற்றை இப்போது கேட்பது தங்களுக்கு மேலும் சுமையாக இருக்கும் . எனினும் சந்தேகத்தை வாத்தியாரிடம் தான் கேட்க முடியும.எனவே கேட்கலாமா?//////

    பாடத்தில் சந்தேகம் என்றால் கேட்கலாம்.
    அந்தந்தப் பதிவில் உள்ள பின்னூட்டப்பெட்டி மூலமாகவே கேள்விகளைக் கேளுங்கள்
    அந்தப் பாடம் சம்பந்தமான கேள்வியை மட்டுமே கேளுங்கள்

    ReplyDelete
  21. //////Blogger dhanan said...
    வணக்கம் ஐயா,தங்கள் கூற்றின் உண்மை புரிகிறது.பாடம் கற்பிக்கவே நேரம் குறைவாய் உள்ளபோது முளுவ‌தாக ஜாதக ஆராய்ச்சி கடினம்தான்.பாடங்களுக்கு நன்றி.
    அன்புடன்,
    மதுரை தனா./////

    பாடத்தை எழுதவதால் பலர் பயனடைகிறார்கள். அதற்காகவே எழுதிக்கொண்டிருக்கிறேன்!

    ReplyDelete
  22. வணக்கம் ஆசிரியரே,

    அருமையான செய்தி ம‌ட்டுமல்லாமல், சோதிடத்தில் எப்படி கேள்வி கேட்க வேண்டும் எனக் கூறியது அருமையுலும் அருமை.

    என்னைப் போல சோதிட ஆர்வலர்களுக்கு தாங்கள் மிகச் சிறந்த வழி காட்டி என்பதில் ஐயமில்லை. சுருங்கக் கூறின், தாங்கள் புண்ணியக் கணக்கை ஏற்றிக் கொண்டிருக்கிறீர்கள். பிறாவாப் பயனை தாங்கள் எய்த இறைவன் திருவருள் துணை புரியட்டும்.

    வந்ததிற்க்கு சும்மா போகலாமா? ( இது எங்க சுப்பையா வாத்தியாரின் style).
    ___________________________________________________________________
    என்னுடைய கேள்வி:

    என‌து ஜாதகத்தை தாங்கள் பதிவில் கொடுத்துள்ள மின் பொருள் கொண்டு கணித்ததில் அஷ்ட வர்க்கம் திரிகோண்ம் சோதனை மற்றும் அஷ்ட வர்க்கம் ஏகாதிபத்தியம் சோதனை என இரண்டு உள்ளன. இதில் எதை எடுத்துக் கொளளவது? மேலும், ஒவ்வொரு கிரகத்தின் பலம் எப்படி கணக்கிடுவது?

    தங்கள் அட்டவணைப் பார்த்தும் புரியவிள்ளை.

    மிகவும் குழம்பியுள்ளேன். தயை கூர்ந்து விடைய‌ளிக்ககவும்.
    _______________________________________________________________________

    இக் கேள்வியை தாங்களுக்கு மின் அஞ்சல் மூலம் இரண்டு முறை அனுப்பினேன். ஆசானுக்கு என்ன கோபமோ தெரியவில்லை பதில் அளிக்கவில்லை.

    பதில் அளியுங்கள் ஆசானே.

    த‌யவு செய்து பழைய பாடத்தை ஒழுங்காக படிக்க வேண்டியதுதானே என்று பிரம்பை எடுத்துக் கொண்டு வராதீர்கள். டாக்டரிடம் என்னை குட்டவும் சொல்ல வேண்டாம்.

    இனிய வணக்கங்களுடன்,

    செந்தில் முருகன். வே

    ReplyDelete
  23. வணக்கம் ஐயா.

    உங்கள் பாடங்களை படிப்பது ஆத்மார்ந்தமான பொழுதுபோக்கு

    :-))

    நன்றி.

    ReplyDelete
  24. One of my friends, Sharmila Rajasekaran met with an accident in Huntsville, Alabama and she has suffered severe trauma to her head and right now she is in a coma. The doctors have said that there is nothing much they can do and she has to come out of the coma on her own. By the grace of god so far her condition is stable and that gives hope. So please do remember her and her family in your prayers.

    She is right now at the Vanderbilt Medical Center in Nashville, Tennesse.

    ReplyDelete
  25. Blogger senthil said...
    வணக்கம் ஆசிரியரே,
    அருமையான செய்தி ம‌ட்டுமல்லாமல், சோதிடத்தில் எப்படி கேள்வி கேட்க வேண்டும் எனக் கூறியது அருமையிலும் அருமை.
    என்னைப் போல சோதிட ஆர்வலர்களுக்கு தாங்கள் மிகச் சிறந்த வழி காட்டி என்பதில் ஐயமில்லை. சுருங்கக் கூறின், தாங்கள் புண்ணியக் கணக்கை ஏற்றிக் கொண்டிருக்கிறீர்கள். பிறாவாப் பயனை தாங்கள் எய்த இறைவன் திருவருள் துணை புரியட்டும்.
    வந்ததிற்க்கு சும்மா போகலாமா? ( இது எங்க சுப்பையா வாத்தியாரின் style).
    ___________________________________________________________________
    என்னுடைய கேள்வி:
    என‌து ஜாதகத்தை தாங்கள் பதிவில் கொடுத்துள்ள மின் பொருள் கொண்டு கணித்ததில் அஷ்ட வர்க்கம் திரிகோண்ம் சோதனை மற்றும் அஷ்ட வர்க்கம் ஏகாதிபத்தியம் சோதனை என இரண்டு உள்ளன. இதில் எதை எடுத்துக் கொளளவது? மேலும், ஒவ்வொரு கிரகத்தின் பலம் எப்படி கணக்கிடுவது?
    தங்கள் அட்டவணைப் பார்த்தும் புரியவில்லை.
    மிகவும் குழம்பியுள்ளேன். தயை கூர்ந்து விடைய‌ளிக்ககவும்.

    அஷ்டகவர்க்கம், அஷ்டகவர்க்கம் அட்டவணைகள் என்று முதன் முதலில் குறிப்பிடப்பட்டிருப்பதைப் பயன் படுத்துங்கள். மற்ற அட்டவனைகள் எல்லாம் வேறு பயன்பாட்டிற்கு. அவற்றைப் பின்னால் சொல்லித்தருகிறேன்
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    இக் கேள்வியை தாங்களுக்கு மின் அஞ்சல் மூலம் இரண்டு முறை அனுப்பினேன். ஆசானுக்கு என்ன கோபமோ தெரியவில்லை பதில் அளிக்கவில்லை.//////

    எனக்குக் கோபம் வராது. வந்தால் நான் வாத்தியார் வேலையில் இருக்க முடியாது.
    என் மின்னஞ்சல் பெட்டியில் ஏராளமான அஞ்சல்கள் உள்ளன. பணிச்சுமை காரணமாக அத்தனைக்கும் உடன் பதில் எழுதமுடியவில்லை. ஆனால் தாமதம் ஆனாலும் எழுதுவேன். பொறுத்தருள்க!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    பதில் அளியுங்கள் ஆசானே.
    த‌யவு செய்து பழைய பாடத்தை ஒழுங்காக படிக்க வேண்டியதுதானே என்று பிரம்பை எடுத்துக் கொண்டு வராதீர்கள். டாக்டரிடம் என்னை குட்டவும் சொல்ல வேண்டாம்.
    இனிய வணக்கங்களுடன்,
    செந்தில் முருகன். வே///////

    டாக்டர் மிகவும் அன்பானவர். அப்படியெல்லாம் செய்ய மாட்டார். பயப்படாதீர்கள். கவலைப்படாதீர்கள்!:-)))

    ReplyDelete
  26. ///////////Blogger Geekay said...
    வணக்கம் ஐயா.
    உங்கள் பாடங்களை படிப்பது ஆத்மார்ந்தமான பொழுதுபோக்கு :-))
    நன்றி.///////////

    எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும். நன்றி ஜீக்கே!

    ReplyDelete
  27. //////////////Blogger Kanchi Suresh said...
    One of my friends, Sharmila Rajasekaran met with an accident in Huntsville, Alabama and she has suffered severe trauma to her head and right now she is in a coma. The doctors have said that there is nothing much they can do and she has to come out of the coma on her own. By the grace of god so far her condition is stable and that gives hope. So please do remember her and her family in your prayers.
    She is right now at the Vanderbilt Medical Center in Nashville, Tennesse.///////////

    இறைவன் கருணை மிக்கவன். இறைவனைப் பிரார்த்திப்போம். உங்கள் சிநேகிதி மீண்டு வருவார்.

    ReplyDelete
  28. //////////Blogger அமர பாரதி said...
    உள்ளேன் அய்யா.///////

    வருகைப் பதிவிற்கு நன்றி பாரதி!

    ReplyDelete
  29. /////////Blogger saadu said...
    present sir////////////

    வருகைப் பதிவிற்கு நன்றி சாது!

    ReplyDelete
  30. உண்மைதான் ஐயா,தங்கள் பாடங்களால் பயன் பெறுவதில் அடியேனும் ஒருவன்.தங்கள் சேவை தொடர உடல் நலமும், நேரமும் ஒத்துழைக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    அன்புடன்,
    மதுரை தனா.

    ReplyDelete
  31. உழைப்பாளர் தின விடுப்பில் போய் விட்டதால் இந்த பாடத்தில் எனக்கு கடைசி இருக்கை (பென்ச்). தங்களுடைய தன்னலமற்ற எழுத்துப் மேலும் தொடர எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாராக. தன்னலமற்றது தாயின் நெஞ்சம். இது பாடல். அடுத்தது உங்கள் நெஞ்சந்தான் ஆசிரியரே.

    ReplyDelete
  32. ///////////Blogger dhanan said...
    உண்மைதான் ஐயா,தங்கள் பாடங்களால் பயன் பெறுவதில் அடியேனும் ஒருவன்.தங்கள் சேவை தொடர உடல் நலமும், நேரமும் ஒத்துழைக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.
    அன்புடன்,
    மதுரை தனா.////////

    எல்லாம் அவன் செயல். நான் எதற்கும் கவலைப்படுவதில்லை. அவன் பார்த்துக்கொள்வான்!

    ReplyDelete
  33. ////Blogger ananth said...
    உழைப்பாளர் தின விடுப்பில் போய் விட்டதால் இந்த பாடத்தில் எனக்கு கடைசி இருக்கை (பென்ச்). தங்களுடைய தன்னலமற்ற எழுத்துப் மேலும் தொடர எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாராக. தன்னலமற்றது தாயின் நெஞ்சம். இது பாடல். அடுத்தது உங்கள் நெஞ்சந்தான் ஆசிரியரே./////

    அடடா, உருக வைக்கிறீர்களே!
    நன்றி!

    ReplyDelete
  34. உங்கள் சேவைக்கு எங்கள் நன்றி.

    ReplyDelete
  35. "அல்லது 6ற்குரிய
    வில்லன் 7ல் அமர்ந்தாலும் அல்லது 7ற்குரியவன் 6ல் அமர்ந்தாலும் மணவாழ்வு
    பெரும்பாலும் கசப்பில் முடிந்துவிடும். அந்தப் பெரும்பாலும் எனும் பதம்
    எதற்கு என்றால் சிலருக்கு குருவின் பார்வை அல்லது சேர்க்கையால்
    நிலைமை மாறியிருக்கலாம்."

    Ayya,in my cousin sister horoscope which their parents are looking alliance has 28 parals in 7th house in rasi chart.no other problems in 7th house,2nd house is also good

    Whereas in Navamsa chart.7th lord venus is in 6th house Mesham with vakra sani.Guru is in 11 seeing the 7th house Rahu but does not have any paarvai on 7th lord venus.

    i am not able to come to a conclusion because of this.

    what does this signify?please clarify.

    ReplyDelete
  36. 10ற்கு உரிய புதன் அந்த வீட்டிற்கு 6ல் இருக்கிறார். அதனால்தான் தாமதம்
    அதோடு அஷ்டமத்துச் சனி. 26.9.2009 வரை
    லக்கினத்தில் 30 பரல்கள்
    தொழில் ஸ்தானத்தில் 33 பரல்கள்

    26.9.2009 ற்குப் பிறகு வேலை கிடைக்கும்
    25.10.2010ல் ராகு திசையில் புதன் புத்தி ஆரம்பம். அதற்குப் பிறகு நல்ல காலம்!
    mika nanri iya

    ReplyDelete
  37. வ‌ணக்க‌ம் ஆசானே,

    தங்கள் மறு மொழிக்கு ந‌ன்றி. பாடம் படிக்கப் படிக்க ச‌ந்தேகமும், குழப்பமும் அதிகரிக்கிறது. அதனால் தான் மறு மொழி எழுதினேன். தவறு இருப்பின் மன்னிக்கவும்.

    தங்களுக்கு சிரமம் இல்லாவிடில், த்ங்களிட்ம் உள்ள பிரபலங்களின் ஜாதகத்தை வெளியிட்டு எங்களுக்கு வாரம் ஒரு முறை தேர்வு வைக்கலாமே? :}} (ஒரு முந்திரிக் கொட்டை மாணவனின் அதிகப் பிரசிங்கத்தன்மான் யோசனை)

    தன்னலம் கருதாத த்ங்கள் பணிக்கு எனது நன்றிகள்.

    அன்புடன்,

    செந்தில் முருகன். வே.

    ReplyDelete
  38. ////Blogger dubai saravanan said...
    உங்கள் சேவைக்கு எங்கள் நன்றி./////

    நமக்குள் நன்றி எதற்கு? நாம் ஒன்றில்லையா?

    ReplyDelete
  39. Blogger Dr.Vinothkumar said...
    "அல்லது 6ற்குரிய
    வில்லன் 7ல் அமர்ந்தாலும் அல்லது 7ற்குரியவன் 6ல் அமர்ந்தாலும் மணவாழ்வு
    பெரும்பாலும் கசப்பில் முடிந்துவிடும். அந்தப் பெரும்பாலும் எனும் பதம்
    எதற்கு என்றால் சிலருக்கு குருவின் பார்வை அல்லது சேர்க்கையால்
    நிலைமை மாறியிருக்கலாம்."
    Ayya,in my cousin sister horoscope which their parents are looking alliance has 28 parals in 7th house in rasi chart.no other problems in 7th house,2nd house is also good
    Whereas in Navamsa chart.7th lord venus is in 6th house Mesham with vakra sani.Guru is in 11 seeing the 7th house Rahu but does not have any paarvai on 7th lord venus.
    i am not able to come to a conclusion because of this.
    what does this signify?please clarify.//////

    அந்தப் பெண்ணின் பிறப்பு விவரங்களைக் கொடுங்கள். பார்க்கிறேன்
    date of birth, time of birth and place of birth

    ReplyDelete
  40. Blogger Gobinath said...
    10ற்கு உரிய புதன் அந்த வீட்டிற்கு 6ல் இருக்கிறார். அதனால்தான் தாமதம்
    அதோடு அஷ்டமத்துச் சனி. 26.9.2009 வரை
    லக்கினத்தில் 30 பரல்கள்
    தொழில் ஸ்தானத்தில் 33 பரல்கள்
    26.9.2009 ற்குப் பிறகு வேலை கிடைக்கும்
    25.10.2010ல் ராகு திசையில் புதன் புத்தி ஆரம்பம். அதற்குப் பிறகு நல்ல காலம்!
    mika nanri iya

    It is all right Gobinath!

    ReplyDelete
  41. /////Blogger senthil said...
    வ‌ணக்க‌ம் ஆசானே,
    தங்கள் மறு மொழிக்கு ந‌ன்றி. பாடம் படிக்கப் படிக்க ச‌ந்தேகமும், குழப்பமும் அதிகரிக்கிறது. அதனால் தான் மறு மொழி எழுதினேன். தவறு இருப்பின் மன்னிக்கவும்.
    தங்களுக்கு சிரமம் இல்லாவிடில், த்ங்களிட்ம் உள்ள பிரபலங்களின் ஜாதகத்தை வெளியிட்டு எங்களுக்கு வாரம் ஒரு முறை தேர்வு வைக்கலாமே? :}} (ஒரு முந்திரிக் கொட்டை மாணவனின் அதிகப் பிரசிங்கத்தன்மான யோசனை)
    தன்னலம் கருதாத தங்கள் பணிக்கு எனது நன்றிகள்.
    அன்புடன்,
    செந்தில் முருகன். வே./////

    பாடங்கள் முடியட்டும். அதைப் பிறகு வைத்துக் கொள்வோம்!

    ReplyDelete
  42. sir kanni lagnam 2il sani ucham .sani 5th, 6th place athipaty .sani thisai nadandal,balan evvaru irukkum.kanni lagnathirku yogamana thisai ethu enpathai kurungal thak you sir

    ReplyDelete
  43. ////Blogger uma said...
    sir kanni lagnam 2il sani ucham .sani 5th, 6th place athipaty .sani thisai nadandal,balan evvaru irukkum.kanni lagnathirku yogamana thisai ethu enpathai kurungal thak you sir/////

    Particulars are not sufficient. Pl furnish full birth details (date, time & place of birth) with one straight question

    ReplyDelete
  44. "அந்தப் பெண்ணின் பிறப்பு விவரங்களைக் கொடுங்கள். பார்க்கிறேன்
    date of birth, time of birth and place of birth"

    thanks ayya

    I have sent my cousin sister birth details through minnanjal

    my email id will be displayed as vedicastrostud@gmail.com

    Thanks Sir

    ReplyDelete
  45. sir ,date of birth 12.6.1983 .time of birth 1.48 pm .place of birth madurai. ippothu sani thisai nadakkirathu .veli nattil velai parkkum yogam irukkiratha. thank you sir

    ReplyDelete
  46. sir ,
    date of birth 05.12.1987 .
    time of birth 3.40 pm .
    place of birth chennai.
    I finished my B.E(mech) this year and my aim is to make more money through my job and to start my own business.Can I achieve my aim? If so in how many years.
    Now I planned to do higher studies in US, probably I ll get admission in 2010 Jan.Is my decision is correct? thank you sir

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com