மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

20.8.25

Astrology: யோகங்கள்

Astrology: யோகங்கள்
ருச்சகா யோகம்!
Ruchaga Yogam
----------------------------------
செவ்வாய் - செவ்வாயை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம்.
செவ்வாய் தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று மகரராசியில் இருந்தாலும் அல்லது ஜாதகனின்
கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு.
------------------------------------------------------
வகுப்பறை புத்தி சிகாமணி!:

”சார், செவ்வாய் நீசம் பெற்று, அது கேந்திரமாக இருந்தாலும் பலன் உண்டா?”
“இல்லை! நீசம் பெற்றால் totally out.ஆகவே இல்லை!”
-------------------------------------------------------
என்ன பலன்?

ஜாதகன் துணிச்சலானவன்.எதிலும் வெற்றி காண்பவன். சிலர் இரக்கமில்லாமல் அரக்க குணமுடையவர்களாகவும் இருப்பார்கள்
----------------------------
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

19.8.25

Astrology: யோகங்களின் முக்கியத்துவம்!

Astrology: யோகங்களின் முக்கியத்துவம்! 

சில ஜாதகங்களை அலசும்போது, ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை வைத்து, அது சராசரி ஜாதகம் போல தோன்றும். ஆனால் உண்மை நிலை மாறாக இருக்கும். ஜாதகர் பிரபலமானவராக இருப்பார். நமது கணிப்பு தவறாகிவிடும்.

முன்பு வகுப்பறையில் புதிர் எண்.95ல் கொடுத்திருந்த ஜாதகமும் அந்த வகையைச் சேர்ந்ததுதான்.

ஜாதகர் உலகில் உள்ள மிகப் பெரிய பணக்காரர்கள் மூவரில் ஒருவர். அதைச் சொன்னால்தான்தான் தெரியும்.

ஆனால் ஜாதகத்தைச் சட்டென்று பார்த்தால் தெரியாது. குழப்பும். ஆமாம் இரண்டில் உள்ள சனீஷ்வரன் குழப்புவார்.

விருச்சிக லக்கின ஜாதகர்.லக்கினாதிபதி செவ்வாய் எட்டில்! பாக்கியநாதன்  (9th Lord) சந்திரன் நீசம். இரண்டில் (தன ஸ்தானத்தில்) சனி மூன்று நிலைப்பாடுகளுமே சரியில்லை

சுகாதிபதி சுக்கிரன் நீசம் (ஆனாலும் அவன் உச்சமான புதனுடன் சேர்ந்து நீசபங்க ராஜ யோகத்துடன் இருக்கிறான்) இரண்டில் சனி இருந்தாலும், அந்த வீட்டின் மேல் அதன் அதிபதியும், தனகாரகனுமான குருவின் பார்வை உள்ளது.

ஆகவே ஓரளவு நிதித் தட்டுப்பாடு இல்லாத ஜாதகம் என்று சொல்லத் தோன்றும். ஆனால் ஜாதகர் மிகப் பெரிய செல்வந்தரானது எப்படி?

ஜாதகத்தில் 26 யோகங்கள் உள்ளன. அவை அனைத்தும் வேலை செய்து ஜாதகரை செல்வத்தின் உச்சத்திற்குக் கொண்டு சென்றன.

யோகங்களின் முக்கியத்துவம் அப்போதுதான் நமக்குப் பிடிபடும்

ஜாதகர் யார் தெரியுமா?

வாரன் பஃபெட் (Warren Buffet) உலகின் இரண்டாவது பெரிய பணக்காரர்.

இந்த ஜாதகத்தை இன்னொரு நாள் விரிவாக அலசுவோம்.

இப்போது சொல்ல வந்த செய்திக்கு வருகிறேன்.

யோகங்களைப் பற்றியும், அதாவது முக்கியமான யோகங்களைப் பற்றி நாம் அறிந்து வைத்திருப்பது அவசியம்.

ஆகவே யோகங்களைப் பற்றி அவ்வப்போது எழுதலாம் என்றுள்ளேன். யோகங்களைப் பற்றிய சில பாடங்களைப் படிக்கும்போது முன்பே படித்ததாகத் தோன்றலாம். புதிதாக நிறையப் பேர்கள் வந்துள்ளார்கள். அவர்கள் படிக்க வேண்டும் என்பதற்காக எழுதுகிறேன். முன்பே படித்த நினைவு வந்தால், தவறில்லை, மீண்டும் ஒருமுறை படியுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
======================================

16.8.25

Astrology: விபரீத ராஜயோகம்

Astrology: விபரீத ராஜயோகம் 

(Reversal of Fortune)

அதென்ன ஸ்வாமி விபரீதம்?

விபரீதம் என்பது சாதாரணமாக இல்லாததும், தவறானதும் ஆகும். விசித்திரமானதாகும்

நடக்கக்கூடாதது நடந்துவிட்டால், அதுவும் இயற்கைக்கு மாறாக நடந்துவிட்டால் 
அதை விபரீதம் என்போம். அதைப்போல கிடைக்கூடாத ராஜயோகம் விபரீதமாகக் 
கிடைத்து விட்டால் அது விபரீத ராஜயோகம்!

அது ஜாதகத்தில் எப்படி ஏற்படும்? அதன் பலன் என்ன?

விபரீத ராஜயோகம் என்பது வழக்கமான ராஜயோகங்களில் இருந்து மாறுபட்டது.

எப்படி மாறுபட்டது?

அனுஷ்கா சர்மா அல்லது பிரியா மணி போன்ற அழகான பெண்ணை நீங்கள் தேர்வு செய்து, கெஞ்சிக்கூத்தாடி,சம்மதிக்க வைத்து, நீங்கள் திருமணம் செய்து கொண்டால், அது  வழக்கமான ராஜ யோகம்

ஆனால், அதே அனுஷ்கா சர்மா அல்லது பிரியா மணி போன்ற அழகான பெண்கள், அவர்களாகவே முன்வந்து, உங்களிடம் கெஞ்சிக்கூத்தாடி, மன்றாடி, உங்களைத் திருமணம் செய்து கொண்டால் அது விபரீத ராஜயோகம்

இன்னும் விளக்கமாகச் சொன்னால், பிரிட்டீஷ்  அரச குடும்பத்தினரே முன் வந்து அவர்கள் வீட்டுப் பெண்ணை,உங்களுக்குத் தாரை வார்த்துக்  கொடுப்பதாகச் சொன்னால், அது விபரீத ராஜ யோகம்.

உதாரணங்கள் போதுமா?




மிதுன லக்கின ஜாதகத்தின் 12ஆம் வீட்டில் சுக்கிரனும், சனியும் ஒன்றாக இருக்கிறார்கள் 
என்று வைத்துக் கொள்ளுங்கள். களத்திரகாரகன் சுக்கிரன் 12ல் மறைந்து, உரிய நேரத்தில் 
திருமணமாவதும் தடைபட்டு, விரும்பும் அளவிற்கு ஒரு மங்கை நல்லாளும் ஜாதகனுக்குக்
கிடைக்கவில்லை என்று வைத்துக் கொள்ளூங்கள். அப்படிப்பட்ட நேரத்தில், ஜாதகனின் 
எட்டாம் வீட்டு அதிபதி சனி 12ல் இருப்பதால் (ஒரு துஷ்ட ஸ்தானத்தின் அதிபதி இன்னொரு
துஷ்ட ஸ்தானத்தில் அமர்வது) அவர் சுக்கிரனின் பென்டை நிமிர்த்தி, ஜாதகனின் திருமணத்தை 
உரிய நேரத்தில் நடத்தி வைப்பதுடன், மயக்கும் அழகுள்ள மங்கையையும் அவனுக்குப் பிடித்துக் 
கொடுத்து விடுவார்.அதுதான் விபரீத ராஜயோகம்

பெண்ணை உதாரணமாகச் சொன்னால்தான் சிலருக்கு மண்டையில் சுறுசுறுப்பாக ஏறும் என்பதற்காக இதைச் சொன்னேன்.

பணம், வேலை, பதவி, செல்வாக்கு என்று எதற்கு வேண்டுமென்றாலும் இந்த யோகம் ஒத்துவரும். அது அங்கே போய் அமரும் துஷ்டனையும், அவன் அடித்து வீழ்த்தும் சம்பந்தப்பட்ட அதிபதி அல்லது காரகனையும் பொறுத்து உண்டாகும்.

ஒரு துஷ்ட ஸ்தானத்தின் அதிபதி, மற்றொரு துஷ்ட ஸ்தானத்தில், ஒரு துஷ்டனுடன் அமர்ந்திருந்தால் இந்த யோகம் உண்டாகும்.

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14.8.25

Astrology: குழந்தை பாக்கியத்திற்கான அஷ்டகவர்க்க ஃபார்முலா இதுதான்.

Astrology: குழந்தை பாக்கியத்திற்கான அஷ்டகவர்க்க ஃபார்முலா இதுதான்.

5ஆம் வீடு
5ஆம் அதிபதி இருக்கும் இடம்
காரகன் குரு இருக்கும் இடம்
ஆகிய மூன்று வீடுகளும்
28 பரல்களுக்கு மேல் இருக்கவேண்டும்
இருந்தால் உடனே குழந்தை பிறக்கும்

இல்லையென்றால்?

அந்த மூன்று வீடுகளில் ஒரு வீட்டிலாவது 28ற்கு மேற்பட்ட பரல்கல்கள் இருக்க வேண்டும்.
அப்படியிருந்தால் தாமதமாகக் குழந்தை பிறக்கும்!

எப்போது பிறக்கும்?

ஐந்தாம் அதிபதி அல்லது காரகன் அல்லது லக்கினாதிபதி ஆகியவர்களின் தசாபுத்தியில் பிறக்கும்.

மூன்று வீடுகளிலுமே நீங்கள் சொல்லும் 28 பரல்கள் இல்லையென்றால்?

அவசரப்படவேண்டாம். 25 முதல் 28 பரல்களுக்குள் இருக்கலாம். சற்றுத்தாமதமாகப் பிறக்கும்.

மூன்று வீடுகளுலும் 25 பரல்கள் இல்லை - அதற்குக் கீழான பரல்கள்தான் உள்ளன என்றால்?

கணவன் அல்லது மனைவி இருவரில் ஒருவருக்கு அந்த வீடுகள் நன்றாக இருந்தால் போதும். அவரை வைத்து - அவருக்காகப் பிறக்கும்!

இருவருக்குமே அப்படியில்லையென்றால்?

கஷ்டம்தான். இறைவனை வழிபடுவதைத் தவிர வேறு வழியில்லை! பூர்வ புண்ணியத்தைச் சொல்லும் திறமை எந்த ஜோதிடனுக்கும் இல்லை. பூர்வ புண்ணிய பலனால் (மேலும் இறைவழிபாட்டால்) எல்லாவற்றையும் பொய்யாக்கிவிட்டுக் குழந்தை பிறக்கும்.

காசில்லாத பரிகார ஸ்தலம் எது?

ராமேஸ்வரம்!

Okayயா?

நட்புடன்
வாத்தியார்

(திருமணமாகாதவர்கள் இந்தப் பாடத்தைப் படித்துவிட்டுக் குழம்ப வேண்டாம். பெண் பார்க்கும்போது மகேந்திரப் பொருத்தம் பார்த்து, அது பொருந்துகின்ற பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளுங்கள்.)

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13.8.25

Astrology : குரு ஜாதகத்தில் எங்கே இருக்க வேண்டும் ?

Astrology : குரு ஜாதகத்தில் எங்கே இருக்க வேண்டும் ?

குரு 1, 5, 9 ஆம் விடுகளில் இருந்தால் உத்தமம். 

லக்கினத்தில் குரு இருந்தால் அதி உத்தமம். ஜாதகன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.

Yes, the native of the horoscope is a blessed person. அவனுக்கு ஜாதகத்தைப் பார்த்துப்

பலன் சொல்ல வேண்டாம். ஜாதகத்தைத் திருப்பிக் கொடுத்துவிடலாம். நல்லதும்

கெட்டதும் கலந்ததுதான் வாழ்க்கை. அவனுடைய வாழ்வில் அது இரண்டும் இருக்கும்.

அந்த இரண்டு சூழ்நிலைகளிலும், குரு அவனுக்குக் கை கொடுப்பார். 

நல்லதிற்குக் கை கொடுக்க யாரும் வேண்டியதில்லை. ஆனால் கெட்ட சூழ்நிலையில்

நமக்குக் கை கொடுக்க ஒருவராவது வேண்டும். அந்த ஒருவராகக் குரு பகவானே

வந்து நிற்பார் எனும்போது வேறு என்ன வேண்டும்? 

வந்து நிற்பார் என்றால் என்ன பொருள்? 

The native is self equipped to stand in any situation! 

அது முக்கியம். 

அதேபோல 7ல் குரு இருந்தாலும் நல்ல பலன். இரண்டு விதமான பலன். அவர்

லக்கினத்தைத் தன் கண்பார்வையில் வைத்திருப்பதோடு, ஜாதகனுக்கு அல்லது

ஜாதகிக்கு நல்ல வாழ்க்கைத் துணையைத் தேடிக் கொடுப்பார். 

நீ பாதி; நான் பாதி கண்ணேஎன்று ஜாதகன் பாடிக் கொண்டிருப்பான்

(திருமணத்திற்குப் பிறகுதான்) 

அதேபோல 5ஆம், வீடு அல்லது 9ஆம் வீடுகளில் குரு இருந்தாலும் சிறப்புத்தான்.

5ல் இருந்து தனது விஷேச பார்வையான 9ஆம் பார்வையாக லக்கினத்தை அவர்

தன் கண்ணில் வைத்திருப்பார். 9ஆம் வீட்டில் இருந்தாலும், தனது 5ஆம்

பார்வையால், அவர் லக்கினத்தைத் தன் கண்ணில் வைத்திருப்பார். 

9ல் குரு இருந்தால் ஜாதகனுக்கு நல்ல தந்தை கிடைப்பார். பூர்வீகச் சொத்துக்கள்

கிடைக்கும். 5ல் குரு இருந்தால் ஜாதகன் அறிவு ஜீவியாக இருப்பான்.

(Guru is the authority for keen intelligence).

 கல்வி நான்காம் வீடு; அறிவு ஐந்தாம் வீடு. அதனால்தான் படித்த முட்டாளூம்

இருக்கிறான். படிக்காத மேதையும் இருக்கிறான்.

அன்புடன்

வாத்தியார்

 

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12.8.25

Astrology: ஒரு ஜாதகத்தைக் கையில் எடுத்தவுடன் என்ன செய்ய வேண்டும்?

ஒரு ஜாதகத்தைக் கையில் எடுத்தவுடன் என்ன செய்ய வேண்டும்?

முக்கியமான விவரங்கள் அதில் உள்ளதா? என்று பார்க்க வேண்டும்.

ராசிச் சக்கரம், நவாம்ச சக்கரம், தசா/புத்தி விவரங்கள், கர்ப்பச்செல் இருப்பு (That is the balance dasa of the birth star at the time of the birth) அஷ்டகவர்க்கக் கட்டங்கள் ஆகியவை உள்ளனவா என்று பார்க்க வேண்டும்.

அவைகள் இருந்தால் மட்டுமே, கையில் வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் உங்களிடம் காட்டியவரிடம் திருப்பிக் கொடுத்துவிடலாம். 

”கணினியில் கணித்துப் பிரதி ஒன்றைக் கொண்டு வாருங்கள்” என்று சொல்லிவிட வேண்டும்!
-------------------------------------------------------------------
சரி, எல்லாம் சரியாக இருக்கிறது என்றால் முதலில் என்ன செய்ய வேண்டும்?

கதாநாயகன் எப்படியிருக்கிறான் என்று பார்க்க வேண்டும்.

ஒரு திரைப்படத்திற்கு எப்படி நாயகன் பிரதானமோ, அப்படி ஒருவரின் சொந்த வாழ்க்கைப் படத்திற்கு, லக்கினாதிபதி எனும் கதாநாயகன் பிரதானம்!

அவன் சரியாக இல்லையென்றால், வாழ்க்கைப் படம் சரியாக ஓடாது! ரசிக்காது! நீண்ட நாட்கள் படம் ஓடினாலும் படத்தைப் பார்க்க ஆளிருக்காது.

பாதிப்பேர்களுடைய வாழ்க்கைப் படம் அப்படித்தான் இருக்கும்.

எல்லாம் வாங்கி வந்த வரம்! முன்வினைப் பலன்!

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------------------

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11.8.25

Astrology - ராசி எத்தனை ராசி ?

Astrology -  ராசி எத்தனை ராசி ?

நெருப்பு ராசிகள் (Fire)
மேஷம், சிம்மம், தனுசு Aries, Leo, Sagittarius ஆகியவை நெருப்பு ராசிகள் எனப்படும். 
இந்த மூன்று ராசிகளில் ஏதாவது ஒன்றைச் சேரந்தவர்கள் - அதாவது லக்கினமாகப் பெற்றவர்கள் தன்நம்பிக்கை உள்ளவர்களாகவ்ய்ம், துணிச்சல் மிக்கவர்களாகவும், சுயமாக சிந்தித்து முடிவு எடுப்பவர்களாகவும் இருப்பார்கள். தலைமை தாங்கும் வல்லமை படைத்தவர்களாகவும் இருப்பார்கள்

நெருப்புராசியை ஜீவனமாகப் பெற்றவர்கள் (அதாவது 10ம் வீடாகப் பெற்றவர்கள்) நெருப்பு சம்மந்தப்பட்ட தொழிலில் இருக்கும் வாய்ப்பு உண்டு.
------------------------------
நில ராசிகள்:(Earth)
ரிஷபம்,கன்னி, மகரம்  Taurus, Virgo Capricorn, ஆகியவை மூன்றும் நில ராசிகள் எனப்படும். 
இந்த ராசியை லக்கினமாகப் பெற்றவர்கள் மிகவும் நிதானமாகச் செயல்படக் கூடியவர்களாகவும், எதையும் யதார்த்தமாக எடுத்துக்கொள்பவர்களாகவும் இருப்பார்கள். Take it easy policy காரர்கள். சிக்கனவாதிகள். இவர்களிடம் காசு கேட்டு வாங்குவதற்குள் அடுத்தவனுக்குப் பிராணன் போய்விடும் வாய்ப்பு உண்டு:-))) உப்புப் பெறாத சின்ன விஷயங்களுக்குக்கூட கவலை கொள்ளக்கூடியவர்கள்.

பத்தாம் வீடு  நில ராசியாக வந்தால் நிலம், கட்டிடம் சம்மந்தமான தொழில்கள், வேலைகள், விவசாயம் ஆகியவை நல்ல பலன்களைத் தரும்.
------------------------------------------
காற்று ராசிகள் :(Air) 
துலாம், கும்பம், மிதுனம், Libra, Aquarius, Gemini ஆகியவைகள் காற்று ராசிகள்எனப்படும்.
நிறைவான, நல்ல குணங்களை உடையவர்கள் இவர்கள். புத்திசாலிகள். ஆர்வம் மிகுந்தவர்கள். 

பத்தாம் வீடு காற்று ராசியாக இருந்தால், ஜாதகன் கணக்காய்வாளர், வழக்குரைஞர், ஆசிரியர் போன்ற தொழில்களைச் செய்தால் வெற்றி பெறலாம். மேன்மையடையலாம்.
--------------------------------------
ஜலராசிகள்:(Water)
கடகம், விருச்சிகம், மீனம் Cancer, Scorpio, Pisces ஆகியவைகள் ஜலராசிகளாகும் 
இந்த ராசிக்காரர்கள் மிகுந்த கூச்ச சுபாவம் உடையவர்கள். கற்பனை வளம் உடையவர்கள். எதையும் வெற்றிகரமாகச் செய்து முடிக்கும் ஆற்றல் மிக்கவர்கள்.

ஜலராசி 10-வது வீடாக வந்தால் தண்ணீர் சம்மந்தப்பட்ட தொழில் அமையும் வாய்ப்பு உண்டு. குளிர் பானங்கள், துணிமணி சம்மந்தப்பட்ட தொழில், கப்பல் சம்மந்தப் பட்ட தொழில் ஆகியவறறில் ஒன்றைச் செய்தால், சிறப்பாகச் செய்து பொருள் ஈட்டக்கூடியவர்கள்
----------------------------------------
இதில் குறிப்பிடப்பட்டுள்ள தொழில்கள் எல்லாம் பொது விதிகள். உங்களுக்கு அப்படி அமையவில்லை என்றால், ஜாதகப்படி அதற்கு வேறு காரண காரியங்கள் இருக்கும். ஆகவே குழப்பம் அடைந்து மண்டையைப் பிய்த்துக்கொண்டு பின்னூட்டம் இடுவதைத் தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்

அன்புடன்,
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10.8.25

Astrology - தோஷம் எத்தனை தோஷம்?

Astrology -  தோஷம் எத்தனை தோஷம்?

சென்றவாரம் மின்னஞ்சலில் எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் அன்பர் ஒருவர் தன் ஜாதகத்தில் லக்கினத்தில் ராகுவும், ஏழில் கேதுவும் இருப்பதை வைத்து தனக்குக் காலசர்ப்ப தோஷம் இருக்கிறதா என்று கேட்டிருந்தார். அத்துடன் தனக்கு நாக தோஷம் இருக்கிறதா என்றும் கேட்டிருந்தார்.

காலசர்ப்ப தோஷத்தைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறேன். அதை மீண்டும் எழுதி, பல பேர்களுடைய சாபத்தை வாங்கிக்கொள்ள விரும்பவில்லை. இப்போது அந்த அன்பர் புதிதாகக் குறிப்பிட்டுள்ள நாக தோஷத்தை மட்டும் பார்ப்போம்!
--------------------------------------------------------------------------
நாக தோஷம் என்பது லக்கினம், சந்திரன், ராகு ஆகிய மூன்றும் ஒன்றாக இருந்தால் ஏற்படக்கூடியது. அத்தோடு லக்கினம், சுக்கிரன், ராகு ஆகிய மூன்றும் ஒன்றாக இருந்தாலும் ஏற்படக்கூடியது. அது எல்லா லக்கினத்திற்கும் பொருந்தும். ராகுவிற்குப் பதிலாக கேது அந்த இடத்தில் இருந்தாலும் அத்தோஷம் உண்டு.

அதனால் ஏற்படக்கூடிய பாதிப்பு என்ன?

உடல் உபாதைகள், நோய்கள்
எல்லாச் செயல்களிலும் ஒரு மந்தமான நிலைமை, தாமதம்
திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள்.
இம்மூன்றில் ஒன்று உண்டாகும். அது ஜாதகத்தில் அததற்கு உரிய காரகர்களின் நிலையைப் பொறுத்து உண்டாகும்

பரிகாரம் உண்டா?
உண்டு!
காசை வைத்துச் செய்யும் பரிகாரங்கள் அல்ல!
உங்கள் காசு யாருக்கு வேண்டும்? அதுவும் கிரகங்களுக்கு எதற்காக?
மந்திரம், யந்திரம், பரிகாரத் தகடுகள் என்று காசையும் நேரத்தையும் வீணாக்குவதை விட, பிரார்த்தனை செய்யுங்கள்.
கடுமையாகப் பிரார்த்தனை செய்யுங்கள்.
பாதிப்புக்கள் குறைந்துவிடும். நீங்கிவிடும். உங்கள் வாழ்க்கை ஒளிரும்!

யாரை வணங்க வேண்டும்?
ராகு, கேதுக்களை வணங்குங்கள். அவர்களுடைய ஸ்தலத்திற்குச் சென்று வணங்குங்கள்
அல்லது அதைவிட மேலாக உங்கள் நட்சத்திரத்தன்று உபவாசம் இருந்து சிவபெருமானை வணங்குங்கள். ஒன்பது மதங்கள் அவ்வாறு தொடர்ந்து செய்யுங்கள். அவர் கருணை வைப்பார். அவர் கருணை வைத்தால் என்னதான் நடக்காது?

அன்புடன்,
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

9.8.25

Astrology - ஆடும்வரை ஆட்டம்!!

Astrology - ஆடும்வரை ஆட்டம்!!

வீடுவரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ?

என்று பிரபலமான பாடல் ஒன்றின் பல்லவியில் எழுதிய கவியரசர், அதே பாடலின் சரணத்தில் இப்படி எழுதியிருப்பார்:

ஆடும் வரை ஆட்டம்
ஆயிரத்தில் நாட்டம்
கூடிவரும் கூட்டம்
கொள்ளிவரை வருமா?

செவிட்டில் அறைவதைப்போன்று என்ன ஒரு கேள்வி பாருங்கள்

நம்மோடு தொடர்ந்து சுற்றியவர்கள், சாப்பிட்டவர்கள், நமது பணத்தைக் கூட இருந்தே கரைத்தவர்கள், வலது கை என்று நாம் நம்பிக்கொண்டிருந்தவர்கள்,  மாலை நேரங்களில், கூட இருந்து நமக்கு சரக்கை ஊற்றிக்கொடுத்தவர்கள், கொஞ்சம் அதிகமான நேரங்களில் வீடுவரை கொண்டுவந்து விட்டு விட்டுப் போனவர்கள், உயிர் காப்பான் தோழன் என்று கவிஞர்களால் வர்ணிக்கப்படுகிறவர்கள் - இப்படிச் சொல்லிக்கொண்டே போகக்கூடிய எண்ணற்றவர்கள், நமக்கு மிகவும் நெருங்கியவர்கள் எத்தனை பேர்கள் இருந்தாலும், ஒரு நாள் நாம் சிதையில் வேகும் போது “ அடேய், நம் சுப்பிரமணி கொள்ளியில் தனியாக வேகிறானடா! அவன் தனியாக வேகக்கூடாது. நானும் அவனோடு போகிறேன்” என்று சொல்லியவாறு எரியும் சிதையில் எவனாது ஏறிப்படுத்துகொள்வானா?

மாட்டான்!. மாட்டான்! மாட்டான்!

அதைத்தான் கூடிவரும் கூட்டம் கொள்ளிவரை வருமா? என்று கவியரசர் கேட்டார்
------------------------------------------------------------------
பணம், பதவி, புகழ், செல்வாக்கு, அதிகாரம் என்று அவற்றை ஒரு கிரக்கத்துடன் தேடி அலைபவர்கள்  நிறையப் பேர்கள் உள்ளார்கள்.

அவற்றில் ஏதாவது ஒன்று கிடைத்தாலும் போதும் என்று தனியாக அலைபவர்களும் உள்ளார்கள். ஒருவித போதை அது!

வாழ்க்கை ஒரு மாயை (illusion) என்பதை உணர்ந்தவன் அதற்கு அலையமாட்டான்!

கிடைப்பது முக்கியமில்லை. கிடைத்தால் அது கடைசிவரை நம்மோடு இருக்க வேண்டும். நம்மை அது மேன்மைப் படுத்த வேண்டும்.
அந்த நிலைமை இல்லை என்றால் அது கிடைத்தும் பிரயோஜனமில்லை

ஜாதகப்படி அது கிடைப்பதற்கும், கிடைத்தது நிலைப்பதற்கும் என்ன காரணம் என்று இன்று பார்ப்போம்
------------------------------------------------------------------------------------
மேலே உள்ள ஜாதகம் உலகையே கலக்கிய மனிதனின் ஜாதகம்
ஆமாம். ஹிட்லரின் ஜாதகம்

ஹிட்லரைப் பற்றி முன்பு விவரமாக எழுதியுள்ளேன். ஆகவே அதைத் தவிர்த்துவிட்டு சொல்ல வந்த செய்தியை மட்டும் சொல்கிறேன் பணம், பதவி, புகழ், செல்வாக்கு, அதிகாரம் என்று அனைத்தையும் எட்டிப் பிடித்தவர் அவர்.

ஆனால் அவைகளே அனைத்தையும் கொட்டிக் கவிழ்த்து அவருடைய முடிவைத் தற்கொலையில் கொண்டுபோய் நிறுத்தின!
ஜாதகப்படி என்ன காரணம்?

கஜகேசரி யோகம் இருந்து, அந்த யோகத்தைக் கொடுக்கும் குரு பகவான் தன்னுடைய  பார்வையில் ஏழாம் வீட்டை வைத்திருந்தால் ஜாதகனுக்கு எல்லாம் கிடைக்கும். ஆனால் அந்த அமைப்பில் குருவுடன், கேது அல்லது ராகு வந்து ஒட்டிக்கொண்டிருந்தால், முடிவு அவலமாக இருக்கும். கஜகேசரி யோகம் கிடைத்தும் பிரயோஜனமில்லாத நிலை அது!

சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் என்று 4 கிரகங்களை தன்னுடைய கஜகேசரி யோகத்தால் ஆட்டிவைத்த குருவை, (ஆட்டிவைத்த பதம் எதற்கு? துலாம் லக்கினத்திற்கு குரு நம்பர் ஒன் வில்லன். அதை மனதில் வையுங்கள்) அவர் ஜாதகனுக்கு வாங்கிக் கொடுத்தவற்றை, கூடவே இருந்த கேது, கடைசியில் கொட்டிக் கவிழ்த்தான்.

ஹிட்லரின் படையில் எத்தனை அதிகாரிகள், வீரர்கள் இருந்தார்கள். அவனுடன் சேர்ந்து சுகப்பட்டவர்கள் எத்தனை பேர்கள். ஒருவனாவது ஹிட்லர் புதையுண்டபோது, கூடச் சேர்ந்து புதையுண்டானா?

அதை வலியுறுத்தத்தான் பதிவின் முகப்பில் உள்ள பாடல் வரிகள்

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8.8.25

Astrology - யாருக்கு ஜோதிடம் வரும் ?

Astrology -  யாருக்கு ஜோதிடம் வரும்  ?

”செந்தமிழ் தேன் மொழியாள்  
நிலாவெனச் சிரிக்கும் மலர்க் கொடியாள்”

என்று பிரபலமான பாடல் ஒன்றின் பல்லவியில் எழுதிய கவியரசர், அதே பாடலின் சரணத்தில் இப்படி எழுதியிருப்பார்:

கண்களில் நீலம் விளைத்தவளோ
அதைக் கடலினில் கொண்டு கரைத்தவளோ
பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும்
பேரழகெல்லாம் படைத்தவளோ!

என்னவொரு வர்ணனை பாருங்கள்.

அதே வர்ணனை ஜோதிடம் தெரிந்தவர்களுக்கும் பொருந்தும். நன்கு ஜோதிடம் தெரிந்தவர்களைப் பலரும் விரும்புவார்கள். ஜோதிடத்தின் கவர்ச்சி அது!

உங்களுக்கு ஜோதிடம் தெரியும் என்றால், நண்பர்களும், உறவினர்களும், மற்றவர்களும் உங்களை விடமாட்டார்கள். மொய்த்து விடுவார்கள். பிய்த்து விடுவார்கள்.

அந்தக் காலத்தில் ஜோதிடம் என்பது குடும்பத் தொழிலாக இருந்தது. இப்போது அப்படியில்லை. பழைய புராதண நூல்கள், ஏடுகள் எல்லாம் வடமொழியில் இருந்து மொழிபெயர்க்கப்பெற்று நூல்களாக வந்துவிட்டன. ஆர்வம் உள்ளவர்கள் யார் வேண்டுமென்றாலும் கற்றுக் கொள்ளலாம்.

கற்றுக்கொள்வது முக்கியமில்லை. கற்றுக் கொண்டதை மனதில் தக்க வைப்பதுதான் முக்கியம். முயன்றால் அதுவும் சாத்தியமே! திரும்பத் திரும்பப் படித்தால் மனதில் தங்காதா என்ன?

தொழிலாகச் செய்யாவிட்டாலும், இன்று பலருக்கும் ஜோதிடம் தெரியும். பொழுதுபோக்காக அதைச் செய்பவர்கள் பலர் இருக்கிறார்கள்.

சரி, ஜோதிடம் யாருக்கு சுலபமாக வரும்? அல்லது சுலபமாக மனதில் குடிகொள்ளும்? அதற்கான கிரக அமைப்பு என்ன?

அதை இன்று பார்ப்போம்!
---------------------------------------------------------------
1. குரு 5ஆம் வீடு அல்லது 9ஆம் வீட்டில் இருப்பதோடு, அவைகளில் ஒன்று அவருடைய சொந்த வீடாக இருக்கும் நிலைமை.
2. 5ஆம் வீட்டு அதிபதி அல்லது 9ஆம் வீட்டு அதிபதி என்னும் நிலையில், குரு பகவான் லக்கினத்தில் அமர்ந்திருக்கும் நிலைமை.
3. 5ஆம் வீடு அதன் அதிபதியின் பார்வையில் இருக்கும் நிலைமை.
4. 5ஆம் வீடு குருவின் நேர் பார்வையில் இருக்கும் நிலைமை.
5. 5ஆம் வீடு ஒரு உச்ச கிரகத்தின் பார்வையில் இருக்கும் நிலைமை.
6. 5ஆம் வீட்டிலிருந்து, அதன் பன்னிரெண்டாம் வீட்டில் சனி இருக்கும் நிலைமை.
7. ராகு அல்லது கேது கோணங்களில் அமர்ந்திருப்பதோடு, குருவின் பார்வையைப் பெற்றிருக்கும் நிலைமை

இந்த அமைப்புக்களில் ஒன்று இருப்பவர்களுக்கு ஜோதிடம் கைகொடுக்கும்.
குரு நுண்ணறிவிற்கு (keen intelligence) அதிபதி. 5ஆம் வீடு நுண்ணறிவிற்கான வீடு. அதை மனதில் வையுங்கள்!
அதே போல புத்திநாதன் புதனுக்கும் ஜோதிடத்தில் முக்கிய பங்கு உண்டு. அதை இன்னொரு நாளில் பார்ப்போம்!

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

7.8.25

Astrology - வாலிபத்தில் காதலிக்க ஜாதகத்தில் வழியுண்டா?

Astrology - வாலிபத்தில் காதலிக்க ஜாதகத்தில் வழியுண்டா?

”காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை
வாலிபத்தில் காதலிக்க ஜாதகத்தில் வழியுமில்லை” 

என்று, பிரபலமான பாடல் ஒன்றின் பல்லவியில் எழுதிய கவியரசர் கண்ணதாசன், பாடலின் முடிவில் இப்படி எழுதியிருப்பார்:

”காதலிக்க நேரமுண்டு கன்னியுண்டு காளையுண்டு!
வாலிபத்தில் காதலிக்க ஜாதகத்தில் வழியுமுண்டு!”

உண்மையிலேயே, காதலிக்கும் யோகத்தை, நல்ல காதலி கிடைக்கும் யோகத்தை ஜாதகத்தின் மூலம் தெரிந்து கொள்ள முடியுமா? அதற்கு உரிய வீடுகள் என்ன? அதற்கு உரிய கிரக அமைப்புக்கள் என்ன?

அதை  இன்று பார்ப்போம்!
----------------------------------
ஜோதிடப்படி லக்கினத்தில் இருந்து ஐந்தாம் வீடு, அன்பு, நேசம், காதல், மெல்லிய உணர்வுகளுக்கும் உரிய வீடாகும். ஏழாம் வீடு கணவன் அல்லது மனைவிக்கு (spouse) உரிய வீடாகும். அந்த இரண்டு வீட்டு அதிபதிகளின் மேன்மையான கூட்டணி (Association) காதலை உண்டாக்கும். நல்ல காதலி கிடைப்பான் அல்லது பெண்ணாக இருந்தால் நல்ல காதலன் கிடைப்பான். கிறங்க வைக்கும் காதல் உணர்வில் காதலர்கள் திகட்டும் வரை (திகட்டாது. காதல் திகட்டியதாக சரித்திரம் இல்லை) திளைப்பார்கள்.

அதாவது, அந்த இரண்டு வீட்டு அதிபதிகளும் பரிவர்த்தனையாகி இருக்க வேண்டும் அல்லது இருவரும் பார்வையால் ஒன்று பட்டிருக்க வேண்டும். அல்லது சேர்க்கையால் ஒன்று பட்டு, கேந்திர திரிகோணங்களில் அமர்ந்திருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் காதல் திருமணம்!

அந்த கிரகங்களின் தசா புத்திகளில் திருமணம் நடைபெறும்
-----------------------------------
இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.

அப்படி நடைபெறும் திருமணம் நிலைத்து நிற்குமா? அல்லது ஊற்றிக்கொள்ளுமா? என்பதற்கு வேறு அமைப்புக்கள் உள்ளன. அதை இன்னொரு நாள் பார்ப்போம். 

மேலும், இன்றே அதை எழுதி, காதலர்களைக் கலங்க அடிக்க வேண்டாம்!

அன்புடன்
வாத்தியார்வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6.8.25

Astrology - கோச்சாரம் என்ன செய்யும் ?

Astrology -  கோச்சாரம்  என்ன செய்யும் ?

கோள்சாரம் அல்லது கோச்சாரம் என்பது இன்றைய தேதியில் கிரகங்கள் சுற்றி வரும் நிலையில் இருக்கும் இடத்தைக் குறிப்பிடுவது ஆகும்! சந்திரன் இருக்கும் இடத்தை வைத்து, அதாவது உங்களுடைய சந்திர ராசியை வைத்து அதைப் பார்க்க வேண்டும். எண்ணும்போது ராசியையும் சேர்த்து எண்ண வேண்டும்.

கோச்சார கிரகங்கள் என்ன செய்யும்? தீய கோள்சாரங்கள் தொல்லைகளைக் கொடுக்கும். சிரமங்களைக் கொடுக்கும். சனீஷ்வரன் கோச்சாரத்தில் 8ம் இடம், 12ம் இடம், 1ம் இடம் இரண்டாம் இடங்களில் இருக்கும் காலங்களில் (மொத்தம் 10 ஆண்டு காலம்) தீமையான பலன்களையே கொடுப்பார்.

அப்படி ஒவ்வொரு கிரகமும் கோச்சாரத்தில் அதிகமான தொல்லையைக் கொடுக்கும், அதாவது ஜாதகனுக்கு அதிக அளவில் தீமையான பலன்களைக் கொடுக்கும் இடத்தைப் பற்றி முனுசாமி அதாங்க நம்ம முனிவர், பாடல் ஒன்றின் மூலம் அழகாகச் சொல்லியுள்ளார்

அதை இன்று பார்ப்போம்!
-----------------------------------------------------
கேளப்பா குரு மூன்றில் கலைதானெட்டு
   கேடுசெய்யும் சனி ஜென்மம் புந்திநாலில்
சீளப்பா சேயேழு செங்கதிரோன் ஐந்தும்
   சீறிவரும் கரும்பாம்பு நிதியில் தோன்ற
ஆளப்பா அசுரகுரு ஆறிலேற
   அப்பனே திசையினுடைய வலுவைப்பாரு
மாளப்பாகுற்றம் வரும் கோசாரத்தாலே
   குழவிக்குதிரியாணங் கூர்ந்து சொல்லே!
              - புலிப்பாணி முனிவர்

குரு - 3ம் இடம்
கலை (சந்திரன்) 8ம் இடம்
சனி - 1ல்
புந்தி (புதன்) - 4ல்
சேய் (செவ்வாய்) - 7ல்
கதிரோன் (சூரியன்) 5ல்
கரும்பாம்பு - நிதியில் - 2ல்
அசுர குரு - சுக்கிரன் - 6ல்
இருக்கும் காலத்தில் அதிகமான தீமைகளைச் செய்வார்களாம்.
அக்காலத்தில் ஜாதகனுக்கு நல்ல தசா/புத்திகள் நடந்தால் ஜாதகனுக்கு இந்தத் தொல்லைகள் அதிகம் இருக்காது. தசா நாதர்கள்/புத்தி நாதர்கள் பார்த்துக்கொள்வார்கள்

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

5.8.25

Astrology - போனால் போகட்டும் போடா; புதிதாய் கிடைக்கும் வாடா!

Astrology -  போனால் போகட்டும் போடா; புதிதாய் கிடைக்கும் வாடா!

மனிதர்களுக்கு கிடைக்கும் வேலையில்தான் எத்தனை வகைகள்?

சிலர் சேரும் வேலையிலேயே, அது பிடிக்கிறதோ அல்லது பிடிக்கவில்லையோ, கடைசிவரை அதிலேயே  உழன்று விடுவார்கள்.அதாவது இருந்து விடுவார்கள்.

சிலர் படித்து முடித்தவுடன் ஏதாவது ஒரு வங்கியில் சேர்ந்து பணியாற்றத் துவங்கிவிடுவார்கள். அதே வங்கியில் 35 வருடங்களோ அல்லது 38 வருடங்களோ தொடர்ந்து பணியாற்றிவிட்டு, பணி ஓய்வு பெறும் வரை அந்த வங்கியிலேயே பணியாற்றுவார்கள்.  எனக்குத் தெரிந்த ஒருவர் இந்தியன் ரயில்வேயில் தொடர்ந்து பணி செய்துவிட்டு இப்போதுதான் பணி ஓய்வு பெற்றார்.

ஆனால் சிலர் ஒரு வேலையில் நிரந்தரமாக இருக்க மாட்டார்கள். ஏதாவது ஒரு காரணத்திற்காக,  சட்டையை மாற்றுவதுபோல அடிக்கடி வேலையை மாற்றுவார்கள்.

ஆனாலும் அவர்களுக்குத் தொடர்ந்து வேலை கிடைக்கும்.

அதற்குக் காரணம் என்ன?

அதை இன்று பார்ப்போம்!
-----------------------------------------------------
பன்னிரண்டு ராசிகளும் சர, ஸ்திர, உபய ராசிகள் எனப் பிரிக்கப்பட்டுள்ளன.  
மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகியவை சர ராசிகளாகும். 
ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகியவை ஸ்திர ராசிகளாகும். 
மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகியவை உபய ராசிகளாகும். 
இவற்றை லக்னமாகப் பெற்ற ஜாதகர்களில் பலன்களைப் பார்ப்போம்

Mesha, Kataka, Thula and Makar are movable astrology signs, 
Rishaba , Simha ,Vrischika and kumbha are fixed signs. 
Mithuna, Kanya, Dhanu and Meena are known as common signs.
-------------------------------------------------------
1. பத்தாம் அதிபதி (10th Lord) உபய ராசியில் (common signs) அமர்ந்திருப்பதோடு,  சனி, அல்லது ராகு அல்லது கேது போன்ற தீய கிரகங்களுடன் கூட்டாக இருந்தால், வேலையில் மாற்றங்கள் இருக்கும்.

2. அதே போல 12ஆம் அதிபதி (12th lord) பத்தாம் வீட்டில் அமர்ந்திருந்தாலும் ஒரே வேலையில் இருக்க விடமாட்டான்.

மேலே கூறியுள்ள இரண்டு அமைப்புக்களும், சுப கிரகங்கள் ஏதாவது ஒன்றின் பார்வையைப் பெற்றிருந்தால், அது விதிவிலக்காகும்

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4.8.25

Astrology - மறைந்து நின்று பார்க்கும் மர்மம் என்ன?

Astrology -  மறைந்து நின்று பார்க்கும் மர்மம் என்ன?

மறைந்து நின்று பார்க்கும் மர்மம் என்ன?

மறைந்து நின்று பார்க்கும் திரைப்பட நாயகிகளைப் பற்றி எழுத உள்ளேன் என்று நினைப்பவர்கள் எல்லாம் பதிவை விட்டு விலகவும். இது ஜோதிடத்தில், முக்கிய மறைவிடங்களான ஆறாம் வீடு, 8ஆம் வீடு, மற்றும் 12ஆம் வீட்டைப் பற்றியது.

அவற்றிற்கு தீய இடங்கள் என்று பெயர் (innimical places)

இயற்கை சுபக்கிரகங்களான குரு, சந்திரன், சுக்கிரன், புதன் ஆகியோர் அங்கே சென்று அமரக்கூடாது. அமர்ந்தால் அவர்களால் கிடைக்க வேண்டிய நல்ல பலன்கள் உரிய விதத்தில், உரிய காலத்தில் ஜாதகனுக்குக் கிடைக்காமல் போய்விடும்!

அதைவிட முக்கியமாக அந்த இடங்களுக்கு வேறு சூட்சமங்களும், வேறு முக்கிய செயல்களும் உள்ளன.

அதை இன்று பார்ப்போம்!
---------------------------------------
மறைவிடங்களின் முக்கியத்துவம்!

1.எட்டாம் வீடு ஒரு மனிதன் வாழும் காலத்தையும், அவனுக்கு மரணம் ஏற்படும் விதத்தையும் சுட்டிக்காட்டும்.

2.ஆறாம் வீடு மற்றும் எட்டாம் வீட்டு அதிபதிகளின் (Owners) நிலைப்பாட்டை வைத்து மரணம் ஏற்படும் காலத்தையும் தெரிந்து கொள்ளலாம்.

3. ஆறாம் வீட்டிலும், 8ஆம் வீட்டிலும் தீய கிரகங்கள் இருந்தாலும், அதாவது அங்கே சென்று அவர்கள் குடியிருந்தாலும், ஆறாம் வீட்டு அதிபதியும், எட்டாம் வீட்டு அதிபதியும் தீயவர்களாக இருந்தாலும், அவர்களில் யார் வலுவாக இருக்கிறார்களோ அவர்களுடைய தசாபுத்திக் காலங்களில் ஜாதகன் போர்டிங் பாஸ் வாங்கிவிடுவான். மேலே போய்விடுவான். அதற்கு யாரும் விதிவிலக்கல்ல!

4. எட்டாம் வீட்டைப் பார்க்கும் கிரகங்கள் (That is the planets aspecting the eighth house) மரணம் இயற்கையாக இருக்குமா அல்லது இயற்கையில்லாமால் துன்பம் நிறைந்ததாக இருக்குமா என்று தெரியவரும்.

5. எட்டாம் வீட்டைத் தங்கள் பார்வையில் வைத்திருக்கும் சுபக்கிரகங்கள் ஜாதகனுக்கு இயற்கையான மரணத்தைக் கொடுக்கும். இயற்கையான மரணம் என்பது உடற்கோளாறுகளை வைத்தோ அல்லது மூப்பின் காரணமாக (old age) உடல் உறுப்புக்கள் செயல்பாட்டை இழந்தோ வருவதாகும்

மரணத்தில், சாலை விபத்து, தீ விபத்தில் துவங்கி 28ற்கும் மேற்பட்ட மரணங்கள் இருக்கின்றன. அவற்றை வைத்துப் பத்துப் பக்கங்களுக்கு விரிவாக எழுதலாம். தற்சமயம் நேரமில்லை. பிறகு ஒரு சமயம் எழுதுகிறேன்

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

3.8.25

Astrology - தங்கமே உன் தயவை நான் பெறுவேனோ?

Astrology -   தங்கமே உன் தயவை நான் பெறுவேனோ?

தங்கமே தங்கமே தங்கமே உன் தயவை நான் பெறுவேனோ?" என்ற பழைய திரைப் படப் பாடல் ஒன்று உள்ளது. பாடல் அற்புதமாக இருக்கும். பாடலை என்.எஸ்.கிருஷ்ணன் பாடியவுடன், நாயகி டி.ஏ.மதுரம், கேட்பார்:

”இந்தாங்கய்யா, இப்போ தங்கமேன்னு சொன்னது என்னைத் தானே?”

 அதற்கு அவர் இப்படிப் பதில் சொல்வார்

”ஐயோ ஐயய்யோ ஐயய்யோ, இது என்னடா இது? இதோ பாரும்மா, இந்தப் பாட்டுப் பாடறேன் பாரு அதுல பித்தளைக் காசு, வெள்ளிக் காசு வரைக்கும் வந்திருக்கு, தங்கம் கெடைக்கலே, அப்படி தங்கம் வந்திறுச்சுன்னா... தங்கமே அதான் என்று தான் பெறுவேனோ?”

தங்கத்தின் மேல் எல்லோருக்குமே ஒரு மோகம் உண்டு. இன்று வரைக்கும் ஒரு நம்பிக்கையான முதலீட்டு உலோகம் அதுதான்.

1931ஆம் ஆண்டு ஒரு பவுனின் விலை ரூ.13:00 மட்டுமே
இன்று அதனுடைய விலை ரூ.70,000/-
94  ஆண்டுகளில் பல மடங்கு உயர்ந்துள்ளது.

19ஆம் ஆண்டில்  கொத்தனாரின் (Mason) ஒரு நாள் சம்பளம் 0.25 காசுகள் அதாவது மாதம் சுமார் ஏழு ரூபாய்கள்
இன்று சாதரண ஹோட்டலில் ஒரு கோப்பை காப்பியின் விலை ரூ.25
நல்ல ஹோட்டல்களில் ஒரு கோப்பை காப்பியின் விலை ரூ.35

அதைவிடுங்கள், இன்று கொத்தனாரின் ஒரு நாள் சம்பளம் ரூ.1000/-
அதே விகித்ததில் பார்த்தால் பல மடங்கு உயர்ந்துள்ளது

தங்கத்துடன் போட்டி போட்டுக் கொண்டு கூலியும் உயர்ந்து கொண்டுதான் இருக்கிறது

இன்று பணியில் புதிதாகச் சேரும் ஒரு மென்பொறியாளரின் சம்பளம் சுமார் 40,000:00 ரூபாய்கள். (இன்றைய சந்தை விலையில் சுமார் ஒரு பவுன் காசுகூட இல்லை) கஷ்டப்பட்டுப் படித்து விட்டு, மாதச் சம்பளமாக ஒரு பவுன் காசிற்குத்தான் வேலை பார்க்க வேண்டியதுள்ளது

அன்று உங்கள் பாட்டனார் 1,300 ரூபாய் செலவில் 100 பவுன் காசுகளை வாங்கி வைத்துவிட்டுப் போயிருந்தார் என்றால், அதன் இன்றைய மதிப்பு 74 லட்ச ரூபாய்கள்

எப்படி ஒரு ஏற்றம் பார்த்தீர்களா?
----------------------------------
சரி சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன்

தங்கத்தின் விலை திடீரென்று ஏறுகிறது அல்லது இறங்குகிறது. ஜோதிடப்படி அதற்கு என்ன காரணம்?

செவ்வாய், குரு, சனி ஆகிய 3 கிரகங்களும் வக்கிரகதியில் சுழலும் போது தங்கம் மற்றும் வெள்ளி போன்ற அரிய உலோகங்களின் விலை சரியத் துவங்கும்

”சார், தங்கத்திற்கு அதிபதி குரு, வெள்ளிக்கு அதிபதி சுக்கிரன், அப்படியிருக்கும் போது, இங்கே சனிக்கும், செவ்வாய்க்கும் என்ன வேலை?” என்று யாரும் குறுக்குக்கேள்வி கேட்க வேண்டாம்.

பழைய நூல்களில் தங்கம், வெள்ளி விலை சரிவிற்கு இந்த மூன்று கிரகங்களின் வக்கிரகதியைத்தான் குறிப்பிட்டுள்ளார்கள்

குரு தனகாரகன், சனி கர்மகாரகன், செவ்வாய் ஆற்றலுக்கு உரிய கிரகம். ஒருவரைப் பொருளாதர ரீதியாக (தலை எழுத்தை மாற்றும் முகமாக) புரட்டிப்போடும் ஆற்றல் அந்த மூன்று கிரகங்களுக்கும் உண்டு. அந்த அடிப்படையில் இருக்கும் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

வக்கிரம் நிவர்த்தி ஆனவுடன் மீண்டும் ஏறத்துவங்கும்.

தங்கத்தை வாங்கி வைக்க (வீட்டில்தான்) விரும்புகிறவர்கள் அம்மூன்று கிரகங்களின் நிலைப்பாடுகளைக் கவனித்து, அரிய உலோகங்கள் சரிவில் இருக்கும்போது வாங்க வேண்டும்!

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

1.8.25

Astrology - பெண்களுக்கென்று ஜாதகத்தில் தனி அமைப்புக்கள் உள்ளனவா?

Astrology -  பெண்களுக்கென்று ஜாதகத்தில் தனி அமைப்புக்கள் உள்ளனவா?

ஏன் இல்லாமல்? பெண்களுக்கென்று உடல் அமைப்பு, கால் அமைப்புக்கள் மாறுபடும்போது, ஜாதகத்தில் மட்டும் சில தனி அமைப்புக்கள்  இல்லாமல் போகுமா என்ன?

அவை என்னென்ன?

விரிவாகக் குறைந்தது ஒரு பத்து பதிவுகளாவது எழுத வேண்டும். இங்கே எழுதினால் திருட்டுப்போகும் அபாயம் உள்ளது. ஆகவே மேல் நிலைப் பாடத்தில் எழுதலாம் என்றுள்ளேன்.

ஒரே ஒரு மேட்டரை மட்டும் இங்கே பதிவிடுகிறேன்
-----------------------------------------------------
கைம்பெண்’ நிலைமையைப் பற்றி ஜோதிடம் என்ன சொல்கிறது?

கைம்பெண் என்றால் என்னவென்று தெரியுமல்லவா? கணவனை இழந்த பெண். விதவை. widow

அதாவது கணவனை இழக்கும் நிலை ஒரு பெண்ணுக்கு எவ்வாறு ஏற்படுகிறது?

கணவனை இழக்கும் பெண்ணின் மன பாதிப்புக்களையும், அவளுடைய வாழ்வில் ஏற்படும் சமூக, மற்றும் பொருளாதார பாதிப்புக்களையும் பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம். பதிவு திசை மாறிப்போய்விடும் என்பதாலும், இது பாப்கார்ன் பதிவு என்பதாலும் அதைப்பற்றி எழுதவில்லை. நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன்
------------------------------------------------------
1.  செவ்வாய் ஏழாம் வீட்டில் இருந்து, அது அவருக்குப் பகை வீடு என்னும் நிலைமை விதவையோகத்தைக் குறிக்கும்
2. அவ்வாறு ஏழில் அமர்ந்திருக்கும் கேதுவும் அதே காரியத்தைச் செய்யும்.
3. வலுவிழந்து, பாபகர்த்தாரி யோகத்துடன் ஜாதகத்தில் இருக்கும் சுக்கிரனும் அந்த வேலையைச் செய்யும்
4. பிரசன்ன மார்க்கத்தை எழுதிய முனிவர் பெண்களுக்கு, சனிதான் கணவனுக்கான காரகன் என்கிறார். அத்துடன் பெண்ணின் ஜாதகத்தில்     சனீஷ்வரன் செவ்வாய் அல்லது கேதுவுடன் சேர்ந்து ஏழில் இருந்தால், பெண் சீக்கிரம் விதவையாகிவிடுவாள் என்கிறார்.
5. பெண்களின் ஜாதகத்தில் எட்டாம் வீடு மாங்கல்ய ஸ்தானம். அந்த ஸ்தானத்தை, அதாவது அந்த வீட்டை செவ்வாயோ அல்லது கேதுவோ    பார்த்தால் பெண்ணிற்கு மாங்கல்ய தோஷம்.

இதெல்லாம் பொது விதி. 

விதிவிலக்கு உண்டா? 

உண்டு!

ஜாதகியின் இரண்டாம் வீட்டில் சுபக்கிரகங்கள் இருந்தால், அது அவளை விதவையாகாமல் காப்பாற்றிவிடும். அதுபோல மேற்கண்ட வீடுகளை குரு பகவான் தன்னுடைய நேரடிப் பார்வையில் வைத்திருந்தாலும், அந்த அமைப்பு ஜாதகியைக் காப்பாற்றும்

விளக்கம் போதுமா?
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

31.7.25

Astrology - பரதேசம் போவது எப்படி?

Astrology -  பரதேசம் போவது எப்படி?

யாராவது பரதேசம் போக விரும்புவார்களா? என்னடா வாத்தியார் இப்படித் தலைப்பிட்டிருக்கிறார் என்று கேட்பவர்கள் எல்லாம் பதிவை விட்டு விலகவும்.

ஜாதகப்படி பரதேசம் போகும் அமைப்பு சிலருக்கு இருக்கும். நாம் போக விரும்பாவிட்டாலும், அல்லது அப்படிப்போகும் வாய்ப்பு நமக்குக் கிடைக்காவிட்டாலும் அதைத் தெரிந்து கொள்வதில் என்ன தவறு இருக்கிறது?

நல்லதும் கெட்டதும் கலந்ததுதான் வாழ்க்கை. அவை இரண்டையும் சொல்வதுதான் ஜோதிடம். அதைத் தெரிந்து கொள்வதால் ஒன்றும் கெட்டுப்போய் விடாது. ஆகவே தொடர்ந்து படியுங்கள்.

பரதேசிகள் அலைந்து திரியும் இடம்தான் பரதேசம். முதலில் பரதேசி என்றால் என்னவென்று தெரிந்துகொள்வோம்.

பரதேசி என்றால் ஊர் ஊராகச் சுற்றித்திரியும் பிச்சைக்காரன் என்று அகராதில் குறிப்பிடப்பெற்றுள்ளது. (wandering beggar). குடும்பத்தைத் துறந்து வெளியேறிய துறவிகளையும் அது குறிக்கும்

அந்தக் காலத்தில் பரதேசம் என்றால் நாடுவிட்டு நாடு போவதைக் குறிக்கும். இப்போது அப்படியெல்லாம் போக முடியாது. விசா பிரச்சினை குறுக்கே வந்து நிற்கும். ஆகவே உள் நாட்டிலேயே வேறு மாநிலங்களில் சுற்றித் திரிவது என்று பொருள் கொள்ளலாம்.

சரி, பரதேசம் போவதற்கான ஜாதக அமைப்பு என்ன?

அதை இன்று பார்ப்போம்!
----------------------------------------
பாரப்பா ஈராறோன் இரு நான்கோனும்
   பகருகின்ற செவ்வாயும் மூவர் சேர்ந்து
கூறப்பா எவ்விடத்தில் கூடிட்டாலும்
   கொற்றவனே பரதேசம் போவான் காளை
சீரே நீசசந்திரனும் கண்ணுற்றாலும்
   சிலகாலந் தங்கியிருந்து செம்பொன் தேடி
ஆறப்பா அவன் பதியில் வந்து வாழ்வான்
   அப்பனே புலிப்பாணி அறைந்திட்டேனே!
                       - புலிப்பாணி முனிவர்

ஈராறோன் என்றால் பன்னிரெண்டாம் அதிபதி (12th Lord)
இரு நான்கோன் என்றால் எட்டாம் வீட்டுக்காரன் (8th Lord)
செவ்வாய் என்றால் நம் அனைவருக்கும் தெரியும்

ஆக அம்மூவரும் கூட்டாக ஜாதகத்தில் எந்த இடத்தில் இருந்தாலும், ஜாதகன் ஒரு நாள் பரதேசம் போவானாம்.

சரி, விதிவிலக்குண்டா?

நீச சந்திரன், அதாவது பெளர்ணமிக்குப் பிறகு அமாவாசை வரை உள்ள தேய்பிறைச் சந்திரன், அம்மூவரையும் தன் பார்வையால் பார்த்தால் சற்று விதிவிலக்கு உண்டு. அதாவது ஜாதகன் போவதை அது தடுத்து நிறுத்தாது. ஆனால் சிலகாலம் ஜாதகன் சுற்றித்திரிந்து தங்கம் முதலான பொருட்களுடன் திரும்ப வீடு வந்து சேர்வானாம். பொருள் ஈட்டிக்கொண்டு வருவான். அல்லது உங்கள் மொழியில் சொன்னால் எங்காவது ஆட்டையைப் போட்டுக்கொண்டு வருவான்.

வந்து, தன் நாயகி, தன் மக்களுடன் சேர்ந்தால் சரிதான்!

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

30.7.25

Astrology - பாம்புக்கு பால் வார்ப்பது எப்படி?

Astrology -  பாம்புக்கு பால் வார்ப்பது எப்படி?

புரட்சித் தலைவரின் பழைய படப் பாடல் ஒன்று உள்ளது: “ஹலோ...ஹலோ சுகமா? இப்போ நீங்க நலமா?” என்ற பல்லவியுடன் துவங்கும். படம் ‘தர்மம் தலை காக்கும்’

நான்காம் வீடுதான் சுக ஸ்தானம். அந்த வீடு நன்றாக இருந்தால் இந்தப் பல்லவிக்கு வேலையே இல்லை. ஆசாமி எப்போதும், எந்த சூழ்நிலையிலும் சுகமாக இருப்பான்.

அந்த வீடு நன்றாக இல்லாவிட்டால் என்ன ஆகும்? சுகக்கேடுதான்.
சுகககேடு மட்டுமா? வேறு சில கேடுகளும் உள்ளன. அவற்றை இன்று பார்ப்போம்!
-----------------------------------------------------------------------------------
கேளப்பா யின்னமொரு புதுமை கேளு
   கெடுதி செய்யும் செம்பாம்பு நாலில்நிற்க
சீளப்பா செனித்த மனை சுத்தபாழாம்
   சென்மனுக்கு கிரகமுண்டு விதியும் கூறு
கூளப்பா குளிகனுமே சேர்ந்து நிற்க
   குடியிருக்க குச்சில்லை கறவையில்லை
ஆளப்பா அன்னைக்கு தோஷம் தோஷம்
   அத்திடலில் அரவுக்கு சாந்தி செய்க!
          - புலிப்பாணி முனிவர்

நான்காம் வீட்டில் சனி, ராகு, அல்லது கேது போன்ற தீமையான கிரகங்கள் இருப்பது சுகக்கேடு.

நான்காம் வீட்டிற்கு மூன்று இலாக்காக்கள். தாய், கல்வி, சுகம் (வீடு, வண்டி வாகனங்கள்). சரி, நான்காம் வீடு அடிபட்டுப்போயிருந்தால் இந்த இலாக்காக்கள் மூன்றுக்குமே கேடா?

அது பொது விதி! தாய்க்கு சந்திரனும், கல்விக்கு புதனும், சுகத்திற்கு சுக்கிரனும் மந்திரிகள் (authorities) அவர்களுடைய நிலைமையையும் சேர்த்துப் பார்க்க வேண்டும். அவர்கள் ஜாதகத்தில் நன்றாக இருந்தால் (உச்சம் பெற்று இருந்தாலும் அல்லது கேந்திர, திரிகோணங்களில் இருந்தாலும் அல்லது சுயவர்க்கப் பரல்களில் 5ம் அல்லது 5ற்கு மேற்பட்ட பரல்களுடன் இருந்தாலும் ஜாதகனுக்கு கொடுத்து விடுவார்கள்) அவன் தப்பித்துவிடுவான்.

இல்லை என்றால் மாட்டிக்கொண்டு முழிக்க வேண்டியதாயிருக்கும்.

அந்த வீட்டில் கேது வந்து அமர்ந்திருந்தால், அது கேடானது என்று முனுசாமி (அதாங்க முனிவர்) அடித்துச் சொல்கிறார். அது பொதுப் பலன் என்றாலும் கொஞ்சமாவது வேலை செய்யும்.

என்னென்ன கேடு என்கிறார்? ஜாதகன் பிறந்த வீடு பாழாகிப் போகும் என்கிறார். அதாவது அடையாளமின்றிப் போகலாம். அதுவும் கேதுவுடன் மாந்தியும் சேர்ந்திருந்தால், கேட்கவே வேண்டாம், ஜாதகனுக்கு குடியிருக்க வீடு இருக்காது. வீட்டில் மாடு, கன்று இருக்காது.
முனுசாமி காலத்தில் மாடு கன்றுகளுக்கு அத்தனை முக்கியத்துவம் இருந்திருக்கிறது. அத்துடன் ஜாதகனுடைய தாய்க்கும் அது கெடுதியானது என்கிறார்.

அரவுக்கு சாந்தி செய்க என்கிறார். அதுதான் பரிகாரம் என்கிறார். பாம்பை வளர்த்து வணங்கவும் முடியாது. பாம்புப் புற்றில் தினமும் பால் வார்க்கவும் முடியாது. இன்றைய வாழ்க்கை முறையில் அதெல்லாம் சாத்தியமில்லை.

ஆகவே எல்லாம் வல்ல இறைவனைத் தினமும் மனம் உருக பிரார்த்தனை செய்ய வேண்டும். அத்துடன்  ஜென்ம நட்சத்திரத்தன்று கேது ஸ்தலத்திற்கும் சென்று கேது பகவானை வழிபட்டு வரலாம்!

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

28.7.25

Astrology - அவர் நாயகனா அல்லது வில்லனா?

Astrology -  அவர் நாயகனா அல்லது வில்லனா?

செவ்வாயின் இரட்டை வேடம்.

ஒரு படத்தின் நாயகனுக்குப் படத்தில் இரட்டை வேடம் என்று வைத்துக்கொள்ளுங்கள். படத்தின் கதாநாயகனும் அவரே, வில்லனும் அவரே என்றால், எந்த வேடத்தில் அதிகமாகக் காட்சி கொடுப்பார்?

காட்சி கொடுப்பது முக்கியமில்லை. எந்த வேடத்தில், படத்தின் முடிவில் அவர் வெற்றி பெறுவார்? வில்லன் வேடமே வெற்றி பெற்றால் என்ன ஆகும்?

செவ்வாய்க்கு அந்த நிலைமை உண்டு!

விருச்சிக லக்கினக்காரர்களுக்கு செவ்வாய் லக்கினத்திற்கும் உரியவன், ஆறாம் வீடான மேஷத்திற்கும் உரியவன் அவன்.

ஆறாம் வீடு வில்லங்கமான வீடு என்பது நமக்குத் தெரியும். ஆகவே நாம் விருச்சிக லக்கினக்காரர்கள் என்றால் அதிகமாகக் கவலை கொள்வோம்.

செவ்வாய் ஜாதகத்தில் வலிமையுடன் இருந்தால், அதாவது உச்சம் பெற்றோ அல்லது கேந்திர திரிகோணங்களிலோ இருந்தாலோ அல்லது அஷ்டகவர்க்க சுயபரல்களில் 5ம் அதற்கு மேற்பட்ட பரல்களுடன் இருந்தாலோ,  ஜாதகனுக்கு மொத்தமாக நாயகன் வேலையை மட்டுமே செய்வார். தவறி வலிமையின்றி இருந்தால், அதாவது ஜாதகத்தில் நீசமடைந்து இருந்தாலும் அல்லது 6, 8, 12ஆம் வீடுகளில் இருந்தாலும் அல்லது அஷ்டகவர்க்கத்தில் 3 அல்லது அதற்குக் குறைவான பரல்களுடன் இருந்தாலும் நீமைகளையே செய்வார்.

எப்போது செய்வார்? தனது தசா புத்திகளில் செய்வார். அப்படிப்பட்ட நிலைமை உடைய ஜாதகர்கள், சம்பந்தப்பட்ட புத்திக் காலங்களில் எச்சரிக்கையாக இருப்பதுடன், இறைவழிபாட்டையும் மேற்கொள்வது நன்மை பயக்கும்

செவ்வாய்க்கு மேஷம்தான் மூலத்திரிகோண வீடாகும். ஆகவே அவர் வலிமையுடன் இருந்தால், லக்கினத்துடன் இரண்டு வீடுகளுக்கும் சேர்த்து இரட்டிப்பு நன்மைகளைச் செய்வார்.

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

26.7.25

Astrology - வம்பும், வழக்கும்!

Astrology -  வம்பும், வழக்கும்!

வம்பு, வழக்கு என்றால் யாருக்குத்தான் பிடிக்கும்? வம்பு, வழக்கு என்று எதுவும் இல்லாத நிலைதான் நம்மதியான நிலை!

ஆனால் விதி விடுமா? சிலரை அவர்கள் விரும்பாவிட்டாலும் தேவையில்லாத விவகாரங்களில் சிக்க வைத்துவிடும். மனிதர் நீதிமன்றத்திற்கு அலைய நேரிடும். 

பெரும்பாலான வீடுகளில் சொத்துத் தகராறு இருக்கும். சொத்து என்றாலே சிக்கல்தான் என்கிறீர்களா? நம் பெயரில் இருக்கும் சொத்துக்களில் நாம் இருக்கும்வரை சிக்கல் இல்லை. ஆனால் முன்னோர்கள் வைத்துவிட்டுப்போன சொத்துக்கள் என்றால் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உண்டு. உடன் பிறப்புக்கள், உறவினர்கள் என்று யார் மூலமாக வேண்டுமென்றாலும் சிக்கல் ஏற்பட வாய்ப்புண்டு. வம்பு, வழக்கு ஏற்படலாம்.

ஜாதகப்படி அதற்கு என்ன அமைப்பு - அதாவது வம்பு வழக்குகள் ஏற்பட என்ன அமைப்பு என்றும், ஒருவேளை அப்படி ஏற்பட்டால் அதில் நமக்கு வெற்றி கிடைக்க வழியுண்டா என்பதையும் இன்று பார்ப்போம்!
----------------------------------------------------------------------------------------
1. ஆறாம் வீடுதான் பிரச்சினைகளுக்கு உரிய வீடு
2. ஏழாம் வீடு (லக்கினத்திற்கு ஏழுதான்) எதிர்ப்பையும், முரண்பாடுகளையும் உண்டாக்கும்
3. எட்டாம் வீடுதான் சட்டச் சிக்கல்களால் நமக்கு ஏற்படும் மன உளைச்சல்களை அதிகப்படுத்தும். வருத்தங்களையும், அவமரியாதைகளையும் ஏற்படுத்தும்.
4. பன்னிரெண்டாம் வீடுதான் நமக்கு மேற்பட்ட சிக்கல்களால் ஏற்படும் நஷ்டங்களையும், விரையங்களையும் உண்டாக்கும்

ஆக அவைகள் உண்டாகட்டும். அதிலிருந்து நாம் மீண்டு வருவோமா அல்லது வெற்றி பெற்று எல்லாவற்றையும் தூளாக்குவோமா என்பதை பதினொன்றாம் வீடுதான் முடிவு செய்யும்.

பதினொன்றாம் வீடு ஆறிலிருந்து ஆறாம் வீடு. பன்னிரெண்டில் இருந்து பன்னிரெண்டாம் வீடு. இந்தப் பதினொன்றாம் வீடு அல்லது பதினொன்றாம் அதிபதி வலிமையாக இருந்தால், வழக்குகள் நம்மை ஒன்றும் செய்யாது. நம்மைக் காப்பாற்றும். நமக்கு வெற்றியைத் தேடித் தரும். அதை மனதில் கொள்க!

கிரகங்களில் செவ்வாயும், சனியும் வம்பு, வழக்கு ஏற்படும் காலங்களில் நமக்கு பாதகங்களை உண்டாக்கும் கிரகங்களாகும். புதன், சுக்கிரன், குரு ஆகிய கிரகங்கள் நமக்கு அந்நேரங்களில் கை கொடுக்கும் கிரகங்களாகும். அவைகளின் தசாபுத்திகள் அந்த நேரத்தில் நடக்கும் காலமென்றால் வழக்குகள் நமக்கு சாதகமாக முடியும். 

இவைகள் எல்லாம் பொது விதிகள் அதையும் மனதில் கொள்க!

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

24.7.25

Astrology - பேசுவது கிளியா பெண்ணரசி மொழியா?

Astrology -  பேசுவது கிளியா பெண்ணரசி மொழியா?

மொழி என்பது நம் வாழ்க்கையோடு பிண்ணிப் பிணைந்துள்ளது. பேசுவதாகட்டும், படிப்பதாகட்டும் அல்லது எழுதுவதாகட்டும் சிலருக்கு மட்டுமே மொழியில் ஆளுமை இருக்கும். சிலருக்கு ஒன்றிற்கு மேற்பட்ட மொழிகளில் அந்தத் திறமை இருக்கும்.

முதலில் நம் தாய்மொழி நமக்கு வசப்பட வேண்டும். அதற்கு அடுத்து உலக அளவில் அதிகம் பேசப்படும் அல்லது அதிகம் பேர்களுக்குத் தெரிந்த ஆங்கிலமும் வசப்பட வேண்டும். அதற்கு அடுத்து கூடுதலாக இன்னும் ஒரு மொழி தெரிந்திருந்தால், அவர்களால் சிறப்பாகச் செயல்படமுடியும். உதாரணத்திற்கு வட இந்திய மாநிலங்களில் பரவலாகப் பேசப்படும் இந்தி மொழியும் தெரிந்திருந்தால், அவர்களால் பிற மாநிலங்களுக்கும் சென்று பணியாற்ற முடியும். 

மொழியின் மேன்மை நாம் அடுத்த மாநிலங்களுக்குச் சென்று தங்கும்போதோ அல்லது அங்கே பயணிக்கும் போதே தெரியவரும்!

ஒருவர் பன்மொழிகளில் திறமை பெற்று விளங்க ஜாதகப்படி என்ன அமைப்பு வேண்டும்?

அதை இன்று பார்ப்போம்!
----------------------------------
1. குரு பகவான் லக்கினத்தில் இருந்தாலும் அல்லது ஜாதகனின் ஒன்பதாம் வீட்டைத் தன் பார்வையில் வைத்திருந்தாலும், ஜாதகனுக்குப் பன் மொழித் திறமை இருக்கும்.
2. வாக்கு ஸ்தானமான இரண்டாம் வீட்டில் கேது இருந்தாலும் ஜாதகனுக்கு மொழிகள் வசப்படும்.
3. இரண்டாம் வீட்டுக்காரன், தன்னுடைய வீட்டைத் தன் பார்வையில் வைத்திருந்தாலும் ஜாதகனுக்குப் பன்மொழித்திறமை இருக்கும்

மலேசியாவில் இருக்கும் தமிழர்களுக்கு மலேயா மொழியில் பேசத் தெரியும். அதுபோல இலங்கைத் தமிழர்களுக்கு சிங்கள மொழி தெரிந்திருக்கும். மும்பை, தில்லி போன்ற நகரகங்களில் இருக்கும் தமிழர்களுக்கு இந்தி மொழி தெரிந்திருக்கும். ஆனால் பிறருடன் பேசுவதற்கு மட்டுமே தெரிந்த நிலை என்பது, அடிப்படை நிலைதான். அந்த மொழிகளில் படிப்பதற்கும், தவறின்றி எழுதுவதற்கும் திறமை இருக்கும் நிலையில்தான் அந்த மொழி அவர்களுக்கு வசப்பட்டுள்ளதாக எடுத்துக்கொள்ள முடியும்.

ஆகவே ஒருவருக்குப் பன்மொழிகளில் பேசும் திறமை இருக்கலாம். எத்தனை மொழிகளில் ஆளுமை இருக்கிறது என்பதைத்தான் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஆகவே உங்களுக்கு எத்தனை மொழிகளில் ஆளுமை இருக்கிறது. ஜாதகப்படி அது கிடைத்துள்ளதா என்று பார்த்துக்கொள்ளுங்கள்

பேசுவது கிளியா பெண்ணரசி மொழியா? என்று ஒரு கவிஞர் அசத்தலாக பல்லவியைத் துவக்கினார். இன்னொரு கவிஞர் பெண்ணின் பார்வை ஒருகோடி அது பேசிடும் வார்த்தை பலகோடி என்று எழுதினார். பெண்ணின் கண்கள் பேசும் மொழிக்கெல்லாம் கணக்குக் கிடையாது. ஜாதகமும் கிடையாது:-)))))

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

23.7.25

Astrology - எது மேலானது ? கையா அல்லது காலா?

Astrology -  எது மேலானது ? கையா அல்லது காலா?

ஜோதிடம், கைரேகை சாஸ்திரம் ஆகிய இரண்டிலும் எது மேலானது? எது நம்பகத்தன்மை மிகுந்தது? எது உயர்வானது?

இரண்டுமே மேலானதுதான். பிரித்துச் சொல்ல முடியாது!

கைகள், கால்களில் எது மேலானது? அல்லது எது முக்கியமானது? என்று கேட்டால் இரண்டுமே மேலானதுதான். இரண்டு முக்கியமானதுதான். அவைகளில் ஒன்று இல்லாதவர்களை அல்லது ஒன்றில் குறைபாடு உள்ளவர்களைக்கேளுங்கள் அற்புதமாகப் பதில் தருவார்கள்.

மருத்துவத்தில் எது மேலானது அலோபதியா அல்லது ஹோமியோபதியா அல்லது ஆயுர்வேதமா அல்லது நாட்டு வைத்தியமா எது மேலானது என்று கேட்டால் என்னத்தைச் சொல்வது? ஒவ்வொன்றும் ஒவ்வொரு வழியில் உயர்ந்ததுதான்! அந்தத்துறையில் உள்ள விற்பன்னர்களின் (Experts) கையில் அவைகள் எல்லாமுமே மேலானதுதான்

பிறந்த நேரத்தில் தவறு இருந்தால், ஜாதகம் தவறாகப் போவதற்கு வாய்ப்பு உண்டு. ஆனால் கைரேகை தவறாகிப் போவதற்கு வாய்ப்பே இல்லை. நோ சான்ஸ்!

ஆனால் ஜோதிடத்தின் பிரம்மாண்டம் கைரேகை சாஸ்திரத்தில் இல்லை. அது மட்டும் உண்மை!
-----------------------------------------------------------------------------------------------
கைரேகை சாஸ்திரத்தில் மேதை ஒருவர் இருந்தார். உலகம் அறிந்த, உலகமே போற்றிய மனிதர் அவர்

அவருடைய பெயர் ’சீரோ’ (Cheiro)

வில்லியம் ஜான் வார்னர் என்பது அவரது முழுப்பெயர்.
வாழ்ந்த காலம்: 1.11.1866 முதல் 8.10.1936 வரை
சுமார் 70 ஆண்டு காலம் வாழ்ந்திருக்கிறார்.
ஐரீஷ்காரர்.
கைரேகை சாஸ்திரம், ஜோதிடம் எண்கணிதம் என்று எல்லாவற்ரையும் ஒருகை பார்த்தவர்.
வாழ்ந்த காலத்தில் பல உலகப்பிரமுகர்கள் அவருடைய அபிமானிகளாகவும், வாடிக்கையாளராகவும் இருந்தார்கள்.
அதிரடியாக பலரது எதிர்காலத்தைக் கணித்து துல்லியமாகச் சொல்லியவர் அவர்.
இந்தக் கலைகளை எல்லாம் தான் கற்றுத் தேர்ந்தது இந்தியாவில்தான். இந்தியர்களுக்கு என்றும் கடைமைப்பட்டுள்ளேன் என்று தன்னுடைய நூல்களில் குறிப்பிட்டுள்ளார்

இங்கிலாந்து மன்னர் குடும்பத்தின் பட்டத்து இளவரசின் கையைப் பார்த்துவிட்டு, இவன் அரியணை ஏறமாட்டான் என்று அதிரும்படியாகச் சொன்னவர் அவர். அதுபோலவே நடந்தது. தன் காதலிக்காக நாட்டையே துறந்துவிட்டுச் சென்ற இளவரசன் அவன்.

அதுபோல தன் மரணத்தைத் துல்லியமாகச் சொன்னவர் அவர். தன் நண்பர்கள் அனைவரையும் அழைத்து வீட்டில் பெரிய விருந்து கொடுத்துவிட்டு, அனைவரிடமும் விடைபெற்றவர் அவர். அன்று இரவு தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்து விட்டது.

இதுபோன்று அவரைப்பற்றிப் பல செய்திகள் உள்ளன. பிறகு ஒரு நாள் அதை விரிவாக எழுதுகிறேன்

அன்புடன்
வாத்தியார்






























வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22.7.25

Astrology - ஒழுக்கமற்ற தன்மைக்கான (immoral) ஜாதக அமைப்பு என்ன?

Astrology -  ஒழுக்கமற்ற தன்மைக்கான (immoral) ஜாதக அமைப்பு என்ன?

"ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் 
உயிரினும் ஓம்பப்படும்" 
- திருவள்ளுவர்.

(ஒழுக்கம் எல்லோர்க்கும் சிறப்பைத் தருவதால், அவ்வொழுக்கம் உயிரைவிட மேலானதாகப் பேணிக் காக்கப்படும்)

முற்காலத்தில் எல்லா மக்களும் ஒழுக்கத்தை உயிரினும் மேலானதாகக் கருதி, அதைக் கடைப்பிடித்தார்கள். ஆணோ அல்லது பெண்ணோ ஒழுக்கத்தை மீறினால் தகுந்த தண்டனை கொடுத்தார்கள். சமுதாயத்தை விட்டு ஒதுக்கியும் வைத்தார்கள் ஆனால் அப்படி இருந்தும் அந்தக் காலத்திலும் தப்பு செய்தவர்கள் இருந்தார்கள்.

ஆனால் இந்தக் காலத்தில் ஒழுக்கத்தை மீறுபவர்களைத்  தண்டிப்பதற்கு யாரும் இல்லை. எந்த அமைப்பும் இல்லை. அதிகம் படித்தவர்களாகவோ அல்லது செல்வந்தர்களாகவோ இருந்தால் அவர்கள் எந்த வகையில் ஒழுக்கத்தை மீறினாலும் அது தப்பில்லை என்ற நிலையே இன்று காணப்படுகிறது.

தென் இந்தியாவில் உள்ள பெரிய நகரம் இன்றில் கருத்தடை மாத்திரைகள்தான் அதிகமாக விற்கிறதாம். பல இளம் பெண்களின் கைப்பையில் லிப் ஸ்டிக்குடன் கருத்தடை மாத்திரைகளும் தவறாமல் இருக்குமாம். எப்படி இருக்கிறது நிலைமை பாருங்கள்!
---------------------------------------------------------------
ஒழுக்கமற்றவர்களை இம்மாரல் கேரக்டர் என்பார்கள்.

immoral = wicked, sinful, ஒழுக்கமற்ற, கெட்ட, தீய, பாவகரமான, நெறியற்ற என்று பொருள்
immorality:
1. The quality or condition of being immoral.
2.An immoral act or practice.
3.The quality of not being in accord with standards of right or good conduct

சரி, அதற்கான ஜாதக அமைப்பு என்ன?

சுக்கிரனும், செவ்வாயும் சேர்ந்தால், அல்லது ஒருவருக்கொருவர் பார்வையில் இருந்தால், ஜாதகனின் அல்லது ஜாதகியின் ஒழுக்கத்திற்கு வேட்டு வைத்துவிடுவார்கள். வேட்டு வைப்பது என்றால் என்னவென்று தெரியுமல்லவா?

Venus and Mars cause immorality. 

ஏழாம் வீடு இவ்விருகிரகத்தாலும் பாதிக்கபெற்றிருந்தால், ஜாதகன் அல்லது ஜாதகி ஒழுக்கமற்றவர்களாக இருப்பார்கள்.

பத்தாம் வீடு அல்லது பத்தாம் வீட்டின் அதிபதி பாதிப்பிற்கு உள்ளாகியிருந்தாலும் ஜாதகன் அல்லது ஜாதகி ஒழுக்கமற்ற செயல்களைச் செய்து கொண்டிருப்பார்கள்.
---------------------------------------------------------------
மனிதர்களில் இரண்டு வகை:

1.இப்படித்தான் வாழ வேண்டும் என்ற நெறிமுறைகளுடன் வாழ்பவர்கள் ஒரு வகை
2.எப்படி வேண்டுமென்றாலும் வாழலாம் என்பவர்கள் ஒரு வகை

இரண்டாம் வகை ஆசாமிகளிடம் நீங்கள் கேட்டால் என்ன சொல்வார்கள்?

What is wrong in it yaar? Life is short, enjoy it yaar என்பார்கள்

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------------

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

21.7.25

Astrology - ஆசாமி உயிரோடு இருக்கிறானா அல்லது இல்லையா?

Astrology -  ஆசாமி உயிரோடு இருக்கிறானா அல்லது இல்லையா?

ஒரு ஜாதகத்தைப் பார்த்தவுடன் ஜாதகன் உயிரோடு இருக்கிறானா அல்லது டிக்கெட் வாங்கிக்கொண்டு பரலோகம் போய்விட்டானா என்று சட்டென்று கண்டு பிடிக்க முடியுமா?

ஆன்லைனில் சட்டென்று சினிமா டிக்கெட் அல்லது இரயில் டிக்கெட் வாங்குவதுபோல ஜோதிடத்தில் எல்லாவற்றிற்கும் சட்டென்ற வழி இருக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள்.

ஒரு ஜோதிடரிம் ஒரு ஜாதகத்தைக் கொடுத்துப் பலன் கேட்கும்போது, அவர் உங்கள் மேல் உள்ள நம்பிக்கையில் நீங்கள் கொண்டு வந்திருக்கும் அல்லது எடுத்துக் கொடுத்திருக்கும் ஜாதகம் உயிரோடு இருப்பவனின் ஜாதகம் என்ற நம்பிக்கையில்தான் அதைப் புரட்டிப் பார்ப்பார். நடைமுறை வழக்கமும் அதுதான்.

சில அகராதி பிடித்தவர்கள், ஜோதிடரைப் பரிசோதித்துப்பார்ப்பதற்காக (to check up the astrologer) சமயங்களில் அடாவடித்தனமாக அப்படிச் செய்வதும் உண்டு. அதாவது செத்துப்போன தங்கள் உறவினரின் ஜாதகத்தைக் கொடுத்து, பலன் கேட்பார்கள்.

இஷ்ட தேவதையின் அருள் உள்ளவர்கள், தேவி உபாசகர்கள், மந்திர சித்தி உள்ளவர்கள், அதாவது inspiration power உள்ளவர்கள். பார்த்த உடனேயே கண்டுபிடித்து, கொண்டு வந்தவனை ஒரு விளாசு விளாசி, அனுப்பிவைத்துவிடுவார்கள்.

கோவை புறநகர் பகுதியான எட்டிமடையில், முன்பு (அக்காலத்தில்) ஒரு ஜோதிடர் இருந்தார். அவர் ஜாதகத்தைக் கையில் வாங்கியவுடனேயே கண்டு பிடித்துவிடுவார். அத்துடன் வந்தவனை ஒரு பார்வை பார்த்து ஒடச் செய்துவிடுவார்.

பொதுவாக 90 சதவிகிதம், சொன்னால்தான், எட்டாம் வீட்டை அலசி ஜாதகனின் ஆயுசைக் கணித்து, இப்போது அவன் இருக்கிறானா அல்லது இல்லையா என்று சொல்லுவார்கள். அதையும் சொல்லி, வந்தவனிடம் கேட்டு உறுதி செய்து கொள்வார்கள்.

ஆகவே, தெய்வத்தையும், ஜோதிடர்களையும் சோதனைக்கு உள்ளாக்காதீர்கள். ஜோதிடத்தில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால் விட்டுவிடுங்கள்.

சரக்கடித்துவிட்டு, உத்திரத்தைப் பார்த்தவாறு வீட்டிலேயே படுத்துக்கொள்ளுங்கள். மற்றவர்களை நிம்மதியாக இருக்கவிடுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

20.7.25

Astrology : படிப்பா, ட்ராப் அவுட்டா?

Astrology : படிப்பா, ட்ராப் அவுட்டா?

முற்காலத்தில் முனிவர்கள் ஜாதகங்களுக்கான நெறிமுறைகளை வகுத்தபோது இருந்த கல்விக்கூடங்கள் வேறு இப்போது உள்ள கல்வி அமைப்புக்கள் வேறு.

அன்று திண்ணைப் பள்ளிக்கூடங்களும், குருகுலமும் மட்டுமே இருந்தன. கல்வி இலவசமாக இருந்தது. இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. கல்வி வியாபாரமாகிவிட்டது.

கலை, அறிவியல், வணிகம், மருத்துவம்,பொறியியல், விஞ்ஞானம் என்று பல துறைக்கல்விகள். அதிலும் தலை சுற்றும் அளவிற்குப் பல பிரிவுகள் உள்ளன.

பொறியியலில் மட்டும் 36 பிரிவுகள் உள்ளன. நான் படித்த காலத்தில் பொறியியலில் 3 பிரிவுகள் மட்டுமே இருந்தன. (சிவில், எலக்ட்ரிகல், மெக்கானிகல்) மருத்துவத்தில் 60 வகையான மருத்துவப் படிப்புகள் உள்ளன. மருந்தை விற்பதற்குக்கூட  இன்று படித்திருக்க வேண்டும். நிர்வாகவியலில் கூட பல பட்டப் படிப்புகள் உள்ளன. விவரித்தால் தலை சுற்றும்.ஏன் அனுபவ்த்தில் செய்யும் விவசாயம் மற்றும் சமையலுக்குக்கூட இப்போது படிப்புக்கள் வந்துவிட்டன.

அதனால் ஒரு ஜாதகத்தைப் பார்த்தால் பையன் கல்வியில் தேறுவானா அல்லது தேற மாட்டானா என்பதை மட்டும் சொல்லலாம். என்ன படிப்புப் படிப்பான் - எங்கே போய் உட்கார்ந்து பெஞ்சைத் தேய்ப்பான் என்பதை எல்லாம் கோடிட்டுக் காட்டலாமே தவிர துல்லியமாகச் சொல்ல முடியாது!
----------------------------------------------------
ஒரு ஜாதகனின் கல்வித் தகுதியை அல்லது கல்வியால் பெறவிருக்கும் மேன்மையை அலச முடியுமா?

நான்காம் வீடு கல்வி
ஐந்தாம் வீடு நுண்ணறிவு
இரண்டாம் வீடு பேச்சுத் திறமை

இம்மூன்று வீடுகளையும் அலச வேண்டும்.

அத்துடன் வித்யாகாரகன் புதன், நுண்ணறிவிற்கான காரகன் குரு, மருத்துவப் படிப்பிற்கான காரகன் செவ்வாய், தொழில்காரகன் சனி, கலைக்கான காரகன் சுக்கிரன் ஆகிய்யோரின் நிலைமையையும் அலச வேண்டும்!
-----------------------------------------------------
இந்த வீடுகளுக்கு உரிய அதிபதிகள், காரகர்கள், ஆகியோரின் வலிமை, பெறும் பார்வை, சேர்க்கை என்று எல்லாவற்றையும் அலச வேண்டும். அனுபவத்தில் நிறைய ஜாதகங்களைப் பார்த்துத் தெளிந்தவர்கள் மட்டுமே ‘டக்’ என்று சொல்லுவார்கள். பையன் டாக்டராக வருவான் அல்லது பொறியாளராக வருவான் என்று!

அதற்கு இன்னும் பல காம்பினேஷன்கள் உள்ளன. அது முழுச் சாப்பாடு. அதை இன்னொரு நாள் சமைத்து விரிவாக பறிமாறுகிறேன். அதுவரை பொறுத்திருங்கள்

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18.7.25

Astrology - பாகற்காயின் குணம் எப்போது மாறும்?

Astrology -  பாகற்காயின் குணம் எப்போது மாறும்?

ஒரு சந்யாசி இருந்தார். உண்மையிலேயே எல்லாவற்றையும் துறந்தவர். அவர் மேலுள்ள மதிப்பினால், ஊர் மக்களே தங்குவதற்கு ஒரு இடத்துடன் பெரிய ஓடுகள் வேய்ந்த வீட்டையும் கொடுத்திருந்தார்கள். ஆசிரமம் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

ஆசிரமத்திற்குப் பின்புறம் பெரிய ஆறு ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. ஆசிரமம், மரம், செடி கொடிகள் நிறைந்து ரம்மியமாக இருக்கும்.
ஆசிரமத்தில் இருந்த அரச மரத்தடியில் ஒரு பிள்ளையாரைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டுக்கொண்டிருந்தார். உள்ளூர் மக்களும் வந்து வழிபடுவார்கள். உணவிற்கு வேண்டிய பொருட்கள் அனைத்தையும் கொடுப்பார்கள்

ஆசிரமத்தில் இருந்த கூறை வேய்ந்த மேடை ஒன்றில் இருந்து வாரம் இரண்டு முறை மக்களுக்கு நல்வழியில் நடக்க போதனைகள் செய்வார். அவருக்கு மூன்று சீடர்கள் இருந்தார்கள்.

ஒரு நாள் அந்த சீடர்கள் மூவரும், சந்நியாசியிடன் வந்து,” சுவாமி, நாங்கள் மூன்று நாட்கள் தீர்த்த யாத்திரை செல்ல விரும்புகிறோம்.அருகில் உள்ள புண்ணிய நதிகளில் எல்லாம் நீராடிவிட்டு வர விரும்புகிறோம். நீங்களும் வர வேண்டும்” என்றார்கள்

"நம் ஊர் ஆற்றிற்கு என்ன ஆயிற்று?” என்றார்.

“அதில்தான் தினமும் நீராடுகிறோமே - வேறு புண்ணிய நதிகளிலும் நீராடிவிட்டு வர விரும்புகிறோம்” என்றார்கள்

”நான் வரவில்லை. நீங்கள் போய் வாருங்கள்” என்றார்

அவர்கள் வலியுறுத்தி மீண்டும் மீண்டும் சொல்லவே, அருகில் இருந்த பாகற்காய் கொடி ஒன்றைக் காட்டியதுடன், ஒரு காயைப் பறித்துக்கொண்டு வரும்படி சொன்னார். அப்படியே செய்தார்கள்

“இந்தக் காயை நானாக நினைத்துக்கொண்டு நீங்கள் தீர்த்தமாடும், நதிகளிலும், ஊருணிகளிலும் இந்தக் காயை நமச்சிவாய என்று சொல்லி மூன்று முறை முக்கி எடுத்துக்கொண்டு வாருங்கள்” என்றார்
  
                                   ++++++++++++++++++++++++

மூன்று நாட்கள் சென்றன. யாத்திரை முடிந்து திரும்பிய அவர்கள், குருவிடம் வந்து தங்கள் பயண அனுபவத்தை விவரித்தார்கள்.

“பாகற்காய் என்ன ஆயிற்று?” என்றார்

“நீங்கள் சொன்னபடி அதற்கு நீராட்டி, பத்திரமாகக் கொண்டு வந்திருக்கிறோம் சுவாமி” என்றார்கள்

“இன்று சமையலில் அதையும் சேர்த்துவிடுங்கள்” என்றார்.

                                   +++++++++++++++++++++++

மதியம் தன் சீடர்களுடன் சேர்ந்து உணவருந்தும்போது சுவாமிஜி கேட்டார்: “பாகற்காய் எப்படி இருக்கிறது?”

சீடர்கள் மூவரும் ஒருமித்த குரலில் சொன்னார்கள்: “எப்போதும் போலவே கசப்பாய் இருக்கிறது.ஒன்றும் வித்தியாசம் தெரியவில்லை சுவாமி.”

சுவாமிஜி முத்தாய்ப்பாய்ச் சொன்னார்: “எத்தனை புண்ணிய நதிகளில் குளித்தாலும் பாகற்காயின் குணம் மாறவில்லை அல்லவா? அதுபோல எத்தனை புண்ணிய நதிகளில் குளித்தாலும், மனிதனின் அடிப்படைக் குணம் மாறாது!”

பாகற்காயின் குணம் எப்போதும் மாறாது. மனிதனின் அடிப்படைக் குணமும் எப்போதும் மாறாது. கஞ்சன் எப்போதும் கஞ்சன்தான். காமுகன் எப்போதும் காமுகன்தான்

                                   +++++++++++++++++++++++ 
தீய கிரகங்களுக்கும் அப்படி அடிப்படைக் குணம் உண்டு. தீய கிரகங்கள் தீமையையே பயக்கும். செய்யும்.

பாகற்காயுடன் வெல்லம் போட்டு சமைத்து, அதன் கசப்பைக் குறைப்பார்கள். அதுபோல தீய கிரகங்கள் சுபக் கிரகங்களுடன் சேரும் போது அல்லது பார்வை பெறும்போது, தீமைகள் பெரும் அளவிற்குக் குறையும்.

ஒரு தீய கிரகம் நீசமடைந்த நிலையில் ஒரு நல்ல வீட்டில் இருப்பது நல்லதா? அல்லது ஒரு தீய கிரகம் வலிமை இழந்த நிலையில் ஒரு தீய வீட்டில் இருப்பது நல்லதா? எது நல்லது?

ஒரு வீக்காக உள்ள தீய கிரகம் எந்த வீட்டில் இருந்தாலும் - அதாவது கேந்திர கோணங்கள் போன்ற நல்ல வீட்டில் இருந்தாலும் அல்லது 3, 6, 8, 12 போன்ற தீய வீட்டில் இருந்தாலும் அந்த வீட்டைக் கெடுக்கவே செய்வான். அதுவும் வலிமையுள்ள ஒரு தீயவனைவிட அதிகமாகவே கெடுதல் செய்வான்.

A weak evil planet in a good house or a bad house, wherever he may be, will spoil the house more than a strong evil planet. 
Evil planets, whereever they may be, spoil the house they occupy. The weaker they are will be more harmful!
                                   -----------------------------------

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

17.7.25

Astrology முதல் ஓவரிலேயே நான்கு விக்கெட்டுகளைப் பறிகொடுத்தால் எப்படி இருக்கும்?

Astrology முதல் ஓவரிலேயே நான்கு விக்கெட்டுகளைப் பறிகொடுத்தால் எப்படி இருக்கும்?

ஜாதகத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட கிரகங்கள் நீசமாக இருந்தால் என்ன ஆகும்?

காரில் இரண்டு டயர்கள் பஞ்சராக இருந்தால் என்ன ஆகும்?

காருக்காவது யாராவது ஆளைப் பிடித்து பஞ்சர்களை ஒட்ட வைத்துவிடலாம்.

கிரகங்களின் நீசத் தன்மையை எப்படி மாற்றமுடியும்?

முடியாது!

என்ன ஆகும் என்று பார்க்கலாம். 

புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, மற்றும் சனி ஆகிய ஐந்து கிரகங்களில் இரண்டு கிரகங்கள் நீசமானால் ஜாதகத்தில் 4 வீடுகள் அவுட்டாகிவிடும்.

கிரிக்கெட்டில் முதல் ஒவரிலேயே 4 விக்கெட்டுகள் சாய்ந்தால், அந்த டீம் கேப்டனின் மன நிலை எப்படி இருக்கும்? அப்படியாகிவிடும் ஜாதகனின் நிலைமை.

அந்த 5 கிரகங்களும் தலா இரண்டு வீடுகளுக்கு ஓனர்கள் (அதிபதிகள்) அதை நினைவில் வையுங்கள்.

எனக்குத் தெரிந்த மிதுன லக்கின ஜாதகன் ஒருவனின் ஜாதகத்தில் புதனும் நீசம், குருவும் நீசம்

அந்த ஜாதகத்தில் புதனுக்கு இரண்டு வீடுகள் 1. லக்கினம் 2 நான்காம் வீடு (கல்வி, சுக ஸ்தானம்)
அதே ஜாதகத்தில் குருவிற்கு இரண்டு வீடுகள் 1. ஏழாம் வீடு (மனைவி) , 2 பத்தாம் வீடு (தொழில்)

1. லக்கினாதிபதி நீசமானதால் ஆசாமி குணக்கேடான ஆள், துக்கிரிகளோடு நட்பு, எல்லா கெட்ட பழக்கங்களையும் 22 வயதிற்குள் கற்றுக் கொண்டு விட்டான். 
2..நான்காம் வீட்டதிபதி நீசமானதால் தத்தித்தத்தி பள்ளி இறுதியாண்டுவரை படித்தான். அதற்குப் பிறகு படிக்கவில்லை. படிப்பு ஏறவில்லை
3. பத்தாம் வீட்டுக்காரன் நீசமானதால்,  சரியான வேலை கிடைக்கவில்லை,  தன்னுடைய தந்தையின் அடக்குக் கடையிலேயே வேலை
 பார்த்தான் (எடுபிடி வேலை & காவல் காக்கும் வேலை)
4. ஏழாம் வீட்டுக் காரன் நீசமடைந்ததால், கஷ்டப்பட்டு செய்து வைத்த திருமணத்தின் மூலம் கைக்குக் கிடைத்த பெண் நிலைக்கவில்லை. இவனுடைய அட்டூழியம் தாங்காமல் பிறந்த வீட்டிற்கே அவள் போய்விட்டாள். திரும்பிவர மறுத்துவிட்டாள்

சரி, சூரியனும், சந்திரனும் நீசமானால்?

ஒரு டீம் நல்ல பேட்ஸ்மேன்களே இல்லாமல் ஆடப்போவதைப் போன்றது அது!

சூரியன் தந்தைக்கு உரிய கிரகம் மற்றும் உடல் நலத்திற்கு உரிய கிரகம்
சந்திரன் தாய்க்கு உரிய கிரகம் மற்றும் மனநலத்திற்கு உரிய கிரகம்
அவை இரண்டு நீசமானால்

 எந்த வீட்டிற்கு அதிபதியோ அந்த வீடும் ஊற்றிக்கொண்டுவிடும். அதையும் மனதில் வையுங்கள்!

விளக்கம் போதுமா?
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14.7.25

Astrology -கையில் காசு தங்குமா? தங்காதா?

Astrology -கையில் காசு தங்குமா? தங்காதா?

”வாத்தியார், இரண்டில் சனி இருந்தால் அந்த ஜாதகனுடைய கை ஓட்டைக் கை - கையில் காசு தங்காது” என்று சொல்கிறர்களே - அது உண்மையா?”

”அது உண்மையல்ல. வேறு அமைப்புக்களும் உள்ளன. அது தெரியாமல் ஓட்டைக் கை என்று சொல்வது தவறு”

“கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்களேன்!”
-------------------------------------------------
இரண்டாம் வீட்டில் தீய கிரகங்கள் குடியிருந்தால் அதாவது சனி அல்லது ராகு அல்லது கேது போன்ற கிரகங்கள் அமர்ந்திருந்தால் 
அந்த வீடு பாதிப்பிற்கு உள்ளாகும்.

இரண்டாம் வீட்டிற்கு மூன்று இலாக்காக்கள்.

பணத்திற்கான இடம் அது (House of finance)
குடும்ப வாழ்க்கைக்கான இடமும் அது(House of Family)
அத்துடன் வாக்கு ஸ்தானத்திற்கான இடமும் அதுதான் (House of speech)

அதில் ஒரு இலாக்கா பாதிக்கப்படும்

ஏன் அப்படி? சனி போன்ற தீய கிரகங்கள் இருந்தால் அந்த மூன்று இலாக்காக்களுமே பாதிப்பிற்கு உள்ளாகாதா?

ஆகாது. அந்த வீட்டுக்காரன் முக்கியம். அவன் நன்றாக, வலிமையாக இருந்தால் சனியின் பாதிப்பை எல்லாம் ஓரம்கட்டிவிட்டு நன்மைகளைச்  செய்வான். அத்துடன் காரகனும் (authority) முக்கியம்

பணத்திற்குக் காரகன் குரு
மனையாளுடன் கூடி வாழும் குடும்ப வாழ்க்கைக்குக் காரகன் சுக்கிரன்
அகட விகட சாமர்த்தியமான பேச்சிற்குக் காரகன் புதன்

இந்த மூவரில் யார் கெட்டிருந்தாலும் அந்த இலாக்கா சரிவர வேலை செய்யாது!

ஆகவே இவை அனைத்தையும் பரிசீலிக்க வேண்டும்!
-------------------------------------------------------

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13.7.25

Astrology முற்பிறவி, கர்மவினை என்றெல்லாம் சொல்லி ஏன் பயமுறுத்துகிறீர்கள்?

Astrology   முற்பிறவி, கர்மவினை என்றெல்லாம் சொல்லி  ஏன் பயமுறுத்துகிறீர்கள்? 

”இன்றைய வாழ்க்கையில் ஏன் இத்தனை துயரங்கள், துன்பங்கள், தொல்லைகள் என்றால், ஜாதகப்படி முற்பிறவியில் செய்த நன்மை தீமைகளுக்கு ஏற்பவே (உரியதாகவே) அடுத்த பிறவி அமையும். ஆகவே முற்பிறவியின் கூட்டுப் பலன் தான் இப்பிறவி என்று சொல்கிறார்கள். ஒரே வார்த்தையில் கர்மவினை என்கிறார்கள். வாத்தியார் என்னடாவென்றால் வாங்கி வந்த வரம் என்கிறார். அப்படி முற்பிறவியில் என்னதான் செய்தேன்? அதைத் தெரிந்து கொள்ள வழி இருக்கிறதா?”

”இருக்கிறது. ஒருவரின் ஜாதகம் அவர் முற்பிறவியில் செய்த நன்மை, தீமைகளைக் கோடிட்டுக் காட்டும்.”

”எப்படி?”

”கிரகங்கள் எல்லாம் வலுவிழந்து இருந்தாலும் அல்லது 3, 6, 8, 12 என்று தீய வீடுகளில் போய் படுத்திருந்தாலும்,  ஜாதகன் முற்பிறவியில் புண்ணியத்தைவிட பாபங்களையே (பாவங்களையே) அதிகமாகச் செய்திருக்கிறான் என்று தெரிந்து கொள்ளலாம். சில கிரகங்கள், குறிப்பாக சுபக் கிரகங்களான, குரு, சந்திரன் மற்றும் சுக்கிரன் ஆகியவை ஜாதகத்தில் வலுவாக இருந்தால் ஜாதகன் முற்பிறவியில் புண்ணியங்களை, தர்மங்களை அதிகமாகச் செய்திருக்கிறான் என்றும் தெரிந்து கொள்ளலாம்.”

”கோடிட்டுக் காட்டாமல், விளக்கமாகச் சொல்ல வழி இல்லையா?”

”இருக்கிறது. அதற்கு பிரசன்ன ஜோதிடம் உங்களுக்கு உதவும்.”

”பிரசன்ன ஜோதிடமா? அது என்ன புதுக் கரடி?

”நடைமுறை ஜோதிடத்தைப்போல, அதுவும் ஜோதிடத்தின் வேறு ஒரு பகுதி. நடைமுறை ஜோதிடத்தில் இருந்து அது முற்றிலும் மாறு பட்டது. பிரசன்ன ஜோதிடம் மிகவும் விரிவானது. பிறகு ஒரு சமயம், நேரம் கிடைக்கும்போது, அதை விரிவாக - தொடராக எழுதலாம் என்றுள்ளேன். என்னிடம் பழைய நூல் ஒன்று உள்ளது. அதைப் படித்தால் மண்டையைப் பிய்த்துக்கொள்ள வேண்டும். ஏராளமான  வடமொழிச் சொற்கள்.முதலில் நான் ஒரு வடமொழி தெரிந்த வாத்தியாரை வைத்து அந்தச் சொற்களுக்கெல்லாம் பொருளைத் தெரிந்து கொள்ள வேண்டும். பிறகுதான் விரிவு படுத்தி எழுத முடியும். என் நடையில் அனைவருக்கும் புரியும்படி எழுத முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால் தற்சமயம் நேரமில்லை. ஒரு ஆண்டு பொறுத்துக்கொள்ளுங்கள்.
----------------------------------------------------------------------
Prasanna or Horary Astrology

The Prasanna branch is another unique division of Vedic Astrology. When a person asks a question to an astrologer, based on the time at which the question is asked, a horoscope is made for that time and date. With the help of this chart the astrologer predicts about the events that are going to take place. There are several types of Prasanna systems and it is almost a separate science by itself. Normally the Prasanna chart is studied along with the birth chart to give an additional dimension to predict the results correctly.

Horary Astrology is based on Hora or Hour.  Its principles are  similar to the principles of Natal Astrology.  Some factors which are unknown to Natal Astrology is known to Horary. For instance, a person may not have his time of birth. So he asks the Astrologer  questions and these questions are answered by Horary.

Karma =  The consequences of our past actions in this and previous lifetimes.
-------------------------------------------------------------------
முற்பிறவி

பிரசன்ன ஜோதிடத்தின் இன்னொரு பிரிவில், முற்பிறவியைக் குறித்து தெரிந்து கொள்ளும் வழி உள்ளது.
 
பிரசன்ன ஜோதிடத்தில், முற்பிறவியைக் குறித்து கேள்வி கேட்கப்படும் நேரத்தை வைத்து அந்த நிமிடத்திற்கான ஜாதகத்தைக் கணிப்பார்கள்.  கணிக்கப்பெற்ற ஜாதகத்தில், கீழ்க்கண்டவாறு வீடுகளை எடுத்துக் கொண்டு, ஜாதகனின் முற்பிறவியைச் சொல்வார்கள். முற்பிறவியில் அவன் செய்த சேட்டைகளூம், தேட்டைகளும், போட்ட ஆட்டங்களும், ஆட்டைகளும் தெரியவரும்.

புண்ணிய ஆத்மாக்களின் ஜாதகத்தில் செய்த புண்ணியங்களும் தெரியவரும்!

அவ்வாறு கணிக்கப்பெற்ற முற்பிறவிக்கான பிரசன்ன ஜாதகத்தில் உள்ள 9ஆம் வீடுதான் லக்கினம்: 
அதை வைத்து கர்மாவின் சுயரூபத்தைச் சொல்வார்கள் (Karma Swarupa)
10ம் வீடு கர்ம தானம் (karma Dhana)
11ம் வீடு கர்ம சகாயம் (karma Sahaya)
12ம் வீடு கர்ம அதிகரணா (Karma Adhikarana)
1ம் வீடு கர்ம பூதவஸ்து (Karma Bhutha Vasthu)
2ம் வீடு கர்ம நாசகர்னா (Karma Nasa karana)
3ம் வீடு கர்ம சஹசார்யம் (Karma sahachari)
4ம் வீடு கர்மயூஸ் (Karmayus)
5ம் வீடு கர்ம பாக்கியம் (Karma Bhagya)
6ம் வீடு கர்மவியாபாரம் (Karma Vyapara)
7ம் வீடு கர்ம லாபம் (Karma Labha)
8ம் வீடு கர்மவியாயா (Karma Vyaya)

இதற்கெல்லாம் அர்த்தத்தை (பொருளை) நம் பெங்களூரு அம்மையார்தான் சொல்ல வேண்டும்! பின்னூட்டத்தில் சொல்வார்கள். பொறுத்திருங்கள்!

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

9.7.25

Astrology - அறுவை சிகிச்சை யாருக்கு, எப்போது உண்டாகும்?


Astrology -  அறுவை சிகிச்சை யாருக்கு, எப்போது உண்டாகும்?

அறுவை சிகிச்சை (Surgery) என்றால் யாருக்குத்தான் பயம் இல்லை?

Surgery is an act of performing surgery may be called a surgical procedure, operation, or simply surgery. In this context, the verb operate means to perform surgery. 

எத்தனை மன திடம் இருந்தாலும், இன்றைய சூழ்நிலையில் நிலவும் அசாத்திய மருத்துவமனைக் கட்டணங்களுக்கு எங்கே போவது? பணம் இருப்பவனை விட்டுத்தள்ளுங்கள். போதிய பணம் இல்லாதவன் என்ன செய்வான்? யாரிடமாவது கடன் வாங்க வேண்டும் அல்லது உறவினர்கள் / நண்பர்களிடம் கையேந்த வேண்டு்ம். அந்த நிலைமை பொருள் இல்லாதவனுக்கு வரக்கூடாது. ஏன் ஒருவருக்கும் வரக்கூடாது. இறைவனைப் பிரார்த்தனை செய்து கொண்டு மேலே படியுங்கள்.

ஜாதகப்படி அதற்கான வாய்ப்பு உண்டா என்று தெரிந்து கொள்வது எப்படி?

அதை இன்று பார்ப்போம்!

எட்டாம் வீட்டில் தேமே என்று தனித்திருக்கும் தீய கிரகங்களால், அந்தத் தீமை உண்டாகாது.

சனி லக்கினாதிபதியாகவும், எட்டாம் வீட்டில் அமர்ந்திருக்கவும், அத்துடன் ஆறாம் அதிபதியைப் பார்த்துத் தொலைக்கவும் செய்யும் நிலையில், அப்படி அமர்ந்திருக்கும் சனியைச் செவ்வாய் தன் பார்வையில் வைத்திருந்தால், ஜாதகனுக்கு ஒரு நாள் அறுவை சிகிச்சைக்கு உட்பட வேண்டிய நிலைமை ஏற்படும்.

ஒரு தீய கிரகம் இன்னொரு தீய கிரகத்தினால் பாதிக்கப்பெற்ற நிலையில் - அதாவது சேர்க்கை அல்லது பார்வையால் - பாதிக்கப்பெற்ற நிலையில், ஜாதகத்தில் எந்த இடத்தில் இருந்தாலும், ஜாதகன் ஒரு நாள் அறுவை சிகிச்சைக்கு உட்பட நேரிடும். உதாரணம் ராகு, செவ்வாயின் பார்வையைப் பெற்று இருக்கும் நிலையில், ஜாதகனுக்கு சின்னதாகவோ அல்லது பெரியதாகவோ ஒரு முறை அறுவை சிகிச்சை நடக்கும். அது அவைகள் இருக்கும் இடத்தை வைத்து, அறுவை சிகிச்சைக்கு உட்பட இருக்கும் உடலின் அவயங்கள் மாறுபடும்

அன்புடன்,
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8.7.25

Astrology - பஞ்சாங்கக் குறிப்புக்களால் என்ன பலன்?

Astrology - பஞ்சாங்கக் குறிப்புக்களால் என்ன பலன்?

பஞ்சாங்கத்தில், நாள், நட்சத்திரம், திதி, யோகம், கரணம் என்று ஒவ்வொரு நாளுக்கும் குறிப்பிடப்பெற்றிருக்கும். அவற்றிற்கு
உரிய பொருள் என்ன என்பதைப் பற்றி முன்பே பதிவுகளில் எழுதியுள்ளேன்.

நாளை வைத்துத்தான் என்ன கிழமையில் நீங்கள் பிறந்தீர்கள் என்று தெரியும். நட்சத்திரத்தை வைத்துத்தான் நீங்கள் பிறந்த ராசி தெரியும். திதியை வைத்துத்தான் உங்கள் வீட்டில் உள்ள முன்னோர்கள் இறந்த நாள் தெரியவரும். அமாவாசை, பெளர்ணமி எல்லாம் தெரியவரும்.

அதுபோல யோகமும் முக்கியம். நீங்கள் அன்று செய்யும் செயல்கள் முடியுமா அல்லது ஊற்றிக்கொள்ளுமா? என்று தெரியவரும்.

யோகங்கள், அமிர்த யோகம், சித்த யோகம், மரண யோகம் என்று மூன்று வகைப்படும். மரணயோகத்தன்று செய்யும் செயல்கள் திருப்தியாக முடியாது. சில செயல்கள் ஊற்றிக்கொள்வதோடு உங்களை அழைக்கழித்துவிடும்.

எனக்கு தெரிந்த உறவினர் ஒருவருக்கு, மரண யோகத்தன்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு, அன்பர் வீடு திரும்பவில்லை. அவுட். மரணமடைந்துவிட்டார். மேலே சென்று விட்டார்.

மரண யோகத்தன்று யாருக்காவது கடன் கொடுத்தீர்கள் என்றால் பணம் திரும்ப வராது. காந்தி கணக்கில் எழுதிக் கதையை முடிக்க வேண்டியதாக இருக்கும்.

திருமண முகூர்த்த நாட்கள் எல்லாம் மரணயோக தினத்தன்று இருக்காது. வேண்டுமென்றால் பரிசோதித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.

Routine work எனப்படும் அன்றாட வேலைகளைச் செய்வதற்கெல்லாம் யோகத்தைப் பார்க்க வேண்டியதில்லை.

ஆனால் சுபகாரியங்களைச் செய்வதற்கும், சொத்துக்களை வாங்குவதற்கும், பணத்தை முதலீடு செய்வது போன்ற நல்ல காரியங்களைச் செய்வதற்கும் யோகத்தைப் பார்க்க வேண்டும்.

எங்கே பார்க்க முடியும்?

பஞ்சாங்களில் குறிப்பிட்டு இருப்பார்கள். நாட்காட்டிகளில் குறிப்பிட்டு இருப்பார்கள்

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

7.7.25

Astrology - வாத்தியாராவது எப்படி?

Astrology - வாத்தியாராவது எப்படி?

வாத்தியார் என்றால் ‘வாங்கய்யா, வாத்தியாரய்யா’ என்று திரைப்படங்களில் மக்கள் பாட்டுப்பாடி, பிரபலப் படுத்தும் வாத்தியார் அல்ல! பள்ளிகளில், கல்லூரிகளில், கலாசாலையில் பாடம் சொல்லிகொடுக்கும், மற்றவர்களுக்குக் கற்பிக்கும் வாத்தியார்.
அதாவது class teacher!

அதற்கு ஜாதகப்படி என்ன கிரக அமைப்பு வேண்டும்?

பத்தாம் வீட்டில் (House of profession) புதன் அமர்ந்திருக்க வேண்டும். அல்லது 10ம் வீட்டைப் புதன் தன் பார்வையில் வைத்திருக்க வேண்டும். (That is mercury aspecting the 10th house)

இல்லையென்றால் பத்தாம் வீட்டு அதிபதியுடன் புதன் கூட்டணி (association) போட்டிருக்க வேண்டும் அல்லது பத்தாம் வீட்டுக்காரனும்  புதனும் ஒருவரை ஒருவர் பார்க்க வேண்டும் That is aspecting each other

இந்த அமைப்புக்களில் ஏதாவது ஒன்று உள்ளவர்கள்தான் வாத்தியாராக முடியும்!
--------------------------------------
எனக்கு இந்த அமைப்பு இல்லை. அதனால் நான் வாத்தியார் வேலைக்குப் போகவில்லை.

ஆனாலும் புதன் லக்கினத்தைற்கு 7ல் வலுவாக அமர்ந்து லக்கினத்தைத் தன் பார்வையில் வைத்திருப்பதால் பயிற்றுவிற்கும் திறமையைக் (Teachibg ability) கொடுத்தான். அதானால்தான் பதிவுகளில் எழுதி நான் வாத்தியாராக ஆனேன். அதுவும் கர்மகாரகன் சனி தனது கடைசி தசா புத்தியில் கொடி பிடித்துத் துவங்கி வைக்க, புதன் திசையில், பதிவில் வாத்தியாராக முழு அங்கீகாரம் கிடைத்தது!

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!