மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

27.3.25

Astrology: யோகங்களின் முக்கியத்துவம்

Astrology: யோகங்களின் முக்கியத்துவம்

ஒரு ஜாதகத்தைப் பார்த்தவுடன் அற்புதமாக உள்ளது. அல்லது அருமையாக உள்ளது. அல்லது நன்றாக உள்ளது அல்லது சுமாராக/சாதாரணமாக உள்ளது. அல்லது மோசமாக உள்ளது. மிகவும் மோசமாக உள்ளது. என்று கூறுவதற்கு ஜாதகத்தில் உள்ள யோகங்கள் பயன்படும்.

நமது முனுசாமிகள் (அதாங்க நமது முனிவர்கள்) அவற்றை எல்லாம் தொகுத்து சிறப்பாக எழுதிவைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள்.

யோகங்கள் இரண்டு வகைப்படும். நல்ல யோகங்கள் (Good yogas). கெட்ட யோகங்கள் (ava yogas)

நன்மை செய்யும் கிரகங்களின் கூட்டணி நன்மையான யோகங்களைத் தரும். தீய கிரகங்களின் கூட்டணி தீமையான (அவயோகங்கள்) யோகங்களைக் கொடுக்கும்.

நல்ல பெற்றோர்கள். நல்ல வீடு, மேன்மை மிக்க கல்வி, நல்ல வேலை, அன்பான மனைவி அல்லது கணவன், நல்ல குழந்தைகள், பெயர், புகழ், உடைமைகள், மதிப்பு மரியாதை செல்வாக்கு அதிகாரம் இவை எல்லாம் அல்லது இவ்ற்றில் சிலவாவது கிடைக்க ஜாதகத்தில் நல்ல யோகங்கள் இருக்க வேண்டும்

அதைவிடுத்து, வாழ்க்கை அவலமாக, வறுமையாக இருந்தால் அது அவயோகக் கணக்கில் வரும். வறுமை, உடல் ஊனம், கல்வியின்மை, விபத்துக்கள், தீர்ர்க்க முடியாத நோய்கள், அடிமைத்தனமான வாழ்க்கை, புத்திக்குறைவு அல்லது புத்தியின்மை அல்லது பேதமை சுருக்கமாகச் சொன்னால் பைத்தியக்காரத்தனம் (madness) எல்லாம் இதில் அடங்கும்.

ஒருவருடைய ஜாதகத்தில் மீனத்தில் சுக்கிரன் உச்சம் பெற்று இருந்தால், உச்சம் பெற்ற நிலையில் அந்த சுக்கிரன் ஜாதகருக்கு சொகுசான (Luxurious) வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பார். அதாவது எல்லா செள்கரியங்களையும், வசதிகளையும் கொடுப்பார். அது விதி (Rule) ஆனால்  அதே சுக்கிரன் அதே ஜாதகத்தில் நவாம்சத்தில் நீசமடைந்திருந்தால், முன் சொன்னது அனைத்தும் ஊற்றிக்கொண்டுவிடும்!

ஆனால் ஜாதகத்தில் அமைந்திருக்கும் யோகங்கள் ஊற்றிக் கொள்ளாமல் தங்கள் பணிகளை தங்களுடைய தசாபுத்திக் காலங்களில் செவ்வனே செய்துவிடும்.

பிருஹத் ஜாதகம், சரவளி போன்ற நூல்களில் ஏராளமான யோகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட யோகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றில் முக்கியமான யோகங்கள், அவற்றின் முக்கியத்துவத்தை வைத்து வரிசையாகப் பின்னொரு சமயம் பார்ப்போம். அவைகள் தனிப் பாடங்கள்.

யோகங்கள் எப்படி உண்டாகின்றன?

அமரும் இடத்தைவைத்து அல்லது கூட்டு சேரும் இடத்தை வைத்து அவைகள் உண்டாகும்

ராசியில் இருக்கும் இடத்தை வைத்து யோகங்கள் இருப்பதைப் பார்க்கலாம். நவாம்சத்தை வைத்து அவைகள் செல்லுமா? அல்லது செல்லாதா? என்பதைப் பார்க்கலாம்.

உதாரணத்திற்கு ராசியில் சுக்கிரன் உச்சமடைவது ஜாதகனுக்கு சொகுசான வாழ்க்கையைக் கொடுக்கும். எல்லா விதமான வசதிகளையும் கொடுக்கும். ஆனால் அதே நேரத்தில், அதே ஜாதகத்தில் சுக்கிரன் நவாம்சத்தில் நீசம் பெற்றிருந்தால் அவைகள் அனைத்தும் கேன்சலாகிவிடும்.

அஸ்தமனம் பெற்ற கிரகங்கள் யோகத்தைத் தராது. யோகங்கள் ஒரு ஜாதகத்திற்கு நன்மை செய்யும் கிரகங்களாலும், நன்மையான வீடுகளில் அவைகள் அமர்வதாலும் அல்லது நன்மை செய்யும் இன்னொரு கிரகத்தின் கூட்டணியாலும் அல்லது பார்வையாலும் கிடைக்கும். ஆகவே அவை அனைத்தையும் அலசிப் பார்க்க வேண்டும். மேலோட்டமாகப் பார்த்து ஒரு முடிவிற்கு வரக்கூடாது!

எத்தனை யோகங்கள் இருந்தாலும் அவற்றை எல்லாம் விட முக்கியமான 5 யோகங்கள் இருப்பது ஜாதகத்தின் மேன்மையை அல்லது சிறப்பைக் கணிக்க உதவும்.

அவை என்னென்ன?

1.குருவால் ஏற்படும் ஹம்ச யோகம்
2.செவ்வாயால் ஏற்படும் ருசக யோகம்
3.புதனால் ஏற்படும் பத்ர யோகம்
4.சுக்கிரனால் ஏற்படும் மாளவ்ய யோகம்
5.சனியால் ஏற்படும் சச யோகம்

மேற்கண்ட அந்த 5 யோகங்களும் ஜாதகத்தில் இருந்தால் அந்த ஜாதகனை தெய்வப்பிறவி என்று சொல்லலாம். தெய்வத்தால் ஆசீர்வதிக்கப்பெற்றவன் என்று சொல்லலாம். அதற்கு பஞ்சமகா புருஷ யோகம் என்று பெயர்

ஆகவே அவைகள் உங்கள் ஜாதகத்தில் உள்ளனவா என்று பார்க்க வேண்டும். இருந்தால் கவலையை விடுங்கள். அவைகள் உங்களுக்கு மிகப்பெரிய ஏற்றங்களைத் தரும்.

எப்போது தரும்?

தங்களுடைய தசா புத்திகளில் தரும்

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

26.3.25

Astrology: சொந்த ஊரில் வசிக்கும் பாக்கியம்

Astrology: சொந்த ஊரில் வசிக்கும் பாக்கியம் 

சொந்த ஊர் என்றாலே எல்லோருக்கும் ஒரு மயக்கம்தான். சொந்த ஊரில் வசிப்பதே ஒரு பாக்கியம்தான்

ஆனாலும் அது நம் கையிலா இருக்கிறது? படித்து முடித்தவுடன், பலர் வேலை வாய்ப்பின் காரணமாக வெளியூருக்குச் சென்று வசிக்க நேரிடுகிறது. சிலருக்கு வெளிநாடுகளுக்குச் சென்று வசிக்கும்படியான சூழ்நிலை உண்டாகிவிடுகிறது.

அங்கே சென்று, அதாவது வெளியூர் அல்லது வெளி நாடுகளுக்குச் சென்று, எவ்வள்வு பொருள் ஈட்டினாலும் அல்லது எத்தனை வசதிமிக்க வாழ்க்கை வாழ்ந்தாலும், மனதிற்குள் சொந்த ஊரைப் பற்றிய ஏக்கம் இருக்கத்தான் செய்யும். சிலர் அதை வெளிப்படுத்துவார்கள். சிலர் தங்கள் உள்ள உணர்வுகளை வெளிப் படுத்தாமல் கமுக்கமாக இருப்பார்கள்.

“சொர்க்கமே என்றாலும் அது நம்மஊரைப் போலவருமா
அடஎந்நாடு என்றாலும் அது நம்நாட்டுக் கீடாகுமா ”

என்று ஒரு அற்புதமான பாடல் மூலம் இளையராஜா அதை பலரும் அறியப் பாடலாகச் சொன்னார்.

மத்திய வயதில் வெளி நகரங்களில் அல்லது வெளிநாடுகளில் உள்ள சொகுசான வாழ்க்கையால் பலர் தங்களை மறந்து அங்கே இருந்தாலும், வயதான காலத்தில், சொந்த ஊர் ஏக்கம் பலருக்கும் வந்து விடும்.

தங்கள் சொந்த ஊருக்குப் பக்கத்தில் இருப்பவர்கள், மாதம் ஒருமுறையாவது தங்கள் ஊருக்கு வந்து விட்டுப் போவார்கள். வட மாநிலங்களில் இருப்பவர்கள் வருடம் ஒருமுறையாவது வந்து விட்டுப்போவார்கள். சிங்கப்பூர், துபாய், அல்லது அமெரிக்கா போன்ற தூர தேசங்களில் இருப்பவர்கள், இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது வந்து விட்டுப் போவார்கள்.

ஆனால் வயதானவர்கள், அதாவது 60 அல்லது 70 வயதைத் தாண்டியவர்களுக்கு, தாங்கள் வசிக்கும் நாட்டை விட்டு அல்லது வசிக்கும் ஊரை விட்டுத் திரும்பி வந்து, தங்கள் சொந்த ஊரிலேயே செட்டில் ஆகும் விருப்பம் இருக்கும். ஆனால் சிலருக்கு மட்டுமே அந்த வாய்ப்புக் கிடைக்கும். பலருக்கும் அது கிடைக்காமல் போய்விடும்.

வயதான காலத்தில், வீட்டில் உள்ள மற்ற உறுப்பினர்கள், அதாவது மனைவி மற்றும் மக்கள் (பிள்ளைகள்) அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால் என்ன செய்ய முடியும்?

ஜாதகப்படி அதற்கான வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே அது சாத்தியமாகும்.
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

25.3.25

Astrology: கோச்சார ராகுவின் பலன்கள் Effects of Transit Rahu

Astrology:  கோச்சார ராகுவின் பலன்கள் Effects of Transit Rahu

ராகு சாயா கிரகம். சொந்த வீடு இல்லாத கிரகம். மற்ற ஏழு கிரகங்களுக்கும் ஒவ்வொரு நாள் ஆதிக்க நாளாக உள்ளது. அதனால்தான் தினமும் ராகுவிற்கு 90 நிமிடங்களும் (ராகு காலம்), கேதுவிற்குத் 90 நிமிடங்களும் (எம கண்டம்) அந்த நேரங்களில் முக்கியமான செய்ல்களை மக்கள் தவிர்ப்பார்கள். நாமும் தவிர்க்க வேண்டும்

சரி சொல்ல வந்த விஷ்யத்திற்கு வருகிறேன். சனி 30 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு சுற்று வருவதைப் போல, நாகுவும் கேதுவும் 18 ஆண்டுகளில் ஒரு சுற்றை முடிப்பார்கள். அதாவது ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒரு ராசியில் த்ங்கிச் செல்வார். அங்கே தங்கி வழக்கப்படி அந்த இடத்திற்கான சோதனைகளையும், துன்பங்களையும், இழப்புக்களையும் ஜாதகனுக்குக் கொடுத்துவிட்டு, அடுத்த ராசிக்குத் தன் நடையைக் கட்டிவிடுவார். அடுத்த ராசிக்கு, கடிகாரச் சுற்றுக்கு எதிர் சுற்ரில் செல்வார். ராகுவும், கேதுவும் எதிர் சுற்றில்தான் சுற்றுவார்கள் என்பது பால பாடம். அது அனைவருக்கும் தெரியும்.  Rahu and ketu rotates in anti clock wise

அவ்வாறு ஒவ்வொரு ராசியிலும் ராகு தங்கும்போது, தங்கிச் செல்லும்போது  ஜாதகனுக்குக் கிடைக்கக்கூடிய முக்கியமான பலனைச் சுருக்கமாகக் கீழே கொடுத்துள்ளேன்!
---------------------------------------------------------------------------------
தலைப்பு: ராகுவின் கோள்சாரப் பலன்:

1. ஒன்றாம் வீட்டில் ராகு இருக்கும் காலத்தில் ஜாதகனுக்கு உடல் நலமின்மை உண்டாகும்.
2. இரண்டாம் வீட்டில் ராகு இருக்கும் காலத்தில் ஜாதகனுக்கு சொத்து, செல்வம் விரையமாகும்
3. நான்காம் வீட்டில் ராகு இருக்கும் காலத்தில் ஜாதகனுக்கு விரோதங்கள் ஏற்படும். எதிரிகள் உண்டாவார்கள்
4. ஐந்தாம் வீட்டில் ராகு இருக்கும் காலத்தில் ஜாதகனுக்கு கவலைகள் ஏற்படும். மகிழ்ச்சி இருக்காது.
5. ஏழாம் வீட்டில் ராகு இருக்கும் காலத்தில் ஜாதகனுக்கு மனைவியால் உபத்திரவங்கள், சிரமங்கள், கஷ்டங்கள் ஏற்படும். ஜாதகியாக இருந்தால் அவளுக்கு அவைகள் அவளுடைய கணவனால் ஏற்படும்.
6. எட்டில் ராகு இருக்கும் காலம் உடல் நலத்திற்குக் கேடானது.
7. ஒன்பதில் ராகு இருக்கும் காலத்தில் ஜாதகனுக்கு இடமாற்றம், ஊர் மாற்றம் ஏற்படும். சிலர் தூர தேசங்களுக்குச் செல்ல நேரிடும்.
8. பத்தில் ராகு இருக்கும் காலத்தில் ஜாதகனுக்குத் தொழிலில், வியாபாரத்தில், போட்டிகள், விரோதிகள் ஏற்படுவார்கள். அவர்களால் அல்லல் பட நேரிடும்.

3ஆம் வீடு, 6ஆம் வீடு, 11ஆம் வீடு, 12ஆம் வீடு ஆகிய நான்கு இடங்களிலும் ராகு சஞ்சாரம் செய்யும் காலத்தில், ஜாதகனுக்கு ஒரு சிரமமும் ஏற்படாது.

இந்தப் பலன்கள் யாவும் பொதுப்பலன்கள், தசாபுத்தி சிறப்பானதாக நடைபெற்றுக்கொண்டிருந்தால், இந்தப் பலன்கள் குறையும் அல்லது இல்லாமல்
போய்விடும்!
-----------------------------------------------------------------------------------
நம் ஜாதகத்தில் (Birth Chart) கிரகங்கள் இருக்கும் இடத்தில் நடப்பு கோள்சாரப்படி  ராகு வந்து அமருவதால் ஏற்படும் பொதுப்பலன்கள்:

1. சூரியன் இருக்கும் இடத்தில் ராகு கோள்சாரப்படி சஞ்சாரம் செய்யும்போது, ஜாதகனுக்கு மன அழுத்தங்கள், பிரச்சினைகள் உண்டாகும். படுத்தி எடுக்கும்.
2. சந்திரன் இருக்கும் இடத்தில் ராகு கோள்சாரப்படி சஞ்சாரம் செய்யும்போது, ஜாதகனின் தாயாருக்கு அது நன்மையல்ல. தாயாரின் உடல் நிலைக்குக் கேடு உண்டாகும். அதனால் ஜாதகனுக்கு மன அழுத்தம் உண்டாகும்.
3. செவ்வாய் இருக்கும் இடத்தில் ராகு கோள்சாரப்படி சஞ்சாரம் செய்யும்போது, ஜாதகனுக்கு உடல் நலக்குறைவு ஏற்படும். அத்துடன் தேவையில்லாத வம்பு, வழக்கு, வாக்குவாதம் போன்ற விவகாரங்கள் ஏற்படும்.
4. குரு இருக்கும் இடத்தில் ராகு கோள்சாரப்படி சஞ்சாரம் செய்யும்போது, ஜாதகனுக்கு மகிழ்ச்சி இல்லாமல் போய்விடும்.
5. சுக்கிரன் இருக்கும் இடத்தில் ராகு கோள்சாரப்படி சஞ்சாரம் செய்யும்போது, ஜாதகனுக்குக் குடும்ப வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்படும்.
6. சனி அல்லது ராகு இருக்கும் இடத்தில் ராகு கோள்சாரப்படி சஞ்சாரம் செய்யும்போது, ஜாதகனுக்கு அதிகமான மன அழுத்தம் (Tensions) உண்டாகும். அது எதனால் வேண்டுமென்றாலும் ஏற்படலாம்.

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

24.3.25

Astrology: இயற்கையான சுபக்கிரகங்களும், இயற்கையான தீய கிரகங்களும்!

Astrology: இயற்கையான சுபக்கிரகங்களும், இயற்கையான தீய கிரகங்களும்! 
நீங்கள் நல்லவரா அல்லது கெட்டவரா?

நமக்கு நாம் எப்போதும், எந்த நிலையிலும் நல்லவர்தான். நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் நமக்கு நியாயமாகவும், நன்மை உடையதாகவும்தான் தெரியும்!

ஆனால் நாம் நல்லவரா அல்லது கெட்டவரா என்பதை மற்றவர்கள்தான் சொல்ல வேண்டும். அல்லது மற்றவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்!

நல்லவர்கள் அல்லது கெட்டவர்கள் என்பது இரண்டு வகைப்படும். இயற்கையாகவே நல்லவர்கள் அல்லது இயற்கையாகவே கெட்டவர்கள் என்று இரண்டுவகைப் படுத்தலாம். அடிப்படைக் குணங்கள் எல்லாம் நல்லவையாக இருந்தால், இயற்கையாகவே நல்லவர் என்று எடுத்துக்கொள்ளலாம்.

ஜோதிடத்தில், கிரகங்களை அவ்வாறு வகைப்படுத்தியுள்ளார்கள்.

இயற்கையாகவே நல்ல கிரகங்கள். அதாவது சுபக்கிரகங்கள்.

குரு, சுக்கிரன், வளர்பிறைச் சந்திரன், புதன் ஆகிய 4 கிரகங்களும் இயற்கையாகவே நல்ல கிரகங்கள். ஒருவருடைய ஜாதகத்தில் அவைகள் வலிமையாக இருக்க வேண்டும்

இயற்கையாகவே தீய கிரகங்கள்

சனி, செவ்வாய், ராகு & கேது ஆகிய 4 கிரகங்களும்  இயற்கையாகவே தீய கிரகங்கள் ஆகும்! தீய கிரகத்துடன் சேரும் புதன் நன்மையைச் செய்வதில்லை.அதுவும் தீயதாகவே மாறிவிடும்!

12 லக்கினங்களுக்கும் உரிய நன்மை செய்யும் கிரகங்களையும், தீமையான கிரகங்களையும் வகைப் படுத்தியுள்ளார்கள்

அதை இன்று பார்ப்போம்!
---------------------------------------
1. மேஷ லக்கினம்:
இந்த லக்கினத்திற்கு குருவும் சூரியனும் நன்மை செய்யக்கூடிய கிரகங்களாகும். சனி, புதன், சுக்கிரன் ஆகிய மூன்றும் இந்த லக்கினத்திற்குத் தீய கிரகங்களாகும். மேஷத்திற்கு சுக்கிரன் அதி மோசமான கிரகமாகும்!

2. ரிஷப லக்கினம்
இந்த லக்கினத்திற்கு சனியும், சூரியனும் நன்மை செய்யக்கூடிய கிரகங்களாகும். குரு, சுக்கிரன், சந்திரன் ஆகிய மூன்று கிரகங்களும் ஆகாத (வேண்டாத) கிரகங்களாகும்

3. மிதுன லக்கினம்:
இந்த லக்கினத்திற்கு சுக்கிரன் மட்டுமே நன்மை செய்யக்கூடிய கிரகமாகும். செவ்வாய், சூரியன், குரு ஆகிய மூன்று கிரகங்களும் ஆகாத (வேண்டாத) கிரகங்களாகும்

4. கடக லக்கினம்
செவ்வாய், குரு, சந்திரன் ஆகிய மூன்றும் இந்த லக்கினத்திற்கு நன்மை செய்யக்கூடிய கிரகங்களாகும். புதனும், சுக்கிரனும் ஆகாத (வேண்டாத) கிரகங்களாகும். செவ்வாய் இந்த லக்கினத்திற்கு யோக காரகன் ஆவார். பல நன்மைகளைச் செய்யக்கூடியவர் அவர்தான்!

5. சிம்ம லக்கினம்
செவ்வாய், சூரியன் குரு ஆகிய மூன்றும் இந்த லக்கினத்திற்கு நன்மை செய்யக்கூடிய கிரகங்களாகும். புதன், சுக்கிரன், சனி ஆகிய மூன்றும் இந்த லக்கினத்திற்கு வேண்டாத கிரகங்களாகும். செவ்வாய் இந்த லக்கினத்திற்கு யோக காரகன் ஆவார். பல நன்மைகளைச் செய்யக்கூடியவர் அவர்தான்!

6. கன்னி லக்கினம்
இந்த லக்கினத்திற்கு சுக்கிரன் மட்டுமே நன்மை செய்யக்கூடிய கிரகமாகும். செவ்வாய், குரு, சந்திரன் ஆகிய மூன்றும் இந்த லக்கினத்திற்கு வேண்டாத கிரகங்களாகும்.

7. துலா லக்கினம்:
சனியும் புதனும் இந்த லக்கினத்திற்கு நன்மை செய்யக்கூடிய கிரகங்களாகும். குரு, செவ்வாய், சூரியன் ஆகிய மூன்றும் இந்த லக்கினத்திற்கு வேண்டாத கிரகங்களாகும்.

8. விருச்சிக லக்கினம்
குரு, சந்திரன் ஆகிய இரண்டு கிரகங்களும் இந்த லக்கினத்திற்கு நன்மை செய்யக்கூடிய கிரகங்களாகும். சூரியனும், சந்திரனும் இந்த லக்கினத்திற்கு ராஜயோகத்தைக் கொடுக்கும் கிரகங்களாகும். சுக்கிரனும், புதனும் ஆகாத கிரகங்கள். சனி கலவையான பலன்களைக் கொடுக்கும். செவ்வாயும் கலவையான பலன்களையே கொடுப்பார்

9 .தனுசு லக்கினம்
செவ்வாய், சூரியன், புதன் ஆகிய மூன்று கிரகங்களும் இந்த லக்கினத்திற்கு நன்மை செய்யக்கூடிய கிரகங்களாகும். சுக்கிரன் இந்த லக்கினத்திற்கு ஆகாத கிரகமாகும்

10. மகர லக்கினம்
சுக்கிரனும் புதனும் வேண்டியவர்கள். குரு, செவ்வாய், சந்திரன் ஆகிய மூன்று கிரகங்களும் வேண்டாதவர்கள் (ஆகாதவர்கள்)

11. கும்ப லக்கினம்
சனியும், சுக்கிரனும் வேண்டியவர்கள். குரு, சந்திரன், செவ்வாய் ஆகிய மூவரும் வேண்டாதவர்கள்.

12. மீன லக்கினம்
செவ்வாயும், சந்திரனும் வேண்டிவர்கள். சனி, சுக்கிரன், புதன், சூரியன் ஆகிய நான்கு கிரகங்களும் வேண்டாதவர்கள்.

பாடத்தை மனதில் பதிய வையுங்கள். குறைந்த அளவு உங்கள் லக்கினத்திற்கு உரிய கிரகங்களையாவது மனதில் பதிய வையுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
===========================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

23.3.25

Astrology: துவஜ யோகம்! (கொடி பிடிக்கும் யோகம்)

Astrology: துவஜ யோகம்! (கொடி பிடிக்கும் யோகம்) 
Lesson on Yoga: Dhwaja Yoga:

துவஜ எனும் வடமொழிச் சொல்லிற்குக் கொடி (flag) என்று பெயர். கொடி யோகம் என்று இதனை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். கொடி யோகம் என்றால் கொடி பிடித்துக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாகப் போகும் யோகம் அல்ல! கொடியை உருவாக்கித் தலைமை தாங்கும் அல்லது தலைமை ஏற்கும் யோகம்.

இந்த யோகத்துடன் ஒரு குழந்தை பிறந்தால், நாட்டிற்குத் தலைமை தாங்கும் யோகத்துடன் அந்தக் குழந்தை

பிறந்துள்ளது என்று நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். தலைமை தாங்குவது என்பது எந்த அளவிற்கு (Level) வேண்டுமென்றாலும், ஜாதகத்தின் மற்ற அம்சங்களைப் பொறுத்து இருக்கலாம்.
..........................................................................

யோகத்தின் அமைப்பு: ஜாதகத்தில், தீய கிரகங்கள் எல்லாம் எட்டாம் வீட்டில் இருக்க, சுபக்கிரகங்கள் எல்லாம் லக்கினத்தில் இருக்க வேண்டும்.

தீய கிரகங்கள்: செவ்வாய், சனி, ராகு அல்லது கேது
சுபக்கிரகங்கள்: குரு, சுக்கிரன், சந்திரன்

பலன்: ஜாதகன் தலைவனாக இருப்பான். அவன் உத்தரவை நிறைவேற்றப் பலர் காத்துக்கொண்டிருப்பார்கள்.

A planetary combination formed by all the malefic placed in the 8th house and
all benefices in the ascendant. Under this combination, a leader is born
==================================================
சார், நான் மேஷ லக்கினக்காரன் செவ்வாய் எப்படி எனக்குத் தீய கிரகம் ஆகும்? அல்லது நான் மகர லக்கினக்காரன், சனி எப்படி எனக்குத் தீய கிரகம் ஆகும்? என்று யாரும் கேட்க வேண்டாம். ரிஷிகள் இந்த யோகத்திற்கான விதி முறைகளைக் கூறியுள்ளபோது அதை அப்படியே எடுத்துக் கொள்வது நல்லது! மாட்டேன் என்றால் - It is your problem and it is not concerned with astrology!

அன்புடன்
வாத்தியார்!
--------------------------------------------------------------------------

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

21.3.25

Astrology கெட்ட யோகம்! Bad yoga:

Astrology கெட்ட யோகம்! Bad yoga: 

”சார், உப்பு விற்கப்போனால் மழை பெய்கிறது; மாவு விற்கப்போனால் காற்று அடிக்கிறது.இரண்டையும் விட்டு விட்டு, குடை விற்கப்போனல், அங்கே எனக்குப் போட்டியாக பத்துப் பேர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். என்ன செய்வது? நான் ஜென்மம் எடுத்த நேரம் அப்படி! எல்லாம் என் தலை எழுத்து!” என்று தீராத மனக் குறை உள்ளவர்களைப் பார்க்கிறோம்.

ஒரு மனிதன் எதை வேண்டுமென்றாலும் சமாளிப்பான், தாங்கிக் கொள்வான். ஆனால் இன்றைய பொருளாதார சூழ்நிலையில் பணம் இன்மையை (வருமானம் இல்லாத நிலைமை அல்லது தேவையான அளவிற்குப் பணம் கிடைக்காத நிலைமை) மட்டும் தாங்கிக் கொள்ள முடியாது.

பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால், யாருக்கும் உன்னைத் தெரியாது என்பார்கள். யாருக்கும் தெரியாவிட்டால் போகிறது. அன்றாட செலவிற்கு எங்கே போவது?

இன்றைய சூழ்நிலையில், மனிதர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்

1. பணத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் அல்லாடுபவர்கள் முதல் வகை!
2. பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் குழம்புபவர்கள் இரண்டாவது வகை!

பணத்தை வைத்திருப்பவனுக்குப் பய உணர்வு மிகுந்திருக்கும். அதை எப்படிக் காப்பாற்றுவது எனும் பய உணர்வு. அல்லது தன்னை எப்படிக் காப்பாற்றிக் கொள்வது எனும் பய உணர்வு. தீவிரவாதிகள் அல்லது தாதாக்கள் கடத்திக் கொண்டுபோய்விடாமல் இருக்க வேண்டுமே எனும் பய உணர்வு.

அது இல்லாதவனுக்குக் கவலை. ஒரே ஒரு கவலை. அது இல்லையே எனும் கவலை. அன்றாடத் தேவைகளை எப்படி சமாளிப்பது எனும் கவலை!

ஏன் இந்த நிலைமை? ஜாதகப்படி அதை அறிந்து கொள்ளும் வாய்ப்பு இருக்கிறதா?

இருக்கிறது! அதுதான் இன்றையப் பாடம்!
++++++++++++++++++++++++++++++++++
ஒரு மனிதனுக்கு, நல்ல மனைவி வேண்டும். கை நிறையச் சம்பளத்துடன் நல்ல வேலை, அல்லது தொழில் வேண்டும்.

அந்த இரண்டில், நல்ல வேலைதான் முக்கியம். பிரதானம். நல்ல மனைவி இரண்டாவது சாய்ஸ்! அல்லது நல்ல கணவன் இரண்டாவது சாய்ஸ்!

எல்லோருக்கும், நல்ல வேலை அல்லது நல்ல தொழில் அமைந்து விடுகிறதாவென்றால், பாதிப்பேர்களுக்கு அந்த அமைப்பு இருக்காது

பத்தாம் வீட்டு அதிபதி(Lord of the 1oth House) லக்கினத்திற்கு 6,8 12ஆம் வீடுகளில் உட்கார்ந்திருந்தால் அந்த அவல நிலைமை ஏற்படும். அதுவும் விரைய வீடான 12ல் அமர்ந்திருந்தால், ஜாதகனுக்கு, அவன் திறமைக்கு ஏற்ப, விருப்பத்திற்கேற்ப, தேவைக்கு ஏற்ப நல்ல வேலையோ அல்லது தொழிலோ கிடைக்காது. உங்கள் மொழியில் சொன்னால் சிக்காது. சிக்கினால்தான் அமுக்கிப் பிடித்துக்கொண்டு விடலாமே!

அந்த நிலைக்குப் பெயர் துர் யோகம். துர் எனும் வடமொழிச் சொல்லிற்கு கெட்ட என்று பெயர்.

(நான் எனக்குத் தெரிந்த வழியில் மொழியாக்கம் செய்திருக்கிறேன். நமது வகுப்பறை மாணவர் திலகம் தஞ்சாவூர் கிருஷ்ணன் சார் வந்து என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்!)

Duryoga - This results when the 10th lord is in the 12th. The native becomes unlucky as afar as profession is concerned.

பத்தாம் வீட்டதிபதி 12ல் இருந்தால், ஜாதகன் வேலை அல்லது தொழிலைப் பொறுத்தவரை அதிர்ஷ்டமில்லாதவன்.

அதைப்போல பத்தாம் வீட்டு அதிபதி 6 & 8 ஆம் வீடுகளில் அமர்ந்திருந்தாலும் இந்த நிலைமைதான். ஜாதகனின் வேலைகளில், பல தடைகள், கஷ்டங்கள், சிரமங்கள் உண்டாகும். உங்கள் மொழியில் சொன்னால் சும்மா சுமைப்பதை, அவன் நனைத்துச் சுமப்பான்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அன்புடன்
வாத்தியார்
==========================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

20.3.25

Astrology: கிரகமாலிகா யோகம் (மாலை யோகம்)

Astrology: கிரகமாலிகா யோகம் (மாலை யோகம்) 
Lesson on Yogas: Grahamalika Yoga

மாலிகா என்னும் வடமொழிச் சொல்லிற்கு மாலை (garland) என்று பொருள்.

சூரியன், சந்திரன், செவ்வாய்,புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகங்களும்
அடுத்தடுத்து ஏழு ராசிகளில் இருந்தால் அதற்குப் பெயர் மாலை யோகம்.

நான் எழுதியுள்ள வரிசைப்படி என்று இல்லை, வேறுவிதமான வரிசையில்
கூட இருக்கலாம். எந்த வரிசையில் வேண்டுமென்றாலும் இருக்கட்டும்.
இருந்தால் அது மாலையோகம் எனப்படும்

பார்ப்பதற்கே அழகாக இருக்கும்.

அந்த அமைப்புள்ள ஜாதகன் அழகான தோற்றமுடையவனாகவும்,
செல்வம் நிறைந்தவனாகவும், மகிழ்ச்சி நிறைந்தவனாகவும் இருப்பான்
---------------------------------------------------------------------
A planetary combination under which all planets occupy
consecutive houses leaving the intervening cardinal houses
vacant. The individual under this combination is happy,
handsome, and is provided with much ornaments, gems
and jewels.
--------------------------------------------------------------
ஏழு ராசிகளுக்குள் இல்லையென்றாலும், ஆறு ராசிகளுக்குள், அந்த
ஏழு கிரகங்கள் இருந்தாலும் அது மாலை யோகக் கணக்கில் வரும்
அது லக்கினத்தைத் தவிர்த்து அமைய வேண்டும்!

Grahamalika \"planetary garland\" Yoga:
All the nine planets consecutively in six or seven houses from the
lagna. The native with a Grahamalika Yoga will be
fortunate

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

19.3.25

Astrology: மகாபாக்கிய யோகம்! Lessons on yogas: Maha Bagya Yoga

Astrology: மகாபாக்கிய யோகம்! Lessons on yogas: Maha Bagya Yoga

இன்றைய பாடத்தில் ஒரு எளிமையான யோகத்திற்கான விளக்கம் தரப்பட்டுள்ளது. அனைவரும் படித்துப் பயன் பெறுங்கள்.
----------------------------------------------------------

ஒற்றைப்படை ராசிகளான மேஷம், மிதுனம், சிம்மம், துலாம்,தனுசு, கும்பம் ஆகிய ஆறு இடங்களில் லக்கினம், சூரியன், சந்திரன், ஆகியவைகள் அமைந்திருக்கப் பகல் நேரத்தில் பிறந்த ஜாதகனுக்கு இந்த யோகம் உண்டு.

இப்படியும் நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ளலாம் - மிதுனம், துலாம், கும்பம் ஆகிய மூன்றும் காற்று ராசிகளிலும். மேஷம், சிம்மம், தனுசு ஆகிய மூன்றும் நெருப்பு ராசிகளிலும் சூரியன், சந்திரன், ஆகியவைகள் அமைந்திருக்கப் பகல் நேரத்தில் பிறந்த ஜாதகனுக்கு இந்த யோகம் உண்டு.

பகற் பொழுதில் பிறக்கும் ஜாதகனுக்கு, ஆண்களுக்கென்று ஜோதிடத்தில் சொல்லப்படும் பலன்கள் எல்லாம் தேடி வரும்
--------------------------------------------------
பெண்களுக்கு:

இரட்டைப்படை ராசிகளான ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ஆறு இடங்களில் லக்கினம், சூரியன், சந்திரன், ஆகியவைகள் அமைந்திருக்க இரவு நேரத்தில் பிறந்த ஜாதகிக்கு இந்த யோகம் உண்டு.

இப்படியும் நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ளலாம் - ரிஷபம், கன்னி, மகரம் ஆகிய மூன்றும் பூமி ராசிகளிலும், கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய மூன்றும் நீர் ராசிகளிலும்,லக்கினம், சூரியன், சந்திரன், ஆகியவைகள் அமைந்திருக்க இரவு நேரத்தில் பிறந்த ஜாதகிக்கு இந்த யோகம் உண்டு.

இரவுப் பொழுதில் பிறக்கும் ஜாதகிக்கு, பெண்களுக்கென்று ஜோதிடத்தில் சொல்லப்படும் பலன்கள் எல்லாம் தேடி வரும்
--------------------------------------------------
பலன்: நல்ல பண்புகளைப் பெற்றவனாக அல்லது பெற்றவளாக ஜாதகன்/ஜாதகி இருப்பார்கள். மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை இருக்கும். அன்பே உருவானவர்களாக இருப்பார்கள். மற்றவர்களிடம் இவர்களுக்கு மதிப்பும், மரியாதையும் இருக்கும்!

Mahabhagya Yoga for Men - in day time birth, when Sun,Moon and ascendant in odd signs and for Women - night time birth when Sun,Moon and ascendant in even signs,than this yoga is formed.The native of this yoga is to be of good character,Helping to others,Kind and famous. Nullification is depend on placement of other planets.
+++++++++++++++++++++++++++++++++++++++
”ஓகோ, இதுதான் இந்த யோகத்தின் பலனா? நான் மகா பாக்கியம் எனும் தலைப்பைப் பார்த்தவுடன், ரிலையன்ஸ் அம்பானி போல செல்வந்தராகும் பாக்கியமோ என்று நினைத்து, மூச்சிரைக்க ஓடோடி வந்தேன்.” என்று சொல்பவர்கள் அடுத்துவரும் வரிகளைப் படியுங்கள்.

பணம் மகிழ்ச்சியைத்தராது; குணம்தான் மகிழ்ச்சியைத்தரும். நல்ல குணத்தைப் பெறுவதற்கான யோகம் இது! நல்ல குணத்தைப் பெற்றிருப்பதுதான் மகாபாக்கியம். ஓக்கேயா?

அன்புடன்
வாத்தியார்
======================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18.3.25

Astrology: மாத்ருநாச யோகா:

Astrology: மாத்ருநாச யோகா:
(தாய்ப் பாசத்திற்கு வேட்டு வைக்கும் யோகம்)

சந்திரன் இரண்டு தீய கிரகங்களுக்கு இடையில் (Moon is hemmed between malefic) மாட்டிக்கொண்டு விட்டாலும் அல்லது தீய
கிரகத்துடன் கூட்டணி போட்டிருந்தாலும் அல்லது தீய கிரகத்தின் பார்வையைப் பெற்றிருந்தாலும் இந்த அவயோகம் உண்டு!

பலன்: ஜாதகனின் தாய், ஜாதகன் சிறுவனாக அல்லது இளைஞனாக இருக்கும்போதே இறந்து போய்விடுவார். தவறி நல்ல ஆயுள்
பாவத்தோடு, அவர் உயிர் வாழ்ந்தாலும், ஜாதகனுடன் சுமூகமான உறவு இருக்காது.

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

17.3.25

Astrology: பந்துபிஸ்த்தயக்த யோகா: (உறவைக் கெடுக்கும் அவயோகம்)

Astrology: பந்துபிஸ்த்தயக்த யோகா:
(உறவைக் கெடுக்கும் அவயோகம்)

4ஆம் வீட்டு அதிபதி தீய கிரகங்களுடன் சேர்ந்து இருந்தாலும், அல்லது 6, 8, 12ஆம் இடங்களில் சென்று அமர்ந்தாலும், அல்லது
பகை வீடுகளில் அமர்ந்திருந்தாலும், அல்லது நீசம் பெற்றிருந்தாலும் இந்த அவயோகம் உண்டு!

பலன்: ஜாதகனுக்கு தனது நெருங்கிய சொந்தங்களுடன் நல்ல உறவு இருக்காது. உறவுகளுடன் பிரச்சினைகள் இருக்கும்.
அது தவறான புரிதல்கள் அல்லது வேறு காரணங்களால் இருக்கலாம். எப்படியிருந்தாலும் அல்லது என்ன காரணமாக இருந்தாலும்
ஜாதகன் தனிப்பட்டுப் போவான்.

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

16.3.25

Astrology: வேட்டு வைக்கும் யோகங்கள்!

Astrology: வேட்டு வைக்கும் யோகங்கள்! 

மனிதன் சக மனிதனுக்கு வேட்டுவைப்பதை அறிவோம். சில அவயோகங்களும் வேட்டு வைக்கும் தன்மைகளை உடையவை. இன்று, வேட்டு வைக்கும்

அவயோகங்களில் இரண்டைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளேன்.

”சார், எனக்கு இந்த யோகம் இல்லையே!” என்று யாரும் கவலைப் பட வேண்டாம்.
++++++++++++++++++++++++++++++++++++++
1
பந்துபிஸ்த்தயக்த யோகா:
(உறவைக் கெடுக்கும் அவயோகம்)

4ஆம் வீட்டு அதிபதி தீய கிரகங்களுடன் சேர்ந்து இருந்தாலும், அல்லது 6, 8, 12ஆம் இடங்களில் சென்று அமர்ந்தாலும், அல்லது
பகை வீடுகளில் அமர்ந்திருந்தாலும், அல்லது நீசம் பெற்றிருந்தாலும் இந்த அவயோகம் உண்டு!

பலன்: ஜாதகனுக்கு தனது நெருங்கிய சொந்தங்களுடன் நல்ல உறவு இருக்காது. உறவுகளுடன் பிரச்சினைகள் இருக்கும்.
அது தவறான புரிதல்கள் அல்லது வேறு காரணங்களால் இருக்கலாம். எப்படியிருந்தாலும் அல்லது என்ன காரணமாக இருந்தாலும்
ஜாதகன் தனிப்பட்டுப் போவான்.

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

15.3.25

Astrology: அஷ்டலெட்சுமி யோகம்! Ashtalakshmi Yoga

Astrology: அஷ்டலெட்சுமி யோகம்! Ashtalakshmi Yoga 

அஷ்டலெட்சுமி யோகம் என்பது குரு கேந்திர வீடுகள் ஒன்றில் இருந்து (அதாவது 1, 4, 7, 10ஆம் வீடுகள் ஒன்றில்), அத்துடன் ஆறாம் வீட்டில் ராகுவும் இருந்தால் இந்த யோகம் உண்டாகும்.

பலன்: ஜாதகனுக்கு தனிப்பட்ட பெயர், புகழ், வளர்ச்சி, உயர்ச்சி, அமைதி, மகிழ்ச்சி, எதையும் அனுபவிக்கும் பாக்கியம் அனைத்தும் கிடைக்கும்

Ashtalakshmi yoga is formed when Jupiter is in 1st,, 4th, 7th and 10th house and Rahu in 6th house. Ashtalakshmi yoga will give the individual name,fame, prosperity, and peaceful, enjoyment in life.

எட்டு மடங்கு யோகம் என்பார்கள் Yoga for the Eightfold Prosperity (Ashta Laksmi Yoga )

If the North Node ( Rahu ) is in the 6th And if Jupiter is angular Then this Yoga is formed. This combination for Eightfold Prosperity!

இதைக்குறிப்பிடும் ஜோதிட ஸ்லோகம் This is the sloka for Ashtalakshmi Yoga

சஷ்ட ஸ்தான கதே ராகு
லக்ன கேந்த்ர கதே குரு
அஷ்டலக்ஷ்மி சமயுக்தம்
மத்யவான் கீர்த்திமான் நர!

Shashta Sthana Gathe Rahu ( Rahu in the 6th )
Lagna Kendra Gathe Guru ( Jup angular )
Ashtalakshmee Samayuktham
Madhyavan Keerthiman Nara.
+++++++++++++++++++++++++++++++++++++
எட்டு மடங்கு யோகம் என்பது அஷ்ட லெட்சுமிகளைக் குறிக்கும் 

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14.3.25

Astrology: பாபகர்த்தாரி யோகத்தின் பலன்

Astrology: பாபகர்த்தாரி யோகத்தின் பலன் 

பாபகர்த்தாரி யோகத்தால் பாதிக்கப்பெறும் வீடுகளுக்கான பொதுப்பலன்கள்

இது ஒரு அவயோகம். அதை முதலில் நினைவில் வையுங்கள்.

ஒரு வீட்டின் இருபுறமும் தீய கிரகங்கள் நின்றால் அதாவது இருந்தால், அந்த வீடு இந்த பாப கர்த்தாரி யோகத்தால் பாதிக்கப்படும்.

1
ஒன்றாம் வீடு - அதாவது லக்கினம் பாபகர்த்தாரி யோகத்தால் பாதிக்கப்பெற்றிருந்தால், அந்த ஜாதகன் அடிக்கடி நோய்வாய்ப்படுவான். விபத்துக்கள் நேரிடும். எப்போதும் ஏதாவது ஒரு மன அழுத்தம் (Tension) இருக்கும்.
2.
இரண்டாம் வீடு: இழப்புக்கள் ஏற்படும். அது பெரும்பாலும் பணம் சம்பந்தப்பட்டதாக இருக்கும். (2nd house is the house of finance and family affairs) குடும்ப வாழ்க்கையில் பிரச்சினைகள் உண்டாகும். குடும்பத்தைவிட்டுப் பிரிந்திருக்க நேரிடும். குடும்பத்தை வைத்து மன அழுத்தங்கள் உண்டாகும்
3.
மூன்றாம் வீடு: மரியாதைக்கு பங்கம் ஏற்படும். உடன்பிறப்புக்களை இழக்க நேரிடும் (Loss of siblings) உடன்பிறப்புக்கள், மற்றும் நண்பர்களுடன் தேவையில்லாத விரோதங்கள் ஏற்படும்.
4.
நான்காம் வீடு: பெற்றோர்களை இழக்க நேரிடும். வாழ்க்கையில் சுகங்களை இழக்க நேரிடும். அமைதியை இழக்க நேரிடும். தண்ணீரில் கண்டங்கள் ஏற்படும்.
5.
ஐந்தாம் வீடு: குழந்தைகளுக்கு, குழந்தைகளை வைத்து ஜாதகனுக்கு சிரமங்கள், கஷ்டங்கள், துன்பங்கள் ஏற்படும். எப்போதும் மன நிம்மதி இருக்காது.
6.
ஆறாம் வீடு: தொழிலில், வேலையில் கஷ்டங்கள் உண்டாகும். விரோதிகளால், விரோதங்களால் அடிக்கடி மனதில் பய உணர்வு மேலோங்கி இருக்கும்.
7.
ஏழாம் வீடு: மனைவி அல்லது கணவன் அடிக்கடி நோய்வாய்ப்படுவான். அவர்களால் சிரமப்பட நேரிடும். அவர்களால் விரையங்கள் ஏற்படும்.
8.
எட்டாம் வீடு: வறுமை நிலவும். கடன்கள் உண்டாகும். நோய்கள் உண்டாகும். சிரமமான வழ்க்கை வாழ நேரிடும். பயணங்கள் அலுப்பை ஏற்படுத்தும்.
9.
ஒன்பதாம் வீடு: தந்தையை இழக்க நேரிடும். வறுமையான சூழல்கள் உண்டாகும். வறுமை வாட்டி எடுக்கும்.
10.
பத்தாம் வீடு: வேலையில், தொழிலில் பல பின்னடைவுகள் ஏற்படும் (There will be set backs in career)
11.
பதினொன்றாம் வீடு: காதுகளில் பிரச்சினைகள் ஏற்படும். கேட்கும் தன்மையில் குறைபாடுகள் உண்டாகும். வீட்டு மாப்பிள்ளையைப் பறிகொடுக்க நேரிடும்.
12
பன்னிரெண்டாம் வீடு: தூக்கமின்மையால் அவதிப்பட நேரிடும். ஆரோக்கியம் கெட்டு மருத்துவமனைக்கு அலைய நேரிடும். பலவிதமான பணச் செலவுகள் ஏற்பட்டு படுத்தி எடுக்கும்.

எல்லாமே பொதுப்பலன்கள். அவரவர்களின் ஜாதகத்தின் தன்மையைப் பொறுத்து இது கூடலாம் அல்லது குறையலாம் அல்லது இல்லாமல் போகலாம். அதையும் மனதில் கொள்ளவும்

என்ன பாடம் பயன் உள்ளதாக இருக்கிறதா?

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13.3.25

Astrology: ஆதி யோகம்! Adhi Yoga

Astrology: ஆதி யோகம்! Adhi Yoga 

புதன், குரு, சுக்கிரன் ஆகிய மூன்று சுபக் கிரகங்களும், ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் இடத்திலிருந்து 6, 7, 8 ஆம் வீடுகளில் இருந்தால், தனித்தனியாகவோ அல்லது சேர்ந்து இருந்தாலோ, அது ஆதியோகம் எனப்படும். அந்த வீடுகள் ஒன்றில் அல்லது இரண்டில் அல்லது மூன்றிலுமே அவைகள் இருந்தாலும் அது இந்த யோகத்தைக் கொடுக்கும்!

பலன்: ஜாதகன் செல்வாக்குடன் இருப்பான். ஆரோக்கியத்துடனும், செல்வங்களுடனும் இருப்பான். நோய், எதிரிகள், பயம் என்று எந்த அவலமும் அவனை அனுகாது!

Adhi Yoga : This is caused if the benefic planets - Mercury, Jupiter and Venus - are situated in the 6th, 7th and 8th houses from the Moon. These planets should be present in any one, two or in all the above-mentioned houses. A native with this Yoga will be very influential, healthy and wealthy. He will possess no fear, disease or enemy.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
”சார், அவற்றில் எனக்கு இரண்டு இருக்கிறது. பாதி யோகம் கிடக்குமா?” என்று யாரும் கேட்க வேண்டாம்! கிடைக்காது.

யானை என்று எழுதுவதற்குப் பதிலாகப் பூனை என்று எழுதிவிட்டேன். இரண்டிலுமே ”னை” என்று இருப்பதால் பாதி மார்க் போடுங்கள் என்று சொல்வதைப் போன்றது அது!

அன்புடன்,
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12.3.25

Astrology அமலா யோகம்! Amala Yoga

Astrology அமலா யோகம்! Amala Yoga 

கோவையில் இருந்து சென்னைக்குப் பயணிக்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். கோவையிலிருந்து சேலம் வரை ஒரு பேருந்திலும், பிறகு சேலத்திலிருந்து கள்ளக்குறிச்சிவரை ஒரு பேருந்திலும், பிறகு கள்ளக்குறிச்சியிலிருந்து விழுப்புரம்வரை ஒரு பேருந்திலும், பிறகு விழுப்புரத்திலிருந்து செங்கல்பட்டுவரை ஒரு பேருந்திலும், அதற்குப்பிறகு அங்கேயிருந்து சென்னைவரை வேறு ஒரு பேருந்திலும் பயணித்தால் பயணம் எப்படியிருக்கும்? அலுத்துவிடாதா?

முறையான பயணம் எப்படி இருக்க வேண்டும்? ஒரு நவீன குளிரூட்டப்பெற்ற வோல்வோ பேருந்தில், இரவு ஒன்பது மணிக்குக் கோவையில் ஏறி, காலை 6 மணிக்குச் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்குச் சென்று இறங்கினால் பயணம் சுகமாக இருக்கும்.

அதைப்போல ஏகப்பட்ட நிபந்தனைகளுடன் உள்ள யோகங்களைவிட, சுருக்கமாக ஒரு வரியில் உள்ள யோகங்கள், ஜோதிடத்தைக் கற்றுக் கொண்டிருப்பவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

இன்று, உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பதற்காக ஒரு வரி விளக்கத்துடன் உள்ள யோகம் ஒன்றைக் கொடுத்துள்ளேன்.

அந்த யோகம் இருப்பவர்களுக்கு, இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைக்கும்
---------------------------------------------------------------------
யோகத்தின் பெயர்: அமலா யோகம். அமலா எனும் வடமொழிச்சொல்லிற்கு சுத்தமானது (pure) என்று பொருள்.

யோகத்தின் அமைப்பு: லக்கினத்திலிருந்து பத்தாம் வீட்டில் சுபக்கிரகம் இருக்க வேண்டும். சந்திரராசிக்குப் பத்தாம் வீட்டில் சுபக்கிரகம் இருந்தாலும் இந்த யோகம் உண்டு

பலன்: ஜாதகனின் வாழ்க்கை வளமாக இருக்கும். ஜாதகன் பெயர், புகழுடன் இருப்பான். நிறைய பொருள் ஈட்டுவான். நல்ல ஆண் வாரிசுகளை உடையவனாக இருப்பான்.

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10.3.25

Astrology : அமரக் யோகம்! Amarak Yoga

Astrology : அமரக் யோகம்! Amarak Yoga 
 
அமரக் என்றால் பானி பூரி, பேல் பூரி போல ஏதோ தின்பொருள் - சாட் அயிட்டம் என்று நினைக்கவேண்டாம். அமரக் என்னும் வடமொழிச்சொல் ஒரு வித அணிகலனைக் குறிக்கும். மயில்பதக்கம் போன்ற தோற்றமுடைய அணிகலனாம்.

பதிவை முழுதாகப் படித்தால், அதை நீங்களும் ஒத்துக்கொள்வீர்கள்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஏழாம் வீட்டதிபதி ஒன்பதாம் வீட்டிலும், ஒன்பதாம் வீட்டதிபதி ஏழாம் வீட்டிலும், இடம் மாறி அமர்ந்திக்கும் நிலைமையே இந்த அமரக் யோகத்தைக் குறிக்கும். மாறி அமர்ந்ததோடு அல்லாமல் வலுவாக வேறு இருக்க வேண்டுமாம். அதாவது ஆட்சி, அல்லது உச்சம் அல்லது அஷடகவர்க் கத்தில் 5ம் அல்லது மேற்பட்ட பரல்களையும் பெற்றிருக்க வேண்டும்

பலன்: ஏழாம் வீட்டோடும் பாக்கிய ஸ்தானத்தோடும் சம்பந்தப்பட்ட யோகம் இது. இந்த யோகம் உள்ள ஜாதகனுக்கு, டக்கராக மனைவி கிடைப்பாள். சினிமாவை வைத்து உதாரணம் சொல்ல விருப்பமில்லை. இதற்கு உதாரணம் சொன்னால், ராமனுக்கு ஒரு சீதை கிடைத்ததைப்போல அல்லது லெட்சுமணனுக்கு ஒரு ஊர்மிளா கிடைத்ததைப் போல அற்புதமான மனைவி கிடைப்பாள்.

அவளைப் பார்த்துப் பார்த்து ஜாதகன் மகிழலாம். வயதானா பிறகும் அருகில் வைத்துக் கொஞ்சலாம். ’உனக்காக நான், எனக்காக நீ’ என்று வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். Made for each other என்று போடுகிறார்களே அப்படியொரு அம்சம் வாழ்க்கையில் இருக்கும்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சார், எனக்கு இந்த அமைப்பு இருக்கிறது. ஆனால் ஒரு கிரகம் ஊற்றிக்கொண்டு விட்டது அதாவது, நீசமாகிவிட்டது - வக்கிரமாகிவிட்டது - அஸ்தனமாகிவிட்டது - கிரகயுத்ததில் உள்ளது - ஆகவே இதில் பாதி அம்சத்தோடாவது ஒரு மனையாள் கிடைப்பாளா? என்று யாரும் கேட்க வேண்டாம். ஜோதிட விதிகளை நமக்காக நாம் மாற்றிக்கொள்ள முடியாது. அதை மனதில் வையுங்கள். இருந்தாலும் சந்தோஷம். இல்லையென்றாலும் சந்தோஷம். நம் முகத்தை ஒரு முறை கண்ணாடியில் பார்த்து மனதைத் தேர்த்திக்கொள்ள வேண்டியதுதான்.

அன்புடன்
வாத்தியார்
=======================================================


வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

9.3.25

Astrology: அரிஷ்ட யோகம் (படுக்கவைக்கும் யோகம்)

Astrology: அரிஷ்ட யோகம் (படுக்கவைக்கும் யோகம்) 

அரிஷ்ட யோகம்
(படுக்கவைக்கும் யோகம்)

நாமாகப் படுத்தால் அதற்கு அர்த்தம் வேறு. வேறு யாராவது அல்லது வேறு ஏதாவது சூழ்நிலையில் நாம் படுக்க நேர்ந்தால் அதன் பொருள் வேறு.

நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நம்மைப் படுக்க வைக்கும் யோகங்கள் உள்ளன. அவற்றைப் பற்றிய பாடம் கீழே உள்ளது.

இவைகள் பொது விதிகள். தனிப்பட்டவர்களின் ஜாதகங்களுக்கு, சுபக்கிரகங்களின் அமைப்பை வைத்துப் பலன்கள் மாறுபடும். ஆகவே அவசரப்பட்டு முடிவிற்கு வராதீர்கள். அதேபோல ஹோம் ஒர்க் நோட்டு புத்தகத்தைத் தூக்கிக் கொண்டு வந்து, என்னுடைய ஜாதகத்தை வைத்து இதற்கு விளக்கத்தை எழுதிக்கொடுங்கள் சார் என்று யாரும் கேட்காதீர்கள். உங்களுக்கு நீங்களே
பாருங்கள். இவை எல்லாம் மேல் நிலைப் பாடங்கள். அதை நினைவில் வையுங்கள்!
----------------------------------------------------------
அரிஷ்ட என்பது வடமொழிச்சொல். அது தீங்கு (evil) என்று பொருள்படும்.

அரிஷ்டயோகம் என்பது தீங்கை விளைவிக்கக்கூடிய தன்மையையுடைய யோகம் என்று பொருள்படும். அதேபோல ஆபத்தானது என்றும் பொருள் படும்.

உதாரணத்திற்குப் ‘பாலஅரிஷ்டம்’ என்பது பால + அரிஷ்ட = குழந்தைக்கு ஆபத்தை விளவிக்கக்கூடிய என்று பொருள்படும்
+++++++++++++++++++++++++++++++++++++++++
அரிஷ்ட யோகம் 1
(அவயோகம்தான்)
தீங்கை விளைவிக்கக்கூடிய கிரக அமைப்பு!

1
லக்கின அதிபதி, 6, 8, அல்லது 12ஆம் அதிபதிகள் எவரேனும் ஒருவருடன் கூட்டணி போட்டிருந்தாலும் அல்லது பார்வையில் இருக்க நேர்ந்தாலும், ஜாதகனுக்கு இந்த யோகம் உண்டு.

பலன்: ஜாதகன் தன்னுடைய உடல் ஆரோக்கியம் கெட்டு அவதிப்படுவான்.

Arishta Yoga:
The Lagna lord is in conjunction or mutual aspect with the 6th, or the 8th, or the 12th house lords (If the lords of the 2nd and 7th houses are involved the effects are more severe).

Result : The person will suffer from bad health (the planets that constitute this Yoga will give more specific information)
-----------------------------------------------------------------
2.
எட்டாம் வீட்டு அதிபதி 12ஆம் வீட்டுக்காரனுடன் கூட்டணி போட்டிருந்தாலும் அல்லது அவனுடைய பார்வையைப் பெற்றிருந்தாலும், ஜாதகனுக்கு இந்த யோகம் உண்டு.

பலன்: ஜாதகன் தன்னுடைய உடல் ஆரோக்கியம் கெட்டு அவதிப்படுவான்.

Arishta Yoga The 8th house lord is conjunct or in mutual aspect with the lord of the 12th house lord (If the lords of the 2nd and 7th houses are involved the effects are more severe).

Result : The person will suffer from bad health (the planets that constitute this Yoga will give more specific information).
--------------------------------------------------
அன்புடன்,
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

7.3.25

Astrology: அஷ்டலெட்சுமி யோகம்!


Astrology அஷ்டலெட்சுமி யோகம்!
Ashtalakshmi Yoga

அஷ்டலெட்சுமி யோகம் என்பது குரு கேந்திர வீடுகள் ஒன்றில் இருந்து (அதாவது 1, 4, 7, 10ஆம் வீடுகள் ஒன்றில்), அத்துடன் ஆறாம் வீட்டில் ராகுவும் இருந்தால் இந்த யோகம் உண்டாகும்.

பலன்: ஜாதகனுக்கு தனிப்பட்ட பெயர், புகழ், வளர்ச்சி, உயர்ச்சி, அமைதி, மகிழ்ச்சி, எதையும் அனுபவிக்கும் பாக்கியம் அனைத்தும் கிடைக்கும்

Ashtalakshmi yoga is formed when Jupiter is in 1st,, 4th, 7th and 10th house and Rahu in 6th house. Ashtalakshmi yoga will give the individual name,fame, prosperity, and peaceful, enjoyment in life.

எட்டு மடங்கு யோகம் என்பார்கள் Yoga for the Eightfold Prosperity (Ashta Laksmi Yoga )

அன்புடன் 
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

5.3.25

Astrology: பழமையான ஜோதிட நூல்கள்

Astrology: பழமையான ஜோதிட நூல்கள்

காத்திருந்த அனைவருக்கும் வாத்தியாரின் கனிவான வணக்கம். நன்றி!

மீண்டும் பாடங்களைத் துவங்குவோம்!

----------------------------------------------------

நான் பள்ளியில் படிக்கின்ற காலத்தில் சில ஆசிரியர்கள்  பாடநூலை (Text Book) வைத்துப் பாடம் நடத்துவார்கள். பாடங்களுக்கு மற்றும் செய்யுள்களுக்கு அவர்கள் சொல்கின்ற விளக்கங்களைக் குறித்துக் கொள்ளச் சொல்வார்கள். உரை நூல்களை அவர்கள் விரும்ப மாட்டார்கள்.

ஆனால் சில ஆசிரியர்கள் உரைநூல்களைப் படிக்கச் சொல்லி  விடுவார்கள். அப்போதெல்லாம் கோனார் நோட்ஸ் என்னும் உரைநூல்கள் மிகவும் பிரசித்தம். 

ஆனால் என்னதான் அல்லது எதைத்தான் படித்தாலும், திறமையுள்ள ஆசிரியர் சிறப்பாக விளக்கம் சொல்லி நடத்தும் பாடங்கள் அப்படியே மண்டைக்குள் போய் நாற்காலி போட்டு அமர்ந்து கொண்டுவிடும். அதற்கு ஈடு இணை கிடையவே கிடையாது. 

காலம் காலமாக பல உரையாசிரியர்கள் எழுதி வைத்த ஜோதிட நூல்கள்தான் நமக்குக் கிடைத்துள்ளன. அவர்களின் பணி போற்றுதலுக்கு உரியது.

பனை ஓலை ஏடுகளில் இருந்தவை அச்சுத் தொழில் வந்த பிறகுதான் புத்தகங்களாக வெளிவந்து பரவலாகப் பலருக்கும் கிடைக்கத் துவங்கியது.

அதிலும் குமாரசுவாமியம், கேரள மணிகண்ட ஜோதிடம், புலிப்பாணி ஜோதிடம் போன்ற நூல்களை அப்படியே அவற்றில் உள்ள செய்யுள் வடிவிலேயே வெளியிட்டார்கள். படிப்பவனுக்குப் பைத்தியம் பிடிக்காத குறையாகிவிடும். அத்தனை கடினமான தமிழ் 

இருந்தாலும் தமிழில் பாண்டித்யம் உள்ளவர்கள் அவற்றைத் தேடிப் பிடித்துப் படிக்கலாம். 

உங்கள் பயன்பாட்டிற்காக சில முக்கிய ஜோதிட நூல்களின் பெயர்களைத் தொகுத்துக் கீழே கொடுத்துள்ளேன்.

----------------------------------------------------------------------------

ஜோதிட மூல நூல்கள் சிலவற்றின் பெயர்கள் - எழுதியவருடைய பெயருடன் உள்ளது! 

நூலின் பெயர் - ஆசிரியர்

1.பிருஹத் பராசர ஹோரா - பராசர மகரிஷி

2.பிருஹத் ஜாதகம் - வராஹமிஹிரர்

3.உத்தர காலமிர்தம் - மகாகவி காளிதாசர்

4.சாராவளி - கல்யாண வர்மர்

5.பலதீபிகை - மந்திரேஸ்வரர்

6.ஸ்ரீபதி பத்ததி - ஸ்ரீபதி

7.ஜாதகலங்க்காரம் - கீரணூர் நடராஜர்

8.குமாரசுவாமியம் - குமாரசுவாமி தேசிகர்

9.கெளசிக சிந்தாமணி - கெளசிக மகரிஷி

10.ஜாதக கர்க ஹோரை - கர்க மகரிஷி

11.ஜாதக பாரிஜாதம் - வேதாந்த தேசிகர் சர்வார்த்த சிந்தாமணி - வெங்கடேச தெய்வக்ஞர்

12.சுகர் பெருநாடி - டி.எஸ்.நாராயணஸ்வாமி

13.சுந்தர சேகரம் - அய்யாசாமி பிள்ளை

14.சூடாமணி உள்ளமுடையன் - திருக்கோட்டி நம்பி

15.ஜோதிட ஆசான் - மா. தெய்வசிகாமணி

16.ஜோதிட கடலகராதி - நா. அரங்கசாமி பிள்ளை

17.ஜோதிட பேரகராதி - எஸ்.கூடலிங்கம் பிள்ளை

18.வீமேசுவர உள்ளமுடையான் - இராமலிங்க குருக்கள்

19.பெரிய வருசாதி நூல் - மார்க்கலிங்க ஜோதிடர்

20.ஹோரா சாரம் - ஸ்ரீ பிருதுயஸ்

21.மங்களேசுவரியம் - .வைத்தியலிங்க ஆசாரியார்

22.ஜீனேந்திர மாலை - உபேந்திராச்சரியார்

23.காலச்சக்கரம் - தில்லை நாயகப் புலவர்

 இவைகளில் சில இணையத்தில் கிடைக்கும். அதே பெயரில் ஆங்கிலத்திலும் கிடைக்கும். ஆங்கிலத்தில் படிக்கும்போது கடின ஆங்கிலம் இலகுவான ஆங்கிலம் என்கின்ற பேதம் இருக்காது. அதை மனதில் கொள்ளுங்கள்1 

அன்புடன்

வாத்தியார்

=====================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4.2.25

Astrology: வெள்ளைக்காரன் என்ன சொல்லிக் கொடுத்துவிட்டுப் போனான்?

Astrology: வெள்ளைக்காரன் என்ன சொல்லிக் கொடுத்துவிட்டுப் போனான்? 

எனக்கு வரும் மின்ஞசல்களில் சில இப்படியிருக்கும்: 

சார், என் தாயார் சென்ற வருடம் 30.11.2011 அன்று காலமானார்கள். அவர்களுக்குத் தலைத் திதியைக் (ஆண்டுத் திதியைக்) கொடுக்க விருபுகிறேன். இந்த ஆண்டு எந்தத் தேதியில் அதைச் செய்ய வேண்டும்?” 

அவர்கள் இறந்தபோது, அன்றையத் திதியக் குறித்து வைத்துக்கொளாததினால் ஏற்படும் கோளாறு இது

 அன்றையத் தேதியில் வளர்பிறை சஷடி திதி

 இந்த ஆண்டு அதே ஐப்பசி வளர்பிறை சஷ்டித் திதி 19.11.2012 அன்று வரும். அன்றையத் தேதியில் செய்ய வேண்டும்

 பிறந்த நாளில் கேக் வெட்டிக் கொண்டாட வேண்டுமென்றால், வெள்ளைக்காரன் சொல்லிக் கொடுத்துவிட்டுப்போனபடி நீங்கள் பிறந்த ஆங்கிலத் தேதியில் கொண்டாடலாம். ஆனால் கோவிலுக்குச் சென்று ஈசனுக்கு அர்ச்சனை செய்து பிரார்த்தனை செய்ய வேண்டுமென்றால், தமிழ் நாட்காட்டியின்படி நீங்கள் பிறந்த தமிழ் மாதத்தில் நீங்கள் பீறந்த நட்சத்திரம் எந்தத் தேதியில் வருகிற்தோ, அந்தத் தேதியில் தான் செய்ய வேண்டும்!

 உதாரணத்திற்கு, நீங்கள் கார்த்திகை மாதம் ரோஹிணி நட்சத்திரத்தில், பிறந்தவர் என்றால், அந்தத் தேதியில்தான் ஒவ்வொரு வருடமும் அதைச் செய்ய வேண்டும்.

 அன்புடன்

வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

1.2.25

Astrology: சனி முதல் நிலை தீய கிரகம். இயற்கையிலேயே தீய கிரகம்

Astrology: சனி முதல் நிலை தீய கிரகம். இயற்கையிலேயே தீய கிரகம்

சனியைப்போல் கொடுப்பாருமில்லை. கெடுப்பாருமில்லை. சனி முதல் நிலை தீய கிரகம். இயற்கையிலேயே தீய கிரகம்

அப்புறம் எப்படிக் கொடுப்பான்? 

அவன்தான் ஆயுள்காரகன். அவன்தான் கர்மகாரகன் (authority for work/profession) அதை மறந்துவிடாதீர்கள்.

அந்த இரண்டு செயல்களைத் தவிர மற்ற இடங்களில், சனியின் நிலைமை என்ன?

உதாரணத்திற்கு சனி நான்காம் வீட்டில் இருந்தால், ஜாதகனுக்கு தன் தாயோடு நல்ல உற்வு இருக்காது. அல்லது அவனுடைய தாயால் அவனுக்கு எந்தவிதப் பயனும் இருக்காது. நான்காம் இடம் கல்விக்கான இடமும் கூட். அங்கே வந்து அமரும் சனி, ஜாகனின் கல்வியில் கையை வைத்துவிடுவான். ஜாதகனுக்குக் கல்வியில் ஆர்வம் இல்லாமல் போய்விடும். ஒரு பட்டப் படிப்பை முடிப்பத்ற்குள் தாவு தீர்ந்துவிடும். அத்துடன் அது சுகத்திற்கான இடமும் ஆகும். ஜாதகனுக்கு சுகக்கேடு. கையில் காசு இருந்தாலும், சொத்து இருந்தாலும், அவனால அவற்றை அனுபவித்து சுகமாக இருக்க முடியாது.

எல்லோருக்கும் அப்படியா?

இல்லை!

சனி ஜாதகத்தில் உச்சம் பெற்று இருந்தாலோ அல்லது சொந்த வீட்டில், ஆட்சி வீட்டில் இருந்தாலோ, நன்மைகளைச் செய்வான். மேற்சொன்ன கஷ்டங்கள் எல்லாம் இருக்காது. ஆனால் சனி, தான் உச்சம் பெற்றதற்கான முழுப்பலனையும் தருவதற்கு அல்லது ஆட்சி பலம் பெற்றதற்கான முழுப்பலனையும் தருவதற்கு, அவர் சுபக்கிரகங்களான சுக்கிரன் அல்லது குருவின் சேர்க்கையையோ அல்லது பார்வையையோ பெற்றிருக்க வேண்டும்.

4ஆம் வீடு மட்டுமல்ல, மற்ற எல்லா வீடுகளுக்கும் அதுதான் பலன்.

ஆகவே உங்கள் ஜாதகத்தைப் பார்க்கும்போது அதைப் பாருங்கள்.
 சனியைப் பற்றிய மேலதிகத் தகவல்கள் பழைய பாடங்களில் நிறைய உள்ளன. அவற்றைப் படியுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13.1.25

Astrology யோகங்கள் ஒரு விளக்கம்!


Astrology யோகங்கள் ஒரு விளக்கம்! 

யோகா எனும் சொல் யுஜ் என்னும் வடமொழிச் சொல்லின் விரிவாக்கம். யுஜ் என்பதற்கு கூட்டு (unite) - கூட்டாக என்னும் பொருள் வரும்.ராஜா என்பதற்கு அரசன் என்று பொருள். ராஜயோகம் என்றால் அரசனுக்கு நிகரான யோகம் என்று பொருள் 

ராஜயோகம் என்பதற்கு, ஜாதகனுக்கு அந்தஸ்தைத் தரக்கூடிய கிரகங்களின் கூட்டணி என்று எடுத்துக் கொள்ளலாம். 

அதற்கு எதிர் மாறாக அவ யோகம், அரிஷ்ட யோகம், தரித்திர யோகம் என்று மூன்று விதமான - ஜாதகனுக்குத் தீமையைச் செய்யக்கூடிய யோகங்களும் உண்டு! 

அவ என்பது கெட்டது (Ava means bad) அரிஷ்டம் என்பது நோயைக் குறிப்பது (Arishta means one causing diseases) தரித்திரம் என்பது வறுமையைக் குறிப்பது (Daridra means poverty) 

ராஜயோகங்களிலும் மூன்று பிரிவுகள் உள்ளன

1.  தன ராஜயோகம் (yogas for wealth)

2. கீர்த்தி ராஜயோகம் (yogas for name and fame)

3. சன்யாச ராஜயோகம் (reigning as a religious head) 

சன்யாசத்தில் ராஜயோகமா...ஹி.ஹி என்று சிரிக்க வேண்டாம். அரசர்கள் வந்து வணங்கி விட்டுப் போகும் அளவிற்கு சித்தியை பெற்ற சன்யாசிகள் உண்டு. இருந்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு ரமண மஹரிஷியைச் சொல்லலாம். அவரை, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் பலமுறை தமிழகத்திற்கு வந்து வணங்கிவிட்டுப்போயிருக்கிறார். அதை நினைவில் வையுங்கள்

------------------------------------------------------

1. தன ராஜயோகம் (yogas for wealth) 2,6,10, மற்றும் 11ம் வீட்டதிபதிகளின் சேர்க்கை அல்லது பரிவர்த்தனையால் இந்த யோகம் ஏற்படும்

 

2. கீர்த்தி ராஜயோகம் (yogas for name and fame) இது திரிகோண அதிபதிகளூம், கேந்திர அதிபதிகளும் சேர்வதால் உண்டாகும் 

3. சன்யாச ராஜயோகம் (reigning as a religious head) 9, 12, 10 and 5ஆம் அதிபதிகள் சேர்க்கை அல்லது பார்வைகளால் இந்த யோகத்தைக் கொடுப்பார்கள் 

பணம், புகழ், மதிப்பு, மரியாதை மற்றும் செல்வாக்கு போன்றவைகள் தடையில்லாமல் ஜாதகனுக்குக் கிடைக்க இந்த யோகங்கள் அவசியம். 

இந்த யோகம், ராசியிலும், நவாம்சத்திலும் இருக்க வேண்டும். இல்லையென்றால் இந்த யோகங்கள் உரிய பலனைத் தராது. அதை நினைவில் வையுங்கள்.

 

அன்புடன்

வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11.1.25

Astrology எதற்கு முதல் மரியாதை?


எதற்கு முதல் மரியாதை?

உச்சம் பெற்ற கிரகங்களால் ஜாதகனுக்கு என்ன கிடைக்கும்சந்திரனும் ராகுவும் ஓன்றாயிருப்பின் சந்திர சண்டாள யோகமாகும். However, சந்திரனும் ராகுவும் ரிசப ராசியில் ஓன்றாயிருப்பின் அது நீசபங்க  ராஜயோகமாகும். அப்படியிருப்பின் எந்த யோகத்தை எடுக்கவேண்டும். நீசபங்க ராஜ யோகத்திற்குத்தான் முதல் மரியாதை!

அன்புடன்

வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

5.1.25

Astrology: தீராத கடன் எப்போது தீரும்?

Astrology:  தீராத கடன் எப்போது தீரும்?

ராகு திசை முடிந்தால், குரு திசையின் துவக்கத்தில் கடன் உபத்திரவங்கள் குறையத் துவங்கி, சில மாதங்களில்  மொத்தமாகத் தீர்ந்து விடும். ஒரே நாளிலா கடன் ஏற்பட்டது? இல்லைதானே? அதுபோல ஒரே நாளில் கடன் தீராது. கொஞ்சம் கொஞ்சமாகத் தீரும். அதை மனதில் வையுங்கள்

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4.1.25

Astrology ஆட்சி பலம்

 Astrology ஆட்சி பலம் 
கிரகங்கள் பரிவர்த்தனை பெறும்போது பலன் சிறப்பாக இருக்குமே. 
அதுபோல ஆட்சி பலம் பெற்று இருக்கும்போதும் 
சிறப்பாக இருக்குமே!
நீசம் என்பது செல்லாத காசிற்குச் சமம். செல்லாத காசு - கையில் இருந்தால் என்ன? 
பையில் இருந்தால் என்ன? - எந்த நிலையில் இருந்தால்  என்ன? ஒரு பலனும் இல்லை! 
நீசத்தன்மையால் வலிவிழந்த கிரகங்கள் எதற்குக் காரகனோ அந்தக் காரகம் (செயல்) அடிபட்டுப்போயிருக்கும்!

Anbudan
Vaaththiyar

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!