மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

29.4.25

Astrology: நான்காம் வீடும் அதன் அதிபதி அமர்ந்த இடத்திற்கான பலன்களும்

Astrology: நான்காம் வீடும் அதன் அதிபதி அமர்ந்த இடத்திற்கான பலன்களும் 
4th House and placement benefit of its lord

கிரகங்களின் அமர்விடப் பலன்கள்:
Placement benefits of planets!

கிரகங்களின் அமரும் இடத்தைவைத்துப் பலன்கள் வேறுபடும். அவற்றை விவரமாகப் பார்ப்போம்!

இப்போது நான்காம் வீட்டையும், அதன் அதிபதி அமரும் இடத்திற்கான பலன்களையும் பார்ப்போம்!

கிரகங்கள் அவ்வாறு அமரும் இடமானது அவற்றின் உச்ச வீடாக அல்லது ஆட்சி வீடாக இருந்தால் சுபமான பலன்கள் உண்டாகும். இதை மனதில் வையுங்கள்!

1.
நான்காம் வீட்டு அதிபதி இலக்கினத்தில் அமர்ந்திருந்தால், ஜாதகன் மாளிகை போன்ற பெரிய வீட்டில் வாசம் செய்வான். நல்ல கல்விமானாக இருப்பான். வாகனங்கள் முதலிய எல்லா செளகர்யங்களையும், சுகங்களையும் பெற்றவனாக இருப்பான்.
2
நான்காம் அதிபதி இரண்டாம் வீட்டில், அதாவது இலக்கினத்திற்கு அடுத்த வீட்டில் இருந்தால், தாயாருக்கு பீடையாகும். ஆனால் தாயாரின் ஆதரவும், அன்பும் முழுமையாகக் கிடைக்கும். கல்விக்குக் குறைவிருக்காது. தாய்வழி உறவினர்களின் ஆதரவு இருக்கும்.
3
நான்கிற்கு உரியவன் மூன்றாம் வீட்டில் இருந்தால் தாயாருக்கு பீடை. அத்துடன் வீடு, வாகனம் குறைபாடுகளும் இருக்கும். அதாவது அவைகள் எல்லாம் கிடைப்பதற்குப் பல தடைகள் உண்டாகும்.
4
நான்கிற்கு உடையவன், நான்கிலேயே இருந்தால் எல்லா நன்மைகளும் உண்டு.
5.
நான்கிற்கு உடையவன், ஐந்தில் இருந்தால், ஜாதகனுக்கு வீடு, மனை, வாகனம் போன்ற வசதிகளுக்குக் குறைவிருக்காது. அத்துடன் ஜாதகன் பல புண்ணிய ஸ்தலங்களுக்கு யாத்திரை சென்று வருவான். கல்விமானாக இருப்பான்.
6
நான்காம் வீட்டுக்காரன் ஆறில் இருந்தால், தாயாருக்குப் பீடை. வீடு, வாகன முடக்கங்கள் ஏற்படும். ஜாதகன் பல நஷ்டங்களையும், சுகக் கேடுகளையும் அனுபவிக்க நேரிடும்.
7
நான்கிற்கு உரியவன் ஏழில் இருந்தால், தாயாருக்கு அதிர்ஷ்டம் உண்டாகும். வீடு, வாகன, சுகம் துக்கம் எல்லாம் சமபலனாகக் கலந்து கிடைக்கும். அதாவது வரும்.போகும்.
8
நான்கிற்கு உரியவன் எட்டில் இருந்தால், தாயாரால், ஜாதகனுக்கு இடையூறுகள், கஷ்டங்கள் உண்டாகும். சனி, ராகு அல்லது கேது இந்த இடத்துடன் சம்பந்தப்பட்டால், ஜாதகனுக்கு அங்கக் குறைபாடு உண்டாகும்.
9.
நான்கிற்கு உரியவன் ஒன்பதில் இருந்தால், ஜாதகன் வீடு, பூமி, வாகனம் உடையவனாக இருப்பான். சுகபோகங்கள் உடையவனாகவும், குலபாக்கியம் உடையவனகவும் இருப்பான்.
10
நான்கிற்கு உரியவன் பத்தில் இருந்தால், வீடு, வாகனம், பூமி விருத்திகள் உண்டாகும். இத்துடன் 9 & 11ம் வீடுகளுக்கு உரியவர்களின் தொடர்பு உண்டானால்,  புதையலுக்கு நிகரான லாபம் உண்டாகும்.
11
நான்கிற்கு உரியவன் பதினொன்றில் இருந்தால் தாயாருக்குக் கண்டம். ஜாதகன் சுகங்கள் நிறைந்தவனாக இருப்பான். பூமி, மற்றும் வியாபாரத்தின் மூலம் பெருத்த லாபம் உண்டாகும்
12
நான்கிற்கு உரியவன் பன்னிரெண்டில் இருபது நன்மையான அமைப்பு அல்ல! ஜாதகனுக்கு சுகக் குறைவுகள் உண்டாகும். பூமி விரையம், கஷ்டங்கள் உடையவனாக ஜாதகன் இருப்பான்.

அன்புடன்,
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

28.4.25

Astrology: ஐந்தாம் வீடும் அதன் அதிபதி அமர்ந்த இடத்திற்கான பலன்களும்

Astrology: ஐந்தாம் வீடும் அதன் அதிபதி அமர்ந்த இடத்திற்கான பலன்களும்

5th House and placement benefit of its lord

கிரகங்களின் அமர்விடப் பலன்கள்:
Placement benefits of planets!

கிரகங்களின் அமரும் இடத்தைவைத்துப் பலன்கள் வேறுபடும். அவற்றை விவரமாகப் பார்ப்போம்!

இப்போது ஐந்தாம் வீட்டையும், அதன் அதிபதி அமரும் இடத்திற்கான பலன்களையும் பார்ப்போம்!

கிரகங்கள் அவ்வாறு அமரும் இடமானது அவற்றின் உச்ச வீடாக அல்லது ஆட்சி வீடாக இருந்தால் சுபமான பலன்கள் உண்டாகும். இதை மனதில் வையுங்கள்!

1.
ஐந்தாம் வீட்டு அதிபதி இலக்கினத்தில் அமர்ந்திருந்தால், ஜாதகன் கூர்மையான புத்தியை உடையவன். அதிபுத்திசாலியாக இருப்பான். கல்விமானாக இருப்பான். புத்திர பாக்கியம் உடையவனாக இருப்பான். பிரபுக்களைப் போன்று நன்மையான வாழ்க்கையை உடையவனாக இருப்பான். தூய்மையான எண்ணம் உடையவனாக இருப்பான்.
2
ஐந்தாம் அதிபதி இரண்டாம் வீட்டில், அதாவது இலக்கினத்திற்கு அடுத்த வீட்டில் இருந்தால், தன் பிள்ளைகளால் பல நன்மைகள் (குறிப்பாக தனவரவு) உடையவனாக இருப்பான். கல்விமானாக இருப்பான். சுகபோகம், நல்ல குடும்ப வாழ்க்கை உடையவனாக இருப்பான்.
3
ஐந்திற்கு உரியவன் மூன்றாம் வீட்டில் இருந்தால், புத்திர தோஷம் உடையவன். புத்திரர்களால் நன்மை இல்லாத நிலை உண்டாகும். தெய்வீக வழிகளில் பற்று உடையவனாக இருப்பான்.
4
ஐந்திற்கு உடையவன், நான்கில் இருந்தால், புத்திர பாக்கியம், குடும்ப கெளரவம் உடையனாக ஜாதகன் இருப்பான். ராஜபோக வாழ்வு, அரசு ஆதரவு உடையவனாக ஜாதகன் இருப்பான்.
5.
ஐந்திற்கு உடையவன், ஐந்தில் ஆட்சி பெற்று நல்ல நிலைமையில் இருந்தால், ஜாதகனுக்குப் புத்திக்கூர்மை, புத்திர பாக்கியம், அதிகாரம், வெகுமானம், பெரியவர்களின் அனுகூலம், கல்வி, பதவி, விசுவாசம், செல்வம், செல்வாக்கு என்று அனைத்தும் இருக்கும்!
6
ஐந்தாம் வீட்டுக்காரன் ஆறில் இருந்தால், புத்திர தோஷம், புத்திர விரோதம், புத்திக்குறைவு,ஞாபகசக்திக் குறைவு,ரோகம், விரோதங்கள் நிறைந்தவனாக ஜாதகன் இருப்பான். இந்த ஆறாம் வீடு புதனின் வீடாக இருந்தால் புத்திரர் இல்லை.
7
ஐந்திற்கு உரியவன் ஏழில் இருந்தால், புத்திர பாக்கியம், பலவித செளகர்யங்களை உடையவனாக ஜாதகன் இருப்பான். கல்விமானாக இருப்பான்.
8
ஐந்திற்கு உரியவன் எட்டில் இருந்தால், புத்திர, சந்தான, உறவினர் தோஷம் உண்டு. பலவிதமான கஷ்டங்கள் இருக்கும். ராகு அல்லது கேது சம்பந்தப்பட்டால், அங்க ஹீனமான குழந்தைகள் இருக்கும்.
9.
ஐந்திற்கு உரியவன் ஒன்பதில் இருந்தால், புத்திரர்களால் உதவி,பிரபுக்களால் அனுகூலம், சுக செளகர்யங்கள், ராஜ ஜீவனம் உடையவனாக ஜாதகன் விளங்குவான்.
10
ஐந்திற்கு உரியவன் பத்தில் இருந்தால், இராஜ சன்மானம், புத்திர பாக்கியம், பிரபுக்கள் தயவு, ஆத்மஞானம், தெய்வ வழிபாடு நிறைந்தவனாக ஜாதகன் இருப்பான்.
11
ஐந்திற்கு உரியவன் பதினொன்றில் இருந்தால், புத்திர, சந்தானங்களால் நலம் உண்டகும். குடும்ப அமைதியும், பிரபுக்கள் தயவும், செல்வம், செல்வாக்கு உடையவனாக ஜாதகன் இருப்பான்.
12
ஐந்திற்கு உரியவன் பன்னிரெண்டில் இருப்பது நன்மையான அமைப்பு அல்ல! தனசேதமும், மனைவிக்கு கர்ப்ப சேதமும், ஆரோக்கியக் குறைவும், புத்திர தோஷமும் உடையவனாக ஜாதகன் இருப்பான். அமைதி இல்லாத வாழ்க்கை அமைந்துவிடும்

அன்புடன்,
வாத்தியார்
----------------------------------------------

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

27.4.25

Astrology: ஆறாம் வீடும் அதன் அதிபதி அமர்ந்த இடத்திற்கான பலன்களும்

Astrology: ஆறாம் வீடும் அதன் அதிபதி அமர்ந்த இடத்திற்கான பலன்களும்

6th House and placement benefit of its lord

கிரகங்களின் அமர்விடப் பலன்கள்:
Placement benefits of planets!

கிரகங்களின் அமரும் இடத்தைவைத்துப் பலன்கள் வேறுபடும். அவற்றை விவரமாகப் பார்ப்போம்!

இப்போது ஆறாம் வீட்டையும், அதன் அதிபதி அமரும் இடத்திற்கான பலன்களையும் பார்ப்போம்!

கிரகங்கள் அவ்வாறு அமரும் இடமானது அவற்றின் உச்ச வீடாக அல்லது ஆட்சி வீடாக இருந்தால் சுபமான பலன்கள் உண்டாகும். இதை மனதில் வையுங்கள்!

1.
ஆறாம் வீட்டு அதிபதி இலக்கினத்தில் அமர்ந்திருந்தால், கடன், எதிரிகள், வியாதி, போட்டிகள், விஷத்தால் அவதிகள் உடையவனாக ஜாதகன் இருப்பான். திருட்டுக் கொடுத்தல், சிறைப்படுதல், தண்டனைகள் உடையவனாக ஜாதகன் இருப்பான்.
2
ஆறாம் அதிபதி இரண்டாம் வீட்டில், அதாவது இலக்கினத்திற்கு அடுத்த வீட்டில் இருந்தால், தனநாசம், பல், கண்நோய், கல்வித்தடை, வாக்கில் தடை பேச்சினால் விரோதங்கள் உடையவனாக ஜாதகன் இருப்பான்.
3
ஆறிற்கு உரியவன் மூன்றாம் வீட்டில் இருந்தால், சகோதரர் வழியில் விரோதம், குடும்பத்தில் குழப்பங்கள் உடையவனாக ஜாதகன் இருப்பான். கடன், காது சம்பந்தப்பட்ட நோய் உடையவனாக இருப்பான்.
4
ஆறிற்கு உடையவன், நான்கில் இருந்தால், சொத்துக்களில் வில்லங்கம், தாயாரின் அனுகூலமின்மை, சிரமங்கள் நிறைந்த வாழ்க்கை அமைந்தவனாக ஜாதகன் இருப்பான்.
5.
ஆறிற்கு உடையவன், ஐந்தில் இருந்தால், புத்திர நாசம், பாப குணம், இருதய நோய், வஞ்சகத்தன்மை உடையவனாக ஜாதகன் இருப்பான். பெரிய மனிதர்களின் விரோதம், பிறரை ஏமாற்றி வாழும் வாழ்க்கை அமைந்தவனாக ஜாதகன் இருப்பான்.
6
ஆறாம் வீட்டுக்காரன் ஆட்சி பெற்று சுபக்கிரகமாய் ஆறில் இருந்தால், தீராத கடனும், சத்துருக்கள் உடையவனாகவும் ஜாதகன் இருப்பான். கலகம், வறுமை, ராஜதண்டனை உடையவனாக இருப்பான்.  பாபியானால் இது எல்லாம் இருக்காது.
7
ஆறிற்கு உரியவன் ஏழில் இருந்தால், நன்மையான அமைப்பு இல்லை. ஜாதகன் எல்லாவித கஷ்டங்களுக்கும் ஆளாக நேரிடும்
8
ஆறிற்கு உரியவன் எட்டில் இருந்தால், வறுமை, வருமானம் இல்லாத நிலை உண்டாகும் திருடர்களால் நஷ்டம், தீயினால் நஷ்டம், சண்டை சச்சரவுகள் உடையவனாகவும் இருப்பான்.
9.
ஆறிற்கு உரியவன் ஒன்பதில் இருந்தால், தந்தைக்குப் பீடை, தந்தைவழிச் சொத்துக்கள் நாசமடையும் தன்மை, சண்டை சச்சரவுகள் ராஜதண்டனை உடையவனாகவும் ஜாதகன் இருப்பான்.
10
ஆறிற்கு உரியவன் பத்தில் இருந்தால், பிறரை மோசம் செய்து வாழும் வாழ்க்கை உண்டாகும். பிறர் பொருளின் மேல் ஆசை, திருட்டுத்தனம் மிகுந்தவனாக ஜாதகன் இருப்பான். சோம்பல், வம்பு பேசுதல், ஆகியவற்றை உடையவனாக இருப்பான். சிலருக்கு ராஜதண்டனைகள் ஏற்படும்.
11
ஆறிற்கு உரியவன் பதினொன்றில் இருந்தால், எந்தத் தொழில் செய்தாலும் லாபம் இல்லாமை, மூத்தோரிடத்தில் பகைமை, மற்றும் கடன், கஷ்டங்கள் உரியவனாக ஜாதகன் இருப்பான்.
12
ஆறிற்கு உரியவன் பன்னிரெண்டில் இருப்பது நன்மையான அமைப்பு அல்ல! அயன, சுக நஷ்டம், கண் வியாதி உடையவனாக ஜாதகன் இருப்பான். தீய வழிகளில் அவனுடைய பொருட்கள், பணம் சேதமாகும். நித்திரைக் குறைவு உண்டாகும்

அன்புடன்,
வாத்தியார்
----------------------------------------------

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

26.4.25

Astrology: பல கிரகங்கள் ஆட்சி பெற்றால் தரும் பலன்கள்

Astrology: பல கிரகங்கள் ஆட்சி பெற்றால் தரும் பலன்கள்

சிலருக்கு ஜாதகத்தில் ஒரு கிரகம் ஆட்சி பெற்றிருக்கும். அதுவும் லக்கினாதிபதி ஆட்சி பெற்றிருந்தால் நல்லது. அதுவும் ஆட்சி பெற்ற லக்கினாதிபதி திரிகோண இடங்களில் இருந்தால் மிகவும் நல்லது. சிலருக்கு ஒன்றிற்கு மேற்பட்ட கிரகங்கள் ஜாதகத்தில் ஆட்சி பெற்று இருக்கும். ஆட்சி பெற்ற கிரகங்கள் தங்களுடைய மகா திசைகளில் அல்லது புத்திகளில் உரிய பலன்களை வாரி வழங்கும். அதுவரை பொறுத்திருக்க வேண்டும்.!

இப்போது கிரகங்கள் ஆட்சி பெற்றதற்கான பலன்களைப் பார்ப்போம்!

பல கிரகங்கள் ஆட்சி பெற்றால் தரும் பலன்கள்

இரண்டு கிரகம் ஆட்சி பெற்றால், உறவினர்களால் பாராட்டப்படுவார். புகழ் உடையவராவார்.

மூன்று கிரகம் ஆட்சி பெற்றால், கல்வி, செல்வம், குழந்தைகள் புகழ் உடையவர்.

நான்கு கிரகம் ஆட்சி பெற்றால், நகரத்தின் தலைவராக,  நல்ல செயல்கள் உடையவராக, புகழ் உடையவராக இருப்பார்.

ஐந்து கிரகம் ஆட்சி பெற்றால், அரசனைப் போல வாழ்வு பெறுவார்.

ஆறு கிரகம் கிரகம் ஆட்சி பெற்றால், சிறந்த அரசாளும் யோகம் உடையவர்.

ஏழு கிரகம் ஆட்சி பெற்றால், அரசராக இருப்பார். நாட்டை ஆள்பவராக இருப்பார்.

உங்களுக்கு ஜாதகத்தில் எத்தனை கிரகங்கள் ஆட்சி பெற்றுள்ளன என்று பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

அன்புடன்
வாத்தியார்
==================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

25.4.25

Astrology: பல கிரகங்கள் நட்பு வீட்டில் இருந்தால் தரும் பலன்கள்.

Astrology: பல கிரகங்கள் நட்பு வீட்டில் இருந்தால் தரும் பலன்கள்.

சிலருக்கு ஜாதகத்தில், சில கிரகங்கள் நட்பு வீடுகளில் இருக்கும். நட்பு வீடுகளில் இருக்கும் கிரகங்கள் நன்மை செய்பவை. ஒன்றிற்கு மேற்பட்ட கிரகங்கள் ஜாதகத்தில் நட்பு வீடுகளில் இருந்தால், அவ்வாறு நட்பு வீடுகளில் இருக்கும் கிரகங்கள் தங்களுடைய மகா திசைகளில் அல்லது புத்திகளில் உரிய பலன்களை வாரி வழங்கும். அதை மனதில் வையுங்கள்!

இப்போது கிரகங்கள் ஆட்சி பெற்றதற்கான பலன்களைப் பார்ப்போம்!

பல கிரகங்கள் நட்பு வீட்டில் இருந்தால் தரும் பலன்கள்.

இரண்டு கிரகம் நட்பு வீட்டில் இருந்தால், நல்ல ஒழுக்கமும், நல்ல நண்பர்களையும் உடையவர்.

மூன்று கிரகங்கள்  நட்பு வீட்டில் இருந்தால், நல்ல குணமும், உறவினர்களைக் காப்பாற்றும் குணமும் உடையவர்

நான்கு கிரகங்கள்  நட்பு ஆனால், புகழும், இறையுணர்வும் உடையவர்.

ஐந்து கிரகங்கள்  நட்பு  ஆனால், அரசு உயர் பதவியும், செல்வமும், தலைவராகவும் இருப்பார்.

ஆறு கிரகங்கள்  நட்பு ஆனால், கல்வி, செல்வம், வாகனம், புகழ் மற்றும் அரசபோக வாழ்வு உடையவர்.
 
ஏழு கிரகங்கள்  நட்பு ஆனால், வாகனங்கள், வேலையாட்கள், அரசனுக்கு நிகரான வாழ்வு உடையவர்.

உங்களுக்கு ஜாதகத்தில் எத்தனை கிரகங்கள் நட்பு வீடுகளில் உள்ளன என்பதைப் பார்த்துக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்

அன்புடன்
வாத்தியார்
==================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

23.4.25

Astrology: பகை வீடுகளில் அமர்ந்திருக்கும் கிரகங்கள்

Astrology: பகை வீடுகளில் அமர்ந்திருக்கும் கிரகங்கள்

பகை வீடுகளில் அமர்ந்திருக்கும் கிரகங்களால் ஏற்படும் பலன்கள்

இரண்டு கிரகங்கள் பகை பெற்றால் எப்போதும் சண்டை இடுபவராக இருப்பார்.

மூன்று கிரகங்கள் பகை பெற கடின உழைப்பும், ஏழ்மையும் உடையவர்.

நான்கு கிரகங்கள் பகை பெற உறவுகளையும், செல்வத்தையும் இழந்து நிற்பார்.

ஐந்து கிரகங்கள் பகை பெற துன்பங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

இந்த அமைப்பைப் பற்றி, உங்கள் ஜாதகத்தை வைத்துத் தெரிந்து கொள்ளுங்கள்

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------------------

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22.4.25

Astrology: லக்கினத்தைப் பார்க்கும் கிரகங்கள் தரும் பலன்கள்.

Astrology: லக்கினத்தைப் பார்க்கும் கிரகங்கள் தரும் பலன்கள். 
The results of planets aspecting Lagna
-------------------------------------------
லக்கினத்தைப் பார்க்கும் கிரகங்கள் தரும் பலன்கள்.

சூரியன் லக்கினத்தைப் பார்க்க வீரம் மிக்கவர். பெண்களிடம் எளிதில் கோபம் கொள்வார். அரசு உத்தியோகம் அமையும். தந்தையின் சொத்துக்களால் லாபம் உண்டாகும்.

சந்திரன் லக்கினத்தைப் பார்க்க மனிவியின் சொல்லுக்குக் கட்டுப்படுவார். செல்வந்தராக, மன தைரியம் உடையவராக, அமைதியானவராக  இருப்பார்.

செவ்வாய் லக்கினத்தைப் பார்க்க முன்கோபமும், சண்டை, சச்சரவில் பிரியமும், பிரிந்து வாழும் எண்ணமும் உடையவர்.

புதன் லக்கினத்தைப் பார்க்க சிறந்த அறிவாற்ரலும், கலைஞானமும், புகழ், மதிப்பும் உடையவராக இருப்பார்.

குரு லக்கினத்தைப் பார்க்க ஆன்மீக உணர்வும், புகழும், அரசாங்கத் தொடர்பும் உடையவராக இருப்பார்.

சுக்கிரன் லக்கினத்தைப் பார்க்க, பல பெண்களிடம் தொடர்பும், அழகான கவர்ச்சியான தோற்ரமும் வசதி வாய்ப்புக்களும், செல்வமும் உடையவர்.

சனி லக்கினத்தைப் பார்க்க, முன் கோபமும், சுத்தம் இல்லாதவராகவும், அறிவாற்ரல் இல்லாதவராகவும், தீராத நோய் நொடிகள் உடையவராகவும், வயதான பெண்கள் தொடர்புடையவராகவும் இருப்பார்

அன்புடன்,
வாத்தியார்
------------------------------------------------------------

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

21.4.25

Astrology அதிர்ஷ்டமின்மைக்கான யோகம்!


Astrology அதிர்ஷ்டமின்மைக்கான யோகம்!
அரிஷ்ட யோகம்:

Arishta Yoga


அதிர்ஷ்டமின்மைக்கான யோகம்!

’என்ன சார் அதிர்ஷ்டம் இல்லாமல் இருப்பது கூட யோகத்தில் வருமா?” என்று யாரும் கேட்க வேண்டாம். அது அவயோகக் கணக்கில் வரும். லட்சணமான பெண், லட்சணமில்லாத பெண் என்று இருவகையினர் இருப்பதைப்போல அல்லது அரவிந்தசாமி போன்ற தோற்றமுடைய ஆண்கள் அல்லது ஓமக்குச்சி நரசிம்மன் போன்ற தோற்றமுடைய ஆண்கள் இருப்பதைப்போல யோகத்திலும் இரண்டு வகைகள் உண்டு. நல்ல யோகம். அவயோகம்.

அதற்கு உதாரணத்தைக் கவியரசர் பாடலில் இருந்து தருகிறேன்.

”இளமைவரும் முதுமை வரும் உடலும் ஒன்றுதான்
தனிமைவரும் துணையும் வரும் பயணம் ஒன்றுதான்”
இங்கே அவர் குறிப்பிட்டிருக்கும் பயணம், வாழ்க்கைப் பயணம்!

நல்லது கெட்டது கலந்ததுதான் வாழ்க்கை - இரவு பகலைப் போல!

அதைப்போல, அதிர்ஷ்டமும், துரதிஷ்டமும் கலந்ததுதான் வாழ்க்கை. அதிர்ஷ்டமாகட்டும் அல்லது துரதிர்ஷ்டமாகட்டும், சம்பந்தப்பட்ட கிரகங்களின் தசா/புத்திகளில் மட்டுமே பலனைக் கொடுக்கும். உங்கள் மொழியில் சொன்னால் வேலையைக் காட்டும்.

ஒரேயடியாக வாழ்க்கை முழுவதும் அதிர்ஷ்டத்தோடு அல்லது துரதிர்ஷ்டத்தோடு இருந்தவன் இல்லை!

இந்தியாவின்மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர், வாத நோயால் அவதிப்பட்டார் என்பதைக் கேள்வியுற்றால் இதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள். அதீத கோடிஸ்வரர்கள் பலர் பய உணர்வோடுதன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தாங்கள் தாதாக்கூட்டங்களால் அல்லது தீவிரவாதக் கும்பல்களால் கடத்தப் பட்டுவிடுவோமோ எனும் பய உணர்வு அவர்கள் மனதை அரித்துக் கொண்டிருக்கும். அந்த பய உணர்வு, ப்ளாட்பாரத்தில் குடும்பம் நடத்துபவனுக்கு அல்லது அன்றாடம் காய்ச்சிக்குக் கிடையாது. அதை உணருங்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கதை போதும். பாடத்தைப் பார்ப்போம்!

யோகத்தின் பெயர்: அரிஷ்ட யோகம்:

அதற்கான கிரக அமைப்பு: பல அமைப்புக்கள் உள்ளன. அந்த அமைப்புக்களில் ஒன்று இருந்தாலும் ஜாதகத்தில் உள்ள நல்ல தன்மைகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, ஜாதகனுக்குப் பலவிதமான சிரமங்களை அது கொடுக்கும்.

தெரிந்தவரை சில அமைப்புக்களைக் கொடுத்துள்ளேன்.
.....................................................................................
1. 6, 8, 12ஆம் வீட்டுடன் அல்லது அதன் அதிபதியுடன், சேர்க்கை அல்லது பார்வையில் தீய கிரகங்கள் கூட்டு வைத்திருப்பது (Malefic associated with the 6th, 8th and 12th houses or their lords)

அதாவது குரு, சுக்கிரன், சந்திரன், புதன் ஆகிய கிரகங்கள் 6, 8, 12ஆம் வீட்டு அதிபதிகளாக இருந்து அந்த வீட்டை, சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது ஆகிய கிரகங்களில் ஒன்று சேர்க்கை அல்லது பார்வையில் அவர்களுடன் சம்பந்தப்பட்டிருப்பது.
...........................................................
2. நீசமாக உள்ள அல்லது அஷ்டகவர்க்கத்தில் 3ம் அல்லது அதற்குக் கீழாகவும் பெற்றுள்ள சந்திரன் தீய கிரகங்களின் பார்வையைப் பெற்றிருந்தால் அது இந்த அமைப்பிற்குள் வரும்
............................................................
3. ஐந்தாம் வீட்டில் சூரியன், செவ்வாய் அல்லது சனி இருந்தால் அது இந்த அமைப்பிற்குள் வரும்
............................................................
4. எட்டாம் வீட்டில் சூரியன், செவ்வாய் அல்லது சனி இருந்தாலும் அது இந்த அமைப்பிற்குள் வரும்
............................................................
5. பலவீனமாக உள்ள லக்கின அதிபதியை அல்லது சூரியனை தீய கிரகங்கள் பார்த்தால் அது இந்த அமைப்பிற்குள் வரும்
............................................................
6. லக்கினத்தில், சூரியன், செவ்வாய், சனி, ராகு ஆகிய நால்வரில் ஒருவர் இருந்தாலும் அது இந்த அமைப்பிற்குள் வரும்
.............................................................
7. செவ்வாயும், சனியும் இரண்டாம் வீட்டில் இருக்க,ராகு மூன்றாம் வீட்டில் இருப்பது இந்த அமைப்பிற்குள் வரும்
...............................................................
8. நான்காம் வீட்டில் ராகு, 6 அல்லது 8ஆம் வீட்டில் சந்திரன் இருப்பது இந்த அமைப்பிற்குள் வரும்
...............................................................
9. 7ல் செவ்வாய், 8ல் சுக்கிரன், 9ல் சூரியன் இருப்பது இந்த அமைப்பிற்குள் வரும்
..................................................................
10. 7 & 12ஆம் வீடுகளில் தீய கிரகங்கள் இருப்பது இந்த அமைப்பிற்குள் வரும்
........................................................................
11. லக்கினாதிபதி தீய கிரகத்துடன் கூட்டாக இருந்தாலோ அல்லது லக்கினத்திற்கு இரு புறமும் தீய கிரகங்கள் இருந்தாலோ அல்லது 7ஆம் வீட்டில் தீய கிரகங்கள் இருந்தாலோ அது இந்த அமைப்பிற்குள் வரும்
.......................................................................
12. எட்டில் சனி, லக்கினத்தில் சந்திரன் அல்லது சுக்கிரன் (அல்லது சுக்கிரனும், சந்திரனும் சேர்ந்து 6 அல்லது 8ல் இருக்கும் நிலைப்பாடு) அது இந்த அமைப்பிற்குள் வரும்
......................................................................
13. சந்திரனும், புதனும் 6 அல்லது 8ல் இருப்பது இந்த அமைப்பிற்குள் வரும்
+++++++++++++++++++++++++++++++++++++

பலன்: ஒரே சொல்; துரதிர்ஷ்டம் (Misfortune)
+++++++++++++++++++++++++++++++++++++
Duration of the misfortune: இந்த அமைப்பின் பலனால் அவதிப்பட வேண்டிய காலம்: சம்பந்தப்பட்ட கிரகத்தின் தசா/புத்திக் காலம்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++
பாடத்தைப் படிக்கும் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். யாரும் உடனே பலத்த கவலைக்கு ஆளாகிவிட வேண்டாம். பலத்த யோசனையில் மூழ்கிவிட வேண்டாம்.

ஜாதகத்தில் நஷ்டஈடு வழங்கப் பெற்றிருக்கும். அது என்ன என்று பார்த்து அல்லது பார்க்காமல் அமைதி கொள்ளுங்கள். அதை எப்படி உறுதியாகச் சொல்கிறேன் என்றால் அனைவருக்கும் வாங்கி வந்த வரத்தின் மொத்த மதிப்பு (அதாவது ஜாதகத்தின் மதிப்பு) 337தான். அதை நினைவில் வையுங்கள்.

உங்கள் அனைவரையும் ஜோதிடத்தில் மேதை ஆக்குவது என் நோக்கமல்ல! ஜோதிடத்தை அறியத்தருவது மட்டுமே என் நோக்கம். நீங்கள் மேதையாவது உங்கள் கையில் இருக்கிறது.

அன்புடன்
வாத்தியார்,
+++++++++++++++++++++++++++++++++++++++++++===

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

20.4.25

Astrology: நிஸ்வா யோகம்! மறுக்கப்பெற்ற செல்வம்.

Astrology: நிஸ்வா யோகம்!  மறுக்கப்பெற்ற செல்வம். 
devoid of wealth
ஸ்வா எனும் வடமொழிச்சொல்லிற்கு செல்வம் என்று பொருள்.நி என்னும் சொல் உடன் சேரும்போது மறுக்கப்பெற்ற செல்வம் என்று பொருள்படும்! (Sva means Wealth and Nisva means one devoid of wealth)

லட்சணம் என்பது ‘அவ’ எனும் சொல்லைச் சேர்க்கும்போது மாறுபடுவதைப் போல அது என்று வைத்துக் கொள்ளுங்கள்

செல்வம் எப்படி மறுக்கப்படும்?
மூன்று விதமான நிலைப்பாடுகள் உள்ளன.

1. வராமல் போகலாம்.
2. வருவதைவிட நமது தேவை அதிகமாகப்போய் பற்றாத நிலை ஏற்படலாம்.
3. தேவையான அளவு அல்லது தேவைக்கு அதிகமாகவே வந்து நம் கையில் தங்காமல் போகலாம்.

எது எப்படியோ, பல சமயங்களில் நாம் பணமின்றி அல்லாட நேரிடும் நிலை ஏற்படலாம். அதற்குப் பெயர்தான் நிஸ்வா யோகம்
-------------------------------------------------------------
அதற்கான அமைப்பு என்ன?

இரண்டாம் வீட்டு அதிபதி தீமைபயக்கும் 6, 8, 12ஆம் வீடுகள் ஒன்றில் ஜாதகத்தில் இருப்பது இந்த அமைப்பாகும். இந்த அவயோகமாகும்.

”அருள் இல்லாதவனுக்கு அவ்வுலகம் இல்லை
பொருள் இலாதவனுக்கு இவ்வுலகம் இல்லை”

ஆகவே, பனம், பொருள், செல்வம் இல்லாவிட்டால் வாழ்க்கை என்னவாகும் என்பது என்னைவிட உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும் என்பதால் இதற்கு விளக்கம் எழுதவில்லை. உங்கள் சிந்தனைக்கே அதை விட்டுவிடுகிறேன்.
---------------------------------------------------------------
பரிகாரம் என்ன?

உபவாசம் இருப்பதும், தீவிர இறைவழிபாடும் மட்டுமே இதற்குப் பரிகாரம். பிரச்சினை முழுமையாக நீங்கி விடுமா? ஓரளவு குறையும். அதோடு தாக்குப்பிடிக்கும் சக்தி உங்களுக்குக் கிடைக்கும்
----------------------------------------------------------------
எச்சரிக்கை:

யோகங்கள் என்பது வடித்த சாதத்தைப் போன்றது. வடித்த சாதத்தில், பருப்பையும் நெய்யையும் சேர்த்தால் சுவையாக இருக்கும். அல்லது சாம்பாரை ஊற்றிக் குழைத்துச் சாப்பிட்டால், வேறு ஒரு சுவை கிடைக்கும். வற்றல் குழம்பு, மோர்க்குழம்பு, ரசம், தயிர் என்று விதம் விதமாகச் சேர்க்கும்போது, விதம் விதமாகச் சுவையான உணவு கிடைக்கும். அதுபோல யோகங்களுடன், மற்ற கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை, சுயவர்க்கப்பரல்கள் எனும் மசாலாக்களைச் சேர்க்கும்போது யோகங்களின் சுவை அதாவது தன்மை அதாவது பலன்களும் மாறுபடும். அதை நினைவில் வையுங்கள்

ஆகவே இந்த அவயோகம் இருப்பவர்கள், பயந்துவிடாமல், ஜாதகத்தின் மற்ற அம்சங்களையும் அலசிப் பார்க்க வேண்டுகிறேன்.

இதை எழுதும்போது எனக்கு ஒரு சின்ன மகிழ்ச்சி: “சார், எனக்கு இந்த யோகம் இல்லையே, என்று யாரும் வருத்தப் பட மாட்டீர்கள்!”

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

19.4.25

Astrology: பஞ்சமஹாபுருஷ யோகம்.

Astrology: பஞ்சமஹாபுருஷ யோகம்.
Lessons on yogas: Pancha Mahapurusha Yoga

மாமனிதர் என்று சிலரைச் சொல்வோம். அதாவது He is a great man என்று சிலரைச் சொல்வோம்.

அதற்கான ஜாதக அமைப்பு என்ன?

பஞ்ச மகாபுருஷ யோகம்!
செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஐந்து கிரகங்களும் ஒருவரின் ஜாதகத்தில் ஒட்டு மொத்தமாக வலுவாக இருந்தால் அது இந்த யோகத்தைக் கொடுக்கும்.

சார் இந்த ஐந்தில் 3 எனக்கு இருக்கிறது. ஆகவே இதில் பாதி எனக்குக் கிடைக்குமா என்று யாரும் கேட்காதீர்கள். இருந்தால் அந்த 5 கிரகங்களுமே வலுவாக இருக்க வேண்டும். இல்லை என்றால் இல்லை!

கிணற்றின் விட்டம் 5 அடி, 3 அடி மட்டும் தாண்டினால் போதுமா என்று பாருங்கள். 5 அடிகளையும் தாண்டினால் மட்டுமே, நீங்கள் கிணற்றின் மறுபக்கம் குதிக்க முடியும். இல்லையென்றால் கிணற்றிற்குள்ளேதான் விழுந்து எழுந்திரிக்க வேண்டும். இதுவும் அப்படித்தான்
------------------------------------------------------
வலு என்றால் என்ன? அந்தக் கிரகங்கள் வலிமையாக (powerful) இருந்து தனித்தனியாக சில யோகங்களைக் கொடுக்கும்.அந்த ஐந்து யோகங்களும் ஜாதகனுக்கு இருக்கும் நிலைமைதான் மகா புருஷ யோகம்.

யோகப் படங்களின் துவக்கத்தில் முதல் 5 பாடங்கள் அவற்றைப் பற்றியது. அதைக் கடைசி பெஞ்ச் சிகாமணிகளுக்காகச் சுருக்கி மீண்டும் ஒருமுறை கீழே கொடுத்துள்ளேன். அனைவரும் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1
ருச்சகா யோகம்:
செவ்வாய் - செவ்வாயை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம். செவ்வாய் தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று மகரராசியில் இருந்தாலும் அல்லது ஜாதகனின் கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு.
2
பத்ரா யோகம்:
புதன் - புதனை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம். புதன் தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று கன்னிராசியில் இருந்தாலும் அல்லது ஜாதகனின் கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு.
3
ஹம்ஸ யோகம்:
குரு - குரு பகவானை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம். குரு தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று கடக ராசியில் இருந்தாலும் அல்லது ஜாதகனின் கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு.
4
மாளவ்ய யோகம்:
சுக்கிரன் - சுக்கிரனை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம். சுக்கிரன் தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று மீன ராசியில் இருந்தாலும் அல்லது ஜாதகனின் கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு.
5
சஷ்ய யோகம்:
சனி - சனீஷ்வரனை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம். சனீஷ்வரன் தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று துலா இருந்தாலும் அல்லது ஜாதகனின் கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு.
+++++++++++++++++++++++++++++++++++++++++++
Planetary combinations formed by Mars, Mercury, Jupiter, Venus, and Saturn in their own sign or in exaltation, occupying a cardinal house. Each of these planets forms the yoga singly, and each of them has a separate name and effect. Ruchaka yoga is formed by such a placement of Mars, Bhadra by Mercury, Hamsa by Jupiter, Malavya by Venus, and Sasa Yoga by Saturn.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
பலன்:
இந்த யோகம் ஜாதகனுக்குத் தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழிலிலும் உறவுகளிலும், அதீத மேன்மையைக் கொடுக்கும். ஜாதகன் பெயரும்,புகழும் பெற்றுத் திகழ்வான். நாடே அறிந்த மனிதனாக இருப்பான்.ஏராளமான சொத்தும், செல்வமும் அவனைத் தேடிவரும்!
----------------------------------------------------------------
This yoga is known to give a lot of wealth, name and fame to the native of the horoscope!
+++++++++++++++++++++++++++++++++++++++++
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18.4.25

Astrology: சரஸ்வதி யோகம் வைரின்ச்ச யோகா

Astrology: சரஸ்வதி யோகம் வைரின்ச்ச யோகா

Saraswathi Yoga
Vairincha Yoga

சரஸ்வதி யோகம் என்றவுடன், வெள்ளைத்தாமரைப் பூவில் இருக்கும், வீணை செய்யும் ஒலியில் இருக்கும் சரஸ்வதியைப் போல ஜாதகனும் இருப்பான் என்று நினைத்துவிடாதீர்கள். இது அதீதப் படிப்பிற்கான, படித்ததை மனதில் வைப்பதற்கான யோகத்தைக் குறிக்கும்.

ஜாதகன், வேதங்களையும், உபநிடதங்களையும், புராணங்களையும், இன்னும் பல நூல்களையும் கற்றுத் தேர்ந்தவனாக இருப்பான்.

இன்றைய நிலையில் அதை எல்லாம் கற்றுத் தேர்ந்தால், வேலை எங்கே கிடைக்கும்? பூவா’விற்கு என்ன செய்வது? ஆகவே இன்றைய நிலையில் வாழ்க்கையின் உயர்விற்குத் தேவையான பல நூல்களையும் ஜாதகன் கற்றுத் தேர்ந்திருப்பான் என்று வைத்துக் கொள்ளுங்கள். வங்கி மேலான்மை என்றால் அதற்குத் தேவையான நூல்கள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்திருப்பான். கணினி மேலான்மை என்றால் அதற்குத் தேவையான நூல்கள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்திருப்பான். திரைத்துறை என்றால், அதற்குத் தேவையான அத்தனை விஷயங்கள் அனைத்தையும் கற்று வைத்திருப்பான் என்று வைத்துக்கொள்ளுங்கள்.
+++++++++++++++++++++++++++++++++++++++++
யோகத்தின் வடமொழிப் பெயர்: வைரின்ச்ச யோகா (Vairincha Yoga)
Vairinchi means Saraswathi and this is a yoga for learning.

யோகத்தின் அமைப்பு: குருவும், சனீஷ்வரனும் திரிகோணத்தில் இருக்க வேண்டும். லக்கினாதிபதியும் திரிகோணத்தில் இருக்கவேண்டும். அதோடு மூவரும் வலிமையோடு இருக்க வேண்டும்.

இந்த வலிமை (strength) பற்றிப் பலமுறைகள் சொல்லியிருக்கிறேன். ஆகவே அதை மீண்டும் சொல்லி பிளேடு போட விரும்பவில்லை!
+++++++++++++++++++++++++++++++++++++++++
இந்த யோகத்தால் ஜாதகனுக்குக் கிடைக்கக்கூடிய நன்மைகள்

ஜாதகன் அறிவு ஜீவியாக இருப்பான். உங்கள் மொழியில் சொன்னால் மேதையாக இருப்பான். நகைச்சுவை உணர்வு மிக்கவனாக இருப்பான். அற வழியில் நடப்பவனாக இருப்பான். எண்ணற்ற சீடர்கள் இருப்பார்கள். தெய்வ அருள் இருக்கும். எல்லோரும் வணங்கும் நிலையில் இருப்பான். நீண்ட ஆயுளைப் பெற்றிருப்பான். செல்வத்துடன் இருப்பான்.
-------------------------------------------------------
இருப்பதே மூன்று திரிகோணம். அதில் அந்த மூவரும் இருக்க வேண்டுமாம். கொஞ்சம் கஷ்டம்தான். அதாவது நம்மைப் போன்று ப்ளாக்குகளில் எழுதும் அல்லது ப்ளாக்குகளைப் படிக்கும் சாமான்யர்களுக்கு இந்த அமைப்பு இருக்கும் வாய்ப்பு இல்லை.

அந்தக் காலத்தில் ரிஷிகளுக்கும், முனிவர்களுக்கும் இந்த அமைப்பு இருந்திருக்கலாம்.

அன்புடன்,
வாத்தியார்
----------------------------------

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

17.4.25

Astrology: பாரிஜாத யோகம்.

Astrology: பாரிஜாத யோகம். 
Parijatha Yoga


பாரிஜாத மலர் என்றால் தெரியுமா? பலருக்கும் தெரியாது. ஆனால் பவளமல்லி மலர் என்றால் அனைவருக்கும் தெரியும்.
வெண்மையான இதழ்களைக் கொண்டதும் ஆரஞ்சு நிற காம்புகளைக் கொண்டதுமான மலர் பவளமல்லிகை.
தேவலோக மரமான பாரிஜாதமே பூலோகத்தில் பவளமல்லிகையாக வளர்ந்துள்ளது என்கின்றன புராணங்கள்.
இரவில் மலர்ந்து காலையில் உதிர்ந்து விடும் இந்த பூக்கள் இரவு முழுவதும் நல்ல வாசனையைப்  பரப்பும் தன்மை கொண்டது.

திருமாலுக்கு உகந்த மலர் இது. இந்த மலரின் பெயரில் ஒரு யோகம் உள்ளது. அது என்ன யோகம் என்று பார்ப்போம் வாருங்கள்!
--------------------------------------------------------
சுபக்கிரகங்கள் 11ஆம் வீட்டில் இருந்தாலும், அல்லது 11ஆம் வீட்டைப் பார்த்தாலும், அத்துடன் 11ஆம் வீட்டதிபதி அஸ்தமனம் பெறாமல் தன் சொந்த வீட்டிலோ அல்லது உச்ச வீட்டிலோ இருக்கும் நிலையில் இந்த யோகம் ஜாதகனுக்குக் கிடைக்கும். அதாவது பாரிஜாத யோகம் கிடைக்கும்.

பலன்: ஜாதகன் செல்வம் மிக்கவனாகவும், செல்வாக்கு மிக்கவனாகவும் இருப்பான். கற்றவனாக இருப்பான். எப்போதும் விதம் விதமான நல்ல நிகழ்வுகளை அரங்கேற்றுபவனாக இருப்பான். மனைவி மக்கள் என்று பெரிய குடும்பத்தைப் பெற்றவனாக இருப்பான்.

அன்புடன்,
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

16.4.25

Astrology: கிரகங்கள் உச்ச வீட்டில் இருக்கும்போது கிடைக்கும் பலன்கள்!

Astrology: கிரகங்கள் உச்ச வீட்டில் இருக்கும்போது கிடைக்கும் பலன்கள்!

Results of exalted planets


எல்லாம் பொதுப் பலன்கள். ஜாதகத்தின் பிற அமைப்புக்களை வைத்து பலன்கள் மாறுபடும். கூடலாம். குறையலாம் அல்லது இல்லாமல் போகலாம்.

1 ஜாதகத்தில் சூரியன் உச்ச வீட்டில் இருந்தால்,  ஜாதகன் செல்வந்தனாக இருப்பார். மேன்மையான குணம் உடையவனாக இருப்பார். வீரம் மிக்கவனாக இருப்பார்.

2.சந்திரன் உச்சம் பெற்று இருந்தால், ஜாதகருக்கு  நல்ல உணவு, உடை, ஆபரணங்கள் எப்போதும் கிடைக்கும்!

3. செவ்வாய் உச்சம் பெற்று இருந்தால், ஜாதகர் பகட்டான மனிதராக இருப்பார். வீரம் மிக்கவராக இருப்பார். வேற்று ஊரில் வசிப்பவராக இருப்பார்.

4. புதன் உச்சம் பெற்று  இருந்தால் அறிவாற்றல் மிக்கவராக இருப்பார்.

5. குரு உச்சம் பெற்று இருந்தால், ஜாதகர், கல்வி, புகழ், செல்வம் உடையவராக இருப்பார்.

6. சுக்கிரன் உச்சம் பெற்று இருந்தால், ஜாதகர் இயல், இசை, நாடகம், நடனம் ஆகியவற்றில் ஆர்வம் உடையவராகவும், தேர்ச்சி உடையவராகவும் இருப்பார்.

7.சனி உச்சம் பெற்று இருந்தால் அரசியலில் தலைமை பதவியும், அல்லது அரசு கெளரவ பதவியும், தொழிலாளர் தலைவராகவும் இருப்பார்

அன்புடன்,
வாத்தியார்
=============================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

15.4.25

Astrology: கிரகங்கள் நீச வீட்டில் இருக்கும்போது கிடைக்கும் பலன்கள்!

Astrology: கிரகங்கள் நீச வீட்டில் இருக்கும்போது கிடைக்கும் பலன்கள்!
Results of neecha planets

எல்லாம் பொதுப் பலன்கள். ஜாதகத்தின் பிற அமைப்புக்களை வைத்து பலன்கள் மாறுபடும். கூடலாம். குறையலாம் அல்லது இல்லாமல் போகலாம்.

1. சூரியன் நீசம் அடைந்திருந்தால் ஜாதகர் தன்னைச் சார்ந்தவர்களாலேயே தாழ்ந்த நிலை பெறுவார்.

2. சந்திரன் நீசம் அடைந்திருந்தால் உடல் நலம் பாதிக்கும். ரோகம் உடையவராக இருப்பார்.

3. செவ்வாய் நீசம் அடைந்திருந்தால், மனம் பாதிக்கப்படும். மற்றும் பல தொல்லைகளை சமாளிக்க வேண்டியதிருக்கும்.

4. புதன் நீசம் பெற்றிருந்தால், உறவினரால் பகை ஏற்படும்.

5. குரு நீசமடைந்திருந்தால், புகழ் இல்லாதவராக இருப்பார். ஏழ்மை உடையவராக இருப்பார்.

6. சுக்கிரன் நீசம் பெற்றிருந்தால், கெட்ட எண்ணங்கள் உண்டாகும். மற்றவர்களிடம் பணியாற்றும் நிலை ஏற்படும். மனைவியிடமிருந்து பிரிந்து
இருக்கும் நிலை ஏற்படும்.

7.சனி நீசமடைந்திருந்தால் ஒழுக்கக்குறைபாடு ஏற்படும். தாழ்நிலை ஏற்படும். வறுமையால் வாடும் நிலையும் ஏற்படும்.

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14.4.25

வாத்தியாரின் வாழ்த்துக்கள்!

அன்புடையீர்,
வகுப்பறை மாணவர்கள் அனைவருக்கும் இனிய
தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
அன்புடன்
வாத்தியார்

--------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13.4.25

Astrology: கிரகங்கள் சொந்த வீட்டில் இருக்கும்போது,

Astrology: கிரகங்கள் சொந்த வீட்டில் இருக்கும்போது, 
Results of planets in their own house

எல்லாம் பொதுப் பலன்கள். ஜாதகத்தின் பிற அமைப்புக்களை வைத்து பலன்கள் மாறுபடும். கூடலாம். குறையலாம் அல்லது இல்லாமல் போகலாம்.

1. சூரியன் தனது ஆட்சி வீட்டில் இருந்தால், ஜாதகர் அறிவாற்றலும், அழகான, கவர்ச்சியான தோற்றம் உடையவராகவும் இருப்பார்.

2. சந்திரன் சொந்த வீட்டில் இருந்தால், ஜாதகர் தெளிவான மனநிலை உடையவராக இருப்பார்.

3. செவ்வாய் தனது சொந்த வீட்டில் இருந்தால்,  ஜாதகர் செயல் வீரராக இருப்பார். கொள்கைவாதியாக இருப்பார்.

4. புதன் தனது சொந்த வீட்டில் இருந்தால், ஜாதகர் பல கலைகளை அறிந்தவராக இருப்பார். பேச்சற்றல் உடையவராக இருப்பார்.

5. குரு தனது சொந்த வீட்டில் இருந்தால், ஜாதகர் கல்வியாளராக இருப்பார். வேதங்களை, புராணங்களை அறிந்தவராக இருப்பார்.

6. சுக்கிரன் தனது சொந்த வீட்டில் இருந்தால், ஜாதகர் செல்வந்தரகவும், நல்ல செயல்களைச் செய்பவராகவும் இருப்பார்.

7.சனி தனது சொந்த வீட்டில் இருந்தால், ஜாதகர் மகிழ்ச்சி உடையவராகவும், புகழ் உடையவராகவும் இருப்பார்.

அன்புடன்
வாத்தியார்
========================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12.4.25

Astrology: கிரகங்கள் நட்பு வீடுகளில் இருக்கும்போது கொடுக்கும் பலன்கள்!

Astrology: கிரகங்கள் நட்பு வீடுகளில் இருக்கும்போது கொடுக்கும் பலன்கள்!

எல்லாம் பொதுப் பலன்கள். ஜாதகத்தின் பிற அமைப்புக்களை வைத்து பலன்கள் மாறுபடும். கூடலாம். குறையலாம் அல்லது இல்லாமல் போகலாம்.

1.சூரியன் நட்பு வீடுகளில் இருந்தால் ஜாதகருக்கு நல்ல நண்பர்களைக் கொடுப்பார். ஜாதகர் தர்ம குணம் உடையவராக இருப்பார்.

2. சந்திரன் நட்பு ராசிகளில் இருந்தால், ஜாதகர் மகிழ்ச்சியானவராகவும், புகழ் பெறுபவராகவும் இருப்பார்.

3. செவ்வாய் நட்பு ராசிகளில் இருந்தால், ஜாதகர் தனக்கு விருப்பமான நபர்களை ஆதரிப்பவராக இருப்பார்.

4. புதன் நட்பு ராசிகளில் இருந்தால், ஜாதகர், நகைச்சுவை உணர்வு உடையவராக, செயல் வீரராக, செல்வந்தராக இருப்பார்.

5. குரு நட்பு வீடுகளில் இருந்தால், ஜாதகர் பல நல்ல காரியங்களை செய்பவராக இருப்பார்.

6. சுக்கிரன் நட்பு வீடுகளில் இருந்தால், ஜாதகர் நல்ல நண்பர்களை உடையவராக இருப்பார். செல்வம் உடையவராக இருப்பார்.

7. சனி நட்பு வீடுகளில் இருந்தால், ஜாதகர் மற்றவர்களை நம்பி வாழ்வார்.

அன்புடன்,
வாத்தியார்
================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11.4.25

Astrology: கிரகங்கள் பகை வீடுகளில் இருக்கும்போது கொடுக்கும் பலன்கள்


Astrology: கிரகங்கள் பகை வீடுகளில் இருக்கும்போது கொடுக்கும் பலன்கள்!

Results of planets in their enemy house


கிரகங்கள் பகை வீடுகளில் இருக்கும்போது கொடுக்கும் பலன்கள்

எல்லாம் பொதுப் பலன்கள். ஜாதகத்தின் பிற அமைப்புக்களை வைத்து பலன்கள் மாறுபடும். கூடலாம். குறையலாம் அல்லது இல்லாமல் போகலாம்.

1.சூரியன் பகை வீடுகளில் இருந்தால், ஜாதகர் ஏழ்மை நிலையிலும், பெண் ஆசை உடையவராகவும் இருக்க நேரிடும்.

2. சந்திரன் பகை ராசிகளில் இருந்தால், ஜாதகர் அழகற்றவராகவும், இருதய நோய் உடையவராகவும் இருப்பார்.

3. செவ்வாய் பகை ராசிகளில் இருந்தால், ஜாதகர் ஏழ்மையில் வாழ நேரிடும். பகைவர்களால் துன்பமும், அதிர்ஷ்டமற்ற நிலையும் உண்டாகும்.

4. புதன் பகை ராசிகளில் இருந்தால், ஜாதகர், அறிவாற்றல் இல்லாதவராக, பகைவரால் தொல்லை அடைபவராக  இருப்பார்.

5. குரு பகை வீடுகளில் இருந்தால், ஜாதகர் நியாயம் இல்லாதவராக, ஏழ்மை உடையவராக, அரக்க குணம் கொண்டவராக இருப்பார்.

6. சுக்கிரன் பகை வீடுகளில் இருந்தால், ஜாதகர் துன்பம் அனுபவிப்பவராக, கீழான பணி செய்பவராக, பல கெடுதலான காரியங்களைச் செய்பவராக  இருப்பார்.

7. சனி பகை வீடுகளில் இருந்தால், ஜாதகர் தூய்மையற்றவராக, தொல்லைகள் உடையவராக, பல வியாதிகளால் துன்பம் அடைபவராக இருப்பார்.

அன்புடன்,
வாத்தியார்
================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10.4.25

Astrology: நீங்களும் உங்கள் அணியும்

Astrology: நீங்களும் உங்கள் அணியும் 

எதையும் உதாரணத்துடன் எழுதினால் அனைவருக்கும் சட்டென்று புரியும்.

அதுவும் சினிமாவை வைத்து அல்லது நமக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் ஆட்டத்தைவைத்து உதாரணங்களைச் சொன்னால் நன்றாகப் புரியும்.

முன்பொரு முறை, சந்தேகங்கள் பகுதியில் முதல் கேள்வியாக நமது மாணவக் கண்மணி ஒருவர் இப்படி கேட்டிருந்தார்:

////Sir, this is my first question. if suryan and chandran (difference in o degree) are placed in 11 nth house is it good or no use and also join with mercury and ragu/////

ஜீரோ டிகிரி என்றால் விக்கெட் போய்விட்டது என்று அர்த்தம். பதினொன்றாம் வீடு என்பதற்காக கிரவுண்டில் நிற்க முடியாது. டிரஸ்ஸிங் ரூமிற்குத்

திரும்ப வேண்டியதுதான். கூடவே ராகுவும், இருந்தால், அவுட்டாகிவிட்டு வரும்போது, பெளலரையும், அம்ப்பயரையும் தகாத வார்த்தையால்

திட்டிவிட்டு வந்தால் என்ன ஆகுமோ அது ஆகும்!

என்று நான் பதில் சொல்லியிருந்தேன். அனைவருக்கும் அது நன்றாகப் பிடிபட்டிருக்கும், அதாவது புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

ஜாதகத்தைக் கிரிக்கெட்டோடு இணைத்து இன்று எழுதியுள்ளேன். படித்துப்பாருங்கள்;

உங்கள் அணி (அதாவது உங்கள் ஜாதகம்)

லக்கினாதிபதிதான் கேப்டன்.

திரிகோண வீடுகளின் அதிபதிகள் மூன்று பேர்களும் பேட்ஸ்மேன்கள் (That is the First House Lord, Fifth House Lord and Ninth House Lord are

batsmen). கேப்டன் பேட்டிங் பண்ணக்கூடாதா? அவரும் பண்ணுவார்.

கேந்திர அதிபதிகள் ஆல் ரவுண்டர்கள் (That is the Fourth House Lord, Seventh House Lord and Tenth House Lord are all rounders - Batting,
Bowling and Fielding)

இரண்டாம் வீட்டுக்காரன் விக்கெட் கீப்பர் (That is the Second Lord is the Wicket Keepper)

பதினொன்றாம் வீட்டுக்காரர் 12த் மேன் (வேண்டும்போது உதவிக்கு வருவார்)

இதுதான் உங்கள் அணி. இவர்களை வைத்துத்தான் உங்களின் ஆட்டம். உங்களது வெற்றி தோல்விகள்

வெற்றி தோல்விகளை அவ்வப்போது நடக்கும் மேட்சுகள் (தசா, புத்திகள்) மூலம் தெரியும். டெஸ்ட் மாட்ச், ஒன் டே மாட்ச், Twenty X Twenty என்று

அவற்றின் கால அளவும் வேறுபடும்.

கோள்சாரங்கள் வெற்றி தோல்விகளால் கிடைக்கும் பரிசுப் பணத்தை (Prize Money) நமக்குக் கொடுப்பவையாகும்
-------------------------------------------------------------------------
எதிர் அணி

கேப்டன் = காலதேவன் (விதி, Destiny, பூர்வ புண்ணியம், வாங்கிவந்த வரம் என்று எப்படி வேண்டுமென்றாலும் அவரை அழைத்துக்கொள்ளுங்கள்)

அதிரடி பேட்ஸ்மேன்: ஆறாம் வீட்டுக்காரர் (6th House Lord)

அதிவேகப் பந்து வீச்சாளர்:பன்னிரெண்டாம் வீட்டுக்காரர் (12th House Lord)

ஆல்ரவுண்டர்: எட்டாம் வீட்டுக்காரர் (Eighth House Lord)

விக்கெட் கீப்பர்: மூன்றாம் வீட்டுக்காரர் (Third House Lord)

எதிர் அணியில் ஆட்டக்காரர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறதே என்று எண்ண வேண்டாம். ஒவ்வொருத்தரும் எக்ஸ்பர்ட் ப்ளேயர்ஸ்.

சச்சினைப்போல. வீரேந்திர சேவாக்கைப்போல, ஆண்ட்டி ராபர்ட்ஸைப்போல. மைக்கேல் ஹோல்டிங்கைப்போல.

சரி, இதில் எங்கள் பங்கு என்ன என்கிறீர்களா? இந்த அணிக்கு நீங்கள்தான் உரிமையாளர். சென்னை சூப்பர் கிங்ஸிற்கு இந்தியா சிமெண்ட்டின்

சீனிவாசன் உரிமையாளராக இருக்கிறார் அல்லவா? அதைபோல என்று வைத்துக்கொள்ளுங்கள்.

விளக்கம் போதுமா?
------------------------------------------------------------
இடைசெருகல்:

மாணவக் கண்மணி G,முருகன் கேட்ட கேள்வி: Sir, Superb. But who is the umpire.

வாத்தியாரின் பதில்:
கடவுள்தான் அம்ப்பயர். வேறு யார் சரியான அம்ப்பயராக இருக்க முடியும்? Stump Umpire, Line Umpire, Third Umpire என்று எல்லாவற்றிற்கும் அவர்

ஒருவரேதான். அவரால் முடியாதது என்ன இருக்கிறது?

அடுத்த கேள்வி இப்படி வரலாம் - பார்வையாளர்கள் யார்?
நமது குடும்பத்தாரும், உறவினர்களும், நண்பர்களும்தான் பார்வையாளர்கள். டிக்கெட் இல்லை! அனைவருக்கும் இலவச அனுமதி!

டி.வி, செய்தித்தாள்கள் போன்ற மீடியாக்கள் உண்டா?
அவர்களுக்கெல்லாம் அனுமதி இல்லை!

விளக்கம் போதுமா ?
அன்புடன்
வாத்தியார்
============================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

9.4.25

Astrology: வீடுகளுக்கென்று உள்ள பணிகள்/வேலைகள்.

Astrology: வீடுகளுக்கென்று உள்ள பணிகள்/வேலைகள். 
Portfolio of 12 houses


புதிதாக வந்த மாணவக் கண்மணி ஒருவர் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறார். 12 வீடுகளுக்கான வேலைகளை எழுதுங்கள் என்கிறார்.

அவருக்காக அதை இன்று கொடுத்துள்ளேன். அனைவருக்கும் பயன் படட்டும் என்று பதிவில் ஏற்றியுள்ளேன்.

Astrological Charts - The portfolio of 12 houses:

லக்கினம்தான் முதல் வீடு. மற்றவீடுகள் அதில் இருந்து எண்ணப்பட வேண்டும். கணக்கிடப் பட வேண்டும்.
Lagna is the first house and other houses are to be counted only from lagna.
-------------------------------------------------------
1. முதல் வீடு (லக்கினம்)

அ) தோற்றம். உடல் வாகு, நிறம், உயரம், தோற்றத்தால் உண்டாகும் வசீகரம் போன்றவை.
ஆ) குணம். குண நலன்கள். மற்றவர்களை அனுசரித்துப்போகும் குணம். வக்கிர குணம். நல்லவற்றையே செய்யும் குணம். எதிலும் ஆதாயத்தை

எதிர்பார்க்கும் குணம், பொறுமை, சகிப்புத்தன்மை, கோபம், இரக்கம், தாபம், காமம், சுயநலம், கஞ்சத்தனம் போன்ற அத்தனை குணங்களும் இதில்

அடங்கும்.
இ) சந்திக்க இருக்கும் வெற்றிகள், புகழ், பெருமை, சிறுமை போன்றவை

1.Complexion & Physical appearance
2.Mental Characteristics
3.Success,fame & defame
--------------------------------------------------------------
2. இரண்டாம் வீடு
அ) குடும்ப நிலைமை, குடும்ப வாழ்க்கை.
ஆ) நிதி நிலமை. பணம். வரவு. செலவு போன்ற பணம் சம்பந்தப்பட்ட விஷயங்கள்.
இ) வாக்கு. பேச்சு, வாக்கைக் காப்பாற்றும் தன்மை. பேச்சுத் திறமை போன்றவை

1.Family Life
2.Financial Prosperity
3.Speech
--------------------------------------------------------------
3. மூன்றாம் வீடு
அ) உடன் பிறப்புக்கள். சகோதரன் சகோதரிகள். அவர்களூடன் ஆன உறவுகள். அவர்களுடன் கூடிய மேன்மையான உறவு. அல்லது சண்டை,

சச்சரவுகள் நிறைந்த தன்மை. விசுவாசமில்லாத உறவுகள் போன்றவை.
ஆ) உறவினர்கள். பங்காளிகள். போன்றவை
இ) தைரியம். துணிச்சல்.நல்லது. கெட்டது என்று எதையும் எதிர்கொள்ளும் தன்மைகள் போன்றவை

1.Brothers & Sisters
2.Relatives
3.Governance over courage
-------------------------------------------------------------
4. நான்காம் வீடு.

அ) தாய்.
ஆ) கல்வி.
இ) சொத்து. சுகங்கள், நிலபுலன்கள். வீடு. வாகனங்கள் போன்ற வாழ்க்கைக்குத் தேவையான எல்லோரும் ஆசைப்படும் மேட்டர்கள்.

1.Mother
2.Education
3.Immmovable property & vehicle
-------------------------------------------------------------
5. ஐந்தாம் வீடு.

அ) இறைநம்பிக்கை, இறையுணர்வு, பூர்வ புண்ணியம், வாங்கி வந்த வரம் முதலியவை.
ஆ) அறிவு, புத்திசாலித்தனம், புத்திக்கூர்மை, உணர்வுகள், உணர்ச்சிகள், உயர்நிலைக் கல்வி போன்றவை.
இ) குழந்தை. குழந்தை பாக்கியம், குழந்தையால் ஏற்படவுள்ள மேன்மைகள்.

1.Faith in God & Poorva Punya
2.Keen Intelligence, emotions & feelings
3.Children
------------------------------------------------------------
6. ஆறாம் வீடு

அ) நோய்கள், பிணிகள், தீராத வியாதிகள் முதலியன.
ஆ) எதிரிகள்.
இ) கடன்கள். துரதிர்ஷ்டங்கள்.

1.Diseases
2.Enimies
3.Debts & misfortunes
----------------------------------------------------------------
7. ஏழாம் வீடு
அ) திருமணம்
ஆ) மனைவி அல்லது கணவன்
இ) திருமணத்தால் ஏற்படும் சந்தோஷங்கள் அல்லது துக்கங்கள்

1.Marriage
2.Spouse
3.Marital happiness
-----------------------------------------------------------------
8. எட்டாம் வீடு.

அ) ஆயுள்.
ஆ) மரணம். மரணம் ஏற்படும் காலம், ஏற்படும் விதம் முதலியன.
இ) கஷ்டங்கள். சிக்கல்கள். ஏற்றத்தாழ்வுகள். மதிப்பின்மை, அதாவது மதிப்பு, மரியாதை இல்லாத நிலமைகள் போன்றவை

1.Longevity
2.Nature of death
3.Difficulties, disgrace  & degradation
----------------------------------------------------------------
9. ஒன்பதாம் வீடு

அ) தந்தை. பூர்வீகச் சொத்துக்கள்
ஆ) அறம், கொடை, தர்மச் செயல்கள் போன்ற நிகழ்வுகள். அவற்றைச் செய்யும் பாக்கியங்கள்.
இ) தலைமை. தலைமை ஏற்கும் வாய்ப்பு, புகழ், சமூக அந்தஸ்து போன்றவை.

1.Father & ancestral properties
2.Righteousness & charity
3.Leadership & fame
-------------------------------------------------------------------
10. பத்தாம் வீடு.

அ) தொழில், வேலை, வணிகம் போன்ற செய் தொழில்கள்.
ஆ) வாழ்க்கை, அதில் வாழ்கின்ற விதம் முதலியன.
இ) அடைய இருக்கும் பெருமைகள். விருதுகள் முதலியன.

1.Occupation or profession
2.Means of livelihood
3.Temporal Honours
-------------------------------------------------------------------
11) பதினொன்றாம் வீடு.

அ) லாபங்கள்.
ஆ) தேடிப் பிடிக்கும், தேடிக் கைவசமாக்கும் செல்வங்கள். பாக்கியங்கள் (Something acquired or gained)
இ) துன்பங்கள், துயரங்கள் இல்லாத நிலைமை. சுதந்திரமான வாழ்க்கை.

1.Gains
2.Acquisitions
3.Freedom from misery
------------------------------------------------------------------
12) பன்னிரெண்டாம் வீடு.

அ) இழப்புக்கள். விரையங்கள்
ஆ) செலவுகள். முக்கியமாக பணத்தை வைத்து ஏற்படும் செலவுகள். நேரத்தை வீணாக்கிச் செலவழிப்பதும் செலவுதான்.
இ) உணவு, உடை, உறக்கம் போன்றவை. அத்துடன் பெண் சுகம்.பெண்ணிற்கு ஆணின் பரிசம். உடல் உறவுகள் போன்றவை.

1.Losses
2.Expenditures
3.Ayana,Sayana,Boga Bagyankal (conjugal pleasures)
----------------------------------------------------------------------
இது முக்கியமான பாடம். இதை நன்றாக மனதில் ஏற்றி வைத்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்,
வாத்தியார்
========================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8.4.25

Astrology: களத்திரகாரகன். திருமணத்தை செய்வதற்கு அதிகாரம் உள்ளவன்.

Astrology: களத்திரகாரகன். திருமணத்தை செய்வதற்கு அதிகாரம் உள்ளவன்.

The authority for Marriage


எல்லோருக்கும் ஒரு குழப்பம் உண்டு. களத்திரகாரகன் , அதாவது Authority for marriage யார்? ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியான களத்திரகாரகனா? அதாவது ஆண்களுக்கு சுக்கிரனும், பெண்களுக்கு செவ்வாயையும் எடுத்துக்கொள்ள வேண்டுமா?

அதெல்லாம் ஒன்றும் இல்லை!

Authority என்பவர் ஒருவர்தான் இருக்க முடியும். தந்தைக்கு அத்தாரிட்டி சூரியன். தாய்க்கு அத்தாரிட்டி சந்திரன் என்று இருப்பதுபோல களத்திரத்திற்கு, அதாவது திருமணத்திற்கு அத்தாரிட்டி சுக்கிரன் மட்டும்தான்!

வாழ்க்கையில் உள்ள எல்லா சுகங்களுக்கும், படுக்கை சுகம் உட்பட (அதாவது ஆணுக்கு பெண் சுகமும், பெண்ணிற்கு ஆண் பரிசமும்) எல்லா சுகங்களுக்கும் உரியவன் சுக்கிரன்தான். ஆகவே அவன்தான் திருமணம் செய்து வைக்கும் அதிகாரமும் கொணடவனாவான்.

பெண்களுக்கு மட்டும் ஒரு துணைக் காவடியும் உண்டு. மெயின் காவடியை சுக்கிரன் தூக்குவான். துணைக் காவடியை குரு பகவான் தூக்குவார். அதனால்தான் பெண்களுக்கு மஞ்சள் கயிற்றைத் தாலிக் கயிறாக அணிவிக்கிறோம். மஞ்சள் நிறமுடைய தங்கத்தில் திருமாங்கல்யத்தைச் செய்கிறோம். பெண்களைத் தினமும் மஞ்சள் பூசிக் குளி என்கிறோம்.தங்கம் வாங்க முடியாத ஏழைப் பெண்களுக்கு விரளி மஞ்சளை, மஞ்சக் கயிற்றில் கட்டி அணிவிக்கின்றோம். இவை எல்லாம் குருபகவானை மகிழ்விப்பதற்கும், அவரின் ஆசீகளைப் பெறுவதற்கும்தான்.

பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினை இருந்தால் மட்டும் செவ்வாயைக் கூப்பிட்டுப் பார்ப்போம். அதுபோல செவ்வாய் தோஷத்திற்கும் அவர் வந்து நிற்பார். அவரின் பங்களிப்பு அவ்வளவுதான்

விளக்கம் போதுமா?

அன்புடன்
வாத்தியார்
===============================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

7.4.25

Astrology: ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம்

Astrology: ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம் 

பருவம்வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை
காதல் கொண்ட அனைவருமே மணம் முடிப்பதில்லை
மணம் முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை
சேர்ந்துவாழ்ந்த அனைவருமே சேர்ந்து போவதில்லை!
- கவியரசர் கண்ணதாசன்

பல சிக்கல்கள் நிறைந்தது வாழ்க்கை. சிக்கல் இல்லாத வாழ்க்கையே இருக்காது. இருந்தால் காட்டுங்கள். சந்தோசமடைவேன்!

மற்ற சிக்கல்கள் நாம் மட்டுமே சம்பந்தப்பட்டதாக இருக்கும். அதனால் மனத் துணிச்சலையும், ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை வைத்து, சிக்கலுக்கான முடிவை அல்லது தீர்வை எப்படி வேண்டுமென்றாலும் நாம் எடுக்கலாம்

ஆனால், திருமண வாழ்வில் ஏற்படும் சிக்கல், இன்னொருவர் (கணவன் அல்லது மனைவி) சம்பந்தப்படுவதால்
அப்படி எடுக்க முடியாது.

அத்துடன் நாம் விரும்பினாலும் அல்லது விரும்பாவிட்டாலும், விதி ஒரு பக்கம் வேலை செய்து கொண்டிருக்கும்.

நம் வாழ்க்கை, அல்லது நம் குழந்தைகளின் வாழ்க்கை அல்லது நம் உடன் பிறப்புக்கள் மற்றும் நண்பர்களின் வாழ்க்கையில் திருமணத்தை வைத்து ஏதாவது சிக்கல் உண்டாகுமா என்று பார்ப்பதற்கான பயிற்சியை இன்று உங்களுக்கு அளிக்கிறேன்.  பொறுமையாகப் படித்து, அத்தனை விதிகளையும் மனதில் ஏற்றி வைத்துக்கொள்ளுங்கள்
----------------------------------------------------------------------------
Chances of Multiple marriages: ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம்

ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம் எப்போது நடைபெறும்?

முதல் திருமணம் கெட்டுவிட்டால், இரண்டாவது திருமணம் செய்துகொள்ள நேரிடும்.

மனைவி அல்லது கணவன் இறந்துவிட்டால், அல்லது கருத்துவேற்றுமையால் தம்பதிகள் விவாகரத்து பெற்றுப் பிரிந்துவிட்டால் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள நேரிடும்

உயர்கல்வி, அதீத வருமானம், பொருளாதார சுதந்திரம், பொறுமையின்மை, சகிப்புத்தன்மையின்மை போன்ற காரணங்களால், இப்போது அதிக அளவில் விவாகரத்துக்கள் ஏற்படுகின்றன. அதையும் மனதில் கொள்க!

In this lesson an attempt has been made to discuss a few planetary combinations indicating re marriage due to divorce, separation or death of wife

The rules are based on Brihat Parashar Hora Shastra:

1. ஏழாம் வீட்டு அதிபதி நீசமடைந்திருந்தால், ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம்.

2. ஏழாம் வீட்டு அதிபதி ஒரு தீய கிரகத்தின் வீட்டில், ஒரு தீய கிரகத்துடன் அமர்ந்திருக்கும் நிலைமை! அத்துடன் ராசிச்சக்கரத்தில் ஏழாம் வீடு அல்லது நவாம்சச்சக்கரத்தில் ஏழாம் வீடு ஒரு தீய கிரகத்தின் வீடாக இருக்கும் நிலைமை.

3. செவ்வாயும், சுக்கிரனும் சேர்ந்து ஏழாம் வீட்டில் இருந்தால், அல்லது சனி 12ஆம் வீட்டில் இருந்தால், அத்துடன் லக்கினாதிபதி எட்டாம் வீட்டில் அமர்ந்திருந்தால், ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம்.

4. சுக்கிரன் இரட்டை ராசியில் இருந்தால் (if Venus is in a dual sign), அத்துடன் சுக்கிரன் அமர்ந்த வீட்டின் அதிபதி உச்சமாகி இருந்தால், ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம் (சர்வார்த்த சிந்தாமணி)

5. ஏழாம் அதிபதி, உச்சமாகி இருப்பதுடன், வக்கிரகதியும் பெற்றிருக்கும் நிலைமை.

6. லக்கினாதிபதி எட்டாம் வீட்டில், ஏழாம் வீட்டில் ஒரு தீயகிரகம், இரண்டாம் அதிபதி ஒரு தீயகிரகத்துடன் சேர்க்கை - ஆகிய அமைப்பு ஒன்றிற்கு மேற்பட்ட திருமணத்தைக் கொடுக்கும்.

7. ஏழாம் அதிபதி 3, 6, 8, &12 போன்ற மறைவிடங்களில் இருந்தாலும், அல்லது நீசமாகி ஒரு சுபக்கிரகத்துடன் சேர்ந்திருந்தாலும், அத்துடன் ஏழாம் வீட்டில் ஒரு தீயகிரகம் இருந்தாலும், ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம்.

8. சுக்கிரன் கன்னிராசியில் நீசமடைந்திருப்பதோடு, ஒரு தீயகிரகத்தின் கூட்டணியோடு இருந்தாலும் அல்லது நவாம்சத்தில் நீசமடைந்திருந்தாலும் ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம்.

9. ஏழாம் வீட்டிலும், இரண்டாம் வீட்டிலும் தீய கிரகங்கள் அமர்ந்திருந்து, அதன் அதிபதிகள் கெட்டிருந்தால், ஜாதகனின் முதல் மனைவி இறப்பதுடன், ஜாதகனுக்கு இரண்டாம் திருமணமும் நடைபெறும்.

10. ஏழாம் வீட்டிலும், எட்டாம் வீட்டிலும் தீயகிரகங்கள் இருப்பதுடன், செவ்வாய் 12ஆம் வீட்டில் இருப்பதுடன், ஏழாம் அதிபதியின் பார்வை ஏழில் விழுகவில்லை என்றால், ஜாதகன் தன் முதல் மனைவியை இழந்துவிட்டு, மறுமணம் செய்துகொள்ள நேரிடும்.

11. லக்கினத்தில், 2 மற்றும் 7ஆம் வீடு, ஆகிய மூன்று இடங்களிலும் தீய கிரகங்கள் இருந்து, ஏழாம் அதிபதி அஸ்தமனம் பெற்றிருந்தாலும் அல்லது நீசமாகி இருந்தாலும் ஜாதகனுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம்.

12 ஏழாம் அதிபனும், பதினொன்றாம் அதிபனும் ஒன்றாக இருந்தாலும் அல்லது இருவரும் திரிகோணம்பெற்று, ஒருவரை ஒருவர் பார்த்தாலும் ஜாதகனுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம்.

13. ஒன்பதாம் வீட்டதிபதி ஏழிலும், ஏழாம் அதிபதி நாலிலும் இருந்தால், ஜாதகனுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம். அதுபோல 7 & 11 ஆம் அதிபதிகள் ஒருவருக்கொருவர் கேந்திரத்தில் இருந்தாலும் ஜாதகனுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம்.

14. இரண்டு மற்றும் ஏழாம் வீடுகளில் தீயகிரகங்கள் இருப்பதுடன், ஏழாம் அதிபதி ஒரு தீய கிரகத்தின் பார்வை பெற்றால், ஜாதகனுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம்.

15. இரண்டு மற்றும் பன்னிரெண்டாம் இட அதிபதிகள் மூன்றாம் வீட்டில் இருந்து, குரு அல்லது ஒன்பதாம் இட அதிபதியின் பார்வை பெற்றால், ஜாதகனுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம்.

இது எல்லாம் பொதுவிதிகள்.

திருமண விஷயமாக அல்லது முதல் திருமணத்தில் சிக்கல் ஏற்பட்ட நிலையில் ஒரு ஜாதகத்தை அலசும்போது, இந்த விதிகளை மனதிற்கொண்டு அலசினால் ஒரு தெளிவும் கிடைக்கும்!

அன்புடன்
வாத்தியார்!
---------------------------------------------------------------------

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6.4.25

Astrology: பல கிரகங்கள் உச்சம் பெற்றால் தரும் பலன்கள்!

Astrology: பல கிரகங்கள் உச்சம் பெற்றால் தரும் பலன்கள்!

சிலருக்கு ஜாதகத்தில் ஒரு கிரகம் உச்சம் பெற்றிருக்கும். அதுவும் லக்கினாதிபதி உச்சம் பெற்றிருந்தால் நல்லது. அதுவும் உச்சம் பெற்ற லக்கினாதிபதி திரிகோண இடங்களில்
இருந்தால் மிகவும் நல்லது. சிலருக்கு ஒன்றிற்கு மேற்பட்ட கிரகங்கள் ஜாதகத்தில் உச்சமாக இருக்கும். உச்சம் பெற்ற கிரகங்கள் தங்களுடைய மகா திசைகளில் அல்லது
புத்திகளில் உரிய பலன்களை வாரி வழங்கும். அப்போது கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டியதுதான்!

இப்போது கிரகங்கள் உச்சம் பெற்றதற்கான பலன்களைப் பார்ப்போம்!

இரண்டு கிரகங்கள் உச்சம் பெற்றால் புகழ் பெறுவார்

மூன்று கிரகங்கள் உச்சம் பெற்றால் நகரத்தின் தலைவராகவும், செல்வந்தராகவும் இருப்பார். பதவியில் இருந்தால், உயர் பதவி பெறுவார்.

நான்கு கிரகம் உச்சம் பெற்றால், செல்வந்தராகவும், அரசாங்க கெளரவம் பெறுபவராகவும் இருப்பார்.

ஐந்து அல்லது ஆறு கிரகங்கள் உச்சம் பெற்றால், அமைச்சராக, தர்மவானாக , புகழ் உடையவராக இருப்பார். பல வீடுகள், வாகனங்கள் உடையவராகவும் இருப்பார்.

ஏழு கிரகங்கள் உச்சம் பெற்றால், உலகாளூம் திறமை உடையவர்!

உங்களுக்கு ஜாதகத்தில் எத்தனை கிரகங்கள் உச்சமாக உள்ளன. பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

5.4.25

Astrology: திருமண வாழ்க்கை! முக்கிய விதிகள்.

Astrology: திருமண வாழ்க்கை! முக்கிய விதிகள். 

திருமணம் என்பது ஒருவரின் வாழ்வில் முக்கியமான நிகழ்வு. அதி முக்கியமான நிகழ்வு என்றுகூடச் சொல்லலாம்.

கிரேக்க மேதை சாக்ரடீஸ் சொன்னாராம் “எப்படியும் திருமணம் செய்து கொள்ளுங்கள். ஒன்று உங்களுக்கு நல்ல மனைவி கிடைப்பாள். அல்லது நாட்டிற்கு ஒரு நல்ல தத்துவஞானி கிடைப்பான்.”

தத்துவஞானியாக யாரும் விரும்புவதில்லை. நல்ல இல்வாழ்க்கை அமைவதையே எல்லோரும் விரும்புவார்கள். நல்ல இல்வாழ்க்கை அமைவதற்கான ஜாதக அமைப்புக்கள் என்ன?  சில அமைப்புக்கள் உள்ளன. அதைவைத்து திருமணம் ஆக வேண்டியவர்கள் தங்களுக்கு நல்ல இல்வாழ்க்கை அமையுமா என்று பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். நடுத்தரவயதினர், தங்கள் உடன் பிறப்புக்களுக்கு அமையுமா என்று தெரிந்துகொள்ளலாம். வயதானவர்கள், தங்கள் மகன் அல்லது மகளுக்கு அமையவிருக்கும் வாழ்க்கையைத் தெரிந்து கொள்ளலாம்.ஆகவே பொதுவாகவே அது அனைவரும் தெரிந்து கொள்ள விரும்பும் பாடமாகும். அதை இன்று பதிவு செய்துள்ளேன். அனைவரும் படித்துப்
பயன் பெறுக!
--------------------------------------------
1
ஏழாம் வீட்டுக்காரன் ஆட்சி பலத்துடன் இருந்தாலும் அல்லது உச்சம் பெற்று இருந்தாலும் நல்ல திருமண வாழ்க்கை அமையும்.

2,
ஏழாம் வீட்டுக்காரன், 6 அல்லது 8 அல்லது 12ஆம் வீடுகளில் இருப்பதுடன், அது அவருடைய சொந்த வீடாகவோ அல்லது உச்ச வீடாகவோ  இல்லாத நிலைமையில் ஜாதகனின் மனைவி நோயாளியாக இருப்பாள். அவனைப் படுத்தி எடுப்பாள்.

3.
சுக்கிரன் எந்த வீட்டில் இருந்தாலும் சரி, உடன் பாபக் கிரகங்களின் கூட்டு இல்லாமல் இருக்க வேண்டும். தவறிக் கூட்டாக இருந்தால், ஜாதகனின் மனைவிக்கு அந்தக் கூட்டு மரணத்தை ஏற்படுத்தும்.

4.
ஏழாம் அதிபதி சுபக்கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை (association or aspect) பெற்று வலுவாக இருந்தால், ஜாதகனின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

5.
அதற்கு மாறாக ஏழாம் அதிபதி தீய கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை பெற்றிருந்தால், அல்லது பகை வீட்டில் இருந்தால் அல்லது நீசமடைந்திருந்தால், அல்லது அஸ்தமணம் பெற்று வலுவிழந்திருந்தால், ஜாதகனின் மனைவி நோயுற்றவளாக இருப்பாள். அல்லது பலவீனமாக இருப்பாள். அத்துடன் இந்த அமைப்புள்ள ஜாதகன் பல பெண்களுடன் தகாத உறவை ஏற்படுத்திக்கொள்வான்.

6.
ஏழாம் வீட்டுக்காரன் அமர்ந்திருக்கும் வீட்டின் இருபக்க வீடுகளிலும் சுபக்கிரகங்கள் இருந்தால், ஜாதகனுக்கு இனிய மணவாழ்வு அமையும்.

7.
ஏழாம் வீட்டுக்காரன் நவாம்சத்தில் சுபக்கிரகத்தின் வீட்டில் அமர்ந்திருந்தால், நல்ல திருமண வாழ்க்கை அமையும்.

8.
ஏழாம் வீட்டுக்காரன், 6 அல்லது 8 அல்லது 12ஆம் வீடுகளில், தீய கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வையுடன் இருக்கும் நிலைமை, நல்ல மணவாழ்க்கையைத் தராது. ஜாதகனின் திருமண வாழ்க்கை அவதி நிறைந்ததாக இருக்கும்!

9
ஏழாம் வீட்டுக்காரன் எந்த விதத்திலாவது பாதிக்கப்பெற்றிருந்தால், திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இராது. சண்டை சச்சரவுகள் நிறைந்ததாக இருக்கும்.

10.
ஏழாம் வீட்டில் ஒரு தீய கிரகம் அமர்ந்து, அது ஏழாம் அதிபதிக்கோ அல்லது லக்கினாதிபதிக்கோ பகைவன் என்னும் நிலைமையில், திருமண வாழ்வு மகிழ்ச்சியாக இராது.

11.
செவ்வாயும், சுக்கிரனும் எந்தவிதத்திலாவது ஜாதகத்தில் பாதிக்கப்பெற்றிருந்தால், திருமண வழ்க்கை அமைதி நிறைந்ததாக இருக்காது,

12.
ஏழில் சனீஷ்வரன் இருந்து, அது அவருடைய சொந்த வீடாகவோ அல்லது உச்ச வீடாகவோ இல்லாமலிருந்தால் மண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்காது!

எல்லாம் பொதுவிதிகள். ஜாதகத்தில் ஏழாம் வீட்டின் அமைப்பை வைத்தும், குடும்பஸ்தானத்தின் அமைப்பை வைத்தும்,  அஷ்டகவர்க்கப் பரல்கள், ஏழாம் அதிபதியின் சுயவர்க்கப்பரல்களை வைத்தும் இந்த விதிகளின் பலன்கள் மாறுபடும். அதாவது கூடலாம்  அல்லது குறையலாம் அல்லது இல்லாது போகலாம். அதையும் மனதில் வையுங்கள்.

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4.4.25

Astrology: யோககாரகன் முக்கிய விதிகள் Yogakarakan Lord for Luck

Astrology: யோககாரகன் முக்கிய விதிகள் Yogakarakan Lord for Luck

யாருக்கு யார் யோககாரகன்?

யோகம் என்றால் அதிர்ஷ்டம் (Good Luck) என்று பொருள்படும். யோககாரகன் என்பதற்கு அதிர்ஷ்டத்தைக் கொடுப்பவன் என்று பொருள்
கொள்ளுங்கள். ஜாதகத்தில் கிரகங்கள் உச்சமாக இருப்பதைவிட, யோகத்தைக் கொடுக்ககூடிய கிரகம் உச்சமாக இருந்தால் பல நன்மைகள்
ஏற்படும். அதுபோல யோககாரகன், ஆட்சி, கேந்திர திரிகோணங்களில் இருந்தாலும் பல்வித நன்மைகள் உண்டாகும்

1. ரிஷப லக்கினத்திற்கு சனி யோககாரகன் (9 & 10ஆம் இடங்களுக்கு உரியவன்)
2. துலா லக்கினத்திற்கு சனி யோககாரகன் (4 & 5ஆம் இடங்களுக்கு உரியவன்)
3. கடக லக்கினத்திற்கு செவ்வாய் யோககாரகன் (5 & 10ஆம் இடங்களுக்கு உரியவன்)
4. சிம்ம லக்கினத்திற்கு செவ்வாய் யோககாரகன் (4 & 9ஆம் இடங்களுக்கு உரியவன்)
5. மகர லக்கினத்திற்கு சுக்கிரன் யோககாரகன் (5 & 10ஆம் இடங்களுக்கு உரியவன்)
6. கும்ப லக்கினத்திற்கு சுக்கிரன் யோககாரகன் (4 & 9ஆம் இடங்களுக்கு உரியவன்)
7. மேஷ லக்கினக்காரகளுக்கு சூரியனும், சந்திரனும் சேர்ந்திருந்தால் பலத்த யோகத்தைக் கொடுக்கக்கூடியவர்கள். அவர்கள் 4ஆம் வீடு & 5  
  ஆம் வீடுகளுக்கு அதிபதிகள். அதை நினைவில் வையுங்கள்.
8. விருச்சிக லக்கினக்காரர்களுக்கு சூரியனும், சந்திரனும் சேர்ந்திருந்தால் பலத்த யோகத்தைக் கொடுக்கக்கூடியவர்கள். அவர்கள் 9ஆம் வீடு &
   10 ஆம் வீடுகளுக்கு அதிபதிகள். அதை நினைவில் வையுங்கள்.
9. தனுசு & விருச்சிக லக்கினத்திற்கு யோககாரகன் என்று தனியாக யாரும் கிடையாது. லக்கினாதிபதி குருவே யோககாரகன் வேலையையும்
செய்வார். அவர் முதல் நிலை சுபக்கிரகம் அதை மனதில் வையுங்கள். அவர் ஜாதகத்தில் அம்சமாக இருந்தால் போதும். ஜாதகன்
யோகங்களுடன் இருப்பான்.
10. மிதுன & கன்னி லக்கினங்களுக்கு தனியாக யோககாரகன் கிடையாது.லக்கினாதிபதி புதனே யோககாரகன் வேலையையும் செய்வார். அவர்
வித்யாகாரகன். வித்தைகளுக்கு அதிபதி. அவர் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் போதும். ஜாதகன் யோகங்களுடன் இருப்பான்.

பாடம் எப்படியிருந்தது என்பதை ஒரு வார்த்தையில் சொல்லுங்கள்!

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

3.4.25

Astrology: சந்திரனின் முக்கியத்துவம்!

Astrology: சந்திரனின் முக்கியத்துவம்!

மனிதனுக்கு உடல் நிலை எத்தனை முக்கியமோ,  மன நிலையும் அத்தனை முக்கியமானது!

மனம் உற்சாகமாவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்போது களத்தில் இறங்கினால் எதை வேண்டுமென்றாலும் சாதிக்கலாம்.

சிலர் எப்போதும் உற்சாகமாக இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். சிலர் எப்போதும் உற்சாகமில்லாது டல்லடித்து உட்கார்ந்திருப்பார்கள். அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. எல்லாம் ஜாதகக் கோளாறுகள்.

இன்றைய பாடத்தில் அதைப் பார்ப்போம்.

12 ராசிகளில் சந்திரன் அமர்ந்திருக்கும் ராசிக்கான பலனை முதலில் பார்ப்போம். எல்லாம் பொதுப்பலன்கள்

1. மேஷத்தில் சந்திரன் இருந்தால், ஜாதகன் மன உறுதி கொண்டவன். சிந்தனை வயப்படுபவன். உணர்ச்சி வேகம் உள்ளவன். உணர்ச்சிகள் தூண்டும்போது அதற்குத் தகுந்தாற்போல செயல் படக்கூடியவன். கள்ளம் கபடு இல்லாதவன். வெளிப்படையாகப் பேசுபவன்.

2. ரிஷபத்தில் சந்திரன் இருந்தால், நிலையான மனதை உடையவன். எந்த சூநிலையிலும் தன்னை, தனக்கு விருப்பமில்லாவிட்டால், மாற்றிக்கொள்ளாதவன். அதனால் வீண் பிடிவாதக்காரன் போன்ற தோற்றத்தை அளிக்கக்கூடியவன்.

3. மிதுனத்தில் சந்திரன் இருந்தால் ஜாதகன் அதிபுத்திசாலியாக இருப்பான். சிலர் வஞ்சனை உள்ளவர்களாக, இரட்டை வேடம் போடுபவர்களாக இருப்பார்கள். அதையும் அடுத்தவர்கள் கண்டுபிடிக்க முடியாதபடி தங்கள் கட்டுக்குள் வைத்திருப்பார்கள். எப்போதும் பாதுகாப்பாக இருப்பார்கள்.

4. கடகத்தில் சந்திரன் இருந்தால், ஜாதகன் மிகவும் உணர்ச்சி வசப்படுபவனாக இருப்பான். தன்னைச் சுற்றியுள்ளவர்கள் மேல் அக்கறை உள்ளவனாக இருப்பான்.

5. சிம்மத்தில் சந்திரன் இருந்தால், ஜாதகன் தன்முனைப்பு உள்ளவனாக, ஈகோ உள்ளவனாக இருப்பான். சிலரிடம் தான் என்னும் மனப்பாங்கு மிகுந்து இருக்கும். அகம்பாவம் இருக்கும். தற்பெருமைக்காரனாகவும் இருப்பான். அதே நேரத்தில் மகிழ்ச்சி உடையனாகவும்,
பலருடைய கண்களில் படுபவனாகவும் இருப்பான்.

6. கன்னியில் சந்திரன் இருந்தால், ஜாதகன் யதார்த்தமாக இருப்பான். உலக இயல்புகளோடு ஒத்துப்போகும் தன்மையுடையவனாக இருப்பான். குறிப்பிட்டுச்சொன்னால், He will be practical. எல்லா விஷயங்களிலும் ஒரு கண்ணோட்டத்துடன் இருப்பான்.
அத்துடன் extremely sensitive ஆக இருப்பான்.

7. துலாம் ராசியில் சந்திரன் இருந்தால், ஜாதகன் அலைபாயும் மனதை உடையவன்.  swaying from one side to the other.
swinging indecisively from one course of action or opinion to another. சட்டென்று முடிவு எடுக்க மாட்டார்கள். சிலர் சலன புத்திக்காரர்களாக இருப்பார்கள். ஆனாலும் அன்பு மற்றும் கருணை மிக்கவர்களாக இருப்பார்கள்.

8. விருச்சிகத்தில் சந்திரன் உள்ளவர்கள், மற்றவர்களை நேசிக்கும் மனதை உடையவர்கள். பக்தி, விசுவாசம் மிக்கவர்கள். மென்மையானவர்கள். அவர்களுடைய மனதைத் தொடும்படி பேசினால், மயங்கி விடக்கூடியவர்கள்.

9. தனுசில் ச்ந்திரன் இருக்கப்பிறந்தவர்கள், இறைவனின் ஆசி உள்ளவர்கள் (blessed people). பெருந்தன்மை மிக்கவர்கள். அதாவது பெரிய மனது உடையவர்கள். மற்றவர்களின் உணர்வை மதிக்கக்கூடியவர்கள்.

10. மகரத்தில் சந்திரன் இருந்தால், ஜாதகன், யாரிடமும் நட்புக் கொள்ளும் மனதை உடையவன். எதையும் சாதிகக்ககூடிய மன வலுவை உடையவன். அட்சரசுத்தமாகச் செய்து முடிக்கக்கூடியவன்.செய்வதைத் திருந்தச் செய்யக்கூடியவன். முழுமையாகச் செய்யக்கூடியவன்.

11. கும்பத்தில் சந்திரன் இருந்தால் ஜாதகன் reserved  மற்றும் serious nature உடையவனாக இருப்பான். ஆனாலும் மனிதநேயம் மிக்கவனாக இருப்பான்.

12. மீனத்தில் சந்திரன் இருந்தால், ஜாதகன் நல்ல உள்ளம் கொண்டவனாக இருப்பான். அடுத்தவர்களை நேசிப்பவனாக இருப்பான்.
அத்துடன் மாற்றங்களை விரும்புபவனாக இருப்பான்.

இவைகள் எல்லாமுமே பொது விதிகள். சந்திரனுடன் கூட்டாக உள்ள மற்ற கிரகங்களை வைத்து இவைகள் மாறுபடும். சுபக்கிரகங்களின் கூட்டு என்றால் யதார்த்தம் மற்றும் நற்பலன்கள் அதிகமாகும்.  தீய கிரகங்களின் கூட்டு என்றால் இந்தக் குணங்கள் மைனசாகி விடும். அதாவது குறைந்துவிடும்

சந்திரன், சுக்கிரனோடு சேர்ந்திருந்தால், எந்த இடத்தில் இருந்தாலும், ஜாதகன் நட்பு பாராட்டக்கூடியவனாக இருப்பான். அத்துடன் இறைபக்தியுடையவனாகவும், ரசனை உணர்வு மிக்கவனாகவும் இருப்பான். தனது மகிழ்ச்சியான தருணங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வான். உலகத்தாரோடு ஒத்து வாழ்பவனாக இருப்பான்.

சந்திரன் குருவோடு சேர்ந்திருந்தால், அது மேன்மையான அமைப்பாகும். ஜாதகன் நல்ல உள்ளம் கொண்டவனாகவும்,  பெருந்தன்மை மிக்கவனாகவும், மற்றவர்களின் தவறுகளை எளிதில் மன்னிக்கக்கூடியவனாகவும் இருப்பான். இந்த இரு கிரகங்களும் எந்த ராசியில் சேர்ந்திருந்தாலும் இந்தப் பலன்கள் மாறாது. ஆனால் லக்கினத்திற்கு 6ஆம், 8ஆம், 12ஆம் இடங்களில் இந்த அமைப்பு இருந்தால் பலன்கள் மாறுபடும்.

சந்திரன் லக்கினத்திற்கு 6ஆம், 8ஆம், 12ஆம் இடங்களில் இருந்தால் ஏற்படும் பாதகங்கள்.
6ல் (House of diseases)
8ல் (House of sins)
12ல் (House of losses & weakness)
ஆகிய இடங்களில் இருக்கும் சந்திரன் பலவீனமாகி ஜாதகனின் மனநிலையிலும், எண்ணங்களிலும் பாதகமான மாற்றங்களை உண்டாக்கும்.
அதே நேரத்தில் இந்த இடத்தில் இருக்கும் சந்திரன் சுபக்கிரகங்களான குரு அல்லது சுக்கிரனின் பார்வையைப் பெற்றிருந்தால், அந்தக் குறைகள் இருக்காது. அந்த இடங்களில் இருக்கும் சந்திரன் பலமாகி ஜாதகனுக்கு நன்மைகளையே செய்வார். அதை மனதில் கொள்க!

கீழ்க்கண்ட அமைப்பு ஜாதகனின் மனநிலையில் பாதகங்களை உண்டாக்கும்:

1. குரு லக்கினத்திலும் செவ்வாய் ஏழாம் வீட்டிலும் இருக்கும் அமைப்பு: உதாரணத்திற்கு மேஷ லக்கினம். ஜாதகனுக்கு கொடூரத்தன்மை இருக்கும். தன்னைச் சுற்றி இருப்பவர்களை எல்லாம் ஆட்டி வைப்பான்.

2. சனி லக்கினத்திலும், செவ்வாய் சனிக்கு 6, 8 அல்லது 12ல் இருக்கும் நிலைமையும் மோசமான மனநிலையைக் கொடுக்கும்.

3. சனி லக்கினத்திலும், சூரியன் 12லும், செவ்வாய் கோணங்களிலும் இருக்கும் அமைப்பும் மோசமான மனநிலையைக் கொடுக்கும்.

4. மூன்றாம் அதிபதி ராகு அல்லது கேதுவுடன் இருக்கும் நிலைமை ஜாதகனுக்கு பெரும் மன அழுத்தத்தைக் கொடுக்கும்

5. ஆறாம் வீடு ஒரு தீய கிரகத்தின் பார்வையுடன் இருந்தாலும் மன அழுத்தங்கள் உண்டாகும். மன அழுத்தம் (Depression) என்றால் என்ன வென்று தெரியுமல்லவா?

6. தேய்பிறைச சந்திரனும், சனியும் கூட்டாக 12ல் இருந்தாலும் மன அழுத்தங்கள் உண்டாகும், ஜாதகனின் நடத்தையும் மாறுபடும்.

எல்லாம் பொதுப்பலன்கள். தனிப்பட்ட ஜாதத்திற்கு, ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களை வைத்துப் பலன்கள் மாறுபடும். ஆகவே கவலை கொள்ளாமல், ஜாதகத்தை அலசுங்கள். அப்படியே ஒரு அவுன்ஸ் 337 டானிக்கை ஒரு குவளை தண்ணீரில் கலந்து அவ்வப்போது குடியுங்கள்

அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++=

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

1.4.25

Astrology: ஒரு ஜாதகத்தில் முக்கியமான அம்சங்கள்.

Astrology: ஒரு ஜாதகத்தில் முக்கியமான அம்சங்கள்.

முக்கிய விதிகள்! 

பாடங்களில் அடியேன் அடிக்கடி உபயோகிக்கும் சொற்கள்:
வலிமையாக இருக்க வேண்டும்
கெட்டுப் போயிருக்ககூடாது.
பாடங்களைப் படித்துப் படித்து, உங்களுக்கும் அச்சொற்களின் அர்த்தம் முழுமையாகப் பிடிபட்டிருக்கும்.

ஒரு ஜாதகத்தில் முக்கியமான அம்சங்கள்.

1.   லக்கினமும், லக்கினாதிபதியும் நன்றாக இருக்க வேண்டும்.
2.  சுபக்கிரகங்களான குரு, சந்திரன், சுக்கிரன் ஆகியவை கெட்டுப்போயிருக்கக்கூடாது.
3.  லக்கினம், கேந்திர வீடுகள், திரிகோண வீட்டு அதிபதிகள் 6, 8 அல்லது 12ல் மறைந்துவிடக்கூடாது.
4.  ஆறாம் இடத்து அதிபதியும், எட்டாம் இடத்து அதிபதியும், 12ஆம் இடத்து அதிபதியும் முக்கியமான இடங்களில் அமர்ந்து ஆதிக்கம்      
செய்யக்கூடாது.
5.  வீடுகள் (Houses) பாபகர்த்தாரி யோகத்தில் சிக்கிக்கொண்டிருக்கக்கூடாது.
6.  ஆயுள் ஸ்தானம் நன்றாக இருக்க வேண்டும்.

இவை அனைத்துமே நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆகவே கிடைத்தவரை லாபம் என்று ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான்.

கெட்டுப்போயிருக்கும் அமைப்புக்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்பெற்றிருக்கும். அதைப் பாருங்கள்.

அனைவருடைய ஜாதகமும் சமம்தான்.

அம்பானியின் ஜாதகமும், உங்களுடைய ஜாதகமும் ஒன்றுதான்.
பிரணாப் முகர்ஜியின் ஜாதகமும் உங்களுடைய ஜாதகமும் ஒன்றுதான்.
ஷாருக்கானின் ஜாதகமும் உங்களுடைய ஜாதகமும் ஒன்றுதான்.
அவர்களுக்கும் அஷ்டகவர்க்கப்பரல் 337 தான்
உங்களுக்கும் அஷ்டகவர்க்கப்பரல் 337 தான்

அதை என்றும் நினைவில் வையுங்கள்!
----------------------------------------
அன்புடன்,
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

30.3.25

Astrology: மகிழ்ச்சியான மண வாழ்க்கை Happy married life!

Astrology: மகிழ்ச்சியான மண வாழ்க்கை 
Happy married life!

தலைப்பு: மகிழ்ச்சியான மண வாழ்க்கை
---------------------------------------------
பள்ளிக்கூடத்தில் இருப்பதுபோல சிலபஸ் எல்லாம் கிடையாது
முக்கிய விதிகள், அலசல் பாடங்கள், உதாரண ஜாதகங்கள் என்று பாடங்கள் கலவையாக இருக்கும்.
படிப்பதற்கு சுவையாக, வழக்கம்போல எனது நடையில் (எளிய நடையில்) எழுதிக்கொண்டுள்ளேன்!
தொடர்ந்து படியுங்கள்.
சந்தேகம் வராது. வந்தால், பாடம் சம்பந்தமான சந்தேகத்தை மட்டும் கேளுங்கள்
உங்கள் ஜாதகத்தோடு சம்பந்தப் படுத்திக் கேட்காதீர்கள்
முழுப்பாடங்களையும் படித்த பிறகு உங்கள் ஜாதக சம்பந்தமான மேட்டர்களை அலசிப் பார்க்கும் அறிவு உங்களுக்கே ஏற்பட்டுவிடும்

நான் எனக்குத் தெரிந்ததை மட்டுமே சொல்லித் தருகிறேன்
தெரிந்ததை மட்டுமே எழுதுகிறேன்
உங்களை ஜோதிடன் ஆக்கவேண்டும் என்பது என் நோக்கமல்ல. முதலில் நானே தொழில்முறை ஜோதிடன் அல்ல!
ஜோதிடத்தில் நான் கற்றுணர்ந்தவற்றை, உங்களுக்குச் சொல்லித் தருகிறேன். அவ்வளவுதான்
நீங்கள் நான் சொல்லிக் கொடுப்பதை மனதில் வாங்கிக் கொண்டு, உங்கள் ஜாதகத்தையும், உங்கள் வீட்டில் உள்ளவர்களின் ஜாதகத்தையும், உங்கள்

நண்பர்களின் ஜாதகத்தையும், அலசிப்பார்க்கும் அளவிற்கு மேன்மையுற்றால், அதுவே போதும்.நான் சொல்லித் தரும் நோக்கமும் அதுதான்.
எண்ணிக்கை முக்கியமல்ல. நான் சொல்லித் தருபவர்களில் ஒரு பத்துப் பேர் தேர்ச்சியுற்றால் போதும். அதுவே எனது அரிய நேரத்தை செலவழித்து

நான் உங்களுக்குப் பாடம் நடத்துவதற்குக் கிடைத்த பயனாகும்.

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------
இன்றையப் பாடம்: மகிழ்ச்சியான மண வாழ்க்கை

அக்காலத்தில், ஜாதகம் பார்த்து நடந்த திருமணங்கள் குறைவே! நெருங்கிய உறவுகளில் உள்ள வரன்களை, ஒருவருக்கொருவர் மனப் பொருத்தம்

இருந்தால் போதும் என்று மணம் செய்துகொள்வார்கள். அத்தை வீடு, அம்மான் வீடு (மாமா வீடு) என்று திருமணங்கள் நடைபெறும். அல்லது உறவுக்காரர்களில் சம்பந்தம் செய்யக்கூடிய உறவுகளைத் தேர்ந்தெடுத்து தங்கள் பிள்ளைகளுக்கு மணம் முடித்துவிடுவார்கள்.

பெண்ணிற்கு 18 வயதிலும், பையனுக்கு 21 வயதிலும் திருமணத்தை செய்துவிடுவார்கள்.

எழுபது ஆண்டுகளுக்கு முன்பு, நிலமை, வேறு விதமாக இருந்தது. அப்போதெல்லாம் பால்ய விவாகம். அதாவது குழந்தைத் திருமணம்.
என் பெற்றோருக்கு நடந்ததும் பால்ய விவாகம்தான். என் அன்னைக்கு அப்போது 11 வயதுதான். என் தந்தைக்கு 13 வயது. செல்வந்தர் வீடுகள். இரு வீட்டாருமே நெருங்கிய உறவுக்காரர்கள். அப்போதெல்லாம் 6 நாள் கல்யாணமாம். அந்த 6 நாட்களுக்கும், உறவினர்கள் அனைவருக்கும் ஜாம் ஜாமென்று விருந்தோம்பல் உண்டாம். என் பெற்றோர்கள் திருமணத்திலும் அவ்வாறு நடந்ததாம்!

ஜாதகம் எல்லாம் பார்க்கும் வழக்கம் இல்லாத காலம் அது. திருமணத்திற்குப் பிறகு தம்பதிகளுக்குள் பிரச்சினை ஏற்பட்டால், இரு வீட்டிலும் உள்ள பெரியவர்கள் கலந்து பேசி அதை சரி செய்திருக்கிறார்கள்.

இப்போது நிலைமை அப்படியல்ல! எல்லாம் தலை கீழாக மாறியுள்ளது.

இன்றைய தேதியில், பத்திரிக்கைக்காரர்கள், சனி, பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு & கேது பெயர்ச்சி என்று ஒவ்வொரு பெயர்ச்சிக்கும் மலர் (இணைப்புப் புத்தகங்களைப்) போட்டு வருவதாலும், மற்றும் நாள், வார, மாத ராசி பலன்களை எழுதிவருவதாலும், மக்களிடம் ஒரு விழிப்பு உணர்வு

ஏற்பட்டுள்ளது. எல்லோருக்கும் ஜாதகத்தின் மேலும் ஜோதிடத்தின் மேலும் ஒரு பிடிப்பு ஏற்பெற்றுள்ளது. அனைவரும் பொருத்தம் பார்த்து திருமணம் செய்யும் நிலைமைக்கு ஆளாகிவிட்டார்கள்.

பொருத்தமான ஜாதகம் உடைய வரனுக்கு அலைபவர்கள் சிலரை எனக்குத் தெரியும்.

அவர்களிடம் நான் சொல்லுவேன்:

”ஜாதகம் பொருந்தினால் பையனைப் பிடிக்காது. பையனைப் பிடித்தால் ஜாதகம் பொருந்தாது. ஆகவே முருகப் பெருமானிடம் பாரத்தைக் கொடுத்து

விட்டு ஜாதகம் பார்க்காமல் திருமணத்தை செய்து வையுங்கள்” என்று கூறுவேன்

ஜாதகம் பார்த்துப் பண்ணுவதால் வருவிருக்கின்ற கேடை (விதியைத்) தடுத்து நிறுத்த முடியுமா? நடக்கவிருப்பதை, நடக்கவிடாமல் செய்ய முடியுமா?

நடக்கவிருப்பது எப்படியும் நடந்தே தீரும்!

ஜாதகப் பொருத்தம் பார்த்து செய்த திருமணங்களில் பல திருமணங்கள் ஊற்றிக் கொண்டுள்ளன. அவர்களை எல்லாம் நான் அறிவேன்.

அதற்கு என்ன காரணம்?

ஜாதகத்தின் மேல் தவறா? அல்லது ஜோதிடத்தின் மேல் தவறா? அல்லது ஜோதிடரின் மேல் தவறா?

ஜோதிடர், 10 பொருத்தங்களைப் பார்ப்பார். சரியாக இருக்கும். தசா சந்திப்பு ஜோடிகளுக்குள் இருக்ககூடாது என்பதால அதையும் பார்ப்பார்,

அதுவும் சரியாக இருக்கும். செவ்வாய் தோஷம் இருக்கிறதா? இருந்தால் இருவருக்கும் இருக்கிறதா என்றும் பார்ப்பார். அதுவும் பொருந்தி வரும். அது போன்று பெண் வீட்டார் கொண்டு வரும் ஐந்து அல்லது ஆறு ஜாதகங்களை அலசி, அவற்றுள் ஒன்றைத் தெரிவு செய்து கொடுப்பார்.

அவரால் முடிந்தது அதுதான்.

தனிப்பட்ட முறையில், பெண்ணின் ஜாதகத்தையும், பையனின் ஜாதகத்தையும் தனித்தனியாக அலசி அவைகளுள் உள்ள குறைபாடுகளை அவர் பார்க்க மாட்டார். அல்லது அப்படிப் பார்ப்பதற்கான நேரம் அவருக்கு இருக்காது.

அவ்வாறு அலசிப் பார்க்காத ஜாதகங்களில் உள்ள குறைகள் விஸ்வரூபம் எடுக்கும்போது பிரச்சினைகள் உண்டாகும்.
---------------------------------------------------------------------------
மகிழ்ச்சியான மண வாழ்க்கைக்கு உரிய முக்கியமான ஜாதக விதிகளில் சில!

1. லக்கினாதிபதியும், ஏழாம் அதிபதியும் ஒருவருக்கொருவர் பகையான இடத்தில் அமரக்கூடாது. 6/8 அல்லது 1/12 நிலைகளில் அமர்ந்திருக்கக்கூடாது

உதாரணமாக கன்னி லக்கினத்திற்கு அதிபதி புதன். அந்த லக்கினத்திற்கு 7ஆம் அதிபதி குரு. புதன்  9ல் அதாவது ரிஷபத்திலும், குரு 4ல் அதாவது தனுசுவிலும் இருந்தால் ஒருவருக்கொருவர் 6/8 நிலைப்பாடு. குருவிற்கு ஆறில் புதன். புதனுக்கு எட்டில் குரு. அவ்வாறு இருப்பது தீமையானது.

2. களத்திரகாரகன் சுக்கிரன் வக்கிரகதியிலோ அல்லது பாப கர்த்தாரி யோகத்திலோ இருக்கக்கூடாது.

3. ஏழாம் வீடும் அதன் அதிபதியும் பாபகர்த்தாரி யோகத்தில் சிக்கியிருக்கக்கூடாது.

பாப கர்த்தாரி யோகம் என்றால் என்னவென்று தெரியுமல்லவா? அதைப் பற்றி பலமுறை சொல்லியுள்ளேன். எனது பாடங்களை விடாமல் தொடர்ந்து

படிப்பவர்களுக்கு அது தெரியும்

4. அஷ்டகவர்க்கத்தில் 7ஆம் வீட்டில் இருவருக்கும் 25 பரல்களுக்கு மேல் இருப்பது நல்லது. ஒருவருக்கு 20 பரல்களோ அல்லது அதற்கும் குறைவான பரல்களோ இருப்பது நல்லதல்ல

இவைகள் எல்லாம் பொது விதிகள். ஆனால் முக்கியமான விதிகள். இவற்றை மனதில் வையுங்கள்

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

29.3.25

Astrology: கல்வியின் மேன்மை

Astrology: கல்வியின் மேன்மை


கல்வியைப் பற்றிச் ஜோதிடம் சொல்வதென்ன?

    ”கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
    மாடல்ல மற்றை யவை”
          - திருக்குறள்

    ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும், கல்வியைத் தவிர மற்றப் பொருள்கள் (அத்தகைய சிறப்புடைய) செல்வம் அல்ல - மு.வ உரை. கல்வியே அழிவு இல்லாத சிறந்த செல்வம்; பிற எல்லாம் செல்வமே அல்ல - சாலமன் பாப்பையா உரை
-----------------------------------------------
மாடு என்றால், தமிழில் செல்வம் என்ற பொருளையும் கொடுக்கும். கல்வியைத் தவிர மற்றதெல்லாம் சிறந்த செல்வம் இல்லை என்கிறார்கள். சரி, நாமும் ஒப்புக்கொள்வோம்.

அத்தகைய சிறந்த செல்வம் அனைவருக்கும் கிடைக்கிறதா என்றால், இல்லை என்றே சொல்ல வேண்டும். கல்வி வியாபாரமாகிவிட்ட சூழ்நிலையால் ஏற்பட்டுள்ள கொடுமை அது. அதை நாம் பேசி ஒன்றும் ஆகப் போவதில்லை. ஆகவே அதை விடுத்து, ஜாதகப்படி கல்வி கிடைக்க என்ன அமைப்பு என்பதை மட்டும் பார்த்து நாம் நம் மனதை சாந்தப் படுத்திக்கொள்வோம்!
----------------------------------------------
இயற்கையாகவே ஒருவருக்குத் தடையற்ற கல்வி கிடைப்பதற்கு லக்கினாதிபதி ஜாதகத்தில் நன்றாக இருக்க வேண்டும். லக்கினாதிபதி கேந்திரங்களிலோ (1,4,7,10th houses), அல்லது திரிகோணங்களிலோ (1,5,9th houses) அல்லது 2 அல்லது 11ஆம் வீட்டிலோ சென்று அமர்ந்திருப்பது நன்மை பயக்கும். அதைவிடுத்து லக்கினாதிபதி 6 அல்லது 8 அல்லது 12ம் வீடுகளில் அமர்ந்திருப்பது நல்லதல்ல. ஜாதகன் கஷ்டப்படப் பிறந்தவன். அந்தக் கஷ்டங்களில் முறையான கல்வி கிடைக்காமையும் சேர்ந்து கொள்ளும்.

நான்காம் வீடுதான் கல்விக்கான வீடு. நான்காம் வீடுதான் தாய்க்கான வீடு. தாய்தான் ஒரு குழுந்தைக்கு முதல் ஆசான். என்னவொரு ஒற்றுமை பாருங்கள். தன் தாயிடமிருந்துதான் ஒரு குழந்தை நிறையக் கற்றுக்கொள்கிறது. நான்காம் வீடுதான் ஜாதகனுக்கு அடிப்படைக் கல்விக்கும், பட்டப் படிப்புவரை உள்ள கல்விக்கும் உரிய இடமாகும்.

ஐந்தாம் வீடு அறிவிற்கான இடமாகும். It is the place for keen intelligence. ஒருவன் விஞ்ஞானம் மருத்துவம் போன்ற துறைகளில் உயர்கல்வி பெற ஐந்தாம் வீடும் நன்றாக இருக்க வேண்டும்.
--------------------------------------------------
கல்வி பெறுவதற்குத் தடை ஏற்படுத்தும் ஜாதக அமைப்புக்களைக் கீழே கொடுத்துள்ளேன். அவற்றைக் கவனமாகப் பாருங்கள். அவற்றில் எது இருந்தாலும் ஜாதகன் கல்வி மற்றும் உயர் கல்வியைப் பெற முடியாது!

1. இரண்டாம் வீட்டின் அதிபதி, நான்காம் வீட்டின் அதிபதி, ஐந்தாம் வீட்டின் அதிபதி ஆகியவர்களில் எவரும் நீசம் அடைந்திருக்கக்கூடாது.

2. 2ம், 4ம் & 5ஆம் வீடுகள் பாபகர்த்தாரி யோகத்தில் சிக்கி இருக்ககூடாது.

3. அதேபோல்  2, 4 & 5ஆம் வீட்டின் அதிபதிகளும் பாபகர்த்தாரி யோகத்தில் சிக்கி இருக்ககூடாது.

4. இரண்டாம் வீட்டில் சனி அல்லது ராகு அல்லது அவர்கள் இருவரும் சேர்ந்து அமர்ந்திருக்கக்கூடாது

5. புதன் மேஷம் அல்லது விருச்சிகத்தில் போய் அமர்ந்திருக்ககூடாது.

6. புதன் நீசமடைந்திருக்ககூடாது.

7. புதன் செவ்வாயின் பார்வையில் இருக்கக்கூடாது.

8. குரு நீசம் பெற்றிருக்கக்கூடாது.

9. சூரியன் நீசமடைந்திருக்கக்கூடாது.

மேற்கூறியவை அனைத்தும் பொதுவிதிகள். சுபக்கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வையை வைத்து இந்த அமைப்பினால் ஏற்படும் கெடுதல்கள் குறையலாம். அல்லது இல்லாமல் போகலாம்.

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

27.3.25

Astrology: யோகங்களின் முக்கியத்துவம்

Astrology: யோகங்களின் முக்கியத்துவம்

ஒரு ஜாதகத்தைப் பார்த்தவுடன் அற்புதமாக உள்ளது. அல்லது அருமையாக உள்ளது. அல்லது நன்றாக உள்ளது அல்லது சுமாராக/சாதாரணமாக உள்ளது. அல்லது மோசமாக உள்ளது. மிகவும் மோசமாக உள்ளது. என்று கூறுவதற்கு ஜாதகத்தில் உள்ள யோகங்கள் பயன்படும்.

நமது முனுசாமிகள் (அதாங்க நமது முனிவர்கள்) அவற்றை எல்லாம் தொகுத்து சிறப்பாக எழுதிவைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள்.

யோகங்கள் இரண்டு வகைப்படும். நல்ல யோகங்கள் (Good yogas). கெட்ட யோகங்கள் (ava yogas)

நன்மை செய்யும் கிரகங்களின் கூட்டணி நன்மையான யோகங்களைத் தரும். தீய கிரகங்களின் கூட்டணி தீமையான (அவயோகங்கள்) யோகங்களைக் கொடுக்கும்.

நல்ல பெற்றோர்கள். நல்ல வீடு, மேன்மை மிக்க கல்வி, நல்ல வேலை, அன்பான மனைவி அல்லது கணவன், நல்ல குழந்தைகள், பெயர், புகழ், உடைமைகள், மதிப்பு மரியாதை செல்வாக்கு அதிகாரம் இவை எல்லாம் அல்லது இவ்ற்றில் சிலவாவது கிடைக்க ஜாதகத்தில் நல்ல யோகங்கள் இருக்க வேண்டும்

அதைவிடுத்து, வாழ்க்கை அவலமாக, வறுமையாக இருந்தால் அது அவயோகக் கணக்கில் வரும். வறுமை, உடல் ஊனம், கல்வியின்மை, விபத்துக்கள், தீர்ர்க்க முடியாத நோய்கள், அடிமைத்தனமான வாழ்க்கை, புத்திக்குறைவு அல்லது புத்தியின்மை அல்லது பேதமை சுருக்கமாகச் சொன்னால் பைத்தியக்காரத்தனம் (madness) எல்லாம் இதில் அடங்கும்.

ஒருவருடைய ஜாதகத்தில் மீனத்தில் சுக்கிரன் உச்சம் பெற்று இருந்தால், உச்சம் பெற்ற நிலையில் அந்த சுக்கிரன் ஜாதகருக்கு சொகுசான (Luxurious) வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பார். அதாவது எல்லா செள்கரியங்களையும், வசதிகளையும் கொடுப்பார். அது விதி (Rule) ஆனால்  அதே சுக்கிரன் அதே ஜாதகத்தில் நவாம்சத்தில் நீசமடைந்திருந்தால், முன் சொன்னது அனைத்தும் ஊற்றிக்கொண்டுவிடும்!

ஆனால் ஜாதகத்தில் அமைந்திருக்கும் யோகங்கள் ஊற்றிக் கொள்ளாமல் தங்கள் பணிகளை தங்களுடைய தசாபுத்திக் காலங்களில் செவ்வனே செய்துவிடும்.

பிருஹத் ஜாதகம், சரவளி போன்ற நூல்களில் ஏராளமான யோகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட யோகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றில் முக்கியமான யோகங்கள், அவற்றின் முக்கியத்துவத்தை வைத்து வரிசையாகப் பின்னொரு சமயம் பார்ப்போம். அவைகள் தனிப் பாடங்கள்.

யோகங்கள் எப்படி உண்டாகின்றன?

அமரும் இடத்தைவைத்து அல்லது கூட்டு சேரும் இடத்தை வைத்து அவைகள் உண்டாகும்

ராசியில் இருக்கும் இடத்தை வைத்து யோகங்கள் இருப்பதைப் பார்க்கலாம். நவாம்சத்தை வைத்து அவைகள் செல்லுமா? அல்லது செல்லாதா? என்பதைப் பார்க்கலாம்.

உதாரணத்திற்கு ராசியில் சுக்கிரன் உச்சமடைவது ஜாதகனுக்கு சொகுசான வாழ்க்கையைக் கொடுக்கும். எல்லா விதமான வசதிகளையும் கொடுக்கும். ஆனால் அதே நேரத்தில், அதே ஜாதகத்தில் சுக்கிரன் நவாம்சத்தில் நீசம் பெற்றிருந்தால் அவைகள் அனைத்தும் கேன்சலாகிவிடும்.

அஸ்தமனம் பெற்ற கிரகங்கள் யோகத்தைத் தராது. யோகங்கள் ஒரு ஜாதகத்திற்கு நன்மை செய்யும் கிரகங்களாலும், நன்மையான வீடுகளில் அவைகள் அமர்வதாலும் அல்லது நன்மை செய்யும் இன்னொரு கிரகத்தின் கூட்டணியாலும் அல்லது பார்வையாலும் கிடைக்கும். ஆகவே அவை அனைத்தையும் அலசிப் பார்க்க வேண்டும். மேலோட்டமாகப் பார்த்து ஒரு முடிவிற்கு வரக்கூடாது!

எத்தனை யோகங்கள் இருந்தாலும் அவற்றை எல்லாம் விட முக்கியமான 5 யோகங்கள் இருப்பது ஜாதகத்தின் மேன்மையை அல்லது சிறப்பைக் கணிக்க உதவும்.

அவை என்னென்ன?

1.குருவால் ஏற்படும் ஹம்ச யோகம்
2.செவ்வாயால் ஏற்படும் ருசக யோகம்
3.புதனால் ஏற்படும் பத்ர யோகம்
4.சுக்கிரனால் ஏற்படும் மாளவ்ய யோகம்
5.சனியால் ஏற்படும் சச யோகம்

மேற்கண்ட அந்த 5 யோகங்களும் ஜாதகத்தில் இருந்தால் அந்த ஜாதகனை தெய்வப்பிறவி என்று சொல்லலாம். தெய்வத்தால் ஆசீர்வதிக்கப்பெற்றவன் என்று சொல்லலாம். அதற்கு பஞ்சமகா புருஷ யோகம் என்று பெயர்

ஆகவே அவைகள் உங்கள் ஜாதகத்தில் உள்ளனவா என்று பார்க்க வேண்டும். இருந்தால் கவலையை விடுங்கள். அவைகள் உங்களுக்கு மிகப்பெரிய ஏற்றங்களைத் தரும்.

எப்போது தரும்?

தங்களுடைய தசா புத்திகளில் தரும்

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

26.3.25

Astrology: சொந்த ஊரில் வசிக்கும் பாக்கியம்

Astrology: சொந்த ஊரில் வசிக்கும் பாக்கியம் 

சொந்த ஊர் என்றாலே எல்லோருக்கும் ஒரு மயக்கம்தான். சொந்த ஊரில் வசிப்பதே ஒரு பாக்கியம்தான்

ஆனாலும் அது நம் கையிலா இருக்கிறது? படித்து முடித்தவுடன், பலர் வேலை வாய்ப்பின் காரணமாக வெளியூருக்குச் சென்று வசிக்க நேரிடுகிறது. சிலருக்கு வெளிநாடுகளுக்குச் சென்று வசிக்கும்படியான சூழ்நிலை உண்டாகிவிடுகிறது.

அங்கே சென்று, அதாவது வெளியூர் அல்லது வெளி நாடுகளுக்குச் சென்று, எவ்வள்வு பொருள் ஈட்டினாலும் அல்லது எத்தனை வசதிமிக்க வாழ்க்கை வாழ்ந்தாலும், மனதிற்குள் சொந்த ஊரைப் பற்றிய ஏக்கம் இருக்கத்தான் செய்யும். சிலர் அதை வெளிப்படுத்துவார்கள். சிலர் தங்கள் உள்ள உணர்வுகளை வெளிப் படுத்தாமல் கமுக்கமாக இருப்பார்கள்.

“சொர்க்கமே என்றாலும் அது நம்மஊரைப் போலவருமா
அடஎந்நாடு என்றாலும் அது நம்நாட்டுக் கீடாகுமா ”

என்று ஒரு அற்புதமான பாடல் மூலம் இளையராஜா அதை பலரும் அறியப் பாடலாகச் சொன்னார்.

மத்திய வயதில் வெளி நகரங்களில் அல்லது வெளிநாடுகளில் உள்ள சொகுசான வாழ்க்கையால் பலர் தங்களை மறந்து அங்கே இருந்தாலும், வயதான காலத்தில், சொந்த ஊர் ஏக்கம் பலருக்கும் வந்து விடும்.

தங்கள் சொந்த ஊருக்குப் பக்கத்தில் இருப்பவர்கள், மாதம் ஒருமுறையாவது தங்கள் ஊருக்கு வந்து விட்டுப் போவார்கள். வட மாநிலங்களில் இருப்பவர்கள் வருடம் ஒருமுறையாவது வந்து விட்டுப்போவார்கள். சிங்கப்பூர், துபாய், அல்லது அமெரிக்கா போன்ற தூர தேசங்களில் இருப்பவர்கள், இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது வந்து விட்டுப் போவார்கள்.

ஆனால் வயதானவர்கள், அதாவது 60 அல்லது 70 வயதைத் தாண்டியவர்களுக்கு, தாங்கள் வசிக்கும் நாட்டை விட்டு அல்லது வசிக்கும் ஊரை விட்டுத் திரும்பி வந்து, தங்கள் சொந்த ஊரிலேயே செட்டில் ஆகும் விருப்பம் இருக்கும். ஆனால் சிலருக்கு மட்டுமே அந்த வாய்ப்புக் கிடைக்கும். பலருக்கும் அது கிடைக்காமல் போய்விடும்.

வயதான காலத்தில், வீட்டில் உள்ள மற்ற உறுப்பினர்கள், அதாவது மனைவி மற்றும் மக்கள் (பிள்ளைகள்) அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால் என்ன செய்ய முடியும்?

ஜாதகப்படி அதற்கான வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே அது சாத்தியமாகும்.
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

25.3.25

Astrology: கோச்சார ராகுவின் பலன்கள் Effects of Transit Rahu

Astrology:  கோச்சார ராகுவின் பலன்கள் Effects of Transit Rahu

ராகு சாயா கிரகம். சொந்த வீடு இல்லாத கிரகம். மற்ற ஏழு கிரகங்களுக்கும் ஒவ்வொரு நாள் ஆதிக்க நாளாக உள்ளது. அதனால்தான் தினமும் ராகுவிற்கு 90 நிமிடங்களும் (ராகு காலம்), கேதுவிற்குத் 90 நிமிடங்களும் (எம கண்டம்) அந்த நேரங்களில் முக்கியமான செய்ல்களை மக்கள் தவிர்ப்பார்கள். நாமும் தவிர்க்க வேண்டும்

சரி சொல்ல வந்த விஷ்யத்திற்கு வருகிறேன். சனி 30 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு சுற்று வருவதைப் போல, நாகுவும் கேதுவும் 18 ஆண்டுகளில் ஒரு சுற்றை முடிப்பார்கள். அதாவது ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒரு ராசியில் த்ங்கிச் செல்வார். அங்கே தங்கி வழக்கப்படி அந்த இடத்திற்கான சோதனைகளையும், துன்பங்களையும், இழப்புக்களையும் ஜாதகனுக்குக் கொடுத்துவிட்டு, அடுத்த ராசிக்குத் தன் நடையைக் கட்டிவிடுவார். அடுத்த ராசிக்கு, கடிகாரச் சுற்றுக்கு எதிர் சுற்ரில் செல்வார். ராகுவும், கேதுவும் எதிர் சுற்றில்தான் சுற்றுவார்கள் என்பது பால பாடம். அது அனைவருக்கும் தெரியும்.  Rahu and ketu rotates in anti clock wise

அவ்வாறு ஒவ்வொரு ராசியிலும் ராகு தங்கும்போது, தங்கிச் செல்லும்போது  ஜாதகனுக்குக் கிடைக்கக்கூடிய முக்கியமான பலனைச் சுருக்கமாகக் கீழே கொடுத்துள்ளேன்!
---------------------------------------------------------------------------------
தலைப்பு: ராகுவின் கோள்சாரப் பலன்:

1. ஒன்றாம் வீட்டில் ராகு இருக்கும் காலத்தில் ஜாதகனுக்கு உடல் நலமின்மை உண்டாகும்.
2. இரண்டாம் வீட்டில் ராகு இருக்கும் காலத்தில் ஜாதகனுக்கு சொத்து, செல்வம் விரையமாகும்
3. நான்காம் வீட்டில் ராகு இருக்கும் காலத்தில் ஜாதகனுக்கு விரோதங்கள் ஏற்படும். எதிரிகள் உண்டாவார்கள்
4. ஐந்தாம் வீட்டில் ராகு இருக்கும் காலத்தில் ஜாதகனுக்கு கவலைகள் ஏற்படும். மகிழ்ச்சி இருக்காது.
5. ஏழாம் வீட்டில் ராகு இருக்கும் காலத்தில் ஜாதகனுக்கு மனைவியால் உபத்திரவங்கள், சிரமங்கள், கஷ்டங்கள் ஏற்படும். ஜாதகியாக இருந்தால் அவளுக்கு அவைகள் அவளுடைய கணவனால் ஏற்படும்.
6. எட்டில் ராகு இருக்கும் காலம் உடல் நலத்திற்குக் கேடானது.
7. ஒன்பதில் ராகு இருக்கும் காலத்தில் ஜாதகனுக்கு இடமாற்றம், ஊர் மாற்றம் ஏற்படும். சிலர் தூர தேசங்களுக்குச் செல்ல நேரிடும்.
8. பத்தில் ராகு இருக்கும் காலத்தில் ஜாதகனுக்குத் தொழிலில், வியாபாரத்தில், போட்டிகள், விரோதிகள் ஏற்படுவார்கள். அவர்களால் அல்லல் பட நேரிடும்.

3ஆம் வீடு, 6ஆம் வீடு, 11ஆம் வீடு, 12ஆம் வீடு ஆகிய நான்கு இடங்களிலும் ராகு சஞ்சாரம் செய்யும் காலத்தில், ஜாதகனுக்கு ஒரு சிரமமும் ஏற்படாது.

இந்தப் பலன்கள் யாவும் பொதுப்பலன்கள், தசாபுத்தி சிறப்பானதாக நடைபெற்றுக்கொண்டிருந்தால், இந்தப் பலன்கள் குறையும் அல்லது இல்லாமல்
போய்விடும்!
-----------------------------------------------------------------------------------
நம் ஜாதகத்தில் (Birth Chart) கிரகங்கள் இருக்கும் இடத்தில் நடப்பு கோள்சாரப்படி  ராகு வந்து அமருவதால் ஏற்படும் பொதுப்பலன்கள்:

1. சூரியன் இருக்கும் இடத்தில் ராகு கோள்சாரப்படி சஞ்சாரம் செய்யும்போது, ஜாதகனுக்கு மன அழுத்தங்கள், பிரச்சினைகள் உண்டாகும். படுத்தி எடுக்கும்.
2. சந்திரன் இருக்கும் இடத்தில் ராகு கோள்சாரப்படி சஞ்சாரம் செய்யும்போது, ஜாதகனின் தாயாருக்கு அது நன்மையல்ல. தாயாரின் உடல் நிலைக்குக் கேடு உண்டாகும். அதனால் ஜாதகனுக்கு மன அழுத்தம் உண்டாகும்.
3. செவ்வாய் இருக்கும் இடத்தில் ராகு கோள்சாரப்படி சஞ்சாரம் செய்யும்போது, ஜாதகனுக்கு உடல் நலக்குறைவு ஏற்படும். அத்துடன் தேவையில்லாத வம்பு, வழக்கு, வாக்குவாதம் போன்ற விவகாரங்கள் ஏற்படும்.
4. குரு இருக்கும் இடத்தில் ராகு கோள்சாரப்படி சஞ்சாரம் செய்யும்போது, ஜாதகனுக்கு மகிழ்ச்சி இல்லாமல் போய்விடும்.
5. சுக்கிரன் இருக்கும் இடத்தில் ராகு கோள்சாரப்படி சஞ்சாரம் செய்யும்போது, ஜாதகனுக்குக் குடும்ப வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்படும்.
6. சனி அல்லது ராகு இருக்கும் இடத்தில் ராகு கோள்சாரப்படி சஞ்சாரம் செய்யும்போது, ஜாதகனுக்கு அதிகமான மன அழுத்தம் (Tensions) உண்டாகும். அது எதனால் வேண்டுமென்றாலும் ஏற்படலாம்.

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

24.3.25

Astrology: இயற்கையான சுபக்கிரகங்களும், இயற்கையான தீய கிரகங்களும்!

Astrology: இயற்கையான சுபக்கிரகங்களும், இயற்கையான தீய கிரகங்களும்! 
நீங்கள் நல்லவரா அல்லது கெட்டவரா?

நமக்கு நாம் எப்போதும், எந்த நிலையிலும் நல்லவர்தான். நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் நமக்கு நியாயமாகவும், நன்மை உடையதாகவும்தான் தெரியும்!

ஆனால் நாம் நல்லவரா அல்லது கெட்டவரா என்பதை மற்றவர்கள்தான் சொல்ல வேண்டும். அல்லது மற்றவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்!

நல்லவர்கள் அல்லது கெட்டவர்கள் என்பது இரண்டு வகைப்படும். இயற்கையாகவே நல்லவர்கள் அல்லது இயற்கையாகவே கெட்டவர்கள் என்று இரண்டுவகைப் படுத்தலாம். அடிப்படைக் குணங்கள் எல்லாம் நல்லவையாக இருந்தால், இயற்கையாகவே நல்லவர் என்று எடுத்துக்கொள்ளலாம்.

ஜோதிடத்தில், கிரகங்களை அவ்வாறு வகைப்படுத்தியுள்ளார்கள்.

இயற்கையாகவே நல்ல கிரகங்கள். அதாவது சுபக்கிரகங்கள்.

குரு, சுக்கிரன், வளர்பிறைச் சந்திரன், புதன் ஆகிய 4 கிரகங்களும் இயற்கையாகவே நல்ல கிரகங்கள். ஒருவருடைய ஜாதகத்தில் அவைகள் வலிமையாக இருக்க வேண்டும்

இயற்கையாகவே தீய கிரகங்கள்

சனி, செவ்வாய், ராகு & கேது ஆகிய 4 கிரகங்களும்  இயற்கையாகவே தீய கிரகங்கள் ஆகும்! தீய கிரகத்துடன் சேரும் புதன் நன்மையைச் செய்வதில்லை.அதுவும் தீயதாகவே மாறிவிடும்!

12 லக்கினங்களுக்கும் உரிய நன்மை செய்யும் கிரகங்களையும், தீமையான கிரகங்களையும் வகைப் படுத்தியுள்ளார்கள்

அதை இன்று பார்ப்போம்!
---------------------------------------
1. மேஷ லக்கினம்:
இந்த லக்கினத்திற்கு குருவும் சூரியனும் நன்மை செய்யக்கூடிய கிரகங்களாகும். சனி, புதன், சுக்கிரன் ஆகிய மூன்றும் இந்த லக்கினத்திற்குத் தீய கிரகங்களாகும். மேஷத்திற்கு சுக்கிரன் அதி மோசமான கிரகமாகும்!

2. ரிஷப லக்கினம்
இந்த லக்கினத்திற்கு சனியும், சூரியனும் நன்மை செய்யக்கூடிய கிரகங்களாகும். குரு, சுக்கிரன், சந்திரன் ஆகிய மூன்று கிரகங்களும் ஆகாத (வேண்டாத) கிரகங்களாகும்

3. மிதுன லக்கினம்:
இந்த லக்கினத்திற்கு சுக்கிரன் மட்டுமே நன்மை செய்யக்கூடிய கிரகமாகும். செவ்வாய், சூரியன், குரு ஆகிய மூன்று கிரகங்களும் ஆகாத (வேண்டாத) கிரகங்களாகும்

4. கடக லக்கினம்
செவ்வாய், குரு, சந்திரன் ஆகிய மூன்றும் இந்த லக்கினத்திற்கு நன்மை செய்யக்கூடிய கிரகங்களாகும். புதனும், சுக்கிரனும் ஆகாத (வேண்டாத) கிரகங்களாகும். செவ்வாய் இந்த லக்கினத்திற்கு யோக காரகன் ஆவார். பல நன்மைகளைச் செய்யக்கூடியவர் அவர்தான்!

5. சிம்ம லக்கினம்
செவ்வாய், சூரியன் குரு ஆகிய மூன்றும் இந்த லக்கினத்திற்கு நன்மை செய்யக்கூடிய கிரகங்களாகும். புதன், சுக்கிரன், சனி ஆகிய மூன்றும் இந்த லக்கினத்திற்கு வேண்டாத கிரகங்களாகும். செவ்வாய் இந்த லக்கினத்திற்கு யோக காரகன் ஆவார். பல நன்மைகளைச் செய்யக்கூடியவர் அவர்தான்!

6. கன்னி லக்கினம்
இந்த லக்கினத்திற்கு சுக்கிரன் மட்டுமே நன்மை செய்யக்கூடிய கிரகமாகும். செவ்வாய், குரு, சந்திரன் ஆகிய மூன்றும் இந்த லக்கினத்திற்கு வேண்டாத கிரகங்களாகும்.

7. துலா லக்கினம்:
சனியும் புதனும் இந்த லக்கினத்திற்கு நன்மை செய்யக்கூடிய கிரகங்களாகும். குரு, செவ்வாய், சூரியன் ஆகிய மூன்றும் இந்த லக்கினத்திற்கு வேண்டாத கிரகங்களாகும்.

8. விருச்சிக லக்கினம்
குரு, சந்திரன் ஆகிய இரண்டு கிரகங்களும் இந்த லக்கினத்திற்கு நன்மை செய்யக்கூடிய கிரகங்களாகும். சூரியனும், சந்திரனும் இந்த லக்கினத்திற்கு ராஜயோகத்தைக் கொடுக்கும் கிரகங்களாகும். சுக்கிரனும், புதனும் ஆகாத கிரகங்கள். சனி கலவையான பலன்களைக் கொடுக்கும். செவ்வாயும் கலவையான பலன்களையே கொடுப்பார்

9 .தனுசு லக்கினம்
செவ்வாய், சூரியன், புதன் ஆகிய மூன்று கிரகங்களும் இந்த லக்கினத்திற்கு நன்மை செய்யக்கூடிய கிரகங்களாகும். சுக்கிரன் இந்த லக்கினத்திற்கு ஆகாத கிரகமாகும்

10. மகர லக்கினம்
சுக்கிரனும் புதனும் வேண்டியவர்கள். குரு, செவ்வாய், சந்திரன் ஆகிய மூன்று கிரகங்களும் வேண்டாதவர்கள் (ஆகாதவர்கள்)

11. கும்ப லக்கினம்
சனியும், சுக்கிரனும் வேண்டியவர்கள். குரு, சந்திரன், செவ்வாய் ஆகிய மூவரும் வேண்டாதவர்கள்.

12. மீன லக்கினம்
செவ்வாயும், சந்திரனும் வேண்டிவர்கள். சனி, சுக்கிரன், புதன், சூரியன் ஆகிய நான்கு கிரகங்களும் வேண்டாதவர்கள்.

பாடத்தை மனதில் பதிய வையுங்கள். குறைந்த அளவு உங்கள் லக்கினத்திற்கு உரிய கிரகங்களையாவது மனதில் பதிய வையுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
===========================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!