மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

21.6.25

Astrology: கோடி நன்மை தரும் குரு மகா திசை!

Astrology: கோடி நன்மை தரும் குரு மகா திசை!

குரு பார்க்க கோடி நன்மை என்று சொல்வார்கள். கிரகங்களின் முதல்நிலை சுபக்கிரகம் குரு. அதனால் ஜாதகத்தில் அவருடைய  பார்வை பலவிதத்திலும் நன்மைகளைத் தரும். அதை உயர்த்திச் சொல்வதற்காகக் கோடி நன்மைகள் என்று சொல்வார்கள். அவருடைய பார்வைக்கே அத்தனை வலிமை என்றால், அவருடைய மகாதிசையைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா?

உடனே உங்களில் சிலர், என்னடா, நமக்கு சில நன்மைகள்தானே கிடைத்தது - கோடிகள் எல்லாம் கிடைக்கவில்லையே என்று நினைக்க வேண்டாம். கேட்க வேண்டாம். அவரவருடைய ஜாதகத்தைப் பொறுத்து அந்த நன்மைகளின் அளவு மாறுபடும். ஜாதகத்தில் குரு பகவான் ஆட்சி அல்லது உச்சம் பெற்று இருக்கும் நிலைமையில் அத்துடன் அவர் கேந்திர திரிகோணங்களில் இருக்கும் நிலைமையில், அவருடைய தசா புத்தி நடக்கும் காலங்கள் அந்த நன்மைகள் உண்டாகும்.  அனுபவித்தவர்களுக்குத்தான் அது தெரியும்.

இன்று குரு பகவானின் மகாதிசையின் பலன்களைப் பற்றிப் பார்ப்போம்!

ஜாதகத்தின் பலன்களை சம்பந்தப்பட்ட கிரகங்களின் காலத்தில்தான் பெறமுடியும். திருமணம் என்றாலும் சரி மரணம் என்றாலும் சரி சம்பந்தப்பட்ட கிரகங்களின் காலங்களில்தான் நடக்கும்.

மகாதிசைகளும் (Major Dasas) அதன் புத்திகளும் (sub Periods) ஒரு ஒழுங்கு முறையில் வந்து போகும். ஆகவே அவை வரும்வரை பொறுத்திருக்க வேண்டியதுதான். நம் அவசரத்திற்கெல்லாம் ஒன்றும் ஆகாது.

பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு குரு மகாதிசை அநேகமாக வராது. சுமார் 100 ஆண்டுகாலம் வாழ்ந்தால் வரலாம். அதுபோல வேறு சில நட்சத்திரக்காரர்களுக்கும் வராது.

அவர்கள் வருத்தப்பட வேண்டாம். ஒவ்வொரு மகாதிசையிலும் குரு புத்தி வரும் அல்லவா? அவற்றை எல்லாம் கூட்டிப் பாருங்கள். மொத்தம் 5,760  நாட்கள் (16 ஆண்டுகள்) வரும். அப்போது குரு பகவான் உரிய பலன்களைத் தருவார். மொத்தக் கணக்கு சரியாக இருக்கும்.

சரி குரு மகா திசையில் எல்லா ஆண்டுகளுமே சுகமாக இருக்குமா என்றால், அதில் வரும்  குருவின் சுயபுத்தி, சனி புத்தி, புதன் புத்தி, சுக்கிர புத்தி, சந்திர புத்தி ஆகியவைகள் (சுமார் 11 ஆண்டுகள்) நன்றாக இருக்கும். எப்போது நன்றாக இருக்கும்? அந்த 5 கிரகங்களும் ஜாதகத்தில் கேந்திர, அல்லது திரிகோண அதிபர்களாக இருந்து நல்ல இடத்தில் இருந்தால் வரும். அதை விட்டு அவர்கள் 6, 8 12ஆம் இடங்களில் இருந்தாலோ அல்லது குருபகவானுக்கு 6, 8 12ல் அமர்ந்திருந்தாலோ, அதவது அஷ்ட சஷ்டம நிலைமை போன்ற அமைப்பில் இருந்தாலோ முழுமையான பலன்கள் இருக்காது.

குரு மகாதிசைக்கு உரிய காலத்தை ஒரு அட்டவணை மூலம் கீழே கொடுத்துள்ளேன்!

உதாரணத்திற்கு குரு மகாதிசையின் துவக்க புத்தியான அதன் சுய புத்திக்கு உரிய பலனை ஒரு பாடல் மூலம் விளக்கியுள்ளேன்

தானென்ற வியாழதிசை ஒருபத்தாறு
    தன்மையுடன் அதன் புத்தி வருஷம் ரெண்டு
நானென்ற நாளதுவும் நாற்பத்தெட்டு
    நன்றாக அதன் பலனை நவிலக் கேளு
கோனென்ற ராசாவும் குருவருளுமுண்டு
    குறைவில்லா திரவியங்கள் வெகு லாபமுண்டாம்
ஆனென்ற பெண்கொடியாள் மனமகிழ்ச்சியுண்டாம்
    மங்களமும் சோபனமும் வளருங்கலியாணம்

லாபமுண்டாம் என்றால் எல்லா வகையிலும் பயன் உண்டாகும் என்று எடுத்துக்கொள்ளுங்கள்.

உடன் தெய்வ வழிபாட்டையும் செய்தீர்கள் என்றால் கிடைக்கும் பலன்கள் நிலைக்கும் தன்மை உடையதாக ஆகிவிடும்! 

நன்மைகளும் தீமைகளும் கலந்ததுதான் மகாதிசைகள். அதையும் மனதில் வையுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்


வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

20.6.25

Astrology: சள்ளையான சனி மகா திசை!

Astrology: சள்ளையான சனி மகா திசை!

சள்ளை என்றால் தொல்லை என்று பொருள்படும். ஆகவே தொல்லைகள் நிறைந்த சனி திசை என்று நீங்கள் வைத்துக்கொள்ளலாம். தொல்லைகளுக்கு நிறைய உதாரணங்களைச் சொல்லலாம். உங்களுக்குத் தெரியாத தொல்லைகளா? ஆகவே சொல்லவில்லை! 

அதீத தீய கிரகங்கள் மூன்றில், சென்ற பாப்கார்ன் பதிவில் (28.8.2014) கேது மகா திசையைப் பற்றியும், நேற்றையப் பதிவில் ராகு மகா திசையைப் பற்றியும் பார்த்தோம். அந்த வரிசையில் இன்று சனி திசையைப் பற்றிப் பார்ப்போம்.

ஜாதகத்தின் பலன்களை சம்பந்தப்பட்ட கிரகங்களின் காலத்தில்தான் பெறமுடியும். திருமணம் என்றாலும் சரி மரணம் என்றாலும் சரி சம்பந்தப்பட்ட கிரகங்களின் காலங்களில்தான் நடக்கும்.

மகாதிசைகளும் (Major Dasas) அதன் புத்திகளும் (sub Periods) ஒரு ஒழுங்கு முறையில் வந்து போகும். ஆகவே அவை வரும்வரை பொறுத்திருக்க வேண்டியதுதான். நம் அவசரத்திற்கெல்லாம் ஒன்றும் ஆகாது.

ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு சனி மகாதிசை அநேகமாக வராது. சுமார் 100 ஆண்டுகாலம் வாழ்ந்தால் வரலாம். அதுபோல வேறு சில நட்சத்திரக்காரர்களுக்கும் வராது.

அவர்கள் காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு, ஆகா நான் தப்பித்துவிட்டேன் என்று மகிழ முடியாது. ஒவ்வொரு மகாதிசையிலும் சனி புத்தி வரும் அல்லவா? அவற்றை எல்லாம் கூட்டிப் பாருங்கள். மொத்தம் 6840 நாட்கள் (18 ஆண்டுகள்) வரும். அப்போது சனி திசை தன்னுடைய வேலையைக் காட்டும். கணக்கு சரியாக இருக்கும்.

சரி சனி திசையில் எல்லா ஆண்டுகளுமே மோசமாக இருக்குமா என்றால், அதில் வரும் புதன் புத்தி, சுக்கிர புத்தி,குரு புத்தி, (மொத்தம் 8 ஆண்டுகள், 8 மாதங்கள்) ஆகியவைகள் நன்றாக இருக்கும். எப்போது நன்றாக இருக்கும்? அந்த 3 கிரகங்களும் ஜாதகத்தில் கேந்திர, அல்லது திரிகோண அதிபர்களாக இருந்து நல்ல இடத்தில் இருந்தால் வரும். அதை விட்டு அவர்கள் 6, 8 12ஆம் இடங்களில் இருந்தால் வராது ஊற்றிக் கொண்டு விடும்!

சனி மகாதிசைக்கு உரிய காலத்தை ஒரு அட்டவணை மூலம் கீழே கொடுத்துள்ளேன்!

உதாரணத்திற்கு சனி மகாதிசையின் துவக்க புத்தியான அதன் சுய புத்திக்கு உரிய பலனை ஒரு பாடல் மூலம் விளக்கியுள்ளேன்

கேளப்பா சனிதிசையில் மார்க்கங்கேளு
    கெடியான வருஷமது பத்தொன்பதாகும்
கேளப்பா சனிபுத்தி வருஷம் மூன்று 
    கேடான நாளதுவும் மூன்றதாகும்
பாளப்பா பாவையரும் பாலன்தானும்
    பாங்கான வருஷம் மூன்றில் சாவதாகும்
ஆளப்பா அலைச்சது மெத்தவுண்டாம்
   அளவில்லா தனச் சேதமாகுந்தானே

சாவதாகும் என்றால் பயப்படவேண்டாம். சில சமயங்களில் ’செத்துப் பிழைத்தேன்’ என்று சொல்வீர்கள் இல்லையா? அது போன்ற செயல்தான் இதுவும்!

தெய்வ வழிபாடு செய்ய வேண்டும். தாக்குப் பிடிக்கும் சக்தி கிடைக்கும்.

நன்மைகளும் தீமைகளும் கலந்ததுதான் மகாதிசைகள். அதை மனதில் வையுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்


வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

19.6.25

Astrology: ரகளையான ராகு மகா திசை!

Astrology: ரகளையான ராகு மகா திசை!

ரகளை என்றால் தகராறு, கலாட்டா என்று பொருள்படும். ஆகவே தகராறான ராகு திசை என்று நீங்கள் வைத்துக்கொள்ளலாம். நீங்கள் நீண்ட பயணம் செல்லும்போது பயணிக்கும் வாகனம் வழியில் தகராறு செய்தால் பயணம் எப்படி இருக்கும்? நினைத்துப்பாருங்கள்!

ஜாதகத்தின் பலன்களை சம்பந்தப்பட்ட கிரகங்களின் காலத்தில்தான் பெறமுடியும். திருமணம் என்றாலும் சரி மரணம் என்றாலும் சரி சம்பந்தப்பட்ட கிரகங்களின் காலங்களில்தான் நடக்கும்.

மகாதிசைகளும் (Major Dasas) அதன் புத்திகளும் (sub Periods) ஒரு ஒழுங்கு முறையில் வந்து போகும். ஆகவே அவை வரும்வரை பொறுத்திருக்க வேண்டியதுதான். நம் அவசரத்திற்கெல்லாம் ஒன்றும் ஆகாது.

இன்று ராகு மகா திசையைப் பற்றிப் பார்ப்போம்!

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ராகு மகாதிசை அநேகமாக வராது. சுமார் 100 ஆண்டுகாலம் வாழ்ந்தால் வரலாம். அதுபோல வேறு சில நட்சத்திரக்காரர்களுக்கும் வராது.

அவர்கள் காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு, ஆகா நான் தப்பித்துவிட்டேன் என்று மகிழ முடியாது. ஒவ்வொரு மகாதிசையிலும் ராகு புத்தி வரும் அல்லவா? அவற்றை எல்லாம் கூட்டிப் பாருங்கள். மொத்தம் 6480 நாட்கள் (18 ஆண்டுகள்) வரும். அப்போது ராகு திசை தன்னுடைய வேலையைக் காட்டும். கணக்கு சரியாக இருக்கும்.

சரி ராகு திசையிலும் எல்லா ஆண்டுகளுமே மோசமாக இருக்குமா என்றால், அதில் வரும் குரு புத்தி,  புதன் புத்தி, சுக்கிர புத்தி (மொத்தம் 8 ஆண்டுகள்) ஆகியவைகள் நன்றாக இருக்கும். எப்போது நன்றாக இருக்கும்? அந்த 3 கிரகங்களும் ஜாதகத்தில் கேந்திர, அல்லது திரிகோண அதிபர்களாக இருந்து நல்ல இடத்தில் இருந்தால் வரும். அதை விட்டு அவர்கள் 6, 8 12ஆம் இடங்களில் இருந்தால் வராது ஊற்றிக் கொண்டு விடும்!

உதாரணத்திற்கு ராகு மகாதிசையின் துவக்க புத்தியான அதன் சுய புத்திக்கு உரிய பலனை ஒரு பாடல் மூலம் விளக்கியுள்ளேன்

காணவே ராகுதிசை வருஷம்பதினெட்டு
    கனதையுள்ள ராகுவினில் ராகுபுத்தி
தோணவே மாதமது முப்பத்திரெண்டு
    துகையான நாளதுவும் பனிரெண்டாகும்
யேனவே சத்துருவால் நிபந்தனையோடும்
    யெண்ணமுள்ள மனைவியரும் யிருந்தவிடம்பாழாம்
போனவே பழம்பொருளும் சேதமாகும்
    பெலமான நோயதுவும் கூடிக்கொல்லும்

கொல்லும் என்றால் பயப்படவேண்டாம். உங்களைத் துன்பப் படுத்துபவரைப் பற்றிக் குறிப்பிடும்போது, சாகடிக்கிறான்டா’ என்று சொல்வீர்கள் இல்லையா? அது போன்ற செயல்தான் இதுவும்!

தெய்வ வழிபாடு செய்ய வேண்டும். தாக்குப் பிடிக்கும் சக்தி கிடைக்கும்.

நன்மைகளும் தீமைகளும் கலந்ததுதான் மகாதிசைகள். அதை மனதில் வையுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்


வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18.6.25

Astrology: கேடு செய்யும் கேது மகா திசை!

Astrology:  கேடு செய்யும் கேது மகா திசை!

ஜாதகத்தின் பலன்களை சம்பந்தப்பட்ட கிரகங்களின் காலத்தில்தான் பெறமுடியும். திருமணம் என்றாலும் சரி மரணம் என்றாலும் சரி சம்பந்தப்பட்ட கிரகங்களின் காலங்களில்தான் நடக்கும்.

மகாதிசைகளும் (Major Dasas) அதன் புத்திகளும் (sub Periods) ஒரு ஒழுங்கு முறையில் வந்து போகும். ஆகவே அவை வரும்வரை பொறுத்திருக்க வேண்டியதுதான். நம் அவசரத்திற்கெல்லாம் ஒன்றும் ஆகாது.

மற்ற மகா திசைகளை விட, சனி, ராகு & கேது ஆகிய இயற்கையான தீய கிரகங்களின் மகா திசை மோசமானதாக இருக்கும். சனி 19 ஆண்டுகளும் ராகு 18 ஆண்டுகளும் தீயதாக இருக்கும் என்றாலும் அவற்றைவிட குறைந்த காலமே, அதாவது 7 ஆண்டுகளே உள்ள கேதுவின் திசை அதி மோசமானதாகும். 7 ஆண்டுகளில் போட்டுப் பார்த்துவிடுவார். எச்சரிக்கயாக இருக்க வேண்டும். தெய்வ வழிபாடு செய்ய வேண்டும். தாக்குப் பிடிக்கும் சக்தி கிடைக்கும்.

கார்த்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்குக் கேது மகாதிசை அநேகமாக வராது. சுமார் 93 ஆண்டுகாலம் வாழ்ந்தால் வரலாம். அதுபோல வேறு சில நட்சத்திரக்காரர்களுக்கும் வராது.

அவர்கள் காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு, ஆகா நான் தப்பித்துவிட்டேன் என்று மகிழ முடியாது. ஒவ்வொரு மகாதிசையிலும் கேது புத்தி வரும் அல்லவா? அவற்றை எல்லாம் கூட்டிப் பாருங்கள். மொத்தம் 2,520 நாட்கள் (7 ஆண்டுகள்) வரும். கணக்கு சரியாக இருக்கும்.

சரி கேது திசையிலும் எல்லா ஆண்டுகளுமே மோசமாக இருக்குமா என்றால், அதில் வரும் சுக்கிர புத்தி, குரு புத்தி, புதன் புத்தி (மொத்தம் 3 ஆண்டுகள்) ஆகியவைகள் நன்றாக இருக்கும். எப்போது நன்றாக இருக்கும்? அந்த 3 கிரகங்களும் ஜாதகத்தில் கேந்திர, அல்லது திரிகோண அதிபர்களாக இருந்து நல்ல இடத்தில் இருந்தால் வரும். அதை விட்டு அவர்கள் 6, 8 12ஆம் இடங்களில் இருந்தால் வராது ஊற்றிக் கொண்டு விடும்!

கேது மகாதிசைக்கு உரிய காலத்தை ஒரு அட்டவணை மூலம் கீழே கொடுத்துள்ளேன்!

உதாரணத்திற்கு கேது மகாதிசையின் துவக்க புத்தியான அதன் சுய புத்திக்கான பலனை ஒரு பாடல் மூலம் விளக்கியுள்ளேன்

ஆமென்ற கேது திசை வருஷம் ஏழு
அதனுடைய புத்தி நாள் நூற்றி நாற்பத்தியேழு
போமென்ற அதன் பலனை புகழக் கேளு
புகழான அரசர்படை ஆய்தத்தால் பீடை
தாமென்ற சத்துருவால் வியாதி காணும்
தனச் சேதம் உடல் சேதம் தானே உண்டாம்
நாமென்ற நகரத்தில் சூனியங்கள் உண்டாம்
நாடெல்லாம் தீதாகும் நன்மையில்லாப் பகையே!

நன்மைகளும் தீமைகளும் கலந்ததுதான் மகாதிசைகள். அதை மனதில் வையுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்


வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

17.6.25

Astrology: புத்தியுள்ள மனிதரெல்லாம் என்ன செய்வார்கள்?

Astrology: புத்தியுள்ள மனிதரெல்லாம் என்ன செய்வார்கள்?

”புத்தியுள்ள மனிதரெல்லாம்
வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
புத்திசாலியில்லை… புத்திசாலியில்லை”

என்று கவியரசர் கண்ணதாசன் அவர்கள் ஒரு பாடலில் அசத்தலாகச் சொல்லிவிட்டுப் போனார். முழுப்பாடலையும், உங்களுக்காகக் கீழே கொடுத்துள்ளேன். பிறகு படித்துப் பாருங்கள். இப்போது பாடத்தைப் பார்ப்போம்!

வெற்றி, தோல்விகளை விட்டுத் தள்ளுங்கள். எல்லோரும், எல்லா நேரத்திலும் வெற்றி பெறமுடியாது. அதற்கு சந்தர்ப்பம், சூழ்நிலை எல்லாம் ஒத்து வரவேண்டும். ஆகவே புத்தியை வெற்றி தோல்விக் கண்ணோட்டத்தில் மறந்துவிட்டுப் பாருங்கள். புத்தி அவசியம். புத்தி இல்லாத மனிதனை யார்தான் விரும்புவார்கள்? அதைச் சொல்லுங்கள்.

ஜாதகத்தில் குரு, சந்திரன், சுக்கிரன் ஆகிய மூன்று சுபக்கிரகங்களும் எப்படி முக்கியமோ அப்படி புதனும் முக்கியமான கிரகமாகும். புதன் தனித்து, அதாவது தீயகிரகங்கள் எதுவுடனும் சேராமல், அல்லது தீயகிரகங்களின் பார்வை பெறாமல் தனித்து இருந்தால் அது சுபக்கிரகமாகும். அத்துடன் அது கேந்திர, திரிகோணங்களில் இருந்தால் ஜாதகனுக்கு மிகுந்த நன்மை அளிக்கும்.

புதன், சுக்கிரனுடன் சேர்ந்தால், அது ஜாதகனுக்கு நிபுனத்துவத்தைக் கொடுக்கும். ஜாதகன் ஆக்க வழியில் செயல்பட்டுப் பேரும் புகழும் அடைவான். அதே புதன், சனியுடன் சேர்ந்திருந்தால் ஜாதகனின் புத்தி எதிர்மறையான வேலைகளைச் செய்யும். அந்த மேட்டர்களில் ஜாதகன் கெட்டிக்காரனாக இருப்பான்.

லக்கினம் அல்லது 7ம் வீட்டில் இருக்கும் புதன் ஜாதகனுக்கு நல்ல நினைவாற்றலைக் கொடுக்கும். ஆழ்ந்து படிப்பதெல்லாம் நினைவில் நிற்கும் சாமிகளா!

சரி நம்ம முனிசாமி, அதாவது நமது முனிவர்கள் புதனைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார்கள்?

சொல்லுகிறேன் இருமூன்று ஈராறெட்டும்
   சுகமில்லை ஜென்மனுக்கு குய்யரோகம்
சொல்லுகிறேன் செம்பொன்னும் கணைக்கால்துன்பம்
   சுற்றத்தார் மனமுறிவர் அரிட்டஞ்செப்பு
சொல்லுகிறேன் கேந்திரமும் கோணம் நன்று
   சுகமாக வாழ்ந்திருப்பான் காடியுள்ளோன்
சொல்லுகிறேன் சுயகவிதை மாமன்விருத்தி
   சொர்ண நிலமுள்ளவனாம் கூறே!
- புலிப்பாணி

இருமூன்று ஈராறெட்டும் = 6, 12, & 8 ஆம் இடங்கள் சுகமில்லை என்கிறார். Not useful என்கிறார்

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------
புத்தியுள்ள மனிதரெல்லாம்
வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
புத்திசாலியில்லை… புத்திசாலியில்லை
(புத்தியுள்ள) 

பணமிருக்கும் மனிதரிடம் மனமிருப்பதில்லை
மனமிருக்கும் மனிதரிடம் பணமிருப்பதில்லை
பணம் படைத்த வீட்டினிலே வந்ததெல்லாம் சொந்தம்
பணமில்லாத மனிதருக்கு சொந்தமெல்லம் துன்பம்

(புத்தியுள்ள) 

பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை
காதல் கொண்ட அனைவருமே மணம் முடிப்பதில்லை
மணம் முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை
சேர்ந்து வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை

(புத்தியுள்ள) 

கனவு காணும் மனிதனுக்கு நினைப்பதெல்லாம் கனவு
அவன் காணுகின்ற கனவினிலே வருவதெல்லாம் உறவு
அவன் கனவில் அவள் வருவாள் அவனை பார்த்து சிரிப்பாள்
அவள் கனவில் யார் வருவார் யாரை பார்த்து அழைப்பாள்?

புத்தியுள்ள மனிதரெல்லாம்
வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
புத்திசாலியில்லை… புத்திசாலியில்லை

படம் : அன்னை
பாடியவர் : சந்திரபாபு
பாடல் வரிகள் : கண்ணதாசன்
இசை : r சுதர்சனம்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

16.6.25

Astrology: திருமணத்திற்கு உரிய வயது (Right age for marriage)

Astrology: திருமணத்திற்கு உரிய வயது (Right age for marriage)

உரிய வயது அல்லது உரிய நேரம் என்று நீங்கள் யாரிடமும் வாதிட முடியாது. அது ஆளாளுக்கு மாறுபடும். நீங்கள் வாதிட்டால் பெரும்பாலும் அது தோல்வியில்தான் முடியும். அல்லது சண்டையில்தான் முடியும்.

காலையில் எப்போது எழுந்திருக்க வேண்டும்? சூரிய உதயத்திற்கு முன்பாக, அதாவது காலை 6:00 மணிக்குள் எழ வேண்டும் என்பேன் நான். எத்தனை பேர்கள் அதை ஒப்புக்கொள்வீர்கள்?

அதுபோல உரிய வயதில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் அல்லது திருமணம் நடக்க வேண்டும். உரிய வயது எது? என்பதில்தான் தகறாறு.

அந்தக் காலத்தில், அதாவது 50 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் பெண்ணிற்குப் பதினெட்டு வயதிலும், பையனுக்கு 21 வயதிலும் திருமணத்தைச் செய்துவைத்தார்கள்.

இப்போது அப்படி இல்லை. கல்வி, உயர்கல்வி, வேலை வாய்ப்பு, சம்பளத்தில் ஸ்திரத்தன்மை, வீடு வாசல் வாங்கி செட்டிலாக வேண்டும் என்ற அபிலாஷைகள் போன்றவற்றின் காரணமாக பலரின் திருமணம் உரிய காலத்தில் நடப்பதில்லை.

பெண்களும் சரி, ஆண்களும் சரி 30 வயதுவரை திருமணத்திற்கு அவசரப் படுவதில்லை. அதுதான் இன்றைய நிலை. பெற்றவர்களும் கவலைப் படுவதில்லை. கல்விக் கடனை கட்டி முடிக்கட்டும். ஒரு 2 படுக்கை அறைகள் கொண்ட குடியிருப்பு ஒன்றை வாங்கட்டும் என்று பொறுமையாக இருக்கிறார்கள்.

முதலில் பெண்ணை எடுத்துக் கொள்வோம். ஒரு பெண் 12 அல்லது 13 வயதில் பூப்படைகிறாள் என்று வைத்துக்கொள்வோம். அவளுடைய வசந்தகாலம் 36 ஆண்டுகள். அதாவது அதிக பட்சம் 50 வயது. அதற்குப் பிறகு மெனோபாஸ், கர்ப்பப்பைக் கொளாறுகள் போன்றவைகள் வந்து பல பெண்களைப் பயமுறுத்தும் காலம் வந்துவிடும்.

32 வயதில் ஒரு பெண்ணிற்குத் திருமணம் என்றால் அவளுடைய வசந்த காலத்தில் பாதி காலாவதியாகிவிடுமே! 24 வயது என்றால் ஓரளவு பரவாயில்லை. வசந்த காலத்தில் 1/3 மட்டும்தான் காலியாகும் மிச்சம் 2/3 இருக்கும்

ஆண் பெண் என்ற பேதம் எதற்கு? யாராக இருந்தாலும் 25 வயதிற்குள் திருமணம் நடைபெற வேண்டும். அந்த வயதைத் தாண்ட விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்
---------------------------------------------
உரிய வயதில் திருமணம் என்பது நம் கையிலா இருக்கிறது? ஜாதகப்படி அதற்கு உரிய நேரம் வர வேண்டாமா?

உண்மைதான். 

நேரம் வராவிட்டால் என்ன செய்வது? 

இறைவனைப் பிரார்த்தனை செய்யுங்கள். அவர் வழி காட்டுவார்
---------------------------------------------
சரி உரிய வயதில், அதாவது இளம் வயதில் திருமணம் நடைபெற ஜாதகப்படி என்ன அமைப்பு இருக்க வேண்டும்? அதை மட்டும் இன்று பார்ப்போம்!

1. ஏழாம் அதிபதி, அதாவது ஏழாம் வீட்டுக்காரன் கேந்திரம் அல்லது திரிகோணத்தில் நல்ல நட்சத்திரத்தின் சாரத்தில் இருக்க வேண்டும்
2.ஏழாம் வீடு சுபக் கிரகங்களின் பார்வையோடு இருக்க வேண்டும். ஏழாம் வீடு பாபகர்த்தாரியோகத்தில் சிக்காமல் இருக்க வேண்டும்.
3. களத்திரகாரகன் சுக்கிரன் கேந்திரம் அல்லது திரிகோணத்தில் நல்ல நட்சத்திரத்தின் சாரத்தில் இருக்க வேண்டும்
4. லக்கினகாரகன் வலிமையாக இருப்பதுடன் ஏழாம் வீட்டைத் தன் பார்வையில் வைத்திருக்க வேண்டும்.
5. ஏழாம் வீட்டில் சுபக்கிரகங்கள் குடி இருப்பது நன்மையானதாகும்
6. இரண்டாம் வீடு கெட்டுபோகாமல் இருக்க வேண்டும்

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

15.6.25

Astrology.: வர்கோத்தமம் என்றால் என்ன சாமி அர்த்தம்?

Astrology.: வர்கோத்தமம் என்றால் என்ன சாமி அர்த்தம்?

வர்கோத்தமம் என்பதும் ஒரு யோகம்தான் ராசா!

வர்கோத்தமம் என்பது ஒரு கிரகம் ராசிச் சக்கரத்திலும், நவாம்ச சக்கரத்திலும் ஒரே இடத்தில் இருப்பதைக் குறிக்கும்! 

ராசி, மற்றும் நவாம்சத்தில் ஒரே இடத்தில் லக்கினம் இருந்தால் இருந்தால் அது வர்கோத்தம லக்கினம் எனப்படும்!

ராசி கட்டத்தில் சிம்மத்தில் செவ்வாய் இருந்து, அம்சத்திலும் சிம்மத்தில் செவ்வாய் இருந்தால் அதற்கு வர்கோத்தம செவ்வாய் என்று பெயர்!

சிம்மத்திற்கு செவ்வாய் யோககாரகன். அவன் வர்கோத்தமமும் பெற்றால் ஜாதகனுக்கு இரட்டிப்பு யோகங்களைக் கொடுப்பார். நல்ல பலன்களைக் கொடுப்பார்.

இதுபோன்று ஒவ்வொரு கிரகத்திற்கும், ஒவ்வொரு லக்கினத்தின் யோககாரனுக்கும் ஸ்பெஷல் வர்கோத்தமப் பலன்கள் உண்டு. கேட்டால், ஒரு வேளை உங்கள் ஜாதகத்தில் அப்படி யிருந்தால் அசந்துபோய் விடுவீர்கள். காற்றில் மிதப்பீர்கள். அப்படி ஒரு சந்தோஷமான மனநிலை ஏற்படும்!

உங்கள் மொழியில் சொன்னால், சாதாரணக் காருக்குப் பதிலாக உங்களுக்கு குளிரூட்டப்பெற்ற சொகுசுக்கார் கிடைக்கும். உங்களுக்குக் கிடைக்கும் பெண் (மனைவி) அனுஷ்கா சர்மாவைப் போன்ற அழகி என்பதோடு, நன்கு படித்தவளாக, நல்ல வேலையில் (மாதம் இரண்டு லட்ச ரூபாய் சம்பளம் சாமி) இருப்பவளாகவும் அமைந்துவிடுவாள். சந்தோஷப் படுவீர்களா - இல்லையா?

அப்படி வர்கோத்தமம் பெறும் கிரகம் வலிமை உடையதாக ஆகிவிடும். அந்த அமைப்பு ஜாதகனுக்கு அதிகமான அளவு நன்மையான பலனைக் கொடுக்கும்! இயற்கையில் தீய கிரகமாக இருந்தாலும், வர்கோத்தமம் பெறும்போது நன்மைகளைக் கொடுக்கும். 

உதாரணத்திற்கு லக்கினம் வர்கோத்தமம் பெற்றால், ஜாதகன் நீண்ட ஆயுளூடன் இருப்பான்!

அதுபோல ஒன்பது கிரகங்களுக்கும் தனித்தனியான விசேட பலன் உண்டு

என்னென்ன கிரகத்தால் என்னென்ன நன்மைகள் என்பதை இன்னொரு நாள் விரிவாக எழுதுகிறேன். பொறுத்திருங்கள்

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10.6.25

Astrology. கைக்காசு எப்போது கரையும்?

Astrology. கைக்காசு எப்போது கரையும்?

முதலில் கரை என்றால் என்னவென்று பார்ப்போம். கரை என்ற தமிழ்ச்சொல்லிற்குப் பல அர்த்தங்கள் உண்டு

1. காகம் கரைவதும் கரைதான். அதாவது காகம் 'காகா’ என்று ஒலி எழுப்புவதைக் காகம் கரைகிறது என்று சொல்லுவார்கள்

2, நீரைத் தேக்கிப் பிடித்து நிறுத்தும் மேடான மண் பகுதிக்கு (ஏரி, குளங்களில்) கரை என்றுதான் சொல்லுவார்கள். ஏரிக்கரை

3. ஒரு திடப்பொருளை நீரில் கரைத்து திரவ நிலைக்குக் கொண்டு வருவதையும் (சோப்பை இப்படிக் கரைத்து விட்டாயே) கரைத்தல் என்று சொல்லுவார்கள்

4. வீணாகக் காசைச் செல்வழிப்பதையும், இப்படிக் காசைக் கரைக்கிறாயே என்றுதான் சொல்லுவார்கள்

5. உடலில் ஏற்பட்டுள்ள கட்டியை நீக்கம் செய்வதற்கு மேற்கொள்ளும் சிகிச்சைக்கும் கரைத்தல் என்றுதான் பெயர். இந்தக் கட்டியைக் கரைப்பதற்கு எவ்வளவோ செலவு செய்துவிட்டேன்; ஆனால் கட்டி கரைந்த பாடாக இல்லை என்று சிலர் அங்கலாய்ப்பதைப் பார்த்திருப்பீர்கள். அதுவும் கரைத்தலில்தான் வரும்.

6. கற்பூரம் போன்ற பொருட்கள் காற்றில் ஆவியாகி ஒன்றுமில்லாமல் போகும் நிலைக்கும் கரைந்துபோய்விட்டது என்ற சொல்தான் பயன்படுத்தப்பெறும்

7. இருப்பில் உள்ள சேமிப்புப் பணம் கொஞ்சம் கொஞ்சமாக செலவழிந்து கொண்டிருந்தாலும்’ கைக்காசு கரைந்து கொண்டிருக்கிறது என்றுதான் சொல்லுவார்கள்

சரி சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன். ஜாதப்படி இப்படிக் கரைக்கும் பணி ஒருவனுக்கு எப்போது அமுலுக்கு வரும்? அதாவது எப்போது நடக்கும்?

பன்னிரெண்டாம் இடத்தில் இருக்கும் கிரகத்தின் மகாதிசையில் அது நடக்கும். அது எந்தவிதமான கிரகமாக இருந்தாலும் அதை நடத்திவைக்கும்.
சனி, ராகு அல்லது கேது போன்ற கிரகங்களின் மகாதிசை என்றால் இந்தக் கரைக்கும் பணி ஜரூராக நடக்கும். சுபக்கிரகங்களின் மகாதிசை என்றால் சற்று மெதுவாக நடக்கும். ஆனால் முடிவு ஒன்றாகத்தான் இருக்கும். மொத்தத்தில் கரைத்துவிட்டுப் போய்விடும்!

Any planet in the 12th house would make its dasa expense oriented!

அடடே, பணம் மட்டும்தான் கரையுமா? 

இல்லை. கை இருப்பை, சேமிப்பைக் காலி செய்துவிட்டுப் போவதோடு, வீடு வாசல் இருப்பவர்களுக்கும் பிரச்சினைகளை ஏற்படுத்தி அவற்றை விற்க வைத்து, விற்று வரும் பணத்தையும், வைத்துக்கொள்ளவிடாமல் காலி செய்து விட்டுப் போய்விடும்

அதேபோல, அந்தத் தசாநாதன் தன்னுடைய சுயவர்க்கத்தில் மிகவும் குறைந்த பரல்களுடன் இருந்தால், ஜாதகனின் ஆரோக்கியத்தைக் கரைத்துப் படுக்க வைத்துவிடும். ஜாதகன் வீட்டிற்கும் மருத்துவமனைக்குமாக அலைந்து கொண்டிருக்க நேரிடும்.

அவ்வளவுதானா?

இல்லை! முக்கியமான விதிகளை மட்டும் கூறியுள்ளேன். மற்றவற்றை விரிவாக இன்னொரு நாள் பார்ப்போம்!

இதற்குப் பரிகாரம் உண்டா? பிரார்த்தனை ஒன்றுதான் பரிகாரம்!

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

7.6.25

Astrology. கூலி வேலைதான் செய்ய வேண்டுமா?

Astrology. கூலி வேலைதான் செய்ய வேண்டுமா?

இன்றைய பொருளாதார சூழ்நிலையில் எது முக்கியம்?

நல்ல வேலை. நல்ல சம்பளம் என்பது முக்கியம். நல்ல வேலைக்கு உரிய வயதில் படித்து (முக்கியமாக தொழில் நுட்பக் கல்வி) பட்டம் பெற்றிருப்பதும் முக்கியம்.

எல்லோருக்கும் அது அமைந்து விடுகிறதா என்ன?

ஜாதகத்தில் 4ஆம் வீடு நன்றாக இருந்தால்தான் படிப்பு அமையும். 4ஆம் அதிபதி கெட்டிருந்தால், லக்கினத்திற்குப் பன்னிரெண்டில் போய் அமர்ந்திருந்தால், அத்துடன் 4ஆம் வீட்டில் கேது போன்ற தீய கிரகங்கள் குடியிருந்தால், படிப்பு பாழாகிவிடும்.

படிப்பு பாழானால் என்ன? வியாபாரம் செய்து அல்லது தொழில் செய்து நல்லபடியாகப் பிழைக்க முடியாதா?

முடியும் அதற்குப் பணம் வேண்டுமே? காசு வேண்டுமே? 4ஆம் அதிபதி கெட்டுப் போனதைப்போல, ஜாதகத்தில் இரண்டாம் வீட்டுக்காரனும் கெட்டிருந்தால், என்ன செய்வது? காசு எங்கே இருக்கும்? காசு எப்ப்டி வரும்? இரண்டாம் அதிபதியும் 12ல் இருந்தால் அந்த நிலைமை உண்டாகும்.

யாரும் கை கொடுக்க மாட்டார்களா? லக்கினாதிபதி நன்றாக இருந்தால், அது நடக்கும். ஆனால் லக்கினாதிபதி பாபகர்த்தாரி யோகத்தில் சிக்கியிருந்தால், உதவிக்கு ஒருத்தனும் வர மாட்டான். ஜாதகன் தன்னிச்சையாகத்தான் போராட வேண்டும்.

என்ன செய்வது? கூலி வேலை செய்துதான் பிழைக்க வேண்டுமா?

ஆமாம். எத்தனையோ மக்கள் கூலி வேலைகள் செய்து பிழைத்துக்கொண்டிருக்கவில்லையா? அதில்தான் எத்தனை விதமான வேலைகள் உள்ளன.

எங்கள் பகுதிக்கு வாருங்கள். திருப்பூர், சோமனூர், கோவை போன்ற ஊர்களில் ஆயிரக் கணக்கான பேர்கள் தினக்கூலி, வாரக்கூலி வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியவ்ரும்.

கூலி வேலை பார்த்துக் காலம் தள்ளுவது என்பது மிகவும் சிரமமானதுதான். ஆனால் வேறு நல்ல கிரகத்தின் திசை வரும்போது, நிலைமை மாறி விடும்.
கூலி வேலை செய்தவன், அதே வேலையைப் பத்து ஆட்களை வைத்துச் செய்து பொருள் ஈட்ட ஆரம்பித்து விடுவான்.

நேர்மையாகச் செய்யும் எந்த வேலையும் கேவலமானதல்ல! படித்துவிட்டு BPO அலுவலங்களில் வேலை பார்ப்பவர்களைவிட Mason, carpenter, Electrician போன்ற வேலைகளைக் கூலி அடிப்படையில் செய்பவரகள் அதிகமாகச் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்

ஜாதகத்தில் 2ஆம் அதிபதி, 4ஆம் அதிபதி, லக்கினாதிபதி ஆகிய மூவரும் இளம் வயதில் ஒரு starting கொடுப்பதற்கு முக்கியம். அதை மனதில் கொள்க!

அவ்வளவுதானா?

இல்லை! முக்கியமான விதிகளை மட்டும் கூறியுள்ளேன். மற்றவற்றை விரிவாக இன்னொரு நாள் பார்ப்போம்!

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6.6.25

Astrology: திருமணம் ஏன் தள்ளிக்கொண்டே போகிறது?

Astrology: திருமணம் ஏன் தள்ளிக்கொண்டே போகிது?

இன்றைய பொருளாதார சூழ்நிலையில் ஆண், பெண் இருபாலருமே திருமணத்தைத் தள்ளிக்கொண்டே போகிறார்கள். ஒரு கால கட்டத்தில் அவர்கள் விரும்பினாலும் கூட திருமணம் அவர்களை விட்டுத் தள்ளியே நிற்கிறது.

என்ன காரணம்? எல்லாம் கிரகக் கோளாறுகள்தான்!

முன் காலத்தில் பெண்ணிற்குப் பதினெட்டு வயதிலும், ஆணிற்கு 21 வயதிலும் திருமணத்தைச் செய்து வைத்தார்கள். இப்போது படிப்பு, வேலை வாய்ப்பு, பொருளாதரத் தன்னிறைவு அதாவது பணம் சேர்த்து செட்டிலாக வேண்டும் என்ற நினைப்பு போன்றவற்றால் பலருக்கும் முப்பது வயதைக் கடந்தும்கூடத் திருமணங்கள் கூடி வரவில்லை.

யாராக இருந்தாலும் 25 வயதிற்குள் திருமணம் ஆக வேண்டாமா?

ஜாதகப்படி தாமதமான திருமணங்களுக்கு என்ன காரணம் என்பதைச் சுருக்கமாகப் பார்ப்போம்!

1. ஏழாம் அதிபதி, அதாவது ஏழாம் வீட்டுக்காரன் பலவீனமாக (வீக்காக) இருந்தால் திருமணம் தாமதமாகும். பலவீனம் என்பது நீசமாகி நிற்பதைக் குறிக்கும்.

உதாரணத்திற்கு துலா லக்கின ஜாதகத்திற்கு ஏழாம் அதிபதி செவ்வாய். அவன் அந்த ஜாதகத்தில் நீசம் பெற்றுக் கடக ராசியில் அமர்ந்திருப்பது, தீமையானது.
திருமணம் தாமதமாகும்.

2. அதுபோல களத்திரகாரகன் சுக்கிரன் நீசமாக இருந்தாலும் திருமணம் தாமதமாகும்

அவ்வளவுதானா?

இல்லை! முக்கியமான விதிகள் இரண்டை மட்டும் கூறியுள்ளேன். இன்னும் சில விதிமுறைகள் உள்ளன. அவற்றை விரிவாக இன்னொரு நாள் பார்ப்போம்!

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4.6.25

Astrology. பொன்மகள் எப்போது வருவாள்?

Astrology. பொன்மகள் எப்போது வருவாள்?

1970ஆம் ஆண்டு திரைக்கு வந்த சொர்க்கம் படத்தில் கவியரசர் கண்ணதாசன் எழுதிய பிரபலமான பாடல் ஒன்று கீழே உள்ள வரிகளைக்கொண்ட பல்லவியுடன் துவங்கும்:

“பொன்மகள் வந்தாள்
பொருள்கோடி தந்தாள்
பூமேடை வாசல் பொங்கும் தேனாக
கண்மலர் கொஞ்சும் கனிவோடு என்னை
ஆளாக்கினாள் அன்பிலே!”

அதே பாடலின் சரணத்தின் கடைசி பத்தியில் இப்படி எழுதியிருப்பார்:

“செல்வத்தின் அனைப்பில் கிடப்பேன்
வெல்வெட்டின் விரிப்பில் நடப்பேன்
இன்பத்தின் மனதிலே குளிப்பேன்
என்றென்றும் சுகத்தில் மிதப்பேன்”
-------------------------------------------
செல்வத்தின் அனைப்பில் கிடக்க அனைவருக்கும் ஆசைதான். ஆனால் நடக்க வேண்டுமே? செல்வத்த்தின் அனைப்பில் இருப்பவன் கூட வெல்வெட்டின் விரிப்பில் நடப்பதும் கிடையாது. சுகத்தில் மிதப்பதும் கிடையாது. வந்த செல்வத்தை விடாமல் தக்க வைத்துக்கொள்ளும் அவதியில் பலர் இருக்கிறார்கள்
சாதாரண மனிதனுக்குக் கிடைக்கும் சுகம் கூட பெரிய செல்வந்தனுக்குக் கிடைப்பதில்லை. செல்வம் வந்தவுடன் கூடவே கஞ்சத்தனமும் வந்துவிடும்!
ஸ்ரீதேவி வந்தால் கூடவே அவளுடைய அக்கா மூதேவியும் வந்துவிடுவாள். அக்காவை உள்ளே விடக்கூடாது. அப்போதுதான் வந்த செல்வத்தால் பயன்பெற முடியும். சுகப்பட முடியும்!

அதை இன்னொரு நாள் விரிவாக எழுதுகிறேன்.

இப்போது பாடத்தைப் பார்ப்போம்!
-------------------------------------------------
சொகுசான வாழ்க்கைக்கான கிரக அமைப்பு: (Planetary position for luxurious life)

1
சுகாதிபதியும், பாக்யாதிபதியும் ஒன்று சேர்ந்து லக்கினத்தில் குடியிருந்தால், ஜாதகன் செள்கரியமான சொகுசான் வாழ்க்கை வாழ்வான். அதாவது 4ஆம் அதிப்தியும், ஒன்பதாம் அதிபதியும் ஒன்று சேர்ந்து லக்கினத்தில் இருக்க வேண்டும் (This combination will confer a luxurious life)

2
குரு பகவான் 4ஆம் வீட்டில் அமர்ந்திருக்க வேண்டும். அல்லது 4ஆம் வீட்டை நேரடியாகப் பார்க்க வேண்டும். அல்லது 4ஆம் வீட்டு அதிபதியுடன் கூட்டாக கேந்திரத்திலோ அல்லது திரிகோண வீட்டிலோ அமர்ந்திருந்தால் ஜாதகன் வாழ்க்கை செல்வமும் மகிழ்ச்சியும் நிறைந்ததாக இருக்கும்

3. 
நான்காம் அதிபதியும், ஒன்பதாம் அதிபதியும் பரிவர்த்தனையாகி, ஒருவர் வீட்டில் மற்றவர் அமர்ந்திருந்தாலும், வாழ்க்கை செல்வமும், மகிழ்ச்சியும் நிறைந்ததாக இருக்கும்.

அவ்வளவுதானா?

இல்லை! முக்கியமானதை மட்டும் கூறியுள்ளேன். இன்னும் பல விதிமுறைகள் உள்ளன. அவற்றை விரிவாக இன்னொரு நாள் பார்ப்போம்!

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

2.6.25

strology.யாரைப் பார்த்து என்ன சொல்ல வேண்டும்?

Astrology.யாரைப் பார்த்து என்ன சொல்ல வேண்டும்?

புதிதாகத் திரையுலகத்திற்கு வருபவர்களுக்கு Screen Test எடுத்துத்தான் நடிப்பிற்குத் தேர்வு செய்வார்கள். சிலருக்கு இயற்கையிலே வசீகரமான முகத்தோற்றம் இருக்கும். சிலருக்கு Photogenic Face இருக்கும் (A subject, generally a person is photogenic if appearing aesthetically or physically attractive or appealing in photographs. Photogenic, describes the earliest method for recording camera images)

அதை வைத்து ஆசாமி கதாநாயகனுக்கு ஏற்றவன் அல்லது வில்லனாக அல்லது காமெடியனாக நடிக்க லாயக்கானவன் என்று முடிவு செய்வார்கள்.

நம் முனுசாமிகள் (அதாங்க நம் முனிவர்கள்) கிரகங்களை அவ்வாறு வகைப் படுத்தியுள்ளார்கள். Screen Test எதுவும் எடுக்க வேண்டாம (எடுக்க முடியுமா என்ன?) பார்த்தவுடன் தெரிந்து கொள்ளும் விதமாக அதைப் பாட்டாகவும் எழுதி வைத்துள்ளார்கள்,

கீழே உள்ள பாடலைப் பாருங்கள்:

“காரியைப் பிடித்துப்பார்த்துக் கடுகவேவிதியைச் சொல்வாய்
சூரியனைப் பிடித்துச்சொல்லுவாய் பலன் பிதுர்க்கு
வீரிய பாம்பைப்பற்றி விளங்கவே யோகஞ் சொல்வாய்
சோர்விலாச் சுகங்கள்றன்னாற் களத்திர பலனைச் சொல்லே”

சனீஷ்வரனை வைத்து ஜாதகனின் விதியைச் சொல்லலாம். அவன் சந்திக்க இருக்கும் கஷ்டங்களைச் சொல்லலாம். எதிர்கொள்ளவிருக்கும் துன்பங்களைச் சொல்லலாம், ஆயுளைச் சொல்லலாம்.

சூரியனை வைத்து அவனுடைய தந்தையைச் சொல்லலாம், தந்தையால் கிடைக்கவிருக்கும் நன்மைகளைச் சொல்லலாம். தந்தைவழி சொத்துக்கள், உறவுகளைச் சொல்லலாம்.

ராகுவை வைத்து ஜாதகனுக்கு, ஜாதகத்தில் உள்ள யோகங்கள் கிடைக்குமா அல்லது ஊற்றிக் கொண்டுவிடுமா என்பதைச் சொல்லலாம்

சோர்வு அடையாத இன்பங்களுக்கும் சுகங்களுக்கும் களத்திரகாரகனான சுக்கிரனை வைத்துப் பலன் சொல்ல வேண்டும்

சரி, மற்ற கிரகங்களுக்கு? அதை அடுத்து பார்ப்போம்!

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

29.5.25

Astrology: எட்டேகால் லட்சணமும் எமன் ஏறும் வாகனமும்!

Astrology: எட்டேகால் லட்சணமும் எமன் ஏறும் வாகனமும்!

ஒவ்வொன்றாக வருவோம். முதலில் எட்டேகால் லட்சணத்தை எடுத்துக்கொள்வோம். எட்டேகால் லட்சணம் என்றால் என்னவென்று தெரியுமா? 

தமிழின் எண் வடிவத்தைக் கீழே கொடுத்துள்ளேன். தமிழில்  ‘அ’ என்று எண்ணால் குறிபிட்டால் எட்டு என்று பொருள். ‘வ’ என்ற எழுத்திற்கு கால் (1/4) என்று பொருள் எட்டேகால் என்பதை ‘அவ’ என்று குறிப்பிடுவார்கள். எட்டேகால் லட்சணம் என்றால் அவலட்சணம் என்று பொருள்படும்

ஒரு பையனோ அல்லது பெண்ணோ அழகில்லாமல் இருந்தால், அவலட்சணமாக இருக்கிறான் அல்லது இருக்கிறாள் என்று சொல்லாமல் எட்டேகால் லட்சணம் என்பார்கள்.
எங்கள் பகுதியில் (காரைக்குடியில்) சற்றுக் கெள்ரவமாகச் சொல்வார்கள். உள்ளதுபோல இருக்கிறான் அல்லது இருக்கிறாள் என்று சொல்வார்கள். நாம அதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

எமன் ஏறும் வாகனம் என்பது எருமை மாட்டைக் குறிக்கும். படு சுட்டியாக இருக்கும் பையனைக் கிராமப் புறங்களில் ‘எமப் பயலாக’ இருக்கிறான் என்பார்கள். எமன் கொண்டு போவதைப் போல அசந்தால் பையனும் கொண்டு போய்விடுவான் என்று பொருள். சற்று மந்தமாக இருக்கும் பையனை எமன் ஏறும் வாகனம்போல பையன் இருக்கிறான் என்பார்கள்.

வாரியார் சுவாமிகள் சொல்வார்கள்  “இன்று எல்லோரும் எருமைப் பாலத்தான் குடிக்கிறார்கள். அதனால் தெருவில் பொறுப்பில்லாமல் எருமைகள் போலதான் நடந்து போகிறார்கள். வாகனங்களுக்கு வழி விட்டு ஒதுங்குவதில்லை”

மாடுகளிலும் பலவகை உள்ளன. உழுகின்ற மாடு, வண்டி மாடு. கோயில் மாடு என்று அவற்றையும் வகைப்படுத்தலாம். அவற்றைப் பற்றி சுவாரசியமாக எழுதலாம். அதைப் பின் ஒரு நாளில் எழுதுகிறேன். இப்போது பாடத்தைப் பார்ப்போம்

சனீஷ்வரன் சில வீடுகளில் இருக்கும்போது அழகான தோற்றத்துடன் இருப்பார். உதாரணம் துலாம் வீடு. அது அவருக்கு உச்ச வீடு. அங்கே இருக்கும்போது ஃபுல் மேக்கப்புடனும், பட்டு வேஷ்டி சட்டையுடனும், கையில் ஆறு பவுன் தங்க பிரேஸ்லெட்டுடனும், கழுத்தில் தங்கச் சங்கிலியுடனும் அழகாகக் காட்சியளிப்பார். மேஷத்தில் இருக்கும்போது சுய ரூபத்துடன் இருப்பார். எண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டு வரும் பெண்ணைப்போல சுயரூபத்துடன் இருப்பார். அது அவருக்கு நீச வீடு.

அவர் அவலட்சணமாகக் காட்சியளிக்கும் வீடு ஒன்றும் உள்ளது. அது என்ன வீடூ?

எட்டாம் வீடு அது!

அதுதான் ஜாதகத்தில் உள்ள எட்டாம் வீடு

எட்டாம் வீட்டிற்கும் சனிக்கும் உள்ள உறவைப் பற்றி 4 பக்கங்களுக்கு விவரமாக எழுதலாம். எழுதியிருக்கிறேன், மேல்நிலைப் பாட வகுப்பில் (classroom2013) நேற்றுதைப் பதிவிட்டுள்ளேன். அதை இங்கே கொடுத்தால், பதிவிட்ட ஒரு மணி நேரத்திற்குள்ளாக, அதாவது துவைத்த ஈரம் காயுமுன்பாகவே அதைச் சுருட்டி எடுத்துக்கொண்டு ஓடிவிடுவார்கள். இணையத்தில் அத்தனை நல்லவர்கள் திரிகிறார்கள். ஆகவே இங்கே காயப் போடவில்லை. மேல் நிலைப் பாடங்கள் அடுத்த ஆண்டு புத்தகமாக வரும் அப்போது அனைவரும் படிக்கலாம்.

உங்களுடைய மேன்மையான தகவலுக்காக அதில் உள்ள சில விதிகளை (Rules) மட்டும் சுருக்கிக் கொடுத்துள்ளேன்!
---------------------------------------------------------------------------------------------------
எட்டில் சனி அமர்ந்து, தன்னுடைய மூன்றாம் பார்வையாக பத்தாம் வீட்டைப் பார்ப்பது நல்ல அமைப்பல்ல! அப்படி அமையப் பெற்ற ஜாதகன் பலவிதமான சோதனை களையும், தடைகளையும் தன்னுடைய வேலையில் அல்லது தொழிலில் சந்திக்க நேரிடும்.

அத்துடன் வேலை ஸ்திரமில்லாமல் இருக்கும். ஸ்திரமில்லாமல் என்றால் என்னவென்று தெரியுமா? Instability என்று பொருள்.

எந்தத் துறையென்றாலும், ஜாதகனுக்கு அது பிடித்தமில்லாமல் போகும். கவலை அளிப்பதாக இருக்கும்.

எத்தனை திறமை இருந்தாலும், எத்தனை திறமையை வேலையில் காட்டினாலும், அந்த வேலையில் கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்து, அதன் மேல் வெறுப்பும் கூடவே இருக்கும். வேலைக்குத் தகுந்த ஊதியம் இல்லாவிட்டால், எப்படிப் பிடிப்பு வரும்? வெறுப்புத்தானே வரும்!

பத்தாம் வீட்டில் அதிகமான பரல்கள் இருந்தாலும், அல்லது பத்தாம் வீட்டுக்காரனின் பார்வையிலும் அந்த வீடு இருந்தாலும், அல்லது சுபக்கிரகங்களின் பார்வையில் அந்த வீடு இருந்தாலும், மேற்சொன்ன பலன்கள் இல்லாமல் நல்ல பலன்கள் நடைபெறும். அதையும் மனதில் கொள்க!


அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

27.5.25

Astrology: வாலன்டைன் தினமும் வாழைக்காய் பஜ்ஜியும்!

Astrology: வாலன்டைன் தினமும் வாழைக்காய் பஜ்ஜியும்!

காதலர் தினம்! (Valentine Day)

காதலர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

காதலித்தவனையே அல்லது காதலித்த பெண்ணையே மணந்து கொள்ளுங்கள். ஆனால் உங்களை வளர்த்து ஆளாக்கிய பெற்றோரின் சம்மதத்தையும் பெற்று மணந்து கொள்ளுங்கள். அவர்கள் இல்லாமல் நீங்கள் இல்லை. காதலுக்காக அவர்களைப் புறந்தள்ளிவிடாதீர்கள். அவர்களை அழ வைத்தால் அந்தப் பாவம் உங்களைச் சும்மா விடாது!

ஜாதி, மதம், இனம் குறுக்கே வந்து அவர்கள் சம்மதிக்கவில்லை என்றால் என்ன செய்வது?

போராடுங்கள். உள்ளிருப்புப் போராட்டம் நடத்துங்கள். அவர்களைச் சம்மதிக்க வையுங்கள். ஒரு கள்ளியை அல்லது மங்கையாக இருந்தால் ஒரு கள்ளனை வசப்படுத்திக் கைக்குள் போட்டுக்கொண்ட உங்களுக்கு, பெற்றோர்களை வசப்படுத்துவதா கஷ்டம்?

ஆனால் ஜாதகப் பொருத்தம் மட்டும் பார்க்காதீர்கள். பார்த்துப் பொருந்தவில்லை என்றால் என்ன செய்வது? பாதியில் விட முடியுமா? பாதியில் விட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

எத்தனை ஆயிரம் குறுஞ்செய்திகள் (SMS), புகைப்படங்கள், மின்னஞ்சல்கள், நண்பர்கள் வட்டாரம் என்று சாட்சியாக மாட்டிக்கொண்டு உள்ளனவோ? அவற்றை எல்லாம் எப்படி விலக்க முடியும்? அத்துடன் புறநகர்ப் பகுதிகளில் உள்ள விடுதிகளில் அறை அல்லது காட்டேஜ் எடுத்து, போட்ட ஆட்டங்கள் எத்தனையோ? கணக்கு வைத்துக் கொள்ள முடியுமா என்ன? டூ வீலரில் அல்லது பஸ் பயணத்தில் உரசிய உரசல்கள் எத்தனையோ? ஆகவே ஜாதகத்தை எல்லாம் இருவரும் மூட்டை கட்டி வைத்துவிட்டு, திருமணம் செய்து கொள்ளுங்கள்.

திருமணத்திற்குப் பிறகு அவனுடைய அல்லது அவளுடைய உண்மையான குணம் மற்றும் குடும்ப பாரம்பரியம் முழுமையாகத் தெரியும்போது, பிடிக்கவில்லை என்றால் என்ன செய்வது?

காதல் புனிதமானது. ஒரு வருடம் அல்லது ஒரு மாதம் ஏன் ஒருவாரம் வாழ்ந்தாலும் போதும். காதலித்தவனையே மணந்து கொள்ளுங்கள்.

ஜாதகம் பார்க்காமல் மணந்து கொள்ளும்போது, அவனுடைய அல்லது அவளுடைய ஜாதகத்தில் சுபக்கிரகங்கள் வக்கிரமாகி அல்லது நீசமாகி ஒன்றுக்கும் லாயக்கில்லாமல் இருந்தால் என்ன செய்வது? அல்லது ஆயுள் பாவம் அடிபட்டுப்போயிருந்தால் என்ன செய்வது?

நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம். ஒன்றும் செய்ய முடியாது. இந்த வியாக்கியானம் எல்லாம் காதலில் குதிப்பதற்கு முன்பு இருந்திருக்க வேண்டும்.

என்னிடம் கேட்டிருந்த ஒரு பெண்ணிற்கு இதை எழுதியபோது, சட்டென்று அவள் பதில் அனுப்பினாள்: “சார், எனக்கு அவனைப் பற்றிக் கவலை இல்லை. திருமணத்திற்குப் பிறகு அவன் முரண்டு பிடித்தால், அவனைப் பிடித்துக் கொடுத்து, மகளிர் காவல் நிலைத்தில் வைத்து முட்டிக்கு முட்டி தட்டி சரி பண்ணி விடுவேன். எனக்குப் பிரச்சினை எல்லாம் என் பெற்றோர்களை வைத்துத்தான். என்னுடைய காதலுக்கு அவர்கள் சம்மதிப்பார்களா? என்னுடைய திருமணம் அவர்கள் ஆசியுடன் நடக்குமா? அதை மட்டும் நீங்கள் என் ஜாதகத்தைப் பார்த்துச் சொல்லுங்கள் ப்ளீஸ்....!”

எப்படி இருக்கிறது நிலைமை பாருங்கள்!

அந்தப் பெண்ணின் துணிச்சலைப் பாராட்டுவதா? அல்லது அவளிடம் மாட்டிக்கொண்டுள்ள அப்பாவி ஜீவனுக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் விடுவதா நீங்களே சொல்லுங்கள்!

பத்து சதவிகிதம் இப்படியும் இருக்கலாம். ஆகவே காதலர்களே ஜாதகத்தை மறந்து விட்டு, பெற்றோருடைய ஆசியுடன் திருமணம் செய்து கொள்ளுங்கள்

உங்கள் திருமண வாழ்வு வெற்றிபெற வாழ்த்துக்கள்!
-----------------------------------------------------------
“வாத்தி (யார்) கட்டுரைக்கும் தலைப்பிற்கும் என்ன சம்பந்தம்?”

“இருக்கிறது ராசா, காதலிக்க வழியில்லாமல் (அதாவது ஒருத்திகூடக் கிடைக்காமல்) அல்லது காதலுக்கு வாய்ப்பில்லாம்ல் நேரடியாக திருமண பந்தததில் மாட்டிக்கொண்டு விட்டவர்கள், அல்லது மாட்டிக்கொண்டு விட்டதாக நினைப்பவர்கள் எல்லாம், வருந்தாமல் சூடாக வாழைக்காய் பஜ்ஜி இரண்டைச் சாப்பிட்டுவிட்டு, ஒரு கோப்பைஃபில்டர் காப்பியையும் ருசித்துச் சாப்பிட்டுவிட்டுத் தங்கள் ஜாதகத்தை எடுத்துப் பார்க்கலாம். அதில் காதல் மறுக்கப்பட்டுள்ளது தெரியவரும்! டென்சன் இல்லாமல் பார்ப்பதற்குத்தான் வாழைக்காய் பஜ்ஜி & ஃபில்டர் காப்பி! சம்ஜே க்யா?

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

26.5.25

Astrology: யார் யார் எங்கே இருக்கக்கூடாது?

Astrology: யார் யார் எங்கே இருக்கக்கூடாது?

நமக்கு வேண்டியவர்கள் வேண்டாத இடத்தில் இருக்கக்கூடாது. வேண்டாதவர்கள், நமக்கு வேண்டிய இடத்தில் இருக்கக்கூடாது.

ஜோதிடத்தில் சுபக்கிரகங்கள் மூவர். சந்திரன், குரு, சுக்கிரன் ஆகியோர் நமக்கு மிகவும் வேண்டியவர்கள். அவற்றுள் சந்திரன் வளர்பிறைச் சந்திரனாக இருந்தால் மிகவும் நல்லது. அத்துடன் தனித்திருக்கும் அதாவது தீய கூட்டணி இல்லாத புதனும் நமக்கு வேண்டியவர்தான். அவர்கள் நல்ல இடங்களில் இருக்க வேண்டும். அதாவது கேந்திரம் அல்லது திரிகோண வீடுகளில் இருக்க வேண்டும். அதோடு ஒருவருக்கொருவர் எழில் இருந்தாலும் நல்லதுதான்.

அத்துடன் அவர்கள் காரகர்களை விட்டு விலகியும் இருக்ககூடாது.

குரு தனகாரகன். சந்திரன் மனகாரகன். இருவரும் ஒருவருக்கொருவர் எட்டு/ஆறு நிலைப்பாட்டில் அதாவது அஷ்டம சஷ்டம ஸ்தானங்களில் இருக்கக்கூடாது. இருந்தால் பணம் இருந்தாலும் அல்லது பணவரவு இருந்தாலும் மகிழ்ச்சி இருக்காது.

அதேபோல சூரியன் உடல்காரகன். அவருக்கு எட்டில் குரு சென்று அமரக்கூடாது. உடல் நலத்திற்கு அவருடைய ஆசீர்வாதம் வேண்டுமல்லவா?

சனியும், சுக்கிரனும் நண்பர்கள். சனி கர்மகாரகன். சுக்கிரன் சுகபோகங்களுக்கு அதிபதி. இருவரும் ஒருவருக்கொருவர் எட்டு/ஆறு நிலைப்பாட்டில் அதாவது அஷ்டம சஷ்டம ஸ்தானங்களில் இருக்கக்கூடாது. இருந்தால், ந்ல்ல வேலை அல்லது தொழில் அமைந்தாலும், அது நாம் சுகப்படும்படி இருக்காது.

அத்துடன் அரசகிரகமான சூரியனுக்குக் கேந்திர வீடுகளில் அதாவது 4, 7 மற்றும் பத்தில் ராகு இருக்கக்கூடாது. நமக்கு சூரியனால் கிடைக்ககூடிய அரச செல்வாக்குள், பெயர், புகழ் ஆகியவற்றை ராகு கிடைக்காமல் செய்து விடுவான்

இதை எல்லாம் யார் சொன்னது?

வேறு யார் சொல்வார்கள்? நம் முனிசாமி (அதாங்க நம் முனிவர்களில் ஒருவர்) சொல்லியிருக்கிறார்.  அவர்களுக்குத்தான் எதையும் உரையாகச் சொல்லும் பழக்கம் இல்லாததால், பாடலாகச் சொல்லியிருக்கிறார். பாடல் கீழே உள்ளது. படித்துப் பாருங்கள்

குடியவனாட்சியாகக் குருவுதையத்தினிற்க
அடியவனுக்குச் சமமாகியவர்க் கேழில்ப் பிறையுதிக்க
வெடியவன்காரி சேய்க்கு விண்ணரவியவரைப்பாரார்
கொடியிடைனிற்பனூறாய்க் குறியிதுப்பாமாதே!

குருவுக்கு எட்டாமிடத்தில் சந்திரனும் இருக்கலாகாது
சூரியனுக்கு எட்டில் குருவும் இருக்கலாகாது
சனிக்கு எட்டில் சுக்கிரனுமிருக்கலாகாது
சூரியனுக்கு ஏழாம் இடத்திலும் நான்காமிடத்திலும் ராகுவும் இருக்கலாகாது
----------------------------------------------

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

23.5.25

Astrology: பாவ சந்திப்பில் இருக்கும் கிரகத்திற்கு என்ன சாமி பலன்?

Astrology: பாவ சந்திப்பில் இருக்கும் கிரகத்திற்கு என்ன சாமி பலன்?

ஒரு பாவத்திற்கு அல்லது ஒரு வீட்டிற்கு அல்லது உங்களுக்குப் புரியும்படி சொல்வதென்றால் ஒரு ராசிக்கு 30 பாகைகள் என்பது உங்களுக்குத் தெரியும்.

ஒரு வீட்டின் முடிவுப் பகுதியில் அதாவது 28 பாகைகள் அல்லது அதற்கு மேலான பாகையில் இருக்கும் கிரகம் பாவசந்தியில் இருப்பதாகக் கொள்வார்கள். அதாவது ஒரு பாவத்திற்கும் அடுத்த பாவத்திற்கும் இடையில் இருப்பதாகக் கொள்வார்கள். Border Postion என்று கொள்ளலாம். சில ஜாதகங்களில் இந்த நிலைமை இருக்கும்.

அதாவது வீட்டிற்கு உள்ளேயும் இல்லாமல் அல்லது வெளியேயும் இல்லாமல், நிலைப்படி அருகே உட்கார்ந்திருக்கும் நிலைமை.

திருக்கணிதம் அல்லது வாக்கியப் பஞ்சாங்கப்படி ஜாதகங்களைக் கணிக்கும்போது, இந்த நிலைப்படி கிரகங்கள் படுத்தி எடுக்கும்.

ஒரு அட்டவணையில் (Chart) சிம்மத்தில் இருக்கும் கிரகம் அடுத்த அட்டவணையில் (Chart) கன்னியில் இருப்பதாகக் காட்டும். ஜாதகன் குழம்பிப்போவான்.

எதை எடுத்துக்கொள்வது?

நம் முனிசாமிகள் (அதாங்க நம் முனிவர்கள்) எழுதி வைத்துவிட்டுப்போனபடி வாக்கிய பஞ்சாங்கக் கணிப்புக்களையே எடுத்துக்கொள்வது நல்லது.

பாவசந்திப்பில் இருக்கும் கிரகம் எவ்வாறு பலன் கொடுக்கும்?

ஒரு பாவத்தின் மத்தியில் இருக்கும் கிரகம அந்த பாவத்திற்கு உரிய முழுப்பலனையும் கொடுக்கும். அதாவது உதாரணமாக ஒன்பதாம் வீட்டின் மத்தியில் இருக்கும் கிரகம்  தன் தசாபுத்தியில் தனக்குரிய பலனை முழுமையாகக் கொடுக்கும். (Both by placement and by ownership) 

உதாரணமாக ஐந்தாம் வீட்டு அதிபதி குரு பகவான் ஒன்பதாம் வீட்டில் (திரிகோண வீடு) அமர்ந்திருந்தால், ஐந்தாம் வீட்டிற்கான பலனையும், ஒன்பதாம் வீட்டிற்கான பலனையும் ஒருசேரத் தன்னுடைய தசாபுத்திகளில் தருவார். அதேவீட்டில் அவர் வாசற்படியில் அமர்ந்திருந்தால் பலன்கள் வெகுவாகக் குறைந்துவிடும். மத்தியப் பகுதியில் இருந்து வாசற்படி நோக்கி ந்கர ந்கரவே அதற்குத் தகுந்தாற்போல பலன்கள் குறைந்து கொண்டே வரும் 

ஆசாமி வாசற்படியில் அமர்ந்திருப்பதைக் கவனிக்காமல் பலன் சொன்னால, பலன்கள் தவறாகிப் போகும்.

ஏழாம் வீட்டில் சுபக்கிரகம் இருப்பதைப் பார்த்துவிட்டு, உனக்கு நல்லமனைவி, நீ விரும்பும்படி அழகான மனைவி கிடைப்பாள் என்று ஜோதிடர் சொன்னதை வைத்து, நம்ம நாயகன்  ஊ...லல்லல்லா என்று கனவுலகில் பாடிக்கொண்டிருப்பான். ஆனால் அதே சுபக்கிரகம் அந்த வீட்டின் வாசற்படியில் இருந்தால், அவன் பாட்டு திருமணத்தோடு முடிவிற்கு வந்து விடும். தொடராது! அதாவது ஜோதிடர் சொன்னது தவறான கணிப்பாகிவிடும்!

அர்த்தமாயிந்தா சாமிகளா?

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

20.5.25

Astrology.Popcorn Post: பிரதோஷமும் பில் கேட்ஸும் !

Astrology.Popcorn Post: பிரதோஷமும் பில் கேட்ஸும் !

“வாத்தி (யார்), அப்துல்காதரும் அமாவாசையும் என்று சொல்வதைப்போல, பிரதோஷமும் பில் கேட்ஸும்! என்று தலைப்பைப் போட்டிருக்கிறீர்களே - பில் கேட்ஸாவது, பிரதோஷமாவது?” என்று கேட்பவர்கள் எல்லாம் பதிவை விட்டு விலகவும்.

Bill Gates யாரென்று தெரியாதவர்களும் பதிவை விட்டு விலகவும்!

மற்றவர்கள் தொடரலாம்!

பிரதோஷத்தைப் பற்றித் தெரியுமா உங்களுக்கு? சரி, சுருக்கமாகச் சொல்லிவிடுகிறேன். பிரதோஷம் என்பது திதிகளில் 13ஆவது திதியாகும். அதன் பெயர் திரயோதசி. (அதாவது அஷ்டமி, நவமி, தசமி என்பதைப்போல) அன்றைய தினத்தில் (மாலை 4.30 மணி முதல் 6 மணிவரை உள்ள காலத்தில் அல்லது நேரத்தில்), சிவனாரை வழிபட்டால் செய்த பாவங்கள் எல்லாம் விலகும் என்பது நம்பிக்கை.

அதுவும் வளர்பிறை திரயோதசித் திதி மிகவும் விஷேசமானது. (வயதான) பெண்களைக் கேளுங்கள் சொல்வார்கள்.

விவரமாகத் தெரிந்துகொள்ள இந்த சுட்டியைக் கிளிக்கிப் பாருங்கள்: http://www.shaivam.org/siddhanta/Pradhosham.html, 
----------------------------------------------------------------------------------
சரி சொல்ல வந்த மேட்டருக்கு வருகிறேன்!

சரி வளர்பிறை திரயோதசித் திதிக்கு இத்தனை வலிமை உண்டு என்றால், அதாவது அன்றைய தினம் சிவனாரை வழிபட்டால் மேன்மை எனும்போது, அன்றைய தினம் பிறக்கும் குழந்தைக்கு என்ன மேன்மை?

உன்னதனமான பிறவி அக்குழந்தை. முன் கர்ம வினைகள் எல்லாம் துடைக்கப்பெற்று க்ளீன் ஸ்லேட்டாகப் பிற்க்கும் குழந்தை அது.

நமது பில் கேட்ஸூம் ஒரு வளர்பிறைத் திதியன்று பிறந்தவர்தான்?

அதனால் அவர் அடைந்த நன்மைகள் என்னென்ன? அதற்கு அவருடைய ஜாதகத்தை அலச வேண்டும். அலசுவோம். பொறுத்திருங்கள்

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18.5.25

Astrology எட்டாம் வீட்டில் அமர்ந்தவன் என்ன செய்வான்?

Astrology எட்டாம் வீட்டில் அமர்ந்தவன் என்ன செய்வான்?

ஒரு கிரகம் எட்டில் அமர்ந்தால் என்ன ஆகும்? அந்த கிரகத்தால் நன்மை இருக்காது. அவரே எட்டில் போய் மாட்டிக்கொண்டு உள்ளார். மாட்டிக்கொண்டு உள்ளவர் என்ன நன்மையைச் செய்ய்ப்போகிறார்?

சரி, குரு எட்டில் அமர்ந்தால் என்ன ஆகும்? அவருக்கும் அதே விதிதானா?

இல்லை. குரு நம்பர் ஒன் சுபக்கிரகம். அவர் எங்கே இருந்தாலும் நன்மையைச் செய்வார்.

உதாரணமாகக் குரு துலா லக்கின ஜாதகிக்கு (நன்றாகக் கவனிக்கவும்) 3 மற்றும் 6ஆம் இடத்திற்கு அதிபதி. இரண்டு தீய இடங்களுக்கு அதிபதி. அவர் எட்டில் அமர்ந்தால், அதுவும் ஜாதகியின் மாங்கல்ய ஸ்தானத்தில் அமர்ந்தால், மாங்கல்ய் அதோஷம் உண்டா? அவரின் ஆதிபத்யததை வைத்து இந்தக் கேள்வி.

தோஷம் இல்லை. ஏன்?

குரு முதல்நிலை சுபக்கிரகம். அவர் எட்டில் அமர்ந்தாலும், அங்கே தன்னுடைய ஆதிப்பத்யத்தைக் கைவிட்டு விட்டு (அதாவது 3 & 6ஆ இடங்களுக்கு உரியவன் என்னும் நிலையை விட்டுவிட்டு, நன்மையையே செய்வார். மாங்கல்ய தோஷத்தைக் கொடுக்க மாட்டார்.

பெண் தீர்க்க சுமங்கலி!!!!
---------------------------
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14.5.25

Astrology: எட்டாம் வீடும் அதன் அதிபதி அமர்ந்த இடத்திற்கான பலன்களும்

Astrology: எட்டாம் வீடும் அதன் அதிபதி அமர்ந்த இடத்திற்கான பலன்களும்

8th House and placement benefit of its lord

கிரகங்களின் அமரும் இடத்தைவைத்துப் பலன்கள் வேறுபடும். அவற்றை விவரமாகப் பார்ப்போம்!

இப்போது எட்டாம் வீட்டையும், அதன் அதிபதி அமரும் இடத்திற்கான பலன்களையும் பார்ப்போம்!

1
எட்டுக்குரியவன் இலக்கினத்தில் இருந்தால், நாணயமில்லாதவனாக ஜாதகன் இருப்பான். தைரியக் குறைவு உடையவனாக இருப்பான். காதில் நோய், மனதில் பயம், பூர்வீக சொத்துக்கள் நாசம் உடையவனாக இருப்பான்.
2
எட்டுக்குரியவன் இரண்டில் இருந்தால், நாணயம் இல்லாத வாக்கு, துர்வார்த்தைகள் உடையவனாக ஜாதகன் இருப்பான். கல்வியில் ஆர்வமின்மை, குடும்ப வாழ்க்கையில் பிரச்சினைகள், உடல் பலமின்மை உடையவனாக இருப்பான்.
3
எட்டுக்கு உரியவன் மூன்றில் இருந்தால், சகோதர விரோதங்கள் உடையவனாக ஜாதகன் இருப்பான். காதில் நோய், மனதில் பயம், பூர்வீக சொத்துக்கள் நாசம் உடையவனாக இருப்பான்.
4
எட்டுக்குரியவன் நான்கில் இருந்தால் தாய்வழி ஆதரவின்மை, குடும்ப சச்சரவுகள், வாகன நாசம், மனை நாசம், சுகமின்மை உடையவனாக ஜாதகன் இருப்பான்.
5
எட்டுக்குரியவன் ஐந்தில் இருந்தால்,பிள்ளைகளால் அமைதியின்மை உண்டாகும். புத்திர நாசம், பிரபுக்களின் விரோதம், கலகம், உடல் உபாதை, உறவினர்களுடன் விரோதம், அலைச்சல், மன உறுதியின்மை உடையவனாக ஜாதகன் இருப்பான்.
6
எட்டுக்குரியவன் ஆறில் இருந்தால், மெலிந்த உடல் அமைப்பு, தீய எண்ணங்கள் உடையவனாக ஜாதகன் இருப்பான். முதுமைத் தோற்றமும், ஆயுள் குறைபாடும் உண்டாகும். சத்ரு ஜெயம் உடையவனாக இருப்பான். புத்திரயோகம் உடையவனாக இருப்பான்.
7
எட்டுக்குரியவன் ஏழில் இருந்தால், மனைவியால் நாசங்கள் உண்டாகும். கலகம், இகழ்ச்சி, வறுமை உடையவனாக இருப்பான். ஆனால் தீர்க்கமான ஆயுள் இருக்கும்.
8
எட்டுக்குரியவன் எட்டில் ஆட்சி பலத்துடன் இருந்தால், ஆயுள் நாசம், மனசஞ்சலங்கள் உடையவனாக ஜாதகன் இருப்பான். அலைச்சல், பிறர்சொல் கேளாமை உடையவனாக இருப்பான். அவமானங்கள் உண்டாகும்
9
எட்டுக்குரியவன் ஒன்பதில் இருந்தால் தந்தைக்குத் தோஷம், தந்தைவழிச் சொத்துக்கள் நாசம் அடையும். புத்திரர்கள் வழியில் துன்பம், பாக்கிய நாசம், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் விரோதம் உடையவனாக ஜாதகன் இருப்பான்.
10
எட்டுக்குரியவன் பத்தில் இருந்தால், தொழில் மற்றும் வேலையில் ஸ்திரமின்மை உண்டாகும். அடிக்கடி தொழில், வேலை மாற்றங்கள் உண்டாகும். பிறருடன் பகைமை, சமாளிப்புக்களுடன் கூடிய வாழ்க்கை அமையும். தீர்க்க ஆயுள் உடையவனாக இருப்பான்.
11
எட்டுக்குரியவன் பதினொன்றில் இருந்தால் மூத்த சகோதரரின் உறவு கெடும். அடிக்கடி துன்பங்கள் உண்டாகும். பல வழிகளில் லாபம் தேடும் நிலை அதாவது அதுபோன்ற முயற்சிகள் உடையவனாக ஜாதகன் இருப்பான்.
12
எட்டுக்குரியவன் பன்னிரெண்டில் இருந்தால், புத்திர தோஷம், அகால போஜனம் உடையவனாக ஜாதகனிருப்பான். அயன, சுகங்கள் நாசமாகும். ஊர் சுற்றுபவனாக ஜாதகன் இருப்பான். அமைதியின்மை உடையவனாகவும் ஜாதகன் இருப்பான்.

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------


வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

9.5.25

Astrology: ராசிகளின் உட்பிரிவு.

Astrology: ராசிகளின் உட்பிரிவு.

ராசிகள் அவைகளின் தன்மைகளை வைத்து 3 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன
அதை நீங்கள் அறியத் தந்துள்ளேன்.

தன்மைகளுக்கான பலன்களைப் பாடத்தில் கொடுத்துள்ளேன்.தேடிப் படிக்கவும்!

சர ராசிகள் (Movable signs),ஸ்திர ராசிகள் (Fixed signs), உபய ராசிகள் (Dual signs) 
என்று ராசிகள் மூன்று விதமாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 

The Vedic seers grouped the signs in three categories as Movable, Fixed and Dual.
------------------------------------------------------------------
1
சர ராசிகள் (Movable signs)
மேஷம் (Aries), கடகம் (Cancer), துலாம் (Libra), மகரம் (Capricorn)
----------------------------------------------------------------
2
ஸ்திர ராசிகள் (Fixed signs)
ரிஷபம் (Taurus), சிம்மம் (Leo), விருச்சிகம் (Scorpio) கும்பம் (Aquarius)
-----------------------------------------------------------------
3
உபய ராசிகள் (Dual signs)
மிதுனம் (Gemini), கன்னி (Virgo), தனுசு (Sagittarius), மீனம் (Pisces)
----------------------------------------------------------------

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

7.5.25

Astrology: அம்பானியும் ஒன்றுதான் நீங்களும் ஒன்றுதான்!

Astrology: அம்பானியும் ஒன்றுதான் நீங்களும் ஒன்றுதான்!

எட்டும் உயரத்தில் எட்டு அட்டவணைகள்!

அஷ்டகவர்க்கப் பாடங்கள் - பகுதி 2

பரல்களின் விஷேசம் என்ன?

அதை வைத்துத்தான் உலகில் உள்ள அனைவரும் சமம். இறைவன்  அனைவரையும் சமமாகப் படைத்திருக் கிறான், அய்யன் வள்ளுவர் சொன்னதைப்போல, வேண்டுதல் வேண்டாமை இல்லாதவன் இறைவன் என்பது அனைவருக்கும் தெரியவரும்.

அம்பானியும் ஒன்றுதான் நீங்களும் ஒன்றுதான்.
பில் கேட்சும் ஒன்றுதான் நீங்களும் ஒன்றுதான்.
பாரதப் பிரதமரும் ஒன்றுதான் நீங்களும் ஒன்றுதான்
எடியூரப்பாவும் ஒன்றுதான் நீங்களும் ஒன்றுதான் 

ஜாதகத்தில் உள்ள 36 பாக்கியங்களில் உங்களுக்கு சில இருக்கும், அவர்களுக்கு சில இருக்கும்.
உங்களுக்கு சில இல்லாமல் இருக்கும். அவர்களுக்கு சில இல்லாமல் இருக்கும்

எதைச் சாப்பிட்டாலும் உங்களுக்குச் ஜீரணமாகும்.
எங்கே படுத்தாலும் உங்களுக்குத் தூக்கம் வரும்
எத்தனை லார்ஜ் அடித்தாலும் உங்களைக் கேள்வி கேட்க ஆளில்லை
எந்த இடத்திற்கு வேண்டுமென்றாலும் ஏ.கே 47துணை இல்லாமல் நீங்கள் போய்வரலாம்.

யாராக இருந்தாலும் ஜாதகத்தின் மதிப்பு 337 (அதாவது 337 பரல்கள்) மட்டுமே!!!!!
--------------------------------------------
சூரியனுக்கு  -  48 பரல்கள்
சந்திரனுக்கு  - 49 பரல்கள்
செவ்வாய்க்கு - 39 பரல்கள்
புதனுக்கு    -  54 பரல்கள்
குருவிற்கு   -  56 பரல்கள்
சுக்கிரனுக்கு  - 52 பரல்கள்
சனிக்கு     -  39 பரல்கள்
---------------------------------------
ஆக மொத்தம் - 337 பரல்கள்
__________________________

யாராயிருந்தாலும், இந்த 337 கிடைக்கும். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் கிடைக்கும். உங்களுக்கும் கிடைக்கும். பரல்களைப் பொறுத்தவரை நீங்களும் அவரும் சமம். ஜாதகத்தில் இந்தப் பரல்கள் பரவலாகக் கிடைத்த இடங்களின் மேன்மையை வைத்து அவர் பிரதமர் ஆகியிருக்கிறார். நம் வேறு விதத்தில் பிரமாதமாக இருப்போம். நமக்கு உள்ள சுதந்திரம், பாதுகாப்பைப் பற்றி எள் அளவும் கவலை இல்லத மேன்மை அவருக்கு இருக்காது. அதுதான் ஜாதக வித்தியாசம். பரல்கள் குவியும் இடங்களை வைத்து வரும் வித்தியாசம்
அன்புடன்
வாத்தியார்



வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6.5.25

Astrology: ஒன்பதாம் வீடும் அதன் அதிபதி அமர்ந்த இடத்திற்கான பலன்களும்

Astrology: ஒன்பதாம் வீடும் அதன் அதிபதி அமர்ந்த இடத்திற்கான பலன்களும் 
9th House and placement benefit of its lord

கிரகங்களின் அமர்விடப் பலன்கள்:
Placement benefits of planets!

கிரகங்களின் அமரும் இடத்தைவைத்துப் பலன்கள் வேறுபடும். அவற்றை விவரமாகப் பார்ப்போம்!

இப்போது ஒன்பதாம் வீட்டையும், அதன் அதிபதி அமரும் இடத்திற்கான பலன்களையும் பார்ப்போம்!

கிரகங்கள் அவ்வாறு அமரும் இடமானது அவற்றின் உச்ச வீடாக அல்லது ஆட்சி வீடாக இருந்தால் சுபமான பலன்கள் உண்டாகும். இதை மனதில் வையுங்கள்!

1
ஒன்பதிற்குரியவன், இலக்கினத்தில் இருந்தால், ஜாதகன் சகல பாக்கியங்களையும் உடையவனாக இருப்பான். பெற்றோர்கள் மற்றும் பெரியவர்கள் இடத்தில் பக்தியும், மரியாதையும் உடையவனாக இருப்பான். தான தர்மங்களில் நாட்டமுடையவனாக இருப்பான்.
2
ஒன்பதிற்குரியவன், இரண்டில் இருந்தால்,குடும்பம் விருத்தி உடையவனாக இருப்பான். பிறர் சொத்துக்களைப் பெறுபவனாக, உயர் நிலையில் உள்ளவனாக இருப்பான்.
3
ஒன்பதிற்குரியவன் மூன்றில் இருந்தால்,சகோதர அனுகூலம், பிதுர் தோஷம் உடையவனாக இருப்பான். பிதுர் சொத்துக்களை இழப்பவனாக இருப்பான்.
4
ஒன்பதிற்குரியவன் நான்கில் இருந்தால், பெற்றோர் அதரவு, தாய்வழி உறவினர் ஆதரவு உடையவனாக ஜாதகன் இருப்பான். வீடு, மனை, வாகன யோகம் செல்வம் உடையவனாக இருப்பான்.
5.
ஒன்பதிற்குரியவன் ஐந்தில் இருந்தால், புத்திரர்களால் யோகம், பிதுர் சொத்துக்கள், அரசு அனுகூலம் உடையவனாக இருப்பான். வீடு, மனை, வாகனம், தெய்வ வழிபாடு, பணியாட்கள் உடையவனாக இருப்பான்.
6
ஒன்பதிற்குடையவன் ஆறில் இருந்தால்,பிதுர் சொத்துக்கள் விரையமாகிவிடும்.புத்திர தோஷம், பாக்கிய நாசம், கடன் உள்ளவனாக ஜாதகன் இருப்பான்.
7.
ஒன்பதிற்குரியவன் ஏழில் இருந்தால், பிதுர் சொத்துக்கள் விருத்தியடையும். லட்சுமிகரமான மனைவி கிடைப்பாள். புத்திர வழியில் நன்மைகள் அடையப் பெறுவான்.
8
ஒன்பதிற்குரியவன் எட்டில் இருந்தால்,பாக்கிய நாசம், புத்திரநாசம் உண்டாகும். தாயின் உடல்நிலை மோசமாக இருக்கும். இந்த இடத்துடன் சனி, ராகு அல்லது கேது சம்பந்தப்பட்டால் பிதா அங்கக்குறைவு உடையவராக இருப்பார்.
9
ஒன்பதிற்குரியவன் ஒன்பதில் ஆட்சி பலத்துடன் இருந்தால், பிதாவுக்கு ஆயுள் தீர்க்கம். பாக்கியங்கள் உடையவனாக ஜாதகன் இருப்பான். தெய்வ வழிப்பாட்ட்டில் நாட்டம் உடையவனாக இருப்பான். சிறப்பான குடும்பம், பணியாட்கள், பந்தங்கள் உடையவனாக இருப்பான்.
10
ஒன்பதிற்குரியவன் பத்தில் இருந்தால், பாக்கியங்கள், சுயசம்பாத்தியம் உடையவனாக ஜாதகன் இருப்பான். சொத்து, சுகம், பெரிய மனிதர்களின் நட்பு உடையவனாக இருப்பான். வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைவான்.
11
ஒன்பத்திற்கு உரியவன் பதினொன்றில் இருந்தால், தந்தை படிப்படியாக உயர்ந்த நிலையை அடைவார். குடும்ப செளகர்யம், தெய்வீக வழிபாடு உடையவனாக ஜாதகன் இருப்பான்.
12
ஒன்பதிற்குரியவன் பன்னிரெண்டில் இருந்தால், பிதுர் சொத்துக்கள் விரையமாகும். வழக்குகள், தன விரையம் உடையவனாக ஜாதகன் இருப்பான். அயன, சயன, போகம் உடையவனாக ஜாதகன் இருப்பான்.

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

5.5.25

Astrology பத்தாம் வீடும் அதன் அதிபதி அமர்ந்த இடத்திற்கான பலன்களும்

Astrology பத்தாம் வீடும் அதன் அதிபதி அமர்ந்த இடத்திற்கான பலன்களும் 
10th House and placement benefit of its lord

கிரகங்களின் அமர்விடப் பலன்கள்:
Placement benefits of planets!

கிரகங்களின் அமரும் இடத்தைவைத்துப் பலன்கள் வேறுபடும். அவற்றை விவரமாகப் பார்ப்போம்!

இப்போது பத்தாம் வீட்டையும், அதன் அதிபதி அமரும் இடத்திற்கான பலன்களையும் பார்ப்போம்!

கிரகங்கள் அவ்வாறு அமரும் இடமானது அவற்றின் உச்ச வீடாக அல்லது ஆட்சி வீடாக இருந்தால் சுபமான பலன்கள் உண்டாகும். இதை மனதில் வையுங்கள்!

1
பத்தாம் வீட்டுக்குரியவன் இலக்கினத்தில் அமர்ந்தால், கீர்த்தி, ஆயுள் விருத்தி, ராஜ வாழ்க்கை, நட்பு, செல்வம், கல்வி, ஞானம் உடையவனாக ஜாதகன் இருப்பான்.
2
பத்திற்குரியவன் இரண்டில் இருந்தால், நல்ல குடும்ப வாழ்க்கை, செல்வம், வாக்கு சாமர்த்தியம் அமையப் பெற்றவனாக ஜாதகன் இருப்பான்.
3
பத்திற்குரியவன் மூன்றில் இருந்தால், சகோதரர்கள் இருப்பினும், விஷேச பலன் இருக்காது. சகோதர தோஷம் உடையவனாக ஜாதகன் இருப்பான்.
4
பத்திற்குரியவன் நான்கில் இருந்தால், தாய்வழி ஆதரவு, பெரிய வீடு, மனை, வாகனம், கால்நடைகள், பணியாட்கள், நல்ல குடும்பம் உடையவனாக ஜாதகன் இருப்பான்.
5
பத்திற்கு உரியவன், ஐந்தில் இருந்தால், புத்திர விருத்தி, பிரபுக்கள் தயவு, கெளரவமான வாழ்வு, ராஜஜீவனம், அதிகாரம், புத்திக்கூர்மை உடையவனாக ஜாதகன் இருப்பான்.
6
பத்திற்கு உரியவன் ஆறில் இருந்தால்,  தந்திரபுத்திக்காரனாக, கெட்ட வழிகளில் அதாவது குறுக்கு வழிகளில் பணம் சம்பாதிப்பவனாக ஜாதகனிருப்பான். திடமான உடலமைப்பு, அந்தஸ்து இல்லாதவனாக ஜாதகன் இருப்பான். பிறர் பொருளை அபகரிக்கும் குணம் உடையவனாக இருப்பான்.
7.
பத்திற்குரியவன் ஏழில் இருந்தால் தரித்திரமான அமைப்பு உடையவனாக ஜாதகன் இருப்பான். மனைவியிடம் பிணக்கம் உண்டாகும். கணவனுக்குக் கட்டுப் படாத மனைவி அமைவாள். மனைவி மூலம் பொருள் ஈட்டுவான். பல மனைவிகளை உடையவனாக ஜாதகனிருப்பான்.
8
பத்திற்கு உரியவன் எட்டில் இருந்தால்,, ஆயுள் விருத்தி இருக்கும். புத்திர தோஷம், மனைவியுடன் இணக்கம் இன்மை உடையவனாக ஜாதகன் இருப்பான். தத்துப் புத்திரன் கிடைப்பான். ஆபத்துக்கள் நிறைந்தவனாக இருப்பான்.
9
பத்திற்கு உரியவன் ஒன்பதில் இருந்தால், பிதுர் சொத்துக்கள் நாசமாகும். புத்திர தோஷம், சிரமமான வாழ்க்கை அமையும்.தெய்வ வழிப்பாடு, பெரிய மனிதர்களின் அபிமானம், தானதர்மகுணம் உடையவனாக ஜாதகன் இருப்பான். பிற்கலத்தில் சிறப்பான வாழ்வு உடையவனாக  இருப்பான்.
10.
பத்திற்கு உரியவன் ஆட்சி பலத்துடன் பத்தில் இருந்தால், உலக அறிவு, உறவினர்களின் ஆதரவு, பெரிய மனிதர்களின் ஆதரவு உடையவனாக ஜாதகன் இருப்பான்.தெய்வ வழிபாடு, கீர்த்தி, புண்ணிய காரியங்களைச் செய்தல் ஆகியவை நிறைந்தவனாக ஜாதகன் இருப்பான்.
11
பத்திற்கு உரியவன் பதினொன்றில் இருந்தால், மூத்த சகோதரருக்குக் கண்டம்,தொட்டது துலங்கும். எதிலும் லாபம் பெறுபவனாக ஜாதகன் இருப்பான்.
12
பத்திற்கு உரியவன் பன்னிரெண்டில் இருந்தால், வீண் செலவுகள் உண்டாகும். பொருள் நஷ்டம், கஷ்டம், புத்திரர்களால் தீயபலன் ஆகியவை உண்டாகும். சொத்துக்கள் அழியும். அயன, சயன், சுகம் உடையவனாக ஜாதகன் இருப்பான்.

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4.5.25

Astrology: பதினொன்றாம் வீடும் அதன் அதிபதி அமர்ந்த இடத்திற்கான பலன்களும்

Astrology: பதினொன்றாம் வீடும் அதன் அதிபதி அமர்ந்த இடத்திற்கான பலன்களும் 
11th House and placement benefit of its lord

கிரகங்களின் அமர்விடப் பலன்கள்:
Placement benefits of planets!

கிரகங்களின் அமரும் இடத்தைவைத்துப் பலன்கள் வேறுபடும். அவற்றை விவரமாகப் பார்ப்போம்!

இப்போது பதினொன்றாம் வீட்டையும், அதன் அதிபதி அமரும் இடத்திற்கான பலன்களையும் பார்ப்போம்!

கிரகங்கள் அவ்வாறு அமரும் இடமானது அவற்றின் உச்ச வீடாக அல்லது ஆட்சி வீடாக இருந்தால் சுபமான பலன்கள் உண்டாகும். இதை மனதில் வையுங்கள்!

1
பதினொன்றாம் வீட்டுக்கு உரியவன் இலக்கினத்தில் இருந்தால், ஜாதகன் அதிகம் படித்தவன். வாக்கு வன்மை, சாதுர்யமாகப் பேசும் தன்மை உடையவன். நல்ல லாபம் பெறக்கூடியவன். அயன, சயன, சுக பாக்கியங்களை உடையவன். மூத்த சகோதரருடன் நட்பாக உள்ளவன்
2
பதினொன்றுக்கு உரியவன் இரண்டில் இருந்தால், வழக்கறிஞர்களைப் போல பேசக்கூடியவன். நல்ல உடலமைப்பு, வருமனம், கெளரவம் மிக்கவனாக இருப்பான். அதிகாரம் உடையவனாக இருப்பான்.
3
பதினொன்றிற்கு உரியவன் மூன்றில் இருந்தால், மூத்த சகோதரர்களுக்கு ஜாதகனால் நன்மை உண்டாகும். அவர்களின் மேலான ஆதரவு இவனுக்கு இருக்கும்.
4
பதினொன்றிற்கு உடையவன் நான்கில் இருந்தால்,  நல்ல குடும்பம், வீடு, மனை, வாகன வசதிகள் உடையவனாக ஜாதகன் இருப்பான். செல்வாக்கு, தெய்வ வழிபாடு, தாய்வழி ஆதரவு உடையவனாக ஜாதகன் இருப்பான்.
5
பதினொன்றிற்கு உரியவன் ஐந்தில் இருந்தால்,புத்திரர்களால் முன்னேற்றம், தந்தையின் தொழிலை பிள்ளைகள் மேற்கொள்ளுதல் ஆகியவை நடக்கும். அந்தஸ்து, அரசு அனுகூலம், பெரிய மனிதர்களின்நட்பு ஆகியவை உடையவனாக ஜாதகன் இருப்பான்.
6
பதினொன்றிகு உரியவன் ஆறில் இருந்தால்,குறையாத கடன் சுமை, செய்தொழிலில் வஞ்சகர்கள்,போட்டியாளர்கள் இருப்பார்கள்.காது, கண் நோய், குரல் நோய், அயன, சயன, சுக நாசம் உடையவனாக ஜாதகன் இருப்பான்.
7.
பதினொன்றிற்கு உரியவன் ஏழில் இருந்தால், மனைவியினால் அதிர்ஷ்டம், புத்திரர்களால் சுகம், முன்னேற்றம் உடையவனாக இருப்பான். தெய்வ வழிபாடு பொதுப்பணி உடையவனாக இருப்பான். தனச் செலவுகள் அதிகம் இருக்கும்.
8
பதினொன்றிற்கு உரியவன் எட்டில் இருந்தால்,  தீய காரியங்களால் பணச் செலவுகள் உண்டாகும். படுக்கை, சாப்பாடு, சுகம் நாசமாகும். பலவித தொழில் செய்யும் விருப்பமும் முயற்சியும் இருக்கும். ஆனால் எதிலும் போதிய லாபம் இல்லாமல் இருக்கும்!
9.
பதினொன்றிற்கு உரியவன் ஒன்பதில் இருந்தால்,தந்தை செய்து வந்த தொழிலை எடுத்துச் செய்து விரிவடையச் செய்வான். சொத்து, வாகனம், உயர் பதவி, அதிகாரம் உடையவனாக ஜாதகன் இருப்பான். படுக்கை, சாப்பாடு சுகம் மிக்கவனாக ஜாதகன் இருப்பான்.
10
பதினொன்றிற்கு உரியவன் பத்தில் இருந்தால், கெளரவமன தொழில் அல்லது உத்தியோகம், அடக்கமான, அமைதியான  குடும்பம் இருக்கும். செளகர்யங்கள், தெய்வீக வழிபாடு, நல்ல வருமானம் உடையவனாக ஜாதகன் இருப்பான்.
11.
பதினொன்றுக்கு உரியவன் பதினொன்றில் ஆட்சி பலத்துடன் இருந்தால், சாதாரண லாபம். சமபலன்கள் உண்டாகும். தெய்வீக வழிபாடு, கெளரவமான குடும்பம் உடையவனாக ஜாதகன் இருப்பான். பிற்கலத்தில் செல்வத்துடன் இருப்பான். மூத்த சகோதரர்கள் நலமாக இருப்பதுடன், ஜாதகனுடன் நல்ல உறவோடு இருப்பார்கள்.
12
பதினொன்றிற்கு உரியவன் பன்னிரெண்டில் இருந்தால், பொருள் விரையம், கடன் தொல்லைகள், வியாதிகள், அமைதிக்குறைவு உடையவனாக ஜாதகன் இருப்பான். அயன, சயன சுகங்கள் உடையவனாக இருப்பான்.

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

3.5.25

Astrology: வீடுகளும் கிரகங்களும் - முதலில் லக்கினம்

Astrology: வீடுகளும் கிரகங்களும் - முதலில் லக்கினம்

1
லக்கினத்தில் சூரியன் இருந்தால், ஜாதகன் உண்மையை உறுதியாகப் பேசுபவன். சிவந்த நிறமும், உஷ்ண தேகமும் உடையவனாக இருப்பான். மெலிந்த உடல்வாகு இருக்கும். தன்னம்பிக்கை உடையவனாக இருப்பான்.
2.
லக்கினத்தில் சந்திரன் இருந்தால் அழகான கண்கள், இளைத்த சரீரம், வட்ட முகம் உடையவனாக
ஜாதகன் இருப்பான். தூய்மையானவன்.புத்தியுள்ளவன்.பாக்கியவான். பெண் சகோதரிகள் இருப்பார்கள். நீர் சம்பந்தமான நோய்கள் இருக்கும். அதாவது அடிக்கடி மூக்கில் நீர் வடிதல் போன்ற சிறு சிறு நோய்கள் உடையவனாக இருப்பான்.
3
லக்கினத்தில் செவ்வாய் இருந்தால், முன்கோபம், சட்டென்று சண்டைக்குப் போகும் குணமுடையவனாக ஜாதகன் இருப்பான். மெல்லிய ஆனால் உறுதியான உடல் அமைப்பு இருக்கும். பிறரை மீறிப் பேசுபவன். சஞ்சல மனதை உடையவன். நகைச்சுவை மிகுந்தவன்.
4
லக்கினத்தில் புதன் இருந்தால், நகைச்சுவைப் பிரியர். ரோகமுள்ளவர்.குறைந்த நிறம். பிறரை அளந்துவிடக்கூடியவர். சமயமறிந்து பேசக்கூடியவர். நல்ல குணமுடையவர். அறிவுரை வழங்குவதில் விருப்பம் உடையவர். தலைமை தாங்கும் தகுதியை/அமைப்பை உடையவர்.
5.
லக்கினத்தில் குரு இருந்தால், ஆசீர்வதிக்கப்பெற்றவர். எடுத்த செயல்களை முடிக்கக்கூடியவர். அறிவாற்றல் மிக்கவர். எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கக்கூடியவர். எல்லா நலன்களும் அவரைத் தேடிவரும் அமைப்பை உடையவர்.
6.
லக்கினத்தில் சுக்கிரன் இருந்தால், அழகிய கண்கள், சுருள்முடி கொண்டவர். கலை ஆர்வம், இரசிப்புத் தன்மை உடையவர். ஆடம்பரப் பொருள்களை விரும்பக்கூடியவர். அலங்காரத்தில் விருப்பம் உடையவர். சுகங்களை உடையவர். பெண்களுடன் சரளமாகப் பழகக்கூடியவர்.
7
லக்கினத்தில் சனீஷ்வரன் இருந்தால், ஆயுள் பலம் உள்ளவர். மெலிந்த தேகம் உடையவர். பிடிவதம், மந்த செய்கைகளை உடையவர். கபடம் மிக்கவர்.
8
லக்கினத்தில் ராகு இருந்தால், முரட்டுத் தனம், ஆக்கிரமிக்கும் குணம் உடையவர். நீச குணம் இருக்கும். சுயநலம் மிக்கவர். விவாதம் செய்யும் சுபாவம் உடையவர். பலம் மிகுந்த உடல் அமைப்பு உடையவர்.
9
லக்கினத்தில் கேது இருந்தால், மெலிந்த உடல் அமைப்பு, பலக் குறைவு உடையவர். நம்பிக்கை இன்மை, பகுத்தறியும் குணம் உடையவர். ஞானம் உடையவர். விஷ ரோகம் உடையவர்.

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

2.5.25

Astrology: கிரகங்களின் அமர்விடப் பலன்கள்:

Astrology கிரகங்களின் அமர்விடப் பலன்கள்:

Placement benefits of planets!
கிரகங்களின் அமரும் இடத்தைவைத்துப் பலன்கள் வேறுபடும். அவற்றை விவரமாகப் பார்ப்போம்!

முதலில் லக்கின அதிபதி!
1
அவர் முதல் வீட்டில், அதாவது லக்கினத்திலேயே இருந்தால், அதுவும் ஆட்சி பெற்று அது அவருக்குச் சொந்த வீடாக இருந்தால் மிகவும் நல்லது.
அதனால் ஜாதகனுக்கு நீண்ட ஆயுளையும், மகிழ்ச்சியையும் கொடுப்பார். ஜாதகன் பக்திமானாகவும், நல்ல குணங்களை உடையவனாகவும் இருப்பான்.
லக்கினத்தின் மேல் சனி, ராகு, கேது போன்ற தீய கிரகங்களின் பார்வை இருக்கக்கூடாது. அவைகளின் சேர்க்கையும் இருக்கக்கூடாது. அவ்வாறான அமைப்பில் ஜாதகனுக்கு நீண்ட ஆயுள் இருக்கும்.
2.
லக்கின அதிபதி 2ம் வீட்டில் இருந்தால், அதாவது லக்கினத்திற்கு அடுத்த வீட்டில் இருந்தால், ஜாதகன் செல்வந்தனாகவும், நல்ல மனைவி மக்களுடைய குடும்பத்தைக் கொண்டவனாகவும் இருப்பான்.  ஜாதகனுக்கு வாய், வார்த்தை அதாவது வாக்கு சாமர்த்தியம் இருக்கும். எதையும் பேசி சமாளிக்கும் ஆற்றல் உடையவனாக இருப்பான்.
3.
லக்கின அதிபதி மூன்றாம் வீட்டில் இருந்தாக், ஜாதகன் உடன்பிறப்புக்களுடன், அதாவது சகோதர, சகோதரிகளுடன் ஒற்றுமையாக வாழ்பவனாக இருப்பான். செல்வந்தனாகவும், செல்வாக்கு உடையவனாகவும் இருப்பான்.
4
லக்கினாதிபதி நான்காம் வீட்டில் இருந்தால், ஜாதகன் எல்லா சுகங்களையும் உடையவாக இருப்பான். வீடு, வாசல், நிலம், புலம், வண்டி வாகனம் என்று எல்லா வசதிகளையும் உடையவனாக இருப்பான். கல்வி, கேள்விகளில் விருப்பமுடையவனாகவும், தாயிடத்தில் பாசம் மிக்கவனாகவும் இருப்பான்.
5
லக்கினாதிபதி ஐந்தாம் வீட்டில் இருந்தால், ஜாதகன் புத்திசாலியாக இருப்பான். குழந்தை பாக்கியம் உள்ளவனாக இருப்பான். பெரும்பாலும் சொந்த ஊரில் வசிப்பவனாக இருப்பான். பூர்வ புண்ணிய பலத்துடன் இருப்பான். நல்லபடியான வாழ்க்கை அமையும்
6.
லக்கினாதிபதி ஆறாம் வீட்டில் இருந்தால், அது நன்மையான அமைப்பு இல்லை. ஜாதகன் போராடப் பிறந்தவன். வாழ்க்கை முழுவதும் போராட்டம் நிறைந்ததாக இருக்கும். எதிரிகள் இருப்பார்கள். கடன் உண்டாகும். அணுகுமுறை வெற்றியைக் கொடுக்காது. லக்கினாதிபதி பாப கிரகம் என்றால் இந்த இடத்தில் இருப்பது சில விஷயங்களில் நன்மையானதுதான்
7
லக்கினாதிபதி ஏழாம் வீட்டில் இருந்தால், ஜாதகன் காமம் அதிகம் உடையவனாக இருப்பான். பலவிதமான ஆசைகள் உடையவனாக இருப்பான். திருமணத்தால் மேன்மை அடைபவனாக இருப்பான். பிறரை ஈர்க்கும் தன்மை உடையவனாக இருப்பான்.
8
லக்கினாதிபதி எட்டில் இருப்பது நன்மையான அமைப்பு இல்லை. சிலருக்கு ஆயுள் குறைவாக இருக்கும். சிலருக்கு அவமானங்களும் கெட்ட பெயரும் உண்டாகும். சனி, ராகு அல்லது கேது இந்த இடத்துடன் சம்பந்தப் பட்டிருந்தால் ஜாதகனுக்கு உடற் குறைபாடு இருக்கும்.
9
லக்கினாதிபதி ஒன்பதாம் வீட்டில் இருந்தால் ஜாதகன் பாக்கியசாலியாக இருப்பான். எல்லா பாக்கியங்களையும் அனுபவிக்கும் யோகம் உண்டாகும். தந்தையை நேசிப்பவனாகவும், தந்தையின் ஆதரவைப் பெற்றவனாகவும் இருப்பான். தர்ம காரியங்களைச் செய்வான். எப்போதும் நல்ல பெயர் இருக்கும்.
10
லக்கினாதிபதி பத்தில் இருந்தால், எந்த நேரமும் தன்னுடைய தொழில் அல்லது வேலை பற்றிய சிந்தனை உடையவனாக இருப்பான். அன்றாட வேலைகளில் கண்ணும் கருத்தும் உடையவனாக இருப்பான். தர்மகாரியங்களைச் செய்பவனாக இருப்பான்.
11.
லக்கினாதிபதி பதினொன்றாம் வீட்டில் இருந்தால், லாபம் உடையவனாக இருப்பான். இது லாப ஸ்தானம் அதை மனதில் வையுங்கள். மூத்த சகோதரனாக இருப்பான் அல்லது மூத்தவர்களிடம் அன்பு உடையவனாக இருப்பான். சுபக்கிரகங்களின் பார்வை இல்லாவிட்டால் மாரக திசையாக மாறும் அபாயம் உண்டு.
12
லக்கினாதிபதிக்கு 12ம் இடம் உன்னதமானது அல்ல! ஜாதகன் பண விரயம் உடையவனாக இருப்பான். உயர்ந்த நிலையை அடைய முடியாதவனாகவும் இருப்பான். அயன, சயன, சுகங்களை கிடைத்தவரை அனுபவிப்பவனாக இருப்பான். சிலருக்கு ஆயுள் குறைவு ஏற்படும். எல்லோருக்கும் அல்ல!

அன்புடன்,
வாத்தியார்
----------------------------------------------

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

1.5.25

Astrology: இரண்டாம் வீடும், அதன் அதிபதி அமரும் இடத்திற்கான பலன்கள்


Astrology: இரண்டாம் வீடும், அதன் அதிபதி அமரும் இடத்திற்கான பலன்கள்


கிரகங்களின் அமர்விடப் பலன்கள்:
Placement benefits of planets!
கிரகங்களின் அமரும் இடத்தைவைத்துப் பலன்கள் வேறுபடும். அவற்றை விவரமாகப் பார்ப்போம்!


இப்போது இரண்டாம் வீட்டையும், அதன் அதிபதி அமரும் இடத்திற்கான பலன்களையும் பார்ப்போம்!

கிரகங்கள் அவ்வாறு அமரும் இடமானது அவற்றின் உச்ச வீடாக அல்லது ஆட்சி வீடாக இருந்தால் சுபமான பலன்கள் உண்டாகும். இதை மனதில் வையுங்கள்!

1.
இரண்டாம் வீட்டிற்கு உரியவன் லக்கினத்தில் அமர்ந்தால், ஜாதகன் செல்வம் உடையவனாக இருப்பான். ஏனென்றால் அது திரிகோண ஸ்தானம். நல்ல அமைப்பாகும். புத்திசாலியாக, வாக்கு சாமர்த்தியம் உள்ளவனாக இருப்பான். நல்ல குடும்ப வாழ்க்கையை உடையவனாக இருப்பான்.
2
இரண்டாம் வீட்டிற்கு உரியவன் ஆட்சி பலம் பெற்று இரண்டில் இருப்பது நன்மையான அமைப்பாகும். ஜாதகன் தனம், செல்வம், நல்ல குடும்பம், வாக்கு அமைப்பு எல்லாம் உடையவனாக இருப்பான்.
3.
இரண்டாம் வீட்டிற்கு உரியவன் மூன்றாம் வீட்டில் இருந்தால்,சகோதர அதிர்ஷ்டம் உண்டாகும். சிலருக்கு கல்வியில் முடக்கம் ஏற்படும்.
4.
இரண்டாம் வீட்டிற்கு உரியவன் நான்கில் இருந்தால், சொன்ன சொல்லைக் காப்பாற்றுபவனாக ஜாதகன் இருப்பான். தாயிடம் அன்பு மிகுதியானவனாக இருப்பான். கல்வி, பூமி, வியாபாரம் இவை ஒன்றின் மூலம் பொருள் ஈட்டுபவனாக இருப்பான்.
5
இரண்டாம் வீட்டிற்கு உரியவன் ஐந்தில் இருந்தால்,  ஜாதகனுக்குப் புத்திர தோஷம் இருக்கும். காதகன் புத்திக் கூர்மை உடையனாக இருப்பான். சமுதாயத்தில் உள்ள பெரிய மனிதர்களின் தொடர்பு அவனுக்கு உண்டாகும்.
6
இரண்டாம் வீட்டிற்கு உரியவன், ஆறாம் வீட்டில் இருந்தால், வாக்கில் சோர்வு இருக்கும். பேச்சில் உளறல் அதிகமாக இருக்கும் தேவையில்லாதவற்றைப் பேசிக் கொண்டு திரிவான். பணச் சேதங்களும் உண்டாகும்
7
இரண்டாம் வீட்டிற்கு உரியவன், ஏழாம் வீட்டில் இருந்தால், களத்திரதோஷம். பெண் சம்பந்தமாய் செலவு. ஜாதகன் சங்கீத ஞானம் உடையவனாக இருப்பான்
8
இரண்டாம் வீட்டிற்கு உரியவன், எட்டாம் வீட்டில் இருந்தால், பேச்சில் தடங்கலும், சமயங்களில் பேசா மடந்தையாகவும் இருப்பான். தன விரையம் உடையவனாக இருப்பான்.
9
இரண்டாம் வீட்டிற்கு உரியவன், ஒன்பதாம் வீட்டில் இருந்தால், சிலருக்கு பிதுர் தோஷம் உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும். ஜாதகன் செல்வம், பாக்கியம் உடையவனாக இருப்பான்.
10
இரண்டாம் வீட்டிற்கு உரியவன், பத்தாம் வீட்டில் இருந்தால், கல்வி மேம்பாடு உடையவனாக இருப்பான். சாஸ்திரங்களை ஆராய்ந்து கற்றுக் கொள்ளும் ஆர்வம் இருக்கும். வாய் சாமர்த்தியம் உடையவனாக இருப்பான். வாக்கினால் பிரபலம் அடைபவனாக இருப்பான்.
11
இரண்டாம் வீட்டிற்கு உரியவன், பதினொன்றாம் வீட்டில் இருந்தால், செல்வம் உடையவனாக இருப்பான். கொடுக்கல், வாங்கல் செய்பவனாக இருப்பான். கையில் எப்போதும் காசு, பணம் உடையவனாக இருப்பான்.
12
இரண்டாம் வீட்டிற்கு உரியவன், பன்னிரெண்டாம் வீட்டில் இருந்தால், வாய் சாமர்த்தியம் உடையவனாக இருப்பான். ஆனால் அதனால் அவனுக்கு பலன் ஒன்றும் இருக்காது. தன விரையம் உடையவனாக இருப்பான். வீண் செலவுகள் அதிகம் இருக்கும்!

அன்புடன்
வாத்தியார்
=================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

30.4.25

Astrology மூன்றாம் வீடும் அதன் அதிபதி அமர்ந்த இடத்திற்கான பலன்களும் 

கிரகங்களின் அமர்விடப் பலன்கள்:
Placement benefits of planets!

கிரகங்களின் அமரும் இடத்தைவைத்துப் பலன்கள் வேறுபடும். அவற்றை விவரமாகப் பார்ப்போம்!

இப்போது மூன்றாம் வீட்டையும், அதன் அதிபதி அமரும் இடத்திற்கான பலன்களையும் பார்ப்போம்!

கிரகங்கள் அவ்வாறு அமரும் இடமானது அவற்றின் உச்ச வீடாக அல்லது ஆட்சி வீடாக இருந்தால் சுபமான பலன்கள் உண்டாகும். இதை மனதில் வையுங்கள்!

1.
மூன்றுக்கு உரியவன் இலக்கினத்தில் அமர்ந்தால்,ஆள், பேர், வேலைக்காரர்கள் உள்ளவனாக ஜாதகன் இருப்பான். சகோதர ஒற்றுமையுடன் இருப்பான். பொன், பொருள் உடையவனாக இருப்பான்.
2.
மூன்றுக்கு உரியவன் இரண்டில் இருந்தால்,  ஜாதகன் மன பலமும், சரீர பலமும் இல்லாதவனாக இருப்பான். சகோதர உதவியுடன் தனம் பெறுபவனாக இருப்பான். ஆடை, ஆபரணங்களுக்குக் குறைவில்லாமல் இருக்கும்
3.
மூன்றாம் வீட்டுக்கு உரியவன், மூன்றில் ஆட்சி பலத்துடன் இருந்தால்,ஆள், பேர், வேலைக்காரர்கள் உள்ளவனாக ஜாதகன் இருப்பான். சகோதர ஒற்றுமையுடன் இருப்பான். பொன், பொருள் உடையவனாக இருப்பான். வீரியம் மிக்கவனாக இருப்பான். சுகபோக வாழ்க்கை அமையும்.
4.
மூன்றுக்கு உடையவன் நான்கில் இருந்தால், கேள்வி ஞானம் உடையவனாக இருப்பான்.ஆள், பேர், வேலைக்காரர்கள் உள்ளவனாக ஜாதகன் இருப்பான். சகோதர ஒற்றுமையுடன் இருப்பான். பொன், பொருள் உடையவனாக இருப்பான்.
5
மூன்றுக்கு உடையவன் ஐந்தில் இருந்தால், ஜாதகன் ஒரு பிரபுவைப் போல வாழ்க்கை நடத்துவான்.வேலைக்காரர்கள் உள்ளவனாக ஜாதகன் இருப்பான். சகோதர ஒற்றுமையுடன் இருப்பான். பொன், பொருள் உடையவனாக இருப்பான்.கேள்வி ஞானம் உடையவனாக இருப்பான்
6
மூன்றுக்கு உரியவன் ஆறில் இருந்தால், உதவிக்கு ஆள், வேலைக்காரர்கள் இன்றி வாழ்க்கை தனிமைப் பட்டுப்போகும். சகோதர அனுகூலம் இருக்காது. வீரியம், போகத்தன்மை குறைவு இருக்கும்.
7
மூன்றுக்கு உரியவன் ஏழில் இருந்தால், எந்நேரமும் காமத்தின் மேல் பற்று உள்ளவனாக இருப்பான். அது சம்பந்தமாக மிகுந்த துணிச்சல் உடையவனாகவும் இருப்பான்.
8
மூன்றுக்கு உரியவன் எட்டில் இருந்தால், உடல் பலம், வீரியம், போகத்தன்மை குறைந்தவனாக இருப்பான். சகோதர பீடை உடையவனாக இருப்பான். சனி, ராகு அல்லது கேது சம்பந்தப்பட்டால் சகோதர கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
9
மூன்றுக்கு உரியவன் ஒன்பதில் இருந்தால், ஜாதகன் வீரனாக இருப்பான். அதாவது வீரத் தன்மை மிகுந்தவனாக இருப்பான். தைரியம் உடையவனாக இருப்பான். பக்தி, விசுவாசம் மிக்கவனாக இருப்பான். வசதிகள் உள்ளவனாக இருப்பான்.
10
மூன்றுக்கு உரியவன் பத்தில் இருந்தால், சகோதர தோஷம். வேலைக்காரர்கள் நடத்தை சரியில்லாதவர்களாக அமைவார்கள். அவர்களுடன் மல்லுக்கட்டுவதற்கே சரியாக இருக்கும்.
11.
மூன்றுக்கு உரியவன் பதினொன்றில் இருந்தால், சகோதரர் வழியில் லாபம் உண்டாகும். பதினொன்றாம் இடத்துக்காரன் திசையில் சகோதர இழப்பும் உண்டாகும்
12
மூன்றுக்கு உரியவன் பன்னிரெண்டில் இருந்தால், சகோதரர் வழியில் சண்டை, சச்சரவுகள் உண்டாகும். சொத்துக்கள் விரையம் ஆகும். கஷ்டம் மன அமைதியின்மை உண்டாகும். ஜாதகன் சுகம் இல்லாதவனாக இருக்க நேரிடும்

அன்புடன்,
வாத்தியார்
-----------------------------------------------------------------------------

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

29.4.25

Astrology: நான்காம் வீடும் அதன் அதிபதி அமர்ந்த இடத்திற்கான பலன்களும்

Astrology: நான்காம் வீடும் அதன் அதிபதி அமர்ந்த இடத்திற்கான பலன்களும் 
4th House and placement benefit of its lord

கிரகங்களின் அமர்விடப் பலன்கள்:
Placement benefits of planets!

கிரகங்களின் அமரும் இடத்தைவைத்துப் பலன்கள் வேறுபடும். அவற்றை விவரமாகப் பார்ப்போம்!

இப்போது நான்காம் வீட்டையும், அதன் அதிபதி அமரும் இடத்திற்கான பலன்களையும் பார்ப்போம்!

கிரகங்கள் அவ்வாறு அமரும் இடமானது அவற்றின் உச்ச வீடாக அல்லது ஆட்சி வீடாக இருந்தால் சுபமான பலன்கள் உண்டாகும். இதை மனதில் வையுங்கள்!

1.
நான்காம் வீட்டு அதிபதி இலக்கினத்தில் அமர்ந்திருந்தால், ஜாதகன் மாளிகை போன்ற பெரிய வீட்டில் வாசம் செய்வான். நல்ல கல்விமானாக இருப்பான். வாகனங்கள் முதலிய எல்லா செளகர்யங்களையும், சுகங்களையும் பெற்றவனாக இருப்பான்.
2
நான்காம் அதிபதி இரண்டாம் வீட்டில், அதாவது இலக்கினத்திற்கு அடுத்த வீட்டில் இருந்தால், தாயாருக்கு பீடையாகும். ஆனால் தாயாரின் ஆதரவும், அன்பும் முழுமையாகக் கிடைக்கும். கல்விக்குக் குறைவிருக்காது. தாய்வழி உறவினர்களின் ஆதரவு இருக்கும்.
3
நான்கிற்கு உரியவன் மூன்றாம் வீட்டில் இருந்தால் தாயாருக்கு பீடை. அத்துடன் வீடு, வாகனம் குறைபாடுகளும் இருக்கும். அதாவது அவைகள் எல்லாம் கிடைப்பதற்குப் பல தடைகள் உண்டாகும்.
4
நான்கிற்கு உடையவன், நான்கிலேயே இருந்தால் எல்லா நன்மைகளும் உண்டு.
5.
நான்கிற்கு உடையவன், ஐந்தில் இருந்தால், ஜாதகனுக்கு வீடு, மனை, வாகனம் போன்ற வசதிகளுக்குக் குறைவிருக்காது. அத்துடன் ஜாதகன் பல புண்ணிய ஸ்தலங்களுக்கு யாத்திரை சென்று வருவான். கல்விமானாக இருப்பான்.
6
நான்காம் வீட்டுக்காரன் ஆறில் இருந்தால், தாயாருக்குப் பீடை. வீடு, வாகன முடக்கங்கள் ஏற்படும். ஜாதகன் பல நஷ்டங்களையும், சுகக் கேடுகளையும் அனுபவிக்க நேரிடும்.
7
நான்கிற்கு உரியவன் ஏழில் இருந்தால், தாயாருக்கு அதிர்ஷ்டம் உண்டாகும். வீடு, வாகன, சுகம் துக்கம் எல்லாம் சமபலனாகக் கலந்து கிடைக்கும். அதாவது வரும்.போகும்.
8
நான்கிற்கு உரியவன் எட்டில் இருந்தால், தாயாரால், ஜாதகனுக்கு இடையூறுகள், கஷ்டங்கள் உண்டாகும். சனி, ராகு அல்லது கேது இந்த இடத்துடன் சம்பந்தப்பட்டால், ஜாதகனுக்கு அங்கக் குறைபாடு உண்டாகும்.
9.
நான்கிற்கு உரியவன் ஒன்பதில் இருந்தால், ஜாதகன் வீடு, பூமி, வாகனம் உடையவனாக இருப்பான். சுகபோகங்கள் உடையவனாகவும், குலபாக்கியம் உடையவனகவும் இருப்பான்.
10
நான்கிற்கு உரியவன் பத்தில் இருந்தால், வீடு, வாகனம், பூமி விருத்திகள் உண்டாகும். இத்துடன் 9 & 11ம் வீடுகளுக்கு உரியவர்களின் தொடர்பு உண்டானால்,  புதையலுக்கு நிகரான லாபம் உண்டாகும்.
11
நான்கிற்கு உரியவன் பதினொன்றில் இருந்தால் தாயாருக்குக் கண்டம். ஜாதகன் சுகங்கள் நிறைந்தவனாக இருப்பான். பூமி, மற்றும் வியாபாரத்தின் மூலம் பெருத்த லாபம் உண்டாகும்
12
நான்கிற்கு உரியவன் பன்னிரெண்டில் இருபது நன்மையான அமைப்பு அல்ல! ஜாதகனுக்கு சுகக் குறைவுகள் உண்டாகும். பூமி விரையம், கஷ்டங்கள் உடையவனாக ஜாதகன் இருப்பான்.

அன்புடன்,
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

28.4.25

Astrology: ஐந்தாம் வீடும் அதன் அதிபதி அமர்ந்த இடத்திற்கான பலன்களும்

Astrology: ஐந்தாம் வீடும் அதன் அதிபதி அமர்ந்த இடத்திற்கான பலன்களும்

5th House and placement benefit of its lord

கிரகங்களின் அமர்விடப் பலன்கள்:
Placement benefits of planets!

கிரகங்களின் அமரும் இடத்தைவைத்துப் பலன்கள் வேறுபடும். அவற்றை விவரமாகப் பார்ப்போம்!

இப்போது ஐந்தாம் வீட்டையும், அதன் அதிபதி அமரும் இடத்திற்கான பலன்களையும் பார்ப்போம்!

கிரகங்கள் அவ்வாறு அமரும் இடமானது அவற்றின் உச்ச வீடாக அல்லது ஆட்சி வீடாக இருந்தால் சுபமான பலன்கள் உண்டாகும். இதை மனதில் வையுங்கள்!

1.
ஐந்தாம் வீட்டு அதிபதி இலக்கினத்தில் அமர்ந்திருந்தால், ஜாதகன் கூர்மையான புத்தியை உடையவன். அதிபுத்திசாலியாக இருப்பான். கல்விமானாக இருப்பான். புத்திர பாக்கியம் உடையவனாக இருப்பான். பிரபுக்களைப் போன்று நன்மையான வாழ்க்கையை உடையவனாக இருப்பான். தூய்மையான எண்ணம் உடையவனாக இருப்பான்.
2
ஐந்தாம் அதிபதி இரண்டாம் வீட்டில், அதாவது இலக்கினத்திற்கு அடுத்த வீட்டில் இருந்தால், தன் பிள்ளைகளால் பல நன்மைகள் (குறிப்பாக தனவரவு) உடையவனாக இருப்பான். கல்விமானாக இருப்பான். சுகபோகம், நல்ல குடும்ப வாழ்க்கை உடையவனாக இருப்பான்.
3
ஐந்திற்கு உரியவன் மூன்றாம் வீட்டில் இருந்தால், புத்திர தோஷம் உடையவன். புத்திரர்களால் நன்மை இல்லாத நிலை உண்டாகும். தெய்வீக வழிகளில் பற்று உடையவனாக இருப்பான்.
4
ஐந்திற்கு உடையவன், நான்கில் இருந்தால், புத்திர பாக்கியம், குடும்ப கெளரவம் உடையனாக ஜாதகன் இருப்பான். ராஜபோக வாழ்வு, அரசு ஆதரவு உடையவனாக ஜாதகன் இருப்பான்.
5.
ஐந்திற்கு உடையவன், ஐந்தில் ஆட்சி பெற்று நல்ல நிலைமையில் இருந்தால், ஜாதகனுக்குப் புத்திக்கூர்மை, புத்திர பாக்கியம், அதிகாரம், வெகுமானம், பெரியவர்களின் அனுகூலம், கல்வி, பதவி, விசுவாசம், செல்வம், செல்வாக்கு என்று அனைத்தும் இருக்கும்!
6
ஐந்தாம் வீட்டுக்காரன் ஆறில் இருந்தால், புத்திர தோஷம், புத்திர விரோதம், புத்திக்குறைவு,ஞாபகசக்திக் குறைவு,ரோகம், விரோதங்கள் நிறைந்தவனாக ஜாதகன் இருப்பான். இந்த ஆறாம் வீடு புதனின் வீடாக இருந்தால் புத்திரர் இல்லை.
7
ஐந்திற்கு உரியவன் ஏழில் இருந்தால், புத்திர பாக்கியம், பலவித செளகர்யங்களை உடையவனாக ஜாதகன் இருப்பான். கல்விமானாக இருப்பான்.
8
ஐந்திற்கு உரியவன் எட்டில் இருந்தால், புத்திர, சந்தான, உறவினர் தோஷம் உண்டு. பலவிதமான கஷ்டங்கள் இருக்கும். ராகு அல்லது கேது சம்பந்தப்பட்டால், அங்க ஹீனமான குழந்தைகள் இருக்கும்.
9.
ஐந்திற்கு உரியவன் ஒன்பதில் இருந்தால், புத்திரர்களால் உதவி,பிரபுக்களால் அனுகூலம், சுக செளகர்யங்கள், ராஜ ஜீவனம் உடையவனாக ஜாதகன் விளங்குவான்.
10
ஐந்திற்கு உரியவன் பத்தில் இருந்தால், இராஜ சன்மானம், புத்திர பாக்கியம், பிரபுக்கள் தயவு, ஆத்மஞானம், தெய்வ வழிபாடு நிறைந்தவனாக ஜாதகன் இருப்பான்.
11
ஐந்திற்கு உரியவன் பதினொன்றில் இருந்தால், புத்திர, சந்தானங்களால் நலம் உண்டகும். குடும்ப அமைதியும், பிரபுக்கள் தயவும், செல்வம், செல்வாக்கு உடையவனாக ஜாதகன் இருப்பான்.
12
ஐந்திற்கு உரியவன் பன்னிரெண்டில் இருப்பது நன்மையான அமைப்பு அல்ல! தனசேதமும், மனைவிக்கு கர்ப்ப சேதமும், ஆரோக்கியக் குறைவும், புத்திர தோஷமும் உடையவனாக ஜாதகன் இருப்பான். அமைதி இல்லாத வாழ்க்கை அமைந்துவிடும்

அன்புடன்,
வாத்தியார்
----------------------------------------------

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

27.4.25

Astrology: ஆறாம் வீடும் அதன் அதிபதி அமர்ந்த இடத்திற்கான பலன்களும்

Astrology: ஆறாம் வீடும் அதன் அதிபதி அமர்ந்த இடத்திற்கான பலன்களும்

6th House and placement benefit of its lord

கிரகங்களின் அமர்விடப் பலன்கள்:
Placement benefits of planets!

கிரகங்களின் அமரும் இடத்தைவைத்துப் பலன்கள் வேறுபடும். அவற்றை விவரமாகப் பார்ப்போம்!

இப்போது ஆறாம் வீட்டையும், அதன் அதிபதி அமரும் இடத்திற்கான பலன்களையும் பார்ப்போம்!

கிரகங்கள் அவ்வாறு அமரும் இடமானது அவற்றின் உச்ச வீடாக அல்லது ஆட்சி வீடாக இருந்தால் சுபமான பலன்கள் உண்டாகும். இதை மனதில் வையுங்கள்!

1.
ஆறாம் வீட்டு அதிபதி இலக்கினத்தில் அமர்ந்திருந்தால், கடன், எதிரிகள், வியாதி, போட்டிகள், விஷத்தால் அவதிகள் உடையவனாக ஜாதகன் இருப்பான். திருட்டுக் கொடுத்தல், சிறைப்படுதல், தண்டனைகள் உடையவனாக ஜாதகன் இருப்பான்.
2
ஆறாம் அதிபதி இரண்டாம் வீட்டில், அதாவது இலக்கினத்திற்கு அடுத்த வீட்டில் இருந்தால், தனநாசம், பல், கண்நோய், கல்வித்தடை, வாக்கில் தடை பேச்சினால் விரோதங்கள் உடையவனாக ஜாதகன் இருப்பான்.
3
ஆறிற்கு உரியவன் மூன்றாம் வீட்டில் இருந்தால், சகோதரர் வழியில் விரோதம், குடும்பத்தில் குழப்பங்கள் உடையவனாக ஜாதகன் இருப்பான். கடன், காது சம்பந்தப்பட்ட நோய் உடையவனாக இருப்பான்.
4
ஆறிற்கு உடையவன், நான்கில் இருந்தால், சொத்துக்களில் வில்லங்கம், தாயாரின் அனுகூலமின்மை, சிரமங்கள் நிறைந்த வாழ்க்கை அமைந்தவனாக ஜாதகன் இருப்பான்.
5.
ஆறிற்கு உடையவன், ஐந்தில் இருந்தால், புத்திர நாசம், பாப குணம், இருதய நோய், வஞ்சகத்தன்மை உடையவனாக ஜாதகன் இருப்பான். பெரிய மனிதர்களின் விரோதம், பிறரை ஏமாற்றி வாழும் வாழ்க்கை அமைந்தவனாக ஜாதகன் இருப்பான்.
6
ஆறாம் வீட்டுக்காரன் ஆட்சி பெற்று சுபக்கிரகமாய் ஆறில் இருந்தால், தீராத கடனும், சத்துருக்கள் உடையவனாகவும் ஜாதகன் இருப்பான். கலகம், வறுமை, ராஜதண்டனை உடையவனாக இருப்பான்.  பாபியானால் இது எல்லாம் இருக்காது.
7
ஆறிற்கு உரியவன் ஏழில் இருந்தால், நன்மையான அமைப்பு இல்லை. ஜாதகன் எல்லாவித கஷ்டங்களுக்கும் ஆளாக நேரிடும்
8
ஆறிற்கு உரியவன் எட்டில் இருந்தால், வறுமை, வருமானம் இல்லாத நிலை உண்டாகும் திருடர்களால் நஷ்டம், தீயினால் நஷ்டம், சண்டை சச்சரவுகள் உடையவனாகவும் இருப்பான்.
9.
ஆறிற்கு உரியவன் ஒன்பதில் இருந்தால், தந்தைக்குப் பீடை, தந்தைவழிச் சொத்துக்கள் நாசமடையும் தன்மை, சண்டை சச்சரவுகள் ராஜதண்டனை உடையவனாகவும் ஜாதகன் இருப்பான்.
10
ஆறிற்கு உரியவன் பத்தில் இருந்தால், பிறரை மோசம் செய்து வாழும் வாழ்க்கை உண்டாகும். பிறர் பொருளின் மேல் ஆசை, திருட்டுத்தனம் மிகுந்தவனாக ஜாதகன் இருப்பான். சோம்பல், வம்பு பேசுதல், ஆகியவற்றை உடையவனாக இருப்பான். சிலருக்கு ராஜதண்டனைகள் ஏற்படும்.
11
ஆறிற்கு உரியவன் பதினொன்றில் இருந்தால், எந்தத் தொழில் செய்தாலும் லாபம் இல்லாமை, மூத்தோரிடத்தில் பகைமை, மற்றும் கடன், கஷ்டங்கள் உரியவனாக ஜாதகன் இருப்பான்.
12
ஆறிற்கு உரியவன் பன்னிரெண்டில் இருப்பது நன்மையான அமைப்பு அல்ல! அயன, சுக நஷ்டம், கண் வியாதி உடையவனாக ஜாதகன் இருப்பான். தீய வழிகளில் அவனுடைய பொருட்கள், பணம் சேதமாகும். நித்திரைக் குறைவு உண்டாகும்

அன்புடன்,
வாத்தியார்
----------------------------------------------

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

26.4.25

Astrology: பல கிரகங்கள் ஆட்சி பெற்றால் தரும் பலன்கள்

Astrology: பல கிரகங்கள் ஆட்சி பெற்றால் தரும் பலன்கள்

சிலருக்கு ஜாதகத்தில் ஒரு கிரகம் ஆட்சி பெற்றிருக்கும். அதுவும் லக்கினாதிபதி ஆட்சி பெற்றிருந்தால் நல்லது. அதுவும் ஆட்சி பெற்ற லக்கினாதிபதி திரிகோண இடங்களில் இருந்தால் மிகவும் நல்லது. சிலருக்கு ஒன்றிற்கு மேற்பட்ட கிரகங்கள் ஜாதகத்தில் ஆட்சி பெற்று இருக்கும். ஆட்சி பெற்ற கிரகங்கள் தங்களுடைய மகா திசைகளில் அல்லது புத்திகளில் உரிய பலன்களை வாரி வழங்கும். அதுவரை பொறுத்திருக்க வேண்டும்.!

இப்போது கிரகங்கள் ஆட்சி பெற்றதற்கான பலன்களைப் பார்ப்போம்!

பல கிரகங்கள் ஆட்சி பெற்றால் தரும் பலன்கள்

இரண்டு கிரகம் ஆட்சி பெற்றால், உறவினர்களால் பாராட்டப்படுவார். புகழ் உடையவராவார்.

மூன்று கிரகம் ஆட்சி பெற்றால், கல்வி, செல்வம், குழந்தைகள் புகழ் உடையவர்.

நான்கு கிரகம் ஆட்சி பெற்றால், நகரத்தின் தலைவராக,  நல்ல செயல்கள் உடையவராக, புகழ் உடையவராக இருப்பார்.

ஐந்து கிரகம் ஆட்சி பெற்றால், அரசனைப் போல வாழ்வு பெறுவார்.

ஆறு கிரகம் கிரகம் ஆட்சி பெற்றால், சிறந்த அரசாளும் யோகம் உடையவர்.

ஏழு கிரகம் ஆட்சி பெற்றால், அரசராக இருப்பார். நாட்டை ஆள்பவராக இருப்பார்.

உங்களுக்கு ஜாதகத்தில் எத்தனை கிரகங்கள் ஆட்சி பெற்றுள்ளன என்று பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

அன்புடன்
வாத்தியார்
==================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

25.4.25

Astrology: பல கிரகங்கள் நட்பு வீட்டில் இருந்தால் தரும் பலன்கள்.

Astrology: பல கிரகங்கள் நட்பு வீட்டில் இருந்தால் தரும் பலன்கள்.

சிலருக்கு ஜாதகத்தில், சில கிரகங்கள் நட்பு வீடுகளில் இருக்கும். நட்பு வீடுகளில் இருக்கும் கிரகங்கள் நன்மை செய்பவை. ஒன்றிற்கு மேற்பட்ட கிரகங்கள் ஜாதகத்தில் நட்பு வீடுகளில் இருந்தால், அவ்வாறு நட்பு வீடுகளில் இருக்கும் கிரகங்கள் தங்களுடைய மகா திசைகளில் அல்லது புத்திகளில் உரிய பலன்களை வாரி வழங்கும். அதை மனதில் வையுங்கள்!

இப்போது கிரகங்கள் ஆட்சி பெற்றதற்கான பலன்களைப் பார்ப்போம்!

பல கிரகங்கள் நட்பு வீட்டில் இருந்தால் தரும் பலன்கள்.

இரண்டு கிரகம் நட்பு வீட்டில் இருந்தால், நல்ல ஒழுக்கமும், நல்ல நண்பர்களையும் உடையவர்.

மூன்று கிரகங்கள்  நட்பு வீட்டில் இருந்தால், நல்ல குணமும், உறவினர்களைக் காப்பாற்றும் குணமும் உடையவர்

நான்கு கிரகங்கள்  நட்பு ஆனால், புகழும், இறையுணர்வும் உடையவர்.

ஐந்து கிரகங்கள்  நட்பு  ஆனால், அரசு உயர் பதவியும், செல்வமும், தலைவராகவும் இருப்பார்.

ஆறு கிரகங்கள்  நட்பு ஆனால், கல்வி, செல்வம், வாகனம், புகழ் மற்றும் அரசபோக வாழ்வு உடையவர்.
 
ஏழு கிரகங்கள்  நட்பு ஆனால், வாகனங்கள், வேலையாட்கள், அரசனுக்கு நிகரான வாழ்வு உடையவர்.

உங்களுக்கு ஜாதகத்தில் எத்தனை கிரகங்கள் நட்பு வீடுகளில் உள்ளன என்பதைப் பார்த்துக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்

அன்புடன்
வாத்தியார்
==================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

23.4.25

Astrology: பகை வீடுகளில் அமர்ந்திருக்கும் கிரகங்கள்

Astrology: பகை வீடுகளில் அமர்ந்திருக்கும் கிரகங்கள்

பகை வீடுகளில் அமர்ந்திருக்கும் கிரகங்களால் ஏற்படும் பலன்கள்

இரண்டு கிரகங்கள் பகை பெற்றால் எப்போதும் சண்டை இடுபவராக இருப்பார்.

மூன்று கிரகங்கள் பகை பெற கடின உழைப்பும், ஏழ்மையும் உடையவர்.

நான்கு கிரகங்கள் பகை பெற உறவுகளையும், செல்வத்தையும் இழந்து நிற்பார்.

ஐந்து கிரகங்கள் பகை பெற துன்பங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

இந்த அமைப்பைப் பற்றி, உங்கள் ஜாதகத்தை வைத்துத் தெரிந்து கொள்ளுங்கள்

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------------------

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22.4.25

Astrology: லக்கினத்தைப் பார்க்கும் கிரகங்கள் தரும் பலன்கள்.

Astrology: லக்கினத்தைப் பார்க்கும் கிரகங்கள் தரும் பலன்கள். 
The results of planets aspecting Lagna
-------------------------------------------
லக்கினத்தைப் பார்க்கும் கிரகங்கள் தரும் பலன்கள்.

சூரியன் லக்கினத்தைப் பார்க்க வீரம் மிக்கவர். பெண்களிடம் எளிதில் கோபம் கொள்வார். அரசு உத்தியோகம் அமையும். தந்தையின் சொத்துக்களால் லாபம் உண்டாகும்.

சந்திரன் லக்கினத்தைப் பார்க்க மனிவியின் சொல்லுக்குக் கட்டுப்படுவார். செல்வந்தராக, மன தைரியம் உடையவராக, அமைதியானவராக  இருப்பார்.

செவ்வாய் லக்கினத்தைப் பார்க்க முன்கோபமும், சண்டை, சச்சரவில் பிரியமும், பிரிந்து வாழும் எண்ணமும் உடையவர்.

புதன் லக்கினத்தைப் பார்க்க சிறந்த அறிவாற்ரலும், கலைஞானமும், புகழ், மதிப்பும் உடையவராக இருப்பார்.

குரு லக்கினத்தைப் பார்க்க ஆன்மீக உணர்வும், புகழும், அரசாங்கத் தொடர்பும் உடையவராக இருப்பார்.

சுக்கிரன் லக்கினத்தைப் பார்க்க, பல பெண்களிடம் தொடர்பும், அழகான கவர்ச்சியான தோற்ரமும் வசதி வாய்ப்புக்களும், செல்வமும் உடையவர்.

சனி லக்கினத்தைப் பார்க்க, முன் கோபமும், சுத்தம் இல்லாதவராகவும், அறிவாற்ரல் இல்லாதவராகவும், தீராத நோய் நொடிகள் உடையவராகவும், வயதான பெண்கள் தொடர்புடையவராகவும் இருப்பார்

அன்புடன்,
வாத்தியார்
------------------------------------------------------------

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

21.4.25

Astrology அதிர்ஷ்டமின்மைக்கான யோகம்!


Astrology அதிர்ஷ்டமின்மைக்கான யோகம்!
அரிஷ்ட யோகம்:

Arishta Yoga


அதிர்ஷ்டமின்மைக்கான யோகம்!

’என்ன சார் அதிர்ஷ்டம் இல்லாமல் இருப்பது கூட யோகத்தில் வருமா?” என்று யாரும் கேட்க வேண்டாம். அது அவயோகக் கணக்கில் வரும். லட்சணமான பெண், லட்சணமில்லாத பெண் என்று இருவகையினர் இருப்பதைப்போல அல்லது அரவிந்தசாமி போன்ற தோற்றமுடைய ஆண்கள் அல்லது ஓமக்குச்சி நரசிம்மன் போன்ற தோற்றமுடைய ஆண்கள் இருப்பதைப்போல யோகத்திலும் இரண்டு வகைகள் உண்டு. நல்ல யோகம். அவயோகம்.

அதற்கு உதாரணத்தைக் கவியரசர் பாடலில் இருந்து தருகிறேன்.

”இளமைவரும் முதுமை வரும் உடலும் ஒன்றுதான்
தனிமைவரும் துணையும் வரும் பயணம் ஒன்றுதான்”
இங்கே அவர் குறிப்பிட்டிருக்கும் பயணம், வாழ்க்கைப் பயணம்!

நல்லது கெட்டது கலந்ததுதான் வாழ்க்கை - இரவு பகலைப் போல!

அதைப்போல, அதிர்ஷ்டமும், துரதிஷ்டமும் கலந்ததுதான் வாழ்க்கை. அதிர்ஷ்டமாகட்டும் அல்லது துரதிர்ஷ்டமாகட்டும், சம்பந்தப்பட்ட கிரகங்களின் தசா/புத்திகளில் மட்டுமே பலனைக் கொடுக்கும். உங்கள் மொழியில் சொன்னால் வேலையைக் காட்டும்.

ஒரேயடியாக வாழ்க்கை முழுவதும் அதிர்ஷ்டத்தோடு அல்லது துரதிர்ஷ்டத்தோடு இருந்தவன் இல்லை!

இந்தியாவின்மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர், வாத நோயால் அவதிப்பட்டார் என்பதைக் கேள்வியுற்றால் இதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள். அதீத கோடிஸ்வரர்கள் பலர் பய உணர்வோடுதன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தாங்கள் தாதாக்கூட்டங்களால் அல்லது தீவிரவாதக் கும்பல்களால் கடத்தப் பட்டுவிடுவோமோ எனும் பய உணர்வு அவர்கள் மனதை அரித்துக் கொண்டிருக்கும். அந்த பய உணர்வு, ப்ளாட்பாரத்தில் குடும்பம் நடத்துபவனுக்கு அல்லது அன்றாடம் காய்ச்சிக்குக் கிடையாது. அதை உணருங்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கதை போதும். பாடத்தைப் பார்ப்போம்!

யோகத்தின் பெயர்: அரிஷ்ட யோகம்:

அதற்கான கிரக அமைப்பு: பல அமைப்புக்கள் உள்ளன. அந்த அமைப்புக்களில் ஒன்று இருந்தாலும் ஜாதகத்தில் உள்ள நல்ல தன்மைகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, ஜாதகனுக்குப் பலவிதமான சிரமங்களை அது கொடுக்கும்.

தெரிந்தவரை சில அமைப்புக்களைக் கொடுத்துள்ளேன்.
.....................................................................................
1. 6, 8, 12ஆம் வீட்டுடன் அல்லது அதன் அதிபதியுடன், சேர்க்கை அல்லது பார்வையில் தீய கிரகங்கள் கூட்டு வைத்திருப்பது (Malefic associated with the 6th, 8th and 12th houses or their lords)

அதாவது குரு, சுக்கிரன், சந்திரன், புதன் ஆகிய கிரகங்கள் 6, 8, 12ஆம் வீட்டு அதிபதிகளாக இருந்து அந்த வீட்டை, சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது ஆகிய கிரகங்களில் ஒன்று சேர்க்கை அல்லது பார்வையில் அவர்களுடன் சம்பந்தப்பட்டிருப்பது.
...........................................................
2. நீசமாக உள்ள அல்லது அஷ்டகவர்க்கத்தில் 3ம் அல்லது அதற்குக் கீழாகவும் பெற்றுள்ள சந்திரன் தீய கிரகங்களின் பார்வையைப் பெற்றிருந்தால் அது இந்த அமைப்பிற்குள் வரும்
............................................................
3. ஐந்தாம் வீட்டில் சூரியன், செவ்வாய் அல்லது சனி இருந்தால் அது இந்த அமைப்பிற்குள் வரும்
............................................................
4. எட்டாம் வீட்டில் சூரியன், செவ்வாய் அல்லது சனி இருந்தாலும் அது இந்த அமைப்பிற்குள் வரும்
............................................................
5. பலவீனமாக உள்ள லக்கின அதிபதியை அல்லது சூரியனை தீய கிரகங்கள் பார்த்தால் அது இந்த அமைப்பிற்குள் வரும்
............................................................
6. லக்கினத்தில், சூரியன், செவ்வாய், சனி, ராகு ஆகிய நால்வரில் ஒருவர் இருந்தாலும் அது இந்த அமைப்பிற்குள் வரும்
.............................................................
7. செவ்வாயும், சனியும் இரண்டாம் வீட்டில் இருக்க,ராகு மூன்றாம் வீட்டில் இருப்பது இந்த அமைப்பிற்குள் வரும்
...............................................................
8. நான்காம் வீட்டில் ராகு, 6 அல்லது 8ஆம் வீட்டில் சந்திரன் இருப்பது இந்த அமைப்பிற்குள் வரும்
...............................................................
9. 7ல் செவ்வாய், 8ல் சுக்கிரன், 9ல் சூரியன் இருப்பது இந்த அமைப்பிற்குள் வரும்
..................................................................
10. 7 & 12ஆம் வீடுகளில் தீய கிரகங்கள் இருப்பது இந்த அமைப்பிற்குள் வரும்
........................................................................
11. லக்கினாதிபதி தீய கிரகத்துடன் கூட்டாக இருந்தாலோ அல்லது லக்கினத்திற்கு இரு புறமும் தீய கிரகங்கள் இருந்தாலோ அல்லது 7ஆம் வீட்டில் தீய கிரகங்கள் இருந்தாலோ அது இந்த அமைப்பிற்குள் வரும்
.......................................................................
12. எட்டில் சனி, லக்கினத்தில் சந்திரன் அல்லது சுக்கிரன் (அல்லது சுக்கிரனும், சந்திரனும் சேர்ந்து 6 அல்லது 8ல் இருக்கும் நிலைப்பாடு) அது இந்த அமைப்பிற்குள் வரும்
......................................................................
13. சந்திரனும், புதனும் 6 அல்லது 8ல் இருப்பது இந்த அமைப்பிற்குள் வரும்
+++++++++++++++++++++++++++++++++++++

பலன்: ஒரே சொல்; துரதிர்ஷ்டம் (Misfortune)
+++++++++++++++++++++++++++++++++++++
Duration of the misfortune: இந்த அமைப்பின் பலனால் அவதிப்பட வேண்டிய காலம்: சம்பந்தப்பட்ட கிரகத்தின் தசா/புத்திக் காலம்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++
பாடத்தைப் படிக்கும் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். யாரும் உடனே பலத்த கவலைக்கு ஆளாகிவிட வேண்டாம். பலத்த யோசனையில் மூழ்கிவிட வேண்டாம்.

ஜாதகத்தில் நஷ்டஈடு வழங்கப் பெற்றிருக்கும். அது என்ன என்று பார்த்து அல்லது பார்க்காமல் அமைதி கொள்ளுங்கள். அதை எப்படி உறுதியாகச் சொல்கிறேன் என்றால் அனைவருக்கும் வாங்கி வந்த வரத்தின் மொத்த மதிப்பு (அதாவது ஜாதகத்தின் மதிப்பு) 337தான். அதை நினைவில் வையுங்கள்.

உங்கள் அனைவரையும் ஜோதிடத்தில் மேதை ஆக்குவது என் நோக்கமல்ல! ஜோதிடத்தை அறியத்தருவது மட்டுமே என் நோக்கம். நீங்கள் மேதையாவது உங்கள் கையில் இருக்கிறது.

அன்புடன்
வாத்தியார்,
+++++++++++++++++++++++++++++++++++++++++++===

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!