மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

6.10.25

Astrology: பஞ்சமஹாபுருஷ யோகம்.மாமனித யோகம்! Pancha Mahapurusha Yoga

Astrology: பஞ்சமஹாபுருஷ யோகம்.மாமனித யோகம்!
Pancha Mahapurusha Yoga

மாமனிதர் என்று சிலரைச் சொல்வோம். அதாவது He is a great man என்று சிலரைச் சொல்வோம்.

அதற்கான ஜாதக அமைப்பு என்ன?

பஞ்ச மகாபுருஷ யோகம்!
செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஐந்து கிரகங்களும் ஒருவரின் ஜாதகத்தில் ஒட்டு மொத்தமாக வலுவாக இருந்தால் அது இந்த யோகத்தைக் கொடுக்கும்.

சார் இந்த ஐந்தில் 3 எனக்கு இருக்கிறது. ஆகவே இதில் பாதி எனக்குக் கிடைக்குமா என்று யாரும் கேட்காதீர்கள். இருந்தால் அந்த 5 கிரகங்களுமே வலுவாக இருக்க வேண்டும். இல்லை என்றால் இல்லை!

கிணற்றின் விட்டம் 5 அடி, 3 அடி மட்டும் தாண்டினால் போதுமா என்று பாருங்கள். 5 அடிகளையும் தாண்டினால் மட்டுமே, நீங்கள் கிணற்றின் மறுபக்கம் குதிக்க முடியும். இல்லையென்றால் கிணற்றிற்குள்ளேதான் விழுந்து எழுந்திரிக்க வேண்டும். இதுவும் அப்படித்தான்
------------------------------------------------------
வலு என்றால் என்ன? அந்தக் கிரகங்கள் வலிமையாக (powerful) இருந்து தனித்தனியாக சில யோகங்களைக் கொடுக்கும்.அந்த ஐந்து யோகங்களும் ஜாதகனுக்கு இருக்கும் நிலைமைதான் மகா புருஷ யோகம்.

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4.10.25

Astrology: சரஸ்வதி யோகம் வைரின்ச்ச யோகா Saraswathi Yoga

Astrology: சரஸ்வதி யோகம் வைரின்ச்ச யோகா
Saraswathi Yoga
Vairincha Yoga


சரஸ்வதி யோகம் என்றவுடன், வெள்ளைத்தாமரைப் பூவில் இருக்கும், வீணை செய்யும் ஒலியில் இருக்கும் சரஸ்வதியைப் போல ஜாதகனும் இருப்பான் என்று நினைத்துவிடாதீர்கள். இது அதீதப் படிப்பிற்கான, படித்ததை மனதில் வைப்பதற்கான யோகத்தைக் குறிக்கும்.

ஜாதகன், வேதங்களையும், உபநிடதங்களையும், புராணங்களையும், இன்னும் பல நூல்களையும் கற்றுத் தேர்ந்தவனாக இருப்பான்.

இன்றைய நிலையில் அதை எல்லாம் கற்றுத் தேர்ந்தால், வேலை எங்கே கிடைக்கும்? பூவா’விற்கு என்ன செய்வது? ஆகவே இன்றைய நிலையில் வாழ்க்கையின் உயர்விற்குத் தேவையான பல நூல்களையும் ஜாதகன் கற்றுத் தேர்ந்திருப்பான் என்று வைத்துக் கொள்ளுங்கள். வங்கி மேலான்மை என்றால் அதற்குத் தேவையான நூல்கள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்திருப்பான். கணினி மேலான்மை என்றால் அதற்குத் தேவையான நூல்கள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்திருப்பான். திரைத்துறை என்றால், அதற்குத் தேவையான அத்தனை விஷயங்கள் அனைத்தையும் கற்று வைத்திருப்பான் என்று வைத்துக்கொள்ளுங்கள்.
+++++++++++++++++++++++++++++++++++++++++
யோகத்தின் வடமொழிப் பெயர்: வைரின்ச்ச யோகா (Vairincha Yoga)
Vairinchi means Saraswathi and this is a yoga for learning.

யோகத்தின் அமைப்பு: குருவும், சனீஷ்வரனும் திரிகோணத்தில் இருக்க வேண்டும். லக்கினாதிபதியும் திரிகோணத்தில் இருக்கவேண்டும். அதோடு மூவரும் வலிமையோடு இருக்க வேண்டும்.

இந்த வலிமை (strength) பற்றிப் பலமுறைகள் சொல்லியிருக்கிறேன். ஆகவே அதை மீண்டும் சொல்லி பிளேடு போட விரும்பவில்லை!
+++++++++++++++++++++++++++++++++++++++++
இந்த யோகத்தால் ஜாதகனுக்குக் கிடைக்கக்கூடிய நன்மைகள்

ஜாதகன் அறிவு ஜீவியாக இருப்பான். உங்கள் மொழியில் சொன்னால் மேதையாக இருப்பான். நகைச்சுவை உணர்வு மிக்கவனாக இருப்பான். அற வழியில் நடப்பவனாக இருப்பான். எண்ணற்ற சீடர்கள் இருப்பார்கள். தெய்வ அருள் இருக்கும். எல்லோரும் வணங்கும் நிலையில் இருப்பான். நீண்ட ஆயுளைப் பெற்றிருப்பான். செல்வத்துடன் இருப்பான்.
-------------------------------------------------------
இருப்பதே மூன்று திரிகோணம். அதில் அந்த மூவரும் இருக்க வேண்டுமாம். கொஞ்சம் கஷ்டம்தான். அதாவது நம்மைப் போன்று ப்ளாக்குகளில் எழுதும் அல்லது ப்ளாக்குகளைப் படிக்கும் சாமான்யர்களுக்கு இந்த அமைப்பு இருக்கும் வாய்ப்பு இல்லை.

அந்தக் காலத்தில் ரிஷிகளுக்கும், முனிவர்களுக்கும் இந்த அமைப்பு இருந்திருக்கலாம்.

உங்களில் யாருக்காவது இருந்தால் சொல்லுங்கள். 

அன்புடன்,
வாத்தியார்
----------------------------------

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

3.10.25

Astrology: பாரிஜாத யோகம். Parijatha Yoga

Astrology: பாரிஜாத யோகம். 
Parijatha Yoga


பாரிஜாத மலர் என்றால் தெரியுமா? பலருக்கும் தெரியாது. ஆனால் பவளமல்லி மலர் என்றால் அனைவருக்கும் தெரியும்.
வெண்மையான இதழ்களைக் கொண்டதும் ஆரஞ்சு நிற காம்புகளைக் கொண்டதுமான மலர் பவளமல்லிகை.
தேவலோக மரமான பாரிஜாதமே பூலோகத்தில் பவளமல்லிகையாக வளர்ந்துள்ளது என்கின்றன புராணங்கள்.
இரவில் மலர்ந்து காலையில் உதிர்ந்து விடும் இந்த பூக்கள் இரவு முழுவதும் நல்ல வாசனையைப்  பரப்பும் தன்மை கொண்டது.

திருமாலுக்கு உகந்த மலர் இது. இந்த மலரின் பெயரில் ஒரு யோகம் உள்ளது. அது என்ன யோகம் என்று பார்ப்போம் வாருங்கள்!
--------------------------------------------------------
சுபக்கிரகங்கள் 11ஆம் வீட்டில் இருந்தாலும், அல்லது 11ஆம் வீட்டைப் பார்த்தாலும், அத்துடன் 11ஆம் வீட்டதிபதி அஸ்தமனம் பெறாமல் தன் சொந்த வீட்டிலோ அல்லது உச்ச வீட்டிலோ இருக்கும் நிலையில் இந்த யோகம் ஜாதகனுக்குக் கிடைக்கும். அதாவது பாரிஜாத யோகம் கிடைக்கும்.

பலன்: ஜாதகன் செல்வம் மிக்கவனாகவும், செல்வாக்கு மிக்கவனாகவும் இருப்பான். கற்றவனாக இருப்பான். எப்போதும் விதம் விதமான நல்ல நிகழ்வுகளை அரங்கேற்றுபவனாக இருப்பான். மனைவி மக்கள் என்று பெரிய குடும்பத்தைப் பெற்றவனாக இருப்பான்.

அன்புடன்,
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

1.10.25

Astrology: கிரகங்கள் உச்ச வீட்டில் இருக்கும்போது கிடைக்கும் பலன்கள்!

Astrology: கிரகங்கள் உச்ச வீட்டில் இருக்கும்போது கிடைக்கும் பலன்கள்!

Results of exalted planets

எல்லாம் பொதுப் பலன்கள். ஜாதகத்தின் பிற அமைப்புக்களை வைத்து பலன்கள் மாறுபடும். கூடலாம். குறையலாம் அல்லது இல்லாமல் போகலாம்.

1 ஜாதகத்தில் சூரியன் உச்ச வீடில் இருந்தால்,  ஜாதகன் செல்வந்தனாக இருப்பார். மேன்மையான குணம் உடையவனாக இருப்பார். வீரம் மிக்கவனாக இருப்பார்.

2.சந்திரன் உச்சம் பெற்று இருந்தால், ஜாதகருக்கு  நல்ல உணவு, உடை, ஆபரணங்கள் எப்போதும் கிடைக்கும்!

3. செவ்வாய் உச்சம் பெற்று இருந்தால், ஜாதகர் பகட்டான மனிதராக இருப்பார். வீரம் மிக்கவராக இருப்பார். வேற்று ஊரில் வசிப்பவராக இருப்பார்.

4. புதன் உச்சம் பெற்று  இருந்தால் அறிவாற்றல் மிக்கவராக இருப்பார்.

5. குரு உச்சம் பெற்று இருந்தால், ஜாதகர், கல்வி, புகழ், செல்வம் உடையவராக இருப்பார்.

6. சுக்கிரன் உச்சம் பெற்று இருந்தால், ஜாதகர் இயல், இசை, நாடகம், நடனம் ஆகியவற்றில் ஆர்வம் உடையவராகவும், தேர்ச்சி உடையவராகவும் இருப்பார்.

7.சனி உச்சம் பெற்று இருந்தால் அரசியலில் தலைமை பதவியும், அல்லது அரசு கெளரவ பதவியும், தொழிலாளர் தலைவராகவும் இருப்பார்

அன்புடன்,
வாத்தியார்
=============================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

30.9.25

Astrology: கிரகங்கள் நீச வீட்டில் இருக்கும்போது கிடைக்கும் பலன்கள்!

Results of neecha planets

எல்லாம் பொதுப் பலன்கள். ஜாதகத்தின் பிற அமைப்புக்களை வைத்து பலன்கள் மாறுபடும். கூடலாம். குறையலாம் அல்லது இல்லாமல் போகலாம்.

1. சூரியன் நீசம் அடைந்திருந்தால் ஜாதகர் தன்னைச் சார்ந்தவர்களாலேயே தாழ்ந்த நிலை பெறுவார்.

2. சந்திரன் நீசம் அடைந்திருந்தால் உடல் நலம் பாதிக்கும். ரோகம் உடையவராக இருப்பார்.

3. செவ்வாய் நீசம் அடைந்திருந்தால், மனம் பாதிக்கப்படும். மற்றும் பல தொல்லைகளை சமாளிக்க வேண்டியதிருக்கும்.

4. புதன் நீசம் பெற்றிருந்தால், உறவினரால் பகை ஏற்படும்.

5. குரு நீசமடைந்திருந்தால், புகழ் இல்லாதவராக இருப்பார். ஏழ்மை உடையவராக இருப்பார்.

6. சுக்கிரன் நீசம் பெற்றிருந்தால், கெட்ட எண்ணங்கள் உண்டாகும். மற்றவர்களிடம் பணியாற்றும் நிலை ஏற்படும். மனைவியிடமிருந்து பிரிந்து
இருக்கும் நிலை ஏற்படும்.

7.சனி நீசமடைந்திருந்தால் ஒழுக்கக்குறைபாடு ஏற்படும். தாழ்நிலை ஏற்படும். வறுமையால் வாடும் நிலையும் ஏற்படும்.

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

29.9.25

Astrology: கிரகங்கள் சொந்த வீட்டில் இருக்கும்போது, அதாவது ஆட்சி பலத்துடன் இருக்கும்போது கிடைக்கும் பலன்கள்!

 Astrology: கிரகங்கள் சொந்த வீட்டில் இருக்கும்போது, அதாவது ஆட்சி பலத்துடன் இருக்கும்போது கிடைக்கும் பலன்கள்!

Results of planets in their own house

எல்லாம் பொதுப் பலன்கள். ஜாதகத்தின் பிற அமைப்புக்களை வைத்து பலன்கள் மாறுபடும். கூடலாம். குறையலாம் அல்லது இல்லாமல் போகலாம்.

1. சூரியன் தனது ஆட்சி வீட்டில் இருந்தால், ஜாதகர் அறிவாற்றலும், அழகான, கவர்ச்சியான தோற்றம் உடையவராகவும் இருப்பார்.

2. சந்திரன் சொந்த வீட்டில் இருந்தால், ஜாதகர் தெளிவான மனநிலை உடையவராக இருப்பார்.

3. செவ்வாய் தனது சொந்த வீட்டில் இருந்தால்,  ஜாதகர் செயல் வீரராக இருப்பார். கொள்கைவாதியாக இருப்பார்.

4. புதன் தனது சொந்த வீட்டில் இருந்தால், ஜாதகர் பல கலைகளை அறிந்தவராக இருப்பார். பேச்சற்றல் உடையவராக இருப்பார்.

5. குரு தனது சொந்த வீட்டில் இருந்தால், ஜாதகர் கல்வியாளராக இருப்பார். வேதங்களை, புராணங்களை அறிந்தவராக இருப்பார்.

6. சுக்கிரன் தனது சொந்த வீட்டில் இருந்தால், ஜாதகர் செல்வந்தரகவும், நல்ல செயல்களைச் செய்பவராகவும் இருப்பார்.

7.சனி தனது சொந்த வீட்டில் இருந்தால், ஜாதகர் மகிழ்ச்சி உடையவராகவும், புகழ் உடையவராகவும் இருப்பார்.

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

27.9.25

Astrology: கிரகங்கள் நட்பு வீடுகளில் இருக்கும்போது கொடுக்கும் பலன்கள்!

Astrology: கிரகங்கள் நட்பு வீடுகளில் இருக்கும்போது கொடுக்கும் பலன்கள்!

எல்லாம் பொதுப் பலன்கள். ஜாதகத்தின் பிற அமைப்புக்களை வைத்து பலன்கள் மாறுபடும். கூடலாம். குறையலாம் அல்லது இல்லாமல் போகலாம்.

1.சூரியன் நட்பு வீடுகளில் இருந்தால் ஜாதகருக்கு நல்ல நண்பர்களைக் கொடுப்பார். ஜாதகர் தர்ம குணம் உடையவராக இருப்பார்.

2. சந்திரன் நட்பு ராசிகளில் இருந்தால், ஜாதகர் மகிழ்ச்சியானவராகவும், புகழ் பெறுபவராகவும் இருப்பார்.

3. செவ்வாய் நட்பு ராசிகளில் இருந்தால், ஜாதகர் தனக்கு விருப்பமான நபர்களை ஆதரிப்பவராக இருப்பார்.

4. புதன் நட்பு ராசிகளில் இருந்தால், ஜாதகர், நகைச்சுவை உணர்வு உடையவராக, செயல் வீரராக, செல்வந்தராக இருப்பார்.

5. குரு நட்பு வீடுகளில் இருந்தால், ஜாதகர் பல நல்ல காரியங்களை செய்பவராக இருப்பார்.

6. சுக்கிரன் நட்பு வீடுகளில் இருந்தால், ஜாதகர் நல்ல நண்பர்களை உடையவராக இருப்பார். செல்வம் உடையவராக இருப்பார்.

7. சனி நட்பு வீடுகளில் இருந்தால், ஜாதகர் மற்றவர்களை நம்பி வாழ்வார்.

அன்புடன்,
வாத்தியார்
================================================


வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

26.9.25

Astrology: கிரகங்கள் பகை வீடுகளில் இருக்கும்போது கொடுக்கும் பலன்கள்!

Astrology: கிரகங்கள் பகை வீடுகளில் இருக்கும்போது கொடுக்கும் பலன்கள்!

கிரகங்கள் பகை வீடுகளில் இருக்கும்போது கொடுக்கும் பலன்கள்

எல்லாம் பொதுப் பலன்கள். ஜாதகத்தின் பிற அமைப்புக்களை வைத்து பலன்கள் மாறுபடும். கூடலாம். குறையலாம் அல்லது இல்லாமல் போகலாம்.

1.சூரியன் பகை வீடுகளில் இருந்தால், ஜாதகர் ஏழ்மை நிலையிலும், பெண் ஆசை உடையவராகவும் இருக்க நேரிடும்.

2. சந்திரன் பகை ராசிகளில் இருந்தால், ஜாதகர் அழகற்றவராகவும், இருதய நோய் உடையவராகவும் இருப்பார்.

3. செவ்வாய் பகை ராசிகளில் இருந்தால், ஜாதகர் ஏழ்மையில் வாழ நேரிடும். பகைவர்களால் துன்பமும், அதிர்ஷ்டமற்ற நிலையும் உண்டாகும்.

4. புதன் பகை ராசிகளில் இருந்தால், ஜாதகர், அறிவாற்றல் இல்லாதவராக, பகைவரால் தொல்லை அடைபவராக  இருப்பார்.

5. குரு பகை வீடுகளில் இருந்தால், ஜாதகர் நியாயம் இல்லாதவராக, ஏழ்மை உடையவராக, அரக்க குணம் கொண்டவராக இருப்பார்.

6. சுக்கிரன் பகை வீடுகளில் இருந்தால், ஜாதகர் துன்பம் அனுபவிப்பவராக, கீழான பணி செய்பவராக, பல கெடுதலான காரியங்களைச் செய்பவராக  இருப்பார்.

7. சனி பகை வீடுகளில் இருந்தால், ஜாதகர் தூய்மையற்றவராக, தொல்லைகள் உடையவராக, பல வியாதிகளால் துன்பம் அடைபவராக இருப்பார்.

அன்புடன்,
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

25.9.25

Astrology: களத்திரகாரகன். திருமணத்தை செய்வதற்கு அதிகாரம் உள்ளவன்.

Astrology: களத்திரகாரகன். திருமணத்தை செய்வதற்கு அதிகாரம் உள்ளவன். 
The authority for Marriage


எல்லோருக்கும் ஒரு குழப்பம் உண்டு. களத்திரகாரகன் , அதாவது Authority for marriage யார்? ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியான களத்திரகாரகனா? அதாவது ஆண்களுக்கு சுக்கிரனும், பெண்களுக்கு செவ்வாயையும் எடுத்துக்கொள்ள வேண்டுமா?

அதெல்லாம் ஒன்றும் இல்லை!

Authority என்பவர் ஒருவர்தான் இருக்க முடியும். தந்தைக்கு அத்தாரிட்டி சூரியன். தாய்க்கு அத்தாரிட்டி சந்திரன் என்று இருப்பதுபோல களத்திரத்திற்கு, அதாவது திருமணத்திற்கு அத்தாரிட்டி சுக்கிரன் மட்டும்தான்!

வாழ்க்கையில் உள்ள எல்லா சுகங்களுக்கும், படுக்கை சுகம் உட்பட (அதாவது ஆணுக்கு பெண் சுகமும், பெண்ணிற்கு ஆண் பரிசமும்) எல்லா சுகங்களுக்கும் உரியவன் சுக்கிரன்தான். ஆகவே அவன்தான் திருமணம் செய்து வைக்கும் அதிகாரமும் கொணடவனாவான்.

பெண்களுக்கு மட்டும் ஒரு துணைக் காவடியும் உண்டு. மெயின் காவடியை சுக்கிரன் தூக்குவான். துணைக் காவடியை குரு பகவான் தூக்குவார். அதனால்தான் பெண்களுக்கு மஞ்சள் கயிற்றைத் தாலிக் கயிறாக அணிவிக்கிறோம். மஞ்சள் நிறமுடைய தங்கத்தில் திருமாங்கல்யத்தைச் செய்கிறோம். பெண்களைத் தினமும் மஞ்சள் பூசிக் குளி என்கிறோம்.தங்கம் வாங்க முடியாத ஏழைப் பெண்களுக்கு விரளி மஞ்சளை, மஞ்சக் கயிற்றில் கட்டி அணிவிக்கின்றோம். இவை எல்லாம் குருபகவானை மகிழ்விப்பதற்கும், அவரின் ஆசீகளைப் பெறுவதற்கும்தான்.

பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினை இருந்தால் மட்டும் செவ்வாயைக் கூப்பிட்டுப் பார்ப்போம். அதுபோல செவ்வாய் தோஷத்திற்கும் அவர் வந்து நிற்பார். அவரின் பங்களிப்பு அவ்வளவுதான்

விளக்கம் போதுமா?

அன்புடன்
வாத்தியார்
===============================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

23.9.25

Astrology: மகிழ்ச்சியான மண வாழ்க்கை

Astrology: மகிழ்ச்சியான மண வாழ்க்கை 

பள்ளிக்கூடத்தில் இருப்பதுபோல சிலபஸ் எல்லாம் கிடையாது
முக்கிய விதிகள், அலசல் பாடங்கள், உதாரண ஜாதகங்கள் என்று பாடங்கள் கலவையாக இருக்கும்.
படிப்பதற்கு சுவையாக, வழக்கம்போல எனது நடையில் (எளிய நடையில்) எழுதிக்கொண்டுள்ளேன்!
தொடர்ந்து படியுங்கள்.
சந்தேகம் வராது. வந்தால், பாடம் சம்பந்தமான சந்தேகத்தை மட்டும் கேளுங்கள்
உங்கள் ஜாதகத்தோடு சம்பந்தப் படுத்திக் கேட்காதீர்கள்
முழுப்பாடங்களையும் படித்த பிறகு உங்கள் ஜாதக சம்பந்தமான மேட்டர்களை அலசிப் பார்க்கும் அறிவு உங்களுக்கே ஏற்பட்டுவிடும்

நான் எனக்குத் தெரிந்ததை மட்டுமே சொல்லித் தருகிறேன்
தெரிந்ததை மட்டுமே எழுதுகிறேன்
உங்களை ஜோதிடன் ஆக்கவேண்டும் என்பது என் நோக்கமல்ல. முதலில் நானே தொழில்முறை ஜோதிடன் அல்ல!
ஜோதிடத்தில் நான் கற்றுணர்ந்தவற்றை, உங்களுக்குச் சொல்லித் தருகிறேன். அவ்வளவுதான்
நீங்கள் நான் சொல்லிக் கொடுப்பதை மனதில் வாங்கிக் கொண்டு, உங்கள் ஜாதகத்தையும், உங்கள் வீட்டில் உள்ளவர்களின் ஜாதகத்தையும், உங்கள்
நண்பர்களின் ஜாதகத்தையும், அலசிப்பார்க்கும் அளவிற்கு மேன்மையுற்றால், அதுவே போதும்.
நான் சொல்லித் தரும் நோக்கமும் அதுதான்.
எண்ணிக்கை முக்கியமல்ல. நான் சொல்லித் தருபவர்களில் ஒரு பத்துப் பேர் தேர்ச்சியுற்றால் போதும். அதுவே எனது அரிய நேரத்தை செலவழித்து

நான் உங்களுக்குப் பாடம் நடத்துவதற்குக் கிடைத்த பயனாகும்.

இன்றையப் பாடம்: மகிழ்ச்சியான மண வாழ்க்கை

அக்காலத்தில், ஜாதகம் பார்த்து நடந்த திருமணங்கள் குறைவே! நெருங்கிய உறவுகளில் உள்ள வரன்களை, ஒருவருக்கொருவர் மனப் பொருத்தம்

இருந்தால் போதும் என்று மணம் செய்துகொள்வார்கள். அத்தை வீடு, அம்மான் வீடு (மாமா வீடு) என்று திருமணங்கள் நடைபெறும். அல்லது
உறவுக்காரர்களில் சம்பந்தம் செய்யக்கூடிய உறவுகளைத் தேர்ந்தெடுத்து தங்கள் பிள்ளைகளுக்கு மணம் முடித்துவிடுவார்கள்.

பெண்ணிற்கு 18 வயதிலும், பையனுக்கு 21 வயதிலும் திருமணத்தை செய்துவிடுவார்கள்.

எழுபது ஆண்டுகளுக்கு முன்பு, நிலமை, வேறு விதமாக இருந்தது. அப்போதெல்லாம் பால்ய விவாகம். அதாவது குழந்தைத் திருமணம்.
என் பெற்றோருக்கு நடந்ததும் பால்ய விவாகம்தான். என் அன்னைக்கு அப்போது 11 வயதுதான். என் தந்தைக்கு 13 வயது. செல்வந்தர் வீடுகள். இரு
வீட்டாருமே நெருங்கிய உறவுக்காரர்கள். அப்போதெல்லாம் 6 நாள் கல்யாணமாம். அந்த 6 நாட்களுக்கும், உறவினர்கள் அனைவருக்கும் ஜாம்
ஜாமென்று விருந்தோம்பல் உண்டாம். என் பெற்றோர்கள் திருமணத்திலும் அவ்வாறு நடந்ததாம்!

ஜாதகம் எல்லாம் பார்க்கும் வழக்கம் இல்லாத காலம் அது. திருமணத்திற்குப் பிறகு தம்பதிகளுக்குள் பிரச்சினை ஏற்பட்டால், இரு வீட்டிலும் உள்ள
பெரியவர்கள் கலந்து பேசி அதை சரி செய்திருக்கிறார்கள்.

இப்போது நிலைமை அப்படியல்ல! எல்லாம் தலை கீழாக மாறியுள்ளது.

இன்றைய தேதியில், பத்திரிக்கைக்காரர்கள், சனி, பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு & கேது பெயர்ச்சி என்று ஒவ்வொரு பெயர்ச்சிக்கும் மலர்
(இணைப்புப் புத்தகங்களைப்) போட்டு வருவதாலும், மற்றும் நாள், வார, மாத ராசி பலன்களை எழுதிவருவதாலும், மக்களிடம் ஒரு விழிப்பு உணர்வு
ஏற்பட்டுள்ளது. எல்லோருக்கும் ஜாதகத்தின் மேலும் ஜோதிடத்தின் மேலும் ஒரு பிடிப்பு ஏற்பெற்றுள்ளது. அனைவரும் பொருத்தம் பார்த்து திருமணம்
செய்யும் நிலைமைக்கு ஆளாகிவிட்டார்கள்.

பொருத்தமான ஜாதகம் உடைய வரனுக்கு அலைபவர்கள் சிலரை எனக்குத் தெரியும்.

அவர்களிடம் நான் சொல்லுவேன்:

”ஜாதகம் பொருந்தினால் பையனைப் பிடிக்காது. பையனைப் பிடித்தால் ஜாதகம் பொருந்தாது. ஆகவே முருகப் பெருமானிடம் பாரத்தைக் கொடுத்து
விட்டு ஜாதகம் பார்க்காமல் திருமணத்தை செய்து வையுங்கள்” என்று கூறுவேன்

ஜாதகம் பார்த்துப் பண்ணுவதால் வருவிருக்கின்ற கேடை (விதியைத்) தடுத்து நிறுத்த முடியுமா? நடக்கவிருப்பதை, நடக்கவிடாமல் செய்ய முடியுமா?

நடக்கவிருப்பது எப்படியும் நடந்தே தீரும்!

ஜாதகப் பொருத்தம் பார்த்து செய்த திருமணங்களில் பல திருமணங்கள் ஊற்றிக் கொண்டுள்ளன. அவர்களை எல்லாம் நான் அறிவேன்.

அதற்கு என்ன காரணம்?

ஜாதகத்தின் மேல் தவறா? அல்லது ஜோதிடத்தின் மேல் தவறா? அல்லது ஜோதிடரின் மேல் தவறா?

ஜோதிடர், 10 பொருத்தங்களைப் பார்ப்பார். சரியாக இருக்கும். தசா சந்திப்பு ஜோடிகளுக்குள் இருக்ககூடாது என்பதால அதையும் பார்ப்பார்,

அதுவும் சரியாக இருக்கும். செவ்வாய் தோஷம் இருக்கிறதா? இருந்தால் இருவருக்கும் இருக்கிறதா என்றும் பார்ப்பார். அதுவும் பொருந்தி வரும். அது
போன்று பெண் வீட்டார் கொண்டு வரும் ஐந்து அல்லது ஆறு ஜாதகங்களை அலசி, அவற்றுள் ஒன்றைத் தெரிவு செய்து கொடுப்பார்.

அவரால் முடிந்தது அதுதான்.

தனிப்பட்ட முறையில், பெண்ணின் ஜாதகத்தையும், பையனின் ஜாதகத்தையும் தனித்தனியாக அலசி அவைகளுள் உள்ள குறைபாடுகளை அவர்பார்க்க மாட்டார். அல்லது அப்படிப் பார்ப்பதற்கான நேரம் அவருக்கு இருக்காது.

அவ்வாறு அலசிப் பார்க்காத ஜாதகங்களில் உள்ள குறைகள் விஸ்வரூபம் எடுக்கும்போது பிரச்சினைகள் உண்டாகும்.
---------------------------------------------------------------------------
மகிழ்ச்சியான மண வாழ்க்கைக்கு உரிய முக்கியமான ஜாதக விதிகளில் சில!

1. லக்கினாதிபதியும், ஏழாம் அதிபதியும் ஒருவருக்கொருவர் பகையான இடத்தில் அமரக்கூடாது. 6/8 அல்லது 1/12 நிலைகளில்
அமர்ந்திருக்கக்கூடாது

உதாரணமாக கன்னி லக்கினத்திற்கு அதிபதி புதன். அந்த லக்கினத்திற்கு 7ஆம் அதிபதி குரு. புதன்  9ல் அதாவது ரிஷபத்திலும், குரு 4ல் அதாவது
தனுசுவிலும் இருந்தால் ஒருவருக்கொருவர் 6/8 நிலைப்பாடு. குருவிற்கு ஆறில் புதன். புதனுக்கு எட்டில் குரு. அவ்வாறு இருப்பது தீமையானது.

2. களத்திரகாரகன் சுக்கிரன் வக்கிரகதியிலோ அல்லது பாப கர்த்தாரி யோகத்திலோ இருக்கக்கூடாது.

3. ஏழாம் வீடும் அதன் அதிபதியும் பாபகர்த்தாரி யோகத்தில் சிக்கியிருக்கக்கூடாது.

பாப கர்த்தாரி யோகம் என்றால் என்னவென்று தெரியுமல்லவா? அதைப் பற்றி பலமுறை சொல்லியுள்ளேன். எனது பாடங்களை விடாமல் தொடர்ந்து
படிப்பவர்களுக்கு அது தெரியும்

4. அஷ்டகவர்க்கத்தில் 7ஆம் வீட்டில் இருவருக்கும் 25 பரல்களுக்கு மேல் இருப்பது நல்லது. ஒருவருக்கு 20 பரல்களோ அல்லது அதற்கும்

குறைவான பரல்களோ இருப்பது நல்லதல்ல

இவைகள் எல்லாம் பொது விதிகள். ஆனால் முக்கியமான விதிகள். இவற்றை மனதில் வையுங்கள்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------------------------------

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22.9.25

Astrology: கல்வியின் மேன்மை

Astrology: கல்வியின் மேன்மை 

கல்வியைப் பற்றிச் ஜோதிடம் சொல்வதென்ன?

    ”கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
    மாடல்ல மற்றை யவை”
          - திருக்குறள்

    ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும், கல்வியைத் தவிர மற்றப் பொருள்கள் (அத்தகைய சிறப்புடைய) செல்வம் அல்ல - மு.வ உரை. கல்வியே அழிவு இல்லாத சிறந்த செல்வம்; பிற எல்லாம் செல்வமே அல்ல - சாலமன் பாப்பையா உரை
-----------------------------------------------
மாடு என்றால், தமிழில் செல்வம் என்ற பொருளையும் கொடுக்கும். கல்வியைத் தவிர மற்றதெல்லாம் சிறந்த செல்வம் இல்லை என்கிறார்கள். சரி, நாமும் ஒப்புக்கொள்வோம்.

அத்தகைய சிறந்த செல்வம் அனைவருக்கும் கிடைக்கிறதா என்றால், இல்லை என்றே சொல்ல வேண்டும். கல்வி வியாபாரமாகிவிட்ட சூழ்நிலையால் ஏற்பட்டுள்ள கொடுமை அது. அதை நாம் பேசி ஒன்றும் ஆகப் போவதில்லை. ஆகவே அதை விடுத்து, ஜாதகப்படி கல்வி கிடைக்க என்ன அமைப்பு என்பதை மட்டும் பார்த்து நாம் நம் மனதை சாந்தப் படுத்திக்கொள்வோம்!
----------------------------------------------
இயற்கையாகவே ஒருவருக்குத் தடையற்ற கல்வி கிடைப்பதற்கு லக்கினாதிபதி ஜாதகத்தில் நன்றாக இருக்க வேண்டும். லக்கினாதிபதி கேந்திரங்களிலோ (1,4,7,10th houses), அல்லது திரிகோணங்களிலோ (1,5,9th houses) அல்லது 2 அல்லது 11ஆம் வீட்டிலோ சென்று அமர்ந்திருப்பது நன்மை பயக்கும். அதைவிடுத்து லக்கினாதிபதி 6 அல்லது 8 அல்லது 12ம் வீடுகளில் அமர்ந்திருப்பது நல்லதல்ல. ஜாதகன் கஷ்டப்படப் பிறந்தவன். அந்தக் கஷ்டங்களில் முறையான கல்வி கிடைக்காமையும் சேர்ந்து கொள்ளும்.

நான்காம் வீடுதான் கல்விக்கான வீடு. நான்காம் வீடுதான் தாய்க்கான வீடு. தாய்தான் ஒரு குழுந்தைக்கு முதல் ஆசான். என்னவொரு ஒற்றுமை பாருங்கள். தன் தாயிடமிருந்துதான் ஒரு குழந்தை நிறையக் கற்றுக்கொள்கிறது. நான்காம் வீடுதான் ஜாதகனுக்கு அடிப்படைக் கல்விக்கும், பட்டப் படிப்புவரை உள்ள கல்விக்கும் உரிய இடமாகும்.

ஐந்தாம் வீடு அறிவிற்கான இடமாகும். It is the place for keen intelligence. ஒருவன் விஞ்ஞானம் மருத்துவம் போன்ற துறைகளில் உயர்கல்வி பெற ஐந்தாம் வீடும் நன்றாக இருக்க வேண்டும்.
--------------------------------------------------
கல்வி பெறுவதற்குத் தடை ஏற்படுத்தும் ஜாதக அமைப்புக்களைக் கீழே கொடுத்துள்ளேன். அவற்றைக் கவனமாகப் பாருங்கள். அவற்றில் எது இருந்தாலும் ஜாதகன் கல்வி மற்றும் உயர் கல்வியைப் பெற முடியாது!

1. இரண்டாம் வீட்டின் அதிபதி, நான்காம் வீட்டின் அதிபதி, ஐந்தாம் வீட்டின் அதிபதி ஆகியவர்களில் எவரும் நீசம் அடைந்திருக்கக்கூடாது.

2. 2ம், 4ம் & 5ஆம் வீடுகள் பாபகர்த்தாரி யோகத்தில் சிக்கி இருக்ககூடாது.

3. அதேபோல்  2, 4 & 5ஆம் வீட்டின் அதிபதிகளும் பாபகர்த்தாரி யோகத்தில் சிக்கி இருக்ககூடாது.

4. இரண்டாம் வீட்டில் சனி அல்லது ராகு அல்லது அவர்கள் இருவரும் சேர்ந்து அமர்ந்திருக்கக்கூடாது

5. புதன் மேஷம் அல்லது விருச்சிகத்தில் போய் அமர்ந்திருக்ககூடாது.

6. புதன் நீசமடைந்திருக்ககூடாது.

7. புதன் செவ்வாயின் பார்வையில் இருக்கக்கூடாது.

8. குரு நீசம் பெற்றிருக்கக்கூடாது.

9. சூரியன் நீசமடைந்திருக்கக்கூடாது.

மேற்கூறியவை அனைத்தும் பொதுவிதிகள். சுபக்கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வையை வைத்து இந்த அமைப்பினால் ஏற்படும் கெடுதல்கள் குறையலாம். அல்லது இல்லாமல் போகலாம்.

அன்புடன்
வாத்தியார்
=========================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

21.9.25

Astrology: சொந்த ஊரில் வசிக்கும் பாக்கியம்

Astrology: சொந்த ஊரில் வசிக்கும் பாக்கியம் 

தலைப்பு: சொந்த ஊர்

சொந்த ஊர் என்றாலே எல்லோருக்கும் ஒரு மயக்கம்தான். சொந்த ஊரில் வசிப்பதே ஒரு பாக்கியம்தான்

ஆனாலும் அது நம் கையிலா இருக்கிறது? படித்து முடித்தவுடன், பலர் வேலை வாய்ப்பின் காரணமாக வெளியூருக்குச் சென்று வசிக்க நேரிடுகிறது. சிலருக்கு வெளிநாடுகளுக்குச் சென்று வசிக்கும்படியான சூழ்நிலை உண்டாகிவிடுகிறது.

அங்கே சென்று, அதாவது வெளியூர் அல்லது வெளி நாடுகளுக்குச் சென்று, எவ்வள்வு பொருள் ஈட்டினாலும் அல்லது எத்தனை வசதிமிக்க வாழ்க்கை வாழ்ந்தாலும், மனதிற்குள் சொந்த ஊரைப் பற்றிய ஏக்கம் இருக்கத்தான் செய்யும். சிலர் அதை வெளிப்படுத்துவார்கள். சிலர் தங்கள் உள்ள உணர்வுகளை வெளிப் படுத்தாமல் கமுக்கமாக இருப்பார்கள்.

“சொர்க்கமே என்றாலும் அது நம்மஊரைப் போலவருமா
அடஎந்நாடு என்றாலும் அது நம்நாட்டுக் கீடாகுமா ”

என்று ஒரு அற்புதமான பாடல் மூலம் இளையராஜா அதை பலரும் அறியப் பாடலாகச் சொன்னார்.

மத்திய வயதில் வெளி நகரங்களில் அல்லது வெளிநாடுகளில் உள்ள சொகுசான வாழ்க்கையால் பலர் தங்களை மறந்து அங்கே இருந்தாலும், வயதான காலத்தில், சொந்த ஊர் ஏக்கம் பலருக்கும் வந்து விடும்.

தங்கள் சொந்த ஊருக்குப் பக்கத்தில் இருப்பவர்கள், மாதம் ஒருமுறையாவது தங்கள் ஊருக்கு வந்து விட்டுப் போவார்கள். வட மாநிலங்களில் இருப்பவர்கள் வருடம் ஒருமுறையாவது வந்து விட்டுப்போவார்கள். சிங்கப்பூர், துபாய், அல்லது அமெரிக்கா போன்ற தூர தேசங்களில் இருப்பவர்கள், இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது வந்து விட்டுப் போவார்கள்.

ஆனால் வயதானவர்கள், அதாவது 60 அல்லது 70 வயதைத் தாண்டியவர்களுக்கு, தாங்கள் வசிக்கும் நாட்டை விட்டு அல்லது வசிக்கும் ஊரை விட்டுத் திரும்பி வந்து, தங்கள் சொந்த ஊரிலேயே செட்டில் ஆகும் விருப்பம் இருக்கும். ஆனால் சிலருக்கு மட்டுமே அந்த வாய்ப்புக் கிடைக்கும். பலருக்கும் அது கிடைக்காமல் போய்விடும்.

வயதான காலத்தில், வீட்டில் உள்ள மற்ற உறுப்பினர்கள், அதாவது மனைவி மற்றும் மக்கள் (பிள்ளைகள்) அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால் என்ன செய்ய முடியும்?

ஜாதகப்படி அதற்கான வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே அது சாத்தியமாகும்.

அதைச் சற்று அலசுவோம்

-------------------------------------------------------------
லக்கினாதிபதி, 12ல் இருந்தால் ஜாதகனை வெளியூருக்குத் தள்ளிக் கொண்டு போய் விடுவார். நம்ம ஜாதகரும், தில்லியில் அரசு வேலையில் பல்லாண்டுகள் இருந்தவர் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் இருந்தவர். 1996ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்றதும், தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள தனது சொந்த ஊருக்கு வந்து செட்டிலாக முயன்றார். அது உடனடியாக நடக்கவில்லை. அவருடைய மனைவியும் மக்களும் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. அவர்களுடன் அவரும் தொடர்ந்து தில்லியிலேயே இருக்கும்படி ஆயிற்று. அடுத்த பத்தாண்டுகளுக்குப் பிறகு அவரது ஏக்கம் தீர்ந்தது. சொந்த ஊருக்குத் திரும்பிவந்து செட்டிலானார்.

1. லக்கினாதிபதி செவ்வாய் 12ல் உடன் பூர்வ புண்ணியாதிபதி சூரியன். செவ்வாய் ஜாதகத்தில் வர்கோத்தமம் பெற்றுள்ளார்.
2. பூர்வபுண்ணிய அதிபதி சூரியனும் லக்கினத்திற்குப் பன்னிரெண்டில்

அந்த அமைப்பால், அவர் சொந்த ஊரைவிட்டு தூரமான இடத்திற்குச் சென்று ஜீவிக்க வேண்டியதாயிற்று. அதே அமைப்பு அப்படித் தள்ளிக்கொண்டு சென்றவனைச் சட்டென்று சொந்த் மண்ணிற்குத் திரும்பிச் செல்ல அனுமதிக்காது. அவன் ஜீவனம் செய்த ஊரிலேயே இருக்கும்படியாகிவிடும்.

ராகு கொடி காட்டினால்தான் இடமாற்றங்கள் ஏற்படும். Jupiter is the ruling planet for distant places. இந்த ஜாதகத்தில் குரு 9ற்கு உரியவர். அத்துடன் அவர் ஒன்பதாம் வீட்டிலேயே இருக்கிறார். ஆனால் அவருடன் கூட்டாக இருக்கும் ராகு, (குரு திசை ராகு புத்தியில்) தன்னுடைய புத்தியில் அவருக்கு இட மாற்றம் கொடுத்து சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தான்

விளக்கம் போதுமா?

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

20.9.25

Astrology: இயற்கையான சுபக்கிரகங்களும், இயற்கையான தீய கிரகங்களும்!

Astrology: இயற்கையான சுபக்கிரகங்களும், இயற்கையான தீய கிரகங்களும்! 

நீங்கள் நல்லவரா அல்லது கெட்டவரா?

நமக்கு நாம் எப்போதும், எந்த நிலையிலும் நல்லவர்தான். நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் நமக்கு நியாயமாகவும், நன்மை உடையதாகவும்தான் தெரியும்!

ஆனால் நாம் நல்லவரா அல்லது கெட்டவரா என்பதை மற்றவர்கள்தான் சொல்ல வேண்டும். அல்லது மற்றவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்!

நல்லவர்கள் அல்லது கெட்டவர்கள் என்பது இரண்டு வகைப்படும். இயற்கையாகவே நல்லவர்கள் அல்லது இயற்கையாகவே கெட்டவர்கள் என்று இரண்டுவகைப் படுத்தலாம். அடிப்படைக் குணங்கள் எல்லாம் நல்லவையாக இருந்தால், இயற்கையாகவே நல்லவர் என்று எடுத்துக்கொள்ளலாம்.

ஜோதிடத்தில், கிரகங்களை அவ்வாறு வகைப்படுத்தியுள்ளார்கள்.

இயற்கையாகவே நல்ல கிரகங்கள். அதாவது சுபக்கிரகங்கள்.

குரு, சுக்கிரன், வளர்பிறைச் சந்திரன், புதன் ஆகிய 4 கிரகங்களும் இயற்கையாகவே நல்ல கிரகங்கள். ஒருவருடைய ஜாதகத்தில் அவைகள் வலிமையாக இருக்க வேண்டும்

இயற்கையாகவே தீய கிரகங்கள்

சனி, செவ்வாய், ராகு & கேது ஆகிய 4 கிரகங்களும்  இயற்கையாகவே தீய கிரகங்கள் ஆகும்! தீய கிரகத்துடன் சேரும் புதன் நன்மையைச் செய்வதில்லை.அதுவும் தீயதாகவே மாறிவிடும்!


அன்புடன்,
வாத்தியார்
===========================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

19.9.25

Astrology: துவஜ யோகம்! (கொடி பிடிக்கும் யோகம்)

Astrology: துவஜ யோகம்! (கொடி பிடிக்கும் யோகம்) 

Lesson on Yoga: Dhwaja Yoga:

துவஜ எனும் வடமொழிச் சொல்லிற்குக் கொடி (flag) என்று பெயர். கொடி யோகம் என்று இதனை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். கொடி யோகம் என்றால் கொடி பிடித்துக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாகப் போகும் யோகம் அல்ல! கொடியை உருவாக்கித் தலைமை தாங்கும் அல்லது தலைமை ஏற்கும் யோகம்.

இந்த யோகத்துடன் ஒரு குழந்தை பிறந்தால், நாட்டிற்குத் தலைமை தாங்கும் யோகத்துடன் அந்தக் குழந்தை

பிறந்துள்ளது என்று நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். தலைமை தாங்குவது என்பது எந்த அளவிற்கு (Level) வேண்டுமென்றாலும், ஜாதகத்தின் மற்ற அம்சங்களைப் பொறுத்து இருக்கலாம்.
..........................................................................

யோகத்தின் அமைப்பு: ஜாதகத்தில், தீய கிரகங்கள் எல்லாம் எட்டாம் வீட்டில் இருக்க, சுபக்கிரகங்கள் எல்லாம் லக்கினத்தில் இருக்க வேண்டும்.

தீய கிரகங்கள்: செவ்வாய், சனி, ராகு அல்லது கேது
சுபக்கிரகங்கள்: குரு, சுக்கிரன், சந்திரன்

பலன்: ஜாதகன் தலைவனாக இருப்பான். அவன் உத்தரவை நிறைவேற்றப் பலர் காத்துக்கொண்டிருப்பார்கள்.

A planetary combination formed by all the malefic placed in the 8th house and
all benefices in the ascendant. Under this combination, a leader is born
==================================================
சார், நான் மேஷ லக்கினக்காரன் செவ்வாய் எப்படி எனக்குத் தீய கிரகம் ஆகும்? அல்லது நான் மகர லக்கினக்காரன், சனி எப்படி எனக்குத் தீய கிரகம் ஆகும்? என்று யாரும் கேட்க வேண்டாம். ரிஷிகள் இந்த யோகத்திற்கான விதி முறைகளைக் கூறியுள்ளபோது அதை அப்படியே எடுத்துக் கொள்வது நல்லது! மாட்டேன் என்றால் - It is your problem and it is not concerned with astrology!

அன்புடன்
வாத்தியார்!
----------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

17.9.25

Astrology: துர் யோகம் (கெட்ட யோகம்)

Astrology: துர் யோகம் (கெட்ட யோகம்) 
கெட்ட யோகம்!
Lessons on Yogas: Dur Yoga: Bad yoga: கெட்ட யோகம்!

”சார், உப்பு விற்கப்போனால் மழை பெய்கிறது; மாவு விற்கப்போனால் காற்று அடிக்கிறது.இரண்டையும் விட்டு விட்டு, குடை விற்கப்போனல், அங்கே எனக்குப் போட்டியாக பத்துப் பேர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். என்ன செய்வது? நான் ஜென்மம் எடுத்த நேரம் அப்படி! எல்லாம் என் தலை எழுத்து!” என்று தீராத மனக் குறை உள்ளவர்களைப் பார்க்கிறோம்.

ஒரு மனிதன் எதை வேண்டுமென்றாலும் சமாளிப்பான், தாங்கிக் கொள்வான். ஆனால் இன்றைய பொருளாதார சூழ்நிலையில் பணம் இன்மையை (வருமானம் இல்லாத நிலைமை அல்லது தேவையான அளவிற்குப் பணம் கிடைக்காத நிலைமை) மட்டும் தாங்கிக் கொள்ள முடியாது.

பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால், யாருக்கும் உன்னைத் தெரியாது என்பார்கள். யாருக்கும் தெரியாவிட்டால் போகிறது. அன்றாட செலவிற்கு எங்கே போவது?

இன்றைய சூழ்நிலையில், மனிதர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்

1. பணத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் அல்லாடுபவர்கள் முதல் வகை!
2. பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் குழம்புபவர்கள் இரண்டாவது வகை!

பணத்தை வைத்திருப்பவனுக்குப் பய உணர்வு மிகுந்திருக்கும். அதை எப்படிக் காப்பாற்றுவது எனும் பய உணர்வு. அல்லது தன்னை எப்படிக் காப்பாற்றிக் கொள்வது எனும் பய உணர்வு. தீவிரவாதிகள் அல்லது தாதாக்கள் கடத்திக் கொண்டுபோய்விடாமல் இருக்க வேண்டுமே எனும் பய உணர்வு.

அது இல்லாதவனுக்குக் கவலை. ஒரே ஒரு கவலை. அது இல்லையே எனும் கவலை. அன்றாடத் தேவைகளை எப்படி சமாளிப்பது எனும் கவலை!

ஏன் இந்த நிலைமை? ஜாதகப்படி அதை அறிந்து கொள்ளும் வாய்ப்பு இருக்கிறதா?

இருக்கிறது! அதுதான் இன்றையப் பாடம்!
++++++++++++++++++++++++++++++++++
ஒரு மனிதனுக்கு, நல்ல மனைவி வேண்டும். கை நிறையச் சம்பளத்துடன் நல்ல வேலை, அல்லது தொழில் வேண்டும்.

அந்த இரண்டில், நல்ல வேலைதான் முக்கியம். பிரதானம். நல்ல மனைவி இரண்டாவது சாய்ஸ்! அல்லது நல்ல கணவன் இரண்டாவது சாய்ஸ்!

எல்லோருக்கும், நல்ல வேலை அல்லது நல்ல தொழில் அமைந்து விடுகிறதாவென்றால், பாதிப்பேர்களுக்கு அந்த அமைப்பு இருக்காது.

ஒரு கவிஞன் எழுதினான்.

”அணைக்க
ஒரு அன்பில்லாத மனைவி;
பிழைக்க
ஒரு பிடிப்பில்லாத தொழில்
வளர்க்க
இரு நோயுற்ற சேய்கள்
ஆனாலும்,
எனோ இன்னும்
வாழ்க்கை கசக்கவில்லை!”

இந்த நிலைமையில்தான் பாதிப்பேர்களின் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது!

பத்தாம் வீட்டு அதிபதி(Lord of the 1oth House) லக்கினத்திற்கு 6,8 12ஆம் வீடுகளில் உட்கார்ந்திருந்தால் அந்த அவல நிலைமை ஏற்படும். அதுவும் விரைய வீடான 12ல் அமர்ந்திருந்தால், ஜாதகனுக்கு, அவன் திறமைக்கு ஏற்ப, விருப்பத்திற்கேற்ப, தேவைக்கு ஏற்ப நல்ல வேலையோ அல்லது தொழிலோ கிடைக்காது. உங்கள் மொழியில் சொன்னால் சிக்காது. சிக்கினால்தான் அமுக்கிப் பிடித்துக்கொண்டு விடலாமே!

அந்த நிலைக்குப் பெயர் துர் யோகம். துர் எனும் வடமொழிச் சொல்லிற்கு கெட்ட என்று பெயர்.

(நான் எனக்குத் தெரிந்த வழியில் மொழியாக்கம் செய்திருக்கிறேன். நமது வகுப்பறை மாணவர் திலகம் தஞ்சாவூர் கிருஷ்ணன் சார் வந்து என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்!)

Duryoga - This results when the 10th lord is in the 12th. The native becomes unlucky as afar as profession is concerned.

பத்தாம் வீட்டதிபதி 12ல் இருந்தால், ஜாதகன் வேலை அல்லது தொழிலைப் பொறுத்தவரை அதிர்ஷ்டமில்லாதவன்.

அதைப்போல பத்தாம் வீட்டு அதிபதி 6 & 8 ஆம் வீடுகளில் அமர்ந்திருந்தாலும் இந்த நிலைமைதான். ஜாதகனின் வேலைகளில், பல தடைகள், கஷ்டங்கள், சிரமங்கள் உண்டாகும். உங்கள் மொழியில் சொன்னால் சும்மா சுமைப்பதை, அவன் நனைத்துச் சுமப்பான்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
யோகம் என்பது கிரக்கூட்டு அல்லது சேர்க்கை அல்லது சேரும் இடத்தைப் பொறுத்து வருவது. நல்ல யோகங்கள் ஜாதகத்திற்கு வலுவைச் சேர்க்கும். எதிர்மறையான யோகங்கள் ஜாதகத்தின் வலிமையைக் குறைக்கும். ஒன்றை வைத்து, ஒன்றை முடிவு செய்ய முடியாது.

இந்த அமைப்பைப் பெற்றிருப்பவர்கள், எதற்கும் கவலைப் பட வேண்டாம். கவலைப் பட்டு என்ன ஆகிவிடப்போகிறது? நஷ்ட ஈடு வழங்கப்பெற்றிருக்கும். ஆகவே கவலைப் படாதீர்கள்.

சாவியில்லாத பூட்டை, இறைவன் தயாரிப்பதில்லை!

உங்கள் பிரச்சினைகளுக்கான சாவியை, இறைவன் உங்களுக்குக் கொடுத்திருப்பார். இல்லை என்றால் ஒவ்வொரு ஜாதகத்திற்கும் உரிய மதிப்பெண் 337 என்று எப்படி வரும்.

இங்கே தேர்வு எழுதியவனுக்கும் 337தான். தேர்வில் எதையும் எழுதாமல் வெறும் வெள்ளைத்தாளை மடக்கிக் கொடுத்துவிட்டு வந்தவனுக்கும் மதிப்பெண் 337தான்!

ஆகவே சாவி உங்களிடம்தான் இருக்கும் .அதைத் தேடி எடுங்கள். பத்தாம் வீடு கெட்டிருந்தால் தொலையட்டும், பண வரவிற்கான வேறு அமைப்பு நன்றாக இருக்கும். இல்லாவிட்டால் ஜீவனம் எப்படி நடக்கும்?

கர்மகாரகன் சனீஸ்வரனும், தனகாரகன் குரு பகவானும் அந்த அவலத்திற்கான மாற்று ஏற்பாட்டைச் செய்து கொடுத்திருப்பர்கள். அல்லது சுகாதிபதி சுக்கிரன், உங்களுக்கு ஒரு மங்கை நல்லாள் மூலம் ஜீவனத்திற்குக் கொடி காட்டியிருப்பான். ஆகவே கவலை இன்றி இருங்கள். நடப்பது நடக்கட்டும். அது நல்லதாகவே நடக்கட்டும்

அன்புடன்
வாத்தியார்
==========================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

16.9.25

Astrology: கிரகமாலிகா யோகம் (மாலை யோகம்)

Astrology: கிரகமாலிகா யோகம் (மாலை யோகம்) 
--------------------------------------------------
Lesson on Yogas: Grahamalika Yoga

மாலிகா என்னும் வடமொழிச் சொல்லிற்கு மாலை (garland) என்று பொருள்.

சூரியன், சந்திரன், செவ்வாய்,புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகங்களும் அடுத்தடுத்து ஏழு ராசிகளில் இருந்தால் அதற்குப் பெயர் மாலை யோகம்.

நான் எழுதியுள்ள வரிசைப்படி என்று இல்லை, வேறுவிதமான வரிசையில்
கூட இருக்கலாம். எந்த வரிசையில் வேண்டுமென்றாலும் இருக்கட்டும்.
இருந்தால் அது மாலையோகம் எனப்படும்

பார்ப்பதற்கே அழகாக இருக்கும்.

அந்த அமைப்புள்ள ஜாதகன் அழகான தோற்றமுடையவனாகவும்,
செல்வம் நிறைந்தவனாகவும், மகிழ்ச்சி நிறைந்தவனாகவும் இருப்பான்
---------------------------------------------------------------------
A planetary combination under which all planets occupy
consecutive houses leaving the intervening cardinal houses
vacant. The individual under this combination is happy,
handsome, and is provided with much ornaments, gems
and jewels.
--------------------------------------------------------------
ஏழு ராசிகளுக்குள் இல்லையென்றாலும், ஆறு ராசிகளுக்குள், அந்த
ஏழு கிரகங்கள் இருந்தாலும் அது மாலை யோகக் கணக்கில் வரும்
அது லக்கினத்தைத் தவிர்த்து அமைய வேண்டும்!

Grahamalika \"planetary garland\" Yoga:
All the nine planets consecutively in six or seven houses from the
lagna. The native with a Grahamalika Yoga will be
fortunate
------------------------------------------------

அன்புடன்
வாத்தியார்
====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

15.9.25

Astrology: மகாபாக்கிய யோகம்!

Astrology: மகாபாக்கிய யோகம்! 

இன்றைய பாடத்தில் ஒரு எளிமையான யோகத்திற்கான விளக்கம் தரப்பட்டுள்ளது. அனைவரும் படித்துப் பயன் பெறுங்கள்.
----------------------------------------------------------

ஒற்றைப்படை ராசிகளான மேஷம், மிதுனம், சிம்மம், துலாம்,தனுசு, கும்பம் ஆகிய ஆறு இடங்களில் லக்கினம், சூரியன், சந்திரன், ஆகியவைகள் அமைந்திருக்கப் பகல் நேரத்தில் பிறந்த ஜாதகனுக்கு இந்த யோகம் உண்டு.

இப்படியும் நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ளலாம் - மிதுனம், துலாம், கும்பம் ஆகிய மூன்றும் காற்று ராசிகளிலும். மேஷம், சிம்மம், தனுசு ஆகிய மூன்றும் நெருப்பு ராசிகளிலும் சூரியன், சந்திரன், ஆகியவைகள் அமைந்திருக்கப் பகல் நேரத்தில் பிறந்த ஜாதகனுக்கு இந்த யோகம் உண்டு.

பகற் பொழுதில் பிறக்கும் ஜாதகனுக்கு, ஆண்களுக்கென்று ஜோதிடத்தில் சொல்லப்படும் பலன்கள் எல்லாம் தேடி வரும்
--------------------------------------------------
பெண்களுக்கு:

இரட்டைப்படை ராசிகளான ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ஆறு இடங்களில் லக்கினம், சூரியன், சந்திரன், ஆகியவைகள் அமைந்திருக்க இரவு நேரத்தில் பிறந்த ஜாதகிக்கு இந்த யோகம் உண்டு.

இப்படியும் நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ளலாம் - ரிஷபம், கன்னி, மகரம் ஆகிய மூன்றும் பூமி ராசிகளிலும், கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய மூன்றும் நீர் ராசிகளிலும்,லக்கினம், சூரியன், சந்திரன், ஆகியவைகள் அமைந்திருக்க இரவு நேரத்தில் பிறந்த ஜாதகிக்கு இந்த யோகம் உண்டு.

இரவுப் பொழுதில் பிறக்கும் ஜாதகிக்கு, பெண்களுக்கென்று ஜோதிடத்தில் சொல்லப்படும் பலன்கள் எல்லாம் தேடி வரும்
--------------------------------------------------
பலன்: நல்ல பண்புகளைப் பெற்றவனாக அல்லது பெற்றவளாக ஜாதகன்/ஜாதகி இருப்பார்கள். மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை இருக்கும். அன்பே உருவானவர்களாக இருப்பார்கள். மற்றவர்களிடம் இவர்களுக்கு மதிப்பும், மரியாதையும் இருக்கும்!

Mahabhagya Yoga for Men - in day time birth, when Sun,Moon and ascendant in odd signs and for Women - night time birth when Sun,Moon and ascendant in even signs,than this yoga is formed.The native of this yoga is to be of good character,Helping to others,Kind and famous. Nullification is depend on placement of other planets.
+++++++++++++++++++++++++++++++++++++++
”ஓகோ, இதுதான் இந்த யோகத்தின் பலனா? நான் மகா பாக்கியம் எனும் தலைப்பைப் பார்த்தவுடன், ரிலையன்ஸ் அம்பானி போல செல்வந்தராகும் பாக்கியமோ என்று நினைத்து, மூச்சிரைக்க ஓடோடி வந்தேன்.” என்று சொல்பவர்கள் அடுத்துவரும் வரிகளைப் படியுங்கள்.

பணம் மகிழ்ச்சியைத்தராது; குணம்தான் மகிழ்ச்சியைத்தரும். நல்ல குணத்தைப் பெறுவதற்கான யோகம் இது! நல்ல குணத்தைப் பெற்றிருப்பதுதான் மகாபாக்கியம். ஓக்கேயா?

அன்புடன்
வாத்தியார்
======================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14.9.25

Astrology: வேட்டு வைக்கும் யோகங்கள்! Lesson on Yogas: Mathru Nasa Yoga

Astrology: வேட்டு வைக்கும் யோகங்கள்! 
Lesson on Yogas: Mathru Nasa Yoga

மனிதன் சக மனிதனுக்கு வேட்டுவைப்பதை அறிவோம். சில அவயோகங்களும் வேட்டு வைக்கும் தன்மைகளை உடையவை. இன்று, வேட்டு வைக்கும்

அவயோகங்களில் இரண்டைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளேன்.

”சார், எனக்கு இந்த யோகம் இல்லையே!” என்று யாரும் கவலைப் பட வேண்டாம்.
++++++++++++++++++++++++++++++++++++++
1
பந்துபிஸ்த்தயக்த யோகா:
(உறவைக் கெடுக்கும் அவயோகம்)

4ஆம் வீட்டு அதிபதி தீய கிரகங்களுடன் சேர்ந்து இருந்தாலும், அல்லது 6, 8, 12ஆம் இடங்களில் சென்று அமர்ந்தாலும், அல்லது
பகை வீடுகளில் அமர்ந்திருந்தாலும், அல்லது நீசம் பெற்றிருந்தாலும் இந்த அவயோகம் உண்டு!

பலன்: ஜாதகனுக்கு தனது நெருங்கிய சொந்தங்களுடன் நல்ல உறவு இருக்காது. உறவுகளுடன் பிரச்சினைகள் இருக்கும்.
அது தவறான புரிதல்கள் அல்லது வேறு காரணங்களால் இருக்கலாம். எப்படியிருந்தாலும் அல்லது என்ன காரணமாக இருந்தாலும் ஜாதகன் தனிப்பட்டுப் போவான்.
+++++++++++++++++++++++++++++++++++++++++
2
மாத்ருநாச யோகா:
(தாய்ப் பாசத்திற்கு வேட்டு வைக்கும் யோகம்)

சந்திரன் இரண்டு தீய கிரகங்களுக்கு இடையில் (Moon is hemmed between malefic) மாட்டிக்கொண்டு விட்டாலும் அல்லது தீய
கிரகத்துடன் கூட்டணி போட்டிருந்தாலும் அல்லது தீய கிரகத்தின் பார்வையைப் பெற்றிருந்தாலும் இந்த அவயோகம் உண்டு!

பலன்: ஜாதகனின் தாய், ஜாதகன் சிறுவனாக அல்லது இளைஞனாக இருக்கும்போதே இறந்து போய்விடுவார். தவறி நல்ல ஆயுள்
பாவத்தோடு, அவர் உயிர் வாழ்ந்தாலும், ஜாதகனுடன் சுமூகமான உறவு இருக்காது.

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13.9.25

Astrology: கோள்சாரச் சனியின் பயண காலம் Saturn's transit period

Astrology: கோள்சாரச் சனியின் பயண காலம் Saturn's transit period 

பிள்ளை வளர்ந்து இளைஞனாகி விட்டால், தன் தந்தை சொல்லும் அறிவுரைகளைக் கேட்கமாட்டான். இல்லாளும், வயதாகிவிட்டால், கணவனை மதிக்க மாட்டாள். கல்விக் கற்றுத் தேரிய மாணவனும் ஆசிரியரைத் தேடமாட்டான். வியாதி முற்றிலும் குணமாகிவிட்டால், மக்களும் வைத்தியரைத் தேட மாட்டார்கள் என்று ஞானி ஒருவன் சொல்லிவைத்தான்.

உரைநடையாகச் சொல்லவில்லை. பொட்டில் அடித்த மாதிரிப் பாடலாகச் சொல்லிவைத்தான். நீங்கள் அறிந்து கொள்ளப் பாடலைக் கீழே கொடுத்துள்ளேன்.

“பிள்ளைதான் வயதில் மூத்தால் பிதாவின் சொல்புத்தி கேளான்
கள்ளின் நல்குழலாள் மூத்தால் கணவனைக் கருதிப்பாராள்
தெள்ளற வித்தை கற்றால் சீடனும் குருவைத் தேடான்
உள்ள நோய் பிணிகள் தீர்ந்தால் உலகோர் பண்டிதரைத் தேடார்!
-விவேக சிந்தாமணி என்னும் நூலில் வரும் பாடல் இது!

உலக இயல்பு அது. சில விதிவிலக்குகள் இருக்கலாம். அதுபோல நல்ல நிலைமையில் இருக்கும் எவனும் ஜோதிடத்தையோ அல்லது ஜோதிடரையோ நாடமாட்டான். ஒரு கஷ்டம் வரும்போதுதான், அதுவும் அவனால் அதைத் தீர்க்க முடியாத நிலை அல்லது சூழ்நிலை வரும்போதுதான், தன் ஜாதகத்தைத் தூசி தட்டிக் கையில் எடுப்பான்.

முன்பு ஒரு முறை நண்பர் ஒருவர் வந்து என்னிடம் சொன்னார்: “நான் செய்யாத தவறிற்காக, இப்போது என் அலுவலகத்தில் பெரிய பிரச்சினைக்கு உள்ளாகியிருக்கிறேன்”

நான் கேட்டேன்: “நீ தவறு செய்யாமல் எப்படி அவர்கள் உன்னை ஆட்படுத்துவார்கள். அதில் உன் பங்களிப்பு ஏதாவது நிச்சயமாக இருக்க வேண்டும்”

“ஆமாம், எனக்குக் கீழே உள்ளவன் செய்த தவறு. அவன் மீது நம்பிக்கை உள்ள காரணத்திற்கக, அவன் வைத்த காகிதங்களில் அவற்றை ஆராயமல் கையெழுத்துப் போட்டேன். அது மட்டுமே நான் செய்த தவறு!”

“போதாதா? அவனைப் போன்றவர்கள் செய்யும் வேலையை மேற்பார்வை இடுவதற்குத்தானே உன்னை நியமித்திருக்கிறார்கள். நீ  ஒன்றைப் படிக்காமல் எப்படி கையெழுத்துப்போடலாம்? இது வேலையில் அக்கறையின்மை கணக்கில் வரும்”

“வரும் என்ன, வந்துவிட்டது. இப்போது என்ன செய்வது என்று தெரியவில்லை. விசாரணை நடைபெறுகிறது. எனக்கு ஒலையோடு நிற்குமா அல்லது வேலை போய்விடுமா என்று தெரியவில்லை. பயமாக இருக்கிறது”

அவன் தன்னுடைய ஜாதகத்தை எடுத்துக்கொண்டு வந்திருந்தான். வாங்கிப் பார்த்தேன்.

இதுபோன்ற கேள்விகளுக்கு, தொழில் ஸ்தானமாகிய 10ஆம் இடத்தை லக்கினமாக வைத்துக் கொண்டு, ஜாதகத்தில் உள்ள அமைப்புக்களைப் பார்க்க வேண்டும்.

அவர் மேஷ லக்கினக்காரர். பத்தாம் இடம் மகரம். அதன் அதிபதி, அதாவது பத்திற்கு உரியவன், சனீஷ்வரன், அவன் அந்த வீட்டிற்கு 5ஆம் இடத்தில் திரிகோணமேறி இருந்தான். அதுவும் நட்புவீட்டான ரிஷபத்தில். ஆகவே வேலையில் ஒரு ஸ்திரமும், முன்னேற்றமும் இருக்கும்.

சரி, இப்போது உள்ள பிரச்சினை எதனால்? அது தற்காலிகமானதா? எத்தனை நாட்கள் நீடிக்கும்? எப்போது உய்வு வரும்?

அதற்கு கோள்சாரச் சனியைப் பார்க்க வேண்டும். அதுவும் கேள்விக்குரிய பத்தாம் வீட்டை வைத்தே பார்க்க வேண்டும்.

அன்றையத் தேதியில், சனி சிம்மத்தில் இருந்தார். அது 10ஆம் வீட்டிற்கு எட்டாம் இடம். அதனால்தான் வேலையில் பிரச்சினை. அடுத்த சனிப்பெயர்ச்சி இன்னும் 3 மாதகாலத்தில் நடைபெறவுள்ளது.

ஆகவே நான் சொன்னேன். ”மூன்று மாத காலம் உன்னைப் பணிநிறுத்தம் (suspend) செய்யலாம். அதற்குப் பிறகு உண் பணி அங்கேயே தொடரும். வேலையை விட்டு உன்னைத் தூக்கும் வாய்ப்பு இல்லை”

அதன்படியே நடந்தது.

இதை ஒரு உதாரணத்திற்காகவே சொன்னேன்.

ஆகவே இதுபோன்ற சூழ்நிலைகளில் ஜாதகத்தை ஆராயும் வழிமுறைகளைக் கீழே கொடுத்துள்ளேன்:

1. கோள்சாரச் சனி 10ஆம் இடத்திற்கு, 6, 8 & 12ஆம் வீடுகளில் பயணிக்கும் காலங்களில், வேலை அல்லது தொழிலில் சரிவுகள் ஏற்படலாம். பிரச்சினைகள் உண்டாகலாம்.

2. ஆறாம் வீட்டில் (அந்த வீட்டிற்கு ஆறாம் இடத்தில்)பயணிக்கும் காலத்தில், தொழிலில் போட்டியாளர்கள் உருவாகி, நமக்கு இடைஞ்சலை உண்டாக்கலாம். எதிரிகள் ஏற்படலாம். நமது தொழிலை ஸ்தம்பிக்கச் செய்யலாம். அதே நபர் வேலையில் இருந்தால், அலுவலகத்தில், நமக்கு எதிரானவர்களால், அல்லது நம்மைப் பிடிக்காதவர் களால், பாதிப்புக்கள் உண்டாகலாம். அவப்பெயர் உண்டாகலாம். அந்தக் காலகட்டத்தில் வேலையில் கவனமாக இருக்க வேண்டும்

3. எட்டாம் இடத்தில் (அந்த வீட்டிற்கு எட்டாம் இடத்தில்) சனி சஞ்சாரம் செய்யும் காலங்களில், தொழிலில் சரிவுகள் ஏற்படலாம். தொழிலை மாற்ற நேரிடலாம். தொழிலில் பலவிதமான சிக்கல்கள் (difficulties) ஏற்படலாம். அதே நபர் வேலையில் இருந்தால், அலுவலகத்தில் அவருக்கு இடமாற்றம் ஏற்படலாம். கீழ் நிலைக்குத் தள்ளப்படலாம் (depromotion) அல்லது தண்ணியில்லாக் காட்டுக்கு மாற்றப்படலாம்.

4. பன்னிரெண்டாம் இடத்தில் (அந்த வீட்டிற்கு பன்னிரெண்டாம்  இடத்தில்) சனி சஞ்சாரம் செய்யும் காலங்களில், தொழிலில், விரையங்கள் (Financial losses) ஏற்படலாம். தொழிலைக் கைவிட நேரிடலாம். அதே நபர் வேலையில் இருந்தால், அலுவலகத்தில் சம்பளம் குறைக்கப்படலாம். நமது பணியால், அலுவலில் ஏற்படும் நஷ்டத்திற்கான ஈட்டுத்தொகையை நாம் கட்டும்படி நேரிடலாம். அல்லது வேலையை விட்டே விலக நேரிடலாம்.

பயப்பட வேண்டாம். இவை எல்லாமே பொதுப்பலன்கள். தனிப்பட்ட ஜாதகங்களுக்கு, அவற்றில் உள்ள கிரக நிலைகளை வைத்துப் பலன்கள் மாறுபடும்!

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12.9.25

Astrology ஒரு வீட்டின் பலம் (Strength of a house)



Astrology ஒரு வீட்டின் பலம் (Strength of a house)

1. வீட்டு அதிபதிகள் பரிவர்த்தனை பெற்று இருத்தல். (exchange of houses) சூரியன் மற்றும் சனீஷ்வரனின் ஆகிய இருவரும்  பரிவர்த்தனை
பெற்றிருத்தல் விதிவிலக்கு. இந்தக் கணக்கில் வராது.
2. வீட்டின் அதிபதி உச்சம் பெற்று இருத்தல்.
3. உச்சம் பெற்ற கிரகம் அமர்ந்திருக்கும் வீடு. (A house occupied by an exalted planet - எந்த கிரகமாயிருந்தாலும் சரி.
4. வீட்டின் இருபுறமும் நன்மை பயக்கக்கூடிய கிரகங்கள் அமர்ந்திருப்பது. (hemmed between two good planets) சுபக்கிரகங்கள்,

மேலே கொடுத்திருக்கும் விதிகள் ஒரு வீட்டின் வலிமையை அதிகப் படுத்துவதாகும். அந்த எட்டு விதிகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட
விதிகளின்படி அமைந்திருக்கும் வீடுகள் வலிமை உடையதாகும்.

முதல் விதிதான் இருக்கும் விதிகளில் அதீத பவரானது. உங்கள் மொழியில் சொன்னால் சூப்பர் பவரானது. மற்றதெல்லாம் அதற்கு
அடுத்ததுதான். அதுவும் 2 to 8 என்று இறங்குமுக வரிசையில் இருக்கும். பலமும் அப்படித்தான் அமையும்.

அதாவது, முதல் விதிப்படி 8 மடங்கு பவர் என்றால், அடுத்த விதிக்கு ஏழு மடங்கு பலம் என்று குறைத்துக்கொண்டே வந்து பலனைப்
பாருங்கள்.
---------------------------------------------------------------------
பலம் எப்போது குறையும் அல்லது இல்லாமல் போகும்?

1. 6, 8 & 12ஆம் வீட்டு அதிபதிகளின் (Owners of inimical houses) பார்வையில் விழும் வீடுகள் வலிமையை இழக்கும்.
2. 6, 8 & 12ஆம் வீட்டு அதிபதிகள் வந்து அமரும் வீடுகளும் (houses occupied by the lord of 6, 8 &12th houses) வலிமையை இழக்கும்
3. ஒரு வீட்டின் அதிபதி  6, 8 & 12ஆம் வீடுகளில் போய் அமர்ந்தாலும், அவர் தன் வலிமையை இழந்து விடுவார். உதாரணம் லக்கினாதிபதி

12ல் அமர்ந்தால் - அது விரைய வீடு - தன் வலிமையை இழந்து விடுவார். அதுபோல எந்த அதிபதி அங்கே அமர்ந்தாலும் தன் வலிமையை
இழந்துவிடுவார். அந்த அமைப்புள்ள ஜாதகனின் வாழ்க்கை அவனுக்குப் பயன் படாது. மற்றவர்களுக்குத்தான் பயன்படும். 

அன்புடன்
வாத்தியார்
===================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

9.9.25

Astrology: ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம் Chances of Multiple marriages

Astrology: ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம் Chances of Multiple marriages

பருவம்வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை
காதல் கொண்ட அனைவருமே மணம் முடிப்பதில்லை
மணம் முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை
சேர்ந்துவாழ்ந்த அனைவருமே சேர்ந்து போவதில்லை!
- கவியரசர் கண்ணதாசன்

பல சிக்கல்கள் நிறைந்தது வாழ்க்கை. சிக்கல் இல்லாத வாழ்க்கையே இருக்காது. இருந்தால் காட்டுங்கள். சந்தோசமடைவேன்!

மற்ற சிக்கல்கள் நாம் மட்டுமே சம்பந்தப்பட்டதாக இருக்கும். அதனால் மனத் துணிச்சலையும், ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை வைத்து, சிக்கலுக்கான முடிவை அல்லது தீர்வை எப்படி வேண்டுமென்றாலும் நாம் எடுக்கலாம்

ஆனால், திருமண வாழ்வில் ஏற்படும் சிக்கல், இன்னொருவர் (கணவன் அல்லது மனைவி) சம்பந்தப்படுவதால் அப்படி எடுக்க முடியாது.

அத்துடன் நாம் விரும்பினாலும் அல்லது விரும்பாவிட்டாலும், விதி ஒரு பக்கம் வேலை செய்து கொண்டிருக்கும்.

நம் வாழ்க்கை, அல்லது நம் குழந்தைகளின் வாழ்க்கை அல்லது நம் உடன் பிறப்புக்கள் மற்றும் நண்பர்களின் வாழ்க்கையில் திருமணத்தை வைத்து ஏதாவது சிக்கல் உண்டாகுமா என்று பார்ப்பதற்கான பயிர்சி வகுப்பு பாடங்களை இன்று உங்களுக்கு அளிக்கிறேன்.  பொறுமையாகப் படித்து, அத்தனை விதிகளையும் மனதில் ஏற்றி
வைத்துக்கொள்ளுங்கள்
----------------------------------------------------------------------------
Chances of Multiple marriages: ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம்

ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம் எப்போது நடைபெறும்?

முதல் திருமணம் கெட்டுவிட்டால், இரண்டாவது திருமணம் செய்துகொள்ள நேரிடும்.

மனைவி அல்லது கணவன் இறந்துவிட்டால், அல்லது கருத்துவேற்றுமையால் தம்பதிகள் விவாகரத்து பெற்றுப் பிரிந்துவிட்டால் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள நேரிடும்

உயர்கல்வி, அதீத வருமானம், பொருளாதார சுதந்திரம், பொறுமையின்மை, சகிப்புத்தன்மையின்மை போன்ற காரணங்களால், இப்போது அதிக அளவில் விவாகரத்துக்கள் ஏற்படுகின்றன. அதையும் மனதில் கொள்க!

In this lesson an attempt has been made to discuss a few planetary combinations indicating re marriage due to divorce, separation or death of wife

The rules are based on Brihat Parashar Hora Shastra:

1. ஏழாம் வீட்டு அதிபதி நீசமடைந்திருந்தால், ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம்.

2. ஏழாம் வீட்டு அதிபதி ஒரு தீய கிரகத்தின் வீட்டில், ஒரு தீய கிரகத்துடன் அமர்ந்திருக்கும் நிலைமை! அத்துடன் ராசிச்சக்கரத்தில் ஏழாம் வீடு அல்லது நவாம்சச்சக்கரத்தில் ஏழாம் வீடு ஒரு தீய கிரகத்தின் வீடாக இருக்கும் நிலைமை.

3. செவ்வாயும், சுக்கிரனும் சேர்ந்து ஏழாம் வீட்டில் இருந்தால், அல்லது சனி 12ஆம் வீட்டில் இருந்தால், அத்துடன் லக்கினாதிபதி எட்டாம் வீட்டில் அமர்ந்திருந்தால், ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம்.

4. சுக்கிரன் இரட்டை ராசியில் இருந்தால் (if Venus is in a dual sign), அத்துடன் சுக்கிரன் அமர்ந்த வீட்டின் அதிபதி உச்சமாகி இருந்தால், ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம் (சர்வார்த்த சிந்தாமணி)

5. ஏழாம் அதிபதி, உச்சமாகி இருப்பதுடன், வக்கிரகதியும் பெற்றிருக்கும் நிலைமை.

6. லக்கினாதிபதி எட்டாம் வீட்டில், ஏழாம் வீட்டில் ஒரு தீயகிரகம், இரண்டாம் அதிபதி ஒரு தீயகிரகத்துடன் சேர்க்கை - ஆகிய அமைப்பு ஒன்றிற்கு மேற்பட்ட திருமணத்தைக் கொடுக்கும்.

7. ஏழாம் அதிபதி 3, 6, 8, &12 போன்ற மறைவிடங்களில் இருந்தாலும், அல்லது நீசமாகி ஒரு சுபக்கிரகத்துடன் சேர்ந்திருந்தாலும், அத்துடன் ஏழாம் வீட்டில் ஒரு தீயகிரகம் இருந்தாலும், ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம்.

8. சுக்கிரன் கன்னிராசியில் நீசமடைந்திருப்பதோடு, ஒரு தீயகிரகத்தின் கூட்டணியோடு இருந்தாலும் அல்லது நவாம்சத்தில் நீசமடைந்திருந்தாலும் ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம்.

9. ஏழாம் வீட்டிலும், இரண்டாம் வீட்டிலும் தீய கிரகங்கள் அமர்ந்திருந்து, அதன் அதிபதிகள் கெட்டிருந்தால், ஜாதகனின் முதல் மனைவி இறப்பதுடன், ஜாதகனுக்கு இரண்டாம் திருமணமும் நடைபெறும்.

10. ஏழாம் வீட்டிலும், எட்டாம் வீட்டிலும் தீயகிரகங்கள் இருப்பதுடன், செவ்வாய் 12ஆம் வீட்டில் இருப்பதுடன், ஏழாம் அதிபதியின் பார்வை ஏழில் விழுகவில்லை என்றால், ஜாதகன் தன் முதல் மனைவியை இழந்துவிட்டு, மறுமணம் செய்துகொள்ள நேரிடும்.

11. லக்கினத்தில், 2 மற்றும் 7ஆம் வீடு, ஆகிய மூன்று இடங்களிலும் தீய கிரகங்கள் இருந்து, ஏழாம் அதிபதி அஸ்தமனம் பெற்றிருந்தாலும் அல்லது நீசமாகி இருந்தாலும் ஜாதகனுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம்.

12 ஏழாம் அதிபனும், பதினொன்றாம் அதிபனும் ஒன்றாக இருந்தாலும் அல்லது இருவரும் திரிகோணம்பெற்று, ஒருவரை ஒருவர் பார்த்தாலும் ஜாதகனுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம்.

13. ஒன்பதாம் வீட்டதிபதி ஏழிலும், ஏழாம் அதிபதி நாலிலும் இருந்தால், ஜாதகனுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம். அதுபோல 7 & 11 ஆம் அதிபதிகள் ஒருவருக்கொருவர் கேந்திரத்தில் இருந்தாலும் ஜாதகனுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம்.

14. இரண்டு மற்றும் ஏழாம் வீடுகளில் தீயகிரகங்கள் இருப்பதுடன், ஏழாம் அதிபதி ஒரு தீய கிரகத்தின் பார்வை பெற்றால், ஜாதகனுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம்.

15. இரண்டு மற்றும் பன்னிரெண்டாம் இட அதிபதிகள் மூன்றாம் வீட்டில் இருந்து, குரு அல்லது ஒன்பதாம் இட அதிபதியின் பார்வை பெற்றால், ஜாதகனுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம்.

இது எல்லாம் பொதுவிதிகள்.

திருமண விஷயமாக அல்லது முதல் திருமணத்தில் சிக்கல் ஏற்பட்ட நிலையில் ஒரு ஜாதகத்தை அலசும்போது, இந்த விதிகளை மனதிற்கொண்டு அலசினால் ஒரு தெளிவும் கிடைக்கும்!

அன்புடன்
வாத்தியார்!
---------------------------------------------------------------------

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

7.9.25

Astrology: பாபகர்த்தாரி யோகத்தின் பாதிப்பு!

Astrology: பாபகர்த்தாரி யோகத்தின் பாதிப்பு!

பாபகர்த்தாரி யோகத்தால் பாதிக்கப்பெறும் வீடுகள் Houses affected by Papakarthari Yoga 
ஒரு வீட்டின் இருபுறமும் தீய கிரகங்களுடன் குரு அல்லது சுக்கிரன் நின்றாலும் அந்த வீடு பாப கர்த்தாரி யோகத்தால் பாதிக்கப்படுமா?

ஒரு வீட்டின் இருபுறமும் தீய கிரகங்கள் இருந்தால், பாதிப்பு இருக்கும். சுப கிரகங்களின் கூட்டால் பாபகர்த்தாரி யோகத்தின் தன்மை மாறாது!

அன்புடன்
வாத்தியார்


6.9.25

Astrology: சனீஸ்வரனும் திருமணவாழ்க்கையும்!

Astrology: சனீஸ்வரனும் திருமணவாழ்க்கையும்!

சனீஸ்வரன் ஏழாம் வீட்டிலிருந்து சுய வீடாக இல்லாமலிருந்தால் மணவாழ்க்கை மணக்காது.

சனீஸ்வரன் மகரத்திலிருந்து ஏழாம் வீடானால் கடகலக்னமாகியிருந்தால் திருமண வாழ்க்கை எப்படியிருக்கும்.

ஏழாம் அதிபதி சந்திரனைக் கவனிக்க வேண்டாமா? களத்திரகாரகன் சுக்கிரனின் அமைப்பைப் பார்க்க வேண்டாமா?

அதை எல்லாம் பாருங்கள். அவைகள் நன்றாக இருந்தால் திருமண வாழ்வும் நன்றாக இருக்கும்!

அதேபோல் சனீஸ்வரன் ஏழாம் அதிபதியாகி கும்பத்திலிருந்தால், சிம்மலக்னமானால் மண வாழ்க்கை எப்படியிருக்கும்.

இதற்கும் அதே பலன்தான்!

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4.9.25

Astrology: பாபகர்த்தாரி யோகத்தின் பலன் 

பாபகர்த்தாரி யோகத்தால் பாதிக்கப்பெறும் வீடுகளுக்கான பொதுப்பலன்கள்

இது ஒரு அவயோகம். அதை முதலில் நினைவில் வையுங்கள்.

ஒரு வீட்டின் இருபுறமும் தீய கிரகங்கள் நின்றால் அதாவது இருந்தால், அந்த வீடு இந்த பாப கர்த்தாரி யோகத்தால் பாதிக்கப்படும்.

1
ஒன்றாம் வீடு - அதாவது லக்கினம் பாபகர்த்தாரி யோகத்தால் பாதிக்கப்பெற்றிருந்தால், அந்த ஜாதகன் அடிக்கடி நோய்வாய்ப்படுவான். விபத்துக்கள் நேரிடும். எப்போதும் ஏதாவது ஒரு மன அழுத்தம் (Tension) இருக்கும்.
2.
இரண்டாம் வீடு: இழப்புக்கள் ஏற்படும். அது பெரும்பாலும் பணம் சம்பந்தப்பட்டதாக இருக்கும். (2nd house is the house of finance and family affairs) குடும்ப வாழ்க்கையில் பிரச்சினைகள் உண்டாகும். குடும்பத்தைவிட்டுப் பிரிந்திருக்க நேரிடும். குடும்பத்தை வைத்து மன அழுத்தங்கள் உண்டாகும்
3.
மூன்றாம் வீடு: மரியாதைக்கு பங்கம் ஏற்படும். உடன்பிறப்புக்களை இழக்க நேரிடும் (Loss of siblings) உடன்பிறப்புக்கள், மற்றும் நண்பர்களுடன் தேவையில்லாத விரோதங்கள் ஏற்படும்.
4.
நான்காம் வீடு: பெற்றோர்களை இழக்க நேரிடும். வாழ்க்கையில் சுகங்களை இழக்க நேரிடும். அமைதியை இழக்க நேரிடும். தண்ணீரில் கண்டங்கள் ஏற்படும்.
5.
ஐந்தாம் வீடு: குழந்தைகளுக்கு, குழந்தைகளை வைத்து ஜாதகனுக்கு சிரமங்கள், கஷ்டங்கள், துன்பங்கள் ஏற்படும். எப்போதும் மன நிம்மதி இருக்காது.
6.
ஆறாம் வீடு: தொழிலில், வேலையில் கஷ்டங்கள் உண்டாகும். விரோதிகளால், விரோதங்களால் அடிக்கடி மனதில் பய உணர்வு மேலோங்கி இருக்கும்.
7.
ஏழாம் வீடு: மனைவி அல்லது கணவன் அடிக்கடி நோய்வாய்ப்படுவான். அவர்களால் சிரமப்பட நேரிடும். அவர்களால் விரையங்கள் ஏற்படும்.
8.
எட்டாம் வீடு: வறுமை நிலவும். கடன்கள் உண்டாகும். நோய்கள் உண்டாகும். சிரமமான வழ்க்கை வாழ நேரிடும். பயணங்கள் அலுப்பை ஏற்படுத்தும்.
9.
ஒன்பதாம் வீடு: தந்தையை இழக்க நேரிடும். வறுமையான சூழல்கள் உண்டாகும். வறுமை வாட்டி எடுக்கும்.
10.
பத்தாம் வீடு: வேலையில், தொழிலில் பல பின்னடைவுகள் ஏற்படும் (There will be set backs in career)
11.
பதினொன்றாம் வீடு: காதுகளில் பிரச்சினைகள் ஏற்படும். கேட்கும் தன்மையில் குறைபாடுகள் உண்டாகும். வீட்டு மாப்பிள்ளையைப் பறிகொடுக்க நேரிடும்.
12
பன்னிரெண்டாம் வீடு: தூக்கமின்மையால் அவதிப்பட நேரிடும். ஆரோக்கியம் கெட்டு மருத்துவமனைக்கு அலைய நேரிடும். பலவிதமான பணச் செலவுகள் ஏற்பட்டு படுத்தி எடுக்கும்.

எல்லாமே பொதுப்பலன்கள். அவரவர்களின் ஜாதகத்தின் தன்மையைப் பொறுத்து இது கூடலாம் அல்லது குறையலாம் அல்லது இல்லாமல் போகலாம். அதையும் மனதில் கொள்ளவும்

என்ன பாடம் பயன் உள்ளதாக இருக்கிறதா?

அன்புடன்
வாத்தியார்
===========================================


வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

3.9.25

Astrology: ஆதி யோகம்! Adhi Yoga

Astrology: ஆதி யோகம்! Adhi Yoga 

புதன், குரு, சுக்கிரன் ஆகிய மூன்று சுபக் கிரகங்களும், ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் இடத்திலிருந்து 6, 7, 8 ஆம் வீடுகளில் இருந்தால், தனித்தனியாகவோ அல்லது சேர்ந்து இருந்தாலோ, அது ஆதியோகம் எனப்படும். அந்த வீடுகள் ஒன்றில் அல்லது இரண்டில் அல்லது மூன்றிலுமே அவைகள் இருந்தாலும் அது இந்த யோகத்தைக் கொடுக்கும்!

பலன்: ஜாதகன் செல்வாக்குடன் இருப்பான். ஆரோக்கியத்துடனும், செல்வங்களுடனும் இருப்பான். நோய், எதிரிகள், பயம் என்று எந்த அவலமும் அவனை அனுகாது!

Adhi Yoga : This is caused if the benefic planets - Mercury, Jupiter and Venus - are situated in the 6th, 7th and 8th houses from the Moon. These planets should be present in any one, two or in all the above-mentioned houses. A native with this Yoga will be very influential, healthy and wealthy. He will possess no fear, disease or enemy.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
”சார், அவற்றில் எனக்கு இரண்டு இருக்கிறது. பாதி யோகம் கிடக்குமா?” என்று யாரும் கேட்க வேண்டாம்! கிடைக்காது.

யானை என்று எழுதுவதற்குப் பதிலாகப் பூனை என்று எழுதிவிட்டேன். இரண்டிலுமே ”னை” என்று இருப்பதால் பாதி மார்க் போடுங்கள் என்று சொல்வதைப் போன்றது அது!

அன்புடன்,
வாத்தியார்
---------------------------------------------------------------------

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

2.9.25

Astrology: அமலா யோகம்! Amala Yoga


Astrology: அமலா யோகம்! Amala Yoga

கோவையில் இருந்து சென்னைக்குப் பயணிக்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். கோவையிலிருந்து சேலம் வரை ஒரு பேருந்திலும், பிறகு சேலத்திலிருந்து கள்ளக்குறிச்சிவரை ஒரு பேருந்திலும், பிறகு கள்ளக்குறிச்சியிலிருந்து விழுப்புரம்வரை ஒரு பேருந்திலும், பிறகு விழுப்புரத்திலிருந்து செங்கல்பட்டுவரை ஒரு பேருந்திலும், அதற்குப்பிறகு அங்கேயிருந்து சென்னைவரை வேறு ஒரு பேருந்திலும் பயணித்தால் பயணம் எப்படியிருக்கும்? அலுத்துவிடாதா?

முறையான பயணம் எப்படி இருக்க வேண்டும்? ஒரு நவீன குளிரூட்டப்பெற்ற வோல்வோ பேருந்தில், இரவு ஒன்பது மணிக்குக் கோவையில் ஏறி, காலை 6 மணிக்குச் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்குச் சென்று இறங்கினால் பயணம் சுகமாக இருக்கும்.

அதைப்போல ஏகப்பட்ட நிபந்தனைகளுடன் உள்ள யோகங்களைவிட, சுருக்கமாக ஒரு வரியில் உள்ள யோகங்கள், ஜோதிடத்தைக் கற்றுக் கொண்டிருப்பவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

இன்று, உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பதற்காக ஒரு வரி விளக்கத்துடன் உள்ள யோகம் ஒன்றைக் கொடுத்துள்ளேன்.

அந்த யோகம் இருப்பவர்களுக்கு, இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைக்கும்
---------------------------------------------------------------------
யோகத்தின் பெயர்: அமலா யோகம். அமலா எனும் வடமொழிச்சொல்லிற்கு சுத்தமானது (pure) என்று பொருள்.

யோகத்தின் அமைப்பு: லக்கினத்திலிருந்து பத்தாம் வீட்டில் சுபக்கிரகம் இருக்க வேண்டும். சந்திரராசிக்குப் பத்தாம் வீட்டில் சுபக்கிரகம் இருந்தாலும் இந்த யோகம் உண்டு

பலன்: ஜாதகனின் வாழ்க்கை வளமாக இருக்கும். ஜாதகன் பெயர், புகழுடன் இருப்பான். நிறைய பொருள் ஈட்டுவான். நல்ல ஆண் வாரிசுகளை உடையவனாக இருப்பான்.

அன்புடன்
வாத்தியார்
==========================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

1.9.25

Astrology: அமரக் யோகம்! Amarak Yoga


Astrology: அமரக் யோகம்! Amarak Yoga 
 
அமரக் என்றால் பானி பூரி, பேல் பூரி போல ஏதோ தின்பொருள் - சாட் அயிட்டம் என்று நினைக்கவேண்டாம். அமரக் என்னும் வடமொழிச்சொல் ஒரு வித அணிகலனைக் குறிக்கும். மயில்பதக்கம் போன்ற தோற்றமுடைய அணிகலனாம்.

பதிவை முழுதாகப் படித்தால், அதை நீங்களும் ஒத்துக்கொள்வீர்கள்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஏழாம் வீட்டதிபதி ஒன்பதாம் வீட்டிலும், ஒன்பதாம் வீட்டதிபதி ஏழாம் வீட்டிலும், இடம் மாறி அமர்ந்திக்கும் நிலைமையே இந்த அமரக் யோகத்தைக் குறிக்கும். மாறி அமர்ந்ததோடு அல்லாமல் வலுவாக வேறு இருக்க வேண்டுமாம். அதாவது ஆட்சி, அல்லது உச்சம் அல்லது அஷடகவர்க் கத்தில் 5ம் அல்லது மேற்பட்ட பரல்களையும் பெற்றிருக்க வேண்டும்

பலன்: ஏழாம் வீட்டோடும் பாக்கிய ஸ்தானத்தோடும் சம்பந்தப்பட்ட யோகம் இது. இந்த யோகம் உள்ள ஜாதகனுக்கு, டக்கராக மனைவி கிடைப்பாள். சினிமாவை வைத்து உதாரணம் சொல்ல விருப்பமில்லை. இதற்கு உதாரணம் சொன்னால், ராமனுக்கு ஒரு சீதை கிடைத்ததைப்போல அல்லது லெட்சுமணனுக்கு ஒரு ஊர்மிளா கிடைத்ததைப் போல அற்புதமான மனைவி கிடைப்பாள்.

அவளைப் பார்த்துப் பார்த்து ஜாதகன் மகிழலாம். வயதானா பிறகும் அருகில் வைத்துக் கொஞ்சலாம். ’உனக்காக நான், எனக்காக நீ’ என்று வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். Made for each other என்று போடுகிறார்களே அப்படியொரு அம்சம் வாழ்க்கையில் இருக்கும்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சார், எனக்கு இந்த அமைப்பு இருக்கிறது. ஆனால் ஒரு கிரகம் ஊற்றிக்கொண்டு விட்டது அதாவது, நீசமாகிவிட்டது - வக்கிரமாகிவிட்டது - அஸ்தனமாகிவிட்டது - கிரகயுத்ததில் உள்ளது - ஆகவே இதில் பாதி அம்சத்தோடாவது ஒரு மனையாள் கிடைப்பாளா? என்று யாரும் கேட்க வேண்டாம். ஜோதிட விதிகளை நமக்காக நாம் மாற்றிக்கொள்ள முடியாது. அதை மனதில் வையுங்கள். இருந்தாலும் சந்தோஷம். இல்லையென்றாலும் சந்தோஷம். நம் முகத்தை ஒரு முறை கண்ணாடியில் பார்த்து மனதைத் தேர்த்திக்கொள்ள வேண்டியதுதான்.

அன்புடன்
வாத்தியார்
=======================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

31.8.25

Astrology: அரிஷ்ட யோகம் (படுக்கவைக்கும் யோகம்) Arishta Yoga

Astrology: அரிஷ்ட யோகம் (படுக்கவைக்கும் யோகம்) Arishta Yoga 

நாமாகப் படுத்தால் அதற்கு அர்த்தம் வேறு. வேறு யாராவது அல்லது வேறு ஏதாவது சூழ்நிலையில் நாம் படுக்க நேர்ந்தால் அதன் பொருள் வேறு.

நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நம்மைப் படுக்க வைக்கும் யோகங்கள் உள்ளன. அவற்றைப் பற்றிய பாடம் கீழே உள்ளது.

இவைகள் பொது விதிகள். தனிப்பட்டவர்களின் ஜாதகங்களுக்கு, சுபக்கிரகங்களின் அமைப்பை வைத்துப் பலன்கள் மாறுபடும். ஆகவே அவசரப்பட்டு முடிவிற்கு வராதீர்கள். அதேபோல ஹோம் ஒர்க் நோட்டு புத்தகத்தைத் தூக்கிக் கொண்டு வந்து, என்னுடைய ஜாதகத்தை வைத்து இதற்கு விளக்கத்தை எழுதிக்கொடுங்கள் சார் என்று யாரும் கேட்காதீர்கள். உங்களுக்கு நீங்களே ருங்கள். இவை எல்லாம் மேல் நிலைப் பாடங்கள். அதை நினைவில் வையுங்கள்!
----------------------------------------------------------
அரிஷ்ட என்பது வடமொழிச்சொல். அது தீங்கு (evil) என்று பொருள்படும்.

அரிஷ்டயோகம் என்பது தீங்கை விளைவிக்கக்கூடிய தன்மையையுடைய யோகம் என்று பொருள்படும். அதேபோல ஆபத்தானது என்றும் பொருள் படும்.

உதாரணத்திற்குப் ‘பாலஅரிஷ்டம்’ என்பது பால + அரிஷ்ட = குழந்தைக்கு ஆபத்தை விளவிக்கக்கூடிய என்று பொருள்படும்
+++++++++++++++++++++++++++++++++++++++++
அரிஷ்ட யோகம் 1
(அவயோகம்தான்)
தீங்கை விளைவிக்கக்கூடிய கிரக அமைப்பு!

1
லக்கின அதிபதி, 6, 8, அல்லது 12ஆம் அதிபதிகள் எவரேனும் ஒருவருடன் கூட்டணி போட்டிருந்தாலும் அல்லது பார்வையில் இருக்க நேர்ந்தாலும், ஜாதகனுக்கு இந்த யோகம் உண்டு.

பலன்: ஜாதகன் தன்னுடைய உடல் ஆரோக்கியம் கெட்டு அவதிப்படுவான்.

Arishta Yoga:
The Lagna lord is in conjunction or mutual aspect with the 6th, or the 8th, or the 12th house lords (If the lords of the 2nd and 7th houses are involved the effects are more severe).

Result : The person will suffer from bad health (the planets that constitute this Yoga will give more specific information)
-----------------------------------------------------------------
2.
எட்டாம் வீட்டு அதிபதி 12ஆம் வீட்டுக்காரனுடன் கூட்டணி போட்டிருந்தாலும் அல்லது அவனுடைய பார்வையைப் பெற்றிருந்தாலும், ஜாதகனுக்கு இந்த யோகம் உண்டு.

பலன்: ஜாதகன் தன்னுடைய உடல் ஆரோக்கியம் கெட்டு அவதிப்படுவான்.

Arishta Yoga The 8th house lord is conjunct or in mutual aspect with the lord of the 12th house lord (If the lords of the 2nd and 7th houses are involved the effects are more severe).

Result : The person will suffer from bad health (the planets that constitute this Yoga will give more specific information).
--------------------------------------------------
அன்புடன்,
வாத்தியார்



30.8.25

Astrology: அஷ்டலெட்சுமி யோகம்! Ashtalakshmi Yoga

Astrology: அஷ்டலெட்சுமி யோகம்! Ashtalakshmi Yoga 

அஷ்டலெட்சுமி யோகம் என்பது குரு கேந்திர வீடுகள் ஒன்றில் இருந்து (அதாவது 1, 4, 7, 10ஆம் வீடுகள் ஒன்றில்), அத்துடன் ஆறாம் வீட்டில் ராகுவும் இருந்தால் இந்த யோகம் உண்டாகும்.

பலன்: ஜாதகனுக்கு தனிப்பட்ட பெயர், புகழ், வளர்ச்சி, உயர்ச்சி, அமைதி, மகிழ்ச்சி, எதையும் அனுபவிக்கும் பாக்கியம் அனைத்தும் கிடைக்கும்

Ashtalakshmi yoga is formed when Jupiter is in 1st,, 4th, 7th and 10th house and Rahu in 6th house. Ashtalakshmi yoga will give the individual name,fame, prosperity, and peaceful, enjoyment in life.

எட்டு மடங்கு யோகம் என்பார்கள் Yoga for the Eightfold Prosperity (Ashta Laksmi Yoga )

If the North Node ( Rahu ) is in the 6th And if Jupiter is angular Then this Yoga is formed. This combination for Eightfold Prosperity!

இதைக்குறிப்பிடும் ஜோதிட ஸ்லோகம் This is the sloka for Ashtalakshmi Yoga

சஷ்ட ஸ்தான கதே ராகு
லக்ன கேந்த்ர கதே குரு
அஷ்டலக்ஷ்மி சமயுக்தம்
மத்யவான் கீர்த்திமான் நர!

Shashta Sthana Gathe Rahu ( Rahu in the 6th )
Lagna Kendra Gathe Guru ( Jup angular )
Ashtalakshmee Samayuktham
Madhyavan Keerthiman Nara.
+++++++++++++++++++++++++++++++++++++
எட்டு மடங்கு யோகம் என்பது அஷ்ட லெட்சுமிகளைக் குறிக்கும் 
அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++



29.8.25

Astrology: அனபா யோகம் Anapha Yogam

Astrology: அனபா யோகம் Anapha Yogam 

அனபா என்பதற்குத் தமிழில் அருஞ்சொற் பொருளைத் தேடாதீர்கள். அது வடமொழிச் சொல். அதை அப்படியே எடுத்துக்கொள்ளூங்கள்

அனபா யோகம்:
சந்திரன் இருக்கும் வீட்டிலிருந்து அதற்குப் 12ஆம் வீட்டில் (அதாவது சந்திரனுக்குப் பின்புறம் உள்ள ராசியில்) செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ஆகிய ஐவரில் ஒருவர் இருந்தால் அது இந்த யோகம்
----------------------------------------------------------------
பொதுப்பலன்:
ஜாதகன் நல்ல தோற்றத்தை உடையவனாக இருப்பான். பெருந்தன்மை உடையவனாக இருப்பான். மென்மையானவனாக இருப்பான். சுயமரியாதை உடையவனாக இருப்பான். வயதான காலத்தில் ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொள்வான்
---------------------------------------------------------------
Anapha yoga: If there are planets in the twelfth from the moon, Anapha yoga is caused. A planet other than the Sun occupying the 12th house from the Moon constitutes Anapha yoga. It indicates a person who is of good appearance, generous, polite, self -respecting and moves into spiritual life at a later stage. One born in Anapha Yoga will be eloquent in speech, magnanimous,virtuous, will enjoy food, drink, flowers, robes and females, will be famous, calm in disposition, happy, pleased and will possess a beautiful body.
-------------------------------------------------------------------
தனிப் பலன்கள்

1.சந்திரனுக்குப் பன்னிரெண்டில் செவ்வாய் இருந்தால்: ஜாதகன் வலிமையானவன். அதிகாரமுள்ளவன். சுயகட்டுப்பாடு உள்ளவன்.

2.சந்திரனுக்குப் பன்னிரெண்டில் புதன் இருந்தால்: சிறந்த பேச்சாளனாக இருப்பான். கலைகளின் நுட்பம் தெரிந்தவனாக இருப்பான்.

3.சந்திரனுக்குப் பன்னிரெண்டில் குரு இருந்தால்: ஜாதகன் தீவிர சிந்தனை, செயல்களை உடையவனாக இருப்பான். தர்ம சிந்தனை மிக்கவனாக இருப்பான். தன்னுடைய செல்வத்தை அறவழிகளில் பயன்படுத்துவான். அதாவது பல தர்மங்களைச் செய்வான்.

4.சந்திரனுக்குப் பன்னிரெண்டில் சுக்கிரன் இருந்தால்: ஜாதகன் பெண்பித்தனாக இருப்பான். அதிகாரத்தில் இருப்பவர்களின் தொடர்பு உள்ளவனாக இருப்பான்

5. சந்திரனுக்குப் பன்னிரெண்டில் சனி இருந்தால்: ஜாதகன் எதிலும் பிடிப்பு இல்லாதவனாக இருப்பான். பற்று இல்லாதவனாக இருப்பான்.

(ராகு அல்லது கேது இருந்தால்: ஜாதகன் இயற்கையான விஷயங்களுக்கு எதிராக நடப்பவனாக இருப்பான். அவற்றில் பற்று உள்ளவனாக இருப்பான்)

எல்லாம் பொதுப்பலன்கள்!

எல்லாக் கிரகங்களையும், தங்கள் ஜாதகத்துடன் சேர்த்துக் குழம்பு வைப்பதற்கு இதில் வேலை இல்லை.

அதேபோல, நல்ல தோற்றம் என்று எழுதியுள்ளீர்களே? அரவிந்தசாமி மாதிரியா அல்லது அஜீத் மாதிரியா என்று யாரும் கேட்கவேண்டாம். அது அங்கே அமரும் கிரகத்தின் உச்சம், நீசம், பகை, பரல்கள் என்பது போன்ற மற்றவிஷயங்களுடன் சம்பந்தப்பட்டதாகும்.

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

28.8.25

Astrology: ஆர செளரி யோகம்! Ara Sauri Yoga Lesson ]

Astrology: ஆர செளரி யோகம்! Ara Sauri Yoga Lesson ]

யோகத்தைத் தெரிந்து கொள்ளும் முன் அதன் பெயர் விளக்கத்தைத் தெரிந்துகொள்வோம். ஆர என்னும் வட மொழிச் சொல்லிற்கு நேரடி விளக்கம் இல்லை. ஆரண்யம் (காடு) என்பதன் சுருக்கம் என்கிறது ஒரு நூல்.

செளரி என்பதற்கு சனி என்று பொருளாம்.

சரி எப்படி எடுத்துக்கொள்வது?

எதெது எங்கே இருக்க வேண்டுமோ, அங்கே இருப்பது நல்லது. நம்மைக் கொண்டுபோய்க் காட்டில் விட்டால் என்ன ஆகும்? கிறுக்குப் பிடித்துவிடாதா?

அதுபோல காட்டில் இருக்க வேண்டிய ஒரு சிறுத்தையை வீட்டில் கொண்டு வந்து விட்டால் என்ன ஆகும்? சும்மா விடாமல் ஒரு கரடியுடன் சேர்த்துவிட்டால் என்ன ஆகும்?

அது போன்ற நிலைமைதான் ஆகும்போல உள்ளது, இந்த யோகத்தால்.
----------------------------------------------------------------
சனி மற்றும் செவ்வாய் ஆகிய இரண்டு கிரகங்களின் சேர்க்கையால் அல்லது கூட்டணியால் எற்படுவதுதான் இந்த ஆர செளரி யோகம்!

பலன்: சொல்லும்படியாக இல்லை. ஜாதகனுக்குப் பலவிதமான கேடுகள் ஏற்படும்.

Planetary combination between Saturn and Mars. It produces serious afflictions.
-----------------------------------------------------------------
என்னவிதமான கேடுகள்?

சனி இரண்டு வீடுகளுக்கு உரியவன், செவ்வாயும் இரண்டு வீடுகளுக்கு உரியவன். இருவரும் மூன்று காரகத்துவங்களுக்கு அதிபதி (authorities for different portfolios). அவை அத்தனையும் கெடும்.

என்னென்ன கெடும்? இது மேல் நிலைப் பாடம். ஆகவே அதை உங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்.

எல்லோருக்குமா?

இல்லை!

வழக்கம்போல, அவர்கள் மீது விழும் சுபக்கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை, அதோடு அவர்களின் சுயவர்க்கப்பரல்கள், இருக்கும் இடத்தின் மொத்த வர்க்கப் பரல்கள் ஆகியவற்றை வைத்து ஜாதகத்திற்கு ஜாதகம் அது வேறுபடும்.

உதாரணம்?

இது off the record உதாரணம். படித்துவிட்டு மறந்து விடுங்கள்.

ஐந்து அல்லது ஆறு லார்ஜ் விஸ்கியைக் கல்ப்’பாக அடிப்பதற்கும், தண்ணீர் அல்லது சோடா கலந்து அடிப்பதற்கும் உள்ள வித்தியாசம். அல்லது விஸ்கியை ரம் அல்லது பிராந்தியுடன் கலந்து அடிப்பதைப் போன்றது. விஸ்கி எப்படியும் கேடு செய்யும். கலக்காமல் அடித்தால் அதிகக்கேட்டைச் செய்யாதா?

உங்களுக்கு உங்கள் மொழியில் சொன்னால் புரியும் என்பதனால் இதை எழுதியுள்ளேன். மற்றபடி எனக்கு அந்தப் பழக்கம் கிடையாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்:-))))

இந்த அமைப்பு உள்ளவர்கள் கவலைப்பட வேண்டாம். நஷ்ட ஈடு வழங்கப்பெற்றிருக்கும். ஏனென்றால் ஆண்டி முதல் அரசன் வரை அல்லது ஆட்சியாளர்கள்வரை அனைவருக்கும் 337தான் மதிப்பெண். அதை நினைவில் வையுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

25.8.25

Astrology ஹம்ஸ யோகம்


Astrology ஹம்ஸ யோகம்
Hamsa Yogam
குரு - குரு பகவானை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம்.
குரு தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று கடக ராசியில் இருந்தாலும் அல்லது ஜாதகனின் கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு.
------------------------------------------------------
வகுப்பறை புத்திசிகாமணி!:
”சார், குரு நீசம் பெற்று, அது கேந்திரமாக இருந்தாலும் பலன் உண்டா?”
“இல்லை! நீசம் பெற்றால் totally out.ஆகவே இல்லை!”
-------------------------------------------------------
என்ன பலன்?
ஜாதகன் மிகுந்த அதிர்ஷ்டசாலியாக இருப்பான்.
வாழ்க்கையின் எல்லா நலன்களும் அவனைத் தேடி வரும்.
இறை நம்பிக்கை உள்ளவனாக இருப்பான்.

சுருக்கமாக ஆங்கிலத்தில்:
Hamsa yoga: Jupiter in its own sign or in exaltation, and in a kendra house, the native will be religious minded and very fortunate.

அன்புடன்,
வாத்தியார்.

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22.8.25

Astrology: பத்ரா யோகம்

Astrology: பத்ரா யோகம்
Badra Yogam

புதன் - புதனை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம்.
புதன் தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று கன்னிராசியில் இருந்தாலும் அல்லது ஜாதகனின் கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு.
------------------------------------------------------
வகுப்பறை புத்திசிகாமணி!:
”சார், புதன் நீசம் பெற்று, அது கேந்திரமாக இருந்தாலும் பலன் உண்டா?”
“இல்லை! நீசம் பெற்றால் totally out.ஆகவே இல்லை!”
-------------------------------------------------------
என்ன பலன்?
ஜாதகன் அதி புத்திசாலியாக இருப்பான்.
அறிவுஜீவியாக இருப்பான். அறிவு ஊற்றெடுக்கும்!
அதிகம் கற்றவனாக இருப்பான்.கல்வியில் அல்லது சொந்த அனுபவத்தில்!
வேறு அமைப்புக்களால் முறையான கல்வி கற்கும் வாய்ப்புக் கிடைக்காமல் போயிருந்தாலும் தனது சொந்த முயற்சியால் பல புத்தகங்களையும் கற்றுத் தேறியிருப்பான்.
செல்வந்தனாக இருப்பான். அல்லது தன் முயற்சியால் செல்வத்தைத் தேடிப் பிடிப்பான்.

இந்த யோகத்தை சுருக்கமாக ஆங்கிலத்தில் கீழே கொடுத்துள்ளேன்:

Bhadra yoga: Mercury in its own sign or in exaltation, and in a kendra house, the native will be intellectual, learned and rich.

அன்புடன்,
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

21.8.25

Astrology ருச்சகா யோகம்

Astrology ருச்சகா யோகம்!
Ruchaga Yogam
----------------------------------
செவ்வாய் - செவ்வாயை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம்.
செவ்வாய் தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று மகரராசியில் இருந்தாலும் அல்லது ஜாதகனின்
கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு.
------------------------------------------------------
வகுப்பறை புத்தி சிகாமணி!:

”சார், செவ்வாய் நீசம் பெற்று, அது கேந்திரமாக இருந்தாலும் பலன் உண்டா?”
“இல்லை! நீசம் பெற்றால் totally out.ஆகவே இல்லை!”
-------------------------------------------------------
என்ன பலன்?

ஜாதகன் துணிச்சலானவன்.எதிலும் வெற்றி காண்பவன். சிலர் இரக்கமில்லாமல் அரக்க குணமுடையவர்களாகவும் இருப்பார்கள்
----------------------------
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

20.8.25

Astrology: யோகங்கள்

Astrology: யோகங்கள்
ருச்சகா யோகம்!
Ruchaga Yogam
----------------------------------
செவ்வாய் - செவ்வாயை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம்.
செவ்வாய் தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று மகரராசியில் இருந்தாலும் அல்லது ஜாதகனின்
கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு.
------------------------------------------------------
வகுப்பறை புத்தி சிகாமணி!:

”சார், செவ்வாய் நீசம் பெற்று, அது கேந்திரமாக இருந்தாலும் பலன் உண்டா?”
“இல்லை! நீசம் பெற்றால் totally out.ஆகவே இல்லை!”
-------------------------------------------------------
என்ன பலன்?

ஜாதகன் துணிச்சலானவன்.எதிலும் வெற்றி காண்பவன். சிலர் இரக்கமில்லாமல் அரக்க குணமுடையவர்களாகவும் இருப்பார்கள்
----------------------------
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

19.8.25

Astrology: யோகங்களின் முக்கியத்துவம்!

Astrology: யோகங்களின் முக்கியத்துவம்! 

சில ஜாதகங்களை அலசும்போது, ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை வைத்து, அது சராசரி ஜாதகம் போல தோன்றும். ஆனால் உண்மை நிலை மாறாக இருக்கும். ஜாதகர் பிரபலமானவராக இருப்பார். நமது கணிப்பு தவறாகிவிடும்.

முன்பு வகுப்பறையில் புதிர் எண்.95ல் கொடுத்திருந்த ஜாதகமும் அந்த வகையைச் சேர்ந்ததுதான்.

ஜாதகர் உலகில் உள்ள மிகப் பெரிய பணக்காரர்கள் மூவரில் ஒருவர். அதைச் சொன்னால்தான்தான் தெரியும்.

ஆனால் ஜாதகத்தைச் சட்டென்று பார்த்தால் தெரியாது. குழப்பும். ஆமாம் இரண்டில் உள்ள சனீஷ்வரன் குழப்புவார்.

விருச்சிக லக்கின ஜாதகர்.லக்கினாதிபதி செவ்வாய் எட்டில்! பாக்கியநாதன்  (9th Lord) சந்திரன் நீசம். இரண்டில் (தன ஸ்தானத்தில்) சனி மூன்று நிலைப்பாடுகளுமே சரியில்லை

சுகாதிபதி சுக்கிரன் நீசம் (ஆனாலும் அவன் உச்சமான புதனுடன் சேர்ந்து நீசபங்க ராஜ யோகத்துடன் இருக்கிறான்) இரண்டில் சனி இருந்தாலும், அந்த வீட்டின் மேல் அதன் அதிபதியும், தனகாரகனுமான குருவின் பார்வை உள்ளது.

ஆகவே ஓரளவு நிதித் தட்டுப்பாடு இல்லாத ஜாதகம் என்று சொல்லத் தோன்றும். ஆனால் ஜாதகர் மிகப் பெரிய செல்வந்தரானது எப்படி?

ஜாதகத்தில் 26 யோகங்கள் உள்ளன. அவை அனைத்தும் வேலை செய்து ஜாதகரை செல்வத்தின் உச்சத்திற்குக் கொண்டு சென்றன.

யோகங்களின் முக்கியத்துவம் அப்போதுதான் நமக்குப் பிடிபடும்

ஜாதகர் யார் தெரியுமா?

வாரன் பஃபெட் (Warren Buffet) உலகின் இரண்டாவது பெரிய பணக்காரர்.

இந்த ஜாதகத்தை இன்னொரு நாள் விரிவாக அலசுவோம்.

இப்போது சொல்ல வந்த செய்திக்கு வருகிறேன்.

யோகங்களைப் பற்றியும், அதாவது முக்கியமான யோகங்களைப் பற்றி நாம் அறிந்து வைத்திருப்பது அவசியம்.

ஆகவே யோகங்களைப் பற்றி அவ்வப்போது எழுதலாம் என்றுள்ளேன். யோகங்களைப் பற்றிய சில பாடங்களைப் படிக்கும்போது முன்பே படித்ததாகத் தோன்றலாம். புதிதாக நிறையப் பேர்கள் வந்துள்ளார்கள். அவர்கள் படிக்க வேண்டும் என்பதற்காக எழுதுகிறேன். முன்பே படித்த நினைவு வந்தால், தவறில்லை, மீண்டும் ஒருமுறை படியுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
======================================

16.8.25

Astrology: விபரீத ராஜயோகம்

Astrology: விபரீத ராஜயோகம் 

(Reversal of Fortune)

அதென்ன ஸ்வாமி விபரீதம்?

விபரீதம் என்பது சாதாரணமாக இல்லாததும், தவறானதும் ஆகும். விசித்திரமானதாகும்

நடக்கக்கூடாதது நடந்துவிட்டால், அதுவும் இயற்கைக்கு மாறாக நடந்துவிட்டால் 
அதை விபரீதம் என்போம். அதைப்போல கிடைக்கூடாத ராஜயோகம் விபரீதமாகக் 
கிடைத்து விட்டால் அது விபரீத ராஜயோகம்!

அது ஜாதகத்தில் எப்படி ஏற்படும்? அதன் பலன் என்ன?

விபரீத ராஜயோகம் என்பது வழக்கமான ராஜயோகங்களில் இருந்து மாறுபட்டது.

எப்படி மாறுபட்டது?

அனுஷ்கா சர்மா அல்லது பிரியா மணி போன்ற அழகான பெண்ணை நீங்கள் தேர்வு செய்து, கெஞ்சிக்கூத்தாடி,சம்மதிக்க வைத்து, நீங்கள் திருமணம் செய்து கொண்டால், அது  வழக்கமான ராஜ யோகம்

ஆனால், அதே அனுஷ்கா சர்மா அல்லது பிரியா மணி போன்ற அழகான பெண்கள், அவர்களாகவே முன்வந்து, உங்களிடம் கெஞ்சிக்கூத்தாடி, மன்றாடி, உங்களைத் திருமணம் செய்து கொண்டால் அது விபரீத ராஜயோகம்

இன்னும் விளக்கமாகச் சொன்னால், பிரிட்டீஷ்  அரச குடும்பத்தினரே முன் வந்து அவர்கள் வீட்டுப் பெண்ணை,உங்களுக்குத் தாரை வார்த்துக்  கொடுப்பதாகச் சொன்னால், அது விபரீத ராஜ யோகம்.

உதாரணங்கள் போதுமா?




மிதுன லக்கின ஜாதகத்தின் 12ஆம் வீட்டில் சுக்கிரனும், சனியும் ஒன்றாக இருக்கிறார்கள் 
என்று வைத்துக் கொள்ளுங்கள். களத்திரகாரகன் சுக்கிரன் 12ல் மறைந்து, உரிய நேரத்தில் 
திருமணமாவதும் தடைபட்டு, விரும்பும் அளவிற்கு ஒரு மங்கை நல்லாளும் ஜாதகனுக்குக்
கிடைக்கவில்லை என்று வைத்துக் கொள்ளூங்கள். அப்படிப்பட்ட நேரத்தில், ஜாதகனின் 
எட்டாம் வீட்டு அதிபதி சனி 12ல் இருப்பதால் (ஒரு துஷ்ட ஸ்தானத்தின் அதிபதி இன்னொரு
துஷ்ட ஸ்தானத்தில் அமர்வது) அவர் சுக்கிரனின் பென்டை நிமிர்த்தி, ஜாதகனின் திருமணத்தை 
உரிய நேரத்தில் நடத்தி வைப்பதுடன், மயக்கும் அழகுள்ள மங்கையையும் அவனுக்குப் பிடித்துக் 
கொடுத்து விடுவார்.அதுதான் விபரீத ராஜயோகம்

பெண்ணை உதாரணமாகச் சொன்னால்தான் சிலருக்கு மண்டையில் சுறுசுறுப்பாக ஏறும் என்பதற்காக இதைச் சொன்னேன்.

பணம், வேலை, பதவி, செல்வாக்கு என்று எதற்கு வேண்டுமென்றாலும் இந்த யோகம் ஒத்துவரும். அது அங்கே போய் அமரும் துஷ்டனையும், அவன் அடித்து வீழ்த்தும் சம்பந்தப்பட்ட அதிபதி அல்லது காரகனையும் பொறுத்து உண்டாகும்.

ஒரு துஷ்ட ஸ்தானத்தின் அதிபதி, மற்றொரு துஷ்ட ஸ்தானத்தில், ஒரு துஷ்டனுடன் அமர்ந்திருந்தால் இந்த யோகம் உண்டாகும்.

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14.8.25

Astrology: குழந்தை பாக்கியத்திற்கான அஷ்டகவர்க்க ஃபார்முலா இதுதான்.

Astrology: குழந்தை பாக்கியத்திற்கான அஷ்டகவர்க்க ஃபார்முலா இதுதான்.

5ஆம் வீடு
5ஆம் அதிபதி இருக்கும் இடம்
காரகன் குரு இருக்கும் இடம்
ஆகிய மூன்று வீடுகளும்
28 பரல்களுக்கு மேல் இருக்கவேண்டும்
இருந்தால் உடனே குழந்தை பிறக்கும்

இல்லையென்றால்?

அந்த மூன்று வீடுகளில் ஒரு வீட்டிலாவது 28ற்கு மேற்பட்ட பரல்கல்கள் இருக்க வேண்டும்.
அப்படியிருந்தால் தாமதமாகக் குழந்தை பிறக்கும்!

எப்போது பிறக்கும்?

ஐந்தாம் அதிபதி அல்லது காரகன் அல்லது லக்கினாதிபதி ஆகியவர்களின் தசாபுத்தியில் பிறக்கும்.

மூன்று வீடுகளிலுமே நீங்கள் சொல்லும் 28 பரல்கள் இல்லையென்றால்?

அவசரப்படவேண்டாம். 25 முதல் 28 பரல்களுக்குள் இருக்கலாம். சற்றுத்தாமதமாகப் பிறக்கும்.

மூன்று வீடுகளுலும் 25 பரல்கள் இல்லை - அதற்குக் கீழான பரல்கள்தான் உள்ளன என்றால்?

கணவன் அல்லது மனைவி இருவரில் ஒருவருக்கு அந்த வீடுகள் நன்றாக இருந்தால் போதும். அவரை வைத்து - அவருக்காகப் பிறக்கும்!

இருவருக்குமே அப்படியில்லையென்றால்?

கஷ்டம்தான். இறைவனை வழிபடுவதைத் தவிர வேறு வழியில்லை! பூர்வ புண்ணியத்தைச் சொல்லும் திறமை எந்த ஜோதிடனுக்கும் இல்லை. பூர்வ புண்ணிய பலனால் (மேலும் இறைவழிபாட்டால்) எல்லாவற்றையும் பொய்யாக்கிவிட்டுக் குழந்தை பிறக்கும்.

காசில்லாத பரிகார ஸ்தலம் எது?

ராமேஸ்வரம்!

Okayயா?

நட்புடன்
வாத்தியார்

(திருமணமாகாதவர்கள் இந்தப் பாடத்தைப் படித்துவிட்டுக் குழம்ப வேண்டாம். பெண் பார்க்கும்போது மகேந்திரப் பொருத்தம் பார்த்து, அது பொருந்துகின்ற பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளுங்கள்.)

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13.8.25

Astrology : குரு ஜாதகத்தில் எங்கே இருக்க வேண்டும் ?

Astrology : குரு ஜாதகத்தில் எங்கே இருக்க வேண்டும் ?

குரு 1, 5, 9 ஆம் விடுகளில் இருந்தால் உத்தமம். 

லக்கினத்தில் குரு இருந்தால் அதி உத்தமம். ஜாதகன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.

Yes, the native of the horoscope is a blessed person. அவனுக்கு ஜாதகத்தைப் பார்த்துப்

பலன் சொல்ல வேண்டாம். ஜாதகத்தைத் திருப்பிக் கொடுத்துவிடலாம். நல்லதும்

கெட்டதும் கலந்ததுதான் வாழ்க்கை. அவனுடைய வாழ்வில் அது இரண்டும் இருக்கும்.

அந்த இரண்டு சூழ்நிலைகளிலும், குரு அவனுக்குக் கை கொடுப்பார். 

நல்லதிற்குக் கை கொடுக்க யாரும் வேண்டியதில்லை. ஆனால் கெட்ட சூழ்நிலையில்

நமக்குக் கை கொடுக்க ஒருவராவது வேண்டும். அந்த ஒருவராகக் குரு பகவானே

வந்து நிற்பார் எனும்போது வேறு என்ன வேண்டும்? 

வந்து நிற்பார் என்றால் என்ன பொருள்? 

The native is self equipped to stand in any situation! 

அது முக்கியம். 

அதேபோல 7ல் குரு இருந்தாலும் நல்ல பலன். இரண்டு விதமான பலன். அவர்

லக்கினத்தைத் தன் கண்பார்வையில் வைத்திருப்பதோடு, ஜாதகனுக்கு அல்லது

ஜாதகிக்கு நல்ல வாழ்க்கைத் துணையைத் தேடிக் கொடுப்பார். 

நீ பாதி; நான் பாதி கண்ணேஎன்று ஜாதகன் பாடிக் கொண்டிருப்பான்

(திருமணத்திற்குப் பிறகுதான்) 

அதேபோல 5ஆம், வீடு அல்லது 9ஆம் வீடுகளில் குரு இருந்தாலும் சிறப்புத்தான்.

5ல் இருந்து தனது விஷேச பார்வையான 9ஆம் பார்வையாக லக்கினத்தை அவர்

தன் கண்ணில் வைத்திருப்பார். 9ஆம் வீட்டில் இருந்தாலும், தனது 5ஆம்

பார்வையால், அவர் லக்கினத்தைத் தன் கண்ணில் வைத்திருப்பார். 

9ல் குரு இருந்தால் ஜாதகனுக்கு நல்ல தந்தை கிடைப்பார். பூர்வீகச் சொத்துக்கள்

கிடைக்கும். 5ல் குரு இருந்தால் ஜாதகன் அறிவு ஜீவியாக இருப்பான்.

(Guru is the authority for keen intelligence).

 கல்வி நான்காம் வீடு; அறிவு ஐந்தாம் வீடு. அதனால்தான் படித்த முட்டாளூம்

இருக்கிறான். படிக்காத மேதையும் இருக்கிறான்.

அன்புடன்

வாத்தியார்

 

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!