மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

29.3.22

ஆன்மிகம்: கண்ணனுக்கும் கிருஷ்ணனுக்கும் வித்தியாசம் என்ன?



ஆன்மிகம்: கண்ணனுக்கும் கிருஷ்ணனுக்கும் வித்தியாசம் என்ன?

*இரண்டிற்கும் வித்தியாசம்,*
*வயது மட்டுமே...*

35 , வருடங்களுக்கு முன்னாள் பள்ளி பருவத்தில், எனது ஆசிரியர் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார்......

கிருஷ்ணருக்கும், கண்ணனுக்கும், என்ன வித்தியாசம் என்று...,

அதற்கு ,
நான் சொன்ன பதில்...,.

இரண்டிற்கும்...
*வயதுதான் வித்தியாசம் என்றேன்.....*

கண்ணன் என்பது செல்ல பெயர். 
குழந்தை பருவம்.

கிருஷ்ணன் என்பது வளர்ந்த  பிள்ளை.  
இரண்டிற்கும் , வயதுதானே வித்தியாசம்

சின்ன உதாரணம்...

ஒருநாள், நான் ...

முகம் முழுக்க சோப்பு தேய்த்து , 
குளித்துக் கொண்டிருந்தேன். 

திடீர் என்று , பக்கத்தில் வைத்திருந்த தண்ணீர் சொம்பை காணவில்லை.  கண்ணை திறக்க முடியாமல், 
இரண்டு கையாலும், 
என்னை சுற்றி , சுற்றி, 
சொம்பை, தேடினேன். 

அப்போது ,..எனது குழந்தை சிரிக்கும் சப்தம் கேட்டது.  

எனக்கு புரிந்து விட்டது. 

 சொம்பை அவள் தான் வைத்திருக்கிறாள் என்று. 

 எனக்கு , கண் எரிகிறது 
என்று அவளுக்கு தெரியவில்லை. 

 நான் , சொம்பை தேடுவதில்,
 அவளுக்கு ஒரு ஆனந்தம். 

இதுதான்....
குழந்தையின் குறும்பு. என்பது.

தற்போது , எனது கண்ணில் , 
ஒரு தூசி  விழுந்தாலும்
அவள் கண்ணில் நீர் வடிகிறது.  

இரண்டிற்கும் , வித்தியாசம் வயது மட்டுமே....

மகாபாரதத்தில், கண்ணன் சிறு குழந்தையாக இருக்கும் போது....

கோபிகளின் ஆடைகளை , 
மறைத்து வைத்து... 
அவர்கள் தேடுவதை கண்டு 
ஆனந்தப் பட்டான்.

அதே கண்ணன்
கிருஷ்ணனாக  மாறும் போது.... 

மேலாடை இன்றி ஒரு பெண் தவிக்கும்போது...
மேலாடையை அவளுக்கு கொடுத்து, 
அவள் மானத்தைக் காத்து நின்றான்..

இரண்டிற்கும் வித்தியாசம் ,
வயது மட்டுமே.....

கண்ணன்  சிறு பிள்ளையாக இருக்கும்போது....

நண்பர்களுடன் , பக்கத்து வீட்டில் வெண்ணெயை திருடி தின்றான். 
தாய் கேட்கும் போது...
நான் திருடவே இல்லை என , 
பொய்யும் சொன்னான்...

அதே கண்ணன்
கிருஷ்ணனாக மாறும் போது....

திருடுவது கூடாது....
பொய் சொல்வது கூடாது , 
என  கீதை உபதேசம் செய்தார்....

இரண்டுக்கும் வித்தியாசம் வயது மட்டுமே.

*அருமையான கருத்துக்கள் செரிந்த பதிவு.* 
-----------------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com