மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

25.3.22

தேசத்தை ஈர்த்த தமிழன் - கண்ணதாசன்*  


தேசத்தை ஈர்த்த தமிழன் - கண்ணதாசன்*
 
*ஊராண்டு நாடாண்டு*
* உயர்வான மேதைகளின்*
* உள்ளத்தை ஆண்ட மனிதன்*
 
*உடலாண்டு மனம் ஆண்டு*
* ஒரு தொண்ணூற்றைந்தாண்டு*
* உலகத்தில் வாழ்ந்த அறிஞன்*
 
*சீராண்டு வேதாந்த*
* சித்தாந்த மெய்ஞானம்*
* சேர்த்தாண்ட ஞானமுனிவன்*
 
*தெளிவோடு பலவாண்டு*
* தென்னாட்டு மாந்தர்க்குத்*
* தெய்வத்தை சொன்ன கலைஞன்*
 
*நூறாண்டு வாழாது*
* ஐந்தாண்டு குறைவாகி*
* நோயாண்டு மாண்ட தெனவோ?*
 
*நுவலரிய பொருள்கள் தரும்*
* வலிமைமிகு கீதையெனும்*
* நூலாண்ட பரந்தா மனே !*
 
*ஊராட்சி என்றாலும்*
* நகராட்சி என்றாலும்*
* ஒழுக்கத்தை வேண்டும் ஒருவன்*
 
*ஒருபோதும் தன் கட்சி*
* நிருவாகத் தலையீட்டை*
* ஒப்புக் கொள்ளாத தலைவன்*
 
*சீரான அரசாட்சி*
* சிலகாலம் செய்தாலும்*
* திறமாகச் செய்த புனிதன்*
 
*தென்னாட்டு மாந்தர்தம்*
* திறமைக்கு சான்றாகி*
* தேசத்தை ஈர்த்த தமிழன்*
 
*தேராத நூலில்லை*
* தெளியாத பொருளில்லை*
* சென்றோடி விட்ட தெனவோ?*
 
*செழுமை மிகு பொருள்கள்தரும்*
* அழகு மிகுகீதையெனும்*
* தேர்தந்த பரந்தா மனே !*
 
*வாழ்வாங்கு வாழ்வாரைத்*
* தெய்வத்துள் வைக்குமொரு*
* வையத்து வாழு மனிதா*
 
*வையத்துள் இராஜாஜி*
*வாழ்வுக்குச் சான்றாக*
* வாழ்வொன்று எங்கும் உளதா?*
 
*ஊழோங்கி உயிர்வாங்கி*
* உடல்கூடென் றானாலும்*
* உள்ளத்தைக் காலம் வெலுமோ?*
 
*ஒருகோடி வருடங்கள்*
* ஓடட்டும்; அவர்சொன்ன*
* உரைகூட ஓடிவிடுமோ?*
 
*தாழாத பணியென்றும்*
* தமதென்ற இராஜாஜி*
* தருமங்கள் வாழும் தினமே !*
 
*தனது நிகர் இல்லாத*
* இனியதொரு கீதையெனும்*
* தாய்தந்த பரந்தா மனே !*
 
*மாபார தத்தினிலும்*
* இராமாயணத்தினிலும்*
* மனமார மூழ்கி நீந்தி*
 
*மனநீதி பொய்யாது*
* மறைநீதி அகலாது*
* வாழ்ந்தார்க்கு ஆத்ம சாந்தி*
 
*பூபாரம் ஏற்றானை*
* புகழ்ப்பாரம் கொண்டானை*
*பொழுதென்றும் வாழ்த்து மனமே!*
 
*பொய்யாத மானிடர்கள்*
* இவர்போல சிறிதேனும்*
* பொன்னாட்டில் வருக தினமே !*
 
*கோபாலன் ஆவிக்கு*
* மாறாத அமைவொன்று*
* குறையாது தருக வரமே !*
 
*குணமுடைய பொருள்கள் தரும்*
* நலமுடைய கீதையெனும்*
* கொடைதந்த பரந்தா மனே !*
 
*- கண்ணதாசன்*
---------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்’
==========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com