மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

7.3.22

மிகவும் கடினமான படிப்பு எது?


மிகவும் கடினமான படிப்பு எது?

வேத பாடசாலைகளில் படிப்பதுதான் கடினமான படிப்பு ஆகும்! என்ன கடினம் என்றுன் வாருங்கள் பார்ப்போம்!!!!

"வேத பாடசாலைகள்”

காலையில் பழையது,அல்லது உப்புமா, மதியம் சாதாரண ஒரு கறியுடன் சாப்பாடு..மாலையில் கரைத்து குடிக்கும் மதிய சாதம்.. இரவு மதியம் வடித்த அதே சாதம்.. உப்புமா.. காபி, டீ, பால், தோசை, இட்லி எதுவும் கிடையாது..

வருடம் சித்திரை மாதம் மட்டும் 15 நாள் லீவு ஊருக்கு போய் வரலாம்.. ஆனால் அங்கும் தினமும் எல்லா அனுஷ்டானம்களும் செய்யணும்.. சுமார் 2 மணி நேரம் பாடம்..
பின் 6 மணி நேரம் சந்தை சொல்லணும்..

மிக மிக கடினமான படிப்பு..கண்டிப்பு மிக அதிகம்..

நீங்க நினைத்த உடை உடுத்த முடியாது..

இந்த பால வயதில் அவங்க உடையை அவங்களே துவைத்து கொள்ள வேண்டும்.
.
விளையாட வேண்டிய வயசுல விளையாடாம, மற்ற பசங்க மாதிரி ரொம்ப நேரம் தூங்கிட்டு மெதுவா எழுந்திருக்காம..சீக்கிரம் தூங்காம லேட்டா தூங்கிட்டு, அம்மா, அப்பா, சித்தி, சித்தப்பா, பெரியம்மா, பெரியப்பா, தாத்தா, பாட்டி, அக்கா, தங்கை, இப்படி எல்லோரையும் விட்டுட்டு...

ஒரு டிவி உண்டா?

சினிமா உண்டா?

பொழுது போக்கு உண்டா?

ஜாலியா லீவுல ஊர் சுற்றினோம்னு உண்டா?

இப்படி எதுவுமே கிடையாது இந்த பசங்களுக்கு.. வருஷத்துல ஒரு தடவையோ இரண்டு தடவையோ தான் விடுமுறை இவங்களுக்கு..

தீபாவளி சமயத்துலயும், மே மாதத்துலயும் மட்டுமே இவர்கள் தாய் தகப்பனாருடன் சேர்ந்து வாழ முடியும்.. கிட்டத்தட்ட 8 அல்லது 10 வருடங்கள் வரை குடும்பம், உற்றார் உறவினரை பிரிந்து வேதம் கற்க வேண்டும்..

விவரம் அறியாத வயசுல வேதத்தை தவிர வேற ஒன்னுமே உலகம் இல்லை.. அப்படின்னு நினைச்சுட்டு வேதம் படிக்க வர்ற பசங்களை நினைச்சு பாருங்களேன்..

தவ வாழ்க்கை அல்லவா இது..!!

எழுதாக்கிளவியான அதாவது எழுத்து வடிவில் இல்லாத, வேதத்தை பதம், க்ரமம், ஜடை மற்றும் கனம் என பிரித்து அத்யயனம் (மனனம்) செய்யும் முறையிலும் விதிக்கப்பட்ட கட்டுக்கோப்பான ஸ்வரங்களின் படி ஓதும் முறையிலும் ஒரு வார்த்தை கூட ஏன் ஒரு அக்ஷரம் கூட கூட்டவோ குறைக்கவோ இயலாது என்ற அளவுக்கு மிகக் கவனமாக தலைமுறை தலைமுறையாக ஓதப்பட்டு வருகிறது.

எதற்காக என்றால் லோக ஷேமத்துக்காக..

இந்த வேத விருட்சம் நன்றாக வளர நாமெல்லாம் நீர் ஊற்ற வேண்டும்..உரமிட வேண்டும்.. இவர்களைக் காக்க வேண்டும்..

தேசத்துக்காக ஒரு மகனைத் தருவதும் வேதத்துக்காக ஒரு குழந்தையைத் தருவதும்.. இரண்டுமே தியாகம் தான்..

நாட்டு எல்லையில் இருந்து கொண்டு ஒரு வீரன் எதிரிகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுகிறானே அதே போல ஊருக்குள் இருந்து கொண்டு வேதம் படித்த ஒருவன் துஷ்ட சக்திகளிடம் இருந்து நம்மைக் காப்பாற்றுகிறான்...

பணம் இருந்தால் என்ன படிப்பு வேண்டுமானாலும் படிக்கலாம்...

ஆனால் வேதம் படிக்க வேண்டுமானால் தாய் தகப்பன் புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே குழந்தைகள் வேதம் படிக்க முடியும்....!!

மனதை நனைத்த பதிவு
--------------------------------------
படித்ததில் மனதில் பதிந்த பதிவு; பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
=============================================================


வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com