மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

23.2.22

அவருக்குத் தெரியும் யாரை எங்கே வைக்க வேண்டும் என்று!!!!










அவருக்குத் தெரியும் யாரை எங்கே வைக்க வேண்டும் என்று!!!!

யாரை எப்படி எங்கு எப்பொழுது சேர்க்க வேண்டும் என்பது கடவுளுக்கு நன்கு தெரியும்.....

ஒரு கோவிலில் ஒரு அர்ச்சகர் இருந்தார்... அந்த கோவிலின் பின் பகுதியில் ஒரு பூனைக்குட்டி சில நாட்களாக சுற்றி வந்தது... அந்த அர்ச்சகர் அதற்கு பால் ஊற்றி பாதுகாத்து வந்தார்...ஒரு நாள் அந்த பூனை குட்டி மரத்தின் உச்சியில் ஏறி உட்கார்ந்து கொண்டு கீழே இறங்க பயந்துகொண்டு இருந்தது...அர்ச்சகரும் பாலை கீழே வைத்து அழைத்து பார்த்தார்... ஆனால் அது கீழே இறங்க பயப்பட்டது...அர்ச்சகர் என்ன செய்யலாம்
என்று யோசித்தார்... 

 மரத்தின் மேல் ஏறும் அளவிற்கு மரகிளை வலிமையானதல்ல... எனவே ஒரு கயிற்றை கொ்க்கியுடன் வீசி மர கிளையை கயிற்றை பிடித்து இழுத்து வளைத்தால் பூனை குதித்து விடும் என்று யோசனை செய்த்து அது படி செய்தார்...கயிறை இழுக்க கிளை வளைந்து கீழ் நோக்கி வந்தது... ஆனால் கொக்கி வழுக்கிவிடவே கிளை வேகமாக தன்னிலைஅடைய பூனைக்குட்டி தூக்கி
எறியபட்டு கண்ணை விட்டு மறைந்தது...அர்ச்சகர் தன்னால் முடிந்த வரை பூனை குட்டியை தேடினார்... கிடைக்கவில்லை...மனம் வருந்தி இறைவனிடம் தான் செய்த தவறால் பூனைக்குட்டிக்கு ஆபத்து நேர்ந்ததற்கு மன்னிப்பு கேட்டார். அடுத்த நாள் அவர் கோவிலுக்கு வரும் ஒரு பெண்ணை மளிகைகடையில் கண்டு நலம் விசாரித்தார். அந்த பெண் கூடையில் பூனைக்கான பிஸ்கட் இருப்பதை பார்த்து வீட்டில் பூனை வளர்கிராயா என்று கேட்டார்... 

அந்த பெண் இல்லை சாமி என் மகள் இரண்டு நாட்களாக பூனை குட்டி வேண்டும் வளர்க்க என்று என்னிடம் கேட்டாள்... நான் மறுக்கவே அவள் அழுக ஆரம்பித்தாள்... நானும் அவளை சமாதானப்படுத்த கடவுளிடம் பூனை குட்டி கேள்... அவர் கொடுத்தால் நாம் வளர்த்தலாம் என்று சொன்னேன்... என் குழந்தை உடனே அங்கேயே கண்னை மூடி பூனைக்குட்டி வேண்டி பிரார்த்திக்க ஆரம்பித்தாள்.. என்ன ஆச்சரியம்... ஒரு பூனைகுட்டி ஆகாயத்தில் கால்களை விரித்த படி பறந்து வந்து குழந்தை காலடியில் விழுந்தது... பிறகு அதை எடுத்து பால் கொடுத்து வளர்க்கிறோம் என்று சொன்னாள்... அர்ச்சகர் கடவுளின் லீலையை மனதில் எண்ணியபடி கடவுளின் கருணையே கருணை என்று சொல்லி நகர்ந்தார்.......

நீதி : யாரை எப்படி எங்கு எப்பொழுது சேர்க்க வேண்டும் என்பது கடவுளுக்கு நன்கு தெரியும்...!

படித்தேன்; பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
=============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com