மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

30.6.19

Astrology: ஜோதிடம்: 10-5-2019ம் தேதி புதிருக்கான விடை!!!!


Astrology: ஜோதிடம்: 10-5-2019ம் தேதி புதிருக்கான விடை!!!!

ஒன்றிற்கு இரண்டு ஏன்?

அன்பர் ஒருவரின் ஜாதகத்தைக் கொடுத்து, ”ஜாதகருக்கு இரண்டு முறை திருமணம் (That is more than one marriage) 25 வயதில் முதல் திருமணம். 37வது வயதில் மனைவி இறந்து விட்டார். 40 வது வயதில் 2வது முறையாக திருமணம் செய்து கொண்டார். ஜாதகப்படி இருதார மனத்திற்கு என்ன காரணம்? ஜாதகத்தை அலசி நீங்கள் பதில் சொல்லுங்கள்!” என்று கேட்டிருந்தேன்.

சரியான விடை:
கன்னி லக்கினம். லக்கினாதிபதி நீசம். அத்த்துடன் எட்டாம் அதிபதியுடன் சேர்க்கை. மேலும் 7ம் அதிபதியும் எட்டாம் அதியும் பரிவர்த்தனை. அது நன்மையான பரிவர்த்தனை அல்ல! 2ல் சனி. குடும்ப வாழ்க்கையில் பிரச்சினை. 7ம் அதிபதி 8ல் அது மனைவிக்கு கேடானது.
ஜாதகருக்கு துவக்கத்தில் சுமார் 11 ஆண்டுகள் சனி மகா திசை. பிறகு 17 ஆண்டுகள் புதன் மகா திசை (லக்கினாதிபதியின் திசை) அதில் திருமணம் நடந்தது.  பிறகு வந்த கேது மகா திசையில் மனைவி நோய் வாய் பட்டு இறந்து விட்டார். பிறகு சுக்கிர மகாதிசை குரு புத்தியில் இரண்டாவது திருமணம் நடைபெற்றது.

இந்த புதிர் போட்டியில் 15 அன்பர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது உடல் நிலை காரணமாக பதிலை வழங்குவதில் அதீத தாமதம் ஏற்பட்டது. அதற்காக அனைவரும் மன்னிக்க வேண்டுகிறேன்!!!!

அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------
1
Blogger dhanasekar said...
2 la sani so family life affecte and 7 chavvay so shevvay thosam
Friday, May 10, 2019 11:18:00 AM
----------------------------------------
2
Blogger csubramoniam said...
ஐயா,கல்விக்கான பதில்
1 .இரண்டில் சனி
2 .லக்கினாதிபதி புதன் லக்கினத்தை நேரடி பார்வையில் வைத்துள்ளார்
2 .எட்டாம் அதிபதி செவ்வாயின் பிடியில் புதன்
3 . செவ்வாயின் நேரடி பார்வையில் இரண்டாம் வீடும் லக்கினமும்
௪.இரண்டாம் அதிபதி சுக்ரன் தன வீட்டை நேரடி பார்வையில் வைத்துள்ளார் (காரகன் பாபா நாசம் )
தங்களின் பதிலை ஆவலுடன்
நன்றி
Friday, May 10, 2019 3:44:00 PM
--------------------------------------
3
Blogger kmr.krishnan said...
ஜாதகர் 7 மார்ச் 1953 அன்று மாலை 7 20 போல் பிறந்தவர். பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக் கொண்டேன்.
7ம் இடமான மனைவிக்கான இடம் 8ம் அதிபனால் நிரப்பப் பட்டுள்ளது. 7ம் அதிபன் 8ல் சென்று அமர்ந்தார். இது பரிவர்தனை என்றாலும் மனைவிக்கு ஆகாது.எட்டாம் அதிபனுக்கும் களத்திரகாரகனுக்கும் சனியின் பார்வை.
ஜாதகருக்கு புதன் தசா(லக்கினாதிபதி தசா, குருபுக்தியில் 7ம் அதிபன் புக்தியில்) 25 வயதில் திருமணம் நட‌ந்தது. லக்கினாதிபதியும் 7ல் நின்றதால் அந்த திருமணம் நடந்தது.
அதன் பின்னர் கேது தசாவில் 7 ஆண்டுகள். மனைவிக்கு நோய் வாய்ப்பட்ட நிலை இருந்திருக்கும். ஏனெனில் மனைவிக்காகப் பார்க்கப்பட வேண்டிய 3,7,11 ஸ்தானங்களில் 11ல் கேது. 11ம் அதிபதி சந்திரன் 3ல் அமர்ந்து மாந்தியுடன் நீசம்,இவையெல்லாம் சேர்ந்து முதல் கல்யாணம் சோகத்தில் முடிந்தது.
சுக்கிரன் குருவுடன் சேர்ந்து குடும்ப ஸ்தானமான இரண்டைப் பார்ப்பது மீண்டும் திருமணத்தை நடத்திவைத்தது.அது சுக்கிரத்சா சுக்கிர புக்தி யில் நடந்தது.சுக்கிரன் இரண்டாம் அதிபதியும் ஆனதால் அவர் பார்வையும் 7ம் அதிபன் பார்வைய்ம் குடும்ப ஸ்தானத்தினைப் பார்ப்பதால் மீண்டும் குடும்பம் அமைந்தது. சுக்கிர தசாவும் உத‌வியது.
Friday, May 10, 2019 4:12:00 PM
-----------------------------------------
4
Blogger ஐ எஸ் ஃபெர்னாண்டோ said...
ஆசிரியர் அவர்களுக்கு
ராசியில் நீசம் அடைந்த லக்னாதிபதி புதன், அஷ்டமாதிபதி செவ்வாயுடன் இணைந்தாலும், அம்சத்தில் அவர் உச்சம் பெற்று, சந்திரனுடன் கூடி வலுப் பெற்றுள்ளார். களஸ்திர ஸ்தானாதிபதி குரு எட்டில் மறைந்தாலும், செவ்வாயுடன் பரிவர்த்தனை பெற்று, ஆட்சி பலம் அடைந்துள்ளார். களஸ்திர காரகன் சுக்கிரன் அம்சத்தில் ஆட்சி வலுப் பெற்றுள்ளார். எனவே, லக்னாதிபதி புதன் தசையில், களஸ்திர ஸ்தானதிபதி குரு புக்தியில் திருமணம் நடந்தது.
ஏழில் செவ்வாய் அமர்ந்ததும், ஏழுக்கு உடையவன், பரிவர்த்தனை பெற்றாலும், 8-ல் மறைந்ததும், வர்கோத்தம உச்சம் பெற்று அளவுக்கு மீறிய கெடுவலு பெற்ற சனி களஸ்திர காரகன் சுக்கிரனையும் ஏழுக்குரிய குருவையும் பார்த்ததாலும், ராசிக்கு ஏழுக்குடைய சுக்கிரன் ராசிக்கு ஆறில் மறைந்ததாலும், சுக்கிர தசை சுய புக்தியில் ஜாதகர் மனைவியை இழந்தார். ஜாதகத்தில் குடும்ப, புத்திர ஸ்தானங்கள் கெட்டுள்ளதும், ராசிக்கு 2, 5-ம் அதிபதியும், குடும்ப, புத்திர காரகனான குரு ராசிக்கு 6-ல் மறைந்ததும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பதினொன்றாம் வீட்டதிபதி சந்திரன் நீசம் அடைந்தாலும், அம்சத்தில் அவர் உச்ச புதனோடு இணைந்து வலுப் பெற்றுள்ளார். ஆகவே, ஜாதகருக்கு சுக்கிர தசை, சுய புக்தி இறுதியில் மறுமணம் நடந்தது. - ஐ எஸ் ஃபெர்னாண்டோ
Saturday, May 11, 2019 12:18:00 PM
-----------------------------------------
5
Blogger Ram Venkat said...
ஜோதிடம்: ஒன்றிற்கு இரண்டு ஏன்?
ஆசிரியருக்கு வணக்கம்.
கன்னி லக்கினம், விருச்சிக ராசி ஜாதகர்.
ஜாதகருக்கு இரண்டு முறை திருமணம் நடந்தது. 25 வயதில் முதல் திருமணம். 37வது வயதில் மனைவி இறந்து விட்டார். 40 வது வயதில் 2வது முறையாக திருமணம் செய்து கொண்டார். ஜாதகப்படி இருதார மணத்திற்கு என்ன காரணம்?
1) லக்கினாதிபதி புதன் 7ல் நீசமடைந்து அட்டமாதிபதி வர்கோத்தம‌ செவ்வாயுடன் கூட்டணியில் கத்திரியின் பிடியுலுள்ளார்.
2) களத்திராதிபதி குருவும், குடும்பாதிபதி சுக்கிரனும் 8ல் மறைவு ஸ்தானத்தில் அமர்ந்துள்ளனர்.
3) குடும்ப ஸ்தானமான 2ல் உச்சமடைந்த வக்கிர வர்கோத்தம சனி அமர்ந்துள்ளார். அவரின் நேர் பார்வையில் களத்திர குரு மற்றும் குடும்ப சுக்கிரன்.
4) அட்டமாதிபதி செவ்வாயின் 8ம் தனிப்பார்வை 2மிடம் மற்றும் அதிலுள்ள சனியின் மேலுள்ளது.
6) 2மிடத்திற்கு 22 பரல்கள், 7மிடத்திற்கோ 20 பரல்கள் மட்டுமே.
மேற்கண்ட காரணங்களால், ஜாதகர் தன் 37 வயதில் வந்த சுக்கிர தசை, சுக்கிர புத்தி, சனியின் அந்தரத்தில் முதல் மனைவியை இழக்க நேரிட்டது.
7ம் அதிபதி குரு பகவான், 8ல் மறைந்து அட்டமாதிபதி வர்கோத்தம செவ்வாயுடன் தைன்ய பரிவர்த்தனையில் கெட்டு வலுவிழந்ததால் (சுய பரல் 4), ஜாதகருக்கு இரு தார தோசம் உண்டானது. 40 வயதில் சுக்கிரன் தசை, சந்திரன் புத்தியில் இரண்டாவது திருமணம் நடைபெற்றது.
வாத்தியாரின் அலசல் விடைக்கு காத்திருக்கும்,
இராம. வெங்கடேஷ்.
Saturday, May 11, 2019 3:18:00 PM
-----------------------------------------------
6
Blogger வகுப்பறை said...
7இல் எட்டாம் இட அதிபதி மற்றும் விரயாதிபதி நீசபுதன் ஆகியோரின் பாதிப்பு.
களத்திர காரகன் மற்றும் களத்திர காரகாதிபதி எட்டில் மறைவு, இவர்கள் மேல் சனியின் பார்வை.
7-8 அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றது காரணம் ஆகும்.
Sunday, May 12, 2019 8:55:00 AM
------------------------------------------
7
Blogger P. CHANDRASEKARA AZAD said...
வணக்கம்
தங்கள் கேள்விக்கான பதில்
இரண்டு திருமணங்கள் ஏற்பட்ட திற்கான காரணங்கள்
ஏழாம் இடத்து அதிபதி குரு மற்றும் எட்டாம் இடத்து அதிபதி செவ்வாய் பரிவர்த்தனை. , இது கேடு விளைவிக்கும் பரிவர்த்தனை ஆகும்.
ஏழாம் இடத்தில் லக்கின அதிபதி புதன் நீசம். மேலும் எட்டாம் இடத்து அதிபதி செவ்வாயுடன் கூட்டு. இது முதல் திருமணத்தை காலி செய்தது.
இரண்டாம் இடத்தில் சனி உச்சம் பெற்று , களத்திர காரகன் சுக்கிரன் மற்றும் குருவின் பார்வை பெற்றதால் இரண்டாம் திருமணம் நடைபெற்றது.
நன்றி
இப்படிக்கு
ப. சந்திரசேகர ஆசாத்
Monday, May 13, 2019 10:23:00 AM
-------------------------------------------------
8
Blogger classroom2007 said...
இரண்டில் சனி இருந்தால் - இரண்டு விவாகம் அல்லது இரண்டு குடும்பங்கள்
ஏழாம் வீட்டில் தீய கிரகம் செவ்வாய் அமர்ந்து இருப்பதால் முதல் திருமணம் பிரிவில் முடிந்தது.
லக்கினாதிபதி புதன் 7ல் மீனா ராசியில் நீசம்.
Monday, May 13, 2019 10:57:00 PM
---------------------------------------------
9
Blogger Raman Santhanam said...
Dear Sir.,
I am waiting for the complete predictions, but not recd yet, Please advise.
Tuesday, May 14, 2019 9:50:00 PM
------------------------------------------------
10
Blogger Unknown said...
வணக்கம் ஐயா.வியாழன் மற்றும் செவ்வாய் பரிவர்த்தனை பெற்றதால் உபய லக்னத்திற்கு கேந்திராதிபத்திய தோசம். இரண்டாம் அதிபதி மற்றும் ஏழாம் அதிபதி எட்டில் மறைந்து வர்கோத்தம உச்ச பலம் பெற்ற ஆறாம் அதிபதி சனியின் பார்வை.எட்டாம் அதிபதி செவ்வாய் எழில் வர்கோத்தம பலம் பெற்றதும், ஆறாம் அதிபதி சனி குடும்ப ஸ்தானத்தில் உச்ச வர்கோத்தம பெற்றதும் முக்கியமான காரணம்.
குறிப்பு.பதினோராவது அதிபதி நீசம் மற்றும் பதினோராம் இடத்திற்கு சனி பார்வை.
நன்றி.
அருள்.
Wednesday, May 15, 2019 12:21:00 PM
------------------------------------------
11
Blogger Unknown said...
Sir, 3rd Lord in 7th house indicates more than one marriage
Friday, May 17, 2019 3:54:00 PM
-------------------------------------------
Blogger kmr.krishnan said...
Sir how are you ? We are anxious. You are absent for more than a week!!
Sunday, May 19, 2019 8:32:00 AM
---------------------------------------------
12
Blogger Vaalga valamudan-Saravanan said...
வியாழன் மற்றும் சுக்கிரன் இணைவு, இந்த அமைப்பு கண்டிப்பாக திருமணத்தில் தீமையினை செய்யும்...இவர் இருவரும் ஒருவரை ஒருவர் பங்கப்படுத்தி பலவீனமடைவார்கள். இந்த இருவரையும் உச்ச சனி நேரிடையாக பார்த்து, மேலும் பலம் குறைந்து திருமண பந்தம் சீக்கிரத்தில் முடிவுற்றது...
Friday, May 31, 2019 5:44:00 PM
---------------------------------------------------------------------
13
Blogger Selvaraj said...
1) 2m edathil Sani ucham parukirar.
2) 7m edathu athipathi 8il maraigirar + Sani 7m parvaiyaga parkirar.
3) kalatharakaragan sukiran 8il maraigirar + Sani 7m parvaiyaga parkirar.
4) 7m edathil erukkum sevvai, 2m edathil erukkum saniyai 8m parvaiyaga parkirar.
5) 7m edathil sevvai + buthanudan erukirar. Buthan erattai Graham nu solluvanga, athuvum oru karanamaga erukkalam.
6) sevvaiyum, Guruvum parivarthanai yogam nu vachikita (8il sevvai ucham, sani - sevvai sarkai + 7m parvaiyaga parkirargal
Nan kuriyathil thavaru erunthal mannikkavum.
Sunday, June 02, 2019 10:31:00 AM
--------------------------------------------------
14
Blogger Santhanam Salem said...
விருட்சிக ராசியிலேயே லாபஸ்தான அதிபதி சந்திரன் நீசபங்கம் பெறுகின்ற நிலை
ஒருவரின் ஜாதகத்திலே களத்திரம் எனப்படுகின்ற 7 ஆம் இடம் சூரியன், சனி, செவ்வாய், சுக்கிரன் போன்ற கிரகங்களின நிலை அமைவதும் களத்திரஸ்தான நிலைக்கு உரிய கிரகம் நீசபங்க நிலை பெறுவதும் இரு தாரப் பலன் கொடுக்கும்.
அதேபோல் சூரியன், செவ்வாய், சேர்க்கை, சுக்கிரன், குரு சேர்க்கை என அமையும் நிலையும் இரு தாரப் பலன் கொடுக்கும் நிலை உண்டு.
4 ஆம் அதிபதிக் கிரகம், களத்திரஸ்தானக் கிரகம் 8 ஆம் இடம் மறைவு நிலை.
செவ்வாய் தோஷமுடன் அட்டமாதிபதிக் கிரகம் களத்திரஸ்தான நிலையிலே அமைவதும் சுக்கிரனும் சனியும் சேர்க்கை பெற்று அமைந்தாலோ அல்லது பார்வை பெற்றாலோ இருதாரப் பலன் கொடுக்கும் நிலையுண்டு.
Santhanam, salem
Tuesday, June 04, 2019 9:13:00 PM
-----------------------------------------------
15
Blogger Umaganesh said...
ஏழாம் வீட்டில்) இரண்டு
தீய கிரகங்கள் சேர்ந்திருந்தால் ஜாதகனுக்கு அலலது
பெண்ணாக இருந்தால் ஜாதகிக்குத் தீமை.
அது களத்திர ஸ்தானம். திருமண வாழ்க்கைக்கான
இடம் அங்கே பெண் ஜாதகத்தில் இரண்டு தீய
கிரகங்கள் இருந்தால் அவளுடைய மண வாழ்க்கை
போராட்டம் மிகுந்ததாக இருக்கும். நிம்மதியில்லாத
மண வாழ்க்கை அமைந்து விடும.
அந்த இடம் குருவின் பார்வை பெற்றிருந்தால் அந்தத்
தீமை குறைந்து விடும் அல்லது முற்றிலும் விலகி
விடும். குரு பார்ககக் கோடி தோஷம் நீங்கும் என்
கிறார்களே அதுதான் இது!
ஆண் ஜாதகமாக இருந்தால் இதே அமைப்பிற்கு
அவனுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட பெண்களுடன் தொடர்பு
ஏற்பட்டு விடும் ( தொடர்பு ஏற்பட்டால் சந்தோஷமா?
அல்ல!) ஆரம்பத்தில் அவனுக்கு அது சந்தோஷமாகத்தான்
இருக்கும். பின்னால் அவஸ்தையாக மாறிவிடும்###
இது உங்களின் ஒரு பழைய பதிவில் படித்தேன்.இதுவாக இருக்குமோ என ஊகிக்கிறேன்.
Wednesday, June 05, 2019 7:08:00 PM
==============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

3 comments:

  1. வணக்கம்.
    நீங்கள் முருகன் அருளால் முழுமையாக உடல் நலமடைந்து வழக்கம் போல பணிக்கு திரும்பியது மகிழ்ச்சி. அதனால் ஏற்பட்ட கால தாமதத்திற்கு நீங்கள் மன்னிப்பு கேட்பது சரியல்ல.
    தாங்கள் மேலும் மேலும் பல நல்ல பாடங்களை கற்றுத் தர வேண்டும் என்று எல்லாம் வல்ல முருகப்பெருமானை பிரார்த்திக்கிறேன்- இரா. வெங்கடேஷ்.

    ReplyDelete
  2. இப்போதெல்லாம் பக்தி பாடல் பதிவு வருவதில்லையே அய்யா..

    பின்வரும் பாடலெல்லாம் வந்ததாக நான் காணவில்லையே அய்யா...

    1) எந்தன் குர‌லில் இருப்பதெல்லாம் கந்தன் குரலே..
    2) எனக்கும் இடம் உண்டு அது மனக்கும் முருகன் மலரடி நிழலில்..
    3) உன்னையும் மறப்பதுன்டோ..
    4) செந்தூர் செல்லும் தென்றல் காற்றே முருகனை கான்பாயோ...

    ஆடும் மயிலே என்மேனி அதில் அழகிய தோகை என் உள்ளம்
    நான் உள்ளம் என்னும் தோகையினால் கந்தன் உறவு கண்டேன் ஆகையினால்..

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com