மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

9.5.19

அறிவுரைகள்தான்; முடிந்தவரை கேட்டு வைப்போம்!!!!!

அறிவுரைகள்தான்; முடிந்தவரை கேட்டு வைப்போம்!!!!!

முயற்சி செய்யாமல் பிறரைக் குறை கூறுவதை விட, முயற்சி செய்து தோற்றாலும் அதை அமைதியாய் ஏற்று கொள்வதே மேல்.

எத்தனை முறை நீ ஏமாற்றப் பட்டாலும் ஒரு போதும் அடுத்தவரை ஏமாற்ற கற்றுக் கொள்ளாதீர்கள். அவரவர் பலன் அவரவர் அனுபவிப்பார்கள் நேர்மைக்கு என்றுமே மரணமில்லை. கவலையை விடுங்கள்.

தனிமையில் வாழப் பழகி விட்டால் எவரையும் குற்றம் கூறவும்  முடியாது. நம்மளையும் யாரும் குறை கூற வழியும்  இருக்காது.

யாரிடமும் பேச வேண்டாம் என்ற மனநிலை உருவாகக் காரணம் அதிகமாக பேசியதன் விளைவாகத் தான் இருக்கும்.

எங்கே என்ன நடந்தாலும் அதில் பாதிக்கப் பட்டோரின் மன நிலையுடன் நம் குடும்பத்தில், உறவுகளில், நமக்கே நடந்தது போல் ஒப்பிட்டுப் பார்க்கும் இந்த மனசு தாங்க மனிதம் மனதில் இருப்பதற்கு சான்றாக இருக்கிறது.

உலகத்துலேயே நாம விரும்பாத ஒன்னு, நமக்கு இலவசமா கிடைக்குது'னா அது அட்வைஸ் ஒன்னு தான்.

நம்மை பிடிக்காத உறவினர்களிடம் பேசும் போது நாம் எப்படி வார்த்தைகளை கவனமாக தேர்ந்தெடுத்து பேசினாலும், இறுதியில் அதை அப்படியே திசை திருப்பி விடுகிறார்கள்.

இன்றைய மனிதர்களிடம் படிப்பு அதிகமாக இருக்கிறது. ஆனால் பண்பாடு குறைவாக இருக்கிறது. இது தான் இன்றைய நெருக்கடிகளுக்கு எல்லாம் மூல காரணம். படிப்பதோடு பண்பாட்டையும் நாம் அடுத்த தலைமுறைக்கு கிடைக்க முயற்சி செய்வோம்.

கொஞ்சம் வைத்திருப்பவன் ஏழையல்ல. அதிகம் விரும்புகிறவன் தான் ஏழை.

கணவன், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள் என பலரிடமிருந்து எவ்வளவு சங்கடங்கள் வந்தாலும், நிதானமாக பிரச்சினைகளை அணுகி வெற்றி காண்பவர்களே சிறந்த மனிதர்கள்.

சாதித்த பிறகு வருமே ஒரு அமைதி அது இந்த பிரபஞ்சத்தின் தொலை தூர ஓசை போன்றது.

கடன் வாங்கியவன் உறங்கலாம். கடன் கொடுத்தவன் உறங்குவதேயில்லை.

தனக்குக் கிடைக்கும் ஊதியத்தின் மதிப்பை விட, தன்னுடைய உழைப்பின் மதிப்பை உயர்த்திக் காட்டும் மனிதன் தான் சமூகத்தில் முன்னேற முடியும்.

இப்பெல்லாம் கடன் வாங்கினவனை விட, கடன் கொடுத்தவன் தான் தூக்கம் இல்லாமல் தவிக்கிறான்.

ஒரு தந்தை தான் நினைத்தை எல்லாம் தன் பிள்ளை சாதிக்க வேண்டும் என்பதற்கும், என் பிள்ளை நினைத்தை எல்லாம் சாதிக்க நான் துணை நிற்பேன் என்பதற்கும் அதிக வேறுபாடு இருக்கிறது.

ஒவ்வொருவரும் கட்டளையிடவே விரும்புகின்றனர் யாரும் வேலை செய்யத் தயாராக இல்லை.

அந்தக் காலத்தில் குடும்பத்தில் முதியவர்களை பிள்ளைகள் கவனித்தனர். இப்போ தன் பிள்ளைகளை கவனிக்க முதியவர்களை வைத்திருக்கின்றனர்

பிறர் வெற்றியை தவறான வழியில் தட்டிப் பறிப்பது சாமர்த்தியம் அல்ல. சமூகத்தின் சீர்கேடு.

உனக்கெல்லாம் காலம் பதில் சொல்லும் என்று விட்டு விட்டு, அதை மறந்து போயிடனும், எப்ப தான் கெட்டு போவார் என நினைத்தால் நம் நிம்மதி போய் விடும்.

பிறர் குறைகளை கண்டு பிடிப்பதில் இருக்கும் வேகம், சுய குற்றங்களை கண்டு பிடிப்பதில் குறைவு.

எல்லாம் நன்மைக்கே : நல்லதே நடக்கும்
--------------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
============================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6 comments:

  1. Respected Sir,

    Happy morning... Nice....

    Thanks for sharing...

    Have a great day.

    With regards,
    Ravi-avn

    ReplyDelete
  2. வணக்கம் குருவே,
    இன்றைய பதிவில் என்னை ஆட்கொண்ட வரிகள்:💐
    கடன் வாங்கியவன் உறங்கலாம். கடன் கொடுத்தவன் உறங்குவதேயில்லை.
    சபாஷ் வாத்தியாரையா!👌


    ஒவ்வொருவரும் கட்டளையிடவே விரும்புகின்றனர் யாரும் வேலை செய்யத் தயாராக இல்

    அந்தக் காலத்தில் குடும்பத்தில் முதியவர்களை பிள்ளைகள் கவனித்தனர். இப்போ தன் பிள்ளைகளை கவனிக்க முதியவர்களை வைத்திருக்கின்றனர்
    பிறர் குறைகளை கண்டு பிடிப்பதில் இருக்கும் வேகம், சுய குற்றங்களை கண்டு பிடிப்பதில் குறைவு.

    ReplyDelete
  3. பலரின் வாழ்வியலில் அனுபவங்களாக குறைகளாக வலிகளாக உள்ளவற்றை விவரித்துள்ளீர்கள். நற்பண்புகளும் உயர்ந்த குணங்களும் உயிர்ப்புடன் வளரட்டும்...

    புதுவையிலிருந்து முருகன்.

    ReplyDelete
  4. Dear Sir,

    This is S.Raman, eagerly waiting for the complete predictions.


    Yours sincerely
    Raman

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com