மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

14.12.18

Astrology: Quiz: புதிர்: என்னதான் ரகசியமோ இதயத்திலே?


Astrology: Quiz: புதிர்: என்னதான் ரகசியமோ இதயத்திலே?

ஒரு அன்பரின் ஜாதகம் கீழே உள்ளது. ஜாதகர் பூச நட்சத்திரக்காரர். துவக்கத்தில் சனி மகா திசையில் இருப்பு சுமார் 5 ஆண்டுகள். அதற்குப் பிறகு 17 ஆண்டுகள் புதன் மகா திசை. தசா நாதன் 8ல். தொடர்ந்து கேது மகா திசை 7 ஆண்டுகள். அதன் நாதனும் 8ல்
ஒன்றுமே பிரயோஜனம் இல்லாமல் போய்விட்டது. ஜாதகர் 21 வயதில் இருந்து மருந்து விநியோகஸ்தர்களிடம் வேலை பார்த்தார். 27வது வயதில் அரசாங்க வேலை கிடைத்தது. ஆசிரியர் வேலை.

ஜாதகருக்கு எதிலுமே பிடிப்பு இல்லை. மன அழுத்தம், வெறுப்பு உணர்வு, தாழ்வு மனப்பான்மை.என்று எல்லா உணர்வுகளுமே அவரை அவஸ்தைக்கு உள்ளாக்கின.

இந்த மன நிலைமைக்கு ஜாதகப்படி என்ன காரணம்? அது எப்போது மாறும்? அவர் வாழ்வில் வசந்தம் எப்போது?

ஜாதகத்தை அலசி பதில் எழுதுங்கள்

சரியான விடை 16-12-2018 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:

========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10 comments:

  1. ஜாதகர் 7 ஆகஸ்டு 1972ல் மாலை 4 மணி 54 நிமிடங்கள் 30 வினாடிக்குப்பிறந்தவர். பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக்கொள்ளப்பட்டது.

    ஜாதகருடைய அனைத்துப் பிரச்சனைகளுக்கும் காரணம் சூரியன் . மனோகாரகனான சந்திரன் சூரியனால் எரிக்கப்பட்டு வலுவிழந்தார்.புத்திகாரகனான புதனும் சூரியனால் அஸ்தங்கதம் ஆனார்.கடக ராசிக்கு யோககாரகனான செவ்வாய், சுறு சுறுப்புக்குக்காரணமான செவ்வயும் சூரியனால் அடி வாங்கினார்.
    லக்கினாதிபதி குரு பகவான் வக்கிரம் அடைந்தார். லக்கினமும், குருவும் ராகு மாந்தியால் சூழப்பட்டு லக்கினமே வலுவிழந்தது.ராகு குருவைத்தவிர மற்ற அனைத்து கிரகங்களும் சனி செவ்வாய் ஆகியவர்களுக்கு இடையே மாட்டிக்கொண்டன.இவையெல்லாம் அவருடைய ஊக்கத்தைக் கெடுத்து மன அழுத்தத்தினைக் கொடுத்தது.

    அஷ்டவர்கத்தில் சனைச்சரனைத்தவிர மற்றவர்கள் அனைவரும் சுய வர்கபரல் 4க்கும் குறைவாகப்பெற்றனர். லக்கினத்திற்குப் பத்தாம் இடம் 35 பரலும் 6ம் இடம் 43 பரலும் பெற்றதால் காலதாமதாகவேனும் அரசாங்க வேலை கிடைத்தது.27 வயதில் கேது தசா சனி புக்தியில் 2க்கு உரிய சனி பகவான் 6ல் அமர்ந்து சுய வர்கத்தில் 7 பரல் பெற்று 6ம் இடமும் 10ம் இடமும் அஷ்டவர்கத்தில் வலுப்பெற்றதால் வேலை கிடைத்தது.
    kmrk1949@gmail.com

    ReplyDelete
  2. சார் வணக்கம்

    சந்தரன் சனி பார்வையில் இருக்குது அப்புறம் குணத்தை பற்றி சொல்லும் 8 இடம் கிரகம் பல இருந்தல் அந்த மகா தசையில் ரொம்ப போராட்டமாக யிருக்கும் சுகுரான் ஆறு அப்புறம் 11 அதிபதி தனசுலக்கணத்துக்கு பாவிய இரு ந்தாலும் 7 இருப்புதல் பாதி நாளாய்இன்பம் துன்பம் கொடுப்பார் ஆட்சி சந்தரன் அப்புறம் சூரியன் தனுசுக்கு நண்பன் அதனால் 8 இருத்தாலும் துன்பம் தராது செவ்வாய் தசை 5 12 அதிபதி அது 9 இருக்குது நல்ல இருக்கும்

    ReplyDelete
  3. ஐயா,
    தங்களின் கேள்விக்கான பதில்
    1 ஆறாம் அதிபதி சுக்ரனின் நேரடி பார்வையில் லக்கினம்
    2 .புதன் திசை ,கேது இருவரும் எட்டாம் இடத்தில் அமர்ந்துள்ளனர்
    3 .அடுத்து வந்த சுக்ர திசையில் அவருக்கு அரசாங்க உத்யோகம் கிடைத்துள்ளது ஏனனில் சுக்ரன் பதினொன்றுக்கு அதிபதியும் ஆவான்
    4 .பனிரெண்டில் மாந்தி விரயத்தை ஏற்படுத்துவார்
    5 .சனீஸ்வரரி ன் நேரடி பார்வை இல் விரயஸ்தானம்
    நன்றி

    தங்களின் பதிலை ஆவலுடன் எதிர்நோக்கி

    ReplyDelete
  4. வணக்கம்

    என்னதான் ரகசியமோ இதயத்திலே விற்கான பதில்

    1 பத்தாம் இடத்து அதிபதி புதன் 8 இல் மறைவு . மேலும் கேது வுடன் கூட்டணி நவாம்ச கட்டத்திலும் ராகு வுடன் கூட்டணி.

    2 ராசி அதிபதி மற்றும் மனோகாரகன் சந்திரன் 8 இல் மறைவு. எதிலும் பிடிப்பற்ற நிலை., மேலும் கேது வுடன் கூட்டணி , நவாம்சத்திலும் மாந்தி வுடன் கூட்டணி .

    3 வர்கோத்தம லக்கினம் , குரு லக்கினத்தில் இருப்பதாலும் செவ்வாய் நல்ல யோகா காரகனாக இருப்பதாலும் செவ்வாய் தசை இல் இருந்து ஓரளவு நல்லது நடக்கும் .

    நன்றி
    சந்திரசேகர ஆசாத்
    MOB. 8879885399

    ReplyDelete
  5. அய்யா வணக்கம்!
    அன்பரின் ஜாதகம் ஒரு வரப்பிரசாத ஜாதகம்.லக்னம் தனுசு லக்கினாதிபதி குரு லக்கினத்தில் ஆட்சி. 7ம் அதிபதி புதன் 8ல். உயிர் மனம் இரண்டுக்கும் காரணகர்த்தாக்களான சூரிய சந்திரன் 8ல் அமர்ந்ததும் கேது சேர்க்கை மற்றும் ராகுவின் பார்வை பெற்றதும் மிக கேடான அமைப்பு.தர்ம கர்மாதிபதிகளான சூரியன் புதன் 8ல் அமர்ந்து யோகம் செயல் படவில்லை. ஆறாமிடத்து வில்லன் 7ல் அமர்ந்து குரு பார்வையால் நல்ல மனைவி அமைந்தாலும் 2ல் அமர்ந்த ராகு குடும்ப வாழ்க்கையை கெடுத்திருக்க வேண்டும்.தவிறவும் தனுசு லக்கினத்திற்க்கு சுக்கிரன் நண்மைகளை தருவதில்லை.
    ஆக 20 வருட சுக்கிர தசையும் போராட்டமான வாழ்வே. அடுத்த சூரிய தசை கிரகன தோஷம் பெற்றதாலும் நண்மையில்லை. சந்திரன் ஆட்சியாகி ராகு கேதுவால் பாதிக்கப்பட்டுள்ளதால் மற்றும் சனியின் நட்சத்திரம் பூசத்தில் அமர்ந்ததால் புனர்பூ தோஷமும் பெற்று சனியின் பார்வை பெறுவதாலும் மனநோய்க்கு ஆளாகியிருப்பார்.
    9ல் அமர்ந்த செவ்வாய் 5க்கு உடையவராகி லக்கினாதிபதி குரு பார்வை பெற்று தசை நடந்தபோது சற்று ஆறுதலான மாற்றம் ஏற்ப்பட்டிருக்கும்.
    ஆக சனி 5 + புதன்17 + கேது7 + சுக் 20 + சூரி 6 + சந் 10 = ஆக 65 வயது வரை அமைதியற்ற வாழ்க்கை .
    அன்புடன்
    -பொன்னுசாமி

    ReplyDelete
  6. வணக்கம்.
    8th ஆகஸ்ட் 1972ம் தேதி மாலை 4.29.01 மணிக்கு பூச நட்சத்திரத்தில் தனுர் ராசியில் ஜாதகர் பிறந்தார்.

    1. எட்டாம் வீடுதான், அதிக கஷ்டங்களைக் கொடுக்கக்கூடியது. ஒருவனைத் தலகீழாகப் புரட்டிப்போடுவதும் அந்த வீட்டுக்காரன்தான். 8ம் வீட்டு அதிபதி சந்திரன் 8ல் அமர்ந்து தீய கிரங்களுடன் கூட்டு ( சனியின் 3ம் பார்வை , ராகுவின் 7ம் பார்வை, 8ம் வீட்டின் மீது , சந்திரன்-கேதுவுடன் 8ல் கூட்டு.)

    2. 8ம் வீட்டு அதிபதி சந்திரன் கெட்டு இருப்பதால் ஜாதகன் செய்யும் முக்கிய செயல்கள் எல்லாம் தோல்வியில் முடியும்.

    3. எட்டாம் வீட்டுக்காரனும்,(சந்திரன்) பத்தாம் வீட்டு அதிபதியும் (புதன்) ஒன்று சேர்ந்து 8ல் இருந்தால், ஜாதகன் அவனுடைய வேலையில் பலவிதக் கஷ்டங்களைச் சந்திக்க நேரிடும்.

    4. குரு தனகாரகன். சந்திரன் மனகாரகன். இருவரும் ஒருவருக்கொருவர் எட்டு/ஆறு நிலைப்பாட்டில் அதாவது அஷ்டம சஷ்டம ஸ்தானங்களில் இருக்கக்கூடாது. இருந்தால் பணம் இருந்தாலும் மகிழ்ச்சி இருக்காது. துக்கம் நிறைந்து இருக்கும்.

    5. 6ம் வீட்டு அதிபதி சுக்கிரன் 7ல் அமர்ந்து லக்கினத்தை பார்க்கிறார். கஷ்டங்கள் அதிகமாகும்.

    6. அரசகிரகமான சூரியனுக்கு 7ம் வீட்டில் ராகு இருக்கக்கூடாது. சூரியனால் கிடைக்ககூடிய அரச செல்வாக்குகள், பெயர், புகழ் ஆகியவற்றை ராகு கிடைக்காமல் செய்து விடுவான்.

    7. ராகு 2ஆம் வீட்டில் இருந்தால்: ஜாதகனுக்குக் குறைந்த அளவே செல்வம் இருக்கும். சிலர் கடனில் மூழ்க நேரிடும். மன வேதனை ஏற்படும் (சந்திரனும் ராகுவும் நேர் பார்வையில்)
    8 புதனுடன் கேது சேர்ந்திருந்தால் சேர்க்கையால் நன்மை இல்லை.

    9. இந்த ஜாதகத்தில் சனி (7 பரல்) 6ம் வீட்டில் (43 பரல்) பலமாக இருக்கிறார் . அவருடைய 7ம் பார்வை 12ம் வீட்டின் மீது இருப்பதால் ஜாதகர் அயனம், சயனம் பாதிப்பு.

    லக்கினாதிபதி குரு லக்கினத்தில் இருப்பதால் எதையும் தங்கும் சக்தியை கொடுப்பார்.

    சுக்கிர தசை - குரு புக்த்தியில் 40 வயதில் (2012-2014) வாழ்வில் வசந்தம் ஏற்படும். காரணாம் 11ம் வீட்டின் அதிபதி சுக்கிரனும் ஆவார். 11ம் வீடு (31 பரல்). குருவின் 7ம் பார்வையில் உள்ளார்.
    சுக்கிரன் பாபகர்தாரி தோஷம் (ஒரு பக்கம் சனி, மறு பக்கம் கேது) இருந்தாலும் குருவின் பார்வையால் தோஷம் இல்லாமல் செய்துவிடும்.

    சந்திரசேகரன் சூரியநாராயணன்

    ReplyDelete
  7. Good morning sir, The person was born on 08/08/1972 time 4.55pm,He was born on amavasai thithi. During amavasai moon lose his energy more over Fifth house is said to. Be house of mind the lord mars is combustion with sun and karaga moon also loss his energy and mercury also combustion with sun,so three planets combustion with sun makes frustration in his life and dasa bukthi also not favored him upto 2021 after that sun dasa begins and lagna lord guru in lagna makes him little free after the completion of venus dasa, thank you sir

    ReplyDelete
  8. 1. சந்திரன் எட்டாமிடம்
    2. எட்டாமிடத்தில் கிரக யுத்தம் - எதிலும் பிடிப்பு இல்லை
    3. கேது அருகில் விரக்தி மனப்பான்மை / வெறுப்பு
    4. சனி ஆறாமிடம், 3 ம் பார்வை சந்திரனை பார்க்கிறது, எதிலும் தாமதம்
    5 சனி மாந்தி தொடர்பு - தொழிலில் தடை தாமதம்
    6 நவாம்சத்தில் சந்திரன் மாந்தி தொடர்பு - மன அழுத்தம் / வெறுப்பு

    ReplyDelete
  9. ஆசிரியருக்கு வணக்கம்.
    தனுசு லக்கினம், கடக ராசி ஜாதகர்.
    லக்கினாதிபதி குரு பகவான் லக்கினத்தில் வக்கிர கதியில். அவர் மேல் 6ம் அதிபதி அசுர குருவின் பார்வை.
    மனோகாரகனும் அட்டமாதிபதியுமான சந்திரன் தன் வீட்டிலேயே இருந்தாலும் கூடவே கேது, சூரியன் கூட்டினால் வலுவிழப்பு. சனியின் 3ம் பார்வை,ஏழிலுள்ள ராகுவின் பார்வையினால் ஜாதகருக்கு மன வலிமையற்ற நிலை, தாழ்வு மனப்பான்மை உண்டாயிற்று. தற்பொழுது கோச்சார ராகு வேறு கடக ராசியில் அமர்ந்து எரிகிற நெருப்பில் எண்ணெய் விட்டு நிலைமையை மேலும் கெடுத்து கொண்டுள்ளார். அவர் மிதுன ராசிக்கு மாறியவுடன் நிலைமை சீரடைந்து நடப்பு சுக்ர தசையில் ஜாதகரின் வாழ்வில் வசந்தம் வீசும்.
    வாத்தியாரின் சரியான கணிப்ராபினை எதிர் நோக்கும்,
    இரா.வெங்கடேஷ்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com