மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

2.7.17

லெக்கிங்ஸ் அணிவதால் உண்டாகும் தீமைகள்!!!

லெக்கிங்ஸ் அணிவதால் உண்டாகும் தீமைகள்!!!

லெக்கிங்ஸ் அணிவதால் பெண்களுக்கு உண்டாகும் தீமைகள் என்னவென்று தெரியுமா?

பெண்கள் லெக்கிங்ஸ் அணிவதை மிக அதிகமாக விரும்புகின்றனர். லெக்கிங்ஸ் அவர்களுக்கு வசதியான உடையாகவும், அழகாகவும் காட்டுகிறது. ஆனால் இது நமது நாட்டில் இருக்கும் வெப்பநிலைக்கு ஏற்றது தானா? இதனால் எத்தனை ஆரோக்கிய பிரச்சனைகள் வருகிறது என தெரியுமா?

லெக்கிங்ஸ் மட்டுமில்லாமல் இறுக்கமான உடை அணிவதையும் பெண்கள் நிறுத்த வேண்டியது அவசியம். ஏன் நீங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்று செய்யும் யோகவிற்கு அணியும் யோக உடை கூட ஆபத்தை உண்டாக்கும் என தெரியுமா?

உடல் சூடாகிறது

இறுக்கமான உடைகள் மற்றும் லெக்கிங்ஸ் அணிவது, சருமத்தில் வறட்சியை உண்டாக்குகிறது. இது சருமத்துளைகளில் இருக்கும் அழுக்கை வியற்வை மூலமாக வெளியேற அனுமதிப்பதில்லை. இதனால் உடலில் வெப்பம் அதிகரிக்கிறது.

பாக்டிரியா மற்றும் பூஞ்சைகள்

இறுக்கமான உடைகளை அணிவதால் சில இடங்களில் சிவப்பு கொப்புளங்கள் உண்டாகிறது. கால்களில் உள்ள வேர்கால்கள் அதிகமாக பாதிக்கிறது. இதனால் பாக்டிரியா மற்றும் பூஞ்சை தொற்றுகள் ஏற்படுகின்றன. இரவிலாவது தளர்ச்சியான உடைகளை அணிவது சிறந்தது.

படர்தாமரை

பெரும்பாலான சரும பிரச்சனைகளுக்கு உடல் சூடு காரணமாக உள்ளது. இறுக்கமான ஆடைகள் அணிவதால் உடல் சூடு வெளியேற முடியாமல் போகிறது. மேலும் அதிகப்படியான வியற்வையும் உள்ளேயே தங்கிவிடுகிறது. இதனால் அரிப்பு, உடல் சிவப்பாதல் ஆகியவை உண்டாகிறது.

இது படர்தாமரை வர காரணமாக உள்ளது. படர்தாமரையால் உண்டாகும் அரிப்பு தாங்கமுடியாதது. மேலும் இது பரவும் வாய்ப்பு உள்ளது. மேலும் உடற்பயிற்சி செய்யும் போது இறுக்கமான உடைகளை அணிவது அதிகமான வியற்வை தேங்க வழிவகுக்கும்.

அரிப்பு

படர்தாமரையை விட கொடுமையானது அரிப்பு தான். இது பூஞ்சைகளினால் உண்டாகிறது. உடல்பயிற்சி மற்றும் ஓடும் போது லெக்கிங்ஸ் அணிவதால் அதிகமான வியற்வை உண்டாகிறது. இதனால் பல தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. நீங்கள் லெக்கின்ஸ் அணிந்து உடற்பயிற்சி செய்பவராக இருந்தால், உடற்பயிற்சி முடிந்ததும், உடையை மாற்றிவிடுவது நல்லது, மேலும் சுத்தமாக குளிப்பது அவசியம். பூஞ்சைக்கு எதிராக செயல்படும் க்ரீம்களை பயன்படுத்தலாம்.

ஈஸ்ட் தொற்று

அதிகப்படியான பெண்கள் ஈஸ்ட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈஸ்ட் சூடாக இருக்கும் இடத்தில் நன்றாக வளர்ச்சியடைகிறது. நீங்கள் அணியும் லெக்கிங்ஸ் அது வளர நல்ல சூழ்நிலையை உருவாக்கி தருகிறது. நாள் முழுவதும் லெக்கிங்ஸ் உடன் இருப்பது தவறானது.

வறட்சியை உண்டாக்குகிறது

லெக்கிங்ஸ் உங்களது உடலின் ஈரப்பதத்தை குறைத்து உடல் அரிப்பு ஏற்பட காரணமாவதுடன், லெக்கிங்ஸில் இருக்கும் தூசிகள் உங்களது தோலை வறட்சியடைய வைக்கிறது. இறந்த செல்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. வலியை உண்டாக்கும் சிவப்பு புண்களை உண்டாக்குகிறது. லெக்கின்ஸை கழட்டிய உடன் குளிக்க வேண்டியது அவசியம்

உடல் எடையை அதிகரிக்கிறது

லெக்கிங்ஸ் அணிவதால் உடல் அதிகரிக்கிறது. சதைகள் இறுக்கமாகி தோற்றத்தையும் கெடுக்கிறது.

ஆகவே லெக்கிங்ஸ் தேவைதானா என்பதை யோசித்து நீங்களே ஒரு முடிவிற்கு வாருங்கள்!!!

இந்தப் பதிவு இளம் பெண்களுக்கு மட்டுமில்லை! வீட்டில் இளம் பெண்களுடன் இருக்கும் வயதான அப்பாக்களுக்கும், மாமாக்களுக்கும் (அதாவது மாமனார்களுக்கும்) மற்றும் சகோதரர்களுக்கும்சேர்த்துத்தான்!!!

அன்புடன்
வாத்தியார்
====================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

7 comments:

  1. Good morning sir, very useful information for the people those whom were leggings, thanks sir for such a valuable social responsible post vazhga valamudan sir

    ReplyDelete
  2. ///Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir, very useful information for the people those whom were leggings, thanks sir for such a valuable social responsible post vazhga valamudan sir/////

    நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!

    ReplyDelete
  3. Udal Amaipai Kaatuvathil apdi enna aarvamo... Pala Pengal indru ithai aninthu, Kanavan matume parka vendiya Azhagai, anaivarukum katukirargal.... Fashion... Kaala kodumai sir... Veetil ulla Periyavargal nadavadikai eduka vendum..

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா,தற்காலத்திற்கு மிக அவசியமான அறிவுரை.நன்றி.

    ReplyDelete
  5. /////Blogger KJ said...
    Udal Amaipai Kaatuvathil apdi enna aarvamo... Pala Pengal indru ithai aninthu, Kanavan matume parka vendiya Azhagai, anaivarukum katukirargal.... Fashion... Kaala kodumai sir... Veetil ulla Periyavargal nadavadikai eduka vendum../////

    உண்மைதான். பெரியவர்கள் சொன்னால் கேட்க மாட்டார்கள். அதுவும் உண்மை!!! நன்றி நண்பரே!1111

    ReplyDelete
  6. ////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,தற்காலத்திற்கு மிக அவசியமான அறிவுரை.நன்றி./////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்!!!!!

    ReplyDelete
  7. அறிவு கேட்ட பிள்ளைங்க
    அவுங்க கேட்க மாட்டாங்க..

    அவுங்க அப்படியே கிடந்து சாகட்டும்..
    அவுங்க மருத்துவம் செய்தாலும் செய்வாங்க

    திருந்த மாட்டாங்க..
    திரும்பி பாருங்க..

    தனக்கு இந்த நோய் உள்ளது என மனம்
    திறந்து சொல்வதை பெருமையாக நினைக்கும்

    இந்த சமூகத்தில்
    இது மட்டுமல்ல..

    எதை சொன்னாலும்
    எதுவும் இவர்களுக்கு ஏறாது..

    இது தான்
    இன்றைய அவர் சொல்லும் "புதிய இந்தியா"

    ஆரோக்கியமாக இருப்பதை இன்றைய நாளில்
    யாரும் விரும்புவதில்லை..

    கொஞ்சம் நாட்டில் நடப்பதை பாருங்க..

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com