மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

13.12.16

Health Tips: 448 நோய்களுக்கும் ஒரே மருந்து!

 

Health Tips: 448 நோய்களுக்கும் ஒரே மருந்து!

 448 நோய்களை குணமாக்கும் துளசி.

மருத்துவர்கள் வெறும் மருத்துவர்களாக மட்டும் அல்லாமல். மனோ தத்துவ நிபுணர்களாகவும் இருக்க வேண்டியது அவசியம். ஒரு பெண்மணிக்கு புற்று நோய் மிக முற்றிய நிலையில் தான் கண்டு பிடிக்கப்பட்டது. அவர்களுக்கு அறுவை சிகிச்சையும் செய்யபட்டது. ஆனால். அந்தப் பெண்மணியை  அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றிய மருத்துவர்.  உங்களுக்கு என்ன தான் ஆபரேஷன் பண்ணாலும்.....  அது உங்களுக்கு முற்றி போனவுடன் தான்.  ஆபரேஷன் பண்ணியிருக்கு. அதனால. நீங்க அதிக பட்சம் இன்னும் 3 மாதங்கள் தான் உயிரோடு   இருப்பீர்களென்று அந்த மருத்துவர் சொல்ல. அதை கேட்டு பயத்தாலேயே தினம், தினம் அந்தப் பெண்மணி செத்துக் கொண்டு இருந்தார்கள்.

தினமும் வெறும் வயிற்றில். செம்பு பாத்திரத்தில் நிரப்பிய  துளசி நீரை குடியுங்கள். என்று எனக்கு தெரிந்த. புற்று நோய்க்கான சிறந்த மருத்துவத்தையும் அவர்களுக்குச் சொல்லி விட்டு வந்தேன். மேலும் அங்கு ஒரு கொலையும் செய்தேன். நான் கொன்றது யாரைத் தெரியுமா? உலகின் மிகக் கொடிய நோயான பயத்தை.

இப்பொழுது அந்தப் பெண்மணி. பயப்படுவதே இல்லை. நான் கூறியபடியே. தினமும் தூங்கி எழுந்தவுடன். முதலில் அவர்கள் சிரித்த முகத்துடன் கண்ணாடியைப் பார்கிறார்கள். எனக்கு இன்றிலிருந்து எல்லாம் நன்றாகவே இருக்கும். நான் நீண்ட நாள் வாழுவேன் என்று உரக்க. தன்னம்பிக்கையோடு கூறுகிறார்கள். பிறகு பத்து  நிமிடம் வஜ்ராசனம். அதை செய்த பிறகு. வெறும் வயிற்றில் செம்புப் பாத்திரத்தில் இருந்து துளசி நீரை எடுத்து  அருந்துகிறார்கள். உடல், மனம் இரண்டுமே ஆரோக்கியமாக இப்பொழுது அவர்களுக்கு இருக்கிறது.

சென்ற 2015  ஏப்ரல் மாதம் அந்த அம்மாவிற்கு மருத்துவர் 3 மாதம் கெடு விதித்தார்.

இன்றுவரை அந்த அம்மா ஆரோக்கியமாக இருக்கிறார்கள்!

மரபணு மாற்றப்பட்ட காய்கள், பழங்களை தெரிந்தோ, தெரியாமலோ நாம் உண்பது புற்று நோய் வருவதற்கான முக்கிய காரணம். வடக்கே பல இடங்களில் புற்று நோயாளிகளுக்கு என்று தனியாக சிறப்பு ரயில் விடும் அளவு புற்று நோயாளிகள்  அங்கே இருக்கிறார்கள்.

புற்று நோய் என்று அல்ல. 448 நோய்களுக்கு ஒரே மருந்து துளசி.

துளசியின் மகத்துவம் பாப்போம்.

 ஒரு கைப்பிடி அளவு துளசி இலைகளை. எவ்வளவு தாரளமாக போட முடியுமோ அவ்வளவு தாராளமாக. செம்பு பாத்திரத்தில். ஒரு 1.5, அல்லது 2 லிட்டர் தண்ணீர் விட்டு 8 மணி நேரம்   ஊர வைக்க  வேண்டும். பின்னர். வெறும் வயிற்றில். ஒரு டம்ளர்ரோ, அல்லது இரண்டு டம்ளரோ குடிக்க வேண்டும். அவ்வாறு தொடர்ந்து ஒரு மண்டலம். அதாவது 48 நாட்கள் குடித்தால். புற்று நோய் பூரணமாகக் குணம் ஆகும். அது உடலின் எந்த பகுதியில் இருந்தாலும். மிக முற்றி போனால். ஆரம்ப  நிலையிலேயே. புற்று நோய் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு. இந்த துளசி சிகிச்சையை மேற்கொண்டால். புற்று நோய்  மட்டுமல்ல. 448 விதமான நோய்கள் குணமடையும். துளசியின் மருத்துவ பண்புகள். அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட  உண்மை.

சரி. அந்த துளசி நீரை. எவர்சில்வர் பாத்திரத்தில் விட்டு குடிக்கலாம். அதிக வசதி இருந்தால். தங்க பாத்திரத்தில் கூட விட்டு குடிக்கலாம். செம்பு பாத்திரம் ஏன்?

தாமிர சத்து  [செம்பு] உடலுக்கு தேவையான ஒன்று. தைராய்ட் வர உடலில் தாமிர சக்தி குறைவதும் ஒரு காரணம். தைராய்ட் நோய் உள்ளவர்கள் செம்பு பாத்திரத்தில் நீர் அருந்துதல். தைராய்ட் நோய்க்கு  சிறந்த சிகிச்சை. கீழ் வாதம் முதலான நோய்கள் குணமாகும். உடலில் உள்ள புண்களை குணப்படுத்துவதுடன் . புதிதாக. உடலில் அணுக்களையும் உற்பத்தி  செய்யும் சக்தி தாமிரத்திறகு  உண்டு. தாமிரப் பாத்திரத்தில் நிரப்படும் சாதாரண நீரே.  உடற் கட்டியை குணபடுத்தும் என்றால். தாமிர துளசி நீர் பற்றி சொல்லவா வேண்டும்?

துளசி நீர், புற்று நோயை குணபடுத்தும் என்று சித்த மருத்துவமோ, ஆயுர் வேத மருத்துவமோ. சொல்லியிருக்கிறதா என்பதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை. நீ சொல்லும் இந்த செய்தி. அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்றா? கை வைத்தியம், பாட்டி வைத்தியம் பண்ணி சரி பண்ண. புற்று நோய் ஒன்னும் bp, சுகர்  அல்ல. அது ஆட் கொல்லி நோய். என்று. உங்களில் பலர்  கேட்பது புரிகிறது. உங்களது கேள்வி. மிக நியாயமானதும் கூட. துளசி புற்று நோயை குணபடுத்தும் என்பதை. உலக அளவில் நடந்த பல அறிவியல் ஆய்வுகள் முடிவு செய்துள்ளது. அதில் ஒன்று. NDTV இதை பற்றி அமெரிக்காவில் நடந்த ஆய்வு சம்பந்தமாக செய்தி வெளியிட்டு உள்ளது. அதன் லிங்க் கீழே.

http://www.ndtv.com/india-news/tulsi-enters-us-lab-to-fight-cancer-548197

Tulsi  Cures  Cancer  என்று google ளில் டைப் செய்து பாருங்கள். இதே போல். பல ஆய்வுகளின் முடிவை google  சொல்லும்.

வியாதி உள்ளவர்கள் தான். தாமிர பாத்திரத்தில் துளசி நீரை விட்டு குடிக்க வேண்டும் என்று இல்லை. நல்ல ஆரோக்கியம் இருப்பவர்களும். தினமும் ஒரு டம்பளர் துளசி நீரை பருகுங்கள். மண் பானை நீரை விட தாமிர பாத்திர நீர் உடல் ஆரோக்கியத்திற்கு அவ்வளவு நல்லது.

பெருமாள் கோவில்களில். தாமிர பாத்திரத்தில் துளசி நீர் பன்னெடுங்காலமாக கொடுக்கும் ஆன்மிக சடங்கினுள் ஒரு மிக பெரிய அறிவியல் உண்மை ஒளிந்து இருப்பது உங்களுக்கு புரிகிறதா?

இந்த உலகிலேயே. மிக சிறந்த புண்ணிய  நதி. தாமிர சக்து அதிகம் உள்ள தாமிரபரணி ஆறு தான்.

திராட்சையின் விதைகளும் புற்று நோயை குணப்படுத்த கூடிய மருந்தாக இருக்கிறது. வேர்கடலையில் அதிக அளவு ஒமேகா 3 இருப்பதால் அதுவும் புற்று நோய் வரும் ஆபத்தை குறைக்கும். மேலும் நல்ல உடல் வலுவை தருவதுடன். IQ  லெவலையும் அதிகரிக்கும் சக்தி ஒமேகா 3 க்கு இருக்கிறது
---------------------
படித்தேன். பகர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்

==================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14 comments:

  1. திரு ஐயா,

    வணக்கம். துளசியின் மகத்துவத்தை மிக அழகாக எடுத்து பகிர்ந்தமைக்கு நன்றி. தாமிரத்துவத்தின் மகத்துவம் அருமை அருமை. பகிர்வுக்கு நன்றி.

    அன்புடன்,

    Visvanathan N

    ReplyDelete
  2. வணக்கம் குருவே!
    சவால் விடுவது போன்ற ஒரு பதிவு.அத்துடன் ஆணித்தரமான அழுத்தத்துடன் ஆதாரங்களை சாட்சிகளாக்கி விளக்கம் படடிருக்கும் தகவலைப் படிக்கும்போது யாரும் அதன்படி செயல்படத் தொடங்கியிருப்பார்கள் என்றால் மிகையாகாது! ஏனெனில்,அப்படிப்பட்டவர்களில் அடியேனும் ஒருவன்.
    நன்றி வாத்தியாரையா..வாழ்க தங்கள்
    தொண்டு!

    ReplyDelete
  3. Respected Sir,

    Happy morning... Nice article...

    Have a great day.

    Thanks & Regards,
    Ravi-avn

    ReplyDelete
  4. வியட்னாம் போரின் போது பல பிணங்கள் குடியிருப்புக்களுக்கு அருகில் வீழ்ந்து கிடக்கும்.அவற்றினை உடனுக்குடன் எடுத்து எரிக்கவோ புதைக்கவோ முடியாதபடி
    தொடர்ந்து அமெரிக்கக் குண்டுகள் விழுந்து கொண்டே இருக்கும். அந்த அழுகிய பிணங்குளுடனேயே மக்கள் வாழ வேண்டிய சூழல். ஆனாலும் தொற்று நோய் பரவவில்லை. காரணம் வியட்னாம் மக்களின் உணவில் துளசியை நாம் கறி வேப்பிலை, கொத்தமல்லி உபயோகிப்பது போல் அவர்கள் பயன் படுத்துகிறார்கள். நம் கொத்தமல்லி சட்னியைப் போல துளசி சட்னி சாப்பிடுகிறார்கள்.

    ReplyDelete
  5. வணக்கம் ஐயா,துளசியின் மகத்துவம் அறிந்தோம்.நண்பர்கள் மற்றும் உறவுகளிடம் பகிர்ந்து கொண்டேன்.நன்றி.

    ReplyDelete
  6. மிகவும் உபயோகமான தகவல் நன்றி ஐயா

    ReplyDelete
  7. /////Blogger Visvanathan N said...
    திரு ஐயா,
    வணக்கம். துளசியின் மகத்துவத்தை மிக அழகாக எடுத்து பகிர்ந்தமைக்கு நன்றி. தாமிரத்துவத்தின் மகத்துவம் அருமை அருமை. பகிர்வுக்கு நன்றி.
    அன்புடன்,
    Visvanathan N /////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி விஸ்வநாதன்!

    ReplyDelete
  8. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    சவால் விடுவது போன்ற ஒரு பதிவு.அத்துடன் ஆணித்தரமான அழுத்தத்துடன் ஆதாரங்களை சாட்சிகளாக்கி விளக்கம் படடிருக்கும் தகவலைப் படிக்கும்போது யாரும் அதன்படி செயல்படத் தொடங்கியிருப்பார்கள் என்றால் மிகையாகாது! ஏனெனில்,அப்படிப்பட்டவர்களில் அடியேனும் ஒருவன்.
    நன்றி வாத்தியாரையா..வாழ்க தங்கள் தொண்டு!/////

    நல்லது. நன்றி வரதராஜன். அப்படியே செயல்படுங்கள். வாழ்க வளமுடன்!

    ReplyDelete
  9. /////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... Nice article...
    Have a great day.
    Thanks & Regards,
    Ravi-avn////

    நல்லது. நன்றி ரவிச்சந்திரன்!

    ReplyDelete
  10. /////Blogger kmr.krishnan said...
    வியட்னாம் போரின் போது பல பிணங்கள் குடியிருப்புக்களுக்கு அருகில் வீழ்ந்து கிடக்கும்.அவற்றினை உடனுக்குடன் எடுத்து எரிக்கவோ புதைக்கவோ முடியாதபடி
    தொடர்ந்து அமெரிக்கக் குண்டுகள் விழுந்து கொண்டே இருக்கும். அந்த அழுகிய பிணங்குளுடனேயே மக்கள் வாழ வேண்டிய சூழல். ஆனாலும் தொற்று நோய் பரவவில்லை. காரணம் வியட்னாம் மக்களின் உணவில் துளசியை நாம் கறி வேப்பிலை, கொத்தமல்லி உபயோகிப்பது போல் அவர்கள் பயன் படுத்துகிறார்கள். நம் கொத்தமல்லி சட்னியைப் போல துளசி சட்னி சாப்பிடுகிறார்கள்.//////

    நல்லது. உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  11. //////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,துளசியின் மகத்துவம் அறிந்தோம்.நண்பர்கள் மற்றும் உறவுகளிடம் பகிர்ந்து கொண்டேன்.நன்றி.//////

    நல்லது. உங்களின் பகிர்விற்கு நன்றி ஆதித்தன்!

    ReplyDelete
  12. //////Blogger moorthy krishnan said...
    மிகவும் உபயோகமான தகவல் நன்றி ஐயா/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  13. iyya
    sembu pathiram appdiya use pannalama or
    ulla MULAM pusi than use pannanuma pls explain

    ReplyDelete
  14. //////Blogger Selvi Rajan said...
    iyya
    sembu pathiram appdiya use pannalama or
    ulla MULAM pusi than use pannanuma pls explain/////

    நான் குறிப்பிட்டிருப்பது தாமிர பாத்திரம் (காப்பர்) (Copper)
    நீங்கள் கேட்பது பித்தளை என்று நினைக்கிறேன். பித்தளை என்றால் நீங்கள் கூறுவது போல ஈயம் பூச வேண்டும்
    தாமிரத்திற்கு வேண்டாம்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com