மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

5.12.11

Astrology உங்களுடைய கோவிலை உங்களுக்குத் தெரியுமா?

Astrology உங்களுடைய கோவிலை உங்களுக்குத் தெரியுமா?

உங்களுடைய கோவிலை உங்களுக்குத் தெரியுமா? - பகுதி 1

“என்ன சார்? முதலில் நான் இறை நம்பிக்கையே இல்லாத ஆசாமி! எனக்குக் கோவிலா? யார் கட்டினார்கள்? என் மாமனாரா?” என்று கேட்க நினைப்பவர்கள் பதிவை விட்டு விலகவும்! இது உங்களுக்கான பதிவு அல்ல! மற்றவர்கள் தொடரவும்!

Everything is Eshwara! எல்லாமே ஈஸ்வரன் என்பார் தயானந்த சரஸ்வதி சுவாமிஜி அவர்கள்.

“You can not separate the creator from the creation. Both are one and the same" என்றும் சொல்வார் அவர்.

உலகில் படைக்கப்பெற்றவற்றில் இருந்து படைத்தவனைப் பிரிக்க முடியாது என்பார்.

பிரிக்க முடிந்தால், படைத்தவனுக்கு, அவன் படைத்தவற்றிற்கான மூலப் பொருட்கள் (Raw materials) எங்கே இருந்து கிடைத்தன என்று கேட்பான் அஞ்ஞானி.



ஒரு சின்ன தோட்டத்தில் மலர்கின்ற விதம் விதமான பூக்களுக்கு எங்கே இருந்து மூலப் பொருட்கள் கிடைக்கின்றன? நிறம் எங்கே இருந்து கிடைக்கிறதோ - வாசம் எங்கே இருந்து கிடைக்கிறதோ - அதுதான் அடிப்படை! அதுதான் இறைச் செயல். அதுதான் இறைவன்!

அதைக் கவியரசர் கண்ணதாசன் அவர்கள் அசத்தலாக ஒரு பாடலின் நடுவே இரண்டே வரிகளில் சொல்லிவிட்டுப் போனார்


                        "வண்ண வண்ணப் பூவினில் காயை வைத்தவன்
                               சிப்பி ஒன்றின் நடுவே முத்தை வைத்தவன்"


    “முழுப் பாடலையும் தெரிந்து கொள்ள விருப்பமுள்ளவர்களுக்காக பாடல் வரிகளைப் பதிவின் இறுதியில் கொடுத்துள்ளேன்.
-----------------------------------------------------------------------------------------------------------------------

அருணகியார் வேறு விதமாகச் சொன்னார்:

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!

                  - அருணகிரி நாதர்
----------------------------------------------------------
உருவம் உடையவனாகவும்,
உருவம் இல்லாதவனாகவும்,
உள்ளவனாகவும்,
இல்லாதவனாகவும்,
மாற்றங்களுள்ளதாகவும்,
மலராகவும்,
ஒலியாகவும்,
ஒளியாகவும்,
கருப்பையின் கருவாகவும்,
அனைத்து ஜீவராசிகளின்
இயக்கத்திற்குரிய உயிராகவும்,
அடையும் நிலையாகவும்,
விதிக்கப்பட்டதாகவும்,
ஆசானாகவும்,
வந்து
அருள் செய்து
என்னை
ஆட்கொள்வாய்
குமரக் கடவுளே!
...................................................................................
இதில் கரு என்ற சொல்லைக் கவனிக்கவும். கரு என்ற சொல்லிற்கு அர்த்தம் தெரியுமல்லவா? தெரியாவிட்டால், தெரிந்து கொள்ளும் காலம் வரும்போது தெரிந்து கொள்ளுங்கள்
முருகப்பெருமானும் அவ்ருடைய தீவிர பக்தர் அருணகிரியாரும்
----------------------------------------------------------
நீங்கள் இப்பூமியில் பிறக்கும்போது உங்களுக்குத் தேவையான அனைத்துமே பூமியில் தயாராக உள்ளன. சுவாசிக்கக் காற்று, வசிக்க இடம், அணைக்க ஒரு தாய், புசிக்கப் பால், சற்று வளர்ந்த பிறகு உண்ண உணவு (நவதானியங்கள், காய்கறிகள், பழங்கள், உங்களுக்குப் பால்வழங்கப் பசுக்கள்) என்று எல்லாமே தயாராக உள்ளன.

மனிதனால் உருவாக்கப்பெற்றது டாஸ்மாக் சரக்கு மட்டும்தான். ஆனால் அதற்குத் தேவையான அதன் உற்பத்திக்குத் தேவையான மூலப் பொருட்கள் அனைத்தும் முன்பாகவே பூமியில் கிடைக்கின்றன.

ஆனால் சரக்கடித்துவிட்டு, அவன் அதிகமாகச் சாடுவது, தனக்கு எல்லாம் கொடுத்த இறைவனைத்தான்

இறைவன் கருணையே வடிவானவர். அதையெல்லாம் அவர் கண்டு கொள்ள மாட்டார்.
--------------------------------------------------------------------
சரி, கதைத்தது போதும். சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன்.

ஈஸ்வரன் எங்கும் இருக்கிறார். தூணிலும் இருக்கிறார். துரும்பிலும் இருக்கிறார். உங்கள் நெஞ்சிலும் இருக்கிறார். நீங்கள் விரும்பும் பெண்ணின் கண்களிலும் இருக்கிறார். ஆகவே அவரை எங்கே இருந்து வேண்டு மென்றாலும் வணங்கலாம்.

மேட்டர் அதுவல்ல!

நம்முடைய வீட்டில் வரவேற்பு அறை, படுக்கை அறை, சமையல் அறை, சாப்பிடும் கூடம், குளியல் அறை, கழிப்பறை என்று தனித்தனியாகக் கட்டி வைத்திருக்கிறோம். அல்லது பிரித்து வைத்திருக்கிறோம். நம் வீடுதானே என்பதற்காக எல்லா இடத்திலும் நின்று உச்சா போக முடியாது. அதற்கென்று உள்ள இடத்தில்தான் போக வேண்டும்.

இறைவனை வணங்குவதற்கு, மனதை ஒருமுகப் படுத்தி வணங்குவதற்காக நம் முன்னோர்கள் ஊருக்கு ஊர் ஏராளமான கோவில்களைக் கட்டி வைத்திருக்கிறார்கள்.

ஆயிரக்கணக்கான கோவில்கள் இருந்தாலும், உங்களுக்கென்று ஒரு கோவில் இருக்கிறது. உங்களுக்கென்று சொந்த வீடு அல்லது குடக்கூலிக்குக் குடியிருக்கும் வீடு இருப்பதைப் போல உங்களுக்கென்று ஒரு கோவில் இருக்கிறது.

எதன் அடிப்படையில் அது இருக்கிறது.

நீங்கள் பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் அது இருக்கிறது.

ஒவ்வொன்றாக அவற்றைப் பார்ப்போம்

நட்சத்திரங்களின் அடிப்படையில் அவற்றை வரிசைப் படுத்தி எழுதினால், ஒரு சுவாரசியம் இருக்காது. முதலில் அஸ்விணி நட்சத்திரத்திற்கான கோவிலைப் பற்றி எழுதினால், அடுத்து உள்ள பரணி நட்சத்திரக்காரன் மட்டும் ஆர்வமாக இருப்பான் - நாளை நமது நட்சத்திரத்திற்காக கோவில் வரும் என்று.

திருவோண நட்சத்திரக்காரன் நமது நட்சத்திரம் 22ஆவது நட்சத்திரம். ஆகவே அடுத்துவரும் 20 நட்சத்திரங்களைப் பற்றிக் கவலையில்லாமல் இருப்போம் என்று சும்மா இருப்பான்.

ஆகவே வரிசைப்படி எழுதப்போவது இல்லை!

வாரம் இரண்டு அல்லது மூன்று நட்சத்திரங்களுக்கான கோவில்களை உங்களுக்கு அறிமுகப் படுத்த உள்ளேன். முதல் அறிமுகம் நாளை!

எந்த நட்சத்திரத்திற்கானது அது?

அது சஸ்பென்ஸ்...நாளைவரை பொறுத்திருங்கள்

அன்புடன்
வாத்தியார்

-------------------------
அந்தப் பாடலின் முழுமையான வரிகள்:

இறைவன்.. இறைவன்.. இறைவன்..
வருவான்.. வருவான்.. வருவான்..

இறைவன் வருவான் - அவன்
என்றும் நல்வழி தருவான்
அறிவோம் அவனை - அவன்
அன்பே நாம் பெறும் கருணை

(இறைவன்)

வண்ண வண்ணப் பூவினில் காயை வைத்தவன்
சிப்பி ஒன்றின் நடுவே முத்தை வைத்தவன்
சின்னச் சின்ன நெஞ்சினில் பாசம் வைத்தான்
நெஞ்சில் வரும் பாசத்தை பேச வைத்தான்

அன்பு என்பது கோயில்
ஆசை என்பது நாடு
பாசம் என்பது வீடு
பாசம் என்பது வீடு

(இறைவன்)

உள்ளம் என்னும் கோயிலைக் கட்டி வைத்தவன்
கண்கள் எனும் வாசலை தந்து வைத்தவன்
கன்ணில் வரும் பாதையைக் காணச் சொன்னான்
நல்ல நல்ல பாதையில் போகச் சொன்னான்

கண்கள் அவனை காண்க
உள்ளம் அவனை நினைக்க
கைகள் அவனை வணங்க
கைகள் அவனை வணங்க

(இறைவன்)


படம் : சாந்தி நிலையம்
குரல் : சுசீலா
பாடல் : கண்ணதாசன்
இசை : எம்.எஸ்.விஸ்வனாதன்
--------------------------------------------------------------------

வாழ்க வளமுடன்!

16 comments:

  1. இறைவன் இருப்பை பழித்த இலங்கை புத்த பிட்சுக்கள் சிதம்பரம் நடராஜர் கோவிலில் வந்து உணர்ந்து கொண்டதைப் போல், நம்முடன் இருந்து கொண்டே பழிப்பவர்களும் அவர்களாகவே உணர்வார்கள் ஐயா.
    இறையை உணர வைக்காமல் கேது பகவான் ஞானத்தைத் தருவார என்ன!
    நன்றி ஐயா.

    ReplyDelete
  2. இது வருகை பதிவு
    இத்துடன் அய்யரின் எண்ணத் தகவல்கள்..

    not the creation and the creator; but
    it is creativity and the creation

    இதனை இப்படி சொல்வது தான்
    இன்னமும் சரியாக இருக்கும்..

    இந்த மதத்தில் மட்டும் தான்
    "கடவுள் இல்லை" என சொல்லவும்
    உரிமை உண்டு,

    ///நம் வீடுதானே என்பதற்காக எல்லா இடத்திலும் நின்று உச்சா போக முடியாது. அதற்கென்று உள்ள இடத்தில்தான் போக வேண்டும்.///

    கிராமங்களில் இதற்கு இடம் இல்லாத வீடுகளும் உண்டு...
    இந்த உதாரணம் அய்யருக்கு சரியாக படவில்லை..(உடல்)மலம் ஏற்கும் "கழிவறை"யை (ஆணவ)மலத்தை
    விலக்கும் "கருவறை"க்கு ஒப்பிடுவது சரியாக படவில்லை..

    உண்மையிலேயே இந்த வரிகளை மாற்றி விடுங்கள்..
    உங்கள் மனதில் பட்டால்

    நம் நாடு என்பதற்காக எல்லார் வீட்டிற்கும் செல்ல முடியாது என சொல்லலாமோ ... என வேண்டுமானால் சொல்லிப் காட்டுங்கள்..

    அதுவும் சரியாக இல்லை என்றாலும் முன்னதற்கு இது பரவாயில்லை..

    சரியானது எதுவென கேட்பவர்களுக்காக
    அப்புறம் சரியானதை சொல்லிகிறோம்..
    அதுவரை அமைதி காக்க..

    கடவுள் பற்றியும் கடவுள் கொள்கையை பற்றி சொல்லும் வேறுவிதமான கருத்திற்கும் ...

    சுட்டிக்காட்டாமல்
    சும்மா இருக்க முடியவில்லை..

    போர் அம்புகளையும்
    சொல் வம்புகளை

    விலை கொடுத்து
    வாங்கவும் தயாராக

    நீங்கள் மட்டும் பாட்டு தந்தால் எப்படி
    அய்யரின் அன்பு பரிசாக

    இந்த பாடலை சுழல விடுகிறோம்
    இன்றைய வகுப்பில்



    இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
    நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே

    பாசமுள்ள பார்வையிலே
    கடவுள் வாழ்கிறான் - அவன்

    கருணையுள்ள நெஞ்சினிலே
    கோயில் கொள்கிறான்

    அவன் பூ விரியும் சோலையிலே மணப்பான்
    இசை பூங்குயிலின் தேன் குரலில் இருப்பான்

    குளிர் மேகமென தாகத்தையே தணிப்பான்
    தளிர்க் கொடி விளையும் கனிகளிலே இனிப்பான்

    (அய்யருக்கு பிடித்த இந்த வரிகளை ருசியுங்கள்)

    "பல நூல் படித்து நீயறியும் கல்வி
    பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்

    பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்
    இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்"

    தன் வியர்வையிலும் உழைப்பினிலும் வாழ்வை
    தந்து பொழி பொழிந்து உயிர் வளர்க்கும் ஏழை

    அவன் இதழ் மலரும் சிரிப்பொலியைக் கேட்டேன்
    அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்


    வணக்கமும் வாழ்த்துக்களும்

    ReplyDelete
  3. வணக்கம் ,
    " You can not separate the creator from the creation. Both are one and the same"
    He explains further beautifully, material and knowledge is one and the same and cannot be separated.
    Mother created a child. Child is asking mother, Mom, you were created me and why you have given me two hands , two legs, two eyes and one mouth etc..Why not give more hands etc.. Then mother replies, I don't know, I am only creator. You ask father and he will tell you.
    Then child asked father. The father replied, creator of universe is within the self. One who needs to understand the difference of self and universe. Everthing has a karana and kariyam (reason) . Esvara is in both places. That's why we also called Arthanatheesvaram. Esvara is knowledge and parvathy is materials and hence, knowledge and material is one and the same.That's why we called Esvara pervades all the places.
    In Bhagavad Gita Chapter 13, Slokam-27 says same meaning: " Samam servesu Bhutesu tishtantam parameswaram ..... pasyati"
    meaning : One who seeds the lord, remaining the same in all beings and elements.
    samam= the same, tishtantam = remaining, servesu bhutesu = in all beings and elements

    Thanks to vadhiyar to give me this topic of vedanta to write this to me.
    Vedantic student
    Chandrasekaran Suryanarayana
    USA

    ReplyDelete
  4. iyer said...இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
    நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே........

    என்று தொடங்கும்பாடல் பாபு என்ற சிவாஜிகணேசன் நடித்த படத்தில் வந்தது.பாடலை எழுதியது கண்ணதாசன் பாடியவர் TMS.என்று நினைக்கிறன்.யார் பாடினால் என்ன? யார் எழுதினால் என்ன? கடவுளை காட்ட இதை விட வேறு என்ன வேண்டும் ஜாதி மதங்களை கடந்து கடவுளை மட்டுமே உணர வைக்கும் அற்புதமான பாடல் இந்த பாடலில் ஒவ்வொரு வரியிலும் இறைவனை காணலாம் கண்ணை மூடி இப்பாடலை கேட்கும் போது உடம்புக்குள் ஊடுருவும் உணர்வை நிச்சயம் உணரலாம். தினசரி நாம் நடைமுறையில் பேசும் வார்த்தைகள் தான் பாடல் முழுக்க இருக்கும். இருந்தும் இறை உணர்வை தூண்டும். பாசத்தில் இருப்பன், நேசத்தில் இருப்பான் பூவில் இருப்பன் கூவும் குலின் குரலில் இருப்பன் என்று சொல்லிக்கொண்டே வந்து "பல நூல் படித்து நீ அறியும் கல்வி ,பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்" என்று படித்ததை நடைமுறை செய்வதிலும், செய்யும் தர்மத்திலும் இருக்கிறான் என்று எழுதி, இறைவன் மேலே இருக்கிறான் என்று மேலே நாம் காட்டுவோமே அந்த உயரத்திற்கு கண்ணதாசன் போய்விட்டார். இறைவனை இல்லை என்று சொல்பவனும் இப்பாடலை கேட்டால்.வாய் மூடி மௌனியாகி விடுவான்.

    ReplyDelete
  5. அய்யா வணக்கம் ,எனது நட்சத்திர கோவிலை பற்றியும் மற்ற நட்சத்திர கோவில்களை பற்றியும் தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கின்றேன் ,நன்றி

    ReplyDelete
  6. iyer said...இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
    நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே........

    நாம் தேடும் இறைவன் தூணிலும் இருப்பன் துரும்பிலும் இருப்பன் எங்கும் இருப்பன் எதிலும் இருப்பன். இப்படி எங்கும் நீசமற நிறைந்திருக்கும் அவன்,அவனாக தேடி வரும் இடம் மட்டும் எது என்று சொல்கிறார் பாருங்கள்."கருணை உள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான் "என்ன ஒரு வரிகள். மந்திரியிடம் இல்லை, மகாராஜனிடம் இல்லை, படித்தவனிடம் இல்லை, பொருள் படைத்தவனிடமும் இல்லை, ஈவு-இறக்கம் எவன் கொள்கிறானே அங்கு குடி ஏறுவான்.என்று சொல்கிறது இப்பாடல். இது எனது சேகரிப்பில் உள்ள பாடல்களில் ஒன்று. நம் வகுப்பறை கண்மணிகள் ஒரு முறை இசையோடு கேட்டு பார்க்கவும்.

    வகுப்பறைக்கு எடுத்து கொடுத்தமைக்கு நன்றி அய்யர் அவர்களே.

    ReplyDelete
  7. வழக்கம் போல் அறிவிப்பு ஆர்வத்தை தூண்டுகிறது, காத்திருக்கிறேன் வரும் பதிவுகளை எதிர்நோக்கி ....நன்றி.

    தெய்வத்தின் இருப்பிடத்தை விவாதிக்கும் கண்ணதாசனின் மற்றுமொரு பாடல் .....
    "தெய்வம் இருப்பது எங்கே"
    திரைப்படம்: சரஸ்வதி சபதம்
    இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
    இசை: K.V. மஹாதேவன்
    ------------------------------------------------
    தெய்வம் இருப்பது எங்கே அது இங்கே வேறெங்கே
    தெய்வம் இருப்பது எங்கே அது இங்கே வேறெங்கே
    தெய்வம் இருப்பது எங்கே

    தெளிந்த நினைவும் திறந்த நெஞ்சும் நிறைந்ததுண்டோ அங்கே
    தெளிந்த நினைவும் திறந்த நெஞ்சும் நிறைந்ததுண்டோ அங்கே
    தெய்வம் இருப்பது எங்கே

    பொன்னும் பொருளும் நிறைந்தவர் நெஞ்சம் பொய்யில் வளர்ந்த காடு
    எண்ணும் எழுத்தும் நிறைந்தவர் நெஞ்சம் இறைவன் திகழும் வீடு
    தெய்வம் இருப்பது எங்கே

    ஆடை அணிகலன் ஆடம்பரங்கள் ஆண்டவன் விரும்புவதில்லை
    அங்கொரு கண்ணும் இங்கொரு கண்ணும் ஆலய வழிபாடில்லை
    இசையில் கலையில் கவியில் மழலை மொழியில் இறைவன் உண்டு
    இவை தான்தெய்வம் என்பதை அறிந்தால் ஏற்கும் உனது தொண்டு
    தெய்வம் ஏற்கும் உனது தொண்டு

    தெய்வம் இருப்பது எங்கே அது இங்கே வேறெங்கே
    தெய்வம் இருப்பது எங்கே

    ReplyDelete
  8. Ayya Vannakkam,

    Nalla pathivu. Naalai neengal elutha povathu KAARTHIGAI natchatthiram ena ninaikkiren.

    Parppom. Thanks,Sengotaian.P.K,Tirupur.

    ReplyDelete
  9. ஐயா வணக்கம்

    நான் உங்களின் வகுப்பிற்கு[பின்னூட்டம்] புது வரவு.தங்களின் வகுப்பு பாடங்களை கடந்தபல மாதங்களாக படித்து வருகிறேன்.தினமும் உங்களின்
    வகுப்பறைக்கு தவறாமல் வருகைதருவேன்.உங்களிற்கு எல்லாம் வல்ல இறைவன் தந்த இந்த கல்வி செல்வத்தை மற்றவர்கட்கும் பகிரும் உங்களின்
    உயர்ந்த உள்ளத்ததிற்கு எனது உளமார்ந்த நன்றிகள்.இதுவரை ஜோதிடம் பற்றி எந்த அடிப்படை அறிவிவும் இல்லாத என் போன்ற பலருக்கு உங்களின் இந்த வகுப்பு மிகவும் பயனுடையது.

    ஐயா, மேலும் நான் உங்களின் உயர் வகுப்பு பாடங்கள்,மற்றும் உங்களின் ஜோதிடப் புத்தகவெளியீடுகளையும் பெற விரும்புகிறேன்.உங்களுக்கு தனிமடலில் எழுதியிருந்தேன்.என்ன பிரச்சனை என்று தெரியவில்லை [I got some error reports for all the mail i send to you]. உங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது அறியத்தரவும்.நன்றிகள்.
    suthan.k- canada.

    ReplyDelete
  10. Guru Vanakkam,

    So it wont be ashwini. Just kidding, Eager to know about them all.

    Regards
    Ramadu

    ReplyDelete
  11. வணக்கம் ஐயா!அருமை. நன்று!தொடர்வோம்,தொடர்வேன்.

    ReplyDelete
  12. உலகில் படைக்கப்பெற்றவற்றில் இருந்து படைத்தவனைப் பிரிக்க முடியாது என்பார்.

    மிகச்சிறந்த கருத்து!

    நட்சத்திரங்களுக்கான கோவில்கள் பற்றிய தகவல்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்,

    நன்றி ஐயா.

    ReplyDelete
  13. இன்று பின்னூட்டங்களில் ஒரே பாடல் மயமாக இருக்கிறது.

    //ஆனால் சரக்கடித்துவிட்டு, அவன் அதிகமாகச் சாடுவது, தனக்கு எல்லாம் கொடுத்த இறைவனைத்தான்

    இறைவன் கருணையே வடிவானவர். அதையெல்லாம் அவர் கண்டு கொள்ள மாட்டார்.//

    கடவுளுக்கு அவமானம், அவமரியாதை என்பதெல்லாம் இல்லை. அவர் இவைகளையும் கடந்தவர்.

    //ஈஸ்வரன் எங்கும் இருக்கிறார். தூணிலும் இருக்கிறார். துரும்பிலும் இருக்கிறார். உங்கள் நெஞ்சிலும் இருக்கிறார். நீங்கள் விரும்பும் பெண்ணின் கண்களிலும் இருக்கிறார்.//

    இன்னொன்றையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இதற்கு முன் சொன்ன டாஸ்மாக் சரக்கிலும் இருக்கிறார்.

    ReplyDelete
  14. ///நம் வீடுதானே என்பதற்காக எல்லா இடத்திலும் நின்று உச்சா போக முடியாது. அதற்கென்று உள்ள இடத்தில்தான் போக வேண்டும்.///

    கிராமங்களில் இதற்கு இடம் இல்லாத வீடுகளும் உண்டு...
    இந்த உதாரணம் அய்யருக்கு சரியாக படவில்லை..(உடல்)மலம் ஏற்கும் "கழிவறை"யை (ஆணவ)மலத்தை
    விலக்கும் "கருவறை"க்கு ஒப்பிடுவது சரியாக படவில்லை..

    உண்மையிலேயே இந்த வரிகளை மாற்றி விடுங்கள்..
    உங்கள் மனதில் பட்டால்

    நம் நாடு என்பதற்காக எல்லார் வீட்டிற்கும் செல்ல முடியாது என சொல்லலாமோ ... என வேண்டுமானால் சொல்லிப் காட்டுங்கள்..

    அதுவும் சரியாக இல்லை என்றாலும் முன்னதற்கு இது பரவாயில்லை..

    சரியானது எதுவென கேட்பவர்களுக்காக
    அப்புறம் சரியானதை சொல்லிகிறோம்..
    அதுவரை அமைதி காக்க..////


    அமைதி காக்க முடியவில்லை. சீக்கிரம் ஒரு விள‌க்க ஆக்கத்தைத் தாருங்கள்
    ஐயர் அவர்களே!

    கோவிலில் கழிவறை என்ற்து ஐயரை கொஞ்ச‌ம் அசைத்துள்ளது.அதற்காக‌ வேறு மாதிரி சொன்னதும் அவருக்கே திருப்தி அளிக்கவில்லை.

    நான் எதுவாக இருந்தாலும் ஸ்ரீராமகிருஷ்ணர் என்ன சொல்கிறார் என்று யோசிப்பேன்.

    ஸ்ரீபரமஹம்சர் சொல்லுவார்:"கோவில் என்பது பசுவின் மடியைப்போல:பசுவின் உடல் முழுதும் பாலின் குணங்கள் பரவியிருந்தாலும்,
    கொம்பையோ, வாலையோ, காதையோ பிடித்து இழுத்தால் பால் கிடைக்குமா?
    அது எங்கே கிடைக்கும் என்று அறிந்து கொள்ள கோனாரிடம் பழகி அறிந்து கொள்ள வேண்டும். அவர் 'மடியில் கிடைக்கும்;எப்படி அதனை கறக்க வேண்டும்' என்பதை உங்களுக்குச் சொல்லியும் தருவார்"

    ஈண்டு பசு பிரபஞ்சத்திற்கும்,பசுவின் மடி கோவிலுக்கும்,கோனார் குருவிற்கும், பயிற்றுவித்தல்/பயிலுதல் ஆன்மீக சாதனைகளுக்கும் உவமையாக்கப்பட்டுள்ளதனை உய்த்து உணர்வீர்களாக.

    கோவிலில் சமையல் அறை உண்டு.மடப்பள்ளி.கிட்சென். பள்ளி அறை உண்டு.படுக்கை அறை. பெட்ரூம். வரவேற்பு அறை உண்டு.வெளி மண்டபம்.
    வாழும் அறை உண்டு. அர்த்த மண்டபம்.வழிபடும் அறை உண்டு. கரு அறை.

    ஆனால் கழிப்பறை கிடையாது. ஏனெனில் 'அவன் நிர்மலன்'. அதாவது இறைவனுக்கு கழிவே கிடையாது. எனவே கோவிலில் கழிப்பறைக்கு வேலை இல்லை.

    'TO LET' என்றால் வாடகைக்கு விடுதல்.
    'TOILET' என்றால் கழிப்பறை. இர‌ண்டு சொற்களுக்கும் என்ன வேற்றுமை?

    'I ' தான்.'நான்'என்னும் அகந்தையை தூக்கிவிட்டால், வீடு காலியகிவிடும்.இறைவன் வந்து குடிபுகுவான்.வீட்டை கழிப்பறை ஆக்கியது 'நான்' என்ற ஆணவ மலம்.அம்மலத்தை விலக்கினால் நிர்மலன் நமக்கு வசமாவான்.

    ReplyDelete
  15. ///கோவிலில் கழிவறை என்ற்து ஐயரை கொஞ்ச‌ம் அசைத்துள்ளது.அதற்காக‌ வேறு மாதிரி சொன்னதும் அவருக்கே திருப்தி அளிக்கவில்லை.///

    அசைவதுமில்லை அய்யர்
    அசரவதுமில்லை..

    கழிப்பறையிலும்
    கடவுள் உண்டு.. இல்லையெனில்

    மனச்சிக்கல் இல்லாமல் இருக்க
    மலச்சிக்கல் இல்லாதிருக்க செய்யும்

    கருணை திறத்தினை என்னவென்பது
    கடவுளுக்கு கருணை என நாமும்

    அன்பு என அவர்களும் சொல்லுவது
    அனைவரும் அறிந்ததே...

    அன்பு வேறு கருணை வேறு
    அதனை தெளிவாக தெரிந்தால்

    நன்மை உண்டு
    நமக்குமட்டுமல்ல பிறர்க்கும்..

    கழிவறைக்கு போய்ட்டு வாருங்கள்
    அங்கிருந்து அள்ளிக்கிட்டு வாராதீர்கள்

    தெய்வம் நமக்கு துணை பாப்பா என
    பாரதி சொல்வதை இங்கு இணைத்து

    பார்த்தால் இன்பமும் வரும்
    பாராமலிருந்தால் தேட வேண்டும் (இன்பத்தை)




    ///கோவிலில் சமையல் அறை உண்டு.மடப்பள்ளி.கிட்சென். பள்ளி அறை உண்டு.படுக்கை அறை. பெட்ரூம். வரவேற்பு அறை உண்டு.வெளி மண்டபம்.
    வாழும் அறை உண்டு. அர்த்த மண்டபம்.வழிபடும் அறை உண்டு. கரு அறை.
    ஆனால் கழிப்பறை கிடையாது. ///


    கோவில் வேறு ஆலயம் வேறு
    கோ என்பது அரசனையும்

    இல் என்பது இருப்பிடத்தையும் என
    இயல்பாக பொருள் சொல்வர்

    உள்ளம் பெருங்கோயில்
    ஊண் உடம்பு ஆலயம் என

    திருமூலர் சொல்லியதை நாம்
    திருத்தமாக உணராததன் விளைவே



    ///'நான்' என்ற ஆணவ மலம்.அம்மலத்தை விலக்கினால் நிர்மலன் நமக்கு வசமாவான்.///


    EGO என்பதே Eliminating God Out
    என்பார்
    தன் முனைப்பு வேறு
    தன்னிடமுள்ள ஆணவ மலம் வேறு

    ஆணவம் பிடித்தவன் என சொல்ல
    தலைகனம் பிடித்தவனை சொல்லும்

    ஆணவம் வேறு ஆணவ மலம் வேறு
    அதையும் இதையும் சேர்த்து

    அது தான் இது என்பது..
    அப்படியா என அறியாதவர்கு

    புதிதாக இருக்கலால் சமயத்தில்
    புதிராகவும் இருக்கலாம் ஆனால்

    எதை எதுவாக அறிந்து கொள்கிறோமோ
    அது அதுவாக இருப்பதில்லை என்பதே உண்மை

    அறிவினால் அறிந்த யாவும்
    அசத்து ஆதல் அரிதி என

    மெய்கண்ட சாத்திரம்
    சிவஞான சித்தியாரின் வாக்கு

    எடுத்துச் சொல்கிறது

    உடுப்பி ஓட்டலில்
    உட்கார்ந்து சாப்பிட சிக்கன் பிரியாணி

    கேட்டால் எப்படி..? தோழர்களே
    கேளீரோ ஒரு வார்த்தை என

    இந்த பாடலினை
    இங்கு சுழலு விடுகிறோம்

    இருக்கும் இடத்தை விட்டு
    இல்லாத இடம் தேடி

    எங்கெங்கோ அலைகின்றார்
    ஞானத் தங்கமே

    அவர் ஏதும் அறியாரடி
    ஞானத் தங்கமே

    ஊருக்குப் பகையாவான்
    ஞானத் தங்கமே

    அவன் ஊழ்வினை
    என்ன சொல்வேன் ஞானத் தங்கமே

    நஞ்சினை நெஞ்சில் வைத்து நாவினில் அன்பு வைத்து

    நல்லவன் போல் நடிப்பான்
    ஞானத் தங்கமே

    அவன் நாடகம் என்ன சொல்வேன் ஞானத் தங்கமே

    ReplyDelete
  16. ஐயர் அவர்களூக்கு! நீங்கள் கட்டுரைகளாக எழுதினாலே நீங்கள் சொல்ல வந்தது என் போன்ற சிற்றறிவாளர்களுக்குப் புரியும். உங்கள் இந்த நடை மிகவும் குழப்பத்தையே உணாடாக்குகிறது. உங்களுக்கு சைவ சித்தாந்தம் நல்ல பரிச்சயம் என்று தோன்றுகிறது. அது அறியாதவர்களிடம் நீங்கள் பேசும் போது உங்களுடையதை நன்கு தெரியப்படுத்தினாலே மேற்கொண்டு சந்தேகம் கேட்கலாம். பாடத்தையே ரேஷன் போல நடத்திவிட்டு ... மற்றவர்கள் குழப்பம் என்றால்.

    வேதாந்தமும் சித்தாந்தமும் வெவ்வேறாகவே இருக்கலாம்.இது போத்திக்கொண்டு படுக்க‌வும் என்று சொன்னால் அது படுத்துக்கோன்டு போத்தவும் என்று சொல்லும். சைவ சித்தாந்தம் மட்டுமே சரி என்று நிறுவ நினைத்தால் சந்திக்கும் புள்ளி இல்லாமல் போய்விடும்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com