
நன்றி - தினமலர்
-----------------------------------------------------------------------
சனி என்ன செய்யும்? என்ன செய்யாது?
சனிப் பெயர்ச்சியை வைத்து நாளிதழ்களும் சரி,
குறு இதழ்களும் சரி பரபரப்பாக எழுதிக் கொண்டிருக்கின்றன.
சாதாரணக் குடிமகனுக்கு - என்ன தெரியும்? ஒன்றும் சரிவரத் தெரியாது?
சனிப்பெயர்ச்சி என்றால், சனீஸ்வரன் மூட்டை முடிச்சுக்களை
யெல்லாம் கட்டிக்கொண்டு தன் குடும்பத்தாருடன் அடுத்த
ஊருக்குக் குடி பெயர்ந்து போகிறார் என்று நினைத்துக்கொண்டிருப்பான்.
வானவெளியின் வட்டத்திலுள்ள 360 டிகிரிகளையும் (பாகை
களையும்) 30 வருடங்களில் (அதாவது 360 மாதங்களில் மாதம்
ஒரு டிகிரி என்ற விகிதத்தில்) கடந்து ஒரு சுற்றை முடிக்கும்
சனீஸ்வரன், ஒரு ராசியின் 30 டிகிரிகளையும் கடந்து அடுத்த
ராசியின் எல்லைக்குள் பிரவேசம் செய்வதுதான் சனிப் பெயர்ச்சி.
கடக ராசியில் சுமார் இரண்டரை வருடங்களுக்கு முன்பு
பிரவேசித்தவர், அந்த ராசியின் முழு தூரத்தையும் தாண்டி
இப்போது 121வது டிகிரியில் துவங்கும் சிம்ம ராசிக்குள்
பிரவேசிக்கின்றார்
அதனால் என்ன நடக்கும்?
பத்திரிக்கைகளில் சனிக்கென்று எழுதியுள்ள ராசி பலன்களில் குறிப்பிட்டுள்ளதைப் போலதான் அவ்வளவு ராசிக்
காரர்களுக்கும் நடக்குமா?
அப்படி நடக்காது! அப்படியே நடக்காது!
ஏன் நடக்காது?
இந்தியாவின் ஜனத்தொகை சுமார் 108 கோடி மக்கள். 12 ஆல்
வகுத்தால் சராசரியாக ஒரு ராசிக்கு 9 கோடி என்ற அளவில்
மக்கள் இருக்கலாம். அந்த ஒன்பது கோடி மக்களுக்கும்
அவர்களுடைய ராசிப்படி குறிப்பிட்டுள்ள பலன்கள் எப்படி
ஒரே மாதிரியாக நடக்கும்?
அபத்தமாக இல்லையா?
பின் எப்படி நடக்கும்?
ஒவ்வொருவருடைய, பிறந்த ஜாதகம், அவர்களுடைய
இன்றைய வயது, ஜாதகத்திலுள்ள கிரகங்களின் வலிமை,
அஷ்டவர்க்கத்தில் அந்த ஜாதகருடைய குறிப்பிட்ட ராசியி
லுள்ள பரல்கள், முக்கியமாக ஜாகதருடைய நடப்பு
தசா புக்தி போன்றவைகளை வைத்துத்தான் கோச்சார
சனியுடைய தீய பலன்கள் அல்லது நல்ல பலன்கள்
இருக்கும்.
உதாரணத்திற்கு லாபாதிபதியுனுடைய தசை நடந்து
கொண்டிருக்கும் ஜாதகனை, அந்த லாபதிசைக்கு அதிபதி
யான கிரகம் அணைத்துக் கொள்ளூம். Bullet Proof ஜாக்கெட்
போட்ட மனிதனை எப்படித் துப்பாக்கிக் குண்டுகள்
அனுகாதோ அப்படி என்று வைத்துக் கொள்ளுங்கள்.
இல்லை Black Cat Commandos with AK47 Riffle படையுடன்
இருக்கும் ஒரு நபரைத் தீய சக்திகள் எப்படி அனுக
முடியாதோ, அப்படி என்று வைத்துக் கொள்ளுங்கள்.
அதேபோல் 30 பரல்களுக்கு மேல் உள்ள ராசிகளில்
சஞ்சாரம் செய்யும் சனி அந்த ஜாதகனை ஒன்றும் செய்யாது.
இதை எதற்காக எழுதுகிறேன் என்றால் பெயர்ச்சி
பலன்கள் பொதுவானவை. மழை பெய்வதைப் போல!
வீட்டிற்குள் பாதுகாப்பாக இருப்பவன் மழையைப்பற்றிக்
கவலைப்பட வேண்டாம். காருக்குள், கண்ணாடிகளை
ஏற்றிவிட்டு அமர்ந்து செல்பவனும் கவலைப்பட
வேண்டாம். குடை வைத்திருப்பவன், பாதி நனைய
வாய்ப்புண்டு அவன் சற்றுக் கவலைபடலாம். ரெயின் கோட்
போட்டிருப்பவனும் சிறிது நனைய வாய்ப்புண்டு அவனும்
சற்றுக் கவலைபடலாம். முழுதாகக் கவலைப் பட வேண்டியன்
இவை எதுவுமே இல்லாமல் நடுத் தெருவில் மாட்டிக்
கொண்டவன் மட்டுமே.
ஆகவே உங்கள் வயது to நடப்பு தாசாபுக்தி என்று மேற்
சொன்னவை மட்டுமே சனியின் பெயர்ச்சிப் பலனை
நிர்ணயம் செய்யும். அதன்படிதான் பலன்களும் இருக்கும்.
யாரும் பொதுப்பலன்களைப் படித்து விட்டுக் குழம்ப
வேண்டாம்!
திருநள்ளாறு கோவிலின் அதிகாரபூர்வ அறிக்கை சனிப்
பெயர்ச்சி (வாக்கிய பஞ்சாங்கப்படி) வரும் ஆகஸ்ட் மாதம்
5ஆம் தேதி சனிப் பெயர்ச்சி என்று கூறுகிறது. ஆனால் சனி
இடம் மாறி இரண்டு நாள் ஆகிவிட்டது. ஆதாரம் கீழே
கொடுத்துள்ளேன் (இது திருக்கணிதப் படி - Based on Indian
Ephemeries)
தேதியையும், சனி சிம்மராசியில் இருப்பதையும் (Sa = Saturn)
கவனியுங்கள்
வாழ்க வளமுடன்: வாழ்க நலமுடன்!
------------------------------------------------------------
