மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

23.4.07

மங்குசனியும் பொங்குசனியும்!

==============================================
ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 28

கோச்சாரம் (கோள்களின் சாரம்)

ஒரு குடும்பப் பெண்ணிற்குப் பல பணிகள் உள்ளன.
தாயாக, தாதியாக, தாரமாக, தோழியாக அவள்
அவ்வப் போது தன் கடமைகளைச் செய்யவேண்டும்.
பகல் முழுவதும் அவள் தாதியாகத் தன்வீட்டு வேலை
களைச் செய்ய வேண்டும், தன் குழந்தைகளுக்கு
நல்ல தாயாக இருந்து பணிவிடைகளைச் செய்ய
வேண்டும். தன் கணவனிற்குத் தோழியாக இருந்து
அரவணைப்பையும், தாரமாக இருந்து அவனுடைய
அபிலாஷைகளையும் நிறைவேற்ற வேண்டும்.

ஒவ்வொரு நாளும் அவள் பன்முகம் காட்டிப் பணி
களைச் செய்ய வேண்டும். பெண்ணிற்கு என்றில்லை.
ஆணிற்கும் அதேபோல பல பணிகள் உண்டு.
தந்தையாக, பொருளீட்டிக் குடும்பத்தைக் காக்கும்
காவலனாக, தன் மனைவிமீது அன்பைப் பொழியும்
கணவனாக அவனுக்கும் பன்முகப் பணிகள் உள்ளன.

இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால் கோள்
களுக்கும் அவ்வாறு பல பணிகள் உள்ளன!

Natal Chart எனப்படும் பிறந்த ஜாதக அமைப்பில்
உள்ள பலன்களை அவ்வப்போது அவைகள் கொடுத்துக்
கொண்டே இருக்கவேண்டும். அதேபோல தங்களுக்குரிய
திசைகள் (Main periods) அல்லது புக்திகள் (Sub
Periods) வரும்போது அதற்குரிய பலன்களையும்
ஜாதகனுக்குக் கொடுக்க வேண்டும். அதோடு சுழற்சியில்,
வான வெளியில் சுழன்று வரும்போது (That is in
transit) சுழற்சியில் ஒவ்வொரு ராசிக்கும் மாறும்போது
அதற்கென்று விதிக்கப்பெற்றுள்ள பலன்களையும்
வழங்கவேண்டும்.

சுழற்சியில் என்ன பலன் என்கிறீர்களா?

சனீஷ்வரனையே எடுத்துக்கொள்வோம் - அவர் ஒரு
சுற்றை முடிக்க சுமார் முப்பது ஆண்டுகள் ஆகும்.
ஒவ்வொரு ராசியிலும் அவர் இரண்டரை ஆண்டுகள்
சஞ்சரிப்பார். அப்படிச் சஞ்சரிக்கும் காலங்களில்,

1. 12ம் இடம், 1ம் இடம், 2ம் இடம் ஆகிய
இடங்களில் ஏழரை ஆண்டுச் சனியாகவும்
2. 8ம் இடத்தில் அஷ்டமச் சனியாகவும், நான்கு
ராசிகளிலும் சேர்த்து மொத்தம் 10 ஆண்டுகள்
பெரும் அளவு தீயபலன்களையே கொடுப்பார்
ஏழரை ஆண்டுச் சனி (எழரை நாட்டுச் சனி அல்லது
சாடே சனி என்றும் சொல்வார்கள்) ஜாதகனின் சந்திரன்
அமர்ந்த ராசிக்குப் பன்னிரெண்டாம் இடத்தில் சனி
வந்த நாள் முதலே துவங்கி ஏழரை ஆண்டுகள் வரை
நீடிக்கும். அந்தக் காலக் கட்டத்தில் ஜாதகருக்குப்
பொதுவாக தீய பலன்களே நடைபெறும்.

அனைவருடனும் கருத்து வேறுபாடுகள்,சச்சரவுகள்,
வம்பு, வழக்குகள், தொழிலில் நஷ்டம் அல்லது பார்க்கும்
வேலையில் தொல்லைகள், இடமாற்றங்கள், குடும்பத்
தினருக்கு உடல் நலக் குறைவு, மனவேதனை, அமைதி
யின்மை போன்றவைகள் ஏற்பட்டு ஆட்டிப்படைக்கும்.
’சோதனைமேல் சோதனை போதுமடா சாமி' என்று
பாடும் அளவிற்குப் பாதகங்களை ஏற்படுத்தி விடுவார்.

சந்திர ராசியிலிருந்து 3ம்வீடு, 6ம்வீடு, 11ம் வீடு ஆகிய
மூன்று ராசிகளைத்தவிர மற்ற இடங்களில் அவர் நன்மை
களைச் செய்வதில்லை. இதற்கு ஒரு விதிவிலக்கு உண்டு.
அவர் சஞ்சரிக்கும் ராசி அஷ்டவர்க்கத்தில் 30 பரல்களுக்கு
மேல் பெற்ற ராசியாக இருந்தால் அந்த இரண்டரை
ஆண்டுகள் ஜாதகனுக்குத் தீமையான பலன்கள் இருக்காது.
அதைப் பற்றிய விவரம் அஷ்டவர்க்கப் பாடம் நடத்தப்படும்
போது விளக்கமாகச் சொல்லிக் கொடுக்கப்படும்.

ஒருவர் 90 ஆண்டுகள் வரை வாழ்கின்றார் என்று வைத்துக்
கொண்டால், அவர் வாழ்க்கையில் மூன்று முறைகள் இந்த
ஏழரை நாட்டுச் சனி வந்து போய் விடும்.

அவற்றை முறையே மங்குசனி, பொங்குசனி, மரணச்சனி
என்பார்கள்.

முதலில் வரும் ஏழரை நாட்டுச் சனி மங்குசனி எனப்படும்.
அது அறிவு,கல்வி, வேலை வாய்ப்பு அனைத்தையும் மங்க
வைத்து விடும். மொத்தத்தில் வெறுத்து விடும்.(Defame
and detachment Period என்றும் சொல்லலாம்)

அடுத்த சுற்றில் வரும் சனி கஷ்டத்தைக்
கொடுக்கும், ஆனால் அதே நேரத்தில் பல
அனுபவங்களையும், வாய்ப்புக்களையும்
கொடுத்து உயர்த்தி விடும் (Elevation Period
எனச் சொல்லலாம்) அதனால்தான் அந்தக்
காலகட்டத்தைப் பொங்குசனி' என்பார்கள்.
மூன்றாவது சுற்றில் வரும் ஏழரை நாட்டுச் சனி
பொதுவாக ஜாதகனுக்கு, எட்டாம் வீட்டில் நிர்ணயிக்கப்
பெற்ற ஆயுள் அளவு (Span of Life) நிறைவு பெறும்
காலமென்றால், அவனுடைய கதையை முடித்துக்
கையோடு கூட்டிக் கொண்டுபோய் விடும்.

சிலர் விதிவிலக்காக மூன்றாவது சுற்றையும் தாக்குப்
பிடித்துக் கொண்டு உயிரோடு இருப்பார்கள். அவர்கள்
தீர்க்க ஆயுள் பெற்ற ஆசாமிகள். அவர்கள்,
அவர்களின் ஜாதகத்தின்படி (In the period of Second
Lord or Seventh Lord) அதற்குரிய நேரத்தில் இறைவனடி
சேர்வார்கள் அல்லது இயற்கை எய்துவார்கள்

இதுபோல குரு பகவானும் தனது சுழற்சியில் ஒவ்வொரு
ராசியிலும் தான் சஞ்சரிக்கும் காலத்தில் அததற்குரிய
பலன்களை வாரி வழங்குவார்.அவர் ஒரு சுற்றை முடிக்க
சுமார் பன்னிரெண்டு ஆண்டுகள் ஆகும். ஒவ்வொரு
ராசியிலும் அவர் ஒரு ஆண்டு காலம் சஞ்சரிப்பார்.
அப்படிச் சஞ்சரிக்கும் காலங்களில்,

7ம் வீடு, 11ம் வீடு, 5ம் வீடு, 9ம் வீடு ஆகிய
இடங்களில் சஞ்சரிக்கும் போது மிகவும்
நன்மையான பலன்களைக் கொடுப்பார்

வீட்டில் சுப காரியங்களை நடத்தி வைப்பார்,
திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம்
நடைபெறும். நல்ல வேலைக்காக ஏங்கிக்
கொண்டிருந்தவர்களுக்கு நல்ல வேலை
கிடைக்கும். செல்வம் சேரும், வீடு, நில
புலன்கள் வாங்கும் வாய்ப்புக்களை
உண்டாக்குவார். வழக்குகள் வெற்றி பெரும்.
மழலைச் செல்வம் கிடைக்கும். வீட்டில்
சந்தோஷமான சூழ்நிலை இருக்கும்.
மொத்தத்தில் 'உலகம் பிறந்தது எனக்காக,
ஓடும் நதிகளும் எனக்காக’ என்று பாட
வைத்து விடுவார்
மற்ற கோள்களுக்கு உரிய பலன்களை அடுத்த
பதிவில் பார்ப்போம்.

பதிவின் நீளம் கருதி இன்று இத்துடன் முடித்துக் கொள்கிறேன்

(தொடரும்)
--------------------------------------------------------------------------
சென்ற வாரம் முழுவதும் வெளியூர்ப் பயணம் காரணமாக
வகுப்பிற்கு வந்து பாடம் நடத்த முடியாத சூழ்நிலை.
அதில் மாணவர்களாகிய உங்களைவிட எனக்குத்தான்
வருத்தம் அதிகம். ஆதங்கம்வேறு!
அந்த இழப்பை வரும் நாட்களில் சரி பண்ணி விடுவோம்!

19 comments:

  1. குருவே,

    மிக்க மகிழ்ச்சி! பதிவை படித்து விட்டு மீண்டும் எழுதுகின்றேன்.

    இராசகோபால்

    ReplyDelete
  2. குருவே,

    காளசர்ப்ப தோஷம் தொடர்பாக ஒரு கேள்வி. இதைப் பற்றி நம் முன்னோர்கள், முனிவர்கள் ஏதாவது நூலில் குறிப்பிட்டு உள்ளார்களா?

    இராசகோபால்

    ReplyDelete
  3. ///காளசர்ப்ப தோஷம் தொடர்பாக ஒரு கேள்வி. இதைப் பற்றி நம் முன்னோர்கள், முனிவர்கள் ஏதாவது நூலில் குறிப்பிட்டு உள்ளார்களா?
    இராசகோபால் ///

    அது மிகவும் சுவாரசியமான பாடம். பின்னால் வரும். பொறுத்திருங்கள் அன்பரே!

    ReplyDelete
  4. சனி பகவானைப் பற்றிய குறிப்புகள்

    எல்லாமே உபயோகப்படும் .
    பரிகாரம் செய்து கொள்வது

    பற்றி ஏதாவது சொல்லி இருக்கிறதா?

    ReplyDelete
  5. சுப்பையா ஐயா,

    வாங்க !

    மங்கு சனி, பொங்கு சனி, மரண சனி கேள்விப் பட்டு இருக்கிறேன்.

    ஒரு முதன்மையான கேள்வி,

    ஒரு ஜாதகன் மோசமான ஜோதிடரின் ஆலோசனையின் பேரில் தன் சொத்துக்களை இழந்து நடுத்தெருவுக்கு வருவான் என அவனது ஜாதகத்தில் குறிப்புகள் இருக்குமா ?
    :)))

    ReplyDelete
  6. ayya,

    4aam idaththil sani irundal arthaastama sani endru solvaarkale athan palangal enna.

    ReplyDelete
  7. .//// வல்லிசிம்ஹன் said... சனி பகவானைப் பற்றிய குறிப்புகள்
    எல்லாமே உபயோகப்படும் .பரிகாரம் செய்து கொள்வது
    பற்றி ஏதாவது சொல்லி இருக்கிறதா?////

    பரிகாரம் கடுமையான பிரார்த்தனை மட்டுமே
    அதற்குப் பலன் உண்டு சகோதரி
    God will give you withstanding power!

    ReplyDelete
  8. ////// கோவி.கண்ணன் said...
    மங்கு சனி, பொங்கு சனி, மரண சனி கேள்விப் பட்டு இருக்கிறேன்
    ஒரு முதன்மையான கேள்வி,
    ஒரு ஜாதகன் மோசமான ஜோதிடரின் ஆலோசனையின் பேரில் தன் சொத்துக்களை இழந்து நடுத்தெருவுக்கு வருவான் என அவனது ஜாதகத்தில் குறிப்புகள் இருக்குமா ?
    :)))//////

    ஒரு மனிதன் கெட்ட நேரம் வந்தால்தான், அதனால் கஷ்டப்பட்டால்தான் ஜோதிடத்தை முழுமையாக நம்புவான்.
    அத்ற்குப் பிறகுதான் ஜாதகத்தையே கையில் எடுப்பான்.

    மோசமான ஜோதிடர் என்று ஒருவரும் கிடையாது.
    ஜோதிடருக்கு நேரம் மோசமாக இருந்தால் அவர் சொல்லும் பலன்களும் தவறாகவே இருக்கும்:-))))

    நடுத்தெருவிற்கு வரவேண்டிய நிலையில் உள்ளவன் ஜோதிடரிடம் போனாலும் சரி, போகாவிட்டாலும் சரி
    எடுத்தெருவிற்கு வந்தேதீருவான். நள மகராஜாவே நடுத்தெருவிற்கு வரவில்லையா - கோவியாரே?

    ReplyDelete
  9. /// annonymous said:
    4aam idaththil sani irundal arthaastama sani endru solvaarkale athan palangal enna.///

    4ம் இடம் சுக ஸ்தானம், கல்வி ஸ்தானம், தாய் ஸ்தானம் அந்கே சஞ்சரிக்கும் காலத்தில் அதற்குரிய தீய பலன்கள் நடக்கும்!

    ReplyDelete
  10. உள்ளேன் அய்யா,

    சனி மஹாத்மியம் என்று ஒறு புத்தகம் கிடைக்கப்பெற்றேன். Written in English as The Greatness of Saturn by Robert Svoboda. கூகிள் கடவுள் அதன் சம்ஸ்கிருத ஸ்ளோகம் உள்ள பக்கங்களையும் கொடுத்தார். இந்த புத்தகம் நான் சென்னையில் வாங்கினேன். தகவல் உபயோகமாய் இறுக்கும் என நம்புகிறேன்.

    ReplyDelete
  11. //4ம் இடம் சுக ஸ்தானம், கல்வி ஸ்தானம், தாய் ஸ்தானம் அந்கே சஞ்சரிக்கும் காலத்தில் அதற்குரிய தீய பலன்கள் நடக்கும்!//

    லக்னத்திலிருந்து 4 ம் இடம்தானே தாய் ஸ்தானம் /கல்வி முதலியவை? சனி, குரு போன்ற கோள்களின் சாரம் சந்திர ராசியிலிருந்துதானே பார்க்க வேண்டும்? இங்கே குறிப்பிட்டுள்ள சனியின் இடம் - 4 ம் இடம் -லக்னத்திலிருந்தா அல்லது சந்திர ராசியிலிருந்தா? லக்னம் போலவே சந்திரனிலிருந்து 4 ம் இடமும் தாய் /கல்வி இடமா?

    திருமணம், குழந்தை ( எண்ணிக்கை உள்பட)வெளி நாடு செல்வது / செட்டில் ஆவது - இதெல்லாம் இன்ன மாதம் /இன்ன வருஷம் என்று குறிப்பிட்டு சொல்கிறார்களே அது எப்படி?

    விளக்க முடியுமா? நன்றி

    ஒரு வாசகர்.

    ReplyDelete
  12. உள்ளேன் ஐயா.

    -கிச்சா.

    ReplyDelete
  13. Hi Sir, This is Senthil.....
    It is my fisrt visit..
    It is nice. If Shani In "Thulam" as a 11th House and Moon "Simmam". Is it give any problem in 7 1/2?.

    ReplyDelete
  14. /////Anonymous said...
    //4ம் இடம் சுக ஸ்தானம், கல்வி ஸ்தானம், தாய் ஸ்தானம் அந்கே சஞ்சரிக்கும் காலத்தில் அதற்குரிய தீய பலன்கள் நடக்கும்!//
    லக்னத்திலிருந்து 4 ம் இடம்தானே தாய் ஸ்தானம் /கல்வி முதலியவை? சனி, குரு போன்ற கோள்களின் சாரம் சந்திர ராசியிலிருந்துதானே பார்க்க வேண்டும்? இங்கே குறிப்பிட்டுள்ள சனியின் இடம் - 4 ம் இடம் -லக்னத்திலிருந்தா அல்லது சந்திர ராசியிலிருந்தா? லக்னம் போலவே சந்திரனிலிருந்து 4 ம் இடமும் தாய் /கல்வி இடமா?
    திருமணம், குழந்தை ( எண்ணிக்கை உள்பட)வெளி நாடு செல்வது / செட்டில் ஆவது - இதெல்லாம் இன்ன மாதம் /இன்ன வருஷம் என்று குறிப்பிட்டு சொல்கிறார்களே அது எப்படி?
    விளக்க முடியுமா? நன்றி
    ஒரு வாசகர்.////
    எல்லாப் பொதுப் பலன்களுக்கும் லக்கினத்திலிருந்துதான் பார்க்கவேண்டும்.

    ஆனால் கோச்சாரத்திற்கு மட்டும் சந்திரனில் இருந்து அந்த கிரகம் உள்ள வீட்டிற்குத்தான் பார்க்க வேண்டும்.

    ReplyDelete
  15. ////Anonymous said...
    Hi Sir, This is Senthil.....
    It is my fisrt visit..
    It is nice. If Shani In "Thulam" as a 11th House and Moon "Simmam". Is it give any problem in 7 1/2?.////

    கோச்சாரப்படி சனி இன்றைய தேதியில் கடக ராசியில் அல்லவா இருக்கிறது
    நீங்கள் துலாம் ராசியில் உள்ள சனி என்று குறிப்பிடுவது உங்களுடைய Birth Chart ஐ வைத்துச் சொல்வதாக நினைக்கிறேன். அதற்கும் 71/2 ச்சனிக்கும் ஒன்றும் தொடர்பில்லை.
    ஆனால் நீங்கள் குறிப்பிடுவதுபோல சந்திரன் சிம்மத்தில் இருக்கிறது என்றால் 71/2ச் சனி நடைபெறுகிறது
    அது உங்களுக்கு முதல் சுற்றா அல்லது 2வது சுற்றா என்று தெரிந்தால் அல்லவா பலன் சொல்ல முடியும்?

    ReplyDelete
  16. கிச்சாவிற்கும்
    சென்ஷிக்கும் வருகைப் பதிவேட்டில்
    வருகை பதிந்தாகி விட்டது!

    ReplyDelete
  17. வணக்கம் ஆசானே,

    கோசார பலன் சொல்லும் பொது ஒருவருடைய, லக்கனத்தை மையமாககொண்டு (counting as First house) or சந்திரனை மையமாககொண்டு (counting as First house) எதை வைத்து பலன்
    சொல்ல வேண்டுமா ?

    example- Rishaba Lagnam, Mesha rasi, Ashwini nakshatram எனும் பொது ரிஷபதிலிருந்து start counting daily/monthly transits of planets பலன் பார்க்கவேண்டுமா ?
    How does it work out ?

    Please correct my understanding.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com