மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

11.4.07

சூப்பர் ஸ்டாரின் ஜாதகம்!

ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 26
சூப்பர் ஸ்டாரின் ஜாதகம்!


முன் பதிவைப் படிக்காதவர்கள் படித்துவிட்டு
வர வேண்டுகிறேன். இது தொடர் - ஒன்றுக்
கொன்று பதிவுகள் தொடர்புடையவை
----------------------------------------------------------

ஒரு குழந்தையின் ஜாதகம் அதனுடைய
12 வயது நிறையும் வரை எந்தவித தனிப்பட்ட
பலனையும் கொடுக்காது.

அந்தக் குழந்தைக்கு பன்னிரெண்டு வயது
நிறைந்தவுடன்தான் அதன் ஜாதகம் வேலை
செய்ய ஆரம்பிக்கும்.

அதுவரை அந்தக் குழந்தைக்கு அதனுடைய
பெற்றோர்கள் ஜாதகத்தை வைத்துத்தான் பலன்கள்.
அந்தக் குழந்தையின் பெற்றோர்கள் அவதிப்பட
வேண்டிய நேரம் என்றால் அந்தக் குழந்தையை
வைத்து அவர்கள் மேலும் அவதிப்பட நேரும்.

குழந்தை அடிக்கடி நோயவாய்ப்பட்டு அவர்களை
வீட்டிற்கும் மருத்து வமனைக்கும் அடிக்கடி
ஓடவைக்கும் அல்லது பயங்கர குறும்பு செய்து
அடிக்கடி கை,கால்களில் அடிபட்டுக் கொண்டு
வந்து அவர்களைக் கலங்க வைக்கும். துஷ்டனாக
இருக்கும்.எந்நேரமும் அவர்கள் குழந்தையை
நினைத்துக் கவலைப்படும்படி ஆகிவிடும்
இதெல்லாம் ஜாதகப் பலன்தான்.

இதற்கு மாறாக அவர்களுக்கு நல்லநேரம் என்றால்
குழந்தை பல அரிய காரியங்களைச் செய்து பத்திரிக்கை,
தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் தலைகாட்டி
அவர்களை மகிழவைக்கும்!

பன்னிரெண்டு வயது ஆரம்பித்தவுடன் அந்தக் குழந்தைக்கு
சனி, ராகு, கேது போன்ற தீய கிரகங்களின் மகா
திசை வரக்கூடாது. அதுபோல அந்த வயதிலிருந்து
ஏழரை ஆண்டுச் சனியும் வரக்கூடாது. அப்படி வந்தால்
அந்தக் குழந்தையின் படிப்பு கெட்டுப் போகும்
ஜாதகத்தில் கல்விக்கு உரிய 4ம் வீட்டு அதிபதியும்,
வித்யாகாரகனான (அதாவது விததைகளுக்கு அதிபதியான)
புதனும் வலுவாக இல்லாவிட்டால், படிப்பு பாதியிலேயே
நின்று விடும். School Dropout என்பார்களே அப்படி
ஆகிவிடும்! மிகவும் வலுவிழந்து இருந்தால் பையன்
வீட்டைவிட்டு ஓடிவிடுவான். கெட்ட சகவாசங்கள்
ஏற்பட்டு விடும்

ஆகவே 12 முதல் 24 வயது வரை உள்ள காலகட்டத்தில்
நடக்கும் தசாபுத்திகளும், கோள்சாரமும் நன்றாக இருக்க
வேண்டும் அல்லது ஜாதகமாவது நன்றாக இருக்க வேண்டும்.
இல்லையென்றால் சிரமம்தான். இன்னும் ஒரு சரியான
சொல் இருக்கிறது அவதிதான்!

24 வயதுவரை ஜாதகப்படி எல்லா அமைப்புக்களுமே
சிறப்பாக இருந்தால், அந்த ஜாதகனுக்கு கல்வி, வேலை,
வாழ்க்கைத்துணைவி என்று எல்லாமே ஒரே ஸ்ட்ரோக்கில்
கிடைத்துவிடும். இல்லையென்றால் துறைமுகங்களில்
கூட்ஸ் ரயில் ஷன்ட்டிங் அடிப்பதைப் போல அடித்துக்
கொண்டிருக்கவேண்டியதுதான்.

முப்பது பந்துகளில் சென்ச்சுரி அடிப்பது எப்படி?
நூறு பந்துகளில் முப்பது ரன்களுக்குத் தடவிக்

கொண்டிருப்பது எப்படி? நீங்களே யோசனை செய்து பாருங்கள்!
ஆனால் கடவுள் கருணை மிக்கவர். அவர் எல்லோரையும்
சமமாகத்தான் படைத்துள்ளார் என்று அடிக்கடி சொல்
வேனில்லையா? அது உண்மை.

ஜாதகத்தில் முன்யோகம், பின்யோகம் என்று உண்டு.
அதாவது 30 முதல் 35 வயதுவரை மிகவும்
கஷ்டப்படுபவர்கள் அதற்குப் பிறகு வரும்

வாழ்க்கையின் பின் பாதியில் வளத்தோடும்,
மகிழ்ச்சியோடும் இருப்பார்கள்.
அதேபோல 30 முதல் 35 வயதுவரை எல்லாவற்

றையுமே அடைந்து மகிழ்ந்தவர்களை வாழ்க்கையின்
பின்பாதி புரட்டிப்போட்டுச் சாத்தி விடும்
அதை உங்கள் மொழியில் விளக்குவதென்றால்
First Innings, Second Innings என்று வைத்துக் கொள்ளுங்கள்.
முதல் இன்னிங்ஸில் சென்ச்சுரி அடித்தவன், இரண்டாவது
இன்னிங்ஸில் டக் அவுட் ஆகி பெவிலியனுக்குத் திரும்பி
விடுவான். அதேபோல முதல் இன்னிங்ஸில் டக் அடித்து
அவுட் ஆகி முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு
திரும்பியவன், அடுத்த இன்னிங்ஸில் டபுள் சென்ச்சுரி
அடிப்பான. அதுதான் வாழ்க்கையில் கிரகங்கள் நம்முடன்
விளையாடும் விளையாட்டு!

இதற்கு விதிவிலக்காக ராகுல் டிராவிட் மாதிரி இரண்டு
இன்னிங்ஸ்களிலுமே நிதானமாக ஆடி 50 அல்லது
60 ரன்களை எடுப்பவர்களும் உண்டு. சராசரியாக எல்லா
அமைப்புக்களுமே ந்ன்றாக இருக்ககூடிய ஜாதகக்காரர்களுக்கு
அவ்வாறு நடக்கும். அவர்கள் எண்ணிக்கையில் மிகவும்
குறைவாக இருப்பார்கள்.

அவர்களுடைய ஜாதகங்களில் லக்கினம், பூர்வபுண்ணியம்,
பாக்கியம், லாபஸ்தானம் ஆகிய நான்கு இடங்கள் வலுவாக இருக்கும்.

கிராமங்களில் உள்ள பெரியவர்கள் முப்பது வருடம்
வாழ்ந்தவனும் இல்லை, அதேபோல முப்பது வருடம்
கெட்டவனும் இல்லை என்பார்கள்!
அது சனியை வைத்துச் சொல்லப்படுவது! சனி ஒரு
சுற்று சுற்றி வருவதற்கு முப்பது ஆண்டுகாலம் அகும்.
முன்பே சொல்லியிருக்கிறேன். முதல் சுற்றில்
தீமைகளையே அதிகமாகக் கொடுத்த சனீஸ்வரன்
அடுத்த சுற்றில் நன்மைகளைக் கொடுப்பார்.
சனிதான் கர்மகாரகன் (Authority for work)

அதானால்தான் சனி மாதிரிக் கொடுப்பரும் இல்லை;
சனி மாதிரிக் கெடுப்பாரும் இல்லை என்பார்கள்.

பத்தாம் வீட்டிற்கு உரியவன்தானே வேலைக்கு அதிகாரி,
சனி இங்கே எங்கு வருகிறார் என்ற சந்தேகம் உங்களுக்கு
வரலாம்.

மாவட்ட ஆட்சியாளருக்கும், உள்துறை செயலாளருக்கும்
உள்ள வேறுபாடு போலதான் இதுவும். இரண்டு பேர்களுமே
ஒரே துறையச் சேர்ந்தவர்கள்தான் என்றாலும் மாவட்ட
ஆட்சியாளரை விடப் பலமடங்கு அதிகாரம் படைத்தவர்
உள்துறை செயலாளர். பல சமயங்களில் அவர் சொல்படி
தான் மாவட்ட ஆட்சியாளர் நடக்க வேண்டியதிருக்கும்.

அதனால் நமது பணிகளூக்கெல்லாம் ultimate authority
சனீஸ்வரன்தான்!

அதன் முழு விபரத்தைப் பின்னால் வரும் அதிகாரங்களில்
பார்ப்போம்
================================================
Practical Test

சூப்ப்ர ஸ்டார் ரஜினிகாந்த அவர்களின் ஜாதகத்தைக்
கீழே கொடுத்துள்ளேன்.இன்றைய பயிற்சிக் கேள்விகள்
அதிலிருந்துதான்!

அவருடைய ஜாதகத்தில்:
1. லக்கினாதிபதி யார் ? அவர் எங்கே இருக்கிறார்?
2. பூர்வ புண்ணியாதிபதி யார்? அவர் எங்கே இருக்கிறார்?
3. பாக்கியாதிபதி யார்? அவர் எங்கே இருக்கிறார்?
4. லாபதிபதி யார்? அவர் எங்கே இருக்கிறார்?
சொல்லிக் கொடுத்த பாடங்க்ளில் இருந்துதான் கேள்விகள்.
யோசித்துப் பதில் சொல்லுங்கள்!

(இந்த நான்கு கேள்விகளுக்குரிய பதில்களைச்
சேர்த்துப் பார்த்தால் அவருடைய ஜாதகத்தின்
சிறப்பு தெரிய வரும்!)
+++++++++++++++++++++++++++++++++++++++++++




===========================================

பதிவின் நீளம் கருதி இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன்.

தசாபுக்திப் பலன்களின் மூன்றாவது பகுதி நாளை வெளிவரும்!

(தொடரும்)

47 comments:

  1. 1. லக்னாதிபதி சூரியன். 4ம் இடத்தில் இருக்கிறார்.
    2. 5ம் அதிபதி குரு அவர் 7ம் இடத்தில் இருக்கிறார்.
    3. பாக்கியாதிபதி சுக்கிரன், 5ம் இடத்தில் இருக்கிறார்.
    4. லாபாதிபதி புதன், 5ம் இடத்தில் இருக்கிறார்.

    ReplyDelete
  2. வந்துட்டேன்!

    உள்ளேன் ஐயா!

    (எல்லாக் கேள்விகளுக்கும் நாங்களே பதில் சொல்லிக் கொண்டிருந்தால் மற்றவர்களுக்கு வாய்ப்பு இல்லாது போய்விடும். எனவே இங்கே அமைதி காக்கிறேன். முந்தைய பாடங்களின் வினாக்களுக்கு அமைதி காத்ததைப் போலவே! இப்பொழுதும். என்றென்றும்!)

    ReplyDelete
  3. முப்பது வருடங்கள் வாழ்ந்தாரும் இல்லை. தாழ்ந்தாரும் இல்லை
    என்பது மிகவும் உண்மையான சொல்தான்.
    எங்க வீட்டுப் பெரியவர்கள் அடிக்கடி சொல்லுவார்கள்.
    உதாரணங்களும் எடுத்துவைப்பார்கள்.

    அவர்கள் இப்படிச் சொல்லுவது ரொம்ப ஆறுதலாக இருக்கும்.
    நல்ல சுவையோடு நடத்துவதால் பாடங்கள் புரிகின்றன.
    நன்றி சார்.

    ReplyDelete
  4. Dear Mr. Subbaiya -

    I have been a regular reader of this lesson of yours (though not a good student in keeping with the class work / home work excercises). I am really amazed the way you simplify this complex science for a common human to comprehend! Wonderful knowledge creation effort among the tamil blogger community.

    To put it in simple terms: பசு மரத்தாணி போல மனசுல பதியுது!!

    On an added note, I am wondering if you'll be able to educate us on (a) this astrological science in the purview of "statistical probability" and (b) provide scientific explanation (if any) on why things happen in predicted way according to planetary position

    ReplyDelete
  5. அய்யா, இதில் அம்சம் என்பது எதை குறிக்கிறது?
    (மன்னிக்கவும்,நீங்கள் வரும் வாரங்களில் விளக்குவீர்கள் என்றாலும், ஒரு ஆர்வக்கோளாறுதான்.)

    -கிச்சா

    ReplyDelete
  6. //எல்லாக் கேள்விகளுக்கும் நாங்களே பதில் சொல்லிக் கொண்டிருந்தால் மற்றவர்களுக்கு வாய்ப்பு இல்லாது போய்விடும். எனவே இங்கே அமைதி காக்கிறேன். முந்தைய பாடங்களின் வினாக்களுக்கு அமைதி காத்ததைப் போலவே! இப்பொழுதும். என்றென்றும்!)
    //

    சிபி! கொஞ்சம் தள்ளிஉக்காரு! நானும் பக்கத்தில் உக்காந்துக்கிறேன்!

    ReplyDelete
  7. //// Meenakshi Sundaram said...
    1. லக்னாதிபதி சூரியன். 4ம் இடத்தில் இருக்கிறார்.
    2. 5ம் அதிபதி குரு அவர் 7ம் இடத்தில் இருக்கிறார்.
    3. பாக்கியாதிபதி சுக்கிரன், 5ம் இடத்தில் இருக்கிறார்.
    4. லாபாதிபதி புதன், 5ம் இடத்தில் இருக்கிறார்.////

    1, 2, 4 ஆகியவற்றின் விடைகள் சரியாக உள்ளன!
    ஆனால் 3ம் கேள்விக்கான விடை தவறு. மறுபடியும் யோசித்துப் பாருங்கள்

    ReplyDelete
  8. ///// நாமக்கல் சிபி said...
    (எல்லாக் கேள்விகளுக்கும் நாங்களே பதில் சொல்லிக் கொண்டிருந்தால் மற்றவர்களுக்கு வாய்ப்பு இல்லாது போய்விடும். எனவே இங்கே அமைதி காக்கிறேன். முந்தைய பாடங்களின் வினாக்களுக்கு அமைதி காத்ததைப் போலவே! இப்பொழுதும். என்றென்றும்!)////

    சாக்கு சொல்லி போக்குக் காட்டினால்
    மார்க்கு எப்படி வரும்?
    எங்கே உங்கள் கூட்டாளிகள் இரண்டுபேரும்?

    ReplyDelete
  9. ////// வல்லிசிம்ஹன் said...
    முப்பது வருடங்கள் வாழ்ந்தாரும் இல்லை. தாழ்ந்தாரும் இல்லை
    என்பது மிகவும் உண்மையான சொல்தான்.
    எங்க வீட்டுப் பெரியவர்கள் அடிக்கடி சொல்லுவார்கள்.
    உதாரணங்களும் எடுத்துவைப்பார்கள்.

    அவர்கள் இப்படிச் சொல்லுவது ரொம்ப ஆறுதலாக இருக்கும்.
    நல்ல சுவையோடு நடத்துவதால் பாடங்கள் புரிகின்றன.
    நன்றி சார்.////

    ஆகா, உங்கள் வீட்டிலும் சொல்லியிருக்கிறார்களா?
    நான் எழுதுவதில் பெரும்பகுதி எங்கள் வீட்டுப் பெரியவர்களிடம் கற்றுணர்ந்தவைகள்தான்!

    உண்மைகளை உணர்வு கலந்து சொல்லும்போது சுவையாகத்தான் இருக்கும் சகோதரி!
    பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  10. ////// Ram Ravishankar said...
    On an added note, I am wondering if you'll be able to educate us on (a) this astrological science in the purview of "statistical probability" and (b) provide scientific explanation (if any) on why things happen in predicted way according to planetary position ////

    I have huge data collected from some magazines : But I colud not publish it in the blog due to copy right problem!

    ReplyDelete
  11. ////// Kicha said...
    அய்யா, இதில் அம்சம் என்பது எதை குறிக்கிறது?
    (மன்னிக்கவும்,நீங்கள் வரும் வாரங்களில் விளக்குவீர்கள்
    என்றாலும், ஒரு ஆர்வக்கோளாறுதான்.)/////

    நீங்கள் சென்னை அண்ணா சாலையில் நிற்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்
    நிழலில் நிற்கிறீர்களா? அல்லது வெய்யிலில் நிற்கிறீர்களா? அல்லது குடைக்குக் கீழ் பாதுகாப்பாக
    நிற்கிறீர்களா என்று தெரிந்து கொள்வதற்கு அம்சம் உதவும்!

    அம்சம் என்பது ஒரு ராசியில் 9ல் ஒரு பங்கைக் காட்டும் படம்
    ஒரு ராசியில் நிற்கும் கிரகம் அந்த் ஒன்பது பாகைகளுக்குரிய 2 1/4 நட்சத்திரத்தில்
    எந்த நட்சத்திரத்தின் எந்த பாகையில் இருக்கிறது என்பதை அம்சம் காட்டும்.
    உதாரண்த்திற்கு ராசியில் சிம்மத்தில் இருக்கும் சுக்கிரன் பூர நட்சத்திரத்தில் இருந்தால்
    அம்சத்தில் ஆட்சி பலத்தோடு இருப்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
    ராசியில் சிம்மம் பகை வீடென்றாலும் அம்சத்தில் ஆட்சி பலத்தோடு வலுவாக இருப்பதால்
    தசாபுத்திகள், வேறு சில பலன்களைக் கண்க்கிடும்போது அதையும் சேர்த்துக் கணக்கிடுவார்கள்

    விளக்கம் போதுமா?

    ReplyDelete
  12. சரா, சிபி, அந்த பெஞ்சில் எனக்கும் ஒரு துண்டு போடுங்கப்பு.. :)

    ReplyDelete
  13. ஆசிரியரே, எனக்கு தெரிஞ்சத எழுதியிருக்கேன்.

    - சுக்கிரனும் புதனும் சேந்திருப்பதால வசீகரிக்கும் தன்மையுண்டு.
    - எழாம் இடத்துல குரு இருக்கிறது சிறப்பு. ஆனா என்ன சிறப்புனு தெரியல...
    - செவ்வாய் உச்சத்துல இருக்கு.
    - 1ஆம், 9ஆம், 10ஆம், 11ஆம் வீடெல்லாம் சும்மா இருக்கு. ஆகையினாலே இது சுமாரான ஜாதகம்.
    - லக்கினாதிபதியே நாலவது இடதிலிருப்பதால் ரொம்ப நல்லா படிப்பார்.

    ReplyDelete
  14. /////கூமுட்டை அவர்கள் சொலியது: சுக்கிரனும் புதனும் சேந்திருப்பதால வசீகரிக்கும் தன்மையுண்டு.////

    என்ன் ஸ்வாமி! பலனை யார் கேட்டார்கள்?
    அதுவும் தப்புத் தப்பாய் சரித்திரப் பாடத்திற்குரிய தேர்வில் பீலா விட்டு எழுதுவதுபோல இஷ்டத்திற்கு எழுதியிருக்கிறீர்களே?
    சுக்கிரனும் புதனும் சேர்ந்தார் வசீகரிக்குமா? யார் சொன்னது?
    இரண்டும் சேர்ந்தால் நிபுணத்துவம் (expertise) அவ்வளவுதான்!

    ////- எழாம் இடத்துல குரு இருக்கிறது சிறப்பு. ஆனா என்ன சிறப்புனு தெரியல...
    - செவ்வாய் உச்சத்துல இருக்கு. ////

    இது இரண்டும் சரிதான்!

    /////- 1ஆம், 9ஆம், 10ஆம், 11ஆம் வீடெல்லாம் சும்மா இருக்கு. ஆகையினாலே இது சுமாரான ஜாதகம்.////

    சும்மா இருக்கா? யாரையாவது குடி வைத்து விடுவோமா?
    ரஜினி காந்த்தின் ஜாதகத்தைப் போய் சுமாரான ஜாதகம் என்று எழுதியிருக்கிறீர்களே?
    உங்களை என்ன செய்வது?

    ஒரு வாரத்திற்கு சிபியின் பக்கத்தில் போய் உட்காருங்கள். அதுதான் தண்டனை:-))))

    ReplyDelete
  15. ////உங்கள் நண்பன் அவர்கள் சொல்லியது:
    சிபி! கொஞ்சம் தள்ளிஉக்காரு! நானும் பக்கத்தில் உக்காந்துக்கிறேன்! ////

    அடடா, பாவம் நேற்று வகுப்பில் ந்டந்த மல்யுத்தம் பற்றித்
    தெரியாமல் சிபி பக்கத்தில் போய் உட்காருகிறார்
    நாமக்கல் ஆஞ்சநேயர்தான் காப்பாற்ற வேண்டும்!

    ReplyDelete
  16. ///பொன்ஸ் அவர்கள் சொல்லியது: சரா, சிபி, அந்த பெஞ்சில் எனக்கும் ஒரு துண்டு போடுங்கப்பு.. :) ///

    துண்டெல்லாம் ஒன்றும் வேண்டாம் !
    சரவணன், சிபி இருவரும் அக்காவிற்கு வழிவிட்டு விட்டு அடுத்த பெஞ்சில் போய் உட்கார்ந்து கொள்ளுங்கள்
    இது வாத்தியாரின் அன்புக் கட்டளை!

    ReplyDelete
  17. //
    ஜாதகத்தில் 1ம் வீடு, 9ம் வீடு, 10ஆம் வீடு, 11ம் வீடு
    நன்றாக அமைந்திருந்தால் அதுதான் சிறப்பான ஜாதகம்.
    //
    ஆசிரியரே, நீங்க தானே இப்படிச் சொன்னீங்க. ரஜினியின் 1ம் வீடு, 9ம் வீடு, 10ஆம் வீடு, 11ம் வீடு எல்லாம் கிளீன் ஸ்லேட்டால்ல இருக்கு.

    ReplyDelete
  18. //சாக்கு சொல்லி போக்குக் காட்டினால்
    மார்க்கு எப்படி வரும்?
    எங்கே உங்கள் கூட்டாளிகள் இரண்டுபேரும்?//

    உள்ளேன் ஐயா....


    //நாமக்கல் சிபி said...
    வந்துட்டேன்!

    உள்ளேன் ஐயா!

    (எல்லாக் கேள்விகளுக்கும் நாங்களே பதில் சொல்லிக் கொண்டிருந்தால் மற்றவர்களுக்கு வாய்ப்பு இல்லாது போய்விடும். எனவே இங்கே அமைதி காக்கிறேன். முந்தைய பாடங்களின் வினாக்களுக்கு அமைதி காத்ததைப் போலவே! இப்பொழுதும். என்றென்றும்!)//

    நாங்கள்லாம் பேச்சு மாறாதவங்கன்னு வாத்தியாருக்கு தெரியாதா என்ன?

    சென்ஷி

    ReplyDelete
  19. //எங்கே உங்கள் கூட்டாளிகள் இரண்டுபேரும்? //

    ஒருவர் நாகேஷுடன் நடேசன் பார்க்கில் மீட்டிங்கில் இருகின்றார்! அடுத்தவருக்கு உங்களின் இந்தப் பதிவால் ஒவ்வாமையாம்!
    //பொன்ஸ்~~Poorna said...
    சரா, சிபி, அந்த பெஞ்சில் எனக்கும் ஒரு துண்டு போடுங்கப்பு.. :)
    //
    பொன்ஸ் அக்கா! உங்களுக்கு இல்லாத இடமா? சிபி இன்னும் கொஞ்சம் தள்ளி உக்காரு! இப்படியே தள்ளீத் தள்ளிப் போய் கடைசில கீழ விழ வேண்டியதுதான்.

    //மல்யுத்தம் பற்றித்
    தெரியாமல் சிபி பக்கத்தில் போய் உட்காருகிறார்
    நாமக்கல் ஆஞ்சநேயர்தான் காப்பாற்ற வேண்டும்! //

    ஐயா! சிபி ஒரு குழந்தை! என் பக்கத்தில் தான் யானைபலம் இருகின்றது பின் எனக்கு என்ன பயம்?புறாவுக்கு கொடுத்ததுபோக மிச்சமிருக்கும் கறியை பிளிரவைத்து எடுக்கவா?
    (ஆ.மனசாட்சி: ஹிம்... பாடத்தைப் பற்றி ஒரு பின்னூட்டமும் போடாதே, சும்மா அரட்டை அடிக்க மட்டும் நல்லாத் தெரியும்!)

    அன்புடன்...
    சரவணன்.

    ReplyDelete
  20. அய்யா,

    ஒரு குழந்தையின் ஜாதகம் 12 வயதுக்கு மேல் தான் வேலை செய்யும் என்று சொல்கிறீர்கள். ஆனால் சிலர் இந்த குழந்தை பிறந்த நேறம் தான் நாங்கள் வீடு மற்றும் வாங்கி இருக்கிறோம் என்று சொல்கிறார்களே இது பற்றி தாங்களின் கருத்து என்ன?

    இபபடிக்கு,
    இரா.இரகுபதி.

    ReplyDelete
  21. 3. பாக்கியாதிபதி செவ்வாய் உச்சத்துல இருக்கு சரியா?

    I have posted another comment on about the 5th house. I don't know whether you got it or not. I am adding my doubt here. Superstart did not have any male child. Is it due the mercury and venus in 5th house??

    ReplyDelete
  22. ///// மகேந்திரன்.பெ said..Good morning sir //////

    Very Very Good Morning!
    அட்டே, வாங்க மகேந்திரன் நல்லாயிருக்கீங்களா?

    உக்காருங்க!

    டேய் கண்மணிங்களா! யாராவது ஒருத்தன் ஓடிப்போயி இரண்டு பெப்ஸி வாங்கிக்கிட்டுவாடா...
    சீக்கிரம்......!

    ReplyDelete
  23. /////// கூமுட்டை said... //
    ஜாதகத்தில் 1ம் வீடு, 9ம் வீடு, 10ஆம் வீடு, 11ம் வீடு
    நன்றாக அமைந்திருந்தால் அதுதான் சிறப்பான ஜாதகம்.
    //
    ஆசிரியரே, நீங்க தானே இப்படிச் சொன்னீங்க. ரஜினியின் 1ம் வீடு, 9ம் வீடு, 10ஆம் வீடு, 11ம் வீடு எல்லாம் கிளீன் ஸ்லேட்டால்ல இருக்கு.////

    ஒரு வீட்டில் அதற்குரிய (Owner) கிரகமோ அல்லது வேறு கிரகமோ அமர்ந்திருக்க வேண்டும் - அது காலியாக இருக்கக்கூடாது என்றெல்லாம் விதிகள் இல்லை!
    ஒரு வீட்டிற்குரிய கிரகம் பெரும்பாலும் 90% வேறு இடத்தில்தான் அமர்ந்திருக்கும்
    அதற்காக அத்னுடைய வீடு கழுவி அல்லது மெழுகிக் காயவைத்திருப்பதாக அர்த்தம் இல்லை!

    ReplyDelete
  24. ////// சென்ஷி said...
    நாங்கள்லாம் பேச்சு மாறாதவங்கன்னு வாத்தியாருக்கு தெரியாதா என்ன?/////

    அது சரி! நேற்று வகுப்பில் கலவரம்னு சிபி ஒரு பதிவு போட்டிருந்தாரே
    பார்த்தீர்களா? அதில் உங்களுடைய பங்கு (Your Part ) என்ன?

    ReplyDelete
  25. ///// உங்கள் நண்பன் said... //எங்கே உங்கள் கூட்டாளிகள் இரண்டுபேரும்? //
    ஒருவர் நாகேஷுடன் நடேசன் பார்க்கில் மீட்டிங்கில் இருகின்றார்! /////

    அங்கேயே இருக்கட்டும்! நான் கொஞ்சம் நிம்மதியாகப் பாடம் நடத்துகிறேன்!

    ReplyDelete
  26. ////// இரா.இரகுபதி said..அய்யா,
    ஒரு குழந்தையின் ஜாதகம் 12 வயதுக்கு மேல் தான் வேலை செய்யும் என்று சொல்கிறீர்கள். ஆனால் சிலர் இந்த குழந்தை பிறந்த நேரம் தான் நாங்கள் வீடு மற்றும் வாங்கி இருக்கிறோம் என்று சொல்கிறார்களே இது பற்றி தாங்களின் கருத்து என்ன?
    இபபடிக்கு,
    இரா.இரகுபதி./////

    எல்லாம் ஒரு சந்தோஷத்தில் சொல்வதுதான். சொன்னால சொல்லிவிட்டுப் போகிறார்கள்!

    அதே நேரம் வீட்டில் யாராவது தவறிவிட்டால்.....அதே மாதிரிச் சொல்வார்களா?

    ReplyDelete
  27. ///// Meenakshi Sundaram said... 3. பாக்கியாதிபதி செவ்வாய் உச்சத்துல இருக்கு சரியா?/// சரிதான்!
    I have posted another comment on about the 5th house. I don't know whether you got it or not. I am adding my doubt here. Superstar did not have any male child. Is it due the mercury and venus in 5th house??////

    இதற்குக் கணவன் - மனைவி இருவருடைய ஜாதகத்தையும் பார்த்தால்தான் சரியான காரணததைச் சொல்லமுடியும். திருமதி லதா ரஜினி காந்த் அவர்களின் ஜாதகம் கையில் இல்லையே!

    ReplyDelete
  28. இங்க ஒரு சந்தேகம் கேக்கலாமா?
    ஆமா வீடு வீடுங்கரீங்களே வாடகைக்கு கிடைக்குமா? என்னா விவரம் கொஞ்சம் சொல்லுங்கய்யா

    அதே அடங்காத மாணவன் இப்போது அமுகவில் இருந்து :)

    ReplyDelete
  29. ///இங்க ஒரு சந்தேகம் கேக்கலாமா?
    ஆமா வீடு வீடுங்கரீங்களே வாடகைக்கு கிடைக்குமா? என்னா விவரம் கொஞ்சம் சொல்லுங்கய்யா ///

    வீடு கெடக்கட்டும்!

    நீங்கள் அ.மு.க என்பதை எப்படி ந்ம்புவது?

    லக்கியாரிடமிருந்து லெட்டர் வாங்கிக் கொண்டு வாருங்கள்!

    ReplyDelete
  30. //அம்சம் என்பது ஒரு ராசியில் 9ல் ஒரு பங்கைக் காட்டும் படம்
    //
    அய்யா, இது கொஞ்சம் எனக்கு எட்டவில்லை?
    ஒரு ராசியில் 9ல் ஒரு பங்கு என்றால் என்ன?

    -கிச்சா.

    ReplyDelete
  31. Reply to Kicha!

    12 ராசிகளில் உள்ள மொத்த நட்சத்திரங்கள் 27
    ஒரு நட்சத்திரத்திற்கு 4 பாதங்கள்
    27 நட்சத்திரத்திற்கு 27 x 4 = 108 பாதங்கள்
    ----------------------------
    அப்படியென்றால் ஒரு ராசிக்கு எத்தனை நட்சத்திரங்கள் / பாதங்கள்?

    108 வகுத்தல் 12 ராசிகள் = 9 பாத்ங்கள் per ராசி அல்லது இரண்டேகால் நட்சத்திரம்
    (2 1/4 x 12 = 27)
    அதுதான் ஒரு ராசியில் 9 ல் ஒரு பங்கு எனப்படுகிறது
    ---------------------------------
    புரிந்து விட்டதா அல்லது இன்னும் விளக்கம் வேண்டுமா?

    ReplyDelete
  32. ஒரு பாதம் என்பது 3.3 டிகிரி என்று கூறலாமா?

    மொத்தம் 360 டிகிரி.
    ஒரு ராசிக்கு 360/12 = 30 டிகிரி.

    இரு பாதம் என்பது ஒரு ராசியின் 9ல் ஒரு பங்கு என்றால்

    30/9 = 3.3!

    இப்படி பாதங்களுக்கு பாகைக் கணக்கிடுதல் சரியா ஐயா?

    ReplyDelete
  33. //இது வாத்தியாரின் அன்புக் கட்டளை!//

    வாத்தியார் சொல்லிட்டா நோ அப்பீல்!

    மந்திரி கொஞ்சம் எந்திரி!

    அக்கா! வாங்க! வந்து முதல் பெஞ்சுல உக்காருங்க!

    ReplyDelete
  34. ஒரு ராசியில் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் ஒன்றாக அமர்ந்திருக்கும்போது அவற்றிற்குள் தள்ளு முள்ளு ஏற்படாதா?

    (என் ஜாதகத்தில் மூன்று கிரகங்கள் கூட ஒரே கட்டத்தில் இருக்கின்றன. அதற்காகவே ஜாதகக் கட்டத்தை நான் பெரிதாக வரைவது உண்டு. விசாலமா இருக்கட்டுமேன்னு)

    ReplyDelete
  35. பாகைகளிலும் சொல்லலாம் (in degree) சிபி!

    ஆனால் நட்சத்திரங்களையும் அதற்குரிய கிரகங்களையும் நினைவில் வைத்துக் கொண்டு இந்த 1/9 கணக்க்கிட்டால்தான்
    ராசியில் பகை வீட்டில் இருப்பதாக தெரியும் கிரகம் அம்சத்தில் அதனுடைய நட்சத்திரத்தில் ஆட்சி பலத்தோடு இருப்பது தெரியவரும்

    உதாரணம் சிம்மத்தில் இருக்கும் சுக்கிரனுக்கு அது பகை வீடு
    அதே சுக்கிரன் அதே சிம்ம வீட்டில் அதனுடைய சொந்த நட்சத்திரமான பூரத்தில் இருந்தால் ஆட்சி பலன்
    அதே நேரத்தில் அதே சிம்மத்தில் மகம் நட்சத்திரத்தில் இருந்தால் அது கேதுவுடைய (வேறு கிரகத்தின்) நட்சத்திரம்
    ஆகவே அந்த ஆட்சிப் பலன் இருக்காது!

    ReplyDelete
  36. கிரகங்களுக்கிடையே தள்ளு முள்ளு எப்படி வரும் மிஸ்டர் சிபி?

    அவைகள் என்ன டவுன் பஸ்ஸிலா பயணிக்கின்றன?

    Google Earthற்குப் போய் அவைகள் வானில் வட்டமிடும் பாதையைப் பார்த்துவிட்டு வாருங்கள்

    ஒவ்வொன்றின் பாதைக்கும் லட்சக்கணக்கான் மைல்கள் இடைவெளியுள்ளன!

    ReplyDelete
  37. ஐயா!

    ஒவ்வொரு பகுதியின் இறுதியிலும் அடுத்த பகுதிக்கான சுட்டியையும்,

    ஒவ்வொரு பகுதியின் ஆரம்பத்தில் முந்தைய பகுதிக்கான சுட்டியையும் கொடுக்கலாமே!

    எங்களைப் போல லேட்டரல் எண்ட்ரி மாணவிகளுக்கு வசதியாய் இருக்குமே!

    ReplyDelete
  38. ரஜினியின் ஜாதகம் கால சர்ப்ப பின் யோக ஜாதகம் இது குறித்து எங்கும் நீங்கள் குறிப்பிட்டதாய் கானோம்.

    மேலும் அவர் இப்போது இரண்டாம் இடத்தில்யுள்ள சனி திசையியுள்ளார் இது குறித்து என்ன நினைக்கிறீர்.

    ReplyDelete
  39. ///வரவனையான் அவர்கள் சொல்லியது: ரஜினியின் ஜாதகம் கால சர்ப்ப பின் யோக ஜாதகம் இது குறித்து எங்கும் நீங்கள் குறிப்பிட்டதாய் கானோம்.////

    Practical Test என்று 4 கேள்விகளை மட்டும்தான் எழுதியுள்ளேன். ஜாதகத்தில் உள்ள சிறப்புக்களை அடுத்த பதிவில் எழுத உள்ளேன்.அப்போது எழுதுவதாக உள்ளேன் நண்பரே!

    திரை உலகில் நிறைய கால சர்ப்ப தோஷக்காரர்கள் உள்ளார்கள். இசைஞானி இளையராஜாவையும் சேர்த்து

    ReplyDelete
  40. ////கடைசி பெஞ்ச் : ஒவ்வொரு பகுதியின் ஆரம்பத்தில் முந்தைய பகுதிக்கான சுட்டியையும் கொடுக்கலாமே!///

    கொடுத்தால் போயிற்று!

    (Side Barல் உள்ளதே நண்பரே)

    ReplyDelete
  41. //ரஜினியின் ஜாதகம் கால சர்ப்ப பின் யோக ஜாதகம் இது குறித்து எங்கும் நீங்கள் குறிப்பிட்டதாய் கானோம்.
    //

    ஐயா! கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?

    விளக்குவீர்களா? என்னைப் போன்ற பலருக்கும் விளக்கும் கிடைக்கும் என்ற ஆர்வத்தில் கேட்கிறேன்

    ReplyDelete
  42. ///நாமக்கல் சிபி அவர்கள் கேட்டது: ஐயா! கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
    விளக்குவீர்களா? என்னைப் போன்ற பலருக்கும் விளக்கும் கிடைக்கும் என்ற ஆர்வத்தில் கேட்கிறேன் //

    ராகு, கேது இருவருக்கும் நடுவே மற்ற கிரகங்கள் அம்ர்ந்திருக்கும் ஜாதகத்தைக் கால சர்ப்ப தோஷ ஜாதகம் என்பார்கள். அது பற்றிய சுவாரசியமான விரிவான பதிவு பின்னால் வரும் நண்ப்ரே!

    ReplyDelete
  43. Hi Sir,
    //*சிம்மத்தில் இருக்கும் சுக்கிரனுக்கு அது பகை வீடுஅதே சுக்கிரன் அதே சிம்ம வீட்டில் அதனுடைய சொந்த நட்சத்திரமான பூரத்தில் இருந்தால் ஆட்சி பலன்அதே நேரத்தில் அதே சிம்மத்தில் மகம் நட்சத்திரத்தில் இருந்தால் அது கேதுவுடைய (வேறு கிரகத்தின்) நட்சத்திரம்
    ஆகவே அந்த ஆட்சிப் பலன் இருக்காது!*//
    If The "Sukran in Maham-2", Then it will going to "Rishabam"(Aatchi)in Navamsam. In this case, Can Sukran give the ஆட்சி பலன்?

    ReplyDelete
  44. Hi Sir,
    //*சிம்மத்தில் இருக்கும் சுக்கிரனுக்கு அது பகை வீடுஅதே சுக்கிரன் அதே சிம்ம வீட்டில் அதனுடைய சொந்த நட்சத்திரமான பூரத்தில் இருந்தால் ஆட்சி பலன்அதே நேரத்தில் அதே சிம்மத்தில் மகம் நட்சத்திரத்தில் இருந்தால் அது கேதுவுடைய (வேறு கிரகத்தின்) நட்சத்திரம்
    ஆகவே அந்த ஆட்சிப் பலன் இருக்காது!*//
    If The "Sukran in Maham-2", Then it will going to "Rishabam"(Aatchi)in Navamsam. In this case, Can Sukran give the ஆட்சி பலன்?/////

    சிம்மத்தில் இருக்கும் சுக்கிரனுக்கு அது பகை வீடுதான்! பூர நட்சத்திரம் என்பதற்காக அதற்கு அங்கே ஆட்சி பலன் எல்லாம் கிடைக்காது நண்பரே!

    ராசியிலோ அல்லது நவாம்சத்திலோ சுக்கிரன் தனது வீடான ரிஷபம் அல்லது துலாத்தில் இருக்கும்போது மட்டுமே அதற்கு ஆட்சிபலன்

    ReplyDelete
  45. அய்யா இந்த இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள ரஜினி ஜாதகம் சற்று மாற்றமாக உள்ளதே எது சரி

    http://onlysuperstar.com/?p=683

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com