மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

31.8.16

Useful Tips: என்னென்ன காய்கறி எப்படிப் பார்த்து வாங்க வேண்டும்?

Useful Tips: என்னென்ன காய்கறி எப்படிப் பார்த்து வாங்க வேண்டும்?

1. வாழை தண்டு: மேல் பகுதி நார் அதிகம் இல்லாமலும் உள்ளிருக்கும் தண்டுப்பகுதி சிறுத்தும் இருப்பதாகப் பார்த்து வாங்க வேண்டும்.
2. வெள்ளை வெங்காயம்: நசுக்கினாலே சாறு வரும்படி இருக்க வேண்டும்
3. முருங்கைக்காய் : முருங்கைக் காயை கட்டை மற்றும் ஆட்காட்டி விரல்களை பயன்படுத்தி சிறிது முறுக்கினால், எளிதாக வளைந்தால் அது நல்ல முருங்கை காய்
4. சர்க்கரை வள்ளிகிழங்கு: உறுதியான கிழங்கு இனிக்கும், அடி பட்டு கருப்பாக இருந்தால் கசக்கும்
5. மக்கா சோளம்: இளசாகவும் இல்லாமல் ரொம்பவும் முற்றாமல் மணிகளை அழுத்தி பார்த்தால் உள்ளே இறங்காமல் இருந்தால் அதுநல்ல மக்காச்சோளம்.
6.தக்காளி: தக்காளி நல்ல சிவப்பில் தக்காளி இருந்தால் அதை வாங்கலாம் (குறிப்பு பெங்களூர் தக்காளி ஒரு வாரம் ஆனாலும் கெடாது இருக்கும்).
7. கோவைக்காய் : முழுக்க பச்சையாக வாங்க வேண்டும். சிவப்பு லேசாக இருந்தாலும் வாங்க வேண்டாம். பழுத்து ருசி இல்லாமல் இருக்கும்
8. சின்ன வெங்காயம்: பழைய வெங்காயம் வாங்குவதே நல்லது. இரண்டு பல் இருப்பதாக, முத்து முத்தாக தெளிவாக இருப்பதை வாங்கவும்
9. குடை மிளகாய் : தோல் சுருங்காமல் ஃப்ரெஷாக இருப்பதை வாங்கவும். கரும்பச்சையில் வாங்கவேண்டாம். அடிபட்டிருக்கும். எல்லா நிறக் குடை மிளகாய்களும் ஒரே சுவையில் தான் இருக்கும்
10. காலிபிளவர்: பூக்களுக்கிடையே இடைவெளி இல்லாமல் அடர்த்தியாக காம்பு தடினமனாக இல்லாமல் வாங்கவும்
11. மாங்காய்- தேங்காயை காதருகே வைத்து தட்டி பார்ப்பது போல மாங்காயும் தட்டிப் பார்க்கவும். சத்தம் வரும். அத்தகைய மாங்காயில் கொட்டைச் சிறிதாக இருக்கும்
12. பீர்க்கங்காய் ( நார்ச்சத்து உள்ள மிக நல்ல காய் இது ) : அடிப் பகுதி குண்டாக இல்லாமல் காய் முழுதும் ஒரே சைசில் இருக்குமாறு பார்த்து வாங்குவது நல்லது
13. பரங்கிக்காய் கொட்டைகள் முற்றியதாக வாங்கவும்
14. புடலங்காய் : கெட்டியாக வாங்கவும். அப்போதுதான் விதைப்பகுதி குறைவாக, சதைப்பகுதி அதிகமாக இருக்கும்
15. உருளை கிழங்கு: முளை விடாமல் பச்சை நரம்பு ஓடாமல் கீறினாலே தோல் உதிர்ந்து பெயர்ந்து வர வேண்டும்
16. கருணை கிழங்கு: முழுதாக வாங்கும் போது பெரியதாக பார்த்து வாங்குவது நல்லது. வெட்டிய கிழங்கை விற்றால், உள் புறம் இளம் சிவப்பு நிறத்தில் இருக்குமாறு பார்த்து வாங்கவும்
17. சேப்பங்கிழங்கு : முளை விட்டது போல் ஒரு முனை நீண்டிருக் கும் கிழங்கு சமையலுக்கு சுவை சேர்க்காது. உருண்டையாகப் பார்த்து வாங்கவும்
18. பெரிய வெங்காயம் மேல் (குடுமி) பகுதியில் தண்டு பெரிதாக இல்லாமல் பார்த்து வாங்கவும்
19. இஞ்சி: லேசாக கீறி பார்க்கும் போது தோல் பெயர்ந்து வருவது நல்லது. நார் பகுதி குறைவாக இருக்கும்
20. கத்திரிக்காய்: தோல் softஆக இருப்பதுபோல் பார்த்து வாங்கவும்
21. சுரைக்காய் : நகத்தால் அழுத்தினால் நகம் உள்ளே இறங்க வேண்டும். அப்போது தான் இளசு என்று அர்த்தம்
22. பூண்டு: பல் பல்லாக வெளியே தெரிவது நல்லது. வாங்கலாம்
23. பீன்ஸ் பிரன்ச் பீன்ஸில் நார் அதிகம். புஷ் பீன்ஸில் நார் இருக் காது. தோல் soft-ஆக இருந்தால் சுவை அதிகமாய் இருக்கும்
24. அவரை: தொட்டுப் பார்த்து விதைகள் பெரிதாக இருக்கும் காய்கள் தவிர்ப்பது நல்லது. இளசாக வாங்கினால் நார் அதிகம் இருக்காது
25. பாகற்காய்: பெரிய பாகற்காயில் உருண்டையை விட, தட்டையான நீண்ட காய் நல்லது
26. வாழைப்பூ : மேல் இதழை விரித்து பூக்கள் கருப்பாகாமல் வெளிர் நிறத்தில் இருக்கிறதா என பார்க்கவும். அப்படி இருந்தால் பிரெஷ் காய் என்று அர்த்தம்
27. மொச்சை :கொட்டை பெரிதாக தெரியும் காய் பார்த்து வாங்கவும்
28. சௌசௌ : வாய் போன்ற பகுதி விரிசல் பெரிதாக இல்லாத படி பார்த்து வாங்கவும். விரிசல் இருந்தால் முற்றிய காய்
29. முள்ளங்கி: லேசாக கீறினால் தோல் மென்மையாக இருந்தால் அது இளசு - நல்ல காய்
30. வெள்ளரி மேல் நகத்தால் குத்தி பார்த்தால் நகம் உள்ளே இறங்கி னால், நல்ல காய். விதைகள் குறைவாக இருக்கும்
31. பச்சை மிளகாய் :நீளமானது சற்று காரம் குறைவாக இருக்கும். சற்றே குண்டானது தான் காரம் தூக்கலாக வாசனையும் பிரமாதமாக இருக்கும்.
===================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

30.8.16

மனவளம்: வாழ்வென்பது எது வரை?

மனவளம்: வாழ்வென்பது எது வரை?

சீன அறிஞர் எழுதியது, அது தமிழாக்கத்தில்.......!!!

வாழ்வென்பது உயிர் உள்ளவரை.........!!!

தேவைக்கு செலவிடு........

அனுபவிக்க தகுந்தன அனுபவி......

இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய்......

இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை......

போகும்போது எதுவும் கொண்டு செல்லப்போவதுமில்லை......

ஆகவே.......அதிகமான சிக்கனம் அவசியமில்லை.

மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே,

உயிர் பிரிய-வாழ்வு......

சுற்றம்,நட்பு,செல்வம் எல்லாமே பிரிந்து விடும்.

உயிர் உள்ளவரை,ஆரோக்கியமாக இரு......

உடல்நலம் இழந்து பணம் சேர்க்காதே.....

உன் குழந்தைகளை பேணு......

அவர்களிடம் அன்பாய் இரு.......

அவ்வப்போது பரிசுகள் அளி......

அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே........

அடிமையாகவும் ஆகாதே.........

பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட
 பாசமாய் இருந்தாலும், பணி காரணமாகவோ,சூழ்நிலை கட்டாயத்தாலோ, உன்னை கவனிக்க
 இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்.......!!!

பெற்றோரை மதிக்காத குழந்தைகள்
 உன் சொத்து பங்கீட்டுக்கு-சண்டை போடலாம்......

உன் சொத்தை தான் அனுபவிக்க,
நீ சீக்கிரம் சாக வேண்டுமென,
வேண்டிக்கொள்ளலாம்-பொறு
 உரிமை அறிவர்,கடமை அறியார்

 அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி-அறிந்துகொள்.

இருக்கும்போதே குழந்தைகளுக்கு கொடு,

ஆனால்......

எல்லாவற்றையும் தந்துவிட்டு,பின் கை
 ஏந்தாதே,

எல்லாமே இறந்த பிறகு என,உயில் எழுதி
 வைத்திருந்தால்,

எப்போது சாவாய் என-எதிர்பார்த்து
 காத்திருப்பர்.

மாற்ற முடியாத தை மாற்ற முனையாதே,

மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால்
 வதங்காதே.....!!!

அமைதியாக மகிழ்ச்சியோடு இரு.......

பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு
 பாராட்டு-நண்பர்களிடம் அளவளாவு.

நல்ல உணவு உண்டு.....

நடை பயிற்சி செய்து.....

உடல் நலம் பேணி......

இறை பக்தி கொண்டு......

குடும்பத்தினர்-நண்பர்களோடு கலந்து உறவாடி
 மனநிறைவோடு வாழ்-இன்னும்......

இருபது,முப்பது,நாற்பது ஆண்டுகள்.
சுலபமாக ஓடிவிடும்......!!!

அதற்கு தயாராகு......!!!

படித்ததில் பிடித்தது......!!!
=====================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

29.8.16

Short Story: சிறுகதை: எது பெரிய பதவி?


Short Story: சிறுகதை: எது பெரிய பதவி?

மாத இதழ் ஒன்றிற்காக அடியவன் எழுதி இந்த மாதம் 20-8-2016 அன்று அந்த இதழில் வெளிவந்த சிறுகதை. நீங்கள் படித்துப் பார்ப்பதற்காக இங்கே பதிவிட்டுள்ளேன்
அன்புடன்,
SP.VR. சுப்பையா.

--------------------------------------------------------------------------------
சிவநேசன் செட்டியார் எதிர்பார்க்கவில்லை. அது நடந்து விட்டது. அவசர சிகிச்சைக்காக மதுரையில் உள்ள மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் ஆச்சியின், அதாவது அவரது மனைவி அன்னபூரணி ஆச்சியின் உயிர் பிரிந்து விட்டது.

செட்டி நாட்டிலுள்ள தங்கள் ஊரில் இருந்து காரைக்குடியில் உள்ள மருத்துவ மனைக்குத்தான் முதலில் சென்றார்கள். மூச்சுத் தினறல் இருக்கிறது என்று சொல்லி அதற்கு மருந்து கொடுத்து விட்டு, நாடித் துடிப்பும் சீராக இல்லை. நீங்கள் மதுரைக்குச் செல்லுங்கள். அங்கேதான் வைத்தியம் செய்ய முடியும் என்று சொல்லி அனுப்பி வைத்து விட்டார்கள்.

ஆச்சியின் உயிர் பிரிந்த அதிர்ச்சியைவிட, காரில் செல்லும்போது ஆச்சி அவர்கள் பேசிய பேச்சுத்தான், அவருக்கு பெரும் அதிர்ச்சியாகி, பலமுறை அவர் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது.

“ என் காலம் முடியப் போகிறது. சிகிச்சை செய்கிறேன் என்று என்னை அவதிப்பட வைக்காதீர்கள். உங்களிடம் ஒன்றே ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன். சொல்லட்டுமா?”

“சரி சொல்லடி அன்னம்....” என்று செட்டியார் வாஞ்சையுடன் சொல்ல, ஆச்சி அவர்கள் மெல்லிய குரலில் சொன்னார்கள்.

“பதவி, பதவி என்று இனிமேல் அலையாதீர்கள். உலகத்திலேயே பெரிய பதவி எது தெரியுமா?”

“என்னைவிட நீதான் கெட்டிக்காரி. நீயே சொல்”

“சிவபதவிதான் பெரிய பதவி. அந்தப் பதவி கிடைக்க இனிமேல் பாடுபடுங்கள்.”

“உனக்கு வேண்டுமென்றால் சிவபதவி கிடைக்கும். நீ சிவபக்தை. எனக்கு எப்படிக் கிடைக்கும்?”

“கருணையே வடிவானவர் சிவபெருமான். வேண்டுதல், வேண்டாமை இல்லாதவர். தன் பக்தர்கள் அனைவருக்கும் சிவபதவியை கொடுத்து அருளக்கூடியவர் அவர். சிவபதவி கிடைத்தால் முக்தியடையலாம். முக்தியடைந்தால் அடுத்த பிறவி இல்லை. அடுத்தடுத்துப் பிறந்து பிறவிப் பெருங்கடலில் நீந்திக் கஷ்டங்களையும், துயரங்களையும் அனுபவிக்காமல் இறைவனோடு இருந்துவிடலாம்.”

“அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்? அதையும் சொல்!”

“ தினமும் காலையிலும், மாலையிலும் சிவன் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்துவிட்டு வாருங்கள். திருவாசகத்தைப் பாராயணம் செய்யுங்கள். இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க! என்று தினமும் 108 முறை சொல்லுங்கள்.தினமும் ஐந்து எளியவர்களுக்கு அன்னதானம் செய்யுங்கள். உங்களால் முடியும். செய்யுங்கள். முதலில் உங்களுடைய கொடுக்கல் வாங்கல் தொழிலை நிறுத்துங்கள். இருக்கிற செல்வம் போதும். என்ன செய்வீர்களா? எனக்காக செய்வீர்களா?”

“உனக்காகச் செய்கிறேனடி அன்னம்....” என்று சொல்லச் சொல்ல, ஆச்சி அவர்கள் புன்னகையுடன் அவர் கையைப் பிடிக்க முயன்று, அது முடியாமல் போய், செட்டியாரின் மடியிலேயே சாய்ந்துவிட்டார்கள். உயிர் பிரிந்து விட்டது. செட்டியாரிடம் வாக்குறுதி வாங்கிய மனத் திருப்தியோடு ஆச்சியின் காலம் முடிந்துவிட்டது.

******************************************

சிவநேசன் செட்டியாருக்கு பதவிகள் மேல் அப்படியொரு ஈடுபாடு. ஆர்வம். எந்த அமைப்பு என்றாலும், துண்டைத் தோளில் போட்டுக் கொண்டு, நான் என்று முதல் ஆளாகப் போய் நின்று விடுவார். சுமார் ஆயிரம் புள்ளிகளைக் கொண்ட செட்டிநாட்டு ஊர் அவருடைய ஊர். ஊருக்குள் அவரைத் தெரியாதவர்களே இருக்க முடியாது. இத்தனைக்கும் அவருக்கு 55 வயதுதான். அதற்குள் பிரபலமாகிவிட்டார்.

தங்கள் ஊருக்குள் உள்ள சிவன் கோயில், மற்றும் உள்ள ஏழு கோயில்கள், அவற்றின் நிர்வாக அமைப்புக்கள், பொது நல அமைப்புக்கள், சஷ்டி அபிஷேகக் குழு, பாதயாத்திரைக்குழு,  அந்த வட்டகையைச் சேர்ந்த சுழற்சங்கம் என்று எங்கே பதவி இருந்தாலும், அது தலைவர் பதவி அல்லது செயலாளர் பதவி என்று எந்தப் பதவியாக இருந்தாலும், அதில் இடம் பிடிக்காமல் விட மாட்டார்.

ஊருக்குள் அவர் செல்வந்தர். அத்துடன் கொடுக்கல், வாங்கல் தொழிலையும் செய்து கொண்டிருக்கிறார். ஆகவே தனக்கு வேண்டியவர்கள், வேண்டியவர்கள் என்றால் அவரிடம் பற்று வழி உள்ளவர்கள்தான், பத்து அல்லது இருபது பேரை கூட்டிக் கொண்டு போய் விடுவார்.
அவர் பெயரை முன் மொழிவதற்கும், வழி மொழிவதற்கும் அவர்கள் உதவுவார்கள். மற்றதை அவர் பார்த்துக்கொள்வார்.

இருபது வருடங்களாக எல்லாப் பதவிகளிலும் இருந்து விட்டார். தான் இதுவரை வகித்த பதவிகளை முன்னாள் என்ற அடைமொழியுடன் தனது அடையாள அட்டையில் அதாவது விசிட்டிங் கார்டில் பட்டியல் இட்டும் வைத்துள்ளார்.

ஆனால் அவர் மனைவி அன்னபூரணி ஆச்சிக்கு, அவருடைய பதவி சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் எதுவுமே பிடிக்காது. செட்டியாருக்கு மூளை வறண்டு விட்டது. பதவிப் பித்து தலைக்கேறி அங்கேயே குடியிருக்கிறது. நாம் சொன்னால் எங்கே கேட்கப் போகிறார் என்று எதுவும் சொல்லாமல் மெளனியாக இருந்து விடுவார்.

“ரேசன் கார்டில்தான் தலைவர் என்ற பெயரில் உங்கள் பெயர் இருக்கிறதே! அது போதாதா? எதற்காக இந்தப் பதவி மோகம்?” என்று ஒருமுறை ஆச்சி அவர்கள் கேட்டபோது, செட்டியார் கோபமாகக் கத்தித் தீர்த்துவிட்டார்.

அதற்குப் பிறகு ஆச்சி அவர்கள் பதவி விஷயமாக அவருடன் பேசுவதை நிறுத்திக் கொண்டு விட்டார்கள். இப்போது இறக்கும் முன்பாக தன் ஆதங்கத்தைத் தீர்த்துக் கொள்வதற்காகப் பேசினார்கள்.

அந்தப் பேச்சு செட்டியாரிடம் பெரிய மாற்றத்தை உண்டாக்கியது. பார்ப்பவர்கள் வியக்கும் வண்ணம் ஆளே தலை கீழாக மாறிவிட்டார்.

முதலில் தனது கொடுக்கல் வாங்கல் தொழிலை முடிவிற்குக் கொண்டு வந்தார். தன்னிடம் வைப்புத் தொகை போட்டிருந்தவர்களை எல்லாம் அழைத்து, அவர்களுடைய பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டார். தன்னிடம் கடன் வாங்கியிருந்தவர்களின் பட்டியலைத் தயார் செய்து, பிராமிசரி பேப்பர்களுடன், உள்ளூரில் இருந்த தன் நெருங்கிய நண்பர் ஒருவரிடம் கொடுத்து, ”மொத்தம் ஒரு கோடி ரூபாய் நிலுவையில் இருக்கிறது. எல்லாவற்றையும் நீயே பார்த்து வசூல் செய். வசூலாக வசூலாக பத்து பெர்சண்ட் கமிஷனை நீ எடுத்துக் கொண்டு மீதியை என் வங்கிக் கணக்கில் கட்டிவிடு. முடியாதவர்களை அழைத்து வங்கிகளில் செய்வதுபோல வட்டியைத் தள்ளுபடி செய்து ஒன் டைம் செட்டில்மெண்ட்டாக பணத்தை வாங்கு.வந்தவரை போதும். மூன்று மாதங்களுக்குள் இதைச் செய்து கொடு. பெரும் உதவியாக இருக்கும். அந்தப் பணம் எனக்கு வேண்டாம். நம்ம ஊர் சிவன் கோயிலுக்குத்தான் கொடுப்பதாக உள்ளேன். திருப்பணிக் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி விடுவேன்” என்றார்

நண்பரும் கோயில் காரியம் என்பதால் ஒப்புக்கொண்டு அந்தப் பணியைச் செய்யத் துவங்கினார்.

அடுத்ததாக தான் தலைவர் பதவியில் இருந்த இரண்டு அமைப்புக்களுக்கும், தன்னுடைய பதவி விலகல் கடிதத்தைக் கொடுத்து, அந்தப் பதவிகளில் இருந்து விலகிக் கொண்டார்.

ஆச்சியின் கேதத்திற்காக அமெரிக்காவில் இருந்து தன் மனைவியுடன் வந்திருந்த தன் மகனை அழைத்து, ஆச்சியின் தங்க,வைர நகைகளைக் கொடுத்துவிட்டார். எல்லாம் ஐம்பது லட்ச ரூபாய் பெறுமானமுடையவை. காரைக்குடியில் உள்ள லாக்கரில் பத்திரமாக வையுங்கள் என்றார். கேத்ததிற்கு வந்திருந்த தன் இளைய சகோதரியிடம் ஆச்சியின் வெள்ளிப் பாத்திரங்கள் அனைத்தையும் கொடுத்துவிட்டார். அவை மொத்தம் 25 கிலோ அளவில் இருக்கும். உன் மகள் திருமணத்திற்கு இவற்றைக் காசாக்கிப் பயன் படுத்திக்கொள் என்று சொல்லிவிட்டார்.

வந்த பத்தாவது நாளே அவருடைய மகன் அமெரிக்காவிற்குத் திரும்பிப் போய்விட்டான். மருமகள் இவருடைய ஆச்சி மகள். அவள் அத்தை இறந்த அதிர்ச்சி மாமாவிற்குத் தீரட்டும் நான் இரண்டு மாதம் மாமாவுடன் இருந்துவிட்டுப் பிறகு வருகிறேன் என்று சொல்லி இங்கேயே இருந்து விட்டாள்.

ஆச்சி இறந்து 21 நாட்களுக்குப் பிறகு செட்டியார் முன்பு செய்து, விட்டுப்போன சந்தியா வந்தனத்தைத் தினமும் இரண்டு வேளைகள் செய்யத் துவங்கினார். அதுபோல வீட்டுக்கு எதிரில் இருந்த சிவன் கோயிலுக்குத் தினமும் இரண்டு வேளைகள் சிரத்தையாகச் சென்று வந்தார்.

சொ.சொ.மீ அவர்கள் எழுதிய திருவாசகம் நூல் ஒன்றை வைத்திருந்தவர், அதை எடுத்துப் பாராயணம் செய்யத் துவங்கினார்.

காலம் யாருக்காகவும் காத்திருக்காது அல்லவா? ஒரு மாதம் போனதே தெரியவில்லை.

ஒரு நாள் காலை, அவருடைய மருமகள் அவருடன் பேச்சுக் கொடுத்தாள்.

“மாமா, எனக்கு எல்லாமே வியப்பாக இருக்கிறது. நீங்கள் இப்படி நெற்றி நிறைய விபூதி பூசி முழு சிவபக்தராக ஆவீர்கள் என்று யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள். இந்த மாற்றம் உங்களுக்கு எப்படி சாத்தியமாயிற்று?”

“இறந்து போன உங்கள் அத்தைதான் காரணம்”

“அத்தை கடைசியாகச் சொன்னதைவைத்தா இத்தனை மாற்றங்கள்?”

“உங்கள் அத்தையின் உடல்தான் எரிந்து சாம்பலாகிவிட்டது. ஆனால் ஆத்மா இங்கே என்னுடன்தான் இருக்கிறது. நான் சந்தியாவந்தனம் பண்ணும் போதும், உணவு உண்ணும்போதும் உன் அத்தை வளவு பட்டியக் கல்லிலேயே உட்கார்ந்து என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறாள். என் மீது அவளுக்கு அத்தனை அன்பு. அதனால் அவளுடைய ஆத்மா என்னை விட்டுப் பிரிய மறுக்கிறது. நான் செய்த புண்ணியம் எனக்கு நல்ல மனைவி அமைந்தாள். பராசக்தி போன்ற தோற்றமும் செயலும் உடையவள் அவள்! அவள் என் மீது கொண்டிருக்கும் அன்பிற்கு எதுவும் ஈடாகாது.இன்னும் மூன்று மாதத்தில் நாம் போகலாம் என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறாள்”

“எல்லாம் பிரம்மையாக இருக்கும் மாமா”

“பிரம்மை அல்ல. உண்மை.பொறுத்திருந்து பார்! கவியரசர் கண்ணதாசன் சொல்வார், உண்டு என்றால் அது உண்டு. இல்லை என்றால் அது இல்லை
உங்களுக்கெல்லாம் அது இல்லாமலிருக்கலாம். ஆனால் எனக்கு அது உண்டு”

அத்துடன் மருமகள் தன் உரையை முடித்துக் கொண்டாள்

****************************************

அன்று சிவராத்திரி. அதற்கு முதல்நாள் தான், செட்டியார், கடன்காரர்களிடம் இருந்து அதுவரை வசூலாகி இருந்த முப்பது ல்ட்ச ரூபாய் பணத்துடன், ஊருக்குச் செல்லும்போது தன் மகன் கொடுத்துவிட்டுப்போன இருபது லட்ச ரூபாயையும் சேர்த்து, கோயிலுக்கு மொத்தமாக ஐம்பது லட்ச ரூபாய்க்கான காசோலையை, அதன் காரியக் காரர்களிடம் கொடுத்திருந்தார்.

நாளை மாலை சிவராத்திரியை முன்னிட்டு கோயிலில் விஷேச அபிஷேகம், அலங்காரம் பூஜை எல்லாம் உண்டு, வாருங்கள் என்று அவருக்கு அழைப்புக் கொடுத்திருந்தார்கள்.

அடுத்த நாள் மாலை, கண் குளிர சிவனாரை வணங்கியவர் கோயில் அமைப்பாளர்கள் கொடுத்த காளாஞ்சி, பிரசாதம் எல்லாவற்றையும் வாங்கித் தன் மருமகளிடம் கொடுத்ததோடு, ”நீ முன்னால் வீட்டிற்குச் செல் ஆத்தா, நான் அரை மணி நேரம் கழித்து வருகிறேன்” என்று சொல்லி அவளை அனுப்பி வைத்தார்

கோயிலை விட்டு வந்தவர், எதிரில் இருந்த ஊரணியைப் பார்த்த போது, அதன் சுற்றுச் சுவரில் தன் மனைவி அன்னபூரணி அமர்ந்திருப்பதைப் பார்த்தார். அவருக்கு அப்படித்தான் தெரிந்தது. வாருங்கள் இங்கே என்று கூப்பிடுவதைப் போல் இருந்தது.

சின்னைபிள்ளைகளைப் போல ஓட்டமும் நடையுமாக அங்கே விரைந்தவர், குறுக்கே வந்த கோயில் மாட்டைக் கவனிக்கவில்லை. மாடும் ஒட்டமும் நடையுமாகத்தான் வந்து கொண்டிருந்தது. வந்த வேகத்தில் மாடு இவரை இடித்து விட்டது. தடால் என்று கீழே விழுந்தார்.விழுந்த வேகத்தில் தலையில், நெற்றிப் பொட்டில் அடிபட உயிர் பிரிந்துவிட்டது.

ஊருக்குள் அத்தனை பேரும் அன்று இரவு அதைத்தான் பேசிக் கொண்டிருந்தார்கள். ’பெரிய மனுஷன்னா பெரிய மனுஷந்தானய்யா, சிவன் கோயிலுக்கு தர்மமா ஐம்பது லட்ச ரூபாய் கொடுத்தவர், சிவராத்திரி அன்னைக்கு சிவன் கோயில் வாசலிலேயே இறந்து போனாரய்யா - நிச்சயம் அவருக்கு சிவபதவி கிடைக்கும்.”

கிடைக்கட்டும். கிடைக்கட்டும்.  அப்போதுதானே அன்ன பூரணி ஆச்சியின் ஆத்மாவும் சாந்தியடையும்!

*************************************
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!