பதிவில் எழுதுவதைக் கேள்விக்குறியாக்கும் பின்னூட்டங்கள்
கட்டற்ற எழுத்து சுதந்திரம் கட்டற்ற
கொடுமையாகிக் கொண்டிருக்கிறது
கண்ணியம் இல்லாதவர்களின் பின்னூட்டம்
காற்றை அசுத்தப் படுத்திக் கொண்டிருக்கிறது
போகப்போகத் தனிமனிதன் எழுத்து
சுதந்திரத்தைச் சுவாசிக்க முடியாத நிலை
ஏற்படும்போல் இருக்கிறது
பதிவின் நோக்கத்தை திசை திருப்பும்
கேள்விகளும், இறை நம்பிக்கையை
நக்கலடித்து எழுதப்பட்ட பின்னூட்டங்களும்
தொடர்ந்து வருகின்றன
இதெல்லாம் நான் எதிர்பார்த்ததுதான்.
இதெற்கெல்லாம் கவலைப் படுகின்ற
ஆள் நானில்லை!
பதில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டிய
அவசியம் எனக்கிலலை
செத்துப்போன தன் பாட்டியை உயிர்ப்பித்துத்
தரச்சொல் - நான் உன் கடவுளை நம்புகிறேன்
என்று ஒரு அன்பர் எழுதியிருக்கிறார்.
இன்னொருவர் காதலிக்காமல், காதலியைக் கண்
முன்னே பாராமல், தொட்டுப் பேசாமல், காதல்
உணர்வு எனக்கு எப்படி ஏற்படும்? என்று கேட்டுள்ளார்
இப்படிப் பின்னூட்டங்கள் வருவதும் அதைப்
பதிவில் வெளியிடாமல் விட்டு விட்டால்
ஏன் வெளியிடவில்லை என்று கேள்வி கேட்பதும்
அதிகரித்து வருகின்றன
அதேபோல் பதிவிற்கு சம்பந்தமில்லாத
செய்திகளுடன் என்னைக் கேள்வி கேட்டு வரும்
பின்னூட்டங்களும் அதிகரித்து வருகின்றன
சில பின்னூட்டங்கள், சற்று முன்வந்த சக
பதிவரின் பின்னூட்டத்தைத் பதிவில் பார்த்து
விட்டு, அவரை மறைமுகமாக ஏசி அல்லது தாக்கி
எழுதப்பெற்றும் வருகிறது. அதை வெளியிடாமல்
மட்டுறுத்தினால் ஏன் வெளியிடவில்லை என்று
அடுத்தடுத்துப் பின்னூட்டங்கள் வருகின்றது
இதை - இந்த நிலையை - கட்டற்ற கொடுமை
என்று குறிப்பிட்டால அதற்கும் எதிர் பின்னூட்டம்
வருகிறது. இனிமைக்கும் கொடுமைக்கும்
விளக்கம் கேட்டுப் பின்னூட்டம் வருகிறது
பதிவில் எழுதுவதையே கேள்விக் குறியாக்குகிறார்கள்!
கண்ணியமாக இல்லாத பின்னூட்டங்கள் குப்பைத்
தொட்டிக்குத்தான் போகும்.
எழுதி உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்
--------------------------------------------------------------------
பின்னூட்டத்தை மட்டுறுத்துவது எனது உரிமை!
என்னுடைய வகுப்பறைக்கு வந்து செல்லும்
நல்ல உள்ளங்களின் மரியாதையைக் காப்பது
காப்பது எனது கடமை!
எனது உரிமையிலும் கடமையிலும் குறுக்கிட
யாருக்கும் அனுமதி இல்லை. அதை நினைவில்
கொள்க!
அன்புடன்
வகுப்பறை வாத்தியார்
மாணவர் பதிவேடு (Enrolment Register)
என்னைப் பற்றி
Contact vaaththiyar
Please write to Vaaththiyar
திருமணப் பொருத்தம்
Marriage Matching
My Phone Number and whatsApp number
94430 56624
My email ID
எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
வந்தவர்களின் எண்ணிக்கை
வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?
வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
30.9.07
தமிழ்ப் பதிவுல பிரம்மாவிற்காக ஒரு பதிவு
தமிழ்ப் பதிவுலக பிரம்மாவிற்காக ஒரு பதிவு
தமிழ்ப் பதிவுக பிரம்மாவின் கேள்வி:
///உருவாய் அருவாய் உளதாய் இலதாய்... இந்த
கடை வார்த்தைக்கு அர்த்தம் அவரால் இல்லமலும்
போகமுடியும்... he can become non existent too!
என்று நான் விளங்கியிருக்கிறேன். நாத்திகமும்
அவருக்கு ஒத்துப்போகும் என்பதையே நான்
உணர்கிறேன். அல்லது அவர் ஆத்திக நாத்திகங்கள்
இரண்டிற்கும் அப்பாற்பட்டவரோ? நீங்க என்ன
சொல்றீங்க வாத்தியார் ஐயா?///
அடியவனின் பதில்:
நாத்திகம் அவருக்கு (இறைவனுக்கு) ஒத்துப்போகும்.
ஆனால் நாத்திகத்திற்கு இறைத் தத்துவம் ஒத்துப்
போகவில்லை. அவர் இவை இரண்டிற்கும் -
நீங்கள் சொல்லியபடி அப்பாற்பட்டவர்தான்!!!!
இவர்கள் ஒத்துப்போகாதற்கும் இறைவன்தான்
காரணம் என்று எண்ணுகிறேன் இருதுருவங்கள்
இருப்பதுபோல - இரவு, பகல் இருப்பதுபோல -
இன்பம், துன்பம் இருப்பதுபோல - உறவு, பகை
இருப்பதுபோல - பெருமை, சிறுமை
இருப்பது போல, வறுமை, செழுமை
இருப்பதைப்போல, துணை, தனிமை
இருப்பது போல இதுவும் இருக்கட்டும் என்று எண்ணிச்
சும்மா இருக்கின்றாரோ என்னவோ:-)))))
ஆனால் ஆத்திகம், நாத்திகம் என்ற பேதம்
இறைவனுக்கு இல்லை. அவற்றைக் கடைப்பிடிக்கும்
இரு சாராருமே அவருக்குச் சமமானவர்கள் தான்
அவரால் படைக்கப்பட்ட இந்த உலகத்தின் பிரஜைகள்
அவர்கள். இந்தச் சம நோக்குப் பார்வையால்தான்
அவர் எல்லாம் வல்லவர் என்ற நிலையில் உள்ளார்.
That is the main reason for His existence as The Almighty
இல்லையென்றால் அவர் வெறும் mighty ஆகத்தான்
இருப்பார். எல்லாம் என்ற நிலை காணாமல் போயிருக்கும்.
வெறும் வல்லவர் என்றுதான் அவர் சொல்லப்படுவார்.
"ரவுசு பண்ணாம, முடக்கடி செய்யாம ஒத்துமையா
இருக்கோணும்டா சாமிகளா" என்று ஒரு தாய் தன்
பிள்ளைகளிடம் சொல்வது போலத்தான்
கடவுளின் சித்தமும். பிள்ளைகள் கேட்டால்தானே?
இங்கே நடக்கும் நாத்திக ஆத்திக சண்டைகளுக்கு
அவர் எப்படிப் பொறுப்பாவார்?
இலதாய் = இல்லாததாய் (non existent)
உளதாய் = உள்ளதாய்
உருவாய் அருவாய் உளதாய் இலதாய் என்பதை
உருவம் உடையவராகவும், உருவம் இல்லாதவராகவும்
உலகத்தோரின் கண்களில் படும்படி உள்ளவராகவும்
உலகத்தோரின் கண்களுக்கு (படாதபடி) இல்லாதவராகவும்
அல்லது தெரியாதவராகவும் என்று பொருள் கொள்ளல் வேண்டும்
நாத்திகத்தைப் பற்றிய எந்தவிதமான செய்திக்கும்
இந்தப் பாடலில் வாய்ப்பே இல்லை! ஏனென்றால்
பாடலை எழுதியவர் அருணகிரிநாதர்.
அவரைப் பற்றிச் சொல்லவா வேண்டும்?
விளக்கம் போதுமா தமிழ்ப் பதிவுலகப் பிரம்மாவே?
நாத்திகம் பற்றி நான் நன்கறிவேன். ஏனென்றால்
வசந்த காலத்தில் நான் நாத்திகனாக இருந்தவன்.
"தில்லை நடராசரையும் ஸ்ரீரெங்க நாதரையும் பீரங்கி
வைத்துப் பிளக்கும் நாள் எந்நாளோ?" என்று
சொல்லிய அன்பர்களோடும் நண்பர்களோடும்
ஒன்றாக இருந்தவன்.
நாத்திகக் கொள்கைகளுக்கு உரம் சேர்க்க ஆதாரங்
களைத் தேடி அலைந்தபோதுதான் ஆத்திகம் என்னைப்
பிடித்துக் கொண்டு விட்டது.
பிடிக்கு ஆளான கதை பெருங்கதை!
நன்றி, வணக்கத்துடன்
தோழமையுடன்,
SP.VR. சுப்பையா
பின் குறிப்பு: செய்தி நீண்டதாக இருந்ததாலும்,
உங்களின் மேல் உள்ள அன்பு, மரியாதை காரணமாகவும்,
தனிப் பதிவாக வலையேற்றம் செய்துள்ளேன்.
தமிழ்ப் பதிவுக பிரம்மாவின் கேள்வி:
///உருவாய் அருவாய் உளதாய் இலதாய்... இந்த
கடை வார்த்தைக்கு அர்த்தம் அவரால் இல்லமலும்
போகமுடியும்... he can become non existent too!
என்று நான் விளங்கியிருக்கிறேன். நாத்திகமும்
அவருக்கு ஒத்துப்போகும் என்பதையே நான்
உணர்கிறேன். அல்லது அவர் ஆத்திக நாத்திகங்கள்
இரண்டிற்கும் அப்பாற்பட்டவரோ? நீங்க என்ன
சொல்றீங்க வாத்தியார் ஐயா?///
அடியவனின் பதில்:
நாத்திகம் அவருக்கு (இறைவனுக்கு) ஒத்துப்போகும்.
ஆனால் நாத்திகத்திற்கு இறைத் தத்துவம் ஒத்துப்
போகவில்லை. அவர் இவை இரண்டிற்கும் -
நீங்கள் சொல்லியபடி அப்பாற்பட்டவர்தான்!!!!
இவர்கள் ஒத்துப்போகாதற்கும் இறைவன்தான்
காரணம் என்று எண்ணுகிறேன் இருதுருவங்கள்
இருப்பதுபோல - இரவு, பகல் இருப்பதுபோல -
இன்பம், துன்பம் இருப்பதுபோல - உறவு, பகை
இருப்பதுபோல - பெருமை, சிறுமை
இருப்பது போல, வறுமை, செழுமை
இருப்பதைப்போல, துணை, தனிமை
இருப்பது போல இதுவும் இருக்கட்டும் என்று எண்ணிச்
சும்மா இருக்கின்றாரோ என்னவோ:-)))))
ஆனால் ஆத்திகம், நாத்திகம் என்ற பேதம்
இறைவனுக்கு இல்லை. அவற்றைக் கடைப்பிடிக்கும்
இரு சாராருமே அவருக்குச் சமமானவர்கள் தான்
அவரால் படைக்கப்பட்ட இந்த உலகத்தின் பிரஜைகள்
அவர்கள். இந்தச் சம நோக்குப் பார்வையால்தான்
அவர் எல்லாம் வல்லவர் என்ற நிலையில் உள்ளார்.
That is the main reason for His existence as The Almighty
இல்லையென்றால் அவர் வெறும் mighty ஆகத்தான்
இருப்பார். எல்லாம் என்ற நிலை காணாமல் போயிருக்கும்.
வெறும் வல்லவர் என்றுதான் அவர் சொல்லப்படுவார்.
"ரவுசு பண்ணாம, முடக்கடி செய்யாம ஒத்துமையா
இருக்கோணும்டா சாமிகளா" என்று ஒரு தாய் தன்
பிள்ளைகளிடம் சொல்வது போலத்தான்
கடவுளின் சித்தமும். பிள்ளைகள் கேட்டால்தானே?
இங்கே நடக்கும் நாத்திக ஆத்திக சண்டைகளுக்கு
அவர் எப்படிப் பொறுப்பாவார்?
இலதாய் = இல்லாததாய் (non existent)
உளதாய் = உள்ளதாய்
உருவாய் அருவாய் உளதாய் இலதாய் என்பதை
உருவம் உடையவராகவும், உருவம் இல்லாதவராகவும்
உலகத்தோரின் கண்களில் படும்படி உள்ளவராகவும்
உலகத்தோரின் கண்களுக்கு (படாதபடி) இல்லாதவராகவும்
அல்லது தெரியாதவராகவும் என்று பொருள் கொள்ளல் வேண்டும்
நாத்திகத்தைப் பற்றிய எந்தவிதமான செய்திக்கும்
இந்தப் பாடலில் வாய்ப்பே இல்லை! ஏனென்றால்
பாடலை எழுதியவர் அருணகிரிநாதர்.
அவரைப் பற்றிச் சொல்லவா வேண்டும்?
விளக்கம் போதுமா தமிழ்ப் பதிவுலகப் பிரம்மாவே?
நாத்திகம் பற்றி நான் நன்கறிவேன். ஏனென்றால்
வசந்த காலத்தில் நான் நாத்திகனாக இருந்தவன்.
"தில்லை நடராசரையும் ஸ்ரீரெங்க நாதரையும் பீரங்கி
வைத்துப் பிளக்கும் நாள் எந்நாளோ?" என்று
சொல்லிய அன்பர்களோடும் நண்பர்களோடும்
ஒன்றாக இருந்தவன்.
நாத்திகக் கொள்கைகளுக்கு உரம் சேர்க்க ஆதாரங்
களைத் தேடி அலைந்தபோதுதான் ஆத்திகம் என்னைப்
பிடித்துக் கொண்டு விட்டது.
பிடிக்கு ஆளான கதை பெருங்கதை!
நன்றி, வணக்கத்துடன்
தோழமையுடன்,
SP.VR. சுப்பையா
பின் குறிப்பு: செய்தி நீண்டதாக இருந்ததாலும்,
உங்களின் மேல் உள்ள அன்பு, மரியாதை காரணமாகவும்,
தனிப் பதிவாக வலையேற்றம் செய்துள்ளேன்.
29.9.07
செல்லாவே வரலாமா? பதிலைத் தரலாமா?
செல்லாவே வரலாமா? கேள்விக்குப் பதிலைத் தரலாமா?
தேனினும் இனிய, மலரினும் மெல்லிய எனது
வகுப்புக் கண்மணிகள் அனைவருக்கும்,
வாத்தியாரின் காலை வணக்கங்கள்!
என் மதிப்பை அதிகம் பெற்றவறான நம் வகுப்பு
மாணவர் செல்லா அவர்கள், நேற்று நடத்திய
பாடத்தில் ஏற்பட்ட சந்தேகங்களைத் தீர்த்துக்
கொள்ளூம் முகமாகப் போஸ்டர் அடித்து
ஒட்டியிருக்கிறார். (அதாவது தனிப் பதிவு
போட்டிருக்கிறார்) அதை அவர் வகுப்பறையிலே
கேட்டிருக்கலாம். இருந்தாலும் பரவயில்லை!
பதில்களைக் கீழே கொடுத்துள்ளேன்.
சிவப்பு வண்ண எழுத்துக்கள் கேள்விகளாகும்
கருப்பு வண்ண எழுத்துக்கள் பதில்களாகும்
1. * கடவுள் உண்டா இல்லையா? ….
பதிவை மீண்டும் படிக்கவும். பதில் அதில்
உள்ளது! இருந்தாலும் என் வகுப்பு மாணவராகிய
உங்களுக்காக மீண்டும் ஒரு முறை சொல்கிறேன்.
கடவுள் இருக்கிறார். சர்வ நிச்சயமாக இருக்கிறார்
2. *கடவுள் என்றால் என்ன?
கடவுள் என்றால் எல்லாவற்றையும் கடந்தவர்
கடவுள் எனப்படுபவர் உலகம், உயிர் ஆகியவற்றின்
தோற்றத்துக்குக் காரணமாகக் கருதப்படும் மனித
ஆற்றலால் அறிய முடியாதபடி இருப்பதாகக்
கருதப்படும் மேலான சக்தி - God
கடந்தவர் என்றால் எல்லாநிலைகளையும் தாண்டிய
நிலையில் உள்ள மேலானவர் என்று பொருள்படும்
3.* அவர் எப்படி இருப்பார்?
உருவமும் அருவமும அற்றவர் கடவுள்
உருவம் = மனிதன், விலங்கு முதலியவற்றின்
வெளித்தோற்றம்: முழு உடல் (Human, Animal)
Figure, body, shape
அருவம் = உருவம் இல்லாதது that which has no form
4. *முக்காலம் உணர்ந்தவர் என்பது உங்கள் பதிலா?
இல்லை! அதற்கும் மேலானவர் அவர்.
காலமே அவர்தான்!
He is the creator and everyting in the space
is created by him.
In short he is the everything
The space is a part of creation, space cannot be
separate from its material cause for this universe.
So what is space?
Space is the Lord.
Time is also the Lord
5. மற்ற உதிரிக்கேள்விகளில் மூன்றில் இரண்டு
நீங்கள் பார்த்த திரைப்படத்தை வைத்துக்
கேட்டிருக்கின்றீர்கள். அதற்குரிய விளக்கங்களை
அப்படங்களுக்குத் திரைக்கதை வசனம் எழுதியவர்
களைக் கேட்பதுதான் உசிதமானது. அவர்களையே
கேளுங்கள். (எனக்காகவும் சேர்த்துக் கேளுங்கள். )
(* திருவிளையாடல்கள்: “மக்களை சோதிப்பது
மற்றும் சோதனைக்கு உள்ளாக்குவது இதில்எல்லாம்
சிறந்தவர் நீங்கள் தான்” என்று பரம சிவனைப்
பார்த்து படத்தில் கேட்பார் பார்வதி!
முக்காலத்தையும் அறிந்த சிவனுக்கு சோதனை
ஏன் தேவைப் படுகிறது? சந்தேகம் தானே
சோதனைகளின் தாய்! அப்படியானால்
அவருக்கு முக்கா(லு) லம் தெரியாதா முழுவதும்
தெரியாதா? இந்த லட்சனத்தில் “நல்லவங்களை
ஆண்டவன் சோதிப்பான் … ஆன கைவிட மாட்டான்
…என்று வெட்டிச் சவடால்கள் வேறு. நம்மை
மாதிரி வெங்காயங்களை சோதித்துதான் அறியும்
நிலைமை / கொடுமை ஆண்டவனுக்கு ஏன் ஏற்பட்டது?)
6.* அடித்துக் கொண்டு சாவார்கள் என்ற விசயம்
தெரிந்தே தான் இவ்வுலகைப் படைத்தாரா?
யார் சொன்னது மதங்களை அவர் படைத்தார் என்று?
Only one - That is God கடவுள் ஒருவர்தான் என்று
பதிவில் சொல்லியிருக்கிறேன். மீண்டும் படியுங்கள்
அறிஞர் அண்ணா அவர்கள் சொன்னதுபோல
"ஒன்றே குலம் - ஒருவனே தேவன்" என்பதுதான்
என்னுடைய சித்தாந்தம். அதைத்தான் பதிவிலும்
சொல்லியிருக்கிறேன். மீண்டும் ஒருமுறை
பதிவைப் படித்துப் பாருங்கள்.
மதங்களைப் பற்றிய உங்கடைய சந்தேகங்களுக்கு
அந்தந்த மதத்தைச் சேர்ந்தவர்களையே கேளுங்கள்.
மதங்களைப் பற்றிப் பேசும் உரிமையை
யாரும் எனக்குத் தரவில்லை.
அது என்னுடைய வேலையும் அல்ல!
7.* எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஒன்றை(!)
ஏன் நம்பச் சொல்கிறார்கள்? அதன் அவசியம்
என்ன! சிந்தனை செய் மனமே!
"எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஒன்றை" என்று
நீங்களே குறிப்பிட்டு என் வேலையைச் சற்று
எளிதாக்கி விட்டீர்கள்!
உங்களை யார் நம்பச் சொன்னது?
எதை நம்பச்சொன்னது?
உங்களை நம்பச்சொல்வதற்கு யாருக்கும்
அதிகாரமில்லை. அவசியமுமில்லை.
உங்களை நம்பவைக்க வேண்டிய
அவசியம் என்ன?
அதனால் கிடைக்கப் போகும்
பலன் என்ன?
நீங்கள் நீங்களாகவே இருங்கள்.
8* ஒரு மகாசக்தியா கடவுள்? தன் பக்தனையே
நம்பாத கடவுள் தன்னை சாதாரண மனிதர்கள்
நம்ப வேண்டும் என்று சொல்வது .. அவரது
மரியாதையைக் குறைக்கும் செயலல்லவா!?
கடவுள் எப்போது தன்னை நம்பும்படி சொன்னார்?
அல்லது கேட்டுக்கொண்டார்?
நீங்களும் நானும் நம்புவதால் அவருக்கு
என்ன ஆகப் போகிறது?
உங்களிடமும், என்னிடமும் மரியாதை குறைவதால்
அவருக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டு விடப்போகிறது?
ஆதாலால் இது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல
கவலையை விடுங்கள்!
9* எந்த சக்தியும் இல்லாத என்னிடம் ” எப்படி
சாத்தானை சமாளிப்பது” என்ற புத்தகத்தை
ஏன் கொடுக்கிறார்?! போராளியாயிருக்க
வேண்டியவர் … புத்தகாசிரியர் ஆன கொடுமை
ஏன் நிகழ்ந்தது! ????
கடவுளா உங்களிடம் அதைக் கொடுத்தார்?
இல்லை அனுப்பி வைத்தாரா?
சரியாகச் சொல்லுங்கள்.
அந்தப் புத்தகத்தை படித்துப் பார்க்காமல்
நான் எப்படிப் பதில் சொல்வது?
ஆகவே இந்தக் கேள்வியை சாய்ஸ்ஸில்
விட்டு விடுகிறேன். அது எந்த அச்சகத்தில்
அடிக்கப் பெற்றது என்று பாருங்கள்
அங்கே சென்றால் இந்தக் கேள்விக்குச் சரியான
விடை கிடைக்கலாம்!
10*இவை அனைத்தும் ஆசிரமங்கள் ஆசிரமங்களாக
நான் பயணித்த போது எனக்குள் ஏற்பட்ட கேள்விகள்.
தொடர்ந்து செல்லுங்கள்.நிச்சயம் ஒரு நாள்
தெரியவரும். அதுவும் ஒரு தேடல்தான்.
இன்றைய இளைஞரெல்லாம் டாஸ்மாக் பார்களிலும்,
ரெஸ்டாரென்ட்களிலும் தங்கள் பொழுதையும்
(நேரத்தையும்) பொருளையும் (பணத்தையும்) வீணாக்கும்
போது - நீங்கள்தான் ஆசிரமங்களில் பொழுதைக்
கழித்திருக்கின்றீர்கள்.
கேட்பதற்கு சந்தோசமாகவும், பெருமையாகவும்
இருக்கிறது. Jeep it up!
என் வகுப்பின் நல்மாணவன் விருது உங்களுக்குத்தான்.
(நல்லாசிரியர் என்பதுபோல)
திருமதி பிரதிபா பாட்டீல் அவர்களுக்குப் பரிந்துரை
செய்கிறேன்.
நன்றி, வணக்கத்துடன்,
வாத்தி (யார்)
------------------------------------------------------------
திரு.செல்லா அவர்களுக்கு முடிந்தவரை பதில்
சொல்லிவிட்டேன்.
வேறு இரண்டு கேள்விகள் பின்னூட்டத்தில்
வந்துள்ளன. கீழே கொடுத்துள்ளேன்
1.ஒரு அன்பர் கேட்டுள்ளார். இருபது ஆண்டு
களுக்கு முன்பு செத்துப்போன என்னுடைய
பாட்டியை உங்கள் கடவுள் எழுப்பித்தருவாரா?
(அதாவது மீட்டுத் தருவாரா?)
அப்படித் தந்தால் கடவுளை நம்பத் தயாராக உள்ளேன்
அவராது பரவாயில்லை. பாட்டிமேல் உள்ள
பாசத்தில் தெரியாமல் கேட்டிருக்கிறார் என்று
நினைத்துக் கொள்ளலாம்
அடுத்த கேள்வியைப் பாருங்கள்
2.உணர்வது பற்றி எழுதியிருக்கிறீர்கள்.கண்களால்
பார்க்காமல் அல்லது கைகளால் தொடாமல்
ஒன்றை எப்படி உணர்வது? உதாரணத்திற்கு
காதல் உணர்வு என்கிறார்களே அது காதலி
கிடைத்த பின்பு, அவளைத் தொட்டுத் தழுவிய
பிறகுதானே ஏற்படும். ஆகவே கடவுளையும்
நான் தொட்டுத் தழுவதற்கு ஏற்பாடு செய்யுங்கள்.
நான் கடவுளை நம்பத்தயார்!
இவர்கள் இருவருக்கும் என்ன பதில் சொல்வது
என்று என் சிற்றறிவிற்குத் தெரியவில்லை.
தெரிந்தவர்கள் சொல்லலாம்.
இணையத்தில் கட்டற்ற சுதந்திரம் உள்ளது
என்று அன்பர் ஒருவர் சென்ற வாரம் தன்னுடைய
பதிவில் குறிப்பிட்டிருந்தார்
இதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்
"இணையத்தில் கட்டற்ற கொடுமையும் உள்ளது!"
It is my turn now!
கேள்வி அன்பர் செல்லாவிற்கு - கடைசி வரியில்
குறிப்பிட்டுள்ளதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
மற்றவர்களும் பதில் சொல்லலாம்!
------------------------------------------------------------------
தேனினும் இனிய, மலரினும் மெல்லிய எனது
வகுப்புக் கண்மணிகள் அனைவருக்கும்,
வாத்தியாரின் காலை வணக்கங்கள்!
என் மதிப்பை அதிகம் பெற்றவறான நம் வகுப்பு
மாணவர் செல்லா அவர்கள், நேற்று நடத்திய
பாடத்தில் ஏற்பட்ட சந்தேகங்களைத் தீர்த்துக்
கொள்ளூம் முகமாகப் போஸ்டர் அடித்து
ஒட்டியிருக்கிறார். (அதாவது தனிப் பதிவு
போட்டிருக்கிறார்) அதை அவர் வகுப்பறையிலே
கேட்டிருக்கலாம். இருந்தாலும் பரவயில்லை!
பதில்களைக் கீழே கொடுத்துள்ளேன்.
சிவப்பு வண்ண எழுத்துக்கள் கேள்விகளாகும்
கருப்பு வண்ண எழுத்துக்கள் பதில்களாகும்
1. * கடவுள் உண்டா இல்லையா? ….
பதிவை மீண்டும் படிக்கவும். பதில் அதில்
உள்ளது! இருந்தாலும் என் வகுப்பு மாணவராகிய
உங்களுக்காக மீண்டும் ஒரு முறை சொல்கிறேன்.
கடவுள் இருக்கிறார். சர்வ நிச்சயமாக இருக்கிறார்
2. *கடவுள் என்றால் என்ன?
கடவுள் என்றால் எல்லாவற்றையும் கடந்தவர்
கடவுள் எனப்படுபவர் உலகம், உயிர் ஆகியவற்றின்
தோற்றத்துக்குக் காரணமாகக் கருதப்படும் மனித
ஆற்றலால் அறிய முடியாதபடி இருப்பதாகக்
கருதப்படும் மேலான சக்தி - God
கடந்தவர் என்றால் எல்லாநிலைகளையும் தாண்டிய
நிலையில் உள்ள மேலானவர் என்று பொருள்படும்
3.* அவர் எப்படி இருப்பார்?
உருவமும் அருவமும அற்றவர் கடவுள்
உருவம் = மனிதன், விலங்கு முதலியவற்றின்
வெளித்தோற்றம்: முழு உடல் (Human, Animal)
Figure, body, shape
அருவம் = உருவம் இல்லாதது that which has no form
4. *முக்காலம் உணர்ந்தவர் என்பது உங்கள் பதிலா?
இல்லை! அதற்கும் மேலானவர் அவர்.
காலமே அவர்தான்!
He is the creator and everyting in the space
is created by him.
In short he is the everything
The space is a part of creation, space cannot be
separate from its material cause for this universe.
So what is space?
Space is the Lord.
Time is also the Lord
5. மற்ற உதிரிக்கேள்விகளில் மூன்றில் இரண்டு
நீங்கள் பார்த்த திரைப்படத்தை வைத்துக்
கேட்டிருக்கின்றீர்கள். அதற்குரிய விளக்கங்களை
அப்படங்களுக்குத் திரைக்கதை வசனம் எழுதியவர்
களைக் கேட்பதுதான் உசிதமானது. அவர்களையே
கேளுங்கள். (எனக்காகவும் சேர்த்துக் கேளுங்கள். )
(* திருவிளையாடல்கள்: “மக்களை சோதிப்பது
மற்றும் சோதனைக்கு உள்ளாக்குவது இதில்எல்லாம்
சிறந்தவர் நீங்கள் தான்” என்று பரம சிவனைப்
பார்த்து படத்தில் கேட்பார் பார்வதி!
முக்காலத்தையும் அறிந்த சிவனுக்கு சோதனை
ஏன் தேவைப் படுகிறது? சந்தேகம் தானே
சோதனைகளின் தாய்! அப்படியானால்
அவருக்கு முக்கா(லு) லம் தெரியாதா முழுவதும்
தெரியாதா? இந்த லட்சனத்தில் “நல்லவங்களை
ஆண்டவன் சோதிப்பான் … ஆன கைவிட மாட்டான்
…என்று வெட்டிச் சவடால்கள் வேறு. நம்மை
மாதிரி வெங்காயங்களை சோதித்துதான் அறியும்
நிலைமை / கொடுமை ஆண்டவனுக்கு ஏன் ஏற்பட்டது?)
6.* அடித்துக் கொண்டு சாவார்கள் என்ற விசயம்
தெரிந்தே தான் இவ்வுலகைப் படைத்தாரா?
யார் சொன்னது மதங்களை அவர் படைத்தார் என்று?
Only one - That is God கடவுள் ஒருவர்தான் என்று
பதிவில் சொல்லியிருக்கிறேன். மீண்டும் படியுங்கள்
அறிஞர் அண்ணா அவர்கள் சொன்னதுபோல
"ஒன்றே குலம் - ஒருவனே தேவன்" என்பதுதான்
என்னுடைய சித்தாந்தம். அதைத்தான் பதிவிலும்
சொல்லியிருக்கிறேன். மீண்டும் ஒருமுறை
பதிவைப் படித்துப் பாருங்கள்.
மதங்களைப் பற்றிய உங்கடைய சந்தேகங்களுக்கு
அந்தந்த மதத்தைச் சேர்ந்தவர்களையே கேளுங்கள்.
மதங்களைப் பற்றிப் பேசும் உரிமையை
யாரும் எனக்குத் தரவில்லை.
அது என்னுடைய வேலையும் அல்ல!
7.* எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஒன்றை(!)
ஏன் நம்பச் சொல்கிறார்கள்? அதன் அவசியம்
என்ன! சிந்தனை செய் மனமே!
"எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஒன்றை" என்று
நீங்களே குறிப்பிட்டு என் வேலையைச் சற்று
எளிதாக்கி விட்டீர்கள்!
உங்களை யார் நம்பச் சொன்னது?
எதை நம்பச்சொன்னது?
உங்களை நம்பச்சொல்வதற்கு யாருக்கும்
அதிகாரமில்லை. அவசியமுமில்லை.
உங்களை நம்பவைக்க வேண்டிய
அவசியம் என்ன?
அதனால் கிடைக்கப் போகும்
பலன் என்ன?
நீங்கள் நீங்களாகவே இருங்கள்.
8* ஒரு மகாசக்தியா கடவுள்? தன் பக்தனையே
நம்பாத கடவுள் தன்னை சாதாரண மனிதர்கள்
நம்ப வேண்டும் என்று சொல்வது .. அவரது
மரியாதையைக் குறைக்கும் செயலல்லவா!?
கடவுள் எப்போது தன்னை நம்பும்படி சொன்னார்?
அல்லது கேட்டுக்கொண்டார்?
நீங்களும் நானும் நம்புவதால் அவருக்கு
என்ன ஆகப் போகிறது?
உங்களிடமும், என்னிடமும் மரியாதை குறைவதால்
அவருக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டு விடப்போகிறது?
ஆதாலால் இது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல
கவலையை விடுங்கள்!
9* எந்த சக்தியும் இல்லாத என்னிடம் ” எப்படி
சாத்தானை சமாளிப்பது” என்ற புத்தகத்தை
ஏன் கொடுக்கிறார்?! போராளியாயிருக்க
வேண்டியவர் … புத்தகாசிரியர் ஆன கொடுமை
ஏன் நிகழ்ந்தது! ????
கடவுளா உங்களிடம் அதைக் கொடுத்தார்?
இல்லை அனுப்பி வைத்தாரா?
சரியாகச் சொல்லுங்கள்.
அந்தப் புத்தகத்தை படித்துப் பார்க்காமல்
நான் எப்படிப் பதில் சொல்வது?
ஆகவே இந்தக் கேள்வியை சாய்ஸ்ஸில்
விட்டு விடுகிறேன். அது எந்த அச்சகத்தில்
அடிக்கப் பெற்றது என்று பாருங்கள்
அங்கே சென்றால் இந்தக் கேள்விக்குச் சரியான
விடை கிடைக்கலாம்!
10*இவை அனைத்தும் ஆசிரமங்கள் ஆசிரமங்களாக
நான் பயணித்த போது எனக்குள் ஏற்பட்ட கேள்விகள்.
தொடர்ந்து செல்லுங்கள்.நிச்சயம் ஒரு நாள்
தெரியவரும். அதுவும் ஒரு தேடல்தான்.
இன்றைய இளைஞரெல்லாம் டாஸ்மாக் பார்களிலும்,
ரெஸ்டாரென்ட்களிலும் தங்கள் பொழுதையும்
(நேரத்தையும்) பொருளையும் (பணத்தையும்) வீணாக்கும்
போது - நீங்கள்தான் ஆசிரமங்களில் பொழுதைக்
கழித்திருக்கின்றீர்கள்.
கேட்பதற்கு சந்தோசமாகவும், பெருமையாகவும்
இருக்கிறது. Jeep it up!
என் வகுப்பின் நல்மாணவன் விருது உங்களுக்குத்தான்.
(நல்லாசிரியர் என்பதுபோல)
திருமதி பிரதிபா பாட்டீல் அவர்களுக்குப் பரிந்துரை
செய்கிறேன்.
நன்றி, வணக்கத்துடன்,
வாத்தி (யார்)
------------------------------------------------------------
திரு.செல்லா அவர்களுக்கு முடிந்தவரை பதில்
சொல்லிவிட்டேன்.
வேறு இரண்டு கேள்விகள் பின்னூட்டத்தில்
வந்துள்ளன. கீழே கொடுத்துள்ளேன்
1.ஒரு அன்பர் கேட்டுள்ளார். இருபது ஆண்டு
களுக்கு முன்பு செத்துப்போன என்னுடைய
பாட்டியை உங்கள் கடவுள் எழுப்பித்தருவாரா?
(அதாவது மீட்டுத் தருவாரா?)
அப்படித் தந்தால் கடவுளை நம்பத் தயாராக உள்ளேன்
அவராது பரவாயில்லை. பாட்டிமேல் உள்ள
பாசத்தில் தெரியாமல் கேட்டிருக்கிறார் என்று
நினைத்துக் கொள்ளலாம்
அடுத்த கேள்வியைப் பாருங்கள்
2.உணர்வது பற்றி எழுதியிருக்கிறீர்கள்.கண்களால்
பார்க்காமல் அல்லது கைகளால் தொடாமல்
ஒன்றை எப்படி உணர்வது? உதாரணத்திற்கு
காதல் உணர்வு என்கிறார்களே அது காதலி
கிடைத்த பின்பு, அவளைத் தொட்டுத் தழுவிய
பிறகுதானே ஏற்படும். ஆகவே கடவுளையும்
நான் தொட்டுத் தழுவதற்கு ஏற்பாடு செய்யுங்கள்.
நான் கடவுளை நம்பத்தயார்!
இவர்கள் இருவருக்கும் என்ன பதில் சொல்வது
என்று என் சிற்றறிவிற்குத் தெரியவில்லை.
தெரிந்தவர்கள் சொல்லலாம்.
இணையத்தில் கட்டற்ற சுதந்திரம் உள்ளது
என்று அன்பர் ஒருவர் சென்ற வாரம் தன்னுடைய
பதிவில் குறிப்பிட்டிருந்தார்
இதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்
"இணையத்தில் கட்டற்ற கொடுமையும் உள்ளது!"
It is my turn now!
கேள்வி அன்பர் செல்லாவிற்கு - கடைசி வரியில்
குறிப்பிட்டுள்ளதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
மற்றவர்களும் பதில் சொல்லலாம்!
------------------------------------------------------------------
Subscribe to:
Posts (Atom)
