![]() |
பூமிக்கு வெளிச்சமெல்லாம்....! |
பேராசிரியர் அறிவொளி அவர்கள் மேடைகளில் பேசும் போது உண்மைகளில் பல விதங்கள் உள்ளது என்பார்.
தெரிந்த உண்மை, தெரியாத உண்மை, பாதி உண்மை, முழு உண்மை என்று உண்மைகளை வகைப்படுத்துவார்.
உலகில் மூன்று பங்கு நீர் உள்ளது என்பது பாதி உண்மை. நீர் எங்கிருந்தாலும் அதற்கடியில் பூமி உள்ளது என்பதுதான் முழு உண்மை. வலிகளில் அதீதமான வலி பிரசவ வலி என்பது நம்மில் பாதிப்பேர்களுக்கு (அதாவது ஆண்களுக்கு) தெரியாத உண்மை. நீரின்றி அமையாது இவ்வுலகு என்பது தெரிந்த உண்மை.
அதுபோல Old is Gold என்பது உண்மையா? என்றால் அது பாதி உண்மை. பழையது தங்கம் என்பதுபோல புதியதிலும் தங்கம் உள்ளது. Sometime, new things are also gold
எத்தனை நாட்களுக்குத்தான் பழையதையே தங்கம் என்று சொல்லிக்கொண்டிருப்பீர்கள்?
50 வயதிற்கு மேற்பட்டவர்களைக் கேட்டால் பழைய பாடல்களைத்தான் தங்கம் என்பார்கள்
“சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக் கண்டேனே
செவ்வானம் கடலினிலே கலந்திடக் கண்டேனே”
என்பதுபோன்ற பாடல்களுக்கு இப்போது உள்ள பாடல்கள் இணையில்லை என்பார்கள்.
எம்.கே. தியாகராஜ பாகவதர் பாடிய பாடலான “தீன கருணாகரனே நடராஜா.....நீலகண்டனே!” என்ற பாடலைக் குறிப்பிட்டால் முகத்தைச் சுளிப்பார்கள். பாடல் அக்காலத்தில் பிரபலமானது. அனைவராலும் முணுமுணுக்கப்பெற்ற பாடல். படம். திருநீலகண்டர், ஆண்டு 1939 பாடலாக்கம். பாபநாசம் சிவன். எங்கள் அப்பா காலத்துப் பாடல்!
அதனால் காலத்தை வைத்துப் பாடல்களை ஒதுக்காதீர்கள். இன்றும் சில நல்ல பாடல்கள் வருகின்றன. அதையும் ரசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
அன்று மூன்று அல்லது நான்கு இசைக்கருவிகளை வைத்துப் பாடலை வடிவமைத்தார்கள். பிறகு பத்திற்கும் மேற்பட்ட இசைக்கருவிகளும், 50ற்கும் மேற்பட்ட வாத்தியக்காரர்களும் சேர பாடல்களைக் கேட்பதற்கு ரம்மியமாக அமைத்தார்கள். இன்று பல மின்னணு இசைக்கருவிகள் சேர்ந்து கொண்டுள்ளது. இன்று பல பாடல்கள் அதன் இசையால் மனதைக் கிறங்க வைக்கின்றன!
உங்களுக்காக இந்தப் பகுதியில் இன்று ஒரு புதுப் பாடலைப் பதிவு செய்துள்ளேன். வாரம் ஒரு புதுப் பாடலைத் தேடிப்பிடித்துத் தரவுள்ளேன். கேட்டு மகிழுங்கள். பாடல் வரிகளையும் படித்து மகிழுங்கள்
அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++++
நெஞ்சைத் தொட்ட புதுப் பாடல் - பகுதி ஒன்று
பூமிக்கு வெளிச்சமெல்லாம்......!
----------------------------------------------
பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்
பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்
கடலுக்கு நுரைகளெல்லாம் நீ பல் துலக்குவதால்
காலையில் அடித்தமழை நீ என்னை தழுவியதால்
பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்
பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்
கடலுக்கு நுரைகளெல்லாம் நீ பல் துலக்குவதால்
காலையில் அடித்தமழை நீ என்னை தழுவியதால்
நீ விழியால் விழியை பறித்தாய்
உன் உயிரினை எனக்குள்ளே விதைத்தாய்
உன் அழகால் எனை நீ அடித்தாய்
அய்யோ அதிசய உலகத்தில் அடைத்தாய்
நீ இதமாய் இதயம் கடித்தாய்
என் இதழ் சொட்டும் அருவியில் குளித்தாய்
நீ மதுவாய் எனையே குடித்தாய்
இந்த உலகத்தை உடைத்திட துடித்தாய்
காலம் வந்தபிறகு ஒட்டிக்கொள்ளும் சிறகு
வாழ ஒரு பூமி இனி தேவை இல்லை
ஒப்புக்கொண்ட உயிர்கள் கட்டிக்கொண்டு பறந்தால்
எட்டி நிக்கும் வானம் ஒன்றும் தூரமில்லை
பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்
பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்
நீ மெதுவாய் நடந்தால் கடந்தால்
என் உணர்ச்சிகள் தீப்பிடித்து எரியும்
ஏய் நீ துளியாய் எனக்குள் விழுந்தால்
என் உயிர் பனிக்கட்டியாக உறையும்
நீ இயல்பாய் அழைத்தால் சிரித்தால்
என் உள்ளம் வந்து மண்டியிட்டு தவளும்
நீ நெருப்பாய் முறைத்தால் தகித்தால்
என் நெஞ்சிக்குள்ளே கப்பல் ஒன்று கவிழும்
கண்களில் மின்மினி புன்னகை தீப்பொறி
மின்னலில் சங்கதி புரிகின்றதே
தொட்டவுடன் உருகும் ஒட்டிக்கொண்டு பழகும்
புத்தம் புது மிருகம் தெரிகின்றதே
பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்
பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்
கடலுக்கு நுரைகளெல்லாம் நீ பல் துலக்குவதால்
காலையில் அடித்தமழை நீ என்னை தழுவியதால்
------------------------------------------------------------------------------------------------
பூமிக்கு வெளிச்சமெல்லாம் சூரியனால்தான். ஆனால் காதல் வயப்பட்டவர்கள் உன்னால் என்று பிதற்றிக்கொள்வார்கள். காதல் மயக்கம் உச்ச நிலை அடையும்போது என்ன எழுதுகிறோம், என்ன சொல்கிறோம், என்ன செய்கிறோம் என்பது தெரியாது. அதேபோல் காதலில் சற்று சருக்கல் ஏற்பட்டாலும் பிதற்றுவார்கள். எங்கே மனிதன் இல்லையோ அங்கே எனக்கோர் இடம் வேண்டும் என்பார்கள். எனது கைகள் தீண்டும்போது மலரும் சுடுகின்றது என்பார்கள். மலர் எப்படிச் சுடும்? ஆனால் தன் நிலையை வெளிப்படுத்த அதைவிடச் சிறந்த வரி கிடையாது. நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை என்பார்கள்.
நாம் பார்க்காத காதலா? கவியரசர் கண்ணதாசன் எழுதாத காதற்பாடல்களா?
ஆகவே பூமிக்கு வெளிச்சமெல்லாம் அவன் கண் திறப்பதினால்தான் என்பதை எந்தக் கேள்வியும் கேட்காமல் ஏற்றுக்கொள்வோம்!
நாம் பார்க்காத காதலா? கவியரசர் கண்ணதாசன் எழுதாத காதற்பாடல்களா?
ஆகவே பூமிக்கு வெளிச்சமெல்லாம் அவன் கண் திறப்பதினால்தான் என்பதை எந்தக் கேள்வியும் கேட்காமல் ஏற்றுக்கொள்வோம்!
நன்றி: இப் பாடலை வலையேற்றிய முகம் தெரியாத அந்த நண்பருக்கு நம் நன்றி உரித்தாகுக! (Our sincere thanks to quality clipz.com)
பாடலாக்கம்: கவிஞர் வைரமுத்து
பாடியவர்கள்: காயத்ரி, ராகுல் நம்பியார்
நடிப்பு: ஜீவா & சந்தியா
இசையமைத்தவர்: விஜய் ஆண்ட்டனி
இயக்குனர்: சசி
படம்: டிஷ்யூம் (2006)
பாடலில் நெஞ்சைத் தொட்ட வரிகள் சிகப்பு நிற எழுத்துருவில் கொடுக்கப்பெற்றுள்ளன!
காலம் வந்தபிறகு ஒட்டிக்கொள்ளும் சிறகு
வாழ ஒரு பூமி இனி தேவை இல்லை
ஒப்புக்கொண்ட உயிர்கள் கட்டிக்கொண்டு பறந்தால்
எட்டி நிக்கும் வானம் ஒன்றும் தூரமில்லை
என்ற வரிகள் பாடலின் முத்தாய்ப்பான வரிகள்
வாழ்க வளமுடன்!