மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

6.9.20

Astrology: Quiz: புதிர்: 4-9-2020 தேதியிட்ட புதிருக்கான விடை!


Astrology: Quiz: புதிர்: 4-9-2020 தேதியிட்ட புதிருக்கான விடை!

கேட்டிருந்த கேள்வி இதுதான். ஒரு அன்பரின் ஜாதகத்தைக் கொடுத்து, ஜாதகர் திருவோண நட்சத்திம், விருச்சிக லக்கினக்காரர். எந்த வேலையும் நீடித்து நிலைக்கவில்லை. பிடிக்கிறதோ அல்லது பிடிக்கவில்லையோ அடுத்தடுத்து வேறு வேலையில் சேர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுக்கொண்டே இருந்தது. அதற்கு என்ன காரணம்?  ஜாதய்கத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள். ” என்று கேட்டிருந்தேன்.

பதில்: ஜாதகருக்கு காலசர்ப்ப தோஷம். அத்துடன் 14 வயதிலிருந்து 32 வயதுவரை ராகு மகா திசை இரண்டுமே நன்மையான அமைப்பு அல்ல! அந்த தசாநாதன் ராகு எட்டில். எட்டாம் இடத்தில் அமர்ந்திருக்கும் நாதனின் திசை அதுவும் கேடானது. எட்டாம் இடத்து ராகு புதனின் பலனைக் கொடுக்கும், புதன் விருச்சிக லக்கினத்திற்கு தீயவன். அத்துடன் புதனின் பார்வை பத்தாம் இடத்தின் மேல். அதுவும் கேடானது. ஆகவே 32 வயதுவரை ஜாதகரை இவைகள் அல்லாட வைத்துவிட்டன. பல வேலைகளில் ஓட விட்டு வேடிக்கை பாரத்தன. அவற்றை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன், 

இந்தப் புதிரில் 9 அன்பர்கள் கலந்து கொண்டு தங்கள் கணிப்பை வெளியிட்டு உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். 

அடுத்த வாரம் 11-09-2020 வெள்ளிக்கிழமை  அன்று வேறு ஒரு புதிருடன் மீண்டும் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------

1
Blogger kmr.krishnan said...
ஜாதகர் 10 மார்ச் 1964 அன்று இரவு 11.31 க்குப் பிறந்தவர்.பிறந்தைடம் சென்னை என்று எடுத்துக்கொண்டேன்.
வேலைக்குரிய பத்தாம் இடதிற்குண்டான சூரியன் கும்பத்தில் பகைவரான‌ சனிபகவானின் இடத்தில் அமர்ந்ததும்,
சனி பகவானும் தன் வீட்டில் சூரியனுடன் இருந்ததும், 8ம் இடத்திர்கான புதனும் 6ம் இடத்திற்கான செவ்வாயும் சூரியனுடன் சேர்ந்து அமர்ந்ததும் இந்த நான்கு பேரும் 10 இடத்தினை நேர் பார்வை பார்ப்பதாலும் ஜாதகர் அடிக்கடி வேலை மாற்றம் செய்ய வேண்டி வந்தது. சுக்கிரன் 6ல் அமர்ந்ததால் கொந்தளிப்பான வாழ்க்கை.
Friday, September 04, 2020 7:19:00 AM 
--------------------------------------------
2
Blogger K. Ravi said...
ஐயா
ஜாதகர் 1964 இல் பிறந்துள்ளார்
லக்கினாதிபதி செவ்வாய், 10 ஆம் வீட்டு அதிபதி சூரியன், எட்டாம் வீட்டு அதிபதி புதன் ஆகியோர் நான்காம் வீட்டதிபதி சனியுடன் சேர்க்கை. மேலும் நவாம்சத்தில் சனி நீச்சம். மேலும் இந்த நன்கு கிரகங்களும், பத்தாம் வீட்டை நேரடி பார்வையில் வைத்துள்ளது. சனியின் ஏழாம் பார்வை நன்மை தராது. திசைகளும் 31 வயது வரை கைகொடுக்காது. இந்த ஜாதகத்தில் குரு 5 ஆம் வீட்டில் வர்கோத்தமம் பெற்று லக்கினத்தை 9 ஆம் பார்வையில் வைத்துள்ளார். இது ஆறுதல் தரும் அமைப்பு. எனவே குரு திசையில் ஜாதகர் நிலையான இடத்திற்கு வந்திருப்பார்.
கே. ரவி
Friday, September 04, 2020 12:20:00 PM 
-------------------------------------------
3
Blogger csubramoniam said...
ஐயா கேள்விக்கான பதில்
1 .லக்கினாதிபதி செவ்வாய் கேந்திரத்தில் கர்மகாரகன் சனி யுடன்
2 .பத்தாம் அதிபதி சூரியன் தன் வீட்டை (பத்தாம் வீட்டை )நேரடி பார்வையில் வைத்துள்ளார்
3 .பதினொன்றில் மாந்தி குருவின் பார்வையுடன் அரசவாழ்க்கை
4 .ஒன்பதாம் அதிபதி சந்திரன் தன் வீட்டை நேரடி பார்வையில் வைத்திருந்தாலும் பாபகர்தாரி யோகத்தில்
5 .சூரியனும் சனியும் ஆறு மற்றும் எட்டாம் அதிபதி செவ்வாய் ,புதனுடன்
6.பத்தாம் அதிபதி சூரியன் சனியின் வீட்டில் அமர்ந்ததால் அடிக்கடி வேலையில் மாற்றம்
நன்றி
தங்களின் பதிலை ஆவலுடன்
Friday, September 04, 2020 1:07:00 PM
------------------------------------------------
4
Blogger Ramanathan said...
Sun and Saturn combination aspecting 10th house could have caused instability
Friday, September 04, 2020 3:24:00 PM 
---------------------------------------------
5
Blogger P. CHANDRASEKARA AZAD said...
வணக்கம்
தாங்கள் கேட்டு இருந்த புதிருக்கான பதில்
விருச்சிக லக்கின திருவோண நக்ஷத்திர மகர ராசி ஜாதகர் தொடர்ந்து வேலையில் மாற்றம் வர காரணங்கள்
வேலை நிலையாக அமைவதற்கு ஆறாம் இடம், பத்தாம் இடம், லக்கினம் மற்றும் கர்மா காரகன் சனியின் நிலையை பார்க்க வேண்டும்.
இவரின் லக்கின அதிபதி செவ்வாய் மற்றும் கர்மா காரகன் சனியை சூரியன் நான்கில் அமர்ந்து அஸ்தங்கதம் செய்து உள்ளார். சூரியன் இவருக்கு பத்தாம் அதிபதி யாக இருந்தாலும் சனி மற்றும் செவ்வாய் கூட்டணி இவரையும் நிலையாக அமர செய்ய வில்லை.
மேலும் இவரின் ஆறாம் அதிபதியும் லக்கின அதிபதியும் செவ்வாய் ஆவர்.. இவரின் ஆறாம் அதிபதி செவ்வாய் யையும் பத்தாம் அதிபதி சூரியனையும், கர்மா காரகன் சனியையும் , கேது தனது மூன்றாம் பார்வையால் பார்த்து...வேளையில் நிலையில்லா பட்டற்ற தன்மை யை ஏற்படுத்துகிறார்
மேலும் ஆறாம் இடத்தில் பனிரெண்டரம் வீடு அதிபதி சுக்கிரன் செவ்வாயின் வீட்டில் அமர்ந்து தொடர்ந்து ஒரே நிலையில் அல்லது ஒரே நிறுவனத்தில் வேலை செய்யும் பாக்கியத்தை கெடுத்தார்.
நன்றி
இப்படிக்கு
ப. சந்திரசேகர ஆசாத்
கைபேசி : 8879885399
Friday, September 04, 2020 3:25:00 PM
-----------------------------------------------------
6
Blogger க. தமிழ்ச் செல்வன், மாச்சம்பட்டு, வேலுர் மாவட்டம். (tamilselvanabr@gmail.com) said...
Quiz: புதிர்: ஜாதகருக்கு எந்த வேலையிலும் நிலையாமை ஏன்?
பதில்: ஐயா, வணக்கம், ஆறாம் அதிபதி செவ்வாய், எட்டாம் அதிபதி புதன் மற்றும் மூன்றாம் அதிபதி ச்னியின் கூட்டனியுடன் (ஏழாம் பார்வை) 10 ஆம் வீடு பார்வை பெற்று கெட்டுள்ளது. நவாம்சத்தில் 10 ஆம் வீட்டில் கேது அமர்ந்து நிரந்தர வேலை அமையாமல் கெடுத்துள்ளது.
Friday, September 04, 2020 5:01:00 PM
------------------------------------------------------
7
Blogger gkc said...
Dear sir
லக்ன அதிபதி செவ்வாய் சனி உடன் சேர்க்கை. லக்ன அதிபதி வலு குறைவு. ஆனால் லக்னத்திற்கு ஆட்சி பெற்ற குரு பார்வை. லக்ன யோகர் குரு
13 வயசு முதல் நடந்த ராகு தசா நல்லது செய்து இருக்காது. ராகு நின்ற வீடு விருச்சிக லக்ன திற்கு ஆகாத புதன் வீடு.ராகு சுய சாரம் வேறு.
4 இல் அமர்த்த சனி 6 பாவத்தை பார்த்து கெடுத்தது.அதே சனி கர்ம ஸ்தானத்தையும் பார்த்து கெடுதார்.
அதனால் வேலையில் நிரந்தரம் இல்லை. ஆனால் கும்பத்தை பார்த்த சூரியன் 6 இல் நின்ற சுக்ரன் அடுத்தடுத்து வேலை கிடைக்க உதவி புரிந்தனர். ராகு தசா வரை இந்த பிரச்சினை இருந்து இருக்கும். அடுத்த வந்த குரு தசா யோக பலன்கள் செய்து இருக்கும்
Friday, September 04, 2020 11:24:00 PM 
----------------------------------------------------------
8
Blogger Ram Venkat said...
வணக்கம்.
விருச்சிக இலக்கினம், மகர ராசி ஜாதகர்.. காலசர்ப்ப தோச ஜாதகம்.
அவருக்கு எந்த வேலையும் நீடித்து நிலைக்கவில்லை. ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்?
விருச்சிக லக்கினத்தை பொறுத்த வரை செவ்வாய் இலக்கினாதிபதியும் 6ம் அதிபதியுமாகிறார்.
1) இலக்கினாதிபதி செவ்வாய் 4மிடமான கும்ப ராசியில் சூரியனுடன் சேர்ந்து அஸ்தங்கமடைந்து வலுவிழந்துள்ளார்.
2) பத்தாம் அதிபதி சூரியன், 4ல் மகரத்தில் அமர்ந்து கர்மகாரகன் சனி,செவ்வாய் மற்றும் அஷ்டமாதிபதி புதன் கிரகங்களின் கூட்டணியில் கிரக யுத்ததிலுள்ளார். 10மிடமும் இவர்களின் நேரடிப் பார்வையில் வலுவிழந்துள்ளது.
3) தசாம்ச சக்கிரத்தில் 10ம் அதிபதி சூரியன் இலக்கினத்திற்கு 12ல் மறைந்து இராகு கூட்டணியில் கேதுவின் பார்வையில் கெட்டுள்ளார்.
4) தசாம்சத்தில், லக்கினத்திற்கு 8ஆம் இடத்தைக் கொண்டு ஒருவர், அவர் தொழிலில் / வேலையில் ஏற்படும் கஷ்டங்களைப் பற்றி அறிய முடியும் . இந்த இடம் நீண்ட நாள் வேலை இழப்பைப் பற்றியும் தெரியப்படுத்தும். இங்கு, 8ம் அதிபதி புதனும் தசாம்ச லக்கினத்திற்கு 12ல் மறைந்தது மற்றும் ராகுவின் கூட்டணியில் கேதுவின் பார்வையிலுள்ளது.
மேற்கண்ட காரணங்களால், ஜாதகரின் தொழில் நிலையாமை மற்றும் அடுத்தடுத்து வேறு வேலையில் சேர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுக்கொண்டே இருந்தது.
Saturday, September 05, 2020 2:51:00 PM
-----------------------------------------------
9
Blogger RAMVIDVISHAL said...
DOB 10/03/1964 11:35 pm/ Chennai
This is due to 10th house owner sun conjunction with 3rd/4th house owner Saturn losing confidence /family disturbance/father mother conflict
lagnathpathy and 6th house Mars also conjunction with sun results to misbehaviour enemy formation In work places that force him to move the job consistently.
Bakyastanathipathy moon in 3rd place.
Rahu dasa up to 32 years not allowed the person to settle himself. He may not possess good education/marriage life/ speech/ savings since Kethu in second house.
However Guru in 5th house (own house and vargothamam) looking at 9th house/11th house and lagna may help him to shine his career during its dasa onwards.
Saturday, September 05, 2020 9:42:00 PM
====================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com