மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

19.9.20

Astrology: Quiz: புதிர்: 11-9-2020 தேதியிட்ட புதிருக்கான விடை!


Astrology: Quiz: புதிர்: 11-9-2020 தேதியிட்ட புதிருக்கான விடை!

கேட்டிருந்த கேள்வி இதுதான். ஒரு அன்பரின் ஜாதகத்தைக் கொடுத்து, ஜாதகர் திருவோண நட்சத்திம், கடக லக்கினக்காரர். எந்த வேலைக்குப் படிக்கலாம், எந்த வேலைக்குப் போகலாம் என்று ஜோதிடர்களைக் கேட்டபோது, அவருக்கு நீதித்துறை ஏற்றம் மிகுந்ததாக சிறப்பாக இருக்கும் என்று கூறிவிட்டார்கள். அவரும் அதன்படியே செய்து சிறப்பாக தனது தொழிலைச் செய்தார்.  அதற்கு என்ன காரணம்?  ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!!! ” என்று கேட்டிருந்தேன்.

பதில்: ஜாதருக்கு 28வது வயதில் குரு மகா திசை துவங்கியது. குரு பகவான் ஒன்பதாம் வீட்டில் - தன் சொந்த வீட்டில் இருக்கிறார்.அவருக்கு 10ன் அதிபதி செவ்வாயின் பார்வையும் சிறப்பாக அமைந்து, வழக்குரைஞராக துவங்கிய ஜாதகரின் வாழ்க்கையை நீதியரசர் (ஜட்ஜ்) பதவியில் கொண்டுபோய் குரு பகவான் அமர வைத்தார். அவற்றை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன், 

இந்தப் புதிரில் 10 அன்பர்கள் கலந்து கொண்டு தங்கள் கணிப்பை வெளியிட்டு உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். 

அடுத்த வாரம் 25-09-2020 வெள்ளிக்கிழமை  அன்று வேறு ஒரு புதிருடன் மீண்டும் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
1
venkatesh r
19:09 (2 minutes ago)
to me
புதிருக்கான விடை:
வணக்கம்.
கடக இலக்கினம், மகர ராசி ஜாதகர்.
ஜாதகருக்கு நீதித்துறைதான் சிறப்பானது என்று சொன்னது ஏன்?
ஒருவர் வழக்கறிஞராக வேண்டும் வேண்டுமெனில், அவரது ஜாதகத்தில் சட்டத்துறைக்கு காரகனான சனி முதன்மை வலுப் பெற்று, நீதித்துறைக்கு காரக கிரகமான குருவின் தொடர்பு கொண்டிருக்க வேண்டும். சுபத்துவம் பெற்ற சனி பொய்யை தொழிலாக செய்ய வைப்பார்.
1) சட்டத்துறைக்கு காரககிரகமான சனி ஏழில் அமர்ந்து இலக்கினாதிபதி சந்திரனின் கூட்டணியிலுள்ளார்.
2) நீதித்துறைக்கு காரக கிரகமான குரு 9மிடமான மீன ராசியில் வலுவாக (சுய பரல் 7) உள்ளார்.
3) யோகாதிபதியும், கர்மாதிபதியுமான செவ்வாய் 2ல் சிம்ம ராசியில் அமர்ந்து குருவை தன் 8ம் பார்வையில் வைத்துள்ளார்.
மேற்கண்ட காரணங்களால், ஜாதகர் எந்த வேலைக்குப் படிக்கலாம், எந்த வேலைக்குப் போகலாம் என்று ஜோதிடர்களைக் கேட்டபோது, அவருக்கு நீதித்துறை ஏற்றம் மிகுந்ததாக சிறப்பாக இருக்கும் என்று கூறிவிட்டார்கள். அவரும் அதன்படியே செய்து சிறப்பாக தனது தொழிலைச் செய்தார்.
--------------------------------------------------------------------
2
Jeeva nantham
Thu, 17 Sep, 16:08 (1 day ago)
to me
Dear Sir,
ஜாதகருக்கு நீதித்துறைதான் சிறப்பானது என்று சொன்னது ஏன்? 
1. The given horoscope person's lagna lord moon is in 7th along with 7th lord saturn.  
2. 9th lord jupiter is in 9th place. own place. 
3. Saturn aspects 9th place as 3rd aspect. Also saturn in his own place.
4. 10 th lord mars in 2nd. Mars is aspecting 9th place.
Since karmakarakan, 10th lord, 9th lord is having connection, the person got the work as judge. 
Saturn will give very good judgement.
Thanking you sir,
Yours sincerely,
C. Jeevanantham.
----------------------------------------------------------
3
Lokeswaran S
Thu, 17 Sep, 02:24 (1 day ago)
to me
Dear Sir
PFA
Astrology: Quiz: புதிர்: ஜாதகருக்கு நீதித்துறைதான் சிறப்பானது என்று சொன்னது ஏன்?
DOB: 09/07/1963, 08.10 AM, Chennai
கடக லக்னம், மகர ராசி, ராசிக்கு  2 ஆம் அதிபதி (தனம், வாக்கு) பொய் சொல்ல வைக்கும் கிரகமான சனியாகி, அவர் லக்கினத்திற்கு 10 ஆம் அதிபதியான 2 இல் அமர்ந்த செவ்வாய் சாரம் பெற்று, ராசியில் பௌர்ணமி சந்திரனுடன் 12 டிகிருக்குள் இணைந்து சுபத்துவமாகி மூன்றாம் பார்வையால் ஆட்சி பெற்ற குருவையும், ராசிக்கு 10 ஆம் இடத்தையும் பார்த்து, உரிய வயதில் (28 முதல் 63 வரை) தொடர்ந்து நீதித்துறை யை குறிக்கும் குரு, சனி தசை நடந்ததால் ஜாதகர் நீதித்துறையில் பணியாற்றினார்.
ராசிக்கும் லக்கினத்திற்கும் 2,6,10 ஆம் அதிபதிகளும் பாவங்களும்  வழக்கறிஞர் தொழிலைக் குறிக்கும் குரு, சனி தொடர்புபெற்று, பௌர்ணமி சந்திரன், ஆட்சி குரு பார்வை யை லக்கினமும், லக்கினாதிபதியும் பெற்றதால், சட்டத்துறையில் உயர்நிலையான நீதிபதியாக பணியாற்றியிருப்பர்.
------------------------------------------------------------------
4
Ravi K
Tue, 15 Sep, 16:26 (3 days ago)
to me
ஐயா
தொழில் ஸ்தானமாகிய 10 ஆம் அதிபதி செவ்வாய் வாக்கு  ஸ்தானமாகிய 2ஆம் வீட்டில். நல்ல பேச்சுத்திறனை கொடுக்கக்கூடியது.
எனவே நீதித்துறை அல்லது விற்பனைத்த்துறை அல்லது வ்யாபாரத்துறையில் பரிமளிக்க வாய்ப்புள்ளது, சுக்கிரனும் புதனும் விரயத்த்தில் உள்ளதால் வியாபாரம் சிக்கல். எனவே நீதித்துறை பரிந்துரைக்கலாம்
கே. ரவி
M:9840601278
------------------------------------------------------
5
Chandrasekara Azad Palaniappan
Tue, 15 Sep, 15:46 (3 days ago)
to SP.VR.SUBBIAH, me
Dear Sir
KIndly find the Reason:
கடக லக்கின,  திருவோண நக்ஷத்திர,  மகர ராசி ஜாதகரின் வேலை அல்லது தொழில் பற்றிய நிலை அறிய , லக்கின அதிபதி , ஆறாம் அதிபதி மற்றும் பத்தாம் அதிபதி நிலையை பார்க்க வேண்டும் 
ஜாதகரின் லக்கின அதிபதி சந்திரன் மற்றும் ராசி அதிபதி சனி இருவரும் லக்கினத்தை தன் பார்வையால் சிறப்புற செய்கிறார்கள் .... மேலும் ஆறாம் அதிபதி குருவும் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்து லக்கினத்தை தனது ஐந்தாம் பார்வையால் சிறப்படைய செய்கிறார்கள் 
ராசி அதிபதி சனியும், ஆறாம் அதிபதி குருவும் நீதி துறையை தன்வசம் கொண்டு உள்ள இரண்டு கிரகங்களாகும். இந்த நீதி துறை சார்ந்த இரு கிரகங்களும் ஜாதகருக்கு , ராசி அதிபதியாகவும் , ஆறாம் வீடு அதிபதியாகவும் அமைந்து லக்கினத்தை பார்ப்பதால் நீதி துறையில் சிறப்பினை அடைய செய்தது. 
மேலும் ஆறில் அமர்ந்து ஞானகாரகன்  கேதுவும்,  பத்தாம் அதிபதி செவ்வாயும் அரசு மூலமாக சேவகம் செய்ய செய்தது. மேலும் ஆறாம் இடத்தில் அமர்ந்த கேதுவின் மேல் ராஜ கிரகமான சூரியனின் நேரடி பார்வையும், வித்யா காரகன் புதனின் பார்வையும் ஜாதகரை நீதி துறையில் சிறக்க செய்தது. 
இப்படிக்கு 
ப. சந்திரசேகர ஆசாத்
கைபேசி : 8879885399 
--------------------------------------------------------------
6
csubramoniam
Tue, 15 Sep, 14:03 (3 days ago)
to me
ஐயா கேள்விக்கான பதில்
1 .லக்கினாதிபதி சந்திரன் மற்றும் ஏழாம் அதிபதி சனியின் நேரடி பார்வையில் லக்கினம்
2.பத்தாம் அதிபதி செவ்வாய் இரண்டில் அமர்ந்து ஒன்பதாம் அதிபதி குருவை பார்க்கிறார் ,குரு நீதி துறைக்கு அதிபதி
3 .மேலும் குருவின் பார்வை லக்னத்தின் மீது
3 .ஆகவே ஜாதகருக்கு நீதி துறை சிறப்பானது
நன்றி
தங்களின் பதிலை ஆவலுடன் 
------------------------------------------------------
7
Ramanathan Swaminathan
Sat, 12 Sep, 22:41 (6 days ago)
to me 
Astrology: Quiz: புதிர்: ஜாதகருக்கு நீதித்துறைதான் சிறப்பானது என்று சொன்னது ஏன்?
DOB 9/7/1963 approx 7:54 AM
The following may be strong reasons
1. 10th house owner Mars in the 2nd House of Sun (ability to speak and earn with speech)- Mars is Trikonathipathi as well as kendradhipathi (5th /10th ) for this Horoscope.
2. Saturn (Best judge) along with Lagnathipathi looking at Lagna makes the person as neutral / balance personality
3. Bakyastanathipathy Guru (karaga for law/finance) in his own house looking at Lagna
4. Rahu in 12th house -could be the person leading criminal lawyer
5. Seeing Bhadra Yoga (mercury in its own house) Hamsa yoga ( Guru in his own house) and Sasa yoga ( Saturn in its own house) - could be the reasons to shine in law field (Guru - Law; Saturn: Justice; Mercury ; Brilliance)
Blogger RAMVIDVISHAL
---------------------------------------------------------------------
8
KMR.Krishnan KMR.Krishnan
Sat, 12 Sep, 20:45 (6 days ago)
to me
As the new comments disabled by The admin, I send my comment by mail which please include.
லக்கினத்திற்கு யோக காரகனும், பத்தாம் இடத்துக்கு அதிபதியுமான செவ்வாய் வாக்கு ஸ்தானமான இரண்டில் அமர்ந்தது, வழக்கு வியாஜ்ஜியங்களுக்கான 6ம் இடத்து அதிபதி குரு பாக்கிய ஸ்தனமான ஒன்பதில் அமர்ந்து
லக்கினத்தைத் தன் பார்வையில் கொண்டிருந்தது.வேலைக்கான காரகன் சனிபகவான், 6ம் இடத்து அதிபனான குருவினத் தன் பார்வையில் வைத்தது. இக்காரணங்களால் ஜாதகர் நீதித்துறையில் பிரகாசித்தார்.
K.Muthuramakrishnan
-------------------------------------------------


===================================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com