மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

14.4.19

Astrology: ஜோதிடம்: 12-4-2019 புதிருக்கான விடை!!!!


Astrology: ஜோதிடம்: 12-4-2019 புதிருக்கான விடை!!!!

ஒரு அன்பரின் ஜாதகத்தைக் கொடுத்து, அந்த அன்பர். வங்கி அதிகாரியாக சுமார் 19 ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றியும். அவருக்கு எந்தவிதமான பதவி உயர்வும் கிடைக்கவில்லை. நியாயமாகக் கிடைக்கவெண்டியது கூடக் கிடைக்கவில்லை. மனிதர் நொந்து போய்விட்டார். 42 வயதாகி விட்டது. இனிமேலாவது கிடைக்குமா என்பதுதான் அவருடைய எதிர்பார்ப்பு!!!!இதுவரை ஏன் கிடைக்கவில்லை? ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்.? ஜாதகத்தை அலசி இந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள்!!!! என்று கேட்டிருந்தேன்

சரியான விடை
அன்பர் கடக லக்கினக்காரர். லக்கினநாதன் சந்திரன் பாக்கியநாதன் (9th Lord) குருவுடன் சேர்ந்து 2ம் வீட்டில் சிறப்பாக உள்ளார். ஆனால் 10ம் வீட்டுக்காரரான செவ்வாய் ராகுவுடன் சேந்து கெட்டுப் போய் உள்ளார். 7 மற்றும் 8ஆம் இடத்துகாரர் சனீஷ்வரனும் ராகுவுடன் சேர்ந்து கெட்டுப் போயிருக்கிறார்,

பிறப்பில் ஒரு ஆண்டு 7 மாதங்கள் இருந்த சுக்கிர திசை, பிறகு சூரியன் (6) சந்திரன் (10) செவ்வாய் (7) ஆகிய தசா மாற்றங்களுகுப் பிறகு அவர் வேலைக்குச் சேர்ந்த உடனேயே ராகு மகா திசை ஆரம்பித்து விட்டது. துவங்கியதில் இருந்தே அவருக்கு செக் வைத்துக் கொண்டே இருந்தது. அதனால்தான் அவருக்கு எந்த பதவி உயர்வும் கிடைக்கவில்லை. ஜாதகப்படி அவர் பட்ட வேதனைகளுக்கெல்லாம் அதுதான் காரணம்.

அதற்கு அடுத்து வந்த குரு மகாதிசையில் அவருக்கு எல்லாம் கூடி வந்தது. கர்மகாரகன் சனீஷ்வரனின் பார்வை குருவின் மேல் விழுவதைக் கவனியுங்கள்,

தசா புத்திகளின் முக்கியத்துவம் அதுதான். நல்ல மகா திசை நடக்கும்காலம்தான் எல்லாம் நன்மையாக இருக்கும்!

புதிருக்கான பதிலை 6 அன்பர்கள் எழுதியுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த பாராட்டுக்கள். அவர்களுடைய பெயர்கள் கீழே உள்ளன. பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

அடுத்து 19-4-2019 வெள்ளிக்கிழமை  அன்று மீண்டும் வேறு ஒரு புதிருடன் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------

1
Blogger kmr.krishnan said...
ஜாதகர் 30 ஜனவரி 1956 அன்று மாலை 5ம‌ணி 15 நிமிடம் போலப் பிறந்தவர்.
பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக் கொண்டேன்.
ஜாதகத்தில் 10ம் இடத்திற்கு, அதாவது உத்யோகத்திற்குரிய இட அதிபதி செவ்வாய் 5ல் அமர்ந்து சனி ராகு சம்பந்தம் அடைந்தார்,சனைச்ச‌ரன் 8ம் அதிபதியும் ஆனதால் எட்டாம் அதிபதி பத்தாம் அதிபதியுடன் நின்றதால் வேலை முன்னேற்றம் தடையானது.ராகுவும் சேர்ந்த‌தால் இரண்டு மடங்கு தடையானது.
மேலும் பத்தாம் அதிபதி செவ்வாய் தன் வீட்டிற்கு எட்டாம் இடத்தில் மறைந்தார். அதுவும் ஒரு காரணம்.ஜாத்கரின் 24 வயதில் ராகு தசா துவங்கி 18 ஆண்டுகள்
நடந்தது.அந்தக் காலகட்டம் முன்னேற்றம் முழுதும் தடைப்பட்டது. ராகு தசா முடிந்து குரு தசா துவங்கிய் 42,43 வயதில் அவருக்கு சிறிது முன்னேற்றம் வந்திருக்கும்.
Friday, April 12, 2019 4:42:00 AM
--------------------------------------------
2
Blogger csubramoniam said...
ஐயா கேள்விக்கான பதில்
1 .லக்கினாதிபதி சந்திரன் தகுருவுடன் நட்பு வீட்டில் அமர்ந்து நல்ல நிலையில் உள்ளார்
2 .ஜாதகருக்கு சந்திரா திசை குரு புத்திலயில் வேலை கிடைத்திருக்கலாம்
3 .பத்தாம் அதிபதி செவ்வாயும்,கர்மகாரகன் சனியும் பத்தாம் வீட்டிற்கு எட்டில் அமர்ந்துள்ளனர்
௪. மேலும் ராகுவின் பிடியில் உள்ளதால் வேலையில் உயர்வு ஏற்படவில்லை
5 .அதன் பிறகு வந்த ராகு திசையில் உயர்வு ஏற்பட்டு இருக்கலாம்
நன்றி
தங்களின் பதிலை ஆவலுடன்
Friday, April 12, 2019 1:03:00 PM
-----------------------------------------------
3
Blogger Sivakumar.aks@gmail.com said...
வணக்கம் சார்
ஜாதகர் 30/1/1956ல் சென்னையில் 5:15மாலையில் பிறந்தவர்.
பதவி உயர்வுக்கான லக்கின அதிபதியான சந்திரனும் சூரியனும் 6/8என்ற நிலையில்.பாக்கியஸ்தான அதிபதியான குரு தன்னுடைய வீட்டிற்கு 6/8நிலையில் உள்ளார். கடக லக்கினத்திற்கு பகை பெற்ற ராகு ஜாதகருக்கு வேலையில் உள்ள காலகட்டத்தில் விரையதிபதியான புதனின் சாரம் பெற்று திசையை நடத்தியதால் ஜாதகர் பதவி உயர்வு என்பது கனவாகவே உள்ளது.அடுத்து வந்த பாக்கியஸ்தான அதிபதியான குரு பகவானும் கேதுவின் சாரம் பெற்று வக்கிரமான நிலையில் திசையை நடத்தியதால் அதுவும் தடையாக உள்ளது சார். எதையும் சாதிக்க லக்கினத்திற்கு யோககார திசை அனுபவிக்கும் வயதில் வரவேண்டும். இந்த நிலையில் தான் ஜாதகருக்கு பதவி உயர்வு பெறாமல் உள்ளளார். ல்கினத்தை சூரியன் பார்ப்பது லக்கின அதிபதியான சந்திரனும் குருவும் சேர்ந்து சுக்கிரன் பார்ப்பது யோககார செவ்வாய் புதனின் சாரம் பெற்றுது இந்த அமைப்பு ஜாதகருக்கு வங்கியில் பணியில் அமர்த்தி அழகு பார்த்தது சார்.
மிகவும் நன்றி சார். உங்கள் மாணவர் தொட்டியம் சிவக்குமார்
Friday, April 12, 2019 7:11:00 PM
------------------------------------------------------
4
Blogger classroom2007 said...
வணக்கம்.
30 ஜனவரி மாதம் 1956, மாலை 5.11 மணிக்கு, பூரம் நட்சத்திரம் சிம்ம ராசி கடக லக்கினம் (இடம்: சென்னை) ஜாதகர் பிறந்தார்.
10ம் வீடு நன்றாக இருந்து நல்ல பலன் கிடைக்க வேண்டும் என்றால் லக்கினம், சூரியன், சந்திரன் இவை மூன்றும் நன்றாக இருக்கவேண்டும். (அடிப்படை அம்சங்கள்)
இந்த ஜாதகத்தில் லக்கினம் 26 பரல், சந்திரன் நவாம்சத்தில் நீசம், சூரியன் 4 பரல் சனியின் 3ம் பார்வை இருப்பதால் ஜாதகருக்கு பதவி உயர்வு போன்றவை கிடைக்காமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.
இந்த கடக லக்கினத்திற்கு செவ்வாய் யோககாரகன். பலவிதமான நன்மைகளைச் செய்யக்கூடியவன். ஆனால், இந்த ஜாதத்தில் 10 ம் வீட்டு அதிபதி செவ்வாய் 5ம் வீட்டில் விருச்சிகராசியில் இருந்தாலும் சனி , ராகுவுடன் சேர்ந்து இருப்பதால் எந்த வித நன்மையும் அடையமுடிவதில்லை. சுப கிரங்களின் பார்வையும் இல்லை.
இந்த கடக லக்கினத்திற்கு குரு எந்த வித யோகத்தையும் தரக்கூடியவர் அல்ல.
ஜாதகருக்கு 24 வயது முதல் 42 வயது வரை (1980-1998) ராகு மகா தசையில் உத்தியோகத்தில் எந்த பலனும் கிடைக்காமல் இருந்ததற்கு காரணம் ராகுவுடன் சனி, செவ்வாய் கூட்டு சேர்ந்ததே காரணம்.
42 வயதிற்கு (1998) பிறகு வந்த குருமகா தசையில் உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைத்தது. காரணம் ஜாதகத்தில் குருவின் 9ம் பார்வை 10ம் வீட்டின் மீது உள்ளது. லக்கினாதிபதி சந்திரனும் (6 பரல்) 2ம் வீட்டில் குருவுடன் சேர்ந்துள்ளார். சுக்கிரனின் 7ம் பார்வையும் சந்திரன், குருவின் மீது உள்ளது.மேலும், குருவின் கேந்திரத்தில் 10ம் வீட்டு அதிபதி செவ்வாய் இருப்பதால் சாத்தியமானது. 10ம் வீடு 24 பரல்.
சந்திரசேகரன் சூரியநாராயணன்
Saturday, April 13, 2019 12:53:00 AM
-------------------------------------------------
5
Blogger P. CHANDRASEKARA AZAD said...
வணக்கம்
தங்கள் புதிர் ராஜா கைய வைச்ச ஏன் தவறா போனது திற்கான பதில்
பொதுவாக அரசாங்க உத்தியோகத்திற்கான கிரகங்கள் சனி மற்றும் செவ்வாய் ஆகும் . ஜாதகருக்கு அது இரண்டும் ஒன்றாக இணைந்து ஐந்தாம் இடத்தில் அமர்ந்து அரசாங்க பதவியை கொடுத்தது
மேலும் செவ்வாய் இவருக்கு பத்தாம் இடத்து அதிபதியும் ஆவார். அதனால் இவருக்கு அரசு வேலை கிடைத்தது
ஆனால் உயர் பதவிக்கான ஸ்தானமான ஐந்தாம் இடத்தில் ராகு கூட்டணியுடன் செவ்வாய் சனி உள்ளதால் பதவி உயர்வு இதுவரை இவருக்கு கிடைக்கவில்லை .
நன்றி
இப்படிக்கு
ப . சந்திரசேகர ஆசாத்
MOB. 8879885399
Saturday, April 13, 2019 7:45:00 AM
-------------------------------------------------------
6
Blogger Ram Venkat said...
ஜோதிடப் புதிர்: ராஜா கைய வச்சா எல்லாம் ராங்காகிப் போனதேன்?
வணக்கம்.
கடக லக்கினம், சிம்ம ராசி ஜாதகர்.
வங்கி அதிகாரியாக சுமார் 19 ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றியும். அவருக்கு எந்தவிதமான பதவி உயர்வும் கிடைக்கவில்லை. நியாயமாகக் கிடைக்கவெண்டியது கூடக் கிடைக்கவில்லை. மனிதர் நொந்து போய்விட்டார். 42 வயதாகி விட்டது. இனிமேலாவது கிடைக்குமா என்பதுதான் அவருடைய எதிர்பார்ப்பு!!!!
இதுவரை ஏன் கிடைக்கவில்லை? ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்.?
1) லக்கினாதிபதி சந்திரன் 2ல் அமர்ந்து குருவுடன் சேர்ந்து, வலுவான‌ கஜகேசரி யோகத்தை கொடுத்து கொண்டிருக்கிறார். குருவின் 9ம் தனிப்பார்வை 10மிடமான மேசத்தில் விழுவதால் ஜாதகருக்கு ஒரு வங்கியில் நிலையான உத்தியோகம் கிட்டியது.
2) யோகாதிபதியும் கர்மாதிபதியுமான செவ்வாய், 5ல் அமர்ந்துள்ளார். அவருடன் கர்மகாரகன் சனி, மற்றும் ராகு கூட்டணி. ஜாதகருக்கு 42 வயது வரை ராகு தசை நடந்துள்ளது.
3) இதன் காரணமாகவே, அவர் சிறப்பாக பணியாற்றியும் பதவி உயர்வு கிடைப்பதில் இழுபறி ஏற்பட்டது.
4) அதன் பிறகு வந்த குரு தசையில் அவரின் பதவி உயர்வு ஆசை ஈடேறியிருக்கும்.
வாத்தியாரின் மேலான அலசலுக்கு காத்திருக்கும்,
இரா.வெங்கடேஷ்.
Saturday, April 13, 2019 12:56:00 PM
===========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com