மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

25.3.19

Astrology: Jothidam: 22-3-2019 புதிருக்கான விடை!!!!



Astrology: Jothidam: 22-3-2019 புதிருக்கான விடை!!!!

ஒரு அன்பரின் ஜாதகத்தைக் கொடுத்து, மனிதருக்கு அவருடைய தந்தையார் கோடிக்கணக்கான செல்வத்தைக் கொடுத்துவிட்டுப் போயிருந்தார். ஆனால் ஜாதகர் அவருடைய 45வது  வயதிற்குள் வியாபாரத்தில் நஷ்டங்கள், கஷ்டங்கள் ஏற்பட்டு எல்லா சொத்துக்களும் கரைந்து காணாமல் போய்விட்டன. அன்றாடம் செல்விற்கே சிரமப்படும் நிலைமைக்கு ஜாதகர் ஆளாகி விட்டார்.
ஜாதகப்படி அதற்கு என்ன காரணம் என்று ஜாதகத்தை அலசி பதில் சொல்லுங்கள் என்றிருந்தேன்!

சரியான பதில்: விரைய ஜாதகம்.
1. சிம்ம லக்கினம். லக்கினாதிபதி சூரியன் 12ல்
2. 10ம் இடத்து அதிபதி (தொழில் ஸ்தான அதிபதி) சுக்கிரனும் 12ல்
3. உடன் கேது.
4. 2ம் வீட்டில் (தன ஸ்தானத்தில்) சனி
5. 2ம் வீட்டிற்கு உரிய புதன் அந்த வீட்டிற்கு 12ல்
6. லக்கினம் பாபகர்த்தாரி யோகத்தில் ஒரு பக்கம் கேது. மறுபக்கம் சனி
7. 22 வதற்கு மேல் வந்த மகா திசைகள் இரண்டுமே வலுவிழந்து நின்றன
மேற்கூரிய காரணங்களால் ஜாதகர் சிரம நிலைக்கு ஆளானார்

புதிருக்கான பதிலை 11 அன்பர்கள் எழுதியுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த பாராட்டுக்கள். அவர்களுடைய பெயர்கள் கீழே உள்ளன. பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

அடுத்து 29-3-2019 வெள்ளிக்கிழமை  அன்று மீண்டும் வேறு ஒரு புதிருடன் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------
1
Blogger Ramanathan said...
2nd house lord Mercury in 1st house(12th house from its (2nd) house). He is also the 11th house lord
6th house lord and saturn in 2nd house
Lagna lord sun in viraya sthana(12th house)
viraya sthana(12th house) lord moon in 5th house with Maanthi
due to above configuration the person would have lost everything during moon dasa
Friday, March 22, 2019 1:03:00 PM
--------------------------------------------------------------
2
Blogger Thanga Mouly said...
பொதுவாக நன்மை செய்ய முடியாத குட்டிச் சுக்கிர தசை தொடக்கம் தொடர்ந்து வந்த சூரிய, சந்திர மற்றும் செவ்வாய் தசைகளுமே விரயத்திற்கு காரணமாகின.
விரயத்தில் சூரியனும், அவருடன் அஸ்தமமான சுக்கிரன், விரய வீட்டு அதிபதி சந்திரன், மாந்தியுடன் அமர்வுபோன்ற காரணங்களால், விரயம் மேலும் 45 இற்குள் நடந்து முடிந்தது
Friday, March 22, 2019 6:57:00 PM
--------------------------------------------------------------
3
Blogger csubramoniam said...
ஐயா கேள்விக்கான பதில்
1 .லக்கினாதிபதி சூரியன் விரயத்தில்
2.லாபாதிபதியும் பண (அண்டா)இரண்டாம் அதிபதி புதன் லக்கினத்தில் , இரண்டாம் இடத்திற்கு பனிரெண்டில்
3 .தனகாரகன் குரு ஒன்பதில் (திரிகோணம் )
4 .ஜாதகரின் 28 வயதில் விரயாதிபதி சந்திர திசையில் ஐந்தாம்
இடத்தில அமர்ந்த சந்திரனும் மாந்தியும் நஷ்டத்தை ஏற்படுத்தி
ஜாதகரை நடு தெருவில் நிறுத்தி இருக்கக்கூடும்
5 . தன்னுடைய நாற்பத்து ஐந்தாவது வயதில் அனைத்தையும் இழந்திருக்க கூடும் செவ்வாய் எட்டாம் அதிபதி குருவின் பார்வை பெறுகிறார்
தங்களின் பதிலை ஆவலுடன்
Friday, March 22, 2019 9:47:00 PM
----------------------------------------------------
4
Blogger Chandrasekaran Suryanarayana said...
வணக்கம்.
03 ஆகஸ்ட் மாதம் 1952, காலை 8.05 மணிக்கு, மூல நட்சத்திரம் தனுசு ராசி சிம்ம லக்கினம் (இடம்: சென்னை) ஜாதகர் பிறந்தார்.
45 வயதில் (1997) வியாபாரத்தில் நஷ்டம்,கஷ்டம், எல்லா சொத்துக்களும் கரைந்துவிட்டன.
காரணம் :
45 வயதில் (1997) ராகு மகா தசை ஆரம்பம். 6ம் வீட்டில் அமர்ந்துள்ள ராகுவின் 7ம் பார்வையில் லக்கினாதிபதி சூரியன் உள்ளார். 6ம் வீடு 34 பரல். லக்கினம் 27 பரல். 6ம் வீடு லக்கினத்தை விட பலமாக இருந்தால் கடன் அதிகமாக இருக்கும். எதிரி பலமாக இருப்பார். நோய் அதிகமாக இருக்கும்.
6ம் வீட்டு அதிபதி சனி 2ல் அமர்ந்துள்ளார். 2ல் சனி (2 பரல்) இருந்தால் கையில் காசு தங்காது. இரண்டு குடும்பம், எல்லா தீமைகளும் பெண்களால் உண்டாகும்.
சிம்ம லக்கினம். லக்கினம் பாபகர்தாரி தோஷம் (ஒரு பக்கம் கேது,மறு பக்கம் சனி)எப்போதும் ஏதாவது ஒரு மன அழுத்தம் இருக்கும்.
லக்கினாதிபதி சூரியன் 12ல் மறைவு, சுக்கிரன், கேதுவுடன் கூட்டு. ராகுவின் 7ம் பார்வையில் உள்ளார்.
11ம் வீட்டு அதிபதி சுக்கிரன் 12ல் கேதுவுடன் கூட்டு. கூட்டணி 12ல் இருந்தால் ஜாதகனுக்கு வாழ்க்கை போர்க்களமாக இருக்கும். கணவனும் மனைவியும், எதிரிகளாக இருப்பார்கள்.
45 வயதில் (1997) அந்த நேரத்தில் கோள்சாரத்தில் லக்கினத்தில் ராகு அமர்ந்து, குரு மகரத்த்தில் நீசம், சனி 8ல் அமர்ந்து 2ம் வீட்டை பார்க்கிறது. எல்லாம் ஒன்று சேர்ந்து அவரை கையில் காசு இல்லாமல் செய்து விட்டது
சந்திரசேகரன் சூரியநாராயணன்
Saturday, March 23, 2019 12:23:00 AM
----------------------------------------------------
5
Blogger P. CHANDRASEKARA AZAD said...
இந்த ஜாதகரின் செல்வ இழப்பிற்கான காரணங்கள்
ஜாதகரின் லக்கின அதிபதி சூரியன் விரய ஸ்தானத்தில் அமர்ந்து மிகுந்த பண விரயத்தை செய்தது .
மேலும் 12 இம் இடத்து அதிபதி சந்திரன் மாந்தி உடன் அமர்ந்து விரயத்தை அதிக படுத்தினார் .
நன்றி
ப . சந்திரசேகர ஆசாத்
Saturday, March 23, 2019 10:33:00 AM
------------------------------------------------------
6
Blogger venkatesh r said...
ஜோதிடப் புதிர்: கொடுத்தவனே பறித்துக் கொண்டாண்டி மானே!!!!
ஆசிரியருக்கு வணக்கம்.
சிம்ம லக்கினம், தனுசு ராசி ஜாதகர்.
அவருடைய 45வது வயதிற்குள் வியாபாரத்தில் நஷ்டங்கள், கஷ்டங்கள் ஏற்பட்டு எல்லா சொத்துக்களும் கரைந்து காணாமல் போய்விட்டன. அன்றாடம் செல்விற்கே சிரமப்படும் நிலைமைக்கு ஜாதகர் ஆளாகி விட்டார்.
ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்?
1) லக்கினாதிபதி சூரியன், 12ல் விரைய ஸ்தானத்தில் கேதுவுடன் சேர்ந்து அமர்ந்து வலுவிழந்துள்ளார்.
2) தனாதிபதி புதன் லக்கினத்தில் அமர்ந்து, இருபுறமும் பாபக் கிரகங்களால் சூழப்பட்டு கத்திரியின் பிடியுலுள்ளார். 9ல் அமர்ந்த குருவின் 5ம் தனிப்பார்வை புதன் மேல் விழுந்ததால் ஜாதகருக்கு அப்பனின் ஆஸ்தி கிட்டியது.
3) இரண்டாம் வீட்டில் 6ம் அதிபதி வில்லன் சனி அமர்ந்து ஜாதகரின் சொத்துக்களை கரைத்தார். 2ம் வீட்டிற்கு 22 பரல்கள் மட்டுமே.
4) விரையாதிபதி சந்திரன் தசையின் போது வந்த கோச்சார ஏழரை சனியும் கூடவே சேர்ந்து கொண்டு ஜாதகரை கடனில் தள்ளினர்.
5)அடுத்து வந்த யோகாதிபதி செவ்வாயின் தசையில் ஓரளவு மீண்டு நல்ல நிலைமக்கு திரும்பிருப்பார். பலம் வாய்ந்த தனகாரகன் குரு (7பரல்கள்)வின் நேரடிப் பார்வை செவ்வாயின் மேல்.
இரா. வெங்கடேஷ்.
Saturday, March 23, 2019 2:22:00 PM
-------------------------------------------------------
7
Blogger guru said...
வணக்கம்
லக்கினாதிபதி 12 இல் மறைந்ததும், தசையை நடத்திய கேது,சுக்கிரன்,சந்திரன் எல்லோரும் ஒரு விதத்தில் 12 மிடத்தோடு சம்பந்தப்பட்டதும், செவ்வாய் 3 இல் மறைந்து தன் வீட்டிற்கு 12 - இல் மறைந்ததும் , ஜாதகர் சொத்துக்களை இழந்ததற்கு முக்கிய காரணங்கள்.
பூர்வீகத்தை குறிக்கும் 5 -இல் 12 மதிபதியும், 9 -இல் 8 மதிபதியும் அமர்ந்தது முன்னோர் சொத்துக்கள் நிலைக்காததிற்கு மற்றோரு காரணம்.
லாப ஸ்தானத்தை 12 மதிபதி சந்திரன் பார்ப்பது நஷ்டம் ஏற்பட காரணமாகும்.
தன ஸ்தானத்தில் கடன் ஸ்தானாதிபதி சனி அமர்ந்தது மட்டுமல்லாமல் 2 மிட அதிபதி தன் வீட்டிற்கு 12 - இல் மறைந்ததும் அன்றாட வாழ்வே சிரமமானத்திற்கு காரணம்.
நன்றி
Saturday, March 23, 2019 3:56:00 PM
--------------------------------------------------------
8
Blogger TRB. Sanjai Kumarr said...
1. In this Jathagam, the native has got Jupiter(Guru)in 9th house (bhagya stanam)
which has made him to inherit father's property
2. In rasi chart, Saturn in 2nd house and this planet has made to spend all the
money. In navamsa chart also in 2nd house ragu, conforms the same.
3. Also the lord of materialistic comfort, Venus is hidden in 12th house. Hence the
acquired wealth has not stand for long.
4. Money would have been spent towards for health & to repay the debt as rahu in 6th
house.
5. Rahu dasa has started in his 45th age, hence he is facing problem for day to day
life.
Thanks & Regards,
TRB. Sanjai Kumarr
Saturday, March 23, 2019 10:26:00 PM
-----------------------------------------------------
9
Blogger Srini said...
38 வயதுக்கு மேல் நடந்த செவ்வாய் திசை வீழ்ச்சிக்கு கரணம். தசனதான் செவ்வாவை, அட்டாமதிபதியான குரு பார்த்து அதுவும் தனித்து பார்த்து பொருளாதார வீழ்ச்சியை கொடுத்து விட்டார்..
Saturday, March 23, 2019 11:31:00 PM
-----------------------------------------------------------
10
Blogger kmr.krishnan said...
அவர் வாழ்க்கையில் எந்த தசாவும் அவருக்கு உதவவில்லை. கேது தசாவில் பிறந்து, சுக்கிரதசா 22 வயஹுவரை. சுக்கிரன் லக்கினத்திற்கு 12ல் மறந்து கேதுவாலும் சூரியனாலும் பாதிப்பு. லக்கினாதிபதி 12ல் மறந்து கேது சம்பந்தம்.
தன ஸ்தனத்தில் 6,7 க்குடைய சனி அமர்ந்ததும் கடன் காட்சியில் தள்ளியிருக்கும்.ராகு 6ல் அமர்ந்ததும் பலவித உடல் மனம், பண விஷயத்தில்
தட்டுப்பாடுகள் கடனை ஏற்படுத்தியிருக்கும்.
45ல் வந்த ராகுதசா ராகு புக்தி எல்லாவற்றயும் அழித்து அவரை நடுத்தெருவுக்கு அழைத்துவந்திருக்கும்.
Sunday, March 24, 2019 9:17:00 AM
-------------------------------------------------------------
11
Blogger Sanjai said...
- லக்கினாதிபதி பன்னிரெண்டில்
- 45 வயதில் ஆறாம் இடத்தில இருக்கும் ராகு தன் தசையில் எல்லாவற்றையும் புடிங்கிவிட்டார்.
- ஆறாம் idam என்பது - கடன் ருணம் வழக்கு.
Sunday, March 24, 2019 10:18:00 AM
=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com