மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

5.10.16

கூட்டுக் குடும்ப வாழ்க்கையை ஏன் காணமுடிவதில்லை?


கூட்டுக் குடும்ப வாழ்க்கையை ஏன் காணமுடிவதில்லை?

மனவளக் கட்டுரை

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பார்கள். கோடி நன்மைகளைப் பட்டியல் இட முடியாது. பத்து நன்மைகளையாவது டக்’கென்று சொல்லலாம்.
முதல் நன்மையாக நெருங்கிய உறவுகளுடன் சேர்ந்து வாழ்வதால் கிடைக்கும் மன நிம்மதி மற்றும் மகிழ்ச்சியைச் சொல்லலாம்.

விட்டுக் கொடுத்துப் போகும் மனப் பான்மை, அனுசரித்துப் போகும் தன்மை போன்ற நற்பண்புகள் உண்டாகி, நம்மை நல்ல மனிதனாக்கும் அந்தப் பண்புகள்.. பாதுகாப்பான வாழ்க்கை கிடைக்கும். வீட்டிலுள்ள பெரியவர்களால், குழந்தைகளின் வாழ்க்கை சீராகும். அவர்களுக்கிடையே விலை மதிப்பில்லாத அன்பு, பாசம், பரிவு எல்லாம் உண்டாகும்.

வீட்டிலுள்ள பெரியவர்கள் பல கதைகளையும் நற்சம்பவங்களையும் சொல்லிக் குழந்தைகளை நெறிப்படுத்துவார்கள். குழந்தைகளுக்கு சாதத்தோடு இறையுணர்வையும் ஊட்டுவார்கள். தேவாரம், திருக்குறள் பாடல்களைச் சொல்லிக் கொடுத்து குழந்தைகளை மனப்பாடம் செய்ய வைப்பார்கள். குழந்தைகளின் தன்னம்பிக்கை வளரும். ஒழுக்கம் மேம்படும்.

நமது வரலாறு, பாரம்பரியம், கலாச்சாரம் எல்லாம் குழந்தைகளுக்கும் இளம் வயதினருக்கும் தெரியவரும்!

மேலே சொல்லியுள்ள அனைத்தும்  கூட்டுக் குடும்பம் அல்லாத தனிப்பட்ட வாழ்க்கையில் இருக்காது. பெற்றோர்களுக்கு பொருள் தேடுவதில் மட்டுமே கவனம் இருக்கும். நேரம் இருக்கும், பிள்ளைகளின் மேல் கவனம் செலுத்த நேரம் ஏது?

அந்தக் காலத்தில் நம் முன்னோர்கள் பெருந்தன்மையோடு பெரிய, பெரிய, பிரம்மண்டமான வீடுகளைக் கட்டினார்கள். தம் வாரிசுகள் எல்லாம் ஒற்றுமையாக பாதுகாப்போடு ஒன்றாக வாழ வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அத்தனை பெரிய வீடுகளைக் கட்டினார்கள். இப்போது அந்த வீடுகளைப் பராமரிப்பதிலேயே வாரிசுதாரர்களுக்குள் பல சிக்கல்கள்

அவர்களுடைய நோக்கம் எல்லாம் கடந்த 40 ஆண்டுகளாக சிதைந்து கொண்டே வந்து அல்லது தேய்ந்து கொண்டே வந்து இன்று கூட்டுக் குடும்ப வாழ்க்கை என்பது அரிதாகிவிட்டது. எல்லாம் சிறு சிறு குடும்பங்களாகி, மைக்ரோ சிப்பைப் போல மைக்ரோ ஃபாமிலிகளாகிவிட்டன.

என்ன காரணம்? முக்கியமான காரணம் சுயநலம்தான்!

அந்தக் காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் எட்டுப் பிள்ளைகள், பத்துப் பிள்ளைகள் என்பது சர்வசாதாரணமான விஷயம். இப்போது ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பிள்ளை அல்லது இரண்டு பிள்ளைகளுக்கு மேல் கிடையாது என்பதே உண்மை! நாம் இருவர்; நமக்கிருவர் என்று குடும்பக் கட்டுப்பாட்டை என்றைக்கு அரசாங்கம் வலியுறுத்தியதோ, அன்றே மக்களும் அதைக் கடைப் பிடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

தொழில் அல்லது வேலை வாய்ப்பின் காரணமாக பலரும் வெளியூரில், அல்லது வெளி மாநிலத்தில் அல்லது வெளி நாடுகளில் வசித்துக் கொண்டிருக்கிறார்கள். தாங்கள் வசிக்கும் ஊர்களில், வசிக்கும் இடங்களில் பெற்ற தாய், தகப்பனாரையே வைத்துக் கொள்ளப் பலரும் விரும்புவதில்லை.மகன் விரும்பினாலும், மருமகள் ஒப்புக்கொள்வதில்லை. மனைவியை மீறி எதுவும் செய்ய முடியாத சூழ்நிலைக் கைதியாக கணவன் இருப்பதால், அவன் தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்ற முடியாது. சொல்லப்போனால் நினைத்துப் பார்க்கக்கூட முடியாது.

நடந்த சம்பவம் ஒன்றைச் சொல்கிறேன்:

ஒரு செட்டிநாட்டு சம்சாரி, காலை நேரத்தில் தன் வீட்டில் உட்கார்ந்து மணியார்டர் படிவம் ஒன்றை நிரப்பிக் கொண்டிருந்தார். அருகில் வந்து அவர் என்ன செய்கிறார் என்பதை எட்டிப் பார்த்த மனைவி, கேட்டார்:

”யாருக்குப் பணம் அனுப்புகிறீர்கள்?”

”என் தாயாருக்கு”

”இத்தனை நாட்களாக இல்லாமல் இன்று என்ன புதுப் பழக்கம்?”

”இத்தனை நாட்களாகக் கேட்காதவர்கள். நேற்றுக் கேட்டு போன் செய்தார்கள். அதனால் அனுப்புகிறேன்”

”எவ்வளவு?”

”முவ்வாயிரம் ரூபாய். மாதா மாதம் முவ்வாயிரம் ரூபாய் அனுப்புவதாக உள்ளேன்”

”மாதம் முவ்வாயிரத்திற்கு அவர்களுக்கு என்ன செலவு இருக்கிறது?”

”மளிகைக்கடை பில் உனக்கு எவ்வளவு ஆகிறது?”

”மாதம் ஆறாயிரம் ரூபாய். பிள்ளைகளையும் சேர்த்து நாம் நான்கு பேர்கள் இருக்கிறோம். அவர்கள் ஒற்றை ஆள்தானே?

”கேஸ் சிலிண்டர் என்ன விலை?

”நமக்கு மாதம் ஒரு சிலிண்டர் ஆகிறது. அவர்களுக்கு ஒரு சிலிண்டர் நான்கு மாதங்களுக்கு வரும்!

”பால் ஒரு கவர் வாங்கினாலும் தினமும் இருபது ரூபாய் ஆகுமே!

”அவர்கள் பாக்கெட் பால் எல்லாம் வாங்குவதில்லை. சைக்கிள்காரனிடம் ஒரு டம்ளர் பால் வாங்கி, காலையிலும் மாலையிலும் காப்பி போட்டுக் குடிக்கிறார்கள்.அவ்வளவுதான். அத்துடன் ஊரைச் சுற்றி உங்களுக்குச் சொந்தங்கள் அதிகம், கல்யாணம், சாந்தி, சடங்கு என்று விஷேசக்காரர்கள் வீடுகளில் நாளும் பொழுதும் நல்ல சாப்பாடு போடுகிறார்கள். வருடத்தில் 55 முகூர்த்த நாட்கள். எல்லா நாட்களிலும் ஊரில் பல திருமணங்கள் நடக்கின்றன. சொல்லப்போனால் உங்கள் ஆத்தா வருடத்தில் பாதி நாட்கள் சமைப்பதே இல்லை. அதை நினைத்துப் பார்த்தீர்களா?”

இப்படியே தொடர்ந்த பேச்சை முடிவிற்குக் கொண்டுவர, கணவன் கேட்டான்: “சரி, எவ்வளவுதான் அனுப்பலாம் என்று நீ நினைக்கிறாய்?”

“மாதம் ரூபாய் ஆயிரத்தைநூறு அனுப்புங்கள். அதுவே எதேஷ்டம். அதுபோதும்!”

மனைவியின் வாதம்தான் வென்றது. அதன்படியே கணவனும் செய்தான்.

ஒரு மாதம் சென்றது. கணவனின் போதாத நேரம் அடுத்த மாதம் முதல் தேதியன்று தாயாருக்கு பணம் அனுப்புவதற்காக, வீட்டில் உட்கார்ந்து மணியார்டர் படிவத்தை நிரப்பிக் கொண்டிருந்தான்.

அருகில் வந்த மனைவி, கணவனை முறைப்புடன் பார்த்தாள்.கணவன் சொன்னான்:

”அதுதான் போனமாதம் முடிவு செய்தோமே. அதன்படிதான் பணம் அனுப்ப உள்ளேன்.”

”போன மாதம் நீங்கள் அனுப்பிவிட்டீர்கள் அல்லவா? இந்த மாதம் உங்கள் தம்பியை அனுப்பச் சொல்லுங்கள்”

”பாவம்டி அவன். எனக்கு வங்கியில் வேலை. நல்ல சம்பளம் வருகிறது. அவன் ஒரு பேப்பர் கடையில் வேலை பார்க்கிறான். வருகிற சம்பளம் கைக்கும் வாய்க்குமாகத்தான் இருக்கும். அதனால் நான் அனுப்புவதே உசிதம்!”

”நல்ல கதையாக இருக்கிறதே! அதனால் உங்கள் ஆத்தா உங்களுக்கு என்ன மெடலா தரப்போகிறார்? கையில் வைத்திருக்கிற 25 கிலோ வெள்ளிச் சாமான்களையும் உங்களுக்கே தரப்போகிறாரா? பாதியைப் பிரித்து உங்கள் தம்பிக்கும் கொடுப்பாரா, மாட்டாரா? சொல்லுங்கள்! ஆகவே உங்கள் தம்பிக்குப் போன் செய்து விஷயத்தைச் சொல்லி, அவரையே அனுப்பச் சொல்லுங்கள்.

இந்த முறையும் மனைவியே வென்றார்.

இதுதான் இன்றைய மைக்ரோ குடும்பங்களில் நடக்கும் நடப்பு ஆகும்.

நமக்கும் வயதாகும். நமக்கும் ஒரு நாள் முதுமை வரும். நமக்கும் ஒருநாள் இயலாமை வரும். நாம் இன்று செய்வதை நம் பிள்ளைகள் நமக்குச் செய்வார்கள். என்பதை ஒருவரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. உணர்ந்து திருந்துவதாக, உதாரணமாக இருப்போம் என்று நினைப்பதாகத் தெரியவில்லை.நாம் பெரியவர்களைப் போற்றினால், நம் பிள்ளைகளும் நம்மைப் போற்றுவார்கள் என்பதை ஒவ்வொரு பெற்றோர்களும் உணரவேண்டும்.

உணர்வார்களா?

இறைவன்தான் உணர்த்த வேண்டும். கூட்டுக் குடுங்களின் மேன்மையை அனைவரும் உணரும் வண்ணம் செய்ய இறையருளால்தான் முடியும்!

கூட்டுக் குடும்பங்கள் மலருட்டும். குறைந்த அளவு தங்கள் பெற்றோர்களையாவது தங்களுடன் வைத்துக் கொள்ளும் நிலைமை உண்டாகட்டும். பெண்கள் ஒற்றுமையாக இருந்தால் முதியோர் இல்லங்களுக்கு இடம் ஏது?

மின்னியலில் வேண்டுமென்றால் மைக்ரோக்கள் இருக்கட்டும். இல்லங்களில் வேண்டாம். அதற்கு இடம் கொடுக்காதீர்கள். இது அன்பான வேண்டுகோள்!

அன்புடன்
வாத்தியார்
======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4.10.16

Short Story: சிறுகதை: பொது வீடு


Short Story: சிறுகதை: பொது வீடு

மாத இதழ் ஒன்றிற்காக அடியவன் எழுதி, சென்ற மாதம் வெளிவந்து, பலரது பாராட்டையும் பெற்ற சிறுகதை ஒன்றை நீங்கள் படித்து மகிழ்வதற்காக இன்று வலையில் ஏற்றி இருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------
கதையின் தலைப்பு: பொது வீடு
-
சின்னைய்யா செட்டியாருக்கு கோபமே வராது. ஆனாலும் அன்று கோபம் வந்து, சத்தமாகப் பேசிக் கொண்டிருந்தார்.

அவர் மனைவி சீதாலெட்சுமி ஆச்சி, அவரைச் சமாதானப் படுத்திப் பொறுமையாகப் பேசும்படி செய்தார்.

“எதற்காகக் கோபம்?  எப்பவும் போல பொறுமையாகப் பேசுங்கள்.”

“என் தம்பி பேசுவதைக் கேட்டால், யாருக்கும் கோபம் வரும்.”

“என்ன சொல்கிறார்?”

“ஊரில் உள்ள நம்முடைய பொது வீடு இடியட்டும் என்கிறான். அதை ரிப்பேர் செய்வது வேஸ்ட் என்கிறான்.”

“அவரிடம் பணம் கேட்டால் அப்படித்தான் சொல்வார். ஆகவே அவரிடம் பணம் கேட்காமல் நீங்களும், உங்கள் பெரியப்பச்சி மக்களுமாகச் சேர்ந்து வீட்டை ரிப்பேர் செய்யுங்கள்.”

“அவனிடம் பெர்மிஷன் வாங்க வேண்டாமா?”

“வீட்டின் பொதுப் பகுதியை ரிப்பேர் செய்வதற்கு யாருடைய பெர்மிஷனும் வேண்டாம்.  அவருடைய அறைகளை, அவருக்குப் பாத்தியமான பகுதியை ரிப்பேர் செய்வதற்குத்தான், அவரிடம் கேட்க வேண்டும். அதைத் தொடாமல் மற்ற இடங்கள் அனைத்தையும், அதாவது ஒழுகுகின்ற இடங்கள் அனைத்தையும் ரிப்பேர் செய்யுங்கள்.”

“அவனிடம் பணம் வாங்கவில்லை என்றால் பரவாயில்லை என்கிறாயா?”

“அவர் உங்களுடன் பிறக்கவில்லை என்று நினைத்துக் கொள்ளுங்கள். உங்கள் அப்பச்சிக்கு நீங்கள் ஒருத்தர்தான் வாரிசென்றால் என்ன செய்வீர்களோ - அதைச் செய்யுங்கள்”

“உன்னால் எப்படி இப்படிச் சிந்திக்க முடிகிறது?”

“நம் வீட்டுப் பசு மாட்டிற்கு காலில் அடிபட்டு அதால் நடக்க முடியாத, நிற்க முடியாத நிலை என்று வைத்துக்கொள்ளுங்கள். அடிபட்ட கால் என் தம்பியின் பங்குக்கு உரிய  கால், ஆகவே அவன் பணம் தந்தால்தான் மாட்டிற்கு வைத்தியம் பார்க்க முடியும் என்று சொல்வீர்களா? மாடு நம்முடைய பொது மாடு. ஆகவே நாம் வைத்தியம் பார்த்துத்தான் ஆகவேண்டும்!. அவரை மறந்து விட்டு நீங்கள் வைத்தியத்தைப் பாருங்கள். ஆகின்ற செலவை நீங்கள் எல்லோரும் சேர்ந்து செய்யுங்கள். நீங்கள் கும்பிடுகின்ற பழநியாண்டவர் உங்களுக்கு நல்ல வழியைக் காட்டுவார்”

ஆச்சி பழநியாண்டவர் பெயரைச் சொன்னவுடன் சின்னைய்யா செட்டியார், அந்த வாதத்தை அத்துடன் நிறுத்திக் கொண்டு விட்டார

                ***************************************************

ஊரில் இருக்கும் தங்கள் வீடு, பொது வீடுதான் என்றாலும் சின்னைய்யா செட்டியாருக்குத் தங்கள் வீட்டின் மேல் ஒரு தீராத காதல் உண்டு, 110 ஆண்டுகளுக்கு முன்பு அவருடைய பாட்டையா சொக்கலிங்கம் செட்டியார் பார்த்துப் பார்த்துக் கட்டிய வீடு அது. அத்தனை அழகாக இருக்கும். இடத்திற்கு இடம் ஆளுயர பெல்ஜியம் கண்ணாடிகளுடன் அம்சமாக இருக்கும்.  33 செண்ட் இடத்தில் கட்டப்பெற்ற வீடு.

சொக்கலிங்கம் செட்டியாருக்கு சின்னைய்யாவின் அய்யா சிவலிங்கம் செட்டியார் ஒரே ஒரு மகன்தான்.  அவருடைய காலத்தில்தான் வம்சம் பெருகி, அவருக்கு இரண்டு மகன்கள், ஐந்து பேரர்கள் என்று, அந்த வீட்டிற்கு இன்றைய வாரிசுதாரர்கள் மொத்தம் ஐந்து பேர்கள் ஆனார்கள்.

சின்னைய்யாவின் அப்பச்சி சோமசுந்தரம் செட்டியார் இரண்டாவது மகன். அத்துடன் அவருக்கு இரண்டு மகன்கள். அவருடைய அண்ணன்  பரமசிவம் செட்டியாருக்கு மூன்று மகன்கள். சோமசுந்தரம் செட்டியாருக்கு வீட்டில் சரி பாதிப் பங்கு. அதில் இப்போது சின்னைய்யாவிற்கும் அவருடைய தம்பி கதிரேசனுக்கும் பெரிய வீட்டில் கால் கால் பங்கு.

தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவாரூர் அருகே 250 ஏக்கர் விளை நிலங்கள் பொதுச் சொத்தாக இருந்தன. இருந்தன என்றுதான் சொல்ல வேண்டும். பதினைந்து ஆண்டுகளுக்கு  முன்பு நீர்ப் பற்றாக்குறையால் விவசாயம் நொடித்துப் போன சமயத்தில் எல்லா நிலங்களையும் விற்றுக் காசக்கிக் கொண்டு பெரியவர்கள் எல்லாம் ஊருக்கே வந்துவிட்டபடியால், அப்போது அவர்களுடைய குடும்பத் தொழில் சுகஜீவனம் என்றாகி, கையில் இருந்த பணமெல்லாம் நடப்புச் செலவில் கரைந்து போய் ஒன்றும் இல்லாமலாகிவிட்டதோடு. பெரிய வாரிசுகள் எல்லாம் காலமாகி, இப்போது உள்ள பொது வீடு மட்டும்தான் மிஞ்சியது.

சின்னைய்யாவிற்கு ஒரு தேசிய வங்கியில்,  கிளார்க் வேலை. ஆபிசரானால் மூன்று வருடங்களுக்கு  ஒருமுறை ஊர் ஊராக பெட்டி தூக்க வைத்துவிடுவார்கள் என்று கிளார்க் வேலையே போதும் என்று எழுதிக் கொடுத்ததோடு சென்ற 30 ஆண்டுகளாக திருச்சி வட்டகையிலேயே வேலையைத் தக்க வைத்துக்கொண்டு இருக்கிறார். இப்போது அவருக்கு 55 வயதாகிறது. பணி ஓய்விற்கு இன்னும் 5 ஆண்டுகள் பாக்கி உள்ளது.

சின்னய்யாவின் தம்பி கதிரேசனுக்கும் வங்கியில்தான் வேலை. பெங்களூர், தவனகிரி, ஹூப்ளி என்று கர்நாடகா மாநிலத்தில் சுமார் இருபது ஆண்டுகள் பணி செய்தவர், இப்போது சென்னையில் இருக்கிறார். அந்த வங்கியின் வண்டலூர் கிளையில் மேலாளர் வேலை. கேளம்பாக்கத்தில் சொந்த வீடு என்று வசதியாக இருக்கிறார். ஆனால் ஊரின் மேல் பிடிப்பு இல்லாதவர்.  எப்போதாவதுதான் ஊருக்கு வருவார்.

சின்னைய்யாவின் பெரியப்பச்சி மகன்களில் மூத்தவரான சுப்பிரமணியன் செட்டியார், எல்.ஐ.சியில் வேலை பார்த்தவர், பணி ஓய்விற்குப் பிறகு ஊருக்கே வந்து தங்கள் வீட்டின் முகப்புப் பகுதியில் தங்கி விட்டார். அவருக்கு ஒரே ஒரு  பெண். அவள் திருமணமாகி சவுத் ஆப்பிரிக்கா நாட்டிற்குச் சென்றவர், ஜோஹன்னெஸ்பர்க் நகரில் இருக்கிறார். இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை ஊருக்கு வந்து விட்டுப் போவார்.

சுப்பிரமணியன் செட்டியாரின் உடன்பிறப்புக்கள் இருவரும் கடலூரில் கூட்டாக வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

பிரச்சினை இல்லாமல் இருந்த பொது வீட்டில் இப்போதுதான் பிரச்சினை தலை தூக்க அரம்பித்தது.

என்ன பிரச்சினை?

கடந்த பத்து வருடங்களாக முறையான பராமரிப்பு இன்மையால், மழைகாலங்களில் வீட்டின் பல இடங்களில் நீர் ஒழுக ஆரம்பித்துவிட்டது.  அதை இப்போது ரிப்பேர் பார்க்க வேண்டும். கொத்தனாரைக் கூட்டிவந்து காட்டிக் கேட்கையில். ஆறு லட்ச ரூபாய் செலவாகும் என்று சொன்னார். மற்ற பங்குக்காரர்கள் எல்லாம் சரி என்று சொன்ன தோடு, ஊரில் பெரிய வீட்டில் இருக்கும் சுப்பிரமணியன் செட்டியார் தான் இருந்து பராமரிப்புப் பணிகளைச் செய்வதாகவும்  சொன்னார்.

அதன்படி சின்னைய்யா செட்டியாரையும் சேர்த்து மற்ற பங்குக்கரர்கள் நால்வருமாக ஒரு நல்ல நாளில் பராமரிப்புப்  பணியைச் செய்யத் துவங்கினார்கள்.

இரண்டு மாத காலத்தில், எட்டு லட்ச ரூபாய் மொத்த செலவுடன் பொது வீடு பொலிவு பெற்றது.

வாட்ஸப்பில் தங்கள் குடும்பத்திற்கென ஒரு க்ரூப்பை உண்டாக்கி, அதில் செய்திகளை அவ்வப்போது வெளியிட்டு அனைவரும் அறிந்து கொள்ளும்படி சின்னைய்யா செட்டியார் செய்திருந்தார். யாரும் உனக்குத் தெரியாது, எனக்குத் தெரியாது, என்னிடம் சொல்லவில்லை என்று குறைப்பட்டுக் கொள்ளக்கூடாது. என்பதற்காக அந்த ஏற்பாடு.

வீட்டு பராமரிப்பு பணியெல்லாம் நிறைவாக முடிந்தவுடன், தன் மனைவியுடன், சின்னைய்யா செட்டியார் பழநிக்குச் சென்று பழநியாண்டவரைத் தரிசித்துவிட்டுத் திரும்பினார்.

திரும்பும் வழியில் ஆச்சி கேட்க செட்டியார் சொன்னார். “மொத்தம்  4 லட்ச ரூபாய் என் கைக்காசு செலவாகியிருக்கிறது. அதில் என் தம்பி தரவேண்டியது இரண்டு லட்ச ரூபாய்கள்.  அதை வாங்கிக் கொடுக்க பழநி அப்பனிடம் வேண்டிக் கொண்டு விட்டு வந்தேன்”

”வேண்டுதலை அவர் நிறைவேற்றுவார். பொறுமையாக இருங்கள்” என்று ஆச்சி அவர்கள் பதில் சொல்ல அவர் மெளனமாகிவிட்டார்.

                         ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கேளம் பாக்கத்தில் உள்ள கதிரேசன் செட்டியாரின் வீட்டிற்கு அருகே அவருடைய வீட்டைத் தொட்டாற்போல இரண்டு காலி மனைகள் இருந்தன, அது முழுக்க காட்டுக் கருவேல மரங்கள் முளைத்து, வளர்ந்து, அச்சுறுத்திக் கொண்டிருந்தன.

அதில் 4 அல்லது 5 பாம்புகள் வேறு குடியிருந்தன. அச்சுறுத்தல் இருக்காதா என்ன?

அந்த இரண்டு மனைகளும் ஒருவருக்கே சொந்தமானது. அவரைச் சந்தித்துப் பேசியபோது,  ”அந்த இடங்களை நல்ல விலை கிடைத்தால் விற்பதாக உள்ளேன். நீங்கள் வாங்கிக் கொள்ளுங்கள்”

“வாங்குவதற்காக நான் வரவில்லை. அந்த இடத்தை ஆட்களை விட்டு செம்மைப் படுத்த வேண்டியது உங்கள் பொறுப்பு. அதைச் செய்யுங்கள் போதும்”

“என்னால் முடியாது. உங்களுக்குத் தேவை என்றால் நீங்கள் செய்து கொள்ளுங்கள்” என்று கறாராகப் பேசி அவரைத் திருப்பி அனுப்பி விட்டார்.
   
வெட்டிச் சுத்தம் செய்வதற்கு இங்கே ஆட்கள் கிடைக்காது. செங்கல்பட்டு தாண்டி உள்ள கிராமங்களில் இருந்துதான் ஆட்களைக் கூட்டிக் கொண்டு  வரவேண்டும். வருகிறவர்களும் ஒரு அடி உயரத்திற்கு மரத்தின் கீழ் பகுதியை விட்டுவிட்டு மேல் பகுதியை மட்டும்தான் வெட்டுவார்களாம். மரம் மீண்டும் முளக்கும் அபாயம் உண்டு. வேருடன் பெயர்த்து எடுங்கள். தரைப் பகுதியையும் சுத்தம் செய்யுங்கள் என்றால், அதற்கு பொக்லைன் எயந்திரத்தை வைத்துத்தான் நீங்கள்  சுத்தம் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். இருக்கும் மரங்களின் எண்ணிக்கையை வைத்து ஆகக்கூடிய செலவைக் கணக்குப் பண்ணினால் இரண்டு லட்ச ரூபாய் ஆகும்போல் இருந்தது.

கதிரேசன் செட்டியார் நொந்து போய் விட்டார். அவருடைய மனைவி மீனாட்சி ஆச்சிதான் சமாதானமாகப் புரியும்படி பேசினார்:

“நீங்கள் ஊரில் உள்ள பொதுவீட்டை  ரிப்பேர் செய்வதற்கு இடக்குப் பேசி வம்பளந்தீர்கள். இப்போது விதி உங்களுக்குப் பாடம் புகட்டுவதற்காக இந்தப் பிரச்சினையைக் கொண்டு வந்துள்ளது. ஆகவே வேறு வழியில்லை, நாம்தான் செய்ய வேண்டும்.”

“நான் செய்வதாக இல்லை. உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போ” என்று ஆச்சியை அதட்டி அனுப்பிவிட்டார்.

                    ********************************************************
கதிரேசன் செட்டியாரின் மகன் ஓ.எம்.ஆர் தெருவில் இருக்கும் ஒரு கணினி நிறுவனத்தில் நல்ல வேலையில் இருந்தான். அன்று வேலை முடிந்து அவன் வீட்டிற்குத் திரும்பும் போது மணி இரவு பதினொன்றைத் தொட்டிருந்தது.

வீட்டிற்கு வெளியில் இருந்து தன்னுடைய கார் ஹாரனின் மூலம் ஒலி எழுப்பினான். அதை வீட்டிற்குள் இருந்து கேட்ட அவனுடைய தாயார் மீனாட்சி ஆச்சி கதவைத் திற்ந்து கொண்டு, போர்ட்டிகோ பகுதிக்கு வந்தார்,

மின் சிக்கணம் என்ற பெயரில் செட்டியார் விளக்குகளை அனைத்து வைத்திருந்தார். ஆச்சி போர்ட்டிகோ விளக்கைப் போடுவதற்கு எத்தனிக்கும்போது, கீழே கிடந்த பாம்பைக் கவனிக்காமல் அதன் மேல் காலை வைத்து நன்றாக மிதித்துவிட்டார். பாம்பும் ஆச்சியைக் கொத்திவிட்டு நகர்ந்து சென்றது. விளக்கு வெளிச்சத்தில் பாம்பைப் பார்த்த ஆச்சி, அது கொத்தியதையும் உண்ர்ந்த ஆச்சி, “அடேய், பாம்பு கடித்து விட்டது” என்று பதற்றத்துடன் அலறலாகக் குரல் கொடுத்தார்.

கேட்டின் மீது ஏறிக் குதித்து உள்ளே வந்த மகன் , வீட்டின் உள்ளே நுழைந்து தாயாரின் மேற்பகுதிக் காலில் இறுக்கமாகக் கட்டுப் போட்டு விஷம் மேலே ஏறாமல் தடுத்ததுடன், அடுத்த 10வது நிமிடம் அருகில் இருந்து மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஒன்றில் தன் தாயாரை சேர்த்ததுடன், அவசர சிகிச்சைக்கும் ஏற்பாடு செய்தான்.

அங்கேயிருந்த மருத்துவர்கள் ஆச்சியைக் காப்பாற்றிவிட்டார்கள். ஆனால் காலின் கீழ் பகுதியில் இரத்தம் கட்டி பட்டுப் போயிருந்த பகுதிக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக ஆச்சியை அங்கே ஒரு வாரம் படுக்க வைத்துவிட்டார்கள்.

ஒருவாரம் கழித்து ஆச்சியை வீட்டிற்குக் கூட்டிக் கொண்டு வரும்போது, மருத்துவமனைச் செலவு எழுபத்தையாயிரம் ரூபாயைத் தொட்டிருந்தது.

அடுத்த நாளே கதிரேசன் செட்டியார் வங்கிக்கு ஒரு வாரம் லீவு போட்டதுடன், ஆட்களைப் பிடித்து வந்து பக்கத்து மனைகள் இரண்டையும் சுத்தம் செய்து கட்டாந்தரையாக்கினார். பொக்லைன் நிறுவனத்தாரும் கொடுத்த பணியைச் செவ்வனே செய்து முடித்திருந்தார்கள். வந்திருந்த வேலையாட்கள், அங்கே தாங்கள் அடித்துப் போட்ட ஐந்து பாம்புகளையும் அவருக்குக் காட்டினார்கள்.

எது எப்படிப் போனாலும், ஆச்சி அவர்கள் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்ததில் இந்த செலவெல்லாம் கதிரேசன் செட்டியாருக்கு ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. இதை ஆச்சியிடமும் சொன்னார்

ஆச்சி அவர்கள் மனக் கலக்கத்துடன் சொன்னார்கள்,   “உங்கள் அண்ணன் முருக பக்தர். வாட்ஸாப்பில் செய்தி பார்த்தீர்கள் இல்லையா? அவருடைய மன வருத்தம் நமக்கு வேண்டாம். அவர் மனம் வருத்தப்பட்டால் நமக்கு இன்னும் என்னென்ன கேடு வருமோ - யாருக்குத் தெரியும்? ஆகவே அவருடைய பணத்தை, உங்களுக்காக அவர் செலவழித்த பணத்தை அவருக்கு உடனே அனுப்பி வையுங்கள்”

ஆச்சியின் பேச்சில் இருந்த சத்தியத்தை உணர்ந்த கதிரேசன் செட்டியார், அன்றே தன் அண்ணனின் கணக்கிற்கு மொத்தப் பணத்தையும் அனுப்பி வைத்ததோடு, வாட்ஸ்சப்பில் செய்தியையும் பதிவு செய்தார்.

செய்தியைப் பார்த்த சின்னையா செட்டியாரின் கண்கள் பனித்தன, ஒரு சிரமமும் இல்லாமல் பணத்தை வாங்கிக் கொடுத்த பழநி அப்பனின் மகிமையை நினைத்து மனம் குளிர்ந்தது.
==============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

3.10.16

ஒன்பது இரவுகள்!


ஒன்பது இரவுகள்!

ஒன்பது இரவுகள் என்னும் தலைப்பைப் பார்த்தவுடன் வாத்தியார் ஏதோ ஒரு மலயாளப் படத்திற்கு விமர்சனம் எழுதுகிறார் என்று நினைத்து உள்ளே வந்தவர்கள் எல்லாம் பதிவை விட்டு விலகவும். மற்றவர்கள் தொடரவும்! இது நவராத்திரியைப் பற்றிய பதிவு. ஆன்மீகக் கணக்கில் வரும்!

அன்புடன்
வாத்தியார்
-------------------------------
நவராத்திரி பற்றிய 50 குறிப்புகள்!

1.சோழர் காலத்தில் நவராத்திரி திருவிழா அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது.

2. நவராத்திரி நாட்களில் பெண்கள் கன்யா பூஜை செய்வதால் சகல செல்வங்களையும் பெறலாம்.

3. விஜயதசமி தினத்தன்று பெருமாள் கோவில்களில் வன்னி மரக்கிளையை வைத்து அதில் பெருமாளை எழுந்தருளச் செய்து பூஜை நடத்துவார்கள். இந்த வழிபாட்டில் கலந்து கொண்டால் கிரக தோஷங்கள் விலகி ஓடி விடும்.

4. நவராத்திரி பண்டிகையை முதன் முதலில் ராமர்தான் கொண்டாடியதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

5. நவராத்திரி நாட்களில் இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை தேவி வழிபாடு செய்ய உகந்த நேரமாகும்.

6. ஈசனம், அம்மையும் ஒன்று சேர்ந்து ஊஞ்சலில் ஆடுகின்ற தரிசனத்தை 9 நாட்களும் கண்டால் நவராத்திரி பூஜை செய்தபலன் கிடைக்கும்.

7. நவராத்திரி நாளில் வரும் சப்தமி திதியன்று வழிபட்டால் ஸ்ரீஹயக்ரிவப் பெருமாளின் அருளைப் பெறலாம். அன்று ஸ்ரீலலிதாசகரஸ்ர நாமத்தையும் நவாக்சரி மந்திரத்தையும் ஓதுவது கூடுதல் பலன்களைத் தரும்.

8. பிரம்ம நவராத்திரி, கிருஷ்ண நவராத்திரி, ரிஷி நவராத்திரி, தேவ நவராத்திரி, பஞ்ச கல்ப நவராத்திரி, பாக்ய நவராத்திரி,
போக நவராத்திரி, தாத்பர்ய நவராத்திரி, சற்குரு நவராத்திரி, தேவதா நவராத்திரி என்று பல வகை நவராத்திரிகள் உள்ளன.

9. பங்குனி மாதம் அமாவாசைக்குப் பிறகு பிரதமையில் தொடங்கும் லலிதா நவராத்திரி, மாசி மாதம் வரும் ராஜ மாதங்கிநவராத்திரி ஆடியில் வரும் மகாவராகி நவராத்திரி, புரட்டாசியில் வரும் சாரதா நவராத்திரி ஆகிய 4 நவராத்திரிகளையும் பெண்கள் கடைபிடித்தால் அம்பிகையின் அருளை பரிபூரணமாகப் பெறலாம்.

10. அனைத்திலும் தேவியே உள்ளாள் என்பதை உலகுக்கு உணர்த்தவே நவராத்திரி நாட்களில் கொலு வைக்கப்படுகிறது.

11. எல்லாரும் புரட்டாசி நவராத்திரியில் மட்டுமே கொலு வைக்கிறார்கள். ஆனால் 4 நவராத்திரி நாட்களிலும் கொலுவைத்தால்தான் அம்பிகை அருள் கிடைக்கும்.

12. வீட்டில் கொலு வைத்தால், அம்பிகை அனைத்து அம்சமாக நம் வீட்டில் எழுந்தருளி விட்டாள் என்பது நம்பிக்கையாகும்.

13. ஒரு நவராத்திரிக்கு கொலு வைத்தால் பிறகு வாழ்நாள் முழுவதும் நவராத்திரி நாட்களில் கொலு வைக்க வேண்டும் என்கிறார்கள்.

14. நவராத்திரி பூஜையை அஸ்தம், சித்திரை அல்லது மூலம் நட்சத்திர நாட்களில் தொடங்குவது நல்லது. இந்த நாட்களில் வைதிருதி யோக நேரம் இருந்தால் மிகவும் நல்லது.

15. விஜய தசமி தினத்தன்று ஸ்ரீஆயுர் தேவியை போற்றி வழிபட வேண்டும். இதுதான் நவராத்திரி பூஜையின் நிறைவான பூஜையாகும்.

16. நவராத்திரி நாட்களில் பகலில் சிவ பூஜையும் இரவில் அம்பிகை பூஜையும் செய்வதே சரியான வழிபாடாகும்.

17. நவராத்திரி 9 நாட்களும் தினமும் பகலில் 1008 சிவ நாமாவளிகளை ஜெபித்து வழிபாட்டால் அளவிடற்கரிய பலன்கள் கிடைக்கும்.

18. நவராத்திரி வழிபாட்டை தினமும் தொடங்கும் போது ஸ்யவன மகரிஷியையும் சுகன்யா தேவியையும் தியானித்தபடியே தினசரி பூஜையை தொடங்க வேண்டும்.

19. நவராத்திரி நாட்களில் சுண்ணாம்பு மாவினால் கோலம் போடக்கூடாது. அரிசி மாவைப் பயன்படுத்திதான் கோலமிட வேண்டும். அவ்வாறு செய்வதால் குடும்ப ஒற்றுமையும், செல்வமும் வளரும். சுண்ணாம்பு மாவு பயன்படுத்தினாலோ, எதிர்மறையான விளைவுகளே உருவாகும்.

20. ஒன்பது நாட்களிலும் தேவியாக பாவித்துத் துதிக்க, நமக்குச் சொந்தமல்லாத, பிறர் வீட்டுக் குழந்தையையே அழைத்து
வந்து உபசரிக்க வேண்டும். நம் வீட்டு அல்லது நம் உறவினர்களின் குழந்தைகளையே தேர்ந்தெடுப்பது கூடாது.

21. தினந்தோறும் நவராத்திரி பூஜையின் நிறைவாக, பலவிதமான மங்கலப் பொருட்களை (மஞ்சள், குங்குமம், வளையல்,ரிப்பன் போன்றவை) ஏழைகளுக்கு தானமாக அளிக்க வேண்டும்.

22. தனித்து தானம் செய்வதை விட, சத்சங்கமாகப் பலரும் ஒன்று சேர்ந்து, மங்கலப் பொருட்களை மிகப் பெரிய அளவில் தானமாக அளிப்பதே சிறப்பானது.

23. தான தர்மங்கள்தான் நவராத்திரி பூஜைகளை நிறைவு செய்ய உதவிகின்றன. ஆகவே நவராத்திரியில் தானமளிப்பதே
மிகமிக முக்கியம்.

24. கன்னிப் பெண்களுக்குப் புதிய ஆடை முதலியவை பரிசாக அளிக்கப்படவேண்டும் என்பது நவராத்திரி விழாவின் முக்கிய
அம்சமாகும்.

25. நவராத்திரி ஒன்பது நாளும் பூஜையைத் திருமகளே ஏற்றுக் கொள்கிறாள்.

26. சரஸ்வதி பூஜை என்ன கிழமையானாலும் கடலை சுண்டல் எதுவும் செய்ய முடியாதவர்கள் பழங்கள் கொடுக்கலாம்.

27. நவதானியச் சுண்டல் நவக்கிரக நாயகர்களைத் திருப்திப்படுத்தும். கோள்களால் வரக்கூடிய துன்பங்களைத் தடுக்கும்.

28.ஷோடச லஷ்மி பூஜை நவராத்திரி வெள்ளிக்கிழமையில் செய்தால் ஐஸ்வர்யம் பெருகும். இது கிரியா சக்தி வழிபாடு.

29. நவராத்திரி காலத்தில் முடிந்தவரை பாராயணம் செய்வது தேவிக்கு அளவில்லாத மகிழ்ச்சியைத் தரும்.

30. அந்த நாளில் கொலுவுக்கு வரும் கன்னியரின் நடையுடை, பாவனை, பேச்சு, பாட்டு, நடந்து கொள்ளும் விதம் இவற்றை முனிவர்கள் தீர்மானித்து தன் மகனுக்கோ, தன் உறவினர் மைந்தனுக்கோ இவள் ஏற்றவள் என்று தீர்மானிப்பர். பல திருமணங்கள் அப்படி முடிவாகி கார்த்திகை அல்லது தையில் நடந்திருக்கின்றன.

31. நவராத்திரி விரதம் இருப் பவர்கள் தரையில் தான் படுத்து தூங்க வேண்டும்.

32. அம்பிகை சங்கீதப் பிரியை. எனவே நவராத்திரி நாட்களில் தினமும் ஏதாவது ஒரு பாட்டாவது பாட வேண்டும்.

33. நவராத்திரி 9 நாட்களும் மகா சக்தியை ஐதீகப்படி வணங்கினால் முக்திப் பேறு உண்டாகும்.

34. நவராத்திரி கோலத்தை செம்மண் கலந்து போட்டால் அம்பாள் மனமகிழ்ந்து வருவார்.

35. நவராத்திரி 9 நாட்களும் வாசலில் மாவிலை கட்டி பூஜை செய்தால் ஐஸ்வர்யம் உண்டாகும்.

36. கொலு வைத்திருப் பவர்கள் அதன் முன் நவக் கிரக கோலம் போட்டால் அம்பாள் அனுக்கிரகமும், நவக்கிரகப் பலன்களும் கிடைக்கும்.

37. நவராத்திரி 9 நாட்களும் வீட்டுக்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு பரிசுப் பொருட்களுடன் பூந்தொட்டி, புத்தகத்தை தானமாக கொடுக்கும் பழக்கம் கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் அதிகரித்துள்ளது.

38. முத்தாலத்தி என்றொரு வகை கோலம் உள்ளது. நவராத்திரி நாட்களில் இந்த வகை கோலம் போட்டால் அம்பாள் அருள் நமக்கு எளிதாக கிடைக்கும்.

39. நவராத்திரி 9 நாட்களில் வரும் வெள்ளிக் கிழமையன்று 5 சுமங்கலி பெண்களுக்கு அன்னதானம் செய்து புடவை மற்றும் தாம்பூலம் கொடுத்து ஆசி பெற்றால் உடனடியாக திருமணம் கைகூடும்.

40. நவராத்திரி 5-ம் நாளான வரும் திங்கட்கிழமை லலிதாம்பிகையின் அவதார தினமாக கொண்டாடப்படுகிறது. அன்று 9 சிறுமிகளுக்கு பட்டுப்பாவாடை தானம் செய்தால் நினைத்தது நடக்கும்.

41. நவராத்திரி 9 நாட்களும் சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, நைவேத்தியம் செய்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

42. நவராத்திரி தொடர்பான சுலோகம் மந்திரம் தெரியவில்லையாப கவலை படாதீர்கள் ஓம் ஸ்ரீ லலிதா தேவியே நம என்பதை 108 தடவை சொன்னாலே போதும். உரிய பலன் கிடைக்கும்.

43. நெமிலியில் திரிபுர சுந்தரி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒரு நவராத்திரிக்கு கலசத்தில் வைக்கப் படும் தேங்காய் அடுத்த ஆண்டு நவராத்திரி வரை கெடாமல் இருக்கும்.

44. நவராத்திரி நாட்களில் முப்பெரும் தேவியரின் கதைகளை கேட்டால் அம்மைநோய் தாக்காது என்பது நம்பிக்கை.

45. சுகமான வாழ்வு வேண்டும், கல்வியில் சிறந்து விளங்க வேண்டும், அரசியலிலும், வேலையிலும் பதவி தொடர வேண்டும்,எந்த தொழிலில் ஈடுபட்டாலும் வெற்றி மீது வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் நவராத்திரி பூஜையை அவசியம் செய்ய வேண்டும்.

46. ராமபிரான் நவராத்திரி விரதத்தை கடைபிடித்த பிறகுதான் அவருக்குச் சீதை இருக்குமிடம் தெரிந்தது என்று தேவி பாகவதம் சொல்கிறது.

47. கொலு பொருட்களை பாதுகாக்க வேண்டியது முக்கியம். அவைகளில் மந்திர ஆவர்த்தி இருக்கும்.

48. தேவியை நவராத்திரி சமயத்தில் ஒன்பது மடங்கு அதிகமாகப் பூஜிக்க வேண்டும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

49. ஸ்ரீராமர், விஷ்ணு, விசுவாமித்திரர், காளிதாசர், அபிராமி பட்டர், பிரம்மா, வனவாசத்தில் பாண்டவர்கள் ஆகியோர் நவராத்திரி பூஜைகள் செய்து அம்பிகையின் அருளுக்குப் பாத்திரமானார்கள் என்று புராணங்கள் சொல்கின்றன.

50. வசதி, வாய்ப்பு உள்ளவர்கள் நவராத்திரி பூஜையை தினமும் முறைப்படி ஸங்கல்பம், கணபதி பூஜை, ப்ரதான பூஜை, கண்டா பூஜை ப்ராணப் பிரதிஷ்டை, அங்கபூஜை, அஷ்டோத்திர நமாவளி, நவதுர்கா பூஜை, ஜோதி பூஜை என்று விஸ்தாரமாகச் செய்யலாம்.
------------------------------------
Navarathri  
Day 1
Devi : Maaheswari
Flower :Malligai
Neivedhyam :Ven pongal
Thithi  : Pradhamai
Kolam :Arisi maavaal (rice flour) pottu kolam poda vendum.(Draw rangoli by using rice flour.)
Raagam  : Thodi Raagam
Slokam   : 
Om swethavarnaayai  vidhmahe
soola hasthaayai dheemahi
thanno Maaheshwari Prachodayaath

Navarathri 
Day 2
Devi: Kowmaari
Flower:Sevvarali
Neivedhyam: Puliyodharai
Thithi: Dwitheeyai
Kolam:maavinal kolam . (Draw rangoli by using wet flour.)
Raagam:kalyaani
Slokam:
Om Siki vaahanaaya vidhmahe
Sakthi Hasthaayai Dheemahi 
Thanno kowmaari Prachodayaath

Navarathri  
Day 3
Devi: Vaaraahi
Flower:Champangi
Neivedhyam:Sakkarai pongal
Thithi:thrutheeyai
Kolam:malar  kolam poda vendum . (Draw rangoli by using flowers-pookolam.)
Raagam:kaambhodhi
Slokam: 
Om Magishathvajaaya vidhmahe
Thanda Hasthaaya Dheemahi
Thanno Vaaraahi Prachodayaath

Navarathri 
Day 4
Devi:  Lakshmi
Flower: JaathiMalli
Neivedhyam:Kadhamba Saadham
Thithi:chathurthi
Kolam:Atchadhai kondu padikattu pola kolamida vendum (Draw rangoli in shape of steps by using atchatai (mix of rice,turmeric,ghee.))
Raagam:bhairavi
Slokam: 
Om Padma Vaasinyai cha Vidhmahe
Padmalochanee sa Dheemahi
Thanno Lakshmi prachodayaath

Navarathri 
Day 5
Devi:  Vaishnavi
Flower: Paarijaatham & Mullai
Neivedhyam: Curd Rice
Thithi: panchami
Kolam: kadalai maavaal paravai kolam poda vendum (Draw a bird like rangoli by using Bengal gram flour.)
Raagam:panchamaavaranai  keerthanai paada vendum.bandhuvaraali
Slokam: 
Om Syaamavarnaayai  Vidhmahe
Chakra Hasthaayai Dheemahi
Thanno Vaishnavi Prachodayaath

Navarathri  
Day 6
Devi : Indraani
Flower:Semparuthi
Neivedhyam:Coconut rice
Thithi:sashti
Kolam:kadalai maavinaal Devi naamathai kolamida vendum  (Write the name of the goddess  using Bengal gram flour.)
Raagam:Neelaambari
Slokam: 
Om Kajathvajaayai vidhmahe
Vajra Hasthaaya Dheemahi
Thanno Iyndree Prachodayaath 
  
Navarathri  
Day 7
Devi: Saraswathi
Flower:Malligai & mullai
Neivedhyam:Lemon rice
Thithi:Sapthami
Kolam:Narumana malargalaal kolamida vendum (Draw rangoli by using  fragrant flowers-pookolam.)
Raagam:Bilahari
Slokam: 
Om Vaakdevyai  vidhmahe
Vrinji pathnyai sa Dheemahi
Thanno Vaani Prachodayaath

Navarathri  
Day 8
Devi: Durga
Flower:Roja
Neivedhyam: Paayasaannam
Thithi:ashtami
Kolam:padma kolam  (Draw traditional lotus shaped rangoli)
Raagam:punnagavaraali
Slokam: 
Om Magisha mardhinyai vidhmahe
Durga devyai Dheemahi
Thanno Devi Prachodayaath

Navarathri  
Day 9
Devi: Saamundaa
Flower:Thaamarai
Neivedhyam:Akaaravadisil
Thithi:navami
Kolam:Vaasanai podigalal aayudham pola kola mida vendum (Draw weapon shaped rangoli  by using fragrant  powder.)
Raagam:vasantha raagam
Slokam: 
Om Krishna varnaayai vidhmahe
Soola Hasthaayai Dheemahi
Thanno Saamundaa Prachodayaath

Vijaya dasami
Day 10
Devi: Vijaya
Flower: Malligai,Roja
Neivedhyam: sakkarai pongal,sweets
Thithi: dasami
Slokam: 
Om Vijayaa devyai  vidhmahe
Mahaa Nithyaayai Dheemahi
Thanno DEVI Prachodayaath

Let us all pray for a healthy,peaceful & perfect life for one and all.
Wish you all an auspicious & blissfull NAVARATHRI ! ! !
===============================================================

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!