அருள்மிகு சனீஷ்வரர்
Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை!
சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும்
இல்லை என்பார்கள்.
சனி என்ன நம் மாமனாரா? பெண்ணைக் கொடுத்தவரா? அவராக
வந்து கொடுப்பதற்கு?
நம் ஜாதகத்தின் படி என்னென்ன பலாபலன்கள் உள்ளதோ - அதாவது
நம் கர்மவினைப்படி என்ன பலன்கள் store ஆகியுள்ளதோ - அதைக்
கொடுப்பவர் அவர். அவர் store keeper. அவ்வளவுதான்.
அவரைக் கண்டு பயப்பட வேண்டாம்.
அவரில்லாமல் யாருடைய வாழ்க்கையும் இங்கே நடக்காது. ஆமாம், அவர்தான் ஆயுள்காரகர். அயுள் முடிந்துவிட்டால், ஜாதகனை ஒரு விநாடிகூட, இங்கே இருக்க அவர் அனுமதிக்க மாட்டார்.
வலுக்கட்டாயமாக போர்டிங் பாஸ் கொடுத்து அனுப்பி விடுவார்.
எங்கே?
எங்கே அனுப்பிவைப்பார் என்பது தெரியாது. இந்த உலகத்தைவிட்டு
அனுப்பி வைத்து விடுவார். அது மட்டும் தெரியும்.
”வந்தது தெரியும், போவது எங்கே?
வாசல் நமக்கே தெரியாது!”
என்று கவியரசர் பாடி வைத்துள்ளார்.
அதோடு, தொடர்ந்து சொல்லியுள்ளார்:
”உறவைச் சொல்லி அழுவதனாலே
உயிரை மீண்டும் தருவானா?
கூக்குரலாலே கிடைக்காது - இது
கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது - அந்தக்
கோட்டையில் நுழைந்தால் திரும்பாது
போனால் போகட்டும் போடா...!”
கவியரசர் சொன்ன அந்தக் கோட்டைதான் எங்கே உள்ளது என்பது தெரியவில்லை:-)))
ஆகவே சனீஷ்வரன் நமக்கு முக்கியமானவர். அவருக்கு இன்னொரு இலாக்காவும் இருக்கிறது. அவர்தான் தொழில்காரகன், ஜீவனகாரகன்.
ஒரு ஜாதகன் தன் வாழ்க்கையை நடத்துவதற்கு உரிய தொழிலை
அல்லது வேலையைக் கொடுப்பவர் அவர்தான்.
ஆகவே, அவர் அங்கேயும் நமக்கு முக்கியமானவர்
=====================================================
2014, டிசம்பர் 16ஆம் தேதி செவ்வாய்க்கிழமை, சனீஷ்வரன் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்குள் நுழைகிறார்.
இந்த சனிப் பெயர்ச்சியினால் ஒவ்வொரு ராசிதாரரின் வாழ்விலும் ஏற்படக்கூடிய மாற்றங்கள், பாதிப்புகள் ஆகியவற்றை ராசி
வாரியாகத் தொகுத்துக் கீழே கொடுத்துள்ளேன்.
----------------------------------------------------
இந்தப் பொதுப்பலன்களைப் பற்றி ஒரு விஷயம். அவைகள்
பொதுவானவை அவ்வளவுதான். பத்திரிக்கை விற்பதற்காகவும்,
சிலர் புத்தகங்கள் விற்பதற்காகவும் பொதுப் பலன்களை
எழுதுகிறார்கள். நாமும் காசு கொடுத்து வாங்கி, மாய்ந்து மாய்ந்து படிக்கிறோம். அது எப்படி நமக்குப் பொருந்தும்?
அம்பானிக்கும், அனுஷ்கா சர்மாவிற்கும், அஜீத்திற்கும், அய்யம்பேட்டை கலிவரதனுக்கும், அம்மா மண்டபம் ரங்கராஜனுக்கும், ஒரே ராசி என்று வைத்துக் கொள்ளூங்கள், இந்தப் பொதுப் பலன்களின் படியா, அவர்கள் அனைவருக்கும் இன்ப, துன்பங்கள் வரப்போகின்றன. இல்லை!
120 கோடி மக்கள் வகுத்தல் 12 ராசிகள் = 10 கோடி மக்கள் இந்த 10 கோடி மக்களுக்கும் எப்படிப் பலன் ஒருவிதமாகப் பொருந்தும்?
++++++அவரவர்களின் ஜாதகப்படிதான் பலன்கள் அமையும்.
1. உங்கள் ஜாதகத்தில் ஏகப்பட்ட யோகங்கள் இருந்து, அதற்கான
தசாபுத்தி நடந்து கொண்டிருந்தால், இந்தக் கோச்சாரங்கள் வழிவிட்டு
விடும்.
2. நல்ல தசை அல்லது புத்தி நடந்து கொண்டிருந்தாலும் கோள்சாரங்கள் பாதிப்பை ஏற்படுத்தாது.
சுருங்கச் சொன்னால், கோள்சாரத்தைவிட, தசை/புத்தி முக்கியம்.
ஒரு சாலையில் முதலமைச்சர் வருகிறார். அவருக்கு முன், அவருடைய பைலட் மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் வருகின்றன என்றால் மொத்த சாலையும் துடைக்கப்பட்டு, வழி ஏற்படுத்தப் பட்டிருக்கும் இல்லையா?
ஏன் தப்பித்தவறி நீங்கள் சென்றாலும், வழி விட்டு ஒதுங்கி நிற்ப்பீர்கள் இல்லையா? அதுபோலத்தான் இதுவும்.
------------------------------------------------------------------
பெயர்ச்சி என்றவுடன், சனீஷ்வரன் மூட்டை முடிச்சுகளைக் கட்டி
எடுத்துக் கொண்டு வீடு மாறுகிறார் என்று நினைக்க வேண்டாம்.
அவருக்கு எதற்கு மூட்டை, முடிச்சு?
வானவெளியில், 181 பாகையில் இருந்து 210 பாகைகள் வரை, துலாம்
ராசியில் இதுவரை சஞ்சாரம் செய்தவர், இப்போது 211 பாகைக்குள்,
தன் சுழற்சியின் மூலம் நுழைகிறார். அது விருச்சிக ராசி. அங்கே அவர் இன்னும் சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு வாசம் செய்வார்.
அவர் ஒரு பாகையைக் கடக்க எடுத்துக் கொள்ளூம் காலம் ஒரு
மாதமாகும். விருச்சிகராசியின் 30 பாகைகளையும் அவர் கடப்பதற்கு
30 மாதங்களாகும்.
அதுவரை அங்கே இருப்பார். அங்கே மடக்கு நாற்காலியைப் போட்டு உட்கார்ந்து கொண்டு செய்ய வேண்டிய பணிகளைச் செவ்வனே செய்வார்.
--------------------------------------------------------
சனிப்பெயர்ச்சிப் பலன்கள்
வாசகர்கள் சிலரின் வேண்டுகோளிற்காகவும், வகுப்பறைக் கண்மணிகளின் அறிந்து கொள்ள வேண்டியதற்காகவும் சனிப்பெயர்ச்சிப் பலன்களை
எழுதியுள்ளேன்.
கீழே கொடுக்கப்பெற்றுள்ளவை அனைத்தும் பொதுப்பலன்கள்,
இந்திய மக்கள் 121 கோடிப் பேர்களுக்குமான பொதுப்பலன்கள்.
உங்களுடைய ஜாதகத்தில் சனீஸ்வரன் நல்ல ஆதிக்கப் பலனுடன்
இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால், நல்ல தொழிலையும்
அல்லது வேலையையும் கொடுத்து, வருமானத்திற்கு எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக் கொள்வார். நீண்ட ஆயுளையும் கொடுப்பார்.
தனிப்பட்ட ஜாதகர்களுக்கு, கோள்சாரத்தில் சனீஷ்வரன் கடந்து
செல்லும் ராசிகளில் சர்வாஷ்டகவர்க்கப்படி, 30 அல்லது அதற்கு
மேற்பட்ட பரல்கள் இருந்தால், அவர்களுக்கு எந்த பாதிப்பு இருக்காது.
இதை முக்கியமாக மனதில் கொள்ளவும்.
இறைவழிபாடும், சனீஷ்வர வழிபாடும் நன்மையளிக்கும். இந்தத்
துன்பங்கள் இருக்காதா என்றால், இருக்கும். வருவதை, விதிக்கப்
பட்டதை நீங்கள் அனுபவித்துத்தான் ஆக வேண்டும். ஆனால்
வழிபாடுகள் தாக்குப் பிடிக்கும் சக்தியை உங்களுக்கு வழங்கும்
(It will give you standing power in miserable or unwanted situation).
எந்த சூழ்நிலையிலும், தாக்குப் பிடிக்கும் சக்தி முக்கியம். அதை
மனதில் கொள்ள வேண்டுகிறேன்.
=================================================================================================
ஏழரை ஆண்டுகளாக ஏழரைச் சனியின் பிடியில் சிரமப் பட்டுக்
கொண்டிருந்த கன்னி ராசிக்காரகளும், சென்ற இரண்டரை
ஆண்டுகளாக அஷ்டமச் சனியால் (8ஆம் இடத்துச் சனியால்) சிரமப்பட்டுக்கொண்டிருந்த மீன ராசிக்காரர்களும் மகிழ்ச்சி
கொள்ளலாம். அவர்களுக்குப் பூரண நிம்மதி கிடைக்கும்.
அந்தச் சிரமங்களை இனி தனுசு ராசிக்காரர்களும் (ஏழரைச் சனியில்
விரயச் சனி - 12ஆம் இடம்), மேஷ ராசிக்காரர்களும்
(அஷ்டமச் சனி - 8ஆம் இடச் சனி) சந்திக்க நேரிடும்.
மிதுன ராசிக்கார்கள் (ஆறாம் இடம்), கடக ராசிக்காரர்கள்
(ஐந்தாம் இடம்), கன்னி ராசிக்காரர்கள் (3ஆம் இடம்) மகர
ராசிக்கார்கள் (11ஆம் இடம்), மீன ராசிக்காரகள் (9ஆம் இடம்)
ஆகியோர்கள் இந்தப் பெயர்ச்சியால் நன்மையடைவார்கள்
அவர்கள் மகிழ்ச்சி கொள்ளலாம்.
சிம்ம ராசிக்காரர்கள் (4ல் சனி), துலா ராசிக்கார்கள் (பாதச் சனி
- 2ஆம் இடம்), கும்ப ராசிக்காரர்கள் (ஜீவன ஸ்தானம் -
10ஆம் இடம்), ரிஷப ராசிக்காரர்கள் (கண்டச் சனி - 7ஆம் இடம்)
விருச்சிக ராசிக்காரர்கள் (ஜென்மச்சனி - ஒன்றாம் இடம்)
ஆகியோர்கள் சிறிதளவு பாதிக்கப்பெறுவார்கள்.
12 ராசிகளுக்கும் உரிய பொதுப்பலன்கள்:
1. மேஷம்: சென்ற இரண்டரை ஆண்டுகளாக அனுபவித்த சிரமங்களை
விடக் கூடுதலான சிரமங்களை அனுபவிக்க நேரிடும். காரணம் 8ஆம்
இடத்துச் சனி. சோதனைகள் அதிகரிக்கும். எது இருந்தாலும் தாக்குப்
பிடித்து, இரண்டரை ஆண்டுகால முடிவில் நீங்கள் மனத்திடம் உள்ள மனிதராக மாறிவிடுவீர்கள்.
2. ரிஷபம்: மனதில் கலக்கம் ஏற்படும். எடுத்துச் செய்யும் செயல்களில்
தாமதம் உண்டாகும். பல வேலைகள் இழுத்துதடிக்கும். சட்டென்று
முடியாது. நண்பர்கள், உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள்
ஏற்படும். எதிலும் நிதானமாக இருப்பது நல்லது.
3. மிதுனம்: சாதகமான ஆறாம் இடத்தில் சனி. முன்பிருந்த சிரமங்கள்
எல்லாம் நீங்கிவிடும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். உறவினர்களும், நண்பர்களும் உங்களைப் போற்றத்துவங்குவார்கள். விரும்பிய செயல்களைச் செய்யும் அளவிற்குப் பணவரவும்
உண்டாகும்.
4. கடகம்: புதிய, விரும்பத் தகுந்த மாற்றங்கள் உண்டாகும். இடம்,
பொருள் சேர்க்கை உண்டாகும். சிலருக்குப் புதிய வீடு கட்டும்
யோகம் உண்டாகும். இரண்டரை ஆண்டு காலத்தில் சிக்கனமாக
இருந்து, வாழ்வின் அடுத்த நிலைக்குச் செல்வது புத்திசாலித்
தனமாகும்.
5. சிம்மம்: சுகக்கேடு, அலைச்சல் உண்டாகும். சிலருக்கு உடல்
நலம் பாதிக்கும். செயல்களில் உங்களை அறியாமல் தவறுகள்
ஏற்படலாம். கவனத்துடன் செயல்படுவது நல்லது. சிலருக்கு
அவர்களது அன்னையின் உடல் நலம் பாதிக்கப்படலாம்.
6. கன்னி: இதுவரை உங்களை ஒருகை பார்த்துக்கொண்டிருந்த,
வாட்டி, வதக்கிக்கொண்டிருந்த ஏழரைச் சனி முற்றிலுமாக
விலகுகிறது. இனி எல்லாம் நன்மையே. உற்சாகம் பொங்கி
வழியும். முனைப்புடன் செயல் பட்டு வெற்றிக் கனிகளைப்
பறிப்பீர்கள். செய்யும் வேலைகளுக்கான பலன்கள் அதிகரிக்கும்
7. துலாம்: ஏழரைச்சனியின் கடைசிக் கட்டத்திற்கு வந்துள்ளீர்கள்.
அடை மழை இல்லை என்றாலும் தூறல் நிற்கவில்லை. பேச்சில்,
வாக்குக் கொடுப்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சிலருக்கு வழக்குகள் ஏற்படலாம். பணம் அதுவாக வராது.
அலைந்து திரிந்துதான் பெற வேண்டியதாக இருக்கும். அத்துடன் எதிர்பார்க்காத செலவுகளும் ஏற்படும்.
8. விருச்சிகம்: ஏழரைச் சனிக்கு உரிய மூன்று கட்டங்களில்
சனீஷ்வரன் இரண்டாவது கட்டத்திற்கு வந்துள்ளார். ஜென்மச் சனி
என்று அதற்குப் பெயர். வேலை செய்வதற்கே சலிப்பாக இருக்கும்.
மனதில் மந்தமான சூழ்நிலை நிலவும். சம்பந்தமில்லாத
காரியங்களில் தலையிடாதீர்கள். அவப்பெயர் உண்டாகலாம். குடும்பஸ்தர்களுக்கு மனைவியுடன் கருத்து வேறு பாடுகள்
உண்டாகலாம். அன்பு மனைவியை அனுசரித்துப் போவது
நல்லது.
9. தனுசு: ஏழரைச் சனி துவக்கம். ராசிக்குப் 12ல் சனி. பணத்
தட்டுப்பாடு ஏற்படும். வரவுக்கு மேல் செலவு ஏற்படும்.
ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செலவு செய்வது நல்லது.
புதிய முயற்சிகள், புதிய முதலீடுகள் ஆகியவற்றைத் தவிர்ப்பது
நல்லது. நீங்கள் விரும்பும் பலன்கள் கிடைக்காது. இறைவழிபாடு
அவசியம். நன்மை பயக்கும்.
10. மகரம்: முன்னேற்றப் பாதையில் செல்வீர்கள். எந்தச் செயலிலும் முன்பிருந்த தாமதம், தடை இருக்காது. பணவரவு அதிகரிக்கும்.
சமூக அந்தஸ்து அதிகரிக்கும். உத்தியோகத்தில், தொழிலில்
மேன்மை உண்டாகும். புகழ், செல்வாக்கு என்று எல்லாவிதமான நன்மைகளும் ஏற்படும்
11. கும்பம்: வேலையில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் ஏற்படும்.
சனீஸ்வரன் ராசிநாதன். அத்துடன் விருச்சிக வீட்டில் இருப்பதால். இடமாற்றம் என்பது சிலருக்குப் பதவி உயர்வுடன் கூடிய
இடமாற்றமாக இருக்கும்.
12. மீனம்: அஷ்டமச் சனியால் இதுவரை நீங்கள் அனுபவித்த
துன்பங்கள் எல்லாம் நீங்கி, வாழ்க்கை வளம் பெறும். மகிழ்ச்சி
நிலவும். வீட்டில் சுப காரியங்களைச் செய்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
செய்திச் சுருக்கம் (News in brief)
பலனடையப்போகின்றவர்கள்: மிதுனம், கன்னி, மகரம்
ஆகிய 3 ராசிக்காரர்கள்
நன்மையும் தீமையும் கலந்த சம பலன்கள்:
கடகம்,கும்பம், மீன ராசிக்காரர்கள்.
பரிகாரம் தேட வேண்டியவர்கள்: கஷ்டங்கள் வாராமலிருக்க
சனீஷ்வரனை வணங்க வேண்டிய ராசிக்காரர்கள்:
மேஷம், ரிஷபம், சிம்மம், துலாம், விருச்சிகம், தனுசு, ஆகிய
6 ராசிக்காரர்களுக்குக் கெடுதலான பலன்களும் நடைபெறலாம்.
ஏழரைச் சனி: துலா ராசிக்காரர்கள் (கடைசி இரண்டரை ஆண்டுகள்
- பாதச் சனி என்பார்கள்.அல்லது கழிவுச்சனி என்று கொள்ளுங்கள்)
விருச்சிக ராசிக்காரர்கள்: இரண்டாம் இடம் ஜென்மச்சனி. தனுசு ராசிக்காரர்கள்: ஏழரைச் சனி ஆரம்பம்.
அஷ்டமச் சனி ( எட்டாம் இடத்துச் சனி): ஏழரைச் சனிக்கு நிகரான கஷடங்களையும் துன்பங்களையும் தரக்கூடிய அமைப்பு.
அது மேஷ ராசிக்காரர்களுக்கு ஏற்படும்!
----------------------------------------------------------
மேலே கொடுக்கப்பெற்றுள்ளவை அனைத்தும் பொதுப்பலன்கள்,
இந்திய மக்கள் 121 கோடிப் பேர்களுக்குமான பொதுப்பலன்கள்.
உங்களுடைய ஜாதகத்தில் சனீஸ்வரன் நல்ல ஆதிக்கப் பலனுடன்
இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால், நல்ல தொழிலையும்
அல்லது வேலையையும் கொடுத்து, வருமானத்திற்கு எந்தக்
குறையும் இல்லாமல் பார்த்துக் கொள்வார். நீண்ட ஆயுளையும்
கொடுப்பார்.
தனிப்பட்ட ஜாதகர்களுக்கு, கோள்சாரத்தில் சனீஷ்வரன் கடந்து
செல்லும் ராசிகளில் சர்வாஷ்டகவர்க்கப்படி, 30 அல்லது அதற்கு
மேற்பட்ட பரல்கள் இருந்தால், அவர்களுக்கு எந்த பாதிப்பு இருக்காது.
இதை முக்கியமாக மனதில் கொள்ளவும்.
++++++இருக்கிறது. உங்கள் ஜாதகத்தில் எந்தந்த இடங்களில் 30ம்
அதற்கு மேற்பட்ட பரல்களும் உள்ளன என்பதைக் குறித்து வைத்துக்
கொள்ளுங்கள். அந்த இடங்களில் சஞ்சார சனியால் எந்தவிதமான உபத்திரவங்களும் இருக்காது.
ஏழரைச் சனியின் இடங்களான 12, 1, 2ஆம் வீடு ஆகிய மூன்று
இடங்களிலும், 30ம் அதற்கு மேற்பட்ட பரல்களும் இருந்தால்,
ஏழரைச் சனி, ஜாதகனை ஒன்றும் செய்யாது. அந்த ஏழரை
ஆண்டுகளும் ஜாதகன் செளக்கியமாக இருப்பான்.
அதற்கு மாறாக சனி சஞ்சாரம் செய்யும் இடம் 25 பரல்களூம்,
அல்லது அதற்குக் குறைவான பரல்களைக் கொண்டிருந்தால்
கோள்சாரச் சனி, ஜாதகனைப் படுத்தி எடுக்கும்.
++++++ ஒரு ஜாதகனுக்கு அவன் பார்க்கும் தொழிலில் அல்லது
வேலையில் பிரச்சினை என்றால். அது ஏன்? எப்போது அந்த நிலை
மாறும் என்பதைப் பார்க்க ஒரு ஃபார்முலா உள்ளது.
10ஆம் வீட்டை, லக்கினமாக எடுத்துக் கொண்டு, அன்றையத்
தேதியில் கோச்சார சனீஷ்வரன் அந்த வீட்டிலிருந்து எங்கே
இருக்கிறான் என்று பாருங்கள். அந்த வீட்டிற்கு 6, 8,12ஆம் வீடுகளில்
அவன் சஞ்சாரம் செய்தால், பிரச்சினைதான். அந்த வீட்டை விட்டு
நகரும் வரை பிரச்சினை தீராது. பதவி நீக்கம், பதவி பறிமுதல், பதவியிலிருந்து கீழ் நிலைக்குத் தள்ளப்படுதல், தண்ணீர் இல்லாக்
காட்டிற்கு மாற்றப்படுதல் என்று எது வேண்டுமென்றாலும் நடக்கும்.
அந்த வீட்டிற்கு 11ல் சனி சஞ்சாரம் செய்தால், பதவி உயர்வு, பதவியில் மேன்மை, பெருமை எல்லாம் கிடைக்கும்
----------------------------------------------------
அதுபோல எப்போது டிக்கெட் கிடைக்கும் என்பதைச் சொல்ல முடியுமா? அதற்கு ஏதாவது சூத்திரம் இருக்கிறதா?
++++++இருக்கிறது. அது ஒருவரிச் சூத்திரம்.
அதை இங்கே சொல்ல முடியாது. வாசகர்கள் என்னைப் பிறாண்டி எடுப்பதோடு. எனக்கு டிக்கெட் கொடுத்து விடுவார்கள். ஆகவே, சொல்ல வேண்டிய இடத்தில், சொல்ல வேண்டிய நேரத்தில் அதைச் சொல்லி உங்களுக்கு அறியத் தருகிறேன். பொறுத்திருங்கள்
--------------------------------------------------------
சரி விஷயத்திற்கு வருகிறேன்.
இறைவழிபாடும், சனீஷ்வர வழிபாடும் நன்மையளிக்கும். இந்தத்
துன்பங்கள் இருக்காதா என்றால், இருக்கும். வருவதை, விதிக்கப்
பட்டதை நீங்கள் அனுபவித்துத்தான் ஆக வேண்டும். ஆனால்
வழிபாடுகள் தாக்குப் பிடிக்கும் சக்தியை உங்களுக்கு வழங்கும்
(It will give you standing power in miserable or unwanted situation).
எந்த சூழ்நிலையிலும், தாக்குப் பிடிக்கும் சக்தி முக்கியம். அதை
மனதில் கொள்ள வேண்டுகிறேன்.
அன்புடன்,
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!