Astrology பத்தாம் வீடும் அதன் அதிபதி அமர்ந்த இடத்திற்கான பலன்களும்
10th House and placement benefit of its lord
கிரகங்களின் அமர்விடப் பலன்கள்:
Placement benefits of planets!
கிரகங்களின் அமரும் இடத்தைவைத்துப் பலன்கள் வேறுபடும். அவற்றை விவரமாகப் பார்ப்போம்!
இப்போது பத்தாம் வீட்டையும், அதன் அதிபதி அமரும் இடத்திற்கான பலன்களையும் பார்ப்போம்!
கிரகங்கள் அவ்வாறு அமரும் இடமானது அவற்றின் உச்ச வீடாக அல்லது ஆட்சி வீடாக இருந்தால் சுபமான பலன்கள் உண்டாகும். இதை மனதில் வையுங்கள்!
1
பத்தாம் வீட்டுக்குரியவன் இலக்கினத்தில் அமர்ந்தால், கீர்த்தி, ஆயுள் விருத்தி, ராஜ வாழ்க்கை, நட்பு, செல்வம், கல்வி, ஞானம் உடையவனாக ஜாதகன் இருப்பான்.
2
பத்திற்குரியவன் இரண்டில் இருந்தால், நல்ல குடும்ப வாழ்க்கை, செல்வம், வாக்கு சாமர்த்தியம் அமையப் பெற்றவனாக ஜாதகன் இருப்பான்.
3
பத்திற்குரியவன் மூன்றில் இருந்தால், சகோதரர்கள் இருப்பினும், விஷேச பலன் இருக்காது. சகோதர தோஷம் உடையவனாக ஜாதகன் இருப்பான்.
4
பத்திற்குரியவன் நான்கில் இருந்தால், தாய்வழி ஆதரவு, பெரிய வீடு, மனை, வாகனம், கால்நடைகள், பணியாட்கள், நல்ல குடும்பம் உடையவனாக ஜாதகன் இருப்பான்.
5
பத்திற்கு உரியவன், ஐந்தில் இருந்தால், புத்திர விருத்தி, பிரபுக்கள் தயவு, கெளரவமான வாழ்வு, ராஜஜீவனம், அதிகாரம், புத்திக்கூர்மை உடையவனாக ஜாதகன் இருப்பான்.
6
பத்திற்கு உரியவன் ஆறில் இருந்தால், தந்திரபுத்திக்காரனாக, கெட்ட வழிகளில் அதாவது குறுக்கு வழிகளில் பணம் சம்பாதிப்பவனாக ஜாதகனிருப்பான். திடமான உடலமைப்பு, அந்தஸ்து இல்லாதவனாக ஜாதகன் இருப்பான். பிறர் பொருளை அபகரிக்கும் குணம் உடையவனாக இருப்பான்.
7.
பத்திற்குரியவன் ஏழில் இருந்தால் தரித்திரமான அமைப்பு உடையவனாக ஜாதகன் இருப்பான். மனைவியிடம் பிணக்கம் உண்டாகும். கணவனுக்குக் கட்டுப் படாத மனைவி அமைவாள். மனைவி மூலம் பொருள் ஈட்டுவான். பல மனைவிகளை உடையவனாக ஜாதகனிருப்பான்.
8
பத்திற்கு உரியவன் எட்டில் இருந்தால்,, ஆயுள் விருத்தி இருக்கும். புத்திர தோஷம், மனைவியுடன் இணக்கம் இன்மை உடையவனாக ஜாதகன் இருப்பான். தத்துப் புத்திரன் கிடைப்பான். ஆபத்துக்கள் நிறைந்தவனாக இருப்பான்.
9
பத்திற்கு உரியவன் ஒன்பதில் இருந்தால், பிதுர் சொத்துக்கள் நாசமாகும். புத்திர தோஷம், சிரமமான வாழ்க்கை அமையும்.தெய்வ வழிப்பாடு, பெரிய மனிதர்களின் அபிமானம், தானதர்மகுணம் உடையவனாக ஜாதகன் இருப்பான். பிற்கலத்தில் சிறப்பான வாழ்வு உடையவனாக இருப்பான்.
10.
பத்திற்கு உரியவன் ஆட்சி பலத்துடன் பத்தில் இருந்தால், உலக அறிவு, உறவினர்களின் ஆதரவு, பெரிய மனிதர்களின் ஆதரவு உடையவனாக ஜாதகன் இருப்பான்.தெய்வ வழிபாடு, கீர்த்தி, புண்ணிய காரியங்களைச் செய்தல் ஆகியவை நிறைந்தவனாக ஜாதகன் இருப்பான்.
11
பத்திற்கு உரியவன் பதினொன்றில் இருந்தால், மூத்த சகோதரருக்குக் கண்டம்,தொட்டது துலங்கும். எதிலும் லாபம் பெறுபவனாக ஜாதகன் இருப்பான்.
12
பத்திற்கு உரியவன் பன்னிரெண்டில் இருந்தால், வீண் செலவுகள் உண்டாகும். பொருள் நஷ்டம், கஷ்டம், புத்திரர்களால் தீயபலன் ஆகியவை உண்டாகும். சொத்துக்கள் அழியும். அயன, சயன், சுகம் உடையவனாக ஜாதகன் இருப்பான்.
அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு:
பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com