மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

11.3.20

சீனாவின் நோய்களுக்கான காரணம்!


சீனாவின் நோய்களுக்கான காரணம்!

சீனாவில் மட்டும் குறிப்பிட்ட நோய்கள் ஏன் பரவுகின்றன, அக்காலத்தில் இருந்தே ஆசியாவின் நோயாளி என அந்நாடு ஏன் சொல்லபட்டது எனபதற்கான காரணங்கள் சில உண்டு அவற்றில் முக்கியமானது பசு

சீனர்கள் உணவியலிலும் வாழ்வியலிலும் பசு மாட்டுக்கு முக்கியத்துவம் கிடையாது. பாலோ நெய்யோ தயிரோ அவர்கள் அறியாதவை

அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் பன்றி, கோழி, வாத்து, நண்டு இன்னும் பல நடப்பன ஊர்வன பறப்பன, மாடுகள் மிக குறைவு, அதன் பயன்பாடும் பாலும் மிக மிக அரிதானவை, 4 பசு கொடுத்தாலும் வெட்டி சூப் வைப்பார்களே தவிர பால் கறக்கவோ தயிர் கடையவோ தெரியாது

அவர்கள் உணவே வேறு, எலும்புக்கு வலுவூட்டுமோ தவிர வேறு ஒன்றும் செய்யாது. மாமிச சூப் சில கீரைகள், மீன்கள் மற்றும் கிடைப்பவை எல்லாம் எனும் ஒருமாதிரி சூப் சாப்பாடு அது

அதில் பாதியோ மீதியோ கூட வெந்திருக்காது, மசாலா என்பதோ தேங்காய் என்பதோ சேராது

இதே உணவு பாரம்பரியமே சீனா, ஜப்பான் , கொரியா, ஹாங்காங் என பல அந்த இனமக்கள் வாழும் நாட்டில் உண்டு.

பன்றியும் நண்டும் வாத்தும்  ஆற்று மீனுமே பிரதானம் , கோழி கூட இப்பொழுது வந்ததே

ஆம் உலகம் அறுதியிட்டு சொல்கின்றது பசுமாடு புழங்கும் இடங்களிலும், மாட்டுசாணம் பூசப்படும் இடங்களிலும் தொற்றுநோய் வாய்ப்புகள் குறைவு

நெய் பிரதான நோய் எதிர்ப்பு உணவு இதைத்தான் "நெய் இல்லா உண்டிபாழ்" என சொன்னது தமிழகம்

வடக்கே சப்பாத்தியில் நெய் ஊற்றாமல் உண்ணக்கூடாது என்பது தத்துவம்

மேற்காசியாவில் நெய்பயன்பாடு இல்லை எனினும் தயிரும் வெண்ணையும் பிரதான உணவுகள்

ஒருமனிதன் வெண்ணெய் உண்பது நல்லது என்பது மருத்துவ உலகம் சொல்லும் உண்மை, இந்துக்கள் கண்ணன் முதல் ஆஞ்சநேயர் வரை வெண்ணைய் படைத்து வைத்து உண்ணும் தத்துவம் இதுதான்

மேற்கத்தியவர்கள் காலை உணவில் கட்டாயம் சிலதுண்டு வெண்ணெய் அல்லது பாலாடை இருக்கும்

ஆம் பசுவும் அது கொடுக்கும் பொருளும் சாதாரணம் அல்ல, அவை நோய் முதல் பல விஷயங்களை விரட்டி ஆரோக்கியம் கொடுக்கும்

அதை அணு அணுவாக உணர்ந்த தேசமிது, அதனால்தான் பால் தயிர் நெய் என அதன் பயன்பாடு ஆலயம் முதல் எல்லா இடத்திலும் அதிகம், மருந்தில்லா நோய்களும் பரவாது

அக்காலத்தில் வீட்டுமுற்றத்தில் சாணம் தெளிக்கும் தத்துவமே கிருமி நாசினி என்பதாகும், சாணத்தில் ஹோமியமும் கலந்திருந்தது

பால் அருந்துவது இந்து பண்பாடு, பிறப்பு முதல் இறப்பு வரை பாலே பிரதானம். பாலும் பழமும் என்பதெல்லாம் இந்திய அடையாளத்தில் ஒன்று

அதை கடைசிவரை மாற்றமுடியாமல் வெள்ளையன் பாலில் டீ அல்லது காபி தயாரித்து தன் வியாபாரத்தை நடத்தினான் , பாலில் டீ கலக்கும் காபி கலக்கும் பாணி இந்தியாவிலே பிரதானம்

சும்மா சங்கி, ஹோமியம், சாணம் என சொல்பவன் சொல்லிகொண்டிருப்பான்,

ஆனால் சீனாவில் மட்டும் ஏன் வித வித நோய் உருவாகின்றது என்பதற்கும், சீன இனங்கள் ஏன் அடிக்கடி சிக்குகின்றது என்பதற்கும் உலகம் கண்ட விஷயங்களில் ஒன்று அவர்களிடம் பசுமாட்டு வளர்ப்பும் பால் பொருட்கள் உபயோகமும் அதிகம் இல்லை என்பதே..

பசுவினை அர்த்தமில்லாமல் இத்தேசம் கொண்டாடவில்லை, கோமாதா என கொண்டாடி கண்ணன் அருகில் நிறுத்தியதிலும், அவன் வெண்ணெய் தின்றான் எனச் சொன்னதிலும் அர்த்தமில்லாமல் இல்லை.

கண்ணன் மாடுமேய்ப்பவனாக வந்ததிலும் தத்துவம் இல்லமால் இல்லை..

சிவனுக்கு வாகனமாக காளையினை வைத்ததிலும் அர்த்தம் இல்லாமல் இல்லை

வழிபாடு முதல் வீடுவரை நெய்யும் தயிரும் பாலும் புழங்க சொன்னதிலும், ஒருபிடி சாணத்தை பிள்ளையாராக வாசலில் வைக்க சொன்னதிலும் விஞ்ஞானமும் ஆரோக்கியமும் இல்லாமல் இல்லை

அன்றே மிகப் பெரும் உணவு பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்பு முறையினை பசுவில் இருப்பதைச் சொல்லி அதை தெய்வநிலைக்கு வைத்திருந்த இந்துபாரம்பரியம் ஆச்சரியமும் அதிசயமான அறிவும் கொண்டதாகும்...

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்...
---------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
=================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6 comments:

  1. Good morning sir very useful information thanks sir vazhga valamudan

    ReplyDelete
  2. /////Blogger Shanmugasundaram said...
    Good morning sir very useful information thanks sir vazhga valamudan////

    நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!

    ReplyDelete
  3. ///Blogger sundari said...
    Good evening sir./////

    வணக்கம் சகோதரி!!!!!

    ReplyDelete
  4. Sir
    Good very useful messages
    Thank you

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com